GNANAMAYAM 4th January 2026 BROADCAST PROGRAMME

aalayam arivom

TRR

Prayer

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time.

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayanthi Sundar Team- Ms Rajeswari Santhanasivam.

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Mrs Brahnanayaki Sathyanarayanan  from Bangalore

Topic- Thiruvalankadu Temple, Famous Siva Shrine. 

****

SPECIAL EVENT-

Periya Puranam Talk

by T R Ramesh

(Son of Sekkizar Adippodi Dr T N Ramachandran, Thanjavur)

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 4th January 2026

நேரில் காணலாம்கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்- திருமதி ராஜேஸ்வரி சந்தான சிவம்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

திருமதி பிரஹந்நாயகி சத்தியநாராயணன்பெங்களுர்

தலைப்பு — திருவாலங்காடு கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பெரியபுராண தொடர் சொற்பொழிவு

திரு  T R ரமேஷ் அவர்கள்

(சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் T N ராமச்சந்திரன்  அவர்களின் புதல்வர்)

—subham—

Tags-Gnanamayam Broadcast, 4-1-2026, programme

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 4-1-2026 (Post.15,333)


Written by London Swaminathan

Post No. 15,333

Date uploaded in London –  5 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து, .வைஷ்ணவி ஆனந்தும், லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதம் நான்காம் தேதி 2026-ம் ஆண்டு.

நேயர்களுக்கு முதலில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

***

முதலில் வங்க தேசச்  செய்திகள்

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். கொல்லப்பட்டவர் பெயர் பிஜேந்திர பிஸ்வாஸ் (42)  இவர் ஆடைத் தொழிற்சாலையில் பாதுகாவலாளியாக இருந்து வந்தார்.

இந்த சம்பவம் மைமென்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்துள்ளது அவரை சுட்டுக்கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா (29)என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுடுவதற்கு பயன்பத்திய சிறியரக துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரே காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது.

குறிப்பாக, இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. அண்மையில், மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் தொடர்ச்சியாக, சாட்டோகிராம், பிரோஜ்பூர் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.

பின்னர் மேலும் இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன

இதுதொடர்பான பலர் கைது செய்யப்பட்ட்டனர் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.

***

சிலிகுரி கோழி யானையாக மாற வேண்டும்!: வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை

இந்தியாவின், சிலிகுரி பகுதியை துண்டிப்போம் என, வங்கதேச இடைக்கால அரசு கூறி வருவது குறித்த கேள்விக்கு, ‘கோழி கழுத்தாக இருக்கும் சிலிகுரியை, யானையாக வளர நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் தற்போதைய சூழல் மற்றும் இந்தியாவின் சிலிகுரி காரிடார் பகுதிக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் குறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவன சத்குருவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அது குறித்த வீடியோ பதிவில் சத்குரு கூறியதாவது: இந்தியாவின், ஒரு பகுதி வெறும், 22 கி.மீ., அகலத்தில், கோழிக்கழுத்து போல் இருப்பது ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான சரியான முறை அல்ல. இதற்கான அதிகாரம் நம்மிடம், 1946 மற்றும் 47ல் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், 1972ல் இதற்கான சீர்திருத்தங்களை செய்யும் அதிகாரம் இருந்தும், நாம் அதை செய்யவில்லை.

கோழியாக இருப்பதால் தேசங்களை உருவாக்கி விட முடியாது. அது ஒரு யானையாக வளர வேண்டும். அதற்கு ஊட்டச்சத்து தேவைப்படலாம் அல்லது சில ஊக்க மருந்துகள் தேவைப்படலாம். எது தேவையோ அதை நாம் செய்தே தீர வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த முரண்பாடு வெறும், 78 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்ந்தது.

சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. திருத்தம் நடந்தே தீர வேண்டும். நாம் அந்த கோழிக்கு நன்றாக உணவளித்து அதை ஒரு யானையாக மாற்ற வேண்டும். யானையின் கழுத்தை கையாள்வது அவ்வளவு எளிதாக இருக்காது. எப்படியோ, இப்போது அவர்கள் இந்த விவகாரத்தை முன்னிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இனி இது தவிர்க்க முடியாமல் நடந்தே தீரும்.

தற்போதைய நிலையில், தேசங்களின் இறையாண்மையை பாதுகாப்பது மிக முக்கியமானது. காலப்போக்கில் எல்லைகள் மெதுவாக தளர்ந்து ஒரு கட்டத்தில் முழுமையாக அது நீக்கப்படலாம். 1944, 45ல், ஐரோப்பாவில் மக்கள் கடுமையாக போரிட்டனர். மிக மோசமான முறையில் இரண்டாம் உலகப்போர் நடந்தது. ஆனால், இன்று பாருங்கள், அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கிறார்கள். எனவே அதை செய்வது சாத்தியம்தான். என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.

***

கோவிலில் முதல் மரியாதை தெய்வத்துக்கு தான்: ஐகோர்ட்

கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான் என்பதால், சிறப்பு மரியாதைகளை, ஒரு போதும் உரிமையாக கோர முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவராஜ சுவாமி கோவிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு, 1992 முதல் வழங்கப்பட்டு வந்த, ‘பஞ்ச முத்திரை மரியாதை’ நிறுத்தப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, ஹிந்து அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”தேவராஜ சுவாமி கோவில் செயல் அறங்காவலரின், 1991ம் ஆண்டு செப்., 5ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டபடி, காஞ்சி காமகோடி பீடம் -சங்கர மடம், அகோபில மடம், நாங்குநேரி வானமாமலை மடம், மைசூர் பரகால ஜீயர் மடம், உடுப்பி வியாசராயர் மடம் ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன,” என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது. மடங்களின் தலைவர்களை கவுரவிப்பது, அவர்களுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலையத்துறை சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரியை அணுகி, மனுதாரர் தரப்பு நிவாரணம் கோரலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

*****

 ஹிந்துக்கள் ஒன்றோடு நிறுத்தக்கூடாது 2 – 3 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்: அசாம் முதல்வர் ‘அட்வைஸ்’

”அசாம் மாநிலத்தில் ஹிந்து மக்கள் தொகையின் வளர்ச்சி குறைந்து வருவதால், ஹிந்து தம்பதியர் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு, மூன்று குழந்தைகளாவது பெற்றெடுக்க வேண்டும்,” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 40 சதவீதத்தை நெருங்கி வருவதாக சமீபத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.

