Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கிஆன்லைன் 28-2-25 இதழில் வெளியான கட்டுரை!
மஹாபாரதத் துளிகள்
யுதிஷ்டிரரா, கர்ணனா,யார் சிறந்த கொடையாளி?
ச .நாகராஜன்
ஒரு சமயம் அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
கிருஷ்ணர் அருகில் இருந்தார். தன் சந்தேகத்தை அவரிடமே அர்ஜுனன் கேட்டான்;
“பகவானே! யார் உண்மையில் சிறந்த கொடையாளி? யுதிஷ்டிரரா அல்லது கர்ணனா?”
“யுதிஷ்டிரரின் கொடை என்பது கவனித்து ஆராய்ந்து செய்யப்படும் கொடை. ஆனால் கர்ணனின் கொடையோ அந்த க்ஷணமே எதையும் எதிர்பார்க்காது செய்யப்படும் கொடை. ஆகவே கர்ணனே சிறந்த கொடையாளி” என்று கிருஷ்ணர் பதில் கூறினார்.
அர்ஜுனன் சற்றுத் தயங்கி நின்றான்.
“என்ன? சந்தேகமா, என் பதிலில்?, வா போவோம்” என்றார் கிருஷ்ணர்.
ஒரு பிராம்மண வேடம் தரித்துக் கொண்ட கிருஷ்ணர் அர்ஜுனனுடன் யுதிஷ்டிரரை நோக்கிச் சென்றார்.
யுதிஷ்டிரர் அப்போது கங்கையில் குளிக்கச் சென்று கொண்டிருந்தார்.
அந்தணர் அவரை நோக்கி, “ஐயனே!! யாசிக்க வந்துள்ளேன். எனக்கு எதையாவது கொடுத்தால் நல்லது” என்றார்.
உடனே யுதிஷ்டிரர், “ ஐயா! நான் இப்போது அசுத்தனாக இருக்கிறேன். குளித்து விட்டு வருகிறேன். வரும் போது தருகிறேன்” என்றார்.
கிருஷ்ணர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
நேராகக் கர்ணனைச் சந்திக்கக் கிளம்பினார்.
கர்ணனும் கங்கையில் குளிப்பதற்காக வந்து கொண்டிருந்தான்.
அந்தணர் கர்ணனை நோக்கி, “ஐயனே! யாசிக்க வந்திருக்கிறேன்” என்றார்.
உடனே கர்ணன், “ஐயா, என் பாக்கியம்! இதோ தருகிறேன்” என்று கூறியவாறே தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் கையில் இருந்த தங்கத்தினால் ஆன கங்கணத்தையும் கழற்றி அவர் கையில் கொடுத்தான்.”
இதைப் பார்த்த அர்ஜுனன் குறுக்கிட்டு, “கர்ணா! நீ குளிக்க அல்லவா போய்க் கொண்டிருக்கிறாய். இப்படி அசுத்தனாக இருக்கும் நீ கொடுக்கலாமா? குளித்து விட்டு வரும் போது இதைக் கொடுக்கலாமே” என்றான்.
“அர்ஜுனா! இவர் கேட்பது என் பாக்கியம்! குளித்து விட்டுத் திரும்பும் போது இவர் இங்கு இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? அது வரை நான் உயிரோடிருப்பேன் என்பது என்ன நிச்சயம்? ஆகவே தான் உடனேயே கொடுத்தேன்” என்றான் கர்ணன்.
அர்ஜுனன் உண்மையான கொடை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டான்.
, எதையும் எதிர்பார்க்காது கொடுப்பதை உடனே கொடுக்க வேண்டும்; அதையும் கர்வமின்றிக் கொடுக்க வேண்டும்!
ஆகவே தான் ‘தானவீரன் கர்ணன்’ என்ற பெயரைப் பெற்றான் கர்ணன்!
தந்தை யார்? குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -1
குமரேச சதகம் என்றால் என்ன ?
