இந்திய நகரங்களை அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குமா ?
ஆந்திரத்தில் கடப்பா ஜில்லாவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஸ்ரீ வீர பிரம்மேந்திர சுவாமிகள் எழுதிய கால ஞானம் என்னும் நூலில் எழுதிய ஆயிரக்கணக்கான, எதிர்காலம் பற்றிய அறிவிப்புகளை மேலும் காண்போம் .
அவரது ஆரூடங்களைப் படிக்கும் போது இந்தியா மீது சீனாவோ பிரிட்டனோ அமெரிக்காவோ அணுகுண்டுத் தாக்குதல்களை நடத்தும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவர் குருஜி ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர், மூன்றாவது உலகயுத்தம் இந்தியாவில் நடக்கும் என்று சொல்லியிருப்பதால் பிரம்மகிரி மடத்தின் வீர பிரம்மேந்திர சுவாமிகள் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது .
அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் எதிரிகள் ; அமெரிக்கா ஹிட்லரையும் , கிறிஸ்தவர்களையும், வெள்ளைக்காரர்களையும் தாக்காமல் மில்லியன் கணக்கில் ஜப்பானிய புத்தமதத்தினரை அணுக்குண்டு வீசி அழித்ததை நாம் அறிவோம். ஆகையால் எந்த ஒரு யுத்தத்திலும் இந்துக்களுக்குத்தான் ஆபத்து அதிகம்.
కాలజ్ఞానం கால ஞானம்
ஒரு குறிப்பிட்ட நாளில் இருபத்தோரு இந்திய நகரங்கள் அழியும்
***
திருப்பதி காஞ்சி திருவள்ளூர் போன்ற கோவில்களில் விக்ரகங்களில் மாறுதல்கள் ஏற்படும் .
***
கலியுக முடிவில் கிருஷ்ணா நதி நீர்மட்டம் உயர்ந்து குன்றின் மீதுள்ள கனக துர்கா கோவிலைத் தொடும் .
****
ஒரு மூன்று வயதுக்கு குழந்தையும், ஒரு சேவல் கோழியும் வருங்காலத்தை உரைக்கும் .
****
(அவர் கூறிய அதிசய பறவைகள், அதிசய காளைகள் பற்றிய விஷயங்களை நான் எழுதவில்லை; காரணம் என்னவெனில் இவையெல்லாம் மறைபொருளில் சொன்ன விஷயங்களாக இருக்கலாம். அவைகளை நாம் அப்படியே மொழி பெயர்க்கக் கூடாது; எடுத்துக் காட்டாக இரண்டு பொன்னிறப் பறவைகள் வானில் பறந்து பாவாத்மாக்களை அழிக்கும் என்பதை நாம் இப்போது ட்ரோன் DRONE என்று மொழிபெயர்க்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்துக்குப் பின்னர் ட்ரோன் DRONE போல புதிய அதி நவீன தாக்குதல் கருவிகள் வரக்கூடும் ).
எடுத்துக்காட்டாக, திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மறைபொருள் கூற்று என்று நிறைய பாடல்களை எழுதியுள்ளார். பாகற்காய் விதை போட்டேன் ;கத்தரிக்காய் முளைத்தது என்பார்; உடனே அதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் உரைகாரர்கள் ஆன்மீக விஷயங்களை விளங்கியுள்ளனர்.
மேலும் சில ஆரூடங்கள்
கர்நாடகத்திலுள்ள ஹம்பியில் உள்ள அனுமான் சிலை பாவாத்மாக்கள் அதிகரித்ததால் உரத்த குரலில் கர்ஜிப்பார் ; அதைக் கேட்போர் காய்ந்த இலைகளை போல கீழே விழுந்து இறப்பார்கள்( என் கருத்து- இது ஒரு பூகம்பக் குறிப்பாக இருக்கலாம்)
பல குருமார்கள் தங்களைக் கலியுக கல்கி அவதாரம் என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள் .
பல மடங்களில் உயர் ஜாதியினருக்குப் பதிலாக பிற ஜாதி மக்கள் தலைமை ஏற்பார்கள்.
சுவாமிகளின் ஆரூடங்களை வியாக்கியானம் செய்வோர் ஒரிஜினல் நோத்ர்தாமல் விஷயத்தில் குழம்பியது போல தவிக்க வேண்டியிருக்கிறது ஏனெனில் அவர் பஞ்சாங்கத்திலுள்ள அறுபது வருட சுழற்சிக் காலண்டரில் உள்ள ஆண்டுகளைக் கூறி, இது நடக்கும், அது நடக்கும் என்கிறார். பிரபவ என்ற ஆண்டை எடுத்துக் கொண்டால் அது ஒவ்வொரு அறுபது ஆண்டுக்கும் ஒரு முறை வரும். இதே போல கலியுகத்தை எடுத்துக்கொண்டால் அவர் சொல்லாவிடினும் ஏனைய வட்டாரங்களிலிருந்து அது கிமு. 3102 ல் துவங்கியதாக அறிந்து நாம் எழுதுகிறோம். வான சாத்திரக் குறிப்புகளும் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியவை; ஆதலால் குறிப்பாக இந்த ஆண்டு என்று சொல்ல முடியாமல் யூகிக்க வேண்டி இருக்கிறது
ஒரிஜினல் நோத்ர்தாமல் விஷயத்தில் எல்லோரும் பொய் சொல்லுவது போல இவர் விஷயத்த்திலும் புஸ்தகங்கள் வந்துள்ளன; அதாவது நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு, பாருங்கள் சுனாமி வருவதை அவர் அன்றே சொன்னார்; பாருங்கள் கோவிட்/ சீன வைரஸ் நோய் பற்றி அவர் அன்றே சொன்னார் என்று புஸ்தகம் எழுதி காசு சம்பாதிக்கும் கும்பல்களும் உண்டு .
இதே போல முஸ்லீம் சூபி மதப் பிரிவு சந்நியாசி நைமதுல்லாவும் , ஒரிஸ்ஸாவில் ஜெகன்நாத் சாட்டர்ஜீயும் ஆரூடங்களை கூறி யுள்ளனர்.
–subham—
Tags- ஹிந்து நோத்ர்டாமஸ் எச்சரிக்கை!- Part 2 , இந்திய நகரங்கள், அமெரிக்கா, அணுகுண்டு , தாக்குதல்
இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்
சதுரங்க பந்தத்தின் இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.
· பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் வா இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ளா மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ர நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் நா ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் தி ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் ம ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் யி பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் மே பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ம இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் க முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் மா நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் னு ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் தெ ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ரி
· துருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்.
· இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பல வித அற்புத பலன்களை இது அருளுகிறது.
குமாரஸ்தவம்
1918-ம் ஆண்டு சுவாமிகளுக்கு வெப்பு நோய் பாதித்தது. உடனே மந்திர நூலான குமார ஸ்தவம் என்ற நூலை இயற்றினார். நோய் உடனே நீங்கியது. இதை ஓதுவோருக்கு நோய்கள் தீரும், முருகன் தன் இரு தேவியருடனும் காட்சி தருவார் என்று இவர் கூறி அருளியுள்ளார். சக்தி வாய்ந்த இதை ஓதி பக்தர்கள் இன்றும் நல்ல பயனை அடைவது கண்கூடு.
