Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-2-25 கல்கி ஆன் லைன் கட்டுரை
விஞ்ஞானிகளை அரண்டு மிரண்டு பயப்பட வைத்த ஒரு விஞ்ஞானியின் கண் திருஷ்டி!
ச. நாகராஜன்
திருஷ்டி பற்றிய திரைப்படப் பாடல்!
1992ம் ஆண்டு வெளி வந்த சின்ன கவுண்டர் படத்தில் வரும் ஒரு பாடல் இது.
ஆண்: கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே… கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே… சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே… உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே… ஹே…
இதைத் தொடர்ந்து நடனக் குழுவும் இதையே பாடுகிறது.
பின்னர் தீமை தரும் கண் திருஷ்டிகளின் பட்டியலும் பாட்டில் இடம் பெறுகிறது.
குழு: ஊரு கண்ணு உறவு கண்ணு… நாய் கண்ணு நரி கண்ணு… நோய் கண்ணு நொல்ல கண்ணு… நல்ல கண்ணு கொல்லி கண்ணு… கண்ட கண்ணு முண்ட கண்ணு… கரிச்சி கொட்டும் எல்லா கண்ணும்… கண்ட பிணி தொலையட்டும்… கடுகு போல வெடிக்கட்டும்… நல்லதெல்லாம் நடக்கட்டும்… நாடும் காடும் செழிக்கட்டும்…
பாடலை எழுதி படத்தை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார். இசை அமைத்துப் பாடியவர் இளையராஜா.
திரு விஜயகாந்த் (1952-2023) அவர்களே வியக்கும் படி படம் சக்கை போடு போட்டது. அனைவரும் இந்தப் பாடலையும் ‘சின்னக் கவுண்டர்’ விஜயகாந்த் நடையையும் வெகுவாக ரசித்தனர்.
பகுத்தறிவுவாதிகளுக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் சங்கடத்தைத் தந்தது.
கண் திருஷ்டியாவது தீமையைத் தருவதாவது என்பது அவர்களின் கொள்கை.
ஆனால் உலக நாடுகள் எல்லாவற்றிலும் திருஷ்டி பற்றிய நம்பிக்கை உண்டு. அதற்கு அந்தந்த நாட்டு பரிகாரங்கள் விதம் விதமானவை.
விஞ்ஞானிகள் இந்த கெட்ட திருஷ்டி (EVIL EYE) பற்றிய ‘மூட’நம்பிக்கையைப் பற்றிக் கை கொட்டிச் சிரித்தார்கள்.
ஆனால் நடந்தது என்ன?
அவர்களே அரண்டு மிரண்டு பயப்படும் வண்ணம் ஒரு விஞ்ஞானி இதர விஞ்ஞானிகளை பயமுறுத்தினார். அந்த சம்பவம் தான் இது!
பாலி இருந்தாலே பயம் தான்!
உல்ப்கேங் பாலி (1900-1958) ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க கருதியற்பியல் விஞ்ஞானி. 1945ல் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். அடாமிக் ஃப்யூஷன் பற்றிய அவரது பார்முலா உலகப் புகழ் பெற்றது!
அவரைக் கண்டாலேயே விஞ்ஞானிகளுக்குப் பயம்
அவர் சோதனைச்சாலையில் இருந்தாலோ எதையாவது பார்த்தாலோ நிச்சயமாக ஏதாவது கோளாறு ஆகி விடும் என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது! பாதி சோதனையின் போது மின்சக்தி போய்விடும். வாக்குவம் டியூபுகள் லீக் ஆகும், சாதனங்கள் உடையும் அல்லது பழுதுபடும் , இப்படி நிச்சயம் ஏதாவது ஒரு விபரீதம் நடக்கும். சோதனை உருப்படாது. ஆகவே அவர் சோதனையின் நடுவில் வந்தாலே விஞ்ஞானிகள் நடுநடுங்குவர்.
ஒரு நாள் புரபஸர் ப்ராங்க், கோட்டிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஸிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் தனது லாபரட்டரியில் ஒரு முக்கிய சோதனையை நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு காரணமும் இல்லாமல் ஒரு சாதனம் உடைந்து விட்டது. அந்தச் சமயத்தில் பாலி டென்மார்க்கிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் அந்தக் கட்டிடத்தில் இருக்க சான்ஸே இல்லை!
ஆனால் பின்னால் தான் ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாதனம் உடைந்த அதே வினாடியில் தான் ஜூரிச்சிலிருந்து கோபன்ஹேகனுக்கு பாலியை ஏற்றிக் கொண்டு சென்ற புகைவண்டி கோட்டிங்டன் இரயில் நிலையத்தில் வந்து நின்றதாம்! அடேயப்பா, ரயில் நிலையத்தில் அவர் வந்த போதே இந்த ‘எபக்ட்’ என்றால் ஒருவேளை சோதனை செய்யும் லாபரட்டரிக்கு அவர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தங்களுக்குள் ‘பாலி விளைவைப்’ பற்றிப் பேசி மகிழ்ந்தனராம்!
