சூரிய எப்படி ஹீலியோஸ் என்று மாறியது ? SUN DISC IN BRITISH CITY BATH (Post.14,872)

Sun God Denmark

Sun god in British city Bath

Written by London Swaminathan

Post No. 14,872

Date uploaded in London –  15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

New Sculpture of SUN in BATH city hall.

ஹிட்டைட்ஸ் HITTITES  இனத்தினர் சிரியாவிலும் துருக்கியிலும் சூரியனை சூரியோஸ் என்ற பெயரில் வணங்கியதை 3800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கல்வெட்டு காட்டுகிறது. சூரிய என்ற பெயரை இன்றும் சிரியா தாங்கி வருகிறது துரக என்ற குதிரையின் பெயரை இன்றும் துருக்கி பயன்படுத்திவருகிறது

கிரேக்க நாட்டில் ஹீலியோஸ் என்ற பெயரில் சூரியனை வணங்கினர் . கிரேக்க மொழியில் ச – வர்க்க எழுத்துக்கள் இல்லாததால் நம்மை சிந்து நதி நாகரீகத்தினர் என்பதற்குப் பதிலாக ஹிந்து என்று அழைத்தனர்  அதே போல சூ என்பது ஹீ என்று மாறி ஹீலியோஸ் என்ற பெயரில் கிரேக்கர்கள் வணங்கினர் அவர்களிடமிருந்து ரோமானியர்களுக்குப் பரவி, பிரிட்டனிலும் ரோமானிய சின்னங்கள் உள்ள பாத்/  BATH முதலிய நகரங்களில் சூரியன் சிற்பங்கள் உள்ளன . பிரிட்டனில் பாத் நகரில் மிகப்பெரிய சூரியன் சிற்பத்தை  பாத் நகர அசெம்பிளி ஹாலில் வைத்துள்ளனர் இது இந்த 2025 ஆண்டு, நாடு முழுதும் காட்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.

என்னை பி பி சி காரர்கள் இந்தியாவிலிருந்து  1987-ஆம் ஆண்டு லண்டனுக்கு அழைத்து வந்த பின்னர், பாத் நகரில் பிரிட்டிஷ் தேர்தல் பிரசாரத்தைப் பார்த்து கட்டுரை எழுத அனுப்பினர் அப்போது நான் ரோமன் பாத் ROMAN BATH எனப்படும்  குளியல் தொட்டி மற்றும்  அங்குள்ள சூரியன் சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தேன் . இந்தக் குளியல் வெப்ப நீர் ஊற்று காரணமாக இந்த நகருக்கே இன்று வரை பாத் என்றே பெயர்!

***

ர என்ற எழுத்து ல  என்று மாறுவது சம்ஸ்கிருதம் மூலம் உலகம் முழுதும் பரவியது . சாஸ்க்ருத மொழியில் இது ஒரு சூத்திரமாகவே இருக்கிறது. தமிழ் மொழியில் நாம் இன்றும் இதை பயன்படுத்துகிறோம் .

பல் +பொடி=  பற்பொடி

கல் +கண்டு = கற்கண்டு

இது போல நூற்றுக்கணக்கில் தமிழில் உள்ளன. இதையே கிரேக்கர்களும் சூரிய என்பதில் ரி என்பதை லி என்று உச்சகரித்தனர் .

SU=H E

RI= L I

YA= Y A

ஆக இந்துக்கள் பரப்பிய சூரிய வழிபாடு ஐரோப்பா மட்டுமின்றி தென் அமெரிக்க மாயன், இன்கா நாகரீகத்திலும் பின்பற்றப்பட்டது ;அந்த நாகரிக சின்னங்களில் ஸ்பானிய கிறிஸ்தவர்கள் அழித்தது போக எஞ்சியுள்ள சிற்பங்களிலும் தங்க விக்ரகங்களிலும் இன்றும் சூரியனைக் காணலாம் . அவை மியூசியங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன . பெரும்பாலான தங்கச் சின்னங்களை கிறிஸ்தவ பாதிரிகள் உருக்கி ஸ்பானிய மன்னருக்கு கொடுத்துவிட்டனர் .

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை சூரியனை இந்துக்கள் வழிபட்டதால் ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஆறு சமயங்களில் செளரம் என்ற சூரிய வழிபாட்டினையும் சேர்த்தார் ; இன்று எல்லோரும் சூரிய நமஸ்காரத்தில் சூரியனின் பெயர்களை சொல்லி நமஸ்காரம் செய்கின்றனர்; காயத்ரீ என்ற பெயரில் சூரியனையும் நாள்தோறும் வழிபடுகின்றனர் .

பாரதியாரும் காயத்ரீ மந்திரத்தைச் சூரிய வழிபாடு என்று காட்டுகிறார் . அந்த மந்திரத்தைச்

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்

எங்கள் அறிவினைத் தூண்டி நடந்துக  —

என்று எளிய தமிழில் செப்பினார்.

****

According to information on Tamil and Vedas, the Hittite word “Suriyos” is related to the Sanskrit word “Surya,” meaning Sun God. The Hittites, who ruled parts of modern Syria and Turkey, are believed to have worshipped the Sun God. The very name “Syria” is said to derive from the Sanskrit word “Surya”. The website also suggests that the Hittites, who spoke an old form of Sanskrit, worshipped Surya and other Hindu deities like the Twelve Adityas, Goddess Nayanatara, and Varuna.

SUN DISC IN BRITISH CITY BATH

A giant model of the Sun has been installed at the Bath Assembly Rooms in Somerset.

Created by Bristol artist Luke Jerram, the sculpture is named Helios after the god who represents the Sun in Greek mythology.

The 7-metre (22ft) sculpture follows Jerram’s series of astronomical artworks, Museum of the Moon, Gaia and Mars.

It will be on display until the 23rd of February before touring around the UK’s National Trust sites.

–SUBHAM—

TAGS- SURIYOS, HITTITES, HELIOS, GREEK, BATH, SUN DISC,  ON TOUR, ஹிட்டைட்ஸ், சூரியோஸ், ஹீலியோஸ், கிரேக்க, பாத் /BATH

சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு—3 (Post No.14,871)

Written by London Swaminathan

Post No. 14,871

Date uploaded in London –  15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சூரியனையும் சந்திரனையும் இருசுடர் என்று புறநானூறு (65 ) போற்றுகிறது

நிறைமதி நாளில் ஒரு சுடர் (ஞாயிறு) மறைய

ஒரு சுடர் (திங்கள்) தோன்றுவது போல,

சேரன், சோழன் ஆகிய இருவரில் ஒருவன் வெளிப்பட

மற்றொருவன் மறைந்தான்.

உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,

இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்

புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,

இது அப்படியே குமார சம்பவ நூலில் எட்டாவது சர்க்கப்   பாடல்களில் வருகிறது.

***

சூரியன் எழ, சந்திரன் மறையும் காட்சி – சாகுந்தலம் 4-12

ரகு வம்சம் 8-15

ராமன் சூரியன், பரசுராமன் சந்திரன் 11 -82  ரகு

***

சூரியன் -தாமரை, சந்திரன்- அல்லி – ரகு 17-75

சூரியனைக் கண்டால் பாவம் அழியும் – ரகு17-74

பகவான் சூர்ய – விக்ரம 3-18; 4

புறநானூற்றில் நிலவும் கதிரவனும் வரும் பாடல்கள்

சூரியன் சந்திரன் – இரு கண்கள் 365;

6, 8, 25, 231, 362, 365, 376, 27, 55, 56, 59, 65, 174.

தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்

ஒண் கதிர் ஞாயிறு போலவும்,

மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! –6

xxx

 அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!—56

xxx

ஒரு புலவர் சூரியனை எழச் செய்யும் ஆற்றலும் உடையவன் மன்னன் என்று புகழ்கிறார்

செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,

வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,

வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,—38

***

சேரமான் கடுங்கோ வாழியாதன் என்பவன் சூரியனைப் போலவே செயல்படுகிறான் என்கிறார் கபிலர்.

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக,

போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது,

இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,

ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை,

கடந்து அடு தானைச் சேரலாதனை

யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்!

பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி;

மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி;

அகல் இரு விசும்பினானும்

பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.–8

****

சூரியன் முன் இருள் போல- சாகுந்தலம் 5-15; புறம் 90, 4; முருகு 1/2

***

விக்ரம ஊர்வசி நாடகத்தில் சூரியனைக் கடவுள் என்று கூறுவதைத் தமிழர்களும் ஞாயிற்றுப்புத்தேள் என்று கலித்தொகையில் 108-13 குறிப்பிடுகின்றனர் .

xxx

அகநானூற்றில்

விளங்கு பகல் உதவிய பல் கதிர்  ஞாயிறு  என்று போ  றப்படுகிறார் -99

ஞாயிற்றுக்கு ஒரு சக்கரத் தேர்- 360

xxx

கிரகணங்களைப்பற்றி வரும் இடங்களில் எல்லாம் சூரியனும் சந்திரனும் பாம்பால் விழுங்கப்படுவதாகக் கூறும் கதை சங்க நூல்களிலும் காளிதாசன் நூல்களிலும் வருகிறது ; இதில் சந்திரன் பெயர்தான் அதிகம் அடிபடுகிறது .

