திருமூலர் சித்தர் இல்லை; ஆதி சங்கரரரின் சீடர்; ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 44(Post No.13,537)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,537

Date uploaded in London – 12 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

திருமூலர் சித்தர் இல்லை; ஆதி சங்கரரரின் சீடர்; திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 44

பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்

செலவறி வாரில்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.– திருமூலர்

திருமூலர் சித்தர் இல்லை ;அதற்கும் மேல் உயர்ந்தவர் . அவர் ஆதி சங்கரரரின் சீடர் ; அதாவது அவரைப் பின்பற்றியவர்; அதாவது அத்வைதவாதி; நானே சிவன்; அஹம் பிரம்மாஸ்மி என்று பாட ல்களில் பகிரங்கமாகப் பகர்கிறார் ; நீயே கடடவுள் / தத் த்வம் அசி என்று செப்புகிறார். ஆதி சங்கரரின் வாசகங்களை அப்படியே காண முடிகிறது. திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் பி. நடராஜன் , சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் போன்றோரும் இதை ஓரளவு ஒப்புக்கொள்கின்றனர். மேலும் மாணிக்கவாசகருக்குப் பின்னால் வந்தவர்; இதற்கான சாட்சியங்கள் அனைத்தையும் பாட்டுக்குளேயே மறைத்தும் வெளிப்படையாகவும் வைத்துள்ளார்.

திருமூலர் எல்லாவற்றையும் பொடி வைத்து– அதாவது விடுகதை வைத்து– நம்மிடம் அளிக்கிறார்; அந்தப் புதிரை நாம் விடுவிக் கவேண்டும்

தந்தைக்கு முன் மகன் பிறந்தானே

மரத்தை மறைத்தது மாமத  யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை.

வழுதலை வித்திட பாகல் முளைத்தது

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்பு உண்டு– இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ..

ஆதிசங்கரரின் விவேக சூடாமணியில்  580 ஸ்லோகங்கள் உள்ளன. அதிலுள்ள எல்லா முக்கிய உவமைகளையும்  திருமூலர் கையாளுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக 3000 பாடல்களையும்  பாடி முடிக்கும் தருவாயில் அவருக்கு நன்றியும் தெரிவிக்கிறார்; அதாவது சங்கரன் ஆதிஎம் ஆதி பெயரைச் சொல்லி பிக் தேங்க் யூ Big Thank You என்கிறார்.

XXXX

சங்கரருக்கு மிகவும் பிடித்த உவமைகள்

பாம்பும் கயிறும் கயிற்றைப் பாம்பென நினைத்து பயப்படுத்தல் மாயை ILLUSION

பானையும் களி மண்ணும்

பானை உடைந்தால் அதிலுள்ள வெற்றிடம், பரந்த ஆகாசத்துடன் கலக்கிறது ;

ஒரே களி மண்ணை வைத்து வித விதமான சட்டிகள், தட்டுகள் ஜாடி களை செய்யலாம்.

ஒரே தங்கத்தை  வைத்து வித விதமான நகைகளைச்  செய்யலாம் .பல பானைகளிலுள்ள தண்ணீரில் பல சூரியன்கள் தெரிவது மாயை.

மற்றுமுள்ள உவமைகள்: கிரகணம் கானல் நீர் , கண்ணாடியில் உருவம், தூக்கம்- கனவு ,அறுசமயம் , சூடாக்கப்பட்ட கொல்லலன் பட்டறை  இரும்பு

XXXX

மாணிக்கவாசகரின் பெயரை மாணிக்கக் கூத்தன், மாணிக்கமாலை என்றெல்லாம் பல இடங்களில் சொல்லி அவருக்கு வணக்கமும் நன்றியும் சொல்கிறார் .

ஆதி சங்கரர் யாத்த விவேக சூடாமணியின் 580 ஸ்லோகங்களையும் திருமூலரின் திருமந்திரத்திலுள்ள 3000 பாடல்களையும் படித்து 1994ம் ஆண்டில் நான் எழுதிய  ஆராய்ச்சிக் குறிப்புகளை நுணுகி ஆராய்ந்தபோது இந்த உண்மை வெளிப்பட்டது .

XXX

18 சித்தர் பட்டியலில் வைக்கக்கூடாது ஏன்ஏன்?

சித்தர்கள் 18 பேர் என்று சொல்லி அந்தப் பட்டியலில் திருமூலரையும் சேர்த்திருப்பது பிழையே .

ஏனைய சித்தர்கள் விக்கிரக வழிபாட்டை ஆதரிப்பதில்லை; சடங்குகளைப் போற்றுவதில்லை ‘ ஆகமங்களை ஆதரிசிப்பது இல்லை ‘ ஆனால் திருமூலர் இவை அனைத்தையும் ஆதரிக்கிறார்.

அவர்கள் மந்திர தந்திர எந்திர விஷயங்களை போற்றுவதில்லை. மூலரோ அவை பற்றி விரிவாக்கப்பாடுகிறார். இந்து மதத்தின் எல்லாக் கடவுளரையும் பாடுகிறார்.

சைவ சித்தாந்தத்தின் பசு, பதி , பாசம், மும்மலம் ஆகியன குறித்து பாடினாலும் தத் வமஸி  (அது நீயேதான் ) அஹம் பிரம்மாஸ்மி (நானே கடவுள்) என்ற உபநிஷத, அத்வைத கருத்துக்களைப் போற்று கிறார் .

XXX

பிரம்மானந்தம்

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்

தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 75

XXX

 மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 

XXXX

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

xxxx

 பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்

வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு

நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்

கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 5

xxxx

உண்ணாடும் ஐவர்க்கு மண்டை யொதுங்கிய
விண்ணாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்தைவர் கூடிய சந்தியிற்
கண்ணாடி காணுங் கருத்ததென் றானே.

கண்ணாடியில் அழுக்கு இருந்தால் உருவம் தெரியாது;அழுக்கு நீங்கினால் உங்களை அறியலாம்.

XXX

திரு மந்திரத்தில் ஓம் என்னும் மந்திரம்  குறித்து 300 பாடல்கள் உள்ளன.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து கங்கை நதிக்கரைகளில் ஒலித்த வேதங்களின் முதல் எழுத்து ஓம்.

வேதங்களையும் ஆ கமங்களையும் புகழும் திருமூலர் பலவித மாய மந்திரத் தகடுகள் மற்றும் அவரின் அபூர்வ சக்திகள் பற்றியும், சிறு நீர் மருத்துவம் குறித்தும் பாடுகிறார் ; இவைகளை ஏனைய 17 சித்தர் பாடல்களில் காண முடியாது

XXX

ஒற்றுமை — கூடுவிட்டு கூடு பாயும் சக்தி

திருமூலரும் ஆதி சங்கரரும் வேறு உடல்களில் புகுந்து அஷ்டமா சித்திகளில் அரி ய சக்தியை உலகிற்குக் காட்டினார்கள்; இது பெரிய  ஒ ற்றுமை!

திருமூலரை 17 சித்தர்களுடன் ஒப்பிட்டால் அவர்கள் கொசுக்கள்; திருமூலர் இமயமலை என்பது புரியும்.

ஆதிசங்கரர் போலவே  காடு, மலை விலங்குகள் பறவைகளை ஓப்ப்பிட்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறார் .

XXX

சித்தம் போக்கு சிவம் போக்குஆன்டி போக்கு அதே போக்கு !

கடவுளைக் கண்டவர்கள் உணர்ந்தவர்கள் பைத்தியம் போலும், குழந்தைகள் போலும், காற்றில் பறக்கும் எச்சில் இலை போலும் , காதல் வயப்பட்ட பெண் போலும் பித்துப் பிடித்திருப்பார்கள் என்று ஆதிசங்கரர் இறுதிப்பகுதியில் விளக்குகிறார் (ஸ்லோகங்கள் 538- 546 ) இவைகளை அப்பர் தேவாரத்திலும் , நாரத பக்தி சூத்திரத்திலும் திருமந்திரத்திலும் காண்கிறோம்

மலமில்லை மாசில்லை மானாபி மானம்

குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை

நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே

பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 

XXXX

XXXX

அஹம் பிரம்மாஸ்மி ( அஹம் =நான் ; பிரம்ம =கடவுள்; அஸ்மி = இருக்கிறேன் /ஆனேன் )

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்

கழிந்தேன் கடவுளும் நானும்ஒன்றானேன்

அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்

செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 

XXX

திருமந்திரத்தின் துணைத் தலைப்புகளிலேயே தத்வமஸி இருக்கிறது. எட்டாம் தந்திரம் 26-ஆவது தலைப்பு தத்வமஸி. அதன் கீழ் வரும் பாடல்களில், அப்படியே சம்ஸ்க்ருத வாக்கியத்தை – உபநிஷத்துக்கள் சொல்லும் மஹா வாக்கியத்தை — தத் த்வம் அஸி — யை பயன்படுத்துகிறார்.

சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்

தாவு பரதுரி யத்தனில் தற்பதம்

மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத

மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1.

xxx

ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்

ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்

பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து

வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2.

XXX

பானைகள்  எல்லாவற்றிலும் உள்ள நீரில்  சூரிய பிம்பம் தெரியலாம் ஆனால் அவ்வளவு கதிரவன்கள் கடங்களில் இல்லை

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்

அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்

விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து

அடங்கிட நின்றதும் அப் பரிசு ஆமே.

