Posted by London Swaminathan from Facebook on 16-7-2025.
The Lakshmi Narasimha Swamy Temple near Nampally, Telangana, is a unique snake-shaped temple dedicated to Goddess Naga Devatha. It is located on a hillock, accessible via a short climb from the Vemulawada-Karimnagar highway, and is about 150 kilometers from Hyderabad according to a Facebook post. The temple’s design features a large, curled snake structure with a tunnel entrance through the snake’s belly, leading to the shrine. Inside, visitors will find statues depicting the story of Prahalada and Hiranyakasipu, and the idol of Lord Narasimha killing Hiranyakasipu. There are also ancient idols of Naga Devatha, and at the entrance, a statue of Lord Narasimha emerging from a pillar.
****
Lakshmi Narasimha Temple, Nampally Gutta is nestled on a small hillock on the Vemulawada – Karimnagar highway in Telangana. It is a small shrine dedicated to Lord Lakshmi Narasimha, an incarnation of Lord Vishnu. The idol was carved out of the rock around which the temple was built. The visitors have to walk a few hundred steps that lead to the top from nearest the parking area at bottom. The climb is little steep may take up to 15 minutes.
****
The temple is nestled on a small hillock on the Vemulawada – Karimnagar highway. It is a small shrine dedicated to Lord Lakshmi Narasimha, an incarnation of Lord Vishnu. The idol was carved out of the rock around which the temple was built. The visitors have to walk a few hundred steps that lead to the top from nearest the parking area at bottom. The climb is little steep may take up to 15 minutes.
One the way to the Narasimha temple, there is a temple for Naga
Devatha. The temple was built in a model of Snake. Visitors can enter the shrine through the snake’s belly – a long, winding tunnel. There are statues depicting the story of Prahalada and Hiranyakasipu. At the end of the tunnel, the statue of Lord Narasimha killing the demon Hiranyakasipu is present. There are also a few ancient idols of Naga Devatha. At the entrance of the temple, one can find a statue of Lord Narasimha breaking his way out of a pillar.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
GHOTI= FISH
English spelling as has been frequently pointed out by G B Shaw ,Senator Robert Owen and others, is a monument to traditionalism so weird as to be practically incredible. We have only five written vowels, but at least thirteen vowel sounds, plus some thirty vowel combinations, or diphthongs, many of which are represented by simple vowels in writing—our so called long vowels, a, I, o and u , –are all phonetically combinations of two vowed sounds.
A group like ou appears with a different phonetic value in each of these words,
House, cough, cousin, through, furlough, could.
Words like Polish, and polish are distinguished in writing only by the capital.
Shaw is said to be responsible for the statement that fish could be spelled ghoti by using the
Gh of enough,
The o of women, and the
Ti of nation.
Gh=f
O=i
Ti=sh
****
AMERICAN ENGLISH
Vocabulary and semantic differences between American and British are numerous to have warranted the compilation of many lengthy glossaries, some of book length.
G B Shaw claims that England and America are two countries separated by the same language, while a contemporary America writer says interpreters are far more needed between ourselves and the British than between either and the French or German, but such statements are humorously and paradoxically advanced, even if they are aided and abetted by continental Europeans who hang out such signs as
English spoken here- American understood or
Who offer to teach English in three months and American in two months.
That the British themselves are not above such low humour is evidenced by the following sign recently noted on a London theatre marquee,
New, sensational American Western film- English subtitles.
****
What English can do to foreigners who try to use it is indicated by such phrases as correctly English in 100 days ( the title of an English handbook for Orientals); I was suddenly disemployed and May I have an interview facial to facial?(two of the phrases listed therein); as well as Soldiers are refused to eat and drink here (sign over a Shanghai shop) and We are boys in the age of 17 years, full from spirit of enterprise (letter to a New York daily from Germany).
The story, authentic or not, is told of an American technician employed in a Russian plant, during the war, received a distressing wire from home about his only daughter:
Harriet hung for juvenile crimes. The telegram had been translated into Russian, then retranslated into English; the original version was Harriet suspended for minor offences.
***
MILLIONS LOST DUE TO LINGUISTIC IGNORANCE
One of the oldest words in the Germanic languages is corn. But semantically corn has become specialised to mean wheat to the English, oats to the Scottish and maize to the Americans. Not knowing this fact, a government agency during the war bought corn for European famine relief at the request of British government, and this bit of linguistic ignorance cost a few million dollars to repair.
Source book- THE STORY OF LANGUAGE by Mario Pei, 1952.
–subham—
Tags- G B Shaw, English language, American English, Ghoti, fish, Corn, million dollar, linguistic ignorance
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தத் தொடரில் இதற்கு முன்னே வந்துள்ள் அனைத்துக் கட்டுரைகளையும் இந்த பிளாக்கில் படிக்கலாம்!
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 9
ச.நாகராஜன்
சமீப காலத்தில் நடந்த கோரமான நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக ட்ரீம் லைனர் ஃப்ளைட் AI-171-இன் விபத்து தான்!
