Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 45
Stamps posted today include 1992, 1996 STAMPS,
Pictures of 2500 Indian Stamps, Actress Nargis, Sikh Regiment, Anaesthesia,
K C Gajapathi, H P Poddar, Flowers 1996, Dr S R Ranaganathan, Bridge nd structural engineering, Temple, Bridge, Stupa, Para Field ambulance, Y M C A, Henry Gidney, Do or Die, Gandhi, PHAD Painting, Dwaram Venkataswamy Naidu, Violin, Dr D Kotnis, Sports stamps, Boxing, Discus, Hockey, Surfing, Rafting, Sking, Hang Gliding, Sanchi Stupa, Megnath Chand, Dinanath Mangeshkar, Gymnastics, Olympics, Netaji, I N A., Jabalpur Telecomunication Centre, Yogiji Maharaj, Vijay Singh Pathik, Udham Singh, Rani, Environment
–subham—
Tags–
Stamps posted today include 1992, 1996 STAMPS, Part 45,
Pictures of 2500 Indian Stamps, Actress Nargis, Sikh Regiment, Anaesthesia,
K C Gajapathi, H P Poddar, Flowers 1996, Dr S R Ranaganathan, Bridge nd structural engineering, Temple, Bridge, Stupa, Para Field ambulance, Y M C A, Henry Gidney, Do or Die, Gandhi, PHAD Painting, Dwaram Venkataswamy Naidu, Violin, Dr D Kotnis, Sports stamps, Boxing, Discus, Hockey, Surfing, Rafting, Sking, Hang Gliding, Sanchi Stupa, Megnath Chand, Dinanath Mangeshkar, Gymnastics, Olympics, Netaji, I N A., Jabalpur Telecomunication Centre, Yogiji Maharaj, Vijay Singh Pathik, Udham Singh, Rani, Environment
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க இலக்கியத்தில் 18 (10+8) நூல்கள் உள்ளன அவற்றைப் பத்துப்பாட்டு (10+8) எட்டுத்தொகை என்று பிரிப்பார்கள் ; அதில் எட்டுத் தொகையில் ஒன்று பரிபாடல்; அந்த நூல் நமக்கு முழுவதாகக் கிடைக்கவில்லை; கிடைத்த பாடல்களில் வைகை நதி, முருகன், விஷ்ணு பற்றிய பாடல்கள் உள்ளன . அவற்றில் வைகை பற்றிய 11- ஆவது பாடலில் வைகை நதியில் குளிக்கும் அழகிகளின் சேட்டைகள் , விளையாட்டுகள் பற்றிப் புலவர் நல்லந்துவனார் பாடுகிறார்.
அதில் நில்லிகா, மல்லிகா என்ற வரிகள் அடுத்தடுத்து வருகின் றன ; இரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல ;
நில்லிகா என்பதற்கு உ.வே.சா முதலிய அறிஞர்கள் கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை ; பூக்கள் பற்றிப் புலவர் பல விஷயங்களைச் சொல்லும் பொழுது மல்லிகா மற்றும் அதற்கு முன்னாலும் பின்னாலும் பூக்கள் பற்றிச் சொல்லிவிட்டு நில்லிகா என்ற சொல்லுக்கு உ வே சா விநோதப் பொருள் கற்பிக்கிறார்; நில்! என்று ஒரு பெண்ணை மற்றும் ஒருத்தி தடுத்தாளாம் அதுவே நில்லிகா ஆயிற்றாம் ! இதற்கு சிலப்பதிகாரத்திலிருந்து மட்டும் ஒரு உதாரணத்தை வேறு ஒரு புஸ்தகத்தில் காண முடிகிறது.
ஆனால் சம்ஸ்க்ருத அகராதியைப் பார்த்தால், மல்லிகா , நீ(ல்)லிகா எல்லாவற்றுக்கும் பூக்களின்/ தாவரங்களின் பெயர்களே உள்ளன ; தமிழில் நெல்லி, மல்லி என்ற சொற்கள் எல்லாம் தாவரங்களையே குறிக்கின்றன. அதுபோல நீலி, நிலீ என்பனவற்றைச் செய்யுளின் பொருட்டு நில்லிகா என்று ஆக்க முடியும். நிலிகா என்ற தாவரம் நீல நிற அல்லது இண்டிகோ நிற அவுரி வகைத் தாவரம் ஆகும் ஆக இன்னும் ஒரு பெண் நீல நிறப்பூவினை வைத்திருந்தாள் என்று சொல்லுவதே பொருந்தும்.
பரிபாடல் வரிகளைப் படித்துவிட்டு நான் சொல்லும் பொருள் பொருந்துகிறதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்
*****
வையை–பரிபாடல் 11
பாடியவர் : நல்லந்துவனார்; இசையமைத்தவர் : நாகனார்.
(மழை பொழிய வையையில் நீர் பெருகி ஓடுதல் )
(மகளிர் செயல்கள்)
……………………………
ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; 95
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
‘குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்‘ என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
கொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண். 100
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
‘நில்லிகா!‘ என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே_____
மல்லிகா மாலை வளாய். 105
……………..
*****
பரிபாடல் 11
ஒருத்தி தன் மாவடு போன்ற கண்ணழகைக் காட்டினாள். ஒருத்தி மூங்கில் போன்ற தன் தோள் அழகைக் காட்டினாள். ஒருத்தி தன் காதுகளில் குவளை மொட்டுகளைச் சூடிக்கொண்டு நான்கு விழிகளை படைத்தவள் போலத் தோற்றமளித்தாள். ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக்கொண்டாள். ஒருத்தி பவள வளையல்களைத் தன் செறிந்த தொடைகளில் அணிந்துகொண்டாள். ஒருத்தி குவளைப் பூவின் தண்டை நடுவில் வைத்து, கல்லகாரம் என்னும் பூவால் மாலை தொடுத்தாள். செங்கழுநீர்ப் பூவினாற் கண்ணி தொடுத்த ஒருத்தியை நில்லென்று சொல்லுவாளைப்போல வேறொருத்தி மல்லிகையோடு நெய்தற்பூவை விரவித் தொடுத்தாள் — என்பது உ.வே.சா தரும் பொருள்; அவர்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரிபாடல் நூலினை வெளியிட்டார் . எல்லோரும் அவரது உரையைப் பின்பற்றியுள்ளனர்11
என் கருத்து
நெய்தல் மலர் நிறமும் நீலம்தான்; நெய்தல் மலர் (நீலாம்பல்; Nymphaea nouchali) கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும்.
ஆகவே நில் என்று கொள்வதை விட நீலாம்பல் போல் என்று பொருள் சொல்லலாம் அல்லது நிலிகா / கருநீலம் indigo, blueblack
அந்த இடத்தில் நில் என்ற வினைச் சொல்லைப் போட்டு கஷ்டப்பட்டு அர்த்தம் செய்வதற்குப் பதிலாக ஏனைய வரிகளில் உள்ள பூக்களைப் போல ஒரு பூவின் பெயரே பொருந்தும்.
