காளிதாசன் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சங்கீதம் (Post.14,894) Part 1

Written by London Swaminathan

Post No. 14,894

Date uploaded in London –  23 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காளிதாசனின் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும்  இசை  பற்றி வரும் செய்திகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். 

காளிதாசன் எழுதிய ஏழு நூல்களில் குறைந்தது முப்பது இடங்களில் இசைக் கருவிகளின் பெயர்கள் வருகின்றன . இவை தவிர ஆடல்-பாடல் என்ற பல குறிப்புகளும் உள்ளன . குறிப்பாக வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் பற்றிப் பாடுகிறார் .

சங்கத் தமிழில் பல நூல்களில் இசைக்குறிப்புகள் உள்ளன. சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகார காப்பியத்தில் உரைகள் மூலம் நிறைய செய்திகள் கிடைக்கின்றன அரைச்சலுரில் இசைக் கல்வெட்டு இருக்கிறது சிலப்பதிகாரம் நடந்த காலமும் அரைச்சலுர் கல்வெட்டுக் காலமும் இரண்டாம் நூற்றாண்டு என்பதால் அவைகளையும் சங்க காலத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்  வீணை என்ற வாத்தியம் இன்று பிரபலமானாலும் சிலப்பதிகார காப்பியத்தில்தான் முதல்  முதலில் நாரதர் வீணை என்ற குறிப்பு வருகிறது அதற்கு முன்னர் அதற்கு இணையான யாழ் மட்டுமே இருந்தது. அதைக் குப்தர் கால சிற்பம் மிக அழகாகக் காட்டுகிறது அதே வடிவ இசைக்கருவிகள் இப்போது மேல்நாட்டில் மட்டுமே வாசிக்கப்படுகின்றன.

முதலில் ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம் காளிதாசன் குறைந்தது மூன்று இடங்களில் வல்லகி என்ற இசைக் கருவியைப் பாடியுளான்  . இது வீணையல்ல; இதுதான் யாழ்; சங்கத் தமிழ் நூல்கள்   யாழ்   பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் உருவத்தைக் காட்டும் சிற்பங்கள் கிடைக்கவில்லை .

Yaaz= Vallaki 1700 years ago.

Russian Folk Music Instrument.

மத்தியப்பிரதேசத்திலுள்ள பவாயா (புராதன பத்மாவதி நகரம்)  என்னும் இடத்தில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ள . இதில் அழகான பெண் யாழ் வாசிக்க மேலும் சிலர் தபேலா போன்ற மத்தளங்களை வாசிக்க ஒரு பெண் நடனம் ஆடுகிறாள்; இன்னும் ஒரு பெண் வாசிக்கும் கருவி சேதமடைந்ததால் முழுவதையும் பார்க்க முடியவில்லை. வல்லகி என்னும் யாழ் கருவியில் ஏழு தந்திகள் உள்ளன. இதை இப்போதும் ரஷ்யர்கள் பாலைலாகா (வலைலாகா ) என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர் பிராக்ருதத்தில் வல்லகியை வல்லாய் என்றுதான் சொல்லுவார்கள். ஆக ரஷ்ய மொழியில் இது பலாலகா ஆனதில் வியப்பில்லை; ரஷ்யாவில் இதன் கதை 400 ஆண்டுகளுக்குள் அடங்கிவிடுகிறது. அதற்கு முன்னர் என்ன பெயர் இருந்தது, இது எப்படித் தோன்றியது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை  

प्रतियोजयितव्यवल्लकीसमवस्थामथ सत्त्वविप्लवात्|

स निनाय नितान्तवत्सलः परिगृह्योचितमङ्कमङ्गनाम्॥ ८-४१

இறந்துபோன இந்துமதியை அஜன் தனது மடியில் வைத்துக் கொண்டான். அவளோ இசை எழுப்ப முடியாத தந்திகள் தளர்ந்த வல்லகி போல இருந்தாள்

pratiyojayitavyavallakīsamavasthāmatha sattvaviplavāt|

sa nināya nitāntavatsalaḥ parigṛhyocitamaṅkamaṅganām || 8-41

 [VALLAKI: tusahāra 1, 8.] [Raghuvaśa 8, 41. 19, 13.]

***

अङ्कमङ्कपरिवर्तनोचिते

तस्य निन्यतुरशून्यतामुभे।

वल्लकी च हृदयंगमस्वना

वल्गुवागपि च वामलोचना॥ १९-१३

அவனுடைய மடியை  இனிய நாதமுடைய வல்லகியும் , இனிய சொல்லுடைய பெண்ணும் அலங்கரித்தன ;

aṅkamaṅkaparivartanocite

tasya ninyaturaśūnyatāmubhe |

vallakī ca hṛdayaṁgamasvanā

*****

வீணையும் வல்லகியும் வேறு வேறு இசைக்கருவிகள் என்பதை அமரகோசமும் கூறுகிறது. அதுதான் உலகில் தோன்றிய முதல் அகராதி/ நிகண்டு:-

Harmony (1), Lute (veena) (3), Seven stringed lute (1)

(१.७.४१३)  समन्वितलयस्त्वेकतालो वीणा तु वल्लकी

(१.७.४१४)  विपञ्ची सा तु तन्त्रीभिः सप्तभिः परिवादिनी

Harmony (1), Lute (veena) (3), Seven stringed lute (1)