முருகப்பெருமான் பெயரில் நூறு பாடல்கள் என்று பொருள். சதகம் என்றால் நூறு பாடல்கள். இவை முழுதும் முருகனைப் பற்றியவை அல்ல. பொது விஷயங்களும் வருகின்றன அதாவது சமயம் பற்றியில்லாத தகவல்களும் வருகின்றன.
இயற்றியவர் யார் ?
நூறு பாடல்களை இயற்றியவர் குருபாததாசர் ஆவார். அவர் புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள புல்வயல் என்னும் ஊரைச் சேர்ந்த சைவ வேளாளர்; சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் . புல்வயலில் குடிகொண்டமுருகப்பெருமானைப் போற்றி , அவரை நினைத்துக்கொண்டு, பொது அறிவுரைகளை வழங்குகிறார் .
இதில் பல சுவையான செய்திகளும் வருகின்றன .
முதலில் முருகனைப் போற்றி வழிபட்டுவிட்டு பிராமணர், க்ஷத்ரியர் வைசியர் வேளாளர் பற்றி நான்கு பாடல்களை பாடிவிட்டு யார் தந்தை என்று சொல்கிறார் . இதை சம்ஸ்க்ருதத்திலும் காண்கிறோம்.
****
தந்தை நிலையில் / ஸ்தானத்தில் வைக்கப்படுவோர் யார் ?
பாடல் எண் ஆறு
6. பிதாக்கள்
தவமதுசெய் தேபெற் றெடுத்தவன் முதற்பிதா,
தனைவளர்த் தவன் ஒரு பிதா,
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,
சார்ந்தசற் குருவொருபிதா,
அவம் அறுத்தாள்கின்ற அரசொருபிதா, நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல்என் றுற்றதயர் தீர்த்துளோன் ஒருபிதா,
அன்புள முனோன் ஒருபிதா,
கவளம்இடு மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,
கலிதவிர்த் தவன் ஒருபிதா,
காசினியில் இவரைநித் தம்பிதா என்றுளம்
கருதுவது நீதியாகும்
மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு
மதலையென வருகுருபரா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
இவரது பட்டியல் சம்ஸ்க்ருத சுபாஷிதப் பட்டியலிலிருந்து வேறுபடுகிறது ; சம்ஸ்க்ருத மொழியில் உள்ள பொன்மொழிப் பாடல்களில் பொதுவாக ஐந்து தந்தை, ஐந்து தாய் ஐந்து குரு என்றுதான் பாடியிருக்கிறார்கள்
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி
****
குருபாததாசர் சொல்லும் தந்தையர்கள்/ பிதாக்கள்
சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட ஐந்து தந்தையரை ஒப்புக்கொள்ளும் குருபாததாசர் மேலும் சிலரையும் தந்தை ஸ்தானத்தில்/ நிலையில் வைக்கிறார்
தன்னை வளர்த்தவன் ஒரு பிதா – தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை, (GOD FATHER)
சார்ந்த சற்குரு ஒரு பிதா – உயிர் நன்னிலை அடைய மறையை ஓதிக் கொடுத்தவன் ஒரு தந்தை,
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா –
துனபத்தை நீக்கிக் காப்பாற்றுகிற அரசன் ஒரு தந்தை,
நல்ல ஆபத்துவேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா – கொடிய இடையூறு வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை,
அன்பு உள முனோன் ஒரு பிதா – அன்புடைய தமையன் ஒரு தந்தை,
கவளம் இடும் மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா –
உணவு ஊட்டும் மனைவியை ஈன்றவன் ஒரு தந்தை,
கலி தவிர்த்தவன் ஒரு பிதா – வறுமையைப் போக்கியவன் ஒரு தந்தை (நமக்கு உணவு கொடுத்து உதவியவர்).
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதியாகும்
– உலகில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்திற் கொள்வது அறம் ஆகும்.
—SUBHAM—-
TAGS– தந்தை யார் ? குருபாததாசர் ,குமரேச சதகம், ஆராய்ச்சிக் கட்டுரை -1
கோவில் அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டிலிருந்து துளஸியை எடுத்து வெங்கடேசன் கையில் கொடுத்தார்.
