ஆலயம் அறிவோம்!  திருப்பனந்தாள் (Post No.14,855)

Written by Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 855

Date uploaded in London – 11 August 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

10-8-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.

வழங்கியவர் பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம்

திருப்பனந்தாள்

சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்

பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்

போழ் இளவெண்மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த  

தாழ் சடையான் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் திருத்தலமாகும்.

மண்ணியாற்றுக்கு சமீபத்தில் உள்ள இந்த பிரசித்தி பெற்ற தலம்  கும்பகோணத்திற்கு வடகிழக்கே 10 மைல் தூரத்திலும் ஆடுதுறை ரயில் நிலையத்திற்கு வடக்கே 6 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. தேவாரத் தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 39வது தலமாக இது அமைகிறது

இறைவனின் திருநாமங்கள் :  அருண ஜடேஸ்வரர், தாலவனேசுவரர்,

அம்மன் : பிருஹன்நாயகி,,  பெரிய நாயகி, தாலவனேஸ்வரி

சுவாமியின் வலப்பக்கம் முதலில் உள்ள அம்பிகைக்கு பாலாம்பிகை என்று பெயர். உபதேசத்தின் பின்னர் இவருக்கு விருத்தாம்பிகை என்று பெயர் ஆகும். 

தல விருட்சம் : பனை மரம்

இது ஆதியில் ஐந்து கிளையைக் கொண்டதாக இருந்தது. உள் பிரகாரத்தின் பின்னுள்ளது,

இரண்டு பனை மரங்கள் கிழக்கு பிரகாரத்தில் உள்ளது. பனைமரம் தல விருட்சமாக அமைவதால் இந்தத் தலத்தின் பெயர் திருப்பனந்தாள் என்று ஆயிற்று. தாலம் என்றால் பனை. ஆகவே இங்குள்ள இறைவனின் பெயர் தாலவனேசுவரர் என்று ஆயிற்று.

தீர்த்தம் : பிரஹ்ம தீர்த்தம் – கோவிலுக்குப் பின்னே உள்ளது.

 சூரிய தீர்த்தம் – புழுதிகுடி மடத்திற்குப் பின்னே உள்ளது. இங்கு பைரவர் காவலாக இருக்கிறார்.

தர்ம தீர்த்தம், – இது ஒரு குளம். நத்தம் என்னும் குளத்தைச் சார்ந்தது.

சேஷ தீர்த்தம் – குளம். அக்கினி மூலை, பாலூரில் உள்ளது

காக தீர்த்தம் – இதுவும் குளம். நைருதி மாரியம்மன் கோவில் பக்கத்தில் உள்ளது.

ஸத்திய நதி – மேற்கே உள்ளது.

கஜகாதம் – குளம். வீராக்கண்குளம் எனப்படும்.

நாக தீர்த்தம் – வாயு மூலையில் கோவிலின் உள்ளே குளமாக உள்ளது.

தாடகா தீர்த்தம் – வீரியம்மன் குளம் எனப்படும் இது வடமேற்கே உள்ளது.

சந்திர தீர்த்தம் – வடக்கே கிணறாக உள்ளது.

நாரை வாய்க்கால் – இது மேற்கே உள்ளது.

 இத்தலம் பற்றிய சுவையான  வரலாறு ஒன்று உண்டு.

 இத்தலத்தில் தாடகை என்ற ஒரு யக்ஷ ஸ்திரீ  மூன்று வருடம் பூஜித்து மாலை சார்த்தி பதினாறு கைகளைப் பெற்றாள். பூஜைக்காக பெற்ற இந்த பதினாறு கைகளும் பூஜை முடிந்த பின்னர் மறையுமாம். இந்த தாடகை ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல. புத்திரனை வேண்டி இவள் இங்கு பூஜித்தாள். இவள் மாலை சாத்தும் போது ஆடை நெகிழவே இறைவன் இவளுக்காகத் தனது திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார்.

இங்குள்ள தாடகா தீர்த்தத்திற்கு காவலாக வீரசண்டிகை இருக்கிறாள்.

 இவரை ராவணனின் பாட்டி என்றும் சிலர் கூறுகின்றனர்.

 இறைவன் வளைந்த நிலையிலேயே இருப்பதைப் பார்த்த மணிமுடிச்சோழன் என்னும் மன்னன் யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்து வளைந்த தலையை நிமிர்த்த முயன்றான். ஆனால்  முடியவில்லை.

திருக்கடையூரில் பிறந்த குங்கிலிய நாயனார் வளைந்திருக்கும் தலையைப் பார்த்து, ஈசனின் தலையை அரசனின் சேனையாலும் நிமிர்த்த முடியாமல் இருப்பதை எண்ணி, வருந்தினார்.

ஒரு கயிற்றைத் தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசனின் கழுத்தில் கட்டி, ‘ஒன்று உன் தலை நிமிர வேண்டும். அல்லது நான் உயிரை இங்கேயே விட வேண்டும்’ என்று கூறி கயிறை இழுத்தார். உடனே அக்கணமே ஈசனின் தலை நிமிர்ந்தது. இதனால் அரசன் மிகவும் மகிழ்ந்து நாயனாரைப் போற்றினான்.

இந்த வரலாறு இங்குள்ள பதினாறு கால் மண்டபத்தில் சிற்ப வடிவில் உள்ளது.

இது சூரியன் பூஜித்த தலமும் ஆகும்.

இங்கு பிரம்மா, ஐராவதம், சூரியன், சந்திரன், நாக கன்னிகை,, ஒரு வேடராஜனான சங்குகன்னன்,  தர்மசேன மஹாராஜா, கு ங்குலியக் கலய நாயனார்,  வணிகனான யக்ஞகுப்தன், ஒரு காகம் உள்ளிட்டோர் ஈசனை வழிபட்டுள்ளனர்..

கோவில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள கோவில் ஏழு அடுக்குகளுடன் விளங்குகிறது. ராஜகோபுரத்தை அடுத்து பதினாறு கால் மண்டபமும், வடக்கில் வாகன மண்டபமும், இரண்டாவது கோபுரத்தை அடுத்து வௌவால் நெற்றி மண்டபமும் சிற்ப வேலைபாடுகளுடன அழகுறத் திகழ்கின்றன.

இத்தலத்திற்கு வழமொழியில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக இரு தல புராணங்கள் உள்ளன.

