காளிதாசன் காவியங்களில் இந்திரன்! சங்கத் தமிழ் நூல்களுடன் ஒப்பீடு! –2 (Post.14,857)

Indra’s Vajraayudha 

Written by London Swaminathan

Post No. 14,857

Date uploaded in London –  11 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Indra in Indus Valley; chakra is his name; written on top with wheel/chakra symbol

காளிதாசன் ரகுவம்சத்தில் சொன்ன பல ஸ்லோகங்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஐந்தாறு வரிகளில் சொல்லிவிட்டார். சங்க காலத்துக்கு முன்னர் காளிதாசன் வாழ்ந்ததற்கு இதுவும் ஒரு சான்று . பகுதி ஒன்றில் சங்க இலக்கியப்  பாடல்களை கொடுத்துள்ளேன்

இதோ ரகுவம்சம் : (From Sanskritdocuments.org)

स पूर्वतः पर्वतपक्षशातनं ददर्श देवं नरदेवसंभवः|

पुनः पुनः सूतनिषिद्धचापलं हरन्तमश्वं रथरश्मिसंयुतम्॥ ३-४२

sa pūrvataḥ parvatapakṣaśātanaṁ

dadarśa devaṁ naradevasaṁbhavaḥ|

punaḥ punaḥ sūtaniṣiddhacāpalaṁ

harantamaśvaṁ ratharaśmisaṁyutam || 3-42

(இளவரசன் ரகு, அவனுடைய தந்தை திலீபன் நூறு யாகங்களைச்  செய்தால் தனது பதவி போய்விடுமே என்று அஞ்சி, இந்திரன் அதைக் கெடுக்க வந்து அஸ்வமேத குதிரையைத் திருடிய கட்டம் இது.)

 மலைகளை பிளந்த இந்திரனை ரகு கிழக்கு திசையில் கண்டான் ;அஸ்வமேத குதிரையைத் தனது தேரில் கட்டி இழுத்தான்; அந்தக்கு திரையோ முரண்டு பிடித்தது .

இதில் இரண்டு விஷயங்கள் உ ள்ளன ; இந்திரன் திசை கிழக்கு. அவன் பறக்கும் மலைகளை வெட்டி வீழ்த்தியவன் (கோத்ரபித்). [3-42]

****

Nivedita produced this falg with Vajrayudha

शतैस्तमक्ष्णामनिमेषवृत्तिभिर्हरिं विदित्वा हरिभिश्च वाजिभिः|

अवोचदेनं गगनस्पृशा रघुः स्वरेण धीरेण निवर्तयन्निव॥ ३-४३

śataistamakṣṇāmanimeṣavṛttibhirhariṁ viditvā haribhiśca vājibhiḥ|

avocadenaṁ gaganaspṛśā raghuḥ svareṇa dhīreṇa nivartayanniva || 3-43

குதிரையைத் திருடியவன் இந்திரன்தான் என்று ரகு, அங்க அடையாளங்களை வைத்துக் கண்டுபிடித்தான் . பச்சைக் நிறக் குதிரைகள்இமைக்காத கண்கள் , நூற்றுக்கும் மேலான கண்கள் ; உடனே உரத்த குரலில் இந்திரனை அதட்டினான்.

****

मखांशभाजां प्रथमो मनीषिभिस्त्वमेव देवेन्द्र सदा निगद्यसे|

अजस्रदीक्षाप्रयतस्य मद्गुरोः क्रियाविघाताय कथं प्रवर्तसे॥ ३-४४

makhāṁśabhājāṁ prathamo manīṣibhistvameva devendra sadā nigadyase|

ajasradīkṣāprayatasya madguroḥ kriyāvighātāya kathaṁ pravartase || 3-44

வேத வேள்விகளில் கொடுக்கப்படும் அவிஸ் என்னும் பலியில் பெரும்பங்கு உனக்கு கிடைப்பதாக அறிஞர்கள் செப்புவர்; அப்படி  இருக்கையில் என் தந்தை செய்யும் வேள்விக்கு கெடுதல் செய்வது ஏன்? (இதில் தேவேந்திர என்ற பெயர் வருகிறது.)