கடந்த 43 கட்டுரைகளில் நிறைய எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளதால் அவைகளில் சிலவற்றைத் தொட்டுக்காட்டினேன்.

xxxx

விதிகளை வெல்லலாம், முறியடிக்கலாம் என்பதை சங்கரரும், மூலரும் ஆணித்தரமாகக் கூறுகின்றனர் .

திரு மந்திரத்தின் ஒன்பது தந்திரங்களில் உள்ள

எல்லாத் தலைப்புகளையும் ஒரே நிமிடத்தில் படித்துவிடலாம் ; அதைச் செய்தால் திருமூலர் யார் என்பது விளங்கும்; அவர் முற்றும் உணர்ந்த முனிவர். மாபெரும் ஞானி. ஏனைய 17 சித்தர்களும் போற்றுதற்குரியோர் என்றாலும் அவர்கள் திருமூலர் அடைந்த மிக உயர்ந்த நிலையை அடைந்ததற்கான சான்றுகள் சித்தர் பாடல்களில் இல்லை!

எல்லா சித்தர் பாடல்களையும் வெறுத்து ஒதுக்கிய, சைவத்திருமுறை நிபுணர்கள், திருமந்திரத்தை மட்டும் பத்தாம் திருமுறையாகச் சேர்த்தது ஏன் என்றும் சிந்திக்க !

xxxx

18 சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள்

அகஸ்தியர் – திருவனந்தபுரம், கொங்கணர் – திருப்பதி, சுந்தரனார் – மதுரை, கரூவூரார் – கரூர், திருமூலர் – சிதம்பரம்,  தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில், கோரக்கர் – பொய்யூர், குதம்பை சித்தர் – மாயவரம், இடைக்காடர் – திருவண்ணாமலை, இராமதேவர் –  அழகர்மலை, கமலமுனி – திருவாரூர், சட்டமுனி – திருவரங்கம், வான்மீகர் – எட்டிக்குடி, நந்திதேவர் – காசி, பாம்பாட்டி சித்தர் –  சங்கரன்கோவில், போகர் – பழனி, மச்சமுனி – திருப்பரங்குன்றம், பதஞ்சலி – இராமேஸ்வரம்.

—-SUBHAM—

திருமூலர் சித்தர் இல்லை, ஆதி சங்கரரரின் சீடர், 18 சித்தர்கள் திருமந்திர ,ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 44

இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 1 (Post No. 13,536)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.536

Date uploaded in London – 12 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 1

ச. நாகராஜன்

ராக தேவதைகள் அனைத்தும் ஒன்று கூடி இணைந்து உலக மக்களை தங்கள் பால் ஈர்த்து அருளாசி நல்க அங்கயற்கண்ணி ஆலவாய் மதுரையில் ஒரு உடலில் புகுந்து விட்டது தெரியுமா என்று சொன்னால் உடனே,’ ஓ, எம்.எஸ்.-ஐ சொல்கிறீர்களா’ என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் சொல்வதில் வியப்பில்லை.

பிறப்பும் இளமையும்

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்தார். (குஞ்சம்மா என்பது செல்லப் பெயர்) தந்தை சுப்ரமண்ய ஐயர் ஒரு வழக்கறிஞர். தாயின் மூலம் சங்கீதத்தில் ஈர்ப்பு கொண்ட எம்.எஸ். சுயம்புவாக இளமையிலிருந்தே சங்கீதத்தில் உயரப் பறக்கலானார்.

முதல் கச்சேரி

11 வயதாகும் போதே திருச்சி மலைக்கோட்டையில் எம்.எஸ்.ஸின் முதல் கச்சேரி நிகழ்ந்தது. பிரபல வித்வான்களான சௌடையா வயலின் வாசிக்க தக்ஷிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம் வாசிக்க இசை அரசியின் இசை பிரவேசம் நடைபெற்றது. அடுத்து 1929-ல் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற கச்சேரி அவரை ஒரு அபூர்வமான இசை மேதை என்பதை அடையாளப்படுத்தி விட்டது.19 வயதாகும் போது அவர் இசையில் உயர்நிலையில் காலடி எடுத்து வைத்து விட்டார்.

தாயார் தன் விருப்பப்படி எம்.எஸ்;ஐ மணமுடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரோ தேர்வு தனதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். 1936-ல் அவர் சென்னைக்கு வந்து தி(யாகராஜன்). சதாசிவத்தை சந்திக்கவே அவர் எம்.எஸ்.ஸுக்கு உதவி செய்ததோடு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

குருவின் ஆச்சரியம்

செம்மங்குடி சீனிவாசையரை குருவாகக் கொண்டு இசையைக் கற்றார் எம்.எஸ். அவரது அற்புதமான குரல் வளத்தையும் அபூர்வமான இசை ஞானத்தையும் கண்டு வியந்த செம்மங்குடி அவருக்கு நல்லாசி கூறினார். கடினமான கர்நாடக இசை ராகங்களை நுட்பமாக அவர் ரசிகர்கள் முன் படைத்தது இசை ரசிகர்களுக்கு புதிய பரிமாணங்களைக் காண்பித்தது.

ஆன்மீகத்திற்கு குருவாக காஞ்சி பரமாசார்யாரை அவர் வரித்தார். சத்யசாயிபாபாவின் அருளாசியையும் பெற்றார் அவர். ராஜாஜியின் சொல்லைப் பெரிதும் போற்றினார் அவர்.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர், குறை ஒன்றுமில்லை என்ற ராஜாஜி அவர்கள் இயற்றிய கீதத்தைப் பாடியுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

திருமணம்

அடுத்து 1940-ல் தி. சதாசிவத்துடன் அவரது திருமணம் திருநீர்மலையில் நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் கணவருடன் மனமொப்பிய மனைவியாக இருந்து உயரிய எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்தது குறிப்பிடத்தகுந்தது.

சதாசிவம் விதிகளைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவர். சங்கீத கச்சேரிகளுக்கு குறித்த நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும் என்ற அவரது கொள்கையால் விசிறிகள் முன்னதாகவே வந்து இடம் பிடித்துக் கொள்வார்கள். அதே போல வெளியூர் கச்சேரிகளுக்கும் குறித்த நாளுக்கு முன்பாகவே அவர் சென்று சேர்ந்து விடுவது பொதுவான வழக்கமானது. எம்.எஸ்.ஸின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து அவரை எவரெஸ்ட் சிகர உயரத்திற்கு ஏற்றினார் அவர்.

திரைப்படத்தில் இசை நட்சத்திரம்!

1938ல் இயக்குநர் கே. சுப்ரமண்யம் இயக்கி, வெளியான சேவாசதனம் படத்தில் முதன்முதலாக எம்.எஸ். நடித்தார். புகழ் பெற்றார்.

அடுத்து சகுந்தலை (1940), சாவித்திரி (1941) எல்லிஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் வெளி வந்த மீரா (1945), மீராபாய் (1947) ஆகிய படங்கள் வெளியாகி அவரைப் புகழேணியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

மீரா படத்தில் அவர் பாடிய ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த’ பாடல் கல்கி (தோற்றம் 9-11-1899 மறைவு 5-12-1954) அவர்களால் எழுதப்பட்ட பாடல். கல்கி தன் வாழ்நாள் முழுவதும் எம்.எஸ்.ஸின் இசையைப் போற்றி வந்தார்.

காற்றினிலே வரும் கீதம், கிரிதர கோபாலா உள்ளிட்ட எம்.எஸ்.-இன் திரைப்படப் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.

ஹிந்தியில் வெளிவந்த பக்த மீரா வட இந்தியாவையே முற்றிலுமாக எம்.எஸ். பால் ஈர்த்து விட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேரு தானே முன்னிருந்து அதனுடைய பிரத்யேக காட்சியை சிறப்பாக நடத்தி வைத்தார். வாயிலில் நின்று நிகழ்ச்சிக்கு வந்த மவுண்ட்பேட்டன் பிரபு, லேடி மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோரை தானே வரவேற்றார் அவர்.

எம்.எஸ். ஐ குறித்து அவரிடம் சொல்கையில், “நீங்கள் இசைக்கு ராணி. நானோ ஒரு சாதாரண பிரதம மந்திரி தானே” என்றார் அவர்.

சரோஜினி தேவியார் மேடையில் ஏறி உள்ளம் நெகிழ்ந்து அவரைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்.

பக்த மீரா படத்தை ஆரம்பமாகக் கொண்டு எம்.எஸ்.ஸின் தெய்வீகப் பஜனைப் பாடல்கள் நாடெங்கும் பரவி குமரி முதல் இமயம் வரை ஒலித்தது.

காந்திஜியின் பிரமிப்பு

எம்.எஸ்.ஸின் இசையை வார்தாவில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பாடக் கேட்ட மஹாத்மா காந்திஜி பெரிதும் பிரமித்தார். அவரது இசைமீது அபார பற்று கொண்டார். வைஷ்ணவ ஜனதோ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.

அவர் எம்.எஸ்..ஸிடம் “நீங்கள் பாடக் கூட வேண்டாம் பாடல் வரிகளைச் சொன்னாலே போதும்” என்று அவர் குரல் இனிமையைப் பற்றி வியந்து கூறினார். கஸ்தூரிபா நிதிக்காக இசை நிகழ்ச்சிகள் எம்.எஸ். பாட ஏற்பாடான போது ‘டியர் சுப்புலட்சுமி’ என்று தன் கடிதத்தை ஆரம்பித்த மஹாத்மா கடைசியில் மோ. க, காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டு அதை அனுப்பினார்.