***

பத்துப்பாட்டிலும்  எட்டுத் தொகையிலும் கதிரவன் வரும் இடங்கள் எண்ணிலடங்கா. இவற்றைத் தொகுத்து காளிதாசன் நூல்களுடன் ஒப்பிட்டால் தனி புத்தகமே தேவைப்படும்

***

நிலவு, கதிரவன் செய்திகளை காளிதாஸனிலும் சங்கநூல்களிலும் ஒப்பிட்டு ஆராய நிறைய விஷயங்கள் உள்ளன . நான் இந்தக் கட்டுரையில் விரிவாக எழுதவில்லை.

***

உலகில் சூரியனுக்குப் பல இடங்களில் கோவில்கள் உண்டு ஆனால் ஒரிஸ்ஸாவில் கொனாரக், காஷ்மீரில் மார்த்தாண்ட், குஜராத்தில் மதெரா முதலிய 13 சூரியன் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. இவைகளில் பல முஸ்லீம்களின் தாக்குதலால் அழிந்தன; பூஜைகள் நின்றன. ஆயினும் இந்துக்களின் சூரிய வழிபாடு நிற்கவில்லை.

சந்தியாவந்தன மந்திரத்தில் சூரியன்

1.பிராமணர்கள் நாள்தோறும் மூன்று முறை வேத மந்திரங்களைச் சொல்லி சூரியனை வழிபடுகின்றனர். அதற்கு த்ரி கால சந்தியா வந்தனம் என்று பெயர்.

2.சூரியனார் கோவில் முதலிய கோவில்களில் இன்றும் வழிபாடு நடக்கிறது. எல்லா தென்னிந்திய கோவில்களிலும் சூரிய, சந்திரர், நவக் கிரஹ சந்நிதிகள் உண்டு.

3.சூரிய சஞ்சாரம்: இது எல்லா ஜாதியினருக்கும் முக்கியமானது. சூரியனின் வடதிசைப் பயணத்தை (உத்தராயண புண்ய காலம்/மகர சங்கராந்தி/ பொங்கல்)  எல்லோரும் கொண்டாடுகிறோம். சூரியனின் தென் திசைப் பயணத்தையும் (தட்சிணாயன புண்ய காலம்) எல்லோரும் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு நேரங்களில் தை, ஆடி அமாவசைகளில் எல்லா ஜாதியினரும் புனித நதி, கடற்கரைகளில் நீத்தாரை நினைந்து நீர்க்கடன் செலுத்துவர். தமிழர்கள் இன்று வரை இதைச் செய்துவருகின்றனர்.

இதே தான் ஸ்டோன்ஹெஞ்ச்சிலும் நடை பெற்றது. பிரிட்டன் என்பது குளிர் நாடாகையால் தட்சிணாயன புண்ய காலத்தை (தென் திசைப் பயணம்) பெரிதாகக் கொண்டாடினர். இப்பொழுதும் மிக நீண்ட பகல் பொழுதுடைய ஜூன் 21–ஆம் தேதி த்ரூய்ட்ஸ் என்ற பெயரில் வெள்ளாடை தரித்த ஒரு குழு விநோதச் சடங்குகளைச் செய்கின்றது.இந்துக் கோவில்கள் பெரும்பாலும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையாஇ நோக்கியே இருக்கும்.

நவக்கிரஹ சந்நிதிகள் வரும் முன்னரே சூரியன், சந்திரன் சந்நிதிகள் நம் கோவில்களில் உள.

மேலும், ஒரு கோவில் தட்சிணாயணத்திலோ, உத்தராயணத்திலோ கட்டப்பட்டால் அதற்குத் தக முகப்பு, சந்நிதிகளை அமைக்கும் வழக்கமும் உண்டு.

யாக சாலை பூஜைகளில் காலையில் துவங்கும் போது சூரிய பூஜை முதலில் செய்ய்ப்படும்.

இவை அனைத்தும் இன்று வரை நாம் செய்யும் சூரியவழிபாட்டுக்கு சான்று பகரும்.

****

சூரியனார் கோவில் குலோத்துங்க சோழன் காலத்தில் உருவானது; ஆனால் ஆந்திரத்துள்ள அரசவல்லி சூரியநாராயணன் கோயில் (Arasavalli Sun Temple) என்பது  ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் ஆகும் .கதார்மல் சூரியக் கோயில் (Katarmal) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில்அமைந்த புகழ்பெற்ற பழமையான கோவில் ஆகும்

அதர்வண வேதத்தில் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றிய பாடலில் வெள்ளைக்காரன் Ralph T H Griffith கிரிப்பித் கூட சாக்ரடீசும் இதைச் சொல்லியுள்ளார் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார்.

***

இதோ அதர்வண வேத மந்திரமும்  Griffith கிரிப்பித் விமர்சனமும்

காண்டம் 5; துதி 9 (சூக்தம் எண் 151)

மந்திரம் 7

“சூரியன் என் கண் ; காற்று என் பிராணன்; வானம் என் ஆத்மா; பூமி என் உடம்பு; எனக்கு வெல்லப்படாதவன் என்ற பெயர் உண்டு ; அப்படிப்பட்ட நான் என் ஆத்மாவை பாதுகாப்பதற்காக பூமிக்கும் வானத்துக்கும் அளிக்கிறேன்”.

நம்முடைய ஆராய்ச்சிக்கு தேவையான வரி “சூரியன் என் கண்”; இது பல இடங்களில் வேதங்களில் வருகிறது ; ரிக் வேத மந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது புருஷ சூக்தம் (10-90) இதை கோவிலில் அபிஷேக காலத்தில் சொல்லுவதால் எல்லோருக்கும் தெரிந்த மந்திரம். அதில் கடவுளின் கண்களில் இருந்து சூரியன்  பிறந்ததாக வருகிறது. மேலும் இறுதிச் சடங்கு மந்திரம் (10-16-3) ஒன்றிலும் கண்களை சூரியன் எடுத்துக்கொள்ளட்டும் என்றும் வருகிறது . இது தவிர ஏனைய வேதங்களில் ‘’சூரியன்- கண்’ தொடர்பு  காணக்கிடக்கிறது

கிரிப்பித் Griffith Footnote அடிக்குறிப்பு

சாக்ரடீஸ் கூறுகிறார்:எல்லா புலன்களுக்கும் கண்களையே நான் சூரிய ன் போல ஒளி உள்ளதாகக் கருதுவேன் :

இது அக்காலத்திலேயே பிளாட்டோ எழுதிய Republic  ரிபப்ளிக் என்ற நூலில் உளது

அக்காலத்திலேயே,  வேதங்கள் பல இடங்களில் கூறும் விஷயத்தை சாக்ரடீசும் குறிப்பிடுவது அவருக்கு இந்துமத கருத்துக்களைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.

***

My articles on the same subject:—

சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது!(Post No.10,301)

Post No. 10,301

Date uploaded in London – –   5 NOVEMBER  2021         

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE …

https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-v…

8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’ …

Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature

https://tamilandvedas.com › tamil-arti…

29 Dec 2011 — Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature … ‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179) …

Was Jayadratha killed by a Solar Eclipse? | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/…/…

· 

3 Jan 2012 — The earliest reference to a solar eclipse occurs in the Rig Veda. Atri Maharishi speaks of the wonders of the solar eclipse (RV5-40-5).

TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS – Tamil and …

https://tamilandvedas.com › two-rare…

· Translate this page

4 Jan 2020 — TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS– Part 1(Post No.7418). Research article Written by London Swaminathan.

TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS

https://swamiindology.blogspot.com › 2020/01 › two-r…

4 Jan 2020 — TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS– Part 1(Post No.7418) · Research article Written by London Swaminathan · Uploaded in London on – 4 JANUARY …

TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) – Tamil …

https://tamilandvedas.com › 2020/01/05 › hydrotherap…

5 Jan 2020 — Acupressure in Rig Veda HYDROTHERAPYACUPRESSUREMONSOON IN THE RIG VEDATWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) Research article 

–subham—

Tags- சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல், சூரியன் வழிபாடு, Part 3

ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளாசி பெற்றவர் திரு சந்தானம்! (Post No.14,870)

V.SANTANAM SPEAKING IN CHENNAI AT THE INVITATION OF BABA.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,870

Date uploaded in London – 15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

   Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper,  passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

புதிய தொடர்!

