அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)

Written by London Swaminathan

Post No. 15,398

Date uploaded in Sydney, Australia –  6 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part-12

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 12

ஆயி சுந்தரி,  போக அந்தரி, ஆதி அம்பிகை!

ஆயி சுந்தரி நீலி பிங்கலை … அனைவருக்கும் தாய், அழகி, பச்சை

நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள்,

போக அந்தரி சூலி குண்டலி … உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும்

ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி,

ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் … ஆதி முதல்வி,

அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும்,

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச … ஆலகால விஷத்தை உண்ட

சிவபெருமான் வணங்கி வேண்ட,

ஓர் போதகம் தனையே உகந்து அருள் … ஒப்பற்ற ஞான

உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே),

ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே. … திருவாவினன்குடி

என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.

***

சுவாமிமலையில் அருணகிரிநாதர் போட்ட ஸலாம் !

அவாமருவு இ(ன்)னா … ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம்

விளைவதற்கு வசுதை … மண்ணாசையும்,

காணுமடவாரெனும் … விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம்.

அவார்கனலில் வாழ்வென்றுணராதே … அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல்

அராநுகர வாதையுறு தேரைகதி … பாம்பின் வாயில் அகப்பட்டு

துன்பமுறு தவளையின் கதி அடைந்த

நாடும் அறிவாகி … அந்நிலையிலும் இன்பத்தை நாடும்

அறிவுடையவனாகி

உளம் மால்கொண்டு அதனாலே … உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக

சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத … சிவாய என்ற

திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத

திமிர ஆகரனை … அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள

அடியேனை,

வாவென்று அருள்வாயே … உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக.

திரோத மலமாறும் அடியார்கள் … உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும்,

அருமாதவர் தியானமுறு … அரிய பெரிய தவ முனிவர்களாலும்

தியானம் செய்யப்படும்

பாதந் தருவாயே … உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.

உவா இனிய கானுவில் நிலாவும் … இளமை மிகுந்து, இனிய

கானகத்தில் ஒளிவீசித் திரியும்

மயில்வாகனம் … மயிலை வாகனமாகக் கொண்டு,

உலாசமுடன் ஏறுங் கழலோனே … அதன்மீது குதூகலத்துடன்

ஏறும் வீரக் கழலோனே,

உலா உதயபாநு சதகோடி உருவான … வானில் உலாவும் உதய

சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல

ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே … ஒளிபடைத்த

அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே,

துவாதச புயாசல … பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை

உடையவனே,

ஷடாநந வரா சிவசுதா … ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே,

சிவனின் சேயே,

எயினர் மான் அன்புடையோனே … வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே,

சுராதிபதி மால் அயனு மாலொடு … தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு

சலாமிடு* … வணக்கம் செய்கின்ற

சுவாமிமலை வாழும் பெருமாளே. … சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே.

* ‘சலாம்’ என்ற முகம்மதியர்களின் உருதுச் சொல்லை இங்கு

சுவாமிகள் பயன்படுத்துகிறார்.

முஸ்லிம்கள் சந்திக்கும்போது  அஸ்ஸலாமு அலைக்கும்‘ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று  சலாம்சொல்லிக்கொள்வார்கள்.

***

பஞ்ச பாதகம்  ஐந்து கொடிய பாவங்கள் எவை ?

உன் வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக

வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே … உனது தாமரை போன்ற

அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம்

செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ?

ஈன அதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு

அழிய வென்று … இழிவான மிக்க ஐந்து* மகா பாவங்களையும் செய்த அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு,

வானவர் குல சேனை ஏவல் கொளும் இந்த்ர லோக வசீகர

அலங்க்ருத ஆகர … தேவர்களுடைய சிறந்த சேனையை

ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி

வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே,

பஞ்ச மாபாதகம்

அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:

அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்

கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்

தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்

மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-

பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:

மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:

பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்

சுராபானம்- மது பானம் அருந்தல்

ஸ்தேயம்- திருடல்

குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்

சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்

***

ராவணன் மஹா பாவி !

