உ. வே. சா. செய்த தப்பு? சங்க இலக்கியத்தில் மல்லிகா நில்லிகா வினோதம்! (Post No.14,543)

Written by London Swaminathan

Post No. 14,543

Date uploaded in London –  22 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க இலக்கியத்தில் 18 (10+8)   நூல்கள் உள்ளன அவற்றைப் பத்துப்பாட்டு (10+8)  எட்டுத்தொகை என்று பிரிப்பார்கள் ; அதில் எட்டுத் தொகையில் ஒன்று பரிபாடல்;  அந்த நூல் நமக்கு முழுவதாகக் கிடைக்கவில்லை; கிடைத்த பாடல்களில் வைகை நதி, முருகன், விஷ்ணு பற்றிய பாடல்கள் உள்ளன . அவற்றில் வைகை பற்றிய 11- ஆவது பாடலில் வைகை நதியில் குளிக்கும் அழகிகளின் சேட்டைகள் , விளையாட்டுகள் பற்றிப் புலவர் நல்லந்துவனார் பாடுகிறார்.

அதில் நில்லிகாமல்லிகா என்ற வரிகள் அடுத்தடுத்து வருகின் றன ; இரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல ;

நில்லிகா என்பதற்கு உ.வே.சா முதலிய அறிஞர்கள் கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை ; பூக்கள் பற்றிப் புலவர் பல விஷயங்களைச்  சொல்லும் பொழுது மல்லிகா மற்றும் அதற்கு முன்னாலும் பின்னாலும் பூக்கள் பற்றிச் சொல்லிவிட்டு நில்லிகா என்ற சொல்லுக்கு உ வே சா விநோதப் பொருள் கற்பிக்கிறார்நில்! என்று ஒரு பெண்ணை மற்றும் ஒருத்தி தடுத்தாளாம் அதுவே நில்லிகா ஆயிற்றாம் !  இதற்கு சிலப்பதிகாரத்திலிருந்து மட்டும் ஒரு உதாரணத்தை வேறு ஒரு புஸ்தகத்தில் காண முடிகிறது.

ஆனால் சம்ஸ்க்ருத அகராதியைப் பார்த்தால்மல்லிகா , நீ(ல்)லிகா   எல்லாவற்றுக்கும் பூக்களின்/ தாவரங்களின் பெயர்களே உள்ளன ; தமிழில் நெல்லி, மல்லி என்ற சொற்கள் எல்லாம் தாவரங்களையே குறிக்கின்றன. அதுபோல நீலி, நிலீ என்பனவற்றைச் செய்யுளின் பொருட்டு நில்லிகா என்று ஆக்க முடியும். நிலிகா என்ற தாவரம் நீல நிற அல்லது இண்டிகோ நிற அவுரி வகைத் தாவரம் ஆகும் ஆக இன்னும் ஒரு பெண் நீல நிறப்பூவினை வைத்திருந்தாள் என்று சொல்லுவதே பொருந்தும்.

பரிபாடல் வரிகளைப் படித்துவிட்டு நான் சொல்லும் பொருள் பொருந்துகிறதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்   

*****

வையை–பரிபாடல் 11

பாடியவர் : நல்லந்துவனார்; இசையமைத்தவர் : நாகனார்.

(மழை பொழிய வையையில் நீர் பெருகி ஓடுதல் )

(மகளிர் செயல்கள்)

……………………………

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,

வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,

சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; 95


பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;

‘குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்

இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்‘ என்று

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,

கொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண். 100


பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்

குவளைப் பசுந் தண்டு கொண்டு.

கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,

நில்லிகா!‘ என்பாள்போல்நெய்தல் தொடுத்தாளே_____

மல்லிகா மாலை வளாய். 105

……………..

*****

பரிபாடல் 11

ஒருத்தி தன் மாவடு போன்ற கண்ணழகைக் காட்டினாள். ஒருத்தி மூங்கில் போன்ற தன் தோள் அழகைக் காட்டினாள். ஒருத்தி தன் காதுகளில் குவளை மொட்டுகளைச் சூடிக்கொண்டு நான்கு விழிகளை படைத்தவள் போலத் தோற்றமளித்தாள். ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக்கொண்டாள். ஒருத்தி பவள வளையல்களைத் தன் செறிந்த தொடைகளில் அணிந்துகொண்டாள். ஒருத்தி குவளைப் பூவின் தண்டை நடுவில் வைத்து, கல்லகாரம் என்னும் பூவால் மாலை தொடுத்தாள். செங்கழுநீர்ப் பூவினாற் கண்ணி தொடுத்த ஒருத்தியை நில்லென்று சொல்லுவாளைப்போல வேறொருத்தி  மல்லிகையோடு நெய்தற்பூவை விரவித் தொடுத்தாள் — என்பது உ.வே.சா தரும் பொருள்அவர்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரிபாடல் நூலினை வெளியிட்டார் . எல்லோரும் அவரது உரையைப் பின்பற்றியுள்ளனர்  11

என் கருத்து

நெய்தல் மலர் நிறமும் நீலம்தான்; நெய்தல் மலர் (நீலாம்பல்; Nymphaea nouchali) கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும்.