(१.७.४१३)  समन्वितलयस्त्वेकतालो वीणा तु वल्लकी

(१.७.४१४)  विपञ्ची सा तु तन्त्रीभिः सप्तभिः परिवादिनी

***

காளிதாசன் நூல்களில்  இசை பற்றிய குறிப்புகள்:

துந்துபி – ரகு.10-76

கண்டா – ரகு .7-41;

மிருதங்கம் -ரகு.13-40, 14-14, 14-64, 19-5; மாளவிகா.1-21

முரஜா – மேக.58,66; குமார 6-40;. மாளவிகா.1-22

படகா – மேக36;. ரகு.9-71

புஷ்கர – மேக.72  ரகு.17-11, 19-14,  மாளவிகா.1-21

தூர்ய – ரகு.3-19, 6-9, 6-56, 10-76, 16-87 விக்ர.4-12;  குமா.7-10;

வல்லகி- ரகு 8.41;19-13; ருது.1-8

வேணு ரகு.19-35 ;

வீணா – ரகு.8-33, 19-35;  மேக.91

இந்தக் குறிப்புகளிலிருந்து காளிதாசனின் இசைப் புலமையும் ஆர்வமும் தெரிகிறது ; இதை குழந்தைகள் பிறக்கும் போதும், மன்னர்களின் அரண்மனைகளிலும், போர் முழக்கங்களிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளிலும் உஜ்ஜைனியின் சிவன் கோவில் போன்ற இடங்களிலும் காளிதாசன் பயன்படுத்தியுள்ளான். தமிழர்களைப்போலவே காடுகளில் மூங்கில் ஓட்டைகளில் காற்று புகுந்து எழுப்பும் இசையையும் மயிலின் அகவலில் வரும் ஓசையையும் குறிப்பிடுகிறான் .அவன் சங்கீதப் பிரியன் என்பது தெளிவாகிறது.

मनोभिरामाः शृण्वन्तौ रथनेमिस्वनोन्मुखैः।

षड्जसंवादिनीः केका द्विधा भिन्नाः शिखण्डिभिः॥ १-३९

manobhirāmāḥ śṛṇvantau rathanemisvanonmukhaiḥ |

ṣaḍjasaṁvādinīḥ kekā dvidhā bhinnāḥ śikhaṇḍibhiḥ || 1-39 RAGHU.

திலீபனும் சுதக்ஷிணையும் சென்ற ரதத்தின் சப்தத்தைக் கேட்டு மயில்கள் தலை நிமிர்ந்து எழுப்பிய அகவல் ஒலியைக் கேட்டுக்கொண்டே அவர்கள் சென்றனர் ;ஆண் மயில் ஒரு குரலிலும் பெண் மயில் வேறு குரலிலும் அகவின. ஷட்ஜ ஸ்வரத்துக்கு ஒப்பானவையும் இனிமையாகவும் அவை இருந்தன.

They have travelled on and on listening to the heart-pleasing screams of peacocks that have raised their faces on listening to the rhythmic rattles of chariot wheelspin and started to scream in two split-pitches, exactly like the SaDja musical notes that will be split into two pitches called chyuta broken; and achyuta unbroken. [1-39]

 If an octave contains eight notes, its Indian counterpart also contains eight, but leaving the last one, they are called sapta swara-s – sa, ri, ga, ma, pa, da, ni , but by adding one more sa in next pitch, they total to an octave. These are musically called SaDjama, R^iSabha, gAndhAra, madhyama, pancama, dhaivata, niSAda plus one more SaDja in next scale. Then these peacocks and peahens are said to be screaming in two scales/pitches. On this single verse mallinAtha sUri comments one full A4 page commentary to establish kAlidAsa’s knowledge in music.

–FROM SANSKRITDOCUMENTS.ORG

***

स कीचकैर्मारुतपूर्णरन्ध्रैः कूजद्भिरापादितवंशकृत्यम्।

शुश्राव कुञ्जेषु यशः स्वमुच्चैरुद्गीयमानं वनदेवताभिः॥ २-१२

காட்டில் மூங்கில் மர ஓட்டைகளில் இயற்கையாக எழும் புல்லாங்குழல் ஓசையைத் தமிழில் சம்ஸ்க்ருதத்தில் வல்லவரான பிராமணப் புலவன் கபிலனும் அகநானூற்றில் பயன்படுத்துகிறான்

sa kīcakairmārutapūrṇarandhraiḥ kūjadbhirāpāditavaṁśakṛtyam|

śuśrāva kuñjeṣu yaśaḥ svamuccairudgīyamānaṁ vanadevatābhiḥ || 2-12

ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்

கோடை அவ் வளி குழலிசை ஆக,

பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை

தோடு அமை முழவின் துதை குரல் ஆக,

கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,          5

மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,

இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,

………………………………………………..

நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?–அகநானூறு 82

காட்டில் எழுந்த இயற்கை ஒலிகள் ஆர்கெஸ்டரா போல இசைக்க மயில்கள் ஆடின அதற்கு ரசிகர் கூட்டம் குரங்குகள் என்கிறார் கபிலர்.

****

தமிழில் இசை

பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

To be continued…………………………..

Tags-  காளிதாசன் நூல்கள், சங்கத் தமிழ் நூல்கள், சங்கீதம், இசை வல்லகி, ரஷ்யா  

Leave a comment

Leave a comment