எதிர்கால தலைமுறை இந்நிலையில், மக்கள் தொகை அமைப்பு மாறி வருவது குறித்து, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளதாவது:

சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது. ஹிந்துக்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே தான் ஹிந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள சொல்கிறேன்.

ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு குழந்தைகள் பெற்றெடுங்கள். முடிந்தவர்கள் மூன்று குழந்தைகள் கூட பெற்றெடுக்கலாம்.

முஸ்லிம்கள் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியே சென்றால், அசாமில் அவர்களின் மக்கள் தொகை 40 சதவீதத்துக்கு மேல் செல்லும்.

ஹிந்துக்களின் மக்கள் தொகை 35 சதவீதத்துக்கு கீழே செல்வதை எதிர்கால தலைமுறையினர் சந்திக்க நேரிடும்.

நம் அண்டை நாடான வங்கதேசம், அடிக்கடி வடகிழக்கு இந்தியாவை பிரித்து, தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.

கோரிக்கை போர் செய்யத் தேவையில்லை. அவர்களின் மக்கள் தொகை 50 சதவீதத்தை தாண்டினால் தானாகவே அது நடந்துவிடும்.

அசாம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், முஸ்லிம்களுக்கு 48 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அக்கட்சியிடம் கோரிக்கை வைத்தார்.

அவரை இன்னமும் கட்சியை விட்டு நீக்கவில்லை. ஏனென்றால், முஸ்லிம் ஓட்டுகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.

***

வைகுண்ட ஏகாதசி செய்திகள்

வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி திருப்பதி திருமலை வெங்கடாசலபதி  கோயிலில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

 கடந்த 20ம் தேதி ஏகாதசி விழா தொடங்கி பகல் பத்து உற்சவ விழாக்கள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்கத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கம் எழுப்பினர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் டிசம்பர் 30 ஆம் தேதி   காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

பெங்களூரு இஸ்கான் கோவிலில்  சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்..

ஆருத்ரா தரிசனம்

ஜனவரி மூன்றாம் தேதி ஆருத்ரா தரிசனம் ;அதை  முன்னிட்டு  சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா முதல் நாள் நடந்தது; ஐந்து தேர்களில் பவனி வந்த 5 மூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்

***

சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கு – தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் கைது!

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள், பராமரிப்பு பணிக்காக 2019ம் ஆண்டு கழற்றப்பட்டன. பின்னர் ஒப்படைக்கும்போது தங்கக் கவசங்களின் எடை, 4 புள்ளி 54 கிலோ அளவுக்கு குறைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இப்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

***

ராமர் கோவில் பிரதிஷ்டை 2ம் ஆண்டு விழா: பிரதமர் மோடி பெருமிதம்

ராமர் கோவில் பிரதிஷ்டை இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று, அயோத்தியின் புனித பூமியில் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது; இந்த விழா நமது நம்பிக்கை மற்றும் மரபுகளின் தெய்வீக விழாவாகும்; உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

ராமரின் எல்லையற்ற கருணை மற்றும் ஆசீர்வாதங்களுடன், எண்ணற்ற ராம பக்தர்களின் ஐந்து நூற்றாண்டு பழமையான உறுதிமொழி நனவாகியுள்ளது. இன்று, ராமர் தனது அற்புதமான இல்லத்தில் மறுபிறவி எடுத்துள்ளார். கடந்த மாதம் அயோத்தியில் காவிக்கொடியை நிறுவும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்.

ஒவ்வொருவரின் இதயங்களிலும் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் இரக்க உணர்வை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். இது ஒரு வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் மாறும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் ,  லதா யோகேஷும்  வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  பற்றிய முக்கிய அறிவிப்பு .

எல்லோரும் நீண்ட பொங்கல் விடுமுறைக்குச் செல்வதால்

அடுத்த நிகழ்ச்சி பற்றிய செய்தியை FACEBOOK மற்றும் YOU TUBE  வழியாக பின்னர் அறிவிப்போம் .

மீண்டும் ஞான மயம் குழு உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும்

தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது .

நன்றி; வணக்கம்

–Subham—

Tags- Gnanamayam, News Broadcast, 4-1-2026

ஆலயம் அறிவோம் !திரு ஆலங்காடு! (Post.15,332)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan Chitra Nagarajan

Post No. 15,332

Date uploaded in London – –  5 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-1-2026 ஞாயிறு அன்று ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற உரை

ஆலயம் அறிவோம்

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே

   ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே

நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே

    நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே

கொன்று ஆடும் கூற்றை உதைத்தார் தாமே

    கோலப் பழனை உடையார் தாமே

சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே

     திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

–    திருநாவுக்கரசர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள திரு ஆலங்காடு திருத்தலமாகும். இது சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இறைவர் : வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர்,  ஊர்த்த தாண்டவர்

இறைவி : பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி

தீர்த்தம்: சென்றாடு தீர்த்தம் (செங்கச்சி உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), முத்தி தீர்த்தம்

தல விருட்சம் : ஆல மரம், பலா மரம்

ஆலமரக்காடாக இருந்த இந்தப் பகுதியில் இறைவன் ஸ்வயம்புவாகத் தோன்றி நடனமாடியபடியால் இறைவன் வட ஆரண்யேஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடமாக அமைகிறது.