 இங்கு ஶ்ரீ குமரகுருபர ஸ்வாமிகளால் ஏற்படுத்தப்பட்ட காசி மடம் என்னும் சைவ மடம் மிகவும் பிரபலமாக உள்ளது. சைவ சமயத் தொண்டை இது தொடர்ந்து செய்து வருகிறது.

 இந்தத் தலத்தில்  திருஞானசம்பந்தர், பாடல் இயற்றி வழிபட்டுள்ளார்.

 திருமணத் தடை நீங்கவும், புத்திரப் பேறு பெறவும் வழிபட இந்தத் தலம் சிறந்த தலம் என்பது ஐதீகம்.

 காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ப்ரஹன் நாயகி அம்மையும் அருண ஜடேஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

***

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 5 (Post .14,854)

Swamiji Krishna

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,854

Date uploaded in London – 11 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புதிய தொடர்!அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 5

ச. நாகராஜன்

6

ஸ்வாமிஜி: மறைவு

ஒரு நாள் ஆஸ்பத்திரியில் அவர் என்னைப் பார்த்து, “நீ லட்சம் பேருக்குப் பேசுவடா! என்றார். நான் திகைத்துப் போனேன்மதுரை கோவிலில் தெற்கு ஆடி வீதியில் உள்ள தெய்வ நெறிக்கழகத்தில் ஞாயிறு தோறும் நடக்கும் ஸத் ஸங்கத்தில் ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசுவது எனது வழக்கம்.

அங்கு நூறு பேர்கள் வருவர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பங்கேற்ற போது அங்கும் சுமார் நூறு பேர் இருப்பார்கள், பேசுவது வழக்கம். பின்னாளில் ஶ்ரீ சத்ய சாயி சேவா தளத்தில் மதுரை நகர அமைப்பாளராக இருந்த போது ஸத்ஸங்க கூட்டங்களில் பேசுவேன்.

விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் ஆயிரம் பேர் குழுமி இருக்க அங்கு பேசினேன். இந்த இடங்களில் எல்லாம் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டோரின் எண்ணிக்கையை உத்தேசமாகக் குறித்துப் பார்ப்பது என் வழக்கமானது. ஆனால் ஆயிரம் எங்கே, லட்சம் எங்கே?

ஒரு நாள் ஜெயா டிவியில் அழைப்பு வர அங்கு சென்றேன். பேட்டி மற்றும் உரைகள் என அடிக்கடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்..

ஒரு நாள் ஜெயா டிவி நிர்வாகம் என்னையே பேட்டி எடுக்கத் தீர்மானித்தது! ஸ்டுடியோவில் பல காமராக்கள் மேலிருந்து என் முன்னே தொங்க பேட்டியாளர்கள் இருவருடன் மேடையில் நான் இருந்த போது, டைரக்ட் செய்தவர் என்னைப் பார்த்து, “சார்,நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகிறது! நீங்கள் 96 லட்சம் பேருக்குப் பேசப் போகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பிக்கலாமா?” என்றார். 

நான் உடனே சிரித்தேன். ஸ்வாமிஜி சொன்னது பலித்து விட்டதே! 96 லட்சம் பேர்!

“நீ லட்சம் பேருக்குப் பேசுவடா” – ஸ்வாமிஜியின் குரல் மனக்கண்ணில் தோன்றியது. “என்ன சார், சிரிக்கிறீங்க” என்று அவர் கேட்க, “சார்! ஒன்றுமில்லை, நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்” என்றேன்.

ஸ்வாமிஜியின் வாக்கு ஒரு நாளும் பொய்க்காது.

இப்படி என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் உண்டு. எனது அண்ணன் சீனிவாசனுக்கு மதுரை கோட்ஸில் வேலை. எனது தம்பி ஸ்வாமிநாதனுக்கு உபநயனம்!

திடீரென்று ஒரு நாள் அவர் உபநயனம் போட வேண்டுமென்று சொன்னார். அதன்படி அவரே அதை நடத்தியும் வைத்தார். எனது தம்பிகள் சூரியநராயணன், மீனாட்சி சுந்தர், தங்கை லலிதா ஆகியோருக்கும் அவரது அனுக்ரஹம் கிடைத்தது. 

அவரது மேன்மை எப்படிப்பட்டது என்பதை உணர்த்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். சபரிமலையிம் பிரதம தந்திரியான சங்கரரூ கண்டரூ ஸ்வாமிஜியின் மேல் அபார அன்பும் மதிப்பும் கொண்டவர்.

முக்கியமான சபரிமலை சம்பந்தமான சாஸ்த்ரோக்தமான விஷயங்களில் அவர் ஸ்வாமிஜியை கலந்தாலோசிப்பது வழக்கம்! 

ஏற்கனவே ஸ்வாமிஜி பற்றிய எனது கட்டுரைகளில் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சின்ன சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம்.

ஆயக்குடி சென்ற எங்கள் குழு அருகிலிருந்த குற்றாலம் சென்று குளிக்கலாம் என்று விரும்பியது. ஸ்வாமிஜியிடம் பெர்மிஷன் கேட்டோம். பதிலே இல்லை. கடைசியில் எனது தம்பி ஸ்வாமிநாதனை அவரிடம் அனுப்பி கடைசி முயற்சியைச் செய்தோம்.

ஸ்வாமிநாதன் அனுமதி கேட்க ஒரு நிமிடம் மௌனமாக இருந்த அவர், ராமாராவை அழைத்தார்.

“பத்திரமாக இவர்களைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள், மதுரையில் கொண்டு போய் விடுங்கள்” என்றார்.

அங்கிருந்து சந்தோஷத்துடன் செல்ல ஆரம்பித்தோம். நல்ல அடை மழை ஆரம்பித்தது. எதிரே ஒரு அடி தூரத்தில் கூட சாலை தெரியவில்லை. அப்படி ஒரு மழை. அலறி நொந்து போனோம். நடந்தோம், நடந்தோம் தென்காசியை நோக்கி அந்த மாலை வேளையில் அடைமழையில்  நடந்தோம். தென்காசி வந்தவுடன் ஒரு தெருவின் மூலையில் நின்ற ராமாராவ் அவர்கள், “ஓய்! ராமகிருஷ்ண ஐயர்” என்று கூவினார். எதிரே இருந்த வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்து எங்களைப் பார்த்துத் திகைத்தார். “அட, மழையில் நனையலாமா?” என்ற அவரிடம் அருகிலிருந்த பிள்ளையார் கோவிலைக் காட்டி இதைத் திறந்து விடுங்கள். இரவு இங்கு தங்கி விட்டு அதிகாலை பஸ்ஸில் மதுரைக்குப் போய் விடுவோம்: என்றார்.