கோபத்துடன் அதை வாங்கிக் கொண்ட வெங்கடேசன், “கடவுளே நீ இருக்கயான்னு கேட்கத்தான் வந்திருக்கேன்” என்றான்.
அர்ச்சகருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“என்ன இது இப்படிச் சொல்லலாமா? சூரியன் தவறினாலும் நீங்க தவற மாட்டேள். கரெக்டா வந்து ஸ்வாமி தரிசனம் செய்யாம இருந்த நாள் உண்டா? ஏன் லேட்டுன்னு கேட்க வந்தேன் கடவுளே நீ இருக்கயான்னு கேக்கலாமா?”
“ஸ்வாமி இத்தனை நேரம் ரொம்ப தூரம் போயிருப்பேன். ஹைதராபாத்திலே நாளைக்கு இண்டர்வியூ. நல்ல வேலை. இரட்டிப்பு சம்பளம். பெர்க்ஸ் நிறைய -காரு, வீடுன்னு.. டிராபிக் ஜாம்லே மாட்டிகிட்டதனாலே ரயில் கிளம்பிடுச்சு. ‘ஈசன் வானவர்க்கு என்பன் ஆகில் தேசம் உண்டாமோ திருவேங்கடத்தானே’ என்று சரியாத் தான் ஆழ்வாரே கேட்டிருக்கார். நீ தேவர்களுக்கு மட்டும் தான் தெய்வமா? மனிசனுக்கு நீ தெய்வம் இல்லையான்னு கேட்டுட்டுப் போக வந்தேன்.”
“ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். இதுல ஏதோ சூட்சுமம் இருக்கு. இதை விட நல்ல வேலையா அமையுமோ என்னவோ”
“ஹூம்” என்று உறுமிவிட்டு வெங்கடேசன் கிளம்பினான் சந்நிதியை விட்டு.
அடுத்த நாள். தலையை குனிந்து கொண்டு வந்த வெங்கடேசனைக் அர்ச்சகர் பிரமிப்புடன் பார்த்தார்.
“என்ன நடந்திருக்குன்னு பேப்பர்ல பார்த்தேன்.”
குரல் தழுதழுக்க வெங்கடேசன் சொல்ல ஆரம்பித்தான்: “ஆமாம், ஸ்வாமி ட்ரெயின் டீ ரெயில் ஆகி ஒரு கம்பார்ட்மெண்ட் கவிழ்ந்து மூன்று பேர் பலி. ஒண்ணு தெரியுமா? அது நான் போக வேண்டிய அதே ஏ கம்பார்ட்மெண்ட் தான்!”
அர்ச்சகர் பெருமாளைப் பார்த்துக் கும்பிட்டார்.
“இன்னும் ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும். கம்பெனிலேர்ந்து போன் வந்தது. அந்த இண்டர்வியூ நடக்கவே இல்லையாம். அதை நடத்தறவரும் அந்த ரயில்லே தான் வந்தாராம். நல்ல வேளை அவர் தப்பிச்சார். வெளியூர்லேர்ந்து வர எல்லோருக்கும் கம்பெனியே ஃ;ப்ளைட் டிக்கட் அனுப்பி இருக்கு. நாளைக்குத் தான் இண்டர்வியூ.”
“ஆஹா!” என்ற அர்ச்சகர் துளஸியைக் கொடுக்க தட்டில் நூறு ரூபாய் நோட்டைப் போட்டு விட்டுக் கிளம்பினான் வெங்கடேசன்.
அடுத்த நாளுக்கு அடுத்த நாள். வழக்கமான நேரம்.
மலர்ச்சியுடன் வந்த வெங்கடேசனை புன்னைகையுடன் வரவேற்றார் அர்ச்சகர்.
“என்ன ஜயமா?” என்ற கேள்விக்கு பதிலாக ‘வெற்றியோ வெற்றி’ என்ற வெங்கடேசன் “வேலை கிடைச்சதுமட்டுமில்ல, அதில ஒரு அதிசயம் வேற இருக்கு.” என்றான்.
