உலகின் உயரமான நாடு – நேபாளம்! (Post No.11,012)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,012

Date uploaded in London – –    14 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

  24-5-2022 தேதியிட்ட மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலகின் உயரமான நாடு – நேபாளம்!

ச.நாகராஜன்

உயரமான நாடு

தெற்காசியாவில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அமைந்திருப்பதோடு உலகின் உயரமான இடத்தில் உள்ள உயர் நாடு நேபாளம்.

பழம் பெரும் வரலாற்றையும் மிக்க பெருமையையும் கொண்ட நாடு இது.

இரு விதமான பயணங்கள் இந்த நாட்டை நோக்கி மேற்கொள்ளப்படுகின்றன.

ஒன்று ஆன்மீக யாத்திரை இன்னொன்று இயற்கை ஆர்வலர்களின் உற்சாகமான பயணம்.

உலகில் உள்ள நாடுகளில் ஒரே ஹிந்து நாடு இது தான் என்ற தனிப் பெரும் பழமையை சமீப காலம் வரை பெற்றிருந்தது நேபாளம். (நமது இந்தியா மதசார்பற்ற செகுலர் நாடு)

2015இலிருந்து அரசியல் சட்டம் காரணமாக இதுவும் செகுலர் நாடு என ஆயிற்று.

சிவ பெருமான் உறையும் இமயப் பகுதியில் உள்ள இந்த நாட்டில் சிவத் தலங்களுள் முக்கியமான ஒன்றான பசுபதிநாத் ஆலயம் அமைந்துள்ளது.

ஏராளமான முனிவர்களும் தபஸ்விகளும் உறையும் நாடு இது.

நேபாளம் – பெயர் காரணம்

நேபாளத்தின் தலை நகர் காத்மாண்டு. பண்டைய காலத்தில்  இந்தப் பகுதி பெரிய ஏரியாக இருந்தது. இதைப் பற்றிய புராண வரலாறு சுவையானது.

விஷ்ணு பகவான் தனது சக்கரப்படையை ஏவி இந்த மலைப்பகுதியை வெட்டி இரு பிளவுகளை உருவாக்கினார்.  இங்கிருந்த ஏரி நீர் வடித்து தரைப்ப்குதி வெளிப்பட்டது. வாங்மதி, (அல்லது பாக்மதி), விஷ்ணுமதி, ருத்ரமதி என மூன்று அழகிய ஆறுகள் ஓட ஆரம்பித்தன.

இந்த பகுதியின் தெய்வீகத் தன்மையைக் கண்டு நேவா என்னும் மஹரிஷி இங்கு வந்து நீண்ட நெடும் தவம் புரிய ஆரம்பித்தார். ஒரு நாளிரவு கனவில் அவர் பெரிய ஜோதி தரிசனத்தைக் கண்டார்.  அது என்ன என்று அவருக்குப் புலப்படவில்லை. அவர் வளர்த்த பால் பசு ஒன்று மாலையில் மேய்ச்சலிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து பால கொடுப்பதை நிறுத்தி விட்டது. பாலும் அதனிடம் இல்லை. அதன் காரணம் நேவா ரிஷிக்குப் புரியவில்லை.

ஆனால் ஒரு நாள் பகல் பொழுதில் அந்தப் பசு  ஓரிடத்தில் நின்று தானாகவே தன் மடியிலிருந்து பாலைப் பொழிந்து கொண்டிருந்தது. மஹரிஷி நேவா அந்த இடத்தின் மகிமையைக் காண விரைந்தார். பசு பால் பொழிந்த இடத்திலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டு பூமிக்குள் மறைந்தது. தான் கனவில் கண்ட ஜோதியே அது என்று உணர்ந்த நேவா தனக்கு ஜோதி தரிசனம் அருளிய இறைவனின் கருணையை நினைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். அங்கேயே எப்போதும் ஜோதி வடிவினனாக எழுந்தருளி மக்கள் அனைவருக்கும் அருள் புரிவாயாக என்று இறைவனை வேண்டினார். ‘அப்படியே ஆகுக’ என அசரீரி ஒலித்தது.

அந்த இடத்திலேயே நேவா முனிவர் பாதரஸத்தைக் கொண்டு ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தார். அந்த லிங்கத்தை எந்த உலோகத்தால் தொட்டாலும் அது பொன்னாயிற்று. அவருக்கு பாரஸ்நாதர் என்ற திருநாமம் ஏற்பட்டத்.

நேவா முனிவர் தவம் புரிந்த இடம் நேவா பாலம் என்ற பெயரைப் பெற்றது. அது நாளடைவில் பெயர் மருவி நேபாளம் ஆயிற்று. நேவா, பாலம் என்றால் நேவ முனிவரால் உருவாக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டது என்று பொருள்.

புராணங்கள் இங்கு வந்து வழிபட்டு அருள் பெற்ற தேவர்களின் பெரும் பட்டியலைத் தருகிறது.

பசுபதிநாதர் ஆலயம்

உலக காரணனான பசுபதி நாதர் ஆலயம் காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் உள்ளது, இங்கு வந்து வழிபடுவோர் தொன்று தொட்டு இன்று வரை ஏராளம்.

ஆலயத்திற்கு முன்னால் ஓடும் வாங்மதி (பாக்மதி என்பது வழக்கில் உள்ள பெயர்) நதியில் நீராடி விட்டு பசுபதிநாதரை தரிசிப்பது மரபு.

ஆலயத்தின் கர்ப்பகிருகம் நான்கு வாயில்களைக் கொண்டுள்ளது. வெளி பிரகாரம் ஒன்று உண்டு. இரண்டாவது திருச்சுற்றில் மேலை சந்நிதி நீங்கலாக மூன்று புறமும் சுற்றி வரலாம். மரத்தால் அமைந்த கோவில் இது. ஏகமுக ருத்ராக்ஷம், தங்க முலாம் பூசப்பட்ட திரிசூலம்  என ஆலயத்தின் பெருமை சொல்லி மாளாது.

இந்தக் கோவிலில் பூஜை செய்வோர் கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவைச் சேர்ந்த பட்டர்களே. கடந்த 350 ஆண்டுகளாக இவர்கள் வமிசாவளியினரே இங்கு பூஜை செய்கின்றனர்.

அருகில் மலையின் மீது ஏறிச் சென்றால் குஹ்யேஸ்வரி ஆலயத்தை அடையலாம். நேபாள நாட்டினர் ஏராளமானோர் வழி படும் கோவில் இது.

தர்பார் ஸ்குயர்

காத்மாண்டுவில் உள்ள யுனெஸ்கோவின் பண்பாட்டு மையங்கள் பட்டியலில் உள்ள தர்பார் ஸ்குயர்  ஹனுமான் தோகா தர்பார் ஸ்குயர் என்று அறியப்படுகிறது. ஏராளமான கோவில்கள் உள்ள பகுதி இது. சுமார் 500 வருடங்களுக்கு முந்தைய கலைப் படைப்புகளை இங்கு கண்டு மகிழலாம். குறிப்பாக மரத்திலான நுட்பமான சித்திர வேலைப்பாடுகள் பயணிகளைக் கவரும்.

புத்தர் அவதரித்த கபிலவாஸ்து

வைகாசி பௌர்ணமி புத்தர் அவதரித்த திருநாளாகும்.

உலகின் அறிவு ஜீவிகளும் ஏராளமான விஞ்ஞானிகளும் போற்றும் அவதாரமான புத்தர் அவதரித்த கபிலவாஸ்து நேபாளத்தில் தான் உள்ளது. ‘எதையும் நீயே அறிவால் அறிந்து உணர்ந்து உண்மையைக் காண்’ என்ற அவரது அறிவுபூர்வமான உபதேசம் உலகில் உள்ள அனைவரையும் கவர்கிறது. புத்தர் அவதரித்த லும்பினித் தோட்டமும் சித்தி அடைந்த குசிநாரா என்னும் காசியாவும் நேபாளத்தில் தான் உள்ளது.

லும்பினி கபிலவாஸ்துவிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவிலும், காத்மாண்டுவிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. லும்பினியில் மட்டும் சுமார் 14 பௌத்த மடாலயங்கள் உள்ளன.