நீல்ஸ்போரின் குதிரைலாடம்!
அதிர்ஷ்டம், கண் திருஷ்டி ஆகியவற்றை எல்லாம் நம்பாத இன்னொரு
இயற்பியல் விஞ்ஞானி நீல்ஸ் போர் (1885-1962).
1922ல் நோபல் பரிசைப் பெற்றவர்.
அவரைப் பார்ப்பதற்கு அவரது சக விஞ்ஞானி ஒருவர் கோபென்ஹேகனுக்கு வந்தார். அவரைச் சந்திக்கும் போது அவரது மேஜைக்கு அருகில் இருந்த சுவரில் குதிரை லாடம் ஒன்று பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியமுற்றார்.
ஏனெனில் அதிர்ஷ்டத்தை நம்பும் எல்லோரும், குதிரை லாடத்தை (Horseshoe) வீட்டில் பதித்து வைத்துக் கொண்டால் மிக்க அதிர்ஷ்டம் வரும் என்று அதை வீட்டுச் சுவரில் பதித்து வைப்பது வழக்கம்.
ஆனால் விஞ்ஞானியான நீல்ஸ் போர் இதை மூட நம்பிக்கை என்று சொல்பவர் ஆயிற்றே!
வியப்புற்ற அமெரிக்க நண்பர், “என்ன, குதிரை லாடம் அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை நிச்சயம் நீங்கள் நம்பாதவர் தானே!! அப்படி என்றால்..? என்று இழுத்தார்.
நீல்ஸ் போர், “நண்பரே! அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை நான் நம்பவே இல்லை. அது சுத்த அபத்தம்! என்றாலும் கூட அதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்கிறார்களே! அந்த லாஜிக்கிற்காகத் தான் அதை மாட்டி வைத்துள்ளேன்” என்றார்.
இந்த லாஜிக்கைக் கேட்டு நண்பர் அசந்து போனார்!
இப்படி ஏராளமான பகுத்தறிவு விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் சுவையான முரண்பட்ட நம்பிக்கைகளும் செயல்களும் உண்டு!
Date uploaded in Sydney, Australia – 16 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I went to Minto Shiva Temple today 16-2-2025 with my family; the temple is in Minto in New South Wales in Australia. It is at a distance of one hour drive from Sydney.
The temple is a beautiful temple and it won’t take more than half hour to have darshan (holy viewing).
It is a Shiva temple with a huge Shiva Linga in the main shrine. On both sides we have Ashtabhuja Durga and Ram parivar shrines.
Apart from these , there are shrines for Ganesh, Subrahmanya, Bhuvaneswari, Navagraha, Krishna and Kala Bhairava
The main attractions are huge Shiva and Hanuman sculptures outside the main shrine. The temple construction is a mixture of North and South Indian styles. The main Shiva Linga has Archana and Aradhana (PUJA) like every Tamil temple. Other gods have beautiful dress like North Indian temples.
Another unique feature of the temple is installation of Twelve Jyotirlingas’ – exact replica of Indian Shrines – but in smaller scale.
The temple is run by Gujaratis with the support of other communities in the area. I saw a lot of Nepali Hindus vising the temple.
The huge Shiva and Anjaneya sculptures gave lot of opportunities for youngsters to take photos and selfies.
It is in a quite area and new extensions are also planned.
Sulur Siva Shanmuka Kurukkal and another Pandit ji helped us to have good Darshan and gave us Prasad.
Sri Siva Shanmuka Kurukkal ji explained that the main Shiva linga is worshipped with Abhisheka Aradhanas like South Indian Agama temples.
***
Nagarathar Kavadi Function
LONDON SWAMINATHAN WITH SRI SULUR SIVA SHANMUKA KURUKKAL
We had two birds in one stone today. The Nagarathar community celebrated the annual Kavadi function today and Sulur Shiva Shanmuka Kurukkal officiated it. Hundreds of Nagarathar community devotees attended it and scores of gentlemen took Kavadis and others Paal Kudam (milk pots). Lord Muruga (Skanda) was taken in procession. They went round the temple. That reminded me my participation as Chief Guest at London Nagarathar annual event held in London Sri Murugan temple two years ago. The event added more divine atmosphere.
Sri Lankan Tamils organise several events in the temple now and then. Shivaratri on 26th February 2025 will attract a huge crowd and special Homams and Shiva linga abishekam are already announced.
