திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362) 

Written by London Swaminathan

Post No. 15,362

Date uploaded in Sydney, Australia –  26 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1   (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் திருப்புகழ்)

Brahma, Somnathpur, Karnataka 

படைப்பவனும் துடைப்பவனும்!

படைக்கப் பங்கயன் … படைக்கும் தொழிலைச் செய்வதற்குத்

தாமரைமலர் மேவும் பிரமன்,

துடைக்கச் சங்கரன் … அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன்,

புரக்கக் கஞ்சைமன் … காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் – திருமால் 

***

முருகன் = திரு ஞான சம்பந்தர்

செந்தமிழ் …… அங்கவாயா

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு

     மிசைக்கிடுஞ் செந்தமிழ் …… அங்கவாயா

மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண் கழு மிசைக்கு

இடும் செம் தமிழ் அங்க வாயா … மிக்கு வந்த, வலிய சமணர்களை

பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே,

***

முருகனின் கொஞ்சும் தமிழ்

கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித்

தமிழைப் பகர்வோனே … கொன்றை மலர் அணிந்த சடையுடைய

சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத்

தெரியும்படி கொஞ்சு ம்  தமிழில் கூறியவனே,

***

அகஸ்தியன் = சிவபெருமான்

சிவனைநிகர் … சிவனுக்கு ஒப்பான

பொதியவரை முனிவன் … பொதியமலையைச் சார்ந்த முனிவன்

(அகத்தியன்)

அகமகிழ … உள்ளம் மகிழ

இரு செவிகுளிர … அவனது இரண்டு செவிகளும் குளிர,

இனியதமிழ் பகர்வோனே … இனிய தமிழை ஓதியவனே

***

கயிலை மலை = திருச்செந்தூர்

கயிலைமலை யனைய செந்தில் … திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில்

***

அலரிமதி,மகபதி,நிருதிநிதிபதி

அலரிமதி நடுவன் … சூரியன், சந்திரன், யமன்,

மகபதி முளரி … இந்திரன், அக்கினி,

நிருதி நிதிபதி … நிருதி, குபேரன்,

கரிய வனமாலி … கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும்,

நிலவுமறை … நிலைத்த பிரமன்,

***

நாரதர் புகழ்ந்த வள்ளி

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் … புலவர்கள் பாடிய

நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்

புகல் குற மாதை … முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை

****

நஞ்சுமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் = பிள்ளையார்

மூஷிகம் உந்திய ஐங்கர … மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து

கரத்தாரும்,

கணராயன் மம விநாயகன் … கணங்களுக்குத் தலைவரும், எங்கள் விநாயகரும்,

நஞ்சுமிழ் கஞ்சுகி அணி … விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த

கஜானன விம்பன் … யானை முகத்தை உடையவரும்,

ஒர் அம்புலி மவுலியான் … பிறைச் சந்திரனைத் தலைமுடியில்

தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி

உறு சிந்தை யுகந்தருள் இளையோனே … மிகவும் மனமகிழ்ந்து

அருளத் தக்க இளைய பெருமானே,

***

சங்கரன், சங்கரி, கங்கை–க்குப் புதல்வன்

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்

புதுக்கும் கங்கையட்கும் தம் சுதன் ஆனாய் … உலகங்களை

எல்லாம் காக்கும் உமா தேவிக்கும், சிவ பெருமானுக்கும், சிவனார்க்கு

இன்பம் புதுப்பிக்கும் கங்கா தேவிக்கும் செல்லப் பிள்ளையாக ஆனவனே,

***

கண்ணன் குழல் இசைத்தால் புலியும் பசுவும் நட்பு பாராட்டும்! மலை உருகும்!!

Venu Gopala ,Somnathpur, Karnataka 

அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை

முலை அமுது உ(ண்)ண … குகையில் இருக்கும் புலி பெற்ற குட்டி

குடிப்பதற்கு பசுக் கூட்டங்களின் முலைப் பால் அமுதை உண்ணவும்,

நிரை மகள் வசவனொடு புலி முலை உ(ண்)ண மலையுடன்

உருகா … பசுவின் பெண் கன்று, ஆண் கன்றுடன் புலியின் முலைப்

பாலைக் குடிக்கவும், மலை அப்படியே உருகவும்,

நீள் அடவி தனில் உள உலவைகள் தளிர் விட … நீண்ட

காட்டில் உள்ள பட்ட மரங்கள் தளிர் விடவும்,

மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளி உயர்

பறவைகள் நிலம் வர … மயல் கொண்ட மதத்துடன் ஆண் யானைகள் பெண் யானைகளோடு ஒரு புறம் செல்லவும், ஆகாயத்தில் உயரத்தில் உள்ள பறவைகள் நிலத்துக்கு வந்து சேரவும்,

விரல் சேர் ஏழ் தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய …

தன் விரல்களைச் சேர்த்து, ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில்

(புல்லாங்குழல்) மீது விரலை முறைப்படி தடவினதால் எழுகின்ற

இசைகள் பல பல தொனி தரு கரு முகில் சுருதி உடையவன்

நெடியவன் மனமகிழ் மருகோனே … இசைகளால் பற்பல

நாதங்களை எழுப்பும் கரிய மேகம் போன்ற கண்ணபிரான், வேதப்

பொருளோன், நெடிய திருமால் மனமகிழும் மருகனே,

***

பம்பரம் போல ஆடும் தேவி! 

Dancing Devi, Somnathpur, Karnataka 

பம்பரமேபோல ஆடிய சங்கரி … பம்பரம் போலவே சுழன்று

நடனம் ஆடும் சங்கரி,

வேதாள நாயகி … வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)

தலைவி,

பங்கய சீபாத நூபுரி கரசூலி … தாமரை போன்ற திரு நிறைந்த

பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்

தரித்தவள்,

பங்கமி லாநீலி மோடிபயங்கரி … குற்றமில்லாத கருநீல

நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள் (தந்த பயத்தைப் போக்குபவள்)

மாகாளி யோகினி … மகா காளி, யோகத்தின் தலைவியாகிய

அன்னை பார்வதி,

To be continued…………………………..

Tags- திருப்புகழில், அருணகிரி நாதர், சொல் அழகும், பொருள் வளம்- Part 1   ,திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் திருப்புகழ்

Leave a comment

Leave a comment