இன்று 15-8-2025. இதே நாளில் 1998ம் ஆண்டு அமரரான திரு வெ.சந்தானத்திற்கு எங்கள் உளம் நிறைந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 9 

ச. நாகராஜன் 

10

ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளாசி பெற்றவர் திரு சந்தானம்! 

1965ம் ஆண்டு.

மதுரையில் பெரும் வணிகராகத் திகழ்ந்த திரு சுப்பிரமணியம் செட்டியார் ஶ்ரீ சத்யசாயிபாபாவின் அணுக்கத் தொண்டர்.

அவர் பாபாவைப் பற்றிச் சொன்னதோடு சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட புத்தகங்களையும் தந்தார்.

என் தந்தையாருக்கு இப்படிப்பட்ட அவதார புருஷர் மேல் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.

நவம்பர் 23ஆம் தேதி பாபாவின் பிறந்த நாள் புட்டபர்த்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஶ்ரீ சுப்ரமணிய செட்டியார் எனது தந்தையிடன் பல அன்பர்களும் மதுரையிலிருந்து காரில் புட்டபர்த்தி செல்ல இருப்பதாகவும் எனது தந்தையும் கலந்து கொண்டால் பாபாவை நேரில் தரிசிக்கலாம் என்றும் சொன்னார்.

அந்தச் சமயம் பார்த்து ஒரு நாள் பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் மாப்பிள்ளை பழநியைச் சேர்ந்த திரு மௌனகுருசாமி என் இல்லத்திற்கு வந்து தந்தையைப் பார்த்துப் பேசினார்.

பேச்சுவாக்கில் புட்டபர்த்தி செல்ல இருப்பதாக அவருக்குத் தெரியவரவே அவர் தன் காரில் தான் புட்டபர்த்தி செல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கூறி காரையும் அதை ஓட்டிச் செல்ல தனது டிரைவரையும் அனுப்பி வைத்தார்.

ஏராளமான கார்கள். சுப்ரமண்ய செட்டியார், அவரது குடும்பம், தங்க நகைக் கடை வைத்திருந்த திரு ஆர். ராமநாதன் செட்டியார், எல் ஐ சி ஜோனல் மேனேஜர் திரு கெ ஆர் கே பட் உள்ளிட்டவர்கள் கார்களில் வந்தனர். எங்கள் குடும்பமும் காரில் சென்றது.

பங்களூரில் பிரபல ஹோட்டலை கார்கள் அடைந்த போது திடீரென்று பாண்ட் வாத்தியம் கேட்டது.

எங்களை பாண்ட் வாத்திய கோஷ்டி வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புட்டபர்த்தி சென்றோம்.

1965ல் புட்டபர்த்தி அவ்வளவாக வளர்ந்திருக்கவில்லை.

பாபா இருக்கும் மந்திர் உண்டு. கீழே பிரதான பஜனை மண்டபம் உண்டு.

அருகில் உள்ள இடத்தில் கொட்டகைகள் போடப்பட்டு அதில் தான் கஸ்தூரி உள்ளிட்டோர் தங்கி இருந்தனர்.அவரை நாங்கள் எல்லோரும் அங்கு தான் சந்தித்தோம். பாபாவுக்கு மதுரை குழுவினர் வந்ததை அவர் தெரிவித்தார்.

புட்டபர்த்திக்கு வருவோர் காலையும் மாலையும் வரிசையாக பிரதான மண்டபத்தின் முன் அமர வேண்டும். பாபா வருவார். பேட்டிக்கு உரியவர்களை அவரே தேர்ந்தெடுப்பார்.

அவர்கள் மண்டப தாழ்வாரத்தில் அமர வேண்டும். வரிசையாக ஒவ்வொருவரையாக அழைத்து அந்தரங்கமாகப் பேட்டி தருவார் பாபா.

இந்த முறை பேட்டியில் ஒரு அதிசயத்தைக் கண்டோம். பேட்டிக்கு கே ஆர் கே பட்டின் டிரைவர் அழைக்கப்பட்டார். மற்ற எல்லோரும் பின்னால் தான் அழைக்கப்பட்டனர்.

இங்கு அந்தஸ்து, ஜாதி, மத பேதமெல்லாம் கிடையாது. யாருக்கு முதல் தேவை இருக்கிறதோ அவரே அழைக்கப்படுவார்.

பட்டின் டிரைவரிடம் பாபா, “உனக்கு வேறு வேலை தயாராக இருக்கிறது. மதுரை போனவுடன் கிடைக்கும்.” என்றார். இது எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

பாபா கூறியது போலவே அவருக்கு மதுரை போனவுடன் வேலை கிடைத்தது. பட்டோ மதுரையை விட்டு புட்டபர்த்திக்கே வந்து தங்கி விட்டார்.

எங்கள் முறை வந்த போது பாபா எங்கள் அனைவரையும் தனி அறைக்குள் வரச் சொன்னார்.

தனது கையைச் சுழற்றினார். அருமையான விஸிடிங் கார்டு ஒன்று வந்தது. அதை எனது தந்தையார் கையில் கொடுத்தார். ஆசி அருளினார்.

எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசி கூறினார்.

இது தான் முதல் சந்திப்பு.

எனது தந்தையார் சாயி மீது அவ்வப்பொழுது கீதங்களை இயற்றி வந்தார். அதைப் பற்றிச் சொன்ன போது அது இயற்றிய போதே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றார்.

பதங்கள் பரதநாட்டியம் பொலத் துள்ளிக் குதித்துச் செல்கின்றன என்று அவர் கூறியபோது அனைவருக்கும் சந்தோஷம் உண்டானது.

அங்கிருந்த ஒருவர் இரண்டு இரண்டு பாடல்களாக எழுதி பகவானின் பாதகமலங்களில் வைத்து அங்கீகாரம் பெற்றிருக்கலாம் என்று கூறிய போது பகவான் குறுக்கிட்டு, ஒவ்வொரு கீதமும் புனையப்பட்ட போதே

முன்னரேயே சமர்ப்பித்தாகி விட்டது என்றார்.

நூறு நாள்களில் நூற்றெட்டு கீதங்கள். ராகம், மெட்டு ஆகியவற்றுடன்  உருவாகின.

புட்டபர்த்தியிலிருந்து மதுரை வந்தோம். ஏராளமான பாடகர்கள் இந்த கீதங்களை மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தனர்.

திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமியின் சகோதரர் திரு எம்.எஸ். சக்திவேல் சிறந்த பாடகர். அவர் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடல்களை இசைத்தனர். வீட்டில் தினமும் ஒரு பாடகர் வாத்தியங்களுடன் வருவார். பாபாவின் கீதங்களுக்கான கச்சேரி நடக்கும்.

நவராத்திரி சமயத்தில் சத்யசாயி நகரில் ஷீர்டி பாபா கோவிலில் பெரிய உற்சவம் நடக்கும். அதிலும் கச்சேரிகள் நடத்தப்பட்டன.

எனது இல்லத்திற்கு ஏராளமான பாபா பக்தர்கள் வந்து என் தந்தையாரைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது.

திரு எஸ்.என்.கே. சுந்தரம் பிரபலமான பாண்டியன் பேங்கை நடத்தியவர். பின்னால் இந்த பெரிய பேங்க் கனரா பேங்குடன் இணைந்தது.

இவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து பாபாவின் அருமை பெருமைகளைப் பேசுவார். ஒரு குட்டி புத்தகத்தில் பாபாவின் லீலைகளை ஆங்கிலத்தில் எழுதி அதை வெளியிட்டார்.

பூதலூரில் அவர் ஒரு பிரம்மாண்டமான சாயி பஜனை மண்டபத்தைக் கட்டி அதனுடைய திறப்பு விழாவிற்காக எனது தந்தையை  அழைத்தார். எனது தந்தை சந்தோஷமாக ஒப்புக் கொண்டார். நானும் உடன் சென்றேன். பிரமாதமாக விழா நடந்தது.

எனது தாயார் பஜனைகளில் ஹார்மோனியம் வாசித்தவாறே சாயி பகவானின் பாடல்களைப் பாடினார்.

அந்தக் காலத்தில் தான் ஒரு அமர்க்களம் நடந்தது. ஆங்காங்கே பல வீடுகளில் பாபாவின் திருவுருவப் படத்திலிருந்து விபூதி கொட்ட ஆரம்பித்தது.

அந்த வீடுகளுக்குச் சென்று அதை அதிசயத்துடன் பார்க்க பெரும் கூட்டமும் கூடியது. 

கீழே சாயி கீதங்கள் புத்தகத்திற்கு எனது தந்தையார் தந்த முகவுரையைப் பார்க்கலாம். 

அடுத்து இன்னும் சில நிகழ்வுகளைப் பார்க்கலாமா?

to be continued……..

–subham—

 tags – ஶ்ரீ சத்ய சாயிபாபா, அருளாசி,  சந்தானம்,

GNANAMAYAM 17th AUGUST 2025 BROADCAST PROGRAMME SCHEDULE

Mr N Ganesh Raja

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

****

Prayer -Mrs. Jayanthi Sundar Team .

