மகளுக்கு அக்பர் பாதுஷா கற்பித்த செக்ஸ் பாடம்! (Post No.3759)

Written by London swaminathan

 

Date: 26 March 2017

 

Time uploaded in London:- 18-23

 

Post No. 3759

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

1907 ஆம் ஆண்டு கொழும்பு புதிய சோணகத்தெரு, 20ம் நெம்பர் கிரகத்தில் ஸ்தாபித்திருக்கும் தமது வைத்திய ஜீவன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்ட கோஹ சாஸ்திரம் நான்காவது அத்தியாயத்தில் உள்ள கதை (மஹா ராஜ் கெங்காப் பிரசாத் அவர்களால் ஸம்ஸ்கிருத பாஷையிலிருந்து தமிழ் நடையில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது.

 

” மானிடர்களில் விவாக சம்பந்தம் பிரதாமனமாய் உண்டாயிருப்பது போலவே மிருகங்கள், பக்ஷிகள் முதலியவைகளிலும் விவாக சம்பந்தம் இயல்பாய் உண்டாகியிருக்கின்றதென அறியலாம்.

 

அன்றியும் மிருகங்கள் பஷிஜாதி இவைகளில் பதிவிரதா தர்மம் பொருந்தியவை அநேகமிருக்கின்றன. சுலபமாய்க் கவனிக்குமிடத்து, விலங்கினங்களில் சிங்கம், மான், முதலியவைகளும், பறவையினங்களில் புறா, அடைக்கலான் ஆகிய இவைகளின் சுபாவத்தினாலும் நாம் எளிதில் அறிந்துகொள்ளக்கூடும்.

 

1.விலங்கினங்களில் மிருகேந்திரன் எனப்படும் சிங்கம் தன் ஆயுள் காலத்தில் ஆண், பெண் ஆகிய இரண்டு குட்டிகளை மட்டும் ஈனுகின்றது

 

2.அன்றியும் மான்களில் பதிவிரதா தன்மை எவ்விதம் உண்டாகியிருக்கிறதெனில், அதாவது பூலோகத்தில் அனந்தம் தாமரைப் புஷ்பங்களுக்கும் கதிரவன் ஒருவன் தன் கிரணத்தால் அவைகளை மலரச் செய்கின்றார்போல, அநேக பெண் மான்களுக்கு ஒரே கலைமான் அவைகளோடு சுகித்த்ருந்து சந்தோஷமடையச் செய்கின்றது.

 

3.பறவையினங்களில் புறா, அடைக்கலான் முதலியவை தனிமையிலிராமல் ஜோடி ஜோடியாய்க் கூடிக்குலாவியிருப்பதைப் பார்க்கலாம். இவைகள் தமது கலைகளைத் தவிர வேறு ஆண் பறவைகளோடு சம்பந்தப்படுவதில்லை இவ்வண்ணம் பக்ஷி ஜாதிகளில் பதிவிரதாத் தனமை யுண்டென்பதைச் சில கதைப் புத்தகங்களால் அநேகர் அறிந்திருக்கலாம். அவ்வாறான கதைகளை இங்கு விரித்துரைத்தல் அவசியமன்று.

  1. விஷ ஜந்துக்களில் நாக ஸர்ப்பத்திற்கு பதிவிரதாத் தன்மையுண்டென்பது புலப்படக்கூடியதே.

ஆனால் மிருகங்கள், பக்ஷிகள் முதலிய ஜீவஜெந்துக்களிற் சில, பதிவிரதாத் தனமை யுடையவைகளாய் இருப்பதுபோல், அவைகளில் சில, விபசாரத்தன்மை யுள்ளவனவாயுமிருக்கின்றன.

 

அதாவது ஆடு, கோழி, ஓந்தி முதலியவைகளே விபசாரத்துக்கு அத்தாக்ஷியாகின்றன.

1.ஓர் பெண் நாயானது தன்னோடு அநேக நாய்கள் சம்பந்தப் பட்டாலும், அவைகளுக்கிணங்கி இடங்கொடுக்கின்றதல்லவா?

2.அப்படியே ஆடுகளில் விபசாரத் தன்மையுண்டு.

அஜெய – புத்திரம் – வம்ஸ – சிரோன்மணி, கபடன் – ராக்கது – நிஜகுலம் ” என்ற சம்ஸ்கிருத ஸ்லோகத்தின்படி, ஆடானது தன் வம்சத்தில் தாய் என்றும் பிள்ளை என்றும் விகற்பமின்றி ஏகசமமாய் ஒன்றையொன்று கூடி சுகிக்கும் தன்மையுடையதாயிருக்கின்றது.

 

3.ஓந்திகளிலும் கோழிகளைப்போல் விபசாரத் தன்மையுண்டு.

 

4.பெட்டைக்  கோழியானது சேவலுடன் கூடுவதற்கு விருப்பமின்றிப் பிர த்யேகமாய் மேய்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் சேவலானது அதைப் பின்பற்றித் துரத்திச் சென்று பலவந்தமாய்க் கூடிச் சுகிப்பதுமுண்டு. இதனைகண்ட மற்றொரு சேவல் முன்கூடிச் சுகித்த சேவலைத் துரத்திவிடுவது வழக்கம்.

 

இது காரணம் பற்றியே மேற்கூறிய ஜீவராசிகளில் பதிவிரதாத் தன்மையும் விபசாரத் தன்மையும் இருக்கின்றதெனத் தெரிந்து கொள்ளலாம்.

டில்லி பாதுஷா மகள் கதை

 

சிலகாலத்திற்குமுன் டில்லிநகரத்து அக்பர் பாதுஷா என்னும் சக்ரவர்த்தியின்  குமாரத்தி ஒரு நாள் அரண்மனையின் வெளிப்புறங்களில் உல்லாசமாய் உலாவிக்கொண்டிருக்கும் சமயத்தில் அங்கு மேய்ந்து திரிந்த கோழிகள் செய்யும் சந்தான சந்தோஷ (SEX) கேளிக் கையைக் கண்டதின்பேரில் அவைகளின் விபரீதச் செய்கையைக் கவனித்து, தான் எப்படி விவாகஞ் செய்துகொள்வதென மன அருவருப்புடன் வியாகூலமடைந்து விவாக சம்பந்தத்தில் விருப்பமற்றவளானாள்.

 

இவ்வண்ணாம் ராஜ குமாரத்தி தனக்கு விவாகம் செய்தல்வேண்டாமென மறுத்து மனவெருப்புற்றிருந்ததை அறிந்த பாதுஷாவின்  மந்திரியாகிய பீர்வல் என்பவர் அந்த ராஜகுமாரத்தி வசித்திருக்கும் அரண்மனையில் சில புறாக்களைக் கொண்டுபோய் வைத்து வளர்க்கும் படி ஆக்ஞாபித்திருந்தார் (கட்டளை இட்டிருந்தார்).

 

இவ்வாறு புறாவினங்கள்  வளர்ந்து அவை ஜோடி ஜோடியாய்த் திரிந்திருந்து தங்கள் பேடைகளுடன் வெகு சரச சல்லாபமாய்ச் சந்தான சந்தோஷம் செய்வதையும், பேடைகள் இட்ட முட்டைகளை ஆண்புறாக்களும் கூடவிருந்து அவைகளை மாறி மாறி அடைகாத்துக் காப்பாற்றி வரும் தன்மை யையும், புறாக்கள் ஜோடி ஜோடியாய்ச் சேர்ந்து இடுகின்ற இருமுட்டைகளினின்று ஆண் ஒன்று பெண் ஒன்றுமாய்க் குஞ்சுகள் உற்பத்தியாகி யிருப்பதையும் பார்த்த பாதுஷாவின்  குமாரத்தி வெகு ஆச்சரியத்துட ன் பேரானந்தங்கொண்டு தானும் மணஞ்சூட்டிக்கொள்ள அபேட்சையுள்ளவளானாள்.

 

((1907 ஆம் ஆண்டு புத்தகத்திலிருந்து.))

 

–Subham–

 

 

 

லண்டன் ‘பூங்கா’ பார்க்க வாறீங்களா? (Post No.3749)

Written by London swaminathan

 

Date: 23 March 2017

 

Time uploaded in London:- 21-11

 

Post No. 3749

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

லண்டனுக்குப் போய்விட்டு வந்தேன் என்று யாராவது சொன்னால், உடனே அந்த நகரைப் பற்றி அறிந்தவர்கள், “ஓ! பக்கிங்ஹாம் பாலஸ் (அரண்மனை) பார்த்தீர்களா? பிக் பென் (BIG BEN), டவர் பிரிட்ஜ் பார்த்தீர்களா (TOWER BRIDGE), டவர் மியூசியத்துக்குப் போய் கோஹினூர்  வைரம் உள்பட மஹாராணியாரின் நகைகளைப் பார்த்தீர்களா?  மெழுகு பொம்மை (MADAM TUSSAUDS) மியூசியம், சயன்ஸ் மியூசியம்,  விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், இயற்கை வரலாற்று மியூசியம் முதலிய மியூசியங்களுக்குப் போனீர்களா? லண்டன் ஐ- யில் ஏறினீர்களா? டிரஃபால்கர் (TRAFALGAR SQUARE) ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ் (PICCADILLY CIRCUS) வழியாகச் சென்றீர்களா? என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்.இங்குள்ள புகழ்பெற்ற, பெரிய ஐந்து பூங்காக்களைப் (Parks) பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

 

அடுத்த முறை லண்டனுக்கு வந்தீர்களானால் இந்த 7 பூங்கா (PARKS) க்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.