The full address of the temple is
Shri Shiva Mandir
Address: 201 Eagleview Rd,
Minto NSW 2566
LONDON SWAMINATHAN IN MINTO MANDIR, AUSTRALIA
–subham—
Tags- My Visit, Minto Shiva Temple, Australia , Nagarathar, Kavadi, Event
Date uploaded in Sydney, Australia – 16 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4;
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
………..
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
இந்த வரிகளில் தனக்கு என்ன வேண்டும் என்று அவ்வையார் வேண்டுகிறார்.
1.இறைவனே குருவாக வேண்டும்
2.முந்தை வினைகளை நீக்கவேண்டும்
3.உபதேசம் செய்தருளவேண்டும்
4.ஐம்புலன்களை அடக்க அருள்புரியவேண்டும்
5.ஒன்பது வாசல்களைக் கொண்ட உடம்பினை என் வசத்தில் வைத்துக்கொள்ள இவையெல்லாம் தேவை.
இதற்குப் பின்னர் வரும் வரிகளில் யோக விஷயங்கள், மூச்சுப் பயிற்சி , குண்டலினியை எழுப்புவது முதலியன பற்றி வேண்டுகிறார்
இந்த வரிகளில் 3, 4, 5, 9 ஆகிய எண்களை அவ்வையார் பயன்படுத்துவத்தைக் கவனிக்கவேண்டும் ; இந்த பரிபாஷையை எல்லா ஆன்மீகப் பாடல்களிலும் , துதிகளிலும் காணலாம். இவை எல்லாம் பகவத் கீதையிலிருந்து துவங்குகிறது அங்கும் ஒன்பது வாயில், மூன்று மலங்கள், ஐந்து புலன்கள் வருகின்றன வள்ளுவனும் துறவு என்னும் பகுதியில் இதை ஜூஸ் பிழிந்து தந்து விடுகிறான்.
நீக்க வேண்டியது மூன்று மலங்கள்
வேண்டிப் பெறுவது நான்கு நலன்கள்
அடக்க வேண்டியது ஐந்து மத யானைகள் (புலன்கள்)–
உடலுக்கு ஒன்பது வாசல்கள் —- அவ்வையார்
****
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே……….
மும்மலங்களுக்கு சைவர்கள் கூறும் விளக்கம் – ஆணவம்,கன்மம், மாயை என்பதாகும் .
இன்னுமொரு விளக்கம் :–
மூன்று மலங்கள் – காமம் க்ரோதம் லோபம் ; அதாவது வேண்டாத ஆசைகள் காமம்; அவை கிடைக்காதபோது ஏற்படும் சினம் என்னும் கோபம்; சிறிது கிடைத்துவிட்ட பின்னர் எழும் பேராசை, குறிப்பாக பண விஷயத்தில்-லோபம் .
சிறைச்சாலைக்குச் செல்லுவோர் பற்றிய செய்திகளைப் படித்தால் எல்லோரும் இந்த மூன்று காரணங்களுக்காகவே சிறையில் அடைக்கப்படுவதைக் காலம்; ஆகையால் கீதையில் கண்ணன் இந்த மூன்றினையும் நரகத்தின் வாசல்கள் என்று வருணிக்கிறான் .
******
chocolate Ganesh
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி….
சரியை, கிரியை, யோகம், ஞானம் இவை நான்கினையும் தந்து அவற்றின் மூலம் சாலோக, சாமீப, சாரூப சாயுஜ்ய நிலையை அடைய வேண்டும்.
दर्शनाद् यस्य सालोक्यं
सामीप्यं स्पर्शनात् तथा
सारूप्यं स्नानतो याति
सायुज्यं तन्-निवासतः– கார்க சம்ஹிதா
darśanād yasya sālokyaṃ
sāmīpyaṃ sparśanāt tathā
sārūpyaṃ snānato yāti
sāyujyaṃ tan-nivāsataḥ
sAlokyam.. சாலோக்யம் – இறைவனை வணங்கும் அடியார் குழாத்தில் சேருதல்;
sAmeepyam.. சாமீப்யம்- இதன் வாயிலாக இறைவனை நெருங்கிச் செல்லுதல்;
sArupyam.. ஸாரூப்யம்- அவனது உருவினை அடைதல் ;
sAyujyam..சாயுஜ்யம் – அவனோடு ஐக்கியமாதல்
சிவன் என்று சொல்லக் சொல்ல சிவமயமாவதை திருமூலரும் பாடுகிறார் .இறுதியில் ஆதி சங்கரர் போதித்த அத்வைத நிலை வரும்; அதாவது
அஹம் பிரம்மாஸ்மி; தத்துவமசி என்னும் உபநிஷத வாக்கிய நிலை ; நானே கடவுள்; அது நீயே.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716) திருமூலர் அருளிய திருமந்திரம்.