***

NEWS BULETIN

Vaishnavi Anand and Latha Yogesh  from London presents World Hindu News in Tamil

****

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – DHARMAPURAM Temple

****

Professor S Suryanarayanan speaks on the Tamil Proverbs and thier mis interpretation.

****

SPECIAL EVENT-

Talk by Mr N .GANESH RAAJA

ON HIS HISTORICAL RESEARCH.

 Ganesh Raaja. N hails from Tamil Nadu. He completed his engineering in 2003 and has more than twenty years of experience in the software industry.

He was attracted towards ‘History of India’ after noticing a defaming article in an Indian magazine. He has spent more than eight years researching on this subject. He has read vast number of books related to ancient Sanskrit literature, ancient Tamil literature, scientific evolution etc. written by eminent Indian and foreign scholars.

Each book he referred to catered to a specific aspect of Indian life. After understanding them, a natural interest arose in him to reconcile and chronologically arrange them in a ‘holistic’ and ‘interesting’ way. This is a first attempt at narrating India’s story ‘as-it-happened’.

The result is the book, titled, “The Jambū Island”. This book chronologically organizes the Rishiskingsliterary evolutionpeople’s lives, and scientific progress based on Sanskrit and Tamil literature. It aims to eliminate myths, interpolations, and exaggerations. It strives to present the story in a logical and captivating narrative, with many pictures.

This book covers the period from roughly 6000 BCE to 3138 BCE, narrating significant events including the rendering of the Vedic mantras by the Rishis, the Aryan clan split towards Iran resulting in the formation of the Zōrōastrians, the atrocities and defeat of the Haihaya clan, fusion of Nāgās and other native tribes into the Vedic religion, Āryan colonization of South India, and the Bharata battle at Kurukshetra.

Post launching his book, Ganesh has started an Youtube channel in Tamil to share his learnings. The goal of this channel to spread awareness about the greatness of our country and Hindu religion, to create a counter-narrative to the popular Dravidian ideology of Tamil Nadu.

Youtube channel: https://www.youtube.com/@ArivomInaivom    

Amazon book: https://tinyurl.com/rsdsr5y5   

******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 17-8-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு– தலைப்பு- தர்மபுரம் கோவில்

****

பேராசிரியர் எஸ். சூர்யாநாராயணன்சொற்பொழிவு–

(முன்னாள் கல்லூரி பிரின்சிபால்)

தலைப்பு : உருமாறிய பழமொழிகளின் உண்மைப் பொருள்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு –கணேஷ் ராஜா அவர்களின் வரலாற்று ஆராய்ச்சி உரை. 

என்.கணேஷ் ராஜா , பொறியியல் பட்டதாரி , வரலாற்றில் ஆராய்ச்சி செய்து ஜம்புத்வீப உண்மை வரலாற்றினை கால வரிசைப்படி நூலாக  எழுதியவர்; திலகர் முதலானோர் பற்றி யூ டியூப் வீடியோ தயாரித்தவர் . அவரது வரலாற்று ஆராய்ச்சியை இன்றைய சொற்பொழிவில் விளக்குவார் .

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags-Gnanamayam Broadcast, 17-8- 2025, SUMMARY

Pictures of 2500 Indian Stamps! – Part 75 (Post No.14,869)

Written by London Swaminathan

Post No. 14,869

Date uploaded in London –  14 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 75

***

Pictures of 2500 Indian Stamps continued……………………

I have got 25,000 stamps with beautiful designs.

London Swaminathan has been collecting stamps for 65 years continuously.

***

More Mini Stamp Sheets issued by India

Netaji, Port Blair, Prithivraj, Whales, Pigeons, House Martins, Environment day, Gita Govinda, Astrological Signs, Zodiac, Dance Swami Vivekananda, Nicholas tesla , Serbia, Philippines, Spices of India, Fashion stamps, dress, Deenadayal Upadyaya, Ramanujan, Kumaraguruparar, Shivayogi, Horses of India, Nicola, Armenia, Antartica,  Nature Stamps, Terracota Temples, Queen’s Baton rela mini sheets

***

DO YOU COLLECT INDIAN STAMPS?

I HAVE GOT 100 MINI SHEETS.

I HAVE GOT SPARE STAMPS.

–subham—

Tags- Indian stamps, MINI STAMPS, 25,000, PART 75, BAD STAMPS, FASHION, ZODIAC, SPICES, GITA GOVINDA, NETAJI, penguin, polar bear, nicolas tesla, armenia, Horse of India 

Women, Asses, and Nuts require Strong Hands- Italian attack continues – Part 14 (Post No.18,868)

One Thousand Proverbs on Woman, Wife and Daughter -Part 14

(Post No.18,868)

Written by London Swaminathan

Post No. 14,868

Date uploaded in London – 14 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

261. An angry woman is a sea without shore.

262. A man of straw need s a woman of gold.

263. A woman of good family always bears a girl as her first child.

264. Never run after a woman or an omnibus, another one is sure to be round soon.

265. When woman reigns, the devil governs.

266. Where woman reigns  war rages.

267. Who says woman says loss, who says man says misfortune.

268. Tell a woman she is beautiful, and the devil will repeat it to her ten times.

269. A beautiful woman smiling means a purse weeping.

270. A woman that loves to be at the window is like a bunch of grapes on the highway.

271. Everything comes from God except women.

272. In every house there should be two women- a wife and a status of the virgin over the door.

273. Leave women alone and go and study mathematics.

(this exclamation, which has passed into a proverb, was made by the beautiful Venetian courtesan Giulietta to J J Rousseau)

274. Women are the wise impromptu, fools on reflection.

275. Women, asses, and nuts require strong hands.

276. Women in love always speak the truth, but not the whole truth.

277. Women, priests, and poultry never have enough.

278. Women resist in order to be conquered.

—Italian proverbs.

279. A woman, a horse, and a ship belong to him who masters them.

280. Women always attach them to the worst

–Genoese proverbs

To be continued……………..

Tags- part 14, woman, wife, daughter, proverbs, Italian

சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-2 (Post.14,867)

SUN GOD SURYA IN DACCA MUSEUM

Written by London Swaminathan

Post No. 14,867

Date uploaded in London –  14 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

சூரியனுக்கு ஒரு சக்கர தேர் உண்டு அதை ஏழு குதிரைகள் இழுக்கும் என்பதை வேதம் முதல் சங்கத்தமிழ் நூல்கள் வரை காண்கிறோம்

இதோ  பரிபாடல்,  பதிற்றுப் பத்து  வரிகள் 

மாசில் ஆயிரம்கதிர் ஞாயிறு தொகூஉம்  – பரி.3-22;

உலகிருள் அகற்றிய பதின்மரும்  இருவரும் – பரி.8-4;

ஞாயிறு பழகிய மாயமொடு சுடர்திகழ் -பதிற்றுப் பத்து  62-6

நிலம்பொறை பெயரா அநீர் ஞாமறவந் தீண்டி

……………….

ஞாயிறு பட்ட அகன்றவாறு கூட்டத்து  பதிற்று -பதிற்றுப் பத்து.72-9 

சூரியனுடன் எண் 12 – தொடர்புப்படுத்தும் சொற்கள், 12 மாதங்கள் 12 ராசிகளை ஆகியவற்றை அறிந்து புலவர்கள் பாடியிருப்பதைக் காட்டுகிறது; இது வேதத்திலேயே உள்ளது.

***

ஞாயிற்றின் ஒற்றைச் சக்கர தேர்,  குதிரை

ஒருகால் ஊர்தி பருதியஞ்செல்வன்

குட வயின் மாமலை மறைய  -அகம் 360;

நிரைசெலல் இவுளி  விரைவுடன் கடை இ

அகலிரு விசும்பில்  பகல்செலச் சென்று – அகம். 363

காயசினத்தகதிர்ச் செல்வன்

தேர்பூண்ட மா போல

வைக்கள்தோறும் அசைவின்றி -பட்டினப்பாலை 122-124;

****

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு

ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி

உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .(5)

–திருமுருகாற்றுப்படை

****

ஞாயிறு என்ற சொல்லும் அதன் உதயமும் சுமார் பத்து இடங்களில் வருகிறது இதில் சூரியனை மன்னரின் ஆண்மைக்கு ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது . இதை ரகுவமத்திலும் கண்டோம்.

ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,

புறநானூறு  55 .

காளிதாசன் கால மன்னனின் பெயர் விக்ரம ஆதித்தன் = விக்ரமாதித்தன் ;  இதைப் புறநானுற்று ஆண்மையில் கண்டோம்.

****

மலைபடுகடாம் நூலிலும் இதே கருத்து வருகிறது

பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும்

ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் . . . .[85]

இருள் நீக்க எழும் இளஞாயிறு போன்ற புகழைக் கொண்டவன் நன்னன் என்று புலவர் புகழ்கிறார்.

