Hinduism through 500 Pictures in Tamil and English 49; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-49 (Post.15,549)

Written by London Swaminathan

Post No. 15,549

Date uploaded in London – 29 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நவக்கிரகங்களில் கடைசி மூன்று கிரகங்களைக் காண்போம்

இதோ அவரைப்பற்றிய விவரங்கள்:-

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் – நீளா தேவி

இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய

வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி-

இவள் மகன் “தரித்திரன்” இவர் யாரென்று உங்களுக்கு புரிந்திருக்கும்

மந்தா தேவி-

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு

தானியம் – எள் – கறுப்பு

உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு

வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி

புஷ்பம் – கருங் குவளை

திசை – மேற்கு

சமித்து – வன்னி

ரத்தினம் – நீலம்

தேசம் – சௌராஷ்டிரம்

காரகன்- ஆயுள் காரகன்

ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி

தைலம் – நல்லெண்ணெய்

ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு

ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்

கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி

அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை

என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர்,

மதுரை அருகில் உள்ள குச்சனூர்,

சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்

***

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்; பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்; அனைவரையும் சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில் கடுமையான நீதிபதி!!!

தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்

சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!

அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி

வைக்கும் சூரர்!!!

***

ராகு கேது தோன்றிய கதை
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் பெரியவர்

என்று….அடிதடி சண்டை……ஆளும்கட்சி எதிர்கட்சி மாதிரி.

தேவர்கள் குரு “குருபகவானும்”, அசுரர் குரு சுக்கிர பகவானும்

பரமசிவனிடம் பஞ்சாயத்திற்குப் போனார்கள்.  இந்த மாதிரி கேஸ்களை

“டீல்”பண்ணக்கூடிய ஒரே கடவுள் மிஸடர் மகாவஷ்ணு தான்.

அவரிடம் போங்கள்” என்று “மலையேறி “விட்டார். அப்புறம் நடந்தது தான் உங்களுக்குத்ந்தெரியுமே……மந்தார மலையை மத்தாகவும்,வாசுகியை பாம்பாகவும் பாற்கடலை கடைந்தனர்,

மகாலடசுமி முதல்ஆல கால விஷம் வரை வந்தன.

அமிர்தம் வந்தவுடன் பங்கு போடுவதில் தகராறு…….

பார்த்தார் மகாவிஷ்ணு. இதை வேறு விதமாகத் தான்

“டீல்” செய்யவேண்டும், என எடுத்தார் மோகினி அவதாரம்.

அசுரர்களுக்கெல்லாம், சுரா பானம் வாங்கிக் கொடுத்து விட்டு, அமிர்தத்தைக் கரண்டியால் கொடுக்க ஆரம்பித்தார்

சுவர் பானு என்ற அசுரன் மட்டும்,  சாப்பிடாமல் இருந்தான். தேவர்கள்

ஒவ்வொருவராக அமிர்தத்தை வாங்கிக் கொண்டிருக்கும்

போது சுவர்பானுவும் குறுக்கே நுழைந்து கையை நீட்டினான்.

சூரியனும் சந்திரனும் இதைப்பார்த்து “ சத்தம் போட மகாவிஷ்ணு தனது

சக்ராயுதத்தால் சுவர்பானுவை இரண்டு துண்டாக வெட்டினார்.

தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறியது.; இருவரும் மகாவிஷ்ணு காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார்கள். நீங்கள் அமிர்தத்தை தொட்டதினால் உங்களுக்கு அழிவு கிடையாது; ஆகையால்  கிரக பதவி கொடுக்கிறேன் என்றார்.

ராகுவின் உருவம்:  பயங்கரமான முகம் கொண்டவர், கறுப்பு ஆடை அணிந்தவர். நான்கு கைகளுடன் வாள், திரிசூலம் மற்றும் கேடயம் ஏந்தி, கறுப்பு சிங்கத்தின் மீது அமர்ந்து பவனி வருகிறார் .

கிரகணங்கள் ஏற்படும்போது சந்திர சூரியர்களி ராகு என்னும் பாம்பு விழுங்குவதாக பாமர மக்களுக்காக கதை சொல்லுவது வழக்கம்

ராகுவைத் திருப்தி செய்ய அவர் அருள் புரியும் திருநாகேசுவத்துக்குச் சென்று பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இது கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது . பெரும்பள்ளம் எண்ணமுமிடத்தில் கேது உள்ளார் .வேறு சில தலங்கள்- காளஹஸ்தி,  திருக்களர் , RAAMESVARAM.

ராகு – கேது என்பவை நிழல் (சாயா)  கிரகங்கள் உண்மையான கோள வடிவிலுள்ள கிரகங்கள் அல்ல 

ஏனைய விவரங்கள் –

திசை- தென் மேற்கு திசைக்கு அதிபதி

ரத்தினம்- கோமேதகம்

தானியம் – உளுந்து

ஆடை- கருப்பு நிறம்

சேமித்து- அருகு

வாகனம் – ஆடு

****

கேது

 நவகிரகங்களில் ஒன்றான கேது, ஒரு நிழல் கிரகம் . இது ஞானம், ஆன்மீக விடுதலை (மோட்சம்), பற்றற்ற தன்மையில் ஈடுபாட்டினை உண்டாக்கும் கிரகம் . அசுர வாலாகக் கருதப்படும் கேது, பெரும்பாலும் திடீர் மாற்றங்கள், ஞானம் போன்ற பலன்களைத் தருகிறார். நிழல் கிரகம்: இது ராகுவின் மறுபாதி. ராகு தலை என்றால், கேது வால்.

ஆன்மீக ஞானம்: கேது ஞானம் மற்றும் ஆன்மீக எழுச்சியைத் தருகிறார். இது ஒருவரை பொருள்சார்ந்த உலகத்திலிருந்து ஆன்மீக பாதைக்கு இட்டுச் செல்கிறது.

கேது பகவானை அமைதிப்படுத்தவும், தோஷ நிவர்த்தி பெறவும் விநாயகர் வழிபாடு சிறந்தது. கேதுவின் நட்சத்திரங்களாக அஸ்வினி, மகம், மூலம் ஆகியவை உள்ளன.

முக்கியத் தலம்- கீழப்பெரும்பள்ளம் , காளஹஸ்தி

திசை- VATAMERKU

ரத்தினம் – வைடூர்யம் / கோமேதகம்

தானியம்- கொள்ளு

வஸ்திரம் – பல நிறங்கள் உடைய ஆடை

வாகனம் – சிம்மம்

பல தலங்களில் ராகுவும் கேதுவும் ஒரே சந்நிதியில் இருக்கிறார்கள்  .

–SUBBHM—

TAGS- Hinduism through 500 Pictures in Tamil and English 49; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-௪௯, சனி, ராகு, கேது

Leave a comment

Leave a comment