1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்திஜி பிறந்த தினத்தில் இசைப்பதற்காக எம்.எஸ்,மீராவின் பஜனைப் பாடல்களின் ஒன்றான ’ ‘ஹரி தும ஹரோ’’ என்ற பாடலை டெல்லிக்கு வந்து இசைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாடலைப் பாடி பிரத்யேகமாக அதை அவர் டெல்லிக்கு அனுப்பினார். அடுத்து வந்த 1948-ல் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அகில இந்திய வானொலி நிலையம் எம்.எஸ்.ஸின் இந்தப் பாடலை ஒலிபரப்பியது. தொடர்ந்து வந்த நாட்களில் துக்கம் மேலிட்ட அவரால் இந்தப் பாடலைப் பாட முடியவே இல்லை;

நன்கொடைகள்

200 கச்சேரிகளுக்கும் மேலாக நிகழ்த்தி பல்வேறு நல்ல காரியங்களுக்கும் பல கோடி ரூபாய்களை நிதியாகத் திரட்டி அவர் அளித்தார். 1963-ல் எடின்பரோ உற்சவத்திற்காக முதல் தடவையாக ஐரோப்பாவிற்குச் சென்ற எம்.எஸ். அதன் பின்னர் போகாத நாடே இல்லை எனலாம். உலகெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு தான்!

வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு அவரை எவ்வளவு பிடிக்கும் என்றால், அவர் அணிந்த புடவை வடிவமைப்புக்கு எம்.எஸ். ப்ளூ என்று பெயர் சூட்டி அதையே அணிய ஆரம்பித்தனர்.

24-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

to be continued………………………..

**

Tiger Story in Ramakrishna, Tamil Veda Tirukkural and Tirumular; My Research Notes on VC- 38 (Post.13,535)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,535

Date uploaded in London – 11 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

What Sankara said in two slokas of Viveka Chudamani (VC) is explained beautifully by Sri Ramakrishna Paramahamsa (RKP) in one story. Tamil saint Tirumular in his Tirumanthiram and the greatest Tamil poet Tiruvalluvar in his Tamil Veda book Tirukkural, also use the Tiger to teach us Hindu principles

Tiger Parable in Sri RKP

It’s the story of a tigress who attacked a flock of sheep. As she sprang on her prey, she gave birth to a cub and died. The motherless tiger cub was adopted by the sheep and brought up by them to speak their language, to emulate their ways, eat their food, and in general to believe that he was a sheep himself.

Then one day a king tiger came along, and all the  sheep scattered in fear. The young sheep-tiger was left alone to confront him, afraid and yet somehow not afraid. The king tiger asked him what he meant by his unseemly masquerade, but all that the young one could do in response was to bleat nervously and continue nibbling at the grass.

So the tiger dragged it to a near by pond where he forced him to look at their two reflections side by side and said

Look your form is similar to mine. You are also a tiger like myself. When this failed, he offered him his first piece of raw meat. At first the young tiger recoiled from the unfamiliar taste of it. But as he ate a little more he began to feel it warming his blood, the truth gradually become clear to him.

Now the old tiger said to him,

Have you understood that you are the same as myself? So come along with me to the forest.

In the same way if one has the grace of the Guru, there is no fear. The Guru will open your eyes and tell you who you are and what your real self is.

Now let us look at slokas/ couplets from VC:

महास्वप्ने मायाकृतजनिजरामृत्युगहने
भ्रमन्तं क्लिश्यन्तं बहुलतरतापैरनुदिनम् ।
अहंकारव्याघ्रव्यथितमिममत्यन्तकृपया
प्रबोध्य प्रस्वापात्परमवितवान्मामसि गुरो ॥ ५१८ ॥

mahāsvapne māyākṛtajanijarāmṛtyugahane
bhramantaṃ kliśyantaṃ bahulataratāpairanudinam |
ahaṃkāravyāghravyathitamimamatyantakṛpayā
prabodhya prasvāpātparamavitavānmāmasi guro || VC 518 ||

518. O Master, thou hast out of sheer grace awakened me from sleep and completely saved me, who was wandering, in an interminable dream, in a forest of birth, decay and death created by illusion, being tormented day after day by countless afflictions, and sorely troubled by the tiger of egoism. VC 518

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144952.html

My comments

Egoism is tiger. When the Guru removes it, we see Brahman/God.

व्याघ्रबुद्ध्या विनिर्मुक्तो बाणः पश्चात्तु गोमतौ ।
न तिष्ठति छिनत्येव लक्ष्यं वेगेन निर्भरम् ॥ ४५२ ॥

vyāghrabuddhyā vinirmukto bāṇaḥ paścāttu gomatau |
na tiṣṭhati chinatyeva lakṣyaṃ vegena nirbharam || 452 ||

452. The arrow which is shot at an object with the idea that it is a tiger, does not, when that object is perceived to be a cow, check itself, but pierces the object with full force.

My comments

Here Sankara says that the arrow is like Praarabda Karma (accumulated from previous births) . It will do its job whether you are a saint or a sinner.

This is another lesson Sankara gives us by using tiger.

xxxx

Now look at Tirukkural

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.–குறள் 273

As if a steer should graze wrapped round with tiger’s skin,
Is show of virtuous might when weakness lurks within.


Couplet Explanation:

The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger’s skin.

My comments

One is pretending to be a Sanyaasi (ascetic) by wearing Kaavi vastra (saffron cloth)

It is in the Aesop’s fable The Ass in the Lion’s skin.

The moral of the story is

clothes may disguise a fool, but his words will give him away.

 La Fontaine’s Fable 5.21 (1668) also has similar story . The moral La Fontaine draws is not to trust to appearances, because clothes do not make the man.

A wolf in sheep’s clothing is an idiom from Jesus’s Sermon on the Mount as narrated in the Gospel of Matthew in the Bible. It warns against individuals who play a duplicitous role. The gospel regards such individuals (particularly false teachers) as dangerous.

All great people warn the people about fake saints and false appearances.

xxxx

Tiger in Tirumular

ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்

கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்

ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த

ஞானத்து உழவினை நான்உழு வேனே. 5

 Plough the Field of Jnana

What thought the elephant pursues,

What though the arrow pierces,

What though the wild tiger surrounds,

Deep I plough the field of Jnana

In the Other Land,

Lord has me allotted.

xxx

பத்துப் பரும்புலி யானை பதினைந்து

வித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர்

அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்

அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 23

2888: How the Body is

Ten the tigers big,

Ten and Five the elephants,

Five the learned

Ten the jesters,

Three that are upright

Six the physicians,

Five the lordly ones,

There they all stand.

The animals are used to mean symbolically dasa naadi, dasa vayu, senses sense organs, three gunas etc.

My Comments

Animals including tigers are used to convey various things, mostly bad things.

Like snakes they have negative or bad connotation.

Animal symbolism is used more in Hinduism than any other religion.

We see Sankara using Snake, Python, Crocodile, Shark, Butterfly/Cocoon, Cockroach, tiger, birds etc to illustrate and elucidate his message.

—subham—

Tags- Tiger, animal symbolism, Sankara, Valluvar, Tirumular, Tiger parable in Ramakrishna ; Aesop, Jesus, My Research Notes on VC -38

CARTOONS ARE RECORDS OF CURRENT AFFAIRS 1182024

Following cartoons are from The Deccan Chronicle up to 11-8-2024.

Posted by London Swaminathan on 11-8-2024

–subham—

tags- cartoons1582024 

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள் –28 (Post.13,534)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,534

Date uploaded in London – 11 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –28 (Post.13,534)

பிள்ளைகள் பெற ஒரு மந்திரம் ;பாவவங்களை அகற்றுவது எப்படி?

தேவகி நந்தனஹ – நாம எண் – 989- பிள்ளைகள் பெற ஒரு மந்திரம்

தேவகியின் புதல்வர் .

முதலில் மஹாபாரதம் சொல்வதைக் காண்போம் :

ஜ்யோதீம்ஷி ஸுக்ராணி ச யானி லோகே த்ரயோ லோகா

லோகபாலாஸ் த்ரயீ ச

த்ரயோக் நஸ்ய சாஹூ தயஸ்ச பஞ்ச ஸ ர்வே தேவா  தேவகி புத்ர ஏவ

தேவகியின் மகனான கிருஷ்ணன் யார் என்றால்,

இந்த வானத்தில் ஒளி வீசும் எல்லா கிரகங்களும், நட்சத்திரங்களும், அதே போலவே மூவுலகங்களிலும் அதைக்காக்கும் தேவர்களும் , மூன்று வேதங்களும் அந்தணர்களின் முத்தீயும், , அவர்கள் அளிக்கும் ஐந்து ஆகுதிகளும் ஸர்வ தேவர்களும் ஒட்டு மொத்தமாக வந்தவர்தான் (கிருஷ்ணர் ) . அனுசாசன பர்வம் 263-31

என் கருத்து

எல்லா துதிகளிலும் , பஜனைப்பாடல்களிலும் கிருஷ்ணரின் தாயாரான தேவகியும் வளர்ப்புத் தாயான யசோதாவுமே முக்கிய இடம் பெறுகிறார்கள் அதற்கடுத்த நிலையில்தான் வாசுதேவன் வருகிறார். இதுதான் இந்து மதத்தின் சிறப்பு. உலகில் வேறு எந்தப் பண்பாட்டிலும் தாயைப் புகழ்வது மிகவும் அரிதே .கிறிஸ்தவத்திலும்கூட வர்ஜின் மேரியைப் புகழ்வது பைபிளில் இல்லை. உருவ வழிபாட்டுக்காக கத்தோலிக்க மதம் மட்டுமே அவளை முன் வைக்கிறது . மனு ஸ்ம்ருதியும் ஒரு தாய் ஆயிரம் தந்தைகளுக்கு சமம்  என்று பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டது . மேலும் இரண்டு ஸ்லோகங்களில்  எந்த வீட்டிலாவது பெண்களை அழ விட்டால் அந்தக்  குடும்பம் வேறோடு சாயும் என்றும் சகோதரர்கள் அவர்களுடைய சகோதரிகளுக்கு துணிமணிகளையும் நகைநட்டுகளையும் வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்சசியாக வைக்க வேண்டும் என்றும் மனு சொல்கிறார்.