நல்லந்துவனார் பாடலில் திலகம் முதலிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வருவதையும் துர்கா தேவிக்கு மூன்று கண்கள் இருப்பதைக் குறிப்பிடுவதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
*****
இதோ ‘விஸ்டம் லைப்ரரி’தரும் சொற்கள்:
Wisdomlib.org
“Nilika” (also spelled “Nīlikā”) has multiple meanings depending on the context. In Sanskrit, it can translate to “the blue one”. It can also refer to a specific plant, Blyxa octandra, sometimes associated with the indigo plant. Additionally, “Nilika” is a Sanskrit name for a lotus flower or the stem of a lotus bloom
Source: DDSA: The practical Sanskrit-English dictionary
Nīlikā (नीलिका).—
1) The indigo plant.
2) Moss (śaivāla); अपां तु नीलिकां विद्यात् (apāṃ tu nīlikāṃ vidyāt) Mahābhārata (Bombay) 12.283.52. See नीला (nīlā) also.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary
Nīlikā (नीलिका) or Nīlinī.—f.
(-kā) A plant, (Nyctanthes tristis;) a species with blue flowers. 2. The indigo plant. 3. A slight malady; black and blue marks in the body from bruises, &c. kan added to nīlī.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary
1) Nīlikā (नीलिका):—[from nīlaka > nīl] f. Blyxa Octandra, [Mahābhārata]
2) [v.s. …] a [particular] medicinal plant, [Suśruta]
3) [v.s. …] the indigo plant, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]
4) [v.s. …] Nyctanthes Arbor Tristis, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]
5) [v.s. …] Vitex Negundo, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]
6) [v.s. …] a kind of malady (black and blue marks in the face), [Suśruta]
7) [v.s. …] a [particular] disease of the lens of the eye (also likā-kāca, m.), [Suśruta]
8) [v.s. …] Name of a river, [Mahābhārata]
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary
Nīlikā (नीलिका):—(kā) 1. f. A plant (Nyctanthes tristis); Indigo plant; marks of bruises; slight malady.
பாடலைப் ‘படி’ எடுத்தவர்கள் செய்த தவறு என்றே நான் கருதுகிறேன்.
இண்டிகோ தாவரங்கள் அவுரி என்று வழங்கப்படுகின்றன. ஆனந்தவிகடன் தமிழ் அகராதி அவுரி என்பதற்கு நீலிச் செடி, நீலிப்பூ , நீலம் என்று பொருள் தருகிறது; ஆகவே நில் என்பதை நீலிச் செடி, நீலிப்பூ என்ற பொருள் வரும்படி திருத்த வேண்டும் .
****
எனது ஏனைய ஐயப்பாடுகள் !
முன்னரே தொல்காப்பியர் பயன்படுத்தும் அபூர்வ சொல் நிம்பிரி (பொறாமை), , அகநானூறு, சிலப்பதிகாரம்பயன்படுத்தும் தொழுனை (யமுனை) நதி முதலிய சொற்களுக்கு விளக்கம் இல்லாமை குறித்து எழுதினேன். தமிழில் இருதயத்துக்கு சொல் இல்லை; ஆனால் குருதி/ ரத்தம் என்ற சொல் உள்ளதால் குருத்து என்பதே இருதயம்; அது ஹ்ருத் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையது, அதுவே ஐரோப்பிய மொழிகளில் ஹார்ட் HEART என்று ஆயிற்று என்றும் எழுதினேன். மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மேலும் விளக்கம் சொல்லலாம் .
—subham—
Tags- சங்க இலக்கியம், மல்லிகா, நில்லிகா வினோதம், பரிபாடல் , பாடல் எண் 11, உ வே சா., தப்பு ?
ஐலிஃபெர் II (Islefur II) என்ற மீன் பிடிக்கும் படகு ஒன்று ஐஸ்லாந்தில் கெய்ர்பக்லாஸ்கருக்கு மேற்கே கடலில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென்று படகின் மீது ஒரு பெரிய அலை வந்து மோதி படகை நிலைகுலைய வைத்தது. ஒரு வழியாக படகை அதிலிருந்து மீட்ட குழு திடீரென்று தென்மேற்கே ஒரு பெரும் புகை மண்டலத்தைக் கண்டு அதிர்ந்தது.
படகின் காப்டன் அங்கே ஒரு கப்பல் தீப்பிடித்து எரிகிறது என்று நினைத்தார். உடனே கடற்படைக்குத் தகவல் தெரிவித்து உதவிக்கு விரைந்து வருமாறு செய்தி அனுப்பினார்.
மீன்பிடி படகு அந்த புகை மண்டலத்தை நெருங்கியபோது தான் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை அவர்கள் அறிய நேர்ந்தது.
புகை மண்டலத்திற்கு காரணம் கப்பல் தீப்பிடித்து எரியவில்லை. கடலுக்கு அடியிலிருந்த எரிமலை ஒன்று வெடித்து அதனால் ஏற்பட்ட புகைமண்டலம் தான் அது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
உடனே தப்பித்தோம் பிழைத்தோம் என்று படகைத் திருப்பி வேகமாகச் செலுத்தினர். கடற்படைக்கும் தகவல் அனுப்பினர்.
மூன்றே மூன்று மணி நேரத்திற்குள் 12000 அடி உயரத்திற்கு அந்தப் புகை வானளாவ எழுந்து சாம்பலைக் கக்கியது. கடலுக்கு 426 அடி கீழேயிருந்து ஒரு சதுர மைல் கடல் பரப்பிலிருந்து அந்த எரிமலை வெடித்திருக்கிறது.
கடலே அல்லோலகல்லோலப்பட்டது. அலைகள் சீறியெழ தொலைதூரத்தில் சென்று கொண்டிருந்த படகுகளில் இருந்தோர் எல்லாம்’ ஐயோ அப்பா’ என்று கூக்குரலிட்டு வேகமாக கரையை நோக்கிப் படகைச் செலுத்தினர்.
சில சமயம் இப்படிப்பட்ட வெடிப்பு 50000 அடி உயரம் வரை புகையைக் கக்குமாம்!
அங்கு சென்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியைப் பாதுகாப்புடன் மேற்கொண்டனர்.
என்ன ஆச்சரியம், கடலுக்குள்ளிருந்து ஒரு திவு வெளிப்பட்டிருந்தது. நான்கு வாரங்களில் எல்லா பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டனர்.
ஐஸ்லாந்து அரசு இதை ஆராய ஒரு கமிட்டியை உடனடியாக நியமித்தது. இந்தப் புதிய தீவுக்கு சர்ட்ஸீ (Surtsey) என்று பெயரைச் சூட்டினர்..