அஹமதாபாத்திலிருந்து 2025 ஜூன் 12, தேதி கிளம்பிய அது லண்டனில் உள்ள கேட்விக் தளத்திற்குச் செல்ல பறக்க ஆரம்பித்தது. சரியாக பகல் 1.39க்குக் கிளம்பிய விமானம் சில விநாடிகளுக்குள்ளேயே அவசர கால உதவியான மே டே அழைப்பை விடுத்தது.
1.40க்கு அது வெடித்துச் சிதறியது.
விமானத்தில் 242 பெர்கள் இருந்தனர். அவர்களில் 230 பேர்கள் பயணிகள்; 12 பேர்கள் விமானத்தைச் செலுத்தும் குழுவினர். இவர்களில் 169 பேர்கள் இந்தியர்.53 பேர்கள் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் மற்ற நாட்டவர்கள்.
விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறியது.
அது விமான நிலையத்திற்கு அருகிலிருந்த BJ மெடிகல் கல்லூரி மற்றும் மெகானிநகர் அருகிலிருந்த சிவில் மருத்துவமனை மற்றும் ஹாஸ்டல் மீது விழுந்து நொறுங்கி ஹாஸ்டலைச் சேதப்படுத்தியது.
ஹாஸ்டலில் இருந்தவர்களில் பலர் காயமடைந்தனர். ஹாஸ்டலில் மேல் தளங்கள் இடிபட்டு நசமாயின. ஹாஸ்டலின் மீது விமானம் மோதியதில் சுமார் 24 பேர்கள் இறந்தனர்.
விபத்தில் உயிர் இழந்தவர்களில் முன்னாளைய குஜராத் முதல் அமைச்சரான விஜய் ரூபானியும் ஒருவர்
விமானத்தில் பயணித்த 242 பேர்களில் ஒரே ஒருவர் தான் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.
.விமானம் ஏன் தரை மீது மோதியது என்பதைப் பற்றிய ஏராளமான ஊகங்கள் கிளம்பின.
எரிபொருள் டாங்கிற்கு எரிபொருள் சப்ளை ஆகவில்லை என்பதும் ஒரு ஊகமாக இருக்கிறது. இரண்டு எஞ்ஜின்களும் அதனால் தான் இயங்கவில்லை என்பது வல்லுநர்களின் கண்டுபிடிப்பு.
இதில் அதிசயிக்கத்தக்க ஒரு சம்பவம் இதில் உயிர் பிழைத்தவர் ஒருவர் மட்டுமே தான் என்பது.
விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற 38 வயதான ஒருவர் மட்டுமே தீவிர காயத்துடன் உயிர் தப்பினார்.
விமானம் கீழே விழுவதை அறிந்த ரமேஷ் அவசரகதவு வழியாக வெளியே குதித்து தப்பியுள்ளார்.
இருக்கை எண் 11 ஏ என்பது ட்ரீம்லைனர் விமானத்தில் எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு வலதுபக்கத்தில் உள்ள இருக்கையாகும். இது அவசரவழியை ஒட்டி அமைந்துள்ளது.
விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக அவசரநிலை தெரிவிக்கப்பட்டது. உடனே உஷாரான அவர் சரியாக விமானம் கீழே விழுந்து மோதும் போது விமானத்தில் ஏற்பட்ட பிளவைப் பயன்படுத்தி அதன் வழியாக எகிறிக் குதித்தார். காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவர் கண் விழித்த போது அருகில் அவரைச் சுற்றி சடலங்கள் கிடந்தன. பயந்து அலறியவர் ஓட ஆரம்பித்தார். அவரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முப்பது விநாடிகளுக்குள் எல்லாம் முடிந்து விட்டது.
ரமேஷுக்கு அருகில் உட்கார்ந்திருந்த அவரது சகோதரர் உயிரிழந்தார்.
மிக பயங்கரமான கோர விபத்தில் பல ஆச்சரிய செய்திகள் உள்ளன.
ஒருவர் இந்த விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியாததால் பயணம் செய்ய முடியவில்லை. டிக்கட் வாங்கிய இன்னொருவர் தாய் அவரைப் பிரிவதைத் தாங்க முடியாமல் வருந்தி அதில் போக வேண்டாம், இன்னும் இரு என்று சொன்னதால் அவர் பயணிக்கவில்லை. அவர் உயிர் தப்பினார்.
ரமேஷ் உயிர் பிழைத்த அதிசய சம்பவத்திலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது: காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PROVERBS ON GOD PART TWO
First the doctor, then God.
If wives were good, God would have one
Georgian
****
The voice of the people is the voice of God.
Men should be careful lest they cause women weep, for God counts their tears- Talmud
(Manu also said similar thing in his smriti.)
God did not make woman from man’s head, that she should rule over him; nor from his feet, that she should not be his slave; but from his side that she should be near his heart- Talmud
(Hindus are the only people who worship god as half man and half woman-
Ardha naareeswar concept)
God is more delighted in adverbs than nouns.
Whosoever walks towards God on cubit, God runs towards him in twain
(this is also in Hindu quotes )
Everything is in the hands of God, save the fear of God.
In the name of god, we do all manner of wrong.