 

லண்டனுக்கு வந்த எனது அமெரிக்க நண்பர் ஒருவர் விமானத்திலிருந்து லண்டனைப் பார்த்துவிட்டு அசந்தே போனார். நன் ஏதோ எங்கள் அமெரிக்க நகரங்கள் போல வானளாவிய கட்டிடங்களுடன் கான்க்ரீட் ஜங்கிள் (CONCRETE JUNGL)E போல இருக்கும் என்று நினைத்தேன். பச்சைப் பசேல் என்றல்லவா இருக்கிறது? என்றார்.

 

நான் சொன்னேன்: “நல்ல வேளையாக எங்கள் லண்டனில் திராவிட அரசியல்வாதிகள் இல்லை. எல்லா நிலங்களையும், பூங்காக்களையும் பினாமி பெயரில் முக்காத் துட்டுக்குப் பட்டா போட்டு, ஆட்டையைப் போடும் அசிங்கங்கள் இங்கு இல்லை. வெள்ளைக்காரன் கொள்ளை அடிப்பான்; உலகத்தையே; ஆனால் தனக்குத் தானே யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல புறச் சூழலைக் கெடுக்க மாட்டார்கள் என்றேன்.

 

உண்மையிலேயே இது வியப்பான விஷயம்தான். தெருப்பெயர்களை நூற்றாண்டுக் கணக்கில் மாற்றவில்லை. பூங்காக்களை அழிக்கவில்லை. லண்டனில் பூங்கா இல்லாத பேட்டையே இல்லை. புகழ்பெற்ற 7 பூங்காக்கள் அல்லது தோட்டங்களை மட்டும் வரிசைப் படுத்துகிறேன்:

Speakers’ Corner, Hyde Park

1.ஹைட் பார்க் (Hyde Park)

இதன் சிறப்பு என்ன? இங்கே சொற்பொழிவாளர் மூலை (Speakers’ Corner) என்று ஒரு பகுதி இருக்கிரது அங்கு நின்று கொண்டு மஹாராணி, மஹாராஜ உள்பட யாரையும் வசை பாடலாம், குறைகூறலாம் என்று ஒரு வழக்கம் இருக்கிறது. அதாவது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், மான நஷ்ட, அவதூறு வழக்குப் போட மாட்டார்கள் என்று ஒரு ஐதீகம் உளது. இதே பூங்காவில் இளவரசி (Dian, Princess of Wales Memorial) டயானா நினைவுச் சின்னத்தையும் காணலாம். 350 ஏக்கர் பரப்புள்ள இந்தப் பூங்கா லண்டனின் இதயப் பகுதியில் பல ரயில் நிலையங்களைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது. மூங்கில் பாதை (Bamboo Walkway) வழியாக சிறுவர்கள் ஓடி விளையாடலாம்.

 

நாட்டின் தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாளில் 21 முறை பீரங்கிக் குண்டு (Royal Gun salutes) முழக்கம் அளிப்பதும் இவ்விடத்தில்தான். எடுத்துக்காட்டாக மஹாராணியாரின் பிறந்த நாள் (ஏப்ரல் 21), அவர் பட்டமேற்ற நாள் (ஜூன் 2) என்று பல தினங்கள்!

 

இந்தப் பூங்காவுக்குப் பக்கத்திலுள்ள ரயில் நிலையங்கள்:-

மார்பிள் ஆர்ச் Marble Arch, ஹைட் பார்க் கார்னர் Hydepark Corner, நைட்ஸ்பிரிட்ஜ் Knightsbridge

 

2.க்ரீன் பார்க் (Green Park)

இதன் பரப்பு 40 ஏக்கர். மஹாராணியாரின் அரண்மனைக்கு எதிரே உள்ளது (Green Park) க்ரீன் பார்க் ஸ்டேஷனில் இறங்கினால், பூங்காவின் குறுக்கே நடந்து போய் ராணியாரைத் தரிசிக்கலாம். அல்லது அவரைப் பார்க்க வந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்கலாம். அவ்வப்பொழுது அணிவகுக்கும் சிப் பாய்களையும் பார்க்கலாம். உலகப் போர் தொடர்பான பல நினைவுச் சின்னங்களையும் காணலாம்.

Green Park

அருகிலுள்ள ரயில் நிலையம்: க்ரீன் பார்க் Green Park

 

3.கென்ஸிங்டன் தோட்டம் (Kensington Gardens)

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் இங்கு உண்டு. பீட்டர் பானின் வெண்கலச் சிலை (Bronze Statue of Peter Pan), எல்பின் ஓக் (ELFIN OAK STUMP )மரத்தின் (அடிப்பகுதி, டயானா விளையாட்டுத் திடல், பெரிய கொள்ளையர்(PIRATE SHIP) கப்பலின் மாதிரி முதலியன சிறுவர்களைக் கவர்ந்திழுக்கும்.

அருகிலுள்ள ரயில் நிலயம்: குஃயீன்ஸ்வே Queensway

4.செயின்ட் ஜேம்ஸ் பூங்கா St Jame’s Park

இந்தப் பூங்காவைச் சுற்றித்தான் முக்கியமான இடங்களான பக்கிங்ஹாம் அரண்மனை, பிக் பென் கடிகாரக் கூண்டு முதலியன உள்ளன. முக்கியமான அணிவகுப்புகள் இங்கே நடைபெறும் 1664 ஆண்டு முதல் இங்கு பெலிகன் நாரைகள் வசிக்கின்றன. ஒவ்வொரு நாளும்cமதியம் இரண்டரை மணிக்கு அவைகளுக்கு மீன் இரை கொடுப்பதைக் காண ஒரு கூட்டம் காத்து நிற்கும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் –வெஸ்ட்மின்ஸ்டர் Westminster, செய்ன்ட் ஜேம்ஸ் பார்க் St Jame’s Park

 St Jame’s Park

5.ரீஜெண்ட்ஸ் பூங்கா Regent’s Park

இங்குதான் லண்டன் மிருகக்காட்சி (London Zoo)சாலை இருக்கிறது. இதைத் தவிர ரோஜாத் (Rose Gardens) தோட்டம், பறவைகள்  நடைப் பகுதி (Birds Walk) எனப் பல கவர்ச்சிகள் இருக்கின்றன. அன்னம், நாரை, வாத்து, குள்ள வாத்து என நீர்ப்பறவைகள் வாழும் இடம் இது. சிறுவர்களுக்கு மன மகிழ்ச்சி தரும் பூங்கா.

 

அருகிலுள்ள ரயில் நிலையம்—ரீஜென் ட் ஸ் பார்க்( Regent’s Park)

Regents Park

6.ரிச்மண்ட் பூங்கா (Richmond Park)

லண்டனின் தென் மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தப் பூங்கா மான்களுக்கு — குறிப்பாக சிவப்பு நிற கலை மான்களுக்குப் (Red and fallow deer) பெயர் பெற்ற இடம். எப்போதும் மான்கள் கூட்டம் கூட்டமாகத் திரியும். இங்குள்ள இசபெல்லா தோட்டத்தில் வெளிநாட்டுத் தாவரங்களை வளர்க்கின்றனர்.

 

அருகிலுள்ள ரயில் நிலையம் –ரிச்மண்ட் (Richmond)

Richmond Park

7.க்ரீனிச் பூங்கா (Greenwich Park)

அரச வம்சத்தினரின் பெயரிலுள்ள பூங்காக்களில் இதுவே பழமையானது 1427 ஆம் ஆண்டு முதல் இதன் வரலாறு எழுதப்பட்டுளது. தேசிய கடல் மியூசியம் (National Maritime Museum), க்ரீனிச் எல்லைக் கோடு மியூசியம், வானாராய்ச்சிக் (Royal Observatory) கூடம், உலகத்தைன் நேரத்தைக் கணக்கிட உருவாக்கப்பட்ட கற்பனைக் கோடு (Greenwich Meridian) முதலியவற்றைக் காண ஏராளமானோர் வருகை தரும் பூங்கா. மான்கள், ஆந்தை, வெவால்கள் என்று பலவகை உயிரினங்களின் அடைக்கலம் இது.

