உபரத்தினங்களின் வரிசையில் ஒன்றாகக் கருதப்படுவது கால்ஸைட் (CALCITE).
விலை மலிவு ஆனால் பலன்களோ அதிகம்.
இது ஒரு ரசாயன உப்பு (Mineral). இதற்கு இப்படிப் பெயர் வைத்தவர் ப்ளினி தி எல்டர்.(Pliniy the Elder)
இதன் கெமிக்கல் ஃபார்முலா CaCO3. இது கால்ஸியம் அலுமினியம் கொண்ட ஒரு கலவையாகும்.
Calx என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது கால்ஸைட் என்ற சொல். இதனுடைய அர்த்தம் சுண்ணாம்பு என்பதாகும்.
பகுத்தறிவைத் தூண்டி ஆற்றலைத் தரும் கல் இது.
இதை அறையில் வைத்தாலேயே போதும் இதன் வலிமை வாய்ந்த அதிர்வுகள் நமக்கு பல நன்மைகளை உண்டாக்கும்.
நமது சக்தியைப் பன்மடங்காக்கும் ஆம்ப்ளிபையர் போல இது செயல்படும்.
உடல் வலிமை மற்றும் மன வலிமை ஆகிய இரண்டையும் சேர்த்து இது தருகிறது. உடலில் உள்ள வியாதியை உருவாக்கும் தீய சக்திகளை இது விரட்டி அடிக்கிறது. உணர்வுபூர்வமான மன அழுத்தத்தை நீக்கி உணர்வு கோஷண்ட் எனப்படும் எமோஷனல் கோஷண்டை இது சீராக்குகிறது.
காதலுக்கு ஒரு கல் இது. உறவுகளை மேம்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. மணவாழ்க்கையை சீராக்கி முறிந்த உறவுகளைச் சேர்க்கும் தன்மை இதற்கு உண்டு.
இது பளபளப்பாகவும் கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு சக்தி உண்டு.
இது உடலில் உள்ள ஆதார சக்கரங்களைத் தூண்டி விட்டு அதிக சக்தியைத் தருகிறது.
ஆரஞ்சு நிற கால்ஸைட் ஸ்வாதிஷ்டான சக்ரத்துடன் இணைந்து படைப்பாற்றல், பாலுறவு, புலனின்பம் ஆகியவற்றை நல்குகிறது.
மஞ்சள் நிற கால்ஸைட் மணிப்பூரக சக்ரம் தரும் அபூர்வ ஆரோக்கியப் பலன்களைத் தருகிறது. பயத்தை விரட்டி அடிக்கிறது.
நீல நிறக் கல்லானது படைப்பாற்றலை ஊக்குவிக்கும்.
எகிப்தியர்கள் இந்தக் கல்லை மிகவும் கொண்டாடி வந்தனர். தங்களது பாரோக்களின் கல்லறைகளில் இதை வைத்து அலங்கரித்தனர்.
இந்தக் கல் அமெரிக்கா, செக்கோஸ்லேவேகியா, ருமானியா, ஐஸ்லேண்ட், பெல்ஜியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் கிடைக்கிறது. உலகெங்கும் கிடைப்பதால் “எங்கும் கிடைக்கும் கல்” என்ற பெயரும் இதற்கு உண்டு.
உடலில் அணியும் ஆபரணங்களாகவும் செய்து கொண்டு இதை அணியலாம். அல்லது வெறும் கல்லாகவும் இதை வைத்துக் கொள்ளலாம்.
இதை சுத்தப்படுத்துவதற்காக கரடுமுரடான பொருள்களால் இதைத் தேய்க்கக் கூடாது.
ஓடும் நீரில் சுத்தப்படுத்தினாலேயே போதும்.
எந்த ரத்தினக்கல்லாக இருந்தாலும் சரி, உபரத்தினமாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரின் உடல், மன, ஆன்மீகத் தன்மைகள் வேறு வேறாக இருப்பதால் தகுந்த ஒரு ரத்தினக்கல் நிபுணரிடம் சென்று (GEMMOLOGYST) அவரது ஆலோசனையைப் பெறுதல் அவசியம்.
பணத்தைக் கொடுத்து வாங்குகின்ற கல் உண்மையிலேயே அந்தக் கல் தான் என்பதை அதற்குரிய சர்டிபிகேட்டைப் பார்த்து அறிந்து பின்னர் வாங்க வேண்டும். அல்லது நமது நலத்தை நாடும் அன்பரிடம் மட்டுமே நவரத்தின மற்றும் உபரத்தினக் கற்களை வாங்க வேண்டும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Water Proverbs – 1
In crossing water and giving money, never be the first.
**
Water causes neither illness, nor intoxication, nor debts.
Water causes neither sickness, debt, nor widowhood.
**
One should not stir up the water one has to drink.
At the end of a thousand years, the water returns to its cask.
Meaning: we always return to our old loves.
Of water what has been poured out, collect what you can.
–Spanish proverbs
**
Running water is not harmful to man.
Beware of water that doesn’t run and a cat that doesn’t mew.
Everyone draws water to his own mill and leave the neighbour’s dry.
–Catalonian
**
Pure water is the world’s first and foremost medicine.
Everybody drive the watercourse to his own mill.
Slovakian proverb.
**
Water will run again where it once ran-Slovenian.
The ends into the water
Meaning :the throwing of vanquished people into the water with stones tied to them Shemyaka in Norgorod: John IV in Norgorod (Part of Russian History). Also called Novgorod.