ஷண்முக கவசம்
தனது தந்தையார் இறந்த சமயத்தில் அவர் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களைக் கொண்டு 30 பாடல்கள் கொண்ட ‘சண்முக கவசம்’ என்னும் நூலை இயற்றினார்
6 மண்டலங்களில் 6666 பாடல்கள்
சுவாமிகள் இயற்றிய ஒவ்வொரு பாடலும் தனித்தன்மைகொண்டது.
சுவாமிகள் தன் வாழ்நாளில் 6666 அரும் தமிழ் பாடல்களை இயற்றி அருளியுள்ளார்.
சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டாம் மண்டலம் (திருவலங்கற்றிரட்டு) பல்வேறு சித்திரக் கவிகளைக் கொண்டு விளங்குகிறது. இதே போல நான்காம் மண்டலத்தில் உள்ள பத்து பிரபந்தங்கள் அனைத்துமே சித்திரக்கவிகளாக உள்ளன. சித்திரக் கவிகளுக்குள்ளே பல சித்திரக் கவிகளை அமைத்தும் இவர் பாடியிருப்பது தமிழ் என்னும் விந்தையைப் பற்றி ஆராய விரும்புவோருக்கு ஒரு அரும் பொக்கிஷமாகும்.
சஸ்த்ர பந்தம், சதுரங்க பந்தம் மயூர பந்தம், கமல பந்தம் என பல்வேறு வகை சித்திரக் கவிகளை சுவாமிகள் அருளியுள்ளார்.
சண்முக கவசம். பஞ்சாமிருத வண்ணம், குமரகுருதாச சுவாமிகள் பாடல் (1266), ஸ்ரீமத் குமார சுவாமியம் (1192).திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) – 1135, திருப்பா (திட்ப உரை) – 1101, காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம் – 608,
ஆகியவை சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களைக் கொண்டுள்ளது.
சமாதி
1926-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி உயில் ஒன்றை எழுதி தேஜோ மண்டலசபை அமைப்பை உருவாக்கி செயல்முறை ஒன்றை சுவாமிகள் உருவாக்கினார்.
சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதியன்று காலை 7.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் சமாதி அடைந்தார்.
சுவாமிகளின் சமாதி சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அருகில் திருமடவளாகத்துள் அமைந்துள்ளது.
தமிழின் தெய்வத் தன்மையை உணரவும் முருகனின் அருளைப் பெற்று வளமான வாழ்க்கை பெறவும் பக்தர்கள் துதிக்க அருட்பாடல்களைத் தந்த ஒரு பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் என்றால் அது மிகையாகாது!
EVERY YEAR WE CELEBRATE DIWALI, JANMASHTAMI, PONGAL ETC IN THE NORTHWICK PARK HOSPITAL IN LONDON. THIS YEAR WE CELEBRATED DEEPAAVALI ON TUESDAY 29 OCTOBER 2024; AS USUAL HARE KRISHNA TEMPLE TEAM FROM WATFORD DID THE BHAJAN AND HELPED 100s OF DEVOTEES TO DO THE PUJA TO LORD VISHNU/KRISHNA/RAMA.
THE SPEAICLITY OF THE EVENT IS STAFF FROM ALL RACES AND CULTURES PARTICIPATE IN IT WITH FULL INTEREST. PRASAD WAS DISTRIBUTED AT THE END. I TOOK OVER 50 PICTURES. SOME IMPORTANT PICTURES ARE GIVEN BELOW:
Pothuluri Veerabrahmendra Swamy or Brahmamgaru was a prominent sage from the 16th century and was considered to be a future predictor (Kaala Gnaani) . He is the author of Kaala gnaanam which contains many predictions of the future which have either been proved to be true or still happening.
His residence called Brahmamgari Matham (Mutt) was built in Kandimallayapalli after his death.
Where is Brahmam Gari Jeeva Samadhi?
Brahmamgari Matham is located in Kandimallai Village of Rajampet Revenue Division in Kadapa District. This Matham is 30 km away from Mydukur, 41 Km away from Badvel and 70 km away from Kadapa District.
The Kalagnanam has many authors, who prophesied the future of their times
A brief part of Kalagnanam written by Sri Veera Brahmendra Swamy, which was kept in his native place has been published in Telugu language as a book in 1970 for the first time, along with some other prophet’s work. The remaining 3parts of Kalajnyaanam,
A large volume of the predictions made by Veera Brahmendra Swamy are said to be kept under the tamarind tree in Achamaamba temple or Achamaamba home in Banaganapalle village of Kurnool district of Andhra Pradesh. Out of the brief context of Kalagnanam said by Veera Brahmendra Swamy, 320 verses or poems are very popular with name “Govinda Vakyas”.
‘Sri Pothuluru Veerabrahmendra Swami’ the Hindu Nostradamus Saint (Telugu: పోతులూరి వీరబ్రహ్మేంద్రస్వామి) a Hindu mystic, Kadapa district of Andhra Pradesh state in India.
He said he will come again to this earth as ‘Veera Bhoga Vasantharayalu’ and that would mean the end of life on earth. He prophesized that before his arrival the world would be in a very chaotic condition. Swami left his body with his self imposed ‘Jeeva Samadhi’. He went into Samādhi when he was still alive and asked to close the stone above.
****
Some of the predictions appeared on face book around 2007. Here are some predictions taken from Facebook and Websites:
29. In the year named ‘Bahudhanya’ (2058-59), twenty five cities would get wiped out in bloodshed.
30. In the year named ‘Bahudhanya’ (2058-59), Kanaka Durga kind of ferocious Shaktis would start destruction of the evil ones. Goddess Kali would go to Karnataka. Goddess Durga would be sent to all Muslim countries. Bharata would be sent to ‘Mahanandi’. Lord Nagendra would step on ‘Kandanooru’ place. Chakri would be sent to ‘Morasa’ state. Lord ‘Arkhasoma’ would be sent to northern countries. Goddess Kamakshi would be sent to western countries. These Gods and Goddesses would annihilate sinners on an astronomical range in their respective areas wherever they go.
61. On 26/08/2054, i.e. Sravana Bahula Ashtami of the year Bhava (2054-55), many rivers will be with flash floods and many cities will be submerged.
62. Lakhs of people will be drowned and washed away by flash floods at the time of a festival on a Sunday(Jul/Aug-2055) at Tirunelveli, Tamil Nadu.
64. On 3rd February, 2058 (Magha Sudhdha Dasami of the year Eswara) all the countries surrender their Sovereignity to Lord Veera Bhoga Vasantha Raaya, who will later rule the entire world for 108 years and his descendants about 1000 years.
65. In the year Bahudhanya (2058-59) bloodbath in 25 cities, and calamities are indicated.
67. Incestual relationship will develop between men and women.
68. A cow gives birth to a man at Govindapuram, near Golconda, Hyderabad,India.
(This incident starts the count down to final nuclear explosion/attack on Hyderabad).
69. The Brahmins will sink to a low estate and serve other castes.
71. Wild animals’ roaming in villages and towns is indicated.
76. Learning will be traded as a commodity in shops.
77. All the seas will be polluted and oceanic species become extinct.
78. The iron pillar in Ahobilam (holy place in Andhra Pradesh) sprouts sannajaji (jasminum articulatum) flowers.
79. A direct Disciple of Lord Parasurama and Acharya Nagarjuna, Sri Sanaari Visweswara and other Sidhdha Purushas (probably Aghori sect), with his Alchemy will clear the debts of the Country and save from financial difficulties, and later link all the rivers and save from severe drought.
80. Only 1/7th of the World population will survive by the end of Third World War.
To be continued……………………..
