Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு அதிசய பிரதம மந்திரி; ஒரு அதிசய முதல் மந்திரி!
ச. நாகராஜன்
இன்றைய அரசியல் உலக அளவில் எப்படி இருக்கிறது, இந்திய அளவில் எப்படி இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்..
ஜனநாயகத்தில் நல்ல அம்சங்கள் எப்படி கேவலமாக நாள்தோறும் சிதைந்து கொண்டிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வருத்தமே மேலிடும்.
இந்த நிலையில் இரு செய்திகள் நம் முன் வருகின்றன.
அவற்றைப் பார்ப்போம்:
ஒரு அதிசய பிரதம மந்திரி
நியூஸ்வீக் (NEWSWEEK)என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்திய பிரதம மந்திரிகளுள் இரண்டாவதாக அமைபவர் திரு நரேந்திர மோடி.
இதனுடைய எடிடோரியல் டைரக்டர் திரு தனிஷ் மஞ்சூர் பட் (DanishManzoor Bhat) என்பவர் ஆவார்.
மோடியுடனான தனது பேட்டியின் அனுபவத்தை அவர் தனது டிவிட்டர் பக்கங்களில் இப்படி பதிவு செய்துள்ளார் :
“மீடியாக்களில் படிக்காத ஒரு நரேந்திர மோடியின் ஒரு பக்கத்தை நான் பார்க்க நேர்ந்தது.
அவருடனான பேட்டி ஒரு புதிய உள்ளுணர்வை எங்களுக்கு அளித்தது.
20 நிமிடம் என்று நிர்ணயிக்கப்பட்ட பேட்டியானது சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.
மிகவும் சவாலான கேள்விகளுக்குக் கூட அவர் பதில் அளித்தார். அவர் எங்களுக்குப் பேட்டி அளித்த போது ஒரு விதமான இடையூறும் இல்லை. குறுக்கீடும் இல்லை. ஒருமுனைப்புடன் எங்களுக்கு அவர் பதில் அளித்துக் கொண்டே இருந்தார். ஒருவிதமான போன் குறுக்கீடும் இல்லை. ஒரு குறிப்பேடையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.
இந்தியாவை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய தீர்க்கமான ஒரு பார்வையும் தெளிவும் அவரிடம் இருந்தது.
இந்தியாவின் பயணம் என்பது ஒரு சிக்கலான பயணம் – அதில் சவால்களும் அதே அளவில் வாய்ப்புகளும் உண்டு. இந்த நிலையில் பயணத்தை நடத்த ஒரு வலுவான தலைமை வேண்டும் என்பது விவாதத்தில் முக்கியமான விஷயமாக இருந்தது.
மூன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆவது என்பது, இந்தியாவின் முக்கியமான பயணத்திற்கும் சவால்களுக்கும் மிக முக்கியமானது.
எனது வாழ்த்துக்கள், பிரதம மந்திரி அவர்களே”
இப்படி முடிகிறது அவரது டிவிட்டர் பதிவு.
இந்தப் பத்திரிகையின் அட்டைப்படத்தில் முதலில் இடம் பெற்ற பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி. அவர்கள். அடுத்து இப்போது திரு நரேந்திர மோடி அவர்கள்!
ஒரு அதிசய முதல் மந்திரி!
அவர் பெயர் மோஹன்லால் கட்டர் (Mohanlal Khattar). ஹரியானாவின் முதல் மந்திரியாக இருந்தவர். சில நாட்களுக்கு முன்னரே தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
முதல்மந்திரிக்கான அதிகார பூர்வமான பங்களாவிலிருந்து மிகக் குறைந்த அளவே இருந்த தனது உடமைகளுடன் அவர் ஒரு சிறிய குடியிருப்பிற்கு இடம் பெயர்ந்தார்.
அவர் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்த போது தனது எல்லா உடமைகளையும் சேமிப்புகளையும் நன்கொடைகளாக அளித்து விட்டார்.
இப்போது அவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ இருப்பது அவரது பென்ஷன் மட்டுமே தான்!
இதுவரை நாம் பார்த்த முதல்மந்திரிகள் தங்கள் பதவிகளை விட்டுப் போகும் போது விலை உயர்ந்த சாமான்கள், பரிசுப் பொருள்கள் ஏன் பாத்ரூமில் உள்ள நல்ல குழாய்களைக் கூட எடுத்துச் செல்வதைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் இந்த மனிதரோ தனது இரண்டு பழைய பைகளில் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்!
இவருக்கு நமது வணக்கங்கள்.
இந்த நாட்டில் இவரைப் போல அரசியல்வாதிகள் ஒன்றிரண்டு பேர்கள் இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் நிறைய விலங்குகளைப் பயன்படுத்தி புதிய புதிய செய்திகளை அளிக்கிறார். அவர் அதிகம் பயன்படுத்தும் மிருகங்கள் பசுவும் யானையும்தான் . இன்று யானையை எடுத்துக்கொள்வோம் . அவர் எழுதிய யானைப்பாடல்களில் மிகவும் பிரசித்தமானது மரத்தை மறைத்தது மாமத யானை என்னும் பாடலாகும்; எல்லா ஆன்மீகச் சொற்பொழிவாளர்களும் எடுத்துக்காட்டும் பாட்டு அது.
காஞ்சி சுவாமிகள் (1894-1994) விளக்கியது மிகவும் எளிய தமிழில் இருப்பதால் அதைக் காண்போம்
“ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை, “அப்பா! யானை கிட்டப் போகாதே அது முட்டும்” என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், “இது மரப் பொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச் சமாதானம் செய்து அதையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான்.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.-2251
குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
என்று இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.
திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில் தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.
யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர். பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்ம மயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.”
