தமிழ் தெரியுமா 21125? – (Post No.14,126)

Written by London Swaminathan

Post No. 14,126

Date uploaded in Sydney, Australia – 22 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள் 

Across

1.ஒரு குடைக்கீழ் நாடு முழுவதையும் ஆளும் பேரரசன்

 3.ராமனின் தம்பி; சகுந்தலையின் புத்திரனுக்கும் அதே பெயர்.

5. பசும் பாலுக்கு வள்ளுவர் பயன்படுத்தும் சொல்

6.அறிவு 

8. தென்னாடு என்பதன் சம்ஸ்க்ருதச் சொல்; 

9.மனப்பாடம் செய்வதன் சொல் 

10.அரசிக்கும் இறைவிக்கும் பயன்படும் ஸம்ஸ்க்ருதச் சொல் 

12 புனுகுப் பூனையிலிருந்து வெளிப்படும் நறுமணத்துடன் மெழுகு போன்ற பொருள்+ சந்தனப் பொடி.

****

Down

1.நடனசபையின் தலைவன்

2. முருகனின் புகழ் கூறும் புராண நூல் 

3.தியாகேசன் குடிகொண்ட ஊர்  

4.இது ஒன்பது வகைப்படும் கற்கள்;

 7.சிவனடியார்கள் 63 பேரின் பொதுப்பெயர்.  go up

7.மகாராஷ்டிர சாது சந்நியாசி  go down 

11.இல்லை என்பதன்ன் எதிர்ப்பதம் go up

13.குளம் go up,

 1  2     3
         
 34     5
  6   7  
   8      
     10  
    11 12  13 

Answer

ச 1க்க 2ர்த்தி 3
பா  ந்  னா ரு
ப 3ர4ன்ன்ஆ5
தி த்பு 6  நா 7Arrow Symbol Clipart | Free Download ... ரூ
  தி 8ராவிம் ர்
ம9 ண/ னம் தே 10வி 
  ம்ம்ஆ11Arrow Symbol Clipart | Free Download ...ஜ 12வ்வா 13Arrow Symbol Clipart | Free Download ...து

–subham—

Tags–தமிழ் தெரியுமா 21125? –

துறவிக்குத் துப்பாக்கி தேவை இல்லை! (Post.14,125)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,125

Date uploaded in Sydney, Australia – –22 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

12-1-25 அன்று கல்கி ஆன் லைன் இதழில் பிரசுரிக்கப்பட்டது.

ஸ்வாமி விவேகானந்தர் ஜெயந்தி ஜனவரி 12

துறவிக்குத் துப்பாக்கி தேவை இல்லை!

ஸ்வாமி விவேகானந்தரும் இரண்டு  மன்னர்களும்!

ச. நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் அவரை சந்தித்து அதிசயமான அனுபங்களைப் பெற்றவர்களுள் மன்னர்கள் முதல் சாமானியர் வரை அனைவரும் அடங்குவர்.

இங்கு அவரைச் சந்தித்த இரண்டு மன்னர்களை மட்டும் காண்போம்.

கேத்ரிமன்னருடன் சந்திப்பு

1891 ஜூன் மாதம் 4ம் தேதி

ஸ்வாமி விவேகானந்தரை முதன் முதலாகச் சந்தித்த கேத்ரி மன்னர் அவரால் மிகவும் கவர்ந்து ஈர்க்கப்பட்டார்.

‘என் தலைநகருக்கு வந்து என்னுடன் வசிக்க வேண்டும்’ என்ற மன்னரின் வேண்டுகோளை ஏற்று ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் கேத்ரியை அடைந்தார் ஸ்வாமிஜி.

வேதாந்த பேச்சுக்கள், பஜனை, பாடல்கள், என நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அரண்மனையில் நடனமாது ஒருவரின் நிகழ்ச்சி நடக்க இருந்தது. அதில் கலந்து கொள்ள மன்னர் ஸ்வாமிஜியை அழைத்தார். ஒரு துறவி இதில் கலந்து கொள்வது அழகல்ல என்றார் ஸ்வாமிஜி.

இதனைக் கேள்விப்பட்ட நடனமாது ஒரு பாடலை உருக்கமாகப் பாடினார். “பிரபுவே எனது குறைகளை உனது மனதில் கொள்ளாதே! சமமாக பாவிப்பதே உனது பண்பு அல்லவா?” என்று தொடங்கியது பாடல். அடுத்த அறையிலிருந்து இதைக் கேட்டு மனம் உருகிய ஸ்வாமிஜி ஒரு நடனமாது என்று அவரைப் பார்க்காமல் இருப்பது சரியல்லவே என்று சிந்தித்தார். உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் அவர் இந்த சமபாவனையைக் கடைப்பிடித்தார். அவரிடம் பல பிரபல நடிகைகள் வந்து ஆசி பெற்று வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்தனர்.

இன்னொரு நிகழ்ச்சி.

ஸ்வாமிஜியும் மன்னரும் அடிக்கடி குதிரை சவாரி செய்து அருகில் உள்ள காடுகளுக்குச் செல்வதுண்டு. ஒரு முறை அப்படிச் செல்லும் போது அனைவர் கையிலும் துப்பாக்கி இருக்க ஸ்வாமிஜியிடம் மட்டும் ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. வழியில் அனைவரும் ஒரு மரத்தடியில் தங்கினர். அப்போது ஒரு புலி ஸ்வாமிஜி அமர்ந்திருந்த மரத்தின் அருகே சென்றது. மன்னரும் மற்றவர்களும் ஓடோடி வந்து அவரிடம் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். உடனே ஸ்வாமிஜி, “பாதுகாப்பிற்காக ஒரு துறவிக்குத் துப்பாக்கி தேவையில்லை. எந்தப் புலியும் அவர்களை ஒன்றும் செய்யாது. என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக்கூடாது” என்று கூறி துப்பாக்கி வாங்குவதை மறுத்து விட்டார்.

மன்னர் பாஸ்கர சேதுபதியுடன் சந்திப்பு

ஸ்வாமிஜியின் அபார அறிவாற்றலால் கவரப்பட்டவர் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி! அவரை சர்வமத சபையில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார் அவர்.

சிகாகோவில் மாபெரும் உரை நிகழ்த்தி அமெரிக்காவையே கவர்ந்து பின்னர் இந்தியா வரும் போது முதலில் அவருக்கு மாபெரும் வரவேற்பைக் கொடுத்தவர் பாஸ்கர சேதுபதியே.

1897 ஜனவரி 15ம் நாள் கொழும்பு வந்த ஸ்வாமிஜி இலங்கையில்  சில நாட்கள் தங்கினார்.  ஜனவரி 26ம் நாள் அவரை பாம்பனில் வரவேற்க அலங்காரப் படகு ஒன்றில் மன்னர் பாஸ்கர சேதுபதி வந்தார். அந்தப் படகில் ஏறிய ஸ்வாமிஜியை சேதுபதி சந்தித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. ஸ்வாமிஜியின் செருப்புகளை அவர் பாதத்தில் அணிவித்தபடியே சேதுபதி, “விலை மதிக்க முடியாத வைரத்தை என் தலையில் சூடுவதை விட இதனைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று பக்திப் பரவசத்துடன் கூறினார்.

ஸ்வாமிஜியை ஊர்வலமாக ரதத்தில் அமர்த்தி தன் பரிவாரங்களுடனும் பக்தர்களுடனும் சென்ற சேதுபதி மன்னர் சிறிது தூரம் சென்ற பின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே ரதத்தை இழுத்துச் செல்லலானார்.

பின்னர் இன்னொரு நாள் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார் ஸ்வாமிஜி. அப்போது மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு ராஜரிஷி என்ற பட்டத்தைச் சூட்டினார் அவர். மன்னராக இருக்கும் போதே முனிவராகவும் திகழ்கின்றார் என்ற அந்தப் பெருமையைப் பெற்றவரானார் சேதுபதி!

இப்படி காஷ்மீர் மன்னர், கட்ச் மன்னர், ஆள்வார் மன்னர் உள்ளிட்ட மன்னர்கள் அவர் பால் ஈர்க்கப்பட்டு அடைந்த அனுபவங்கள் பல.