Beat the gods, and the priest will tremble–Talmud
If thou hast taken up God’s trade, put on his livery also- charity.
Talmud
Hebrew
****
The voice of the people is the drum of God .
Shut your eyes, your nose and your mouth and then call on God. Your inner doors will open when your outer doors are shut.
My friend, love God as the husbandman loves his field; he suffers losses and pay tribute, and still he loves his fields.
If God be our friend we have already succeeded .
God dwells in music.
God fills the full.
God grant no nails to the bald.
There is a God, so why do you grieve?
As I can conceal nothing from God, why should I stand in awe of man?
Let none trouble about the caste and creed; who calleth on God is called of God.
The idol carrier worships not.
Hindustani or Urdu
****
God does not pay on a Saturday.
Who has God for his friend has all the saints in his pocket.
God helps him who is in possession.
God listens to short prayers.
To the good spender god is treasurer.
God is treasurer to the charitable man
God puts food into clean hands.
When one can do no more god sends death.
That which god sends is better than that which man asks for.
Where God’s help is there a spider’s web becomes a wall; where it is not, the wall becomes a spider’s web.
Italian
****
The water of God for the pines of the wood.
Whom God has given a mouth, to him will not He, the same god, give a little pot for his dinner?
If God intends to give , he will give it at the door; but if God will not give, then what is the good of going a thousand kos for it?
Kos= about 2000 miles.
God is a giver.
God makes the egg to live.
Be up and doing and God will bless you.
Kashmiri
To be continued……………………
Tags- God, proverbs, part 2, Hebrew, Talmud, Kashmiri, Hindustani, Italian,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இமய மலையின் புனிதம் கருதியும்,உலகிலேயே உயர்ந்த மலை என்பதாலும் தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்றனர் என்பது உண்மையே. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு பூகோள அறிவும் இருந்ததால் அதுதான் நாட்டின் வட எல்லை என்பதையும் அறிந்தனர்; பூமியை அளக்கும் அளவுகோல் போல இரண்டு கடல்களையும் தொட்டுக்கொண்டிருக்கும் இமயம் என்று குமார சம்பவத்தில் காளிதாசன் பாடியிருப்பதை சங்கத் தமிழ்ப் புலவர்கள் நன்கு அறிந்து இருந்தனர். இன்று நாம் இமயம் முதல் குமரி வரை என்று சொல்கிறோம் அந்தக்காலத்தில் இதை சம்ஸ்க்ருத மொழியில் ஆசேது ஹிமாசலம் என்று சொன்னார்கள் சேதுக்கரை முதல் இமயம் வரை என்பது இதன் பொருள்.
இதையெல்லாம்விட முக்கிய காரணம் இமய மலையில் அந்தக் காலத்தில் தங்கம் கிடைத்தது என்பதாகும். மஹாபாரதத்தில் அர்ஜுனன் உத்தரகுருவுக்குச் சென்று தங்கம் கொண்டுவந்ததை தருமன் ராஜ சூய யாகம் நடத்திய நிகழ்ச்சியில் படித்தோம்; தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்று தங்கம் கொண்டு வந்ததை திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு.) பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் .
மேருவைச் செண்டாலடித்த படலத்தில் பாண்டியன் செய்த சாதனைகளை பரஞ்சோதி வருணிக்கிறார் ; உக்கிரகுமாரனும் காந்தி மதியும் அகஸ்தியர் சொன்ன சோமவார வீரத்தை அனுஷ்டித்ததால் பிறந்தவன் வீர பாண்டியன் . அவன் காலத்தில் மழையின்றி வறட்சி ஏற்படவே உக்கிரகுமாரன் சோதிடர்களைக் கலந்தாலோசித்தான்; நவக்கிரகங்களின் நிலையே இதற்கு காரணம் என்று சோதிடர்கள் கூறினார்கள் . மன்னன் உக்கிரகுமாரன் கவலையுடன் உறங்கியபோது சிவபெருமான் ஒரு சித்தர் வேடத்தில் கனவில் தோன்றி , மேரு மலையில் ஒரு குகையில் தங்கம் நிறைய இருக்கிறது; நீ அங்கே சென்று மேரு மலையின் செருக்கினை அடக்கி தங்கத்தைக் கொண்டுவா என்று சொன்னார். .