Sublimation of Thought
Think of wood
Image of toy-elephant recedes;
Think of toy-elephant
Image of wood recedes;
Think of elements five
Thought of Param recedes
Think of Param,
Thought of elements recedes.
xxxx
என் கருத்துக்கள்
தமிழில் சம்ஸ்க்ருத சொற்கள் இல்லாத நூல் எதுவுமே இல்லை . சம்ஸ்க்ருதம் வேண்டாம் என்று சொல்லுவோர் திருமந்திரம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு சமம். எல்லா பொழிப்புரைகளும் ஸம்ஸ்க்ருதத்திலுள்ள ஆன்மீக விஷயங்களை எடுத்துரைக்கின்றன.
இரண்டாவது விஷயம் ரிக் வேதம் போல , பல சொற்களைப் பரிபாஷையில் பிரயோகிக்கிறார் திருமூலர். பசு என்றாலோ யானை என்றாலோ அவர் கூறுவது விலங்கு அல்ல. அதை வைத்து அவர் வேறு விஷயங்களைச் சொல்கிறார்.
மூன்றாவது, யானை, பசு என்பதெல்லாம் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு பொருளில் வரும். வேதங்களை மொழிபெயர்த்த, வெள்ளைதோல் வெளிநாட்டுக்காரர்களுக்கு இது தெரியாது ஆகையால் இந்திரன் என்பதை ராஜா என்ற பொதுச் சொல்லால் மொழிபெயர்க்காமல் ஒரே இந்திரன் 4 வேதங்களில் உள்ள எல்லா இடத்திலும் வருவதாக “முழி” / மொழி பெயர்த்துவிட்டனர்.
காஞ்சி பரமாசார்யார் (1894-1994) போன்றோர் இந்திரன் ஒரு ஆள் அல்ல என்பதை உபன்யாசங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள் .
பசு என்பதும் பசுமாடு அல்ல என்பதை அரவிந்த மகரிஷி தெளிவுபடுத்துயுள்ளார். மாக்ஸ் முல்லர் கும்பலுக்கு இது தெரியாது. சர்வ முட்டாள்கள் அவர்கள்.
XXXX
3 சிங்கம், 4 நரி, 5 யானை
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.
Enemies of Thought For God
In their bewildered thoughts
Are the lions three (lust, anger and ignorance);
In their bouncing thoughts
Are the jackals four (mind, intellect, will and egoity)
In their sensory thoughts
Are the elephants five (taste, sight, touch, sound, smell)
These the foes (internal and external)
Of the contending mind.
(சிங்கங்கள் மூன்று – காமம், வெகுளி, மயக்கம். நரிக்குட்டி- அந்தக்கரணங்கள். ஆனைக்கன்று – 5 பொறிகள். பால் இரண்டு – பிரவிர்த்தி, நிவிர்த்தி.
(ப. இ.) நம் எண்ணத்தில் காமம் வெகுளி மயக்கங்கள் என்னும் அரிமா/சிங்கங்கள் மூன்றுள்ளன. நெஞ்சினுள் எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் நரிக் குட்டிகள் நான்குள்ளன. அதுபோல் நெஞ்சினுள் செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் யானைகள் அஞ்சுள்ளன. இப் பகைப்பொருளாகிய அரிமா நரிமா கரிமா என்னும் பன்னிரண்டுடன் துன்னிநிற்கும். அந் நெஞ்சினுக்கு ஆடுதலும் அடங்குதலும் ஆகிய இருவகைத் தொழில்கள் உள்ளன.
ஆடுதல் – பிரவிர்த்தி. அடங்குதல் – நிவிர்த்தி. இவற்றை முறையே ஓடுதல், ஒடுங்குதல் எனவும் கூறலாம்.
xxxx
வானகம் செல்ல சுருக்கு வழி
ஆனைகள் ஐந்தும் அடக்கி, அறிவு என்னும்
ஞானத்திரியைக் கொளுவி அதனுள் புக்கு
ஊனை இருள் அற நோக்கும் ஒருவர்க்கு
வானகம் ஏற வழி எளிதாமே —திருமந்திரம் 2277
ஐம்புலன்களையும் ( ஆனைகள் ஐந்தும் ) கட்டப் படுத்துவது சாதாரண மனிதருக்கு எளிது அல்ல .இருப்பினும் முறையான யோகப் பயிற்சியின் மூலம் தவம் இயற்றுவோர் பொறிகள் ஐந்தினை முறைப்படுத்தி அறிவு என்னும் ஞானத்திரியால் விளக்கை ஏற்றி அதனுள் புகுந்து தமது உடம்பினுள் ஊடுருவி உள் ஒளி பெருக்கி பாச இருளை அகற்று வோர்க்கு வானகம் செல்ல வழியுண்டாகும் என்கிறார் திருமூலர்
Attain Jnana and Enter Heavenly Home
He who, the elephants of senses five subdues,
Lights the lamp of Jnana
And entering its radiance,
Drives the darkness within;
For him It is easy
To ascend the Heavenly Home (Siva Loka).
திருவள்ளுவரும் ஐம்புலன்களை 5 யானைகள் என்று கூறியிருப்பதை ஒப்புநோக்குதல் அவசியம்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.–திருக்குறள் 24
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.”
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
With hook of firmness to restrain The senses five, is heaven to gain.
பரிமேலழகர் உரை:
இதன் பொருள்:
உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் = திண்மை என்னும் தோட்டியால், (பொறிகளாகிய யானை) ஐந்தனையும் (தத்தம் புலன்கள்மேற் செல்லாமற்) காப்பான்;
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து = (எல்லா நிலத்தினும்) மிக்கது என்று சொல்லப்படும் வீட்டுநிலத்திற்கு ஓர் வித்தாம்.
xxxx
10 புலிகள், 15 யானைகள்,
பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரன்றே.