***

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 10(Post.11,124)

Venkateswara Temple

Written by London Swaminathan

Post No. 14,124

Date uploaded in Sydney, Australia – 21 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவில் 50 இந்துக் கோவில்கள்

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேஷியாவிலுள்ள இந்து வணிகர்கள் முதலில் ஆஸ்திரேலிய பழங்குடி இ மக்களுடன் தொடர்பு கொண்டனர்

ஆஸ்திரேலியாவில் சுமார் ஐம்பது இந்தக் கோவில்கள் இருக்கின்றன மேலும் மேலும் புதிய கோவில்களும் உருவாகிவருகின்றன . இந்துக்கள் வசிக்கும் முக்கிய நகரங்களில் இந்துக்கள் வசிக்கும் இடங்களில் கோவில்களில் நல்ல கூட்டம் வருகிறது மிகப்பெரிய நாடான ஆஸ்திரேலியாவில் கிழக்கு கடற்கரையை ஒட்டியே பெரும்பாலான மக்கள் வசிக்கின்றனர்; இந்துக்க——க்கும் இது பொருந்தும்

கிழக்குக்கடற்கரையை ஒட்டிய சிட்னி நகரில்தான் அதிக இந்துக்கள் வசிக்கின்றனர்; அடுத்தப்படியாக மெல்போர்ன் என்று புள்ளி விவரங்கள் தெரிவி க்கி ன்றன.

இரண்டு பெரிய இந்திய நகரங்களின் ஜனத்தொகைக்குச் சமம்தான்  மொத்த ஆஸ்திரேலிய ஜனத்தொகை .270 லட்சம்தான்

Australia’s population was 27,204,809 people at 30 June 2024.

இதில் ஏழு லட்சம்தான் இந்துக்களின் எண்ணிக்கை.

1971 – சுவாமி பிரபுபாத வந்து ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் துவக்கினார்.

1977 – The first Hindu temple in Australia, the Sri Mandir Temple, மூன்று  இந்துக்கள் சேர்ந்து சிட்னி வட்டாரத்தில் முதல் கோவிலைத் துவக்கினார்கள் ; இதன் பெயர் ஸ்ரீ மந்திர ர்.

மொத்த மக்கட்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை மூன்று சதவிகிதத்துக்கும் குறைவுதான் ; பார்லிமெண்டில் 2015– முதல் இந்து உறுப்பினர்கள் சிலர் அங்கம் வகித்து வருகின்றனர்

இதைத்தொடர்ந்து பல கோவில்கள் பல நகரங்களில் கட்டப்பட்டன

ஒவ்வொரு நகரமாகக் காண்போம்

ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்தான் ஆகம விதிப்படி கட்டப்பட்ட முதல் இந்துக் கோவில். 1985 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது . பின்னர் ஏனைய கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.

Murugan Temple

சிட்னி முருகன் கோவில்

பிரிஸ்பேன் நகரில் செல்வ விநாயகர் கோவில்

சிட்னி நகர ஸ்ரீ கற்பக விநாயகர்-என்பன குறிப்பிடத் தக்கவை.

மிண்டோ என்னுமிடத்தில் சிவன் கோவில் இருக்கிறது

இவை தவிர நியூசவுத்வேல்ஸ் , சிட்னி வட்டாரத்தில் சாயி மந்திர், ராகவேந்திர சுவாமிகள் மடம், துர்கா கோவில் உள்பட பல சிறிய கோவில்க—-ம் உள்ளன

Sri Venkateswara Temple Helensburgh Limited NSW Australia

4.7(5K) · Hindu temple

Helensburgh NSW · (02) 4214 9080

Sydney Murugan Temple

4.8(4.9K) · Hindu temple

Mays Hill NSW · (02) 9687 1695

Shri Shiva Mandir

4.7(2.4K) · Hindu temple

Minto NSW · (02) 9820 1094

****

இதற்கு அடுத்தபடியாக மெல்போர்ன் நகரினைக் குறிப்பிட்ட வேண்டும்  அங்கும் அதிகமாக இந்துக் கோவில்கள் இருக்கின்றன.

மெல்போர்ன் நகரிலுள்ள குறிப்பிட்டத தக்க கோவில்கள்

மெல்போர்ன் முருகன் கோவில் ,வக்ரதுண்ட விநாயகர் கோவில், குஜராத்திகள் சுவாமி நாராயண் மந்திரர், ஷீர்டி சாயி சமஸ்தான,   ஸ்ரீ வேங்கட கிருஷ்ண பிருந்தாவனம்

சிவா விஷ்ணு கோவில், துர்கா கோவில், சங்கட மோசன் ஹனுமார் கோவில்.

•           BAPS Temple, Melbourne

•           Sri Venkata Krishna Brundavana, Melbourne

•           Shiva Vishnu Temple, Melbourne

•           Durga Temple, Melbourne

•           Shirdi Sai Sansthan, Melbourne

•           Sankatamochan Hanuman Mandir, Melbourne

•           Melbourne Murugan Temple, Melbourne

•           Sri Vakrathunda Vinayagar Temple, Melbourne

****

மேற்கு ஆஸ்திரேலியக் கோவில்கள்

சிட்னி நகருக்கு நேர் எதிர்ப்புறம் உள்ளது மேற்கு ஆஸ்திரேலியா ஆகும்.  இரண்டுக்குமிடையே உள்ள இடைவெளி 2500 மைல்கள்

அங்கு பெர்த் என்னும் நகரில் இந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர் . அங்குள்ள ஸ்ரீ ராமர் கோவில்தான் நாட்டிலேயே பெரிய கோவில்.

பெர்த் நகரில் பால முருகன் கோவில், சிவன் கோவில், சுவாமி நாராயண் கோவில் முதலிய கோவில்களும் இருக்கின்றன.

·         Perth Ram Temple, Perth (biggest temple in the country)

·         Perth Shiva Temple, Perth

·         Bala Murugan Temple, Perth

·         Shree Swaminarayan Temple, Perth

மெல்போர்ன்விக்ட்டோரியா மாகாணத்தில் உள்ளது . சிட்னி,  நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது . பெர்த் என்னும் நகரம் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் உள்ளது.

****

நாட்டின் தலைநகர் கான்பெர்ராஅங்கும் ஹிந்துக் கோவில்கள் இருக்கின்றன.

ஸ்ரீ விஷ்ணு சிவா மந்திர் கான்பெர்ரா சைவ கோவில்ஹிந்து கோவில்ப்ளோரிஹரே கிருஷ்ணா கோவில் சுவாமிநாராயண் கோவில்  முதலியன தலை நகர வட்டாரத்தில் Australian Capital Territory ACT இருக்கின்றன.

Mandir Address: BAPS Shri Swaminarayan Mandir, 236 Robin Boyd Cres, Taylor, ACT 2913 Canberra Australia

Hindu Temple Florey

4.7(318) · Hindu temple

Florey ACT · (02) 6259 3057

Sri Vishnu Shiva Mandir

4.7(361) · Hindu temple

Mawson ACT · (02) 6286 6404

Canberra Saiva Temple

4.6(64) · Hindu temple

Torrens ACT · (02) 6286 8919

ISKCON Canberra
Address: 17 Whittle St, Hughes
ACT 2605

****

நான் பார்த்த ஆஸ்திரேலியக் கோவில்கள்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்! (Post No. 2501)

Written by london swaminathan

Date: 2 February 2016

 இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் பல நகரங்களில் தமிழர்களும் ஏனைய வட இந்திய இந்துக்களும் பல கோவில்களைக் கட்டி வழிபடுவதை என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு, இரண்டு கோவில்களுக்குள் மட்டுமே உள்ளே சென்று வழிபடும் பாக்கியம் கிட்டியது. சிட்னியிலுள்ள அம்மன் கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போனோம்.

சிட்னி முருகன் கோவிலுக்குச் சென்றோம். நல்ல சாந்நித்யம் மிகுந்த கோவில். ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் லண்டன் வீடுகளைப் போல பல மடங்கு பெரியவை. அது போலவே கோவில்களும் நல்ல விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளன.

சிட்னி முருகன் கோவில் பிரகாரத்தில் ஒரு பெரிய வெள்ளி மயில் வாகனத்தைக் கண்டு படம்பிடித்தேன். கோவில்கள் என்பன, இந்தியப் பண்பாட்டின் கலாசார மையங்களாக விளங்கி வந்துள்ளன. இப்பொழுதும் அவ்வாறே பல இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும், பிறந்த நாள் விழா, சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம் ஆகியவற்றுக்கும் உறைவிடமாக அமைந்துள்ளன. நாங்கள் சிட்னி முருகன் கோவிலுக்குள் நுழைந்தபோது பலர் சூட்டும் கோட்டுமாக வந்து கொண்டிருந்தனர். காரணம் அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு கல்யாணம்.