கோவிலில் மிகுந்த களைப்புடன் தங்கினோம். திடீரென்று ஒரு அலறல் _ நக்ஷத்திரம் ஒழுகறது டோய்” என்ற சத்தமான குரலைக் கேட்டு பயந்தே போனோம். மனநிலை சரியில்லாத ஒருவர் வானத்தைப் பார்த்துக் கத்திய ஆவேசக் குரல் தான் அது. இரவு முழுவதும் நடுக்கம் தான்!

அதிகாலையில் பஸ் வந்தது. எங்கள் குழுவில் இருந்த எண்ணிக்கையைச் சரியாகச் சொன்ன கண்டக்டர், “இவ்வளவு பேருக்குத் தான் சார் இடம்!” என்றார். தப்பித்தோம், பிழைத்தோம் என்று மதுரை வந்து சேர்ந்தோம்.

ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்தால் இந்த மட்டில் பிழைத்தோம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.

 ஸ்வாமிஜியின் பூஜை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் ஆயக்குடியில் இருந்த சீதாராமையர் குடும்பமே கவனித்துக் கொண்டது.

ஸ்வாமிஜியின் இல்லத்திற்கு மிக அருகிலிருந்த அவரது வீட்டில் அவரது மகன்களான அன்ந்தகிருஷ்ணன், சுப்பாமணி, சுந்தரம் மற்றும் அவர்களின் தங்கை விஜயலக்ஷ்மி ஆகியோர் வருகின்ற பக்தர்களையும் விருந்தினர்களையும் நன்கு கவனித்துக் கொள்வது வழக்கம். இவர்கள் அனைவரும் ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்தால் மிக நல்ல பதவிகளில் அமர்ந்து வளமாக வாழ்க்கை நடத்தியது குறிப்பிடத்தகுந்த விஷயம்! 

ஸ்வாமிஜி தனது பணியை முடித்து விட்டதாக நினைத்து விட்டார் போலும்.

வீட்டில் இருந்த சந்தனைக் கட்டைகள் அடங்கிய மூட்டையை ஒரு நாள் சுட்டிக் காட்டி, “இதில் பாதி எனக்குப் போதும்” என்றார்.

ஸ்வாமிஜி தனது தாயாரிடம் அபாரமான பக்தி கொண்டவர்.

எங்களில் யார் உள்ளே சென்றாலும் முதலில் அவரது தாயாரை நமஸ்காரம் செய்யச் சொல்வார். பின்னர் தான் அவரை நமஸ்கரிக்க முடியும்!

அப்படிப்பட்ட வயதான தாயாரையும் அவர் பிரியத் துணிந்தது இறைவனின் சங்கல்பம் போலும்!

சந்தனக்கட்டையில் பாதி அவரைச் சேரும் தருணம் வந்தது. செய்தியை இன்னாருக்கு மட்டும் சொல்ல வேண்டும் என்பதைக் கூட அவர் சொல்லி விட்டார்.

எனது தந்தையார், எம்.எஸ், வெங்க்டராமன் ஆகியோர் பதறியவாறே ஆயக்குடி சென்று அவரது அந்திமக் கிரியையில் கலந்து கொண்டனர்.

அவர் இல்லை என்று எப்போதும் எங்களால் சொல்ல முடியாது. 

ஒவ்வொரு கணத்திலும் அவர் கூடவே இருப்பது போன்ற உணர்வை எங்களுக்கு அனுக்ரஹித்து இருக்கிறாரே, அது தான் பரம அனுக்ரஹம்!

 அடுத்து காஞ்சி பெரியவருடனான எனது தந்தையாரின் அனுபவத்தைப் பார்ப்போமா?

***

Pictures of 2500 Indian Stamps! – Part 73 (Post No.14,853)


Written by London Swaminathan

Post No. 14,853

Date uploaded in London –  10 AUGUST, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 73

***

Pictures of 2500 Indian Stamps continued……………………

I have got 25,000 stamps with beautiful designs.

DO YOU COLLECT INDIAN STAMPS?

I HAVE GOT 100 MINI SHEETS.

ACTRESSES, ARTISTES, DANCERS, HANDLOOM DESIGNS, GANHI, NELSON MANDELA, UAE ANNIVERSARY.

I HAVE GOT SPARE STAMPS .

–subham—

Tags- Indian stamps, MINI STAMPS, 25,000, PART 73, ACTRESSES, ARTISTES, DANCERS, FILM WORLD

Woman is like an onion, nice and white to look at, but when cut into….. Germans also attack Women- Part 10 (Post 14,852)

One Thousand Proverbs on Woman, Wife, Daughter Part 10 (Post No.14,852)

Written by London Swaminathan

Post No. 14,852

Date uploaded in London –  10 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

181.Would you take a wife, consult your ears rather than your eyes.

182. He has a wife deserves a crown of patience; he who takes a second, a fool’s cap.

183. He who has taken a rich wife has sold his freedom.

184. He that truly loves his wife leaves her at home.

185. If a man beats his wife once, e beats her often; if the man kisses the nun once, he kisses her still more often.

186. The loved one is milk, the fiancée is butter, and the wife seasoned cheese.

187. To whom God gives a wife, to him He gives patience also.

188. Praise the day at even, a wife when dead, a weapon when tried, a maid when married, ice when ‘tis crossed and ale when ‘tis drunk.

189. A wife who must be guarded is not worth the guard

(It is in Tamil Tirukkural by poet Tiru Valluvar too.

Of what avail is watch and ward?
Honour’s woman’s safest guard – Tirukkural 57)190.

190. To spin, to cry, to wash, to lie and to cheat her friend is the manner of many a woman.

191. A sack full of fleas is easier to watch than a woman.

192. A woman, a mill, and an old house always require something repairing.

193. A woman and a fish speak like two men.

194. He who does not love wine, woman and song remains a fool his lifelong.

195. What the devil cannot do a woman can do.

196. When a woman dies, there is one quarrel less on earth.

197. A cock masters twelve hens, a woman half as many men.

198. A woman has the form of an angel, the heart of a serpent, and the sense of an ass.

199. Man without woman is a head without a body; woman without a man is body without head.

200. Woman is like an onion, nice and white to look at, but when cut into, there is no kernel, no heart, and one must cry.

