அனுமனுக்கு வீணை வாசிக்கத் தெரியும் கும்பகோணத்தில் அற்புத சிற்பம்!
அனுமனை வீணையுடன் காட்டும் சிற்பம் ஒன்று கும்பகோணம் ராமசாமி கோவிலில் இருக்கிறது ; ராம நாமம் இசைக்கும் அனுமன் அதை ராகத்துடன் பாடி இருப்பதில் வியப்பில்லை. சிலர் நாரதருக்கும் அனுமனுக்கும் இசை பற்றி விவாதம் நடந்ததாகவும் அப்போது அனுமன் வீணை வாசித்தவுடன் பாறையே உருகிப்போயிற்று என்றும் சொல்கிறார்கள் இந்தக் கதை பிற்காலத்தில் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட 27 சர்க்கங்களைக் கொண்ட அத்புத ராமாயணத்தில் அனுமன்- நாரதன் பேரில் உள்ளது .
உண்மையில் அது அகத்தியருக்கும் ராவணனுக்கும் நடந்த வீணைப்போட்டி ; 700 ஆண்டுகளுக்கு முன்னர் உச்சிமேற் புலவர் கொள் , மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பார்ப்பான் நச்சினார்க்கினியர் எழுதியது .
இராவணன் அகத்தியர் வீணைப்போட்டி : ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை என்ற எனது 2014-ம் ஆண்டுக்க கட்டுரையில் இதே பிளாக்கில் உள்ளது.
இந்த சிற்பம் பற்றி வெளியான ஆங்கிலக் கட்டுரையில் அனுமனுக்கு இசையில் உள்ள புலமையை தியாகராஜரும் அவருக்கு முன்னர் புரந்தரதாசரும் பாடியிருப்பதை விளக்கியுள்ளார் கட்டுரை ஆசிரியர்; . தமிழில் முதல் முதலில் வீணை பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் நாரதர் வீணை என்ற வரிகளில் வருகிறது ; கும்ப கோணம் கோவில் சிற்பமும் சுமார் 500 ஆண்டு வரலாறு உடையதுதான் ! ஆக இது மேலும் ஆ ராய ப்படவேண்டிய விஷயம் .
xxxxx
அனுமன், சிவ பெருமானே ! மேலும் சில சான்றுகள் !
அனுமன் சிவனின் அவதாரம் என்று துளசிதாசர், அருணகிரிநாதர், ஏக நாதர் ஆகிய மூவரும் பாடியதை முன்னரே கண்டோம். அவர்கள் மட்டுமின்றி தியாக ராஜரும், ஆவார்களும் பாடியது டாக்டர் G.T . கோபால கிருஷ்ண நாயுடு எழுதிய நூலில் உள்ளது.
எந்த ரானி எந்த போனி எந்த கிருதியில் தியாகராஜர் சிவனே அனுமன் என்கிறார்.
ப. எந்த ரானி தன(கெ)ந்த போனி நீ
செந்த விடு3வ ஜால ஸ்ரீ ராம
அ. அந்த(கா)ரி நீ செந்த ஜேரி
ஹனுமந்துடை3 கொலுவ லேதா3 (எ)
ச1. ஸே1ஷுடு3 ஸி1வுனிகி பூ4ஷுடு3 லக்ஷ்மண
வேஷியை கொலுவ லேதா3 (எ)
ச2. ஸி1ஷ்டுடு3 மௌனி வரிஷ்டு2டு3 கொ3ப்ப
வஸிஷ்டு2டு3 ஹிதுடு3கா3 லேதா3 (எ)
ச3. நர வர நீகை ஸுர க3ணமுலு
வானருலை கொலுவக3 லேதா3 (எ)
ச4. ஆக3(மோ)க்தமகு3 நீ கு3ணமுலு ஸ்ரீ
த்யாக3ராஜு பாட3க3 லேதா3 (எ)
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
நமன் பகைவன் உனதண்மையடைந்து
அனுமனாகிச் சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
1. சேடன், சிவனுக்கு அணிகலன், இலக்குவனின்
வேடமணிந்து சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
2. அறிஞன், முனிவர்களில் சிறந்தோன், உயர்
வசிட்டன் நல்லதுரைப்போனாக இல்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
3. மனிதரில் உத்தமனே! உனக்காக வானோர்கள்
வானரராகிச் சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
4. ஆகமங்களுரைக்கும் உனது குணங்களை
தியாகராசன் பாடவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!— தியாகராஜர்
Xxxxx
நிற்க . அனுமனை சாலீஸாவிலிருந்து மேலும் சில ஸ்லோகங்களைக் காண்போம்.
ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||
புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||
சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர ||
ராமதூத அதுலித பலதாமா |
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 1
மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||
கஞ்சன வரண விராஜ ஸுவேஶா ।
கானந குண்ட³ல குஞ்சித கேஶா ॥ 4 ॥
ஹாத²வஜ்ர ஔ த்⁴வஜா விராஜை ।
கான்தே² மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை ॥ 5॥
ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥
வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥
ப்ரபு⁴ சரித்ர ஸுனிவே கோ ரஸியா ।
ராமலக²ன ஸீதா மன ப³ஸியா ॥ 8॥
ஸூக்ஷ்ம ரூபத⁴ரி ஸியஹி தி³கா²வா ।
விகட ரூபத⁴ரி லங்க ஜலாவா ॥ 9 ॥
பீ⁴ம ரூபத⁴ரி அஸுர ஸம்ஹாரே ।
ராமசன்த்³ர கே காஜ ஸம்வாரே ॥ 1௦ ॥
லாய ஸஞ்ஜீவன லக²ன ஜியாயே ।
ஶ்ரீ ரகு⁴வீர ஹரஷி உரலாயே ॥ 11 ॥
Xxxxx
12 முதல் 17 வரையுள்ள ஸ்லோகங்களைக் காண்போம்
ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹுத ப³டா³யீ (ஈ) ।
தும மம ப்ரிய ப⁴ரத ஸம பா⁴யீ ॥ 12 ॥
ஸஹஸ்ர வத³ன தும்ஹரோ யஶகா³வை ।
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட² லகா³வை ॥ 13 ॥
ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முனீஶா ।
நாரத³ ஶாரத³ ஸஹித அஹீஶா ॥ 14 ॥
யம குபே³ர தி³க³பால ஜஹாம் தே ।
கவி கோவித³ கஹி ஸகே கஹாம் தே ॥ 15 ॥
தும உபகார ஸுக்³ரீவஹி கீன்ஹா ।
ராம மிலாய ராஜபத³ தீ³ன்ஹா ॥ 16 ॥
தும்ஹரோ மன்த்ர விபீ⁴ஷண மானா ।
லங்கேஶ்வர ப⁴யே ஸப³ ஜக³ ஜானா ॥ 17 ॥
இந்த வரிகளில் அனுமானைப் புகழும் துளசிதாசர், அவன் சுக்ரீனுவனுக்கு அரசாட்சியை வாங்கித் தந்ததாகவும் அதை சுக்ரீவன் ஏற்றதையும் புகழ்கிறார். உலகிலேயே முதல் எக்ஸைல் கவர்ன்மென்ட் அமைந்தது இந்தியாவில்தான் . பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய மண்ணில் இருந்தவாறே விபீஷணனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. ராமாயணத்தில் காணும் பல புதுமைகளில் இதுவும் ஒன்று .
