LAST SUNDAY GNANAMAYAM BROADCAST 1-12-2024


ON SUNDAY 1-12-2024 FOLLOWING PEOPLE TOOK PART IN THE GNANAMAYAM BROADCAST FROM LONDON.

POSTED BY LONDON SWAMINATAN ON 2nd  DECEMBER 2024.

GNANAMAYAM SUNDAY BROADCAST 1-12-2024

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

PRAYER BY MRS HAMSINI RAJARAM FROM IRELAND

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on Books written by Late Srinivasan’s

***

Talk by Brahannayaki Sathyanarayan on SRI VAIKUNDAM temple from Bengaluru

***

Talk on Navagrahas by Chennai Srinivasan; Rebroadcast in Memory of Late Santanam Srinivasan .

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

Anchored by London Swaminathan

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

சென்னை சந்தானம் சீனிவாசன் நூல்கள்

—subham—

Benglauru Nagarajan spoke on Late Chennai Srinivasan’s two books.

Sri Kalyanasundara Sivacharya did play Late Srinivasan’s broadcast on Mars graha (Angaraka)

Mrs Anand

Mrs Hamsini Rajaram, Ireland

London swaminathan

Mrs B Sathyanarayanan

–subham—

tags- LAST SUNDAY, GNANAMAYAM BROADCAST, on 1-12-2024 

QUIZ நாம தேவர் QUIZ (Post No.13,962)

Written by London Swaminathan

Post No. 13,962

Date uploaded in London – 2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.நாம தேவர் யார், எங்கே எப்போது பிறந்தார் ?

அவர் மகாராஷ்டிரத்தில் 1269-ஆம் ஆண்டு  பிறந்தார் . பெரிய ஞானி; இறைவன் மீது பக்திப்பாடல்களைப் பாடிய பெரியவர் . அவர் நர்சி என்னும் கிராமத்தில் பிறந்தார் . ஹிங்கோலி , றிசாத் என்னும் இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ளது

****

2.நாமதேவருடைய குடும்பம் என்ன தொழில் செய்தது ?

அவருடைய குடும்பம். தையல்கார குடும்பம். அவர்கள் தையல் தொழிலைச் செய்தனர்.  வருமானத்தைப் பெருக்குவதற்காக விட்டோபா கோவில் கொண்டுள்ள பண்டரீபுரத்துக்குக் குடியேறினர்.

****

3.நாமதேவர் கற்றது என்ன ?

இரண்டு வயதில் அவர் சொன்ன பிழையற்ற முதல் சொல் விட்டல. ஏழு வயதில் அவர்  பஜனை செய்வதற்கான தாளக் கருவிகளை செய்து பஜனை செய்யத் துவங்கினார் . பள்ளிப்படிப்பைப் புறக்கணித்தார். பிரஹலாதன் போல சிறு வயதிலிருந்தே விட்டல நாமத்தைச் சொல்வதில் இன்பம் கண்டார்.

*****

4.நாமதேவருடைய மஹிமையை தாயார் அறிந்தது எப்படி ?

விட்டோபா கோவிலுக்கு நாமதேவரை அவரது தாயார் தினமும் அழைத்துச் சென்று நைவேத்தியங்களைப் படைப்பார். ஒரு நாள், வேலை மிகவும் இருந்ததால் நாமதேவரிடம் நைவேத்தியத்தைக் கொடுத்து அனுப்பினார். அவரும் இறைவன் முன்னால் அதை வைத்துவிட்டுக் காத்திருந்தார். விடோபா வரவில்லை; விம்மி விம்மி அழுதார் ; அப்போது இறைவனே வந்து அதைச் சாப்பிட்டார் . இதைத் தாயாரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை மறுதினமும் சிறுவனிடம் நைவேத்தியத்தைக் கொடுத்தனுப்பி, மறைவாக பின்னே தொடர்ந்து சென்று பார்த்தார். இறைவனே வந்து அதை உண்டதைக் கண்டு அதிசயித்தார்.

****

5.தந்தையார் அவருக்கு கொடுத்த வேலை என்ன ? அவர் என்ன செய்தார் ?

திருமணமாகியும் குடும்பத்தில் பற்று இல்லாமல் விட்டல நாமம்  ஜெபிப்பதிலும் பஜனை செய்வதிலும் நாமதேவர், காலத்தைக் கழித்தார். இவருக்கு வேலை  கொடுத்து வெளியே அனுப்புவதற்காக  புதிய துணிகளைக் கொடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பினார்; அவர் துணியை விற்காமல் ஒரு கல்லினை இறைவன் என்று சொல்லிக் காவலுக்கு வைத்து விட்டு பஜனை செய்தார். துணிகள் அப்படியே இருந்தன . மராத்திய மொழியில் கல்லுக்குத் தொண்டியா என்ற சொல்லும்ஒரு ஆள் என்றும் பொருள். இரவில் வீட்டுக்குத் திரும்பிய போது தந்தை கேட்ட கேள்விக்கு தொண்டியாவை நிறுத்திவிட்டு வந்ததாகச் சொன்னார். மறு நாள் போனபோது அந்த இடத்தில் துணிகள் இல்லை. உடனே தொண்டியாவைக் (கல்லைக் ) கொண்டுவந்து ஒரு அறையில் பூட்டினார். தந்தை மீண்டும் கேட்டபோது துணிகள் மாயமாய் மறைந்துவிட்டதால் தொண்டியாவைக் அறையில் பூட்டி வைத்ததாகச் சொன்னார். கதவைத் திற அவனைப் பார்க்கிறேன் என்று சொன்னவுடன், தந்தை திட்டப்போகிறார் என்று பயந்து கொண்டே கதவைத்Nதிறந்தார். உள்ளே இருந்த கல் தங்கக் கட்டியாக மாறியிருந்தது. இந்த அற்புதம், அவர் பெரிய யோகி என்பதைக் காட்டியது.

****

6.நாமதேவரின் புகழ்பெற்ற தோழர் – சகா யார் ?

மஹாராஷ்டிர பஜனைகளில் ஒலிக்கும் போற்றி நிவ்ருத்தி ஞானதேவ் சோபான முக்தாபாய் ஏகநாத  நாமதேவ் துகாராம் என்பதாகும். இதன் பின்னர் சமர்த்த ராமதாசுக்கு போற்றி சொல்லுவார்கள் அப்படிப் புகழ் வாய்ந்த ஞானேஸ்வர், மற்றும் அவருடைய அண்ணனான  நிவ்ருத்தியின் நட்பினால் பெரும் நன்மை அடைந்தவர் நாமதேவ். ஞானேஸ்வருடன் இறுதிவரை தல யாத்திரை செய்தார்.

****

7.நாமதேவரின் குரு யார்?

நாமதேவர் வாழ்ந்த காலத்தில் கோரா என்ற ஞானியும் வாழ்ந்தார்; அவர் தொழிலால் குயவர். ஒரு முறை பக்குவப்படாத பக்தர்கள் யார் என்று சிலர் கேட்டனர். அந்தக்  கூட்டத்தில் நாமதேவரும் இருந்தார் . பிரம்மத்தை உணர்ந்து கொள்ளாத பாத்திரங்கள்  (மட்கலங்கள்) யார் என்று கண்டுபிடிக்க அவர் ஒவ்வொருவர் தலையிலும் சந்தன கட்டையால் தட்டினார். நாம    தேவர் தலையைத் தட்டியபோது அவர் அலறினார்; அவர் ஒருவர்தான் பக்குவப்படாத மட்கலம் என்று எல்லோரும் நகைத்தனர். பின்னர் அவர் தனக்கும் ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார் . விட்டோபாவிடம்/ இறைவனிடம் முறையிட்டார். இறைவனே அவருக்கு  விசாபகேச்சர் என்ற ஞாநியைக் காட்டினார் அவரிடம் நாமதேவர் சரணடைந்து உபதேசம் பெற்றார்.

****

8.நாமதேவர் எங்கே சமாதி அடைந்தார் ?