உக்கிரகுமார பாண்டியன் பெரும்படைகளுடன் பல தேசங்களைக் கடந்து சென்றான்; இந்த இடத்தில் பரஞ்சோதி அக்கால பூகோள விஷயங்களை வருணிக்கிறார். மேருவுக்குச் சென்ற பாண்டியன், மலை அரசன் வர தாமதிக்கவே, அதைச் செண்டால் அடித்தான்; அது உடனே நடுங்கி அவன் முன் தோன்றி வந்த காரணத்தை வினவியது ; திரவியம் வேண்டி வந்தேன் என்று பாண்டியன் செப்பவே மாமரத்தின் கீழே தங்கம் புதையுண்டு கிடைக்கிறது என்று மேரு மலை தகவல் கொடுத்தது ; அவனும் அங்கே சென்று பாறைகளைத் தோண்டி தங்கத்தை எடுத்துக்கொண்டு மீதியுள்ளதை பாறைகளால் மூடி அவை தனது என்று சீல் / முத்திரை வைத்தான் . பின்னர் நாட்டிற்கு வந்து மக்களுக்குத் தங்கத்தைக் கொடுத்து வறுமையை நீக்கினான்; மழை பெய்து வறட்சி நீங்கியது
என் கருத்து
மன்னன் என்பவன் கடவுளுக்கு இணையானவன் என்பதால் கோயில் என்னும் சொல் இருவர் இருப்பிடத்துக்கும் பயன்படுத்தப்பட்டது; அவனுடைய கடுமையான முயற்சிகளை கடவுளின் மீது ஏற்றி அவன் வேல் விட்டவுடன் கடல் பின்னால் போனது, அவன் செண்டால் அடித்தவுடன் மேரு தங்கம் கொடுத்தது என்றெல்லாம் எழுதினார்கள். இவை மரபுச் சொற்றோடர்கள் IDIOMS AND PHRASES; அகத்தியர் விந்திய மலையைக் கர்வ பங்கம் செய்தார் அகத்தியர் கடலைக் குடித்தார் என்பதெல்லாம் சங்கேத மொழிகள்SYMBOLIC LANGUAGE; அந்தக் காலத்தில் இதைப் படித்தவர்களுக்கு இதன் பொருள் விளங்கியது ; இன்று நமக்கு இவை புதிர்களாகத் தோன்றும்.
****
PICTURE- ரசவாதம் செய்த படலம்
சீல்SEAL வைக்கும் வழக்கம் !
முத்திரை பதிக்கும் வழக்கத்தைத் தமிழர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தினார்கள். விடை இலச்சினை இட்ட படலத்தில் பாண்டியன் சீல் பற்றி வருகிறது. புகார் / காவேரிப் பூம்பட்டினம் வழியே வந்த வெளிநாட்டுச் சரக்குகளுக்கு சுங்க வரி செலுத்திய பின்னர் சுங்கம் கொடுத்த முத்திரை பதிக்கப்பட்டதை சங்கத் தமிழ் நூல்கள் இயம்புகின்றன . சிந்து சமவெளியிலும் ஏராளமான முத்திரைகள் கிடைத்துள்ளன . பாரதத்தின் எல்லா மன்னர்களும் கொடிகளையும் சின்னங்களையும் பயன்படுத்தியதை நம்முடைய இதிஹாச புராணங்கள் செப்புகின்றன.
மதுரைப்பேராலவாயார்- புறநானூறு 247, 262; இவர் நற்றிணையில் இரண்டு பாடல்களையும் அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் பாடிப் பாண்டிய மன்னனைப் புகழ்ந்துள்ளார் . இவரே இறையனார் என்றும் உரைப்பர்; இவர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தவர் .அறிஞர்கள் வேண்டியதையும் மீறி தீக்குள் பாய்ந்து உயிர் நீத்த பூதப்பாண்டியன் மனைவி பாடிய பாடல்களும் புறநானூறு.246,247 ஆராய்ச்சிக்குரியவை
சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி – புறநானூறு16, 125, 367, 377; புறநானூறு 367 பாடலில் யாகத்துக்கு வந்த பாண்டியன் கானப்பேர் தந்த உக்ரப் பெருவழுதியையும் சேரமான் மாரிவென்கோவையையும் அவ்வையார் பாடியுள்ளார்.
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி– புறநானூறு-58
உக்ரப் பெருவழுதி- நற்றிணை 98.
உக்கிர, பூத என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதையும் உக்கிர குமார பாண்டியன் பற்றி பரஞ்சோதி பாண்டியதையும் சேர்த்து ஆராய வேண்டும்.
****
PICTURES-நாகம் எய்த படலம்
மாயப்பசுவை வதைத்த படலம்
துலாபாரம் பதினாறு வகை தானங்கள் பற்றி தி.வி.பு. பல படலங்களில் குறிப்பிடுகிறது இவை பாண்டியர் செப்பேடுகளிலும் இருப்பதால் தொல்பொருட் துறை சான்றும் கிடைத்துவிட்டது.
தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.
நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அரசர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார் (புறம்.29)
பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் (புறம்.15)
பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)
பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74-1-20
இளஞ்சேரல் இரும்பொறை முறைப்படி சாந்தி வேட்டான். சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களை கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான. அதை ஒட்டி சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்.
பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்.
தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.
மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.
வேள்விக்குடி , சின்னமனூர், தளவாய்புரம் செப்பேடுகள் மற்றும் இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த நாலாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் ஆகியவற்றை பின்னணியில் வைத்து ஆராய்ந்தால் பல புதிர்களை விடுவிக்கமுடியும் .
***
குலசேகரன்காலர்த்தில் மணவூர் தலைநகராக இருந்தது பின்னர்தான் தற்போதைய மதுரை உண்டானது . இந்த மணவூர் எது? எங்கே இருந்தது?