**
Into the sack and into the water
Meaning : the court of Modvins- a tribe living in the east of Europena Russia)
**
Downstream the water carries; upstream the necessity
Meaning: Volga boatman. Timber carried downstream; upstream grain which required a team of men.
**
Within a Russian hour much water flows
Meaning: ancient calculation off time according to the quantity of water flowing out of container.
**
Wherever water flows it will find way.
The more abundantly water gushes from its source, the less is the source esteemed.
Where water has been, there it will be.
Here money once went, there it will go again.
You must drink the water of the river you are travelling on.
**
Even if water flows on all directions, the sand will remain at the bottom- Georgian
Water breaks out where it is not expected.
Water for the skin, but wine for the vitals.
**
Under water, hunger; under snow, bread.
A glass of water is sometimes worth a tun of wine.
—Italian
**
He drinks water by measure. i.e. penny wise and pound foolish.
Water tastes better at the source- Latin
**
All water quenches thirst.
To drink pure water, go to the source- Maltese
**
There is no stronger drink than water.
Water and fire are good servants but cruel masters-
Montenegrin
**
What water gives water takes away- Portuguese
***
From the drop of water through the roof, and death
through the door there is no escape – Albanian proverb
**
Clean water often comes out of a mucky spout
Meaning- good person may come from a disreputable family.
There is always some water where the heifer drowns.
–English
**
Much water flows by unknown to the miller.
Let everyone seek water for his own ship.
The water is shallowest where it babbles.
There is no obstruction but water.
–Welsh
Clear water, peaceful mind.
As long as a man is healthy even water will be a tasty beverage.
Water will run where it ran before.—Bulgarian
If you wade through all waters you will drown in the end—Danish
நுாற்றாண்டுகளுக்கும் மேலான அந்நிய ஆதிக்கத்தின் விளைவாக, அரசியல் மற்றும் பொருளாதார தத்துவங்களில் புரையோடி போயிருந்த மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தை விலக்கி, நல்லிணக்கத்தை நோக்கமாக கொண்ட, பண்டைய இந்திய அரசியல் வாழ்க்கையை மீட்டெடுக்க முயன்ற மாபெரும் தளகர்த்தர்களில் முக்கியமானவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
காங்கிரஸ் அல்லாத ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க அடித்தளமிட்டவர் இவர். இவரது பிறந்த தினம் இன்று (25, செப்டம்பர்). தனது புதிய அவதாரத்தின் மூலம் இன்று இந்தியாவின் வளர்ச்சி முகத்தை மாற்றியமைத்த பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் தலைவர்களில் முதன்மையானவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
தேசியச் செயலராக, தலைவராக தொடக்க காலம் முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் சித்தாந்தங்களை வளர்த்தெடுத்தவர்.
இளமைக் காலம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா சந்தரபான் என்ற கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் பிறந்தார். மூன்று வயதிற்குள் தந்தையையும், ஏழு வயதிற்குள் தாயாரையும் இழந்த தீன்தயாள், ரயில்வே துறையில் பணிபுரிந்த தன் தாய்மாமன் ராதாராமனின் அரவணைப்பில் வளர்ந்தார்.
வறுமையான குடும்ப சூழலில் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு படித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி மேல்நிலைக்கல்வித் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.
இளங்கலை பட்டப்படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக முதுகலைப் பட்டப்படிப்பை இடையிலேயே விட்டுவிட்டார். இவர், அரசு நிர்வாகப்பணித் தேர்விலும், இளநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட, பல்வந்த் சாப்தே மூலம் 1937ல் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்தார்.
சமூக வாழ்க்கை
ஆர்.எஸ்.எஸ்.,சைத் தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவர் மற்றும் நானாஜியால் பெரிதும் கவரப்பட்டு, 1942 முதல் முழு நேர ஊழியராக மாறினார். கடந்த, 1951ல் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியால் துவக்கப்பட்ட ‘ஜனசங்கம்’ என்ற அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். 1952ல் ஜனசங்கத்தின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார்.
ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர் இவர், 1945ல், ‘ராஷ்டிரதரம்’ என்ற மாத இதழ், 1948ல் ‘பஞ்சஜன்யா’ என்ற வார இதழ், 1949- – 50ல் ‘சுதேசி’ நாளி தழையும் வெளியிட்டார். மேலும், ‘சாம்ராட் சந்திர குப்தர், ஜெகத்குரு சங்கராச்சாரியா’ உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதினார். ஆர்கனைசர் என்ற ஆங்கில வார இதழில் ‘அரசியல் டைரி’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார்.
இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவிற்கு எதிராக டாக்டர் முகர்ஜி, ஒரு சத்யாகிரகக் குழுவுடன் ஜம்மு- காஷ்மீரை நோக்கிப் பயணப்பட்டார். அப்போது கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கேயே மர்மமான முறையில் திடீரென இறந்தார். கட்சியின் முழுப் பொறுப்பும், 37 வயதே நிரம்பி இருந்த தீன் தயாள் கைக்கு வந்தது.
தொடர்ந்து 15 ஆண்டுகள் வாழ்க்கையின் இறுதி நாள் வரை அதுவே அவரது இலட்சியப் பயணமாக அமைந்தது. கட்சியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதிலும், அதன் அரசியல் சித்தாந்தங்களைச் செதுக்கியதிலும், பலமான கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்ததிலும் அவரது பங்களிப்பு மகத்தானது.