– German Proverbs

To be continued……………………

Tags- Woman, onion, wine, to cry, watch, woman, thousand proverbs, part 10

காளிதாசன் காவியங்களில் இந்திரன்! சங்கத் தமிழ் நூல்களுடன் ஒப்பீடு! – 1 (Post.14851)

Indra in Nepal

Written by London Swaminathan

Post No. 14,851

Date uploaded in London –  10 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part One

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

மாயோன் மேய காடு உறை உலகமும் – (மாயவன்/Vishnu  மேவிய காடுபொருந்திய உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும் – முருகவேள் skanda  மேவிய மைவரை உலகமும்வேந்தன் மேயதீம்புனல் உலகமும் – இந்திரன் indra மேவிய தீம்புனல் உலகமும், வருணன் varunan  மேய பெருமணல் உலகமும் – வருணன் மேவிய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படும்- முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையினானே சொல்லவும் படும்—தொல்காப்பியம்

ரிக்வேதத்தில் இந்திரனுக்குத்தான் அதிகத் துதிப்பாடல்கள் உள்ளன . தமிழின் பழைய நூலான தொல்காப்பியமும் இந்திரனையும் வருணனையும் தமிழ் மக்களின் வழிபடு தெய்வங்களாகச் சொல்கிறது;  இது மாக்ஸ்முல்லர் கால்டுவெல் கும்பலுக்கு  செமை அடி கொடுக்கிறது ; ஆரிய –திராவிட  வாதம் பேசி இரண்டு இனத்தவரும் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மாக்ஸ்முல்லரும் பரப்பியதோடு ஆரியர் வேறு திராவிடர் வேறு என்று சாகும் வரை பிரசாரம் செய்தனர்; அந்த இரண்டு கும்பல்களைத் தொல்காப்பியர் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்! ஆனால் செத்த பாம்பை அடிக்கும் சில “வீரர்கள்” இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்!!

தமிழ் நாட்டில் இந்திர விழா கொண்டாடப்பட்டது சங்க இலக்கிய நூல்களில் உள்ளது. ஒருவன் அடியோடு சாய்ந்தான் அல்லது விழுந்தான் என்பதற்கு வால்மீகி ராமாயணம் அடிக்கடி பயன்படுத்தும் உவமை இந்திர விழா தூண் சாய்க்கப்பட்டது போல என்பதாகும் ஏனெனில் அக்காலத்தில் நீண்ட நாள் நடந்த இந்திர விழா முடிந்த பின்னர் அந்த தூணை மக்கள் எல்லோரும் சேர்ந்து சாய்ப்பார்கள் . பிற்கால தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் இந்த விழா பற்றியோ, தூண் பற்றியோ எதையும் காணமுடியாது .

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்திரன் மற்றும் இந்திர விழா பற்றிய நூல்கள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவை என்பது தெளிவாகிறது .

இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர  பிரசாத்; ராஜ+ இந்திர! இன்றய இந்தியாவின் பிரதமரும் இந்திரனே! நர+ இந்திர மோடி= நரேந்திர மோடி ! இந்தியாவின் எந்த மாநில டெலிபோன் டைரக்டரி மட்டுமல்ல, ஆசிய நாடுகள் அத்தனையிலும் இந்திரன் பெயர் இருக்கும்! ஆங்கிலத்தில் இதை ஆண்ட்ரூ ANDREW என்பார்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் உள்ள ஆய்+ அண்டிரன் என்ற பெயரிலிருந்து ஆண்ட்ரூ வந்தது. ஆய் அண்டிரனின் உண்மைப் பெயர் அஜேந்திரன் !

ஆய் அண்டிரனை வரவேற்க இந்திர லோக முரசு ஒலிக்கத் துவங்கியது- புறம்.241

நிற்க! சங்க இலக்கியத்தை நோக்குவோம்.

துறக்கத்து அமரர் செல்வன்- பரி. 5-69

அமரர் செல்வன்-பரி. 5-51

வானத்து வளம்கெழு செல்வன் -பரி. 5-59

அருநிலை உயர் தெய்வத்து அணங்கு -பரி. 9-12

விண்ணோர் வேள்வி முதல்வன் -பரி. 5-30

வடபால் உயர்ந்தோங்கியுள்ள பெருமலையைக் காவல்புரிபவன் –பரி.9-1/3

நூறு வேள்வி செய்து வீரன் ஆனவன்- முருகு.155/6

ஆயிரம் கண்கள் உடையவன் – முருகு.155; , கலி.105-15; பரி.9-9

வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன் -புறம்241; கலி.105-15; பரி.18-30;

நெடியோன் -புறம்.241;

இந்திரர் அமிழ்தம் – புறம்.182

இந்திரன் வில் – பரி.18-39;  புறம்.20; அகம்.84;192; பெரும்பா.292;

இந்திரன், பூசை; இவள் அகலிகை …. பரி.19-50/3

(திருப்பரங்குன்ற ஓவியத்தைக் கண்ட பட்டிகாட்டுப் பெண்ணுக்கு வான் கணவன் இந்திரன்-அகலிகை கதையைச் சொன்ன காட்சி; பூசை=பூனை

இந்திரவிழாவின் பூவன்ன –

புன்தலைப்பேடை வரிநிழல் அகலவும் – ஐங்குறு.62-1/2

பதிற்று .30-14;

அமிழ்தம் என்ற சொல்லும் மூன்று வித ஸ்பெல்லிங்க்குகளுடன் தமிழ்ச் சங்க நூல்களில் பயிலப்படுகின்ற்ன .

Indra in South East Asian Countries

திருமுருகாற்றுப்படை 155….

நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்

தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத்

தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை

எருத்த மேறிய திருக்கிளர் செல்வனு

160நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய

உலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்

பலர்புகழ் முவருந் தலைவ ராக

பொருள்

(155-159) (நூறைப் பத்தால் பெருக்கினால் வரும்) ஆயிரம் கண்களுடனும் நூற்றுக்கு மேற்பட்ட பல வேள்விகளே இயற்றி முடித்த—பகைவரை முன்னேறி அழித்த வெற்றிச் சிறப்புடனும் (விளங்கி ), நான்காக அமைந்த மருப்புகளையும் (தந்தங்களையும்) அழகிய நடையினையும் உடைய—தாழ்ந்து தொங்கும் பெரிய நீண்ட துதிக்கையைத் தூக்கி மேலே உயர்த்திய வெள்ளையானையின் பிடரியின் மேல் அமர்ந்து வரும் — திருமகளின் விளக்கம் பெற்ற செல்வனாகிய இந்திரனும்,

(Throughout South Asia, Indra’s Elephant is shown with many trunks and many tusks)

Indra in Laos stamps (Phra= Sri)

மூவர் வருகையின் காரணம்

(160-165) இந்திரன், நான்முகன். திருமால், உருத்திரன் என்னும் நான்கு பெரிய தெய்வங்களுள் (முருகனால் சிறைப்பட்டுக் கிடக்கும் நான்முகன் நீங்கலாக ). நல்ல திருப்பதிகள் நிலைபெற்றுள்ள உலகினைக் காக்கும் ஒப்பற்ற செயல் புரியும் கொள்கை கொண்ட —பலரும் புகழும் திருமால், உருத்கிரன், இந்திரன் ஆகிய மூவரும் தாம் தத்தம் தலைமையினைப் பெற வேண்டியும்………………

*****

இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம், நிறைய இடங்களில் வருகிறது.

மிகவும் வியப்பான விஷயம்! பாபிலோனிய ஜில்காமேஷ் போன்றோர் உலக மியுசியங்களில் ஒளிந்து கொண்டுவிட்டனர். ஆனால் இந்திரனையோ இன்றும் பிராமணர்கள் முக்கால சந்தியாவந்தனத்தில் தினமும் வழிபடுகின்றனர். உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களில் தினசரி பூஜைகளில் இந்திரனும் வருணனும் வழிபடப்படுகின்றனர். இந்திரன் பெயர் இல்லாத இனம் இந்தியாவில் எங்குமே இல்லை. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் முதல் தமிழ்நாட்டின் நாகேந்திரன், கண்ணாயிரம் வரை எல்லாம் இந்திரன் பெயர்கள்தான்.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

நேபாளத்தில் இந்திர விழா

இன்றுவரை இந்திர விழாவை  பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழக்களே.

பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.

****

வேதத்தில் எண்கள் முப்பது,  நூறு,  ஆயிரம் என்ற எண்களின் ஸம்ஸ்க்ருதச் சொற்களை இந்திரனைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் அவன் 33  தேவர்களுக்குத் தலைவன்நூறு அஸ்வமேத யாகங்களைச்  செய்தவன்ஆயிரம் கண்களை உடையவன். இதைத் தமிழிலும் காளிதாஸனிலும் காண்கிறோம்.

To be continued…………………….

Tags- காளிதாசன், காவியங்கள் இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள்,  ஒப்பீடு! – 1

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –4

Swaniji Krishna with Sri Kanchi Sankaracharya 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,850

Date uploaded in London – 10 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 4 

ச. நாகராஜன்

5

ஸ்வாமிஜி: எங்கும் சஞ்சரித்து எதையும் பார்க்க வல்லவர்! 

இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் பார்க்கவல்ல ஆற்றல் படைத்தவர் ஸ்வாமிஜி. ஆயக்குடியில் அவருடன் இருக்கும் போது எங்கள் வீட்டில் நடப்பதைச் சுட்டிக் காட்டி எதற்காக தங்கையுடன் வம்புச் சண்டை போடுகிறீர்கள்” என்று ஒருமுறை அவர் கேட்டார்.

 “இல்லையே, அப்படி போடவில்லையே” என்று மறுத்தவுடன் விவரங்களைத் தெளிவாகக் கூறலானார். உடனே அவர் கூறுவது அனைத்தும் சரிதான் என்று ஒப்புக் கொண்ட நாங்கள், “இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டோம்.

 பெரிய ரகசியங்கள் சிறிய விஷயங்களிலிருந்தே வெளிப்படுகின்றன.

 “என் கண்ணை மூடிக் கொண்டால் பிலிம் போல எல்லாம் ஓடும்டா” என்றார் அவர்.

பழனியில் நடந்த ஒரு சங்கீதக் கச்சேரியை (ஆயக்குடியில் இருந்த இடத்திலிருந்தே) தான் கேட்டு ரசித்தது பற்றியும் ஒரு முறை கூறினார்.

 இதனால் அவர் எங்கும் எப்போதும் சஞ்சரிக்க வல்லவர் என்பது புரிந்தது. ரமண மஹரிஷி வாழ்விலும் இது போன்ற ஏராளமான சம்பவங்களைக் காணலாம்.

 வருங்காலத்தைத் தெளிவாகப் பார்க்கும் ஆற்றல் உள்ளவர் அவர்.

ஒரு முறை அனைவரும் ஆயக்குடியில் அவரது வீட்டின் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது எதிர்காலம் பற்றிய பேச்சு வந்தது. உடனே அவர் என் தந்தையாரை நோக்கி, “சந்தானம், சமுத்திரம் இங்கே வந்துடும்” என்றார். அவர் கை அருகில் ஒரு அடி தூரத்தைக் காண்பித்தது.

 அனைவரும் அரண்டு போனோம். 

திகைப்பில் ஆழ்ந்த எங்களைப் பார்த்து அவர், “பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒன்றுமில்லை” என்றார்.

“சமுத்திரம் இங்கே வந்துடும்” என்பதை தினமும் விவாதித்து விவாதித்து நாங்கள் குழம்பிப் போனோம்.

சில தினங்களில் ராமேஸ்வரம அருகே கடல் பொங்கி உள்ளே நுழைந்தது. தனுஷ்கோடியே மூழ்கிப் போனது. அப்போது தான் அவர் கூறியதன் அர்த்தம் விளங்கியது!

 “கடைசியில் நீயும் நானும் தான் சந்தானம்” என்றார் அவர் ஒரு முறை எனது தந்தையைப் பார்த்து!. சாமான்ய அறிவு கொண்ட எனக்கு அவர் அப்படி கூறியதன் அர்த்தம் இன்று வரை புரியவில்லை.