****
PICTURES- உலவாக்கிழி அளித்த படலம்
வளையல் விற்ற படலம்
அக்ஷய பாத்திரம் போல உலவாக்கிழி, உலவாக்கோட்டை பற்றி பரஞ்சோதி பாடியதும் சிறப்புக்குரியது .
குல பூஷணன் காலத்தில் வறட்சி காரணமாக பிராமணர்கள் வெளியேறிய செய்தியை தி.வி.பு கூறுகிறது ;காசியிலிருந்து பிராமணர்களையும் காவிரிப்பூம்பத்தினத்திலிருந்து செட்டியார்களையும் அழைத்த செய்தி மக்கட் தொகை குடியேற்றத்தைக் காட்டுகிறது.
வங்கிய சேகரன் காலத்தில் ஜனத்தொகை பெருக்கத்தால் புதிய ஆலவாய் தோற்றுவிக்கப்பட்டது என்கிறார் பரஞ்சோதி.
மாணிக்கவாசகர் காலத்துக்கும் முன்னதாக சங்கப்புலவர் சண்டையிட்டதையும் மறைக்காமல் எழுதியுள்ளார் பரஞ்சோதி
ஆகவே சுனாமி, ஜனத்தொகை பிரச்சினை, அரசர்கள் படை எடுப்பு, கனவுகளின் பங்கு, வறட்சி, வைகையில் பெருவெள்ளம், அற்புதங்கள், பிராணிகளுக்கும் கடவுள் அருள் புரிந்தது , வரலாறு, மக்கள் குடியேற்றம், இமயம் வரை பயணம் , நவரத்தின சாஸ்திரம் சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் குதிரை சாஸ்திரம், தாவரவியல் , அதிசயங்கள், அற்புதங்கள் , யாக யக்ஞங்கள் போன்ற ஏராளமான தலைப்புகளில் ஆராயப்பட வேண்டிய நூல் தி.வி.பு.
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா தி.வி.பு. க்களும் சம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு என்பதால் மூலத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
PICTURE-மெய் காட்டிய படலம்
இதற்கு மடாதிபதிகளும் ஆதீனகர்த்தர்களும் முயற்சி எடுக்க வேண்டும் .
—சுபம்—
TAGS- தமிழ் மன்னர்கள், இமய மலை,சென்றது ஏன்? தங்கம்
“சரி! உனக்கு என்ன வேண்டும். சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறாய்?’ “ஐயோ, சம்பளமா! வேண்டவே வேண்டாம். இரண்டு வேளை சாப்பாடு, தங்க இடம். அது போதும்”
வித்யாபதி மனம் இரங்கினார்.
“உன் பெயர் என்ன?”
“உகனா”
“சரி, உகனா, உன் வேலையை ஆரம்பி”
உகனா வேலையை ஆரம்பித்தான். அறைகள் சுத்தப்படுத்தபப்ட்டன. சுவடிகள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டன. மாதாஜியின் வேலையில் பாதி குறைந்து விட்டது.
ஒரு நாள் வித்யாபதி பயணமாகப் புறப்பட்டார். உகனாவும் கூட வந்தான்.
“நீ எதற்கு” என்று கேட்டார் வித்யாபதி.
“நான் எதற்கா? பின் யார் உங்கள் பெட்டியைத் தூக்குவதாம்?”
உகனாவும் கூடவே பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்றான்.
சிறிது நேரம் கழித்து வித்யாபதிக்கு களைப்பாக இருந்தது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார்.
“ஒரெ தாகமாக இருக்கிறது. உகனா!”
“இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன். இங்கேயே உட்கார்ந்திருங்கள்”
என்ற உகனா சற்று தூரம் சென்றான்.
தன் காலால் தரையை அமுக்கினான்.
என்ன ஆச்சரியம். பூமி பிளந்து ஒரு நீரோடை உருவாகி ஓட ஆரம்பித்தது. அதிலிருந்து ஒரு குவளையில் நீரை எடுத்துக் கொண்டு சென்று வித்யாபதியிடம் கொடுத்தான் உகனா.
வித்யாபதி நீரைக் குடித்தார்.. கங்கை ஜலமோ? தேவாமிர்தம் தோற்றது!
“உகனா! நீ யார் உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி.
“அட, இந்த நீர் இனிக்கிறது. அவ்வளவு தான்!” என்றான் உகனா.
“அதிருக்கட்டும். நீ யார்? உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி மீண்டும்.
சிவனார் மனம் கனிந்தார். உகனா சிவபிரான் தோற்றத்தில் காட்சி அளித்தார்.
வித்யாபதி திடுக்கிட்டார். “இதுவா நான் பூஜை செய்த லட்சணம்! சிவபிரானையா நான் வேலை வாங்கினேன்?”
விக்கி விக்கி அழுதார் வித்யாபதி.
“வித்யாபதி! கவலைப்படாதே! உனக்கு இன்னும் நான் வேலைக்காரனாக இருந்து சேவை செய்யத் தயார். நானாகத் தான் உன்னிடம் வந்தேன். உன்னுடைய அற்புதமான பாடல்களை நீ பாடி நான் கேட்க வந்தேன். உனக்கு தரிசனம் தந்தாயிற்று. நான் வருகிறேன்.”