நடராஜப் பெருமான் நித்தமும் நடனமாடும் ஐந்து அம்பலங்களில் இது ரத்தின சபை ஆகும்.

ஏனைய நான்கு சபைகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் – பொன்னம்பலம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் – வெள்ளியம்பலம்

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் – தாமிர அம்பலம்

குற்றாலநாதர் கோவில் – சித்திர அம்பலம்

இந்தத் தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள இந்தக் காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் சொல்லொணா துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் வருத்தமடைந்த தேவர்கள் சிவ, பார்வதியிடம் சென்று முறையிட்டனர்.  பார்வதி தேவி தனது பார்வையால் காளி தேவியைத் தோற்றுவித்தாள். காளி தேவி அரக்கர்களை அழித்தாள். அவளையே தேவி ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள்.

அரக்கர்களின் ரத்தத்தைக் குடித்த காளி பல கோரச் செயல்களைச் செய்யவே, முஞ்சிகேச கார்க்கோடக முனிவர் சிவனிடம் சென்று முறையிட்டார். உடனே சிவபிரான் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரைக் கண்ட காளி, “என்னுடன் நீ நடனமாடி வெற்றி பெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்” என்றாள்.

சிவன் உடனே ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார். அப்போது அவர் தன் காதில் இருந்த மணியைக் கீழே விழவைத்து, பின் அதைத் தன் இடதுகால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இது போல் தன்னால் தாண்டவம் ஆட முடியாது என்று  காளி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். உடனே இறைவன் அவள் முன் தோன்றி, “என்னையன்றி உனக்குச் சமமானவர் யாரும் கிடையாது. இத்தலத்தில் முதலில் உன்னை வழிபட்ட பின்னரே பக்தர்கள் என்னை வழிபட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு முழுப்பலன் கிடைக்கும் என்று கூறி அருளினார். அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறாள்.

இத்தலத்தில் கார்க்கோடகன், சுநந்த முனிவர், பரண தேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் உள்ளிட்ட பல பெரியோர் வழிபட்டுள்ளனர்.

நடனக்கலையில் தேர்ச்சி பெற விரும்புவோர் வழிபட வேண்டிய தலம் இது. கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கவும் இத்தலத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது.

மார்கழி மாதம் திருவாதிரைத் திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து இறைவனை தரிசித்த தலம் இது. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி ஆகும். அவரை சிவபிரான் அம்மையே என்று அழைத்ததால் அவர் காரைக்கால் அம்மையார் என்ற பெயரைப் பெற்றார்.

அவர் வரலாற்றைக் கூறும் சேக்கிழார் பிரான்,

“இறவாத இன்ப அன்பு வேண்டி, பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்”

என்று பாடுகின்றார்.

அவர் சிவபிரானை வழிபட்டவுடன் சிவபிரான் தனது இடதுகாலைத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். தலைக்கு மேலே காலைத் தூக்கி ஆடுவது ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். அவரின் திருவடியின் கீழிருந்து காரைக்கால் அம்மையார் சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலமாகும் இது.

அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணி மாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவை பதினோராந் திருமுறையில் உள்ளன.

காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த தலம் இது என்பதால் இத்தலத்தில் கால் பதிக்க அஞ்சிய திருஞானசம்பந்தர் வெளியில் ஓரிடத்தில் தங்கி இரவு உறங்கலானார். அப்போது அவர் கனவில் வந்த ஆலங்காட்டான். “நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு” என்று கேட்க அடுத்த நாள் தலத்துக்கு வந்து கோவிலுள் சென்று இறைவன் மீது பதிகம் பாடி வணங்கி வழிபட்டார் திருஞானசம்பந்தர்.

இத்தலத்தில்  திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் பதிகங்கள் பாடி அருளியுள்ளனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வடாரண்யேஸ்வரரும், வண்டார்குழலியும்

அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

**

ENJOY YOUR HOLIDAYS IN 2026

“TO STRIVE, TO SEEK, TO FIND, AND NOT TO YIELD”: ULYSSES AS SIREN IN TENNYSON’S POEM

We will meet again after the Holidays.

From

tamilandvedas.com and swamiindology.blogspot.com

புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்

–Subham–

Enjoy New Year and Pongal Holidays!


Enjoy New Year and Pongal Holidays!

We will meet again after the Holidays.

From

tamilandvedas.com and swamiindology.blogspot.comA white cow and pot of food

AI-generated content may be incorrect.

புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்

–Subham–

Interesting Titbits from Tamil Vaishnavite Alvar Poems (Post No.15,331)

Written by London Swaminathan

Post No. 15,331

Date uploaded in London –  1 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Twelve Vaishnavite Tamil saints are called Alvars (aalvaar). Most of them lived 1200 years ago, a few of them even earlier.  4000 poems on Lord Vishnu and his Ten Avatars sung by them are compiled in the book called Divya Prabandham. Here is some interesting information about secular subjects and religious matters. (Translation of poems by Kausalya Hart are taken from Project Maduri)

Solar Eclipse in Mahabharata

(original poem is in Tamil)

335. If you want to see the young son of Devaki,
Kaṇṇan, the lord who hid the light of the sun with his discus
for thirty nalihais, made enemy kings wait and conquered them,
go to the people who saw him drive the chariot for Arjuna
when Arjuna fought and killed Jayathratha in the Bharatha war.