Tags- Hindu Nostradamus, Pothuluri Veerabrahmendra Swamy, Brahmagiri Mutt (matham), Kala Gnanam, Predictions, Prophesies, కాలజ్ఞానం கால ஞானம்
முதலில் ஒரிஜினல் நோத்ர்டாமஸ் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் :
நோத்ர்டாமஸ் என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். மைக்கேல் டி நோத்ர்டாமஸ் (Michel de Nostredame), (1503 — 1566)
என்பவர் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் புரியாத — இரு பொருள்படும் — செய்யுள் வடிவில், இனி உலகத்தில் என்ன நடக்கப்போகிறது என்று எழுதி புஸ்தகமாக வெளியிட்டார் ; கிறிஸ்தவ மத தலைமையகம் அவரை எச்ச ரித்தவுடன் உயிருக்குப் பயந்து நோத்ர்டாமஸ் தலைமறைவானார். ஏனெனில் அக்காலத்தில் கிறிஸ்தவ வெறியர்கள் அறுபதாயிரம் பேரை தூக்கில் தொங்கவிட்டும்GALILEO கலீலியோ போன்றோரின் கண்களைக் குருடாக்கியும் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற யுவதியை உயிருடன் தீயில் எரித்தும் கொன்று குவித்த காலம்
அவர் பல பொருள்படும் வகையில்/ பாணியில் செய்யுட்களை எழுதியதால் எல்லோரும் நினைத்த படி புஸ்தகம் எழுதி காசு சம்பாதிக்கின்றனர். அதாவது மோசடி செய்து வருகிறார்கள். இனி அணுகுண்டு விழும், உலகம் அழியும் என்று அவர் சொன்னதாக எழுதியதை எல்லாம் நீங்கள் கூகுள் செய்தால் நல்ல நகைச்சுவை வெடிகள் கிடைக்கும் சிரித்து மகிழுங்கள்!
நடந்து முடிந்த விஷயங்களுக்கு அவர் பெயரைச் சொல்லி வியாக்கியானம் செய்த புஸ்தகங்கள், அதி பயங்கர தமாஷ்; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மக்களை ஏமாற்றி காசு சம்பாதித்தார்கள்; இனி நடக்கப்போவதை ஒருவர் சொல்லி அது நடந்தும் விட்டால் ஒருவரை நம்பலாம். அதுவும் பல விஷயங்களை அவர் சொல்லி அது உண்மையானல்தான் நம்பவேண்டும்; நிற்க
ஹிந்து நோத்ர்டாமஸ் யார்?
ஹிந்து நோத்ர்டாமஸ் வீர பிரம்மேந்திர சுவாமிகள் ஆந்திரத்தில் புகழ்பெற்றவர் . ஆந்திரத்தில் யாகந்தியில் உள்ள குகையில் சில காலம் தங்கியிருந்து కాలజ్ఞానం கால ஞானம் என்னும் நூலை இயற்றினார்.
அவருடைய కాలజ్ఞానం கால ஞானம் என்னும் தெலுங்கு மொழி நூலில் இனி எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை எழுதியுள்ளார்.
அவரது பிரம்மகிரி மடத்தின் சுவர்களில் அவைகளை பொறித்தும் உள்ளனர். அந்த மடம் கடப்பாவிலிலிருந்து எழுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ போத்தலூரி வீர பிரம்மேந்திர சுவாமிகள் பக்கதர்களுக்கு முன்னால் உயிருடன் சமாதியில் புகுந்தார். அவர் பதினாறாம் நூற்றாண்டில் அதாவது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்
அவர் தெலுங்கு மொழியில் எழுதியதை சிலர் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளனர். அவற்றின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்
அவர் சொன்ன விஷயங்கள் :
2007– ஆம் ஆண்டில் பேஸ்புக்கிலும் வெப்சைட்டிலும் கண்ட விஷயங்களைத் தருகிறேன்
பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் ஆவார்கள்; எல்லாத்துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
****
வீரபோக வசந்த ராயலு என்ற பெயரில் மீண்டும் பிறப்பேன்; எப்போது பெண்கள் கையில் முழு ஆதிக்கமும் போகிறதோ அப்போது நான் பிறப்பேன்.
நாட்டில் பல இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கும்
பஹுதான்ய (2055) வருடத்தில் 25 நகரங்களில் ரத்தக் களறி ஏற்படும்; பெரும் நாசங்கள் ஏற்படும்
காஷ்மீரிலும்
காசியிலும் போர் நிலை ஏற்படும்
கங்கை நதி திசை மாறி காசியில் புகும்.
மெக்கா மசூதியில் புனிதம் கெடும் நிகழச்சிகள் நடந்து பெரும் போர் வெடிக்கும்.
வன விலங்குகள் நகரங்களில் திரியும்
நெல்லையில் பெரிய வெள்ள விபத்து நேரிட்டு ஆயிரக்கணக்கானோர் இறப்பர்.
To be continued…….
–subham—
Tags-வீர பிரம்மேந்திர சுவாமி, కాలజ్ఞానం, கால ஞானம், பிரம்மகிரி மடம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆலயம் அறிவோம்
பட்டீச்சுரம்!
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்
உலகு பேணல் உறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள்
கொடி வீதி அழகாய தொகுசீர்
இறைவன் உறை பட்டிசரம் ஏத்தி எழுவார்கள்
வினை ஏதும் இலவாய்
நறவ விரையாலும் மொழியாலும்
வழிபாடு மறவாத அவரே
திருஞான சம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரத் திருத்தலங்களில் தென்கரைத் தலங்களில் 23வது தலமாக அமையும் பட்டீசுரர் ஆலயமாகும்.
தமிழ்நாட்டில் கும்பகோணம் ரயில் நிலையத்திற்குத் தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது.
இறைவர் பட்டீஸ்வர நாதர்
இறைவி : பல்வளைநாயகி, ஞானாம்பிகை
தலவிருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் : ஞானதீர்த்தம்
இந்தத் திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு,
இந்தத் தலமானது சக்தி வனத்தில் உள்ளதென்று பட்டீச்சுர மாகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. இது பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட வனமாகும். அம்பிகை இங்கு தவம் செய்ததால் இது சக்தி வனம் என்ற பெயரைப் பெற்றது.
அம்பிகை முன் சிவபிரான் ஜடாமகுடதாரியாக பிரசன்னம் ஆனமையால் அவருக்கு கபர்த்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
அம்பிகைக்குப் பணிவிடை செய்ய காமதேனு தனது மூத்த பெண்ணாகிய பட்டியை அனுப்பினார். பட்டி அம்பிகைக்குப் பணிவிடை செய்து வரும் காலத்தில் சக்தி வனத்தில் தானும் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜிக்க விரும்பி, அம்பிகை உயரமான பீடத்தில் மணலால் லிங்கத்தை ஸ்தாபித்து, சுப்ரமண்யர் உள்ளிட்ட பரிவார தேவதைகளையும் ஆவாஹனம் செய்து, பூஜித்தாள்.
சிவபெருமான் எதிரே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் கங்கை முதலிய அறுபத்தாறு கோடி தீர்த்தங்களையும் ஆவாஹனம் செய்து ஞான தீர்த்தம் என்று பெயர் வைத்து மணல் ரூபமாக இருந்த சிவபிரானுக்கு பூஜை செய்து வந்தாள்.
பட்டியின் பக்தியினால் உண்டான லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் இந்தத் தலத்திற்கு பட்டீச்சுரம் என்ற பெயரும் ஏற்பட்டன.
இங்கு தர்மலிங்கம் என்னும் ஒரு லிங்கம் ஒன்றும் உண்டு.