சீன யாத்ரீகனான ஃபாஹியானில் ஆரம்பித்து இன்றைய நாள் வரை இப்புனிதப் பகுதியில் வந்து வணங்காதோர் இல்லை.

மாமன்னன் அசோகன புத்தர் அவதரித்த தலத்திற்கு உபகுப்தனுடன் வந்து வணங்கி இருக்கிறான். தன் பரிவாரங்களுடன் வந்த அவன் ஏராளமான நறுமணப் பொருள்களையும் மலர்களையும் எடுத்து வந்து வழிபட்டான்.  அவன் தோட்டத்தை நெருங்கியதும் அவனுட்ன் வந்த உபகுப்தன் ஆவேசம் வந்த நிலையில்,  ஓ! மாமன்னா! இந்த இடத்தில் தான் சாக்கிய முனி அவதரித்துள்ளார். இங்கு அவர் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைப்பாயாக” என்று கூறவே அதே போல் அசோக ஸ்தம்பம் ஒன்று இங்கு நிறுவப்பட்டது. அதன் உச்சியில் குதிரை உருவம் ஒன்றை அமைத்து வழிபட்டு அவன் தன் நாடு திரும்பினான்.

இன்று அந்த ஸ்தம்பத்தின் கீழ் தேவியின் திருவுருவமும் விநாயகர் திருவுருவமும் அமைக்கப்பட்டுள்ளன. தேவியின் பெயர் கும்மிந்தேவ் அல்லது ரூபந்தேகி பகவதி. இந்த ரும்மிந்தேவ்யில் (லும்பினித் தோட்டம்) புத்தருடைய தாய் மாயாதேவி பிரசவத்துக்கு முன் குளித்த குட்டை இருக்கிறாது. அதன் கரையில் உள்ள அத்திம்ரத்தின் பழத்தை அவள் உண்டாள் என்று கர்ண பரம்பரைச் செய்தி கூறுகிறது. ஏராளமான

 பௌத்தர்களும் இந்துக்களும் வந்து வணங்கும் தலம் இது.

காத்மாண்டுவில் உள்ள ஸ்வயம்புநாத் ஆலயத்திற்கு அருகில் உள்ள அமிதேவ புத்தர் பார்க்கில் 67 அடி உயரமுள்ள புத்தரின் சிலையைப் பார்த்து வியக்கலாம்.

பதான் ஸ்தூபங்கள்

பதான் நகரின் நாற்புறமும் உள்ள நான்கு ஸ்தூபங்கள் பெரிதளவும் வியக்கப்பட்டு பேசப்படுபவை. கிழக்கு திசையில் உள்ள ஸ்தூபத்தின் சுற்றளவு மட்டும் 75.83 மீட்டர். உயரம் 10.4 மீட்டர்.

ஜைன மத ஆசாரியர்கள்

ஜைன மத ஆசாரியர்களான சம்புதறாயர்,  பத்ரபாகு ஆகியோரும் பாடலிபுரத்தில் இருந்தனர். ஆக ஜைனர்கள் போற்றும் நாடாகவும் நேபாளம் அமைகிறது.

நேபாளத்தின் கொடி

நேபாளத்தின் பரப்பளவு 56,827 சதுர மைல்கள். இதன் ஜனத்தொகை மூன்று கோடியே ஒரு லட்சம்.

நேபாளத்தின் கொடி ஒரு மகத்தான சிறப்பைக் கொண்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளின் கொடிகள் செவ்வக வடிவில் இருக்கும் போது இதன் கொடி மட்டும் வேறு அமைப்பைக் கொண்டுள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகளாக இருந்து வரும் பழம் பெரும் கொடி என்று வரலாறு கூறுகிறது.

நேபாளத்தில் சுதந்திர தினமே கொண்டாடுப்படுவதில்லை. ஏனெனில் இது ஒரு போதும் அன்னியரின் ஆட்சிக்கு உட்பட்டதில்லை. பழம் பெரும் நாடான இதை யாரும் ஆக்கிரமிக்கவே இல்லை. ஆகவே விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த நாட்டின் கூர்க்கா படையின்ரின் வீரம் உலகம் அறிந்த ஒன்று.

பசுவை வதை செய்தால் 12 வருட சிறைவாசம் நிச்சயம்.

வெவ்வேறு 80 இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழும் இந்த நாட்டில் 123 மொழிக்ள் பேசப்படுகின்றன!

நேபாளத்தின் மொத்த ரயில் பாதையின் நீளமே 59 கிலோமீட்டர் தான். ஒரு நாள் போதும், இதில் பயணிக்க!

காத்மாண்டு நகரின் தெருக்கள் குறுகியவை. மர வேலைப்பாடுகள் நிறைந்த வீடுகள் இங்கு அதிகம்.

சங்கு நாராயணன் கோவில்

தவளகிரி மலைப் பகுதியில்  காத்மாண்டு நகரின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவில் சங்கு என்ற கிராமத்தில் மனோகரா ஆற்றின் அருகே அமைந்துள்ளது திருமால் கோவிலான சங்கு நாராயணன் கோவில்.

இயற்கை வளம் மிக்க இமயமலைப் பகுதி

இமயமலைப் பகுதி என்பதால் இங்கு வியக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை.

பாரா க்ளைடிங், மலை ஏறுதல் உள்ளிட்ட விதவிதமான விளையாட்டுக்களுக்கு உகந்த இடம் இது என்பதால் இதில் ஆர்வமுள்ள வெளிநாட்டோர் இங்கு வருகை புரிகின்றனர்.

நேபாளத்தின் வருவாயில் 25 விழுக்காடு சுற்றுலாப் பயணிகளாலேயே வருகிறது என்பது ஒரு சுவையான செய்தி.

இங்கு நெட் வசதி இல்லை என்பது ஒரு சிறிய குறை.

உலகில் உள்ள மிக உயரமான மலை சிகரங்கள் மொத்தம் பத்து. அவற்றில் எட்டு சிகரங்கள் நேபாளத்தில் தான் உள்ளன. இதில் உலகிலேயே மிக மிக உயரமான 29029 அடி உயரமுள்ள மவுண்ட் எவரெஸ்டும் ஒன்று.

நேபாள பனி மனிதன்

யேடி என்று அழைக்கப்படும் இமயமலை பனி மனிதனைப் நேபாள மலைப் பகுதிகளில் பார்த்ததாக பல சுவையான செய்திகள் உண்டு. யேடி என்பது ஒரு ஷெர்பா வார்த்தை, யே என்றால் பாறை; டி என்றால் விலங்கு என்று பொருள்.

ஆக யேடி என்றால் மலைவாழ் மிருகம் என்று பொருள். யேடி மனிதன் போலத் தோற்றமளிப்பதாக ஒரு செய்தி உண்டு. எரிக் ஷிப்டன், ஃப்ராங்க் ஸ்மித், ஜான் ஹண்ட் போன்ற மலையேறும் நிபுணர்கள் பெரிய பாதச் சுவடுகளைக் கண்டதாக அறிவிக்கின்றனர். கர்னல் சி.கே. ஹோவர்ட் மற்றும் டான் வில்லன்ஸ் தாங்கள் கறுப்பாக மனிதன் போன்ற ஒரு உருவத்தைப் பார்த்ததாக தெளிவாகக் கூறுகின்றனர். இந்தப் பனி மனிதன் மர்மம் பற்றிய  செய்திகள் இன்று வரை அடிக்கடி வெளி வருவதால் நேபாளம் என்றவுடன் யேடியின் ஞாபகமும் அனைவருக்கும் வருவதில் வியப்பில்லை.

அன்னபூர்ணா மலைச் சுற்று

உடல் வலு உள்ள பக்தர்களும் இயற்கை ஆர்வலர்களும் மேற்கொள்ளும் ஒரு கிரி வலம் அன்னபூர்ணா மலைச் சுற்று. 17 முதல் 21 நாட்கள் வரை இதற்கு ஆகும்.

போகரா சாந்தி ஸ்தூபம்

காத்மாண்டுவிற்குப் பிறகு அடுத்த பெரு நகரம் போகரா.அன்னபூர்ணா மலைச் சுற்று மேற்கொள்வோர் இங்குள்ள அழகிய மலைப் பகுதியைப் பார்க்காமல் போக முடியாது. இங்குள்ள சாந்தி ஸ்தூபம் அனைவரையும் ஈர்க்கும் ஒன்று.