2500 ஆண்டுகளுக்கு மனு, பெண்களைப் போற்றியதற்குச் சமமான விஷயத்தை உலகில் வேறு இந்தப் பண்பாட்டிலும் காண முடியாது.

புத்திரப் பேறு வேண்டுவோர் சொல்லவேண்டிய மந்திரம் ,

ஓ தேவகி நந்தனஹ ஸ்ரேஷ்டேதி சக்திஹி

தேவகி ஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்யதே

தேஹி மே தனயம் க்ருஷ்ண

த்வாமஹம் ஸரணம் கதஹ

xxxx

க்ருஷ்ண ஹ — நாம எண் 57-

கரிய நிறம் படைத்தவர் அல்லது ஸச்சிதானந்த வடிவினர்.

ஸச்சிதானந்த  ரூபாய க்ருஷ்ணாயாக்லிஷ்ட  காரிணே

நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸா க்ஷி ணே — சங்கரர்.

நீலோபி நீரந்த்ர தமஹ ப்ரதீபஹ– லீலாசுகர்

மஹாபாரத உத்யோக பர்வம் சொல்வதாவது :

க்ருஷிர் பூவாசகஹ  சப்தோ நஸ் ச நிவ்ருத்தி வாசகஹ

விஷ்ணுஸ்  தத் பாவ  யோக சக் மோ பவதி  சாஸ்வதஹ

பொருள்

க்ர்  –என்றால் சத் – அதாவது இருத்தல்/ வாழ்தல் ;

ந -என்றால்ஆனந்தம் ; விஷ்ணு என்பதில் இரண்டுமுள ; ஆனந்தமாக இருத்தல். ஆகையால்தான் விஷ்ணுவை க்ருஷ்ண என்கிறோம் .

xxxx

க்ருஷ்ண ஹ — நாம எண் 550–

இரண்டாவது முறை கிருஷ்ண நாமம் வருகிறது. இங்கு சங்கரர் தரும் பொருள் :

கிருஷ்ணர் எனப் பெயர்கொண்ட வியாசர்.

விஷ்ணு புராணம் சொல்கிறது 3-4-5

க்ருஷ்ணத் வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்

கோஹ்யன்யஹ புண்டரீகாக்ஷஆன் மஹாபாரத க்ருத் பவேத் .

பட்ட பாஸ்கரர் தரும் அர்த்தம் — கார்முகில் போன்ற கருத்த நிறமுள்ளவர்

என் கருத்து

விஷ்ணு சஹஸ்ர நாம ஆரம்பத்திலும் இதைக் காண்கிறோம்

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே .

இன்னுமொரு ஸ்லோகம் வியாசரின் நான்கு தலை முறைகளை சொல்கிறது

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்

பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

வசிஷ்டர் -சக்தி-  வியாசர் – சுகர் ஆகிய 4 தலை முறைகள்

உலகிலேயே அதிகமாக எழுதியவர்/ தொகுத்தவர் வியாசர்தான்; ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட மஹாபாரதம் , எட்டு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட 18 புராணங்கள் ஆகியவற்றை நமக்குப் பாதுகாத்துக் கொடுத்ததால் அவரை இந்து மதத்தின் குருவாக எண்ணி ஒவ்வொரு வியாச பெளர்ணமி தினத்திலும் எல்லா ஆச்சார்யார்களும் அவரை கடவுளாக எண்ணி பூஜிக்கின்றனர்

வியாசர் இல்லாவிடில் நமக்கு பகவத் கீதையோ சஹஸ்ரமநாமமோ கிடைத்திராது.

xxxxx

பாபங்களைத் தீர்க்க சுறுக்கு வழி

மனிதர்கள் மீது பெருங்கருணை கொண்ட ஆதி சங்கரர், அவர்களை பாவக் கடலிலிருந்து மீட்க எண்ணற்ற எளிய ஸ்லோகஙக்ளை இயற்றினார். அதே சமயத்தில் நாட்டின் நான்கு மூலைகளிலும் மடங்களை  நிறுவி பழைய சம்பிரதாயங்களைத் தொடர்ந்து செய்துவரவும் வழி செய்தார்.  இன்றும் காஞ்சி, சிருங்கேரி மடங்களில் அவைகளைக் காண்கிறோம்.

பாபநாசனஹ – நாம எண் 992–

பக்தர்களின் பாவங்களை நாசம் செய்ப்பவர்..

விருத்த சாதாபா என்னும் நூல் செப்புவதாவது –

பக்ஷோ பவாஸத்யாத் பாபம் புருஷஸ்ய  ப்ரணச்யதி

ப்ராணாயாம  சதேன இவை தத் பாபம் நஸ்யதே ந்ருணாம் 

ப்ராணாயாம  சஹஸ்ரேன யத்யத்  பாபம்  நஸ்யதே ந்ருணாம் 

க்ஷண மாத்ரேன தத் பாபம் ஹரேர் த்யானாத்  ப்ரணச்யதி

திருப்பாவையில் ஆண்டாள் பாடியதையும் நினைவு கூறலாம் ,

வாயினாற்  பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுத்தருவான் நிறவும் தீயினில் தூசாகும்.

பொருள்

ஒருவர் செய்த பாவங்கள் எல்லாம் ஒரு வாரம்  உண்ணாவிரதம் இருந்தால் அழிகின்றன;

நூறு முறை ப்ராணாயாமம் செய்தாலும் அதே பலன் கிடைக்கும் ;

ஆயிரம் பிராணயாமம் செய்தால் அழியும் பாவங்களை  ஹரியை சிறிது நேரம் தியானம் செய்தாலும் அடையலாம்

சுபம் —

Tags- பிள்ளை பெறும் மந்திரம், பாவம் போக்கும் மந்திரம், ஹரி நாமம், கிருஷ்ண , பகுதி 28, விஷ்ணு ஸஹஸ்ரநாம, ரகசியங்கள்

அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 2 (Post No.13,533)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.533

Date uploaded in London – 11 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

17-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 2 

ச. நாகராஜன்

 உடம்பில் எத்தனை காயம்!

ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பார். அதனால் இவர் பட்ட அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ ஒரு சின்னப் பட்டியல்!

தலைமுடி : ‘ட்ரங்கன் மாஸ்டர் || -ல் அவர் தலைமுடி தீப்பற்றி எரிந்தது

தலை: ‘ஆர்மர் ஆஃப் காட்’ படத்தில் மண்டை ஓடு உடைபட்டது. போலீஸ் ஸ்டோரி – ||’ படத்திலும் தலையில் அடிபட்டது.

கண் புருவம் : ‘தண்டர் போல்ட்’ படத்தில் கார் வெடிக்கும் காட்சியில் இமைகள் தீப்பற்றி எரிந்தன.

வலது கண் : ‘மிராக்கிள்’ படத்தில், மூங்கில் குத்தி காயம் ஏற்பட்டது.

இடது கண்: ‘ட்ரங்கன் மாஸ்டரில்’ வெட்டுக் காயம் பட்டது.

வலது காது: ‘ஆர்மர் ஆஃப் காட்’ படத்தில் வலது காது கேட்கும் சக்தியில் பாதியை இழந்து விட்டது.

மூக்கு: ‘ட்ராகன் ஃபிஸ்டில்’ மூன்று முறை உடைந்தது

கன்னம்: ‘ரம்பிள் இன் தி ப்ராங்க்ஸ்’ படத்தில் உடைந்த கண்ணாடி பாட்டில்களால் தழும்புகள், வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

தாடை: பிசகி இருக்கிறது.

மேல் உதடு: ‘பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்’ வெட்டுக் காயம்.

பற்கள்: ‘ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ’வில் உடைந்தன.

கழுத்து: ‘ரம்பிள் இன் தி ப்ராங்க்ஸ்’  படத்தில் சுளுக்கு.

கழுத்துப்பட்டை எலும்பு: ‘சூப்பர் காப்’ படத்தில் முறிந்தது.

வலது தோள்: ‘தண்டர்போல்ட்டில்” அடி

கை எலும்பு: இரண்டும் முறிந்துள்ளன.

வலது கை: ‘பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்’ முறிவு

வலது, இடது கை: ‘போலீஸ் ஸ்டோரியில்’  தீக்காயம்

விரல்கள்: ‘ப்ராஜெக்ட் ஏ’யில் ஐந்து விரல்களும் முறிந்தன.

மார்பு: ‘ஆபரேஷன் காண்டர்’ படத்தில் எலும்புகள் முறிந்து ரத்தம் கொட்டியது.

இடுப்பு: ‘மாக்னிபிஷண்ட் பாடி கார்டில்’ பிசகியது.

இடது பாதம்: ‘சிடி ஹண்டர்’ படத்தில் முறிந்தது.

முன் பாதம்: பலமுறை முறிந்துள்ளது.

தினமும் ஜாக்கி கடும் உடல் பயிற்சிகளைச் செய்கிறார். பாத்ரூமில் கூட சில விசேஷ பயிற்சிகளைச் செய்வது வழக்கம்.