ஒரே காலத்தில் சக்திவனத்தையும். பட்டிலிங்கத்தையும், கபர்த்தீஸ்வரரையும் தரும லிங்கத்தையும் தரிசிப்பவர்கள் முக்தி அடைவர் என்பதில் ஐயமில்லை.
ஞானதீர்த்தத்தால் அபிஷேகம் செய்தவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவான்.
இத்தலம் விராடபுருஷனுக்குச் சுழிமுனைத்தலம் என்று இந்தத் தலத்தின் மான்மியம் கூறுகிறது.
சக்திமுற்றத்திற்கு தெற்கே உள்ள இந்தத் தலத்தில் சிதம்பரம் இரேவண சித்தர் என்பவர் நெடுங்காலம் வசித்து வந்தார்.
இத்தலத்தில் சித்திரசேன மஹாராஜா வன்னி மரத்தின் அடியில் புத்ர காமேஷ்டி யாகம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார்.
விஸ்வாமித்திரர் பிரம்மரிஷியாவதற்கு இங்கு யாகம் செய்தார். அவர் உண்டாக்கிய தீர்த்தத்தின் பெயர் காயத்ரீ தீர்த்தம்.
இங்குள்ள வாணியன் கரம்பை அக்ரஹாரம் என்ற வீதியில் 20 வீட்டிற்கு 20 வேலியைக் கோவிந்த தீக்ஷிதர் தானம் செய்தார்.
பெரும் மகானான கோவிந்த தீக்ஷிதரின் சிலையும் அவரது மனைவியின் சிலையும் இங்குள்ள கோவிலில் அம்மன் சந்நிதியில் உள்ளன.. இவரது சரித்திரம் அனைவரையும் வியக்க வைக்கும் ஒன்றாகும். இவர் இங்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்திருக்கிறார்.
மேதாதிதி என்ற மஹரிஷியின் சொற்படி பசுவைக் காத்திடாமல் இருந்த ஒரு மாணாக்கர் நாயாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். ஞான தீர்த்தத்தில் ஒரு தாசி ஸ்நானம் செய்து கூந்தலை உதற, அதிலிருந்து தெறித்த ஒரு துளி தீர்த்தம் நாய் மேல் பட்டு அந்த நாய் அந்தண ஜென்மத்தை அடைந்தது.
பட்டிச்சுரத்திற்கு மேற்கே மணல் மேடு ஒன்று உள்ளது. இதற்கு நந்தன் மேடு என்று பெயர்.
நந்தன் என்னும் அரசன் இழையாயிரம் பொன் பெற்ற பட்டொன்று கொணர்ந்த செட்டியாரிடமிருந்து அதை வாங்கித் தன் மனைவிக்குக் கொடுத்தான். அதற்கான பணத்தைப் பின்னர் தருவதாகக் கூறினான்.
அவன் திரும்பி வரும் போது தோலால் செய்த காசை அடித்து வழங்கி அவனிடம் தரவே அந்த வணிகர் நந்தனைச் சபிக்க மண்மாரி பெய்து மணல் மேடு ஆயிற்று. இந்த மணல் மேடை இப்போதும் காணலாம்.
இன்னொரு அதிசயமான நம்ப முடியாத ஆனால் உண்மையான ஒரு விஷயம் உள்ளது.
பிரமிக்க வைக்கும் இந்த அதிசயச் செய்தி என்ன தெரியுமா?
“எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்ததாக” ஒரு கல்வெட்டில் இருக்கிறது.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா சோழன் மாளிகையில் அந்த இடத்தை வெட்ட முயற்சி செய்கையில் கதண்டுகள் வெளிப்படவே பயந்த அந்த மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டான்.
கதண்டு என்றால் கருவண்டு என்று பொருள்.
எழுவான் என்பது சப்த கன்னிகைகள் இருக்குமிடம்
தொழுவான் என்பது மேற்கே முகமதியர் தொழும் இடமாகும்.
பக்தர்களும் ஆசாரியர்களும் அரசின் உதவியுடன் தீர ஆலோசித்துத் திட்டமிட்டு இந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அரிய செய்திகளை மகாமகோபாத்யாய ஶ்ரீ உ.வே.சாமிநாதையர் ஆராய்ந்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தலத்தில் ஆச்சரியங்களுக்கு எல்லையே இல்லை. திருஞான சம்பந்தர் இங்கு ஒரு தேவாரப் பதிகத்தை அருளியுள்ளார். அவருக்கு வெயில் படாமல் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு சிவபிரான் ஒரு பூதத்தைக் கொண்டு முத்துப்பந்தல் நிறுவச்செய்தார்.
இங்குள்ள கோயிலில் நந்திகள் சற்று விலகி இருக்கின்றன. திருஞானசம்பந்தர் வெளியிலிருந்து நன்கு தரிசனம் செய்தவதன் பொருட்டு இந்த நந்திகள் விலகி இருக்கின்றன.
முதலில் இருக்கும் நந்தி மிகப் பெரியது. நல்ல வேலைப்பாடுள்ளது.
இங்குள்ள துர்க்கையம்மன் சந்நிதி மிகுந்த சக்தி வாய்ந்தது, பிரபலமானது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து பிறவிப் பிணியை நீக்கி இளமையோடு ஆரோக்கியத்துடன் வாழவைத்து முக்தி அருளும் பட்டீஸ்வரரும் பல்வளை நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
–subham—
tags-ஆலயம் அறிவோம் ,பட்டீச்சுரம்!
e mail comment received
Ayathuray Rajathilagam
4 Nov 2024, 21:44 (8 hours ago)
to me
கனம் சுவாமிநாதன் அவர்கட்கு அனேக வணக்கம்,
ஐயா, உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன் நான். கடைசியில் நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் – WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 13.843 Date uploaded in London – –2 November 2024 . Contact – swami_48@yahoo.com
இன்னொரு அதிசயமான நம்ப முடியாத ஆனால் உண்மையான ஒரு விஷயம் உள்ளது. பிரமிக்க வைக்கும் இந்த அதிசயச் செய்தி என்ன தெரியுமா?
எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்ததாக ஒரு கல்வெட்டில் இருக்கிறது.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா சோழன் மாளிகையில் அந்த இடத்தை வெட்ட முயற்சி செய்கையில் கதண்டுகள் வெளிப்படவே பயந்த அந்த மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டான்.
கதண்டு என்றால் கருவண்டு என்று பொருள்.
எழுவான் என்பது சப்த கன்னிகைகள் இருக்குமிடம்.
தொழுவான் என்பது மேற்கே முகமதியர் தொழும் இடமாகும். பக்தர்களும் ஆசாரியர்களும் அரசின் உதவியுடன் தீர ஆலோசித்துத் திட்டமிட்டு இந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும்.
என்று பதிவு இட்டு இருக்கிறீர்கள். நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் அதை நான் இன்னொரு பதிவில் படித்து இருக்கிறேன் – அதில் – எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே காக்கை மூக்கின் நிழலிலே கள்வர் போகும் வழியிலே கண்டாலும் கம்மாளன் கண்ணிலே எழுபது கோடி பசும்பொன்.
அதில் எழுவான் என்றால் சூரியன் என்றும தொழுவான் என்றால் வணங்குபவன் என்றும், காக்கை மூக்கு என்றால் மலை உச்சியின் நிழலாகவும், கம்மாளன் என்றால் பொற் கொல்லன் என்றும், எழுதி உள்ளனர். இது தவறா சரியா என்பது எனக்குத் தெரியாது. இதை உங்கள் வலைத் தளத்தில் பதி விடும் படி தாழ்மையுடன் மற்ற அன்பர்களின் அறிவுக்கும் ஏற்ப தந்து உதவுங்கள.