பிரகாரத்தைச் சுற்றி வருகையில் எதிர்வரும் இன்னிசைக் கச்சேரி நோட்டிஸைப் பார்த்து மகிழ்ந்தேன். அவர் ஒரு உள்ளூர் பாடகர் என்பதையும் அறிந்தேன்.அதேபோல சைவ பாடசாலை என்ற போர்டும் பெரிதாகத் தெரிந்தது. நான் வழக்கமாகப் போகும் கோவில்களில் மட்டும் அர்ச்சனை செய்வேன் மற்ற கோவில்களில் உண்டியலில் காசு, பணம் போட்டுவிடுவேன். அவாறு செய்துவிட்டு வெளியே வந்தோம்..

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் 

சிட்னி நகரத்துக்கு வெளியே ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலும் அதை ஒட்டி சிவன் கோவிலும் உள்ளன. ஒரே கோவிலை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் வெவ்வேறு சைவ , வைஷ்ணவ அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கோவிலும் மிகப் பெரிய கோவில். ஊருக்கு வெளியே இருந்தபோதிலும் இங்கும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். பல சுற்றுலா இடங்களுக்குப் போகும் வழியிலிருப்பது இதன் சிறப்பு. கோவிலுக்கு எதிர்த்தாற்போல ஒரு மிருகக் காட்சிசாலையும் உள்ளது. அங்கே கட்டணம் கொடுத்து கங்காரு, கோவாலா போன்ற மிருகங்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தோம். 

இந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போர்டு எழுதி வைத்திருப்பதால் அதை மதித்து போட்டோ எடுக்காமல் வந்தேன். ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் அர்ச்சகரின் அனுமதி பெற்று எடுத்தேன். சிவன், முருகன், பாலாஜி சந்நிதிகள் தனித் தனியே உள்ளன. 

கோவில்களை ஆதரிப்பது நமது கடமை.இறைவனை தரிசித்து அருள் பெறுவது நமக்கு நன்மை.

****

My Visit to Sydney Murugan Temple in Australia (Post No.14,050)

Written by London Swaminathan

Post No. 14,050

Date uploaded in Sydney, Australia – 4 January 2025

****

Sri Venkateswara Temple at Helensburgh, Australia (Post No.14,014)

Written by London Swaminathan

Post No. 14,014

Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024 .            

—subham—

Tags–ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள், சிட்னி முருகன் கோவில், வெங்கடேஸ்வரா கோவில், கான்பெர்ரா, மெல்போர்ன், பெர்த், சிட்னி , மிண்டோ, ஹெலென்ஸ்பர்க்

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை -14(Post.14,122)

Written by London Swaminathan

Post No. 14,122

Date uploaded in Sydney, Australia – 21 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 14

29. அக்கச்சி

1. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி

மயில்குயில் ஆச்சுதடி.

2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்

வள்ளலைக் கண்டேனடி – அக்கச்சி

வள்ளலைக் கண்டேனடி.

3. சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்

சோதியைக் கண்டேனடி – அக்கச்சி

சோதியைக் கண்டேனடி.

4. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்

ஐயரைக் கண்டேனடி – அக்கச்சி

ஐயரைக் கண்டேனடி.

இந்தப்பாடலில் வள்ளலாரின் ஆன்மீகப் பயணத்தைக் காண்கிறோம்.

பிரபல பாகவதர்கள் அனைவரும் மாண்டு ராகத்தில் பாடிய அருமையான பாடல் இது . அக்கச்சி என்பது அக்காள் என்ற பொருளில் வருகிறது

முதலில் மயில் என்னும் மாயக் காட்சி நீங்கி ஓம்கார ஒலியைக் கேட்கிறார்- குயில் மூலமாக .

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

          மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி

          மயில்குயில் ஆச்சுதடி.

     வானம் என்பது சிதாகாசம். மயிலாடக் கண்டேன் என்பது சிதாகாச ஞானக் காட்சி; சிவக் காட்சியுமாம். சிவத்தைக் கண்டு சத்தியைத் தரிசித்தமை விளங்க, “மயில் குயில் ஆச்சுதடி” என்று விளம்புகின்றாள். மயிலை விந்து என்றும், குயிலை நாதம் என்றும் கூறுவதுண்டு. இங்கே மயில் குயிலானதாகக் குறிக்கப்படுகின்றது. இனிமையான இசை போன்ற குயிலின் ஒலி பிரணவ நாதத்திற்கு ஒரு அடையாளமாம். அகத்தில் உள்ளது நிலையான ஒளி. ஆடும் மயில் ஆகும். அதுவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நாத வண்ணமாகிப் புறத்தில் சதா சுற்றிக் கொண்டேயிருக்கின்றது.என்று சுவாமி சரவணானந்தா எழுதியுள்ளார்.

***

இரண்டாவது கண்ணியில் அருணகிரிநாதர் போல பேசா அனுபூதி கிடைத்ததை பாடுகிறார் ; உபநிஷத்துக்களும் எங்கு சொற்கள் செல்லாதோ, வார்த்தைகளை விளக்கமுடியாதோ அதுவே பிரமம் என்கிறது முதலில் ஆடுவர்; பாடுவர்; ஏனையோருக்கும் அதை எடுத்துரைப்பர்; ஒரு நிலையை அடைந்தவுடன் துள்ளல்– அதாவது ஆட்டபாட்டம் எல்லாம் அடங்கிவிடும் எப்போது ?  மன்றில் ஆடிக்கொண்டிருக்கும் அமபலவாவணனைக்  கண்டவுடன்.

****

மூன்றாவது கண்ணியில் சந்யாச நிலையை அடைந்தைக் காட்டுகிறார். சன்யாசம் எடுப்போர் எல்லா வேற்றுமைகளையும் நீக்கி, பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்ற நிலையை அடைவார்கள்; அவர்களுக்கு சொந்த உறவினர் இல்லை;. சாதி சமயம் இல்லை; எல்லோரும் சமம்; எவருக்கும் அருள்பாலிப்பார்; அது பயன்தருவது அவரவர் ஏற்கும் கொள்கலனைப் பொருத்தது  அதாவது வினைப்பயனைப் ஒத்தது.  அதுபோல வள்ளலாரும் சாதி சமய வேற்றுமைகளை அகற்றி உயர்நிலையை அடைந்ததைக்  காட்டும் வரிகள் இவை .

அந்த நிலையில் அவர்கள் காண்பது ஜோதி.

இதனால்தான் உபநிஷத்தும்  தாமஸோ மா ஜ்யோதிர் கமய என்று இயம்பியது .

மஹாத்மா காந்தியும் உண்மையே கடவுள் என்பார் ; உண்மைஎது என்பதை நம் மனச் சாட்சியே சொல்லும். மனுவும் கூட முதலில் அற நூல்களை பின்பற்று; அது புரியாவிட்டால் ஆன்றோர்கள் வாக்கினை கவனி; அதிலும் மனக்குழப்பம் ஏற்பட்டால் உன் மனச் சாட்சிப்படி நடந்து கொள் என்று மனு விளம்பினார் இப்படி அவர் பகர்ந்ததற்கு காரணம் சூது வாது, களவு காமம் கொலை , கோபம் எல்லாவற்றிலும் எது சரி என்பதை நம் மனச்சாட்சி சொல்லும் அதையும் மீறி நாம் தவறுசெய்தால் அதன் தீய பலனை அனுபவிக்கிறோம்.

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் என்பது அசததோமா சத் கமய என்ற உபநிஷத் வாக்கியம் ஆகும்; மாயத்தை உண்மையென நம்பியது பொய்- அதாவது அசத்தியம் . ஸத் என்பது உண்மைப்பொருள் பற்றிய ஞானம்

பொய்யை/- மாயத்தை- ஒழித்து வள்ளலார் உயர் நிலையை அடைந்ததை இந்தச் சிறிய பாடல் கற்பிக்கிறது இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்

பிருகதாரண்யக உபநிஷாத மந்திரம் :

ஓம் அஸதோ மா ஸத் கமய

தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

ஓம் சாந்தி(ஸ்) சாந்தி( ஸ்) சாந்திஹி

அறியாமையிலிருந்து என்னை மெய்யான ஞானத்துக்கு அழைத்துச் செல்;

இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்;

பிறப்பு – இறப்பு என்னும் சூழலிலிருந்து என்னை மரணமில்லாப் பெருவாழ்வு நிலைக்கு அழைத்துச் செல்  – என்பதாகும்.

ॐ असतो मा सद्गमय ।

तमसो मा ज्योतिर्गमय ।

मृत्योर्मा अमृतं गमय ।

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Asato Maa Sad-Gamaya |

Tamaso Maa Jyotir-Gamaya |

Mrtyor-Maa Amrtam Gamaya |

Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:

1: Om, (O Lord) From (the Phenomenal World of) Unreality, make me go (i.e. Lead me) towards the Reality (of Eternal Self),

2: From the Darkness (of Ignorance), make me go (i.e. Lead me) towards the Light (of Spiritual Knowledge),

3: From (the World of) Mortality (of Material Attachment), make me go (i.e. Lead me) towards the World of Immortality (of Self-Realization),

4: Om, Peace, Peace, Peace.