How the Body is
Ten the tigers big,
Ten and Five the elephants,
Five the learned
Ten the jesters,
Three that are upright
Six the physicians,
Five the lordly ones,
There they all stand.
பத்துநாடிகளும் பத்துப் பெரும்புலி எனப்பட்டன. பூதம் ஐந்து, பூதமுதலைந்து, புலனைந்து ஆகிய பதினைந்தும் யானை என்று உருவகிக்கப்பட்டன. பூதமுதல் – தன்மாத்திரை. புலன் – ஓசை முதலிய நுகரப்படும் பொருள்கள். அறிதற்கருவி ஐந்தும் வித்தகர் எனப்பட்டன. காற்றுக்கள் பத்தும் வினோதகர் எனப்பட்டன. ஈரெண்மர்: இரண்டு + எட்டு – இருவர் எண்மர் = பதின்மர். அமைதி, ஆற்றல், அபந்தல் என்னும் குணம் மூன்றும் மூவர் எனக் கூறப்பட்டது. பிறத்தல், கற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு என்னும் அறுவகை நிலையினையும் மருத்துவராகக் கூறினர். அவ்விடத்து ஐம்பாடுகள் உண்டு. அவை நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பன. பத்துநாடிகள்: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச் செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு, என்பன. இவற்றை முறையே இடைகலை. பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு எனவும் கூறுப. காற்றுக்கள் பத்து: உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்ப. இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனவும் கூறுப.
(அ. சி.) பத்துப் பெரும்புலி – தசநாடி. யானை பதினைந்து – மண் முதலைந்து, சுவை முதலைந்து, வாக்காதி – ஐந்து. வித்தகர் ஐவர் – ஞானேந்திரியங்கள். வினோதகர் – உடலின்கண் ஊழியம் செய்பவர். ஈரெண்மர் – பத்து வாயுக்கள். மூவர் – முக்குணம். அறுவர் – பிறத்தல் முதலிய விகாரங்கள். அத்தலை – அவ் வுடம்பில். ஐவர் – ஐந்து அவஸ்தைகள்.
If you recite Vishnu Sahasranama (VS), you recite all Hindu Gods’ names . Many people who recite VS do not realise that they recite the names of Shiva, Skanda, Ganesa, Sastha, Goddess Durga, Lakshmi, all Vedic Gods and many others.
All the Avatars of Vishnu including Rama, Krishna, Parasurama (Halayudha), Vamana, Narasimha are in the VS.
Let us look at some Gods names
Jyotir Ganeswara – – Word No.327-Lord Ganapathy/ Ganesh
(We come across Kapila, Sumukah in VS; Both are names of Lord Ganesh)
I find more Siva names in VS than names of other Gods. Some attributes for gods are found in all Sahasranamas. I took only the specific ones.
xxx
Vrsakapi
This is a Vedic deity with lot of funny interpretations such as sexy monkey etc by half -baked Western Indologists. Since it is in the Sahasranama it is as old as Vedic literature.
Sipivishta
Another Vedic deity. Names of Vedic deities are found only in this hymn. That proves that VS is the oldest.
Margo (Way)- I am the Way.(Bible copied it from Hindu scriptures)
Indra- Vedic God Indra comes in words such as Mahendra, Kapindra, Upendra in many places.
xxxx
Shankara’s Commentary
Shankara gives different meanings for the above words. He quotes from the Upanishads to justify his interpretation.
xxx
Colours in VS
It is interesting to see Colours in VS. it explodes the White’s myth of White Aryan and Brownish black Dravidians.
Hindus worship black skinned Gods and White skinned Gods . They also worship bearded and moustached Gods and completely Shaven Gods without any difference. Only when the ‘Divide and Rule’ cunning fellows started interpreting our scriptures, such differences are known to us. They divided Shiva into two as Vedic Rudra and Later Shiva, Vedic Kartikeya and later Tamil Muruga. But the people who wrote Tamil and Sanskrit Hymns never said anything like that.
Following colours found in VS also expose the cunningness of Western Indologists.
Havir-Harih – Word No.359-
Shankara in his commentary says, Hari can mean one who is blue in complexion. We know Krishna means black.
Rohitah –Word No.364- one who assumes at His will a body that is Rohita/red in complexion.
English word Red itself came from Rudra, Rohita.
Krishna – Word No.57-since he was utter black, he was called Mr. Black.
Suvarnavarna – Word No.737—golden coloured
Suvarnabinda- Word No.800- God with golden parts
God has no specific colour or form. He can take any colour or form at His will.
Kapilah- Word No.898- a sub terranean fire in the ocean is Kapila , light red in colour. Being identified with that fire, the lord is here denoted by the colour of that fire, according to Shankara. It is also greyish black.
Adityah – Word No.39- The golden-hued person in the sun’s orb.
சைலண்ட் ஸ்பிரிங் நூலில் அவர், அமெரிக்காவின் நடுவில் இருப்பதாக ஒரு கற்பனை நகரத்தைப் படைத்தார்.
நகரமே நாசமானது – கெமிக்கலினால். ஆடு மாடுகள் அழிந்தன. மக்கள் மடிந்தனர். பறவைகள் ஒழிந்தன. தேனிக்கள் முற்றிலுமாகக் காணாமல் போனது. வயல்கள் வாடின. ஏரி, குளம், ஆறுகள் வறண்டன. மீன்கள் அழிந்தன. கறிகாய்களையே காணோம். மருத்துவர்கள் காரணம் தெரியாமல் விழித்தனர். மொத்தத்தில் சர்வ நாசம்.
இதற்குக் காரணம் மக்களே. கெமிக்கல்களை அவர்கள் ஆதரித்ததே இதற்குக் காரணம்.