சூரியோதயம் மற்றும் சூர்யாஸ்தமனம் பார்ப்பது மலை ஏறுவது என பல்வேறு அம்சங்களால் அனைவரையும் கவர்வது போகரா.

இந்தியாவின் வடக்குப் பகுதியிலிருந்து நேபாளத்திற்குப் பயணம் மேற்கொள்வது சுலபம். விசா கெடுபிடிகள் கிடையாது என்பது இன்னொரு செய்தி. விசாவை பயணம் மேற்கொள்ளும் முன்பேயும் பெறலாம். அங்கே சென்ற பின்னர் அங்கேயும் பெற்றுக் கொள்ளலாம்..

நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு இமயமலை போன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.

மொத்தத்தில் ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்வியலில் பார்க்க வேண்டிய இயற்கையையும் இணைக்கும் உயரமான நாடு நேபாளம்.

ஒருவரியில் நேபாளத்தைச் சொல்வதென்றால்,

உலகின் மிக மிக உயரமான சிகரம் மவுண்ட் எவரெஸ்டைக் கொண்ட நாடு நேபாளம் என்று சொல்லி முடிக்கலாம்!

***

TAGS- நேபாளம், கபிலவாஸ்து, பசுபதிநாதர் ஆலயம்

VISITED 30 PLUS TEMPLES IN  22 TOWNS IN TAMIL NADU (Post No.11,011)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,011

Date uploaded in London – –    13 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

 I left London for India on 21st May and came back on 13th June, 2022. I visited the following pilgrim centres and had the Darshan of Gods and Goddesses.

Following are the places I visited :

23 May 2022- Kapaleeswar Temple in Chennai

25 – Pillayar Temple and  Hanumar Temple in Madurai( which we visited for over 25 years almost every day before leaving for London in 1987)

25- Immaiyil Nanmai Tharuvar Sivan Temple

26- Madurai Meenkashi Temple and Tirupparankundram Temple

Kuzanthaiyananda Swami Adhistanam in Madurai

27 – Tiruvarur Thyagaraja Swamy Temple (Vanmekanathar, Veethi vidangar)

27- Vaitheeswaran Koil

28- Thirukkadaiyur Abhirami, Amirthakadeswar Temple.

28- Sirkazi Sattanathar Temple

28- Chidambaram Natarajar Temple

28- Chidambaram Thillai Kali Rathotsavam

28- Thiruvenkadu Swetharanyesawar Temple, Bhudan (Navagraha) Shrine

29- Thiruchi Akilandeswari, Jambukeswar Retmple in Thiruvanaikkaval

31- Rameswaram Ramanathaswamy Temple

31-Dhaaunshkoti Koti Theertham

31- Arichchal Munai (Sea erosion Point;last post to Sri Lanka which is twenty miles away)

31-Tiru Uttarakosa Mangai- Mangalanathar Temple, Maragatha Natarajar

31. Thiruppullani Adi Jagannatha Perumal Temple

31- Panchamuki Hanumar  near Rameswaram Temple

5th June 2022- Nellaiyappar-Kanthimathi Amman Temple in Tirunelveli

5- Tirukkurungkudi Nindra Nambi Perumal Temple

5- Nanguneri Vanamaamalai Totadri Perumal temple

6- Sankarankovil- Sankaranarayanar Temple

6- Srivilliputhur Vadabadhri Narayanan- Andal temple

6- Madavaar Valaakam Vaitheeswaran Temple

9- Kanchipuram Kamakshi Temple

9- Kanchi Ekamranathar/ Amravarneswar Temple

9-Kancipuram Sankara Mutt, Periyava Adhistanam

9- Kanchi Chitraguptan Temple

9- Yadhokthakari Perumal Temple

11- Tiruvannamalai Arunachaleswar/ Annamalaiaiyar temple

11- Sri Seshadri Swamikal Adistanam

11- Sri Ramana Ashrmamam

11- Girivalam- Darshan of different Lingams along the Hill route.

13 June 2022- Back in London

(Detailed reports will follow soon with pictures.)

–subham-

Tags- 22 places, 30 plust temples

S.Nagarajan  Article Index : May 2022 (Post No.11,010)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,010

Date uploaded in London – –    13 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

MAY  2022

 1-5-2022. 10914  SNR Article Index April 2022

 2-5-2022  10922 விஞ்ஞானத்திலும் மோசடிகள்!

3-5-2022   10927 ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் நடந்த பாடல்

             போட்டி! (தொண்டைமண்டல சதகம் பாடல் 21)

4-5-2022 10932 மனம் வெளுக்க வழி!

5-5-2022 10937 குழந்தைகள் விரும்பும் நாடு! (மாலைமலர் 3-5-22)

6-5-2022 10942 மனிதர்களை மரம் போல நினை!

7-5-2022 10946 ஒரு ரூபாய் நோட்டு!

8-5-2022  10951   புத்தகம் படிக்க விரும்புவோருக்கு ஒரு அற்புதமான

             நிறுவனம்!

9-5-2022 10956 முன்னாள் வெளிநாட்டு தூதரின் கேள்விகள்!

10-5-2022 10961 யாருக்கு எத்தனை நமஸ்காரம்?

11-5-2022 10966 ஹிந்து சாஸ்திரம், ப்ரதிக்ஞை, ஹேது, திருஷ்டாந்தம்

12-5-2022 10970 பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை லங்கா

13-5-2022 10975 அலங்காரம் செய்து கொண்டு உடலைப் பேணுங்கள்!

              (ஹெல்த்கேர் 2022, மே மாத கட்டுரை)

14-5-2022   10981   எண்கள் தரும் ஞானம்!

15-5-2022 10986 வேதத்தை அறிய இதிஹாஸ புராணங்கள் படிக்க

              வேண்டும்!

16-5-2022 10991  மனம் என்னும் மாயம் – 1

17-5-2022 10995  மனம் என்னும் மாயம் – 2

18-5-2022 10999  லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான் –

               அமெரிக்க டூர் – 17-5-22 மாலைமலர் கட்டுரை 

19-5-2022 11002  நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்!

20-5-2022 11005  சூதாட்ட போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே

              கிருஷ்ணா!

21-5-2022 11007  தொழில்நுட்பத்தை ஒதுக்கினால், உலகம் ஒதுக்குபவரை

               ஒதுக்கி விடும்!

***

21-5-2022 முதல் 12-6-2022 முடிய tamilandvedas.comஇல் பதிவுகள் ஒன்றும் இடப்படவில்லை.

EVERYBODY NEEDS A BREAK; HAPPY HOLIDAYS

HAPPY HOLIDAYS!

LET US MEET AGAIN ON 15TH JUNE 2022!!

LONDON SWAMINATHAN

யாரும் காணாத ஒரு அதிசய மூலகம் (Post No.11,009)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,009

Date uploaded in London – –    21 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அஸ்டடீன் ASTATINE என்ற மூலகம் (element) யாருமே காணமுடியாத மூலகம்/தனிமம் ; இந்தப் பூவுலகில் 118 தனிமங்கள் உண்டு என்பதை நம் அறிவோம். ஆனால் யாருமே காண முடியாத, மறைவான மூலகம் பற்றிப் பலரும் அறியார். இதன் பெயரை சம்ஸ்க்ருதம் அறிந்தவர் எளிதில் புரிந்து கொள்ளுவர் .அஸ்டடோஸ் (astatos) என்ற கிரேக்க சொல்லுக்கு நிலையற்ற, நீடித்திராரத என்று பொருள்; ஸம்ஸ்க்ருதத்தில் அ+ ஸ்தித .

அயோடின் என்னும் மூலகத்தை அடுத்து இப்படி ஒரு மூலகம் இருக்கவேண்டும் என்பதை அறிந்து இதைக் கண்டுபிடித்ததாக அல்லிசன் (F Allison) என்ற விஞ்ஞானி 1931ல் அறிவித்தார். அதற்கு அமெரிக்காவின் அலபாமா (Alabamine) பெயரையும் சூட்டினார். அவர் சொன்னதை உலகம் தவறாகப் புரிந்து கொண்டது ஆகையால் 1940-ல் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூவர் இதை உற்பத்தி செய்து காட்டியவுடன் உலகம் ஒப்புக்கொண்டது

அவர்களும் ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை. இரண்டாவது உலக யுத்தம் காரணமாக எல்லா விஞ்ஞானிகளும் அணுகுண்டு உற்பத்தியில் (Manhattan Project) முனைப்பு காட்டினார்கள் .