இருளிலிருந்து என்னி ஒளிக்கு ழைத்துச் செல்வாயாகுக என்பது இதன் பொருள்; அறியாமை என்பதே இருள்.

—-SUBHAM—

Tags–வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை -14

ஶ்ரீ வேதாந்த தேசிகர் – 2 (Post No.14,122)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,122

Date uploaded in Sydney, Australia – –21 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

19-1-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஓளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

ஶ்ரீ வேதாந்த தேசிகர் – 2

13) ஸ்ரீ தேவநாயக பஞ்சாஷத்

53 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்துதியில் தேவநாதனைப்

போற்றுகிறார் தேசிகர். அடியார்க்கு மெய்யன் என்ற பெயர் கொண்ட இறைவன்

கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திபுரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து

வருகிறான். (திருவஹிந்திபுரம் என்றும் அழைக்கப்படும்) இந்த தலத்தில்

வேதாந்த தேசிகர் பல காலம் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த இல்லத்தை இங்கு

காணலாம். தேசிகர் வெட்டிய கிணறும் இங்கு உள்ளது.

14) ஸ்ரீ அச்சுத சதகம்

101 சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீ அச்சுத சதகம்

திருவயிந்திபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடும் நூலாகும்.

15) ஸ்ரீ மஹாவீர வைபவம்

உரைநடையிட்ட செய்யுள் நூலாக அமைந்திருக்கும் சம்ஸ்கிருத நூலான

இதில் 96 உரைநடை வரிகள் செய்யுளைக் காணலாம்.

பெரும் வீரனான ஸ்ரீ ராமரின் சரிதம் வால்மீகி ரிஷியால் ஏழு காண்டங்களில்

ராமாயணமாகத் தரப்பட்டுள்ளது. அதைச் சுருக்கமாக கம்பீரமான

வார்த்தைகளைத் தொடுத்து அழகுறத் தருகிறார் தேசிகர் இதில்.

இது ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படுகிறது

16) ஸ்ரீ கோபாலவிம்ஷதி

21 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கோபாலவிம்ஷதி.

திருவயிந்திபுரத்தில் பசுககளை மேய்க்கும் இடையனான

கோபாலகிருஷ்ணனின் கோவில் ஒன்று உள்ளது.

அந்த க்ருஷ்ணனின் லீலைகள் இந்தத் துதியில் புகழப்படுகிறது.

17) ஸ்ரீ தேஹாலிஷஸ்துதி

28 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ தேஹாலிஷஸ்துதி.

திருக்கோவலூர் திருத்தலத்தில் ஆயனார் என போற்றப்படும் த்ரிவிக்ரமன்

கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார். திருக்கோவலூர் என்பதை

சம்ஸ்கிருதத்தில் கோபபுரம் என வழங்குவர்.

இந்த இறைவனின் துதியே ஸ்ரீ தேஹாலிஷ ஸ்துதி.

19) பூ ஸ்துதி

33 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய பூ ஸ்துதி விஷ்ணு பத்னியான

 பூமா தேவியைக் குறித்த துதியாகும்.

20) ஸ்ரீ கோதா ஸ்துதி

29 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீ கோதா ஸ்துதி சூடிக் கொடுத்த

சுடர்க்கொடியான ஆண்டாளைத் துதிக்கும் துதியாகும்.

வேதாந்த தேசிகர் பிரசித்தி பெற்ற தலமான ஸ்ரீ வில்லிப்புத்தூரை ஒரு நாள்

மாலை நேரத்தில் அடைந்தார். அன்று திரயோதசி தினம். மௌனமாக இருக்க

வேண்டிய தினம் அது. நரசிம்மரைத் தியானிக்க உகந்த நாள். ஆனால் அன்று

ஆண்டாளின் ஊர்வலம் ஒன்று கிளம்பி தேசிகரின் வீட்டு வழியே சென்றது.

அவ்வளவு தான். பரவசம் அடைந்த தேசிகர் தனது மௌனத்தை விட்டு விட்டு

ஸ்ரீ கோதா ஸ்துதியைப் பாடலானார்.

21) ந்யாச தசகம்

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ந்யாச தசகம். இறைவனிடம்

சரணாகதி அடைந்த ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை

எடுத்துரைக்கிறது இது.

22) ந்யாச விம்ஷதி

22 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ந்யாச விம்ஷதி இதற்கு தேசிகரே

பாஷ்யம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

ப்ரபத்தி என்னும் சரணாகதியின் அங்கங்கள் ஐந்து;

1) அநுகூல்ய சங்கல்பம் : இறைவன் விரும்பியதைச் செய்வதாக முடிவு

எடுப்பது

2) ப்ரதிகூல்ய சங்கல்பம் : இறைவன் விரும்பாதவற்றைச் செய்யாமல்

இருப்பது

3) மஹா விஸ்வாஸம் : இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை

கொள்வது

4) கோப்த்ரித்வ வரணம் : இறைவனைப் பாதுகாவலான இருக்கக்

கோருவது

5) கார்பண்யம் : பூரண சௌமியமும் எளிமையும் கொள்வது

23) ந்யாசதிலகம்

32 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ந்யாசதிலகம். ப்ரபத்தி பற்றி தேசிகர்

இயற்றிய ஸ்தோத்திர நூல்களில் மூன்றாவதாக அமைவது இது.

(முதல் இரண்டு – ந்யாச தசகம், ந்யாச விம்ஷதி)

ஸ்ரீ ரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாதரை நோக்கி அமையும்

துதிப்பாடல்கள் இவை.

24) சுதர்சனாஷ்டகம்

8 + பலஸ்துதி, ஆக 9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய சுதர்சனாஷ்டகம்

மிகவும் பிரசித்தமான ஒன்று. விஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தை நோக்கி

செய்யப்படும் துதிகள் இவை. விஷ்ணுவின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில்

முதலாவதானது சுதர்சனம்.

கவிதை ஜாலங்களுடன் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மூலம் தேசிகர் இந்த

அஷ்டகத்தில் சுதர்சனரைப் போற்றுகிறார்.

திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தோரின் கொடிய ஜுரம் போக இந்த

அஷ்டகத்தை தேசிகர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு சாரார்

தேசிகர் வாதுக்குச் செல்லு முன் இதை இயற்றி வாதுக்குச் சென்றதாகவும்

மற்ற தத்துவங்களை முன்வைத்தோர் தோற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

25) ஷோடசாயுத ஸ்தோத்ரம்

19 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஷோடசாயுத ஸ்தோத்ரம். ஒரு

சமயம் திருப்புட்குழியில் வாழ்ந்தோர் கொடிய ஜுரம் ஒன்றினால்

பாதிக்கப்பட்டு வருந்த, அப்போது தேசிகர் இதை இயற்றி அவர்களின்

ஜுரத்தைப் போக்கடித்ததாகக் கூறப்படுகிறது.


26) ஸ்ரீ கருட தண்டக:

4 + 3 ஆக 7 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட தண்டகம்.

ஒரு சமயம் சர்வதந்த்ர சுதந்த்ர பட்டம் கொண்ட வேதாந்த தேசிகரை

பாம்பாட்டி ஒருவன் சவாலுக்கு அழைத்தான். தன்னால் கட்டவிழ்த்தப்படும்

பாம்பை அவரால் அடக்க முடியுமா என்று கேட்டான்.

உடனடியாக தேசிகர் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு கட்டுண்டது.

உடனடியாக ஒரு கருடன் வந்து அதைக் கொத்திக் கொண்டு போனது. இதைக்

கண்டு திடுக்கிட்டு வியந்த பாம்பாட்டி தேசிகரிடம் மன்னித்து அருளுமாறும்

அது ஒன்று தான் தன் பிழைப்புக்கான சாதனம் என்றும் வேண்ட தேசிகர்

இரக்கம் கொண்டு இந்த தண்டகத்தைப் பாட கருடன் திரும்பி வந்து பாம்பைக்

கீழே போட்டது.

27) ஸ்ரீ கருட பஞ்சாஷத்

52 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட பஞ்சாஷத்.

கருடரை தியானித்த தேசிகருக்கு கருடன் தரிசனம் தந்து ஹயக்ரீவ

மந்திரத்தை உபதேசித்தார்.

