நவம்பர் 2025 காலண்டர்- ஆதிசங்கரர் மேற்கோள்கள் (Post.15,127)

Written by London Swaminathan

Post No. 15,127

Date uploaded in London –  28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற துதியில் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குக் கேள்வி- பதில் வடிவத்தில் ஆதி சங்கரர் பதில் அளிக்கிறார் . அவற்றில் மேலும் 30 பதில்களை இந்த மாத காலண்டரில் காண்போம். சென்ற அக்டோபரில் 31 மேற்கோள்களைக் கண்டோம்.

நவம்பர் பண்டிகைகள் – நவம்பர் 1 ஏகாதசி , 2 துளஸி விவாகம் , 5 குருநானக் ஜயந்தி , தேவ தீபாவளி , பெளர்ணமி தமிழ் நாட்டுக் கோவில்களில் அன்னாபிஷேகம்,  14 குழந்தைகள் தினம் , 15 ஏகாதசி, 17 சபரிமலை கோவில் திறப்பு 20 அமாவாசை,

அமாவாசை-20;   பௌர்ணமி-5;  ஏகாதசி- .1,15.

நவம்பர் முகூர்த்த தினங்கள்-10, 27, 30.

(P R Ramachandran’s translation is used from shastra.com; thanks)

நவம்பர் 1 சனிக்கிழமை

மனிதன் தவறான முடிவுக்கு என் வருகிறான் ?

அகந்தையால் கர்வத்தால்.

****

நவம்பர் 2  ஞாயிற்றுக் கிழமை

இன்பம் தருவது எது?

நல்லோருடைய நட்பு.

***

நவம்பர் 3  திங்கட் கிழமை

துக்கங்களை நீக்கும் நிபுணர் யார்?

எல்லாவற்றையும் துறந்தவனே அத்தகைய நிபுணர் .

***

நவம்பர் 4  செவ்வாய்க் கிழமை

மரணத்துக்குச் சமமானது எது?

முட்டாளாக இருப்பது

***

நவம்பர் 5  புதன் கிழமை

விலை மதிக்க முடியாதது எது?

மிகவும் தேவையான ஒன்றினை அந்த நேரத்தில் கொடுப்பது.

****

நவம்பர் 6  வியாழக் கிழமை

மரணம் வரை நமது மனத்தை உறுத்துவது என்ன?

ரகசியத்தில்l  செய்த தவறு / பாவச் செயல்

***

நவம்பர் 7  வெள்ளிக் கிழமை

எதனை அடைய பெரு முயற்சி எடுக்க வேண்டும்?

கற்பதற்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தர்மம் செய்யவும் பெரு முயற்சி தேவை.

***

நவம்பர் 8  சனிக்கிழமை

எதை எதை ஒதுக்க வேண்டும் ?

கெட்ட மனிதர்கள், மற்றவரின் மனைவியர், அடுத்தவர்களின் செல்வம்

***

நவம்பர் 9  ஞாயிற்றுக் கிழமை

அல்லும் பகலும் அனவரதமும் சிந்திக்க வேண்டியது என்ன?

வாழ்க்கையிலும் பெண்களிடத்திலும் பற்றுவைப்பதில் பொருளே இல்லை

***

நவம்பர் 10  திங்கட் கிழமை

எதில் பற்று தேவை?

துன்பம் அடைந்தோருக்கு கருணை காட்டு; நல்லோரின் நட்பினில் பற்று வை.

***

நவம்பர்  11 செவ்வாய்க் கிழமை

யாரைச் சீர்திருத்த முடியாது?

தீயோர், சந்தேகப்படுவோர் , எப்போதும் வாடிய முகம் உடையோர் , நன்றி மறந்தோர்.

***

யார் நல்ல மனிதன் ?

ஒழுக்கம் உள்ளவன் நல்ல மனிதன்

***

நவம்பர் 12  புதன் கிழமை

கெட்டவன் யார்?