“என்ன?” என்ற பாணியில் வியப்புடன் அவனை நோக்கினார் அர்ச்சகர்.
“இங்கே சென்னைலே ஆள் இல்லையாம். அதனாலே எனக்கு போஸ்டிங் இங்க தான்!”
“அட, பெருமாள் விட மாட்டேங்கறாரோ!” என்றார் அர்ச்சகர்.
“நீங்க சூட்சுமம் இருக்குன்னு சொன்னதிலே ஒரு சூட்சுமம் இருக்கு. பெருமாள் தேவர்களுக்கு மட்டும் தானா என்று நம்மாழ்வார் பாடியதைச் சொன்னேன். அவரே ‘பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே” என்று பாடி இருக்காரே! இனி எனக்கு என்ன ப்ராப்ளம்” என்று சொன்ன வெங்கடேசன் தட்டில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்தான்.
“என்ன உண்டியல்ல போடணுமா?’ என்ற அர்ச்சரகரை வேகவேகமாக மறுத்த வெங்கடேசன், ‘இது உங்களுக்கு! இதோ இது தான் உண்டியலுக்கு’ என்று இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவர் கையில் தந்தான்.
பெருமாளைக் கும்பிட்டுத் திரும்பப் போன அவனை அழைத்த அர்ச்சகர், :’ ஒரு விஷயம் எனக்குத் தெரியவந்தது. அந்த ஏ கம்பார்ட்மெண்ட்ல மூணு பேர் பலி என்று அன்னிக்கி சொன்னது ஞாபகம் இருக்கா? அதுலே ஒருத்தன் பக்கா கொலைகாரனாம். அவன் ஜெயில்லேர்ந்து தப்பிச்சு இரண்டு மாசம் ஆயிருக்கு. அவனைத் தேடிண்டு இருந்த போலீஸ் அவனையும் அவன் ரெண்டு கூட்டாளிகளையும் ஐடென்டிஃபை பண்ணி இருக்கு” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“இது எப்படி எனக்குத் தெரியும்னு கேட்க வேணாம். நம்ப பெருமாள் பக்தர், தினமும் வருவாரே போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர் தான் சொன்னார்” என்று முடித்தார்.
“ஆஹா!”அடியார் தமக்கு அல்லல் நில்லாவே” என்று பரவசமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான் வெங்கடேசன்.
புதிய உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா : சிம்பொனி என்றால் என்ன? :
சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிம்பொனி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் நான்கு கவிஞர்கள் நான்கு வித்தியாசமான கவிதைகளைச் சொன்னால் நம்மால் அதை ரசிக்க முடியுமா? முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகள் இணைந்து தரும் இசையை நம்மால் கொண்டாட முடியும்.
சிம்பொனி என்றால் என்ன கேள்விக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த எளிய விளக்கம் இது. சிம்பொனி என்பது WESTERN CLASSIC இசை மரபில் பல்வேறு இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. இது பல பகுதிகளைக் கொண்டது. அவை MOVEMENTS என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் ஒரு சிம்பொனி தொகுப்பு 4 MOVEMENT-களைக் கொண்டிருக்கும். அதில் ஒன்று SONATA என்ற வடிவத்தில் இருக்கும். சிம்பொனி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.
30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் நிகழ்வாக சிம்பொனி இருக்கும். அதில் VIOLIN, CELLO போன்ற தந்திக் கருவிகளும் CLARINET, TRUMPET, SAXOPHONE, புல்லாங்குழல் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகளும் தாள இசைக்கருவிகளும் இடம்பெற்றிருக்கும்.