அதற்கு முன்னதாக, அனுமனை துளசிதாசர் பரதனுடன் ஒப்பிடுவதாகும் ; கம்ப ராமாயணத்தில் குகன் வாயின் வழியாகவும் பரதன் புகழப்படுகிறான் ; ஆயிரம் ராமர்களும் பரதனுக்கு ஈடாக மாட்டான் என்கிறான் கம்பன். அதை நினைவு கூறும் வகையில் இந்த பரதன் வரிகள் உ ள்ளன. துளசிதாசரையும் அதையே சொல்கிறார். ஏனெனில் ஆதிசேடனுக்கு ஆயிரம் தலைகள் . ஆதி சேடன் உன் புகழ் பாடுகிறான் என்றால் 1000 தலைகள் / 1000 பேர் உன் புகழ்பாடு கின்றனர் என்று பொருள்.
சனகர் தலைமையிலுள்ள நால் வரும், எண்திசைக் காவலரும் உண்னைப் புகழ்கின்ற்னர் என்கிறார்.
xxxxxx
பொருள்
ராமன் உன்னை பெரிதும் புகழ்ந்து பரதனைப் போல நீ உடனுறை என்றார்!
(12) ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன் பெருமையைப் புகழ்வதாய் உன்னைக் கட்டிஅணைத்து சொன்னார்!
குறள் 503-க்கு உரை எழுதியவர்கள் வழ வழா கொழ கொழா என்று உரை எழுதி இருக்கிறார்கள்.. முதலில் குறளைப் படியுங்கள். பின்னர் உரையைப் படியுங்கள். உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் நான் தரும் விளக்கத்தைப் படியுங்கள்.
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் – கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது – நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. (வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், ‘தெரியுங்கால்’ என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
இது பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்த்துவிட்டு கட்டுரை எழுதுகிறேன்.
இது பற்றி யாராவது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருந்தால் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
xxxxxx
ஹெல்த்கேர் ராஜா
19 Jul 2024, 07:51
to me
பெரியோர்கள் பிழையே செய்யமாட்டார்கள் .
நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடிப்பார்த்தாலும் தவறுகளைக் காண்பது அரிது.
இது தான் சரியான உரை என்று நம்புகிறேன் அய்யா.மிக்க நன்றி
xxxxx
ஆதி சங்கரர் எழுதிய விவேக சூடாமணியையும், ராம கிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மஞ்சரியையும் படித்த பின்னர் பெரியோர்களிடமும் குறை உண்டு என்ற கருத்துக்கு நான் வந்துவிட்டேன். ஆனால் அதை என்னைப் போன்ற சிறியவர்கள் சுட்டிக்காட்டக் கூடாது. அறிவிலும் ஒழுக்கத்திலும் உச்சாணிக் கொம்பிலுள்ள சந்யாசிகள் , சாணக்கியன் போன்ற அறிவாளிகள் சொல்லலாம்
இதோ பெரியோர் வாக்கு; இதோ 4 சம்பவங்கள்
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் பக்கம் 59:-
1.காலஞ் சென்ற கேசவ சந்திர சேனர் ஒரு நாள் தட்சிணேஸ்வரத்திலுள்ள ஆலயத்துக்கு வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் சொன்னார், ” சுவாமி! பண்டிதர்கள் சாஸ்திரங்கள் பலவற்றைப் படித்தபோதும் உண்மையான ஆத்ம தத்துவத்தைப் பற்றி ஏன் ஒன்றுமே தெரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் ? என்று கேட்டார்.
அதற்கு பரமஹம்சர் “பருந்தும் கழுகும் ஆகாயத்தில் வெகு உயரத்தில் பறக்கிறதே நீர் பார்க்கிறீர் .ஆயினும் அ வைகள் எந்தக் குழியில் அழுகிய பிணங்கள் கிடக்கின்றன என்று கண்களை கீழ்நோக்கிய வண்ணமே வைத்திருக்கின்றன.அது போல பண்டிதர்கள் என்பவர்கள் சாஸ்திரங்களைக் கற்ரகற்றவர்களாக இருப்பினும் காமினி -காஞ்சனம் (பெண் -பொன் ) போன்ற உலகப் பற்றுகளால் பந்தப்பட்ட மனம் உடையவர்களாக ஆகிறார்கள். ஆகையால் அவர்கள் மெய்ஞானத்தைப் பெறுவதில்லை.” என்று பதில் சொன்னார்.
xxxx
அனுமனுக்கும் அஹம்காரம் இருந்தது !
2.உருவமுள்ளவாயினும் உருவம் இல்லாதவனாயும் ஈசுவரன் ஹநுமானுக்குத் தரிசனம் தந்தருளினான் .என்றாலும் ஹனுமான் தான் ஈசுவரதாசன் என்ற அஹங்காரத்தைக் கொண்டவனாகவே இருந்தான் .நாரதர், ஜனகர், ஸநந்தனர் , ஸனத்குமாரர் ஆகியவர்களுடைய விஷயமும் இப்படித்தான். அவர்கள் பிரம்ம ஞானத்தை அடைந்தவர்கள் என்றாலும் , அவர்கள் ஆற்றோட்டத்தின் சப்தத்தைப்போல் ஈசுவரனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு சென்றனர். இதனால் அவர்களிடத்தும் சிறிது அஹங்காரம் இருந்தது !
XXXX
சங்கரரும் சண்டாளனும் , பக்கம் 440
3. ஒரு பறையன், மாடு அடிக்கும் இடத்திலிருந்து வருகையில் , தன கழுத்தில் வைத்திருந்த காவடியின் இரு பக்கத்திலும் கூடைகளைத் தொங்கவிட்டு அதில் மாமிசத்தை வைத்திருந்தான்.அப்போது சங்கரர், ஆற்றில் ஸ்னானம் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். தற்செயலாய், அவன் தவறி, மஹான் மீது பட்டுவிட்டான் .
அடே , சண்டாளா ! நீ என் மீது பட்டுவிட்டாயே ! என்றார் . அதற்கு அவன் சொன்னான்,
சுவாமி! நீங்கள் என் மீது படவுமில்லை. நானும் உங்கள் மீது படவுமில்லை.தங்களுடைய ஆத்மாவானது சரீரமா? புத்தியா? மனமா? இவைகளில் எது? தாங்கள் யார் ? எனக்குச் சொல்லுங்கள் . இந்த உலகமானது ஸத்வ , ரஜஸ், தமோ முக் குணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அவை ஒன்றோடும் ஆத்மா சம்பந்தப்பட்டிருப்பதில்லை என்று தங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்றான். சங்கரர் வாய் பேசாது நின்று விழிக்கலானார்.
