ஆயுர்வேதத்தை அங்கீகரிக்கும் ஆய்வு! (Post No.15,545)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,545

Date uploaded in London – –23 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மே 2025 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியள்ள கட்டுரை!

ஆயுர்வேதத்தை அங்கீகரிக்கும் ஆய்வு! 

ச. நாகராஜன் 

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கும் ஹிந்துக்களின் புனிதமான நூல்களாகும்.

 ஆயுர்வேதமும், ஜோதிடமும் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகிறது.

 இதில் ஆயுர்வேதத்தை அறிவியல் பூர்வமான சிகிச்சை முறை என்று சொல்ல முடியாது என்று சில பகுத்தறிவுவாதிகள் அவ்வப்பொழுது கூறி வருவதோடு ஆயிரக்கணக்கான அல்லோபதி கட்டுரைகளில் ஓரிரண்டு கட்டுரைகளே ஆயுர்வேதத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்றும் கூறுகின்றனர்.

 இதைப் போக்க கடந்த இருபது ஆண்டுகளாக,அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜி (CENTRE FOR CELLULAR AND MOLECULAR BIOLOGY)  என்ற நிறுவனம் 1977லிருந்து ஹைதராபாத்தில் இயங்கி வருகிறது.

 ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, தீ, வானம் ஆகியவற்றோடு வாத, பித்த, கபம் என்ற மூன்று தோஷங்களுமே மனிதனின் உடலமைப்பை நிர்ணயிக்கிறது என்கிறது ஆயுர்வேதம்.

 ஒவ்வொரு மனிதனும் மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றே அவன் உடலில் பிரதானமாக இருக்கிறது; அதை நன்கு உணர்ந்து எந்த சிகிக்க்சை முறையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.

 ஆகவே ப்ரக்ருதி என்று சொல்லப்படும் இந்த மூன்று தோஷங்களைப் பற்றிய ஆய்வை மேற்கண்ட ஹைதராபாத் நிறுவனம் மேற்கொண்டது.

20 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்கும் 3416 ஆரோக்கியமான ஆண்கள் இந்த சோதனைக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்களின் பிரகிருதியை பாரம்பரிய வழியில் வந்த மருத்துவர்கள் நிர்ணயித்தனர்.

 பிறகு இவர்கள் மீது ஆயுசாஃப்ட் என்ற ஒரு மென்பொருளைக் (A

software by name AYUSOFT) கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது.

இறுதியில் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக பிரதானமாக உள்ள 262 பேர்கள் தேர்ந்தெடுக்கப்படனர். அவர்களின் 52 ஜெனிடிக் மார்கர்ஸ் எனப்படும் 52 மரபணு குறிப்பான்கள் அடையாளம் காணப்பட்டன. இவர்களிடம் எந்த தோஷம் அதிகமாக (பிரதானமாக) இருக்கிறது என்பதை இதன் அடிப்படையில் ஆராய முடிவு செய்யப்பட்டது. அத்தோடு மொழி மற்றும் வசிக்கும் இடத்தின் பின்னணியும் குறிக்கப்பட்டது.

 ஆய்வின் முடிவில் ஆய்வாளர்கள் பிஜிஎம் 1 (PGM 1) என்ற மரபணுவே பித்தத்துடன் தொடர்புள்ளதாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.

  இந்த ஆய்வைப் பற்றி இந்த நிறுவன இயக்குநரான டாக்டர் மோஹன் ராவ் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வுக்கான தொகை மட்டும் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு பல ஆய்வுகளை நடத்தி ஒவ்வொரு மரபணுவுக்கும் மூன்று தோஷங்களுடனான தொடர்பு கண்டுபிடிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்தது.

உடலில் உள்ள திரி தோஷத்தின் அடிப்படையிலேயே ஆயுர்வேதம் உணவு முறை, பத்தியம், மருந்து,, மூலிகைகளைப் பயன்படுத்தும் முறை, மருந்த எந்த அளவில் எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது.

 நமது முன்னோர்கள் சாத்வீகமான ஒரு மனிதனின் இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும், ராஜஸிக மனிதனின் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் தாமஸிக மனிதனின் ரத்த அழுத்தம் இடைப்பட்டதாக அலைபாயும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

 நூற்றுக்கணக்கான மூலிகைகளை ஆராய்ந்து அவற்றிற்குள்ள தனிப்பட்ட மருத்துவ குணங்களையும் கண்டறிந்து எந்த வியாதிக்கு எதை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தனர்.

 இந்த வகையில் வடலூர் வள்ளலார் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஏராளமான இரகசியங்களைத் தந்துள்ளார் என்பதை இங்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

 தமிழக அரசின் பரிசு பெற்ற நூலான இராமலிங்க அடிகள் திருவரலாறு என்ற நூலில், மருத்துவக் குறிப்புகள், என்ற பகுதியில், மூலிகை குண அட்டவணை, சஞ்சீவி மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள் ஆகியவை உள்ளன. இதை எழுதியவர் சன்மார்க்க தேசிகன் என்னும் ஊரன் அடிகள் ஆவார்.

 இந்த நூலில் மூலிகை குண அட்டவணையில் 485 மூலிகைகள் பற்றியும் அவற்றின் குணங்களையும் வள்ளலார் விவரித்துள்ளது நம்மை பிரமிக்க வைக்கும்.

 எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ சரக்குகளின் மூலம் வாழ்வாங்கு வாழ முடியும் என்பதே ஐந்தாவது வேதமான ஆயுர்வேதத்தின் உயிர்நாடியான உபதேசம்.

 தக்க வல்லுநர்களை அணுகி அவர்களின் அறிவுரையைக் கொண்டு, ஆயுர்வேதத்தைப் பின்பற்றலாம்; ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழலாம்!

***

Leave a comment

Leave a comment