   28) ஸ்ரீ யதிராஜ சப்ததி

74 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ யதிராஜ சப்ததி. இதில்

அனைத்து ஆசாரியர்களையும் குறிப்பிடுகிறார் தேசிகர். விஷ்ணுவில்

ஆரம்பித்து பெரிய நம்பியில் முடிக்கிறார்.

ராமானுஜரின் மஹத்தான அருமை பெருமைகள் தேசிகரால்

விரித்துரைக்கப்படுகின்றன.

இப்படி ஏராளமான தேசிகரின் பெருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. அவரை வணங்கிப் போற்றுவோம். 

நன்றி வணக்கம்.

 Hindu Crossword2012025 (Post.14,121)

Written by London Swaminathan

Post No. 14,121

Date uploaded in Sydney, Australia – 21 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

20125

1  2 34    
           
        5  
67         
8   9      
           
10          
          11

Across

1.Worshipped in Shirdi shrine.

4.Country ruled by Karna.

6.Rock, Mountain, Stony in Sanskrit

8.Great Upanishad Saying –You are That

10.Great hero hanged with Rajguru, Tatya Tope by the British.

****

Down

1.Gujarat City famous for Diamond Industry

2.Big; First word of the oldest Upanishad

3.Name of India as well as two great Hindu Kings

5. The Sanskrit word XXXXX has multiple meanings, including “mental tendencies“, “karmic imprints”, and “habitual patterns”. 

7.always, for ever in Sanskrit and other Indian languages

9.Article, composition; also author of Mahabharat.

11. (Go up) Grand old leader in Mahabharat; a celibate; also known as Devavrata.

ANSWER

S1AIB2AB3A4NGA 
U  R H    A
R  H A  V5 M
A6S7MA R  A H
T8ATTV9AMASIS
 D  YT  A I
B10HAGATSINGH
 A  S   A B11

–SUBHAM—

TAGS- Hindu Crossword2012025 

GNANAMAYAM 19-1-2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

19-1-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

GNANAMAYAM SUNDAY BROADCAST 19-1-2025

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer

****

World Hindu News in Tamil was presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan spoke on VEDANTA DESIKAR.

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  AYODHYA MANDIR from Bengaluru.

***

Singapore Writer Dr M S SRI LAKSHMI Spoke on Periyalwar

***

London Swaminathan from Sydney, Australia and Kalyanji from India anchored.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – அயோத்யா

***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — வேதாந்த தேசிகர்

***

சிங்கப்பூர் எழுத்தாளர் முனைவர் எம் எஸ் ஶ்ரீ லக்ஷ்மி,  பெரியாழ்வார் பற்றிய ஆராய்ச்சி உரை நிகழ்த்தினார்.

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 19-1-2025 ,  summary ,GNANAMAYAM BROADCAST, three continents

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் (Post No.14,120)

Written by London Swaminathan

Post No. 14,120

Date uploaded in Sydney, Australia – 20 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்


அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19–ம் தேதி 2025-ம் ஆண்டு

****

(Collected from popular newspapers and edited b me)

முதலில் கும்பமேளா செய்தி!

உலகிலேயே மிகப்பெரிய விழாவான, மகத்தான

கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி துவங்கியது .

உலகையே வியக்க வைக்கும் விழா கும்பமேளா ; 12 ஆண்டுக்கு ஒரு முறை திரிவேணி சங்கமம் என்றும் சங்கம் என்றும் அழைக்கப்படும் பிரயாகையில் நடைபெறும்.  இந்துக்களின் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்று கங்கா ஸ்நானம் ; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் செங்குட்டுவன் தனது தாயாரை அழைத்துச் சென்று கங்கா ஸ்நானம் செய்வித்தான்.

இரண்டாவது  முறை  புனித  இமய  மலையில்  கல்  எடுத்து  புனித  கங்கை  நதியில்  நீராட்டி  பத்தினித்   தெய்வம்  கண்ணகியின்   சிலையை  வடித்தான் . அப்பேற்பட்ட  புனித  கங்கையில்  கும்ப  மேளா  நேரத்தில்  நீராடுவது   கோடி  புண்யத்தை  அளிக்கும்  .

பிரயாகைக்குச் செல்ல முடியாவிட்டால், கங்கா நதி  ஓடும்  இடமெல்லாம்  மக்கள்  நீராடுவர்  .

முதல்  நாளன்றே  பிரயாகையில்  ஒரு  கோடிக்கு  மேலானோர்  நீராடினார்கள் இதுவரை எட்டு  கோடி பேருக்கு மேல் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பர் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பல பிரமுகர்கள் புனித நீராடினார்கள் .

சங்க இலக்கியத்தில் கங்கையையும் இமயத்தையும் நிறைய இடங்களில் சங்க புலவர்கள் போற்றுகிறார்கள்; சிந்து நதி பற்றி எங்குமே குறிப்பு கிடையாது. கங்கை யமுனா இரண்டு நதிகளையே பாடினர்.

இந்த கும்பமேளா விழா மூலம்உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலுள்ள பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாயும் கிட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கணக்குப் போட்டுள்ளார்கள்.

கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்பட்டிருக்கும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ளது

மகா கும்பமேளாவின்போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்கும், ஆன்மாவை தூய்மைப்படுத்தும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலையாகி முக்தி அடைய உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மஹா கும்பமேளாவில் பங்கேற்க மூத்த குடிமக்களுக்கு இலவச யாத்திரை பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக கோடிக்கணக்கானோர் வருகை தருவதால் கழிவு மேலாண்மையை கையாள்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதற்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் பல்வேறு ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது.

நாளொன்றுக்கு 16 மில்லியன் லிட்டர் மனிதக் கழிவையும், 240 மில்லியன் லிட்டர் கழிவு நீரையும் கையாள்வது சாதாரண செயல் அல்ல. அந்த பணிக்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் இணைந்து உருவாக்கிய HYBRID GRANULAR SEQUENCING BATCH REACTOR என்ற சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

மாபெரும் ஆன்மிக விழாக்களை தொழில்நுட்பங்கள் மூலம் எப்படி கையாள்வது என்பதற்கு உதாரணமாக மகாகும்பமேளா மாறியிருக்கிறது. கழிவு மேலாண்மையில் இந்திய தொழில்நுட்பங்கள் எந்தளவுக்கு பலன் தரும் என்பதை உலகுக்கு மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன மகாகும்பமேளாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.

உலக நாடுகள் அனைத்தும் இவ்வளவு பெரிய விழாவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்கள் எப்படி  வெற்றிகரமாக நத்துகின்றனர் என்று மூக்கின் மேல் விரல் வைத்து வியந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக அராபிய, பாகிஸ்தானிய பத்திரிகைகள் இதில் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.


இந்துக்களின் மகத்தான சக்திக்கு கங்கா நதி ஒரு எடுத்துக்காட்டு. உலகிலேயே பழமையான புஸ்தகமான  ரிக் வேதத்தில் முப்பது நதிகளைக் குறிப்பிடுகையில் கிழக்கிலுள்ள கங்கை நதியையே முதலில் வைத்துள்ளனர் .

தீபாவளி தினத்தன்று யார் எங்கு குளித்தாலும் அது கங்கா ஸ்னானத்துக்குச் சமம்; ஆகையால் அன்று காலை ஒருவரை ஒருவர் பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்பார்கள்

பெரும்பாலான இந்துக்கள் கங்கைச் சொம்புகளை வாங்கி சுவாமி அறையில் வைத்துக் கொள்கிறார்கள்  இது இந்து பூஜைப் பொருட்களை விற்கும் எல்லா கடைகளிலும் கிடைக்கும். அதிலுள்ள கங்கை  நீர் பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. உலகில் வேறு எந்த நதி நீருக்கும் இந்த சக்தி கிடையாது ; அந்தக் காலத்தில், வெள்ளைக்காரர்கள் கப்பல்களில் கங்கை நீரை  ஏற்றிக்கொண்டுதான் இங்கிலாந்துக்குப் பயணமானார்கள்.

******

ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற பிரமுகரின்  மனைவி  லாரன்ஸ் போவெல்  மஹா கும்பமேளாவில் கும்பமேளாவில் தீட்ச்சை பெற்று கமலா என்ற இந்துப் பெயரை பெற்றார் .

மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பாவெல் ஜாப்ஸ் திங்களன்று பிரயாக்ராஜ் வருகை தந்தார். அங்கே அவருக்கு சுவாமி கைலாசானந்த கிரி “கமலா” என பெயர் சூட்டினார்.

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும்,பிரபல தொழிலதிபருமான ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011-ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார்.