பூமியின் மேற்பரப்பில் 30 கிராம் மட்டுமே இந்த தனிமம் (element)  இருப்பதாக மதிப்பிடுகின்றனர். தோரியம், யுரேனியம் போன்ற மூலகங்கள் கதிரியக்கத்தில் தேயும் போது அஸ்டடீன் உற்பத்தியாகிறது. ஆனால் இது நிலைத்திராது .இதன் ஐசடோப்புகள் 215, 218, 219 ஆகும்  பிஸ்மத்  என்னும் மூலகத்தை ஆல்பா துகள்களால் தாக்கினால் ஐசடோப் Astatine 210, Astatine 211 ஆகியன கிடைக்கும்.

ரசாயன குணங்கள்

குறியீடு – At

அணு எண் – 85

உருகு நிலை – 300 டிகிரி C

கொதி நிலை  – 340 டிகிரி C

அஸ்டடீன் ஒரு உலோகம் அல்ல. அயோடின் போன்ற ஒரு உப்பு. அதே போல ஹாலோஜன் (Halogen Group) குழுவைச் சேர்ந்தது.

இதன் ஐசடோப்புகளில் நீண்ட காலம் வாழும் பொருள் அஸ்டடீன்- Astatine 210 ஆகும். அது எட்டு மணி நேரத்தில் பாதியாக (Half life) கரைந்துவிடும். அடுத்த எட்டு மணி நேரத்தில் அதில் பாதி போய்விடும். இதனால் இதை ஆராய்வது கடினம். சில கரைசல்களில் இது இருப்பதை வைத்து இதன் இருப்பு/ பிரசன்னம் அறியப்படுகிறது .

ஒரு கிராமில் ஒரு லட்சத்தில் ஒரு பகுதிதான்(Millionth of a Gram)  இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது!!!! அப்படி உற்பத்தியானதும் கதிரியக்கத் தேய்மானம் மூலம் மறைந்துவிட்டது. ஆகையால் இதை எவரும் கண்டதில்லை. கண்டுபிடிக்கும் அளவுக்கு உற்பத்தியும் செய்ய முடியாது. அப்படி எவரேனும்  உற்பத்தி செய்தாலும் அதன் கதிரியக்க (Radiation Heat) வெப்பம் அதை ஆவியாக மாற்றி விடும்

யார் அறிவார் ? பயனற்ற, கண்ணுக்குத் தெரியாத இந்த தனிமமும் ஒரு காலத்தில் மனித குலத்துக்கு ஏதேனும் நன்மை செய்யக்கூடும் .

–subham–

tags- Astatine, அஸ்டடீன் ,கண்ணுக்குத் தெரியாத, தனிமம்

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 56 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.11,008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,008

Date uploaded in London – –    21 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 56 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

மேதாஹா 10-34 மேதை, அறிவு , புத்தி

மேதாவி 18-10 அறிவாளி

ம்ருத்யும் 13-25 மரணம் /ஸம்ஸாரத்தை

மேருஹு 10-23  மேரு மலை; கடவுளரின் இருப்பிடம்

மைத்ரஹ  12-13  நட்பு பாராட்டும் , சிநேகம் பூண்டவனாய்

மோக்ஷ காங்க்ஷிபிஹி  17-25 மோட்சத்தை நாடும்

மோக்ஷ பராயணஹ 5-28  மோட்சத்துக்காக முழு முயற்சி செய்யும்

மோக்ஷயிஷ்யாமி 18-66 நான் உன்னை விடுதலைபெறச் செய்வேன்

மோக்ஷம் -18-10 வீடு பேறு , விடுதலை

மோக்ஷ்யஸே 4-16 நீ விடுதலை பெறுவாயோ

MOGHA WORDS

மோக கர்மாணஹ  9-12 வீண் தொழில்கள்   உடையவர்களும்

மோக ஞானாஹா  9-12  வீண் அறிவு  உடையவர்களும்

மோகம் 3-16 MOGHAM

மோகாசாஹா 9-12  வீண் ஆசை உடையவர்களும்

மோதிஷ்யே 16-15 நான் மகிழ்வேன்

MOHA WORDS

மோஹ கலிலம் 2-52  மோகமாகிற கலக்கத்தை

மோஹ ஜால ஸமாவ்ருத்தகா 16-16 மோகமாகிய வலையில் அகப்பட்டு

மோஹனம் 14-8  மோகத்தை விளைவிக்கும்

மோஹ்யஸி  3-2  மயக்குகிறவன் போல

மோஹம்  4-35 MOHAM மோகத்தை

மோஹஹ  11-1  மோகமானது

மோஹாத் 16-10 மதி மயக்கத்திலிருந்து

மோஹிதம்  7-13  மோகத்தை (அடைந்திருக்கிறது)

மோஹிதாஹா  4-16 மயங்குகின்றனர்

மோஹினீம் 9-12 மதியை மயக்கும்

மெளனம் 17-16 பேசா விரதம்

மெளனி  12-19 பேசாமல் இருப்பவர்

ம்ரியதே 2-20 இறக்கிறான்

XXXX

ய சொற்கள் 

யக்ஷ ரக்ஷஸாம் 10-23 யக்ஷர், ராக்ஷஸர்களுக்குள்

யக்ஷ ரக்ஷஆம்சி 17-4  யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும்

யக்ஷ் யே 16-15  யக்ஞம் செய்வேன்

யச் ரத்தஹ 17-3  எவ்வகை சிரத்தை உடையவனோ

யஜன்தஹ 9-15  பூஜிப்பவர்களாயும்

யஜந்தே  9-23 பூஜிக்கின்றார்களோ

யஜுஹு 9-17 யஜுர் வேதம்

யக்ஞ க்ஷபித கல்மஷாகா  4-30 யக்ஞத்தால் பாவம் தேயப்பெற்றவர்கள்

யக்ஞ தபஸாம் 5-29  யாகத்துக்கும்  தவத்துக்கும்

யக்ஞ தபஹ  க்ரியாஹா 17-25  வேள்வி, தவக் கிரியைகள்

யக்ஞ தான தபஹ  க்ரியாஹா 17-24 யக்ஞம், தானம், தவம் முதலிய கருமங்கள்

39 words added from part 56, Gita word index

TO BE CONTINUED………………………………….

TAGS – gita index 56, Bhagavd Gita, word indes in Tamil

தொழில்நுட்பத்தை ஒதுக்கினால், உலகம் ஒதுக்குபவரை ஒதுக்கி விடும்! (11,007)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,007

Date uploaded in London – –     21 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொழில்நுட்பத்தை ஒதுக்கினால், உலகம் ஒதுக்குபவரை ஒதுக்கி விடும்!

ச.நாகராஜன்

உலகம் அதி வேகமாக முன்னேறி வருகிறது.

தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஆனால் ,‘இதெல்லாம் நமக்கு இல்லை’, என்று எவர் ஒருவர் வளர்ந்து வரும் தொழில்நுட்பபத்தை மதிக்காமல் ஒதுக்கி வைக்கிறாரோ அவர் உலகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவார்.

எந்தத் தகவல் பரிமாற்றமும் ஒரு சில விநாடிகளில் கண்டம் விட்டு கண்டம் நடக்கிறது.

Whatsapp மஹிமை. ஒரு சந்தேகம் என்றால் அதை உடனே தகுந்த ஒருவர் அரை நிமிடத்தில் தீர்த்து வைக்கிறார்.

பழைய காலத்தில் இதற்கு ஆகும் காலமும் செலவும் அதிகம்.

Facebook, Tweet, Email ஆகியவற்றால் நண்பர்கள் குழு வலுவாகிறது; வளர்கிறது.

வீட்டிற்கு வருவோர் யார் என்பதை நம்மால் வீட்டிற்குள்ளிருந்தே பார்க்க முடிகிறது. பூட்டைத் திறந்து உள்ளே போக வேண்டாம். ரிமோட்டில் கதவு திறக்கிறது.

