சங்க இலக்கியத்தில் நரகம்; புத்த மதத்தில் கொடிய நரகம் (Post.14,488)

Written by London Swaminathan

Post No. 14,488

Date uploaded in London –  8 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் நரகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன நிரையம் என்றால் நரகம்; இந்தச் சம்ஸ்கிருதத் சொல்லை அவைகள் பயன்படுத்துகின்றன. தாயின் மனம் நரகம் போல சித்திரவதை செய்கிறது என்று காதல் வயப்பட்ட பெண்கள் புலம்புகின்றனர்.

சங்க இலக்கியத்தில் நிரையம்/ நரகம் வரும் இடங்கள் :

அகநானூறு -95-12;

நற்றிணை -236-5; 329-1;

குறுந்தொகை -258-6; 292-6;

பதிற்றுப்பத்து -15-4; 15-31

( புதிய விளக்க உரைகள் இதை கொடிய என்று எழுதி மழுப்பிவிடுகின்றன. பழைய உரைகளிலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் நரகம்/ HELL  என்றே காணப்படுகிறது).

ஆனந்தவிகடன் தமிழ் அகராதிப்படி நிரையம் என்பதற்கு நரகம் என்ற ஒரே அர்த்தம்தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அளறு என்பதற்கு சேறு , குழம்பு , நரகம் முதலிய பொருள்களும் உண்டு. வள்ளுவர் நரகம் என்ற பொருளில் மட்டும் பயன்படுத்தியுள்ளார்.

****

அளறு / நரகம் HELL என்பது திருக்குறளிலும் சங்கஇலக்கியத்திலும் வருகிறது

மதுரைக்காஞ்சி- 45

பரிபாடல் – 2-47; 6-18; 8-93; 10-73; 12-97

பதிற்றுப்பத்து- 27-13

 ****

நிரையம்

புத்தமத சம்ஸ்க்ருத நூல்களும் பாலி மொழி நூல்களும் இதை பயன்படுத்துகின்றன ; அவற்றின் பெயர்கள் –

1.மஹாவஸ்து – – சம்ஸ்க்ருதம் , பிராகிருதம், பாலி

2.அஸ்வகோஷர் எழுதிய புத்தசரிதம் – சம்ஸ்க்ருதம்

3.பலர் எழுதிய லலிதவிஸ்தாரம் – சம்ஸ்க்ருதம்

இவை அனைத்தும் சங்க இலக்கியத்தை விட அல்லது சமகாலத்திய நூல்கள். அதாவது 2000 ஆண்டுகள் பழமை உடைத்து.

மனு ஸ்ம்ருதி போன்ற நூல்கள் 21 நரகங்களின் பெயர்களை மட்டுமே சொல்லியது; அவற்றை விளக்கவில்லை. ஆனால் புத்த மத நூல்கள் அங்கே என்ன கொடிய தண்டனைகள் அளிக்கப்படுகின்றன என்று விளம்புகின்றன. இவை நமது புராணங்களில் உள்ள விஷயங்களே ; இவைகளைப் பார்க்கையில் வெள்ளைக்காரர்கள் புராணங்களுக்குக் கொடுத்த தேதி எல்லாம் தவறுஹிந்து புராணங்கள் இந்த புத்த மத நூல்களுக்கும் முந்தையவை என்பது விளங்கும். ஏனெனில் பெரும்பாலும் சம்ஸ்க்ருதப் பெயர்களையே இவை பயன்படுத்துகின்றன; அல்லது கொச்சையான சம்ஸ்க்ருதத்தில்– அதாவது பிராகிருதம் பாலி மொழிகளில் — இருக்கின்றன ; பிராகிருதம், பாலி  என்பன சம்ஸ்க்ருத மொழியின் பேச்சு வழக்கு; அதாவது கொச்சை மொழி ; புத்தர் ,அசோகர் போன்றவர்கள் இந்த பாலி மொழியையும் சமணர்கள் பிராகிருத மொழியையும் பயன்படுத்தினர் .

ஆகவே நரகத்தை வைத்து ஆராய்ச்சி செய்தால் புராணங்களின் பழமை விளங்கும்.

***

புத்த மதத்தில் நரகங்கள் எண்ணிக்கை அதிகம்!

எட்டு பெரிய நரகங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் பதினாறு துணை/ குட்டி நரகங்களும் இருப்பதாக அவை வருணிக்கின்றன.

நரகத்தில் சித்திரவதை

தலை கீழாகத் தொங்கவிட்டு வெட்டுதல், தீயில் வாட்டுதல் ;

அக்கினி போல தகிக்கும் அனலில் வெந்து தாகத்துக்குத் தண்ணீரைத் தேடித்  தேடி, இருட்டில் நிழல் என்று நுழைத்தால் , அங்கு கத்தி போலுள்ள இலைகளால் வெட்டப்படுத்தல்

அங்கம் அங்கமாக வெட்டப்படுத்தல்; கத்தியால் குத்தப்படுத்தல்; 

புத்தமத நூல்கள் குளிர் நடுக்கும் நரகம்வெயில் தகிக்கும் நரகம் என்று இரண்டு வகைகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் எட்டு நரகங்கள் இருப்பதாக இயம்புகின்றன.

எட்டு பெரிய நரகம் பதினாறு துணை நரகம் பற்றி மஹாவஸ்து நூல் எடுத்துரைக்கிறது.

***

அஸ்வகோஷர் புத்த சரித நூலில்  சொல்வதாவது ,

கர்மவினைக்கு ஏற்ப வண்டி மாடாகவோ, ரதத்தின் குதிரையாகவோ அல்லது யானையாகவோ பிறந்து குச்சியாலும் சாட்டையா லும் அ ங்குசத்தாலும் அடிபட்டு ரத்தக் காயங்களை அடைவர் ;

எரியும் நிலக்கரியில் வாட்டப்படுவர்; அல்லது இரும்புச் சட்டியில் வதக்கப்படுவார்கள்.

தபன், பிரதபன் நரகங்களில்  வதைக்கப்படுவர்; சுடப்படுவர்.  சஞ்சிவ நரகத்தில் தலை கீழாகத் தொங்கவிட்டு வெட்டப்படுவார்கள்.

சில தீயவர்களை, நாய்கள் கடித்து விழுங்கும். அந்த நாய்களுக்கு இரும்புப் பற்கள் கத்தி வடிவத்தில் இருக்கும் .

சிறிய நரகங்களில் சாம்பலாலும் தீப்பொறிகளாலும் தீயோர்கள் சுடப்படுவார்கள். கால சூத்ர நரகத்தில் கம்பியினாலான சாட்டைகளால் அடிக்கப்படுவார்கள்.

இவைகளையெல்லாம் அவர் 2200 ஆண்டுப் பழமையான மஹாவஸ்து நூலிலிருந்து எடுத்துரைக்கிறார்.

Source book :

Asvaghosa and His Times, Sarla Khosla, 1986 with my inputs.

—subham—

Tags- சங்க இலக்கியத்தில்,  நரகம்,  புத்த மதத்தில்,  கொடிய நரகம் , நிரையம், அளறு, அஸ்வகோஷர், லலிதவிஸ்தாரம், மஹாவஸ்து

Leave a comment

Leave a comment