****

इति प्रगल्भं रघुणा समीरितं वचो निशम्याधिपतिर्दिवौकसाम्|

निवर्तयामास रथं सविस्मयः प्रचक्रमे च प्रतिवक्तुमुत्तरम्॥ ३-४७

கணீரென்ற குரலில் ஒருவன்  கேள்வி கேட்டவுடன் இந்திரன் தனது ரதத்தைத் திருப்பி, பதில் அளிக்கத் துவங்கினான் . [3-47]

***

हरिर्यथैकः पुरुषोत्तमः स्मृतो महेश्वरस्त्र्यम्बक एव नापरः|

तथा विदुर्मां मुनयः शतक्रतुं द्वितीयगामी न हि शब्द एष नः॥ ३-४९

hariryathaikaḥ puruṣottamaḥ smṛto maheśvarastryambaka eva nāparaḥ|

tathā vidurmāṁ munayaḥ śatakratuṁ dvitīyagāmī na hi śabda eṣa naḥ || 3-49

இந்திரன் சொன்னான்: புருஷோத்தமன் என்ற பெயர் விஷ்ணு ஒருவருக்கே பொருந்தும்; பரமேச்வரன் என்ற பெயர் முக்கண்ணன் சிவனுக்கே பொருந்தும்; அதேபோல ரிஷி முனிவர்கள் சதக்ரது என்றால் எனக்கே பொருந்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள்.  (அதாவது ரகுவின் தந்தை திலீபன், நூறு வேள்விகளைச் செய்யக்கூடாது; செய்ய விடமாட்டேன் என்பது பொருள்)

சதக்ரது– யாரேனும் ஓருவர் நூறு அஸ்வமேத யாகம் செய்தால் அவருக்கு இந்திரனின் பதவி கிடைத்துவிடும். இதனால் யாரையும் 100 யாகம் செய்யாதவாறு மண், பெண், பொன் பதவி ஆசைகளைக் காட்டி அவர்களை இந்திரன் விழுத்தாட்டி விடுவானாம்.  இந்திரன் பிருஹஸ்பதியின் கீழ் 100 அஸ்வமேதம் செய்தவன் அவன் பெயர் சதக்ரது (நூறு செய்தவன் = சதக்ரது).

***

அஹல்யா-இந்திரன் கதை -விக்ரம. 2-8-௨ ல் வருகிறது ; இதைத் திரு  ப்பரங்குன்ற ஓவியத்தில் முன்னரே கண்டோம் .

பிடவஜஸ்-ரகு.3-59;14-59- பொருள்- அவனுடைய ஓஜஸ் எங்கும் பரவியது.

கோத்ர பித்– ரகு.13-7. . கோத்ரபித் –பறக்கும் மலைகளின் இறக்கைகளை வெட்டியவன்.

இந்திர- குமார; ரகு ;நிறைய இடங்களில்

சதக்ரது– நூறு யாகம் செய்தவன்

ஆகண்டல –நொறுக்கித் தள்ளுபவன்- ரகு.4-83; குமார.3-11

மகவான்- ரகு., குமார . சுமார் பத்து இடங்களில் வரும் சொல்

மஹேந்திர –ரகு. விக்ரம.,. சாகுந்தலம் – சுமார் பதினைந்து இடங்கள்

இந்தப்பெயரை இந்தியா முழுதும் இன்றும் காணலாம்.

மருத்வத்– விக்ரம

இந்திரனின் தேரோட்டி மாதலி– ரகு

Indra with Saci

பாகசாசன – விக்ரம– பாக என்ற அசுரனை அழித்தவன்

புரந்தர— கோட்டைகளை உடைத்தவன் –ரகு., விக்ரம.

புரூஹுத -ரகு.