XXXX
4.ஜனகரும் சந்யாசினியும் , பக்கம் 338
ஒரு சமயம், சந்யாசினி ஒருத்தி மாமன்னன் ஜனகருடைய அரசவைக்கு வந்தாள் ; அவளுடைய முகத்தைக் கண்ணெடுத்துப் பார்க்காமலேயே , ஜனகர் அவளை வணங்கினார். இதைக் கண்டு சந்யாசினி,
ஓய், ஜனகரே ! என்ன ஆச்சர்யம் ! இன்னுமா நீர் பெண்களைக் கண்டு அஞ்சுகிறீர் ? என்றாள் .
பூரண ஞானம் அடைந்தவன் குழந்தையின் சுபாவத்தைப் பெறுகிறான். அவனுக்கு ஆண் , பெண் என்ற வித்தியாசம் தோன்றுவதில்லை ஆயினும் உலக நடைக்காக ஜனகர் அவ்வாறு செய்தார் .
இவை ஆன்மீக உதாரணங்கள்; ஆனால் தமிழ் வேதம் தந்த வள்ளுவனோ அரசியல் பகுதியில் 503 ஆவது குறளை வைத்தான் ; இருந்தபோதிலும் பெரியோர் எல்லாம் பெரியாரும் அல்லர்; சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் என்ற தமிழ் முதுமொழியையும் நினைவு கூறுவோம்.
xxx
Shuddhananda Bharati
Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance.
Or
G U Pope
Though deeply learned, unflecked by fault, ’tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.—503
Or
Even among deep scholars of spotless hearts, it is difficult to find one perfectly free from ignorance.
Or
Even among men of rare learning and virtue, on close scrutiny,
Some patches of ignorance could be spotted.
Great statesman says,
Even those who have successfully acquired rare learning and are known to be free from defects , may betray some incompetence under close examination.
Rajaji
Dr S M Diaz, I G of Police, says
Even Homer nods sometimes is a well known statement. Another statement attributed to Aristotle is There is a foolish corner in the brain of a sage.
ஆக ஆங்கிலத்தில் கருத்து சொன்ன அத்தனை பேரும் , பெரியோர்களிடத்தும் குறைகள் உண்டு என்று சொல்கிறார்கள். நமது நாட்டில் புத்தர், ஆதிசங்கரர் மீது கூட சுவாமி விவேகானந்தர் குறை சொன்னார். (Please read Swami Vivekananda’s Talks); புத்தருடைய விசால மனது ஆதி சங்கரருக்கு இல்லை என்றார் ; புத்தர் ஸம்ஸ்க்ருதத்தைப் புறக்கணித்ததால் அந்த மதம் நலிவடைந்தது என்றார் சுவாமி விவேகானந்தர்.
பெண்களை கன்னிமார்களாகச் சேர்க்கவே மாட்டேன் என்று அடம்பிடித்த புத்தரை, பிரதம சீடன் ஆனந்தன் கெஞ்சிக் கதறி பெண்களையும் புத்த மதத்தில் சேர்க்க வைத்தான். புத்தரே வருத்தப்பட்டு என் மதம் 500 ஆண்டுகளுக்கு மேல் இராது என்றார் ; அதுவும் உண்மையானது; தோன்றிய நாட்டில் புத்த மதம் அழிந்துவிட்டது (Please read Dr Radhakrishnan’s beautiful Introduction to Dhammapada) ; காந்திஜி படம் எல்லா ஆபீஸ்களிலும் அலங்ககரிப்பது போல எல்லா இடங்களிலும் புத்தர் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.; ஒவ்வொரு நிமிடத்திலும் கோடிக்கணக்கான விலங்குகளைக் கொன்று மக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் . அவை எல்லாம் புத்தரைப் பார்த்து சிரி, சிரி — என்று சிரித்துக்கொண்டு இருக்கின்றன (வள்ளுவனுக்கும் இதே கதிதான்)
xxxxx
आरूढशक्तेरहमो विनाशः कर्तुन्न शक्य सहसापि पण्डितैः । ये निर्विकल्पाख्यसमाधिनिश्चलाः तानन्तरानन्तभवा हि वासनाः ॥ ३४२ ॥
ārūḍhaśakterahamo vināśaḥ kartunna śakya sahasāpi paṇḍitaiḥ | ye nirvikalpākhyasamādhiniścalāḥ tānantarānantabhavā hi vāsanāḥ || 342 ||
342. Even wise men cannot suddenly destroy egoism after it has once become strong, barring those who are perfectly calm through the Nirvikalpa Samadhi. Desires are verily the effect of innumerable births.
விவேக சூடாமணி 342 ஆவது ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் சொல்கிறார்:
அறிவாளிகளும் கூட திடீரென்று அஹம்காரத்தை எளிதில் அகற்ற முடியாது. பல பிறப்புகளில் வந்தது ஆசை; நிர்விகல்ப சமாதி எய்தியவர்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு (நிர்விகல்ப சமாதி என்பது, உயர்ந்த வகை சமாதி; இது வேறுபாடுகள் அனைத்தையும் கடந்த நிலை)
யான் எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்- குறள் 346
English Couplet 346:
Who kills conceit that utters ‘I’ and ‘mine’, Shall enter realms above the powers divine.
XXXX
கி.வா. ஜ . திருக்குறள் பதிப்பு காட்டும் ஒப்புமை
கம்ப ராமாயணம் வாலி வதைப் படலம்
3978. ‘வில் தாங்கு வெற்பு அன்ன
விலங்கு எழில் தோள! ”மெய்யம்மை
உற்றார் சிலர்; அல்லவரே
பலர்” என்பது உண்மை.
பெற்றாருழைப் பெற்ற பயன்
பெறும் பெற்றி அல்லால்,
அற்றார் நவை என்றலுக்கு
ஆகுநர், ஆர்கொல்?’ என்றான்.
வில் தாங்கு வெற்பு அன்ன- வில்லை ஏந்திய மலையை ஒத்து;
விலங்கு எழில்தோள -விளங்குகின்ற ஆழகமைந்த தோள்களை
உடைய இலக்குவனே! மெய்ம்மை உற்றார் சிலர் -(இவ்வுலகில்) தவறாத
நல்லொழுப்பம் பொருந்தியவர் ஒரு சிலரே ஆவர்;அல்லவரே பலர் -அந்
நல்லொழுக்கம் கடைப் பிடிக்காதவரே பலர்;என்பது உண்மை –
என்பதுதான் உண்மையாகும். பெற்றார் உழை -நம்மை நண்பராகப்
பெற்றவரிடத்தில்;பெற்ற பயன் -பெறுதற்கேற்ற அளவில் காணப்படும் நல்ல
பலனை;பெறும் பெற்றி அல்லால் -பெற்றுக் கொள்ளும் தன்மையல்லாமல்;
நவை அற்றார் என்றலுக்கு -குற்றமற்றவர் என்று சொல்வதற்கு;ஆகுநர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xx
14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 1
ச. நாகராஜன்
இன்று உதிக்கின்ற நாள் நல்ல நாளாக நமக்கு அமைய வேண்டும் என்று விரும்பாதோர் இல்லை. அது நல்ல நாள் தானா என்று அறிய விரும்புவோர் பலரும் ஜோதிடத்தை அணுகுவதில் வியப்பே இல்லை.