அடுத்து இரண்டாவதாக, காலஞானம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதை விரிவு படுத்தி தமிழில் எழுதினால் பலரும் பயன் பெறுவார்கள் என நினைக்கிறேன். அல்லது அமன் தமிழ் பிரதி கிடைக்கும் இடத்தை வாசகர்களுக்கு அறியக் கொடுங்கள்.
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்; வெஞ் சமரில்,’அஞ்சல்‘ என வேல் தோன்றும்; – நெஞ்சில் ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும் ‘முருகா!‘ என்று ஓதுவார் முன்.
6
தெய்வ மொழியான தமிழின் மூலமாக இறைவனைத் துதிக்கத் தமிழில் துதிப் பாடல்களை அருளிச் செய்ய அவ்வப்பொழுது மகான்கள் தெய்வ பூமியான தமிழகத்தில் தோன்றுவது தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்.
இந்த வகையில் சமீப காலத்தில் தோன்றி முருகனின் அருளை அனைவரும் பெற தெய்வீகப் பாடல்களை அருளிச் செய்த பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் ஆவார்.
தோற்றம்
பழந்தமிழ்க் குடியான அகமுடையார் குலத்தில் சாத்தப்ப பிள்ளை என்பாருக்கும் செங்கமல அம்மையாருக்கும் மகனாக பாம்பன் குமரகுரு சுவாமிகள் என்று பின்னால் அறியப்படும் அப்பாவு 1853-ம் ஆண்டு வாக்கில் இராமேஸ்வரத்தில் பாம்பனில் பிறந்தார்.
இளமையில் இவர் உள்ளூர்ப் பள்ளியில் பயின்றார். சேது மாதவ ஐயர் என்பவரிடம் வடமொழியையும் முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் மொழியையும் நன்கு கற்றுத் தேர்ந்தார்.
இயல்பாகவே இவர் தமிழில் கவி பாடும் திறமையைப் பெற்றிருந்தார்.
முருகன் மீது பக்தி கொண்ட இவர் அருணகிரிநாதரைத் தனது ஞான குருவாகப் பெற்றார். ஆகவே உபய அருணகிரிநாதர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.
குடும்பம்
1878-ம் ஆண்டு வைகாசி மாதம் இராமநாதபுரத்தில் கண்ணுப் பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை இவர் மணம் புரிந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.
முருகப் பெருமானை நேரில் தரிசனம் பெற விழைந்த இவர் பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் மயானபூமி அருகில் ஒரு குழியை வெட்டச் சொல்லி அதைச் சுற்றி முள் வேலி ஒன்றையும் அமைத்து தவம் புரியலானார். ஏழாம் நாளில் முருக தரிசனம் சித்தியானது. பிறகு தொடர்ந்து தவத்தை ஆற்ற, 35-ம் நாள் ‘எழுக’ என்ற கட்டளை எழ இவர் தவக்குழியிலிருந்து எழுந்து முருகனுக்கு பூஜை செய்யத் தொடங்கினார். அன்று சித்திரை மாதம் பௌர்ணமி நாளாக அமைந்தது.
பயணங்கள்
1895-ம் ஆண்டு சந்யாசம் பெற்ற இவர் சென்னைக்கு வந்தார்.
சுவாமிகள் தமிழ் நாட்டில் உள்ள பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்தார். பின்னர் பெஜவாடா, , விசாகப்பட்டினம், ஜகந்நாத், கொல்கத்தா, கயா என்று நெடும் பயணங்களையும் மேற்கொண்டார். காசி தல யாத்திரையையும் முடித்தார். ஏராளமான சீடர்கள் இவரை நாடினர்.
விபத்தும் அதிலிருந்து மீண்டதும்
1923-ம் ஆண்டு (வயது 70) டிசம்பர் மாதம் 27ம் தேதி சுவாமிகள் சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த போது, குதிரை வண்டிச் சக்கரம் அவரது இடது கணைக்கால் மீது ஏறியது. இதில், அவரின் இடது கால் எலும்பில் ஒரு முறிவு ஏற்பட்டது. உடனே அவர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிபுணர்கள் அவரது இடது காலைத் துண்டிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினர். முருகனைப் பிரார்த்தித்த இவருக்கு மருத்துவ மனையில் 13 நாட்கள் இருக்குமாறு அசரீரி வாக்கு ஒன்று தோன்றியது. இவரது அருகிலிருந்த சீடர் ஒருவர், வேல் ஒன்று அவரது காலில் ஊடுருவதை மானசீகமாகக் கண்டார். மருத்துவர்களே வியக்கும் வண்ணம் எலும்பு முறிவு குணமாகி இருந்தது. முருகனின் திருவிளையாடல் இது என்று சீடர்கள் கூறி மகிழ்ந்தனர். இதை நினைவு கூரும் வண்ணமாக மயூர வாகன சேவை என்ற நிகழ்ச்சி இன்றளவும் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை நாளில் நடைபெற்று வருகிறது. இவர் இருந்த மருத்துவ மனையில் மன்ரோ வார்டில் இவரது திருவுருவப் படம் மாட்டப்பட்டுள்ளது.
தமிழில் கவிதை மழை!
தமிழ் இறைவனின் மொழி. செம்மொழி. மந்திர மொழி.அருள்
மொழி. நுணுக்கமான மொழி. இயற்கையின் அடிப்படையிலும்,
மனித உடல்கூறின் அடிப்படையிலும் பேசுவதற்கு எழுந்த மொழி.
பல ரகசிய கலைகளை சொற்களிலும் அதன் ஒலிகளிலும்
அடக்கிய மொழி. அதைப் பேசுபவர்களுக்கு இனிமையை அருளும்
மொழி. பேசும் போது உபயோகிக்கும் சொற்களால் பல் வேறு
நலங்களைத் தரும் மொழி. இறை அருளாளர்கள் அற்புதமான
சொற்சேர்க்கைகளால் பாக்களை அருளி அனைவரையும்
உத்வேகமூட்டி எழ வைக்கும் மொழி. அறம். பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளையும் சுலபமாக அருளும் மொழி!
இலக்கணக் கட்டமைப்பு வாய்ந்த பழம் பெரும் மொழி என்பதால்
இதில் கவிதை எழுதுவது என்பது சுலபமல்ல. பல்வேறு
கலைகளையும் இயற்கை ரகசியங்களையும் கற்றுத் தேர்ந்து
மொழிப் புலமை பெற்று இறைவனின் அருளைப் பெற்றவரே
நின்று நிலைக்கும் கவிதைகளை அருள முடியும்.
தமிழில் பந்தங்கள் அமைப்பது ஒரு சிலராலேயே முடியும்.
செந்தமிழ்ச் செய்யுட் டிறந்தெரிந்து செந்தமிழ்க் கண்
வந்த வடமொழியு மாற்றாதே – சந்தம்
வழுவாமறி கொண்டியற்று மாண்பினார்க் குண்டே
தழுவாமை நிற்குந் தமிழ்
என்ற பழம்பெரும் பாடலுக்கேற்ப தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிப் புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளுக்குத் தமிழில் தெய்வீகத் துதிகள் இயற்றும் ஆற்றலும் முருகப் பெருமான் அருளும் ஒருங்கே சேர்ந்து உண்டாக அருட்கவிகளை மழையெனப் பொழிய ஆரம்பித்தார்.