விளக்குகளை தூரத்திலிருந்தே ரிமோட் மூலம் ‘ஆன்’ செய்கிறோம்.

சுழலும் ஃபேனை தூரத்திலிருந்து ஆஃப் செய்கிறோம்.

வீட்டு அறைகளை சுழன்று கொண்டே சில நிமிடங்கள் சுத்தம் செய்து நீரால் கழுவி விடும் மெஷின்கள் அனேகமாக அனைவர் இல்லத்திற்கும் வர ஆரம்பித்து விட்டது!

Drivierless Car, Space Journey என்று எதிர்காலம் வழங்கவிருக்கும் புதுமைகள் ஆயிரம்.

மனிதன் அருவருப்புடன் செய்யக் கூடிய வேலைகளை – கழிவறை சுத்தம் போன்றவற்றை ரொபாட்டுகள் செய்ய முன் வருவதைப் பார்க்கிறோம்.

மனிதன் செய்ய முடியாததை அல்லது செய்யப் பயப்படுவதை ரொபாட்டுகள் செய்கின்றனர்.

கனமாக ஒரு பொருளை  உயரமான ஒரு இடத்திற்கு ரொபாட்டுகள் அனாயாசமாகத் தூக்குவதைப் பார்க்கிறோம்.

ஆக, செல் போனாகட்டும், ஈ மெயில் ஆகட்டும், வாட்ஸ் ஆப் ஆகட்டும் அனைத்து தொழில்நுட்பங்களும் இன்றைய வாழ்க்கை முறையில் அத்தியாவசிய தேவை.

பூக்காரி கூட நடந்து கொண்டே செல் போனில் பேசி வியாபாரத்தை முடிப்பது இன்றைய நடைமுறை.

இதை வேண்டாம், இது எனக்குத் தெரியாது என்று சொன்னால் அப்படிச் சொல்பவரை உலகம் ஒதுக்கி விடும்; முன்னே போய்க்கொண்டே இருக்கும்.

ஆனால் ஒரு எச்சரிக்கையும் தேவை.

இந்த தொழில்நுட்பங்களை நமது முன்னேற்றத்திற்காக ஆதாயத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் ; அப்போது நாம் தொழில்நுட்பத்தை விட புத்திசாலிகள் ஆவோம்.

ஆனால் வெட்டி அரட்டைக்கும், ஒவ்வொரு நாளும் தேவையற்று காலை வணக்கம் சொல்வதற்கும் பயன் படுத்தினால் நாம் முட்டாள் ஆவோம்.

ட்விட்டர் மூலமாக எவ்வளவு சண்டைகள்! ஃபேஸ் புக் மூலமாக எவ்வளவு அனாவசிய வம்பளப்புகள்.

க்ரூப் மூலமாக எவ்வளவு வெட்டி அரட்டைகள்!

தினசரி ஆயிரம் யோசனைகள்; இந்தக் கையை இங்கு அமுக்கு; அந்த விரலை அங்கு அமுக்கு – கான்சர் வராது வந்தால் போய் விடும் என்றெல்லாம் போலிச் செய்திகள்!

எதையும் யாரும் சரிபார்க்காமலேயே ஆயிரமாயிரம் பொய்ச் செய்திகள் பறக்கின்றன.

ஊடகங்களுக்கு ‘தர்மம்’ என்றே ஒன்று இல்லை. (குறிப்பாக தமிழகத்தைச் சுட்டிக் காட்டலாம்)

இதில் தவறான பழைய போட்டோக்களைப் போடுவது. மார்பிங் செய்து படங்களைத் தருவது – என்ன ஒரு அயோக்கியத்தனம்!

இவை ஒவ்வொன்றையும் சரிபார்க்கவா முடியும்!

ஒட்டு மொத்தமாக மக்கள் ஊடகங்களை அறவே புறக்கணித்து விடுவார்கள்.

இது பொய்யில்லை.

ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் அதைத் தவறாகப் பயன்படுத்துவோர் தான் முதல் அடி வாங்குவர்.

அவர்கள் சேமித்த அனைத்தும் கடலில் கரைத்த உப்பு போலக் கரைந்து விடும்.

ஏனெனில் இது அறநெறி.

அறநெறி எந்தக் காலத்திற்கும் பொருந்தும்; எல்லோருக்கும் பொருந்தும்.

ஆகவே தான் அற வழியில் தொழில் நுட்பத்தைத் தேவையான தேவையான அளவு தேவையான முறையில் தேவையானவர்கள் பயன்படுத்த வேண்டும்.

அப்படிப் பயன்படுத்தினால் பயனர்கள் புத்திசாலிகள்;

இல்லையேல் தொழில்நுட்ப சாதனங்கள் அவர்களை முட்டாளாக்கிப் புதைகுழியில் ஆழ்த்தி விடும்!

காலம் காலமாக உள்ள பல நூற்றாண்டு வரலாறுகள் நமக்குப் போதிக்கும் பாடம் இது தான்!

***

மூன்று வகையான வெற்றிகள் (Post No.11,006)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,006

Date uploaded in London – –    20 MAY 2022        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்து மத மன்னர்கள் போர் தொடுப்பதிலும் கூட சில கொள்கைகளைக் கடைப்பிடித்தனர். ‘அவன் இருந்தால் நம்மை வாழ விடமாட்டான்’ என்ற நிலையில் மட்டுமே எதிரியைக் கபளிகரம் செய்வார்கள். அல்லது தங்கள் குலத்தில் ஒருவனைக் கொன்று இருந்தால் வஞ்சம் தீர்க்க எதிரியையும் கொல்வார்கள் ; பெரும்பாலும் தர்ம யுத்தமே நடந்தது.

தேர் வீரன், தேர் வீரனுடனும் குதிரை வீரன், குதிரை வீரனுடனும் தான் சண்டையிட வேண்டும். மல் யுத்தம் போல இருந்தால் இருவரும் ஆயுதம் எடுக்காமல் வெற்றி தோல்வியை முடிவு செய்வார்கள். காலையில் துவங்கி மாலை சூரிய அஸ்தமனத்துடன் போரை முடித்த பின்னர் காயமடைந்தோருக்கு சிகிச்சை தருவார்கள் .அது மட்டும் அல்ல. ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் வீரர்கள் , மற்ற வீரர்களோடு மட்டுமே சண்டையிட்டனர். பொது மக்கள் பாதிக்கப்படவில்லை.

வாலியைக் கொன்றுவிட்டு சுக்ரீவனை முடிசூட்டிய ராமன், வாலியின் மகனுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுத்தான். இந்திய மண்ணிலேயே விபீஷணனுக்கு முடி சூட்டி, ராவணன் இறந்த பின்னர், இலங்கையையே அவனிடம் ஒப்படைத்தான்.

மூன்று வகையான வெற்றி

‘உலக மஹா கவிஞன்’, ‘கவி குல குரு’ என்று போற்றப்படும் காளிதாசன், அவனது ரகு வம்ச காவியத்தின் முதல் அத்தியாயத்திலேயே சூரிய குல மன்னர்களின் குணாதிசயங்களை  வருணிக்கிறான்.

தானம் செய்வதற்காகவே சம்பாதிப்பார்கள்”

தப்பித்த தவறியும் வாயில் பொய் வரக்கூடாது என்பதற்காக அளந்து பேசுவார்கள்.”

செக்ஸ் SEX என்பதை விட்டு வம்ச விருத்திக்காக திருமணம் செய்து கொள்வர்”.

புகழ் பெற வேண்டும் என்பதற்காக போர் செய்வார்கள்”

யஸசே விஜிகீஷுணாம்”  என்பது காளிதாசன் வாக்கு .

2400 ஆண்டுகளுக்கு முன்னர் கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் மூன்று வகையான வெற்றிகளை வருணிக்கிறார்.

அவை தர்ம விஜய , லோப விஜய, அசுர விஜய என்பதாகும் ; அற வெற்றி, பண வெற்றி, மூர்க்க குண வெற்றி என்று இவற்றைத் தமிழில்  சொல்லலாம்.

தர்ம வெற்றியில், தான் பிடித்த நாட்டை எதிரியிடமே மன்னன் கொடுத்துவிடுவான் ; அவனும் வெற்றி பெற்ற மன்னனை தனக்கும் மேலான வீரன் என்று போற்றுவான் . கப்பமும் கட்டவேண்டும் .

