ரிக், அதர்வண வேதங்களில் மருத்துவ சொற்கள்! அபூர்வ தகவல்கள்!!- 2 (Post.15,024)

Written by London Swaminathan

Post No. 15,024

Date uploaded in London –  25 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part 2

அதர்வண வேத மந்திர  எண்கள் பின்வருமாறு

அக்சத  – காயமடையாத  4-9-8

அன்ய -த்யூஸ் -ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் காய்ச்சல் 7-116-2

அபான  – வெளிவிடும் மூச்சுக் காற்று 10-2-

பிராண, வியான  ஆகிய காற்றுகளை ரிக்வேதத்தில் கண்டோம்

அப்வா – வயிற்று நோவு  – 3-2-5

அருந்ததி  – ஒரு மூலிகையின் பெயர் ; 4-13-1

கீழ் ஜாதியில் அக்ஷமாலா என்ற பெயருடன் பிறந்த பெண் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது ;அவள் வசிஷ்ட மகரிஷிக்கு மனைவியாகி சப்தரிஷி மண்டல நட்சத்திரங்களுள் ஒன்றானாள் ; அதை அராபியர்கள் ஆல்கால் ALCOL என்றனர் ; திருவள்ளுவர் குறளில் அது அலகை என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

அகண்டு  – ஒரு வகைப் பூச்சி 2-31-2

அல்பஸயு – ஒரு வகைப் பூச்சி 4-36-9

அசரிக- (முடக்கு வலி)  முடக்கு வாதம் 19-34-10

உபய– த்யூஸ்  – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் மலேரியா போன்ற காய்ச்சல் 1-26-4; 7-116-3;

இந்த உபய என்ற சொல் இன்று வரை வைஷ்ணவர் கடி தங்களிலும் திருமண அழைப்பிதழ் களிலும் இடம் பெறுகிறது  இரண்டும்  என்பது பொருள்

கிலாச – வெண் குஷ்டம் 1-23-1,2;

க்ளிவத்வ/- ஆண்மையின்மை , அலி  6-138;

கண்டமாலா  – கழுத்தில் வீக்கம்

கண்ட என்பதை கழுத்துக்குத் தமிழர்களும் ஏனையோரும் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்

நீல கண்ட – சிவனுக்கும் மயிலுக்கும்  பெயர்

ஜடிங்கா  – வலியைக் குறைக்கும் , மயக்கம் தரும் மூலிகை; பலாச நோய்க்கு மருந்து

(பலாச கீழே வருகிறது )

ஜ்வர – காய்ச்சல் 5-30-8

இன்று வரை நாடு முழுதும் பயன்படுத்தும் சொல்

த்ரிதியாக – 3 நாட்களுக்கு ஒரு முறை வரும் காய்ச்சல் /மலேரியா  1-25-4; 7-116-2;

பலாச  – காசநோய்  4-98;6-14-1

யக்ஸ்மா – காசநோய்  5-38 and 16;

வருண  கிரஹித  –  ஜலோதர நோய் /  மகோதரம்

வித்ரியாக – இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு வரும் காய்ச்சல் 5-22-13;

சீர்சாமய – தலைவலி ;ஆமய என்றால் நோய்சிரஸ் என்றால் தலை 5-4-10;9-8-1;

சதாம்  -தி – தினமும் வரும் மலேரியா ஜுரம்   1-2-13

ஹரிமா- மஞ்சள்  காமாலை   19-44-2

***

ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் ஆண்- பெண் புணர்ச்சி பற்றிய சூக்தம் 10-85-37 உள்ளது

கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு செய்யவேண்டிய பும்ஸவன சீமந்தக் கிரியைகளை அதர்வண வேதம் விவரிக்கிறது . கர்ப்பவதிக்கு குளிகை மருந்து தருவதையும்  குறிப்பிடுகிறது. அங்கே வரும் ஒரு அருமையான உருவகம் சொல்கிறது: AV 3-23

தாவரங்களே தந்தை, பூமியே தாய், சமுத்திரம் வேர், கடவுள் கொடுத்த மூலிகைகள் உனக்கு ஒரு நல்ல மகனை ஈன்ற உதவட்டும்

யாசாம்  த்யெளவ பிதா, ப்ருத்வீ மாதா, சமுத்ரோ மூலம், விருதாம் பபூவ .

தாஸ்த்வா புத்ரவித்யாய தைவீ ப்ராவாந்த்யோ பவஹ

The plants which has been the father, earth the mother, ocean the root, let those  herbs of the god  favour thee, in order to acquire a son.

Yaasaam dhyau pithaa prthvee maathaa samudro moolam  viroodhaam bhaboova.

Thaasthvaa putravidhyaaya dhaivee praavathyopavah –AV 3-23

தொடரும்…………………..

Tags- கர்ப்பம் அடைந்த பெண், ரிக், அதர்வண வேதங்கள், மருத்துவ சொற்கள், அபூர்வ தகவல்கள்- 2

Leave a comment

Leave a comment