****

மண்டிலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் சூரிய சந்திரனுடன் வரும் பாட்டுகள் பல உண்டு.

அகம். 11;31; புறநானூறு 31. பரி.19-19;

காளிதாசனும் மண்டலம் என்ற சொல்லை வட்டம் என்ற பொருளில் பயன்படுத்துகிறான்

Sanskrit dictionary

[«previous (M) next»] — Mandala in Sanskrit glossary

Maṇḍala (मण्डल).—a. [maṇḍ-kalac] Round, circular; मण्डलाग्रा बृसीश्चैव गृहान्याः पृष्ठतो ययुः (maṇḍalāgrā bṛsīścaiva gṛhānyāḥ pṛṣṭhato yayuḥ) Rām.5.18.12.

-laḥ 1 circular array of troops.

2) A dog.

3) A kind of snake.

-lam 1 A circular orb, globe, wheel, ring, circumference, anything round or circular; न्यग्रोधं च सुमण्डलम् (nyagrodhaṃ ca sumaṇḍalam) Mahābhārata (Bombay) 12.169. 12; करालफणमण्डलम् (karālaphaṇamaṇḍalam) R.12.98; आदर्शमण्डलनिभानि समुल्लसन्ति (ādarśamaṇḍalanibhāni samullasanti) Ki. 5.41; स्फुरत्प्रभामण्डलया चकाशे (sphuratprabhāmaṇḍalayā cakāśe) Kumārasambhava 1.24; so रेणुमण्डल, छाया- मण्डल, चापमण्डल, मुखमण्डल, स्तनमण्डल (reṇumaṇḍala, chāyā- maṇḍala, cāpamaṇḍala, mukhamaṇḍala, stanamaṇḍala) &c.

2) The charmed circle (drawn by a conjurer); मण्डले पन्नगो रुद्धो मन्त्रैरिव महाविषः (maṇḍale pannago ruddho mantrairiva mahāviṣaḥ) Rām.2.12.5; जानन्ति तन्त्रयुक्तिं यथास्थितं मण्डलमभि- लिखन्ति (jānanti tantrayuktiṃ yathāsthitaṃ maṇḍalamabhi- likhanti) Mu.2.1.

3) A disc, especially of the sun or moon; तेनातपत्रामलमण्डलेन (tenātapatrāmalamaṇḍalena) R.16.27; अपर्वणि ग्रहकलुषेन्दुमण्डला (aparvaṇi grahakaluṣendumaṇḍalā) (vibhāvarī) M.4.15; दिनमणिमण्डलमण्डन भवखण्डन  (dinamaṇimaṇḍalamaṇḍana bhavakhaṇḍana e) Gītagovinda 1.

FROM WISDOMLIB.ORG

**** 

SUN GOD SURYA IN DELHI AIRPORT

சாகுந்தலத்திலும் குமார சம்பவ நூலிலும் சவிதா,  ரவி, பானு , ஹரி , சப்தசப்தி முதலிய சொற்களை காளிதாசன் பயன்படுத்துகிறான் அவனுடைய பச்சைக் குதிரைகளையும் ரகுவம்ச காவியத்தில் சொல்கிறான்.

சப்த =ஏழு , சப்தி=குதிரை  (சாகுந்தலம் 6-30;

குமார சம்பவத்தில் ஆறு, ஏழு பாடல்களில் சூரிய அஸ்தமனக் காட்சியைக் காளிதாசன் வருணிக்கிறார் 8-40 to 8-54 

***

முதல் பகுதியில் சூரியனுக்குள்ள இருபது தமிழ்ப் பெயர்களைக் கண்டோம்; இதோ சம்ஸ்க்ருதத்திலுள்ள 37 பெயர்கள்:

சூரியனுக்கு 37 பெயர்கள்!

அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகராதி;   .அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

(சம்ஸ்கிருத உச்சரிப்பு: சம்ஸ்கிருதத்தில் சொல்லுக்குப் பின்னே இரண்டு புள்ளிகள் ( : ) விசர்கம் இருந்தால் அதற்கு முந்திய உயிரெழுத்தைப் போல உச்சரிக்கவும்; எடுத்துக் காட்டு:– பாஸ்கர: = பாஸ்கரஹ, க்ரஹபதி: = க்ரஹபதிஹி, சித்ரபானு:= சித்ரபானுஹு)

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா = 12 உருவங்களை உடையவன்

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

 ****

SUN AND NAVA GRAHAS IN OXFORD MUSEUM

தமிழ்நாட்டில் தினமணிதினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ SUN  போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வோருக்கு மித்ர, ரவி, சூர்ய, பானு, கக, பூஷண, ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்ய, சவித்ர, அர்க்க, பாஸ்கர என்ற பன்னிரெண்டு நாமமங்களும் நன்றாகத் தெரியும். பிராமணர்கள் மூன்று வேளைகளிலும் சூரியனை நோக்கிச் சொல்லும் மந்திரங்களும் சூரியனை நண்பகலில் கைவிரல் இடுக்கில் காண்பதும் அறிந்ததே

 ***

வியப்பான விஷயம் என்ன வென்றால் ரிக்வேத காலத்திலிருந்து சுமார் 5000 ஆண்டுகளாகத் தினமும் சூரிய வழிபாடு நடப்பது இந்தியாவில் மட்டுமே. அதுமட்டுமல்ல கோவில் கட்டிய சிற்பிகள் நூற்றுக் கணக்கான கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி புகுந்து (சுவாமி) விக்கிரகத்தின் மேல் விழச்செய்யும் என்ஜினீயரிங் அற்புதத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது . இதனால் ஆதிசங்கரர் ஆறு சமயம் நிறுவிய பொழுது சூரியன் வழிபாட்டினை செளரம் என்று அறிமுகப்படுத்தினார்

குப்தர் கால கல்வெட்டுகளில் சூரியன் கோவில் செப்பனிடப்பட்ட செய்தி உளது. மேலும் மூல்டான் நகரிலிருந்த புகழ்பெற்ற சூரியன் கோவிலை சீன யாத்ரீகர்கள் குறிப்பிடுகின்றனர்; அதை ஒளரங்க சீப் அழித்த  செய்தியையும் பிற்கால யாத்ரீகர்கள் எழுதி வைத்தனர் அந்தக்கோவிலில் பல அற்புதங்கள் இருந்தததையும் எழுதி வைத்துள்ளனர் ; குஷான மன்னர்கள் தங்களுக்கே உரித்தான ஆடைகள், காலணிகளுடன் சூரிய பகவானைச் சித்தரித்துள்ளனர் . தமிழ்நாட்டின் கும்பகோணம் ,தாராசுரம் போன்ற இடங்களில் சூரியன் ரத வடிவில் மண்டபங்கள் உள்ளன .

அதிசயத்திலும் அதிசயம் திருஞான சம்பந்தர் கோளறுபதிகத்தில் முதல் பாடலில் ஞாயிறு -திங்கள் -செவ்வாய்- என்று வரிசைப்படுத்தி 9 விண்வெளி பிரகாசங்களைக் கூறுகிறார் இன்று உலகம் முழுதும் சண்டே- மண்டே- SUNDAY -MONDAY …. என்று அதே வரிசையில் காலண்டரை வெளியிடுகின்றனர்; சம்பந்தர் இப்படிப் பாடியதற்கு காரணம் அவர் பிராமணர் என்பதால்தான் ஏனெனில் பிராமணர்கள் இன்றும் தினமும் மூன்று வேளைகளில் ஆதித்யம் தர்ப்பயாமி என்று துவங்கி அதே வரிசையில் ராகு கேது வரை நீரை விட்டு வணங்குகின்றனர் இதையே சம்பந்தர் பாடினார் அதையே இன்று நாம் ஆங்கிலத்தில் சொல்லி வருகிறோம் அதில் சூரியனுக்கே முதலிடம்- ‘சண்டே’!

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை. பிரபாகரன், அருணன், ரவி, ரஸ்மி , மித்ரா, ஜோதி சூர்யா, பானு ஆதித்தனார் சவிதா முதலியன

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

சூர்ய சாரதியின் பெயர்கள்:- சூர்யசுத:, அருண:, அனூரு:, காஸ்யபி, கருடாக்ரஜ:

கிரணங்களின் பெயர்கள்:– கிரண:, உஸ்ர:, மயூக:, அம்சு:, கபஸ்தி:, க்ருணி:, க்ருஷ்ணி:, பானு:, கர:, மரீசி:, தீதிதி:

சூர்யப் பிரபைக்கான பெயர்கள்:- ப்ரபா, ருக், ருசி:, த்விஷ், பா:, சவி:, த்யுதி:, தீப்தி:, த்யுதிமதி, ரோசி:, சோசி:

தீப்தி போன்ற பெண்களின் பெயர்கள் இந்தப் பிரபை (ஒளி மண்டலம், ஒளிவட்டம்) யிலிருந்து வந்தவையே.

