Post No. 15,063
Date uploaded in London – 7 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்கத் தமிழ் புலவர்களின் 470+++ பெயர்களில் ஒரு அதிசய விஷயம் உள்ளது அறுபதுக்கும் மேலான புலவர்களின் பெயர்களில் “கண்” உள்ளது ; ஸம்ஸ்க்ருதப் புலவர்களின் பெயர்களில் இவ்வளவு கண் இல்லை ; ஆனால் பெண்களின் பெயர்களில் கண் உள்ளது ; ஹரப்பா நாகரிக குறியீடுகளில் கண் என்ற உறுப்பினைக் கண்டுபிடித்துவிட்டால் அவற்றின் பொருளை உணரலாம்
சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நீண்ட ஆராய்ச்சி தேவை . பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் தண்ணீரின் மூலம் உடலின் உறுப்புகளைத் தொட்டு 12 மந்திரங்களை சொல்வார்கள் அதில் உள்ள முதல் மந்திரமான கேசவன் என்பதும் கடைசி மந்திரமான தாமோதரனும் சங்கத் தமிழ் புலவர் பெயர்களில் உள்ளன!
சம்ஸ்க்ருதத்தில்
விசாலாக்ஷி – நெடுங்கண்ணி
காமாக்ஷி – காமக்கண்ணி
நீலாயதாக்ஷி – நீலக்கண்ணி
மீனாக்ஷி – மீன் கண்ணி
மீனலோசனி- மீன் கண்ணி
நயனதாரா – நட்சத்திரக் கண்ணி, மின்மினி
கமலாக்ஷி- தாமரைக் கண்ணி
த்ரிநேத்ரன் – முக்கண்ணன், அம்மூவன்
த்ரயம்பகன் – முக்கண்ணன், அம்மூவன்
உருத்திரன் கண்ணனானர் – மிஸ்டர் ருத்திராக்ஷன்
புண்டரீகாக்ஷன் – தாமரைக் கண்ணன்
உலோச்சனார் – கண்ணன்
இவ்வாறு ஆண்கள் பெயர்களிலும் பெண்கள் பெயர்களிலும் நிறைய ‘கண்’கள் உண்டு
ஹரப்பா நாகரிக எழுத்துக்கள் பட எழுத்துக்கள் PICTOGRAPHS ஆகவே கண் படத்தைப் போட்டால் அதை நாம் நேத்ர, த்ரயம்பக , அக்ஷி ,நயன, கண்ணி, தாமரை போன்ற —என்று பல வகைகளில் படிக்கலாம்
ஆகவே என்னுடைய யோஜனை,
ஹரப்பா எழுத்துக்களில் உள்ள மீன் முத்திரையை கண் என்று படிக்க வேண்டும் என்பதே
இதுவரை ஆராய்ந்த நிபுணர்கள் அதை மீன் என்றும் அது நட்சத்திரத்தைக் குறிக்கும் சொல் என்றும் ஆறு கோடுகளுடன் மீன் படம் இருந்தால் அது அறுமீன்கள் என்றும் சொல்லிக் கட்டுரை எழுதினார்கள் இப்படி அகப்பட்டுக்கொண்டதால் அவர்களால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை ஆகையால் நடையை மாற்ற வேண்டும் ; அதாவது மாற்றுச் Break the shell and come out of it
சிந்திக்க வேண்டும்.
மீன் என்பதை தேவர்களுடனும் ஒப்பிடலாம் ஏனெனில் இருவரும் இமைப்பதில்லை ; எடுத்துக் காட்டாக ஆறு கோடுகளுடன் மீன் படம் உள்ள முத்திரையை முருகன் எனலாம்; பன்னிரு கோடுகளுடன் மீன் இருந்தால் அதை சூரியன், ராசி மண்டலம், துவாதச– என்றெல்லாம் படிக்கலாம் ; ஆகவே புது வகையில் சிந்திக்க வேண்டும் Break the shell and come out of it !
அதற்கு சங்கப் புலவர்களின் பெயர்ப் பட்டியல், ரிக் வேத ரிஷிகளின் பெயர்ப் பட்டியல் உதவும் . இதே போல பிராகிருத நூலான காதா சப்த சாதியிலும் நீண்ட புலவர் பட்டியல் உள்ளது அதிலுள்ள குண்டுக்கல் பாலியாதன் சங்கத் தமிழிலும் பாடியுள்ளார்.