 அவ்வளவு நெருக்கமாக என் தந்தையை அவர் நேசித்தார். 

யாரையும் எளிதில் நம்பாத ஒருவர் மாதவன் நாயர். அவர் கேரள அரசில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி.

அச்சன்கோவிலுக்கு சரியான சாலை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க அவர் நேரடி இன்ஸ்பெக்‌ஷனுக்காக அச்சன்கோவிலுக்கு வந்தார். கரடுமுரடான மண்பாதையில் ஜீப் போய்க்கொண்டிருந்தது.

“ஸ்வாமிஜியை நோக்கிய அவர், இதையெல்லாம் என்னால் நம்ப முடியாது. எல்லாம் ஐயப்பன் செய்வார் என்றால் ஒரு புலியை இங்கே வரச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.

ஸ்வாமிஜி மௌனமாக இருந்தார்.

அடுத்த சாலை வளைவில் சாலையை முழுதுமாக அடைத்துக் கொண்டு ஒரு பெரிய புலி நின்று கொண்டிருந்தது. அலறிய மாதவன் நாயர், “நம்புகிறேன். நம்புகிறேன். புலியைப் போகச் சொல்லுங்கள்” என்று கூச்சலிட்டார். புலி அகன்றது.

சற்று தூரம் சென்றவுடம். “இது ஒரு கோ இன்சிடென்ஸ். இன்னொரு தரம் புலி வருமா, என்ன?” என்றார்.

அடுத்த வளைவில் இன்னொரு புலி நின்றது. சிரித்தது.

அலறிய மாதவன் நாயர் அந்தக் கணம் முதல் ஸ்வாமிஜியின் அத்யந்த பக்தராக ஆனார்.

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?

தென்காசி கோவிலில் கோபுரம் இடிந்திருந்தது. அதையெல்லாம் செப்பனிட்டு பிடிராஜன் தலைமையில் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்வாமிஜியின் முன்னணியில் இது நடைபெற்றது.

அதில் கலந்து கொள்ள சந்தானம் குடும்பமும் சென்றது,

அனைவரும் தென்காசி டிராவலர்ஸ் பங்களாவில் தங்கி இருந்த போது அங்கு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாதவன் நாயருடன் நான் பேச்சுக் கொடுத்தேன்.

அவர் மனம் திறந்து கூறிய வார்த்தைகள் தாம் இவை.

எங்களை அவர் பார்த்து, “நீங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள்” என்று கூற அவரை நாங்கள், “நீங்கள் ஒரு அதிசய மனிதர். ஸ்வாமிஜியையே டெஸ்ட் செய்தவராயிற்றே” என்றோம்.

அனைவரும் சிரித்தோம்.

ஸ்வாமிஜிக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர் மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாக நேர்ந்தது.

அவருக்கென ஒரு ஸ்பெஷல் வார்டு. அங்கு ஆஸ்பத்திரி டீன், மதுரை டி.எஸ்.பி.யாக இருந்த அச்சுதன் நாயர் ஆகியோர் தினமும் வருவர்.

எங்களது வீட்டிலிருந்தும் இன்னொரு எளிய பக்தர் வீட்டிலிருந்தும் மட்டுமே சாப்பாடு கொண்டு போகப்படும். என் தாயார் திருமதி ராஜலெக்ஷ்மி அம்மாள் பக்தி சிரத்தையுடனும் “மடி”யாகவும் சமைத்த உணவை மட்டுமே அவர் சாப்பிடுவார்.

ஏழை பணக்காரன் என்பதெல்லாம் அவருக்குக் கிடையாது. மன சுத்தமும், நேர்மையும் பக்தியுமே அவருக்கு முக்கியம்.

இதை அந்த அவரது ஆஸ்பத்திரி வாசம் உணர்த்தியது. எனது தந்தையார் உள்ளிட்டோர் அங்கு வார்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

அந்த இடத்தில் எனக்கு ஒரு அதிசய அனுபவம் ஏற்பட்டது.

அது என்ன?

**

TYRANTS OF THE WORLD- HITLER AND MAO

 FROM MY STAMP ALBUM

POSTED 9-8-2025

TYRANT OF CHINA; TYRANT OF GERMANY- MAO AND HITLER STAMPS

–SUBHAM–

TAGS- HITLER STAMPS, MAO STAMPS, GERMANY, CHINA

Pictures of 2500 Indian Stamps! – Part 72 (Post No.14,849)

Written by London Swaminathan

Post No. 14,834

Date uploaded in London –  9 AUGUST, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 72

***

Pictures of 2500 Indian Stamps continued……………………

Maps with stamps

GANDHI STAMPS 1948, SIX POETS

IF YOU WANT INDIAN AND FOREGN STAMPS, PLEASE E MAIL ME.

IF YOU WANT TO DESIGN LOGOs, EMBLEMS, PLEASE CONTACT ME.

IF YOU WANT HINDU NAME FOR UR CHILDREN, I CAN HELP YOU.

I have got 25,000 stamps with beautiful designs.

–subham—

Tags- Indian stamps, MINI STAMPS, 25,000, PART 72, Gandhi 1948

When an Old Man takes a Young Wife the Death Laughs- Part 9 (Post.18.848)

Written by London Swaminathan

Post No. 14,848

Date uploaded in London –  9 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 One Thousand Proverbs on Woman, Wife, Daughter: Part -9

 PICTURES ARE ONLY REPRESENTATIONAL, NOT RELATED TO PROVERBS POSTED HERE.

161. Without woman men were but ill-licked cubs.

162. A man of straw is worth of a woman of gold.

163. If a woman were as small as she is good one could make her a whole dress and a crown out of a parsley leaf.

164. A woman who accepts, sells herself; a woman who gives surrenders.

165. Mistrust a woman who talks of her virtue.

166. A woman’s lips have cured many ills.

167. A woman’s tongue does no dishonesty.

168. If you would understand men, study women.

169. Of women and horses there are none without defects.

170. With women and ships there is always  the fea that they may capsize.

171. Women can effect everything, because they govern those who govern everything.

172. Men are the reason for women disliking one another.

173. All the talent of women is abortive happiness.

174.In women, money and wine lurks both profit and poison.

175. There are few honest women who are not tired of their trade .

—French proverbs

176. Adam and Eve ate the apple and I who didn’t taste it have to pay for it .

177.Happy the man who has a bee as his wife.