சூரிய வெப்பத்துக்கான பெயர்கள் முதலிய விஷயங்களையும் அமரம் உரைக்கும். உரைகாரர்களின் உரைகளுடன் படித்து இன்புறவேண்டிய நூல்.

SUN GOD IN BRITISH MUSEUM.

*****

 to be continued………………………….

tags- சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில், சூரியன் வழிபாடு-2 , சூரியனுக்கு 37 பெயர்கள் ,நிகண்டு, அமரகோசம், ஏழு குதிரை , SUN GOD IMAGES

சந்தானம் இல்லத்திற்கு ஸ்வாமி சாந்தானந்தா விஜயம்!-Part 8 (Post.14,866)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,866

Date uploaded in London – 14 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper,  passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

 புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 8 

ச. நாகராஜன் 

9

சந்தானம் இல்லத்திற்கு ஸ்வாமி சாந்தானந்தா விஜயம்! 

தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆசிரமங்களுள் ஒன்று சேலத்தில் உடையாப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஸ்கந்தாசிரமம். இதை ஆரம்பித்தவர் ஸ்வாமி சாந்தானந்தா. (அவதாரம் 1921 சமாதி:27-5-2002) இவரே புதுக்கோட்டையில் புவனேஸ்வரிக்கு ஆஸ்தான பீடமும் சிலாவடிவமும் அமைத்து புவனேஸ்வரி கோவிலை பிரசித்தமாக்கினார்.

1921ம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள அழகாபுரி என்ற சிற்றூரில் ராமசாமி என்ற அந்தணருக்கு பத்தாவது குழந்தையாக இவர் அவதரித்தார். இவர் இளமைப் பெயர் சுப்ரமண்யம். இளமையிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையும் சென்றார். பின்னர் தவ வாழ்க்கையில் ஈடுபட்டு பழனி மலை, கொல்லி மலை, வெள்ளியங்கிரி உள்ளிட்ட இடங்களில் தவம் புரிந்தார். குஜராத்தில் கிர்நார் மலையில் உள்ள தத்தாத்திரேயர் ஆலயம் சென்ற போது அங்கு ஒரு யோகி இவரிடம், ‘உன் குரு உனக்காக சேந்தமங்கலத்தில் காத்திருக்கிறார்’ என்று சொல்லவே அவர் சேலம் அருகில் உள்ள சேந்தமங்கலம் வந்தார்.

ஜட்ஜ் ஸ்வாமிகளின் சீடராக இருந்த ஶ்ரீமத் ஸ்வயம்பிரகாச ப்ரம்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை அவர் சந்தித்தார். அவரே இவருக்கு தத்த சம்பிரதாயப்படி உபதேசம் செய்து சாந்தானந்தா என்ற திருநாமத்தையும் தந்தார்.

புதுக்கோட்டையில் பெரும் ஆன்மீகப் பணியில் இவர் ஈடுபடலானார். முதலில் சதசண்டி யாகம் புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது. இவர் சம்பந்தமான செய்திகளை தினமணியில் எனது தந்தையார் பிரசுரிக்க ஆரம்பித்தார்.

கூடவே இவர் தரிசனமும் நிகழ்ந்தது. எனது தந்தையார் பால் அன்பு மிகக் கொண்டார் ஸ்வாமி சாந்தானந்தார.

ஒரு நாள் திடீரென்று செய்தி கிடைத்தது. ஸ்வாமிகள் சந்தானத்தின் இல்லத்தில் பிக்ஷை ஏற்க வரப் போகிறார் என்று. உடனே என் தாயார் விதவிதமாக உணவு வகைகளைத் தயாரித்து இவருக்கு உணவு பரிமாறத் தயாராக ஆனார்.

ஸ்வாமிகள் காலையில் வந்தார். இலை போடத் தயாராக இருந்த எங்களைப் பார்த்து அதெல்லாம் வேண்டாம் என்றார்.

எங்கள் வீட்டு சமையல் அறை மிக விஸ்தாரமானது. கூடத்தைப் போல நீளமும் அகலமும் இருக்கும். அங்கு வந்தவர் நின்று கொண்டார். எதிரே என் தாயார். அருகில் நாங்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தோம்.

“பவதி பிக்ஷாந்தேஹி” என்றார் அவர்.

அனைத்து உணவு வகைகளையும் ஒன்றாகக் கலக்குமாறு  கூறினார்.

நாங்கள் திகைத்தோம். தாயாரோ மலைத்தார். மூன்று கவளங்கள் மட்டுமே உணவுக் கலவையை தன் இரு கைகளிலும் ஏந்தி அருந்தினார் ஸ்வாமிகள்.

இது தான் அவர் உணவை ஏற்கும் விதம்.

நீண்ட நெடிய உருவம் படைத்தவர். மேனி செக்கச் செவேலென சிவந்து இருக்கும். ஆஜானுபாகுவான இவரது உருவத்தில் பின்னாலிருந்து தொங்கும் சடை கால் வரை நீளும். அப்படிப்பட்ட ஆகிருதியைக் கொண்ட இவர் தந்தையாரின் மீது மிகவும் அன்பு பாராட்டினார்; எங்கள் அனைவரையும் நன்கு ஆசீர்வதித்தார். 

சஹஸ்ர சண்டி யாகத்திற்குப் பெரும் பொருள் செலவாகும். அதற்காக நிறைய நிதி திரட்ட வேண்டி இருந்தது.

மதுரையில் உள்ள ஆடி வீதியில் இதற்கென கதாகாலக்ஷேப நிகழ்ச்சிகள் ஏற்பாடாயின்.

வடக்கு ஆடி வீதியும் மேல ஆடி வீதியும் சந்திக்கும் முனையில் திருப்புகழ் மண்டபம் அமைந்திருந்தது. அங்கு சேங்காலிபுரம் பிரம்ம ஶ்ரீ அனந்தராமதீக்ஷிதரின் உபந்யாசம் ஏற்பாடாயிற்று.

இரு ஆடி வீதிகளையும் அடைத்தவாறு ஆயிரக்கணக்கானோர் திரண்ட கூட்டம். இரு புறங்களிலும் மக்கள் திரள் அமர்ந்திருக்க நடுவில் நடைபாதை ஒன்று உண்டு. மேல ஆடி வீதி நோக்கி அமர்ந்து பிரசங்கம் செய்து கொண்டிருந்த அனந்தராம தீக்ஷிதர் திடீரென்று எதிரே கையைக் காட்டி, “இதோ தர்ம தேவதையே நடந்து வருகிறது” என்று உரக்க முழங்கினார். அனைவரும் அவர் கையைக் காட்டிய திசையை நோக்கிப் பார்வையைச் செலுத்தினர். அந்த வழியே அப்போது தான் நடந்து வந்த என் தந்தையாரும் திரும்பிப் பார்த்தார்.

“சந்தானம் அவர்களே வருக” என்று தீக்ஷிதர் தொடர்ந்த போது தான் தன்னைத் தான் தர்ம தேவதை என்று அவர் குறிப்பிடுகிறார் என்று என் தந்தையே உணர்ந்தார். நாங்கள் அனைவரும் தர்மதேவதை யார் என்று தெரிந்து கொண்டோம்.

சாஸ்திர தர்மங்களை விரிவாக தினமணியில் வெளியிட்டு ஆன்மீகத்தைப் பரப்பிய என் தந்தையை தீக்ஷிதர் தர்மதேவதையாகக் கண்டதில் அதிசயமில்லை தான்.

அங்கு மேடையில் அமர்ந்திருந்த ஸ்வாமி சாந்தானந்தாவும் அருளாசி தந்தார்.

சஹஸ்ர சண்டி யாகம் மிகவும் பிரமாதமாக நடந்தது.

ஸ்வாமிகளது தவத்தைப் பற்றி அவ்வளவாக வெளி உலகம் அறிந்திருக்கவில்லை.

ஒரு முறை இவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியைப் பற்றி குறிப்பிட நேர்ந்தது.

“தெரியுமே! காட்டில் அவரைப் புலியுடன் பார்த்திருக்கிறேனே” என்றார் ஸ்வாமிகள்.

அனைவரும் திகைத்துப் போனோம். காட்டில் இவர் தவம் செய்ததையும் அதே காட்டில் அவரும் இருந்ததையும் அறிய முடிந்தது. எந்தக் காட்டில் எப்போது புலியைப் பார்த்தார், அது யாருடையது, இவருடையதா, ஸ்வாமிஜியினுடையதா, அல்லது யார் வளர்த்தது போன்ற தகவல்கள் தெரியவில்லை. அவர் குறிப்பிட்ட சில சொற்களுடன் அது நின்று விட்டது.