ஹிந்து மன்னன் போரஸ் என்னும் புருஷோத்தமனை வெற்றி கொண்ட

அலெக்ஸ்சாண்டர் , போரஸிடமே நாட்டை ஒப்படைத்தார். அசுவ மேத யாகத்தில் குதிரை சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்ற மன்னனுக்கு சொந்தமாயினும் அந்த மன்னர்கள் கொல்லப்படவில்லை இது தர்ம விஜயம். த்ரேதாயுகமான ராமாயண கால யுத்தங்கள் இவ்வகைத்தே.

லோப விஜயத்தில், தோற்றுப்போன மன்னன் கட்டாயம் கப்பம் கட்டவேண்டும். ஆனால் தோல்வி அடைந்த மன்னனே அந்த நாட்டை ஆள்வான். வெற்றி பெற்ற மன்னர்கள் எதிரி  நாட்டின் பெரும்பகுதியை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளுவர்

அசுரர் விஜய வெற்றியில், எதிரி மன்னன் கொல்லப்படுவான். அவன் நாடு தரை மட்டம் ஆக்கப்படும். அவன் நாட்டை வெற்றி வீரர்கள் சூறையாடுவர். கலியுகத்தில் நடைபெற்ற யுத்தங்கள் இவ்வகைத்தே. வெற்றி கொண்ட அரசன், முழு நாட்டையும் தன் நாட்டுடன் சேர்த்துக்கொள்ளுவான்.

துவாபர யுக முடிவில் கலியுகம் துவங்குவதற்கு 36 ஆண்டுகள் மட்டுமே இருந்த காலத்தில் மஹாபாரத யுத்தம் நடந்ததால் லோப + அசுர விஜய குணங்களைக் காண்கிறோம்.

கி.பி. 150ல் இந்தியாவின் மேற்கு பக்கத்தை ஆண்ட ருத்ரதாமனை வருணிக்கும் கிர்னார் – ஜூனாகட் கல்வெட்டு “பிரஷ்ட ராஜ பிரதிஷ்டாபக” என்று விளம்பும். அதாவது தட்சிண பத பேரரசர்களான சதகர்ணியை  இரு முறை தோற்கடித்த போதும் அவனிடமே நாட்டைத் திருப்பிக்கொடுத்தானாம். இது தர்ம விஜயம்

-subham —

-tags- மூன்று வகை , வெற்றிகள் , தர்ம, லோப, அசுர , விஜய , அர்த்தசாஸ்திரம், கெளடில்யர்

“சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே,கிருஷ்ணா! (Post.11,005)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,005

Date uploaded in London – –     20 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

“சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே கிருஷ்ணா!” – உதங்கரின் கேள்வி!

ச.நாகராஜன்

மஹாபாரதப் போர் நடந்து முடிந்து விட்டது. கிருஷ்ணரின் இளமைப் பருவ நண்பரான உதங்கர் அவரைச் சந்தித்தார்.

கௌரவருக்கும் பாண்டவருக்கும் நடந்த போரில் ஏற்பட்ட இழப்பைக் கேட்டு வருந்தினார்.

கிருஷ்ணரிடம் அவர், “நீ உரிய காரணத்தைச் சொல்லவில்லை எனில் உன்னை சபிப்பேன்”, என்று சற்று கோபத்துடன் சொன்னார்.

கிருஷ்ணர் உடனே, “பெரும் தவத்தைச் செய்திருக்கிறீர். அனாவசியமாக என்னைச் சபித்து அதை வீணாக்க வேண்டாம்” என்று கூறியதோடு தாம் போரைத் தடுத்து நிறுத்த தூது சென்ற விவரத்தையும் கூறி, போர் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது என்று விளக்கினார்.

விளக்கத்தைக் கேட்டு சாந்தமடைந்த உதங்கர் கிருஷ்ணரிடமிருந்து விடை பெற்றார்.

உதங்கர் நினைத்த இடத்தில் நீர் வருமாறு அவர் கேட்டபடி வரத்தையும் தந்தார் கிருஷ்ணர்.

அவதார காரியம் முடியும் சமயம்; கிருஷ்ணர் உதங்கரை அழைத்தார்.

தான் வந்த காரியம் முடிந்து விட்டது என்றும் புறப்படத் தயாராகி விட்டதாகவும் கூறிய கிருஷ்ணர் விடை பெறும் சமயம் உதங்கருக்கு ஏதேனும் தர விரும்புவதாகக் கூறினார்.

உதங்கருக்கு அற்புதமான கீதோபதேசம் ஒன்றை அவர் செய்தார்.

ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோறாம் ஸ்கந்தத்தில் இடம் பெறும் இந்த கீதை உத்தவ கீதை என அழியாப் பெயர் பெற்றது.

விடை பெற்றுச் ‘செல்லும்’ கிருஷ்ணரிடம் உதங்கர் சில கேள்விகளுக்கு  மட்டும் விடை பெற வேண்டும் என்று விரும்பினார். கிருஷ்ணர் அவரைக் கேள்விகளைக் கேட்க அனுமதித்தார்.

“கிருஷ்ணா, நீ சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. மஹாபாரதம் என்ற நாடகத்தை அழகுற நடத்தி முடித்து விட்டாய். ‘செல்லவும்’ தயாராகி விட்டாய்! ஆனால் என் கேள்வி என்னவெனில் “யார் உண்மை நண்பன் என்பதே!” என்று உத்தவர் கேட்டார்.

அவர் என்ன கேட்க வருகிறார் என்பதை அறிந்த கிருஷ்ணர்,புன்சிரிப்பு தவழ, “தேவைப்படும் போது அழைக்கும் நண்பனுக்கு உதவுபவன் எவனோ, அவனைக் காப்பாற்றுபவன் எவனோ அவனே உண்மை நண்பன்” என்றார்.

“அப்படியானால் எனது அடுத்த கேள்வி இது தான். பாண்டவர்கள் உன்னை உற்ற நண்பனாக எண்ணினார்கள். உன்னை ஆபத்பாந்தவனாகக் கருதினார்கள். அப்படி இருக்கும் போது மூன்று காலமும் உணர்ந்த பெரிய ஞானியான நீ ஏன் தர்மபுத்திரர் சூதாட ஒப்புக் கொண்ட போதே சூதாடுவதைத் தடுக்கவில்லை? அப்படித் தடுத்திருந்தால் போர் நடக்க வாய்ப்பே ஏற்பட்டிருக்காதே” என்றார். மேலும் அவர் தொடர்ந்தார் :

“சரி அது போகட்டும் அவரை ஜெயிக்குமாறாவது நீ அருள் புரிந்திருக்கக் கூடாதா? சரி, அதுவும் இல்லையெனில் அவர் தன் தம்பிமாரைப் பணயம் வைக்கும் போதாவது சூதாட்ட களத்தில் நீ நுழைந்து தடுத்திருக்கலாம், அதையும் நீ செய்யவில்லை. திரௌபதியைப் பணயம் வைத்திருப்பதையாவது நீ தடுத்திருக்கக் கூடாதா? அவள் ஆடையை துச்சாதனன் அவிழ்க்கும் வரை பேசாமல் இருந்து விட்டாயே, பின்னர் அல்லவா நீ அவளைக் காப்பாற்றினாய், இது தான் ஏன் என எனக்கு விளங்கவில்லை. பதிலைச் சொல்லு” என்றார்.

இப்படிக் கேட்ட உத்தவர் அழத் தொடங்கினார்.

கிருஷ்ணர் அவரை தழுவி ஆறுதல் கூறினார். பின்னர் பதில் சொல்லத் தொடங்கினார்.

“உத்தவரே! உலக நியதி உமக்குத் தெரியாதா, என்ன? விவேகம் உள்ளவனே

எப்போதும் ஜெயிக்கிறான். ‘இது சரி, இது சரியில்லை’ என்பதை ஒருவன் எப்போதும் அறிந்த பின்னரே காரியத்தில் இறங்க வேண்டும். சூதாட்ட சமயத்தில் துரியோதனனுக்கு விவேகம் இருந்தது. அந்தச் சமயத்தில் தர்மபுத்திரருக்கு அது இல்லை.