கொடுநெடு நாவாய்செல் கடலடைத்து … பெரும் கப்பல்கள்

செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து,

ஏறி நிலைமை யிலங்கைசாய … அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி,

நாலாறு மணிமுடிப் பாவி தனை … பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை

அடு சீராமன் மருக … வதைத்த ஸ்ரீராமனின் மருகனே,

***

அருணகிரி அத்வைதப் பிரியர் ! மலரும் மணமும் உவமை!!

இருவினை புனைந்து … அடியேன் அரும் பெரும் செயலாகிய சிவ யோகத்தை மேற்கொண்டு,

ஞான விழிமுனை திறந்து … அறிவுக் கண்ணாகும் நெற்றியிலுள்ள சுழிமுனை திறக்கப் பெற்று,

நோயினிருவினை யிடைந்து போக … பிறவிப் பிணிக்குக் காரணமான நல்வினை, தீவினை இரண்டும் பிரிந்து ஓடிப்போகவும்,

மலமூட விருளற விளங்கி … ஆணவ மலமாகிய இருள் தேய்ந்து அதனால் மெய்ஞ்ஞான ஒளி வீசவும்,

ஆறு முகமொடு கலந்து … உன் ஆறு திருமுகங்களின்

அருட்பெருக்கில் கலப்புற்று,

இரண்டு பேரும் பேதமிலையென … பரமாத்மாவாகிய நீயும் ஜீவாத்மாவாகிய நானும் இரண்டறக் கலந்து ஒன்றாகி,

அழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து … அழகிய வாசமிக்க மலரும் அதன் நறுமணமும் போல ஒன்றி பேரின்பமுற்று,

தேவர் பணிய விண் மடந்தை பாத மலர்தூவ … தேவர்கள் வணங்கவும், தேவலோக மங்கையர் திருவடிகளில் மலர் தூவவும்,

பரிவுகொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட … மிக்க அன்போடு எண்ணிலாத பல்கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடவும்,

பருமயிலுடன் குலாவி வரவேணும் … பெரிய மயில் வாகனத்தில் ஏறி உல்லாசமுடன் நீ வரவேண்டும்.

***

ஆனந்தக் கண்ணீர் அருவி போல் பெருக வேண்டும்!

என்சித் தமுமனம் உருகிநல் சுருதியின் முறையோடே … என் சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி

சந்தித்து அரஹர சிவசிவ சரணென … உன்னைச் சந்தித்துஹரஹரசிவசிவசரணம் என்று நான்

கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்க … கும்பிட்டுஉன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த,

புளகித மெழஇரு விழிபுனல் குதிபாய … என் உடல் புளகாங்கிதம் அடையஎன் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் குதித்துப் பாய,

சம்பைக் கொடியிடை விபுதையின் அழகுமுன் … மின்னற் கொடி போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே விளங்க,

அந்தத் திருநடமிடு சரண் அழகுற … திரு நடனம் இடும் உன் திருவடிகள் அழகுடன் பொலிய,

சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே … இந்த அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக.

***

சிவ பெருமான் = அருணகிரி சொரூபன்

எங்கணும் திகழ் அருண கிரி சொருபன் … அங்கிங்கு எனாதபடி

எங்கும் விளங்கி, ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும்,

ஆதி அந்தம் அங்கு அறியாத … முதலும் முடிவும் அந்த அருண

கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத

சிவய நம நம சிவய காரணன் … சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின் மூல காரணப் பொருளானவரும்,

சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தைதன் …

(அந்த மந்திரத்தைச் சொன்னால்) ஊறும் ஞான அமுதத்தைத் தந்தருளி நம்மை ஆண்டவருமான எந்தை சிவபெருமானது

திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே …

திரு உருவின் இடது பாகத்தில் இருந்து மகிழும் என் தாயாகிய உமா தேவி அருளிய மகனே,

சுவாமிமலை திருப்புகழ் பாடல்கள் நன்றி திரு கோபால சுந்தரம் @ கெளமாரம்.காம்,

–subham—

Tags– அருணகிரிநாதர் , அரிய செய்திகள் – Part 12, சலாம், அத்வைதம், பஞ்ச பாதகம்,

Leave a comment

Leave a comment