திருப்புகழில் ராகங்கள்! ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை- Part 38 (Post.15,473)

Written by London Swaminathan

Post No. 15,473

Date uploaded in Sydney, Australia –  8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 38

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 38

மதுரையில் நடராஜர் கால் மாறி ஆடிய கதை 

ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்

இறையவர் … அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில்,

வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய ‘இறையனார் அகப் பொருள்’ என்ற நூலுக்கு),

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் …

நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள்

அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக,

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி … தகுதி உள்ள ஊமைப்

பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி,

ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா …

ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக்

கொடுப்பவனே, குரு நாதனே,

முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு

மறைவு செய் … முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு

எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால்

சூரியனை மறைத்து வைத்த

கோபாலராய நேயம் உள திரு மருகோனே … கோபாலர்களுக்கு

அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே,

கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்

வயலியில் … தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,

கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. …

கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும்

வீற்றிருக்கும் பெருமாளே.

ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார்–

– திருவிளையாடல் புராணம்.

** மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக்

கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.— திருவிளையாடல் புராணம்.

*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது..

***

திருப்புகழில் ராகங்கள்

மறை வேள்வி சோமாசிமார் சிவாய நம என மா மாய வீர

கோரமுடன் இகல் சூர் மாள வேலை ஏவும் வயலியில்

இளையோனே … வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே,

கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்

கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை … கூதாளப் பூ,

கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமான ராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும்,

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி

வயல் பயில் கோனாடு சூழ் விராலி மலை உறை

பெருமாளே. … நிரம்ப ஆரல் மீன்களைக் கொத்தும் நாரைகள்

பொருந்திய காட்டாறுகள் பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும்

நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை

நிலாவிரி நிலாமதி நிலாத அநில அசன … சந்திரிகை விரிந்து

ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி

நியாயப ரிபாலஅர … தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்*

நதிசூடி … கங்கைநதியையும் சூடியவரும்,

நிசாசர குலாதிபதி ராவண புயாரிட … அரக்கர் குலத்துக்கு

அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு*3 செய்தவரும்,

நிராமய சரோருக அரன் அருள்பாலா … நோயற்றவரும்,

தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே,

வில் ஆசுகம் வலாரெனும் உலாச இத ஆகவ … வில்லையும்

அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும்

வியாதர்கள் விநோதமகள் மணவாளா … வேடர்களின் அற்புதப்

புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே,

விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை … மேன்மைமிகு

வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும்

விராலிமலைமீதிலுறை பெருமாளே. … விராலிமலையிலும்*4

வாழ்கின்ற பெருமாளே.

 ஆதிசேஷன் சிவபிரானின் ஜடாமுடியில் ஆபரணமாக உள்ளார். அவர் சர்ப்பங்களின் அரசன். நீதியைப் பரிபாலிப்பவர். தனது நீதிவழுவாமை குறித்து  கர்வம் ஏற்பட்டதால் சிவபிரான் ஆதிசேஷனை ஜடையிலிருந்து உருவி தரையில் அடிக்க பாம்பின் தலை ஆயிரம் துண்டங்களாக உடைந்தது. தன் தவறுக்கு வருந்தி சிவனைத் தொழ, ஆதிசேஷன் ஆயிரம் தலைகளுடன்

தோன்றினார் – சிவபுராணம்.

***

திருமால்  சக்ராயுதம்  பெற்ற கதை

 இராகவ இராமன் முன் … ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில்

இராவண இராவண இராவண இராஜன் … அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன்

உட்குடன்மாய் வென்ற … அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட இராகன்மலர் ஆள் … அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய

நிஜ புராணர் குமரா … உண்மை வரலாற்றை* உடைய

சிவபெருமானின் திருக்குமரா,

இராவண இராவண இராவண இராஜன் … அழுகுரல் உடையவனும் , இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன்

திருவீழிமிழலையில் திருமால் சிவனை நாள்தோறும் 1000 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார். திருமாலின் அன்பைச் சோதிக்க, சிவன் ஒருநாள் ஒரு மலரை ஒளித்து மறைக்க, திருமால் குறைந்த மலருக்கு பதிலாக, தாமரை போன்ற தம் கண்ணையே மலராக அர்ச்சித்தபோது, சிவன் திருமாலின் அன்பை மெச்சி சக்ராயுதத்தைப் பரிசாக வழங்கினார் என்பது வரலாறு.

ராவண என்றால் அழும் குரலை உடையவன் என்று பொருள்.

*** 

பத்து வகை தோல் வாத்தியங்கள் !

விராலிமலைக்கு அருணகிரியை முருகனே அழைத்த கதை !

தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத ச(ல்)லிகை

தவில் முரசு கரடிகை மத்தளி தவண்டை அறவைத் தகுணி

துந்துமிகள் மொகுமொகு மொகு என அலற … தபேலா என்ற

ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை. முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்தியவகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள் பேரொலி எழுப்ப,

………………………………………

திருவயலியில் அடிமைய குடிமை இ(ன்)னல் அற மயலொடு

மலம் அற அரிய பெரிய திருப்புகழ் விளம்பு என் முன்

அற்புதம் எழுந்தருள் குக … திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப் பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே*,

விராலி மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி

விதரண முருக சரவண உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட

மய நிருப விமல சுக சொருப பரசிவ குருபர …

…………………..