முன்னதாக வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் லாரென் பாவெல் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். உடல்​நலக் குறைவு காரணமாக மகா கும்​பமேளா​வில் இருந்து 3 நாட்​களில் பூடான் நாட்டுக்குச் சென்றார் .

****

ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

 மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நவி மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் கட்டப்பட்ட ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலாகும்.

பிறகு, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இஷ்கானின் முயற்சியால், ஆன்மிகம் மற்றும் அறிவுமிக்க மண்ணில் ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவில் திறக்கப்பட்டது. இந்த கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக் கோவிலில் பல்வேறு கடவுள்களின் சிலைகள் உள்ளன. இந்தக் கோவில், நாட்டின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கான புனித மையமாக திகழும் என்று நம்புகிறேன். குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பக்தர்களை தொடர்புபடுத்துவதே இதன் நோக்கமாகும். மஹாராஷ்டிரா மக்களுக்காக இந்த சிறப்புமிக்க பணிகளைச் செய்த இஸ்கான் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்

*****************************

கேரள பாடலாசிரியருக்கு ஹரிவராசனம் விருது

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது, பிரபல மலையாள பாடலாசிரியர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்டது.கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போடும் இணைந்து கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவித்து வருகின்றன.

2012-ல் யேசுதாசுக்கு இந்த விருது வழங்கி துவக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வீரமணி ராஜு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா, சித்ரா, கங்கை அமரன் உள்ளிட்ட ஏராளமான பாடகர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர்.

தொடர்ந்து 14வது ஆண்டு விருதாக சபரிமலையில் நேற்று கேரளாவை சேர்ந்த கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ள இவருக்கு வழங்கப்பட்டுள்ள ஹரிவராசனம் விருது நினைவு பரிசு, ஒரு லட்ச ரூபாய், பாராட்டு பத்திரம் ஆகியவை அடங்கியவை.

கேரள தேவசம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வாசன் இந்த விருதை வழங்கினார்.

****

சபரிமலை மகரஜோதி தரிசனம்! : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை பொன்னம்பலமேட்டில் காட்சியளித்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து பொன்னம்மபல மேட்டில் மகர ஜோதியாக சுவாமி அய்யப்பன் பக்தர்களுக்கு 3 முறை காட்சி அளித்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் “சுவாமியே சரணம் அய்யப்பா” என்று விண்ணதிர சரண கோஷம் முழங்கினர்

பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி மாலையில் சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம் போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் பெரிய நடை பந்தல் வழியாக சன்னிதானத்தை அடைந்தது.

தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினர்.

இந்த நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்தது. இதை பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி காட்சியளித்தது.

அப்போது சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். மகர ஜோதி தரிசனத்தில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

*****

பெங்களூரு  லால்பாக் பூங்காவில் வால்மீகி மலர் கண்காட்சி

குடியரசு தினத்தை முன்னிட்டுபெங்களூரு  லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கிறது . இம்முறை கண்காட்சியில் ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷியின் வாழ்க்கை இடம் பெறுகிறது.

ராமாயணம் என்ற பெரும் காவியத்தை எழுதிய வால்மீகி மகரிஷியின். ராமாயண காவிய புத்தகத்தையும் பூக்களின் வடிவத்தில் பார்க்கலாம்..

பெங்களூரு லால்பாக் கண்ணாடி மாளிகையில்,

ஜன.16 முதல் 26 வரை கண்காட்சி நடக்கிறது.

புராண வனமான தண்டகாரண்யாவின் மலர் சித்தரிப்புகள் நட்சத்திர ஈர்ப்பாகும். 70 வகைகளில் 25 லட்சம் மலர்கள் இடம்பெறும் இந்த கண்காட்சியின் மொத்த பட்ஜெட் ரூ.2.5 கோடியாகும்.

11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் சுமார் 9 முதல் 10 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

*******

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம்

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-வதுநாள் தேரோட்டமும், 10-வது நாள் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து  கனகசபை நகரில் உள்ள  ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.. இதில் சந்திரசேகரர் தெப்பத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த பல ஆண்டுகளாக ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறாமல் இருந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு குளம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு ஞானபிரகாசம் குளத்தில் நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

*****

திருவையாறு தியாகராஜ ஆராதனை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு என்றாலே ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி இவருக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த வருடம் ஸ்ரீ தியாகராஜர் 178ஆவது ஆராதனை விழா 14.01.2025 அன்று தொடங்கி, நேற்று சனிக்கிழமை  நிறைவடைந்தது .

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு  தஞ்சை மாவட்டத்திற்கு நேற்று 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்ட்டிருந்தார்  முன்னதாக மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷணன் இந்த ஆண்டு விழாவினை 14ஆம் தேதி துவக்கி வைத்தார்..

ஆராதனை விழாவின் ஐந்தாம் நாளான சனிக்கிழமை ஸ்ரீ தியாகராஜர் சித்தியடைந்த தினமான பகுள பஞ்சமி அன்று காலை 8.30 மணிக்கு மங்கல இசை இசைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில்  பஞ்சரத்ன கீர்த்தனைகளை  பாடி ஸ்ரீதியாகராஜருக்கு  அஞ்சலி செலுத்தினார்கள்.

ஸ்ரீ தியாகய்யர் இயற்றிய ஐந்து பாடல்களை பாடினார்கள்.

இவை, ‘ஜெகதாநந்தகா’ என்னும் நாட்டை ராகப் பாடல், ‘

துடுகு கல’ என்னும் கௌள ராகப் பாடல்,

 ‘சாதிஞ்சனே’ என்னும் ஆரபி ராகப் பாடல்,

‘கனகன ருசிரா’ என்னும் வராளி ராகத்தில் அமைந்த பாடல்,

கடைசியாக ‘எந்தரோ மஹானுபாவுலு’ என்னும் ஸ்ரீராகப் பாடலாகும் .

இந்தஆராதனையை பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இந்த வருடம் கூடுதல் சிறப்பாக அவருக்கு இசை அஞ்சலி செலுத்திய முக்கிய இசை மேதைகளின் படங்களைக் கொண்ட தொகுப்பு, ‘எந்தரோ மகானுபாவுலு’ என்ற தலைப்பில் சிறப்பு அஞ்சல் அட்டை  தொகுப்பாக வெளியாகி உள்ளது. இதில் 23 அஞ்சல் அட்டைகள் அங்கியுள்ளன.

***1

28 வயது துறவி சிவானந்தா பாபா : அனைத்து கும்பமேளாவிலும் பங்கேற்ற அதிசயம் – JANAM TV  சிறப்பு தொகுப்பு!

கடந்த 100 ஆண்டுகளாக பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைன் மற்றும் ஹரித்வார் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு கும்பமேளாவிலும்  128 வயது துறவி சிவானந்தா பாபா கலந்து கொள்கிறார்  அந்த அற்புதமான இந்து மத துறவியைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுவாமி சிவானந்தா பாபா 1896-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி, சில்ஹெட் மாவட்டத்தில், ஒரு வங்காளி பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவ்வூரில் வாழ்ந்த பெரிய துறவியான தாகுர்பானியின் 10-வது வழித்தோன்றல் இவர்.

வைஷ்ணவர்களான பாபாவின் தந்தை ஸ்ரீநாத் கோஸ்வாமி மற்றும் தாயார் பகபதி தேவி

தங்களின் 4 வயதான மகனான சிவானந்தாவை, மேற்கு நவ த்வீப  நகரில் வசித்து வந்த வைஷ்ணவ துறவியான ஓம்காரானந்த கோஸ்வாமியிடம் ஒப்படைத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு திரும்பிய அவர் பெற்றோரின் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்து விட்டு குருவின் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.

1925ம் ஆண்டு, குருஜியால் லண்டனுக்கு அனுப்பப்பட்ட சுவாமி சிவானந்த பாபாஜி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக 6-கண்டங்கள் முழுவதும் பயணித்தார்.

தனது குருஜியின் அழைப்பின் பெயரில் 1959-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அயராது சேவை செய்து வருகிறார்.

1979ஆம் ஆண்டிலிருந்து நிரந்தரமாக வாரணாசியில் வசித்து வருகிறார்.

128 வயதிலும், தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் யோகா, பிராணாயாமம், மற்றும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்கிறார்.

2019ம் ஆண்டு பெங்களூரு ஸ்டேடியத்தில் நடந்த உலக யோகா தின கொண்டாட்டத்தில் யோகாவை செய்து காட்டி, அனைவரையும்  அசத்தினார்.  2022ம் ஆண்டு, அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ வழங்கினார் .