குடும்பம்

ஜாக்கிசானின் குடும்பம் பற்றி அவரே ஒரு முறை சொன்னார் இப்படி:

எனக்கு திருமணம் ஆகி விட்டதா என்று நிருபர்கள் கேட்கும் போது இல்லை என்று சொல்லி விடுவேன். ஏனெனில் இந்தக் கேள்வி முதல் தடவையாக என்னிடம் கேட்கப்பட்ட போது, எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பதாகச் சொன்னேன். அதைக் கேட்டு என் விசிறிகளில் ஒரு பெண் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். இன்னொருத்தி என் அலுவலகம் முன்னே விஷத்தைக் குடித்து விட்டாள். ஆகையால் ஜாக்கிரதையாக பதில் சொல்வது என்று முடிவெடுத்து விட்டேன்.”

உண்மையைச் சொல்லுமாறு வேண்டியபோது, “எனக்கு அருமையான ஒரு மனைவி உண்டு. ஒரு மகனும் இருக்கிறான்” என்றார் அவர் ஜாக்கி சான் 1982-ல் ஜோன் லின் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் மணந்தார்.

அதே ஆண்டில் பிறந்த அவரது மகனான ஜேஸீ சானும் ஒரு நடிகர். ஒரு இசைக் கலைஞர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் போதைமருந்து வைத்திருந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். 2015 பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஜாக்கிசான் சீனாவில் 2009-லிருந்து போதை மருந்தைத் தடுக்கும் தூதுவராக இயங்கி வருவது குறிப்பிடத் தகுந்தது.

அவருக்கு ஒரு மகள். பெயர் எட்டா.

ஹாங்காங் நடிகையான எலெய்ன் யீலீ அவருடன் இணைக்கப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஜனவரி 1999-ல் மகள் எட்டா பிறந்தாள். ஆனால் ஜாக்கியை விட்டுப் பிரிந்து தன் தாயாருடனேயே வாழ ஆரம்பித்தாள் எட்டா.

அறக்கட்டளை

ஜாக்கிசான் யூனிசெஃப்-ஆல்  நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார்.

1988-ல் தனது அறக்கட்டளையைத் தொடங்கிய அவர் ஏராளமான நன்கொடைகளை அளித்துக் கொண்டே வருகிறார். விலங்குகள் பாதுகாப்பிலும் அவருக்கு அக்கறை உண்டு. சீனாவில் வெள்ளம் ஏற்பட்டபோதும் 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் போதும் உடனடியாக அவர் நிவாரண நிதியை அளித்தார், தனது இறப்பிற்குப் பின்னர் தனது சொத்தில் பாதி நன்கொடையாக தேவைப்பட்டோருக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

படங்கள்

ஜாக்கிசான் சுமார் 200 திரைப்படங்களில் பங்கு பெற்றுள்ளார். நடிகராக, ஸ்டண்ட் மாஸ்டராக, இயக்குநராக இவர் பங்கு பெற்றுள்ள படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன; பெற்று வருகின்றன. ஜாக்கியின் சுமார் 48 படங்கள் 500 கோடி யு.எஸ். டாலரை வசூல் செய்து தந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய சாதனையாகும்.

ட்ரங்கன் மாஸ்டர்  (1978) ஹாங்காங்கில் படம் வெளியானதும் வசூலான மொத்த தொகை 80 லட்சம் ஹாங்காங் டாலர்கள். இதில் சிறப்பு அம்சம் குங்பூ காமடி.

ப்ராஜக்ட் ஏ (1984) : ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். சாமோஹங், யூயென் பியாவ், மார்ஸ், டிக்வாய் ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம் முதல் வாரத்திலேயே 140 லட்சம் ஹாங்காங் டாலர்களை சம்பாதித்துத் தந்தது.

போலீஸ் ஸ்டோரி (1985) ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் இவர் ஒரு டிடெக்டிவ். முப்பது அடி கம்பத்திலிருந்து இறங்கும் காட்சியில் மயிரிழையில் தப்பினார் இவர். நவீன யுகத்தின் பிரமாதமான சண்டைப்படம் என்று உலகமே பாராட்டியது இந்தப் படத்தைப் பார்த்து!

ஆர்மர் ஆஃப் காட் (1986) : ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் நடந்த விபத்தில் பாறை ஒன்றில் அடிபட்டு மண்டையில் பலமான அடி பட்டது; ஒரு காது கேட்கும் சக்தியில் பாதியை நிரந்தரமாக இழந்து விட்டது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சூப்பர் காப், கிரைம் ஸ்டோரி, தண்டர்போல்ட், நைஸ் கை, 1911, CZ12 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த ஏராளமான படங்களில் சில.

இவரது அரசியல் அனுபவம் தனி!

இப்போதும் சுறுசுறுப்புடனும் தன் பணிகளைக் கவனித்து வரும் ஜாக்கியை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!

அனுபவ மொழிகள்

கடும் உழைப்பு, தைரியமான ஸ்டண்ட் காட்சிகள், தனக்கென தனி ஒரு பாணி. இதுவே ஜாக்கிசான்!

ஜாக்கிசான் தன் அனுபவத்தை வைத்து அனைவருக்கும் சொல்லும் பொன்மொழி இது தான்:

ஜாக்கிசானைப் போல ஆக வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். ஒரே ஒரு ஜாக்கிசான் தான் இருக்க முடியும். அதற்கு பதிலாக கம்ப்யூட்டரைப் படியுங்கள்.

சூழ்நிலைகளை உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள். உங்கள் சூழ்நிலைகளை நீங்கள் மாற்றுங்கள்

***

Mysterious Light from Body: Sankara, Ramakrishna, Tirumular Confirm; My Research Notes on VC -37 (Post No.13,532)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,532

Date uploaded in London – 10 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Mysterious Light from Body: Sankara, Ramakrishna, Tirumular Confirm; My Research Notes on VC 37

When I read LIGHT FROM BODY in Viveka Chudamani (VC) and Tiru manthiram of Tamil saint Tirumular, I though tht they are talking about wisdom. When the ignorance of darkness is removed form one, wisdom will dawn upon that person. But it is NOT the LIGHT, they mention. It is real light from one’s body. Sri Ramakrishna Paramahamsa (RKP) actually saw it. If such a story comes from some unknown 1000-year-old saint, I wouldn’t bother. It is from a great saint who lived just 150 years ago in Calcutta.

Here is what Sri R K P says,

At the time of my practising austere Saadhanaas under the Panchavati, a man named Girija (disciple of Bhairavi Braahmani) came there. He was a great Yogi. Once when I wanted to come to my room in the dark night, he raised his arm and a strong light emanated from his arm pit and lighted the whole path. On my advice he gave up using that power and turned his mind to the realization of the highest Reality.

 He lost that power subsequently, no doubt, but he gained in true spirituality.

Sri RKP warns about using miracles. They are the first tests God sends to every Yogi or Sidha. If one falls in the trap, one uses it to get Kaamini and Kaanchana= Woman and Gold. Now we see many Babas (baabaas)in jail for abusing miracles or faiths of the devotees.

xxxx

Now in VC, Sankara says,

यथा सुवर्णं पुटपाकशोधितं
त्यक्त्वा मलं स्वात्मगुणं समृच्छति ।
तथा मनः सत्त्वरजस्तमोमलं
ध्यानेन सन्त्यज्य समेति तत्त्वम् ॥ ३६१ ॥

yathā suvarṇaṃ puṭapākaśodhitaṃ
tyaktvā malaṃ svātmaguṇaṃ samṛcchati |
tathā manaḥ sattvarajastamomalaṃ
dhyānena santyajya sameti tattvam || 361 ||

361. As gold purified by thorough heating on the fire gives up its impurities and attains to its own lustre, so the mind, through meditation, gives up its impurities of Sattva, Rajas and Tamas, and attains to the reality of Brahman.

ब्रह्मात्मनोः शोधितयोरेकभावावगाहिनी ।
निर्विकल्पा च चिन्मात्रा वृत्तिः प्रज्ञेति कथ्यते
सुस्थितासौ भवेद्यस्य स्थितप्रज्ञः स उच्यते ॥ ४२७ ॥

brahmātmanoḥ śodhitayorekabhāvāvagāhinī |
nirvikalpā ca cinmātrā vṛttiḥ prajñeti kathyate
susthitāsau bhavedyasya sthitaprajñaḥ sa ucyate || 427 ||

427. That kind of mental function which cognises only the identity of the Self and Brahman, purified of all adjuncts, which is free from duality, and which concerns itself only with Pure Intelligence, is called illumination. He who has this perfectly steady is called a man of steady illumination.

Now one may wonder whether Sankara talks about inner light (wisdom) or real body light like our electric torch light. I would say he meant both. Because the simile used is purification of gold.

xxxx

That is used by the author Tiru Valluvar of Tamil Veda Tirukkural as well,

The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines.—Kural 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.– குறள் 267:

Valluvar also used it in the Chapter TAPAS (tavam in Tamil) 

(From the fact Valluvar using Sanskrit word Tapas we know he meant the same that Sankara mentioned. Note the chapter name in Sanskrit. Valluvar used Sanskrit words in over 600 couplets out of 1330. All the 133 Chapters have the Sanskrit word Adhikaaram.) 

