Pictures of 2500 Indian Stamps!- Part 50 (Post No.14,580)

Written by London Swaminathan

Post No. 14,580

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

PART 50 

Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,PART 50,

MAHATMA GANDHI, COMMUNAL HARMONY, SOCIAL UPLIFTMENT, PEASANT’S WELFARE, PICKING SALT, MOTHER TERESA, NAHAR SINGH, PATTABI SITARAMAYYA, JEROME D SOUZA, JAGDISH CHANDRA JAIN, MAHARANA PRATAP,  JOHAR SINGH, A KHAN, RAM PRASAD BISMIL, GORKHA RIFLES, PORT BLAIR JAIL, ROTARY INTERNATIONAL, NEHRU WITH BABY, CHILDREN’S DAY, VALLABHAI  PATEL, SS HINDOSTHAN SHIP, RIVER MAIL SERVICE, REVERENCE FOR LIFE,  V S KHANDEKAR, HAZARI PRASAD DWIVEDI, NANAK SINGH, JAL COPER, POST OFFICE HERITAGE BUILDING, INDPEX STAAMPS, BHARAT PARYATAN DIWAS

–subham—

Tags– Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,PART 50,

MAHATMA GANDHI, COMMUNAL HARMONY, SOCIAL UPLIFTMENT, PEASANT’S WELFARE, PICKING SALT, MOTHER TERESA, NAHAR SINGH, PATTABI SITARAMAYYA, JEROME D SOUZA, JAGDISH CHANDRA JAIN, MAHARANA PRATAP,  JOHAR SINGH, A KHAN, RAM PRASAD BISMIL, GORKHA RIFLES, PORT BLAIR JAIL, ROTARY INTERNATIONAL, NEHRU WITH BABY, CHILDREN’S DAY, VALLABHAI  PATEL, SS HINDOSTHAN SHIP, RIVER MAIL SERVICE, REVERENCE FOR LIFE,  V S KHANDEKAR, HAZARI PRASAD DWIVEDI, NANAK SINGH, JAL COPER, POST OFFICE HERITAGE BUILDING, INDPEX STAAMPS, BHARAT PARYATAN DIWAS

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1 6 2025 (Post No.14,579)

Written by London Swaminathan

Post No. 14,579

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

டம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்

1. – பிள்ளையாரின் வளைந்த துதிக்கை

2. – நீரினால் மரணம்

3. – நாம் வசிக்கும் புனித நாடு.

4. – ராமன் கையிலுள்ள வில்

5. – இந்த ராமாயணப் பகுதியை படித்தால் நிறைய செல்வம் கிடைக்கும் .

6. – போருக்குச் செல்லும்  முன்னால் தமிழர்கள், உடலை வெட்டி செய்யும் உயிர்த் தியாகம் .

7. – தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வணிகத் தலமாகும். இதைத் ’தொடுவெட்டி’ என்ற பெயராலும் அழைப்பர்.

8.  – முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியம் கூறும் கம்பின் ஸம்ஸ்க்ருதப் பெயர். வைஷ்ணவ ஜீயர் கையில் இருக்கும்.

9. – நம் முடைய பிரபஞ்சத்தின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.   

விடைகள்

1.வக்ரதுண்டம் – பிள்ளையாரின் வளைந்த துதிக்கை

2.ஜலகண்டம் – நீரினால் மரணம்

3.பரத கண்டம் – நாம் வசிக்கும் புனித நாடு.

4.கோதண்டம் – ராமன் கையிலுள்ள வில்

5.சுந்தரகாண்டம் – இந்த ராமாயணப் பகுதியை படித்தால் நிறைய செல்வம் கிடைக்கும் .

6.நவகண்டம் – போருக்குச் செல்லும்  முன்னால் தமிழர்கள், உடலை வெட்டி செய்யும் உயிர்த் தியாகம் .

7.மார்த்தாண்டம்- தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வணிகத் தலமாகும். இதைத் ’தொடுவெட்டி’ என்ற பெயராலும் அழைப்பர்.

8.த்ரிதண்டம்  – முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியம் கூறும் கம்பின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.

9.பிரம்மாண்டம் – பிரம்மாண்டம் – நம் முடைய பிரபஞ்சத்தின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.   

–SUBHAM—

TAGS- லண்டன், தமிழ், குறுக்கெழுத்துப் போட்டி,1 6 2025

நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Post No.14,578) Part one

Goddess Meenakshi of Madurai Temple in Wedding pose.

Written by London Swaminathan

Post No. 14,578

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நம்பியை  நம்பாதே ! தி, வி பு ஆராய்ச்சிக் கட்டுரை-8

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8

வரலாற்றில் எவ்வளவோ புதிர்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் ஒன்று மாணிக்க வாசகர் பற்றிய அதிசயமான புதிர்; விடுகதை , மறைப்பு!