இப்படி நூலைப் படைத்த ராக்கேல், மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். DDT பற்றி ஏதாவது செய்யுங்கள் என்றார்.
இந்தப் புத்தகம் எழுந்ததே அவர் இளமையில் கண்ட ஒரு காட்சியினால் தான்!
ராக்கேல் சிறுமியாக இருந்த போது அவரது படுக்கை அறை ஜன்னல் வழியே ஒரு மைல் தூரத்தில் உள்ள குதிரைகளை வெட்டித் தள்ளும் ஒரு கசாப்புத் தொழிற்சாலையைப் பார்த்த வண்ணம் இருப்பார். அதிலிருந்த புகைபோக்கியிலிருந்து எழும் புகை வானத்தை மறைக்கும்.
மாலை நேரத்தில் வெட்டப்பட்ட உபயோகமற்ற மாமிசக் குவியலிலிருந்து எழும் நாற்றமும், குதிரை மாமிசத்தினால செய்யப்பட்ட உரத்தின் நாற்றமும் கிராமம் வரை வந்து அனைவரையும் வாந்தி எடுக்கச் செய்யும். ஆகவே மாலை நேரங்களில் கிராம மக்கள் வீ டுகளின் கதவுகளைத் திறப்பதே இல்லை.
இந்த அவலத்தினால் ராக்கேலின் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டதில் வியப்பில்லை.
இதனால் தான் கற்பனை நகரத்தை தனது நூலான மௌன நீரூற்றில் உருவாக்கி அதனால் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கிய நகரம் பற்றிக் கூறி அமெரிக்கப் பெண்மணிகளின் கவனைத்தை அவர் ஈர்த்தார். அனைத்துப் பெண்மணிகளும் அவருக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்தனர்.
அமெரிக்காவின் தேசீயச் சின்னமான கழுகு ஒரு லட்சத்திலிருந்து 500 ஜோடிகளாகக் குறைந்தது ஏன்?
இரசாயன உரத்தினால் தான். அபாயகரமான உரம் அதன் முட்டைகளைக் குஞ்சு பொறிக்க விடாமல் பொறிப்பதற்கு முன் முட்டைகளை உடைத்து விட்டதால் இந்த அபாயம் ஏற்பட்டது!
இதையெல்லாம் உணர்ந்ததால் உலக மக்களிடையேயும் ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது;௧
கென்னடி அமைத்த குழு
புத்தகத்தின் தாக்கத்தை உணர்ந்த அமெரிக்க அரசும் விழித்தெழுந்தது.
ஜனாதிபதி கென்னடியின் தலைமையிலான ஒரு விசேஷ குழு இதை ஆராய ஆரம்பித்தது.
1962, ஆகஸ்ட் மாதம் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியான கென்னடியிடம், அரசு DDT பற்றி ஏதேனும் செய்யப் போகிறதா இல்லையா என்று கேட்டனர்.
அவர் உடனடியாக இப்படி பதிலளித்தார்:
“ஆம்.செய்யப் போகிறோம். குறிப்பாக மிஸ் கார்ஸனின் புத்தகத்தால் தான். ஆனால் இதை அவர்கள் (கமிட்டி) பரிசீலித்து வருகிறார்கள்”.
கென்னடியின் அறிவியல் குழு 1963 மே மாதம் 15ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.
“சைலண்ட் ஸ்பிரிங் வெளிவரும் வரை பொதுவாக உரங்களில் விஷத் தனமை இருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் சுற்றுப்புறச்சூழல் கேட்டை ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்துவன் மூலமே தடுத்து நிறுத்த முடியும்.”
வணிக நோக்கில் இது வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் ரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் விடாது போராடிய கார்ஸனுக்கு மக்களின் ஆதரவினால் வெற்றியே கிடைத்தது!
1972இல் அமெரிக்க அரசு விவசாயத்தில் DDT உபயோகத்தைத் தடை செய்தது.
என்றாலும் கூட மலேரியாவைத் தடுப்பதற்கு DDT அனுமதிக்கப்பட்டது. இதையும் ராக்கேல் எதிர்த்தார்.
இதய நோயால் பாதிப்பு
இதற்கிடையில் அவரது உடல் நிலை இதய நோய்களுள் ஒன்றான ஆஞ்ஜினா (ANGINA) வியாதியால் பாதிக்கப்பட்டது.
அவருக்கு மார்பகப் புற்று நோயும் வந்து சேர்ந்தது.
1964இல் கான்ஸர் உடல் முழுவதிலும் பரவி விடவே அவர் தலைமயிர் எல்லாம் உதிர்ந்து தலை வழுக்கையானது. எலும்புகள் பலஹீனமாக ஆகி விடவே அவர் வீல் சேரிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
1964 மார்ச் மாதம் கான்ஸர் கல்லீரலைத் தாக்கி அவரை வெகுவாகப் பாதித்தது.
அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் ஒரு ரேடியோ ஆக்டிவ் பதியத்தை அவர் உடலில் பதியம் செய்தனர்.
இது போன்ற உடல் நிலையில் தான் அவர் அமெரிக்க கமிட்டி முன்னர் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
DDT போன்ற இரசாயன உரங்கள் முதலில் பூச்சிகளைக் கொல்லும். பின்னர் உணவுச் சங்கிலித் தொடரினுள் புகுந்து உணவையே நச்சாக்கும். அதனால் பறவைகள், மீன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்தொழியும். ஏனெனில் அவை இப்படிப்பட்ட நச்சு உணவுகளை உட்கொள்ள வேண்டிய சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு உருவாவதால் தான்! ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்றார் அவர்.