“ஐயோ! அது முடியவே முடியாது. இது தான் பக்தியின் பலன். இது தான் எனது பூஜை பலித்ததற்கு அடையாளம். நீங்கள் என்னை விட்டுப் போகவே கூடாது.”
“சரி, வித்யாபதி! நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் உகனாவாகத் தான் இருப்பேன். நான் யார் என்பதை யாரிடமும் நீ சொல்லக் கூடாது.”
வித்யாபதி சம்மதித்தார்.
உகனா வித்யாபதியுடன் சேர்ந்து வாழ அவர் தனது பூஜையை மகிழ்ச்சியுடன் செய்து வந்தார்.
ஆனால் ஒரு நாள் வித்யாபதியின் மனைவி மிஸ்ரைன் ஏதோ ஒரு காரணத்தினால் கோபம் கொண்டு உகனாவை அடித்து விட்டாள்.
இதைப் பார்த்த வித்யாபதி துடிதுடித்து விட்டார்.
“ஆஹா! இவரை யார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நாம் ஆராதிக்கும் தெய்வத்தையே நீ அடித்து விட்டாயே” என்று உரக்கக் கத்திப் புலம்பினார்.
அவ்வளவு தான்! அந்தக் கணமே உகனா மறைந்து விட்டான்.
கொடுத்த வாக்கை மீறியதால் உகனாவை இழந்த வித்யாபதி பெரும் துக்கத்தை அடைந்தார்.
பாடினார்:
“உகனா! தும் பின் ரஹ்யோ ந ஜாய்!”
“உகனா நீ இல்லாமல் எப்படி வாழ்வது?”
அப்புறம் உகனாவைக் காணவே காணோம்!
வரலாறு கூறும் செய்தி இது தான்:
பின்னர் கங்கா நதி தனது போக்கை மாற்றிக் கொண்டு நான்கு மைல்கள் கடந்து வித்யாபதி வீட்டிற்கு வந்தது. அவரது பக்தியை உலகிற்கு உணர்த்தியது.
கங்கையையும் சிவபிரானையும் தன்னிடம் வரச் செய்த சிவ பக்தரான வித்யாபதி ஒரு அபூர்வ கவிஞர் தான்!
பீஹாரில் வாழ்ந்த கவிஞரான வித்யாபதி வாழ்ந்த காலம் 1352-1448.
இவர் 96 வயது வரை வாழ்ந்து நூற்றுக்கணக்கான பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். இவரது வாழ்க்கை சரிதம் பல அபூர்வ சம்பவங்களைக் கொண்டதாகும்
following programmes were broadcast on 13th July 2025 according to schedule
GNANAMAYAM 13 JULY 2025 BROADCAST PROGRAMMES
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .
***
Prayer by Mrs Jayanthi Sundar Team- Ms Madhumita
***
Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil
***
Alayam Arivom -Talk about Mrs Brhanayaki Sathyanarayanan
Topic- Chennai Villivakkam Temple
****
Talk by Prof Suryanarayanan M.Phil.
Former Principal, Saraswathi Narayanan College, Madurai
Topic- இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா”
****
Book Review: Gomathi Karthikeyan from Chennai
****
SPECIAL PROGRAMME:
Ms Renuka Sundaram Reciting her Tamil Poems.
She has been writing poems in Tamil from her childhood and now crossed 70, still writing poems; she has written poems on over 85 topics. She has translated short stories into English.
Previously worked as senior stenographer
Pitman shorthand translator and tutor
writing contents in web sites for past ten years
taking spoken English classes
***
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 13-7-2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
உலக இந்துமத செய்தி மடல்- லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் திருமதி திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்
சொற்பொழிவு தலைப்பு- சென்னை நகர வில்லிவாக்கம் திருத்தலமாகும்.
****
சொற்பொழிவு : பேராசிரியர் எஸ் சூரிய நாராயணன் M.Phil.
Former Principal, Saraswathi Narayanan College, Madurai
தலைப்பு —“இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா”
****
புஸ்தக விமர்சனம் ;
நூலை விமர்சிப்பவர் —சென்னை கோமதி கார்த்திகேயன்
BOOK REVIEW BY GOMATHI KARTHIKEYAN, CHENNAI
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
சென்னை ரேணுகா சுந்தரம் இயற்றிய கவிதைகள்
கவிஞர் திருமதி. ரேணுகா சுந்தரம் மிகவும் துடிப்பானவர். சுறுசுறுப்பானவர். எளிமையானவர்.; பழகுவதற்கு இனிமையானவர்.
இவரது பெற்றோர் இவருக்கு வாசிப்பின் அவசியத்தை ஏழு வயதிலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.
96 வயதான இவரது தந்தை ஒரு புல்லாங்குழல் கலைஞர். நல்ல தரமான மூங்கில்கள் கொண்டு, புல்லாங்குழல் செய்யும் வித்தையும் அறிந்தவர்.
கவிஞரும் தன் ஏழு வயதிலிருந்தே கவிதைகள் புனைய ஆரம்பித்துள்ளார்.