சக்ர – இந்த முத்திரை சிந்து சமவெளியில் உள்ளது

சுரேந்திர = சுரர் என்னும் தேவர்களின் தலைவன் = தேவேந்திரன்

துராசாஹா 

வஜ்ர பாணி — வஜ்ராயுதத்தைக்கையில்  உடையவன்

வாசவ

வ்ருத்ரஹன்– வ்ருத்ரன் என்ற அசுரனைக்கொன்றவன்

****

இந்திரனுக்கு பெயர்கள்

அமரகோசத்தில் இந்திரனுக்கு முப்பத்தாறு பெயர்கள் உள்ளன

இந்திரன் மனைவிக்கு மூன்று பெயர்கள் –

Indra’s wife – சசி , இந்திராணி , புலோமஜா அல்லது பெளலோமி 

Indra’s son மகன் — ஜயந்த

Indra’s city நகரம்  – அமராவதி

Indra’s garden தோட்டம்  -நந்தன

Indra’s Palace அரணமனையின் பெயர் – வைஜயந்த

Indra’s horse குதிரை  -உச்ச்சைச்ரவஸ் 

Indra’s elephant யானை  – ஐராவத

இதில் வியப்பான விஷயம் நான்கு தந்த யானை என்று நக்கீரர் வருணிக்கும் உருவம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே உள்ளது

Indra’s driver தேரோட்டி – மாதலி

Indra’s weapon ஆயுதம்  – வஜ்ரா  ஆயுத

Indra’s bow வில்  — இந்திரா தனுஷ் என்று வானவில்லுக்குப் பெயர்

கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, லாவோஸ், வியட்நாம் முதலிய நாடுகளில் யானை மீது வரும் இந்திரன் சிலைகள் உள்ளன ; மங்கோலியா, லாவோஸ் ஆகியன வஜ்ராயுதம் பொறித்த தபால்தலைகளை வெளியிட்டன. நிவேதிதா உருவாக்கிய கொடியில் இந்த ஆயுதம் உள்ளது . பாரதியாரும் பாடியுள்ளார்.

இந்திரன் நடத்திய யுத்தங்கள் (ரிக் வேத செய்யுட்களில் ) 

Indra’s battles are listed in the Rig Veda: 1-53-8, 1-100-18, 1-103-3, 1-104-3, 1-130-8, 1-133-2/5, 1-174-7/8, 1-82-4, 2-20-6/7, 3-10-6, 4-38-5, 4-30-15, 4-30-20, 4-30,31, 5-70-3, 6-18-3, 6-25-2, 6-47-20, 5-29-10, 8-96-13, 10-22-8.

ரிக் வேதத்தில் 250 துதிகளில் இந்திரனைப் போற்றுகின்றனர் ; ஆயினும் இது ஒரே ஒரு தேவரைக் குறிக்கும் சொல் அல்ல என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற அறிஞர்கள் பகர்ந்துள்ளார்கள். தமிழிலும் தொல்காப்பியர் வேந்தன்/ அரசன் என்ற பொதுப்பெயரையே இவருக்கு அளித்துள்ளார் இதன்பொருள் யார் தலைமைப் பதவியில் உள்ளாரோ அவர் இந்திரன்.

***

Indra in Ellora cave

அமரகோசத்தில் வரும் இந்திரன் பெயர்கள்

வ்ரத்ரஹன் – விருத்திரன் என்ற பிராமணனைக் கொன்றவன்  (வெள்ளைக்காரர்கள்  இதில் பிராமணன் என்ற சொல்லை விட்டுவிட்டுவார்கள்ஏனெனில் இதில் ஆரிய-திராவிட வாதத்துக்கு செமை அடி கிடைக்கிறது .)