Bengalis and Tamils interchange P/B and V (Avestan too)

xxxx

Manu Smriti 

This is found in Manu Smriti before Tirukural:

दह्यन्ते ध्मायमानानां धातूनां हि यथा मलाः ।
तथेन्द्रियाणां दह्यन्ते दोषाः प्राणस्य निग्रहात् ॥ ७१ ॥

dahyante dhmāyamānānāṃ dhātūnāṃ hi yathā malāḥ |
tathendriyāṇāṃ dahyante doṣāḥ prāṇasya nigrahāt || 71 ||

Just as the impurities of metallic ores are consumed when they are blasted, even so are the taints of the senses consumed through the suspension of breath.—(71) 

Medhātithi’s commentary (manubhāṣya):

When the ‘metallic ores,’ of gold for instance, are blasted in a furnace, what is left behind is pure gold; similarly when the senses apprehend their objects, the man feels joys and sorrows, and these are productive of sin; this sin is consumed through the suspension of breath.

For the man seeking Liberation, indulging in joys and griefs has been forbidden.

But even in a man who has given up all attachment, and has his organs under his control, these are bound to appear, in howsoever small a degree, through the sheer nature of things, whenever by chance various kinds of colour, sound &c. become presented before him. And it is for the removal of the taints due to these that breath-suspensions have to be practised.—(71) 

Explanatory notes by Ganganath Jha

This verse is quoted in Mitākṣarā (on 3.62);—and in Vidhānapārijāta (II. p. 176).—Taken from Wisdomlib.com

https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc200633.html

xxxx

Nagarjuna, Father of Chemistry, also talks about magical lights in his book  Yogaratnamala.

xxxx

Tamil Saint Tirumular also deals with Body Light in his Tiru Manthiram :

 சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்

கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்

நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்

ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே

 When Light Appears
If thus meditating,
Luminescence you glimpse at the Eye-brow centre
Know you are destined for bliss unalloyed;
If at the Throat’s Center
Lunar light you behold,
Then will your body,
In divine joy intoxicated be.

xxxxxx

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்

ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்

மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்

பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 

1442: When This Truth Dawns Then is Union in Siva

When this Truth, beyond words, you perceive

The Siva Tattvas five bend below;

The light of Supreme Jnana dawns,

Illumines the Soul’s path

To the Finite goal

Of Sayujya union in Lord

 

My Comments

All the above quoted items may be interpreted as Inner Light (Wisdom); but they also mean shine in the body that is seen in many Yogis.

(I have seen Sri Santhananda of Pudukkottai with golden, shining body and long hair that was rolling on the floor. Swamiji Krishna of Ayakkudi told us that he had seen him doing Tapas in the forests of Sahyadri mountain (Western Ghats). Other saints like Kanchi Paramacharya (1894-1994) and Sringeri Sankaracharya Abhinava Vidyatheertha,  Omkarananda of Theni had the light in their eyes. I was fortunate enough to get blessings from all the above great saints personally. All these Swamijis visited my house in Madurai due to my father V Santanam’s great devotion)

xxxx

Seeing is Believing by Elvis Presley

Every time I see the sun rise
Or a mountain that’s so high
Just by seeing is believing
I don’t need to question why
When I see a mighty ocean
That rushes to the shore

If I ever had cause to doubt Him
I don’t doubt Him anymore
Oh seeing, seeing, seeing is believing
And I see him everywhere
In the mountains, in the valley
Yes I know my God is there
Oh, in time I look above me
See the stars that fill the sky
How could there be any question
Only God can reach that high

Source: Musixmatch

Songwriters: Bobby West / Glen Dale Spreen

Seeing Is Believing lyrics © Elvis Presley Music, Abg Elvis Songs, Carlin Music Delaware Llc

–Subham—

Tags- Seeing is Believing, Elvis Presley, Mysterious Light from Body, Sankara, Ramakrishna, Tirumular , My Research Notes on VC -37

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – 4 (Last Part) Post.13,531

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,531

Date uploaded in London – 10 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 4

பொது மகளிர் நாடக மேடைகளில் நடிக்கக்கூடாது என்று பல பத்திரிகைகள் எழுதிய பொழுது,  சில வங்காளி  மொழிப் பத்திரிகைகள் வேசிகள் நடிப்பதை ஆதரித்து எழுதின  ஒரு பத்திரிகை அத்தோடு  நிற்காமல், ராம கிருஷ்ண பரமஹம்சர் பெயரில் ஐந்து நாட்களுக்கு விழாவை ஏற்பாடு செய்து , ஒரு நாடகத்தின் அத்தனை வசூல் பணத்தையும் விழாவுக்கே அர்ப்பணிக்கப்  போவதாகவும் அறிவித்தது. உடனே மேலும் பல பத்திரிக்கைகளும் அமைப்புகளும்  இதே போல செய்தன.

குருநாதரின் (ரா.கி) அருள், கல்கத்தா நாடக உலகிலும் சிவப்பு விளக்கு பகுதிகளிலும் வியத்தகு புனித அலைகளை உண்டாக்கியது. .

விபச்சாரி தகனத்துக்கு பணம் கொடுங்கள் !

ஒரு முறை கல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு பிரபல வேசி இறந்து விட்டாள் ; சடலத்தை தகனம் செய்யக் காசு இல்லை; உடனே முக்கியப் புள்ளிகள் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று 26,000 ரூபாய் தாருங்கள் என்று கேட்டனர்; உடனே அங்கிருந்த சாமியார் வழக்கறிஞரை அழைத்து அவள்  ஏதேனும் உயில் எழுதிவைத்திருக்கிறாளா என்று கண்டு பிடிக்க வேண்டினார். என்ன ஆச்சர்யம்! அந்த வேசி, தனது சொத்து, சுகம் அத்தனையையும் ராமகிருஷ்ண மடத்துக்கு எழுதி வைத்திருந்தாள். உடனே சாமியாரும் தேவையான பணத்தை தகனக்கிரியைக்கு அளித்தார். இறந்துபோன விபச்சாரியின் வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கிடைத்தன; அவளுடைய உயிலின் படி அத்தனையும் மடத்தின் அக்கவுண்டில் சேர்க்கப்பட்ன; அது மட்டுமல்ல அந்த வேசி வீட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் படமும்  குருநாதர் பற்றிய சில புஸ்தகங்களும் இருந்தன. பல வேசிகள் பிழைப்புக்காக தொழில் நடத்துகின்றனர் அவர்கள் உடல் அளவில் வேசிகள்; உள்ளத்தில் உத்தமர்கள்.

(ராகி. சொன்ன எதிரெதிர் வீட்டு வேசி- யோகி கதை எல்லோருக்கும் நினைவு இருக்கும் ; ஆகையால் இங்கு எழுதாமல் விடுகிறேன்)

இதெல்லாம் ஒரு புனிதரின் அருள் வீச்சில் நடந்த அற்புதங்கள் .

xxxx

பினோதினி சுய சரிதை

(சைதன்ய லீலை என்ற புனித நாடகத்தில் கதாநாயகியாக நடித்த புகழ்மிகு நடிகை பினோதினி (வினோதினி), ஒரு வேசி குடும்பத்தில் பிறந்தவள்).

இது பற்றி வங்காளத்தின் புகழ்மிகு நடிகை பினோதினி (வினோதினி) தனது சுய சரிதையில் எழுதினாள் –“:உலகமே என்னை ஈனப்பிறவி என்றாலும் எனக்கு கவலை இல்லை புண்ய புருஷரான ராமகிருஷ்ணர் என்னை ஆசீர்வதித்துவிட்டார். ஹரி குரு , குரு ஹரி என்ற அவரது அமிர்த மயமான உபதேச மொழி என் காதுகளில் ரீங்காரம் செய்துகொண்டே இருக்கிறது  என்னை துயரங்கள் வந்து தாக்கி அமுக்கும்போது குருநாதரின் கருணை முகம் என்

உள்ளத்தில் உதிக்கிறது “சொல், சொல்! ஹரியே குரு ; குருவே ஹரி” என்ற வசனங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எத்தனை முறை நான் நடித்த சைதன்ய லீலை நாடகத்தைப் பார்க்க குரு நாதர் வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் BOX SEAT ஆசனத்தில் அமர்ந்து பார்த்தபோது அவரைக் கவனித்தேன்; அவர்  ஆனந்த பரவசத்தில் மிதந்தததைக் கண்டேன்.”

இது பற்றி பிரபல வங்காளி நடிகர் அம்ரித்லால் பாசு சொன்னார்- “நடிகை பினோதினி சைதன்ய  மகாபிரபு வேஷத்தில் நடித்ததும் அதை ராமகிருஷ்ணர் பார்த்து ஆனந்தம் அடைந்ததும்,  அவப்பெயர் தாங்கிய வங்காளி நாடக மேடையை வைகுண்டமாகவே மாற்றிவிட்டது ; அவர் ஒரு அவதார புருஷர். நாம் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள்.”

அதைப் பார்த்தவர்களும், அது நடந்த பூமியும் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டது; இப்போது சைதன்ய லீலையை எல்லோரும் தெய்வீக நாகடகமாகவே பார்க்கின்றனர்.

நடிகர் அபரேஷ் முகோபாத்யாய எழுதினார் :– நாடகம் துவங்கிய காலத்தில், அதில் நடிப்பவர்கள் ஈனப்பிறவிகள் ; பறையர்கள் என்றெல்லாம் கருதினர். அது மாறிவிட்டது.

நாடகங்களை எழுதும் கிரிஷ் சொன்னார் :-சமுதாயத்தில் கீழே விழுந்துவிட்ட வேசி மகளுக்கு யாராவது ஆதரவு தருவார்களா? அனுதாபம் காட்டுவார்களா? ஆனால் காமினி காஞ்சனத்தை (பெண்ணும் பொன்னும் ) அடியோடு துறந்த புனிதர், தனது கைகளால் பினோதினியின் தலையைத் தொட்டு ஞான ஒளி பெறுவாயாகுக என்று சொல்லிவிட்டார்.