1964 பிப்ரவரியில் இன்னொரு எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு அது குழம்பைக் கக்கியது.
நன்கு உருவாகி விட்டிருந்த சர்ட்ஸீ தீவு கடல் மட்டத்திற்கு 500 அடிக்கும் மேலே உருவாகி இருந்தது.
கடலுக்கடியில் பத்தாயிரம் மைல் நீளம் நீண்டுள்ள மிட்-அட்லாண்டிக் மலைத்தொடரில் இப்படிப்பட்ட வெடிப்புகள் அவ்வப்பொழுது ஏற்படுவதுண்டு.
இந்த சர்ட்ஸீ தீவு விஞ்ஞானிகளுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது.
இங்கு அவர்கள் தங்களுடைய பெரிய லாபரட்டரியை அமைத்து கடல் வாழ் மிருகங்களைப் பற்றியும் கடல் தாவரங்களைப் பற்றியும் ஆராய ஆரம்பித்தனர்.
விசேஷமான பாதுகாப்பு உடை அணிந்த விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஃபல்மர் என்ற ஒரு புதுப் பறவை இங்கு வந்து குடி கொண்டது. மேவீட் என்ற ஒரு புதுவகைத் தாவரம் இங்கு வளர ஆரம்பித்தது. மெதுவாக கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வர ஆரம்பிக்க இந்த சர்ட்ஸீ தீவு உயிரினங்களைக் கொண்ட ஒரு தீவாக இப்போது மாறி விட்டது!
ஆச்சரியமூட்டும் சர்ட்ஸீ தீவு படைப்பு விசித்திரங்களுள் ஒன்று!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 44
Stamps posted today include 1996, 1995 STAMPS,
FOUR MORE PAINTINGS, TWO BIRDS, JUNGLE COCK,MOUNTAIN GOAT, OLYMPI
CS SPIRIT, NATH PAI, MORARJI DESAI, ABAI KONUNBAEV, MUHAMMAD ISMAIL SAHIB, OLYMPIC TORCH, J D SAMAH, 1997 INDPEX, PANDIT K DUBEY, PHEROZ SHAH, GRENADIERS, VIJAY DIVAS, VIVEKANANDA ROCK MEMORIAL, RAIL MUSEUM, V S N L, CHEMBAI VAIDYANATHA BHAGAVATHAR, FOUR FAMOUS CRICKET PLAYERS, FIELD MARSHAL CARIAPPA, KIDWAY, RUIKAR, CK NAYUDU, DEODHAR, VIJAY MERCHANT, VINOO MANKAD, AHILYABAI HOLKAR, SCIENCE CONGRESS, ALPHONSA, CHILDRENS DAY,
–subham—
Tags– Pictures of 2500 Indian Stamps, Part 44, year 1995 , 1996,
FOUR MORE PAINTINGS, TWO BIRDS, JUNGLE COCK,MOUNTAIN GOAT, OLYMPI
CS SPIRIT, NATH PAI, MORARJI DESAI, ABAI KONUNBAEV, MUHAMMAD ISMAIL SAHIB, OLYMPIC TORCH, J D SAMAH, 1997 INDPEX, PANDIT K DUBEY, PHEROZ SHAH, GRENADIERS, VIJAY DIVAS, VIVEKANANDA ROCK MEMORIAL, RAIL MUSEUM, V S N L, CHEMBAI VAIDYANATHA BHAGAVATHAR, FOUR FAMOUS CRICKET PLAYERS, FIELD MARSHAL CARIAPPA, KIDWAY, RUIKAR, CK NAYUDU, DEODHAR, VIJAY MERCHANT, VINOO MANKAD, AHILYABAI HOLKAR, SCIENCE CONGRESS, ALPHONSA, CHILDRENS DAY, RAJARAJA CHOLA ETC.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-10
பரமசிவன் கழுத்தில் பாம்பு உளது; அதற்கு யார் பகைவன்? விஷ்ணுவுக்கு வாகனமாக இருக்கும் கருடன் ; இருவரும் இறைவனிடத்தில் இருந்தாலும் பகைமை அகன்றதா?
இல்லை; ஏன்?
எல்லாம் இயற்கை விதிப்படி நடக்கிறது ; ஆகையால் யாரையும் வெறுக்காமல், வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குமரேச சதகத்தில் குருபாத தாசர் நமக்கு அட்வைஸ் ADVICE தருகிறார்.
20. விடாத குறை
தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்துமதி
தேகவடு நீங்கவில்லை
திருமால் உறங்கிடும் சேடனுக்கு வணன்
செறும்பகை ஒழிந்த தில்லை
ஈசன் கழுத்திலுறு பாம்பினுக்கி ரைவே
றிலாமலே வாயுவாகும்
இனியகண் ஆகிவரு பரிதியா னவனுக்
கிராகுவோ கனவிரோதி
ஆசிலாப் பெரியோ ரிடத்தினில் அடுக்கினும்
அமைத்தபடி அன்றிவருமோ
அவரவர்கள னுபோகம் அனுபவித் திடல்வேண்டும்
அல்லால் வெறுப்பதெவரை
வாசவனும் உம்பரனை வரும்விசய சயஎன்று
வந்துதொழு தேத்துசரணா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
பொருள்
இந்திரனும் பிற வானவரும் வந்து,
‘வெல்க! வெல்க’ என்று வணங்கித் துதிக்குந் திருவடிகளை உ டையவனே!மயிலேறி………குமரேசனே!
ஒளிவீசும் மேருமலையை வலமாக வந்தும் திங்களின் /சந்திரனின் களங்கம் ஒழியவில்லை; திருமால் துயிலப் படுக்கையாக இருக்கும் ஆதிசேடன் என்னும் பாம்புக்கும் தன் குலப் பகையான கருடனின் பகைமை நீங்கவில்லை; சிவபிரான் கழுத்திலே இருக்கும் பாம்புக்குக் காற்றையன்றி வேறு உணவு இல்லை;
பயனை அவரவர்களே நுகர்தல் வேண்டும் அல்லாமல் யாரையும் வெறுத்தல் கூடாது.
(விளக்கவுரை) மேருமலையைக் கதிரவனுந் திங்களும் பிற கோள்களும் வலம்வருவதாகப் புராணங்கள் கூறும். ஆதிசேடன் என்னும் பாம்பு திருமாலுக்குத் துயிலும் அணையாக உள்ளது என்றும் புராணங்கள் கூறும்.