ஆனால் அதே சமயம் ஜோதிடத்தை நம்பாதே என்று சொல்வோரும் உண்டு.
ஜோதிடத்தை உலக அரங்கில் புகழோங்க வைத்து அதை அறிவியல் ரீதியாக உயரத்தில் ஏற்றி பிரமிக்க வைத்தவர் பங்களூர் வெங்கட ராமன் ஆவார். பி.வி.ராமன் என்ற பெயரை ஜோதிட ஆர்வம் கொண்டோரில் அறியாதார் யாரும் இல்லை.
பிறப்பும் இளமையும்
பி.வி.ராமன் பங்களூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1912-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று பிறந்தார். கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தவர் பங்களூரில் பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் இயல்பான ஆர்வம் இவருக்கு ஜோதிடத்தின் மேலேயே இருந்தது.
இதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தவர் இவரது பாட்டனாரான திரு சூர்யநாராயண ராவ் என்னும் பிரபல ஜோதிடரே.
சூர்யநாராயண ராவ்
1885-ம் ஆண்டு ஒரு நாள் தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் கர்நாடகத்தில் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் குப்பி ரயில் நிலையத்தில் இறங்கினார்.
அப்போது தான் ஷிமோகாவுக்கு எஸ்.எம். ரயில்வே, ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே அவர் மாட்டு வண்டியில் தான் ஷிமோகாவுக்குச் செல்ல வேண்டும். 150 மைல் தூரத்தில் உள்ள ஷிமோகாவை அடைய நாள் ஒன்றுக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்.
மாட்டு வண்டியில் ஏறிய இளைஞருக்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஏழை வைதிகர் தென்பட்டார். அவரிடம் “நீங்கள் எங்கே போக வேண்டும்” என்று கேட்ட இளைஞருக்கு, “ ஷிமோகாவுக்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்ஸைப் பார்க்கப் போகிறேன். அவரிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன். என் பெயர் சுப்பராய சாஸ்திரி” என்ற பதில் வந்தது.
அவரை, ”என்னுடன் வண்டியில் வாருங்கள்” என்று அழைத்தார் அந்த இளைஞர். அடுத்த எட்டு நாட்களில் அவருடனான உரையாடல் அந்த இளைஞரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.
சகல வித கலைகளையும் நுட்பங்களையும் கூறும் இந்து மத நூல்களை அவர் அப்படியே ஒப்புவித்து அர்த்தமும் சொன்னார். ஹிந்து மத நூல்கள் அனைத்தும் தற்காலத்திய அறிவியலுக்கு ஒத்து வராதவை என்ற எண்ணம் திடமாக இருந்த அந்த இளைஞரின் மனம் மாறியது.
அந்த இளைஞர் தான் பி.வி.ராமனின் பாட்டனாரான சூர்ய நாராயண ராவ். (தோற்றம் 12-2-1856 மறைவு 13-3-1937). வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் ஜோதிடக் கலையை நன்கு கற்று பிரபலமான ஜோதிடராக ஆனார். முதல் உலகப் போர் வருவதை முன் கூட்டியே சொன்னவர் அவர். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
தன் பேரனான பிவி.ராமனுக்கு ஜோதிடத்தின் நுட்பத்தை விவரித்து அவரைப் பெரும் ஜோதிடராக ஆக்கியவர் இவரே.
அஸ்ட்ராலஜிகல் மாகஸைன்
1895-ல் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஜோதிட சம்பந்தமான கட்டுரைகளை வெளியிட்டு உலகின் பார்வையை ஜோதிடத்தின் பக்கம் திருப்பினார் சூர்யநாராயணராவ். பல்வேறு ராஜாக்களும் மந்திரிகளும் வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டு பிரமித்தனர். இருபது வருடங்களுக்கும் மேலாக நடந்த பத்திரிகை அவரது உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது.
மிகுந்த கஷ்டப்பட்டு தன் பாட்டனார் ஆரம்பித்த பத்திரிகையை மீண்டும் 1936-ம் வருடம் ஆரம்பித்த பி.வி.ராமன் 1998 முடிய அதன் ஆசிரியராக தான் மறையும் வரை 62 ஆண்டுகள் இருந்தார். அதில் தான் அவரது கணிப்புகள் இடம் பெற்று வந்தன.
அதில் அவர் குறிப்பிட்ட ஏராளமான கணிப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கு கீழே பார்க்கலாம்.
பாகிஸ்தான் பிரிவினை
1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினை ஏற்படும் என்பதை அவர் முன்னதாகவே உரைத்தார். ஆந்திரபிரதேசம், தெலங்கானா பிரிவினை பற்றியும் அவர் முன்னதாகவே எடுத்துரைத்தார்.
காந்திஜி மறைவு
மகாத்மா காந்திஜியின் மறைவு குறித்து 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே அவர் சூசகமாகக் குறிப்பிட்டு விட்டார். “மாபெரும் இந்தியத் தலைவர் சனி கிரகம் கடகத்தில் நுழையும் போது கொல்லப்படுவார்” என்ற அவரது வரிகள் 1948, ஜனவரி 30-ம் நாள் காந்தியடிகள் சுடப்பட்ட போது மெய்யானது.
ஹிட்லரின் முடிவு
இரண்டாம் உலகப் போரால் நாளுக்கு நாள் உலகை ஹிட்லர் பயமுறுத்தி வந்த நேரம். உலக மக்கள் ஹிட்லருக்கு ஒரு முடிவு வராதா என்று ஏங்கி இருந்த நேரத்தில் 1943-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் எழுதினார் இப்படி: 11-10-1944 முதல் ஒன்பது மாதங்கள் சந்திரனின் தசாபுக்தி காலத்தில் ஹிட்லரின் முடிவு ஏற்படும். ஹிட்லரின் முடிவு கொடூரமாக அமையும்”.
அவர் கூறியபடியே ஹிட்லர் 30-4-1945 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
ஹிட்லரைப் பற்றி அவர் எழுதிய கணிப்பைக் கூறும் புத்தகங்கள், கட்டுரைகள் ஜெர்மனியில் நாஜிக்களால் எரிக்கப்பட்டன. அவை அங்கு ஹிட்லரால் தடை செய்யப்பட்டன.
Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati; Part- 4
Silappadikaram is one of the Five Tamil Kavyas and the most popular one. It gives the story of Hero Kovalan and Heroine Kannaki. Kovalan was falsely accused by a goldsmith in the Pandya Country (capital- Madurai city) and was executed immediately without any enquiry; Kannaki with her divine power burnt Madurai city like Hanuman burnt Lanka. Later Pandya king executed 1000 goldsmiths to avenge them. The title is in Tamil and Sanskrit with two words Silambu/Anklet +Adikaaram/Chapter. In short, it means the story of anklet. Pandyan goldsmith said that Kovalan stole the anklet of Pandya queen and arranged his immediate execution. The incident happened around 132 CE, but the Story was written by poet Ilango around fifth century CE, at the same time of Tamil Veda Tirukkural and Tolkaappiyam. The word Adikaaram is found in all the three works.
Coming back to the topic Himalayas, Ilango described the mountain from the very beginning to the end, at least 18 times.
