
Post No. 15,038
Date uploaded in London – 29 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற துதியில் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குக் கேள்வி- பதில் வடிவத்தில் ஆதி சங்கரர் பதில் அளிக்கிறார் . அவற்றில் 31 பதில்களை இந்த மாத காலண்டரில் காண்போம்.
அக்டோபர் மாத பண்டிகைகள் – 1-ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை; 2- விஜய தசமி, காந்தி ஜெயந்தி; 10-கர்வா சவுத் 20- தீபாவளி; 22- கந்தஷஷ்டி துவக்கம்; 27-கந்தசஷ்டி சூரசம்ஹார விழா.
அமாவாசை-21; பௌர்ணமி-6; ஏகாதச- 3, 17.
முகூர்த்த தினங்கள்- 19, 20, 24, 27,31.

**************
அக்டோபர் 1 புதன் கிழமை
ஏற்க வேண்டியது என்ன?
குருவின் போதனையை ஏற்கவேண்டும்
***
அக்டோபர் 2 வியாழக் கிழமை
தவிர்க்க வேண்டியது என்ன?
கெட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும்
***
அக்டோபர் 3 வெள்ளிக் கிழமை
யார் குரு?
எவர் ஒருவர் சத்தியத்தை அறிகிறாரோ, எவர் ஒருவர் மாணவர்களின் நலனைச் சிந்திக்கிறாரோ அவர்தான் குரு
***.
அக்டோபர் 4 சனிக் கிழமை
அவசரமாக செய்ய வேண்டியது என்ன ?
ஜனன மரணச் சூழலிலிருந்து விடுபட்டு முகிதி அடைய வேண்டிய செயலை உடனே செய்யவேண்டும்.
***
அக்டோபர் 5 ஞாயிற்றுக் கிழமை
நன்மை பயப்பது என்ன?
தர்மம்
***
அக்டோபர் 6 திங்கட் கிழமை
கற்றவர் யார் ?
யார் புத்திசாலியா அவரே கற்றவர்
***
அக்டோபர் 7 செவ்வாய்க் கிழமை
விஷம் உடையது ?
மூத்தோர் புத்திமதியைப் புறக்கணிப்பது விஷம் நிறைந்தது.
***
அக்டோபர் 8 புதன் கிழமை
சாதாரண வாழ்க்கையில் முடிவான விஷயம் எது?
இறுதியாக நிலைத்து நிற்பவனை நினைப்பது.
***
அக்டோபர் 9 வியாழக் கிழமை
எதைப்பெறுவதற்கு ஏங்க வேண்டும்?
தன்னுடைய பிறருடைய நலனுக்காக ஏங்க வேண்டும்.
***
அக்டோபர் 10 வெள்ளிக் கிழமை
மதுபானம் போல போதை தருவது எது?
ஆசையே அத்தகைய போதைப்பொருள்.
***
அக்டோபர் 11 சனிக் கிழமை
இல்லற வாழ்க்கையில் எல்லோரும் பற்றிக்கொள்வது இது?
ஆசையே கொழுகொம்பு.
***
அக்டோபர் 12 ஞாயிற்றுக் கிழமை
யார் ஒருவரின் எதிரி?
சோம்பேறித்தனம்
***
அக்டோபர் 13 திங்கட் கிழமை
எல்லோரும் அஞ்சுவது எது?
மரண பயம்.
***
அக்டோபர் 14 செவ்வாய்க் கிழமை
குருடனுக்கும் மேலான குருடன் யார்?
ஆசையுள்ள மனிதன் குருடன்
***
அக்டோபர் 15 புதன் கிழமை
யார் வீரன் ?
மனத்தைக் கட்டுப்படுத்துவோன் மாவீரன்
***
அக்டோபர் 16 வியாழக் கிழமை
காதால் பருகும் அமுதம் எது?
பெரியோரின் போதனை.
***
அக்டோபர் 17 வெள்ளிக் கிழமை
ஒருவரை நம்புவதற்கு எது வேராக அமைகிறது?
எவரிடமும் சலுகையை எதிர்பார்க்காததே வேர்.
***
அக்டோபர் 18 சனிக் கிழமை
எதை அளக்க முடியாது ?
அழகியின் அன்ன நடையை எடை போட முடியாது.
***
அக்டோபர் 19 ஞாயிற்றுக் கிழமை
யார் புத்திசாலி?
பெண்களைக்கண்டு ஏமாறாதவன் புத்திசாலி
***

அக்டோபர் 20 திங்கட் கிழமை
எது துக்கம்?
திருப்தி ஏற்பாடாதபோது உண்டாவது துக்கம்
(ஆசை நிறைவேறாத போது )
***
அக்டோபர் 21 செவ்வாய்க் கிழமை
மிகவும் கீழ்தரமானது எது?