‘மக்கள் விஞ்ஞானி’ என்ற பெயருடன் புதுமையாக மலர்ந்த அவர் மக்களுக்காக அரிய உண்மைகளைப் புள்ளி விவரங்களுடன் தொகுத்து வழங்கினார்.
நடக்க முடியாமல் அவர் தன் இருக்கைக்கு மெதுவாகத் திரும்பியது அனைவரையும் உருக்கியது.
தலை வழுக்கை தெரியாமல் இருக்க ஒரு ‘விக்’கை அவர் அணிந்திருந்தார்.
மறைவு
தனது வியாதி பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆகவே அவரது கான்ஸர் பற்றி இறுதி வரை மக்களுக்குத் தெரியவில்லை.
1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அவர் காலமானார்.
அவரது அஸ்தியின் ஒரு பகுதி மேரிலாந்தில் அவரது தாயாரின் கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்னொரு பகுதி ஷீப்ஸ்காட் பே என்ற இடத்தில் தெளிக்கப்பட்டது.
இன்று சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் அம்சங்கள் முன்பை விட ஏராளமாகப் பெருகி விட்டன. ஆனால் ராக்கேல் கார்ஸன் போல அயராது பாடுபட்டு அந்த அம்சங்களை ஒழிக்க ஆள் தான் இல்லை.
‘தி நன் ஆஃப் நேச்சர்’ – இயற்கையின் கன்யாஸ்தீரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கார்ஸனின் புகழ் என்றும் இலங்கும்!
ராக்கேலின் செய்தி
ராக்கேல் கார்ஸன் உலக மக்களுக்குக் கூறியது ஒன்றே ஒன்று தான் – “மனித குலமும் உயிரினங்களும் நீடித்து இருக்க, இயற்கையை நேசியுங்கள், சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தாதீர்கள்!”
தொட்டால் சுருங்கி இருக்கும் இடத்தைப் பார்த்துக்குறித்துக்கொண்டு சூரியன் கடக்க ராசியிலிருக்கும்போது , ஸ்நான பானம் செய்து பரிசுத்தனாக மேற்படி மூலிகை இருக்குமிடத்திற்குச் சென்று மதுரமான வஸ்துக்களை நிவேதனம் செய்து பரங்கி சாம்பிரா ணியை ஒத்த (சனிக்கிரகம்) சம்பந்தமான வஸ்துக்களை தூபதீபங்கொடுத்து தன்னுடைய நிழல் செடியின் பேரில் படாமல் வேரோடு பிடுங்கிவந்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சூரியன் கடக்க ராசியில் வரும்போது இடித்து வஸ்திரகாயம் செய்து ஒரு மிளகளவு சூரணத்தை அப்போது கறந்த பசுவின் பாலில் கலந்து துலா- அமுர்த- தூலா சணலாத நமோநமோ நம சுவா) என்ற மந்திரத்தை ஏழுதரம் ஜெபித்துக் குடிக்கவும் . இப்படி ஒருவாரம் விடாமல் குடித்தால் வயிற்றிலுள்ள வண்டலைப் பற்றிய ரோகங்கள் யாவும் நிவர் த் தியாகும் . சகல சளி சுரங்களும் தொந்த ரோகங்களும் தீரும்
ந
385.குறுக்குவலி வாய்வுக்கு
நருக்குமூல மென்கிற கண்ட திப்பிலியை அரைத்து பாலிற் கொள்ள குறுக்குவலி வாய்வு தோஷம் – வாத தோஷம்- நாவறட்சி இவை தீரும்.
நரிக்கொண்ணை மூலத்தைப் பாலில் உபயோகித்து வந்தால் , யானை சொறி- கிருமிப்புடை — அரிப்புடை – இவை தீரும்.
XXXX
பல ரோகங்களுக்கு
நன்னாரி வேர் பச்சையாகக்கொண்டுவந்து கொட்டைப்பாக்களவு எடுத்து அரைக்கால்படி பசும்பாலில் கலக்கி சாப்பிடவும்.இப்படி 20 நாள் சாப்பிட்டால் மூ லக்கொதிப்பு — அஸ்திகா ங்கை – மேகச்சூடு – மேகவெட்டை – நீர்க்கடுப்பு- நீர் இத்து விழுதல் முதல் மூத்திரக் கிருச்சினம் – உள் வறட்சியினால் காணும் இருமல் இவை தீரும். இந்த வஸ்துவை நாட்பட சாப்பிட்டு வந்தால் நரை திரை மாறும் .
XXXX
புரயிசிவு தலைவலிக்கு
நஞ்சசுறுப்பான் பூண்டு கொஞ்சம் எடுத்து ஓன்றிரண்டாய் தட்டி நல்லெண்ணெயில் போட்டுக்காய்ச்சி தலை முழுகி வந்தால் மேற்படி ரோகம் தீரும் .
XXXX
390. படைகளுக்கு
நத்தையை சுட்ட சாம்பலில் தேன் விட்டரைத்து படைகள் ஓரத்தில் வரும் புண்களின் மேல் தடவினால் குணப்படும் .
நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இதை சிறுமொட்டை என்றழைக்கின்றனர். காய் , வேர் பட்டை , ஆகியவற்றை வேறு சில மூலிகைகளுடன் தண்ணீரில் காய்ச்சி அந்தக் கஷாயத்தை 30 நாட்களுக்கு கு டிக்கின்றனர்
xxxx
F63. Family: Solanaceae
182. Capsicum annuum L.மிளகாய் வகைகள்
குடும்பம் – சோலனேசி
182-கேப்ஸிகம் அன்னம் மிளகாய் வகைகள்
பாம்புக்கடிக்கு மத்திய இந்திய பழங்குடி மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.
xxxx
183. Datura metel L.
183.டாதுரா மெடல் / கரு ஊமத்தை
மத்திய இந்திய பழங்குடி மக்கள் விதை களையு ம், உத்தர பிரதேச மக்கள் இலைகளையும் நிகோபார் தீவு மக்கள் இலைமசியலையும் பயன்படுத்தி பாம்புக்கு கடிக்கு சிகிச்சை தருகின்றனர் .
xxxx
184. Solanum capsicoides All.
சொலானம் கேப்ஸிகாய்டஸ்
வங்க தேச மக்கள் இந்த மூலிகையின் எட்டு விதைகளை சாப்பிடக்கொடுத்து வாந்தி வரும்படி செய்கின்றனர். ஒரு நாளில் இவ்வாறு மூன்று முறை கொடுக்கினறனர்
xxxx
185. Solanum torvum Sw.
சொலானம் டோர்வம்
வங்க தேச மக்கள் இதன் இலை , வேர் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாந்தி வருமாறு செய்கின்றனர்.
xxxx
186. Withania somnifera (L.) Dunal
186.விதானியா சோம்னிபெரா
கர்நாடக மக்கள் இதை அசுவகந்தி என்று சொல்லுவார்கள். சிக்மகளூர் வட்டார மக்கள் வேரினை மசித்து பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள்.
xxxx
F64. Family: Staphyleaceae
187. Staphylea emodi Wall.
குடும்பம்– ஸ்டாபைலியேசி
187.ஸ்டாபைலியா எமோடி
பாகிஸ்தான் மக்கள் இதை சித்ரா என்பர். இஸ்லாமாபாத் வட்டார மக்கள் இதன் மூலம் சிகிச்சை தருகின்றனர்.
xxxx
F65. Family: Theaceae
188. Schima wallichii Choisy
குடும்பம்- தியேஸி
188. ஸ்கீமா வல்லிச்சி சோய்சி
மேற்கு மிஜோராம் மக்கள் , இதன் பழத்தின் சாற் றை அளிக்கின்றனர்.
xxxxx
F66. Family: Vitaceae
189. Leea compactiflora Kurz
குடும்பம் – வைடெஸி
189.லீயா காம்பேக்ட்டி ப்ளோரா
பழத்தை இடித்து அதை பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர். இதை அருணாசல பிரதேச மக்கள் பயன்படுத்துகிறார்கள்..
xxxx
F67. Family: Verbanaceae
குடும்பம் – வெர் பனேஸி
190-லான்டனா கேமரா
மத்திய பிரதேச ரேவா ஜில்லா மக்கள் வேர், பூ, தண்டு ஆகியவற்றைக் காய்ச்சி கஷாயம் வைத்துக் கொடுக்கிறார்கள்.
xxxx
191. Lantana indica Roxb.
191. லாண்டனா இண்டிகா
பாகிஸ்தான் மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது
xxxxx
192. Vitex negundo L.
192.வைடெக்ஸ் நெகுண்டோ / கருநொச்சி
கர்நாடக, கேரள , ஹிமாசல பிரதேச மக்கள் பயன்படுத்தும் மூலிகை . இலையை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள்.
பலர் தடைகளைச் செய்த போதிலும் விடாது போராடி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும் உயிரினங்களையும் காத்த ஒரு அதிசயப் பெண்மணி ராக்கேல் கார்ஸன். அமெரிக்க ஜனாதிபதி கென்னடியையே ஒரு கமிட்டி அமைக்க வைத்து தனது கூற்றை நியாயப்படுத்திய இந்த அமெரிக்கப் பெண்மணி அதிகம் அறியப்படாதவர். ஆனால் அரிய செயலைச் செய்தவர்.
இவரைப் பற்றித் தெரிந்து கொள்வது இயற்கை ஆர்வலர்களுக்கு உத்வேகம் ஊட்டும்.
பிறப்பும் இளமையும்
அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் 27-5-1907இல் ராக்கேல் கார்ஸன் சாதாரணமான நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார்.
அவரது தந்தை ஒரு டிராவலிங் சேல்ஸ்மென். ஆகவே பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார்.
தாயோ ஒரு இசைப் பாடகி. மகளின் புத்தி கூர்மையைக் கண்டு வியந்த தாய், தனது பெண்ணை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பணம் பெரிய பிரச்சினையாக இருந்தது. தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை விற்றார். படிப்புக்கு வழி வகுத்தார்.
தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் – இயற்கையை நேசிப்பது. இயற்கைக்கு ஊறு விளைவிப்போரை அவரால் சிறுவயதிலிருந்தே பொறுக்க முடியாது. பொங்கி எழுவார்.
இது பின்னால் உலக மக்களுக்குப் பெரிய நன்மையைச் செய்தது!
இளம் வயது எழுத்தாளர்
எட்டாம் வயதிலேயே ராக்கேல் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நமது அம்புலிமாமா போல செயிண்ட் நிக்கலஸ் என்ற மாதப் பத்திரிகை ஒன்று குழந்தைகளுக்காக அமெரிக்காவில் வெளி வந்து கொண்டிருந்தது. அதை குடும்பத்தினர் படிப்பது வழக்கம்.
1918, மே மாதம் தனது 11ஆம் வயதில் ராக்கேல் ஒரு கதையை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அது நான்கு மாதங்கள் கழித்து பத்திரிகையில் வெளியானதோடு சன்மானமாக பத்து டாலரும் கிடைத்தது.
இரண்டே வருடங்களில் அவரது கதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் கதைகளாக அமைந்தன. இதனால் மகிழ்ந்த பத்திரிகை நிர்வாகம் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு செண்ட் அளிக்க முன் வந்தது.
தனது பண்ணை நிலத்தில் நிறைய நேரம் செலவழிப்பது அவரது இளமைக்கால பொழுது போக்காக அமைந்தது.