ஆகாண்டல – எதிரிகளை நொறுக்குவோன்

ஆஜி க்ருத் –  (RV 8-53-6 குதிரைப்பந்தயம் நடத்துவோன்

ஆஜி பதி  (RV 8-53-14குதிரைப்பந்தய தலைவன் 

வஜ்ரபாணி  / Vajrin:–வஜ்ராயுதம் தரித்தோன்

மருத்மான் :–காற்றின் நாயகன்

மகாவான் :–மாண்புமிகு

பீடோஜா :–செல்வம் உடையோன், பிரகாசமானவன்

பாகசாசன :–பாக என்ற அசுரனை மாய்த்தவன்

சுனாசிர : –ஏர் அல்லது படைகளை நடத்திச் செல்லுவோன்

புரூஹு :–யாகத்தில் அதிகப் பங்கினைப் பெறுபவன்

புரந்தர :–கோட்டைகள் அல்லது ஊர்களை அழித்தவன் ; சிவனுக்கும் இந்தப் பெயர் உண்டு . வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம் இந்தச் சொல். ஏனெனில் சிந்து சமவெளியில் சிவன் வழிபாடு இருப்பதாக எழுதியோர், சிவனும் புரங்களை அழித்தான் என்பதை மறைத்துவிட்டு, இந்திரன் மட்டும் திராவிடக் கோட்டைகள் அல்லது ஊர்களை அழித்தான் என்று கதை கட்டியதால் அவர்களுக்குப் பிடிக்காத சொல் இது!

ஜிஸ்னு :– எப்போதும் வென்றான்

லேகாச்ரவா :–எழுதுவதில் மன்னன் இதுவும் வெள்ளைக்காரர்களுக்கு செமை அடி கொடுக்கும் சொல். ஆரியர்களுக்கு எழுதத் தெரியாது என்றும் அவர்கள் கதை கட்டினார்கள் மஹாபாரதம்ராமாயணம்  முதல் திருவிளையாடல் புராணம் வரை அம்புகளில் பெயர் இருந்த சம்பவங்கள் உள்ளன. மஹாபாரதத்தை பிள்ளையார் எழுதினார் என்பதும் இந்துக்கள் அறிந்ததே!

Indra in South East Asian countries.

சதமன்யு : –நூறு யாகங்களை செய்தவன்; நூறு எதிரிகளை வென்றவன் .

திவஸ்பதி :–தேவலோக அதிபதி

ஸ்வர்க்கபதி  :–சுவர்க்கத்தின் தலைவன்

உலுக  :–ஆந்தை

உக்ரதன்வன் :– பயங்கர வில்லினை உடையவன்

வாசவ :–வசுவிலிருந்து பிறந்தவன்

வ்ரிஷ :–கட்டிளங் காளை; அல்லது மழையை உண்டாக்குவோன் 

வாஸ்தோஸ்பதி :–வாஸ்து — மனையின் தலைவன்

சுரபதி / தேவபதி :–தேவர் தலைவன்

பலாராதி  :–வலன் என்று அசுரனின் எதிரி

சசிபதி :–சசியின் கணவன்

ஜம்பவேதின் :–அரக்கர்களின் எதிரி

ஹரிஹயஹ  :–பச்சைக்குதிரையில் செல்பவன்

ஸ்வரான :–தேவர்களை ஆள்பவன்

மகேந்திர : மகத்தான இந்திரன்; கண்டி முதல் காஷ்மீர் வரை இன்றும் மக்கள் இப்பெயர்களை சூட்டுகின்றனர்

நமுசிசூதன : நமுசி என்ற அரக்கனைக் கொன்றவன்

ஸ்வர்க்கபதி :–சொர்க்கத்தின் தலைவன்

சஙகிரந்தன :–எதிரிகளுக்கு அச்சமூட்டுவோன்

துஸ்சுவன –கெட்டவர்களை நசுக்குபவன்

துரசஹ  :–விரைவாகப் பயணிப்பவன்

மேகவாஹன  :–மேகத்தை வாகனமாக உடையவன் .