This episode is actually about solar eclipse happened 3000 years ago. The battle was fought on alternate days.

****

Space Travel

70. You listened to the words of the strong cowherds,
fought and controlled seven strong bulls
and married the dark-haired Nappinnai, lovely as a peacock.
You went on a bright shining chariot,
searched for the lost children,

found them and brought them back to their mother.
O dear one, shake your head and crawl for me once.
You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

This poem says that they went in a space shuttle and returned in a moment


403. The Thiruppadi of the lord
who brought the four children of his guru
back to life quickly

when they could not be alive as soon as they were born
is Srirangam where good Vediyars
skilled the Vedas live,
making sacrifices with fire
and receiving guests happily.

Tamil Word in the poem is IRAIP POZUTHU which means a moment

Periyalvar and Nammalvar sang about this space travel.

Commentators added Muhurta and the meaning of Muhurta in ancient days was different from today. Now it means 48 minutes. But in Rig Veda it meant a moment

Sanskrit dictionary  (From Wisdomlib.org)

Muhūrta (मुहूर्त).—[hurch-kta dhātoḥ pūrvaṃ muṭ ca Tv.]

1) A moment, any short portion of time, an instant; नवाम्बुदानीकमुहूर्त- लाञ्छने (navāmbudānīkamuhūrta- lāñchane) R.3.53; संध्याभ्ररेखेव मुहूर्तरागाः (saṃdhyābhrarekheva muhūrtarāgāḥ) Pañcatantra (Bombay) 1.194; Meghadūta 19; Kumārasambhava 7.5.

2) A period, time (auspicious or otherwise).

3) A period of 48 minutes.

-rtaḥ An astrologer.

Derivable forms: muhūrtaḥ (मुहूर्तः), muhūrtam (मुहूर्तम्).

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Muhūrta (मुहूर्त).—i. e. muhur + ta, I. m. and n. 1. A moment, [Rāmāyaṇa] 3, 50, 6; some time, [Vikramorvaśī, (ed. Bollensen.)] 40, 4 (paraṃ muhūrtāt, After some time, not yet). 2. The thirtieth part of a day and night, or forty-eight minutes. Ii. m. An astrologer.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Benfey Sanskrit-English Dictionary

Muhūrta (मुहूर्त).—[masculine] [neuter] moment, instant; hour ( = 1/30 day); [instrumental] & [ablative] in a moment, after a little while, immediately, directly.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Muhūrta (मुहूर्त) as mentioned in Aufrecht’s Catalogus Catalogorum:—jy. See Muhūrta (मुहूर्त):—[from muh] a m. n. a moment, instant, any short space of time, [Ṛg-veda] etc. etc. ([in the beginning of a compound], in a moment; tena ind. after an instant, presently)

***

Numbers in Periyalvar Poems


Who is God? What is God? What is the nature of God?

752. You are five things—taste, light, touch, sound and smell in earth.
You are four things—taste, light, feeling of touch, and sound in water.
You are three things—taste, light and heat in fire.
You are two things—the touch and the sound of the wind.
You are the unique ancient one.
You are many things on the earth.
You are the dark-colored one.
Who has the power to know who you are?

This is pure science. This deals with Big Bang to Evolution of earth and living beings.

***

753. You are the six actions—
learning, teaching, performing sacrifices,
making others perform sacrifices, giving and receiving.
You are worshipped by the fifteen sacrifices.
You are the beautiful two—wisdom and renunciation,
and the three devotions, devotion for god,
the devotion that gives knowledge to know god,
and the highest devotion that gives moksha.
You are the seven and six and eight.
You are many wisdoms,
the true and the false.
You are taste, light, touch, sound and smell.
You, Māyan, are everything on earth
yet who can see you?

Number 24

754. You are the chief of the twenty-four philosophies,
the five elements water, land, fire, wind and the sky,
the five sense organs, body, mouth, eyes, nose and ears,
the five organs of action, mouth, legs, hands, the unclean organs,
the five senses, taste, sight, hearing, smell and touch
and the four organs of knowledge,
mind, ego, knowledge, and ignorance.
You who stay in the sky are all these and more.
O Māyan, who can see you?

Number 33+5+16

755. You are the thirty-three Sanskrit sounds.
You are the five consonants,
and the sixteen vowels.
You are the lord of the five special sounds in Tamil
and the mantra with twelve sounds,
“Om namo bhagavate Vāsudevāya.”
You are the three faultless lights—the sun, the moon and the stars.
You have entered my heart—why, O my lord?

****

766. You are the four Vedas, the Six Angas (ancillary subjects)
and their meaning.
You, the precious one
rest on the wide ocean on many-headed Adishesha.
Aren’t you the one with a white conch and the Sarngam bow?

****

You are Three in One- Echo of Kalidasa

World famous Indian poet Kalidasa wrote that all the Three Gods Brahma, Vishnu and Siva are one entity. They are seen in different angles. This is echoed by Saivite and Vaishnavite Poets in many hymns.

768. You are unique,
but you, limitless, are also the three gods,
Shiva, Vishnu and Nānmuhan, and the four gods.
You who rest on Adishesha on the wide ocean
are the source of good karma,
and give joy and goodness to all.
No one can comprehend your form.
How can you, the ancient god,
come to the world in human form?

****

Numbers 7 8 9 10

865. O heart, if you want to remove the eight bad thoughts
and live without fault and reach moksha and rule the world,
you must think and worship the feet of the god, our father,
who is wisdom, the sun, and the world,
who took the form of a single-tusked boar and split open the earth.