இராகு என்னும் பாம்பு கதிரவனைப் பகைத்த கதை:-
பாற்கடலிலிருந்து அமுதம் வந்தது. அதைக் கடைந்த அவுணரும்
அமரரும் பங்குபெற விரும்பிச் சூழ்ந்தனர். அவுணர்களுக்குக் கொடாமல்அமரருக்கு மட்டும் அமுதத்தை அளிக்கத் திருமால் விரும்பினார்; மனத்தை மயங்கி மோகிக்கச் செய்யும்
மோகினி வடிவம் எடுத்தார். அவுணர்கள் அமுதத்தை விட்டு அவளை விரும்பிச் சூழ்ந்தனர். மோகினியானவள் அமரருக்கு மட்டும் அமுதம் பங்கிட்டாள். மயங்கிய அவுணர் உணர்வின்றி நின்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் மட்டும் உணர்வு பெற்று அமரருடன் கலந்து அமுதம் பெற்றான். அவன் அவுணன் என இரவியும் திங்களும் மோகினியிடம் விளம்பினர். மோகினி அகப்பையாலே அந்த அவுணனைப் பிளந்தாள். அவன் இரு
கூறினான். எனினும் அமுதம் உண்டதனால் இறக்கவில்லை. இருகூறும் இராகு கேது என்னும் பெயருடன் சூரியனையும் சந்திரனையும் ஆண்டுதோறும் விழுங்குவதென்று (கிரகணங்கள்) தவத்தின்மூலம் வரம்பெற்ற பாம்பாகின. இவ்வாறு புராணம்
கூறும்.
(கருத்து) அவரவர் வினைப்பயனை அவரவர்களே நுகர்ந்து கழித்தல் வேண்டும். ****
வால்மீகி ராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் விதி பற்றி கூறப்பட்டுள்ளது
வால்மீகி (அயோத்யா காண்டம்) கூறுகிறார் :
ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே
தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:
न अत्र कश्चिद् यथा भावम् प्राणी समभिवर्तते |
तेन तस्मिन् न सामर्थ्यम् प्रेतस्य अस्त्य् अनुशोचतः || २-१०५-२८
ஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மற்றவர் இறக்கும்போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.
तम् आपन्नः कथम् शोचेद् यस्य न अस्ति व्यतिक्रमः || २-१०५-३०
வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்; அது திரும்பிவராத பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?
ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும். ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத்தானே.
*****
விதியை வெல்ல முடியும்
ஆயினும் கடுமையான , தீவிர பிரார்த்தனையால், பக்தியால் விதியை வெல்லலாம் . இதைத் திருமூலரும் அப்பரும், சமப்ந்தரும் அருணகிரிநாதரும் சொல்கிறார்கள் .
கந்தர் அலங்காரம் பாடல் 38
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
பொருள்
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள்/ கிரகம் தான் என்ன செய்யும்? கொடிய இயமனால்தான் (எமன்) என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.
திருமூலர் சொல்கிறார்:
கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே
— திருமந்திரத்தில் திருமூலர்
பொருள்:
தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.
****
சம்பந்தரும் நவக்கிரகங்களும் ஒரு தீயதையும் செய்ய முடியாது என்று பாடுகிறார்
கோளறு திருப்பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
*****
அப்பரும் எமனும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் ;
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. 6.98.1
****
ஆகவே குருபாதர் சொன்னது பாமர மக்களின் துயரம்; பின்னோர் சொன்னது, இறைவனை நம்புவோரின் அனுபவ முடிவு !
நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் (மகா கவி பாரதி)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மலைகளில் சிறந்தது மேரு, மனிதர்களில் சிறந்தோர் பிராமணர்: பரஞ்சோதி முனிவர்-6
பரஞ்சோதி முனிவர் சொல்லும் அதிசயச் செய்தி!
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-6
திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் புதிய செய்திகளையோ , மேற்கோள்களையோ நமக்கு அளிக்கிறார்; மூர்த்தி விசேஷப் பகுதியில் உயர்ந்தது எது என்று சொல்லி விட்டு சிவனை எந்த நேரத்தில் தரிசித்தால் நல்லது ? என்ன என்ன கிடைக்கும்? என்று ஒரு பட்டியல் தருகிறார் . பின்னர் எதை எதைக் கொண்டு பூஜித்தால் என்ன என்ன பலன் கிடைக்கும் என்று இன்னும் ஒரு பட்டியல் தருகிறார்; இறுதியில் மதுரையிலுள்ள சிவ பெருமானுக்கு என்ன என்ன பெயர்கள் என்ற பட்டியலையும் தருகிறார் .
இதோ அந்த செய்திகள்.
பட்டியல் 1
பொருப்பினுட் டலைமை யெய்தும் பொன்னெடுங் குடூமி
மேரு
தருக்களிற் றலைமை சாருந் தண்ணறுந் தெய்வ தாரு
விருப்புறு வேள்வி தம்முண் மேம்படும் புரவி மேதம்
அருட்படு தானந் தம்முள் விழமிதா மன்ன தானம்.
பொருள்
நீண்ட சிகரங்களையுடைய மலைகளுக்குள் ,
பொன்னாகிய மேரு மலையானது முதன்மை உடையது;
மரங்களுள் குளிர்ந்த கற்பகத்தரு. முதன்மை பெறும். ; வேள்விகளுள், அஸ்வமேத யாகம் உயர்வாகும்;
ரத்தினங்களில் சிந்தாமணி மேன்மையானது; உயர்வைக் கொடுக்குந் தருமங்களுள், சிவதருமம் உயர்ந்தது; இல்லற நெறியில் நின்ற நல்லவர் – முக்கண் இறைவனிடத்தில் (சிவன்) அன்பு பூண்டவரே. (சிந்தாமணி – சிந்தித்தவற்றைத் தரும் மணி)
****
தீயவாங சுவைப்*பா லாவிற் றேவரா வதிகம் பல்வே
றாயமா தீர்த்தந் தம்மு ளதிகமாஞ் சுவண கஞ்சம்
மாயமா சறுக்க வெல்லாத் தலத்திலும் வதிந்து மன்னுந்
தூயவா னவரிற் சோம சுந்தரன் சிறந்தோ னாகும்.
பொருள்
இனிமையான சுவையையுள்ள பாலையுடைய பசுக்களுள்,
காமதேனு உயர்ந்தது; பல வேறு வகையாகிய, தீர்த்தங்களுள், பொற்றாமரை சிறந்தது; பந்தமாகிய பற்றினை நீக்கவல்ல சிவலிங்க மூர்த்திகளுள், சோம சுந்தரக் கடவுள் சிறந்தவன் .
****
இத்தனிச் சுடரை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ
மெல்லாங்
கொத்தழற் பொறிவாய்ப் பட்ட பஞ்சுபோற் கோப மூள
மெய்த்தவஞ் சிதையு மாபோன் மருந்தினால் வீயு
நோய்போல்
உத்தம குணங்க ளெல்லா முலோபத்தா லழியு மாபோல்.
****
எந்த நேரத்தில் சிவ பெருமானை வழிபடவேண்டும்?