வெறும் சினிமாக்காரிகள் படங்களை மட்டுமே தாஙகிய நாட்ய மந்திர் பத்திரிக்கை  ஸ்ரீ ராமகிருஷ்ணரின் படத்தை அட்டையில் போட்டு,  உலகமே நாடக மேடை; நாம் எல்லோரும் நடிகர்கள்; நம்முடைய கதாபாத்திரத்தை சரியாகச் செய்யாத போது பெரிய டைரக்டர் வந்து சரிசெய்கிறார் என்று புகழ் மாலை சூட்டியது .

அவர்கள் குறிப்பிடும் அந்தத் பெரிய டைரக்டர் வங்காளத்தில் தொலைதூர கிராம த்தில் பிறந்தவர்; கல்வி அறிவு பெறாதவர்; கல்கத்தா அருகிலுள்ள தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் பூஜாரி வேலை செய்த்தவர். கருணையே உருவான அந்த அவதார புருஷர் அசுத்தங்கள் நிறைந்த நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார். அத்தனை அழுக்குகளும் அசுத்தங்களும் அவரது அருள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது!

வசந்த குமார் கோஷ் நாட்ய மந்திர் பத்திரிகையில் எழுதுகிறார் – “பினோதினி அவரது நடிப்பின் மூலம், நாடக மேடையில் உயிர்த்  துடிப்பைக் கொண்டுவந்தார். அதை பார்த்த பகவான் ராம கிருஷ்ணர் அத்தனை நடிகைகளுக்கும் வேசிகளுக்கும் ஆசீர்வாதத்தைத் அருளி புத்துயிரைத் தந்துவிட்டார் ..

இதெல்லாம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முந்தைய கதை; இன்றோ உலகம் அடியோடு மாறிவிட்டது; நடிகர் நடிகையருக்கு பெரும் புகழ் சேருகிறது; ஒவ்வொரு உயர் குடும்பப் பெண்ணும் கூட நடிக்கப்போகிறார்; அந்தக் குடும்பமோ  அதைக் காட்டிப் பெருமைப்படுகிறது.

இந்து மத நூல்களில் சிவ பெருமானே நடிகர்; எல்லா நாடக, நடன மேடைகளிலும் நடராஜர் படமோ உருவமோ இருக்கும்; அவரை வணங்கியே எல்லோரும் நிகழ்ச்சியைத் துவங்குவர்

சைதன்ய லீலை நாடகத்தை எழுதிய கிரிஷ் சந்திரகோஷ் கூறுகிறார்- யாராவது ஒரு பிரமுகர் வருவதை அறிந்ததால் நடிகர், நடிகையர் முழு உற்சாகத்துடன் திறமையைக் காட்டுவார்கள்; அவதார புருஷரான, முற்றும் துறந்த முனிவரான ராமகிருஷ்ணரே வந்து விட்டால் கேட்கவா வேண்டும்? ஒருவேளை நாடகக்  கொட்டகையின் அவப்பெயரை அகற்றவே இந்த அவதாரமோ!

அம்ரித்லால் பாசுவும் சைதன்ய லீலையில் நடித்தார்; ஆனால் அவருக்கு ராமகிருஷ்னர் அருகில் வர பயம்; தான் ஒரு பாவாத்மா; அவர் அருகே செல்லக்கூடாது என்று நினைத்து ஒதுங்கி விடுவார். இதை அறிந்த கிரீஷ் அவரை குருநாதரிடம் அழைத்துச் சென்று  ஆசீர்வாதம் வாங்கித் தந்தார். அப்போது முதல் அவரது வாழ்க்கை அடியோடு மாறியது.

ஒவ்வொரு நாளும் நாடகம் முடித்தவுடன் எல்லோரும் கிரீஷ் அறையில் சந்த்தித்து கதை அளப்பார்கள்.

ஒருநாள் தாராசுந்தரி என்ற நடிகை சொன்னாள் – நம்மைப் போன்றவர்களுக்கு விமோசனம் என்பதே கிடையாது; அத்தகைய வாழ்க்கையை நாம் வாழ்கிறோம்.

உடனே கிரீஷ் குறுக்கிட்டு, தாரா அப்படி சொல்லாதே; உன் அத்தை பினோதினியைப் பார்; எப்படி மாறிவிட்டாள்

உடனே அபினாஷ் குறுக்கிட்டு- ஆமாம் இப்போது அவள் கோபாலனின் பரம பக்தை என்றார்.

xxxx

கடைசியாக பினோதினி கேட்கும் கேள்வி???

“நான் சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு ஏழையாகப் பிறந்தேன்; என் அம்மா ஒரு விபச்சாரி; ஆகையால் நானும் அதே தொழிலில் இறங்கினேன் இதை இழி தொழில் என்று மக்கள் ஏசுவது எனக்குத் தெரியும் . இறைவன் எனக்கு நடிக்கும் திறமையைக் கொடுத்திருந்தான்; அதைப்  பயன்படுத்தி நாடக மேடை ஏறினேன்  என் குலத் தொழிலை விட்டு, நான் நடிகையானது தவறா?

அதில் சைதன்யர் வேஷம் தரித்து நாடகம் பார்க்க வந்தோரை ஆன்மீக வளையத்துக்குள் கொண்டு வந்தேனே ; அது தவறா ? இந்தக் கேள்விக்கு வாசகர்களே பதில் சொல்லட்டும்.

இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான பினோதினிகள் சிவப்பு விளக்கு பேட்டைகளில் வாடி, வதங்கி, சித்திரவதையில் சிக்கியுளார்கள்; வெறுக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் கேட்பாறற்றும் துடித்துக் கொண்டிருக்கும் அவர்களைக் கரையேற்ற என்ன வழி ???

xxxx

Sri Ramakrishna: Patron Saint of the Bengali Stage

By Swami Chetanananda எழுதிய கட்டுரையின் சுருக்கம் ; தமிழில் தந்தவர்- லண்டன் சுவாமிநாதன் )

Swami Chetanananda is the Minister-in-Charge of the Vedanta Society of St. Louis. He has written, edited, and translated many important books on Ramakrishna, Vivekananda, and Vedanta. This article was first published in the April, 2008 issue of Prabuddha Bharata.

—subham—

புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 4 , மூன்று , விபச்சாரிகள், வேசி, பொது மகளிர், பினோதினி, விநோதினி

அதிரடி மன்னன் ஜாக்கிசான்! –1 (Post No.13,530)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.530

Date uploaded in London – 10 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது. 

அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 1 

ச. நாகராஜன்

உலக மக்கள் அனைவரும் அறிந்து போற்றும் ‘பரந்த மனம் கொண்ட துருதுருப்பானவன்’ என்ற அர்த்தத்தைத் தரும் சான் காங் சாங்கை உங்களுக்குத் தெரியுமல்லவா?

தெரியாதா?

இப்படிச் சொன்னால் தெரியும் என்பீர்கள். உலகம் போற்றும் ஸ்டண்ட்- சூப்பர்- மெகா ஸ்டார் ஜாக்கிசானைத் தெரியுமா?

ஓ! தெரியுமே என்று சொல்லாதவர் யார்? சான் காங் சாங் என்பது அவரது இயற்பெயர்.

வறுமையில் வாடியதால், தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளையான ஜாக்கிசான் உலகையே தன் திறமையால் தத்து எடுத்துக் கொண்ட வரலாறை அறிய வேண்டியது அவசியம் தானே! இதோ பார்ப்போம் ஜாக்கிசானை இங்கு!

பிறப்பும் இளமையும்

ஜாக்கிசான் 1954 ஏப்ரல் 7-ம் தேதி ஹாங்காங்கின் பழைய கிரௌன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் பிறந்தார். வறுமையோ வறுமை! அப்படிப்பட்ட ஒரு ஏழை குடும்பம்.

சொல்லப் போனால் அவரது தாயார், பிரசவத்திற்கு உதவிய டாக்டருக்கே குழந்தை ஜாக்கியை 20 டாலருக்கு விற்க எண்ணினார்.

ஏழு வயது வரையில் பெற்றோர் அவரை வளர்த்தனர். பின்னர் அவரது சிஃபுவுக்கே (ஆசிரியர்) தத்துக் கொடுக்க முடிவு செய்தனர். ஒரு சொற்பத் தொகையைக் கொடுத்தார் சிஃபு.

ஒரு கையில் கசங்கிய ஒரு டாலர் நோட்டு. இன்னொரு கையில் பழங்கள் அடங்கிய பை.

ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பெற்றோர் ஏறுவதற்குத் தயாராக இருக்க ஒரு டாலர் கொடுத்து விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டை வாங்கி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார் சின்னப் பையனான ஜாக்கி.

சிஃபு மிகவும் கடுமையான நடைமுறைகளைக் கொண்டவர். அவர் நடத்தி வந்த பள்ளியில் ஜாக்கிசான் பட்டபாடு பெரும் பாடு. அங்கு சிலம்பம், கராத்தே போன்ற சண்டைக் கலைகளும் குதிப்பது தாவுவது போன்ற சர்க்கஸ் வேலைகளும் தான் கற்றுத் தரப்பட்டன. காலம் மாறத் தொடங்கவே பள்ளி மாணவர்களை திரைப்படத் துறைக்கு அனுப்பினார் சிஃபு

முதல் நடிப்பு

குட்டையாகவும் குண்டாகவும் இருந்ததால் அவருக்கு நடிக்க அடித்தது ஒரு சான்ஸ்! எதாக நடிக்க வேண்டும்?’ அங்கு போய் படுத்துக் கிட, செத்த பிணமாக நடி’ என்றார் டைரக்டர். அப்படியே செய்தார் ஜாக்கி சான்.