Here below are the places where we come across the beautiful holy mountain:
சிலப்பதிகாரத்தில் இமயம்
புகார்க் காண்டம் 1. மங்கல வாழ்த்துப் பாடல் Pukar Canto Introduction
ஆங்கு, பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய 15
Potiyil is the main hill in Pandya country, the residence of great Rishi Agastya.Like the two great mountains Potikai and Himalayas, people of the city Pukar lived there for generations. Stands immutable as the great ones who live there.
xxx
பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும் நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை …….
(Geographical references to Himalayas and the Holy Ganga River followed by Ujjain, Vindhyaranya, Venkata/Tirupati Hills) உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும் வேங்கட மலையும் தாங்கா விளையுள் 30
காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச் சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
The whole story of the epic is linked by a Brahmin known as Maatalan. He gave us rare information of a Tsunami which devoured the South Tamil Nadu around Kanyakumari. After the Tsunami and loss of a vast area, Pandya king moved his capital to modern Madurai. The Tsunami attack happened around 2nd century BCE. Brahmin continued to say Glory the Great Pandya who went beyond the northern Ganga and ruled up to the Himalaya! தென்றிசை யாண்ட தென்னவன் வாழி திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி
Here Pandya king is hailed as the Lord of Potiyil Hills, Korkai, Kumari ports and ruler of Golden Peaked Himalayas.Golden Peak= Kaanchana Srnga in Kalidas works; now corrupted to Kanchanjunga!https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0111_01.html
Xxxxx
காட்சிக் காதை ,சிலப்பதிகாரம்The Decision to March North
Scholars suggested that the Chera king should go to the Himalaya where his predecessors inscribed the Bow Emblem. (This was happening at the time of Chera King Senguttuvan. His predecessor’s name itself IMAYAVARAMBAN Neduncheralaathan (one who has the Himalayas as his country’s border).
Xxxx
கால்கோட் காதை Bringing the Stone from Holy Himalayas
அறைபறை யெழுந்தபின் அரிமா னேந்திய
முறைமுதற் கட்டில் இறைமக னேற
ஆசான் பெருங்கணி அருந்திற லமைச்சர்
தானைத் தலைவர் தம்மொடு குழீஇ
மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி
முன்னிய திசையின் முறைமொழி கேட்ப
வியம்படு தானை விறலோர்க் கெல்லாம்
உயந்த்தோங்கு வெண்குடை உரவோன் கூறும்
இமையத் தாபதர் எமக்கீங் குணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
Here is a reference to Himalayan saints visiting Chera country (present Kerala).
The king makes a declaration before his Himalayan journey : “If the remarks of the kings of the north, who lead insecure lives, communicated to me by saints residing in the Himalayas (Tapasvi is used the word by poet Ilango), when they came here are to be passed over in silence. That will cause humiliation to kings such as ourselves. So , if my unfailing sword does not successfully help me to make northern kings carry on their crowned heads the stone on which the deity’s image is to be carved, and if I fail to strike terror into the hearts of my enemies who are ardently war like and who wear glittering anklets, may I become to wielder of a striking terror in the subjects of my own fertile regions.
Villavan Kothai was minister and commander in chief of Chera King. After the task of getting a stone for Goddess Pattini from the Golden Crested Himalaya, started to carve a Goddes of Chastity (Pattini= Kannaki have been made a deity)
Golden Crested= Kaanchana Srngam= Now corrupted to Kanchenjunga
xxxx
நீர்ப்படைக் காதை Bathing it in the Holy Ganges
வடபே ரிமயத்து வான்றரு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேன் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச்ன
After the stone slab brought from the renowned Himalayas in the north had been carved into the figure of the goddess Pattini, it was placed on the resplendent crowns of Kanaka and Vijaya, the Aryan kings defeated by King Senguutuvan.
xxxx
வாழ்த்துக்காதை Blessing
உரைப் பாட்டு மடை”
1
குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச்
சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி
வஞ்சியுள் வந்து இருந்தகாலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்,
ஒன்று மொழி நகையினராய்,
‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும்’ என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து
அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக்
குணில் கொண்டு துரந்ததுபோல்,
‘இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’
என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி,
அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி,
பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து,
நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
அம்மானை
கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை:
கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.
Here Ilango uses the expression of Kalidasa Devataatmaa Himalaya ‘இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’. It is in Sangam Tamil Books as well. Himalaya is considered God by the Hindus for many reasons. Goddess Parvati (Daughter of Parvata) is from the Himalayas; moreover the abode of Lord Siva- Kailash- is in the Himalayas. All other points are repeats from the early parts of the epic.
The points made here are:
Cheras ruled from Kanyakumari to Himalayas. Angry Chera king defeated northern chieftains who mocked at the Tamil Kings. Chera king forced them to carry the holy stones on their head and bathed it in the River Ganga.
Tiger emblem of the Chozas was also inscribed on the Himalayas.
The epic gives credit to all the three kings of Tamil Nadu carving their emblems of Chera, Choza, Pandyas (fish emblem) on the Himalayan rocks.
Used books and sources: The Cilappatikaram by Prof. V R Ramachandra Dikshitar, Traslation in English; Project Madurai, TVU
To be continued………………………….
—subham—
Tags – Tamil Epic, Silappadikaram, Cilappatikaram, Anklet, Kannaki, Kovalan, Goldsmith, Himalaya, Burning Madurai, Executing 1000 goldsmiths, River Ganga, Pattini, Goddess of Chastity, Kanaka, Vijaya, carving emblems, Northern mountain, Kanchana srngam, Kanchenjunga, Golden crested, From Rig Veda to Tamil Poet Bharati; Part- 4
முதலில் கம்பன் சொல்லும் சுவையான விஷயத்தைக் காண்போம்
அனுமாருக்கு இரண்டு இறக்கை! கம்பன் புதுத் தகவல்!
குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சதாம் பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாமென்று சிறு வயதில் பாடக் கேட்டிருப்போம்.
கம்பன் சொல்கிறான் அனுமனுக்கு இரண்டு இறக்கைகள் என்று; அதை வைத்துதான் அவன் பறந்தானாம்.
அதுவும் அனுமன் வாயிலாகவே அதைச் சொல்லுகிறான். படிக்கச் சுவையாக இருக்கிறது.
இதோ அந்தப் பாடல்
முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர்
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும்
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு பாலும்
கற்றை வார் சிறைகள் ஆகக் கலுழனின் கடப்பல் காண்டீர்
பொருள்:-
கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் முழுகச் செய்து அழிக்கும் பொருட்டு கடல் பொங்கி வந்தாலும் (சுனாமி ஏற்பட்டாலும்), இந்த உலக உருண்டையே உடைந்து போய் உயர்ந்து வானத்தில் சென்றாலும், சற்றும் கலங்காமல் கருடன் (கலுழன்) போல இக்கடலைக் கடந்து செல்வேன். எப்படியெனில் எனக்கு இரண்டு இறக்கைகள் முளைத்துள்ளன. ஒரு இறக்கை நீங்கள் எல்லோரும் என் மீது வைத்துள்ள கருணை; மற்றொரு இறக்கை இராமபிரான் போட்ட கட்டளை! நான் கடலைக் கடப்பதைக் காணத்தான் போகிறீர்கள்!