உயிரியலாளர்
27ஆம் வயதில் கல்லூரிப் படிப்பை ராக்கேல் முடித்த போது அவரது தந்தை 71ஆம் வயதில் இறந்தார்.
கடல் வாழ் உயிரினம் பற்றிய உயிரியலாளராக அவர் திகழ்ந்தார்.
கடலைப் பற்றிய அனைத்தும் அவருக்கு அத்துபடி.
ரொமான்ஸ் அண்டர் தி வாட்டர் (Romance Under the Water) என்று மீன்களைப் பற்றி அவர் எழுதிய வானொலி உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது
அரசு வேலை ஒன்றும் அவருக்குக் கிடைத்தது. ஆகவே பணக் கவலை ஒழிந்தது. திருமணத்தைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. தனியாகவே இறுதி வரை வாழ்ந்தார்.
அப்போது இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பேர்ல் ஹார்பர் மீது நடந்த தாக்குதலினால் அமெரிக்கர்கள் அனைவரும் அதில் கவனம் செலுத்தவே 1941-ல் வெளியான அண்டர் தி சீ விண்ட்(under the sea Wind) என்ற அவரது புத்தகத்தைப் பற்றி யாரும் கவனிக்கவில்லை ஆனால் அடுத்து 1950இல் “சீ அரவுண்ட் அஸ்” (Sea Around Us) என்ற அவரது புத்தகம் உலகளாவிய விதத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆறே மாதங்களில் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அத்துடன் பல விருதுகளும் மெடல்களும் அவரைத் தேடி வந்தன.
ஆயிரக்கணக்கான மக்கள் அவரை ஆவலுடன் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.
இயற்கையை உற்றுக் கவனித்து வந்த ராக்கேல் அதற்கு நாசம் விளைவிப்போரை எளிதில் இனம் கண்டார்.
மனிதர்கள் இயறிகையை அழிக்கலாமா, கூடாது என்று முடிவெடுத்த அவர் சைலண்ட் ஸ்பிரிங் – மௌன நீரூற்று – (Silent Spring) என்ற நூலை எழுதி செப்டம்பர் 1962இல் வெளியிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி நூலைப் படித்து வியந்தார். உலக மக்களின் அனைவரின் பார்வையையும் இது திருப்பியது. பெருத்த சர்ச்சையையும் தோற்றுவித்தது.
தமிழ்நாட்டில் ராஜாஜி கூட சுற்றுப் புறச் சூழல் கேட்டை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட ஆரம்பித்தார்.
DDT இரசாயன உரத்தின் கேடு
விஷயம் என்ன?
அப்போது டிடிடி (DDT) என்ற உரம் வயலில் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. இதைப் பற்றிக் கவலை அடைந்த ராக்கேல் அதை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் இறங்கினார்.
1939இல் பால் முல்லர் (Paul Muller) என்பவர் DDT என்ற இரசாயனத்தை வயலில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் என்றார். இதை ஏற்ற அமெரிக்க ராணுவம் 1943இல் நேப்பிள்ஸ் நகரில் இதைத் தெளித்தது. அதனால் அந்த நகரில் பத்து லட்சம் பேர் தொற்று வியாதியினால் பீடிக்கப்பட்டனர்.
1948 இல் DDT-ஐக் கண்டு பிடித்த முல்லருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க DDT அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தெளிக்கப்பட்டது.
1959இல் 40000 டன்கள் DDT அமெரிக்கா முழுவதும் தெளிக்கப்பட அமெரிக்காவே கெமிக்கலினால் பாதிக்கப்பட ஆரம்பித்தது.
Adi Shankara’s commentary on Vishnu Sahasranama (VS) gives us new interpretation of many words. We know Krishna means Mr Black. But Shankara gives new information.
Devaki-nandanah- Word or naamaa No.989
The son of Devaki in the incarnation as Krishna. Mahabharata 158-31 says
Jyotismi sukraani ca yaani loke!
Trayo lokaa lokapaalaas trayii ca
Trayo gnayas caahutayas ca pancha
Sarve devaa Devaki putra eva
Meaning
All the luminous bodies in the sky including the planets and the stars, all fires, and in the same way the three worlds, their guardian angels, the three vedas, the three Vedic fires, the five oblations, the entire group of Devas—all this is the son of Devaki.
My comments
All Bhajan songs, Krtis, Keertanas, compositions give more importance to Krishna’s mother Devaki or foster mother Yasoda than his father Vasudeva. This is the greatness of Hinduism. No culture or religion in the world praises women like Hinduism. Manu Smrti places women in the highest position. One sloka/ couplet says Mother is thousand times greater than father. Other two slokas say if a woman is made to cry or weep in a house, the family will be destroyed completely. Brothers must keep their sisters happy by buying them dress and jewellery. No one can show any praise or support for women in any part of the world like this. Manu wrote those slokas 2500 years ago or long before that.
xxxx
Krsnah – Word or naamaa No.57
The Existence- Knowledge- Bliss. Says Mahaabahaarata- Udhyoga Parava 70-5,
Krsir bhuuvaacakah sabdo nas ca nirvrti vaacakah
Visnus tad -bhaava yoga ca Krno bhavati saasvatah
Meaning
The syllable Kr denotes existence, the syllable Na denotes bliss. Vishnu is both these. So He is always Krsna.
(Sat- Chit- Aananda)
xxxx
Krsnah – Word or naamaa No.550
One who is known as Krsna-dvaipayana. Says Vishnu Purana,
Ko hy anyah pundarikaaksanMahaabhaarata- krt bhavet!!
Meaning
Know that the Vyaasa known as Krsna dvaipaayana was the Lord Naaraayana Himself. Who except the lotus eyed Lord can produce a work like Mahaabhaarata?
My comments
The introductory slokas of VS also confirm it.