இருவரது தவத்தின் மகிமையைப் பற்றி உதவ அந்தச் சொற்கள் உதவின.

.

புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பும் இவரால் கிடைத்தது!

இவரது அருளாசி எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைத்தது.

புவனேஸ்வரியின் சேவையில் தளராமல் ஈடுபட்டார் சந்தானம். ஸ்வாமி சாந்தானந்தாவின் அருளாசியையும் நிறையவே பெற்றார் அவர்.

அடுத்து மிகப் பெரும் அவதாரபுருஷரான் ஶ்ரீ சத்யசாயிபாபாவினுடனான எனது தந்தையாரின் தொடர்பைப் பார்ப்போமா?

***

to be continued………………..

tags- சந்தானம், இல்லம் , ஸ்வாமி சாந்தானந்தா, விஜயம்

The Smiles of a Pretty Woman are the Tears of the Purse -13 (Post No.18,865)

Written by London Swaminathan

Post No. 14,865

Date uploaded in London –  13 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Proverbs on Woman, Wife and Daughter -Part 13

241.Don’t choose a wife and a linen in candlelight.

242. For a young man a wife is a support and his walking stick a luxury; for an old man his wife is the luxury and the stick the support.

243.A bone for my dog; a stick for my wife.

244. Two women are a party, three a crowd.

245. From women, evil, and cucumbers, the smaller is the better.

246. Nothing is worse than a poor jew, lean pork or a drunken woman.

–Hungarian

247.Women’s counsels are often fatal.

–Icelandic

248. Every man has good wife and a bad trade.

249.  A wife and an oxen choose from your own country.

250. Your wife and your bag get from a neighbour.

251. He who has had a wife deserves a crown of patience, but who he has had two deserves a strait waistcoat.

252. Water, smoke and a bad wife drive men out of the house.

253. Your wife is a calf of your own country.

254.The first wife is matrimony, the second company, the third heresy.

255. In buying horses and takin a wife, shut yours eyes tight and commend yourself to God.

256. If the wife sins, the husband is not innocent. 

257. Wives, horses and books should never be lent.

258. As both a good horse and a bad horse se need the spur, so both a good woman and a bad woman need the stick.

259. A mill and a woman are always in want of something.

260. The smiles of a pretty woman are the tears of the purse.

–Italian Proverbs

To be continued…………………….

Tags- proverbs, on women, wife, Italian, Part 13, smile, tears

 சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-1 (Post.14,864)

Written by London Swaminathan

Post No. 14,864

Date uploaded in London –  13 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-1 (Post.14,864)

அமரகோசம் என்னும் முதல் நிகண்டினைப் பின்பற்றி தமிழர்களின் முதல் நிகண்டு என கருதப்படும் திவாகரம் தொகுக்கப்பட்டது. அதில் இந்திரன், தண்ணீர், சூரியன் போன்ற தலைப்பில் சொல்லப்படும் பெயர்கள் பெரும்பாலும் சம்ஸ்க்ருத அமர கோசத்தில் உள்ள சொற்களே ; இதை தமிழ் நிகண்டு என்று சொல்வதைவிட சம்ஸ்க்ருத நிகண்டின் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் என்றே சொல்ல வேண்டும்; .இதோ சூரியனுக்குள்ள 20 தமிழ் பெயர்கள் :-

இரவி, இனன், மணி, என்றூழ் , செஞ்சுடர், பரிதி, தேரோன், எல்லோன், பானு, சண்டன், அருக்கன், தபனன், ஆதவா, அண்டயோனி, ஆயிரங்கதிரோன், கனலி, திவாகரன், கனலோன், பார்க்கறேன், அனலி, ஒளியோன், அலரி, மார்த்தாண்டன், தினகரன், செங்கதிர், திமிராரி, அரி, அருணன், சூரன் ஞாயிறு, சவிதா, பாகன், பர்கன், வெயிலோன், ஆதித்தன், விரிச்சிகன்,  விரோசனன், விகார்த்தனன் , மித்திரன், வெய்யோன், கதிரோன், வெஞ்சுடர், சோதி, பகலவன், பதங்கன், எல்லை, பதங்கன், ஆதபன், அழலவன், உதயன், இருள்வலி, பொழுது, பகவன், சான்றோன், வேந்தன், தபனம், தரணி,  எல்லி, சாயா பதி, பகலோன், வின்மணி, பனிப்பகை, கதிரவன்,  சுடரோன், மாலி , பகல்,

20 தமிழ்ச் சொற்களை மட்டும் தடித்த எழுத்தில் காட்டியுள்ளேன்; கதிர், பகல், ஒளி என்ற சொற்களில் பிறந்தவற்றை ஒன்றாகக் கொள்ளவேண்டும்.

***

“நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர் கனலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீ இத்

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்”

—புறம் 43 தாமப் பல் கண்ணனார்

“செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு

வண்புகழ் இறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியத்

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை”

——திருமுருகாற்றுப்படை 106-109

“சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்

இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்

அடல் வலி எயினர் நின் அடிதொடு கடனிது”

—-சிலப்பதிகாரம் (வேட்டுவ வரி 15.அவிப் பலி)

“வசை தவிர் ககன சரசிவ கரண

மகாவ்ருத சீல சால வரமுனி சித்தரை

அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன”

—அருணகிரிநாதர் (புயவகுப்பு)

வாலகியர்கள் எனப்படும் 60,000 குள்ள முனிவர்கள் பற்றி ரிக் வேதமும் தமிழ் நூல்களும் சுவையான பல செய்திகளைத் தருகின்றன. ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்தில் பிற்சேர்க்கையாக 11 பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளைப் பிற்சேர்க்கை என்பதால் வேதத்துக்கு உரை எழுதிய சாயணர் இந்தப் பகுதிக்கு உரை எழுதவில்லை. ஆனால் ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணங்களில் இவர்களுடைய வரலாறு உள்ளது. இவர்களுடைய வரலாற்றில் பல வியப்பூட்டும் விஷயங்கள் இருக்கின்றன.

ஆங்கிலத்தில் ஜோனதன் ஸ்விப்ட்(Gulliver’s Travels by Jonathan Swift) என்பவர் கல்லிவரின் பயணம் என்ற ஒரு நாவலைப் படைத்தார். கல்லிவர் தனது பயணத்தில் லில்லிபுட் என்ற நாட்டுக்குப் போனபோது எல்லோரும் விரல் அளவுக்கே இருந்ததால் அந்த இடத்தில் கல்லிவர் என்ன என்ன சாஹசங்கள் செய்தார் என்று கதை மிக சுவையாகப் போகும். அந்தக் கதைக்கான கருத்தை ஜோனதன் ஸ்விப்ட் நமது வேதத்திலிருந்தும் இதிஹாச ங்களி லிருந்தும் எடுத்தார் என்றே தோன்றுகிறது. அந்தக் காலத்தில் இந்தியாவைப் பற்றி ஆங்கில நாளேடுகள் நிறைய செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சுவையான விஷயம் பூமியிலுள்ள மக்களைக் கதிரவனின் கடுமையான கதிர்களிலிருந்து காப்பது இந்த முனிவர்கள்தான் என்று படிக்கும்போது சில அறிவியல் உண்மைகள் தெரியவருகின்றது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் மனிதன் மீது அதிகமாகப் பட்டால் தோலில் புற்று நோய் உள்பட பல நோய்கள் ஏற்படும். ஆக சூரிய வெம்மை மனிதன் மீது அதிகம் படக்கூடாது என்பதை அவர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதே வியப்பான விஷயம்தான். அத்தோடு நிற்காமல் இந்த முனிவர்கள் 60,000 பேர் வெம்மையை தாங்களே வாங்கிக் கொண்டு நம்மைக் காப்பதற்காக தினமும் சூரியனுடன் சுற்றிவருவதாக எழுதியிருப்பது இன்னும் அதிசயமாக இருக்கிறது. இவர்களை நம்மை புற ஊதாக் (ultra violet rays) கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் வளையத்துக்கு (ozone layer) ஒப்பிட்டால் அது மிகையாகாது!

வடமொழி நூல்களில் சுவையான புராணக் கதைகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் சில பாட்டுகளுக்கு உரை எழுதியோர் அறிவியல் உண்மைகளை மிகத் தெளிவாக எழுதியுள்ளனர்.

யார் இந்தக் குள்ளர்கள்?

இவர்கள் க்ரது என்பவருக்குப் பிறந்தவர்கள். தாயின் பெயர் கிரியை.; பிரம்மாவின் மானச புத்திரர்கள் என்றும் அழைக்கப் படுவர். இவர்கள் கட்டை விரல் உயரம் தான் இருப்பார்கள். ஆனால் தேஜோ (ஒளி) மயமானவர்கள். முற்றும் துறந்த இவர்கள் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தவம் செய்வார்கள். 60,000 எண்ணிக்கையுடைய இவர்கள் சூரியனுக்கு முன் அவனுடன் பயணம் செய்வார்கள்.