என்ன அருமையான கற்பனை. கருணை/அன்பு என்ற ஒன்றும் தலைவனின் கட்டளை என்ற ஒன்றும் அனுமனை கடலையே கடக்க வைத்துவிட்டது. இவைதான் இரண்டு இறக்கைகள் (சிறைகள்)..
இந்தப் பாடலில் உள்ள சில விஞ்ஞானச் செய்திகளையும் அலசி ஆராய்வோம். வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் எல்லாம் ஏதோ பூமி உருண்டை என்பதை அவந்தான் கண்டு பிடித்தான் என்று எழுதியிருப்பார்கள். ஆனால் நாமோ பூமியைக் குறிப்பிடத் தொடங்கிய நாளிலிருந்தே அண்டம் (முட்டை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லையே பயன்படுத்துவோம். பூமி முட்டை வடிவமானது என்பதோடு கடலால் சூழப்பட்டது என்பதையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லுவோம்.
அது மட்டுமல்ல; சுனாமி போன்ற பெரிய தாக்குதலில்– இயற்கைச் சீற்றத்தில் உலகமே முழுகி பெரும் பிரளயம் வரும் என்பதும் நமக்குத் தெரியும்.. அண்ட சராசரங்கள் என்ற சம்ஸ்கிருதச் சொற்றொடர் மூலம், இந்தப் பிரபஞ்சமே வட்டவடிவமனது என்பதையும் நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டோம்.
xxxx
ஹனுமான் சாலீஸாவின் மேலும் நான்கு பாடல்களை எடுத்துக்கொள்வோம்-
8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா
ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா
விகட ரூப தரி லங்க ஜராவா
10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசந்த்ர கே காஜ் ஸவாரே
11. லாய ஸஜீவன் லஷன ஜியாயேஸ்ரீ
ரகுவீர ஹரஷி உர லாயே
இந்த நான்கு ஸ்லோகங்களின் பொருள்
8.ராம பிரானுடைய கல்யாண குணங்களைக் கேட்டு மகிழ்கின்றீர்கள் ராமர், சீதை, லெட்சுமணன் ஆகியோர் இருதயத்தில்/ உள்ளத்தில் குடிகொண்டுள்ளீர்கள். தாங்களும் அவர்களை உங்கள் உள்ளத்தில் வைத்திருக்கிறீர்கள் .
9.சீதையின் முன்னர் தோன்றியபோது சின்ன வடிவத்துடனும் இலங்கையத் தீக்கிரையாக்கியபோது பெரிய வடிவத்துடனும் தோன்றினீர்கள்.
10.அரக்கர்களை அழித்தபோது கோர உருவம் எடுத்து அவர்களின் கதையை முடித்தீர்கள் இவ்வாறு செய்து ராமனின் அவதார பனி நிறைவேற உதவினீர்கள்.
ராமனின் நாமம் ஒலிக்கும் இடம் எல்லாம் அனுமன் வந்து மறைவாக நின்று கொண்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறார் என்று , எல்லோரும் சொல்லும் பிரபல ஸ்லோகமும் சொல்லும்:–
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –33
மநு பற்றிய ரகசியங்கள்
மநு என்பவர் கடவுள் ; இறைவன் என்பவர் மநு; எப்படி?
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (வி.ச.) விஷ்ணுவின் பெயர்களில் மநு என்ற நாமமும் வருகிறது!
மநு ஸ்ம்ருதியில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன ; அவைகளில் சூத்திரர் களுக்கு எதிரான ஸ்லோகங்கள் 40 உள்ளன. அவைகளை வெள்ளைக்காரர்கள் அதில் இடைச் செருகலாக நுழைத்தனர். இந்தியாவைப் பிரித்தாள ,இந்து மதத்தை ஒழித்துக்கட்ட, இது கடைசி வரை உதவும் என்று அவர்கள் நம்பினார்கள் .
அவர்கள் இதை புதிதாகப் புஸ்தகத்தில் சேர்த்ததற்கு என்ன ஆதாரம்?
இந்தியாவிலுள்ள எல்லா சம்ஸ்க்ருத நூல்களிலும் இடைச் செருகல் இருப்பதாகச் சொல்லி ஒவ்வொன்றிலும் ஒரு பிற்சேர்க்கை சேர்த்தவர்கள் மநு ஸ்ம்ருதி மட்டும் அப்படியே கிடைத்திருப்பதாகச் சொல்லி , வேண்டாத ஸ்லோ கங்களையும் சேர்த்துவெளியிட்டுள்ளனர் ; ரிக் வேதத்தில் கூட கில — பிற்சேர்க்கை– இருப்பதாகக் கூறும் மாக்ஸ்முல்லர் கும்பல், மநு ஸ்ம்ருதி மட்டும் கலப்படம் இல்லாத அசல் அக்மார்க் முத்திரை ணெய் என்று அப்படியே கொடுத்துள்ளது; உலகிலேயே வெள்ளைக்காரன்இடைச் செருகல் இல்லாது கொடுத்த ஒரே நூல் மனு நீதி ; வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் என்பதை உலகெங்கிலும் உள்ள மியூசியங்கள் பறை சாற்றுகின்றன ; அவன் கொள்ளைக்காரன் மட்டுமல்ல ; கள்ளன் ! பெரிய கள்ளன் ! இடைச் செருகல்களை நீக்கிவிட்டால் உலகின் முதல் சட்ட புஸ்தகமான மநு ஸ்ம்ருதி புடமிட்ட பொன் போலும் உயரும் (மநு ஸ்ம்ருதி பற்றிய எனது 60 ஆராய்ச்சிக்கட்டுரைகளில் மேல் விவரம் உள்ளது.)சில கொள்கைகள் காலத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கலாம். தொல்காப்பியர் தமிழ்ப் பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்கிறார்; பிராமணர்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று மநு சொன்னார் ; கணவன் என்வன் கடவுள் என்று சங்கத் தமிழ் நூல்களும் மனு ஸ்ம்ருதியும் சொல்லின; பெண்கள் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள்; கணவன், கடவுளுக்கும் மேலானவன்; அவனைக் காலையில் தினமும் கும்பிடு என்று சொன்ன திருவள்ளுவனைப் பார்த்து தமிழ் மாணவிகள் சிரி சிரி – என்று சிரிக்கிறார்கள் ; மாமிசம் சாப்பிடாமல் இருந்தால் உன்னை எல்லா உயிர்களும் கைக்கூப்பித் தொழும் என்றான் வள்ளுவன்; முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்; வள்ளுவன் நேரில் வந்தால் கட்டாயம் கல்லடி, சொல்லடி இரண்டும் கிடைக்கும்
xxxx
மநுவின் காலம்
எல்லா நூல்களிலும் ஏன் காலத்துக்கு ஒவ்வாத செய்திகள் உள்ளன? ஏனெனில் அவை மிகவும் பழைய நூல்கள் மேலும் அவை செயலுக்கு வ த பகுதிகள் மிகவும் குறுகிய பரப்பு ; மநு கூட விந்திய மலையோடு முடிவடையும் ஆர்யாவர்த்துக்கு (எழுத்தறிவு உடைய பகுதிகள் ஆர்யாவர்த்தம்) மட்டுமே செல்லும் என்றும் சொல்லுகிறார். அவரது காலம் வேதகாலத்தை ஒ ட்டியது
Philologists Jones and Karl Wilhelm Friedrich Schlegel, in the 18th century, dated Manu smriti to around 1250 BCE and 1000 BCE respectively, இரண்டு மேல் நாட்டு மொழியியல் அறிஞர்கள் மநுவின் காலம் கிமு.1250, அதாவது இற்றைக்கு 3275 ஆண்டுகளுக்கு முந்தியது என்று சொல்லுகிறார்கள்; மநு கொடுக்கும் ஒரு தண்டனை சரஸ்வதி நதியை எதிர்த்து நடப்பதாகும்; சரஸ்வதி நதியோ மஹாபாரத காலத்திலே வற்றிவிட்டது ; அப்படியானால் அவர் வேத காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பது தெளிவு.