புலரியிற் சீவன் முத்தி புரேசனைக் காணப் பெற்றால்
அலைகட னான்குட் பட்ட வவனிமா தானஞ் செய்த
பலனுறுங் கதிகா லுச்சி வைகலிற் பணியப் பெற்றால்
கலைஞர்பா பத்துக் கபிலைமா தானப் பேறாம்.
பொருள்
விடியற்காலையில், சோமசுந்தரக் கடவுளை, தரிசனம் செய்தால், பெரிய பூமியைத் தானம் கொடுத்த பலன் கிடைக்கும் ; உச்சிப் போதில், வணங்கினால் வேதம் முதலிய கலைகளை யுணர்ந்த அறிஞர்களுக்கு ஆயிரம் பசுக்களைத் தானஞ் செய்தபலன் கிடைக்கும்.
****
விண்ணிடைப் பரிதிப் புத்தேள் மேலைநீர் குளிக்கு
மெல்லை
அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறாம்
பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்
வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும்.
பொருள்
சூரிய தேவன், மேலைக் கடலில் மூழ்கும் அந்திப்பொழுதில், சோமசுந்தரக் கடவுளைப் பணிந்தால், கோடி பசுக்கூட்டங்களைத் தானஞ்செய்த பயன் எய்தும்; தேவர்கள் வணங்கும் அரையிருளில், (அர்த்தஜாம பூஜை) வணங்கினால் அஸ்வமேத வேள்வியைச் செய்த பலன் கிடைக்கும்
பெரிய பயனை அடைவர்; சமட்டி உருவமாகிய அந்தச் சிவலிங்கத்தை வணங்குவோருக்கு கிடைக்கும் பலன்கள் இவை;
ருத்ரம் -சமகம் என்ற மந்திரங்கள் யஜுர் வேதத்தில் உள்ளன. சிவனுக்கு அபிஷேகம் செய்கையில் இந்த மந்த்ரத்தை ஓதுவது வழக்கம்.
****
அங்கையள வாகியநன் னீராட்டிப்
பூசித்தோ ரளவி லேனைத்
துங்கதலத் துறையிலிங்க மூர்த்திகளைச்
சிவாகமநூல் சொன்ன வாற்றான்
மங்கலமா கியமுகம னீரெட்டும்
வழுவாது வாசந் தோய்ந்த
செங்கனக மணிக்கலசப் புனலாட்டி
மாபூசை செய்தோ ராவார்.
பொருள்
உள்ளங்கையிலடங்கும் அளவு நீரால் திருமஞ்சனம் செய்து, பூசித்தவர்கள், மற்றைய உயர்ந்த தலங்களில் எழுந்தருளிய, சிவலிங்க மூர்த்திகளை, சிவாகமம் கூறியபடி மங்கலமான சோடச (16) உபசாரங்களும் தவறாமல், சிவந்த பொன்னாற் செய்த இரத்தின கலசத்தில் நிறைந்த, மணம் உடைய நீரால் அபிடேகம் செய்து பெரிய பூசை செய்தவர்கள் ஆவார்கள் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2-4-24 கல்கிஆன்லைன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை!
அமெரிக்க டாக்டர்களை வியக்க வைத்த தலாய்லாமாவின் பிரத்யேக வைத்தியர்!
ச. நாகராஜன்
பூஜ்ய ஶ்ரீ பதினான்காம் தலாய் லாமா பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார்.
அமெரிக்க ஹெல்த் டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவர்கள் அவரது பிரத்யேக வைத்தியரான யேஷி டொண்டென் (Yeshi Dhonden) என்பவரை கொஞ்ச நேரம் தங்களுக்காக ஒதுக்கினால் அவரிடமிருந்து புதிதாக சிலவற்றைத் தங்கள் டாக்டர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறினர்.
தலாய்லாமாவும் டொண்டெனும் அதற்கு இசைந்தனர்.
பின்னர் என்ன நடந்தது என்பதை ரிச்சர்ட் செல்ஜெர் என்பவர் தனது புத்தகமான மார்டல் லெஸன்ஸ்: நோட்ஸ் ஆன் தி ஆர்ட் ஆஃப் சர்ஜரி”
(Richard Slezer’s book “Mortal Lessons: Notes on the Art of Surgery” – New York, Simon & Shuster, 1976) என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.
இதில் ஒரு சுவையான பகுதியை பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்தது.
அப்போது செல்ஜெர் யேல் பல்கலைக்கழகத்தில் சர்ஜரி பிரிவின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.
மருத்துவமனையில் இருந்த அறிவிப்புப் பலகையில், “ஜூன் 10ம் தேதி காலை ஆறு மணிக்கு யேஷி டொண்டென் மருத்துவ மனைக்கு வருகை புரிந்து சுற்றிப் பார்ப்பார்” என்ற அறிவிப்போடு யேஷி டொண்டென் பூஜ்ய ஶ்ரீ தலாய்லாமாவின் பிரத்யேக வைத்தியர் ஆவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
யேஷி டொண்டென் சுற்றிப் பார்க்கும் வார்டு அருகில் வெள்ளைக் கோட்டு அணிந்த ஏராளமான டாக்டர்கள் காத்திருக்க அவர்களுடன் செல்ஜரும் சேர்ந்து கொண்டார்.
அங்குள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு நோயாளியை டொண்டென் சோதனை செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எந்த நோய்க்கு அந்த நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது பற்றி டொண்டெனுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் நோயாளியை சோதிக்கும் போது அனைத்து டாக்டர்களும் அவர் அருகில் இருக்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது.
நோயாளியைச் சோதித்த பின்னர் அனைவரும் இந்த கேஸைப் பற்றி விவாதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட நோயாளியை சீக்கிரமே எழ வைத்து அந்தப் பெண்மணியிடம் வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் அவரைச் சோதிக்கப் போவதாகவும் புதிதாக சோதனைக்குச் சிறுநீர் வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
டொண்டென் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த நோயாளிப் பெண்மணியிடம் வந்தார். படுக்கைக்கு அருகில் வந்து நின்ற அவர் அந்தப் பெண்மணியையே நெடுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது பார்வை மல்லாந்து படுத்திருந்த அந்தப் பெண்மணிக்கு மேலே பதிந்திருந்தது. அவளின் உடல் பாகங்களை அவர் பார்க்கவே இல்லை.
பின்னர் அந்தப் பெண்மணியின் கைகளை தன் இரு கரங்களாலும் தூக்கினார். பின்னர் சற்று குனிந்து தன் தலையை தனது கழுத்திலிருக்கும் துணி வரை தாழ்த்தினார்.
அந்தப் பெண்மணியின் நாடித்துடிப்பைக் கண்ணை மூடிக் கொண்டு சோதித்தார்.
பிறகு நோயாளியின் கையை மெதுவாகக் கீழே வைத்தார். மொழிபெயர்ப்பாளரிடம் அவர் ஏதோ சொல்ல ஒரு சின்ன கிண்ணத்தையும் இரண்டு குச்சிகளையும் அவர் கொண்டு வந்தார்.