World famous Madurai Meenkashi Sundareswrar / Shiva Temple.

சைவ சமயக்குரவர்கள் படங்கள் எல்லாவற்றிலும் நால்வர் படத்தைக் காண்கிறோம். நால்வர்  என்பவர்கள் திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம், மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள்.

புதிர் என்ன?

பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகரை ஏனைய  மூவரும் ஏன் குறிப்பிடவில்லை ?  அது போகட்டும்; மாணிக்கவாசகர் அவர்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்து இருந்தால் , அவர் ஏன் மூன்று தேவாரப் பாடகர்களைக் குறிப்பிடவில்லை?  அட,அது போகட்டும் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் ஏன் இவரைப் பாடவில்லை ? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய அறிஞர்கள் அனைவரும் சப்பைக்கட்டு, நொண்டிச் சாக்குதான் கூறியுள்ளனர் . அவற்றைத் திரும்ப எழுதும் தேவையே இல்லை . ஆகையால் இதற்கு வரலாற்றுச் சான்றுகள் காண்பதே. முறை  

இந்தக் கேள்வி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?  ஏனெனில் மாணிக்கவாசகருடைய  காலம் நமக்குத் தெரியவேண்டும் .

 ஒரு இந்தியவியல்INDOLOGIST வெளிநாட்டு அறிஞர் மிக அழகாக இதை வருணித்தார் ; இந்திய வரலாற்றில் எந்தக் காலத்தையும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை . ஏனெனில் அது Jigsaw Puzzle   ஜிக் சா பசில் போன்றது; ஒரு  சதுரத்தை நகர்த்தினால் இன்னொரு சதுரம் நகருகிறது !

இப்போது கட்டுரையின் தலைப்புக்குச் செல்வோம் .

பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் முதலில் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து மொழிபெயர்த்து திருவிளையாடல் புராணத்தை எழுதினார் . அவருக்கு நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பரஞ்சோதி முனிவர், இன்னும் ஒரு திருவிளையாடல் புராணத்தை எழுதினார் இவை தவிர கடவுள் மாமுனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் , சிவ லீலாவர்ணம் என்ற சம்ஸ்க்ருத  திருவிளையாடல் புராணம் முதலியன உள்ளன . பரஞ்சோதி முனிவர் கால வரிசைப்படி நூலினை அமைத்தார் அதாவது மதுரை கூடல் –ஆலவாய் என்ற மூன்று பெயர்களில் புராணத்தை பாடல் வடிவில் எழுதினார் ஆனால் நம்பி மதுரையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சரித்திரப்படி முதலில் இருந்தது மதுரை ; மூன்று சங்கங்களை உண்டாக்கி தெய்வத் தமிழை வளர்த்த புண்ய பூமி மா மதுரை ; இன்றுவரை அதற்குச் சான்றாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வானத்தைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது; இதற்குப் பின்னர் நன் மாடக்கூடல், ஆலவாய் பெயர்கள் ஏற்பட்டன. இந்த வரிசையை பரஞ்சோதி கையாண்டுள்ளார் ஆனால் ம்பி, மதுரை என்ற நகரம் தோன்றியதை இடையே வைத்துள்ளார்.

இந்த வரிசை தவறு என்று மேம்போக்காகச்ச் சொல்லிவிடலாம் ஆயினும் நம்பியைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவி டமுடியாது ; காரணம் ?

அவர் எந்த மதுரையைக் கூறினார்? என்ற கேள்வியை அவர் தரப்பு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் எழுப்புவார். முதற் சங்க மதுரை, இரண்டாம் தமிழ்ச் சங்க மதுரை ஆகியவற்றைக் கடல் கொண்ட பின்னர் இப்போதுள்ள மதுரை தோற்றுவிக்கப்பட்டது . மகஸ்தனிஸ் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இண்டிகாவில் பாண்டேயா என்ற தென்னாட்டு மஹாராணியைக் குறிப்பிடுகிறார் அதாவது மீனாட்சி அம்மையாரின் புகழ் பீஹாரிலுள்ள பாட்னா வரை அப்போதே பரவியதால் இப்படி  எழுதியுள்ளார் அது எந்த மதுரை ? இதிலும் ஒரு புதிர் !  கி பி 75 CE  வாக்கில் மதுரை மாற்றப்பட்டதாக பிளினி PLINY  என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார் மதுரை எரியுண்டது பற்றிப் பேசும் சிலப்பதிகாரத்தின் காலம் கி பி 132 CE  என்று கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் குறிப்பால் அறிகிறோம் இது தற்கால மதுரையே! ஏனெனில் இன்றும் மதுரையில் கோவலன் பொட்டல் உள்ளது.