178.One God, one coat, one wife.

179. Spinning, crying and talking about her husband is often all a wife can do.

180.When an old man takes a young wife the death laughs.

—German proverbs

To be continued………

Tags- One Thousand ,Proverbs ,on Woman, Wife, Daughter, Part -9, death, laughs

காளிதாசன் காவியங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் பிரம்மா! (Post.14,847)

Written by London Swaminathan

Post No. 14,847

Date uploaded in London –  9 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

முதலில் முக்கிய சொற் பிரயோகத்தை அறிவோம் ; பிரம்மம் வேறு,  பிரம்மா வேறு, பிராமணன் வேறு ; நிறைய பேருக்கு இந்த வேறுபாடு தெரியாது ; ஆங்கிலத்திலும்  இந்தியிலும் வடக்கத்தியர்களின் பேச்சு வழக்கிலும் ‘பிரம்மன்’ குழப்பம் உண்டானது .

பிரம்மா என்பவர் படைப்புத் தெய்வம் ; அவர் த்ரி மூர்த்திகளின் ஒருவர் – பிரம்மா விஷ்ணு சதாசிவம் என்று மும்மூர்த்திகளை அழைக்கிறோம் .

பிரம்மாவுக்கு நான்கு தலைகள் ; அவருக்கு நான்கு கைகள் ; அவருடைய மனைவி சரஸ்வதி; அவர்கள் வசிக்கும் இடம் சத்ய லோகம்.  அவர்கள் இருவருக்கும் வாஹனம் அன்னம் என்னும் பறவை ; பிரம்மாவின் வாயிலிருந்து வேத முழக்கம் வந்துகொண்டே இருக்கும். மனிதனின் பேச்சு, அறிவு, விவேகத்திற்கான கடவுள்  சரஸ்வதி; இந்தக் கருத்துக்கள் வேத காலம் முதல் இமயம் முதல் குமரி வரை வழங்கி வருகிறது . பிரஜாபதி என்பது பிரம்மாவின் இன்னுமொரு பெயர் ஆகும்.

பிரம்மாவின் நான்கு கைகளில் கமண்டலம் என்னும் தண்ணீர் பாத்திரம் , ருத்ராக்ஷ மாலை , வேத  புஸ்தகம், யாகத்தில் நெய் அல்லது சாதத்தைப்போட உதவும் ஸ்ருவம் என்னும் கரண்டி ஆகியன இருக்கின்றன. வேதமும் வேள்வியும் படைப்பு முதலே உள்ளன என்பதை இவை குறிக்கும் .

இந்துக் கடவுளர் எல்லோரும் தண்ணீருடன் சம்பந்தப்பட்டவர்கள் ; இது ஆரிய -திராவிட வாதம் பேசும் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கு  செமை அடி கொடுக்கிறது சிவன் தலையில் கங்கை;  விஷ்ணு இருப்பதோ கடல் நடுவில்; பிரம்மா வைத்திருப்பது தண்ணீர் பாத்திரம்; வேத கால முக்கிய நதியின் பெயரோ சரஸ்வதி ; பனி நிறைந்த மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் வந்திருந்தால் ஆப்ரஹாமிக் மதங்கள் (யூத, கிறிஸ்தவ முஸ்லீம்) போல தண்ணீர் வாசனையே இல்லாமல் இருக்கும். இந்துக்கள் இந்த நாட்டிலியேயே தோன்றி இந்த நாட்டிலேயே வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை வேத புராண இதிகாசங்களும் சங்கத் தமிழ் நூல்களும் தெளிவாகச் செப்புகின்றன.

****

சங்கத் தமிழ் நூல்களில் பிரம்மா

நீலநிற உருவின் நெடியோன் கொப்பூழ்

நான்முக ஒருவற் பயந்த   பல்லிதழ்த்

தாமரைப் பொகுட்டிற் காண் வரத்தோன்றி  — பெரும்பாணாற்றுப்படை வரிகள் 402-404

***

தாமரை பயந்த தாவில் ஊழி

நான்முக ஒருவர் கட்டி — முருகு. வரிகள் 164-5

***

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ– பரி 5-22

இதை முதல் திருக்குறளில் வள்ளுவன் பயன்படுத்தயுள்ளார்

***

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் – கலி 2-1

இது அப்படியே காளிதாசனின் மொழிபெயர்ப்பு .

படைப்புத் தொழில் துவங்குவதற்கு முன்னர் தோன்றியதால் அவன் ஆதி அந்தணன்..

பிரம்மா வாயிலிருந்து வேதங்கள் ஒலித்த வண்ணம் இருக்கும்…

மாநில மியலா முதன்முறை அமையத்து

நாம வெள்ள நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனோடு  மலர்ந்த தாமரை…………….. பரி 3-91/4

இதில் மலர்மிசை ஏகினான் பிரம்மா என்ற வள்ளுவர் கருத்தினைக் காணலாம் ; எல்லோரும் காளிதாசனிலிருந்து எடுத்திருக்கலாம்

***

உலகு படைத்தோன் என்ற கருத்து –குறள் 1062,  பரி.   கலி 106-17; 129-2. நற்றிணை 240 , புறம்.194 ஆகியவற்றில் பல இடங்களில் வருகிறது.

பூவினுட் பிறந்தோன் என்ற கருத்து பரிபாடலில்  பல இடங்களில் உள்ளது..

****

காளிதாசன் குமார சம்பவத்தில்தான் பிரம்மா பற்றி அதிகம் பாடியிருக்கிறார் ; ரகு வம்ச காவியத்தில் பிரம்மா இருக்கிறார்.

ஆத்ம பூ , ஸ்வயம்பு, கமலாசன / மலர்மிசை ஏகினான் , பிதாமஹ, பிரஜாபதி , வாகீச, விஸ்வயோநி முதலிய பெயர்களை காளிதாசன் பயன்படுத்தியுள்ளார்.

தமிழில் திருக்குறளில் மூன்றாவது குறளிலேயே இவருடைய பெயர் (மலர்மிசை ஏகினான்) வருவது குறிப்பிடத் தக்கது.