ஐரோப்பிய இசை வரலாற்றில் WESTERN CLASSIC இசையின் காலகட்டமாக கருதப்படும் 1740 முதல் 1820-ஆம் ஆண்டு வரை சிம்பொனிகள் உருவாகத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. JOSEPH HAYDN, MOZART, BEETHOVEN ஆகியோர் சிறந்த சிம்பொனி இசைத் தொகுப்புகளை உருவாக்கியவர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை சிம்பொனியை உருவாக்கியிருக்கும் முதல் நபர் இளையராஜாதான். 34 நாட்களில் தாம் உருவாக்கிய சிம்பொனிக்கு VALIANT என்று பெயர் வைத்தார் இசைஞானி. தமது முதல் சிம்பொனி தொகுப்பை லண்டனின் ROYAL PHILHARMONIC ORCHESTRA-வை வைத்து பதிவு செய்துள்ளார். சிம்பொனியை இசைக்க WESTERN MUSIC-ஐ ஒத்திசைந்து வாசிக்கக்கூடிய கலைஞர்கள் தேவை என்பதால் லண்டன் குழுவை நாடினார் இளையராஜா. மேலும் சிம்பொனியை இசைக்க அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கம் வேண்டும்.
இதற்கு முன்பும் மேற்கத்திய இசையில் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் இளையராஜா. 1986-ஆம் ஆண்டு 10 TRACK-களைக் கொண்ட ‘HOW TO NAME IT?’ என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இளையராஜாவின் முதல் FUSION ALBUM-ஆக அது அமைந்தது.
RAJANI KANTH CONGRATULATED ILAYARAJA
1988-ஆம் ஆண்டு ‘NOTHING BUT WIND’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. WESTERN CLASSIC இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றை இணைத்து அதை உருவாக்கியிருந்தார். 2005-ஆம் ஆண்டு மேற்கத்திய இசையுடன் திருவாசகத்தை வெளியிட்டார் இசைஞானி.
‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, ‘மூடுபனி’-யில் வரும் “என் இனிய பொன் நிலாவே”, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமல் பாடிய “நினைவோ ஒரு பறவை” ஆகிய பாடல்களில் சிம்பொனி இசையின் வடிவத்தை பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மாபெரும் சாதனைகளை படைத்த பிறகும் தமது தேடலால் புதுப்புது உயரங்களைத் தொட்டு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகிறார் இசைஞானி.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கி ஆன் லைன் 2-3-25 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
மவுண்ட் வெசுவியஸ்! (MOUNT VESUVIUS) உலகின் அதிபயங்கர எரிமலை!
ச. நாகராஜன்
TACITUS
இத்தாலியில் உள்ள கம்பேனியாவின் தலை நகரம் பழம் பெரும் நகரமான நேபிள்ஸ். புகழ் பெற்ற கவிஞனான கதே, “நேபிள்ஸைப் பார்த்து விட்டுச் செத்துப் போ” என்றான். ஏனெனில் அதற்குப் பின்னர் உலகில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது அவனது அறிவுரை!
அப்படிப்பட்ட நேபிள்ஸின் நகரின் கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உலகின் அதிபயங்கரமான எரிமலையான மவுண்ட் வெசுவியஸ் (MOUNT VESUVIUS)!
இந்த எரிமலையின் மெற்குப் பகுதி சரிந்து பே ஆஃப் நேபிள்ஸைத் தொடுகிறது.
இங்கு தான் ஹெர்குலனியம் (HERCULANEUM) என்ற பழம் பெரும் நகரின் சிதைபாடுகள் உள்ளன. பாம்பி (POMPEI) என்ற இன்னொரு பழம் பெரும் நகரத்தின் சிதைபாடுகள் தென்கிழக்கில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. இந்த எரிமலையின் வாய் 2000 அடி குறுக்களவும் 300 அடி ஆழமும் உள்ளது. இதை அடைய கேபிள் கார் வசதி உண்டு. சுற்றுப்பாதை ஒன்றும் உண்டு.
இந்த எரிமலையின் சரித்திரம் சுவையான ஆனால் பயங்கரமான ஒன்று.
கி.பி. 79ம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி!