Greenwich Park

அருகிலுள்ள ரயில் நிலையம் –க்ரீனிச்; தேம்ஸ் நதிப் படகு மூலமும் செல்லலாம்.

 

இதுதவிர உலகப் புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவான கியூ (Royal Botanical Gardens at Kew) கார்ட ன் ஸ் இருக்கிறது. அது தாவரவியல் பூங்கா என்னும் வகையில் வந்துவிடும்.

 

ராயல்பார்க்ஸ் என்ற பெயரில் வெப்சைட் (www.royalparks.org.uk )இருக்கிறது. அதில் மேலும் பல தகவல்களை அறியலாம். பூங்காக்களுக்குள் நுழைய கட்டணம் கிடையாது. ஆனால் அவகளில் இடம்பெற்ற மியூசியங்களுக்குக் கட்டணம் கொடுக்கவேண்டும்.

 

–Subham–

 

வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684)

லண்டனில் கிடைத்த ரோமானிய கழுகு சிலை

 

Written by London swaminathan

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-10-35 am

 

Post No. 3684

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திலும் ரிக்வேதத்திலும் கழுகு, பருந்து, கருடன், ராஜாளி என்ற பறவைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிசய விஷயங்கள் — அதிசய ஒற்றுமைகள் — தெரிய வருகின்றன.

 

அவை என்ன?

1.இரண்டு கலாசாரத்திலும் இந்த வகைப் பறவைகள், இறைவனுடனும் அரசனுடனும் சம்பந்தப் பட்டுள்ளன.

2.இரண்டு கலாசாரங்களிலும் மரணம், மரணமிலாப் பெருவாழ்வு ஆகியவற்றுடன் இப்பறவைகள் சம்பந்தப் பட்டுள்ளன.

3.இரண்டு கலாசாரங்களிலும், சூரியனுடன் உடனுள்ள தொடர்பு காட்டப் பட்டுள்ளன.

4.மிகப்பழைய குறிப்புகள் உள்ளன.

கருட வாஹனம்

முதலில் ரிக் வேதத்தைக் காண்போம்:

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள்) இருக்கின்றன

 

கீழ்கண்ட இடங்களில் ஸ்யேன, சுபர்ணா முதலிய சொற்களால் இப்பறவைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்திரன், வருணன் போல பருந்தையும் ஒரு தேவதையாக வைத்து ஒரு துதி உள்ளது (4-27).

ஏன் இப்படி பருந்து அல்லது கருடன் மீது பாடினார்கள் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது!

 

மஹா சுபர்ண என்று சதபத பிராமணத்தில் சொல்ல்ப்படுகிறது (12-2,3,7)

சகன் என்று ஒரு பறவை குறிப்பிடப்படுகிறது; இது பற்றி யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை; பருந்தோ, கழுகோ என்று சந்தேகத்துடன் எழுதுவர்! (தைத்ரீய சம்ஹிதை 3-2,1,1)

 

சுபர்ண

இதற்கு இரண்டு பொருள் உண்டு; நல்ல இறக்கை உடைய; நல்ல இலை உடைய.

 

இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து போன்ற பறவை என்று ரிக்வேத உரைகாரர் எழுதுவர்.(1-164-20; 2-42-2; 4-26-4;8-100-8;9-48-3

 

ஸ்யேன என்ற சொல்லாலும் இப்பறவையை வேதம் குறிப்பிடும். சுபர்ணாவின் அரசனே கருடன் என்று அதர்வண வேதம் சொல்லும்; புராணங்களில் கருடனே விஷ்ணுவின் வாஹனமாக அமைந்தது.

கழுகு  வடிவ யாக குண்டம்

விநோதச் செய்தி

 

அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் தனித்தனியே பிரிக்கும் சக்தி படைத்தது என்று காளிதாசன் சொன்னதை தமிழ்ப் புலவர்களும் சொல்லுவது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். ஜைமினீய பிராமணம் என்னும் நூலில், கிரவுஞ்சப் பறவை போல கழுகும் தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி படைத்தது என்று எழுதியுள்ளதாக (2-438) கீத்தும் மக்டொனால்டும் எழுதிய வேத இன்டெக்ஸ் கூறுகிறது

 

இது தவறான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் சுபர்ண என்ற சொல்லுக்கு அன்னம் என்ற பொருளும் உண்டு என்று விஷ்ணு சஹஸ்ரநாம உரை சொல்லும் (பக்கம் 88, சஹஸ்ரநாம உரை, எழுதியவர் அண்ணா, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4).

விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று “சுபர்ண” என்று சஹஸ்ரநாமத்தில்  வருகிறது.

 

 

பேரறிவு பேரின்பம் ஆகிய இரண்டு அழகிய இறக்கைகளை உடையவர் என்று பட்ட பாஸ்கரர் உரையில் இருக்கிறது. அவர் இது விஷ்ணுவின் ஹம்சாவதாரம் பற்றிய குறிப்பு என்பார்.

த்வா ஸுபர்ணா ஸயுஜா, ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷ்வஜாதே- முண்டகோபநிஷத் 3-1-1.

 

இதிலிருந்து பறவை என்ற பொதுப் பொருளிலும் கழுகு, கருடன், அன்னம் (ஹம்சம்) என்ற சிறப்புப் பொருளிலும் இச்சொல் கையாளப்ப ட்டது தெரிகிறது.

 

விட்டுணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு இடங்களில் சுபர்ணா என்ற சொல் விட்டுணுவைக் குறிக்கிறது. மற்றொரு இடத்தில் “வேதமாகிய இலைகளோடு கூடிய சம்சார மரத்தின்” என்று ஆதி சங்கரர் உரை சொல்லும். இதற்கு அவர் கீதையை மேற்கோள் காட்டுவார் (கீதை 15-1)

கழுகு  வடிவ யாக குண்டம்

சிந்து சமவெளியில்

 

சிந்து சமவெளியில் கருடன் போல முத்திரை கிடைத்தது.

 

இறந்துபோனவர் வீட்டில் அந்த ஆன்மா கடைத் தேறுவதற்காக 13 நாட்களுக்குள் ஒரு நாள் கருட புராணத்தைப் படிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. கருடன் அமிர்தம் எடுத்து வந்த கதை, மரகதம், மாணிக்கத்தை எடுக்கும் முறை, கரிகால் சோழன் முதலிய அரசர்கள் பருந்து வடிவில் யாக குண்டம் வைத்து, ராஜசூய யக்ஞம் முதலியன செய்ததை முன்னரே எழுதிவிட்டேன்.

 

ரோமானிய மன்னர்களின் சடலத்தைத் தகனம் செய்யும்போது சிதைத்தீக்கு மேலே ஒரு கழுகைப் பறக்கவிடுவர். மன்னரின் ஆவி சொர்க்கத்துக்கு/ வானுலகத்துக்குச் செல்லுகிறது என்பது இதன் பொருள். இது இந்துக்களின் நம்பிக்கை. மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறதுவிடும் என்பது இந்துமத நூல்களில் காணப்படுகிறது. தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் இதே கருத்தைக் காண்க:-

 

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு (338)

 

அழாஅம் உறைதலும் உரியம் – பராரை

அலங்கல் அம் சினைக் குடம்பைப் புல்லெனப்

புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு (கல்லாடனார், அகம்.113)

கீதை 2-22 இதே கருத்தை வேறு உவமையுடன் (நைந்த உடை) சொல்லும்

 

எகிப்தில் கழுகு/பருந்து

 

1.ஹோரஸ் HORUS (சூரிய என்பதன் திரிபுச் சொல்) என்ற இறைவனின் வடிவம்தாம் மன்னன் என்று சொல்லும் எகிப்திய கல்வெட்டுகளும் காகிதங்களும் அந்த ஹோரஸை ஒரு பருந்தாகவே FALCON காட்டியுள்ளன.

2.கி.மு.3000 முதல் வழிபடப்படும் ஹோரஸ் என்னும் சூரிய தெய்வத்தை இந்துக்கள் கருட வாஹனத்தைச் சித்தரிப்பதுபோல, பருந்து முகத்துடனும் , மனித உடலுடனுமே வரைவர்.

3.சில நேரங்களில் சூரியன் நடுவிலும் இரண்டு (SUN DISC WITH WINGS ) இறக்கைகள் பக்கவாட்டிலும் உள்ளது போலும் வரைவர்.

4.இந்தப் பறவையின் கண்கள் நல்ல தாயத்து என்று வரைந்து அதையும் அணிந்தார்கள். இந்துக்கள் கருடனைக் கண்டால் சுப சகுனம் என்பது போல!

உலகிலுள்ள பல பண்பாடுகளில் கழுகு, கருடன் பற்றியுள்ள நம்பிக்கைகள் (மாயன் Mayan, காதிக், Gothic, மெக்ஸிகோ Mexican ) இந்துமத நம்பிக்கைகளின் பிரதிபலிப்பே!

 

முடிவுரை:-

 

ரிக் வேதத்தின் காலம் கி.மு 4500 முதல் 6000 வரை என்று ஜெ ர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், இந்திய அறிஞர் பாலகங்காதர திலகரும் ரிக் வேதத்திலுள்ள வானியல் குறிப்புக்ளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். இதுவரை யாரும் அது தவறு என்று சொல்ல முடியவில்லை. நாமும் அந்த தேதியை ஒப்புக் கொண்டால் உலகில் கருடன்/கழுகு பற்றிப் பாடியவர்களில் நாமே முதல்வர் என்பதில் ஐயமில்லை.

 

அஸீரிய கழுகு தேவதை

கண்டபேரண்ட பட்சி (இரட்டைக் கழுகு) துருக்கி

 

–subam–

குழந்தையும் குட்டி நாயும் குணத்தால் ஒன்று! அறிவியல் தகவல்!! (Post No.3645)

Written by London swaminathan

 

Date: 17 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 8-47 am

 

Post No. 3645

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று –

என்பது கவிஞர் கண்னதாசனின் பழைய திரைப் படப் பாடல்.

 

 

குழந்தையும் குட்டி நாயும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்துவிடா மனத்தால் என்றும்

என்பது லண்டன் சுவாமிநாதனின் புதிய பாடல். ஏன்?

 

புதிய விஞ்ஞானக் கட்டுரை நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் வெளியானதால் உதயமானது புதிய பாடல்!

 

ஒரு வயதான குழந்தைகளை வைத்து முன்னர் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. யார் மற்றவர்களுக்கு உதவவில்லையோ அத்தகைய கெட்டவர்களை குழந்தைகள் புறக்கணிப்பது அதில் உறுதியானது. அதாவது ஒரு வயதாகும் போது, பெற்றோர்கள் சொல்லித் தராமலேயே, குழந்தைகள் நல்லதையும் கெட்டதையும் அறிந்து தார்மீக முடிவு எடுப்பது தெரியவந்தது.

 

பிராணிகளுக்கும் இததகைய அறிவு உண்டா என்று ஆராய க்யோடோ பல்கலைக் கழக டேவிட் ஆண்டர்சன்  ( Comparative Psychologist David Anderson of Kyoto University) ஒரு ஆய்வு நடத்தினார். அதன் முடிவுகளை நியூ சைன்டிஸ்ட் (New Scientist) பத்திரிக்கை வெளியிட்டது. அதன் சுருக்கம் வருமாறு:–

 

ஒரு பெட்டியில் ஒரு பொம்மையை வைத்தனர். அந்தப் பெட்டியை இருவர் தனித்தனியே திறப்பதை கபுசின் வகைக் குரங்குகள் (capuchin monkeys) பார்த்தன. இருவரும் குரங்குகளுக்கு உணவு கொடுத்த போது வேறுபாடின்றி இருவர் கையிலிருந்தும் சாப்பிட்டன.

 

மற்றொரு சோதனையில் ஒருவர் பெட்டியில் இருக்கும் பொம்மையை எடுக்கக் கஷ்டப்படுவது போல நடித்தார். அவருக்கு மற்றொருவர் உதவவில்லை; இன்னொரு சோதனையில் அவருக்கு பக்கத்திருந்தவர் உதவுகிறார். இருவரும் குரங்குகளுக்கு உணவு கொடுத்தபோது, யார் உதவவில்லையோ அவர் கையிலிருந்து உணவு சாப்பிட குரங்குகள் மறுத்துவிட்டன. அதாவது மற்றவருக்கு உதவாத கெட்டவர்களை அவை அடையாளம் கண்டுகொண்டதோடு வெறுத்தன!

 

இதே போல பந்துகளை வைத்து நாய்களைச் சோதித்தனர். மூன்று பேர் பந்து விளையாடுகையில் யார் பந்துகளை ஒழுங்காகப் போட்டனரோ அவர்களிடம் உணவு சாப்பிட்டடன. யார் ஒருவர் பந்தைப் போடாமல் ஏமாற்றினாரோ அவர் கையிலிருந்து உணவு சாப்பிட வரவில்லை. அவைகளுக்கும் உதவுபவர், உதவாதவர் யார் என்பதைத் தெரிந்துகொண்டு நல்லவரைத் தேர்ந்தெடுக்கும் சக்தி இருப்பது தெரியவந்தது.

 

 

காடுகளிலும் கூட எந்த குரங்கு உதவுகிறதோ அவைகளையே மற்ற மிருகங்கள் பின்பற்றுகின்றன. அற உணர்வின் தோற்றம் (Origin of Morality) பற்றி ஆராஅய்ந்த (Frans de Waal of Emory University, Georgia) அறிஞர் இதை முன்னரே தெரிவித்தார். மனிதர்களைப் பார்த்து அவைகள் கற்றுக் கொள்கின்றன என்று.

 

ஒப்புநோக்கு உள்ளவியல் நிபுணரான ஆண்டர்சன் சொல்கிறார்:-

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டால் அவைகள் முகம் சுழிப்பது இதிருந்து புரிகிறது”

 

ஆகையால் தோழர்களே!

நீங்கள் நாய்கள் வளர்க்கிறீர்களோ, குரங்குகள் வளர்க்கிறீர்களோ  , அல்லது குழந்தைகளைத்தான் வளர்க்கிறீர்களோ அவைகளுக்கு முன்னால் எதையும் அசிங்கமாகச் செய்துவிடாதீர்கள்!

 

நான் லண்டனில் கூட ரயில்களில் பல குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அவைகள் பேசும் பேச்சு எனக்கு வியப்பூட்டும். வீட்டில் அப்பா, அம்மா என்ன பேசுகிறார்களோ அதை அப்படியே அவை திருப்பிச் சொல்லுகின்றன!

Journal reference: Neuroscience & Biobehavioral ReviewsDOI: 10.1016/j.neubiorev.2017.01.003

 

சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா? (Post 3634)

Written by S NAGARAJAN

 

Date: 14 February 2017

 

Time uploaded in London:-  6-20 am

 

 

Post No.3634

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை                                                            

 

சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா?

.நாகராஜன்

t

“14179 அடி உயரமுள்ள மவுண்ட் சாஸ்தா மிகப் புனிதமான மலையாகக் கருதப்படுகிறது.”

                                –    மவுண்ட் சாஸ்தா பற்றிய இணையதளத் தகவல்

   

 

     நாம் வாழும் இந்த பூமியில் சாஸ்தா மலையின் அடியில் உள்ள ஒரு பிரம்மாண்டமான நகரில் பிரபஞ்ச சக்தி இருக்கிறது என்றும் அங்கு வாழும் மர்ம சித்தர்கள் மனித குலத்திற்குத் தங்களின் அபூர்வ ஆற்றலின்  மூலம் உதவி புரிந்து வருகின்றனர் என்றும் சொன்னால் அதிசயமாகத் தானே இருக்கிறது.

 

         அமெரிக்காவில் வடக்கு  கலிபோர்னியாவில் உள்ள இந்த மவுண்ட் சாஸ்தா காலம் காலமாக மிகப் புனிதமான ஒன்றாகவும் பல மர்ம சித்தர்கள் வசிக்கும் இடமாகவும் கருதப்பட்டு வருகிறது. இங்குள்ள விண்டு என்ற பழங்குடியினர் சாஸ்தா பற்றிய பல அதிசய சம்பவங்களைக் கூறுகின்றனர். பழங்காலத் தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்ட லெமூரியா அனைவருக்கும் நினைவிருக்கும்.

 

 

     இந்த மலையில் லெமூரியன்களைப் பார்ப்பதாக பலரும் சொல்கின்றனர். அவர்கள் ஏழு அடி உயரம் இருப்பதாகவும் தங்கக் கட்டிகளை கையில் ஏந்திச் செல்வதாகவும் அந்தப் பழங்குடி மக்கள் கூறுகின்றனர். மலையின் உள்ளே தங்கம் கட்டி கட்டியாக இருப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

 

 

     வழிவழியாக வழங்கி வரும் செய்திகளை ஆராயத் துணிந்தார் ஒரு அமெரிக்கர். அவர் பெயர் கை வாரன்  பெல்லார்ட்.(Guy Warren Ballard) ஆயிரத்தி தொள்ளாயிரத்து  முப்பதாம் வருடம் ஆகஸ்ட் மாதம் சாஸ்தா மலையை ஆராய அந்த மலையின் உட்பகுதிகளில் காடுகளின் உள்ளே அவர் சென்றார். பசிபிக் பெருங்கடலிலிருந்து வந்த ஒரு படகு கரையில் ஒதுங்கிப் பின்னர் பறக்க ஆரம்பித்து சாஸ்தா மலையில் இறங்கியதைக் கண்டதாக அவர் கூறினார்.

மலையின் காட்டுப் பகுதியில் ஒரு நீரூற்று அருகே பெல்லார்ட் சென்ற போது தாகம் எடுக்கவே சிறிது நீரை எடுத்துப் பருகினார். உடனே மின்சாரம் பாய்வது போல அபரிமிதமான சக்தி அவர் உடலில் பாய்ந்தது.

 

 

அப்போது இருபது வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் பெல்லார்ட் முன் தோன்றினார். 1784இல் இறந்த புனிதர் ஜெர்மெய்ன் தான் அவர் என்பதை அறிந்து  கொண்ட பெல்லார்ட் அடிக்கடி அவரைச் சந்திக்க ஆரம்பித்தார். ஐ ஆம் ஃபவுண்டேஷன் (I Am Foundation) என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து மலை பற்றியும் அங்கு வாழும் சித்தர்களைப் பற்றியும் ஏராளமான இரகசியங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் கூறிய செய்திகள் சுவாரஸ்யமானவை. தலையில் கருவி ஒன்றை மாட்டிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு உலகில் எந்த மூலையில் யார் பேசினாலும் கேட்க நினைத்தால் கேட்க  முடியுமாம்!

 

 

 

புனிதர் ஜெர்மெய்ன் பெல்லார்டிடம் ஒரு கோப்பை திரவம் ஒன்றைக் குடித்து குடிக்கச் சொல்ல அதைக் குடித்த பெல்லார்ட் உடலை வீட்டு நீங்கி ககன மார்க்கத்தில் உலவ ஆரம்பித்தாராம். அந்தப் புனிதர் வான மார்க்கமாக அவரைப் ப்ல இடங்களுக்கும் அழைத்துச் சென்றாராம். டெக்டான் தொடர் வரிசையில் உள்ள ஒரு மலைக் குகையில் சீலிடப்பட்ட ஒரு குகை இருக்கிறதாம். அதன் உள்ளே சென்றால் ஒரு ந்கரம் இருக்கிறதாம். அங்கு விசாலமான ஹால்கள், பாதாள அறைகள் ஏராளம் உள்ளதாம். ஒவ்வொரு சுவரிலும் அனைத்தையும் பார்க்கும் கண்கள்” (அமெரிக்க ஒரு டாலரில் உள்ள கண்கள்) வரையப்பட்டிருக்கிறதாம்.

 

12 அடி விட்டமுள்ள ஒரு இயந்திரத்தை அங்கு பார்த்த பெல்லார்ட் அதில் தான் அங்குள்ள சித்தர்கள் பெருமளவு அளப்பரிய ஆற்றலைச் சேமித்து வைத்து அங்கிருந்தே மனித குலத்தை உயர்த்த உதவி செய்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டாராம்.

 

மிகப் பெரும் பிரபஞ்ச சித்தர்கள் என்று அவர்களைக் குறிப்பிடும் பெல்லார்ட் அவர்கள் மூலம் அந்த சக்தி மனித உடலில் உள்ள ஏழு ஆதாரங்களுக்கு வருவதாகத் தெரிந்து கொண்டார். தாவரங்களுக்கும் மிருகங்கள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் அவர்கள் ஆற்றலை வழங்குவதைக் க்ண்ட அவர், இதைத் தன் அமைப்பின் மூலம் உலக மக்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்தார்.

 

சமீப காலத்தில் மிக பிரம்மாண்டமான இயந்திரங்களிலிருந்து கதிரியக்கத்தை வெளியிடச் செய்து சோவியத் யூனியன் மனிதர்களின் நடத்தையில் ஒரு மாறுதலைச் செய்ய அறிவியல் ரீதியாக முயற்சித்தது. அதே போல அந்த மலையில் உள்ள விசேஷ இயந்திரங்கள் கதிரியக்க ஆற்றலைப் பாய்ச்சி மனிதர்களின் நடத்தையில் ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்தப் போகிறார்களாம்.

 

 

பெல்லார்ட் கூறிய அனைத்தையும் நம்பிய லட்சக் கணக்கானோர் ஆன்மீக முன்னேற்றம் காண்பதற்காக அவர் இயக்கத்தில் இணைந்தனர். பெல்லார்டின் மறைவுக்குப் பின்னர் அவர் மனைவி எட்னா அதை முன்னின்று நடத்தினார்.

இன்றும் இயங்கி வரும் அந்த இரகசிய இயக்கம் சாஸ்தா மலையே ஆற்றலின் இருப்பிடம் என்று கூறி வருகிறது.

 

 

இது சரிதானா என்பதை ஆராயப் பலரும் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பிரபலமாகி வரும் அந்த இடத்திற்கு வருகை புரிவோரின் எண்ணிக்கை வருடத்திற்கு இருபத்தாறாயிரம் என்ற எண்ணிக்கையை அடைந்து விட்டது. நாளுக்கு நாள் இங்கு புத்துணர்வு பெற்று வியாதிகளை குணப்படுத்திக் கொள்வோரின் தொகையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இங்கு அடிக்கடி விசேஷ முகாம்கள் வேறு நடைபெறுகின்றன!.

அறிவியல் அறிஞர்கள் அதை ஆராய ஆரம்பித்தால் அங்குள்ள சிறப்பு ஆற்றல் என்ன என்பது உலகிற்குத் தெரியும்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

கெர்ஹார்ட் டோமக் (Gerhard Domagk 1895-1964)   என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி.  மருத்துவத்திற்கான 1939ஆம் ஆண்டின் நோபல் பரிசு இவருக்குத் தருவதாக அறிவிக்கப்பட்டது. ஸல்போனமைட் என்ற ஆன்டிபாக்டீரியா மருந்தின் கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. பரிசு பற்றிய் அதிகாரபூர்வமான அறிவிப்பை நோபல் பரிசுக் குழுவினர் 1939 நவம்பரில் அறிவித்தனர்.  இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. பரிசு அறிவிப்பு கிடைத்தவுடன் கெர்ஹார்ட் நன்றி தெரிவித்து நோபல் பரிசுக் குழுவின் சேர்மனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.     

 

         இரண்டு வாரங்கள் கழித்து  ஜெர்மானிய ரகசிய போலீஸ் அவரை கைது செய்தது. ஜெர்மானிய ரகசிய போலீஸான கெஸ்டாபோவின் தலைமையகத்தில் பெரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மானிய அரசின் கொள்கையின் படி ஒரு ஜெர்மானியர் அயல்நாடுகள் தரும் எந்த ஒரு விருதையும் பெறக் கூடாது. விசாரணையின் போது உணவு சாப்பிட விஞ்ஞானி மறுத்து விட்டார். ஒரு வாரம் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். வற்புறுத்தலின் பேரில் நோபல் பரிசை தான் ஜெர்மனிக்கு விசுவாசமான குடிமகன் என்பதால் பெற முடியாது என்று கடிதம் ஒன்றை நோபல் கமிட்டிக்கு அவர் அனுப்பினார்.

   இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் அவரையும் அவரது குடும்பத்தினரையும்  ஜெர்மானிய ரகசிய போலீஸ் கண்காணித்துக் கொண்டிருந்தது. சில சமயம் அவரை தலமையகத்திற்குக் கூப்பிட்டு விசாரணை செய்வதும் தொடர்ந்தது.     

 

         ஆனாலும் கூட எல்லா நாடுகளும்  ஸல்போனமைடைப் பயன்படுத்த ஆரம்பித்தன. ஜெர்மனியில் மட்டும் அது பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு உலகப் போர் முடிவிற்கு வந்தது.

     1947ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்கு கெர்ஹார்ட்  அழைக்கப்பட்டார். 1939இல் அறிவிக்கப்பட்ட பரிசிற்கான தங்க மெடல், டோக்கன் அதற்கான டிப்ளமா ஆகிய அனைத்தையும் அவர் பெற்றார். ஆனால் பரிசுத் தொகை  மட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில் நோபல் தனது உயிலில் பரிசை யார் ஒருவர் பத்து மாதங்களுக்குள் பெறவில்லையோ அவர்களுக்கு ரொக்கப் பணம் தரப்படக்கூடாது என்று எழுதி வைத்திருந்தார்.

இப்படி பல அரிய விஞ்ஞானிகளை ஹிட்லரின் அரசு சித்திரவதை செய்து வந்தது. உலகப் போர் முடிந்த பின்னரே இவர்களுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைத்தது!

****************

 

 

எகிப்திய, சுமேரிய, இந்திய நாகரீகத்தில் காளை மாடு (Post No.3631)

Picture of Indus Bull Seal

 

Written by London swaminathan

 

Date: 12 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-02

 

Post No. 3631

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகில் காளை மாடு முத்திரை இல்லாத பழைய நாகரீகம் இல்லை. காளை மாட்டின் படத்தையோ முத்திரையையோ பொம்மையையோ எல்லா நாகரீகங்களிலும் காணமுடிகிறது.

 

காளை விஷயத்தில் எல்லா நாகரீகங்களிலும் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. அரசனும் தலைவர்களும் காளை என்று அழைக்கப்பட்டனர்.

 

வேதத்தில் காளை

 

ரிக்வேதத்தில் இந்திரனை காளை என்றும் காளை போல பலம் வாய்ந்தவன் என்றும் வருணிக்கின்றனர்.

வேதங்களில் ஏனைய தெய்வங்களும்  காளை என்று போற்றப்படுகின்றன. பிற்காலத்தில் காளையே சிவனின் வாஹனமாகப் போற்றப்படுகிறது. திமில் உடைய நந்தி எல்லாக் கோவில்களிலும் சிவன் சந்நிதியில் இடம்பெறுகிறது.

சிந்து சமவெளியில் அதிக முத்திரைகள் காளை மாட்டு படத்துடன் உள்ளன. வேதத்தில் இந்திரன் காளை என்று புகழப்படுகிறான். வால்மீகி ராமயணத்தில் ராமனை, காளை என்று வருணிக்கின்றனர்.

 

சிந்து சமவெளியில் காளை மாடு படம் தாங்கிய முத்திரை அதிக அளவில் காணப்பட்டாலும், ஒரு பசு மாட்டின் படம் கூடக் காணப்படாதது வியப்பூட்டுகிறது.

பசு மாடு புனிதமானது என்பதால் இப்படி விட்டனரோ என்று எண்ணுவாரும் உளர்.

 

சுமேரிய நாகரீகம்

சுமேரியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே (Water Buffaloes) நீர் எருமைகளை முத்திரைகளில் பொறித்துள்ளனர். ஆயினும் இவை இந்தியாவிலிருந்து இறக்குமதியான மிருகங்கள் என்று அறிஞர்கள் சொல்லுகின்றனர்.

 

இதே போல யானைகளின் எலும்பும் தந்தமும் ஆங்காங்கே தோண்டும் போது கிடைக்கின்றன. இவைகளை சிரியன் (சிரியா நாட்டு) யானை என்று வகைப்படுத்தினாலும், ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அங்கே வளர்க்கப்பட்டதாகவே அறிஞர்கள் கருதுவர்.

ஆதிகாலத்திலேயே இந்தியாவுக்கும் மெசபொடோமியா (இராக்) பகுதிக்கும் தொடர்பு இருந்ததை நீர் எருமைகளும், யானை எலும்பு-தந்தங்களும் நிரூபிக்கின்றன.

 

 

எகிப்திய நாகரீகம்

எகிப்தில் அரசனை “பலம் பொருந்திய காளை” (Mighty Bull) என்ற பட்டத்துடன் அழைத்தனர். மக்களை கடவுளின் மேய்ப்புக்குட்பட்ட காலநடைகள் (Cattle of the God) என்று அழைத்தனர்.  நூபியா (Nubia) பகுதியில் துஷ்கா என்னுமிடத்தில் 14,000 ஆண்டுப் பழமையான கல்லறைகளில் காட்டு (Wild Bulls) காளை மாடுகளின் மண்டை ஓடுகளும் புதைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எகிப்தின் புதிய ராஜ்யத்தின் அரசர்கள் அந்தக் காட்டுமாடுகளை  வேட்டையாடி, அடியோடு அழித்துவிட்டனர்.

 

 

எகிப்தில் ஏபிஸ் (Apis) என்ற காளை தெய்வமாக வழிபட்டது. பல இடங்களில் புதையலில் காளையும் மம்மி போல பதனிடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.

 

கிரீட் (Crete) தீவில் காளை மாடு நடனம் பயிலப்பட்டது.

மித்ராயிஸ (Mithraism) சடங்குகளில் காளை மாடு கொல்லப்பட்டது/ பலியிடப்பட்டது.

இந்துக்கள் பிற்காலத்தில் காளை பிடித்தல்/ மஞ்சுவிரட்டு/ ஜல்லிக்கட்டு ஆகிய வீர விளையாட்டுகளில் காளை மாடுகளைக் கொல்லவில்லை. கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கிய செய்தி பாகவதத்தில் கிடைக்கிறது. இதுவே பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக உருவாயிருக்கலாம்.

 

 

(எனது ஜல்லிக்கட்டுக் கட்டுரையில் இது பற்றிக் கூறியுள்ளேன்)

 

காளிதாசனில்

 

காளிதாசனும் காளைமாட்டு உவமைகளைப் பயன்படுத்துகிறார். ரகுவம்ச காவியத்தில் மன்னன் திலீபனின் புஜபலம், (1-13) காளைமட்டின் வலிமை உடையன என்பார். இதே போல ராமபிரானின் புஜபலமும் பேசப்படுகிறது (12-34)

 

சித்ரகூட மலையும் அதன் குகைகளும் நீர்வீழ்ச்சிகளின் ஒலியும் கோபமடைந்த காளை மாட்டுடன் உவமிக்கப்படுகின்றன.(13-47)

 

இளம் கன்று காளையானது போல, ரகு பருவம் எய்தினான் என்கிறார்(3-32)

தமிழிலும் ஏறு, அடலேறு என்பன சங்க காலத்திலேயே 70 இடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கலித்தொகை 103-108, அகம்.36, 64 முதலியன சில எடுத்துக் காட்டுகள்.

 

–subham–

எண் 7: காளிதாசனுக்கும் கம்பனுக்கும் பிடித்த எண்! (Post No.3614)

Written by London swaminathan

 

Date: 7 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 10-58 am

 

Post No. 3614

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ரிக் வேதத்திலும், சிந்து சமவெளி முத்திரைகளிலும் ஏழு என்ற எண் எப்படி முன்னிலையில் நிற்கிறது என்று ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி, இங்கே 2014ல் வெளியிட்டேன். சங்கீதத்தில் எண் 7-ன் சிறப்பு பற்றி சீனிவாசன் செய்த ஆய்வு பற்றி மற்றொரு கட்டுரை வெளியிட்டேன். ஆழ்வார்தரும் அதிசயத் தகவல்: 7 மலை, 7 கடல், 7 முகில் என்று இன்னொரு கட்டுரை எழுதி வெளியிட்டேன்.

 

 

”சங்க இலக்கியத்தில் எண்கள்” என்ற எனது ஆய்வுக்கட்டுரையில் எழுகூற்றிருக்கை முதலியன பற்றி விளக்கிவிட்டேன்.

 

இதோ இன்னுமொரு ஏழு எண் கட்டுரை.

 

மஹாவிஷ்ணுவைப் பார்த்து தேவர்கள் செய்த துதி ரகுவம்ச காவ்யம் பத்தாவது சர்கத்தில் வருகிறது:

 

சப்தசாமோபகீதம் த்வாம் சப்தார்ண்வஜலேசயம்

சப்தார்ச்சிர்முகமாசக்யுஸ்சப்தலோகைகசம்ஸ்ரயம் 10-11

 

த்வாம்- உம்மை

சப்த சாம உபகீதம் – 7 வகை சாமங்களால் பாடப்பட்டவராகவும்

சப்த அர்ணவ ஜலேசயம்- 7 கடல் நீரில் சயனிப்பவராகவும்

சப்த அர்ச்சிர் முகம் – 7 வாயுடைய அக்னியை முகமாக,வாயாக உடையவராகவும்

சப்த லோக ஏக சம்ஸ்ரயம் – 7 உலகங்களுக்கும் ஒப்பற்ற அடைககலமாகவும்

ஆசக்யுஹு- பெரியோர்கள் தொன்றுதொட்டுக்கூறுவர்

 

 

பொருள்:- ஏழு வகை சாமங்களால் துதிக்கப்படுபவர் நீர்; ஏழு சமுத்ரங்களும் பிரளய காலத்தில் ஒன்று சேருவதால் அவற்றின் ஜலத்தில் சயனித்திருப்பவர் (தண்ணீரில் உறங்குபவர்); அக்னி தேவன் உமது வாயாக இருக்கிறான்.  ஏழு உலகங்களுக்கும் தாங்களே சரண்.

 

ஏழு வகை சாமங்கள் யாவை?

ரதந்தரம், ப்ருஹத் சாம, வாமதேவ்ய, வைரூப்ய, பாவமான, வைராஜ, சாந்த்ரமச

 

அக்னியின் ஏழு ஜ்வாலைகளின் (ஏழு நாக்கு) பெயர்கள்:

காலீ, கராலீ, தூரா, லோஹிதா, மனோஜவா, ஸ்புலிங்கினீ, விஸ்வரூபா.

 

யாகத்தில் கொடுக்கபடும் திரவியங்கலை அக்னி எடுத்துச் செல்லுவதால் தேவர்களின் வாய் என்று தீயை அழைப்பர்.

 

ஏழு உலகங்கள்

பூ:, புவ:, ஸ்வ:, மஹ:, ஜன:, தப:, சத்யம்

 

ஏழு கடல்கள்

உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு

கம்ப ராமாயணம்

கம்பனுக்கும் மிகப் பிடித்த எண் ஏழுதான்! நிறைய இடங்களில் ஏழை வைத்து பாடல்களில் விளையாடுகிறான். கிஷ்கிந்தா காண்டத்தில் வரும் சில பாடல்களை மட்டும் இங்கு தத்ருவன்:-

 

ஏழு மாமரம் உருவி கீழுஅலகம் என்று இஅசைக்கும்

ஏழும் ஊடுபுக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற

ஏழ் இலாமையான மீண்டது அவ் இராகவன் பகழி

ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்றும் இன்னும்

 

ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும்

ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி

ஏழு மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப

ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கம் என்று எண்ணி

–மராமரப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:

அவ்வாறு தொடுக்கப்பட்ட ராமபிரானின் அம்பு ஏழு மரங்கலைளையும் துளைத்து, கீழேயுள்ள 7 உலகங்களையும் துளைத்து, இதற்கும் கீழே ஏழு என்ற எண் ஏதும் இல்லாமையால் இராமனிடமே திரும்பி வந்தது. இனி எங்காவது 7 என்ற எண்ணைப் பார்த்தால் துளைத்துவிடும்!

 

 

(இராமன் அம்பு, கிருஷ்ணனின் சுதர்சன சக்கரம் ஆகியன எல்லாம் பூமராங் போலத் திரும்பிவரும் கோணத்தில் விஞ்ஞான முரைறைப்படி அமைக்கப்பட்டவை)

 

ஏழு கடல்களும்,  மேலுலகங்கள் ஏழும், 7 மலைகளும், 7 முனிவர்களும் (சப்த ரிஷி), சூரியனின் 7 தேர்க்குதிரைகளும், சப்த மாதர் என்பபடும் 7 கன்னியரும், அஞ்சி நடுங்கினர். நம்முடைய பெயரிலும் 7 என்ற எண் இருக்கிறதே என்று பயந்தனராம்.

 

ஆயினும் இராமபிரான் “அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன்” என்னும் நம்பிக்கையில் பேசாமல் அமைதி காத்தனர் என்கிறான் கம்பன்.

My old articles

1).Mystic No.7 in Music!! posted on 13th April 2014

2).Number Seven: Rig Vedic link to Indus Culture, posted on 21 November 2014

3).ஆழ்வார்தரும் அதிசயத் தகவல்: 7 மலை, 7 கடல், 7 முகில், Posted on 15th August 2016

4).ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை, நவம்பர் 22, 2014

 

வேதம் பற்றி 2014 September வரை எழுதிய கட்டுரைகள் பின்வருமாறு:
1.The Mysterious Vedic Homa Bird: Does it exist? – posted on 10-12-2011
2.Vedic Hymn better than National Anthems
3.Vedas and Egyptian Pyramid Texts – posted on 29-8-2012
4.Kapinjala Bird Mystery –posted on 23-5-2014 (Post No 1060)
5. Most misinterpreted words :Asva and Ayas
6.Confusion about Vedic Soma Plant –posted on 5-5-2013
7.Horse Headed Seer: Rig Veda Mystery- 1 -posted 27-8-2-14
8.Cucumber in the Rig Veda – posted on 2-42014 (post no 950)
9.Origin of Horse race and Chariot Race –posted 25-8-2014
10.Creation: Vedic Hymn and Babylonian Hymn –posted 6-8-2013
11.Sex Mantras and Talismans in Egypt and the Atharva Veda –posted 26 Sept. 2012
12.Gems from the Atharva Veda – posted 27 Sept. 2013
13.Mysterious Atharva Veda: Part 1 –posted 30 Sept. 2013
14. Mysterious Atharva Veda: Part 2 – posted 7 Oct 2013
15).27 Similes in one Vedic Hymn! – posted on18-8-2012
16) 107 Miracle Herbs in Rig Veda – posted on16-9-2013
17)Vedic Origin of 1000 Pillar Halls in Indian and Mayan Culture – 5 July 2014
18.Two seers saved by Asvins: Stories from the Rig Veda – posted 7 Aug. 2014.
19.Herbs and Diseases in the Veda – posted on 1 July 2014.
20) 31 Quotations from the Vedas – posted on 26 June 2014.
21.Talismans in Atharva Veda and Ancient Tamil Literature — posted on 17 June 2014.
22)Why did Indra kill Brahmins? – posted on 25 May 2014.
23)Ode to Sky Lark: Shelley, Kalidasa and Vedic Poet Grtsamada– posted on 3/5/14
24)Vedic Poet Medhathithi’s Quotations — Posted on22/5/2014
25)Pearls in the Vedas and Tamil Literature –posted on 18/5/2014
26.Important Vedic Quotations on Rivers and Water –posted on 8/5/14
27) 40 Important Quotations from the Atharva Veda –posted on 2-5/14
28.Oldest and Longest patriotic Song – 20 Sept. 2013
29)King and 8 Ministries in Vedic Period – posted on 28 May 2013
30)Numbers in the Rig Veda: Rig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

 

-Subahm—

 

 

முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம், பாலை பாட்டு (Post No.3611)

Written by London swaminathan

 

Date: 6 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  19-56

 

Post No. 3611

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

தமிழர்களின் நானிலத்துக்கும் யார் யார் தெய்வம், என்ன விளக்கம், எந்தெந்த தொழில் செய்வோர் அங்கு வசிப்பர் என்பதை நாலே வரிகளில் சொல்லும் ஒரு பழைய பாடல் உவமான சங்ரக- இரத்தினச் சுருக்கம் என்னும் நூலில் உள்ளது. எளிதில் நினைவு வைத்துக்கொள்ள இது பேருதவி புரியும்.

 

காடாகு முல்லை கழிநெய்தலாகுங் கல்லாம்குறிஞ்சி

நாடா மருத நடலை வெம்பாலையிந் நாட்டிற் றெய்வங்

கோடார் கான் வருணன் குகனிந்திரன் கூறுதுர்க்கை

மாடாயர் மீன்புல்லர் குன்றவர் கானவர் மன்னருமே

 

காடும் காடுசார்ந்த இடமும் = முல்லை

உப்பங்கழியும் கடற்பிரதேசமும் = நெய்தல்

கல்/மலையும் மலை சார்ந்த இடமும் =குறிஞ்சி

நாடு, அதைச் சுற்றிய நெல்வயல் = மருதம்

நடலை வெம் = துன்பம்தரும் வெம்மைமிக்க இடம் = பாலை

 

தெய்வங்கள் யார்?

 

முல்லை = கோடு ஆர் கரன்= சங்கு கையில் ஏந்திய விஷ்ணு

நெய்தல் = வருணன்

குறிஞ்சி= குகம்/முருகன்

மருதம் = இந்திரன்

பாலை = எல்லோரும் புகழும் துர்கை

 

 

ஒவ்வொரு நிலத்திலும் தொழில் செய்வோர் எவர்?

 

மாடு மேய்க்கும் ஆயர்/இடையர்

மீன் புல்லர் – வலைஞர், மீனவர்

குன்றவர்- குறவரும்

கானவர்- வேடரும்

மள்ளர் – உழவர்

 

இதையே தொல்காப்பியம் வேறு  வரிசைக் கிரமத்தில் கூறும்:

 

தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’

 

–SUBHAM–

 

 

 

 

அனிச்சம் பூவும் சீரிஷம் பூவும் ஒன்றா? (Post No.3601)

சீரிஷம் பூவின் படம் (from Ayurveda website)

 

Written by London swaminathan

 

Date: 3 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  6-41 am

 

Post No. 3601

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ சீரிஷம் என்றும் தமிழ் இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ அனிச்சம் என்றும் கவிகள் பாடி வைத்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இருவரும் ஒரே மலரைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று முடிவுசெய்தேன். எனது ஆராய்ச்சியின் பலனே இக்கட்டுரை.

 

சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப் பாட்டிலும் கலித்தொகையிலும் அனிச்சம் பற்றிக் குறிப்பிடுகின்றனர். சங்க காலத்துக்குப் பின்னர்   வந்த திரு வள்ளுவர் அனிச்ச மலரை நான்கு இடங்களில் உவமையாகக் காட்டுகிறார்.

 

 

இலக்கியங்களில் மென்மைக்கு இலக்கணம் இந்தப் பூக்களே. கடினத்தன்மைக்கு வைரத்தை (வஜ்ரம்) உவமையாக காட்டுவது போல மென்மைத் தன்மைக்கு உவமை அனிச்சம் அல்லது சீரிஷம்.