ஏராளமான பணமும் பொருளும் இருந்தால் கூட துரியோதனனுக்கு சூதாட்டத்தில் எப்படி விளையாடுவது என்பது தெரியாது. தனக்குத் தெரியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆகவே அவன் விவேகத்துடன், “தன் பங்கிற்கு தனது மாமன் சகுனி ஆடுவான்” என்று சொல்லி பாண்டவரைச் சம்மதிக்க வைத்தான். ஆனால் அப்போது தர்மர் என்ன செய்திருக்க வேண்டும். சகுனியை எதிர்க்கத் தன்னால் முடியாது என்று அறிந்து, எங்கள் பங்கிற்கு எங்கள் கிருஷ்ணர் விளையாடுவார் என்று சொல்லி இருக்க வேண்டாமா?

நான் உருட்டிப் போடும் எனது பகடைக்காய்களின் எண்களை சகுனியால் எப்படியாவது அறிய முடியுமா என்ன, அல்லது அவன் உருட்டும் காய்களின் எண்களை என்னால் அறிய முடியாதா என்ன? ஒரு சில நிமிடங்களில் ஆட்டம் முடிந்து துரியோதனன் ஆட்டம் போடுவது முழுவதுமாக முடிந்திருக்குமே! ஆனால் விவேகம் இன்றி நான் சூதாட்ட அரங்கினுள் வரக்கூடாது என்றல்லவா தர்மன் எண்ணினான். அவன் விதி அவனை விடவில்லை. தனது பிரார்த்தனையால் என்னைக் கட்டிப் போட்டு அங்கு வர விடவில்லை. பீமன், அர்ஜுனன், நகுல, சகாதேவன் தோற்ற போது கூட அவர்கள் துரியோதனனைதத் திட்டுவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர என்னை அழைக்க யாருக்கும் தோன்றவில்லையே! திரௌபதி கூட துச்சாதனன் அவள் கேசத்தைப் பிடித்து இழுத்து வந்த போதோ ஆடையைத் துகில் உரிக்கத் தொட்ட போதோ என்னை அழைக்கவில்லை. அவன் துகில் உரிக்க ஆரம்பித்தவுடன் தன்னை மறந்து என்னைச் சரண் அடைந்தாள். அந்தக் கணமே நான் வஸ்த்ராவதாரம் எடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றினேன். ஒரு கணத்தில் ஓடி வந்தேனே”

கிருஷ்ணரின் இந்தப் பதிலைக் கேட்ட உத்தவர் பிரமித்துப் போனார்.

“ஐயனே! அப்படியானால் எப்போதும் நீ அழைத்தால் தான் வருவாயா? நீயாக உனக்கு உற்றவரிடம் வர மாட்டாயா? எனக்கு பதிலைச் சொல்லு” என்று கேட்டார்.

கிருஷ்ணர் சிரித்தவாறே, “உத்தவரே! இந்தப் பூவுலகில் ஒவ்வொருவரும் அவரது கர்மாவின் படியே வாழ்க்கையை நடத்துவர். நான் எதையும் நடத்துவதுமில்லை. எவர் காரியத்திலும் புகுவதுமில்லை. நான் சாட்சி பூதமாக மட்டுமே விளங்குகிறேன். புரிந்து கொள்ளும்” என்றார்.

உத்தவர் உடனே, “அப்படியானால் நீ எங்கள் அருகிலேயே சாட்சியாய் இருப்பாய். ஆனால் நாங்கள் பாவம் செய்தாலும் அதைச் செய்து கொண்டே இருக்க விடுவாயா, என்ன? இப்படிப் பாவச் சுமையைக் கூட்டி நாங்கள் துன்பப்படுவதைத் தான் நீ அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்.

“உத்தவரே! உமது வார்த்தைகளை நன்கு கவனியும்! நான் சாட்சியாய் உங்கள் அருகே இருக்கும் போது, அதை நீங்கள் உணரும் போது, எப்படி நீங்கள் தப்பு செய்ய முடியும்? என்னை மறந்து தன்னால் செய்ய முடியும் என்று நினைக்கும் போது தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. தர்மராஜர் எனக்குத் தெரியாமல் தானே விளையாடி ஜெயிக்க முடியும் என்று எண்ணியதில் தான் அபாயம் ஆரம்பித்தது. சாட்சியாய் நான் அருகில் இருப்பதாக அவர் எண்ணியிருந்தால் சூதாட்டத்தின் முடிவு வேறாக அல்லவா இருந்திருக்கும்” என்று முடித்தார் கிருஷ்ணர்.

உத்தவர் பிரமித்து நின்றார். நன்கு சிந்திக்கத் தொடங்கினார்!

மஹாபாரதப் போரிலே கூட கிருஷ்ணர் சண்டையிடவில்லை. அர்ஜுனனையே போரிடச் செய்தார்.

சாட்சியாக எல்லோரிடமும் இருக்கும் கிருஷ்ணரிடம் நமது சர்வத்தையும் அர்ப்பணித்து பயனை எண்ணாமல் காரியங்களைச் செய்து கொண்டே போனால் பொறுப்பு அவனுடையது அல்லவா?

உத்தவருக்கு சர்வமும் புரிந்தது! கிருஷ்ணருக்கு விடை கொடுத்தார்.

உத்தவருக்கு கிருஷ்ணர் உபதேசித்த கீதை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று! ஏனெனில் அது தான் கிருஷ்ண பகவானின் கடைசி உபதேசம்!

கிருஷ்ணர் அர்ஜுனனனுக்கு உபதேசித்த பகவத் கீதை அனைவரும் அறிந்த ஒன்றே!

பகவத் கீதையின் சாரத்தை பாரதியார் இரு வரிகளில் இப்படித் தருகிறார்:

“பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்”

“மாம் அனுஸ்மர, யுத்த ச” (என்னை நினை; யுத்தம் செய்)

வாழ்க்கை என்னும் போரில் வெல்வதற்கு ‘மாம் அனுஸ்மர’ என்பதே கண்ணன் கொடுத்த சரியான ஆயுதமாகும்!

***

tags–  மஹாபாரதப் போர், . கிருஷ்ணன், உதங்கர் , கீதை

RUDRA DAMAN- THE GREATEST ENGINEER OF INDIA (Post No.11,004)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,004

Date uploaded in London – –    19 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Rudra daman is a name which no Indian can forget for three reasons.

  1. He has documented India’s great engineering skills
  2. He has shown the great development of Sanskrit language in India
  3. Indians have historical sense.

Earlier I wrote many articles in my two blogs to show that Indians had advance engineering skills. But all my previous articles were based on literature. So there may be some exaggeration. But Rudra daman who ruled the western parts of India around 150 CE has left us a beautiful record in history in the form of inscriptions in Girnar in Gujarat.

Girnar hill itself is a historical wonder where we find inscriptions of Asoka and others covering 500 years of Indian history. Probably that’s the only place in the world where we find 500 year inscriptions in one place. We may call it the Rosetta Sone of Indian History.

So far, we know that Bhagiratha was the greatest civil engineer who diverted River Ganga into the plains of Uttarakhand, Uttar Pradesh, Bihar and West Bengal. His forefathers also tried it, but in vain. Bhagiratha succeeded in diverting the river. Earlier some of the river water was wasted.

Agastya of Rigveda followed Bhagiratha and diverted River Kaveri in Karnataka towards Tamil Nadu. Thanks to Agastya now Thanjavur area became fertile land.

Same Agastya beat Bhagiratha in three more feats.

He was the one who laid Road Route in the middle of thick forest on top of Vindhya hills. Rama was able to cross the Vindhyas along the road route. Earlier kings were using coastal routes and boats.

Agastya also took the Tamils and others to South East Asia to establish Hindu kingdoms which survived for 1500 years. (Read my article Pandya King who ruled Vietnam)

Tamils were great navigators because of their proximity to sea. They knew the secret of South West Monsoon. Karikal cholza’s forefathers were praised in Tamil Sangam literature as the ones who ruled over Wind. One Tamil idiot by name Hippalus revealed this secret of monsoon to Westerners in Alexandria in Egypt. Then came disaster via Vasgoda cama of Portugal. British, French and Dutch invaded India and plundered all the wealth.