2012-ஆம் வருடம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களிடமிருந்து விருது பெற்றுள்ளார்.
பல்வேறு முகநூல் குழுக்களில் இணைந்து, கவிதைப் போட்டிகளில் பரிசுகள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
தமிழில் உள்ள சிறுகதைத் தொகுப்புகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஆங்கில திறன் வளர்பயிற்சி கொடுக்கின்றார்.
கவிஞரின் ‘எல்லாமே கவித்துவமே’ என்னும் இனிய கவிதைகள் கொண்ட தொகுப்பு முதல் முறையாக மொத்தமாக அச்சில் வெளி வரும் நான்கு கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாகும்.
இவரது கவிதைகள் எளிமையானவை.எல்லோரும் படித்து இன்புறும் வண்ணம் எளிய நடையில் அமைந்தவை.
எழுபத்துமூன்று வயதான இவர். முகநூலில் தனது பேரன் பேத்திகளின் பதின்ம வயதில் தான் தனது மொத்த கவிதைகளையும் அன்றாடம் பதிவேற்றி வந்துள்ளார். தற்போது எழுபத்து மூன்று வயதாகும் நிலையிலும் பன்முகத்துறைகளில் சிறப்புடன் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகிறார்.
86 தலைப்புகளின் கீழ் கவிதைகள் புனைந்துள்ளார். அனைத்தும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையானவை.
தெருவோர சிறுவர்கள் எழுதிய எளிய நாட்குறிப்பு வரிகள், தமிழாய் தமிழுக்காய், வான்மறை கூறும் வாழ்க்கை வழிமுறைகள், எது அழகு? ஆகிய தலைப்பின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.
******
Anchored by London Swaminathan from London and Kalyanji from India.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(collected from popular national dailies)
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 13-ம் தேதி 2025-ம் ஆண்டு .
முதலில் இந்தியச் செய்திகள்!
முதலில் இந்தியச் செய்தி
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 5-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் 38 நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆண்டு 3.5 லட்சத்துக்கும் அதிகமானார் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் நேரடி கவுண்ட்டர்களில் பதிவு செய்து செல்கிறார்கள்.
இதுவரை பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. புதிதாக 7 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட 5-வது குழு அமர்நாத் யாத்திரையை தொடங்கி உள்ளது. இதில் 1587 பெண்கள் மற்றும் 30 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு முழுவதும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும், யாத்ரீகர்கள் உற்சாகமாக பயணத்தை தொடங்கி உள்ளனர்.
****
தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம்
புத்த மதத் தலைவர் தலாய் லாமா, 90–வது பிறந்த நாளை சென்ற வாரம் கொண்டாடினார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஆன்மிக தலைவரான தலாய் லாமா, அங்கிருந்து வெளியேறி நம் நாட்டின் ஹிமாச்சலின் தரம்சாலாவில் வசித்து வருகிறார்.
.இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜு, ராஜிவ் ரஞ்சன் சிங், அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு, பள்ளி குழந்தைகள் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை கச்சேரி உள்ளிட்டவை நடந்தன. இதில் தலாய் லாமா பேசுகையில், ”மக்களின் அன்பு தான், அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் சேவை செய்ய என்னை துாண்டுகிறது,” என்றார்.
தலாய் லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தைவான் அதிபர் லாய் சிங்-டே உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தன் மறைவுக்கு பின், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் அதிகாரம் போட்ராங் அறக்கட்டளைக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதை கண்டித்த மத்திய அரசு, புதிய தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் போட்ராங் அறக்கட்டளைக்கு இருப்பதாக தெரிவித்தது.
தலாய் லாமா, பண்டைய ஞானத்திற்கும், நவீன உலகத்திற்கும் இடையிலான ஒரு உயிருள்ள பாலம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜு,புகழாரம் சூட்டினார். தலாய் லாமா இந்தியாவில் இருப்பதைக் கண்டு ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்வதாகவும் கிரண் ரிஜு தெரிவித்தார்.
*****
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு:
திருப்பதி தேவஸ்தானத்தில உதவி நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர் ராஜசேகர் பாபு. அண்மையில் ஹிந்து மதத்தில் இருந்து மாற்று மதத்திற்கு மாறினார். மதம் மாறிய அவர், வாரம்தோறும் சொந்த ஊரான புத்தூர் சென்று அங்குள்ள சர்ச்சில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்ததாக தெரிகிறது..
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபுவர்கள் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்த நிபந்தனையை ராஜசேகர் பாபு மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையையும் அவர்கள் தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர்.
அறிக்கையின் அடிப்படையில் ராஜசேகர் பாபுவை தேவஸ்தான நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா பிறப்பித்து இருக்கிறார்.
முன்னதாக, இதே காரணங்களுக்காக தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் 18 பேர் பணியிடம் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
****
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 7 காலை கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு, திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், கந்தபுரி ஆதீனம் வாமதேவ ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 157 அடி உயர ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.
