
Post No. 15,224
Date uploaded in London – 28 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த இரண்டு மாத காலண்டர்களில் ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ள பொன்மொழிகளைக் கண்டோம்; அதன் தொடர்ச்சியை இந்த டிசம்பர் மாதக் காலண்டரில் காண்போம்.
டிசம்பர் மாதப் பண்டிகைகள் :
03-12-2025 – கார்த்திகை தீபத் திருநாள்; 11- பாரதியார் பிறந்த தினம்;16-மார்கழி மாதப் பிறப்பு; 19 ஹனுமத் ஜெயந்தி; 25- கிறிஸ்துமஸ்; 30-வைகுண்ட ஏகாதசி
04-12-2025 – வியாழன், பவுர்ணமி; 19-12-2025 – வெள்ளி, அமாவாசை
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்- 15 , 30
முகூர்த்த நாட்கள் : 01-12-2025 – திங்கள், 08-12-2025 – திங்கள், 10-12-2025 – புதன், 14-12-2025 – ஞாயிறு, 15-12-2025 – திங்கள்,
டிசம்பர் 1 திங்கட்கிழமை
சூரியனைக்கண்டால் தாமரை மலர்கிறது; அதே போல யாரைக்கண்டால் ஒரு குலமே மலரும்?
நல்லகுணங்களும் அடக்கமும் உள்ளவர்களை க்கண்டால் குலமே மலரும்
***
டிசம்பர் 2 செவ்வாய்க்கிழமை
யார் உலகத்தையே தனக்கு அடிமையாக்க முடியும்?
இனிமையான சொற்களை பேசி நன்மை தரும் உரையாடலைச் செய்வோருக்கும் தருமத்தைக் கடைப்பிடிப்போருக்கும் உலகமே அடிமை ஆகிவிடும்.
***
டிசம்பர் 3 புதன்கிழமை
கற்றோரின் மனத்தைக் கவர்வோர் யார்?
நல்ல கவிதைகளும் புத்திசாலிப்பெண்ணும்.
***
டிசம்பர் 4 வியாழக்கிழமை
யாருக்கு எப்போதும் ஆபத்து வராது?
பெரியோர்களின் சொல்லைக் கேட்டு அடக்கத்தோடு இருப்பவனுக்கு எப்போதும் ஆபத்து இல்லை
***
டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை
யாரை செல்வத் திருமகள் நேசிப்பாள் ?
நன்னடத்தையும் சுறுசுறுப்பான எண்ணமும் உடையவனை.
***
டிசம்பர் 6 சனிக்கிழமை
யாரிடமிருந்து லெட்சுமி ஓடிப்போவாள் ?
சோம்பேறிகளிடமிருந்தும் ஆசிரியர்களையும் பிராமணர்களையும் நிந்திப்போரிடமிருந்தும்
(பிராமணர்கள்= வேத விற்பன்னர்கள் )
***
டிசம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை
நாம் எங்கே வசிக்க வேண்டும்?
நல்லோர் வாழுமிடத்தில்.
***
டிசம்பர் 8 திங்கட்கிழமை
எந்த நாட்டிலிருந்து வெளியேறவேண்டும்?
கருமியும் கொடுங்கோலும் உடையவன் நாட்டிலிருந்து.
***
டிசம்பர் 9 செவ்வாய்க்கிழமை
கவலையில்லாத மனிதன் யார் ?
அடக்கத்துடனுள்ள நல்ல மனைவி , நிலையான வருமானம் இரண்டும் இருந்தால் .
****
டிசம்பர் 10 புதன்கிழமை
எப்போதும் துக்கம் உள்ளவன் யார்?
செல்வம் இருந்தும் அதை பிறருக்கு கொடுக்காதவன் துன்பத்தில் உழல்வான்.
***


டிசம்பர் 11 வியாழக்கிழமை
எப்போது கெட்ட பெயர் ஏற்படும்?
கீழ்த்தர மனிதர்களிடம் பிச்சை எடுக்கும்போது .
***
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை
ராமபிரானைவிட பராக்ரமம் மிக்கவன் யார்?
காமதேவனின் அம்புக்கணைகளுக்கும் அசங்காதவன்
***
டிசம்பர் 13 சனிக்கிழமை
அல்லும் பகலும் மனதில் இருக்க வேண்டியது எது?
இறைவனின் பாத கமலங்கள் ; நம்முடைய வாழ்க்கை அல்ல.
***
டிசம்பர் 14 ஞாயிற்றுக் கிழமை
கண்களிருந்தும் குருடன் யார்?
நாஸ்தீகன்
***
டிசம்பர் 15 திங்கட்கிழமை
முடவன் யார் ?
வயதான காலத்தில் யாத்திரை செல்பவன்
***
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை
புனித தீர்த்தம் எது?
மனத்திலிருந்து அழுக்கைப்போக்கும் எல்லாம் புனித தீர்த்தம்.
***
டிசம்பர் 17 புதன்கிழமை
எதை மனிதன் பேசவேண்டும்?
ஹரியின் நாமத்தை .
***
டிசம்பர் 18 வியாழக்கிழமை
புத்திசாலிகள் பேசக்கூடாதது எது?
பொய்யும் புரளியும் .
டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை
மனிதன் சம்பாதிக்க வேண்டியவை யாவை ?
அறிவு, பணம், பலம், புகழ் , புண்ணியம்
***
டிசம்பர் 20 சனிக்கிழமை
நல்ல குணங்கள் இருந்தும் அவை எப்போது பயனற்றுப்போகின்றன?
கருமித்தனத்தால்.
***
டிசம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை
எதிரி யார் ?
காலம்
***
டிசம்பர் 22 திங்கட்கிழமை
அரசன் தவிர்க்க வேண்டிய அமைச்சு எது?
புத்திசாலிகளும் வயதானவர்களும் இல்லாத அமைச்சரவை
***
டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை
இந்த உலகத்தில் விசுவாசமாக இருக்க வேண்டிய இடம்?
அரசாங்க சேவைகளில்.
***
டிசம்பர் 24 புதன்கிழமை
உயிரினும் அரியது எது?
குலதர்மமும் சத் சங்கமும்
***
டிசம்பர் 25 வியாழக்கிழமை
ஆலமரம் போல அழியாதது எது?
நல்லோருக்குக் கொடுத்த தானம் /நன்கொடை
***
டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை
எல்லோரிடமுள்ள ஆயுதம் எது?
எதையும் நியாயத்தின் அடைப்படையில் நிரூபிப்பது.
***
டிசம்பர் 27 சனிக்கிழமை
எல்லோருக்கும் தாயார் யார்?
கோ மாதா/ பசு மாடு
***
டிசம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை
எது ஒருவனுடைய படை /சேனை?
துணிவு
***
டிசம்பர் 29 திங்கட்கிழமை
எது மரணத்துக்குச் சமம் ?
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை .
***


டிசம்பர் 30 செவ்வாய்க்கிழமை
விஷம் எங்கே இருக்கிறது?
கெட்ட மனிதர்களிடத்தில்
***
டிசம்பர் 31 புதன்கிழமை
தீண்டத்த தகாதவன் போன்ற நிலை ஒருவனுக்கு எப்போது ஏற்படுகிறது?
கடன் வாங்கிய பின்னர் அதைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது
–subham—
Tags- டிசம்பர் 2025 காலண்டர், ஆதி சங்கரர் பொன்மொழிகள், பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா