தலைக்கு மேலே சுற்றுகின்ற சாடலைட்டுகள் எத்தனை தெரியுமா? (Post No.14,925)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,925

Date uploaded in London – 1 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தினமணி 17-8-25 நாளிதழில் கொண்டாட்டம் பகுதியில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!

TRENDING SPACE NEWS

தலைக்கு மேலே சுற்றுகின்ற சாடலைட்டுகள் எத்தனை தெரியுமா? 

ச. நாகராஜன் 

இன்று நம் தலைக்கு மேலே சுற்றுகின்ற சாடலைட்டுகள் எத்தனை தெரியுமா?

2025 மார்ச் மாத கணக்குப் படி 14904 சாடலைட்டுகள் விண்ணில் ஏவி விடப்பட்டு சுற்றி கொண்டிருக்கின்றன.

எல்லாமே எர்த் ஆர்பிட் எனப்படும் பூமியின் சுற்றுப்பாதையில் சுழலவில்லை. சில சந்திரனுக்கும், சூரியனுக்கும், எரிநட்சத்திரங்களுக்கும் இதர கிரகங்களுக்கும் சென்று கொண்டிருக்கின்றன.

விண்வெளிக்கு மொத்தமாக இதுவரை 20985 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன

2021ல் மட்டும் 30 நாடுகளால் அனுப்பப்பட்ட 4550 சாடலைட்டுகள் பூமியின் ஓடுபாதையில் சுற்றிக் கொண்டிருந்தன. இதில் அமெரிக்கா 2804 சீனா 467, யுனைடெட் கிங்டம் 349 ரஷியா 168, ஜப்பான்93, இந்தியா 61 என்ற எண்ணிக்கையில் சாடலைட்டுகளை விண்ணில் பறக்கவிட்டிருந்தன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாடலைட்டுகள் எதற்காக விண்ணில் ஏவப்படுகின்றன?

டெலி கம்யூனிகேஷன் எனப்படும் தகவல் தொடர்புக்காகவும், பூமியை இடைவிடாது கண்காணிக்கவும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகவும்,பூமியில் ஆங்காங்குள்ள இடங்களுக்கு வழிகாட்டவும், பாதையைக் காட்டி வழி நடத்திச் செல்லவும், தொழில்நுட்பங்களை டெமோ செய்து காட்டவும், பூமி பற்றிய அறிவியலுக்காகவும், விண்வெளியை ஆராயவும்,  விண்வெளி அறிவியலுக்காகவும் இவை செலுத்தப்படுகின்றன.

இவற்றில் 63 சதவிகிதம் தகவல் தொடர்புக்காக அனுப்பப்பட்டவையே.

எல்லா சாடலைட்டுகளும் இயங்குகின்றனவா?

சொல்ல முடியாது.  பல செயலற்று விட்டன. சில பூமிக்கு குறிப்பிட்ட காலக் கெடுவில் திரும்பி வருகின்றன. இப்படி பல காரணங்கள் உண்டு.

கடந்த 63 மாதங்களில் 56.95 சதவிகிதம் சாடலைட்டுகள் அதாவது 11951 சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன!

ஏன் இந்த அளவுக்கு சமீப வருடங்களில் அதிகமாக சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்பட்டன?

இதற்கான காரணம் க்யூப்சாட்ஸ்  என்னும் மிக குட்டி சாடலைட்டுகள் மற்றும் சிறிய சாடலைட்டுகள் தயாரிக்கப்பட்டதால் தான்.

முதல் முதலாக ஸ்புட்னிக் விண்ணில் ஏவப்படும் போது அதன் எடை 183, 9 பவுண்டாக இருந்தது.  ஆனால் தொழில்நுட்பம் மேம்பட்டு விட்டதால் இப்போது 100 மிலிமீட்டர் அதாவது நான்கு அங்குல அளவில் கூட க்யூப்சாட் எனப்படும் சாடலைட்டுகள் உருவாக்கப்படுகின்றன. எடையோ வெறும் 4.4 பவுண்டுகள் தான்!

இவற்றை உருவாக்கும் செலவும் குறைவு தான்!

ஒரு கியூப்சாட்டை தயாரிக்க ஆகும் செலவும் 50000 டாலரிலிருந்து  ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் டாலர் வரை ஆகிறது. (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 87.60 ரூபாய் ஆகும்.

குறிப்பிடத்தக்க அளவில் சாடலைட்டுகளை விண்ணில் ஏவுவது ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தான்.

சரிஇந்தத் தகவல்களை எல்லாம் திரட்டித் தருவது யார்?

யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஃபார் அவுடர் ஸ்பேஸ் அஃபேர்ஸ் எனப்படும் ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகம் தான் (UNOOSA)!

விண்வெளியில் ஏற்படக்கூடிய குப்பைகள் என்னென்ன சேதத்தை விளைவிக்கக் கூடும் என்று 1978ல் ஆராய்ச்சி நடத்திய நிபுணரான டான் கெஸ்லர் என்பவர் ஒன்று இன்னொன்றுடன் மோதி ஏராளமான அளவில் குப்பைகள் சேரும்; இது பூமிக்கே அபாயம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு கெஸ்லர் சிண்ட்ரோம் (Kessler Syndrome) என்று பெயர்.

அது விரைவில் வந்து விடுமோ என்று உலக விஞ்ஞானிகள் பயப்படுகின்றனர் இப்போது!

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது!

தலைக்கு மேலே அபாயம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்றால் யாரால் தான் தூங்க முடியும், சொல்லுங்கள்!***

Leave a comment

Leave a comment