தமிழ் மழை பொழிந்த நாவினான்; பார் வியக்கும் புகழ் மேவினான்! (Post.14,967)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,967

Date uploaded in London – 11 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம்!

அவன் புகழ் போற்றுவோம்!

தமிழ் மழை பொழிந்த நாவினான்; பார் வியக்கும் புகழ் மேவினான்!

ச. நாகராஜன்

தமிழ்த் தாயின் கோலமே

பாரதி சொல் ஜாலமே

வியக்கு திந்த ஞாலமே

நிலைக்கும் பல காலமே                     (1)

தமிழோங்கப் பாடலைப் பாடினான்

வெள்ளையர் சூழ்ச்சியைச் சாடினான்

சுதந்திரம் பெற்றோமென ஆடினான்

நல்லத னைத்தையுமே நாடினான்    ̀̀             (2)

ஜாதிகள் இல்லையெனக் கூவினான்

பலகலைகள் கற்க என ஏவினான்

தமிழ்மழை பொழிந்த நாவினான்

பார்வியக்கும் புகழ் மேவினான்               (3)

பாரதி நாமம் வாழ்க

பாரத தேசம் வெல்க

தமிழ் மொழி ஓங்குக

தரணியை நிதம் தாங்குக!                (4)

**

Leave a comment

Leave a comment