ஆகவே நில் என்று கொள்வதை விட  நீலாம்பல் போல் என்று பொருள் சொல்லலாம் அல்லது நிலிகா / கருநீலம் indigo, blueblack

அந்த இடத்தில் நில் என்ற வினைச் சொல்லைப் போட்டு  கஷ்டப்பட்டு அர்த்தம் செய்வதற்குப் பதிலாக ஏனைய வரிகளில் உள்ள பூக்களைப் போல ஒரு பூவின் பெயரே பொருந்தும்.

நல்லந்துவனார் பாடலில் திலகம் முதலிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வருவதையும் துர்கா தேவிக்கு மூன்று கண்கள் இருப்பதைக் குறிப்பிடுவதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.

*****

இதோ ‘விஸ்டம்  லைப்ரரி’தரும் சொற்கள்:

Wisdomlib.org

“Nilika” (also spelled “Nīlikā”) has multiple meanings depending on the context. In Sanskrit, it can translate to “the blue one”. It can also refer to a specific plant, Blyxa octandra, sometimes associated with the indigo plant. Additionally, “Nilika” is a Sanskrit name for a lotus flower or the stem of a lotus bloom

****

Wisdomlib.orgSanskrit dictionary

[«previous (N) next»] — Nilika in Sanskrit glossary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Nīlikā (नीलिका).—

1) The indigo plant.

2) Moss (śaivāla); अपां तु नीलिकां विद्यात् (apāṃ tu nīlikāṃ vidyāt) Mahābhārata (Bombay) 12.283.52. See नीला (nīlā) also.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Nīlikā (नीलिका) or Nīlinī.—f.

(-kā) A plant, (Nyctanthes tristis;) a species with blue flowers. 2. The indigo plant. 3. A slight malady; black and blue marks in the body from bruises, &c. kan added to nīlī.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Nīlikā (नीलिका):—[from nīlaka > nīl] f. Blyxa Octandra, [Mahābhārata]

2) [v.s. …] a [particular] medicinal plant, [Suśruta]

3) [v.s. …] the indigo plant, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

4) [v.s. …] Nyctanthes Arbor Tristis, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

5) [v.s. …] Vitex Negundo, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

6) [v.s. …] a kind of malady (black and blue marks in the face), [Suśruta]

7) [v.s. …] a [particular] disease of the lens of the eye (also likā-kāca, m.), [Suśruta]

8) [v.s. …] Name of a river, [Mahābhārata]

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Nīlikā (नीलिका):—(kā) 1. f. A plant (Nyctanthes tristis); Indigo plant; marks of bruises; slight malady.

பாடலைப் ‘படி’ எடுத்தவர்கள் செய்த தவறு என்றே நான் கருதுகிறேன்.

இண்டிகோ தாவரங்கள் அவுரி  என்று வழங்கப்படுகின்றன. ஆனந்தவிகடன் தமிழ் அகராதி அவுரி என்பதற்கு நீலிச் செடிநீலிப்பூ நீலம் என்று பொருள் தருகிறது; ஆகவே நில் என்பதை நீலிச் செடி, நீலிப்பூ என்ற பொருள் வரும்படி திருத்த வேண்டும் .

****

எனது ஏனைய ஐயப்பாடுகள் !

முன்னரே தொல்காப்பியர் பயன்படுத்தும் அபூர்வ சொல் நிம்பிரி (பொறாமை), , அகநானூறுசிலப்பதிகாரம் பயன்படுத்தும் தொழுனை (யமுனை)  நதி முதலிய சொற்களுக்கு விளக்கம் இல்லாமை குறித்து எழுதினேன். தமிழில் இருதயத்துக்கு சொல் இல்லை; ஆனால் குருதி/ ரத்தம் என்ற சொல் உள்ளதால் குருத்து என்பதே இருதயம்அது ஹ்ருத் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையதுஅதுவே ஐரோப்பிய மொழிகளில் ஹார்ட் HEART என்று ஆயிற்று என்றும் எழுதினேன். மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மேலும் விளக்கம் சொல்லலாம் .

—subham—

Tags- சங்க இலக்கியம், மல்லிகா, நில்லிகா  வினோதம்,  பரிபாடல் , பாடல் எண் 11, உ வே சா.,  தப்பு ?

Leave a comment

Leave a comment