828. The ancient lord is eight and eight and eight,
he is seven and seven and seven,
and he is eight and three and one.
Devotees worshiping with the eight letter mantra,
“Om namo Nārāyaṇāya,” will go to heaven and rule there.

829. If people love him tirelessly
and think of him always in their minds,
reciting the eight-letter mantra with love
and worshiping the beautiful ankleted feet
of the god who rests on the snake bed on the ocean,
they will go to heaven and rule there.

830. He is the ten directions,
the soul of the ten guardians of the directions,
the nine notes of music, the nine rasas of dance
and he, the ancient and the most powerful one,
came to this world in ten avatharams.
Only if devotees worship him with devotion
will they reach moksha.

***

Asuras Destroyed by Vishnu

858. You destroyed the angry king of Kasi,
Vakkaran, Pavuṇḍran, the furious Maliman,
Sumali, Kesi and Thenugan.
I will not give my love and affection to anyone,
only to your anklet-adorned feet.

***

810. You, a hero, bent your bow,
killed the Asurans Vakkaran, Karan and Muran
and sent their heads to Yama.
You, a cowherd, stay in flourishing Kuḍandai
with ponds and blooming groves
and rich fields protected by many fences.

—subham—

Tags- Interesting Titbits, Tamil Vaishnavite Alvar Poems, Space travel, Numbers, three gods

GNANAMAYAM 4th January 2026 BROADCAST PROGRAMME

GNANAMAYAM 4th January 2026 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time.

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayanthi Sundar Team- Ms Rajeswari Santhanasivam.

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Mrs Brahnanayaki Sathyanarayanan  from Bangalore

Topic- Thiruvalankadu Temple, Famous Siva Shrine. 

****

SPECIAL EVENT-

Periya Puranam Talk

by T R Ramesh

(Son of Sekkizar Adippodi Dr T N Ramachandran, Thanjavur)

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 4th January 2026

நேரில் காணலாம்கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்- திருமதி ராஜேஸ்வரி சந்தான சிவம்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும்லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

திருமதி பிரஹந்நாயகி சத்தியநாராயணன்பெங்களுர்

தலைப்பு — திருவாலங்காடு கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பெரியபுராண தொடர் சொற்பொழிவு

திரு  T R ரமேஷ் அவர்கள்

(சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் T N ராமச்சந்திரன்  அவர்களின் புதல்வர்)

—subham—

Tags-Gnanamayam Broadcast, 4-1-2026, programme

London Swaminathan’s Article Index for December 2025 Index No.157 (Post No.15,330)



London Swaminathan in 10 Downing Street, London

Written by London Swaminathan

Post No. 15,330

Date uploaded in London –  1 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ancient Tamil Encyclopaedia -Part 37; One Thousand Interesting Facts -Part 37 (Post No.15,232) 1/12/25

To

Ancient Tamil Encyclopaedia -Part 40; One Thousand Interesting Facts -Part 40  (Post.15,256) 9/12

***

Purananuru (Tamil Sangam Book) Wonders- 1 (Post No.15,270) 13/12

Purananuru (Tamil Sangam Book) wonders -2; Upanishad and Kalidasa in verse Two! (Post.15,278) 16/12

Purananuru (Tamil Sangam Book) wonders -3 (Post No.15,291) 20/12

Purananuru Wonders 4- Ancient Tamil EncyclopaediaPart 44 (Post.15,300) 23/12

Purananuru Wonders 5- Ancient Tamil Encyclopaedia Part 45 (Post No.15,314)27/12

***

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-22; இந்துமத கலைச்சொல் அகராதி-22 (Post No.15,235)

To

23,24, 25, 26, 27

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-28; இந்துமத கலைச்சொல் அகராதி-28  (Post No.15,317) 28/12

***

Hinduism through 500 Pictures in Tamil and English-29; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 29 (2/12)

To

30,31,32, 33, 34,35,36

Hinduism through 500 Pictures in Tamil and English-37; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-36 (Post.15,324) 30/12

***

Music is a universal language: Alvar and Nayanmar proved it! (Post No.15,241) 4/12

Tamil Writer Jeyamohan plans Two Conferences in the West to bring together South Indian Writers (Post.15,250)7/12

Beautiful Names for Girls from Lalitha Sahasranamam (Post No.15,275) 15/12

Vaishnavite Saint’s Warning about Naming Children!(Post No.15,269) 13/12

Who coined the words, Bhava Sagaram? and Samsara Sagaram? (Post No.15,260) 10/12

Tamil Poet Arunagirinathar used History sheeter in his poems! (Post No.15,282) 17/12

List of Eleven Gundas/ Rowdies who fall into Hell: Arunagirinathar (Post.15,263) 11/12

London Swaminathan’s Article Index for November 2025 Index No.156  (Post No.15,237) 3/12

GNANAMAYAM 7 December 2025 BROADCAST PROGRAMME

7,14,21,28/12

January 2026 Calendar- Adi Shankara’s Q and A (Last Part ) – Post No.15,310 (26/12)

***

NEWSPAPER ITEMS

Hindu God of Environment 8/12

Who is Vedamurti Devavrat Mahesh Rekhe? 19-Year-Old Vedic Scholar whom PM Modi praised for… 2/12

***

TAMIL ARTICLES

London Swaminathan in Stonehenge, England, UK

‘அகர முதல் 51 அக்ஷரம்’ :அருணகிரி தரும் சுவையான செய்திகள் (Post.15,303) 24/12

ஆண்டாளைத் தோற்கடித்த சம்பந்தர்!  தாவர இயலில் முதல் பரிசு யாருக்கு? (Post.15,290)20/12

