Hinduism through 500 Pictures in Tamil and English 46; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-46 (Post.15,542)

Written by London Swaminathan

Post No. 15,542

Date uploaded in London – 27 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

English version posted already.

குகை வாழ் மனிதர் முதல் புகை வாழ்அந்தணர் முடிய ஆஸ்திகர் முதல் நாஸ்திகர் வரை  வணங்கும் ஒரே தெய்வம் சூரியனே!!!

பூமியில் விளையும் எல்லா தாவர இனங்களும் ஒளிச்சேர்க்கையினால் உயிர் வாழ்ந்து உலகத்தில் உள்ள மக்களுக்கு ஆக்ஸிஜனையும் மழையையும் வருவிக்கின்றன.

சூரிய மண்டலத்தின் சிவன் உறைந்திருப்பதாக சிவ ஆகமங்கள்

கூறுகின்றன. அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். “சிவ சூரியன்” என்றும் போற்றப்படுகிறார்.

ராவண ஹதத்திற்கு முக்கியமாக பாது காப்பு கவசமாக இருந்தது

அகஸ்திய முனிவர் உபதேசம் செய்த ஆதித்ய ஹ்ருதயமே !!!

ஸ்ரீ மகா விஷ்ணு போல சூரியனுக்கும் சங்கு சக்கரம் உண்டு. ஆகவே “சூரிய நாராயணன்” என போற்றப் படுகிறார் என வைணவ ஆகமங்கள் கூறுகின்றன.

சூரிய பகவான் தினமும் ஒருசக்கர வாகனத்தில் 7குதிரைகள் பூட்டிய வாகனத்தில் பவனி வருகிறார். அந்த குதிரைகளின் பெயர்களாவன – காயத்ரி, ப்ருகதி, உஷ்ணிக்,ஜகதி,திரஷ்டுப்,அனுஷ்டுப், பங்கதி எனப்படும்.

அதை ஓட்டுபவர் பெயர் அருணன்.அவருக்கு கால்கள் கிடையாது.

இதையே விஞ்ஞான வல்லுனர்கள் நிற மாலை என்றும் வயலட்,

இண்டிகோ, புளு,கிரீன், எல்லோ,ஆரஞ்சு, ரெட் என 7 நிறங்களாக

இருக்கன்றன, எனநிரூபித்திருக்கிறார்கள். இதை ஏழு நாட்கள்

என்றும் கூறுவர்.

உயிர் கொடுக்கும் சூரியனை தினமும் எல்லோரும் மூன்று முறை வணங்க வேண்டும். இதற்கு“ ஸந்தியா வந்தனம்” எனப்பெயர்..

அனைத்து ஜாதி மக்களுக்கும்இது உண்டு. காலக் கொடுமையினால் ஒரு சிலரைத்தவிர யாரும் இதை செய்வதில்லை.இதில் சூரியனை துதிக்கும் மிக முக்கிய “காயத்ரி” மந்திரமான இது

உலகத்திலுள்ள எல்லா மந்திரங்களில் உயர்ந்தது.காலையில் காயத்ரியாகவும், மதியத்தில் சாவித்ரியாகவும் , மாலையில் சரஸ்வதியாகவும் வணங்கப்படுகிறாள்.

காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம் பாரதி புனைந்தது.

செங்கதிர் தேவன் சிறந்த ஓளியினை தேர்கின்றோம்,

அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”

சூரிய வழிபாடு

சுமேரியா, பாபிலோனியா,அக்கேடியா அஸ்ஸீரியா முதலியநாடுகள்

சூரிய வழிபாட்டையே முக்கியமாக கொண்டிருந்தன.அவர்கள் சூரியனுக்கு வைத்த பெயர் “ஷமாஷ்”. அது போல வட எகிப்தில் “ரா”எனவும்,தெற்கே “அமன்”எனவும் அழைக்கப் பட்டான்

கிரேக்க தேசத்தில் சூரியன், முதலில்,”ஹெலியோஸ்”என்றும் பின்னர்

“அப்பல்லோ” என்றும் அழைத்தனர். இவர்கள் சூரியனுக்கு 105 அடி

உயரமுள்ள ஒரு பிருமாண்டமான சிலையை எழுப்பி வழிபட்டனர்

உலக அதிசயத்தில் ஒன்றான இது காலப் போக்கில் அழிந்துவிட்டது.

சைனாவிலும் ஜப்பானிலும் சூரிய வழிபாடே முக்கியம். சூரியனே எங்களிடமிருந்து நாளை

ஆரம்பிக்கிறான். ஆகவே சூரியனையே எங்கள் கொடியில் வைத்திருக்கிறோம்.ஆனால்

சூரியன் ஒரு பெண் தெய்வம்!!! என்கின்றனர் அவர்கள்.

மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மாயா நாகரீகத்தில் சூரியன்தான் எல்லாம்!!!

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வழிபடுவதற்கு பிரும்மாண்டஉயர கோபுரங்கள் கட்டிசிறப்பாக வழிபட்டனர்.

தை பொங்கல்

சூரியனை வழிபடும் முறைக்கு”சௌரம்”எனப்படும்.

சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் இடப்பெயற்சி செய்வதையே

மாதப்பிறப்பு எனகிறோம். தை மாதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி

பயணிக்கிறார் .அந்தக்காலத்தை உத்தராயணம் என்கிறோம்.

ஆடி மாதம் முதல் தெற்கு பயணிக்கும் காலத்திற்கு தட்சிணாயணம்

என்கிறோம்.