இந்தியாவின் சொல்லப்படாத கதைகளின் 1000 திரைப்பட பயணத் தொடரில், சுவாமி சிவானந்த பாபாஜியை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நேர்காணல் செய்தார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டியது போல, பாபா சிவானந்தாவின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் தரும் என்பதில் ஐயமில்லை .

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு ,

ஜனவரி 26 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

வணக்கம். 

—-subham—- 

Tags- ஞானமயம் வழங்கும், உலக இந்து செய்தி மடல், 19-1-2025

ஆலயம் அறிவோம்! அயோத்தி ராம ஜன்ம பூமி மந்திர் (Post.14,119)

 WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,119

Date uploaded in Sydney, Australia — 20 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

19-1-2025 ஞாயிறன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை

அயோத்தி

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹந்நாயகி சத்யநாராயணன்.

ஜெய் ஶ்ரீ ராம்!

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா

புரி த்வாராவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயிகாஹா

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது ஶ்ரீ ராமர் அவதரித்த உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள புண்யத் திருத்தலமான அயோத்யா தலமாகும்.

இது லக்னோவிலிருந்து 135 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அயோத்யா மாநகரத்தை விமானம் மூலமாகவும் ரயில் மூலமாகவும் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து மூலமாகவும் அடையலாம்.

;

பண்டைய கோசல நாட்டின் தலை நகரம் அயோத்யா. சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்.

த்ரேதா யுகத்திலிருந்து லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் மிகப் பழமையான நகர் இது.

இங்கு அமைந்துள்ள ராம ஜன்ம பூமி மந்திர் என்று  கொண்டாடப்படும் திருக்கோவில் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.

பாலக் ராம் இங்கு பிரதிஷ்டை செய்யப்படுள்ளார். முதல் ஆறு மாதத்திலேயே பதினோரு கோடி பேர் இங்கு வந்து ராமரை தரிசித்தனர்.

அயோத்தி மாநகரத்தைப் பற்றி வால்மீகி ராமாயணமும் இதர ராமாயணங்களும் புராணங்களும் அற்புதமாக விவரிக்கின்றன.

அயோத்தி மாநகரை வர்ணிக்க வந்த கம்பன் அங்கு வண்மை எனப்படும் வள்ளல் தன்மை இல்லை என்கிறான். ஏன்? அங்கு; வறுமையே இல்லை. ஆகவே எதையும் தானமாக வாங்குவதற்கு அங்கு யாரும் இல்லை.

அங்கு திண்மை எனப்படும் வீர பராக்கிரமம் இல்லை. ஏன்? ஏனெனில் அயோத்தியை எதிர்க்க யாருமே இல்லை, அதனால்!

அங்கு உண்மை இல்லை. ஏன்? ஏனெனில் யாருமே பொய் சொல்வதில்லை. பொய் என்று ஒன்ரு இருந்தால் தானே உண்மை என்ற வார்த்தை வரும். 

அங்கு ஒண்மை எனப்படும் அறிவே இல்லையாம். ஏனெனில் அனைவரும் கற்றவர் என்பதால் அந்த வார்த்தைக்கு அங்கு அர்த்தமே இல்லையாம்.

இங்கு தான் ஶ்ரீ ராமர் அவதரித்தார்.

இக்ஷ்வாகு குல மன்னனான தசரத மகாராஜன் தனக்கு புத்திரர் வேண்டுமென்பதற்காக புத்ரகாமேஷ்டி யக்ஞத்தை மேற்கொள்ள கௌஸல்யா, சுமித்திரா, கைகேயி என்ற மூன்று மனைவிகள் மூலம் ராமர், பரதர், லக்ஷ்மணர்,மற்றும்  சத்ருக்னர் ஆகிய நான்கு புதல்வர்களைப் பெற்றார். கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக ராமர் பதினான்கு வருடம் காட்டிற்கு சீதை லட்சுமணருடன் செல்ல அங்கு இராவணன் சீதா தேவியை ஆகாயமார்க்கமாக துக்கிச் சென்று இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைத்தான். சீதையைத் தேடிய இராமர், சுக்ரீவனுடன் நட்பு கொண்டு அனுமாரை சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க இலங்கையை நோக்கி அனுப்பி, பின்னர் சேதுவை அமைத்தார். பின்னர் இராவணனை வதம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி மீண்டு, பட்டம் சூட்டி, கோசல நாட்டை ஆள்கிறார். பெருமை மிக்க ராமராஜ்யம் அமைகிறது.

ராம ஜென்ம பூமியில் ராம்  மந்திருக்கு அடுத்து ஹனுமான் கர்ஹி ஃபோர்ட் (anuman Garhi Fort) என்ற ஹனுமார்  கோவில் அமைந்துள்ளது. இதில்  76 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு தான் ஹனுமார் ஒரு குகையில் வசித்து ராம ஜென்ம பூமியைக் காத்து வந்தாராம். இங்கு சீதாவின் சமையல் கூடாரமும் உள்ளது. சீதா தேவி அயோத்தியில் இருந்த போது அவர் உணவு சமைத்த இடம் இது தான். அனைவரும் இந்த இடங்களைப்  பார்ப்பது வழக்கம்,

அயோத்தியின் மேற்குப் பகுதியில் ராம்காட் அமைந்துள்ளது. ராமர் அவதரித்த ராமநவமியன்று இங்கு பக்தர்கள் திரளாகக் கூடுவர்.

ராமருடைய புத்திரரான குசனால் நிறுவப்பட்ட நாகேஸ்வர்நாத் ஆலயம் ஒரு சுவையான வரலாறைக் கொண்டதாகும். ஒரு முறை சரயு நதியில் குசன் குளித்துக் கொண்டிருந்த போது அவனது கங்கணம் நதியில் விழ அதை ஒரு நாக கன்யா கண்டெடுத்து குசனிடம் கொடுக்கிறாள். அவள் ஒரு சிவ பக்தை என்பதால் குசன் அவளுக்கு ஒரு கோவிலை எழுப்புகிறான். இங்கு சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் புனிதத் தலமான அயோத்தியில் 2023 தீபாவளியின் போது பதினைந்து லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி நான்கு தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்ன்ஸ் சாதனையானது. ஆனால் இதை முறியடிக்கும் விதத்தில் 2024ல் இருபத்தியிரண்டு லட்சத்து இருபத்திமூன்றாயிரத்து அறுநூற்றி எழுபத்தாறு விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை உருவானது.

இங்கு கனக் பவன், குப்தர் காட், ராம் கி பைடி, வால்மீகி ராமாயண் பவன் உள்ளிட்ட பல இடங்கள் பார்ப்பதற்கு உள்ளன.


“கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று நம்மாழ்வார் கற்க வேண்டியது ராமரைப் பற்றி மட்டுமே என்று அழகுற திவ்ய பிரபந்தத்தில் கூறியுள்ளார்.

ராம என்ற இரண்டு எழுத்து நன்மையையும் செல்வத்தையும் தினமும் நல்கும். இதைச் சொல்பவர்க்கு தீய செயலும் பாவமும் சிதைந்து தேயும். ஜென்மமும் மரணமும் இல்லாத முக்தி நிலை கிடைக்கும். இது கம்பனின் வாக்கு.

ராம நாமத்தை ஜபிப்போம் . எல்லா நலன்களையும் பெறுவோம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ ராமபிரானும்  சீதாதேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி, வணக்கம்.

ஜெய் ஶ்ரீ ராம்!

–subham–

   tags–ஆலயம் அறிவோம், அயோத்தி, ராம ஜன்ம பூமி, மந்திர்

ஶ்ரீ வேதாந்த தேசிகர் – 1 (Post No.14,118)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,118

Date uploaded in Sydney, Australia – –20 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

19-1-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஓளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

ஶ்ரீ வேதாந்த தேசிகர் – 1 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே, வணக்கம் நமஸ்காரம்.

வைணவத்திற்கு  புதிய ஏற்றம் தந்தவரும், அற்புதமான நூல்களைப் படைத்தவருமான ஶ்ரீ வேதாந்த தேசிகரைப் பற்றி இன்று சற்று சிந்திப்போம்.

1268ஆம் ஆண்டு விபவ வருடம் புரட்டாசி மாதம் சிரவண

நட்சத்திரத்தில் புதன்கிழமையன்று அனந்த சூரியார் – தோத்தாத்திரி அம்மையார் தம்பதிகளுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் என்னும் ஊரில் வேதாந்த தேசிகர் அவதரித்தார். இவருக்கு வேங்கடநாதன் என்று பெயரிடப்பட்டது.