சிக்கலான பந்தங்கள் பலவற்றை அதை ஓதுவோர் அனைவரும் தெய்வீக அருளைப் பெறும் வண்ணம் இவர் பாடியருளியுள்ளார்.
`தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே, பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன் எனத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க’ என்பதாகும்.
இந்தப் பாடலை வேல் வடிவில் வரைந்து அதைத் தொழுதல் சாலச் சிறந்தது. முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க் கிழமை, சஷ்டி தினங்கள் மற்றும் விசாகம், கார்த்திகை நட்சத்திர நாட்கள் ஆகிய தினங்களில் முருகன் சந்நிதி முன் இதைத் தொடங்குவது மரபு.
இப்படித் தொழும் பக்தர்களுக்குத் தீமைகள் அகலும். செல்வம் சேரும். நோய்கள் தீரும். நன்மை பெருகும். ஆன்மீக ஞானம் உண்டாகும்.to be continued…………………………………
This proverb is used by Lao Tse and is available from the records dated 3rd century BCE. In Hindu scriptures it is available from 8th century BCE.
In Chinese
Zhi zhe bu yan, yan zhe bu zhi.
In Japanese
Shiru mono wa iwazu, ni mono wa shirazu
It is in Korean, Turkish and other languages as well.
But only in India and China it has got the full philosophical meaning.
Ramakrishna Paramahamsa explained it with several stories
Ramakrishna’s Stories
Story 1
A salt doll went to measure the depth of the ocean. It wanted to tell others how deep the water was. But this it could never do, for no sooner did it get into the water than it melted. Now, who was there to report the ocean’s depth? What Brahman is cannot be described in Samadhi one attains the knowledge of Brahman – one realises Brahman. In that state reasoning stops altogether, and man becomes mute. He has no power to describe the nature of Brahman.
Story 2
Once four friends, in the course of a walk, saw a place enclosed by a wall. The wall was very high. They all became eager to know what was inside. One of them climbed to the top of the wall. What he saw on looking inside made him speechless with wonder. He only cried Ah! Ah! And dropped in. he could not give any information about what he saw. The others too climbed the wall, uttered the same cry,’ Ah! Ah!’ and jumped in. now who could tell what was inside! What Brahman is cannot be described. Even he who knows it cannot talk about it.
Story 3
The husband of a young girl has come to his father in law’s house and seated in the drawing-room with other young men of his age. The girl and her friends are looking at them through the window. Her friends do not know her husband and ask her pointing to one young man, “Is that your husband? “No”, she answers, smiling. They point to another young man and ask if he is her husband. Again she answers, “No”. They repeat the question referring to a third, and she gives the same answer. At last they point to her husband ask, “Is he the one?” She says neither yes nor no, but only smiles and keep quiet. Her friends realize that he is her husband.
One becomes silent on realising the true nature of Brahman.
There is a proverb in Tamil, “Those who have seen never talk; those who talk have never seen (the God)” (Kandavar Vindilar; Vindavar Kandilar).
A Siddha by name Sivavakkiyar uses the simile of mixing water with salt to establish the truth that Lord Vishnu and Lord Shiva are one and the same. Once the water is mixed with the salt it becomes unseparable. Shiva and Vishnu are one.
Another Tamil saint Tirumular says in Tirumanthiram that the dumb are trying to describe that which cannot be described.
The following Upanishad line is translated in Tamil verses by several Tamil saints in several of their verses:
Yato vacho nivartante aprapya manasa saha (Whence all speech turn back with the mind, not reaching It). Taittiriya Upanishad
Mozikkum winaivukkum ettatha nin tirumurtham (Abirami Andhati) in Tamil.
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் in Tamil
உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)
From Tirumanthiram of Tirumular.
2955: Thoughts Stand Still in the Beyond
You dumb ones!
They seek to speak,
Of the One beyond speech!
Can you ever reach the shores
Of the Shoreless Vast?
For them whose thoughts stand still,
Unto the waveless waters,
Unreserved He appears;
He of the matted locks.
This is from the Upanishads. God cannot be described; it is in all Sahasranamas as Aprameya- one who cannot be measured.
–Subham—
Tags- He who knows does not talk, he who talks does not know
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத் வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
வணக்கம் இன்றைய நாள் நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை
******
அயோத்தியில் தீபத் திருவிழா
ஞானமயம் சார்பில் முதலில் உங்கள் அனைவர்க்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் அயோத்தில் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீப விளக்குகளை ஏற்றுவது வழக்கம். தீபாவளி பண்டிகையின் நாளன்று கடவுள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பினார்; அதைக் கொண்டாடும் விதமாக தீப உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
அயோத்தியின் சரயு நதிக்கரையில் 25 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டன; இந்த ஆண்டு 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
அயோத்தியில் நடைபெற்று வரும் தீப உற்சவ நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :
” தீப உற்சவ திருவிழாவையொட்டி கடந்தாண்டு சரயு நதிக்கரையில் 22 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு 28 லட்சம் மண் விளக்குகளை ஏற்றி அயோத்தி மாநகரத்தை ஔிர செய்ய திட்டமிடப்பட்டது.
தீப திருவிழாவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய ஆறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”
அயோத்தியில் ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு முதன்முறை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுதால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அயோத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு முன் தீப உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
*****
காசியில் தீபாவளி
காசியில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. தீபாவளித் திருநாளில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது “மணிகர்ணிகா கட்டம்’’ மட்டுமே! ‘‘எந்த இடத்தில் சங்கரர் யாரும் கடக்க முடியாத சம்சார சாகரத்தைக் கடக்க வைக்கிறாரோ, அதுவே மணிக்கர்ணிகா கட்டம்’’ – என்று ‘காசி காண்டம்’’ விளக்குகிறது. ‘‘மணிகர்ணிகாவில், மாத்தியாந்நிக ஸ்நானம் செய்பவர் நாராயணனையோ, சிவனையோ அடைகிறார். மணிகர்ணிகாவில் மரணம் நேரிடின், அப்படி ஆவி பிரிந்தவனைத் தரிசிக்க இந்திரனே ஆயிரம் கண் கொண்டு காத்துக் கிடக்கிறான்!’’ என்று ‘மணிகர்ணிகா அஷ்டகத்தில்’ ஆதிசங்கர பகவத் பாதர் கூறுகிறார். காசி மாநகரில், கங்கைக் கரையில் உள்ள 64 ஸ்நானக் கட்டங்களில், முக்கியமான ஐந்து ஸ்நான கட்டங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
அவை, அஸிகட்டம், தசாசுவமேத கட்டம், வருணா கட்டம், பஞ்சங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகியவை.
விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அன்னபூரணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு அன்னையே அரசியாவாள். தேவி இடக்கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கையில் தங்கக் கரண்டியுமாகத் திகழ்கிறாள். எதிரில் திருவோடு ஏந்தி நிற்கும் விஸ்வநாதர்க்கு, அன்னமிடுகிறாள் அன்னபூரணித்தாய். அன்னபூரணியின் சந்நதியைப் பலகணி வழியாகத்தான் தரிசனம் செய்ய வேண்டும். தீபாவளியை ஒட்டி மட்டுமே அன்னபூரணியை வௌியே உற்சவத்துக்கு அழைத்து வருகிறார்கள். லட்டுத் தேரில் அமர்ந்து அன்னபூரணி காட்சி தந்தருள்வாள். தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியுடன், ஸ்ரீதேவியும் பூதேவியும் உடனிருந்து ஆசீர்வதிக்கிறார்கள்.