பின், 1980ல் ஜனசங்கம், பெயர் மாற்றத்துடன் பாரதிய ஜனதா கட்சியாகி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதற்கு, அன்றே அடித்தளமிட்ட தேசத்தலைவர் தீன் தயாள் உபாத்யாயா ஆவார். பாரதிய ஜனசங்கத்தின் தொடக்க காலம் முதல் தொடர்ந்து பொதுச் செயலராகப் பணியாற்றிய தீன்தயாள் உபாத்யாயா, 1967, டிசம்பரில், தேசியத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
மனிதநேய சித்தாந்தம்
பிரதமர் மோடி, தீன் தயாள் உபாத்யாயா சொல்லிக் கொடுத்த மனித நேயத்தைக் கடைப்பிடித்து வருகிறார். தற்போது செயல்பட்டு வரும் தேசிய புதிய கல்விக் கொள்கை, புதிய சுகாதாரக் கொள்கை, பொது சிவில் சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்த மசோதா, ஆத்மநிர்பர் பாரத், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, துாய்மை இந்தியா போன்ற அனைத்துக் கொள்கைகளுக்கும், சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதாரமாக இருப்பது, இக்கோட்பாடே!
சுதந்திரத்துக்குப் பிறகும் கூட, நம் அரசியல் கட்சிகளின் சிந்தனை மேற்கத்திய சிந்தனையாகவே தொடர்ந்தது. இந்தியர்களின் மனமும் சிந்தனை ஓட்டமும் பாரதிய தன்மை கொண்டதாக இருக்கவில்லை. இந்திய அரசியலில் காணப்பட்ட மேற்கத்திய தன்மையும் ஊழல்களும் இவரை மிகவும் கவலை அடையச் செய்தன.
இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசியல் கோட்பாடுகள் செயற்கையானவை என்று கருதினார். இவை பாரத தேசத்திற்கு ஒவ்வாதவை என்று எடுத்துரைத்தார். அரசியலிலிருந்து தர்மத்தை பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதை கொள்கை ஆக்கினார்.
கடந்த, 1965ல் மும்பையில் நடைபெற்ற பாரதிய ஜனசங்கக் கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ஒரு தீர்க்கமான கொள்கையை முன்வைத்தார். இந்த விளக்கங்கள் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அறம் இல்லாத பொருளாதாரமும் ஒழுக்கமில்லாத அரசியலும் ஒரு சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்றார் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல் கோட்பாடுகளும் மக்களின் பாரம்பரியம், கலாசாரம், இயற்கை வளங்கள் மற்றும் அவர்களின் எண்ண ஓட்டங்களை ஒட்டி அமைய வேண்டும் என்றார்.
இவர் மனிதனுக்குத் தேவையான தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களை இன்றைய சமூக- பொருளாதார பிரச்னைகளுடன் தொடர்பு படுத்தி விவரித்தார்
உடல், மனம், அறிவு மற்றும் ஆன்மா ஆகியவற்றால் ஆக்கப்பட்ட மனிதனுடைய இந்த நான்கு கூறுகளுக்கான தேவைகள் ஒரே சமயத்திலும் ஒருங்கிணைப்புடனும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்; இதை இயற்கைக்குப் பங்கமில்லாமல் பாரதப் பண்பாட்டுடன் செய்ய முயல வேண்டும் என வலியுறுத்தினார்.
சுதேசி பொருளாதரத்தை ஆதரித்தார். வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்து உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் வளங்களை ஊக்குவித்தார். இன்றைய காலங்களின் தேவை புதிய நகரங்கள் அல்ல; கிராமங்களின் தொழில்மயமாக்கலே என்றார்.
விவசாயிகள் அரசாங்கங்களின் கட்டுப்பாடுகளில் இருந்தும், பிற நேர்மையற்ற கூறுகளிலிருந்தும் விடுபட வேண்டும்; விவசாயிகள் முதலாளிகளாகக் கருதப்பட வேண்டும்; பாரம்பரிய திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; உள்ளுர் சந்தைகள் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீன்தயாள் விரும்பினார்.
இருப்பினும், சுற்றுச் சூழலை அழிக்கும் நுகர்வுக் கலாசாரத்தை விட்டொழிக்க வேண்டும்; இயற்கை வளங்களின் சமநிலை பாதிக்காதவாறு, அவ்வளங்கள் தொடர்ந்து நமக்குக் கிடைக்கும் வண்ணம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், ஓவ்வொரு தொழிலாளியும் உணவைப்பெற வேண்டும் என்ற வழக்கமான முழக்கத்திற்குப் பதிலாக நம் பொருளாதாரத்தின் அடிப்படையாக அனைவருக்கும் உணவும் வேலையும் கிடைக்க வேண்டும் என்றார்.
தேசிய விழிப்புணர்வு, தேசிய அடையாளம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகிற தீன்தயாள் உபாத்யாயா, பிளவு படுத்தும் மனப்பான்மை கொண்ட ‘மேற்கத்திய தேசியவாதத்தை’ எதிர்த்தார். தேசிய உணர்வின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய இவர், ‘தேசிய அடையாளமும் கலாசார சுதந்திரமும் இருக்கும்போதுதான் அரசியல் சுதந்திரம் அர்த்தமுள்ளதாகிறது.