கடவுளிடம் அருணகிரிநாதர், பாரதி வள்ளலார் கேட்டது என்ன,என்ன?(Post.15,287)19/12

கண்ட பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டாதீர்கள்: பெரியாழ்வார் எச்சரிக்கை (Post.15,268) 13/12
பகவத் கீதையிலிருந்து உத்வேகம் பெற்ற வள்ளுவர்! பிறவிப் பெருங்கடல்/சம்சார சாகரம்!! (Post.15,259) 10/12

தந்த உலக்கையும், உரலில் ரத்தினைக் கற்களும்! அருணகிரிநாதர் காட்டும் காட்சி!! (Post.15,272) 14/12

திருப்புகழில் தொல்காப்பிய பொருள் அதிகாரம்? (Post No.15,306)25/12

திருப்புகழில் மெட்றாஸ்காரன் வசவு- கஸ்மாலம் (Post No.15,257)9/12

திருப்புகழ் பாடலில் ரிஷி, முனிவர்கள்!

ஒரே பாட்டில் ஐந்து பெரியோர்கள்!! (Post.15238)3/12

நாயாகப் பிறக்கும் 11 துஷ்டர்கள்; திருப்புகழ் சொல்லும் அதிசய விஷயம்! (Post.15,281)17/12

பதினோரு குண்டர்கள் யார்? அருணகிரி நாதர் பட்டியல் !! (Post .15,265) 12/12

பாரதியும், லலிதா சஹஸ்ர நாமமும்! (Post No.15,262) 11/12

பெரியாழ்வார் கோபமும் கிண்டலும் (Post.15,249) 7/12

மனு நீதி சாஸ்திரம் பற்றி அருணகிரிநாதர் தரும் புதிய தகவல்! (Post No.15,301) 21/12

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் திருவள்ளுவன்! (Post No.15,293) 21/12

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்: பெரியாழ்வார், எம் ஜி ஆர் , அருணகிரிநாதர் பாடல்கள்! (Post.15,277)16/12

மந்திரத் தகடுகள் பற்றி அருணகிரி எச்சரிக்கை (Post No.15,311) 26/12

ஜனவரி காலண்டர் 2026- ஆதி சங்கரரின் பொன்மொழிகள் (Post.15,309) 26/12/2025

வள்ளுவரைத் தோற்கடித்தார் அருணகிரி! தமிழிலேயே பெரிய எண் நூறு லக்ஷம்கோடி! (Post.15,313) 27/12

திருப்புகழில் பத்திரிகை பெயர்கள்: தினமணி , தினகரன்,  குமுதம்,  தந்தி, மலர்! (Post No.15,316) 28/12

சம்ஸ்க்ருதத்தில் ‘ழ’ கரம் உண்டு -பெளழியம் (Post 15,323) 30/12

திருப்புகழில் இலக்கணம், இலக்கியம், அகத்தியர் ! (Post No.15,326) 31/12/25

Gnanamayam 28-12-2025 Picture

—subham—

Tags- London Swaminathan’s Article Index for December 2025 Index No.157 

S Nagarajan Articles index for DECEMBER 2025 (Post No.15,329)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,329

Date uploaded in London – 1 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Articles index DECEMBER 2025

1-12-25 15231 S Nagarajan Articles index NOVEMBER 2025 

2-12-25 15233 அபாயமான தீவிரவாதிகளின்  கூட்டம்! ஹிந்துக்களுக்கு

                                விழிப்புணர்வு தேவை – 2

3-12-25 15236 அபாயமான தீவிரவாதிகளின்  கூட்டம்! ஹிந்துக்களுக்கு

                                விழிப்புணர்வு தேவை – 2

4-12-25 15239 விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய புரட்சி! ஆர்டிபிஷியல்

            அஸ்ட்ரானட்ஸ் இனி பறப்பார்கள்!! (கல்கிஆன்லைன்

            கட்டுரை)

5-12-25 15242 அபாயமான தீவிரவாதிகளின்  கூட்டம்! ஹிந்துக்களுக்கு

                                விழிப்புணர்வு தேவை – 3

6-12-25 15245 மூளை இயக்கம் ஊக்கம் பெற சில சின்ன வழிகள் (16-9-25

            கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை)

7-12-25 15248 வாகரேவாரேவா!   (WHAKAREWAREWA) – உலகின் அதிசய

              வெந்நீர் ஊற்றுக்களும், புவி வெப்ப ஊற்றுக்களும்!  

              (கல்கி ஆன் லைன் 18-9-25 கட்டுரை)

8-12-25 15251 மூளைக்கும் பிரார்த்தனைக்கும் உள்ள தொடர்பை

            நிரூபித்து பிரசாரம் செய்யும் அதிசய டாக்டர் ஆர்லீன்

            டெய்லர்!  (கல்கி ஆன் லைன் 22-9-25 கட்டுரை)

8-12-25 15252 ஆலயம் அறிவோம்! கீழ் வேளூர் தலம்!! (ஞானமயம்

            7-12-25 ஒளிபரப்பு உரை)

9-12-25 15255 சித்தர்களின் அஷ்டமா சித்திகள்! நிஜமாகவே

           சாத்தியமா? பிரெஞ்சுக்காரர் நேரில் கண்ட அற்புதம்! (3-10-25

           கல்கிஆன்லைன் கட்டுரை)

10-12-25 15258 அமரர் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி!

11-12-25 15261 மகாகவி பாரதியார் – சில கருத்துக்கள்!