Earlier Ravana used South West Monsoon for his sexual adventures. He used to come to Godavari region to enjoy sex there. Mahavamsa clearly shows how Asoka and his contemporary used South West Monsoon to go to Patna and waited there for the returning monsoon to bring them back to Sri Lanka.

Without spending a Penny they travelled thousands of miles using Wind Power according to Tamil book Purananuru and Pali book Mahavamsa. But all these are literary evidence.

Rudra daman in his beautiful Sanskrit language inscription gave us historical inscription in Girnar. Girnar’s original name was Girinagara

That showed Sanskrit was highly developed at that time in the western parts of India. Kovalan’s reading of a Sanskrit letter in the hands of a crying Brahmin woman in the street, showed us Sanskrit was known even to a business man like Kovalan in Tamil Nadu. The anecdote is in Tamil epic Silappadikaram. So Sanskrit was known to all literate people at that time throughout the length and breadth of India and Asia. Gatha Sapta Sati also confirmed it through King Hala’s Prakrit book. Prakrit is the colloquial form of Sanskrit, used by common man.

xxx

What does Rudra daman said in his epigraph at Girnar rocks?

From Arvind sharma’s book Hinduism and Its Sense of History, I give some information.

Language Sanskrit, script Brahmi

Location Junagadh

Shortly before 150-151 CE, a terrible cyclone caused a serious breach, as a result of which the Sudarsana lake ceased to exist. When the peasants were fearing the failure of crops, Rudradaman sent his councillors and executive officers for the repair of the dam and the reconstruction of the lake. All the officials have been unsuccessful in the task Pahlava Suvisaka,son of Kulaipa, was appointed as the Governor of Anarta and Saurashtra. The efforts of this Parthian official in the employment of Rudra daman were crowned with success and the reservoir was again brought in to being.

The inscription is in prose running to twenty long lines.

The lake was constructed in the period of Chandra Gupta Maurya

It speaks about the history of the lake for about five hundred years.

xxxx

I am copying the inscription from Wikipedia

(Be it) accomplished!

(Line l.) This lake Sudarshana, from Girinagara [even a long distance?] …….. of a structure so well joined as to rival the spur of a mountain, because all its embankments are strong, in breadth, length and height constructed without gaps as they are of stone, [clay], …………. furnished with a natural dam, [formed by?]………………………….., and with well-provided conduits, drains and means to guard against foul matter,……………………three sections……………by……………….and other favours is (now) in an excellent condition.

(L. 3.) This same (lake) -on the first of the dark half of Margashirsha in the seventy-second -72nd – year of the king, the Mahakshatrapa Rudradaman whose name is repeated by the venerable, the son of . . . . . . . . . . . . , (and) son’s son of the king, the Mahakshatrapa Lord Chashtana the taking of whose name is auspicious,…………. when by the clouds pouring with rain the earth had been converted as it were into one ocean, by the excessively swollen floods of the Suvarnasikata, Palasini and other streams of mount Urjayat the dam ………………, though proper precautions [were taken], the water- churned by a storm which, of a most tremendous fury befitting the end of a mundane period, tore down hill-tops, trees, banks, turrets, upper stories, gates and raised places of shelter – scattered, broke to pieces, [tore apart]…………………….. ……., -with stones, trees, bushes and creeping plants scattered about, was thus laid open down to the bottom of the river:-

(L. 7.) By a breach four hundred and twenty cubits long, just as many broad, (and) seventy-five cubits deep, all the water escaped, so that (the lake), almost like a sandy desert, [became] extremely ugly [to look at].

(L.8)……… for the sake of…………/ ordered to be made by the Vaishya Pushyagupta, the provincial governor of the Maurya king Chandragupta; adorned with conduits for Ashoka the Maurya by the Yavana king Tushaspha while governing; and by the conduit ordered to be made by him, constructed in a manner worthy of a king (and) seen in that breach, the extensive dam…………

(L. 9.) ………..he who, because from the womb he was distinguished by the possession of undisturbed consummate Royal Fortune, was resorted to by all castes and chosen their lord to protect them; who made, and is true to, the vow to the latest breath of his life to abstain from slaying men, except in battles; who [showed] compassion …………… not failing to deal blows to equal antagonists meeting him face to face; who grants protection of life to people repairing to him of their own accord and those prostrating themselves before him;

…who is the lord of the whole of eastern and western Akaravanti (Akara: East Malwa and Avanti: West Malwa), the Anupa country, AnartaSurashtra, Svabhra (northern Gujarat) Maru (Marwar), Kachchha (Cutch), SindhuSauvira (Sindh and Multan districts), Kukura (Eastern Rajputana), Aparanta (“Western Border” – Northern Konkan), Nishada (an aboriginal tribe, Malwa and parts of Central India) and other territories gained by his own valour, the towns, marts and rural parts of which are never troubled by robbers, snakes, wild beasts, diseases and the like, where all subjects are attached to him, (and) where through his might the objects of [religion], wealth and pleasure [are duly attained];

…who by force destroyed the Yaudheyas who were loath to submit, rendered proud as they were by having manifested their’ title of’ heroes among all Kshatriyas; who obtained good report because he, in spite of having twice in fair fight completely defeated Satakarni, the lord of Dakshinapatha, on account of the nearness of their connection did not destroy him; who [obtained] victory . . . . . . . .; who reinstates deposed kings;

…who by the right raising of his hand has earned the strong attachment of Dharma; who has attained wide fame by studying and remembering, by the knowledge and practice of, grammar, music, logic and other great sciences; who …… the management of horses, elephants and chariots, (the use of) sword and shield, pugilistic combat and other . … .. . . …. the acts of quickness and efficiency of opposing forces; who day by day is in the habit of bestowing presents and honours and eschewing disrespectful treatment; who is bounteous; whose treasury by the tribute, tolls and shares rightfully obtained overflows with an accumulation of gold, silver, diamonds, beryl stones and (other) precious things; who………..… prose and verse, which are clear, agreeable, sweet, charming, beautiful, excelling by the proper use of words and adorned; whose beautiful frame owns the most excellent marks and signs, such as (auspicious) length, dimension and height, voice, gait, colour, vigour and strength; who himself has acquired the name of Mahakshatrapa; who has been wreathed with many garlands at the svayamvaras of kings’ daughters; -he, the Mahakshatrapa Rudradaman, in order to . . . . . . . . . . . cows and Brahmans for a thousand of years, and to increase his religious merit and fame, -without oppressing the inhabitants of the towns and country by taxes, forced labour and acts of affection -by (the expenditure of) a vast amount of money from his own treasury and in not too long a time made the dam three times as strong in breadth and length . . . . . . . . [on] all [banks] . . . . . . (and so) had (this lake) made (even) more beautiful to look at.

(L. 16.) When in this matter the Mahakshatrapa’s counsellors and executive officers, who though fully endowed with the qualifications of ministers, were averse to a task (regarded as) futile on account of the enormous extent of the breach, opposed the commencement (of the work), (and) when the people in their despair of having the dam rebuilt were loudly lamenting, (the work) was carried out by the minister Suvishakha, the son of Kulaipa, a Pahlava, who for the benefit of the inhabitants of the towns and country bad been appointed by the king in this government to rule the whole of Anarta and Surashtra, (a minister) who by his proper dealings and views in things temporal and spiritual increased the attachment (of the people), who was able, patient, not wavering, not arrogant, upright (and) not to be bribed, (and) who by his good government increased the spiritual merit, fame and glory of his master.

— Junagadh rock inscription of Rudradaman[5][6]

Xxx

MY COMMENTS

The above inscription gives us a lot of other information about the Varna/caste system, the types of victory as found in Artha shastra, Rudradaman’s victorious march and defeating Satakarni kings of South India, the political divisions from Afghanistan to South India.

Only with the help of Satakarnis (Nootruvar Kannar in Silappadikaram ) Tamil kings were able to go up to the Himalayas. They never conquered any  part of North India. But they went with their army and defeated who were preventing their advance. The Tamil kings announced that they were going to Himalayas for certain purpose and conquering a territory is not their motive. So no king obstructed their Himalayan ventures. Only some unknown chieftains like Kanaka, Vijaya acted like inexperienced fools (See Silappadikaram)

Rudradaman Inscription is a mile stone in Indian history.

Though we have one lakh inscriptions in India, very rarely we get 500 year history in one inscription!

Long Live Rudradaman.

Xxx Subham xxx