முதலில் இறைவனே குருவாக வேண்டும் என்றும் அவ்வை வேண்டுகிறார். இந்த குரு பற்றிய கொள்கை இந்து மதத்துக்கே உரியது அருணகிரிநாதருக்கு முருகனே குரு ஆனான். மாணிக்கவாசகருக்கு சிவனே குரு வடிவில் தோன்றினார்
குரு இல்லாமல் ஆன்மீக முன்னேற்றம் கிடையாது என்பது இந்துக்களின் கொள்கை; அவரிடமிருந்து உபதேசம் பெறவேண்டும் என்பதும் இந்துக்களின் கொள்கை. இதை உபநிஷதங்கள் தெளிவாக இயம்புகின்றன. பிராமணர்கள் இரண்டாவது பிறவி எடுக்கையில்– அதாவது பூணூல் போடுகையில் — தந்தை மூலமாக காயத்ரீ மந்திர உபதேசம் பெறுகிறார்கள்; அப்போது தந்தையே குரு.
பாரதி , திருமூலர் போன்றோர் குருவின் பெருமையை புகல்கிறார்கள்:
காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்வோம்;
கனமான குருவை யெதிர் கண்ட போதே
மாற்றான அஹந்தையினைத் துடைத்துக்கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை யடித்துக் கொள்வோம்;
பேற்றாலே குரு வந்தான்; இவன்பால் ஞானப் [ளே
பேற்றை யெல்லாம் பெறுவோம் யாம்“ என்றெனுள்
சிந்தித்து:— ”மெய்ப் பொருளை யுணர்த்தாயையே!—பாரதியார்
குருவின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் விலகி சிவோஹம் என்னும் நிலையைப் பெறலாம் என்பார் திருமூலர்:–
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரூச் சிந்தித்தல் தானே.
இன்னும் ஒரு அதிசய விஷயத்தையும் திருமூலர் கூறுவார்: கருடன் உருவத்தை மனதில் நினைத்துப் பிரார்த்திதாலோ கருட மந்திரத்தைச் சொன்னாலோ பாம்பு விஷம் பறந்தோடிப் போகுமாம்.அதே போல குருவை மனதாரப் பிராத்திப்பவனுக்கு மும்மலமும் அறுபட்டு முத்தி அடைய முடியுமாம்.
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்பொழுதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே
— திருமூலரின் திருமந்திரம்
*****
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி……………………
ஒன்பது வாசல் வீடு/ நகரம் என்று உடலை வருணிப்பதை வேத மந்திரத்திலேயே காண்கிறோம். பின்னர் தமிழ் அடியார்கள் இதைக் கூறி வந்தனர்.
இதோ அதர்வண வேத மந்திரம்:
ஒன்பது வாசல் உடைய இந்த உடலை நன்கு அறிந்து உனது சக்தியைப் பெருக்கு; அல்லது உனக்குப் பலன் இல்லை (5-16/9)
பகவத் கீதையில் கண்ண பிரானும் இதையே சொல்லுவார்:
இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வாரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)
सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 5-13||
sarva-karmāṇi manasā sannyasyāste sukhaṁ vaśhī
nava-dvāre pure dehī naiva kurvan na kārayan–(பகவத் கீதை – 5-13)
அதிசயம்: காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்
15-10-1932-ல் சென்னையில் ஆற்றிய உபந்யாசத்தில் காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) கூறிய அதிசயப் பாடல்:
“ ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார் நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று; இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
அதைப் போலவே பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது”.
—பக்கம் 109, ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற் பாகம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை-1, முதல் பதிப்பு ஆண்டு 1933, இரண்டாம் பதிப்பு 1957
*****
ஐம்புல அடக்கத்தைப் பாடாத புலவர் இல்லை வள்ளுவன் குறள் இதோ:-
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:24)
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
பரிமேலழகர் உரை: உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
வீட்டு நிலம் – மோட்சம், வீடுபேறு அல்லது மேலான நிலை
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பனனிடத்தில் உலகம் வசப்படும் ; முனிவர்கள், சாது சந்யாசிகள் இப்படிக் கட்டுக்குள் வைத்திருப்பதால் அவர்களை உலகமே வணங்குவதைக் காண்கிறோம்.
*****
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்………
முன் வினையின் பயனால் ஆன்மீக முன்னேற்றம் தடைபடலாம்; அதை நீக்கும் சக்தி இறைவன் ஒருவனுக்கே உண்டு
பிரம்மன் எழுதிய தலை எழுத்து முருகனின் கால் பட்டு அழிந்தது என்று அருணகிரிநாதர் பாடுகிறார் . முந்தை வினையின் முடிச்சை அவிழ்ப்பதை திருமூலரும் பாடுகிறார் கோவிந்தனின் புகழ் பாடினால் அவை எல்லாம் தீயினில் பஞ்சுபோலக் கருகிச் சாம்பலாகும் என்று ஆண்டாளும் உறுதி செய்கிறார்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே– கந்தர் அலங்காரம்
“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவன்அரு ளாலே”.— திருமந்திரம்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.– ஆண்டாள் பாடிய திருப்பாவை
To be continued………………………………..