12-12-25 15265 உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக்க மிஸோகி (24-9-25

              கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

13-12-25 15267 சமீபத்திலே ஏதாவது டீ கேட்டயா? க்ளாக் இட்! (19-9-25

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

14-12-25 15271 விண்வெளி அதிர்ச்சியும் ஆச்சரியமும்! (27-9-25

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

15-12-25 15272 ஊத்துக்காடு வேங்கடகவி! (14-12-25 ஞானமயம்

             நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை)

15-12-25 15273 ஆலயம் அறிவோம்! மதுரை கூடலழகர் பெருமாள்

             கோவில் (14-12-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான

              உரை)

16-12-25 15276 AI -இந்த வார ட்ரெண்டிங் டாபிக்ஸ் என்ன? (25-9-25

              கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!)

17-12-25 15279 ரிஷியின் விலை மதிப்பு எவ்வளவு? ஶ்ரீ சத்யசாயிபாபா

            கூறிய. கதை (810-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான

            கட்டுரை!)

18-12-25 15283 டைட்டானிக் விபத்தும் அது பற்றி எடுக்கப்பட்ட

             படத்திற்கு ஏற்பட்ட விபத்தும்! (249-25 கல்கிஆன்லைன்

             இதழில் வெளியான கட்டுரை!)

19-12-25 15286 சுனேய் பூலோ (SUNGEI BULOH WETLAND RESERVE)  சதுப்பு

             நிலம்  – சிங்கப்பூர் அதிசயம்! (7-10-25 கல்கிஆன்லைன்

            இதழில் வெளியான கட்டுரை!)

20-12-25 15289 ஜாக்கிரதை! பரபரப்பு செய்யும் மாய வேலைகள்!!

21-12-25 15292 மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள் – 1

21-12-25 15295 ஆலயம் அறிவோம் – திருவல்லம் (ஞானமயம் 21-12-25

            ஒளிபரப்பு உரை)

22-12-25 15296 மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள் – 2

23-12-25 15299 ஷீர்டி சாயிபாபாவுக்கு வந்த கோர்ட் சம்மன்! (4-10-25

             கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!)

24-12-25 15302 வெற்றிக்கான இருபது குணங்களைக் காட்டும்

            சிங்கம், கொக்கு, சேவல்,காக்கை, நாய், கழுதை!

25-12-25 15305 ஒரு காலை இழந்த மங்கை எவரெஸ்ட் சிகரம் ஏறிப்

             படைத்த சாதனை! (6-10-25 கல்கிஆன்லைன் இதழ்

             கட்டுரை)

26-12-25 15308 தமிழர் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் (31-10-25 

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

27-12-25 15312 விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா? (9-10-25 

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

28-12-25 15315 இதய வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர்

              ஊற்றுக்கள்!           (PAMUKKALE SPRINGS) (14-10-25           

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

29-12-25 15318 ஆலயம் அறிவோம் – திருநீர்மலை (ஞானமயம் 28-12-25

            நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை)

29-12-25 15319 பரமஹம்ஸ யோகானந்தா (ஞானமயம் 28-12-25 அன்று

             இடம் பெற்ற உரை)

30-12-25 15322 ஒரு கடிதம் புதுப்பித்த மூளை (டிசம்பர் 2025 ஹெல்த்கேர்

             இதழில் வெளியான கட்டுரை)

31-12-25 15325 மலேரியாவுக்கான மருந்து குயினைன் ஒரு தற்செயல்

             கண்டுபிடிப்பு தான்! (14-10-25 கல்கிஆன்லைன் இதழ்

              கட்டுரை)

***

தலையைச் சிரைக்கும் தண்டனைகள்: ஆழ்வார் தரும் சுவையான செய்தி (Post.15,328)

Written by London Swaminathan

Post No. 15,328

Date uploaded in London –  1 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆண்களிடம் பெண்கள் சேட்டை செய்தால் மூக்கினை அறுத்து விடுவார்கள் ; எடுத்துக் காட்டு- சூர்ப்பனகை கதை.. பெண்களிடம் ஆண்கள் , சேட்டை செய்தால் உடம்பு முழுதும் அசிங்கமான குறிகளை பச்சை குத்தி விடுவார்கள்; உதாரணம் – இந்திரன் உடம்பில் ஆயிரம் கண்கள் – கண்ணாயிரம் .

பொதுவான சேட்டைகளுக்கு தலையைச் சிரைத்து மொட்டையடித்து எண்ணெய் தடவி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுத்தை மீது வைத்து ஊர்வலம் விடுவார்கள்; எடுத்துக்காட்டு  – சேர மன்னன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், யவனர்களைப்பிடித்து மொட்டையடித்து கைகளைப் பின்னால் கட்டி எண்ணெய் தடவினான் ; இது பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் உளது

****

3.9.3 உருப்பிணி நங்கையைத் தேர்

உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு,

விருப்புற்று அங்கே விரைந்து எதிர் வந்து,

 செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்

சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற

தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.

பெரியாழ்வார் திருமொழி 3.9.3

ருக்மிணிப்பிராட்டியை தேரிலே ஏற்றிக்கொண்டு போகும்பொது, எதிர் நின்ற ருக்மனுடைய வீரியம் அழியும்படி தலையைச் சிரைத்து விட்டவனுடைய வன்மையை பாடிப்பற, தேவகி வயிற்றில் பிறந்து சிங்கம் போன்ற வீரம்   உடையவனை பாடிப்பற

விதர்ப்ப தேசத்தில் குண்டினி என்கிற பட்டணத்தில் பீஷ்மகன் என்கிற ஒரு அரசனுக்கு ருக்மன் முதலிய ஐந்து பிள்ளைகளும் ருக்மிணி என்கிற ஒரு பெண்ணும் இருந்தனர். அந்த ருக்மிணி ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம்; அவள் திருமண வயது வந்தவுடன், கண்ணன் அங்கு சென்று இந்த பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டான்; ருக்மன் என்ற அவளது சகோதரன் அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணனுக்குக் கொடுக்க முடியாதென்று சொன்னான். சிலநாள் கழிந்தபின் ருக்மிணியின் கல்யாணத்துக்காக சுயம்வரம் என்று முடிவு செய்து எல்லா தேசத்து அரசர்களையும் வரவழைத்தான்.