நமது நாட்டில் சூரிய பகவான் வழிபாடு மிக சிறப்பு மிக்கது்.மகர ராசியில் சூரியன் நுழையும்

முதல் நாளை மகர சங்கராந்தி என்றும், தை பொங்கல் என்றும்,சூரியனுக்கு நன்றி சொல்லும் நாளாக மிக விமரிசையாக கொண்டாகிறோம்.  ஒவ்வொருமாநிலமும் இதே பொங்கலை வெவ்வேறு பெயரிட்டு சூரியனை வணங்குகிறார்கள்.

மற்ற கடவுள்களைப் போல சூரியன் பூ , பழம் எதையுமே விரும்பவதில்லை. நமஸ்காரம் ஒன்றை மட்டுமே செய்பவர்களுக்கு கண்ணொளியும் அளவற்ற ஆரோக்யத்தையும் தருகிறார்.

சூரியனின் பெயர்கள்

மிக முக்கியமான 12 பெயர்களை மட்டும் கூறுகிறேன்.

மித்ரன்,ரவி,சூரியன், பானு,க்கான்,பூஷ்ணன்,ஹிரண்ய கர்ப்பன்,

மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்

சூரியனின் பிறப்பு

தட்சன் மகளான அதிதிக்கும், காஸ்யபர் என்ற் முனிவருக்கும் பிறந்தவரே சூரிய பகவான்.

இவர் துவஷ்டா அல்லது விஸ்வ கர்மா என்பவரின் மகளான சஞ்சிகையை மணந்தார்.

***

நவக்ரஹ ஹோமம்  

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.

வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

அத்தி- சுக்கிரன் (Ficus Udumbura) = Venus

நாயுருவி- புதன் (Achyranthe aspera) = Mercury

புரசு /பலாச மர – சந்திரன் (Butea monosperma) = Moon

அரச மர – குரு (Ficus Religiosa)= Jupiter

வன்னி மரம்- சனைஸ்வரன் (Prosopis cineraria) = Saturn

அருகம் புல் – ராகு (Cynodon dactylon) = ascending node

தர்ப்பை – கேது (Desmostachya bipinnata) = descending node

கருங்காலி—செவ்வாய் (Diospyros ebenum) = Mars

எருக்கு- சூரியன் (Calotropis gigantean) = Sun

****

நவக்ரஹ வாகனங்கள் (Nine Planets)

சூரியன்- ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் Sun=Horse Chariot

சந்திரன்- மான்கள் பூட்டிய ரதம், Antelope chariot= Moon

செவ்வாய்—ஆட்டுக் கிடா/ Mars=Ram

புதன்- குதிரை Bhudan/ Mercury= Horse

வியாழன்/பிருஹஸ்பதி—யானை Jupiter= Elephant

சுக்ரன்/வெள்ளி—குதிரை/ முதலை Venus= Horse/ Crocodile

சனி—காகம் Saturn / Sanaischara= Crow

ராகு— சிங்கம் அல்லது பூனை அல்லது புலி Rahu= Lion/ Cat/Tiger

கேது— மீன் Ketu=Fish

***

நவக்ரஹ ரத்தினங்கள்

கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன:

சூரியன் – மாணிக்கம்

சந்திரன் – முத்து

செவ்வாய் – பவளம்

புதன் – மரகதம்

குரு   – புஷ்பராகம்

சுக்ரன் –  வைரம்

சனி – நீலக்கல்

ராகு – கோமேதகம்

கேது – வைடூரியம்

 நவ மணிகளும் கிரஹ தோஷங்களைப் போக்க வல்லவை.

***

சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது

!6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

“புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

உரைகாரர் விளக்கம் புள்ளிக் காளை = சூரியன்; அம்மா= உஷத் காலம் உதயத்துக்கு முன்னர் தோன்றும் ஒளி.  உரைகாரர்களே இங்கே குறிப்பிடப்படுவது சூரியன் (SPOTTED BULL= SUN) என்று தெளிவாக எழுதியுள்ளனர் .

கருப்புப் புள்ளிகள் என்பது காந்த மண்டல கொந்தளிப்பினால் (MAGNETIC FLUX) ஏற்படுகின்றன. அங்கு மற்ற இடத்தை வீட வெப்பம் 2000 டிகிரி குறைவு. அதன் நீள அகலத்துக்குள் பூமியை நுழைத்து விடலாம். நம்மைப் போல சூரியனும் தனக்குத் தானே தட்டாமாலை சுற்றுவதால் அவை நகர்வது போலத் தோன்றும். இவை தோன்றும் பொழுது பூமியில் தகவல் தொடர்பு பாதிக்கும்; தோல் புற்று நோய் அதிகரிக்கும் .

XXX

2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை 7 குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

VIBGYOR= VIOLET, INDIGO, BLUE, GREEN, YELLOW, ORANGE, RED,

சூரியனைக் கும்பிடுபவனுக்கு ஒரு குறையும் வராது என்கிறது அகஸ்தியரின் ‘ஆதித்ய ஹ்ருதய’ தோத்திரம் அவர் ரிக் வேத கால ரிஷி. சூரியனைப்பற்றிய ரிக் வேத துதிகளில் இந்தக் கருத்தைக் காணலாம். AV 2-67; RV1-191-8/9

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

“அக்கினியே , ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.

–subham—

Tags- நவக்கிரகங்கள் , ரத்தினங்கள், வாகனங்கள், ரத்தினங்கள், தானியங்கள், சமித்துக்கள், சூரியன், Hinduism through 500 Pictures in Tamil and English 46; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்46, நவக்ரஹ ஹோமம்

Leave a comment

Leave a comment