Tags- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4, ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி….
Date uploaded in Sydney, Australia – 15 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை–3
மூஷிக வாகனம் ஏன்?
எலி என்பது மனிதனின் ஆசைகளையும் புலன் இன்ப வேட்கையையும் குறிக்கும். அதைக் கட்டுப்படுத்த வல்லவர் விநாயகர் ; வீடுகளில் எலியைக் கண்டோருக்கு அதன் ஆசையும் இனப்பெருக்க வேகமும் நன்றாகவே விளங்கும். கணபதியை வணங்குவோருக்கு அந்தக் கட்டுப்பாடு வரும். ஏனெனில் கணபதி ஆஞ்சனேயரைப் போலவே பிரம்மச்சாரி. தெற்கிலும், வடக்கிலும் பிள்ளையாருக்கும் அனுமனுக்கும் மனைவியராகக் காட்டுவது அவர்களின் சக்தி ரூபம்; உண்மையில் மனைவியர் இல்லை ஆகவே பிரம்மசாரி கடவுளை வணங்குவோருக்கு ஆசை மீது கடிவாளம் போட முடியும் என்பதைக் காட்டவே அவர் எலி வாகனதாரியாக நம்மிடையே காட்சி தருகிறார். எலி என்பது நம்முடைய அஹம்காரத்தைக் குறிக்கும் என்று ஒரு விளக்கமும் உண்டு
அஹங்காரம் , மம காரம் இரண்டையும் கட்டுப்படுத்துவோர் சொர்கத்துக்குப் போகமுடியும் என்று வான்புகழ் வள்ளுவனும் தேன் இனிய தமிழில் செப்புகிறான்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்– (அதிகாரம்: துறவு குறள் எண்:346)
யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை நீக்கியவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்வான்.
இன்னும் ஒரு விளக்கம் – எலியைப் போல அவர் எங்கும் செல்வார் ; அவர் இல்லாத இடம் OMNIPRESENT இல்லை; இது எல்லாக் கடவுளருக்கும் பொருந்தும் .
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன
மூஷிக = எலி , மூஞ்சூறு
முப்பழம் = மா, பலா, வாழை ; இது தமிழருக்கே உரித்தான வசனம். ஏனெனில் இவை தமிழ்நாடு போன்ற வெப்ப மண்டலத்தில் வளரும் மரங்கள்; பழங்கள். முத்தமிழ் போன்று இனிமையானவை ; இவை விநாயகரின் கை நிறைய இருப்பதை திருப்புகழில் பாடுகிறோம்; அருணகிரிநாதரும் கைத்தல நிறை கனி என்று பாடி பிள்ளையார் துதியைத் துவக்குகிறார்.
****
சொற்பதம் கடந்த – இது உபநிஷத வாக்கியம் ; வேத்தின் ஞான காண்டம் உபநிஷத் என்னும் பகுதி; அவைகளில் வெறும் சடங்குகளினாலோ துதிகளாலோ மட்டும் இறைவனை அடைய முடியாது; அவைகள் படிக்கட்டுகள்தான்; ஏணிதான் ; அதை பயன்படுத்தி மேல் நிலைக்குச் சென்றால் சொற்கள் அடங்கிவிடும்; பேசா அனுபூதி பிறந்து விடும்; ஏனெனில் அவனைக் கண்டவர் விண்டிலர்;அப்ரமேயம் என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லும்; பகவத் கீதையில் விஷ்வ ரூப தரிசனம் இதை உணர்த்தும் ஆகையால் இறைவனை சொற்களால் வருணிக்க இயலாது ; இதை அவ்வையார் அழகாக சொற்பதம் கடந்த என்று சொல்லிவிட்டார் வக்ர துண்டம்/ வளைந்த துதிக்கை மூலம் நமக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கணேசன் நினைவு படுத்துவதால் துரியமெய்ஞ் ஞான அற்புதம் என்கிறார் அவ்வை.
நூலறிவால் இறைவனை அடைய முடியாது; நுண்ணறிவினாலேயே அவனை அடையமுடியும் ; இதை அருணகிரிநாதரும் புகல்கிறார்.
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!— திருவாசகத்தின் சிவ புராண வரிகள்.