சோதனைக்காக இருந்த சிறுநீரில் கொஞ்சம் கிண்ணத்தில் விடப்பட்டது.
இரு குச்சிகளை வைத்து அதைக் கிளறினார் டொண்டென். பின்னர் அந்த சிறுநீர் அருகே முகத்தைக் கொண்டு சென்ற அவர் அந்த கிண்ணத்திலிருந்து வந்த நாற்றத்தைச் சற்றே முகர்ந்தார்.
அவ்வளவு தான், வார்டைச் சுற்றிப் பார்த்ததுடன் தனது விஜயத்தை முடித்துக் கொண்ட அவர் ஹாலுக்கு வந்தார்.
அனைவரும் அங்கு ஆவலுடன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கத் தயாராக இருந்தனர்.
“என்ன வியாதி என்று சொல்ல முடியுமா?” என்று ஒரு பேராசிரியர் கேட்க உடனே டொண்டென், “Congenial Heart Disease”
“Intervertivular Septal Defect ( a hole in the wall between the left and right chmbers of the heart) with resultant heart failure என்றார்.
இடது மற்றும் வலது பக்க இதயப் பகுதிகளுக்கு இடையில் உள்ள சுவர் பகுதியில் ஒரு ஓட்டையால் ஏற்பட்ட இதய இயக்க நிறுத்தத்தால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
மற்றவர்கள் கேட்காத இதயத்தின் ஒலியை டொண்டென் மட்டும் எப்படிக் கேட்டார்?
எப்படி இவ்வளவு துல்லியமாக என்ன வியாதி என்பதை அவர் சொன்னார்?
அனைத்து அமெரிக்க டாக்டர்களும் பிரமித்து நின்றனர்.
எவ்வளவோ நவீனக் கருவிகளை வைத்து நிறைய சோதனைகள் செய்து நிர்ணயிக்கும் ஒரு வியாதியை எப்படி டொண்டெனால் இப்படிக் ஒரு கருவியும் இல்லாமல் கணிக்க முடிந்தது?
இதை அறிவியல்பூர்வமற்றது என்று சொல்ல முடியுமா, என்ன?
இது தவிர தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு தனது நல்ல ஆதரவைத் தந்து பல சோதனைகளைச் செய்யச் சொல்லி இருக்கிறார்.
தியானம் பற்றிய சோதனைகளின் முடிவைக் கண்டு அறிவியல் நிபுணர்கள் ஆச்சரியப்பட்டு அதை அப்படியே ஆவணப்படுத்தியுள்ளனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Pictures of 2500 Indian Stamps!- Part 43 (Post No.14,537)
PART 43
Stamps posted today include 1994, 1995 STAMPS,
SATYAJIT RAY, BARODA MUSEUM, RIGHT HAND ORNAMENT, GUINDY COLEGE, KING RAJARAJA CHOLA, THANJAVUR TAMIL SEMINAR, 100 YEARS OF CINEMA, YOUTH YEAR, PRITHIVIRAJ KAPOOR, TEXTILE PATTERN, CHOTURAM,K L SAIGAL, R S RUIKAR, RADIO COMMUNICATION,DELHI DEVELOPMENT AUTHORITY, FIFTY YEARS ON UNITED NATIONS, HANDSHAKE, COLLONADE BOOK COVER, BHARTI BHAVAN LIBRARY, ASIAN PACIFIC POSTAL TRAINING, LOUIS PASTEUR, LA MARTIENERE COLLEGE, FAO, FOOD GRAINS, GANDHI IN SOUTH AFRICA, MUTHURAMALINGA THEVAR, CHILDREN S DAY, SITAR, JAT WAR MEMORIAL RAJAPUTANA RIFLES, SANT TUKDOJI MAHARAJ, GIANI ZAIL SINGH, DURGAH ALA AZARAT, TATA INSTITUE, KASTURBAI GANDHI, SECTIONED HEART, CARDIAC SURGERY, ASIT KUMAR HALDAR, PRITHIVI THEATRE
–subham—
Tags– Pictures of 2500 Indian Stamps, Part 43, year 1995 , 1994, SATYAJITRAY, BARODA MUSEUM, RIGHT HAND ORNAMENT, GUINDY COLEGE, KING RAJARAJA CHOLA, THANJAVUR TAMIL SEMINAR, 100 YEARS OF CINEMA, YOUTH YEAR, PRITHIVIRAJ KAPOOR, TEXTILE PATTERN, CHOTURAM,K L SAIGAL, R S RUIKAR, RADIO COMMUNICATION,DELHI DEVELOPMENT AUTHORITY, FIFTY YEARS ON UNITED NATIONS, HANDSHAKE, COLLONADE BOOK COVER, BHARTI BHAVAN LIBRARY, ASIAN PACIFIC POSTAL TRAINING, LOUIS PASTEUR, LA MARTIENERE COLLEGE, FAO, FOOD GRAINS, GANDHI IN SOUTH AFRICA, MUTHURAMALINGA THEVAR, CHILDREN S DAY, SITAR, JAT WAR MEMORIAL RAJAPUTANA RIFLES, SANT TUKDOJI MAHARAJ, GIANI ZAIL SINGH, DURGAH ALA AZARAT, TATA INSTITUE, KASTURBAI GANDHI, SECTIONED HEART, CARDIAC SURGERY, SITAR, ROENTGEN,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Shripad Damodar Satwalekar (19 September 1867 – 31 July 1968) was a great Vedic scholar. He is known for his paintings, social health, Ayurveda, Yoga, and Vedic literature. He was also the founder of the Swadhyaya Mandal – A Vedic Research Institute.
He translated all the four Vedas into Hindi and a few other north Indian languages. He was the editor of a few magazines and author of several books .
He was addressing Hindi audiences about Vedas . Once he started writing articles on Bhumi Sukta in the Atharva Veda. That was the first patriotic hymn in the world. The long Sukta sings about patriotism, glory of motherland and love for nature. Someone complained that it was against the ruling British government in India. They wanted to arrest S D Satwalekar for this write up. But he was hiding in different towns at the advice of his friends. But the British arrested him one day with the help of their spy network. Despite his clarifications, he was sent to prison. At the end, Annie Beasant and others used their influence and got him released.
There are some interesting information about S D Satwalekar. He lived for 101 years according to the Vedic dictum. Brahmins recite the Vedic mantra every day that we should live for one hundred years healthily.
Another information is that his Samskruta Swayam Sikshak book received very well and Sanskrit learners use this book until today.
His Bhagavad Gita commentary is one of the best commentaries according to learned scholars.
He wrote with his own hand in a foolscap size paper that went to 60,000 pages.
He authored over 400 books in Hindi, Marathi, Gujarati and English.
He was awarded Padma Bhusan in 1968. Many universities awarded him honorary doctortaes.