Goddess Meenakshi of Madurai Temple.

பரிபாடல் போன்ற சங்க நூல்கள்  மதுரை,  தாமரைப்பூ போல வீதிகள் அமைந்த ஊர்  என்று பாடுகிறது ; இன்றும் மதுரை அப்படியே உள்ளது; மீனாட்சி சுந்தரேச்வரர் கோவில் நடு நாயகமாகத் திகழ ஆடி, ஆவணி, சித்திரை மாசி வீதிகள் சதுரத்துக்குள்  சதுரமாக அமைய, பின்னர் வெளி வீதியும் வைகை ஆறும் உள்ளன.

கல்லாடம் போன்ற நூல்கள் 64 திருவிளையாடல் என்று சொல்லிவிட்டு 32  திருவிளையாடல்களை — அதாவது சிவ பெருமான் நடத்திய அற்புத லீலைகளைப் பட்டியல் இடுகிறது. சில லீலைகளை சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது

நம்பி என்ன தப்பு செய்தார் ?

தொடரும்…………………… to be continued

Tags- திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை  நம்பாதே, Part One

கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்! (Post No.14,577)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,577

Date uploaded in London – –1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

13-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்! 

ச. நாகராஜன்        

தேசீயப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும், தமிழிசை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவருமான பேராசிரியர் கல்கி (பிறப்பு:9-9-1899 மறைவு 5-12-1954)  மாயவரம் அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ராமசாமி ஐயர் – தையல்நாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

1924ல் ருக்மிணி என்பவரை மணந்தார். ஒரு புதல்வர் – ராஜேந்திரன். ஒரு புதல்வி – ஆனந்தி. இருவரும் தந்தை வழியில் மிளிர்ந்த எழுத்தாளர்களே.

 கல்கி மாணவப் பருவத்தில் முதன் முதலாக ராஜாஜியைச் (தோற்றம் 10-12-1878 மறைவு 25-12-1972) சந்தித்தார். அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பால் அவரைப் பற்றி நிறைய விசாரித்து அவரை நன்கு அறிந்து கொண்டார்..

 பின்னால் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு வருட சிறை வாசத்தில் பெற்ற அனுபவம், திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜியின் சேவை ஆகியவற்றைப் பார்த்து அவருடைய சிஷ்யராகவே ஆனார். இந்த அபூர்வமான பந்தத்தை அவர் பூர்வஜன்ம பந்தம் என்று பின்னால் எடுத்துரைத்தார்.

 திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜி ஆரம்பித்த விமோசனம் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றார் கல்கி. பின்னர் 1923ல் நவசக்தி இதழில் பணியாற்றினார். அதன் பின்னர் 1931ல் திரு எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்தவிகடனில் துணை ஆசிரியர் பதவியை வகித்தார்.

 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரம் காட்டினார் கல்கி. அரசை எதிர்க்கும் இந்த இயக்கம் திரு வாசனுக்கு சங்கடத்தைத் தந்தது.

 விகடனிலிருந்து வெளியேறிய கல்கி திரு, சதாசிவம் உதவியுடன் கல்கி பத்திரிகையை 1941ல் ஆரம்பித்தார். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அரசியல் கட்டுரைகள் உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தன.

 கல்கி வார இதழ் ராஜாஜியின் முழு ஆசீர்வாதத்தைப் பெற்றது.

டி.கே.சி. அ.சீனிவாசராகவன், மீ.ப.சோமு, பி.ஶ்ரீ., நீதிபதி மகாராஜன் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை கல்கிக்கு அனுப்ப அது மக்கள் ஆதரவை வெகுவாகப் பெற்றது.

 ராஜாஜி தனது அரசியல் கருத்துக்களையும், சமூகம் மேம்படுவதற்கான கருத்துக்களையும், ஆன்மீக இதிஹாஸ பொக்கிஷங்களையும், உயரிய ஆன்மீகக் கருத்துக்களையும் கல்கி இதழின் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.

 சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து போன்ற காலத்தை வென்ற ராஜாஜியின் படைப்புகள் கல்கி வார இதழில் தொடராக வந்தன.

ஆயிரமாயிரம் பேர் அதைப் படித்து ஊக்கம் பெற்றனர்.

 ராஜாஜியின் மறைவுக்குப் பின்னரும் அவரது கருத்துக்களும், சிறப்பான சிந்தனைகளும் தொடர்ந்து கல்கி இதழில் வெளியாகிக் கொண்டே இருந்தன.