Vyaasaaya Vishnu rupaaya Vyasa rupaya vishnave.
Another couplet gives four generations of Vyasa- Vyasa, Vasistha, Sakti- Suka.
My research shows Vyasa was the person who wrote the longest epic and credited with the highest number of literary productions. No one can match him. Without him, Hindus would have lost 18 Puranas and Mahabharat.
xxxxx
Short cut to cure our sins!
Adi Shankara was so compassionate that he composed so many simple slokas to cure our sins. At the same time, he followed all ancient rituals and established Mutts in nook and corner of India for continuing those rituals. We see them even in today’s Shankara Mutts.
Paapanaasanah – Word or naamaa No.992
He who destroys the sins of those who adore Him, remember and sing hymns of praise on Him. The text known as Vrddha- saataapa says,
Pakso pavaasadyat paapam purusasya pranasyati
Praanaayaama -satena iva tat paapapam nasyate nrnaam!!
Sana-maatrena tat paapam harer dhyaanaat pranasyati
Meaning
–Whatever sin of a man is atoned for by one week’s fasting, that is achieved by a hundred Praanaayaamas. So also whatever sin is atoned for by a thousand Praanaayaamas, that is atoned for by meditation upon Hari even for a while.
–subham–
Tags- Krishna, Sin Cure, Secrets from Vishnu Sahasranama , Part 15 , Vyasa
பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் அன்னப்பறவை குடிக்கும் என்ற ஒரு விநோதச் செய்தியும், ஆமை தனது உடலுறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள் இழுத்து பாதுகாத்துக் கொள்ளுவது போல புலனடக்கம் தேவை என்றும் காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டு தன் குஞ்சுகளை வளர்த்துக் கொள்ளும் என்றும் சம்ஸ்க்ருத இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் எல்லாப் புலவர்களும் பாடி வைத்துள்ளனர். திருமூலரும் இந்த மூன்று செய்திகளையும் தனது பாடலில் சொல்கிறார்.
குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால், காக்கை சிறிதும் சந்தேகம் கொள்ளாது அம் முட்டையினை அடைகாத்துத் தன் குஞ்சைப்போலவே வளர்க்கும். அதுபோல் தாயும் போக மயக்கத்தால் இயங்காமலும், ஏன் என்று கேட்காமலும், கருவில் உள்ள சரீரத்தைக் காக்கின்றாள். இறைவனின் அருளும் தாயின் தன்னலமற்ற கருணை போன்றதே என்பதே செய்தி.
How Maya Fosters Babe
The koel bird leaves its egg in the crow’s nest;
The crow hatches it, nurses it, suspecting nothing;
It does not move it, does not reject it,
Does not ask why,
So does Maya the young one foster.
xxxx
அன்னம்/ பால்
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.
பொழிப்புரை : தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் தீயில் விழுந்த வித்துப்போலக் கெட்டொழியும்.
பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வரும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!
உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.
அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.
அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன.
He Roasted the Seeds of Recurring Births
Like unto the swan that from milk the water parts,
So the Lord, Himself, alone, in this Sabha unique,
Grasped the senses many that scorch like fire,
And thus the Seven Births unto roasted seeds rendered.
xxxx
தமிழர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)
ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.
இந்த ஆமை உதாரணத்தை பகவத்கீதை (2-58), மனு ஸ்மிருதி (VII-105), திவ்வியப் பிரபந்தம் (2360), திருமந்திரம் (2264, 2304), மகாபாரதம் ஆகிய எல்லா நூல்களும் கூறுகின்றன. அதாவது இமயம் முதல் குமரி வரை இந்த உண்மை தெரிந்திருந்தது. ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.
”ஆமையானது தன் அங்கங்களை ஓட்டினுள் இழுத்துக் கொள்வது போல எப்போது இந்த யோகி புலன்களை, எல்லா இந்திரிய விஷயங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக் கொள்கின்றானோ அப்போது அவனுடய ஞானம் உறுதியாக நிலை பெற்றதாகும்.”
இன்றைய உயிரியல் BIOLOGY படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும்.
மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் – ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் – என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:
வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் நின்மல சக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.
மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம்.
ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.
வள்ளுவருக்கு முன்பாக இதை கீதையில் கண்ணனும்(2-58), மனுதர்ம சாஸ்திரத்தில்(7-105) மனுவும்,திவ்யப் பிரபந்தத்தில்(2360) ஆழ்வார்களும் சொல்லிவிட்டார்கள்.
பொருள்: ஆமை தனது அங்கங்களைச் செய்வதுபோல எப்போது யோகியானவன் புலன்களை இந்திரிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போது அவனுடைய ஞானம் உறுதியாகும்.
இது பிராணாயமத்தின் மகிமையைப் புலப்படுத்துகிறது. அதாவது மூச்சுவிடுவதை முறையாகக் கட்டுப்படுத்தினால் ஆயுள் அதிகரிப்பதோடு பல அற்புத சக்திகளும் உடலில் தோன்றும். அதைத் தவறாகப் பயன்படுத்தும்படி தேவதைகள் தூண்டும். அதற்குக் கீழ்படிபவர்கள் சில ஆனந்தாக்கள் (சாமியார்கள்) போல அதோகதிக்குப் போய்விடுவார்கள்.
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
பொழிப்புரை : பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.
Senses Controlled, They Saw This World and Next
Who there be who, like our Lord, distinct know
The great and the small, the difficult and the facile?
They, unto tortoise, drawing in senses five under the shell,
They heard and saw This and Next, all impurities dispelled.
xxxx
Silentness of Waveless Thought
Like the ghee subtly latent in purest milk,
Into the waveless Thought the Lord in silentness speaks;
They who, in silentness realise, this mortal coil shuffled,