* ‘ விகட பரிமள ‘ எனத் துவங்கும் ( 917 ) திருப்புகழ் பாடலை அருணகிரியார் வயலூரில் பாட, இறைவன் உவந்து அவர் முன் அற்புதக் கோலத்தோடு எழுந்தருளி அவரது இன்னலை ஒழித்து, ஞானோபதேசம் செய்து விராலி மலைக்கு வா என்று அழைத்தார். இதை, ‘விராலி மாலையில் நிற்பம், நீ கருதி உற்று வா, என அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து ஞானமுதளித்த வாரம் இனி நித்தம் மறவேனே’ என்று வரும் ‘ தாமரையின் மட்டு ‘ ( 911 ) திருப்புகழ் பாடலில் காணலாம்.

விராலிமலை, திருச்சியில் இருந்து  20 மைலில் உள்ளது.

***

திருப்புகழில் விதுரன்

விதுரன் நெடும் த்ரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பு ஆதி

ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரு(ம்) மாள விரவு ஜெயன்

காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும்

பாக தீர்த்தன் மருகோனே … விதுரன் பெரிய வில்லை எடுத்து,

எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய பாணங்களை அதில் ஏற்றி சாமர்த்தியத்துடன் எழுந்து போர் புரிதல் ஓயுமாறு, துரியோதனன் ஆகிய நூறு பேரும் இறக்க உபாயம் செய்த வெற்றி வீரன், துர்க்கை வாழும் இடும்பை வனத்தில் வாசம் செய்த தருமருடைய தூதுவன், திருநீறு இட்டுத் தவம் செய்த அருச்சுனனுடைய பெரிய தேரின் பாகனாகிய பரிசுத்த மூர்த்தி திருமாலின் மருகனே,

***

51 எழுத்துக்களும் (சம்ஸ்க்ருதம்), 18 புராணங்களும்,  அஜபா மந்திரமும்

ஐந்து பூதமும் … மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும்,

ஆறு சமயமு … சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம்,செளரம் என்ற ஆறு சமயங்களும்,

மந்த்ர வேத புராண கலைகளும் … மந்திரங்களும், வேதங்களும்,

புராணங்களும்*, கலைகளும்,

ஐம்பதோர்விதமான லிபிகளும் … ஐம்பத்தொரு விதமான

எழுத்துக்களும்,

வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் … அனேக உருவங்களுடன்

கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும்,

உயர் புண்டரீகனு மேக நிறவனும் … உயர்ந்த பிரமனும், கார்மேக

நிறத்துத் திருமாலும்,

அந்தி போலுருவானு … அந்தி வானம் போன்ற செம்மேனியை

உடைய ருத்திரனும்,

நிலவொடு வெயில்காலும் … நிலவோடு வெயிலை வீசுகின்ற

சந்த்ர சூரியர் தாமும் … சந்திரனும், சூரியனும்,

அசபையும் … அம்ச மந்திரமும்**

விந்து நாதமும் … சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும்,

ஏக வடிவம் … இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும்.

அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம் … வேறு வேறாகப்

பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும்

சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும்.

…………………………………

விராலி மலையுறை பெருமாளே. … விராலி மலையில்

வீற்றிருக்கும் பெருமாளே.

புராணங்கள் 18 – சைவம், பெளஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம்,வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரம்மாண்டம், கருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பத்மம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம்.

** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம்,, அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா – ஜீவாத்மா ஐக்கியத்தைக் குறிப்பிடும் மந்திரம்.

51 எழுத்துக்கள் சம்ஸ்க்ருத   மொழியில் உள்ளன.

சமஸ்கிருத மொழியில் 51 அட்சரங்கள் (வர்ணங்கள்) , அவை அ முதல் க்ஷ வரை அமைந்துள்ளன. இந்த 51 எழுத்துக்களும் 51 சக்தி பீடங்களை மையமாகக் கொண்ட அட்சர சக்திகளாகவும்,  

இவை மாத்ருகா அட்சரம் (தாயைப் போன்ற எழுத்துக்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.

16 உயிரெழுத்துக்கள், 25+5+5 மெய்யெழுத்துக்கள் மற்றும் அஹ், அம் போன்ற இதர எழுத்துக்களை உள்ளடக்கியது.

இந்த எழுத்துக்கள் மந்திர சக்தியைக் கொண்டவை ; உடலின் பல்வேறு சக்தி சக்கரங்களுடன் தொடர்புடையவை .

5 short vowels (hrasva), 9 long vowels (dIrgha) and 2 support vowels (pluta) making it total of 16 vowels (3).

5 semi-vowels/antastha (Sometimes ळ is not included and hence 4

25 consonants and 5 sibilants called vyaJjanam.

—SUBHAM—

TAGS-– சக்ராயுதம் 51 எழுத்து (சம்ஸ்க்ருதம்), 18 புராணம்,  அஜபா மந்திரம், விதுரன்,  ராகங்கள் , கால் மாறி ஆடிய கதை ,  அருணகிரிநாதர் அரிய செய்திகள்Part 38, ஆதிசேஷன்

Leave a comment

Leave a comment