நேபிள்ஸ் வளைகுடாவின் மேற்குப்பகுதியில் உள்ள மிஸனம் என்ற இடத்தில் தன் அம்மாவுடன் வாழ்ந்து வந்தான் பதினேழே வயதான ப்ளினி என்ற பையன்.. திடீரென்று எரிமலை வெடிக்க தன் அன்னையுடன் ஓடி அவன் உயிர் பிழைத்தான்.
நடந்தது என்ன என்பதை இரு கடிதங்கள் மூலம் விரிவாக எழுதி பிரபல ரோம் நகரத்து வரலாற்று அறிஞரான டாசிடஸுக்கு (TACITUS) அவன் அனுப்பினான்.
“பெரும் வெள்ளம் வருவது போல எங்களுக்குப் பின்னால் ஒரு கருமேகம் துரத்தி வந்தது. எங்கும் ஒரே இருள்மயம். கடல் தண்ணீர் வற்றிப் போய் கடலே உள் வாங்கியது”என்று அவன் விவரித்திருந்தான்
ஹெர்குலனியம், பாம்பி, மற்றும் ஸ்டாபியா ஆகிய மூன்று நகரங்கள் தீ ஜுவாலையால் கொழுந்து விட்டு எரிந்தன. மக்கள் கிடைத்த விலைமதிக்கத்தக்க பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடினர். அடுத்த நாள் சூரியனையே காணோம். சூரியனை அடர்த்தியான கரும் மேகங்கள் மறைத்திருந்தன.
எரிந்தது போக மீதம் இருந்த கட்டிடங்கள் மீது கட்டியான சாம்பல்கள் படிந்திருந்தன. 20 அடிக்கு சாம்பல் படிந்திருந்தது. ஹெர்குலனியம் நகரம் 55 அடி ஆழத்தில் சகதியில் மூழ்கி அழிந்தது. 2000 மக்கள் பாம்பி நகரில் மட்டும் உயிரிழந்தனர்.
நேபிள்ஸ் வளைகுடாவிலிருந்து மாண்டி சொம்மா என்ற அரைவட்ட வடிவமான எரிமலையின் வாய்ப்பகுதி 4200 அடி உயரத்தில் உள்ளது. இது ராக்ஷஸப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.
இந்த எரிமலை கி.பி. 79லிருந்து 1036ம் ஆண்டு வரை ஒன்பது முறை வெடித்திருக்கிறது. 1631ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெடித்த இந்த எரிமலை ஒரு கணத்தில் 15 கிராமங்களை விழுங்கியது. எரிமலை வெடிப்பு தணிந்த போது எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவு அடர்த்தியான சாம்பல் படிந்திருந்தது. 3000 பேர் இறந்திருந்தனர்.
உடனே நேபிள்ஸ் நகரத்து வைசிராய் இங்கு ஒரு நினைவு நின்னத்தை எழுப்பி “குழந்தைகளே! குழந்தைகளின் குழந்தைகளே,உங்களை நான் எச்சரிக்கிறேன். இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள் – உடனே” என்று அதில் பொறித்து வைத்தார்.
1906ம் ஆண்டு மீண்டும் மவுண்ட் வெசுவியஸ் சீறியது. 1845ல் இங்கு மலைச்சரிவில் 2000 அடி உயரத்தில் ஒரு ஆப்ஸர்வேடரி அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து எரிமலையின் சீற்றத்தை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். 18 நாட்கள் எரிமலைப் பொங்கி வழிந்தது. அந்தப் பகுதியில் இருந்த கிராமங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. எரிமலையின் வாய் இன்னும் ஆயிரம் அடி அகலமானது.
1944க்குப் பின்னர் இங்குள்ள செழிப்பான மண்வளத்தைக் கண்ட விவசாயிகள் இங்கு திராக்ஷை செடிகளைப் பயிரிட்டனர். இதிலிருந்து பிரசித்தமான லாக்ரிமா க்றிஸ்டி ஒயின் (Lacrima Christi Wine) தயாரிக்கப்பட்டது.