யாரேனும் ஒருவன் மனு நூலை முழுதும் படித்தால் இது விளங்கும்; ஹமுராபிக்கும் முன்னர், முதல் சட்டப் புஸ்தகத்தை எழுதியவர் அவர் என்பதால் லண்டனிலுள்ள , டயானா கல்யாணம் நடந்த, உலகப் புகழ் பெற்ற செயின்ட் பால் கதீட்ரலில் அந்த நூலின் பெயரை கையில் ஏ ந்திய வில்லியம் ஜோன்ஸ் சிலையை வைத்துள்ளார்கள் (நான் சர்ச்சின் அனுமதி பெற்று உள்ளே சென்று புகைப்படம் எடுத்து இதே பிளாக்கில் வெளியிட்டுள்ளேன் )
xxxxx
மநு மர்மம் நீடிக்கிறது
ரிக்வேதம், பல மனுக்களின் பெயர்களை சொல்கிறது ; ஆனால் இந்துக்களோ ஒரு மநுவுக்கும் இன்னொரு மநுவுக்கும் இடையே பிரம்மாண்டமான (மன்வந்தரம்) கால இடைவெளியைச் சொல்கிறது இந்துக்கள் தினசரி பூஜை சங்கல்பத்தில் அதை நம்பி இப்போது வைவஸ் வத மன்வந்தரத்தில் வாழ்வதாகவும் இன்னும் 7 பேர் வரப்போவதாகவும் சொல்கிறார்கள்;ரிக் வேதப் புதிரை எவரும் கண்டுகொள்ளவில்லை ; நான் எனது கருத்தினை வெளியிட்டிருந்தேன் ; அந்தக்கால ரிஷிகள் அப்படிப் பெயர் வைத்துக்கொண்டு இருக்கலாம் என்று ; இன்று நான் எனது பேரக்குழந்தைகளுக்கு செங்குட்டுவன், ராஜராஜா ராஜன் , மஹேந்திர பல்லவன் என்று பெயர் வைக்கலாம் அல்லவா ? அது போல 14 மனுக்களின் பெயர்களில் சிலவற்றை ரிக்வேத ரிஷிகள் வைத்துக்கொண்டனர் போலும்!
மானவ என்பது குடும்பப்பெயர் ; இதோ ரிக்வேதத்தில் உள்ள மனுக்கள்.
இப்போது நாம் ஏழாவது மனுவின் ஆட்சிக்காலத்தில் உள்ளோம் என்று இந்துக்கள் நடத்தும் பூஜா சங்கல் பத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .
முதல் ஆறு பேர் :ஸ்வயம்புவ ,ஸ்வரோசிச, உத்தம, தாமஸ , ரைவத சக்ஷுச ; இப்போது ஏழாவது மனு – வைவஸ்வத
இந்தப் பின்னனியோடு வி.ச.வுக்கு வருவோம்.
xxxx
ஸ்வயம்புவ — நாமத்தின் எண் 37–
ஆதி சங்கரர் சொல்கிறார் ;
தாமாகவே தோன்றியவர் அவரை யாரும் தோற்றுவிக்கவில்லை
அவர் எல்லாவற்றுக்கும் முன்னர் இருந்தார் -மனு 1-6
योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।
सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥ 1-७ ॥
yo’sāvatīndriyagrāhyaḥ sūkṣmo’vyaktaḥ sanātanaḥ |
sarvabhūtamayo’cintyaḥ sa eva svayamudbabhau ||1- 7 ||
1-6. Then the divine Self-existent (Svayambhu, himself) indiscernible, (but) making (all) this, the great elements and the rest, discernible, appeared with irresistible (creative) power, dispelling the darkness.
1-7. He who can be perceived by the internal organ (alone), who is subtile, indiscernible, and eternal, who contains all created beings and is inconceivable, shone forth of his own (will).
மனத்தினால் எண்ணுபவன் மனு/ மனிதன் – பிருஹத் ஆரண்யக உபநிஷத் 3-7-23
ந அந்யதஹ அஸ்தி மந்தா – அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை.
மனஸோ மனஹ – கேன உபநிஷத் 1-2
xxxx
பூர் — புவஹ – ஸ்வஸ்தருஹு – நாம எண் 967-
பொருள்
பூ லோகம் புவர்லோகம், ஸுவர் லோகம் என்ற மூன்று உலகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார விருட் வடிவினர். அல்லது
பூஹு , புவஹ , ஸுவஹ என்ற வ்யாஹ்ருதி மந்திரங்களால் உலகை வழி நடத்தி வைப்பவர்.
பட்ட பாஸ்கரர் எழுதிய வி.ச. உரையில் கூறுவதாவது:பூ லோகம் புவர்லோகம், ஸுவர் லோகம் என்ற மூன்று உலகங்களிலும் உள்ள பிராணிகள் பழுத்த மரத்தை அடுத்துள்ள பறவைகள் ஜீவிக்கும்படி இருப்பவர்.
பூமியில் அக்கினியில் போடும் ஆகுதிகள் (பொருட்கள்) சூரியனை அடைகிறது; அவனது வெப்பத்தால் மழை உண்டாகிறது ; மழை மூலம் உணவுப் பொருட்கள் விளைகின்றன ; அவற்றை உண்டு மக்கள் வாழ்கிறார்கள் .
(இதே போல ஒரு ஸ்லோகம் பகவத் கீதையிலும் வருகிறது; அதாவது யாகத்தினால்தான் மழை உண்டாகி, தானியங்கள் உண்டாகி, மனிதன் உண்டாகிறான் ).
—subham—
Tags- மநு , மழை , ஸ்வயம்பூ , அன்னம், வி.ச., பட்ட பாஸ்கரர், கடைசி பகுதி, Part 33, Last Part , ஆதி சங்கரர், விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –33
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ!