‘எனவே, நம் தேசிய அடையாளம் குறித்த சிந்தனை அனைவருக்கும் தேவை; மேலும், நம் தேசிய அடையாளத்தை நாம் அறியாத வரை, நம்முடைய முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியாது’ என்றார். பண்டிட் தீன்தயாளால் முன்மொழியப்பட்ட அரசியல் தத்துவமான இந்த ஒருங்கிணைந்த மனிதநேயம் இன்றைக்கும், என்றைக்கும் பொருந்துகிற தத்துவமாக இருக்கிறது!
தொடர்புக்கு:+91 94438 50902dharmaws@yahoo.co.in
DINAMALAR REPORT
*******
FOLLOWING IS FROM FACEBOOK
பாரதத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவருமான பண்டிட் தீனதயாள் உபாத்தியாய (Pandit Deendayal Upadhyaya) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* உத்திரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் நகலா சந்திரபான் என்ற கிராமத்தில் பிறந்தார் (1916). சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தார். உறவினர்களால் வளர்க்கப்பட்டார். பத்து வயதே ஆன இவர் தன்னைவிட இரண்டு வயது குறைவான தம்பியை பொறுப்போடு வளர்த்து வந்தார்.
* கங்காபுரில் ஆரம்பக் கல்வியும் பின்னர் ராஜகரில் பள்ளி மேல்படிப்பும் பயின்றார். கணிதத்தில் சிறந்த மாணவராக விளங்கினார். 1937-ல் இன்டர்மீடியட் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதனால் மேல்படிப்புக்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.
* கான்பூர் எஸ்.டி. கல்லூரியில் சேர்ந்தார். இங்கு அவர் சுந்தர்சிங் பண்டாரி, பல்வந்த் மஹாசிங்கே ஆகியோரை சந்தித்தார். 1939-ல் பட்டம் பெற்றார். எம்.ஏ. படிப்பதற்காக ஆக்ரா சென்றார். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
* சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களால் இவரால் முதுகலைப் படிப்பைத் தொடர முடியவில்லை. அரசு வேலைக்கான தேர்வு எழுதப்போன சமயத்தில் வேட்டி, குர்தா, தலையில் தொப்பி சகிதம் சென்ற இவரைப் பார்த்து சிலர் ‘பண்டிட்ஜி’ என்று கிண்டலாக அழைத்தனர். ஆனால் அதுவே பின்னாளில் இவரது பெயருடன் நிலைத்துவிட்டது.
* இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர். இந்தியில் மிகவும் பிரபலமான ‘சந்திரகுப்த மவுரியா’ என்ற நாடகத்தை ஒரே மூச்சில் எழுதிவிட்டார். தேசிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க ‘ராஷ்ட்ர தர்ம’ என்ற மாத இதழை 1940-ல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் ‘பாஞ்சஜன்யா’ என்ற வார இதழையும் ‘சுதேசி’ என்ற நாளிதழையும் தொடங்கினார்.
* 1942-ல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார். ‘ஏகாத்மா மானவ்வாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
* இவரது செயல்கள், படைப்புகள், பேச்சுகள் அனைத்திலும் தேசியமே நிறைந்திருந்தது. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் எப்போதுமே செயல்படுவார். வீடு, குடும்பம் இவற்றைவிட தேச சேவையையே முக்கியமாக கருதினார்.
* தற்கால விஷயங்கள் குறித்து ‘பொலிடிகல் டைரி’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். 1951-ல் சியாம் பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டார்.
* ‘இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம் பிரசாத் இவரைப் பற்றிக் கூறுவார். அவர் மறைந்த பின் ஜனசங்க கட்சியின் தலைவரானார்.
* தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 51.
பதிவு: ராஜலட்சுமி சிவலிங்கம், FACE BOOK REPORT 25-9-25
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 2
அதர்வண வேத மந்திர எண்கள் பின்வருமாறு
அக்சத – காயமடையாத 4-9-8
அன்ய -த்யூஸ் -ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் காய்ச்சல் 7-116-2
அபான – வெளிவிடும் மூச்சுக் காற்று 10-2-
பிராண, வியான ஆகிய காற்றுகளை ரிக்வேதத்தில் கண்டோம்
அப்வா – வயிற்று நோவு – 3-2-5
அருந்ததி – ஒரு மூலிகையின் பெயர் ; 4-13-1
கீழ் ஜாதியில் அக்ஷமாலா என்ற பெயருடன் பிறந்த பெண் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது ;அவள் வசிஷ்ட மகரிஷிக்கு மனைவியாகி சப்தரிஷி மண்டல நட்சத்திரங்களுள் ஒன்றானாள் ; அதை அராபியர்கள் ஆல்கால் ALCOL என்றனர் ; திருவள்ளுவர் குறளில் அது அலகை என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