இந்தப்பகுதியில் மொத்தமாக இருபது லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
ஐரோப்பாவின் உயிருள்ள எரிமலையான இது என்று மீண்டும் வெடிக்குமோ என்ற அச்சத்துடனேயே மக்கள் வாழ்கின்றனர்.
வானளவு உயர்ந்து எரியும் தன்மை கொண்ட இந்த எரிமலையை, இந்த எரிமலை அமைதியாக இருக்கும் போது பார்க்க மக்கள் வருவதில் ஆச்சரியம் இல்லையே!
GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS
Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe
London Time 12 Noon
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
9-3-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி
ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
Prayer by Mrs Jayanthi Sundar Team
***
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
***
Mrs. Brahannayaki Sathyanarayan speaks on TIRUNELVELI NELLAIAPPAR Temple
***
Talk by Bengaluru S Nagarajan on Tamil Poet Villippuththurar
***
SPECIAL INTERVIEW ( on his novels ) BY Dr V S MANI OF AMERSHAM, GREATER LONDON, UK (President of South Indian Society and London Novelist)
Dr V Subramanian
Was born in Madras (now Chennai) is from Tanjore but grew up in Calcutta (now Kolkata). Studied in Bengal Engineering College in Calcutta university. Worked in Durgapur, near Calcutta. Then he came to the UK and worked with The British Aluminium Co. (BA). He did a Ph. D in Metallurgy in Swansea University in Wales and rejoined BA. In later years he was the Practice Manager for a 6 Partner GP Practice in Tottenham in London. Then in GP practices in Edgbaston, Birmingham and in Manchester. He is now retired and embarked on writing books.
****
Ravi – the Interviewer.
He is the brother-in-law of Mani, who studied in Jadavpur university in Calcutta. He has wide experience in Marketing and worked in India, and finally for a few decades in Dubai.
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
****
இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்
****
உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்
***
ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
*****
பெங்களூரு எஸ். நாகராஜன், தலைப்பு– தமிழ் கவிஞர் வில்லிபுத்தூரார்
*****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
சிறப்பு பேட்டி அளிப்பவர் லண்டன் நாவலாசிரியார் – டாக்டர் வி.எஸ் மணி , சவுத் இந்தியன் சொசைட்டி தலைவர் ; பேட்டித் தலைப்பு – டாக்டர் மணி எழுதிய ஆங்கில நாவல்கள்
பேட்டி காண்பவர்- திரு. ரவி.
***
Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.
7.Night, Turmeric, name of Durga; name of Tamil Superstar
8. Name of a celebrated monarch of the lunar race (son of king Nahuṣa whom he succeeded ; from his two wives came the two lines of the lunar race, Yadu being the son of Devayānī, daughter of Uśanas or Śukra, and Puru of Śarmiṣṭhā, daughter of Vṛṣa-parvan; he is also represented as the author of [Ṛg-veda ix, 101, 4-6]), [Ṛg-veda; Maitrī-upaniṣad; Mahābhārata; Kāvya literature etc.]
11. AJOWAN.is the name of a plant in TAMIL identified with Trachyspermum ammi (L.) Sprague from the Apiaceae (Carrot) family having the following synonyms: Carum copticum, Trachyspermum copticum, Carum ajowan
Down
4. a mountain range located near the city of Salem in Tamil Nadu, southern India, and are part of the Eastern Ghats. The local Tamil name comes from a local deity,
2.Pure Gold; the quality of being pure, excellent; absolute purity.
9. A fathom, or the space between the tips of the fingers of either hand when the arms are extended. 2. Disregard. 3. Smoke. E. bi before am to go, with āṅ prefix and ac aff.in Sanskrit
10.A kind of serpent in Atharvaveda; also in Sumerian language.
3. The term xxxxxx Coast, in historical contexts, refers to India’s southwestern coast, which lies on the narrow coastal plain of Karnataka and Kerala between the Western Ghats range and the Arabian Sea. The coast runs from south of Goa to Kanyakumari on India’s southern tip.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(புரந்தரதாசர் பற்றிய 8–வது கட்டுரை இது)
முதலில் புரந்தரதாசர் சவுக்கடி வாங்கிய கதையைக் கேளுங்கள்
புரந்தரதாசருக்கு சவுக்கடி!