ச. நாகராஜன்
பிரச்சினைகளே இல்லாதவர்கள் உலகில் உண்டா? சிக்கலான இந்தக் கேள்விக்கு நார்மன் வின்செண்ட் பீல் ஒரு முறை பதில் அளித்தார். “அப்படி பிரச்சினையே இல்லாதவர்கள் ஏராளமானோரை எனக்குத் தெரியும். அவர்கள் இருக்கும் இடம் கல்லறை!” என்றார் அவர்.
உன்னால் சாதிக்க முடியும் என்று நீ நினைத்தாலோ அல்லது சாதிக்க முடியாது என்று நீ நினைத்தாலோ, நீ நினைத்தது தான் சரி” என்றார் மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு.
“மலைச் சிகரத்தைக் குனியச் சொல்ல முடியாதல்லவா, அதனால் அதன் மீது ஏறித்தான் அதை வெல்ல முடியும்” என்றார் டாட் ஸ்கின்னர்!
கற்பனைக்கும் அப்பாற்பட்ட தடைகளை உடைத்துச் சாதனை படைத்த பெண்மணிகள் ஏராளமானோர் உண்டு. அவர்களைப் பற்றி முழுவதுமாக அறிய முனையும் போது மலைத்துத் திகைத்துப் போவோம்.
உலகின் ஒப்பற்ற ஒரு சிறுமியான பனிரெண்டே வயதான அயி, இந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் முன்றாம் தேதி பூஜ்யர் தலாய்லாமா முன்னர் ஒரு இசையை இசைத்தாள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா?
அயிக்குப் பார்வை இல்லை. அவள் வளர்ச்சி குன்றிய சிறுமி. நான்கு வயது குழந்தைக்கு இருக்கும் பிஞ்சு விரல்களால் அவளால் பியானோவையே அளக்க முடியாத போது கரை காணாத கடலான இசையையே அளந்து விட்டாள்!
தலாய்லாமா புன்சிரிப்புடன் அவளை ஆசீர்வதித்தார்.
ஜேனட் ஆண்டர்ஸன் தான் அயிக்கு சங்கீத குரு. ஜேனட் அமைத்த பாடலை அயி இசைக்க தலாய்லாமா ஆசீர்வதிக்க கூட்டமே உருகிப் போனது! உலகிலேயே ஒரே ஒருவருக்கு இருக்கும் வியாதி அயிக்கு உள்ளது. உலகின் ஆறு நூறு கோடிப் பேரில் அயிக்கு மட்டுமே இந்த “ஒப்பற்ற” வியாதி உள்ளது. இந்த வியாதி என்ன என்று இனம் கண்ட இரண்டே இரண்டு பேர் இதற்கு ‘சால்டினோமைன்ஜர் சிண்ட்ரோம்” என்று நாமகரணம் சூட்டியுள்ளனர். இது ஒரு மூன்றடுக்கு வியாதி.
அயிக்குக் கண் பார்வை தெரியாததோடு முதுகெலும்பு கோணலானது. மூன்று கோணலுடன் முதுகெலும்பு இருப்பதால் அயியின் இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவள் வீல் சேரில் அடக்கம். அடுத்து அவளுக்கு சிறுநீரகமும் பழுதடைந்து உள்ளது.
எடின்பரோவில் உள்ள ராயல் ப்ளைண்ட் ஸ்கூலில் விசேஷமான கம்ப்யூட்டரில் அயி பயின்று ஆச்சரியங்களைச் செச்ய்கிறாள் என்றால் அவளது மன உரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?!
உலகின் பிரபல இசை அமைப்பாளரான பாயிகோ, தானே நேரில் வந்து அயியின் சி.டி. ரிகார்டிங்கை முன்னின்று நடத்தி வைத்தார். இதனால் வரும் நிதி இந்தியக் குழந்தைகளின் நலத்திற்கு வந்து சேரும்!
பெரிய பியானோவில் அயி பீத்தோவனின் இசையை இசைக்க அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பீத்தோவனின் அந்த மாஸ்டர் இசையை அயி கேட்பது அன்று தான் முதல் முறை. கேட்டவுடன் அவள் அதை இசைத்து விட்டாள்! காது கேளாத
இசைமேதை பீத்தோவனுக்குத் தான் கண் தெரியாத அயியின் மேதைத் தன்மை தெரியுமோ என்னவோ!
வீல் சேரில் உலகம் நடத்தும் அயியிடம் எதிர்காலம் பற்றிக் கேட்டால், “இந்தக் கணத்தில் நான் வாழ்கிறேன்” என்கிறாள்.
இந்தக் கணம் …. எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை!
“தி பவர் ஆஃப் நௌ” என்ற புத்தகத்தை எழுதிய பிரபல நூலாசிரியர் எக்கார்ட் டாலி தனது நூலை இப்படி ஆரம்பிக்கிறார்:
“முப்பது வருடங்களாக தெருவோரத்தில் அமர்ந்து அந்த பிச்சைக்காரன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.
வழிப்போக்கன் ஒருவன் அவனது அருகில் செல்லவே, “ஏதேனும் சில்லறை இருக்கிறதா?” என்று பிச்சைக்காரன் கேட்டான்.
“ஒன்றும் இல்லையே” என்று பதிலிறுத்த அந்த அந்நியன், “நீ எதன் மீது உட்கார்ந்திருக்கிறாய்” என்று கேட்டான்.
“பெட்டி. பழைய பெட்டி!. முப்பது வருடமாக இதன் மீது தான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் பிச்சைக்காரன்.
“உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?” என்று கேட்டான் அந்நியன்.
“இல்லை, அதில் பார்க்க ஒன்றும் இருக்காது.”
“திறந்து தான் பாரேன்”
பிச்சைக்காரன் பெட்டியைத் திறந்து பார்த்தான். பெட்டி முழுவதும் தங்கம்!
இந்தக் கணத்தில் இருக்கும் தங்கத்தை விட்டுவிடாமல், எந்தவித குறையும் இல்லாமல் உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடம் என்று எல்லாமும் கொண்டுள்ள சினேகிதிகளாலும், சினேகிதர்களாலும், அயியைப் போல சாதனை படைக்க முடியாதா, என்ன?
மலைச் சிகரத்தைக் குனியச் சொல்லாமல் அதன் மீது ஏறி வெல்லத் தயராகலாமல்லவா?
இந்தக் கணம்…. இந்தக் கணமே சத்தியம். அந்த முயற்சியை ஆரம்பிக்க!
**
சினேகிதி மாத இதழில் 2006, டிசம்பர் மாதம் வெளியான கட்டுரை.
Indonesia is the largest Muslim country in the world. It has 13,000 islands including large islands like Java, Sumatra and Borneo. Borobudur and Prambanan are famous for their Buddhist and Hindu sculpture. Borobudur Buddhist stupa was constructed in Sri Chakra shape. Though it is a Buddhist monument it has a lot of Mahabharata and Ramayana sculptures. I will publish them in batches—about 125 pictures.
The pictures are from 100 year old German book.
Hindus ruled South East Asia for 1500 years until 16th century; but in Indonesia influence of Sanskrit and Hindu epics can be seen even today. They have regular dramas and puppet shows on Hindu stories.
to be continued…………………………………………
—subham—
Tags– Ramayana Sculptures from Indonesia, Batch 1, . Borobudur , Buddhist stupa, Prambanan