சைவத் திருமுறைகள் அனைத்தும் நம சிவாய என்னும் ஐந்தெழுத்தின் மகிமையைப் போற்றுகின்றன ; வேதங்களில் யஜுவ்ர் வேதத்தின் ருத் ரம் சமகம் பகுதியில் முதல் தடவையாக நமச்சிவாய என்பதைக் கேட்கிறோம். பின்னர் இதை சைவ அடியார்களின் தேவார, திருவாசக, திரு மந்திர நூல்களில் படிக்கிறோம்
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும். 15 – நல்வழி
என்று அவ்வையார் நல்வழி நூலிலும் பகர்ந்தார்
திருமூலரின் திருமந்திரமும் சிவ என்ற இரண்டெழுத்தே போதும் என்கிறது :
சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
துவனச் சடைமுடித் தாமரையானே. (கடவுள் வாழ்த்து. 4)
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716)
TO BE CONTINUED……………………………………
TAGS- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-3, மூஷிக வாகனம் ஏன்?, மாயப் பிறப்பு, சொற்பதம் கடந்த
காலம் காலமாக தூங்கும் போது எப்படிப் படுத்து உறங்க வேண்டும் என்பதை நமது அறநூல்கள் மற்றும் வைத்திய நூல்கள் பலவற்றிலும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வலது பக்கம் ஒருக்களித்துப் படுக்காதே என்பது அவர்களின் அறிவுரை.
அவர்கள் கூறிய நூல்களில் எடுத்துக்காட்டிற்காக ஒன்றை போஜன குதூகலம் நூலில் இப்படி காணலாம்.
“சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே இருந்தால் தொந்தி அதிகரிக்கும். படுத்தால் உடல் பருக்கும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும், ஓடுபவனைக் கண்டு மரணம் ஓடும்.
மல்லாந்து படுப்பவன் எட்டு பங்கு மூச்சையும் வலது புறம் ஒருக்களித்துப் படுப்பவன் அதன் இரண்டு பாகங்களை பதினாறு மடங்கு) மூச்சை இழக்கிறான். ஆகையால் இரட்டைப் பங்கு மூச்சை செலவாக்கும் வகையில் சுகமாகப் படுக்க வேண்டும்,. எல்லாப் பிராணிகளுக்கும் தொப்புளுக்கு மேல் இடப்புறத்தில் செரிமானத்திற்குரிய உஷ்ணமுள்ளது. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்க இடது பக்கத்தில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்”.
மூச்சுக்கலையை முன்னிறுத்தி போஜன குதூகலம் ஆயுள் அதிகரிக்கவும் ஜீரணத்தை அதிகரிக்கவும் ஒரு எளிய வழியை இப்படிக் கூறுகிறது.
இதை அப்படியே இப்போது அறிவியல் ஆராய்ந்து தனது ஆய்வின் முடிவாகக் கூறுகிறது.
வலது பக்கத்தில் ஒருக்களித்துப் படுப்பதானது உங்கள் இதயம், நுரையீரல் ஆகியவற்றில் அழுத்தத்தை அதிகரித்து உங்கள் உடலின் இயக்கத்தை வெகுவாகப் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, வயிற்றுப்பகுதியில் மார்புப் பகுதியிலும் அதிக எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
அதே சமயம் இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதானது உங்கள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி உங்கள் ஜீரணத்தை சரியாகச் செய்கிறது.
ஒரு சின்ன உத்தி; ஆனால் பலனோ சொல்ல முடியாத அளவு பெரியது!
2. அத்துடன் மட்டுமின்றி முதுகெலும்பிற்கும் முதுகுப் பகுதிக்கும் இப்படிப் படுப்பது நல்லதல்ல. இது தொடர்ந்த முதுகுவலியைத் தரும். இரவு முழுவதும் முதுகெலும்பிற்குத் தரும் அழுத்தமானது உங்களுக்குப் பல சமயம் மரத்துப் போன உணர்வைத் தரும். காரணம் என்னவென்று தெரியாமல் நீங்கள் முழிப்பீர்கள்.
தலைக்கு ஒரு தலையணையையும் ஒருக்களித்துப் படுக்கும் போது வயிற்றுப்பகுதிக்குப் பக்கத்தில் ஒரு தலையணையையும் வைத்துப் படுப்பது நல்லது.
3. வலது பக்கம் படுப்பது தொடர்ந்து கழுத்து வலியை ஏற்படுத்தும்.
சீராக சுவாசிப்பது என்பது முடியாத ஒன்றாக ஆகிவிடும். கழுத்தும் முதுகெலும்பும் சீராக இணைந்து லயத்துடன் இருப்பதை இது போக்கி விடுகிறது. தூக்கம் சரியாக இல்லை எனில் அந்தப் பகுதியில் இருக்கும் gelatinous பகுதிகள் சேதமடையும். தொடர் கழுத்து வலி ஏற்படும்.
4. நீங்கள் ஒரு கர்ப்பமான பெண்மணியாக இருந்தால் எப்படிப் படுத்து உறங்குகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். அதிகமான அழுத்தம் ஏற்பட அது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு அதற்குத் தேவையான இடத்தைத் தராது. ஆகவே தான் டாக்டர்கள் இடது பக்கம்.
ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர்.
5. வலதுபக்கம் படுப்பது முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.
6. இது தேவையற்ற அழுத்தத்தை மார்பகங்களில் தந்து ஏராளமான பிரச்சினைகளை உருவாக்குகிறது. பெண்மணிகளுக்கு மார்பகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகம். ஆகவே மார்பகங்கள் சீக்கிரம் தளர்ந்து தொங்கி விடாமல் இருக்க வலது பக்கம் ஒருக்களித்துப் படுக்கவே கூடாது.
7. பின்பக்கம் படுத்து உறங்கலாம். இதுவும் மார்பகங்களைச் சீராக வைத்திருக்க உதவும்.
8. இதயம் சரியாக இயங்க இரத்த ஓட்டம் சீராக இருக்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதே சிறந்தது.
இப்படி நமது முன்னோர்கள் கூறியதை இப்போது நவீன அறிவியல் தனது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்துவது பிரமிப்பை ஊட்டுகிறது அல்லவா?
மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளிக்கிறார்
GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS
Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe
London Time 12 Noon
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
பிப்ரவரி 16-ம் தேதி
16-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி
ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
Prayer by Mrs Jayanthi Sundar Team
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
***
Bengaluru Nagarajan speaks on Tamil Poet Kambar
***
Mrs. Brahannayaki Sathyanarayan speaks on Bhavani Sangameswarar Temple
***
INTERVIEW WITH FAMOUS DANCER & TEACHER FROM MALAYSIA Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai .
LONDON SWAMINATHAN INTERVIEWS Mrs Usha Durai, founder and principal of Laasya Arts Academy .
GURUVAYUR USHA DURAI INTRODUCING NATYA ICON
Guru Srimati Mathura Natya Mamani Guruvayur Usha Dorai
Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai, is no stranger to the world of music as she was born into a family of acclaimed Carnatic singers and musicians from Kerala, India. It is to her father, Mridangam Maestro Guruvayur Dorai and her aunt, Tamilisai Maestro Guruvayur Ponnamal that she owes her artistic and creative visions.
The founder and principal of Laasya Arts Academy, Guruvayur Usha is a Bachelor Degree holder from Madras University, graduated in Sociology with music as an elective subject. She has made her dance debut under the tutelage of Smt.Indra Rajan and Shri Pandanallur Srinivasa Pillai with her “Arangetram” in 1983. As a testament of her dedication to her profession, the title of ‘MADURA NATYA MAMANI’ was conferred to her in 1986. She later pursued a diploma in Bharatanatyam. Her combination of talents as a dance/music teacher, choreography,composer and instrumentalist mastering not only the Nattuvangam but also mridangam, tabla and veena have made her an exceptionally rare breed of teacher.
Laasya Arts is her dream school which serves not only as a dance academy, but also as creativity hub where a lot of ideas are created and applied in musical, dance and theater arrangements. To date, Guruvayur Usha Dorai conducted 49 arangretrams, including 3 vocal arangetrams which each one is uniquely presented and far different from each other. Apart from that, she also has produced and backboned a lot of in-house and collaboration productions. Some of her significant productions are MURUGA CHARANAM, GOVINDA, MAA..!-A TRIBUTE TO MOTHERS, NRITHYA YOGA, SAMARPANAM, and MANTHRA TANTHRA.
Recently, she toured her production KAAPIYAM, all over India and received many good critics and credits to her effort in spreading the Tamil Literature works. Besides that, Guruvayur Usha serves her passion involving herself in choreography and orchestration. LAHARI, a production by Damaru Creations, crystallizes the teachings of Aadi Sankara into a well-received dance and musical production in Malaysia and Singapore which intensified credits to her talent in choreography. In addition, AMRAPALI HARMONY FUSION PROGRAMME by a Singapore based production company, GR Vision also utilizes her expertise in music dance and theater orchestration and it has been successfully touring the world. Not stopping there, she has indulged in some literary work where she has written 4 padha varnham lyrics, 3 shabdams and 7 padhams which is definitely helping her to soar higher in this artistic world.
All her efforts through these years had been fulfilled when she was conferred the title ‘Nrithya Aacharya’ and ‘Kalai Thaai’. It is also worth to note down that she aptly received the award ‘Queen of Nattuvangam’ in 2016 & Kappiya nattiya nayaki, Nattuva perarasi and along with Nattuvanga ratnakara award in the same year. Adding more to the list are Aryabhatta award, KARTANATAKA ( INDIAN AWARD) and KALA SAMMAN award by Bharatiya Samskrithi Club Kolkata in Kuala Lumpur. Other highlights in her life include life time achievement award by AIDA International and Natya Icon award by Veharra Arts Kuala Lumpur in 2020.
Life time achievement award by Sugam organisation in 2021.