He was born in Kolgaon in Maharashtra; his father Damodar Bhatta, was a Rig Vedic scholar and a priest. Hi mother’s name was Laskhmibai. He learnt Vedas from the age of eight.
He was the Aundh Nagar Sangachalak of RSS for 16 years. His centenary celebration was attended by RSS Chief Sri M S Golwalkar.
He started one Vedic Mandir/ temple where all books from different religions were kept.
People from different political parties visited him and paid their respect.
Those who wanted to know the meaning of all the four Vedas read Sayana Bhashyam . S D S Vedic commentary in Hindi got the same merit.
He was inspired by Sri Dayananda Sarasvati, the founder of the Arya Samaj.
During his lifetime, he lived in different cities in North India and settled at Killa Pardi in Gujarat.
His important works are as follows:
Commentaries on Vedas
ṛgveda kā subodha bhāṣya (in four volumes; published from Swadhyay Mandal, Pardi)
yajurveda kā subodha bhāṣya (in two volumes)
sāmaveda kā subodha anuvāda
atharvaveda kā subodha bhāṣya (in four volumes)
vaidikasaṃhitāḥ
ṛgveda mūla saṃhitā
yajurveda mūla saṃhitā
sāmaveda mūla saṃhitā
atharvaveda mūla saṃhitā
yajurvedīya kāṭhaka saṃhitā
yajurvedīya maitrāyaṇī saṃhitā
yajurvedīya kāṇva saṃhitā
kṛṣṇa yajurvedīya taittirīya saṃhitā
vedaviṣayakāḥ anyāḥ granthāḥ
vaidika vyākhyānamālā
go-jñāna kośa (A compilation of the proofs in the Vedas for the inviolability of cows and bulls and the proper contextual meaning of the mantras related to them and the explanation of the mantras related to cows)
vaidika yajña saṃsthā
mānavī āyuṣya
dīrgha jīvana aura ārogya
veda meṃ kṛṣividyā
vaidika sarpa-vidyā ((with the assistance of Ramachandra Kashinath Kirloskar)
veda-paricaya (for readers to practice Vedic mantras in simplicity)
Puranic books
mahābhārata-gītā
mahābhārata (saṭīka) – 18 bhagon mein (Hindi translation of the text of the critical edition published by Bhandarkar Oriental Research Institute, Pune)
mahābhārata kī samālocanā (Explanation and Discussion of Certain Aspects of the Mahabharata)
Other books
saṃskṛta pāṭhamālā
saṃskṛta svayaṃśikṣaka (in two volumes) – Published by Rajpal and Sons, Delhi
Literary works
Satwalekar was interested in both individual and social health, Ayurveda, Yoga, and Vedas[7] (particularly in the analysis of the Vedas at the level of adhibhuta) and wrote several books on these subjects, including ‘
Sanskrit Svayam Shikshak (संस्कृत स्वयं-शिक्षक) – Self-learning book for learners of Sanskrit through the medium of Marathi. These were also available in Hindi and English(“Sanskrit Self Teacher”).
Puruṣārtha-Bodhinī-Bhāṣā-Ṭīkā – A four volume Commentary on Bhagavad Gita – S.Rama calls this the best commentary on the Gita by a 20th century author[10][2]
Translation of the Mahabharata – The Government of India assigned the task of translating the constituted text of the Mahabharata published by the Bhandarkar Oriental Research Institute to Satwalekar. After his death, the task was taken up by Shrutisheel Sharma.[11]
Hindi knowing people are very lucky to get S D S commentaries in the language. If someone translates his important woks in English and other South Indian languages it would be very useful.
–subham—
Tags—S D Satwalekar, Jail, Bhumi Suktam, Atharvana Veda, Sanskrit teaching,
அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற பெரிய மருத்துவ நூலை எழுதி புகழ் பெற்றவர் வாக்பட்டர் . அவர் பற்றிய இரண்டு சுவையான கதைகளை (சம்பவம்) படிப்பதற்கு முன்னால் அவர் செய்த நூலினை அறிவோம். மருத்துவ உலகில் சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவருக்கு அடுத்தாடியாக நிற்பவர் வாக்பட்டர்;
இலக்கண உலகத்தில் பாணினி- வரருசி -பதஞ்சலி ஆகிய மூவரையும் மும்முனிகள் என்பார்கள் அதே போல இந்துக்கள் , சரகர், சுஸ்ருதர்,வாக்பட்டர் ஆகிய மூவரையும் மருத்துவத்தின் மும்முனிகள் என்பார்கள் .
சரகர் சுஸ்ருதர் போலவே ஐவரும் சம்ஸ்க்ருத மொழியில் ஏழாயிரம் சூத்திரங்களடங்கிய அஷ்டாங்கஹ்ருதயம் என்ற பெரிய மருத்துவ நூலை எழுதியுள்ளார்.
வாக்கபட்டரின் வாழ்க்கை பற்றி ஆராய்வதில் ஜெர்மானியர்கள் இறங்கினர் ; அவர் எழுதிய நூல்களுக்கான உரைகளின் அடிப்படையில் அவர் ஒரு காஷ்மீரி என்ற முடிவுக்கு வந்தனர். .நீண்ட நாள் வாழ்வது எப்படி என்ற காய கல்ப விஷயங்களை எழுதியதால் இவர் புகழ் ஜாவா /இந்தோனேஷியா, கம்போடியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் பரவியது . ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் வாக்பட்டர், எகிப்துக்குச் சென்று அந்த நாட்டிலேயே இறந்ததாகச் சொல்கின்றனர் . அவர்கள் இரண்டு உண்மைக் கதைகளையும் எழுதியுள்ளனர்.
****
முதல் கதை
எகிப்தை ஆண்ட மன்னர்களில் ஒருவருக்கு தீராத வயிற்று நோய் ஏற்பட்டது ; அவருக்கு வாக்பட்டரின் புகழ் தெரிந்தது. எகிப்து நாட்டுக்கு வந்து தனக்கு சிகிச்சை தரும்படி வேண்டினார். அக்காலத்தில் கடல்கடந்து செல்வது கடினமானது; சாஸ்திர விரோதமானது ; ஆயினும் வாக்பட்டரோ ஆயுர் வேதம் மட்டுமின்றி ஜோதிடத்திலும் வல்லவர் . தனது ஜாதகப்படி வெளிநாட்டில்தான் மரணம் என்பதை அறிந்து துணிச்சலாக கடற்பயணம் மேற்கொண்டார் . அங்கே மன்னரின் தீராத வயிற்று நோயைத் தீர்த்துவைத்தார் .