ஒரு முறை காச்யப முனிவர் தனது 2 மனைவிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்க ஒரு யாகம் ஏற்பாடு செய்தார். அதில் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் முனிவர்களும் உதவிக்கு அழைக்கப் பட்டனர். இந்திரன் முதலானோர் வேகம் வேகமாக பெரிய விறகுகளை யாகத் தீக்கு கொண்டுவந்தனர். ஆனால் குட்டை வாலகில்யர்களோ ஒவ்வொரு இலை இலையாகக் கொண்டுவந்தனர். அத்தோடு சிறு சிறு குழிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் விழுந்தும் புரண்டும் வந்தனர். இதைப் பார்த்த இந்திரனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. சத்தம் போட்டு சிரித்து விட்டான்.

(இதுபோன்ற நகைச்சுவைக் கருப்பொருளை ‘காப்பி’ அடித்துதான் ஒரு கற்பனை நாவலை எழுதிவிட்டார் ஜோனதன் ஸ்விப்ட்).

வாலகீல்யர்களுக்கு பயங்கரக் கோபம் வந்தது. நாம் ஒரு புதிய இந்திரனைப் படைப்போம் என்று முடிவு எடுத்தனர். இந்திரன் நடு நடுங்கிப் போய் விட்டான். ஓடிப்போய் காஸ்யபரிடம் நடந்த அனைத்தையும் கூறினான். “வாலகீல்யர்கள் சக்தி வாய்ந்த தவசீலர்கள் அவர்கள். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது. ஆனால் ஏதேனும் சமாதானம் செய்து மாற்று வழி கண்டுபிடிக்கிறேன்“ என்று காஸ்யபர் பதில் சொன்னார். பின்னர் வாலகீல்யர்களிடம் போய் இந்திரன் பயந்து நடுங்குகிறான் என்று கூறி புது இந்திரனைப் படைக்காதீர்கள் என்றும் நீங்கள் பறவைகளுக்கு இந்திரனான கருடனைப் படையுங்கள் என்றும் மன்றாடினார். வேறு ஒரு நேரத்தில் இந்திரனைத் தோற்கடிக்க வகை செய்வதாகவும் சொல்லி சமாதானப் படுத்தினார். வாலகில்யர்கள் தனியாக யாகம் செய்தனர்.

இந்த சமாதான உடன்படிக்கையின்படி காஸ்யபரின் ஒரு மனைவீக்கு வாலகீல்யர்களின் யாகப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதைச் சாப்பிட்ட வினதை என்னும் மனைவி அருணனையும் கருடனையும் பெற்றெடுத்தாள். மற்றொரு மனைவியான கத்ரு வேறு ஒரு யாகப் பிரசாதத்தை சாப்பிட்டு நாகர்களைப் பெற்றெடுத்தாள். மற்றொரு தருணத்தில் கருடன் இந்திரனைத் தோற்கடித்து அமிர்தத்தைக் கொண்டுவந்து பழி தீர்த்துக் கொண்டான்.

திருமுருகாற்றுப் படைக்கு உரை எழுதிய கி.வா.ஜகந்நாதன் அவர்கள் வேறு ஒரு விஷயத்தையும் கூறுகிறார். மந்தோகருணர் என்று அழைக்கப்படும் அசுரர்கள் சூரியனுக்கு தினமும் தீங்கு செய்வதாகவும் அந்தணர்கள் நாள்தோரும் மூன்று வேளைச் சந்தியாவந்தனத்தில் கொடுக்கும் அர்க்யம் (நீர்) இந்த அசுரர்களை வீழ்த்த சூரியனுக்குத் துணைசெய்கிறது என்றும் கூறுகிறார். இந்த மந்தோகருண அசுரர்கள் சூரியன் வீசும் புற ஊதாக் கதிர்களா (ultra violet rays) அல்லது காந்த அலைகளா (magnetic storms and solar flares) என்பதை மேலும் ஆராயவேண்டும்.

மேற்கோள் காட்டிய பாடல்களின் பொருள்:

சூரியனுக்கு உதவும் வாலகில்யர்களுக்கு முருகப் பெருமான் ஒரு கையால் அருள் புரிகிறார் என்று திருமுருகாற்றுப் படை கூறுகிறது.

புறநானூற்றில் வேறு ஒரு கதை: சோழன் நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானை தாமப் பல் கண்ணனார் பாடுகையில் சோழர்களின் முன்னோனாகிய சிபிச் சக்கரவர்த்தி ஒரு புறாவுக்காக எப்படி தன்னையே தந்தார் என்று கூறிவிட்டு சிபியின் பெருமையைச் சுடரொடு திரிதரும் வாலகில்ய முனிவர்களோடு ஒப்பிடுகிறார்.அந்த முனிவர்களுக்குக் காற்றுதான் உணவு என்றும் புறநானூறு கூறுகிறது.

சிலப்பதிகாரதில் வேடர்கள் பாடுகையில் வானிலே திரிபவரான முனிவரரும் அமரரும் இடர்கெடுமாறு அருளுகின்ற நின்பாதங்களைத் தொழுதோம் என்று எயினர்கள் துர்க்கா தேவியின் (கொற்றவை) புகழ் பாடுகின்றனர். இது அடியார்க்கு நல்லார் எழுதிய உரையாகும். அருணகிரிநாதரும் இம் முனிவர்களைப் பாடிப் பரவுகின்றார்.

ஆக அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் கூறும் புதிய விஷயங்கள் வேத, இதிஹாச, புராணக் குறிப்புகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளன என்று சொல்லலாம்

இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்தபொழுது புதிய தகவல் கிடைத்திருக்கிறது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது தமிழர்களுக்கும் தெரியும் என்பது சங்க இலக்கியக் குறிப்புகளால் தெளிவாத் தெரிகிறது. அதர்வண வேதத்தின் ( அ. வே)  கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன. அதாவது உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் மறு  பதிப்பு !

அதில் உள்ள முக்கிய வரிகளைக் குறிப்பிட்ட பின்னர் எனது வியாக்கியானத்தைத் தருகிறேன்:–

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

தமிழில் காலன் என்றால் யமன்; காலம் என்றால் நேரம்.

இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.

அதர்வண வேதத்தில் ( அ. வே)   சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.

“சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை   முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்

ஓம்  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி  மந்திரம்

இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர  என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .

அ .வே. முதல் துதி சூரியனை போற்றுகிறது. இதில் சூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை  PRISM  பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .

“முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் ; எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..

அ .வே. மந்திரங்களை இந்திய விஞ்ஞானிகள் உட்கார்ந்து ஆராய்ந்தால் அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் சொல்லுவதற்கு முன்னரே நாம் பல உண்மைகளை சொல்ல முடியும்.

****

ரகுவம்சத்தில் சூரியன் 

पितुः प्रयत्नात्स समग्रसंपदः शुभैः शरीरावयवैर्दिने दिने|

पुपोष वृद्धिं हरिदश्वदीधितेरनुप्रवेशादिव बालचन्द्रमाः॥ ३-२२

இந்த ஸ்லோகத்தில் காளிதாசன் ஒரு விஞ்ஞான உண்மையையும் சொல்கிறார். சூரியனின் ஒளிதான் சந்திரன் மீது படிப்படியாகப்பட்டு  சந்திரன்  முழு நிலவாகிறது .

எப்படி சூரியன் சந்திரன் ஒளியை வளர்க்கிறதோ அப்படி திலீபன் தனது மகனை வளரச் செய்தான் .

pituḥ prayatnātsa samagrasaṁpadaḥ śubhaiḥ śarīrāvayavairdine dine|

pupoṣa vṛddhiṁ haridaśvadīdhiteranupraveśādiva bālacandramāḥ || 3-22

இதில் சூரியன் பயணம் செய்யும் பச்சைக்குதிரை என்ற வரிகளில் — ஹரிதஷ்வ — கதிரவன் குறிக்கப்படுகிறான்.

***

நெடுநல்வாடை 

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,

இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,

ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,                               75

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,

தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து

ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,            

பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ, 

பொருள் 

அரசிக்கு மனை அரசனின் அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது.

கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன்

அரசிக்கு மனை வகுத்தான்.

கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான்.

நிறுத்தியும் கிடத்தியும்

ஒரே கோலை மடித்து வைத்துச்

சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி

நிறுத்துவது இருகோல் குறிநிலை.

ஏறும் பொழுதாகவும், இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில்

இருகோல் குறிநிலை நிறுத்தி

அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான்.

****

To be continued……………………

Tags– திவாகரம் , சூரியனின் தமிழ்ப் பெயர்கள் சங்க இலக்கியம் , காளிதாசன் நூல்கள்   சூரியன் வழிபாடு, பகுதி -1