அகண்டு – ஒரு வகைப் பூச்சி 2-31-2
அல்பஸயு – ஒரு வகைப் பூச்சி 4-36-9
அசரிக- (முடக்கு வலி) முடக்கு வாதம் 19-34-10
உபய– த்யூஸ் – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் மலேரியா போன்ற காய்ச்சல் 1-26-4; 7-116-3;
இந்த உபய என்ற சொல் இன்று வரை வைஷ்ணவர் கடி தங்களிலும் திருமண அழைப்பிதழ் களிலும் இடம் பெறுகிறது இரண்டும் என்பது பொருள்
கிலாச – வெண் குஷ்டம் 1-23-1,2;
க்ளிவத்வ/- ஆண்மையின்மை , அலி 6-138;
கண்டமாலா – கழுத்தில் வீக்கம்
கண்ட என்பதை கழுத்துக்குத் தமிழர்களும் ஏனையோரும் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்
நீல கண்ட – சிவனுக்கும் மயிலுக்கும் பெயர்
ஜடிங்கா – வலியைக் குறைக்கும் , மயக்கம் தரும் மூலிகை; பலாச நோய்க்கு மருந்து
(பலாச கீழே வருகிறது )
ஜ்வர – காய்ச்சல் 5-30-8
இன்று வரை நாடு முழுதும் பயன்படுத்தும் சொல்
த்ரிதியாக – 3 நாட்களுக்கு ஒரு முறை வரும் காய்ச்சல் /மலேரியா 1-25-4; 7-116-2;
பலாச – காசநோய் 4-98;6-14-1
யக்ஸ்மா – காசநோய் 5-38 and 16;
வருண கிரஹித – ஜலோதர நோய் / மகோதரம்
வித்ரியாக – இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு வரும் காய்ச்சல் 5-22-13;
சீர்சாமய – தலைவலி ;ஆமய என்றால் நோய்; சிரஸ் என்றால் தலை 5-4-10;9-8-1;
சதாம் -தி – தினமும் வரும் மலேரியா ஜுரம் 1-2-13
ஹரிமா- மஞ்சள் காமாலை 19-44-2
***
ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் ஆண்- பெண் புணர்ச்சி பற்றிய சூக்தம் 10-85-37 உள்ளது
கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு செய்யவேண்டிய பும்ஸவன சீமந்தக் கிரியைகளை அதர்வண வேதம் விவரிக்கிறது . கர்ப்பவதிக்கு குளிகை மருந்து தருவதையும் குறிப்பிடுகிறது. அங்கே வரும் ஒரு அருமையான உருவகம் சொல்கிறது: AV 3-23
தாவரங்களே தந்தை, பூமியே தாய், சமுத்திரம் வேர், கடவுள் கொடுத்த மூலிகைகள் உனக்கு ஒரு நல்ல மகனை ஈன்ற உதவட்டும்
யாசாம் த்யெளவ பிதா, ப்ருத்வீ மாதா, சமுத்ரோ மூலம், விருதாம் பபூவ .
தாஸ்த்வா புத்ரவித்யாய தைவீ ப்ராவாந்த்யோ பவஹ
The plants which has been the father, earth the mother, ocean the root, let those herbs of the god favour thee, in order to acquire a son.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கிஆன்லைன் இதழில் 23-6-25 அன்று வெளியான கட்டுரை!
புதிய உண்மை – 7 விதமான ஓய்வு வேண்டும் ஒவ்வொருவருக்கும்!
ச. நாகராஜன்
டாக்டர் சாண்ட்ரா டால்டன் ஸ்மித்
ஓய்வு எடுங்கள், ஒய்வு எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் ஏழு விதமான ஓய்வு வேண்டும் என்று கண்டுபிடித்து புதிய உண்மையைச் சொல்கிறார் டாக்டர் சாண்ட்ரா டால்டன் ஸ்மித் என்னும் பன்னாட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்.
பணியையும் வாழ்க்கையையும் இணைக்கும் ஆய்வு நிபுணரான இவர் ஏழு வித ஒய்வை வற்புறுத்துகிறார் தனது புத்தகமான ‘சேக்ரட் ரெஸ்ட்’ (SACRED REST) என்ற நூலில்! படிக்க வேண்டிய நல்ல நூல் இது!!
1.உடலுக்கு ஓய்வு
முதன்முதலில் அன்றாடம் வேலை பார்த்துக் களைத்து இருக்கும் நாம் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நல்ல தூக்கம், பகலில் குட்டித் தூக்கம் ஆகியவை இந்த வகையில் அடங்கும். தியானம், புத்துணர்ச்சி ஊட்டும் செயல்கள் ஆகியவை உடல் ஓய்வு தருவதில் திறன் வாய்ந்தவை என்று சொல்லலாம்.
2.மனதிற்கு ஓய்வு
இதைப் பெறுவது என்பது பலருக்கும் கஷ்டமான ஒரு காரியமாக இருக்கிறது. இதற்கான எளிய வழியை டாக்டர் டால்டன் ஸ்மித் கூறுகிறார். அன்றாடம் வேலை செய்யும் போது இடையிடையே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டால் மனதிற்கு ஓய்வு கிடைக்கும். இன்னொரு வழி அன்றாடம் படுக்கப் போவதற்கு முன்பு நாட்குறிப்பை எழுதுவது.
இன்னொரு வழியும் உண்டு : எண்ணத்தை நெகிழச்செய்தல். (THOUGHT DIFFUSION).
அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து உங்கள் எண்ணங்களை மனதில் ஓட விட வேண்டும். அதில் சொந்த உணர்ச்சியைக் கலக்காமல் அவை ஒவ்வொன்றாக மெதுவாக அதனதன் வேகத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க வேண்டும். நீரோடை ஒன்றில் பூக்கள் மிதந்து செல்வது போல அல்லது வானத்தில் மேகக்கூட்டம் ஒவ்வொன்றாக மெதுவாக நகர்வது போல இது இருக்க வேண்டும்.