ஸஹஸ்ராக்ஷ   :–கண்ணாயிரம்

வ்ருத்தஸ்ரவஹ  :–அறிஞர்களுக்கிடையே புகழுடையோன்

கோத்ரபித் – மலை பிளந்தவன்

ருவிக்சன  ,கோவிதா  , சூத்ர மான் , பிருதஸ் ரவாஸ்  என்ற பெயர்களும் பிற இடங்களில் காணப்படுகின்றன. .

***

இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.

–லண்டன் சுவாமிநாதன்
தமிழ் வேதமான திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் பரிமேலழகர் எழுதிய உரையே மேலானது என்பது அறிஞர் உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட முடிவு. ஆயினும் யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இன்று ஒரு குறளை மட்டும் காண்போம்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)

‘ஐம்புல ஆசைகளை அறவே ஒழித்த ஒருவனுடைய ஆற்றலுக்கு தேவர் கோமான் இந்திரனே சான்று பகர்வான்’ என்பது இதன் பொருள்.

இந்தப் பொருளை எழுதி அதற்குப் பின் ஒரு ஆச்சர்யக் குறியையோ கேள்விக்குறியையோ போட்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். பரிமேலழகர் இது இந்திரனைக் கிண்டல் செய்து எழுதிய இகழ்ச்சிக் குறிப்பு என்று கொண்டுவிட்டார். அவன் அகல்யை இடத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை வைத்துப் பலரும் இந்திரனை தவறாக எடைபோட்டுவிட்டனர்.

இந்துமத நூல்களிலும் புத்தமத வேதப் புத்தகமான தம்மபததிலும் இந்திரனை உயர்வாகவே கூறியுள்ளனர். பதின்மர் உரையில் மணக்குடவர் எழுதிய உரையில் இதை இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாகவே எழுதியுள்ளார். இதை டாக்டர் எஸ்.எம்.டயஸ் அவர்கள் எழுதியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு மணக்குடவர் உரையே திருவள்ளுவரின் மொத்த அணுகுமுறைக்கு இசைவாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார்.

எனது கருத்து:
“இந்திரன் அவனுடைய பிரம்மசர்யத்தால் தேவர்களுக்கு தேஜஸை (ஒளியை) உண்டாக்கினான்”- என்று அதர்வ வேதம் கூறுகிறது ( அதர்வணம் 11-5-19).

“இந்திரன் மிகவும் கவனமாக/விழிப்பாக இருந்ததால் தேவர்களுக்கு எல்லாம் இறைவன் ஆனான்” – என்று புத்தர் தம்மபதத்தில் (2—10) கூறுகிறார்.

பூமியில் யாராவது தவம் செய்தாலோ, நூறு அஸ்வமேத யாகம் செய்தாலோ, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று இந்திரன் நடுங்கத் துவங்கி மண், பெண், பொன் ஆசைகளால் துறவிகளைக் கவிழ்த்துவிடுவான். ஆகையால் மணக்குடவரும் மற்றவர்களின் தவ வலிமை இந்திரனை நடுங்கச் செய்வதே “ இந்திரனே சான்று பகர்வான்” என்பதன் பொருள் என்கிறார். பரிமேலழகர் சொல்லுவது போல இந்திரனை வள்ளுவர் பகடி செய்யவில்லை.

மணக்குடவர் உரை: ஐந்து= நுகர்ச்சியாகிய ஐந்து. இந்திரன் சான்று என்றது இவ்வுலகின் கண் மிகத் தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு.

பரிமேலழகர் உரை: ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றர்க்கு என்னும் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல் உணர்த்தினானாகலின் ‘இந்திரனே சாலுங் கரி’ என்றார்.

To be continued………………………..

Tags- காளிதாசன் காவியங்கள்,  இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள் ஒப்பீடு – பகுதி 2 , அமரகோசம், இந்திரனுக்கு 35  பெயர்கள், பரிமேலழகர் தவறு

Leave a comment

Leave a comment