Date: 5 March,2016: Post No. 2600
கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர் புரந்தரதாசருக்கு பூர்வ ஜன்ம கர்ம வினை பாக்கியிருந்தது. அதைத் தீர்க்க, அவருக்கு கடவுள் ஒரு தண்டனை கொடுத்தார்.
பண்டரீபுரத்தில் கோவில் கொண்டுள்ள விட்டலராயன் மீது அபார பக்தி பூண்டவர் நமது புரந்தரர். அதே ஊரில் கோவிலில் ஆடல், பாடலுக்காக நியமிக்கப்பட்ட தேவதாசிக்கும் ஸ்ரீ விட்டல் மீது அலாதி பக்தி. அது மட்டுமல்ல. புரந்தரரின் பாடல்கள், க்ருதிகள் மீதும் பேரன்பு, பெருங்காதல் கொண்டவர்.
ஒரு நாள் இரவு, கடவுளே புரந்தரதாசர் வேடம் கொண்டு , அந்த தேவதாசி வீட்டுக்குப் போய் ஆடலையும் பாடலையும் ரசிக்க வந்ததாகக் கூறினார். அந்தப் பெண்மணிக்குப் பேரானந்தம். ‘பழம் நழுவில் பாலில் விழுந்ததே’ என்று எண்ணி வியந்தார். ஆடினார், பாடினார், மெய்மறந்து போனார். புராந்தரர் வடிவத்தில் வந்த விட்டல், போவதற்கு முன் ஒரு கங்கணத்தை (காப்பு) பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
மறு நாள் பண்டரீபுர விட்டல் சிலையின் மீது இருந்த கங்கணத்தைக் காணவில்லை. அது தேவதாசியிடம் இருப்பதும் தெரியவந்தது. செய்தி மெதுவாகப் பரவியது. புரந்தரர்தான் இரவில், தேவதாசி வீட்டுக்குப் போய் அதை அவரிடம் கொடுத்தார் என்று எல்லோரும் சொல்லவே புரந்தரர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் எவ்வளவோ மறுப்புச் சொல்லியும் தேவதாசியின் வாக்குமூலத்தைக் கொண்டு அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. அவரை கோவில் வாசலிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுத்தனர். திடீரென்று கோவிலின் கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. இறைவன், தானே புரந்தரதாசர் வடிவத்தில் சென்று ஆடலையும் பாடலையும் ரசித்ததாகவும் இந்த அவப்பெயரை புரந்தரர் மீது ஏற்றி அவரை சவுக்கடி பெற வைத்ததற்கு அவர் பூர்வ ஜன்ம வினையே காரணமென்றும் சொல்லியது. பாக்கியிருந்த கர்ம வினையைத் தீர்த்த புரந்தரதாசர்,
இன்று வரை நம் நினைவில் நீங்கா இடம் பெற்று நம்மையும் புனிதப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல. அவரை எந்தக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்களோ, அந்தக் கம்பத்துக்கு தாசர் கம்பம் என்று பெயரிட்டு இன்று வரை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புரந்தரர் கட்டப்பட்ட கல்லும் புனிதம் பெறும்!!
வாழ்க புரந்தரர் நாமம்!
Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990); தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்
******
கருணாகரன் என்று உன்னை சொல்வது எதற்காக?
புரந்தரதாசர் ராம நாமத்தையும் ஹரி நாமத்தையும் புகழ்ந்து பாடினாலும் நீ ஏன் எனக்கு உடனே உதவி செய்யக்கூடாது ? கஜேந்திரன் போன்ற யானைக்குக்கூட உடனே ஓடி வந்து உதவி செய்தாயே என்று கேள்வி கேட்கிறார்
நீ கருணை உள்ளவனா ? உன்னை நம்ப முடியவில்லையே என்கிறார் ; உடனே மோட்சமடைய விரும்பும் பரிதவிப்பை இது காட்டுகிறது .