ஞானதேவர்,  தான் ஆலந்தி என்னும் இடத்தில் சமாதி அடையப்போவதாக அறிவித்தவுடன் அவருடன் நாமதேவரும் சென்றார். நிவ்ருத்தி, ஞானதேவர், சோபானர், அவர்களின் தங்கை முக்தாபாய் ஒவ்வொருவரும் உலகை விட்டு நீங்கும்போதும் நாமதேவர் அருகில் இருந்தார்; அவர்களின் பிரிவினையும் பாடிவைத்தார்  இவையாவும் ஓராண்டுக் காலத்துக்குள் அடுத்தடுத்து நடந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.; நாமதேவரும் இருபத்தாறாவது வயதில் (1295-ஆம் ஆண்டு) பண்டரீபுரத்தில் சமாதி அடைந்தார்.  சிலர் 1350-ஆம் ஆண்டு என்றும் சொல்கிறார்கள்.

****

9.அவர் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ? அவர் பாடல்களில் ஜனாபாயை பாராட்டியது ஏன்?

நாமதேவர் புஸ்தகம் எதுவும் எழுதவில்லை. ஆயினும் அவர் பாடிய நாலாயிரம் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவர் நீண்ட காலம் பஞ்சாபில் தங்கி யாத்திரையும் தியானமும் செய்தார்; அவருடைய பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதிக்கிரந்தத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

நாமதேவரின் குடும்பத்தில் அவருக்குப் பணிவிடை செய்த ஜனாபாய் என்ற பெண்ணும் அடக்கம்  அவர் பல பாடல்களில் ஜனி என்ற பெயரில் அவருடைய பக்தியைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

ஜனாபாயும் பாடல்களைப் பாடினார்; எந்த விலங்காகப் பிறந்தாலும் பண்டரீபுரத்தைத் தரிசிக்கவேண்டும்; நாமதேவருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று ஜனாபாய் பாடினார்.

****

10.நாமதேவரின் போதனைகள் என்ன ?

நாமதேவரின் மார்க்கத்தை வர்கரி சம்பிரதாயம் என்று சொல்லு வார்கள்; அதாவது பக்தி மார்க்கம்; கீர்த்தனையும் யாத்திரையும் இறைவனை அடைவதற்கான சிறந்த வழிகள் என்கிறார். இன்றும்  பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பண்டரீபுரத்துக்குச்

சென்று விடோபாபாவை /இறைவனைத்  தரிசிப்பதை பக்தர்கள் ஒரு இயக்கமாகவே நடத்தி வருகின்றனர்.

—subham—–

Tags—விடோபாபா,வர்கரி சம்பிரதாயம், ஜனாபாய், . தையல்கார குடும்பம், பண்டரீபுரம், ஆதிக்கிரந்தம்

ஆலயம் அறிவோம்! ஶ்ரீ வைகுண்டம் தலம் (Post No.13,961)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 13,961

Date uploaded in London – –2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

1-12-2024 அன்று ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கையிருந்து

    வைகுந்தத்துள் நின்று

தெளிந்த என் சிந்தையகங் கழியாதே

   என்னை ஆள்வாய்! எனக்கருளி

நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப

   நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்

   கனிவாய் சிவப்ப நீ காண வாராயே

–    நம்மாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான ஶ்ரீ வைகுண்டம் தலமாகும். நவதிருப்பதிகளுள் முதல் திருப்பதியாக அமைவதும் இதுவே,

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகும் வழியில் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

விண்ணுலகில் இருக்கும் ஶ்ரீ வைகுண்டம் என்ற பெயரைத் தாங்கி பூலோகத்தில் இருக்கும் திருத்தலம் இது.

மூலவர் திருநாமம் : ஶ்ரீ வைகுண்ட நாதர் (நின்ற திருக்கோலம்)_

உற்சவர் : ஶ்ரீ கள்ளப்பிரான்

தாயார்: வைகுந்தவல்லி, சோரநாத நாயகி

தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்  மற்றும் கலச தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படும் வரலாறு இது. பிரம்மா எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்திருந்த நேரத்தில் சோமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் அவரிடமிருந்து வேதங்களைத் திருடிச் சென்று விடுகிறான்.

பிரம்மா இங்குள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுந்தத்தில் உள்ள நாராயணனை நோக்கித் தவம் புரிய நாராயணன் வேதங்களை அவரிடம் மீட்டுத் தருகிறார்.

வைகுண்டநாதராய் அவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.

இன்னொரு வரலாறு இது. வைகுண்டநாதரின் பக்தனான காலதூஷகன் என்னும் திருடன் வைகுண்டநாதரைத் தொழுத பின் தனது திருட்டில் பாதியை தர்மத்திற்குச் செலவிட்டு வந்தான். ஒரு சமயம் அவன் அரண்மனையில் திருட முயன்ற போது அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொள்ள, காலதூஷகனை அரண்மனை சேவகர்கள் தேடலாயினர்.இதை அறிந்த காலதூஷகன் வைகுந்தநாதரைப் பணிய அவன் வேஷத்தில் வைகுந்தநாதரே அரண்மனையில் அரசன் முன் சென்று நின்றார். மன்னன் காலதூஷகனிடம் திருடியதைப் பற்றிக் கேட்க அரசனின் குற்றங்களை வரிசையாக அடுக்கினார் வைகுண்டநாதர். செல்வத்திற்கு சத்ருக்கள் நால்வர். தர்மம், அக்னி, சோரன், ராஜா ஆகிய நால்வரே அவர்கள். நீ கொஞ்சமேனும் தர்மத்தைச் செய்யவில்லை. ஆகவே தான் இந்த நாடகத்தை நாம் ஆடினோம்” என்றார் வைகுந்தநாதர். திடுக்கிட்ட அரசன் இப்படிச் சொல்வது யார் என்று யோசிக்க அரசனுக்கும் காலதூஷகனுக்கும் தரிசனம் தந்து மறைந்தார் வைகுண்டநாதர். திருடன் வடிவில் வந்ததாலும் பக்தர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாலும் அவர் கள்ளபிரான் என்று அழைக்கப்படலானார்.

Pictures from trip advisor; thanks.

காலகிரமத்தில் கோவில் இடிபாடு அடைந்தது. ஒரு சமயம் பாண்டிய மன்னனின் அரண்மனைப் பசு ஒன்று ஓரிடத்தில் தினமும் பால் சொரிந்து வர அங்கு சென்ற பாண்டியன் அந்த இடத்தில் இருந்த விக்ரஹத்தைக் கண்டு அதை மீண்டும் கோவில் எழுப்பி நிறுவினான்.

இங்குள்ள கள்ளபிரானின் சிலையை வடிவமைத்த சிற்பி அதன் அழகில் சொக்கி கன்னத்தைக் கிள்ளி விட்டான். ஆத்மார்த்தமாக செய்யப்பட்ட அந்தக் கிள்ளலை கள்ளபிரான் ஏற்றுக் கொண்டார். அந்தக் கிள்ளலின் வடுவை இன்றும் சிலையில் காணலாம்.

நவத்திருப்பதிகளுள் முதலாவதாக அமையும் இதை முதலில் அடைந்து வழிபட்டு பின்னர் இதர தலங்களான  வரகுணமங்கை எனப்படும் நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனார்) பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மரபாகும்.

இங்குள்ள முகப்பு கோபுரத்தின் அடி 136 அடியாகும். கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நாம் காண்பது பெரிய மண்டபமும் அதன் நடுவே ஒரு காட்சி மண்டபத்தையும் நாம் காணலாம்.

மூலவர் வைகுண்டநாதர் சந்திர விமானத்தின் கீழ் ஆதி சேஷன் குடைபிடிக்க  நான்கு கரங்களுடன் மார்பில் மஹாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சி தருகிறார். ஆதிசேஷன் நின்றவாறே கொடைபிடிக்கும் காட்சி இந்தத் திருத்தலத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. வைகுண்டநாதருக்கு இங்கு தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கோவிலின் உள்ளே உற்சவர் கண்ணபிரான் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வைகுந்தநாயகியும் சோரநாத நாயகியும் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர்..

பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை  மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆறாம் நாள் சூரியனின் ஒளிக் கிரணங்கள் ஶ்ரீ வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற் போலக் கொடிமரம் சற்றே விலகி உள்ளது.

ஆண்டு தோறும் கருடசேவை திருவிழா உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இத்தலம் பற்றி ‘புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று’ என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள  வைணவ ஆச்சாரியரான அழகிய மணவாளப் பெருமாள், புளியங்குடியில் படுத்த கோலமாகக் கிடந்தும், வரகுணமங்கையில் அமர்ந்தும், வைகுண்டம் தலத்தில் நின்றும் காட்சி தருகிறார் எனக் கூறுகிறார்.

சோரநாதர் மீது இயற்றப்பட்ட சோரநாத சுப்ரபாதம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இத்தலத்தைத் தனது கோட்டையாகப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வைகுண்டநாதரும் வைகுந்த நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

 –subham—

 tags- ஆலயம் அறிவோம்,  ஶ்ரீ வைகுண்டம் தலம் 

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 1 (Post No.13,960)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.960

Date uploaded in London – 2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களேதிரு கல்யாண்ஜி அவர்களேலண்டன் சுவாமிநாதன் அவர்களே அனைவருக்கும் சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று நாம் ஒரு அபூர்வமான மனிதருக்கு நமது அஞ்சலியைச் செலுத்தும் நிகழ்ச்சி இது.

திரு சந்தானம் சீனிவாசன் என்ற மாமனிதர் மறைந்து ஒராண்டு ஆக இருக்கும் நிலையில் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவர் படைத்து வெளியாகியுள்ள இரு புத்தகங்களை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் 29-3-1944 அன்று பிறந்தார். 10-12-2023 அன்று மறைந்தார்.

அவரது படைப்புகள் பல. இரு புத்தகங்களை www.pustaka.co.in  என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நவீன ஞான மொழிகள் பாகம் 1 என்ற அவரது புத்தகம் 24 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அதில் சுமார் 654 நவீன ஞான மொழிகள் உள்ளன.

இதன் விலை ரூ 160 பக்கங்கள் 140

கிடைக்கும் இடம் : www.pustka.co.in

தொலைபேசி எண் 91 7418555884

இந்தப் புத்தகத்தில் திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் வழங்கியுள்ள முன்னுரை இது.

நவீன ஞான மொழிகள் பாகம் 1

முன்னுரை 

கடந்த 50 ஆண்டு காலமாக சேர்த்து வந்த நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளில் நான் படித்து ரசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பு இது.

இப்படி ஒரு தொகுப்பைச் செய்ய ஆரம்பித்ததற்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரசாரகர் திரு சிவராம்ஜி எனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் இவற்றில் சிலவற்றைக் காண்பித்த போது அவர் இதை நன்கு பெரிய அளவில் தொகுக்கலாமே என்று அன்புரை கூறினார்.

அவர் வார்த்தைகள் எப்போதுமே மந்திரச் சொற்களாகவே அமையும். அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட நான் இவற்றை முழு வீச்சில் தொகுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு பிரம்மாண்டமான பீரோக்கள் முழுவதும் பெரிய பைல்கள்!

இவற்றை அவ்வப்பொழுது படித்துப் பார்த்த அனைவரும் இந்தத் தொகுப்பையும் இதற்கான முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர்.

இந்த நூல் வெளிவரும் தருணத்தில் திரு சிவராம்ஜி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

2020ஆம் ஆண்டு எனது சகோதரர் லண்டன் திரு ச.சுவாமிநாதன் நடத்திவரும் www.tamilandvedas.com இல் அவர் இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். அனைவரின் கவனத்தையும் இந்த நவீன ஞான மொழிகள் ஈர்த்தன.

அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

இதைப் படித்து, தொகுத்து வெளியிட்டால் எல்லோரும் ரசித்து மகிழ்வார்களே என்று தொகுக்க உதவி செய்த எனது சகோதரன் திரு நாகராஜனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சென்னை                          சந்தானம் சீனிவாசன்

19-7-2023

இந்த நூலுக்கு அணிந்துரையை அடியேன் வழங்கியுள்ளேன். அணிந்துரை இது:

காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே.

இவை அனைத்துமே கேட்பதற்கு அருமையாக இருக்கும்; சுவையான கருத்துக்களைத் தரும். அனுபவத்தின் எதிரொலியாக அவை விளங்கும்.

இந்தப் பழமொழிகளை பெரும் புலவர்களும் மகான்களும் தம் தம் இலக்கியங்களிலும் எடுத்து ஆண்டிருக்கின்றனர்.

நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு.

அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகி விட்டன.

இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும்.

இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

பெரிய சொற்பொழிவை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும். இப்படிப்பட்ட நவீன ஞான மொழிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் போது அவற்றின் முழுப் பயனை நம்மால் பெறமுடியவில்லை.

ஆகவே இவற்றை ஊக்கமும் உத்வேகமும் கொண்டு இதற்காகவே நேரத்தையும் நுண்ணறிவையும் அர்ப்பணித்து ஒருவர் தொகுத்தாலேயே அவற்றை நாம் ஒரு சேர ஒரே இடத்தில் பெற முடியும்.

இப்படிப்பட்ட அரும் பணியில் தன்னை அர்ப்பணித்து இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான இதழ்களைப் படித்து அவற்றில் தகுதியாக உள்ளனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படி தொகுத்தவர் திரு சந்தானம் சீனிவாசன்.

இதற்கான மகத்தான பின்னணியை அவர் கொண்டவர். பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட தேசபக்த, பத்திரிகையாளர் குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையாகவே இதை வெற்றிகரமாகச் செய்யும் நுட்பமான வழிமுறைகள் அவருக்குக் கைவந்த கலையாக ஆகியிருக்கிறது.

அத்தோடு தொழில்ரீதியாகவும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேற்பட்டோருக்கு சுய முன்னேற்றம், வாழும் வழி முறைகள், தொழிலகத்தில் முன்னேற வழிகள் உள்ளிட்ட பல பொருள்களில் அவர் பயிற்சி வகுப்புகளைப் பல ஆண்டுகள் எடுத்து வந்துள்ளார்.

இந்தப் பயிற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், பல்துறை நிபுணர்களின் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

இந்தப் பயிற்சிகளில் இவரது நகைச்சுவை ததும்பிய பேச்சுக்கு ஒரு காரணமாக அமைந்தது இந்த நவீன ஞான மொழிகளின் தொகுப்பு என்றால் அது மிகையல்ல.

இதைப் படிப்போர் சிரிக்கலாம்; அத்தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலாம். இதனால் பயனும் பெறலாம்.

இவரது முயற்சியை அனைவரும் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை.

அவருக்கு எனது வாழ்த்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த முதல் பாகத்தில் சுமார் 500 மொழிகளையே நாம் படித்து மகிழ்கிறோம்.

அடுத்து பல பாகங்கள் வெளிவரும்படி ஏராளமான நவீன ஞான மொழிகள் அவரிடம் இருப்பதால் அவற்றையும் நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அவர் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி

பங்களூர்                                       ச.நாகராஜன்

19-7-2023

நூலில் உள்ள அனைத்து நவீன ஞான மொழிகளைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட எடுத்துக்காட்டாக சில மொழிகளை இப்போது பார்க்கலாம்:

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன???

குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது நம்பிக்கை

படித்து முன்னறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது

மூட நம்பிக்கை!!!

கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்

எலிப் பொறியில் மவுஸ் உள்ளே இருக்கும்………

உலகத்தில் தலை சிறந்த ஜோடி எது????

செருப்பு…..

ஒன்று இல்லையென்றால் இன்னொன்று வாழாது.

ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்???

ரேஷன்லே எடை குறையும் !!!

பேஷன்லே உடை குறையும்!!!

கடவுள்கிட்டையும் டாக்டர் கிட்டையும் கோபமா பேசக்கூடாது.