 ராஜாஜி வாழ்க்கை வரலாறு கல்கியில் தொடராக வெளி வந்தது. ஶ்ரீமதி லக்ஷ்மி தேவதாஸ் காந்தி ‘சில நினைவுகள்’ என்ற தலைப்பில் சுவையான தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

 கல்கியில் அவ்வப்பொழுது பல்வேறு தலைப்புகளில் வெளி வந்த. அவரது சிந்தனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை.

அவற்றில் சில கருத்துக்கள்:

 ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவில் அவர் கூறியது:

இளைஞர்கள் நாம் அன்றாட வாழ்வில் அதிகமாகக் காண முடியாத வீரம், விடாமுயற்சி ஆகியவற்றைப் படித்து ஊட்டம் பெற வேண்டும்.

 திருவள்ளுவரும் நம்மாழ்வாரும் என்ற கட்டுரை வசந்தம் இதழில் பிரசுரமானது. 35ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது கல்கி அதை மீண்டும் பிரசுரம் செய்தது.

“மனனக மலமற மலர்மிசை

எழுதரு மனனுயர் வளவிலன்” என்று ஆழ்வார் ஆரம்பத்தில் பாடும் போது “மலர்மிசை ஏகினான்” என்று வள்ளுவனார் பாடியது நினைவுக்கு வருகிறது.

 நவசக்தியில் வெளியான கவிதை ஒன்றை கல்கி மீண்டும் பிரசுரம் செய்தது:

மதுவைத் தருவது பாவம் என்ற கருத்தை அழகுமல்ல புகழுமல்ல என்ற கவிதையாக தமிழக அரசுக்குத் தருகிறார் ராஜாஜி.

அந்தக் கவிதையின் கடைசி வரிகள்:

 “கவலைக்கு மருந்திது பயமின்றி

அருந்தென்று தருவது பாபமாச்சே

நண்பனாகச் சொல்லுகிறேன்

நல்லதுக்குச் சொல்லுகிறேன்

பாபத்தைச் செய்யாதே!”

 ராமகிருஷ்ண உபநிஷதத்தை அழகுறத் தமிழில் அளித்தார் ராஜாஜி.

அதிலிருந்து கல்கியில் பிரசுரமான ஒரு உபதேசம் இது:

 கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பையன் கிறுகிறுவென்று சுழன்று சுற்றுகிறான். எத்தனை வேகமாகச் சுழன்றாலும் கம்பத்தைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுழல்கிறான்.

அதைப் போல் பகவானைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு உலக வாழ்க்கையில் சுழலுங்கள்

 மீ.ப. சோமு அவர்கள் எழுதிய ரவிசந்திரிகை நூலுக்கு முன்னுரையில் ராஜாஜி அவர்கள் குறிப்பிட்டது:

“தொடர்கதைகளை எனக்கு இப்போது படிக்க முடிகிறதில்லை. நான் ‘ரவிசந்திரிகை’யைப் படிக்கவில்லை. ஏன் படிக்க வேண்டும்? எழுதிய ஆசிரியரைப் (சோமு) படித்து விட்டேன். அவருக்கும் நூலுக்கும்  என் ஆசிகள் – சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

 கடைசியில் கல்கி இதழில் வெளியான” ராஜாஜி வாழ்க்கை வரலாறு” தொடரில் தன் தாயார் சிங்காரம்மாவிடம் அவர் கற்றுக் கொண்ட ஒரு பாடத்தைப் பற்றிச் சொன்னதைப் பார்க்கலாம்:

 “தாயார் சிங்காரம்மா அவனுக்குக் கூறிய கதைகள் வேடிக்கையாகவும் இருந்தன; போதனைகளாகவும் அமைந்தன…. அவற்றில் ஒன்று ….

எதன் மீது ஏற வேண்டுமோ அத்துடன் ஒட்டினாற் போல் ஏணியை வைக்கக் கூடாது.’ஸ்திரமான ஒரு கோணத்தில் வைக்க வேண்டும்.”

 தாயாரின் கூற்று படி, ஸ்திரமான ஒரு கோணத்தில் தனக்கென்று அமைத்துக் கொண்ட பாணியில்  ஏணியை வைத்து உயரத்தில் ஏறி அதில் மற்றவரையும் ஏற வைத்த மூதறிஞர் ராஜாஜியையும் மறக்க முடியாது; அவரது போதனைகளை இடைவிடாமல் வழங்கி வந்த வழங்கி வரும் கல்கி வார இதழையும் மறக்க முடியாது; கல்கியை நிறுவிய மாபெரும் மனிதரான கல்கியையும் மறக்க முடியாது! 

என்ன சரிதானே! நண்பர்களே!!

***