இதன் இடையில் ருக்மிணி “தன்னை எவ்வகையினாலும் மணந்து செல்லும்படி கண்ணனிடத்து ஒர் அந்தணனைத் தூது விட்டிருந்தாள். கண்ணனும் அப்படியே பலராமன் முதலியோரைக் கூட்டிக் கொண்டு அந்த பட்டணத்திற்கு எழுந்தருளினான். கல்யாண முஹுர்த்த தினத்துக்கு முதல்நாள் ருக்மிணியைத் எடுத்துத் தேரில் ஏற்றிக் கொண்டு ஊர் நோக்கிப் புறப்பட்டான். சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை எதிர்த்துப் போர் செய்ய முயல பலராமனும் தானுமாக அவர்களை அடக்கி வென்று ஓட்டி விட்டான்.

பின்பு ருக்மிணியின் தமையனான ருக்மன் மிகவும் ஆத்திரப்பட்டு கண்ணனைக் கொல்ல வந்தபோது, அவனைக் கண்ணன் ருக்மினியின் வேண்டுதலின் படி உயிர்க் கொலை செய்யாமல் அவனது மீசையையும், குடுமியையும் சிரைத்து  அவமானப் படுத்திவிட்டான்

My Old Article

மொட்டையும் குடுமியும்

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண். 835 தேதி 12-02-14

ஆதி காலத்தில் இந்து, புத்த, சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடுடையோர் வெளிச் சின்னங்கள் மூலம் அதைக் காட்டினர். காவி உடை, மஞ்சள் உடை, வெள்ளாடை இப்படி வெளிப்புறத்திலும் நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம், கோபி, நாமம் இப்படிப் பல சின்னங்களாலும் யார் என்பதைக் காட்டினர். இது போலவே தலை முடி விஷயத்திலும் பல பாணிகள் (ஸ்டைல்) நிலவின. முன் குடுமி, பின் குடுமி, மொட்டை (பௌத்தர்), மயிர் ஒவ்வொன்றாக பறித்து மொட்டையாகுதல் (சமணர்) என்று பல வகைகள் இருந்தன. முற்றிலும் உணர்ந்த ஞானிகள் இந்த வெளி வேஷத்தைப் பொருட்படுத்தாமல் தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைத்தனர். ஏனெனில் காலப்போக்கில் இது எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகளுக்கு வசதியாகப் போயின.

வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.

***

1400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மஹேந்திர பல்லவ மன்னன் சம்ஸ்கிருதத்தில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இருக்கிறான். மத்தவிலாசப்ரஹசனம் என்ற அந்த நாடகத்தில் இந்து, புத்த, ஜைன (சமண) மத போலி சந்யாசிகளைக் கிண்டல் செய்துள்ளான். சங்க்ரரின் பஜகோவிந்தத்தில் சொல்லும் விஷயம், மஹேந்திர வர்மன் நேரில் கண்ட காட்சியுடன் இணைகிறது!

முடி விஷயத்தில் பல வகையான ‘ஸ்டைல்கள்’ வேத காலம் முதலே இருந்திருக்கின்றன. ஏதோ இந்தக் காலத்தில் ரவிவர்மா வரைந்த படங்களில்தான் சிவனுக்கு மீசை, விஷ்ணுவுக்கு மீசை இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். சிவபெருமானை வருணிக்கும் யஜூர் வேத ருத்ரம்/சமகத்தில் சிவனை மொட்டையன் என்றும் நீண்ட சடையன் என்றும் போற்றுகின்றனர்.

நீண்ட சடையன் (கபர்தீன்)

வ்யுப்தகேச (முண்டம்/ மழித்த) – ருத்ரம் (யஜூர் வேதம்)

வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்ற தமிழ்ப் பழமொழி இந்த ருத்ர மந்திரத்தில் இருந்துதான் வந்ததோ என்னவோ!

***

வள்ளுவர் கூறுகிறார்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.

***

சங்கரரும் சாடுகிறார் 

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :

காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :

பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:

ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”

—பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.

***

திருமூலரின் திருமந்திரம் 

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ

நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

நூலது அந்தணர் காணும் நுவலிலே

பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.

புத்தர் பேருரை

நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்.

புத்தரும் தனது மதத்தினரின் வெளி வேஷங்களை அபோழுதே கண்டித்துள்ளார். அவரது மதம் எப்படித் தேய்ந்துபோகும் என்பதை அவர் பிரதம சீடரான ஆனந்தனுடன் நடத்திய சம்பாஷணையில் கூறினார். அவர் இறந்தவுடன் நடந்த மூன்று மஹா நாடுகளில் வாதப் பிரதிவாதங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களைக் கட்டாயம் புத்த மதத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆனந்தன் மன்றாடியபோது, 1000 ஆண்டுகள் நிலைக்கக்கூடிய என்னுடைய மதம், பெண்களை (புத்த பிட்சுணிகளாக) அனுமதித்தால், 500 ஆண்டுகளே இருக்கும் என்றார் புத்த பிரான்

—Subham—

Tags- தலை, சிரைக்கும், தண்டனைகள், ஆழ்வார் தரும் சுவையான செய்தி