கடவுள் டென்ஷனானா நோயை வரவழைச்சு டாக்டர் கிட்ட அனுப்பிச்சுடுவார்…….

டாக்டர் டென்ஷனானா கடவுள் கிட்ட அனுப்பிச்சுடுவார்!!!

எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன், நிறைய சட்டைகள்,

என் சட்டையைப் பார்த்தேன் நிறைய ஜன்னல்கள்!!!

திருவள்ளுவர் இப்போதிருந்து திருக்குறள் எழுதியிருந்தாலும்,

இறுதி வரியில் “உண்மையான தமிழனாக இருந்தால் இதை

ஷேர் செய்” என்றே எழுதியாகணும்!!!

HOTEL ADVT

WE OFFER THREE KINDS OF FOOD!!!

GOOD. – CHEAP – FAST

BUT YOU CAN PICK ONLY TWO.

GOOD AND CHEAP. WON’T BE FAST

FAST AND GOOD. WON’T BE CHEAP

CHEAP AND FAST. WON’T BE GOOD

நீ சிரித்துப் பார் உன் முகம் உனக்குப் பிடிக்கும்,

மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார், உன் முகம்

எல்லோருக்கும் பிடிக்கும்!!!

மேடம், நாங்க சோப்பு கம்பேனிலேர்ந்து சர்வே எடுக்க வரோம்.

துணி துவைக்க நீங்க எதை உபயோகிக்கிறீங்க???

என் கணவரை……!!!!

ஓரெட்டில் (8) வளர்க்காத வளர்ப்பும்,

ஈரெட்டில் (16) படிக்காத படிப்பும்,

மூவெட்டில் (24) நடவாத மணமும்,

நாலெட்டில் (32) பிறவாத மகவும்,

ஐயெட்டில் (40) சேர்க்காத பொருளும்,

ஆறெட்டில் (48) பெறாத புகழும்,

ஏழெட்டில் (56) கற்காத ஞானமும்,

எட்டெட்டில் (64) சாவாத சாவும்,

பின்னால் துன்பமே விளைவிக்கும்.

உலகில் ஏழு பாவங்கள்

1.உழைப்பில்லாத சொத்து

2.மனச்சாட்சியில்லாத சொகுசு வாழ்க்கை

3.ஒழுக்கமில்லாத கல்வி

4.நாணயம் இல்லாத வார்த்தை

5.மனித நேயமில்லாத அறிவியல்

6.தியாகமில்லாத பிரார்த்தனை

7.கொள்கையில்லாத அரசியல்

டீக்கும் காப்பிக்கு என்ன வித்தியாசம் தெரியுமா???

டீ (TEA) ல ஒரு ”ஈ“ இருக்கும், காப்பில இரண்டு “ஈ” இருக்கும்!!! (COFFEE)

KNOWLEDGE DECIDES WHAT TO SAY……

SKILL DECIDES HOW TO SAY….

ATTITUDE DECIDES HOW MUCH TO SAY

WISDOM DECIDES WHETHER TO SAY OR NOT!!!

திருடனுக்கு பிடித்த ராகம்……………”சுருட்டி”!!!

உடுத்திக்கொள்ள முடியாத டிரஸ்……..”அட்ரஸ்”

உண்ண முடியாத பன் …………….”ரிப்பன்”

சாப்பிடக்கூடிய கட்டை………….”கொழுக்கட்டை”

பேச முடியாத வாய் …………… “செவ்வாய்” 

ஜெயிலர் ஒரு கைதியைப் பார்த்து :  உன்னைப் பார்க்க நண்பர்களோ,

உறவினர்களோ ஏன் யாரும் வருவதில்லை???

கைதி : அவர்கள் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்………

A ENGLISH PUBLICATION OFFERED A PRIZE FOR THE BEST DEFINITION OF A “FRIEND”

OUT OF THOUSANDS OF ANSWERS, BEST ANSWERS WERE GIVEN PRIZES.

“ONE WHO MULTIPLY JOYS, DIVIEDS GRIEF,AND WHOSE HONESTY IS INVIOLABLE”.

“ONE WHO UNDERSTANDS OUR SILENCE “.

“A WATCH WHICH BEATS TRUE FOR ALL TIME AND NEVER RUNS DOWN”.

“A VOLUME OF SYMPATHY BOUND IN CLOTH”

BEST PRIZE GOES TO,

“A FRIED IS ONE WHO COMES IN, WHEN THE WHOLE WORLD HAS GONE OUT !!!

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள்

வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின்மேல் “ ஒன்றுக்கு மேல் எடுக்க வேண்டாம்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்”

என்று எழுதியிருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

அந்த சாக்லெட் பெட்டியின் மேல் ஒரு குழந்தை

பின்வருமாறு எழுதியது. “எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்

கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்”

 to be continued………………………………………

tags- சந்தானம் சீனிவாசன் , அஞ்சலி – 1,

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 1-12-2024

Written by London Swaminathan

Post No. 13,959

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM POPULAR TAMIL AND ENGLISH DAILIES AND EDITED FOR BROADCAST.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் முதல்  தேதி 2024-ம் ஆண்டு

********

வங்காளதேசத்தில் சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்க சென்ற சாமியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்து பேரணி ஒன்றில் வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என தேச துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சாமியார் சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு, மருந்து மற்றும் பணம் ஆகியவற்றை கொடுப்பதற்காக ருத்ரபிரோதி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாதசியாம சுந்தர் ஆகிய 2 சாமியார்கள் சென்றுள்ளனர். அப்போது அந்நாட்டு போலீசாரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து டிசம்பர் 4-இல் கண்டன ஆர்பாட்டம் :

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளரும்பாஜக மாநில துணைத் தலைவருமான கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

, வங்கதேசத்தில் இடைக்கால அரசால் இந்து கோயில்கள் எரிப்பு, இந்து மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக தெரிவித்தார். வங்கதேசத்தில் பிரச்சனை உருவாகும்போதெல்லாம் இந்து மக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதாகவும் கரு.நாகராஜன்  கூறினார்.

இந்து மக்களை காக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்றும், வங்கதேச இந்து மக்கள் உரிமைக்காக நடைபெறும் போராட்டத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்பதகாவும் கரு.நாகராஜன் கூறினார்.

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் மீது, வன்முறை கும்பல் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் பதற்றம் நீடிக்கிறது.

வங்க தேசத்தில் ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சிறுபான்மை ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சின்மாய் கிருஷ்ண தாஸ், ஏற்கனவே இஸ்கான் தலைவராக இருந்ததால், இஸ்கான் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணி  

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாரதீய ஜனதா கட்சி யினர் பேரணி நடத்தினர்.

கொல்கத்தாவில் சட்டமன்ற மேலவை உறுப்பினர் சுவேந்து அதிகாரி உள்பட ஏராளமான பாரதீய ஜனதா கட்சியினர்  வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

**********

அடுத்ததாக ஆந்திர மாநில செய்தி

திருப்பதி லட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தொடங்கியது

திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது. திருப்பதி, ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குக் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்தவிசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான ‘சிறப்பு புலனாய்வுக் குழு’ (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டது

அதன்படி, சிபிஐ இந்த மாத தொடக்கத்தில் 5 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது. சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது.

********

அடுத்ததாக தமிழ் நாட்டுச் செய்திகள்

இசைவாணிரஞ்சித் மீது நடவடிக்கை தேவை:

கஸ்தூரிக்கு ஒரு நீதி;  இசைவாணிக்கு ஒரு நீதியா ?

இந்துக்கள் கேள்வி

ACTRESS kASTURI

: ”சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்கும்’ என வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி தெரிவித்தார்.

திருத்தணி: சேகர்பாபு ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்; அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணிக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் கைது செய்ய வேண்டும்.

அண்மையில் வேறு ஒரு விஷயத்தில், மன்னிப்புக் கேட்டும் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார் ; அவர் எனக்கு ஒரு நீதி இசைவாணிக்கு ஒரு நீதியா என்றும்  கேட்டிருக்கிறார்.