கீழ்மட்டத்தில் உள்ள ஒருவனிடம் பிச்சை கேட்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவது .
***
அக்டோபர் 22 புதன் கிழமை
உயர்ந்த வாழ்க்கை எது ?
குறைகளே இல்லாமல் வாழ்வது
***
அக்டோபர் 23 வியாழக் கிழமை
அறியாமை என்பது என்ன ?
எந்த ஒரு விஷயத்திலும் பயிற்சி இல்லாமை
***
அக்டோபர் 24 வெள்ளிக் கிழமை
விழிப்புள்ளவன் யார்?
புத்திசாலி விழிப்புடன் இருப்பவன்
***
அக்டோபர் 25 சனிக் கிழமை
வருந்தத்தக்கது எது?
முட்டாள்தனம் என்பது வருந்தத்தக்க விஷயம்.
***
அக்டோபர் 26 ஞாயிற்றுக் கிழமை
தாமரை இலைத் தண்ணீர் போல நிலையற்றது எது?
இளமை, செல்வம்,வாழ்நாள் ஆகியன நிலையற்றவை.
***
அக்டோபர் 27 திங்கட் கிழமை
சந்திர கிரணம் போல ஏனையோருக்கு நல்லது செய்வோர் யார்?
நல்ல மனிதர்கள்.
***
அக்டோபர் 28 செவ்வாய்க் கிழமை
நரகம் என்பது என்ன?
மற்றவர்களின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிப்பது நரகம்.
***
அக்டோபர் 29 புதன் கிழமை
சரியான பாதை எது?
எல்லாவற்றையும் துறப்பதே.
***
அக்டோபர் 30 வியாழக் கிழமை
அடைய வேண்டியது என்ன?
எல்லோருக்கும் நல்லதே செய்யவேண்டியது ..
****
அக்டோபர் 31 வெள்ளிக் கிழமை
உயர் வாழும் எல்லோருக்கும், பிராணிகளுக்கு பிரியமானது என்ன?
ஆன்மா
प्रश्नोत्तररत्नमालिका (Following is taken from Sanskritdocuments.org
कः खलु नालङ्क्रियते दृष्टादृष्टार्थसाधनपटीयान् ।
अमुया कण्ठस्थितया प्रश्नोत्तररत्नमालिकया ॥ १॥
भगवन् किमुपादेयं गुरुवचनं हेयमपि किमकार्यम् ।
को गुरुः अधिगततत्त्वः शिष्यहितायोद्यतः सततम् ॥ २॥
त्वरितं किं कर्तव्यं विदुषां संसारसन्ततिच्छेदः ।
किं मोक्षतरोर्बीजं सम्यक्ज्ञानं क्रियासिद्धम् ॥ ३॥
कः पथ्यतरो धर्मः कः शुचिरिह यस्य मानसं शुद्धम् ।
कः पण्डितो विवेकी किं विषमवधीरणा गुरुषु ॥ ४॥
किं संसारे सारं बहुशोऽपि विचिन्त्यमानमिदमेव ।
किं मनुजेष्विष्टतमं स्वपरहितायोद्यतं जन्म ॥ ५॥
मदिरेव मोहजनकः कः स्नेहः के च दस्यवो विषयाः ।
का भववल्लि तृष्णा को वैरी यस्त्वनुद्योगः ॥ ६॥
कस्माद्भयमिह मरणादन्धादिह को विशिष्यते रागी ।
कः शूरो यो ललनालोचनबाणैर्न च व्यधितः ॥ ७॥
पान्तुं कर्णाञ्जलिभिः किममृतमिह युज्यते सदुपदेशः ।
किं गुरुताया मूलं यदेतदप्रार्थनं नाम ॥ ८॥
किं गहनं स्त्रीचरितं कश्चतुरो यो न खण्डितस्तेन ।
किं दुःखं असन्तोषः किं लाघवमधमतो याच्ञा ॥ ९॥
किं जीवितमनवद्यं किं जाड्यं पाठतोऽप्यनभ्यासः ।
को जागर्ति विवेकी को निद्रा मूढता जन्तोः ॥ १०॥
नलिनीदलगतजलवत्तरलं किं यौवनं धनं चायुः ।
कथय पुनः के शशिनः किरणसमाः सज्जना एव ॥ ११॥
को नरकः परवशता किं सौख्यं सर्वसङ्गविरतिर्या ।
किं सत्यं भूतहितं प्रियं च किं प्राणिनामसवः ॥ १२॥
–subham—
Tags- ஆதி சங்கரர் கேள்வி பதில்கள்; அக்டோபர் 2025 காலண்டர், பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா