அவ்வையாரின் ஆத்திச்சூடியில்   அருமையான மருத்துவ அறிவுரைகள்-1 (Post No.13,613)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,613

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அவ்வையார் யார் ?

சங்க காலம் முதல் நமது காலம் வரை ஆறு அவ்வையார்கள்  இருந்தார்கள்; இன்னும் சிலர் மூன்று அவ்வையார்கள்தான் இருந்தனர் என்று வாதிடுவர்; ஆத்திச்குடி எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் இல்லை என்பது மொழி நடையைப் பார்த்தால் உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். அவர் யாராக இருந்தாலும் அவர் சொல்லும் அறிவுரைகள் ஆயிரம் பொன் பெறும் ; அவரைப் பின்பற்றி நமது காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியும் புதிய ஆத்திச்சூடி எழுதினார் ; அதிலும் நல்ல மருத்துவ, உடல் நலம் பேணும் செய்திகள் உள .

முதலில் அவ்வையாரின் ஆத்திச்சூடியை எடுத்துக் கொள்வோம் ஆத்தி சூடிய சிவனை வணங்கி அகர வரிசைப்படி பாடியுள்ளார்.

13.அஃகம் சுருக்கேல்

13.DO NOT RAISE THE PRICE OF GRAIN/ DO NOT ALLOW YOUR KNOWLEDGE TO DIMINISH/ DO NOT ALLOW YOUR RELATIVES TO DIMINISH

இதற்கு அறிஞர்கள் இரண்டு மூன்று விளக்கங்களைத் தருகிறார்கள்

1.தானியங்களின் விலையை உயர்த்தாதீர்கள்

2.அறிவு பெறுவதைச் சுருக்காதீர்கள்

3.உங்கள் உறவினர்களை வாடும்படி விட்டுவிடாதீர்கள்

வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு, முதல் அர்த்தத்தை நாம் எடுத்துக்கொள்ளுவோம். நமது உணவில் பலவகை தானியங்கள் இருக்கவேண்டும். அரிசியும், கோதுமையும் இந்தியர்களின் அடிப்படை உணவு; அவை தவிர புரத்தைச் சத்து மிக்க பயறு வகை தானியங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் தான் அவ் வையும்  விலைவாசி பற்றி விளம்பினார் போலும்!

xxxx

16.சனி நீராடு

16.BATHE ON SATURDAY (WITH OIL)’ ; BATHE THE BODY IN SPRING WATER,  BATHING THE DEFILED MIND IN TRUTH.

இதற்கும் மூன்று விளக்கங்கள் உண்டு

1.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்.

2.ஊற்று நீ ரில் குளியுங்கள் .

3. உண்மை எனும் நீரில் அழுக்கு மனத்தை அலசுங்கள்

இதில் முதல் பொருளே சரி; தமிழர்கள் ஆண்களுக்கு புதன், சனிக்கிழமைகளை ஆண்களுக்கும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை பெண்களுக்கும் எண்ணெய்க் குளியலுக்கு ஒதுக்கினார்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம, நகர மக்கள் அனைவரும் இதைச் செய்தனர் ; காலப்போக்கில் சுருங்கி விட்டது; அதன் விளைவு தலை முடி விரைவில் நரைக்கிறது ; வேர்வைத் துவாரங்களில் உள்ள அழுக்கு வெளியேறாமல் தோல் நோய்கள் வருகின்றன

xxxx

இரண்டு சுவையான விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன .

மதுரை அ வைத்தியநாதய்யர் மிகவும் புகப்பெற்ற மனிதர்; சுதந்திரப்போராட்ட தியாகி; தாழ்ததப்பட்ட ஜாதி மக்களையும் மதுரை மீனாட்சி கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்தார் . அவர் வாரம்  தோறும் சேரிகளுக்குச் சென்று ஹரிஜன சிறுவர்களை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவாராம் .

இன்னும் ஒரு  செய்தி ; நான் லண்டனில் பி.பி.சி.யில் வேலை பார்த்த காலத்தில் ஒரு நாள் எனக்கும் தமிழ் ஓசை ஒலி பரப்புத் தலைவர் சங்கர் அண்ணாவுக்கும் இடையே எண்ணெய்க்  குளியல்  பற்றி பேச்சு வந்தது. நன் சொன்னேன்: லண்டனுக்கு வந்த பின்னர் எண்ணெய் முழுக்கை விட்டுவிட்டேன்; இந்தக் குளிர்தேசத்தில் எவன் எண்ணெய் தேய்த்துக் குளிப்பான்? என்று ஏக வசனத்தில் பேசிக்கொண்டே போனேன் ; இல்லை, தம்பி , நான் வாரம் தோறும் ஆலிவ் ஆயில் தேய்த்துக் குளிக்கிறேன் என்றார் . எனக்கு ஒரே வியப்பு ! லண்டனிலும் எண்ணெய்க்  குளியல்!

xxxx

26.இலவம் பஞ்சில் துயில்

26.SLEEP ON A MATTRESS OF SILK COTTON

துயில் = உறங்கு, தூங்கு= SLEEP

நல்ல அறிவுரை! தலையணைகளை பலவகையாகத் தயாரிக்கிறார்கள் ; பிளாஸ்டிக், ரப்பர் தலகாணிகளும் வந்துவிட்டன ; உள்ளுக்குள் பஞ்சுக்குப் பதிலாக தேங்காய் நார் , வெட்டிவேர், ரப்பர், போம் , பல வகை நார்கள் ஆகியன கொண்டும் தயாரிக்கிறார்கள் ; ஆனால் இந்தியா போன்ற , நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தும் வெப்ப நாடுகளுக்கு இலவம் பஞ்சு தலையணைதான் சிறந்தது. சங்க காலத்தில் அன்னத்தின் இறகுகளைக் கொண்டு பஞ்சு மெத்தை கள் , தலையணைகள் செய்ததாகப் பாடல்கள் உள்ளன! அதற்கு மிகவும் பொருட் செலவு ஆகும் ; பறவைகளைக் கொல்லும் பாவமும் வரலாம் ! ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை இலவம் பஞ்சு தான் .

XXXX

31.அனந்தல் ஆடேல்

31.DO NOT SLEEP TOO LONG; DONT BE LAZY

இரண்டு பொருள்களை ஆன்றோர் பகர்வர்.

நீண்ட நேரம் தூங்காதே அல்லது  சோம்பேறி போலத் தூங்காதே

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு ஆறு மணி நேரம் தூக்கம் போதும்; நோயாளிகளுக்கு எட்டு மணி நேரம் தூக்கம் போதும். பளிச் சிறுவர்களுக்கு பத்து மணி நேரம் தூக்கம் தேவை.

அனந்தல் என்பது இந்த வரையறைக்கு அப்பாற்பட்ட தூக்கம்.

திருப்பாவை பாடிய ஆண்டாள் ஒரு டீன் ஏஜ் கேர்ள் ; பருவக் குமரி .

அவள் என்ன சொல்கிறாள் ?

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!

மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று

நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!

********

Mansion studded with pure precious stones

Wicks of light all around gleaming

Asleep a couch perfume afloat;

Thou, uncle’s daughter , unlock the door bedecked

Auntie, would you arouse her ?

Is your daughter dumb, deaf, lazy and dreaming ?

Accurs’d to a grand sleep with a sentry ?

Extol Him as Madhava,

Great hypnotist Mukuntha

And so forth chant the Vaigunta;

Listen and consider our damsel

(Translation by Dr Chenni Padmanabhan)

குறட்டை விட்டுத் தூங்குவோரின் ஆயுள் குறையும் என்று மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் செப்புகின்றன. எது எப்படியாகிலும், எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்குவது தேவை இல்லை..

ஏனெனில் அவ்வையார்  இத்தோடு  நிறுத்தவில்லை; வைகறையில் துயில் எழு என்கிறார் ; அதையும் ஆராய்ச்சிக் கண்களோடு நோக்குவோம்.

To be continued………………………..

Tags- துயில் , அனந்தல் , அவ்வையார்,  ஆத்திச்சூடி,   மருத்துவ அறிவுரைகள், பகுதி -1 , சனி நீராடு , எண்ணெய்க் குளியல் , எ.வைத்தியநாதய்யர், ஆண்டாள், திருப்பாவை, அஃகம் ,இலவம் பஞ்சு

மனம் பற்றிய  31 பொன் மொழிகள்; செப்டம்பர் 2024 நற்சிந்தனை காலண்டர் (Post.13,612)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,612

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

பத்து ஆண்டுகளுக்கு முன் மனம் பற்றிய 31 பொன்மொழிகளை இங்கு வெளியிட்டேன்; இதோ மேலும் 30 பழமொழிகள்

பண்டிகை/ விடுமுறை நாட்கள் –  செப்டம்பர் 5- ஆசிரியர் தினம்; 7- விநாயக சதுர்த்தி; 11- பாரதியார் நினைவு நாள்; 15- ஓணம் ; 16-மிலாடி நபி; 18- மாளயபட்சம் ஆரம்பம் .

அமாவாசை -2; பெளர்ணமி -17

ஏகாதஸி உண்ணாவிரத நாட்கள் – 14, 28.

சுப முகூர்த்த தினங்கள் – 5,6, 8, 15, 16

xxxx

செப்டம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.– ரமணர்

xxxx

செப்டம்பர் 2 திங்கட் கிழமை

நினைமின் மனனே! நினைமின் மனனே!

சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை

நினைமின் மனனே! நினைமின் மனனே! —பட்டினத்தார்

xxxx

செப்டம்பர் 3 செவ்வாய்க் கிழமை

Mind is a Monkey

மறுகிச் சுழலும்  மனக் குரங்கு -காட்டும் கரையும் மனக் குரங்கு–தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 4 புதன் கிழமை 

நம்மால் எதிலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான். .– ரமணர்

xxxx

செப்டம்பர் 5 வியாழக் கிழமை 

வறுமைப் பாழ்பிணி ஆற்றப்ப டாதுளம்

     உருகிப் போனது தேற்றப்ப டாதினி

          மகிமைக் கேடுகள் பார்க்கப்ப டாதென .அழையாயோ —திருப்புகழ்

xxx

செப்டம்பர் 6 வெள்ளிக் கிழமை

மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினா நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை. .– ரமணர்

xxxx

செப்டம்பர் 7 சனிக் கிழமை

Do a trick so that I concentrate (on You)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணு – —தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை

தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி !

இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி. -பட்டினத்தார்     

xxx

செப்டம்பர் 9 திங்கட் கிழமை

Let my Mind Spinning Top stop.

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை

        அடங்கி மனம்வீழநேரே

அறியாமை யாகின்ற இருளகல இருளளியும்

        அல்லா திருந்தவெளிபோல் –தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 10 செவ்வாய்க் கிழமை

Please help me to jump on the boat from the Sea of Worries

கவலைச் சாகர நீச்சுக்கு ளேஉயிர்

     தவறிப் போம்என ஓட்டத்தில் ஓடியே

          கருணைத் தோணியில் ஏற்றிக்கொள் வாயினி …… அலையாதே —திருப்புகழ்

xxx

செப்டம்பர் 11 புதன் கிழமை

 மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும். .– ரமணர்

xxxx

செப்டம்பர் 12 வியாழக் கிழமை 

விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்

திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்

கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பிப்

படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.--பட்டினத்தார்

xxxx

செப்டம்பர் 13 வெள்ளிக் கிழமை

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும். .– ரமணர்

xxxx

செப்டம்பர் 14 சனிக் கிழமை

My mind is like the cotton blown away by the wind of desires.

ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்சென மனம்

அலையும் காலம் — தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை

Oh Mind Come Near

மனமே உனக்கு உறுதி புகல்வேன்

எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே- திருப்புகழ்

xxxxx

செப்டம்பர் 16 திங்கட் கிழமை

 மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;

விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும்– பட்டினத்தார்

xxxx

செப்டம்பர் 17 செவ்வாய்க் கிழமை

மனம் வெளிவரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும் போதெல்லாம் அது தன்னுடைய யாதஸதனத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது. .– ரமணர்

xxx

செப்டம்பர் 18 புதன் கிழமை 

My false mind is jumping like a monkey stung by a scorpion; save me

கொள்ளித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்குரங்காய்

கள்ள மனம் துள்ளுவதென் கண்டோ பராபரமே– தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 19 வியாழக் கிழமை 

You saved me when I was struggling with dirty mind

மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை

கொண்டு மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே. —திருப்புகழ்

xxxx

செப்டம்பர் 20 வெள்ளிக் கிழமை

மூச்சு என்பது குதிரையைப் போன்றது. மனம் என்பது அதன் மீது சவாரி செய்து குதிரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனும் கட்டுப்படுகிறான். இதுவே பிராணயாம்ம். மூச்சின் இலக்கத்தைக் கவனித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனத்தில் ஓடும் நினைவுகளும் கட்டுபடுகின்றன. .– ரமணர்

xxxx

செப்டம்பர் 21 சனிக் கிழமை

My mind is like a kite that is torn and swept; save me

வால் அற்ற பட்டமென மாயா மனப் படலம்

கால் அற்று விழவும் முக்கண் ண்ணுடையாய்  காண்பேனோ — –தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை

My mind is like a pin wheel, save me

ஆடுங்கறங்காகி அலமத் துழன்று மனம்

வாடுமெனை ஐயா நீ  வா எனவும் காண்பேனே — தாயுமானவர்

Xxxx

செப்டம்பர் 23 திங்கட் கிழமை

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து

வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே

வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி

மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடிவினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) உவகை யால் நினைந்துமிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே வெகுட்சிதனையே துரந்துகளிப்பினுடனே நடந்து

மிகுக்கும் உனையே வணங்க வரவேணும்—திருப்புகழ்

xxxx

செப்டம்பர் 24 செவ்வாய்க் கிழமை

மனம் போல மாங்கல்யம் —  பழமொழி

கள்ள மனம் துள்ளும்.=தமிழ்ப் பழமொழி

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. –தமிழ்ப் பழமொழி

மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு–. தமிழ்ப் பழமொழி

xxxx

செப்டம்பர் 25 புதன் கிழமை 

எண்ணுவ துயர்வு- பாரதி ஆத்திச் சூடி

 நினைப்பது முடியும்- பாரதி ஆத்திச் சூடி

xxxx

செப்டம்பர் 26 வியாழக் கிழமை

My mind is changing constantly;  save me

ஒன்றைநினைந் தொன்றைமறந் தோடுமனம் எல்லாம்நீ

என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே. –தாயுமானவர் .

xxxx

செப்டம்பர் 27 வெள்ளிக் கிழமை

இறப்பும் பிறப்பும் பொருந்த – எனக்

கெவ்வணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கில்

மறப்பும் நினைப்புமாய் நின்ற – வஞ்ச

மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – சங்கர  –தாயுமானவர்

xxxxx

செப்டம்பர் 28 சனிக் கிழமை

நகர்ந்து செல்லும்ம வண்டியில், உறங்கிக் கொண்டு பயணம் செய்யும் பிரயாணிக்கு சலனமோ, அசைவுகளோ எதுவும் தெரியாது. ஏனெனில் அவனது மனம் அறியாமை இருளில் ஒடுங்கிக் கிடக்கிறது.– ரமணர்

xxxx

செப்டம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை

மனவேலங் கீலக லாவிகள்

     மயமாயங் கீதவி நோதிகள்

          மருளாருங் காதலர் மேல்விழு …… மகளீர்வில்

மதிமாடம் வானிகழ் வார்மிசை

     மகிழ்கூரும் பாழ்மன மாமுன

          மலர்பேணுந் தாளுன வேயரு …… ளருளாயோ–திருப்புகழ்

xxxx

செப்டம்பர் 30 திங்கட் கிழமை

மனத்தில்வருவோனெ என்(று)

உன் அடைக்கலம் அதாக வந்து

மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள்

வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும்

மனமேயிரங்கி மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா–திருப்புகழ்

xxxx

Bonus Quotations

கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை

     யென்றே செப்பிய …… மொழிமாதர்

கொங்கார் முத்துவ டந்தா னிட்டத

     னந்தா னித்தரை …… மலைபோலே

வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம

     னந்தா னிப்படி …… யுழலாமல்

மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்

     என்றே யிப்படி …… அருள்வாயே —-திருப்புகழ்

xxxx

இளக மனம் அழலின் மெழுகாய் –தாயுமானவர்

xxxx

மின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம்

        விகசிப்ப தெந்தநாளோ

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற

        வித்தகச் சித்தர்கணமே. –தாயுமானவர்

xxxx

my mind is in a wrestling contest

வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் பாழ்த்தமனம்

ஏதுக்குக் கூத்தாடு தெந்தாய் பராபரமே. –தாயுமானவர்

xxxx

my mind is like a gambler’s mind; save me

சூதாடு வார்போல் துவண்டு துவண்டுமனம்

வாதாடின் என்னபலன் வாய்க்கும் பராபரமே. –தாயுமானவர்

xxx

when I realized the Truth false thoughts ran away

உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே

கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே. –தாயுமானவர்

xxx

let my mind ripe like a fruit.

பாக்கியங்க ளெல்லாம் பழுத்து மனம்பழுத்தோர்

நோக்குந் திருக்கூத்தை நோக்குநாள் எந்நாளோ –தாயுமானவர்.

xxxx

mind is a snake;  save me

வாதனையோ டாடும் மனப்பாம்பு மாயஒரு

போதனைதந் தையா புலப்படுத்த வேண்டாவோ –தாயுமானவர்

xxxx

My old post

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › மன…

29 Dec 2014 — “மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்! ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய். அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய் .நன்றையே கொள்

–subham—

Tags- செப்டம்பர் 2024, நற்சிந்தனை, காலண்டர், மனம் பற்றிய பொன்மொழிகள்

‘இட்லி சாப்பிடுவது’ போல விழுங்குங்கள்! (Post No.13,611) 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.611

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இட்லி சாப்பிடுவது’ போல விழுங்குங்கள்! 

ச. நாகராஜன் 

வானத்திலிருந்து நூறு அடி ஆழம் கீழாகப் பரவி ஏழு நகரங்களை மூடி, அனைத்து இயக்கத்தையும் நிறுத்தும் மூடு பனியைத் திரட்டி எடுத்தால் அதை ஒரு பாட்டிலுக்குள் அடைத்து விடலாம்! இது அறிவியல் விளக்கும் ஒரு வியப்பூட்டும் உண்மை!

 விமானம் ஓடுதளத்தில் இறங்கவோ, ஏறவோ முடியாது; வாகனங்கள் தடைபட்டு மெல்ல மெல்ல செல்லும்; ஒரு அடி தூரத்தில் இருப்பதைக் கூடக் காண முடியாமல் யார் மீது மோதப் போகிறோமோ என்று பயந்து மெல்ல  மெல்லச் செல்ல வேண்டியிருக்கும். இது மூடு பனியின் விந்தை ஜாலம்! என்றாலும் அதைத் திரட்டினால் ஒரு சிறிய பாட்டில் கூட நிறையாது.

 இந்த மூடுபனியைப் போலத்தான் நன் வாழ்க்கையில் சந்தோஷத்தை மறைத்து ‘ஏழு நகரம்’ அளவு பரவி நம்மைத் துன்பப்படுத்தும் டென்ஷனும் கூட!

 பிரிட்டனில் 55 லட்சம் பேர் அலுவலக டென்ஷனால் அல்லது ஸ்ட்ரெஸ்ஸால் பாதிக்கப்பட்டதைக் கண்ட ‘மைண்ட்’ என்ற மன நல மேம்பாட்டு அமைப்பு ஐந்து கோடி  மனித நாட்கள் இதனால் இழக்கப்படுவதாகக் கணக்கிட்டுச் சொல்லியுள்ளது.

 ஜனத்தொகை குறைந்த, சுற்றுப்புறச் சூழ்நிலை அவ்வளவாக மாசுபடாத, பிரிட்டனிலேயே இப்படி நிலை என்றால் நூறு கோடி ஜனத்தொகை உள்ள அதிக ‘மாசுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலை’ உள்ள நமது நாட்டின் நிலை என்னவாக இருக்கும்? கற்பனைக்கும் அப்பாற்பட்ட கொடுமையாக இருக்கும்!

 ஆணும் பெண்ணும் அலுவலகத்திற்குக் காலை எட்டு மணிக்குக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு புறாக் கூட்டில் அடைய வருவது போல வீடு வரும் போது இடைப்பட்ட நேரத்தில் துணைக்கு நம்முடன் வரும் ஒரே துணை டென்ஷன் தான்! எவ்வளவு அவஸ்தைகள்; எவ்வளவு டென்ஷன்! இதைப் போக்கும் வழிகளைக் கூறுவதாக ஏதேனும் புத்தகம் வந்தால் அதை நம்ப வேண்டாம். ஏனெனில் பாஸிடிவ் டென்ஷன் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவை; நெகடிவ் டென்ஷனை அழிக்கவோ, நீக்கவோ போக்கவோ முடியாது. ஆகவே அதை ‘சமாளிக்க’ என்ன செய்வது என்று கற்றுக் கொண்டாலே ஈடு கொடுத்து வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.

 அற்புதமான வைரம் சாதாரண நிலக்கரியாக இருந்து அழுத்தப்பட்டதால்தானே உன்னத நிலையை அடைகிறது.

 உங்கள் ‘ஸ்ட்ரெஸ்ஸை’ நீங்கள் சமாளித்து வைரம் ஆகி ஜொலிக்கலாம். சரி, சமாளிக்க வழிகள் உண்டா, என்ன? உண்டு!

 1.        உடலும் மனமும் களைத்த நிலையில் தூக்கத்தைத் தள்ளிப் போடாதீர்கள். அயர்ந்த நித்திரை நல்ல புத்துணர்ச்சியையும் புதிய ஆற்றலையும் அதிக சிந்தனைத் திறனையும் அள்ளி வழங்கும். இரவில் நெடு நேரம் கண் விழிப்பவர்களாக இருந்தால் உடனே பழக்கத்தை மாற்றுங்கள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் இன்றியமையாதது.

 2.        தேவையர்ற அனைத்தையும் அலவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, உதறி எறியுங்கள். நிறைய நேரம் கிடைக்கும். மனதில் நிம்மதியும் கூடும்! வீண் அரட்டை, இடைவிடாத டி.வி, சீரியல், டெலிபோனில் நீண்ட பேச்சு, நிறைய பேருடன் பேச்சு.. இப்படித் தேவையற்ற விஷயங்களின் பட்டியலைப் போட்டால் நீங்களே வியப்படையும் அளவு பட்டியல் நீளும். அதைக் குறைக்கும் போது டென்ஷனும் குறையும்!

 3.        இட்லி சாப்பிடுவதை நினைத்துப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள். இட்லிக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும். இட்லியை யாரும் ஒரேயடியாக வாயில் வைத்துத் திணித்து விழுங்குவதில்லையே! விள்ளல் விள்ளலாக எடுத்துச் சுவைத்து அனுபவித்துச் சாப்பிடுகிறோம் இல்லையா? வாழ்க்கையையும் ஒரே நாளில் அனுபவித்து விடத் துடிக்காதீர்கள். ஒவ்வொன்றாக – ஒவ்வொன்றாக செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

 4.        முக்கியத்துவத்திற்கு முதலிடம் (FIRAT THINGS FIRST) என்ற அடிப்படையில் உங்கள் மீது விழும் பளுக்களை ஒவ்வொன்றாக உதறி முன்னேறப் பழகுங்கள்.

 சின்னக் கழுதைக் கதையைக் கேட்டிருக்கிறோமே, நினைவிருக்கிறதா?

 கழுதை ஒன்று இருளான, அவ்வளவாக ஆழம் இல்லாத பாழும் கிணற்றில் விழுந்து விட்டது. அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதை அறியாத அதன் சொந்தக்காரன் அதைத் தூக்கி விடவும் முடியாமல் அதை அப்படியே விடவும் முடியாமல், அதை அப்படியே விட மனமில்லாமல் அது இறந்து விட்டதாக் நினைத்துக் கொண்டு அதை அங்கேயே புதைக்க விரும்பினான். ஒவ்வொரு கூடையாக மணலை அள்ளிக் கிணற்றில் போட்டான். தன் முதுகின் மீது ஒவ்வொரு முறையும் வந்து விழுந்த மணலை உதறி அதைக் கீழே தள்ளியது அந்தக் கழுதை. இப்படியே கிணற்றில் போட்ட மணலைக் கீழே உதறி உதறி அது மேலே வந்து விட்டது!

 உங்கள் முதுகின் மீது போடப்படும் பளுக்களையும் உதறி உதறிக் கீழே தள்ளுங்கள், அதன் மீது ஏறி நின்று மேலே முன்னேறுங்கள்.

 சினேகிதி மாத இதழில் 2006, மார்ச் மாதம் வெளியான கட்டுரை.

xxxx

Hanuman Worship in Assyria (Post No.13,610)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,610

Date uploaded in London – 30 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Hanuman Worship in Assyria (Post No.13,610)

Where was Assyriya? How long did they rue?

Assyria, kingdom of northern Mesopotamia that became the centre of one of the great empires of the ancient Middle East. It was located in what is now northern Iraq and southeastern Turkey. Assyria was a dependency of Babylonia and later of the Mitanni kingdom (VEDIC RULERS) during most of the 2nd millennium BCE. It emerged as an independent state in the 14th century BCE, and in the subsequent period it became a major power in Mesopotamia.

Assyrian power declined after the death of Tukulti-Ninurta I (c. 1208 BCE). It was restored briefly in the 11th century BCE by Tiglath-pileser I, but during the following period both Assyria and its rivals were preoccupied with the incursions of the seminomadic Aramaeans. The Assyrian kings began a new period of expansion in the 9th century BCE, and from the mid-8th to the late 7th century BCE, a series of strong Assyrian kings—among them Tiglath-pileser III, Sargon II, Sennacherib, and Esarhaddon—united most of the Middle East, from Egypt to the Persian Gulf, under Assyrian rule. (from Encyclopedia)

My Comments

A very interesting theory about Hanuman is that he is mentioned in the Rig Veda. We find Rama’s name in the Rig Veda. But this Hanuman is not associated with Rama in the Veda. There is a character named Vrsa Kapi in the tenth Mandala of the Rig Veda. Foreigners consider that the last Mandala/Section of the Rig Veda which is not correct.

Vrsa kapi found in the tenth section (RV) is a friend of Indra, but he had a dispute with Indrani, wife of Indra. This is described in a dialogue. My view is that about 20 dialogue poems in the Rig Veda are dance dramas. We had only the plot of the drama in short poems. Once they must have staged them with elaborate prose. This Vrsakapi poem is a comedy drama. All the translators agree that it is a male monkey which is strong and sexually active. Even if we reject the research works on the Vrsa kapi poems, we see the monkey or Ape mentioned in the oldest work.

According to Sanskrit dictionary Vrsakapi has several meanings such as Indra, Siva, Vishnu, Agni. Even Vishnu Sahasranama has Vrsakapi.

Saint Tulsidas said in his Hanumaan Chaaleesaa that Hanumaan spread his fame in Four Yugas. We know for sure Hanuman lived during Rama’s period and Krishna’s period in Arjuna’s flag. Now in our Kali Yuga,  he lives in places wherever the name RAMA is recited. But what happened in Krta Yuga?

Probably we have not got direct proof for his existence, but indirect reference is there in the word vrsa KAPI.

The Rig Vedic word KAPI for monkey is in Tamil as KAVI and throughout the whole world as (k)APE.

One type of apes is called LANNGUR; that is also a Sanskrit word LAANGOOLA= tail. Tamil word for female Monkey is MANTHI; that is also found in English as MONKEY. In Tamil dictionary VAAL= tail means monkey. If Tamil children do mischiefs or pranks, they are called VAAL (monkey). See CREA dictionary for more on this Tamil phrase.

xxx

All linguists around the world knew

R becomes L; vice versa

B becomes V; vice versa

Lusa Kapi

This word is in Assyrian epigraph in Cuneiform lipi according to a research paper of K N Prasad of Arunachal University in 2007.

Arunachal University Research Journal. VolA (7), 2007, 407-775

HANUMAN IN VEDIC LITERATURE

K.N. Prasad Magudh*

` Depertment of Hindi

Arunachal Universite, Rono Hills, Itanagar —79] ]]].

(Received /7 May 2000; Accepted 72 July 2000)

Abstract

Vrsakapi is one of thé synonyms of Hanuman. The word Hanuman

– does not apparently exist in the Vedas, but one of the Rgvedic hymns (/0/

86) depicts Vrsakapi who appears to be demi-god. Some scholars have

equated Vrsakapi to Hanuman. But this analogy is not accepted by all. In

the present paper it has been justified that Vrsakapi basically denotes

Hanuman andit is perfectly logical..The content of the Rgvedic episode

has been elaborated in Brahma Purana (Gautami-Mahatmya), After a

comparative analysis of the two, it has been established that the Vrsakapi

of Rgveda is none other than cemi-god Hanuman

xxxxxx

What they did not know  about LUSA KAPI is

It is nothing but Vrsa Kapi.  (v)Rusa kapi

L= R; it is a universal rule, found even in Sangam Tamil Literature, 2000 years ago Tamils wrote Amrut as Amiltham; R=L

It is found in all ancient languages.

Spanish use R=L even today.

In short all Vedic Vrusa Kapi was in Assyria as Lusa Kapi.

My Comments

The word Apa is used through out Western Europe for APE; they said it may be due to Monkeys came via water (aapa) to Europe. It is absurd and nonsense.

Aapa is used by Brahmins every day for water in their thrice a day Sandhyavandana worship. It has nothing to do with monkey.

Kape/ Kapi in the Rigveda becomes (k) APE in other languages. That is corrupted as Apa in Europe.

xxx

ABOUT LUSA KAPI

Lusakapi

Lusakapi is another interesting word that occurs in wisdomlib.com as the name of a Hindu king. This word is found in Assyrian epigraph. Actually the real pronunciation is Rsakapi. R an L are transferrable if you replace L in Lusa kaphi it will be Vrsakapih. Only the spelling is wrong.

R -L  transfers occur around the world. For us the best example comes from 2000 year old Sangam Tamil corpus. Tamils replaced Amruta= Amiltham

Wisdomlib.com says there was a king in India with that name. The name is in Assyria as well. So, Hindus spread their Sanskrit language up to Mesopotamia (now Iraq/Turkey). All agree that the Mitannian Civilization was a Vedic civilization. They ruled from 1600 BCE for 400 years in Syria and Turkey. Rig Vedic Gods and names like Dasarata are there. That Dasaratha’s letters are in Egypt now known as Amarna letters. Sumerian King Rama Sin (Rama Chandran) was the best ruler according to Sumerian scholars.

Conclusion

My earlier articles such as RAMAYANA IN BIBLE (Sringeri Magazine Sankara Kripa article), Rama in Sumeria, Ram(ses) in Egypt and Kanchi Sankaracharya’s (1894-1994) speech about Rama in Madagascar Island, Monkey God worship in Egypt – all show Rama was known, and Hanuman was worshipped around the world. But the king names such as Ram sin in Sumeria, 14 Ram Seshan kings in Egypt, Vrsa Kapi in Assyria came after our great Lord Rama, who lived many thousand years before Egypt, Sumer and Assyria. HIS name was used by all the rulers.

Jai Sri Ram; Jai Hanuman

–subham—

Tags- Vrsa kapi, Lusa kapi, Kapi, Kavi, Monkey, Manthi, Tamil, Sanskrit, Rig Veda, Assyria.

வாரங்கல் ஆயிரம் தூண் கோவில்; ஆந்திர கோவில்கள் – Part 27 (Post No.13,609)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,609

Date uploaded in London – 30 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

வாரங்கல் ஆயிரம்கால் (தூண்) கோவில்; ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 27

,ஹைதராபாத்தை அடுத்து தெலுங்கானாவின் இரண்டாவது பெரிய நகரம் வாரங்கல் . இந்த நகரம் ஒரு காலத்தில் காகதீய வம்சத்தின் தலைநகராக இருந்தது. ஆயிரம் தூண் கோயில் மற்றும் பிரதாபருத்ரா கோட்டை முக்கிய இடங்கள்.

ஹைதராபாத்திலிருந்து வாரங்கலுக்கு 160 கிலோமீட்டர் தூரம் .

xxx

தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில்  ஹனமகொண்டா என்ற ஊரில் ஆயிரம் தூண்களின் கோவில்  உள்ளது வாரங்கல் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவுதான் .காசிப்பேட்டையிலிருந்து 10 கி.மீ. இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால்  திரிமூர்த்திகள், அதாவது, சூரியன், விஷ்ணு மற்றும் சிவன் சந்நிதிகள் இருப்பதாகும்.

இதை  ருத்ரேஸ்வர ஸ்வாமி கோவில், என்றும் அழைப்பர். இங்கு சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய மூவருக்கும் கோவில் இருக்கிறது. சாளுக்கிய கலை அம்சங்கள் நிறைந்தது.

இந்து கட்டிடக்கலைக்கு ஒரு அழகிய உதாரணம், 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது  . இந்த கோவிலில் ஆயிரம் தூண்கள் உள்ளன, ஒவ்வொன்றும் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒரு பெரிய விஷ்ணு சிலை உள்ளது. கோவிலைக் கட்டுவதற்கு 72 ஆண்டுகள் ஆயிற்றாம் .1175 – 1324  க்கு இடையில் புகழ்பெற்ற காகதீய வம்சத்தின் மன்னர் ருத்ர தேவாவின் உத்தரவின் பேரில் இது கட்டப்பட்டது.

இந்த கோவிலில் நுண்ணிய  சின்னங்கள், துளையிடப்பட்ட திரைகள், பாறையில் வெட்டப்பட்ட யானைகள் மற்றும் ஒரே கல்லிலான  நந்தி ஆகியவை உள்ளன. இங்குள்ள தூண்கள் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன,

கட்டிடக் கலைஞர்கள் கோயிலின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த மணல் பெட்டி அமைப்பைப் பயன்படுத்தினர்.  ஆழமான பள்ளம் தோண்டி மணல் மற்றும் பாறைக் கற்றைகளால் நிரப்பினர். 

 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறை இந்த பழமையான தலைசிறந்த படைப்பை இப்போது நிர்வகிக்கிறது.

திரிகூடாலயம் என்று அழைக்கப்படும், சிவன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, மற்ற இரண்டு சன்னதிகள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ளன. காகதீய ஆட்சியாளர்கள் சிவனின் சிறந்த பக்தர்களாக இருந்தனர், மேலும் அவர்கள் அதிகாலையில் சூரியனின் கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது பட வேண்டும் என்று விரும்பினர். விஷ்ணு மற்றும் சூரியனின் சன்னதிகள் ஒரு சதுர வடிவ மண்டபத்தின் வழியாக சிவனுடன் இணைகின்றன.

நான்காவது பக்கத்தில் ஒரு மேடையில் சிவனின் புனிதமான வாகனமான அழகிய ஒற்றைக்கல் ஆறு அடிகள் உயர நந்தி உள்ளது. கோவிலின் முழு அமைப்பும் நட்சத்திர வடிவில் உள்ளது.  கல்வெட்டுகள் நிறைய உள்ளன.

 கோவிலுக்குள் நுழையும் போது, ​​நுழைவாயிலின் இருபுறமும் யானைகளின் அழகிய சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றியுள்ள தோட்டங்களில் சிறிய சிவலிங்கங்கள் உள்ளன. துக்ளக் வம்ச முஸ்லீம் அரசர்கள் கோவிலை நாசம் செய்தனர். பின்னர் மீண்டும் சீரமைக்கப் பட்டது.

திருவிழாக்கள்

கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மகா சிவராத்திரி, குங்கும பூஜை, நகுல சவிதி, கார்த்திகை பௌர்ணமி, யுகாதி, விநாயகர் திருவிழா, போனலு திருவிழா மற்றும் பதுகம்மா திருவிழா ஆகியவை அடங்கும். சாரலம்மா யாத்திரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா.

வாரங்கல்லில் காகதீய மன்னன் கஜபதியும் அவனது புதல்வி ருத்ரம்மாவும் கட்டிய கோட்டை முக்கிய சுற்றுலாத் தலம்; அது சாஞ்சி ஸ்தூபி போல 4 அலங்கார வாசல்களை உடையது.

xxxxx

இவை தவிர பத்மாக்ஷி கோவில், பத்ரகாளி கோவில், வீர நாராயண ஆலயம், சமணர்களின் கோவில் ஆகியனவும் வாரங்கல்லில் இருப்பதால் பக்தர்கள் ஒன்றிரண்டு நாட்களை செலவிடவேண்டும் .

ஸ்ரீ வீரநாராயண ஆலயம். நகர மையத்தில் இருந்து சுமார் நான்கு கிமீ ;  கோவில் வளாகம் பெரியது ; பல கோவில்கள் , ஒரு பெரிய குளம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பத்மாக்ஷி கோவில் வாரங்கலில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். நகரின் மையத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.  . வாரங்கலின் காவல் தெய்வம் பத்மாக்ஷி தேவி. கோவில் வளாகத்தில் நான்கு கோவில்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தின் வெவ்வேறு வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

ராயபர்த்தி சிவன் கோவில், சுயம்பு கோவில் ஆகிய இரண்டும் சிவன் கோவில்கள்.. சிவன்  கோவில் கட்டிடக்கலை.அழகுமிக்கது  . இது நகர மையத்தில் இருப்பதால் எளிதில் அடையலாம்; ஏனைய கோவில்களுக்கு பஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம்

சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில்  சுயம்பு கோவில் இருக்கிறது 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த கோவில் வாரங்கலின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிய சிறந்த இடமாகும். கோவில் வளாகத்தில் பல சந்நிதிகள்  உள்ளன, எல்லா கோவில்களும் பமையான வரலாறும், சிறந்த கட்டிடக்கலை, சிற்பங்களும் ஊட்டிய ஆகையால் வரலாற்றுப் பிரியர்களுக்கு வாரங்கள் ஒரு சொர்க்க பூமி.

–subham—

Tags- வாரங்கல் ஆயிரம் தூண் கோவில்; ஆந்திர கோவில்கள் – Part 27

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் நிறைவு -12 (last part) Post No.13,608

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,608

Date uploaded in London – 30 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 12 (last part)

ஹனுமான் சாலீசாவின் கடைசி மூன்று கன்னிகளைப்ப பார்ப்போம்

38. ஜோ சத பார் பாட கர கோயீ ।
சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா

ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா

கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

****

(தோ³ஹா)

பவன தனய ஸங்கட ஹரன மங்கள மூரத்தி ரூப்

ராம லகன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப்

****

(வாழ்த்து கோஷங்கள்)

ஸியாவர ராமசந்த்ரகீ ஜய் ! பவனஸுத ஹனுமான்கீ ஜய்!

போலோ பாயீ ஸப ஸந்தனகீ ஜய்!

XXXXX

38. யார் ஒருவர் இந்த ஹனுமான் சாலீசாவை நூறு தடவை படிக்கிறார்களோ அவர் ஆசை எனும் பாச வலையிலிருந்து விடுபடுவார்;  பேரானந்த நிலையை அடைவார் .

39. இந்த ஹனுமான் சாலீசாவைப் படிப்பவருக்கு நிச்சய வெற்றி கிடைக்கும் என்பதற்கு கெளரி சங்கரரான பரமேஸ்வரனே சாட்சி.

40. துளஸி தாஸர் சொல்கிறார் :ஹே அனுமனே ! நான் என்றும் ராமாபிரானையே புகலிடமாகக் கொண்டுள்ளேன்; சீதா ராம லெட்சுமணர்களுடன் தங்கள் என் என்னுடைய இருதயத்தில் என்றும் இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இத்துடன் 40= சாலீஸா முடிந்துவிட்டது.

****

பின்னர் முத்தாய்ப்பாக வரும் தோஹா :

பவன குமாரனே! தேவர்களுக்குத் தலைவனே; சங்கடங்களைத் தீர்ப்பவனே; மங்களங்களை அருள்பவனே !சீதா ராம லெட்சுமணர்களுடன் என்னுடைய இருதயத்தில் என்றும் வசிப்பீர்களாகுக !

XXX

எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ஹனுமான் சாலீஸா  மற்றும் ரத்தன் மோஹன் சர்மா பாடிய ஹனுமான் சாலீஸா ஆகியவை  கேட்பதற்கு இனிமையானவை; சுமார் 11 நிமிடங்கள் பிடிக்கும் . யூ ட்யூபில் தினமும் கேட்கலாம்.

தமிழில் ஹனுமான்  சாலீஸா:

வீரா என்பதை பீரா என்றும் சிலர் உச்சரிப்பர்; உலகம் முழுதும் ப=வ மாற்றத்தைக் காணலாம்  அதே போல ‘ப்’, ‘ய்’ என்று மெய் எழுத்துக்களில் முடிவதை ப , ய என்ற உயிர் மெய் எழுத்துகளாகவும்  சிலர் சொல்வர் ; வித்யா என்பதை பித்யா என்பர்; துளசிதாஸர் , தான் வாழ்ந்த பகுதியில் பேசிய வட்டார ஹிந்தி மொழியில் (அவதி) எழுதினார்.

  ஸ்ரீகுரு சரண ஸரோஜ் ரஜ நிஜ மன முகுர ஸுதார்

பரணோம் ரகுவர விமல ஜச ஜோ தாயக பலசார்

புத்தி ஹீன தனு ஜானிகே, ஸுமிரௌம் பவன குமார்

பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

1.ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர

ஜய கபீஸ திஹுலோக உஜாகர

2. ராமதூத அதுலித பலதாமா

அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ

குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸம்வாரே

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

13. ஸஹஸ வதன தும்ஹரோ ஜச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

15. யம குபேர திக்பால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

29. சாரோம்  யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ்வர தீன் ஜானகீ மாதா

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹோ  ரகுபதி கே தாஸா

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

36. ஸங்கட கடை  மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

பவன தன்ய ஸங்கட ஹரன மங்கள மூரத்தி ரூப்

ராம லகன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப்

*****

ஸியாவர ராமசந்த்ரகீ  ஜய்  பவனஸுத ஹனுமான்கீ  ஜய்

போலோ பாயீ ஸப ஸந்தனகீ  ஜய்

xxx

 வேகமாக ஹனுமான் சாலீசாவைப் படித்தால் ஐந்து அல்லது ஆறு  நிமிடங்கள் போதும். 100 தடவை படித்தால் 500 நிமிடங்கள் ; அதாவது சுமார் ஒன்பது மணி நேரம்; இதைத் தனியாகச் செய்வது கடினம்; இதற்காக பெரிய கோவில்கள், மண்டபங்களில் 100 தடவை படிக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ( நானே லண்ட னில் மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்; ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பேசவும் அழைத்திருந்தார்கள்; நான் ஹனுமனை சூப்பர்மேன் பேட் மேன் ஸ்பைடர் மேன் சித்திரப் படக்கதைகளுடன் ஒப்பிட்டுப் பேசினேன் ; என் பேச்சு எடுபடவில்லை ; ஏனேனில் அவர்கள் ஹநுமானை சர்வ சக்தி வாய்ந்த கடவுளாகப் பார்க்கிறார்கள் ; நானும் அதை நம்பினாலும், அங்குள்ள இளைஞர்களைக் கவர்வதற்காக அந்த எடுத்துக் காட்டினைச் சொன்னேன்; லண்டனில் ஸ்ரீ ராம் பாபா நடத்தும் 100 முறை ஹனுமான் சாலீஸா பாராயணம் அடிக்கடி நடந்து வந்தது..

இறுதியாக, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும் என்ற திருவாசக சிவபுராண வரிகளை நினைவிற்கொள்ள வேண்டும் ; அதற்கும் மேலாக த்ரி கரண சுத்தியுடன் – மனம் மொழி, உடல் தூய்மையுடன் சொல்லவேண்டும்; அதற்கும் மேலாக தனக்கு மட்டுமின்றி சமுதாயத்துக்காக சொல்லுவது அதிக பலன்  தரும் ; எங்கெங்கெல்லாம் சாது, சந்யாசிகள், நால்வர் , ஆழ்வார்கள் , நாயன்மார்கள் அற்புதங்களை நடத்தினார்களோ , அங்கெங்கெல்லாம் அவை எல்லாம் பிறருக்காக , சமுதாயத்திற்காக செய்யப்பட்டிருப்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். .

இத்துடன் ஹனுமான் சாலீஸா நிறைவு பெறுகிறது ; ஹனுமான் பற்றிய அதிசய விஷயங்கள் , உலகெங்கிலும் உள்ள கோவில்கள் , பல நாட்டு ராமாயணங்களில் ஹனுமானின் வருணனை முதலியவற்றைத் தனித்தனியாகக் காண்போம்.

கம்போடியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள கோவில் சுவர்களில் பல நூற்றுக் கணக்கில் ஹனுமான் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன; பெரும்பாலானவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை ; உப்புக் காற்றினாலும்; ஈரப்பதத்தினாலும் பொலிவு குன்றிவருகின்றன ; அரசாங்கம் எல்லாவற்றையும் பாதுகாக்க முடியாது; ஆர்வமுள்ளோர் அவைகளைப் புகைப்படம் எடுத்து வெளியிடுவதோடு வண்ண ஓவியங்களாகத் தீட்ட வேண்டும் . ஹனுமான் கதைகளை மதத்தின் நோக்கம் அழியாதபடி கார்ட்டூன்களாக, வீடியோ கேம்களாக எடுத்துக் குழந்தைகளிடம் பரப்பவேண்டும். ஸ்லோகங்களையும் கம் ப ராமாயணப் பாடல்களையும் பரப்பவேண்டும் ..

ஜெய் ஹனுமான் !

–subham—

Tags- ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள், Part 12 , (last part)

‘உணர்வு’பூர்வமாக வாழுங்களேன்! (Post No.13,607)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.607

Date uploaded in London – 30 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xx 

உணர்வுபூர்வமாக வாழுங்களேன்! 

ச. நாகராஜன் 

பிரிட்டனில் 2031-ம் ஆண்டு வாக்கில் திருமணம் என்ற புனிதச் சடங்கை நாடுவோரது எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும் என்ற சமீபத்திய ஆய்வு அந்த நாட்டின் ஆண் பெண்களை வெகுவாகக் கலக்கமடையச் செய்திருக்கிறது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தனித்தனியே தான் வாழ்வார்களாம். இனக் கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்ட ஆணும் பெண்ணும் கூடி வாழ்வார்களாம். இதை கோ-ஹாபிடட் என்று கூறிக் கொள்வார்கள். சேர்ந்து வாழ்ந்து சலித்து விட்டால் அடுத்த துணையை நாட இருவருமே ஆயத்தமாவார்கள்!

மேலை நாட்டுத் தாக்கத்தால் மாறி வரும் நமது உறவுமுறைகள் நம்மையும் சற்றுக் கலக்குகிறது. ஆணும் பெண்ணும் சம்பாதிப்பதால் பணம் இருக்கிறது என்ற நிலையில் சிறு சிறு விஷயங்களில் கூட விட்டுக் கொடுக்காத பிடிவாத அணுகுமுறை விவாகரத்து வரை கொண்டு விடுகிறது.

“மதூ… நீ செய்வது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை” என்று நடுத்தர வயதான பெண்மணி தன் டீன் – ஏஜ் மகளிடம் சொல்லும் போது, “நான் எது செய்தாலும் உனக்குப் பிடிக்காது என்பது எனக்கு எப்பவோ தெரியும்” என்று வெடுக்கென்று பதில் வருகிறது. தாய் விதிர்விதிர்த்துப் போகிறாள்.

அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் பிரமாதமாக வேலை செய்பவர்கள் வாழ்வில் தோற்றுத் தனியே ஏக்கம் பிடித்து வாழ்வதைப் பார்க்கலாம். அறிவு அவர்களுக்குத் துணை கொடுக்கவில்லையா? புத்திசாலித்தனம் 20 சதவிகிதம் மட்டுமே இருந்து 80 சதவிகிதம் உணர்ச்சிபூர்வமாக வாழ்பவர்கள் நிம்மதியான வாழ்வு வாழ்கிறார்கள்.

உணர்ச்சி அறிவுதான் உறவுகளின் வாழும் வகையைக் காட்டும் அறிவு. மகளின் உணர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டிய மதுவின் அம்மா “உன்னுடைய அந்தச் செயலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவுசெய்து எனக்குக் கொஞ்சம் புரியும்படி விளக்கேன்” என்றால் மகளின் பிடிவாதப் போக்கு மாறி சரியாக சிந்திக்கும் பக்குவம் வரும்.

பணம் மட்டுமே வாழ்வு இல்லை என்பதை மண முறிவு வாங்கிய ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளும் போது, காலம் கடந்து விடுகிறது.

‘அகாடமிக்’ அறிவோடு வாழ்வதை விட ‘எமோஷனல்’ அறிவோடு நடப்பவர் சீக்கிரமே அனைவருக்கும் தலைவராக ஆவதோடு செல்வத்துடனும் உறவுச் செழிப்புடனும் சமுதாயத்தில் கௌரவம் மிக்க உயர் நிலையை அடைகின்றனர்.

ஜாக் மேயர், பீட்டர் சலொவி என்ற இரண்டு அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சி மூலமாக வாழ்க்கையை மேம்படுத்த உணர்ச்சி அறிவு பெரிதும் பயன்படும் என்று அறிவித்தனர்.

டேனியல் கோல்மேன் என்பவர் உணர்ச்சிகளை ஆராய ஆரம்பித்தார். ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்ற இவரது நூலைப் பற்றி பிரபல டைம் பத்திரிகை எழுதியவுடன் அது பிரமாதமாக விற்பனையானது. பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றி அவர் இது பற்றி விளக்க ஆரம்பித்தார். “என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை” என்று பாதிக்கப்பட்டவர் சொல்லும் போது அந்த உடைந்த உறவை ஏற்படுத்தியவர், சுமார் மூவாயிரம் சொற்களில் பேசிய பிறகு,, அது போலச் சொல்லி இருக்கிறார் என்று அர்த்தமாகிறது.

சொல்ல வருவதை மற்றவர் மனம் உடையாமல் வேறுவிதமாக மாற்றிச் சொல்வது ஒரு கலை. இதை சுலபமாகக் கற்கலாம்.

உணர்வு அறிவை மேம்படுத்த எளிய பத்து வழிகள் உள்ளன. சிறிது சிரமப்பட்டால் அவற்றைக் கற்று மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் வாழ்வதோடு நம் மனம் புண்படாமல் வாழவும் முடியும்.

1.உணர்ச்சிகள் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள். நிகழ்ச்சிகளுக்கும், உங்களுடன் பழகுபவருக்கும் பட்டப் பெயர் சூட்டாதீர்கள்.

2. எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

3. உங்கள் உணர்ச்சிகளுக்கு நீங்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். (நீ பொறாமைப்பட வைக்கிறாய் என்பது தவறு. நான் உன்னைப் பார்த்து பொறாமைப்படுகிறேன் என்பதே சரி.)

4. நல்ல முடிவுகளை எடுக்க உங்கள் உணர்ச்சிகளை உதவுமாறு செய்யுங்கள்.

5.  மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

6. ஆற்றல்மிக்கவராக ஆகுங்கள். கோபப்படாதீர்கள்.

7. மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு பரிவு காட்டுங்கள்.

8. உணர்ச்சிகள் உங்களை மேம்படுத்துகிறதா என்று பாருங்கள். ஆக்க பூர்வமானதாக அவற்றை ஆக்குங்கள்.

9. யாருக்கும் புத்திமதி தர வேண்டாம். யாரையும் அதிகாரம் செலுத்த வேண்டாம்; கட்டுப்படுத்த வேண்டாம். விமர்சிக்க வேண்டாம். தவறாக எடை போட வேண்டாம்.

10. உங்களை மதிக்காதவர்களைத் தவித்து விடுங்கள்

உணர்வுபூர்வமான அறிவு கூடுவதன் மூலம் உறவுகளை செழிக்கச் செய்யலாம்! அலுவலகம், இல்லம், ஏன் நீங்கள் இருக்குமிடம் எல்லாம் இன்பம் பெருகும்.

சினேகிதி மாத இதழில் 2005, டிசம்பர் மாதம் வெளியான கட்டுரை.

xxxx

Learn Tirumanthiram through Pictures – 3 (Post No.13,606)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,606

Date uploaded in London – 29 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

உள்ளங்கை நெல்லிக்கனி போல

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்

கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்

சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்

அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 11

 Yearn For Him

He of the Penance Pure;

Transparent as amla fruit

On palm of those who yearn for Him;

He the Pure One,

Whom Celestials seek in ways righteous;

Him, my Lord, I sought;

And thus ever remained.

xxxx

Under Urine Therapy

அளக நன்னுத லாயோ ரதிசயங்

களவு காயங் கலந்தஇந் நீரிலே

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்

இளகும் மேனி இருளுங் கபாலமே

Oh! damsel of flowing tresses and slender forehead!

Hear you a miracle this!

In this Water hidden in the body

Mix pepper, amla, turmeric, and neem

Soft will your body be;

And dark thine hair on head.

xxxx

Hasthamalakar Miracle

Adi Shankara, the giant among the Indian philosophers travelled through the length and breadth of India. He went to Mahabaleswar Temple at Gokarna and did Bilvarchana to Shiva on a Shivratri day. Then he went to Mukambika and to Srivali. He was lecturing about Advaita every day. Prabhakara Bhattar was the most reputed scholar in the town. But his son was dumb. His parents were very much worried about the future of the handsome teenager. They took him to Shankara. The dumb youth fell at his feet and did not get up. When Shankara lifted his head and asked who he was, he started talking high philosophy: “ I am not a human being, I am not a Deva; neither  I am a Brahmin nor a Kshatriaya, Vaisya or a Shudra. Neithr I am a Brahmachari (bachelor) nor a Grahastha  (house holder), nor  a Sanyasi (ascetic). I am Brahmam”.

Hearing this Shankara told him that you have explained what you are ‘like a goose berry in the hand’ (Hastha Amalaka உள்ளங்கை நெல்லிக்கனி  போல). This is a phrase in Tamil and Sanskrit used to express extreme clarity of a thing or subject. From that day he was known as Hasthamalaka and he became one of the main disciples of Shankara.

xxxx

My earlier post on Amla Tree

The Story of Indian Gooseberry Tree in Hinduism (Post No. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2023/04/21 › the-story-of-i…

21 Apr 2023 — Phyllanthus emblica, also known as emblic,emblic myrobalan, myrobalan, Indian gooseberry, Malacca tree,or amla,from the Sanskrit आमलकी ( …

—subham—

Tags- Hasthamalaka Story, Amla fruit, Proverb, Tirumanthiram, Learn, Part 3, Nelllikkay in Tamil, Indian Gooseberry, உள்ளங்கை நெல்லிக்கனி  போல

அனுமார் மூலம்  எனக்குக் கிடைத்த நண்பர்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 11

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,605

Date uploaded in London – 29 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 11

‘ஹனுமான் சாலீஸா’ பற்றி எழுதத் துவங்கியவுடன் லண்டன் யுனிவர்சிட்டி SOAS லைப்ரரிக்குச் சென்று அனுமன் பற்றிய புஸ்தகங்களைத் தேடினேன்; இரண்டு மூன்று புஸ்தகங்கள்  இருந்தன.ஆ னால் இதுவரை பார்த்திராத ஏ 4 சைசுள்ள இரண்டு பெரிய வால்யூம்களைப் பார்த்து எடுத்துக்கொண்டு, அனுமதி பெறும் ‘டெஸ்க்’குக்கு வந்தேன்.அங்கு புஸ்தகங்களின் பார்கோட் – ஐ ஸ்கேன் செய்வதற்கு முன்னர் எதற்கு ஒரே புஸ்தகத்தை இரண்டு காப்பி எடுக்கிறீர்கள்? என்று கேட்டார்; அவை இரண்டும் ஒரே அட்டைப்படத்துடன் இருந்தாலும் வால்யூம் 1, 2 என்றேன். அவரது தயக்கத்துக்குப் பின்னர்தான் கா ரணம் புரிந்தது. அவருக்கும் அந்தப் புஸ்தகத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது போலும் ! மெதுவாக என்னிம் ட பேச்சுக்  கொடுத்தார் . நீங்கள் ஹநுமானை பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம், ஹனுமான் சாலீஸாவுக்கு எனது தமிழ் மொழியில், மொழிபெயர்ப்பு உண்டு; ஆனால் ஆங்கிலத்தில் இருப்பது போல வியாக்கியானங்கள் இல்லை; நான் அந்த  வழியில் விளக்கவுரை எழுதுகிறேன் என்றேன். அப்படியா ! நானும் தினமும் ஹனுமான் சாலீஸா படிக்கிறேன் என்றார் ; எனக்கு உடனே மகிழ்ச்சி.