 இசைவாணி மீது ,சில நாட்களுக்கு முன்னால், பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமையில்  பாரதீய ஜனதாக கட்சி பிரமுகர்களும் ஹிந்து முன்னணி, மஸ்துார் யூனியன் பிரமுகர்களும் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தனர்.

 அதில், இசைவாணி என்பவர் சபரிமலை ஐயப்பனை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பாடல் வெளியிட்டு இருக்கிறார். ‘ஐம் சாரி ஐயப்பா’ என்று தொடங்கும் அந்த பாடலில் பக்தர்களை சுவாமி ஐயப்பன் அச்சுறுத்துவது போல் ஒரு கற்பனை கதையை உருவாக்கி வரிகள் அமைந்துள்ளார். ஹிந்துக்களின் நம்பிக்கையை அவர் இழிவுபடுத்தி உள்ளார்; அய்யப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதுாறு செய்கிறார் என, பல்வேறு தரப்பிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளும் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

 மதுரையில் பா.ஜ., வக்கீல் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி கூறுகையில், ”இசைவாணி மீது பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகிறோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதித்துறையை நாடுவோம். இது ஒரு திட்டமிட்ட சதி. இவ்விவகாரத்தை பா.ஜ., சும்மா விடாது” என்றார்.

பாரதிய பார்வர்டு பிளாக் புகார்

சபரிமலை ஐயப்பனை இழிவு படுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மைய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக்., கட்சியினர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தனர்.

 அகில பாரத இந்து மகா சபா மாநில மகளிர் அணித் துணைத் தலைவர், நிர்மலா மாதாஜி, கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் பானுமதி ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

*******

கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : பெரும்பான்மையான இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார்சிலையை அகற்றவேண்டும் என்கிற  கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

கட்அவுட் கலாச்சாரத்திற்கு கெட்அவுட் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிய நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் மீண்டும் பேனர் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அதேபோன்று நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும்  முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை பல இடங்களில் திறக்கப்பட்டு உள்ளதும் ஏற்கத்தக்கது அல்ல, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மேலும் கோவில் முன்பு கடவுள் இல்லை என்ற வாசகத்துடடன் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

******

கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி:

 சென்னை: ‘கோவில் நிதியில் துவங்கப்பட்ட கல்லுாரியில், ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில்சுஹாயில் என்பவர் தாக்கல் செய்த மனு:

சென்னை கொளத்துாரில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2021 அக்டோபரில், அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேர்முகத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.

நிபந்தனை

பணியிடங்களுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நான் பிறப்பால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன்.

அறநிலையத்துறை விதித்துள்ள நிபந்தனையால், நேர்முகத் தேர்வில் பங்கேற்க எனக்கு தகுதிஇல்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு போட்டியிட, என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ”ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ”கோவில் வாயிலாக இயங்கும் கல்லுாரி, மத நிறுவனம் அல்ல; அது கல்வி நிறுவனம். கல்லுாரியில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு, அறநிலையத்துறை நடைமுறை பொருந்தாது.

XXXXXXXXX

பிற மாநிலச் செய்திகள்

 சம்பல் ஜமா மசூதி ஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

 உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதி ஆய்வு தொடர்பான வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தும்படி, விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 உ.பி.,யில் சம்பல் மாவட்டத்தின் சந்தவுசி என்ற இடத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது.

ஹிந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டப்பட்டதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனர். இதை கடந்த 19ல் விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த 24ல், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் மேல் முறையீடு செய்தனர்.

மாவட்ட நீதிமன்றத்தில், 2025 ஜன., 8ல், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை தொடராது என, நம்புகிறோம்.

சம்பல் மாவட்டத்தில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். இரு சமூகத்தினரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அமைதி குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

*******

ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்ததா ஏ.எஸ்.ஐ.க்கு கோர்ட் நோட்டீஸ்

ராஜஸ்தானில் பிரசித்தி பெற்ற ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆஜ்மீர் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி விளக்கம்து.

அஜ்மீர் தர்கா என்பது பிரசித்தி பெற்ற சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்களின் அடக்கத்தலம் (மக்பரா) ஆகும்.

இங்கு சிவன் கோயில் இருப்பதாகவும் அந்த இடத்தை ஆய்வு செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் 1911-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்விலாஸ் ஷர்தா என்பவர் எழுதிய புத்தகத்தில் புலந்த் தர்வாசா உட்பட அஜ்மீர் தர்காவைச் சுற்றி இந்து சிற்பங்கள் மற்றும் உருவப்படங்கள் தெரியும் என மேற்கோள் காட்டப்பட்டது.

இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி இந்திய தொல்லியல்துறை , ஆஜ்மீர் தர்கா கமிட்டி ,சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிச. 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

******

இடஒதுக்கீடுக்கான மதமாற்றம் ஒரு மோசடி!

இடஒதுக்கீட்டுப் பலன்களுக்காக மட்டுமே மத மாற்றம் செய்வது அரசியல் சாசனத்தின் மீதான மோசடி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இந்து தந்தை மற்றும் கிறிஸ்தவ தாய்க்கு பிறந்த பெண் ஒருவர், சில மாதங்களிலேயே கிறிஸ்தவராக ஞானஸ்நானம் செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரியில் மேல்பிரிவு எழுத்தர் பணிக்காக இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தபோது, அதனை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது.

இதனை எதிர்த்து கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையாக இருந்தபோது ஞானஸ்நானம் செய்யப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த பதிவை ரத்து செய்ய அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை என தெரிவித்தது.

தேவாலயத்திற்கு தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதை அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக மட்டுமே இந்து மதத்தை தழுவுவதாகக் கூறுவது, இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பை மோசடி செய்வதாகும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டால் இடஒதுக்கீட்டு கொள்கையின் சமூக நெறிமுறைகள் தோற்கடிக்கப்படும் என கூறிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்      எட்டாம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம்.

—-subham—-

TAGS- ஞானமயம் ,உலக இந்து செய்தி மடல் 1-12-2024, HINDU NEWS

Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu—3 (Post No.13,958)

Written by London Swaminathan

Post No. 13,958

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Final Part

Sri Ramakrishna Paramahamsa refers to Sri Chaitanya Mahaprabhu in more places.

Lord Chaitanya used to have three sorts of states

1.the conscious state in which the mind dwelt on the gross and the subtle bodies.,

2.the semiconscious  in which the mind soared to the casual body felt the the caul bliss, and

.the state of in-turned consciousness (superconscious state) in which the mind used to merge completely in the Mahakarana- the Great First Cause.

There is a great similarity between this and five sheaths or kosas of the Vedanta. the First Cause is beyond these kosas. When the mid used to merge in  this First Cause  , Sri Chaitanya used to fall in Samadhi; this is known as Nirvikalpa samadhi  or Jada Samadhi

****

One day while a disciple was shampooing his feet , the Master said, referring to this act of service, “This has a deep significance “. Then placing his hand on his own heart, he said, “If there is anything (Divine) in it , then (by this act of service) ignorance and Avidhya will vanish at once for all “

And then he added with a serious look , “There is no outsider here. That day I had a vision. Harish was near me then. I saw Sachitananda coming out of the sheath ( his body). Having come out, He said, I incarnate in every age. I thought I was delirious. So, I kept quiet. Then I heard that He was even saying, “Even Chaitanya worshipped Sakti.”

These Chaitanya references or anecdotes were taken from the book Sayings of Sri Ramakrishna.

****

Some years ago I got a hundred year old book and posted  Chaitanya’s quotations. I attach it here:

Live Like a Tree: Chaitanya’s Advice! (Post No.4099)

Date: 20 July 2017


Post No. 4099

“A man must attain the nature of a tree, which lives solely for the benefit of others, before he can become a true worshipper”—Chaitanya Mahaprabhu

Chaitanya was a great devotee of Lord Krishna. His principal place of worship is Nadia in West Bengal. He has a big following in Bengal and adjacent states. Krishna devotees consider him as an incarnation of Lord Krishna himself. They say that amongst the many incarnation of Vishnu four are most important

the White incarnation named Ananta

the Red incarnation named Kapila

the Black incarnation named Krishna

the Yellow incarnation named Chaitanya

Chaitanya was born in CE. 1484 in Nadia and died at Puri in 1527

His father was a Brahmin named Jagannath Misra and his mother’s name was Suchi. Their first son Visvarupa became a religious mendicant. Second son Chaitanya was born when his mother was old. Consequently the child was very weak and did not take milk for three days. They thought that the child would die soon and hung him in a tree in a basket. A Brahmin called Adaitya happened to pass at that time, saw the child and thought that it was a divine child. He wrote Hare Krishna mantra in  the sand below the tree with his toe. Chaitanya’s mother took it as a positive sign and took the child back into the house. The child quickly recovered and took food. 

Chaitanya s a youth made good progress in learning. He married twice, first at the age of eleven a girl named Lakshmi, and on her early decease, he married another girl Vishnupriya. They lived together for some time. When Chaitanya was 24, he decided to find a way to solve the distresses of mankind. He took off his sacred thread and became an ascetic. Leaving his home, parents, and wife, he spent six years as a wandering saint (Bairagi), travelling all over India teaching his doctrines, acquiring followers, and extending the worship of Lord Krishna. 

Varanasi has been the meeting point of scholars from time immemorial Buddha, Adi Shnkara and other saints went to Varanasi and convertedgreta people to their faiths. Chaitanya also went to Kasi (Varanasi= Benares) and converted the chief pundit Prakashananda to his faith. 

Chaitanya was a great reformer; his success may be traced to his extraordinary fervour and his love for men. He preached utterly unselfish love to Vishnu/Krishna.

Worship from interested motives was not worship at all, but shop keeping, barter – he said.

The chief tenets of his faith are:

1.A disregard of caste distinctions

2.Emphasis was laid on mendicant life

3.     All must worship Krishna with a rosary made up of Tulsi beads

4.     He taught his followers to follow Radha, the beloved mistress of Krishna. The best form of devotion was that which Radha, as the beloved mistress of Krishna, felt for him.

5.They must exercise Bhakti (devotion) in Krishnain five ways:

Quite contemplation of the deity- Santi

The devotion of a servant to his master – Dasya

Friendship to him – Sakhya

Love to him resembling h love of children to their parents – Vatsalya

Passionate attachment of a girl to her lover or as the Gopis felt for Krishna -Madhurya.

He allowed widows remarriage and forebode the drinking of intoxicants and the eating of fish and meat.

He preached against animal sacrifices and Tantric practices.

He saw visions of Krishna and his attendant Gopis and terminated his life by walking into the sea in one of these ecstatic moments. Another version says that he entered the sanctum of Lord Jagannath and disappeared in a flash of light. We have similar disappearances in the lives of Tamil saints Sambandar, Vallalar and Andal.  Chaitanya before his disappearance gained many adherents and honours. The independent King of Orissa became his disciple. As Chaitanya left no issue, Aditya and Nithyananda, became the leaders of the new faith.

Source book: Wilkin’s Hindu Mythology

—Subham—

Tags- Sri Ramakrishna, on Chaitanya, third part, Wilkin’s Hindu Mythology

ஞான தீபம் ஏற்றுவோம் திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.


குவலயமெங்கும் குமரனைப் போற்றுவோம்

ஞான தீபம் ஏற்றுவோம்

திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.

எல்லாம்வல்ல அறுமுகசிவனாகிய ஸ்ரீ முருகப்பெருமான் அனுக்கிரஹம் துணைக்கொண்டு,

 உலகநலனை வேண்டி முருகப்பெருமானுக்குகந்த கார்த்திகை தீபதினத்தைக்

கொண்டாடும் விதமாக

எதிர்வரும் குரோதி வருடம்

கார்த்திகை மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று

உலகளாவிய முருகன் அடியார்கள் கந்தப்பெருமானை சிந்தையில்கொண்டு சந்தக்கவிச் சக்ரவர்த்தி ஸ்ரீ அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் மற்றும்

கந்தரனுபூதி கந்தரலங்காரம் முதலியவற்றில்

ஏதேனும் ஓர் பாடலை பாடி வீடியோவாக அனுப்பினால்

எங்களது ஞானமயம் முகநூல் பக்கம் மற்றும் யூட்யூப் பக்கத்தில் 13/12/24

வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்படும். பதிவுகளை

10/12/24ஆம் தேதிக்குள்

அனுப்பி வைக்கவும்.

Telegram or WhatsApp No +447739415067

Email gnanamayam@hotmail.com

வேலும் மயிலும் துணை, வேலும் மயிலும் துணை என்று இடையுறாது ஓதி, வேண்டிய பேறு பெற்றோர் பலர்.

இணையம் மூலம் நடைபெறும்

இவ்விழாவில் குருமுதல்வர்கள் ஆசியுரைகளும், உலகளாவிய இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளும் பாகவதர்களின் பிரவசனங்களும்

சைவ அறிஞர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறும்.

முருகன் அடியார்கள் அவர்களின் குழந்தைகளை கையில் வேலுடன் முருகர் அலங்காரம் செய்து, முருகன் பாடலை பாடச் செய்து தீபத்திருநாளை சிறப்பாக கொண்டாடி கந்தன் திருவடியில் சமர்ப்பிப்போம்.

  வேலையும் மயிலையும் நினைப்பதால் அங்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும் சகல பேறுகளும் கிடைக்கும் எனபது திண்ணம்.

சாற்றுவோம் திருப்புகழ் மாலை

போற்றுவோம் முருகனின் தாளை

வாசிப்போம் கந்தனின் நூலை

பூசிப்போம் குமரனின் வேலை

—SUBHAM—-

GNANAMAYAM SUNDAY BROADCAST 1-12-2024

GNANAMAYAM SUNDAY BROADCAST 1-12-2024

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on Books written by Late Srinivasan’s

***

Talk by Brahannayaki Sathyanarayan on SRI VAIKUNDAM temple from Bengaluru

***

Talk on Navagrahas by Chennai Srinivasan; Rebroadcast in Memory of Late Santanam Srinivasan .

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

Anchored by London Swaminathan

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

சென்னை சந்தானம் சீனிவாசன் நூல்கள்

—subham—

QUIZ வேமனா பத்து QUIZ (Post No.13,957)

Written by London Swaminathan

Post No. 13,957

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.வேமனா யார்? எங்கு பிறந்தார் ?

வேமனா ஆந்திர பிரதேசத்தில் கோதாவரி மாவட்டத்த்தில் பணக்கார ரெட்டி குடும்பத்தில் 1652-ஆம் ஆண்டில் பிறந்தார் 

****

2.அவர் எதனால் புகழ் பெற்றார் ?

அருணகிரிநாதர் போலவே விபச்சாரிகள் பின்னால் அலைந்து, பின்னர் யோகியாக மாறி, தெலுங்கு மொழியில் கவிதை மழை பொழிந்து. சிவபிரானை போற்றியதால் புகழ் பெற்றார் .

****

3.அவருடைய முதல் குரு யார்? இரண்டாவது குரு யார்?

அவரது அண்ணன் அணுவேம ரெட்டி அந்த வட்டாரத்து அரசர். அவருடைய மனைவி  நரசம்மா, வேமனாவின் முதல் குரு.  அவரது கடையில் வேலை பார்த்த அபிராமா என்ற வேலைக்காரன் இரண்டாவது குரு.

****

4.எப்படி இவர்கள் குரு ஆனார்கள் ?

அண்ணியான நரசம்மா அவருக்கு அன்பும் ஆதரவும் காட்டி நல்ல உபதேசங்களை சொல்லி அவரைத் திருத்தப் பார்த்தாள். அதனால் அவரை வேமனா முதல் குரு என்று புகழ்ந்தார் . கடைக்கார வேலையாளுக்குக் கிடைக்க வேண்டிய உபதேசம் இவருக்கு கிடைத்ததால் அவரை– அபிராமாவை—  இரண்டாவது குரு என்று புகழ்ந்தார்.

****

5.அபிராமாவுக்குக் கிடைக்க வேண்டிய உபதேசம் எப்படி வேமனாவுக்குக் கிடைத்தது?

வேமனா நடத்திய கடையில் அபிராமா வேலை பார்த்துவந்தார்; தினமும் காலையில் ஆறு மணிக்கு வராமல் தாமதமாக வந்தார். காரணம் என்னவென்றால் தான் காலைப் பிரார்த்தனை செய்யாமல் வரவே முடியாது என்று அபிராமா சாத்தித்தார். வேமனாவுக்கு நம்பிக்கை இல்லை ; ஒரு நாள் மறைவில் நின்று அதிகாலையில் அபிராமா செய்வதையெல்லாம் கவனித்தார். அவர் காலையில்,எழுத்து பூக்களை பறித்து ஒரு யோகியின் கால்களில் சமர்ப்பித்து வழிபடுவதை மறைவிலிருந்தே கவனித்தார்; அந்த யோகி “அபிராமா நாளைக்கு வா; நான் சமாதி அடையப்போகிறேன் அதற்கு முன்னால், உனக்கு ஒரு உபதசம் தருகிறேன்” என்றார்.  இதைக் கேட்ட வேமனாவுக்குத் தான் அந்த உபதேசத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் உதயமாயிற்று. அண்ணன் மனைவி நரசம்மாவுக்கு ஒரு ஆபரணம் வேண்டும் என்றும் அதை அபிராமா மறுநாள் கட்டாயம் செய்துதர வேண்டும் என்றும் அண்ணனான அரசன் மூலம் கட்டளை பிறப்பிக்கச் செய்தார் ; அரசன் கட்டளையைத் தவிர்க்க முடியாமல் அந்த வேலையில் அபிராமா ஈடு பட்டார். அதே நேரத்தில் வேமனா, அந்த யோகி இருக்கும் இடத்திற்குச் சென்று தனது எஜமானன் அபிராமா இன்று வரமுடியாததால் தன்னை அனுப்பி பூக்களை சமர்ப்பிக்க அனுப்பினார் என்று சொன்னார். யோகியும் மூன்று முறை அபிராமா வருகிறானா பார், பார் என்று சொல்லி வேமனாவை அனுப்பினார்;. அபிராமா வரவில்லை. சமாதி அடைவதற்கு முன்னர் வேமனாவின் காதில் சிவ பஞ்சாட்சரத்தை ஓதிவிட்டு சமாதி அடைந்தார். அன்று முதல் வேமனா பெரும் யோகியாக மாறினார்  

*****

6.அபிராமாவை குரு என்று சொல்லி வேமனா அவரது காலில் விழுந்தது ஏன்?

உபதேசம் பெற்ற வேமனா , தான் பொய் சொல்லி அபிராமாவை ஏமாற்றியதை எண்ணி வருந்தினார் கடைக்குச் சென்று வேலையாள் அபிராமாவின் காலில் விழுந்தார் . உனக்குக் கிடைக்கவேண்டிய உபதேசத்தை நான் பெற்றுவிட்டேன்; என்னை மன்னிப்பாயாக என்றார்; கடைக்கு எஜமானரான வேமனா, தனது காலில் ஏன் விழுகிறார்  என்று அபிராமாவுக்கு ஒன்றும் புரியவில்லை . பின்னர் வேமனா நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டார்

****

7.வேலையாள் அபிராமாவுக்கு வேமனா எப்படி நன்றி செலுத்தினார் ?

அருணகிரிநாதர் பிரபுட தேவராயனை பல திருப்புகழில் பாடி நன்றி தெரிவித்தது போலவும் ,கம்பன் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பாடி நன்றி தெரிவித்தது போலவும் வேமனா தனது குருவான வேலைக்கார அபிராமாவைப் பாடிப் பரவியிருக்கிறார்.

****

8.வேமனாவின் பாடல்கள் எத்தனை ? அதன் சிறப்புகள் என்ன ?

வேமனாவின் சுமார் நாலாயிர   பாடல்களைத்  தொகுத்துள்ளார்கள். அவர் ஆந்திர பிரதேசம் முழுதும் யாத்திரை செய்து பாடிய பாடல்கள் அவை.. வேலைக்காரன் அபிராமாவுக்கு தான் செய்த தீங்குகளுக்கு மன்னிப்புக் கோரியும் அவரது குணங்களைப்  புகழ்ந்தும் பாடிய பாடல்களும் அண்ணி நரசம்மாவின் அருங்குணங்களைப் போற்றிப்  பாடிய பாடல்களும் அந்தப்பாடல்களில் இடம்பெற்றன. அத்வைத வேதாந்தக் கருத்துக்களை முக்கியமாகப் பாடினார் .. அவரது கவிதைகள் பல பொருட்களைத் தரும் வகையில் அமைந்தன. ஆழமான, ஆனால் தெளிவான பாடல்கள் அவை.

*****

9.அவர் மீது எழுதப்பட்ட புஸ்தகம் எது ?

அவரது சீடர்களில் ஒருவர் வேமனா மீது சம்ஸ்க்ருத மொழியில் சதகம் இயற்றியுள்ளார்  அவர் நடத்திய பல அற்புதங்கள் இதில் இடம்பெறுகின்றன .

அவர் வாழ்க்கை பற்றி சில தெலுங்கு திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. பலர் நூல்களையும் எழுதியுள்ளார்கள். 

****

10.அவர் எங்கு, எப்போது சமாதி ஆனார் ? அவர் என்ன அற்புதங்களை செய்தார் ?

வேமனா பிறந்த ஆண்டு பற்றி வாதப் பிரதிவாதங்கள் இருப்பதால் சமாதியான ஆண்டு கிடைக்கவில்லை; கதிரி என்னும் கடாருப்பள்ளியில் அவருடைய சமாதி உள்ளது  சுமார் 300 ஆண்டு வீச்சில் இவரது காலத்தைக் கணிக்கின்றனர் . சி பி பிரவுன் நிறைய ஆராய்ச்சி செய்து முடிவு செய்த ஆண்டு 1652  (.பிறந்த ஆண்டு).

அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை ; எப்போதும் ஒரு முலாம் பழத்தைக் கொடுப்பார் . அதில் பொன்னோ ரத்தினக் கற்களோ இருக்கும். இது பல முறை நடந்துள்ளது  இடி விழுந்தும் கூட அவர் சமாதி சேதம் அடையவில்லை. அவரே அதிலிருந்து தோன்றி பின்னர் சமாதிக்குள் நுழைந்தார். அவரது வாக்குகளும் கவிதைகளும் தெலுங்கு மக்களின் பேசசு வழக்கில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகினறன.

–SUBHAM—

TAGS– வேமனா, தெலுங்கு, கவி ,யோகி , ஆந்திரம், கதிரி அபிராமா, வேலையாள், நரசம்மா , குரு, QUIZ வேமனா பத்து

மேலாண்மை நிர்வாகத்தில் முன்னேறுவது எப்படி? (Post No.13,956)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.956

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

21-11-24 Kalkionline குழும பத்திரிகையில் வெளியான கட்டுரை.

மேலாண்மை நிர்வாகத்தில் முன்னேறுவது எப்படி?

ச. நாகராஜன்

சில சின்ன நீதிகளைப் பார்க்கலாமா? வேறொன்றுமில்லை மேலாண்மை நிர்வாகத்தில் – மானேஜ்மெண்டில் – முன்னேறுவதற்காகத் தான்!

சும்மா உட்காரும் இடம்!

காகம் ஒன்று உயரமான மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. நாள் முழுவதும் அது ஒன்றுமே செய்யவில்லை. சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது ஒரு முயல்.

அது காகத்தைப் பார்த்துக் கேட்டது: “நானும் உன்னைப் போலவே நாள் முழுவதும் சும்மாவே உட்கார்ந்திருக்கவா?

உடனே காகம் சொன்னது: “ஏன் முடியாது? உட்கார்ந்திருக்கலாமே?”

ஆகவே உடனே முயலும் மரத்தின் அடியில் சும்மாவே உட்கார்ந்திருந்தது.

அப்போது திடீரென்று அங்கு வந்த நரி ஒன்று முயல் மீது பாய்ந்து அதை ஒரே அடியில் கொன்றது; தின்றது!

இதில் என்ன மேலாண்மை நீதி பொதிந்து இருக்கிறது?

சும்மாவே ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்க நீ மிக மிக மேலான உயரத்தில் இருக்க வேண்டும். (அதாவது கம்பெனி சேர்மனாகவோ அல்லது சி இ ஓ ஆகவோ இருக்க வேண்டும்!)

யாரிடம் மோதுகிறோம் என்பதை யோசித்துப் பேசு!

இரண்டு சண்டைக் கப்பல்கள் ஒத்திகைக்காக கடலில் விடப்பட்டன. கடுமையான கால நிலை. கிட்ட இருக்கும் எதையும் கூடச் சரியாகப் பார்க்க முடியாத படி பனி மூட்டம்!

ஆகவே கப்பலின் காப்டன் மேல் தளத்திற்கு வந்து தானே அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தான்.

இருள் சூழ்ந்தது. மேல் தளத்தில் இருந்த ஒருவன் காப்டனிடம், “காப்டன், எதிரில் ஒரு வெளிச்சத்தைப் பார்க்கிறேன்” என்றான்.

காப்டன் கேட்டான் : “அந்த வெளிச்சம் நகர்கிறதா அல்லது ஒரே இடத்தில் இருக்கிறதா?”

“ஒரே இடத்தில் இருக்கிறது காப்டன்” என்று பதில் வந்தது.

அப்படியானால் ஒரு அபாயகரமான மோதல் ஏற்படப்போகிறது! உடனே காப்டன், சிக்னல்மேனை அழைத்தான்: உரக்கக் கூவினான்:  எதிரில் வரும் கப்பலுக்கு ஒரு சிக்னலைக் கொடு. இப்படியே போனால் மோதப்போகிறோம். ஆகவே அதை 20 டிகிரி திருப்பி விடச் சொல்”

உடனே பதில் சிக்னல் வந்தது: “நீ உன் வழியை 20 டிகிரி மாற்றிக் கப்பலைத் திருப்பிச் செல்”

கப்பல் காப்டனுக்கும் பெரும் கோபம் வந்தது: “என்னையா மாற்றிப் போகச் சொல்கிறாய்! நான் பெரிய சண்டைக் கப்பலின் காப்டன்! என்ன ஆகும் தெரியுமா? மரியாதையாக மாற்றிச் செல்”

உடனே பதில் வந்தது: “நான் லைட் ஹவுஸ். என்னால் மாற முடியாது நான் உனக்கு வழிகாட்டி!. நீ தான் மாறிப் போக வேண்டும்!”

நீதி: யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதை நன்கு யோசித்துப் பேசு. இல்லையேல் விளைவு விபரீதமாகத் தான் இருக்கும்!

பிரச்சினையை எதிர் கொண்டு கலங்காமல் இருப்பது தான் அமைதி

அரசன் ஒருவன் ஒரு முறை தனது அரசாங்கத்தில் ஓவியர்களுக்கான ஒரு போட்டியை அறிவித்தான். அமைதியை நன்கு சித்தரிக்கும் ஓவியத்திற்கு நூறு பொற்காசுகள் தரப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்தான். ஓவியங்கள் வந்து குவிந்தன. அவற்றில் இரண்டை நடுவர்கள் தேர்ந்தெடுத்து அரசனிடம் இறுதி முடிவை எடுக்குமாறு கூறினர்.

இரண்டு படங்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத் தான் இருந்தன.

முதல் படத்தில் ஒரு அழகிய பிரம்மாண்டமான ஏரி. அதைச் சுற்றி அற்புதமான பெரிய மலைகள். மேலே அழகிய நீல வானம். எங்கும் அமைதி.

அடுத்த படம் அதே போலத் தான் இருந்தது. பிரம்மாண்டமான ஏரி. சுற்றி கடுமையான பாறைகளை உடைய மலைகள். ஆனால் வானத்தில் கரும் மேகங்கள் இருக்க மழை பொழிந்து கொண்டிருந்தது. மின்னல் பளீர் பளீரென்று வீசிக் கொண்டிருந்தது. மலையின் ஒரு புறத்திலிருந்து அருவி ஒன்று விழுந்து கொண்டிருந்தது. அரசன் அந்தப் படத்தை உற்றுப் பார்த்தான். அருவி கொட்டிக் கொண்டிருந்த போது அந்த பாறைக்குப் பின்னால் ஒரு சிறிய பொந்து இருந்தது. அதில் ஒரு பறவை கூடு கட்டி இருந்தது. தன் குஞ்சை அது அணைத்துக் கொண்டிருந்தது. ஒரே அமைதி!

அரசன் இரண்டாவது படமே சிறந்தது என்று கூறித் தன் முடிவை அறிவித்தான். அனைவரும் ஏன் என்று கேட்டனர்.

அதற்கு அரசன் கூறினான்: “அமைதி என்றால் சத்தமே இல்லாத இடத்தில், பிரச்சினையே இல்லாத இடத்தில், கடுமையான உழைப்பே இல்லாத இடத்தில் ஏற்படும் ஒன்று என்று அர்த்தமில்லை. அமைதி என்பது இவை அனைத்திற்கும் நடுவில் உன் மனதை அமைதியுடன் வைத்து வாழ்வது தான்; முன்னேறுவது தான். அதோ அந்தப் பறவையைப் பாருங்கள். இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் ஒரு கூட்டைக் கட்டித் தன் குஞ்சை அது எப்படிப் பாதுகாக்கிறது! இதுவே அமைதிக்கான சிறந்த ஓவியம்!”

அரசனின் முடிவை அனைவரும் மெச்சினர்.

நீதி: போட்டி மிகுந்த சூழ்நிலையில் தான் கம்பெனி வளரும். அப்போது இதயத்தை அமைதியுடன் உற்சாகமாக வைத்து சூழ்நிலையை எதிர்  கொள்ள வேண்டும்.

மாற்றி யோசி

ஒரு டூத் பேஸ்ட் கம்பெனியில் விற்பனை சற்று சரிந்து விட்டது. விலையைக் கூட்டினால் இன்னும் விற்பனை பாதிக்கும். டூத் பேஸ்ட் டியூபை பெரிதாக்கினாலோ அல்லது சிறிதாக்கினாலோ விலை கூடும் அல்லது குறையும்.

என்ன செய்வது?

தலைமை நிர்வாகி அனைவரையும் ஓரிடத்தில் கூட்டினார். இதற்கு என்ன செய்வது என்று யோசனை  கேட்டார். சிறந்த யோசனைக்கு மாபெரும் பரிசு என்றும் அறிவித்தார்.

ஏராளமான யோசனைகள் கூறப்பட்டன.

ஆனால் மாற்றி யோசித்த ஒருவர், “என்னிடம் ஒரு சின்ன யோசனை உள்ளது. அதைச் செய்தால் விற்பனை இரட்டிப்பாகும். விலையும் கூட்டவே வேண்டாம். சைஸையும் மாற்றவே வேண்டாம்: என்றார்.

நிர்வாகி ஆச்சரியப்பட்டுப் போனார். “சொல்லுங்கள், என்ன யோசனை?” என்று ஆவலுடன் கேட்டார்.

“ஒன்றுமில்லை. இப்போது டியூபில் பேஸ்ட் வரும் ஓட்டையைக் கொஞ்சம் பெரிதாக்கலாமே” என்றார் அவர்.

ஓட்டை யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவில் சிறிதே பெரிதானது. டியூபுகள் சீக்கிரம் தீரத் தீர விற்பனை அமோகமாகப் பெருகியது.

நீதி : மாற்றி யோசியுங்கள்; முன்னேறலாம்!

***