3.புலன்களுக்கு ஓய்வு
எப்போது பார்த்தாலும் டிவி அல்லது கம்ப்யூட்டர் திரை முன் இருப்பது, யாருடனாவது பேசிக் கொண்டேஇருப்பது, இசையைக் கேட்டுக் கொண்டே இருப்பது, குழந்தைகளுடன் இருப்பது அல்லது வளர்ப்பு மிருகங்களுடன் நேரத்தைச் செலவிடுவது – இவை அனைத்துமே அதிகப்படியாக நமது புலன்களை ஈடுபடுத்தும் செயல்களாகும். படுக்கப் போவதற்கு முன்னர் அன்றாடம் ஒரு நாற்பத்தைந்து நிமிடங்கள் டிவி திரை அல்லது சோஷியல் மீடியாக்களிடமிருந்து விலகி இருந்து பாருங்கள். புலன்களின் கூரிய சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
4.உணர்ச்சி ஓய்வு
நீங்கள் ஒரு விஷயத்தை அறிந்து மிகவும் சோர்வடைந்து விட்ட போது அதைப் பார்த்த ஒருவர், என்ன ஆயிற்று எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் “ஃபைன்” என்ற வார்த்தை வாயிலிருந்து வந்தாலும் உள்ளுக்குள் மன அழுத்தம் இருக்கவே செய்யும்; இன்னும் கூடுதலாகிக் கொண்டே தான் இருக்கும். மாறாக வெளிப்படையாக, ” … இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்து விட்டேன்” என்று சொல்வது உங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும். இன்னும், உற்சாகமாக இருப்பவர்களிடையே சென்று அவர்களுடன் கலந்து கொள்வதும் ஒரு நல்ல வழி தான் – உணர்ச்சி ஓய்வுக்கு!
5.சமூக ஓய்வு
நீங்கள் எதையும் மனதிற்குள் வைத்துக் கொள்பவரா அல்லது கலகலப்பாக அனைவருடனும் பழகுபவரா – இதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவருடன் இருக்கும் போது சக்தி அதிகமாகிறதா அல்லது சக்தியை இழக்கிறோமா? நம்முடைய சோஷியல் பேட்டரி சார்ஜ் ஆகிறதா அல்லது சார்ஜை இழக்கிறதா? உங்கள் பார்ட்னருடன் இதைப் பற்றிப் பேசினால் போதும் – ஒருவர் பார்ட்டியில் இன்னும் சற்று நேரம் இருக்கலாம் என்பார். இன்னொருவரோ உடனே போக வேண்டும் என்பார். ஆக சமூக நிகழ்ச்சிகளில் நாம் நமது பேட்டரியை நன்கு சார்ஜ் செய்து கொள்ளும் விதத்தில் கலந்து கொள்ள வேண்டுவது அவசியம்.
6.படைப்பாற்றல் ஓய்வு
ஓவியம் படைப்பது, இசையை அமைப்பது, எழுதுவது, இப்படி படைப்பாற்றல் துறைகளில் உள்ளவர்கள் ஓய்வே இல்லாமல் பணியைத் தொடர்ந்தால் அவர்கள் உடல் சோர்வு மனச்சோர்வு ஆகியவற்றை அடைவர். இதைப் போக்க அவ்வப்பொழுது இயற்கைச் சூழ்நிலைகளில் சிறிது நேரத்தைக் கழிக்கலாம். அதை உணர்ந்து அனுபவிக்கலாம். அல்லது கையில் உள்ள பிரச்சனையை மறந்து விட்டு சிறிது நேரம் ‘ஹாயாக’ இருக்கலாம்.
7. ஆன்மீக ஓய்வு
கடைசியாக ஒன்று. நமது மனமும் உடலும் ஆன்மீக ஓய்வுக்காக ஏங்குகிறது. நம்மை இன்னொரு பெரிய ஆற்றலுடன் இணைக்கவே மனமும் உடலும் பெரிதும் விரும்புகிறது. ஒரு நல்ல குழுவில் இணைந்து சேவை செய்வது, பிறருக்கு உதவுவது, பெரியோருடன் பழகுவது ஆகிய இவை எல்லாம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஆலய வழிபாடு, யாத்திரையாகச் செல்வது பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆக இந்த ஏழு வித ஓய்வுகளையும் உங்கள் வாழ்வில் கொண்டு வந்து விடுங்கள்.
அப்புறம் பாருங்கள் – உங்கள் உடல் சக்தியையும் மனோசக்தியையும்.
அது ‘வேற லெவலில்’ இருக்கும்!
அப்போது நன்றி சொல்ல வேண்டியது – இந்தப் புதிய உண்மையைக் கூறும் டாக்டர் சாண்ட்ரா டால்டன் ஸ்மித்துக்குத் தான்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 3
Now let us look at the medical glossary in the Atharva Veda:
Aksata – uninjured 4-9-8
Anya-dyus -fever that attacks on alternate days 7-116-2
Apaana – air breathed out 10-2-13
We have already seen praana and vyaana in the Rig Veda.
Apvaa – some stomach disease – 3-2-5
Arundhati – a plant used for healing 4-13-1
Arundhati was a low caste woman named Akshamala in the Manu smriti. But a star and a plant and a Nyaya are named after her. Her name figured at least six times in 2000 year old Sangam Tamil literature.
Arabs called it Alcol which is in Tirukkural- alakai.
Agandu – a species of insect 2-31-2
Alpasayu- an insect 4-36-9
Aasarika – rheumatic pain 19-34-10
Ubhaya – dyus – malarial fever that attacks with a gap of two days 1-26-4; 7-116-3;
The word UBHAYA for two or both is used until this day in letters and Vaishnavite invitations.
Kilaasa – leukoderma 1-23-1,2;
Kliivatva- impotency 6-138;
Gandamaalaa – inflammation of the glands in the neck.