அட, எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்? என்றேன்; நேபாளத்திலிருந்து வருவதாகச் சொன்னார். சென்ற முறை நேபாளம் சென்றபோது இதைப்  படித்தால் நல்லது என்று பலர் சொன்னார்களாம் ; நானும் சொன்னேன் . உண்மை தான் ; குறிப்பாக ஜாதகத்தில் புதன், சனி கிரகம் மூலம் தொல்லை வரும் காலத்தில் படிப்பது நல்லது. நான் தினமும் யூ ட்யூபில் கேட்பேன்; வாரம் ஒரு முறை லண் டன் நார்த்விக் பார்க் ஆஸ்பத்திரியில் எல்லோரும் சேர்ந்து கூட்டுப் பிராத்தனை செய்கையில் நானும் அதைப்  படிப்பேன் என்றேன். பின்னர் நன்றி சொல்லி விடைபெற்றேன் நான் கால் நூற்றா ண்டாக லண்டன் பல்கலைக்கழக நூலகத்துக்குப் போனபோதும் அவரை சந்த்தித்தது முதல் தடவை. அனுமன் புஸ்தகம் எடுத்திராவிடில் அந்த நண்பர் கிடைத்திருக்க மாட்டார். வாழ்க அனுமான் ; ஜெய் ஹனுமான் ; நிற்க .

xxxx

ஹனுமான் சாலீஸா— விலிருந்து மேலும் ஐந்து கண்ணிகளை பார்ப்போம்:

33.தும்ஹரே பஜ⁴ன ராமகோ பாவை ।
ஜன்ம ஜன்ம கே து³க² பி³ஸராவை ॥ 33 ॥

34.அந்த கால ரகு⁴பதி புர ஜாயீ ।
ஜஹாம் ஜன்ம ஹரிப⁴க்த கஹாயீ ॥ 34 ॥

35. ஒளர் தே³வதா சித்த ந த⁴ரயீ ।
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக² கரயீ ॥ 35 ॥

36. ஸங்கட கடை மிடை ஸப³ பீரா ।
ஜோ ஸுமிரை ஹனுமத ப³ல வீரா ॥ 36 ॥

37. ஜை ஜை ஜை ஹனுமான் கோ³ஸாயீ ।
க்ருபா கரஹு கு³ருதே³வ கீ நாயீ ॥ 37 ॥

MEANING

33.யார் உங்களை வழிபடுகிறார்க்ளோ அவர்கள் ஸ்ரீ ராமனை அடைகின்றனர். பல பிறவிகளில் ஏற்பட்ட துக்கங்கள்/ பாவங்கள் அகன்று விடும்.

34.மரணத்துக்குப் பின்னர், அவர்கள் ரகுவீரனுடைய பரமபதத்தை அடைகிறார்கள்; இந்தப் பிறவியில் ஹரி பக்தன் என்ற பட்டமும் கிடைக்கிறது

35.வேறு தேவதைகளை நினையாமல் அனுமனை மட்டுமே வழிபடுவோருக்கு  எல்லா வகையான சுகங்களும் கிடைக்கின்றன.

36. வீரம் மிக்க அனுமனை நினைப்போருக்கு எல்லாத்  துன்பங்களும் அழிகின்றன ; கஷ்டங்களும் ஓடிவிடும் .

37. கருணைக் கடலாகிய ராம தூதரே !போற்றி போற்றி போற்றி ;தங்களுடைய கருணைமிக்க குருவைப்போல எங்களுக்கு அருள் புரியுங்கள்.

இந்த கடைசி கண்ணியை  பலரும் மூன்று முறை  , கூப்பிய  கைகளுடன்   சொல்வார்கள்; சிலர் கைகளை தலைக்கு  மேலே உயர்த்திய வாறு சொல்லுவார்கள்.

xxxx

இன்னும் மூன்று கண்ணிகளும், ‘முடிவுரை’-யும்தான் உள .

துளசிதாஸ் சொல்லாத விஷயங்கள் : கடலைத்தாண்டும் பொழுது ஏற்பட்ட தடைகள் மற்றும் சீதையைச் சந்தித்த காட்சிகளை இதில் காணவில்லை.  துளசி ராமாயணத்தில் செப்பிவிட்டதால் இங்கு சொல்லாமல் விட்டார் போலும்.

xxxx

அசீரியாவில், ஹீப்ருமொழியில் அனுமான்

நான் லண்டன் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்த 2 வால்யூம் புஸ்தகத்தை எழுதியவர் சாந்திலால் நகர் ஆவார் ; இரண்டு தொகுதிகளும் சேர்த்து 600 பக்கங்கள் அவர் சில சுவையான செய்திகளை சொல்கிறார்;

ரிக்வேதத்தில் வ்ருஷா கபி என்ற குரங்கு வருகிறது; இது அனுமானாக இருக்கலாம் என்பது ஒரு கருத்து; இன்னும் ஒரு விஷயம் இந்திரனை கபீ ந்திர — குரங்கின் தலைவன் — என்பதாகும் ; இந்திராணிக்கும் வ்ருஷா கபிக்கும் ஏற்பட்ட சண்டை பற்றிய  கவிதைக்கு மேல் அதிக தகவல் வேதத்தில் இல்லை; ஆயினும் வ்ருஷா என்ற சொல்லுக்கே பலம், வீர்யம் என்று பொருள் வேதம் முழுதும் பல இடங்களில் வருகிறது. இது தவிர யஜுர் வேத சம்ஹிதைகளில் மயு என்ற குரங்கு பற்றியும் வருகிறது.

xxx

அசீரியாவில்ஹீப்ருமொழியில் அனுமான்

காடக சம்ஹிதையில் லுசா கபி என்ற குரங்கினைக் காணலாம். ; அசீரியாவில் உள்ள கல்வெட்டில் இந்தச் சொல் இருக்கிறது. மேலும் எபிரேய மொழியில் குரங்குக்கு கோப் என்று பெயர். அதுவும் கபி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்ததே. கபி , மற்கடம் என்ற சொற்க  ள்  வேத  இலக்கியம் முழுதும் பரவலாகக் காணப்படுகிறது இது பற்றி பர்ஜிட்டர் , கெல்ட்னர் போன்றோர் நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளனர் அவர்கள் ஆராய்ச்சி முடிவுகளை ஏற்காவிடிலும் குரங்குகள் பற்றி — வேதத்தின் தெய்வீக துதிகளில் வருவதால் அப்போதிலிருந்தே அவை வணங்கப்பட்டது தெரிகிறது .

xxx

எனது ஆராய்ச்சி- கபி என்பது எபிரேயத்தில் இருப்பது போல , தமிழ்ச் சொல்லான மந்தி ஆங்கிலத்தில் MONKEY ‘மங்கி’ ஆனதோ என்றும் ஆராய வேண்டும்!

கபி என்ற சம்ஸ்க்ருத சொல், தமிழில் கவி என்று மருவியுள்ளது  (ப=வ என்பது உலகில் பல மொழிகளில் இருக்கிறது)

“மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” என்று திரிகூடப்பக் கவிராயர் குற்றாலக்  குறவஞ்சியில் பாடுகிறார்.

கபி என்ற சொல்லில் முதல் ‘க்’ ஒலி குறைந்து ‘ஏப்’ APE என்ற சொல் ஐரோப்பா முழுதும் பரவியுள்ளது.

குரங்கு வெப்ப மண்டலப் பிராணி; குளிர் மிகுந்த ஐரோப்பாவில் கிடையாது. இந்துக்கள் குரங்கு, மயில் ஆகியவற்றை பாபிலோனியாவுக்குக் கொண்டு சென்று வித்தைகளைக் காட்டினார்கள்; அந்த நாட்டு மன்னர்கள் அவைகளைக் கண்டு மயங்கிப் போய்  விலைக்கும் வாங்கினார்கள் ; அங்கிருந்து அவை ஐரோப்பிய நாடுகளில் நுழைந்தன ; உலகின் மிகப்பழைய புஸ்தகமான ரிக்வேதத்தில்தான் முதலில் குரங்கினைக் காண்கிறோம்.

–subham—

Tags- ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 11, அனுமார் , நண்பர் அசீரியாவில், ஹீப்ருமொழியில், அனுமான், கவி, கபி , வ்ருஷா கபி, லுசா கபி

Ramayana Sculptures from Indonesia- Batch 7 (last) Post No.13,604

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,604

Date uploaded in London – 29 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

More Ramayana pictures from 100 year old German book (Year 1925).

They are from Java, Indonesian Island. This is the third batch of pictures of Ramayana Sculptures in

 Borobudur and other places.

 —subham—

YEAR 1925

Tags- Ramayana sculptures, 100 year old German book, Java, Indonesia. Part 7, last batch, book year 1925