கடலோரத்தில் அலைகடலென திரண்ட பக்தர்கள், முருகனுக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
ராஜகோபுரத்துக்கு மட்டும் தங்க குடத்தில் புனித நீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் HCL நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடிக்கு கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரமாண்ட யாகசாலையில் 71 ஓம குண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் செல்வம் சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் ராஜா சிவாச்சாரியார் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர்.
திருச்செந்துார் கோயில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் வழிபாடு நடத்தினார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் பங்கேற்றார். அவருக்கு, கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கருவறை விமானத்திற்கான மாலை, வஸ்திரம், புனித நீரை தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர், அவர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிருங்கேரி சுவாமிகளுக்கு திருச்செந்துார், ராமேஸ்வரம், பழநி கோயில்களில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் உரிமை உண்டு..சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய 2 கிலோ எடை வெள்ளி பாத்திரம் ஒன்றை அதிகாரிகளிடம் சுவாமிகள் வழங்கினார். மடத்திற்கு திரும்பிய சுவாமிகள் சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்தார்.
*****
மொழி பிரச்னையில் மிகுந்த கவனம் அவசியம்;
மோகன் பாகவத்
‘மொழி பிரச்னையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தலைவர், பொதுச்செயலருக்கு அடுத்த,
அதிகாரம் மிக்கவர்கள் மாநில அமைப்பாளர்கள்தான். ஆண்டுதோறும் மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான், ஆர்.எஸ்.எஸ்., செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து செயல்படுத்தப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டம், கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில், டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, தமிழகத்தை சேர்ந்த மாநில அமைப்பாளர்கள் பிரஷோபகுமார், ஆறுமுகம், இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல், சமூக சூழல், சந்திக்கும் சவால்கள், சாதித்தவை குறித்து, மாநில அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்,
ஆப்பரேஷன் சிந்துார், நீடிக்கும் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நுாற்றாண்டு விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணிகளை கிராமங்கள், வார்டுகள் அளவில் கொண்டுச் செல்ல, நாடெங்கும் 58,964 ஒன்றியங்கள், 44,055 நகரப் பகுதிகளில், ஹிந்து மாநாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, ஆர்.எஸ்.எஸ்., தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்தார்.
****
ஒரு சோகச் செய்தி
ஆசியாவின் மிகவும் வயதான யானை ‘வத்சலா’ மரணம்
ஆசியாவின் மிக வயதான யானையான ‘வத்சலா’, (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
வத்சலா யானைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பதிவில், “‘வத்சலாவின்’ நூற்றாண்டு கால தோழமை முடிவுக்கு வந்தது. ‘வத்சலா’ பன்னா புலிகள் காப்பகத்தில் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அது வெறும் யானை அல்ல; அவள் நம் காடுகளின் அமைதியான பாதுகாவலர், தலைமுறைகளுக்கு ஒரு தோழி, மத்தியப் பிரதேசத்தின் உணர்ச்சிகளின் சின்னம். புலிகள் காப்பகத்தின் இந்த அன்பான உறுப்பினர் தனது கண்களில் அனுபவங்களின் கடலையும், கைகளில் அரவணைப்பையும் சுமந்து வாழ்ந்தார். வத்சலா இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவளுடைய நினைவுகள் நம் மண்ணிலும் இதயங்களிலும் என்றென்றும் வாழும். ‘வத்சலா’வுக்கு பணிவான அஞ்சலிகள்!” என்று மத்திய பிரதேச முதலமைச்சர் கூறினார்.
*****
சுருக்கமான செய்திகள்
நாடு முழுதும் ஜூலை பத்தாம் தேதி குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது . மடாதிபதிகள் சாதுர்மாஸ்ய விரதத்தைத் துவங்கினார்கள் . அதாவது மழைக்காலத்தில் வெளியே செல்லக்கூடாதென்பதற்காக அவர்கள் ஒரே இடத்தில் முகாமிட்டு பக்கதர்களுக்கு அருளாசிகள் வழங்குவார்கள் அப்போது காலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து சம்பிரதாய தெய்வீகக்கலைகளைப் பரப்பி கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்குவது வழக்கம்
****
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சி சங்கர மடம், வியாசராஜ மடம், ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் ஆகிய பழம்பெரும் ஆசிரமங்களின் மடாதிபதிகள் மற்றும் அவர்களுடன் வருகை தரும் 4 பேருக்கு ஏழுமலையான் கோயிலில் வருடத்தில் ஒருநாள் சிறப்புத் தரிசன வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் வியாச ராஜமட பீடாதிபதி சரஸ்வதி தீர்த்த சுவாமியுடன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஏழுமலையானை வழிபட்டார்.
****
மகாவதார் நரசிம்மா படத்தின் டிரைலர் வைரல்!
Hombale Films தயாரித்துள்ள மகாவதாரம் நரசிம்மா படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக உள்ள Hombale Films கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட வெற்றி படங்களைத் தயாரித்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் மகாவதாரம் நரசிம்மா என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளது. அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஜூலை மாதம் 20 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags–World Hindu Tamil News, 13 7 2025, Latha, Vaiishnavi, Gnanamayam Broadcast