மிட்டாய்த் திருவிழா
தீபாவளி சமயத்தில் காசிநகர் முழுவதும் வண்ண அலங்காரங்களும் தோரணங்களும் கண்ணைப் பறிக்கும். தீபாவளி சமயத்தில் மூன்று நாட்கள் காசியில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் கோலாகலமாக விளங்கும். பிரசித்தி பெற்ற ‘மிட்டாய்த் திருவிழாவும்’, அன்னகூட, அன்னாபிஷேக ஆராதனைகளும் பிரமிக்க வைப்பதாகும். தங்க அன்னபூரணித் தேரோட்டம் திமிலோகப்படும். காசி வரும் லட்சோப லட்சம் பக்தர்களுக்கு ஏராளமான இடங்களில் அன்னதானம் நடைபெறும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
வருடந்தோறும் தீபாவளி அன்றும், மகாசிவராத்திரி அன்றும் தங்க விசாலாட்சி அம்மனை, நகரேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளச் செய்து பொது மக்கள் புண்ணிய தரிசனம் பெற ஏற்பாடுகள் செய்கிறார்கள். விழாக் காலங்களில் தமிழக மேள தாள நாதசுரம் இசைக்கருவிகளைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.
*****
தேவ் தீபாவளி
தீபாவளி பண்டிகையை அடுத்து கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று தேவ் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் போது வானிலிருந்து கடவுளர்கள் எல்லாம் பூமிக்கு இறங்கி வந்து கங்கையில் நீராடுவதாக புராண நம்பிக்கை சொல்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வாரணாசியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் குழுமுகிறார்கள்.
கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் தேவ் தீபாவளி பண்டிகையின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த அலங்கார விளக்குகளின் அணிவகுப்பு கங்கை நதிக்கு செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது. அதோடு பூமிக்கு வரும் தேவதைகள் இதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
அதோடு கங்கை ஆற்றில் ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் மிதக்கவிடப்படும். அப்போது மாலைவேளையில் நடக்கும் கங்கா ஆர்த்தியை பார்க்க கண்கோடி வேண்டும்!
*****
லண்டனில் மேயர் சார்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ட்ரபால்கர் ஸ்கொயரில் தீபாவளி கொண்டாடப்பட்டது லண்டன் மேயர் சாதிக் கான் மேடையிலுள்ள பிள்ளையார் சிலைக்கு மாலை அணிவித்து தீபத்தை ஏற்றிவைத்து விழாவைத் துவக்கி வைத்தார் .
மாலைவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்; நாட்டியம் இசை, பல வகையான ஸ்டால்கள், உணவு விற்கும் ஸ்டால்கள், இடம்பெற்றன.
இதே போல பார்லிமென்டிலும், சவுத் இண்டியன் சொசைட்டி சார்பிலும் நார்த்விக பார்க் ஆஸ்பத்திரி சார்பிலும் தீபாவளி விழாவைக் கொண்டாடினார்கள்.
xxxxx
ராணுவ வீரர்களுடன் தீபாவளி..கொண்டாடிய பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி, .குஜராத் மாநிலம் கச்சில் ராணுவ உடை அணிந்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடியுள்ளார்
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை பழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டும்ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ளார்.
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்:
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி தீபாவளியை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.
2022ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் கார்கிலிலும், கடந்தாண்டு இமாச்சலத்தின் லெப்சாவிலும் தீபாவளி கொண்டாடினார்.
********
‘ தீபாவளிக்கு நியூயார்க் பள்ளிகள் விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக தீபாவளி தினத்தில் பள்ளிகள் மூடப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தீபாவளியை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர் கொண்டாடுகின்றனர்.
அமெரிக்காவில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அதனால், தீபாவளியன்று நகரில் பொது விடுமுறையை அறிவிப்பது என்பது எளிதல்ல. பல ஆண்டுகளாக சமூக தலைவர்கள் பலர், இதற்கான இயக்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். இறுதியில், மேயர் எரிக் ஆடம்ஸ் நிர்வாகத்தின் கீழ், பள்ளி விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படும். தீபாவளி தினத்தில் அவர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். அதனால் மாணவர்களுக்கு, அன்றைய தினம் கோவிலுக்கு செல்வதா? அல்லது பள்ளிக்கு செல்வதா? என்ற நெருக்கடி இந்த ஆண்டில் இருக்காது
*****
சிவகாசியில் தயாரான பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது., இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரமகோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்தனர்.
*****
விமானக் கட்டணங்கள் மும்மடங்கு அதிகரிப்பு
சென்னையிலிருந்து தமிழ்நாடு கர்நாடகம் ஆந்திரம் செல்லும் எல்லா விமானக் கட்டணங்களும் தீபாவளிப் பண்டிகை காரணமாக மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. எப்போதும் கடைசி நேரத்தில் விமான கட்டணம் உயர்வது வழக்கமாக நாட்டைபெறுவதுதான்.
தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள்
பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
******
சென்னையில் சிருங்கேரி சங்கராசார்யார்
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிருங்கேரி இளைய சங்கராசார்யார் சென்னையில் தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
விஜய யாத்திரைக்காக, கடந்த OCTOBER 28 ம் தேதி சென்னை வந்த சிருங்கேரி சன்னிதானம், நான்காவது நாளாக மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில், நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
காலை 8:00 மணிக்கு சகஸ்ர சண்டி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சன்னிதானத்திடம் ஆசி பெற்றனர். பின், மாலை 4.30 மணிக்கு சுவாமிநாதன் குழுவினர் பஜனை பாடல்களை பாடினர்.
தொடர்ந்து, ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது. மாலை 5.50 மணியளவில் சுதர்மா இல்லத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசி பெற்றார். சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்தார்.
*****
பெங்களூரில் மன்னர் சார்ல்ஸ்
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் பெங்களூரில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் மூன்று நாள் தங்கிவிட்டு அக்டோபர் 30 ஆம் தேதி லண்டனுக்குச் சென்றார்.
மன்னருடன் அரசியார் கமிலாவும் வந்திருந்ததார் .
தனிப்பட்ட முறையில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு வந்திருந்த அரச தம்பதி, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் தங்கினர்.
அங்கு யோகா, தியானம் உட்படப் பல்வேறு உடல்நல சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறையிலான சிகிச்சைகள் அவை.
‘சௌக்யா’ எனப்படும் அந்த நிலையம், WHITEFIELD வைட்ஃபீல்டு பகுதிக்கு அருகே 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது..
சார்ல்ஸ் இந்த நிலையத்திற்கு வருகைதந்தது இது முதன்முறை அல்ல. . ஏற்கனவே 2019ஆம் ஆண்டு தமது 71வது பிறந்தநாளை அவர் இங்குக் கொண்டாடினார்..
நிலையத்தை நடத்தும் டாக்டர் ஐசக் மத்தாய், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட சிலரில் அடங்குவார்.
*****
கடைசியாகத் திரைப்படச் செய்தி
ஜெய் அனுமான்’ படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிக்கிறார். சென்னை, இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான ‘அனுமான்’ படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்தார். இந்த பட வெற்றியைத்தொடர்ந்து, இதன் தொடர்ச்சியாக ‘ஜெய் அனுமான்’ படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார்.
இந்த படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டியின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
****
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் பத்தாம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும் நடைபெறும்
யஜுர் வேதத்தையும் சாம வேதத்தையும் ஆராய்ந்து வெள்ளைக்காரர்களுக்கு அறிமுகப்படுத்தியர் ஆல்பெர்ட் வீபர்.