தூப்புல் நிகமாந்த தேசிகன், தூப்புல் பிள்ளை, உபயவேதாந்தாசாரியார்

உள்ளிட்ட பல பெயர்கள் இவருக்கு உண்டு.

வைஷ்ணவ ஆசார்யர்களில் மிக உயரிய ஸ்தானத்தை வகிப்பவரான இவர் திருமலை வேங்கடவனின் கோவில் மணியின் அம்சமாகப் பிறந்தவர்.

வேதாந்த தேசிகர் 101 ஆண்டுகள் வாழ்ந்தார்.

சுமார் 126க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய இவர் நான்கு மொழிகளில்

நல்ல பாண்டித்தியம் பெற்றவர்.

இவரது நூல்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம். நூலினூடே அவரது வரலாறையும் ஆங்காங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.

1) ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

இதில் 33 செய்யுள்கள் உள்ளன. இதுவே வேதாந்த தேசிகரின் முதல்

துதியாகும். கருட பகவானே ஹயக்ரீவ மந்திரத்தை வேதாந்த

தேசிகருக்கு உபதேசித்தார் என்பது கர்ண பரம்பரையாக வழங்கி வரும்

செய்தி. இந்த மந்திரத்தில் சித்தி அடைந்த அவர் ஹயக்ரீவரின்

தரிசனத்தை திருவஹிந்திபுரத்தில் நேரடியாகப் பெற்றார். அப்போது

இவருக்கு வயது 20 தான்!

.

2) ஸ்ரீ தசாவதார ஸ்தோத்திரம்

ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற வேதாந்த தேசிகர் அங்கு தசாவதார

சந்நிதியில் தசாவதாரங்களையும் தொழுத பின்னர் இயற்றிய

ஸ்தோத்திரம் இது. இதில் 13 ஸ்லோகங்கள் உள்ளன. பத்து

அவதாரங்கள் எடுத்த உயர் பரம்பொருளான விஷ்ணுவே ஸ்ரீ ரங்கநாதர்

என தேசிகர் இதில் கூறி அருள்கிறார்.

3) ஸ்ரீ பகவத் தியான சோபனம்

இது 12 செய்யுள்களைக் கொண்டுள்ளது. இதில் வேதாந்த தேசிகர்

ரங்கநாதரை பாதாதிகேசம் விவரிக்கிறார்.

4) அபிஸ்தவம்

29 ஸ்லோக்ங்களைக் கொண்டுள்ள இது கி.பி.1327ஆம் ஆண்டு

வாக்கில் இயற்றப்பட்டதாகும். அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான

மாலிக்காபூர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து ஆலயங்களை அழித்தான்.

ஏராளமான ஹிந்துக்களை – ஆண்கள், பெண்கள், குழந்தைகள்

உள்ளிட்டோரைக் – கொன்று குவித்தான். அந்தக் கொள்ளையனிடமிருந்து ஸ்ரீ

ரங்கநாதரின் தெய்வச் சிலையைக் காக்க விரும்பிய பிள்ளை லோகாசார்யர்

உற்சவமூர்த்தியை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் வழியில் காளையார்

கோவிலில் அவர் இறந்தார்.

வேதாந்ததேசிகரும் ஸ்ரீ ரங்கத்தை விட்டுக் கிளம்பி மேலகோட்டில் சிலகாலம்

தங்கி இருந்தார். அப்போது அவர் இந்த அபிஸ்தவத்தை இயற்றினார். இதில் 29

ஸ்லோகங்கள் உள்ளன.

இறைவனைத் தனது ஆயுதங்களை எடுத்துப் பயன்படுத்தி பக்தர்களை

முரட்டுக் கொள்ளையரிடமிருந்து காக்க வேண்டும் என்று மனமுருக இதில்

வேதாந்த தேசிகர் வேண்டுகிறார்.

ஸ்ரீ ரங்கநாதரின் மூர்த்தி சிலை பல இடங்களிலும் சுற்றியலைந்த பின்னர்

திருப்பதியை வந்தடைந்தது. 1370-71 ஆண்டு வாக்கில் அது ஹிந்து

தளகர்த்தரும் பெரும் வீரருமான கோபண்ணாவின் அரிய முயற்சியால் ஸ்ரீ

ரங்கம் வந்து சேர்ந்தது. இடையில் சிறிது காலம் மட்டும் அது செஞ்சியில்

இருந்தது.

இந்த அபிஸ்தவத்தைக் கூறுவோரை, “பயத்தை விடு; உன்னை நல்லது

வந்தடையும்: (பயம் த்யஜத, பத்ரமித்யபிதயத்)” என்று கூறி கருணையின்

திருவுருவான கேசவன் காப்பாற்றுவார் என்று இறுதி ஸ்லோகமான 29வது

ஸ்லோகத்தில் தேசிகன் உறுதிபடக் கூ3333றுகிறார்.

இது அவரது 60ஆம் வயது கடந்து விட்ட நிலையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.

5) ஸ்ரீ தயா சதகம்

108 சம்ஸ்கிருத பாடல்கள் அடங்கியுள்ள நூல் ஸ்ரீ தயா சதகம்.

வெங்கடேஸ்வரனின் தயை ஒரு தேவதையாக உருவகப்படுத்திப்

பாடப்பட்ட பாடல்கள் இவை.

6) ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்

இதில் 51 சம்ஸ்கிருத செய்யுள்கள் உள்ளன. காஞ்சியில்

எழுந்தருளியுள்ள காஞ்சி வரதராஜப் பெருமாளை இதில் தேசிகர் போற்றித்

துதிக்கிறார்.

7) வைராக்ய பஞ்சகம்

ஆறு சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள வைராக்ய பஞ்சகத்தில் முதல்

ஐந்து ஸ்லோகங்களால் உலகில் மதிக்கப்படும் செல்வத்தை மதிக்காமல்

இறைவனின் அருள் ஒன்றையே செல்வம் என மதிக்கும் வேதாந்த தேசிகரின்

அருள் உள்ளம் புலப்படுகிறது.

8) சரணாகதி தீபிகா

சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள இதில் 59 செய்யுள்கள் உள்ளன. சரணாகதி

ப்ரபத்தி என்பது வைஷ்ணவ தர்மத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

சரணாகதியே முக்திக்கான வழி.

9) ஸ்ரீ வேகாசேது ஸ்தோத்ரம்

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள ஸ்தோத்ரம் இது. வேகா என்ற

நதியின் மீது சேது (அணை) கட்டியவர் பற்றிய புகழ் மாலை இது.

10) ஸ்ரீ அஷ்டபுஜாஷ்டகம்

இந்த ஸ்தோத்திரம் 10 ஸ்லோகங்களைக் கொண்டது.

காஞ்சியில் பிரம்மா ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தார். அதைத் தடுக்க

அசுரர்கள் முயன்றனர். உடனே ஆதி கேசவப் பெருமாள் எட்டு கரங்களைக்

கொண்டு அவர்களை அழித்தார்.

ஆழ்வார்கள் இந்த ஸ்தலத்தை அட்டபுயக்கரம் எனக் குறிப்பிடுகின்றனர். இது

108 வைணவத் தலங்களுள் ஒன்று. காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப்

பெருமாள் கோவிலிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் இது உள்ளது.

11) ஸ்ரீ காமாசிகாஷ்டகம்

9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ காமாசிகாஷ்டகம்.

காமாசிகா என்பதை காம + ஆசிகா என்று பிரித்துப் பொருள் கொள்ள

வேண்டும். தனது சொந்த விருப்பத்தின் பேரில் எழுந்தருளியிருப்பவன் என்ற

பொருள் கொள்ள வைக்கும் இது.

இறைவன் அழகிய சிங்கர் எழுந்தருளி இருக்கும் இடம் காஞ்சிக்குத் தெற்கே

உள்ள திருவேளுக்கை என்ற ஸ்தலமாகும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

வேள் என்றால் ஆசை என்று அர்த்தம். ஆசையுடன் இங்கு இருப்பதால் வேள்

+ இருக்கை = வேளிருக்கை என்ற பெயரை இந்த தலம் பெற்றது.

காலப்போக்கில் இது வேளுக்கையாக மாறி விட்டது

12) ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட துதி ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி.

காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தொலைவில் உள்ள தலம் திருப்புட்குழி. 108

வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது

ஜடாயு பறவைக்கு மோட்சமளித்து இறுதிச் சடங்குகளை ராமர் செய்த இடம்

இது தான்.

ஆகவே திரு + புள் (பறவை) + குழி = திருப்புட்குழி என்ற பெயரைப் பெற்றது.

கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயு சந்நிதி உள்ளது.

 to be continued……………….

***