ஆகவே ஒரு கண் முத்திரையை மட்டும் சிந்துவெளியில் அடையாளம் கண்டுவிட்டால் பிறகு படிப்பது எளிதாகலாம்
மேலும் சம்ஸ்க்ருதம் போலவே தமிழிலும் PREFIXES முன்னொட்டுகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்ஸ்க்ருதத்தில் நல்ல என்பதை சு என்ற முன்னொட்டுகளாகச் சேர்ப்பார்கள்;
சு+ மதி; சு+ லபா; சு +கந்தி; சு +கீர்த்தி– என்று நூற்றுக்கணக்கான பெயர்கள் உண்டு
சங்கத் தமிழ் இலக்கியப் பெயர்களிலும் முன்னொட்டுகள்தான் அதிகம்; நற், நப், நக், இளம் (ஜூயூனியர் ) முது (சீனியர்) இவையெல்லாம் சம்ஸ்க்ருதம் பின்பற்றும் உத்திகள். மஹா என்பதை தமிழ்ப்புலவர்கள் பெரும் என்ற முன்னொட்டுடன் பயன்படுத்தியுள்ளனர் . ஹரப்பாவில் பெயர்களை ஆராய்ந்து ஒரு பெயரைக் கண்டுபிடித்தாலும் புதிய பாதை திறக்கப்படும்!
****
சங்கப்புலவர் பெயர்கள்
மதுரை – 44 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது;
உறையூர் – 9 முறை;
கரு – 12 முறை;
நல்- 32 முறை ; Nal, Nap, Nak, Nar all Su in Sanskrit- Good in Tamil
In Sanskrit we have Sumathi, Sulochana, Sugandhi, Sukeerti, Sukanya etc
Tamils also followed Sanskrit speakers by using it in 32 names;
நற் -Nar-good;
நப் -Nap Good;
கண் – 64 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது!!!
செங்கண்ணன் காரிக்கண்ணன் வெண்கண்ணன்; .
மருத்துவத்தில் வெள்ளைக் கண் என்றால் நோயுள்ள ரத்த சோகை உள்ளவன் என்று பொருள்; ஆனால் மிகவும் வியப்பான விஷயம் சங்கத் தமிழர்களில் சிவப்பு, கருப்பு கலர்களை விட இதைத்தான் அதிகம் பெயர்களில் வைத்துள்ளனர் ! ஏன்? ஏன்? ஏன்?
செங் – – நாலைந்து இடங்களில் மட்டுமே;
தலை – 9 முறை;
இள – 34 முறை;
கீர – 27 முறை;
பூத -25 முறை;
காரி = 2;
முட – 10;
தத்த- 10 முறை;
சு என்ற சம்ஸ்க்ருத முன்னொட்டு பெரும்பலான பெண்கள் பெயர்களில் வருவதைக் கவனிக்கவும் பசலை என்பது பத்ரா நப்பசலை என்பது சுபத்ரா ; இதே போல சுகன்யா/ சுலோச்சனா என்பது நக்கண்ணையாக இருக்கலாம் எப்படியாகிலும் ஸம்ஸ்க்ருதப் பெயர்வைப்பு முறையை அப்படியே தமிழர்கள் பின்பற்றியுள்ளனர்; பாணினி சொன்னபடியே பெண்பாற் பெயர்கள் உள்ளன ; பெண்களின் பெயர்கள் இ அல்லது ஆ வில் முடிய வெந்ததும் தமிழில் ஆ என்பது ஐ என்று முடியும் ; சீதா= சீதை, கீதா= கீதை . ஆர்யா- ஐயை
சிவா- ஷிவானி, பவா- பவானி , வருண= வருணானி;
தமிழில் குறவன் – குறத்தி; ஒருவன்- ஒருத்தி
இது பாணினி சூத்திரப்படி அமைந்த பெயர்கள்
மிஸ்டர் நாகராஜன் என்பதை புற நானூறு – முடி நாக ராயர் என்று எழுதுகிறது அதுவும் ஸம்ஸ்க்ருதப்பெயரே!
–subham—
Tags- லண்டன் சுவாமிநாதன் கைடு, சிந்து சமவெளி, ஹரப்பா எழுத்து, படிப்பது எப்படி ? சங்கத் தமிழ் , புலவர் , பட்டியல் கண் , நயன நேத்ர அக்ஷி