Gandaa for neck is used in all te names
Neelakaandan – blue necked Shiva or peacock G=K
Jadinga – a sedative plant used by Trikakuda to treat balaasa.
Jvara- fever 5-30-8
Until this day the word jvara is used.
Tritiyaka- malarial fever that attacks with a gap of three days 1-25-4; 7-116-2;
Balaasa – consumption of phthisis 4-98;6-14-1;
Yaksma- TB 5-308 and 16;
Varuna grhita – suffering from Jalodhara
Vitritiyaka- malarial fever that attacks with a gap of two days 5-22-13;
Sirsaamaya – headache5-4-10;9-8-1;
Sadam -di -malarial fever that rises daily 1-2-13
Harimaa – jaundice 19-44-2
***
Terms in the field of SURGERY
Asthiivantau- knee cap 10-2-2
Ucchalankhau- the portion between heel and ankle 10-2-1;
Kakaatika- bones of mouth10-2-8
Wkabandha – torso 10-2-3;
Kapaala – skull 10-2-8
This word is used in Tamil and all medical books as cephala; C=K;
Kusindha- loins, pelvis 10-2-3
Kha – orifice 10-2-6;
Gulphau- ancles 10-2-1;
Grivaa- neck 10-2-4
Catustaya – elastic bones above the knee 10-2-1, 2;
Sapta khani siirsaani- seven pores of the head 10-2-5;
Sroni- buttocks 10-2-3;
Bhagwan Singh has taken a lot of time in compiling various lists under different heads in his book THE VEDIC HARAPPANS.
Those who are interested may go to each hymn and find more medical secrets.
Tenth canto has many important terms. One can compare these terms with the terms in the Samhitas of Sushruta and Caraka. A lot of scope for medical research in the Vedas.
If one studies the hymn where the medical terms occur, one will be surprised to find out newer things in medical systems.
Known Medical Miracles
We already know the medical miracles in the Vedas particularly linked with the Asvini Devas, the doctors of the Vedic period.
This shows considerable advancement in the medical field. Rejuvenation of Cyavana (RV 10-39-4) and Purandhi’s husband (RV 1-116-13), setting the fractured thigh of Vispala through support (RV 1-116-13) and curing of the blindness of Rjrsva (RV 1-116-17).
–subham—
Tags – medical glossary, jargon, Atharva Veda, Rig Veda, Surgery, part 3
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செப்டம்பர் 2025 ஹெல்த்கேர் இதழில் பிரசுரமான கட்டுரை!
தெரியாமல் ஆளைக் கொல்லும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்!
ச. நாகராஜன்
தெரிந்தே கொல்லும் வியாதிகள் உலகத்தில் ஏராளம் இருக்க தெரியாமல் ஆளைக் கொல்லும் ஒரு புதிய பொருள் நவீன உலகத்தில் உண்டாகி இருக்கிறது. இந்தப் பொருளை உருவாக்கியவர்கள் மனிதர்களே!
இந்தப் பொருள் தான் மைக்ரோ பிளாஸ்டிக்!
பெரிய பிளாஸ்டிக் துகள்களிலிருந்து உருவாகும் இவை ஒரு நானோ மீட்டரிலிருந்து 5 மில்லிமீட்டர் வரை இருக்கும்.
ஒரு நானோ மீட்டர் என்பது மனித தலைமுடியின் அகலமாகும்.
சரி, இந்த பிளாஸ்டிக் துகள்களை உருவாக்குபவர் யார்? மனிதர்களே தான்!
சிகரட் பில்டர்கள், நைலான், பாலிஸ்டர் துணிகள், ஏராளமான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்கள், பிளாஸ்டிக் பொருள்கள் இவற்றின் மூலம் உருவாவது தான் பிளாஸ்டிக் துகள்கள்!
கடல் உணவிலிருந்து நமக்கு விடமின் டி மற்றும் ஒமேகா 3 கிடைப்பது உண்மை தான்! ஆனால் இப்போது கடல் வாழ் மீன்களைச் சாப்பிடும்போது நாம் எண்ணற்ற மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்களையும் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பது அதிர்ச்சி தரும் உண்மை!
மனிதர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தூக்கி எறியும் கழிவுப் பொருள்களை கடல் வாழ் உயிரினங்கள் உண்ண, அது நம் உணவுச் சங்கிலியின் உள்ளே புகுந்து விடுகிறது.
ஒரு இஃப்ரிமெர் ஆய்வின் படி ( IFREMER RESEARCH) 24400 கோடி அளவு மைக்ரோ பிளாஸ்டிக் துகள் கடலின் மீது மிதந்து கொண்டிருக்கின்றன.
1950களிலிருந்து பிளாஸ்டிக்கின் உற்பத்தி அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போனது. ஐரோப்பாவில் மட்டும் 2022ம் ஆண்டு வாக்கில் இது 580 லட்சம் டன்களை எட்டியது.
அப்படி என்றால் உலகளாவிய விதத்தில் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து திடுக்கிடலாம்!
2017ல் பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதன்படி ஒவ்வொரு மனிதனும் வருடத்திற்கு 11000 பிளாஸ்டிக் துகள்களை உண்ணுகிறார்கள்!
காலப்போக்கில் காற்றினாலும், கடல் அலைகளினாலும் மைக்ரோ ஆர்கானிஸம் உடைந்து தூள் தூளாகி நானோ பிளாஸ்டிக்காக் ஆகிறது.