பின்னர் ஸ்டண்ட் காட்சிகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார்.

1971-ல் ‘லிட்டில் டைகர் ஃப்ரம் காண்டன்’ என்ற படத்தில் பெல் பாட்டம் ஜீன்ஸுடனும் சிறிய மீசையுடனும் முதல் முதலாக திரையில் தோன்றினார் கடுமையாக உழைத்த ஜாக்கிசானுக்கு மளமளவென்று பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அமெரிக்க வெற்றி

ஜாக்கி சான் ஹாலிவுட்டிற்குள் நுழைய பெரும்பாடு பட்டார். ஆனால் அவரை ஹாலிவுட் உள்ளே நுழையவே விடவில்லை. என்றாலும் கூட விடாது செய்த முயற்சியாலும் உழைப்பாலும் ‘ரஷ் ஹவர்’ படத்தின் மூலம் அமெரிக்காவை அவர் வென்றார். படம் வெளியான 17 நாட்களிலேயே 840 லட்சம் டாலர் வசூலானது. அமெரிக்கவில் முதல் வாரத்தில் மட்டும் 330 லட்சம் டாலர் வசூலானது. இந்தப் படம் வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பு. தனியான ஸ்டண்ட் பாணி, அளவான காமெடி இரண்டும் படத்திற்கு பிரம்மாண்டமான வெற்றியைத் தந்தது.

படம் வெற்றி பெற்றவுடன், “இந்த வெற்றிக்காக 15 வருட காலம் காத்திருந்தேன்” என்றார் ஜாக்கி. கடும் உழைப்பு வெற்றியைத் தந்தே தீரும் அல்லவா? அதிரடி மன்னனானார் ஜாக்கிசான்!

சில வரிகளில் ஜாக்கிசான்!

இயற்பெயர் : சான் காங் சாங் (காங் என்பது ஹாங்காங்கைக் குறிக்கிறது)

இன்னொரு பெயர் : சென்யூயென் லாங் – முதல் திரைப்படத்தில் இந்தப் பெயர். இன்னொரு படத்தில் பால் என்ற பெயருடன் நடித்தார்.

புனைப் பெயர் : ஷிங் லாங் . குழந்தையாக இருந்த போது இருந்த பெயர் ‘பௌ பௌ’

பிறக்கும் போது எடை : 12 பௌண்டுகள்

உயரம்: 5 அடி 9 அங்குலம்

ரத்த குரூப் : ஏபி

ராசி : மேஷம்

சீன முறைப்படி, ராசி : குதிரை.

சீன முறைப்படி இதற்கான பலன்கள்: பிரபலமானவர்; வேடிக்கையானவர்; வாயாடி; சுயமாக முடிவெடுப்பவர்; சாகஸம் புரிபவர்; சக்தி மிக்கவர்; நேர்மையானவர்; முன்கோபம் கொள்பவர்: உறுதியானவர்

கண்பார்வை : தெளிவானது. ஒரு கண்ணை மூடிப் பார்க்கும் பழக்கமும் உண்டு

பிறந்த இடம் : ஹாங்காங். சீனர்.

பிடிக்காத சப்ஜெக்ட் : கணக்கு

தொழிலில் அணுகுமுறை : நடிப்பதை உயிருக்கும் மேலாக நேசிப்பது.

நிறுத்தியது : புகைப்பழக்கம் (1990-ல் நிறுத்தி விட்டார்)

பொழுது போக்கு : மனதிற்குப் பிடித்ததை வாங்குவது

முதல் வெற்றி : ஸ்நேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ (1977)

முதல் டைரக்‌ஷன் : ட்ராகன் லேண்ட் (1978)

பிடித்த படம் : டைரக்‌ஷனுக்காக: மிராக்கிள் (1989)

நடிப்பிற்காக போலீஸ் ஸ்டோரி

தெரிந்த மொழிகள் : கண்டோனீஸ், ஆங்கிலம், மாண்டரின், ஜப்பானிய மொழி, கொரிய மொழி

அதிகம் பார்த்த படம் : ‘தி சவுண்ட் ஆஃப் மியூசிக்”

to be continued…………………………

**

Three Robbers and Three Gunas Story; My Research Notes on VC -36 (Post No.13,529)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,529

Date uploaded in London – 9 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Adi Sankara in his Viveka Chudamani (VC) explains in detail the Sattva, Rajas Tamo Gunas (Slokas 110 to 112). It is a summary of Bhagavad Gita’s 14th Chapter Guna Traya Vibhaga Yoga. Lord Krishna speaks about the three Gunas in men

Gunas are translated as modes and they are three, goodness/satva, passion/rajas and dullness/tamas. All of us are born with them.

One commentator gives good examples for the three Gunas from Ramayana:


Ravana – Rajo Guna

Kumbakaarna- Tamo Guna

Vibhishana- Sattva Guna.

All are bothers!

Sri Ramakrishna Paramahmasa (RKP) gives another story to explain it. Sankara just listed them like Bhagavad Gita.

Here is the story of R K P:

A merchant with some valuables travelling alone had to pass through a forest to his home in the city. He was waylaid by three robbers who took away all his possessions.

Then the first robber said, “Let us kill him! ”. The second robber argued, “Why incur the sin of killing him? Let us tie him up firmly to a tree”. The second robber’s advice was followed and they went away leaving him to his fate. After sometime the third robber returned, unbound him and took him to the edge of the forest along a road leading to the city which could be seen at a distance.

The merchant thanked the robber profusely for his kindness and earnestly requested him to accompany him so that he could suitably reward him on reaching home.

However the third robber said, “I cannot come with you to the city as I will be recognized as a robber by the police”.  

Sri Ramakrishna himself offers the explanation for the story.

The world is the forest. The three robbers are three gunas–Sattva ,Rajas, Tamas .

Jiva or the individual soul is the traveller; Self- knowledge is his treasure. Tamas wants to destroy him, while Rajas intercedes and binds him with the fetters of the world, but Sattva protects him from the  action of Rajas and Tamas.

By taking refuge in Sattva the jiva becomes free from lust, anger and delusion

But even the Sattva quality cannot go into the region of the Absolute. That is why the third robber said

Behold, there is your home . Then he disappeared .

So one has to go beyond Gunas and try to reach the God who is beyond Gunas.

Bhagavad Gita says

Lord Krishna states in Verse 14.9 of the Bhagavad Gita:

सत्वं सुखे सञ्जयति रज: कर्मणि भारत |
ज्ञानमावृत्य तु तम: प्रमादे सञ्जयत्युत ||

Sattva binds one to material happiness; rajas conditions the soul toward actions; and tamas clouds wisdom and binds one to delusion.

Thus, it is utterly important to rise beyond the three gunas to be near to God. Lord Krishna further states in Bhagavad Gita Verse 14.19:

नान्यं गुणेभ्य: कर्तारं यदा द्रष्टानुपश्यति |
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति || 

“When wise persons see that in all works there are no agents of action other than the three guṇas, and they know me to be transcendental to these guṇas, they attain my divine nature.”

 xxx

Three Types of Men- Stupid, Bookish, Sage

In another sloka, Sankara says

देहोऽहमित्येव जडस्य बुद्धिः
देहे च जीवे विदुषस्त्वहंधीः ।
विवेकविज्ञानवतो महात्मनो
ब्रह्माहमित्येव मतिः सदात्मनि ॥ १६0 ॥

deho’hamityeva jaḍasya buddhiḥ
dehe ca jīve viduṣastvahaṃdhīḥ |

vivekavijñānavato mahātmano
brahmāhamityeva matiḥ sadātmani || V C 160 ||

160. The stupid man thinks he is the body, the book-learned man identifies himself with the mixture of body and soul, while the sage possessed of realisation due to discrimination looks upon the eternal Ātman as his Self, and thinks, “I am Brahman”. 

Notes:

[Three classes of people are distinguished in this Sloka, of whom the Advaitist is of course given the highest place.

Mixture of body and soul—The average man thinks he is both body and soul acting in unison.]

xxxx

Seven branched Palmyra in Kallal, Tamil Nadu.

Tamil Classification of Men

Poets on Three  Trees

Tamil poetess Avvaiyar and Bhartruhari in his Neetisataka praise the sacrifice of the coconut tree. They say ‘Look at that tree and its message. It sucks water from the ground, stand in scorching sun to give human beings sweet water’

Another poet in Neethi neri venba classified the entire humanity into three kinds.

First type of men is higher in the ladder. They are like palmyra trees. Even if you don’t water it, palmyra gives you fruits. Men with fine qualities don’t expect anything from you and yet they help you. (Sattva Guna)

Next below in the ladder are middle class type. The coconut trees need periodical watering. Some people will help you only when you praise them sky high. Or they expect something from you as reciprocation. (Rajo Guna)

The lowest type of people is like the betelnut tree or banana/ plantain trees. They need continuous watering and then only they give you, their yields. Lowest people always expect something from you and then only come forward to help you.(Tamo Guna)

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல்லென வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்

–வாக்குண்டாம்

Xxxx

மனிதர்கள் மூன்று வகை

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

–நீதிநெறிவெண்பா

–subham—

Tags- Sattva, Rajo, Tamo Gunas, Three Robbers, Three trees, Three types of men, My Research Notes on VC -36, Ramakrishna Paramahamsa, Parable