 

உலகப் புகழ்பெற்ற காளிதாசன் குமார சம்பவத்திலும் ரகுவம்சத்திலும் சீரிஷ மலரின் மென்மைத் தன்மையை  எடுத்துக்காட்டுகிறார்.

 

பார்வதியை வருணிக்க முனைந்த கவிஞன் காளிதாசன், பார்வதியின் கைகள் சீரிஷ மலரைவிட மென்மையானவை என்பான்(குமார 1-41)

 

இன்னொரு அருமையான உவமை பார்வதியின் தவத்தைப் பற்றியது. சீரிஷ மலரானது தேனீக்களின் கால்களைத் தாங்குமேயன்றி, ஒரு பறவையின் கால்களைத்  தாங்க முடியுமா? அது போல பூப்போன்ற உடல்படைத்த பார்வதியின் உடலை கடுமையான தவசு தாங்குமா – என்பது காளிதாசனின் உவமை(குமார 5-4)

ரகுவம்ச காவியத்தில் சுதர்சன மன்னனின் உடல் சீரிஷ மலரைப் போல மென்மையானது என்று சொல்கிறான் (18-45).

 

அனிச்சம் பூ (according to Wikipedia)

 

தமிழ் இலக்கியத்தில்

மகளிர் சேகரித்த 99 மலர்களில் அனிச்சம் என்ற மலரையும் சேர்த்து கபிலர் பாடியுள்ளார் (குறிஞ்சிப் பாட்டு, வரி 62)

 

கலித்தொகையில் (91-1) அனிச்சம் மலர் சூடியது, மாலை சூடியது பற்றி மருதன் இளநாகன் பாடியுள்ளார்.

 

இதன் பிறகு கம்பராமாயணம் முதலிய பிற்காலக் காவியங்களிலும் இம்மலர் இடம்பெறுகின்றது.

 

வள்ளுவர் 4 குறள்களில் தெரிவிக்கும் கருத்துகள்:

 

மோப்பக்குழையும் அனிச்சம்(90)– முகர்ந்து பார்த்,,,,,லேயே வாடிவிடும்.

 

அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள் (1111)– , அனிச்சம் பூவே! என் காதலி உன்னைவிட மென்மையானவள்.

 

(இதைக் காளிதாசன் பார்வதி பற்றிச் சொன்னதோடு ஒப்பிடலாம்)

 

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் (1115)– காம்போடு அனிச்சம் பூவைச் சூடிவிட்டாள் என் காதலி. எடை தாங்காமல் வள் இறந்து போய்விடுவாள்.

 

அனிச்சம்…. மாதர் அடிக்கு நெருஞ்சி பழம் (1120)– அனிச்சம் பூவும் அன்னத்தின் இறகும் கூட  இப்பெண்ணின் பாதங்களில் நெருஞ்சிப் பழம் போலக் குத்தும்!

 

அனிச்சம் பூ எது? என்று சிலர் ஆராய்ச்சி செய்து சில படங்களை வெளியிட்டுள்ளனர். அவை சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னும் சிலர் சீரிஷ மலர் எது என்று படம் போட்டுள்ளனர். அதுவே சரி என்று தோன்றுகிறது. இதற்கு நான் முன் வைக்கும் காரணங்கள்

 

 

  1. அனிச்ச மலர் என்று இவர்கள் குறிப்பிடும் மலர் முகர்ந்தால் வாடுவதில்லை

2.இது மற்ற பூக்களைப் போலவே மென்மை படைத்தது. உண்மையில் இதைவிட மென்மையான தமிழ் மலர்கள் உண்டு

  1. சீரிஷ மலரின் படம் ஓரளவுக்கு தமிழ்ப் பாடல் வருணனைக்கு அனுசரணையாக உளது. களிதாசன் சொல்லுவது போல தேனீக்கள் மட்டுமே உட்கார முடியும்

4.கபிலரும் இளநாகனும் சொல்லக்கூடிய அனிச்சம் தலை யில் அணிவது; மாலையாகச் சூடுவது. ஆனால் WEBSITE வெப்சைட் காட்டும் அனிச்சம் அணியப்படுவதுமில்லை; பூஜைக்கு உதவுவதுமில்லை

5.மேலு வெப்சைட் WEBSITE காட்டும் அனிச்சம் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுவதில்லை.

6.எல்லாவற்றிற்கும் மேலாக சீரிஷம் படத்தையும் அனிச்சம் படத்தையும் அருகருகே வைத்துப் பார்த்தால் சீரிஷமே மென்மை என்பது தெரிகிறது

  1. சீரிஷம் என்ற பெயரை இன்றும் வட இந்தியப் பெண்கள் பெயரில் வைக்கின்றனர். தமிழர்களோவெனில் மற்ற மலர்களின் பெயர்களை பெண்களுக்குச் சூடுகின்றனர். ஆனால் அனிச்சம் என்று பெயர் வைப்பதில்லை.

 

  1. கடைசியாக அனிச்சம் என்பது தமிழ் சொல்லா என்று ஐயுற வேண்டியுள்ளது. அந்த ஒலியை ஒட்டிய தமிழ்ச்சொல் எதுவும் (அனி) சங்க இலக்கியத்தில் இல்லை. அனிச்சம் மட்டுமே உள்ளது. இது ஒரு பெரிய புதிரான மலர்தான்.

 

வள்ளுவன் சொன்னது போல அனிச்சமே! நீ வாழி! (“நன்னீரை வாழி அனிச்சமே”-குறள் 1111)

 

Botanical name of both the flowers as identified in the websites:

Sirisham – Albizia lebbek (East Indian Walnut); Family-Mimosaceae

Anicham- Anagallis arvensis (Scarlet Pimpernel); Family- Primulaceae

 

 

–சுபம்–

சீவக சிந்தாமணியில் ஐந்து அமிர்தம்! (Post No.3575)

Written by London swaminathan

 

Date: 25 January 2017

 

Time uploaded in London:- 8-43 am

 

Post No.3575

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்:

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

இவைகளில் சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்க தேவர். அதில் ஒரு பாடலில் அவர்  நாட்டில் அமிர்தம் எது, காட்டில் அமிர்தம் எது என்று வரிசைப் படுத்துகிறார். அதற்கு உரை எழுதிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்ர்கினியர் (மதுரை நகர பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பனன்) நமக்கு அரிய பெரிய தகவல்களை அளிக்கிறார்.

 

அமிர்தம் என்பது சம்ஸ்கிருதச் சொல்; சங்க இலக்கியத்தில் மூன்றுவித ஸ்பெல்லிங் SPELLING  உடன் இச்சொல்லைப் பயின்றுள்ளனர்.

 

இனி சீவக சிந்தாமணியின் அற்புதப்பாடலைக் காண்போம்:

 

வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற்
  பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென்
றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங்
  கிறைவனுந் தமர்களைப் பணிப்ப
நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து
  நல்வரை யமிர்தமு மல்லாக்
காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக்
  கண்ணகன் புறவெதிர் கொண்டார்.

 

பாடல் 2110-ன் பொருள்

 

அந்நாட்டு மன்னன் உத்த்ரவுக்கு இணங்க சீவகனை எப்படி வரவேற்றனர் என்பதில் நாட்டில் கிடைக்கும், கடலில் கிடைக்கும், காட்டில் கிடைக்கும், மலையில் கிடைக்கும் ஐந்து ஐந்து வகையான பொருள்களுடன் சீவகனை வரவேற்றனர்.

 

அவை யாவை:

நாட்டில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்: நெல், பயறு, இளநீர்,கரும்பு, வாழை

கடலில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்

முத்து, பவளம், சங்கு, உப்பு, ஓர்க்கோலை (ஆம்பர் எனப்படும் திமிங்கிலக் கழிவுப் பொருள்)

 

மலையில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்

தக்கோலம் (வால் மிளகு அல்லது சிறுநாவல் பூ), தீம்பூ (வாசனைத் திரவியங்களில் ஒன்று அல்லது கிராம்பு) ஏலம், கற்பூரம், ஜாதிக்காய்

 

காட்டில் கிடைக்கும் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்

தேன், அரக்கு, சந்தனம் ,மயில் பீலி, நாவி (கஸ்தூரி அல்லது புனுகு)

 

இதோ பாடல் வடிவில்:–

 

நாட்டிலமிர்து :’செந்நெல் சிறுபயறு செவ்விள நீர், செழுங்

கன்னல் கதலியோ டைந்து’

கடலமிர்து :’ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படும் உப்பினோ டைந்து’

 

வரையமிர்து :’தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்

கர்ப்பூரம் சாதியோ டைந்து’

காட்டிலமிர்து :’அரக்கிறால் செந்தேன் அணிமயிற் பீலி

திருத்தகு நாவியோ டைந்து’

 

-subham-