இவை சுற்றுப்புறச் சூழலில் காற்று, நீர், மண் உள்ளிட்டவற்றில் கலந்து அவற்றை மாசு படுத்துகிறது.
இந்த மோசமான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் ஆக்கிரமிப்பிற்து பயோஅக்குமுலேஷன் (bioaccumulation) ‘என்று பெயர்.
இவை கடல் வாழ் உயிரினங்களின் மீது எல்லையற்ற மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. சோதனைச்சாலைகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை ஜீரண உறுப்புகளை தடைப்படுத்தி டிஎன் ஏ சேதத்தைக் கூட விளைவிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பிளாஸ்டிக்கில் அதிக அளவு phthalates இருப்பதால் எண்டாக்ரின்களை சீர் குலைக்கிறது. இவை ஹார்மோன் அமைப்புகளில் சேர்ந்து கடல்வாழ் உயிரினங்களையும் மனிதர்களையும் ஆபத்துக்குள்ளாக்கி ஆரோக்கியக் கேட்டை உருவாக்குகிறது.
அடுத்து மனிதரை எடுத்துக் கொண்டோமானால் மனிதரிடம் தீய பாக்டீரியாக்களைச் செலுத்தி அபாயகரமான வியாதிகளை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உருவாக்குகின்றன.
மனிதர்கள் வாய் மூலமாக உண்ணும் உணவுப் பொருள்களாலும், சுவாசிக்கும் மூச்சுக் காற்று மூலமாகவும்,, தோலில் ஏற்படும் தொடுதலாலும் மைக்ரோ பிளாஸ்டிக்கின் அபாயமான விளைவுகளுக்கு ஆளாகிறார்கள்!
குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதனாலும் சிறுவர்கள் வாழ்கின்ற சுற்றுப்புறச் சூழலாலும் தொழிலாளர்கள் டெக்ஸ்டைல் ஆலைகள், கட்டுமானப் பணிகள், உள்ளிட்டவற்றில் பணியாற்றும் போதும் இதனால் அதிக அளவு அபாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
இந்த அபாயத்தை எப்படித் தடுப்பது?
சாமானியன் கூட இந்த அபாயத்தை முயற்சி செய்து தடுத்து விடலாம்.
இன்று பெருமளவும் நீரைப் பருக்க வாட்டர் பாட்டில்களே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையோ அல்லது ஸ்டீல் வாட்டர் பாட்டில்களையோ உபயோகிக்கலாம்.
வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைக் கணக்கெடுத்து ஒவ்வொன்றாக அவற்றை அதற்குரிய கழிவுப் பெட்டிகளில் போட்டு விடலாம்.
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து அதற்குப் பதிலாக துணிப்பைகளை பயன்படுத்தலாம்.
சிந்தடிக் பைபர்களினால் ஆன துணி வகைகளின் (synthetic fabrics (polyester, nylon,acrylic) பயன்பாட்டை அறவே நீக்கலாம்.
கார் டயரிகளில் உள்ள இவை சாலைகளில் உரச உரச ஏராளமான துகள்களை சுற்றுப்புறமெங்கும் தூவிக் கொண்டே செல்கிறது. ஆகவே கார் டயர்களின் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.
வீட்டில் உள்ள பைபர் தரை விரிப்புகள், மர சாமான்கள், துணி வகைகளிலிருந்து ஏற்படும் தூசிகளைத் தவிர்க்கலாம்.
தனிநபர் மேக் அப் சாதனங்களில் – காஸ்மெடிக் மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் ஏராளமாக பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. ஆகவே இவற்றைத் தவிர்க்கலாம். இவற்றை வாங்கும் போது பாலி எதிலின் பாலி ப்ரொபிலின் நைலான் (polyethylene (PE), polypropylene (PP), nylon (PA))அடையாளக் குறிகள் உள்ளதா என்று பார்த்து அவற்றைத் தவிர்க்கலாம்.
அடிக்கடி துணிகளைத் தோய்க்காமல் சீரான இடைவெளியில் தோய்த்து துகள்களை உருவாக்குவதைத் தடுக்கலாம். அல்லது ஆர்கானிக் காட்டன் துணிகளை மட்டுமே பயன்படுத்தலாம்.
ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் நீரில் 2,40,000 சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறது என்று சொன்னால் நம்பவே முடியவில்லை அல்லவா? ஆகவே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வாங்குவதை அறவே நிறுத்தலாம்.
மறு சுழற்சிக்கு உள்ளாகும் பிளாஸ்டிக் பொருள்களைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
கடைக்காரரிடம் பேக்கிங் செய்யும் போது பிளாஸ்டிக் பொருள்கலைப் பயன்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக முன்னமேயே சொல்லி விட வேண்டும்.
டெப்லான், நான் – ஸ்டிக் சமையல் சாதனங்களை வாங்கவே கூடாது.
நாளடைவில் டெப்லான் மைக்ரோ பிளாஸ்டிக்கை உணவுப் பொருளில் சேர்த்து விடும்.
சூயிங் கம் சாப்பிடுபவராக இருந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அதிலும் பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது!
இப்படி அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் இனி ஆய்வுக்கு நாமே உட்படுத்தி மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை ஒழித்தால் தான் நாமும் வாழ முடியும்;
நமது அண்டைவீட்டாரும் ஏன் சந்ததியினரும் கூட இந்த அபாயம் இல்லாமல் வாழ முடியும்.