Honorary Doctorate in 2022 from Kolkata university
Invitation by ICC to perform in Ayodhya in2022
2022 musical ensemble
Eesha Sarvesha
2023
Staged in three places in Tamilnadu
Eesha Sarvesha
Comprising 50 students
2024
Meenakshi a warrior princess ( music dance artistic director) Singapore Sarva fine arts
***
Kalyanji anchoring from India.
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
****
இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்
உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்
***
ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்
. ***
பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு – கவிச் சக்ரவர்த்தி கம்பர்
***
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளிக்கிறார் ;பேட்டி காண்பவர் – லண்டன் சுவாமிநாதன்
***
Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.
எல்லோருடைய கஷ்டங்களையும் இடையூறுகளையும் களைபவர் கணபதி என்று சொல்லிவிட்டார் சம்பந்தர் .
வடமொழியில் ஷோடச கணபதி என்று பதினாறு நாமங்களை நாம் தினமும் சொல்கிறோம். புரோகிதர்கள் மஞ்சள் பொடியில் பிள்ளையாரைச் செய்து பூக்களால் இந்த 16 நாமங்களைச் சொல்லி எல்லா பூஜைகளையும் தொடங்குவார்கள்.
ஓம் சுமுகாய நமஹ என்று சொல்லி பூஜைகளைத் துவங்குகிறோம்
மங்களம் வாய்ந்த ஸுமுகன்
ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்
கபில நிறம் வாய்ந்த கபிலன்
யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்
பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்
குள்ளத் தோற்றமுள்ள விகடர்
சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்
தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்
நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது
பூத கணங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்
நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய fala பாலசந்திரன்
யானை முகத்தையுடைய கஜானனன்
வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்
முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்
தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்
குரு குஹ என்பது தீக்ஷிதரின் எல்லா கிருதிகளிலும் வரும் முத்திரை .
vaathaapi
raagam: hamsadwani
taaLam: aadi
Composer: Muttuswaamee Dikshitar
Language: Sanskrit
pallavi
vaataapi gaNapatim bajEham |
vaaraNaasyam varapradam shree ||
anupallavi
bootaadi sam sEvita caraNam |
boota bowdika prapanca baraNam ||
veetaraagiNam vinata yOginam (shree) |
vishva kaaraNam vigna vaaraNam ||
(vaathapi)
caraNam
puraa kumba sambhava munivara prapoojitam |
trikONa madya gatam |
muraari pramukaat yupaasitam |
moolaadhaara kshEtraa stitam |
paraadi sattvaari vaakaatmagam |
praNava svaroopa vakratunDam |
nirandaram niDala candra kaNDam |
nija vaamakara vidrutEkshutanDam |
karaambuja paaSa beejaapooram |
kaloosha vidhooram bootaahaaram |
haraadi guruguha tOshita bimbam |
hamsadhwani booshita hErambam ||
(vaathapi)
இப்போது அவ்வையார் சொன்னதை மட்டும் எடுத்துக்கொள்வோம் .
விநாயகரின் அரைஞாண் தங்கத்தினால் ஆனது ; இந்துக்கள் ஆண்களாகப் பிறந்தால் அணிவது அரை ஞாண்; இப்போது அது மறைந்து ஜட்டி, அண்டர்வேர் வந்துவிட்டது.
அவர் இடுப்பில் இருப்பது வெண் பட்டு ஆடை;
பெரிய வயிறு, ஒற்றைத் தந்தம் உடையவர் (இன்னுமொரு தந்தத்தை முறித்து அதை பயன்படுத்தி மஹாபாரதத்தை எழுதினார்)
யானை முகம் உடையவர் ; இது ஓம்காரமான பிரணவ மந்திரத்தை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் ; இதை வாதாபி கணபதிம் பாடலில் காணலாம்;
ஒளி வீசும் பொட்டு, துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகளை உடையவர்; ஒரு கையில் ஐம்புலன்களை அடக்கும் பாசத்தை உடையவர்; நீலத் திருமேனி / கரிய உருவம் கொண்டவர் .
மூன்று கண்கள் சிவனுக்கும், தேவிக்கும், கணபதிக்கும் உண்டு ; மூன்றாவது கண் ஞானக் கண் .
மதம் வழிந்ததால் உண்டான தடங்களும் இரண்டு செவிகளும் இருக்கின்றன . விநாயகரின்ற முறம் போன்ற செவிகளை எல்லோரும் பாடுவதைக் கவனிக்க வேண்டும் ; சூர்ப்பகர்ணன் அவர் .
தங்க மகுடமும், மூன்று புரிகளை உடைய பூணூலும் அவரை அலங்கரிக்கின்றன.
தொடரும்…..
Tags- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 , மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்……..……..வாதாபி கணபதிம் பஜே, 16 நாமங்கள், vaataapi gaNapatim bajEham |