தீய ஒழுக்கம் உடையவன்

***

நவம்பர் 13 வியாழக் கிழமை

யாரை தெய்வமே வணங்கும்?

கருணை உள்ளவனை.

***

நவம்பர் 14  வெள்ளிக் கிழமை

எதைக் கண்டு அஞ்சவேண்டும்?

இல்லற வாழ்வு என்னும் காட்டினில் நுழைய அஞ்சவேண்டும்.

***

நவம்பர் 15  சனிக்கிழமை

எல்லா உயிரினங்களையும் கட்டுப்படுத்த வல்லவன் யார்?

உண்மை விளம்பி, இனிமையாகப் பேசுபவன், பணிவுடையோன்.

****

நவம்பர் 16  ஞாயிற்றுக் கிழமை

கண்டதும் காணாததும் உள்ள இடத்தில் நாம் எங்கே நிற்கவேண்டும்?

நீதியின் பாதையில் .

***

நவம்பர் 17  திங்கட் கிழமை

யார் கண்ணிருந்தும் குருடன்?

தீய செயல்களைச் செய்யும் கற்ற மனிதன்

***

நவம்பர் 18  செவ்வாய்க் கிழமை

காதிருந்தும் செவிடன் யார்?

நல்ல சொற்களைக் கேளாதவன்

***

நவம்பர் 19 புதன் கிழமை

வாயிருந்தும் ஊமை யார் ?

உரிய தருணத்தில் ஆறுதல் தரும் சொற்களைச் சொல்லாதவன்.

***

நவம்பர் 20  வியாழக் கிழமை

எது விவேகம்?

கேளாமல் கொடுப்பது .

***

நவம்பர் 21  வெள்ளிக் கிழமை

யார் நண்பன்?

பாவச் செயல்களைச் செய்யாமல் நம்மைத் தடுப்பவன்

***

நவம்பர் 22 சனிக்கிழமை

எது அழகானது?

நன்னடத்தை

***

நவம்பர் 23  ஞாயிற்றுக் கிழமை

அழகான சொல் எது?

சத்தியம்/ உண்மை

***

நவம்பர் 24  திங்கட் கிழமை

மின்னல் போல மறைவது என்ன?

தீயோருடனும் பெண்களுடனும் உள்ள நட்பு.

***

நவம்பர் 25  செவ்வாய்க் கிழமை

ஜாதி தர்மத்திலிருந்து விலகாதவர்கள் யார் ?

கற்றறிந்த மக்கள்  .

***

நவம்பர் 26  புதன் கிழமை

விரும்பியதைக்கொடுக்கும் சிந்தாமணி போன்றது எவை?

இனிமையான சொற்களுடன் செய்யும் தர்மம்; அகந்தை இல்லாத அறிவு; பொறுமை மிக்க வீரம்; தியாகம் செய்யும் செல்வம்

***

நவம்பர் 27  வியாழக் கிழமை

பரிதப்படவேண்டிய செயல் என்ன?

கருமித்தனம் .

***

நவம்பர் 28  வெள்ளிக் கிழமை

செல்வம் உள்ளவர்களிடம் புகழத்தக்கது எது?

வாரி வழங்கும் வள்ளன்மை

***

நவம்பர் 29  சனிக்கிழமை

புத்திசாலிகள் யாரை வணங்க வேண்டும்?

இயற்கையிலேயே பணிவுடைய மனிதர்களை.

***

நவம்பர் 30  ஞாயிற்றுக் கிழமை

சூரியனைக் கண்ட தாமரை மலர்வது போல  எவரைக்கண்டவுடன் ஒரு குலமே மலரும்?

நல்ல குணமும் பணிவும் உள்ளோரைக் கண்ட குலம் தாமரை போல மலரும்

–subham–

Tags- நவம்பர் 2025 காலண்டர், ஆதிசங்கரர் மேற்கோள்கள்,

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா,

Leave a comment

Leave a comment