ஒரு நோயாளி கூப்பிடும்போது நோயினைத் தீர்க்கப் போகாமல் இருந்தால் அது பாவம் , குற்றம் என்று வைத்திய நூல்கள் கூறுவதால் அவர் இந்த முடிவினை எடுத்தார். நான்கு மாத காலம் கப்பல் பயணம் செய்து, எகிப்துக்குச் சென்ற அவருக்கு மன்னர் ராஜ உபசாரம் செய்தார் . மன்னரின் நோயினை மூன்றே மாதங்களில் தீர்த்து வைத்தார் . நாடே அதை விழாவாகக் கொண்டாடியது . மன்னர் மனம் மகிழ்ந்து, அந்தக் கால வழக்கப்படி பாதி நாட்டினை பரிசாகக் கொடுத்தார் ஆனால் வாக்பட்டரோ அதை ஏற்க மறுத்து, என்னை நாட்டுக்குத் திருப்பி அனுப்புங்கள்; அதுவே போதும் என்றார் . உடனே மன்னர் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். அதற்குள் திரைப்படக் கதைகளைப் போல வேறு ஒரு திருப்பம் ஏற்பட்டது! .
****
இரண்டாம் கதை அல்லது சம்பவம்
எகிப்து நாட்டின் அரசகுமாரி, திருமணம் ஆவதற்கு முன்னரே கருவுற்றாள்; காரணம், அந்தப்புர வேலையாள் ஒருவன் அவளை ஆசைகாட்டி ஏமாற்றிக் கற்பழித்து விட்டான். இந்தச் செய்தி பரவினால் அந்த வேலையாளுக்கு மரண தண்டனை கிடைக்கும்; அரச குமாரி தனது மானத்தைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொள்வாள் ; இதனால் அரசியும் அரச குமாரியும் வாக்கபட்டரை ரகசியமாகச் சந்த்தித்துக் கருவினைக் கலைத்துவிடுங்கள் என்ற மன்றாடினார்கள் .
இந்து மத நூல்களில் ப்ருணுஹத்தி (கருக் கொலை ) என்பது பிரம்மஹத்தி (பிராமணாள் கொலை) –க்கு சமம் என்று சொல்லியுள்ளது ஆகையால் கருவினைக் கொல்ல முடியாது என்றார் . அப்போது அவர்கள் ஒரு வாதத்தை முன்வைத்தனர் நீங்கள் மறுத்தால் வேலைக்காரன் மரண தண்டனையால் சாவான்; என் மகள் தற்கொலையால் சாவாள்; அவளுடைய வயிற்றிலுள்ள கருவும் சாகும்; மூவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்வது பாவம் இல்லையே என்று அரசி வாதாடினாள் ; வாக் பட்டர் மனம் இரங்கி, மூவரின் உயிரையும் காப்பாற்றுவதாக வாக்களித்தார் ; ஜோதிடப்படி தனக்கு வெளிநாட்டில்தான் மரணம் என்பதை அறிந்து இருந்ததால் தன்னுயிரைக்கொடுத்து மூன்று இன்னுயிர்களைக் காப்பாற்றுவோம் என்று முடிவு செய்தார் ..
அரசனின் முக்கிய மந்திரியிடம் சென்று மன்னர் மகள் கர்ப்பவாதியாகிவிட்டாள்; அதற்கு காரணம் தான்தான் என்றார் . மன்னருக்கும் செய்தி கிடைத்தது ; யாரும் வாக்பட்டரை நம் பத்தயாராக இல்லை ;ஆனால் பொறாமை கொண்ட அரசவை வைத்தியர்கள் வாக் பட்டர் கற்பழித்தது உண்மையே என்று வாதாடினார்கள் ; மன்னரும் வேறு வழியின்றி மரண தண்டனைக்கு நாள் குறித்தார் . விஷயம் அறிந்த அரசியும், அரச குமாரியும் பதறிப்போனார்கள் ; அரச குமாரிக்கு ஒரு யோஜனை பிறந்தது . வாக்பட்டரின் முழு மருந்துகளையும் அறிந்தவள் அவள் .
வாக்பட்டர் பலவித ரசாயனங்கள், ரசக்குப்பிகள் ஆகியவற்றைச் செய்து வைத்திருந்தார் ; அதில் மாரக தூபம் என்னும் குப்பியைத் திறந்தால், விஷப்புகை பரவி அனைவரும் இறக்க நேரிடும்; இன்னும் ஒரு குப்பி அமர தூபம் ; அதைத் திறந்து வரும் புகையைச் சுவாசித்தால் அனைவரும் சாகா வரம்பெற்று நீண்ட காலம் வாழ்வார்கள் . அரச குமாரி என்ன செய்தாள் தெரியுமா ? எல்லோரையும் சாகடிக்கும் குப்பியைக் கொண்டு வந்து அதில் அமர தூபம் என்று எழுதினாள் . அரண்மனையிலுள்ள வைத்தியர்கள் மற்றும் அமைச்சர்கள் வந்து அதன் பலனைப் பெறலாம் என்று அறிவித்து அழைப்பும் அனுப்பினாள்; இளவரசியின் அழைப்பினை எவரும் அவமதிக்க முடியாதே; முக்கியப் புள்ளிகள் அனைவரும் அங்கே வந்தார்கள் வாக்பட்டரும் அங்கே வந்தார் ; தன்னைக் காதலித்துக் கற்பழித்த பணியாளையும் அரச குமாரி அழைத்தாள்; எல்லோரும் உள்ளே வந்த பின்னர் அறைக் கதவினைத் தாளிட்டாள் ; புகை வெளியே போகாமல் இருப்பதற்கு அந்த ஏற்பாடு என்று எல்லோரும் மகிழ்ந்தார்கள் திடீரென அரசி குமாரி தனது உடைவாளினை உருவி கற்பழித்தவனை சதக் சதக் என்று குத்திக் கொன்றாள்; அவன்தான் தன்னைக் கற்பழித்தவன் என்றும் அறிவித்தாள்; எல்லோரும் திகைத்து நின்றார்கள்; நாம் எல்லோரும் இப்போது அவனுடன் செல்வோம் என்று குப்பியைத் திறந்தாள் ; எவரும் பேசுவாதற்கு நா எழுவதற்கு முன்னாள் மயக்கம் போட்டு உயிர் நீத்தார்கள் ஆக , அவளும் வாக்கபட்டரும் உள்ளே இருந்த கருவும் உயிர்த்தியாகம் செய்தன ; வாக்பட்டரின் பூத உடல், ஜோதிடத்தில் சொன்னபடி, மறைந்தது; புகழ் உடம்போ உலகம் முழுவதும் பரவியது .
அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டியது அவர் எழுதிய ….. அஷ்டாங்கஹ்ருதயம் நூல்; அது பற்றித் தனியாகக் காண்போம் .
—subahm—-
Tags- அஷ்டாங்கஹ்ருதயம் , மருத்துவ நூல் , வாக்பட்டர், எகிப்து , மன்னர் , நோய், ரசக்குப்பி, மாரக தூபம் , அமர தூபம்