यज्ञाङ्गयोनित्वमवेक्ष्य यस्य सारं धरित्रीधरणक्षमं च।

प्रजापतिः कल्पितयज्ञभागं शैलाधिपत्यं स्वयमन्वतिष्ठत्॥ १-१७

yajñāṅgayonitvamavekṣya yasya sāraṁ dharitrīdharaṇakṣamaṁ ca |

prajāpatiḥ kalpitayajñabhāgaṁ śailādhipatyaṁ svayamanvatiṣṭhat || 1-17

இமய மலையை வருணிக்கும் காளிதாசன் அதுதான் வேத விளைவிக்க பொருள்களை அளிக்கிறது என்றும் அவைகளை  பிரம்மாவே சோதித்து வேள்வியின் பலனை இமவானுக்கும் அளித்தார் என்கிறார் — குமார சம்பவம் 1-17

பிரஜாபதி என்ற சொல் இங்கே வருகிறது

****

तस्मिन्विप्रकृताः काले तारकेण दिवौकसः|

तुरासाहं पुरोधाय धाम स्वायम्भुवं ययुः॥ २-१

tasminviprakṛtāḥ kāle tārakeṇa divaukasaḥ |

turāsāhaṁ purodhāya dhāma svāyambhuvaṁ yayuḥ || 2-1

தாரகன் என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்தியவுடன் அவர்கள் பிரம்மாவிடம் சென்றனர்.

****

तेषामाविरभूद्ब्रह्मा परिम्लानमुखश्रियाम्|

सरसां सुप्तपद्मानां प्रातर्दीधितिमानिव॥ २-२

பிரம்மா ஒளியிழந்த தேவர்கள் முன்னர் தோன்றினார் ; பிரேமா என்ற சொல் இங்கே பயிலப்படுகிறது

teṣāmāvirabhūdbrahmā parimlānamukhaśriyām |

sarasāṁ suptapadmānāṁ prātardīdhitimāniva || 2-2

***

अथ सर्वस्य धातारं ते सर्वे सर्वतोमुखम्|

वागीशं वाग्भिरर्थ्याभिः प्रणिपत्योपतस्थिरे॥ २-३

இந்த ஸ்லோகத்தில் அவர் நான்கு முகம் உடையவர், எல்லாவற்றையும் படைப்பவர் , சொற்களுக்கு இறைவன் என்றும் அவர் தோன்றியவுடன் எல்லோரும் துதித்தனர் என்றும் சொல்லப்படுகிறது

atha sarvasya dhātāraṁ te sarve sarvatomukham |

vāgīśaṁ vāgbhirarthyābhiḥ praṇipatyopatasthire || 2-3

***

नमस्त्रिमूर्तये तुभ्यं प्राक्सृष्टेः केवलात्मने|

गुणत्रयविभागाय पश्चाद्भेदमुपेयुषे॥ २-४

பிரம்மாவைப் புகழும் தேவர்கள் அவரே  படைப்புக்கும் முன்னால் வந்தார் என்றும் மும்மூர்த்தி என்றும் முக்குணங்கள் சேர்க்கை என்றும் பாடுகினறனர்

namastrimūrtaye tubhyaṁ prāksṛṣṭeḥ kevalātmane |

guṇatrayavibhāgāya paścādbhedamupeyuṣe || 2-4

***

स्त्रीपुंसावात्मभागौ ते भिन्नमूर्तेः सिसृक्षया|

प्रसूतिभाजः सर्गस्य तावेव पितरौ स्मृतौ॥ २-७

இன்னும் ஒரு ஸ்லோகத்தில் அவரே இரண்டாகி ஆண் பெண் ஆனார் என்று போற்றுகின்றனர்

strīpuṁsāvātmabhāgau te bhinnamūrteḥ sisṛkṣayā |

prasūtibhājaḥ sargasya tāveva pitarau smṛtau || 2-7

***

पुराणस्य कवेस्तस्य चतुर्मुखसमीरिता|

प्रवृत्तिरासीच्छब्दानां चरितार्था चतुष्टयी॥ २-१७

purāṇasya kavestasya caturmukhasamīritā |

pravṛttirāsīcchabdānāṁ caritārthā catuṣṭayī || 2-17

முந்திய ஸ்லோகத்தில்  பிரம்மாவை வேதாஹா  என்று சொல்லிவிட்டு அடுத்த ஸ்லோகத்தில் புராண கவி- பழம்பெரும் கவி –என்கிறான் காளிதாசன்

****

ரகுவம்சத்திலும் வேதாகா 1-29  என்று சொல்கிறார்.

ब्राह्मे मुहूर्ते किल तस्य देवी कुमारकल्पं सुषुवे कुमारम्|

अतः पिता ब्रह्मण एव नाम्ना तमात्मजन्मानमजं चकार॥ ५-३६ ராகு வம்சம்

பிரம்ம முஹுர்த்த நேரத்தில் பிறந்த ரகுவின் பிள்ளை முருகனைப்போல இருந்தான். அவனுக்கு பிரம்மாவின் பெயரான அஜன் என்ற பெயரைச் சூட்டினான்

brāhme muhūrte kila tasya devī kumārakalpaṁ suṣuve kumāram

ataḥ pitā brahmaṇa eva nāmnā tamātmajanmānamajaṁ cakāra || 5-36

****

வேத கால இலக்கியங்களில் 300- க்கும் மேலான இடங்களில் பிரம்மாவின் பெயர் வருகிறது.

Please go to wisdomlib.org for more details

***

அமரகோசத்தில் பிரம்மாவுக்கு 29  பெயர்கள் 

1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்

2.ஆத்மபூ= தான் தோன்றி

3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்

4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.

5.பிதாமஹர்= பாட்டனார்

6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)

7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்

8.ஸ்வயம்பூ= தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)

9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )

10.தாதா = உயர் தலைவன்

11.த்ருஹினஹ= படைப்போன்

12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்

13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்

14.ஷ்ரஷ்ட= உலகைப் படைத்தோன்

15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்

16.வேதா= வேதம் உடையோன்

17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)

18.விதாதா= உயர் தலவன்

19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்

20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்

21.பூர்வ= முன்னோன்

22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்

23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்

24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)

25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்

26.சத்யக = உண்மை விளம்பி

27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்

28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்

29.அண்டஜ= முட்டையில் உதித்தோன்.

–subham—

Tags- காளிதாசன் காவியங்கள், சங்கத் தமிழ் நூல்கள், பிரம்மா, படைப்போன், ஆதி அந்தணன், முதியவன்