அவர் இப்போது போலந்து நாட்டிலுள்ள பிரேஸ்லாவில் பொருளாதாரப் பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். ஹீப்ரு/ எபிரேயம், கிரேக்கம், அராபியம், சம்ஸ்க்ருதம் மொழிகளைக் கற்றார். ஏராளமான ஆராய்ச்சிகளைச் செய்தபோதும் பல தவறான முடிவுகளையும் வெளியிட்டார். இது அவர் வாழ்ந்த காலத்தின் கோளாறு!
வெள்ளைக்கார்களுக்கு கிரேக்க நாடு ஒன்றுதான் தெரியும்; ஆகையால் உலகமே கிரேக்கத்திலிருந்து வந்தது என்று கதைப்பது வழக்கம்.
மேலும் வெள்ளைக்காரர்கள் உலகம் முழுதும்
சென்று மண்ணின் மைந்தர்களைக் கொன்று குவித்து ஆட்சியை நிலைநாட்டியதை நியாயப்படுத்த உலகம் முழுதும் ஆக் ரமிக்கப்பட்ட நிலம் என்ற வாதத்தையும் முன்வைத்தனர். மாக்ஸ்முல்லர் கும்பலும் கால்டுவெல் கும்பலும் ஆரியர்களும் திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியதாக சாகும் வரை எழுதி வந்தன. அது போல இவரும் ஆரியர் குடியேற்றம் பற்றி அழகாக ஜோடித்தார். ஆயினும் சமண மத, பிராகிருத, சம்ஸ்க்ருத ஆராய்ச்சி செய்து அவைகளை ஜெர்மன் மொழியில் எழுதிக் குவித்தார்.
ALBRECHT WEBER 1825-1931
ஆல்பெர்ட் வீபர்
பிறந்த தேதி – 17-2-1825
இறந்த தேதி – 30-11-1901
பிறந்த ஊர் – பிரெஸ்லாவ் (BRESLAU (NOW WROCLAW),போலந்து
சம்ஸ்க்ருத மொழி குரு- A.STENZLER ஏ ஸ்டென்ஸ்லர்
கல்வி கற்ற இடம் – பிரெஸ்லாவ் பல்கலைக் கழகம்,
வேலைபார்த்த இடம் –பெர்லின் பல்கலைக் கழகம், பேராசிரியர்
வேத ஆராய்ச்சிதான் இவரது முக்கிய ப் பணியாக இருந்தது ;அதோடு மொழியியல் வரலாறு ஆகிய துறைகளிலும் ஆர்வம் செலுத்தினார். .பான், பெர்லின் நகரங்களுக்குச் சென்று பல சொற்பொழிவுகளைக் கேட்டுவிட்டு சொந்த ஊரான பிரெஸ்லாவுக்குத் திரும்பி வந்து , யஜுர் வேத ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். ஒன்பதாவது அத்தியாயத்தை மட்டும் மஹீதர பாஷ்யத்துடன் வெளியிட்டு இது மாதிரிதான்- சாம்பிள்— என்று சொன்னார். தேவநாகரியெழுத்து, ஆங்கில எழுத்து ஆகியவற்றுடன் மந்திரங்களை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு பிரஷ்யன் அகாடமி பயணத்தொகை அளித்தது; அவர் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் சென்று சுக்கில யஜுர் வேதத்தை வெளியிட்டார். பின்னர் பெர்லின் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவியை ஏற்றார்
எழுதிய, மொழிபெயர்த்த நூல்கள் :–
சுக்ல யஜுர் வேதத்தை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார் . முதல் தொகுதியில் வாஜசநேயி , மாத்தியந்தினிய, கண்வ சாகைகளி களை மஹீதாரரின் பாஷ்யத்துடன் அச்சிட்டார்.
இரண்டாவது தொகுதியில் சதபத பிராமண நூலையும் மேற்கண்ட யஜுர் வேத சாகைகள் களுக்கு சாயனர், ஹரிசுவாமின், த்விவித வேத கங்கர் ஆகியோர் உரையுடன் அச்சிட்டார்.
மூன்றாவது தொகுதியில் காத்யாயன சிராவுத்த சூத்ரம் பலருடைய துறைகளுடன் வந்தது. இவைகள் பல விளக்கங்களுடனும் அடிக்குறிப்புகளுடனும் வெளியாயின ஜெ எக்லிங் என்ற ஜெர்மானிய அறிஞர் பின்னர் இவற்றின் பல பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் அவை அனைத்தும் சாக்ரெட் புக்ஸ் ஆப் தி ஈஸ்ட் SACRED BOOKS OF THE EAST தொகுதிகளில் இடம்பெற்றன.
பின்னர் கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதையையும் அச்சிட்டார்.
சம்ஸ்க்ருத அகராதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வெளியானது; அதற்கும் இவர் பல குறிப்புகளை அளித்தார்
சம்ஸ்க்ருத நூல்களை கால வரிசையில் வெளியிட்டார்
மஹாபாஷ்யத்திலிருந்து அக்கால வரலாற்றினை எழுதினார்; பாணினியின் காலத்தை அதிலிருந்து யூகித்தார்
விக்ரமாதித்தன் கதைகள் ;காதா சப்த சதி ;சமண மத இலக்கியம்
Works
Indische Studien, 1849–85 (18 vols.)
Weiße Jadschurveda, London 1849-1859 (3 vols.)
Schwarze Jadschurveda, Leipzig 1871-1872
Tscharanawyuha. Übersicht über die Schulen der Vedas, Berlin 1855
Akademische Vorlesungen über indische Litteraturgeschichte, Berlin, 1852; 2d ed. 1876 (translated by Zachariae and Mann, London, 1878)
a translation of Kalidasa’s drama Mālavikā und Agnimitra, 1856
Indische Skizzen, Berlin 1857
Indische Streifen, Berlin 1868–1879 (3 vols.)
Verzeichnis der Sanskrithandschriften der königlichen Bibliothek zu Berlin, Berlin 1853–1892
Über das Catrunjaya des Mahâtmyam, Leipzig 1858
an edition of Hala’s Saptasataka, 1881
He also contributed much lexicographical material, especially from Vedic literature, to the Sanskrit-Wörterbuch of Otto von Böhtlingk and Rudolf Roth.
****
தவறான முடிவுகள்:
பிரளயம் பற்றிய கதை; ஆரிய குடியேற்றக் கதை என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வெளியிட்டார்;
வால்மீகி ராமாயணத்தில், கிரேக்க நாட்டு ஹோமரின் தாக்கம் இருக்கிறது என்றார் .
பாபிலோனியரிடமிருந்து இந்தியர்கள் சந்திராம்ச ஜோதிடத்தை அறிந்தனர்.
கிரேக்க- இந்தியக் கதைகளின் தொடர்பு
புத்தமதத்தின் ஒரு பிரிவு சமண மதம்.
சமண மத பிராகிருத மொழி
வேதகால இந்தியர்களின் நரபலிகள்
இந்த வீபரின் தவறான ஊகங்களைப் பிற்காலத்தில் வந்த ஆராய்ச்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர்.
–SUBHAM—
Tags- யஜுர் வேதம் , மேலை உலகம், வீபர் , ஜெர்மானிய அறிஞர், சமண மத ஆராய்ச்சி, சதபத பிராமணம் , காதா சப்த சதி, ALBRECHT WEBER , ஆல்பெர்ட் வீபர்