பிரம்மானந்தம் என்றால் என்ன? சிருங்கேரி சுவாமிகளின் அற்புத விளக்கம் (Post No.4202)

Written by London Swaminathan

 

Date: 11 September 2017

 

Time uploaded in London- 9-30 am

 

Post No. 4202

 

Pictures are taken from various sources; thanks.

 

 

ப்ரஹ்லாத போஷகத்வம் தவ ஸித்தமஹோ ஹிரண்ய வைரித்வம்,

தஸ்மாத் நரஸிம்மகுரோ ஹ்ருத்ஸ்தம்பம் மே விபித்யபுர ஏஹி

 

“இந்த ஸ்லோகத்தில் நம் குருநாதர் பரமகுருநாதரை நேரில் பார்த்துக் கேட்பதுபோல் கேட்கிறார். ஹே நரஸிம்ம குரோ என்று அந்த அபிநவ நரஸிம்மபாரதீ என்ற குருவை வணங்கிப் பிரார்த்திக்கிறார்.

ஹே குரோ, உங்களுக்கும் நரஸிம்ம மூர்த்திக்கும் பலவிதத்திலும் ஸாம்யமே காணப்படுகிறது. எவ்விதமென்றால் ‘ப்ரஹ்லாத போஷகத்வம்’, ‘ஹிரண்ய வைரித்வம்’ என்ற முக்கியமான தர்மங்கள் இரண்டும் ஸமமாகவே உங்கள் இருவரிடமும் பொருந்தி இருக்கின்றன. உக்ர நரஸிம்மர் ப்ரஹ்லாதன் என்ற அசுர பாலகனை அபயம் கொடுத்து அனுக்ரஹம் செய்தபடியால் அவனைப் போஷித்தார், காப்பாற்றினார். அதனால் ப்ரஹ்லாத போஷகரானார்.

 

சாந்த நரஸிம்ம ரூபமான தாங்களோ ‘ப்ரக்ருஷ்டோ ஹ்லாத: ப்ரஹ்லாத:’ என்ற வ்யுக்தத்தின்படி பக்தர்களுக்குப் பலவிதத்திலும் உத்கிருஷ்டமான ஆனந்தத்தைக் கொடுக்கிறீர்கள். ‘ஹ்லாதம்’ என்றால் ‘ஆனந்தம்’ என்று பொருள் கொள்ளலாம்.

ஆனந்தம் என்பது பொதுவாக விஷயானந்தத்தையே குறிக்கும். அதுவோ விஷயங்களின் மாறுபாடுகளை அனுசரித்து மாறுபடக்கூடியது.தைத்ரீயத்திலும், பிருஹதாரண்ய உபநிஷத்திலும் இந்த ஆனந்தங்களைப் பற்றி விரிவாகக் கூறியிருப்பதை இந்த ஸந்தர்ப்பத்தில் கொஞ்சம் சுருக்கமாகக் குறிப்பிட்டால்தான் வாசகர்களுக்கு குருநாதரது சுலோகத்தில் அர்த்தம் நன்கு விளங்குமாதலால் அதைக் கொஞ்சம் காண்பிக்கிறோம்.

 

சுலோகத்திலுள்ள ‘ப்ரஹ்லாத’ பதத்திதிற்கும் ‘ஹ்லாத’ பதத்திற்கும் அர்த்தத்தில் எவ்வளவு வேற்றுமை இருக்கிறது என்பதையும் வாசகர்கள் இந்த விளக்கத்தின் மூலம் உணரலாம்.

 

தைத்ரீயோபநிஷத்தில் ‘தஸ்யேயம் ப்ருதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணாஸ்யாத் . ஸ ஏகோ மானுஷ ஆனந்த:’ என்று கூறப்பட்டிருக்கிறது அதாவது பூமண்டலத்துக்கே சக்ரவர்த்தியாயிருப்பவனுக்கு ஏற்படும் ஆனந்தம்தான் மானுஷாநந்தம் எனப்படுகிறது. அந்த சக்ரவர்த்தி நல்ல ஆரோக்யமும் தேஹதிடமும் பலமும் யௌவனமும் நல்ல கீர்த்தியும் படிப்பும் குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும். தர்மபுத்திரர்போல் ஏகச் சத்ராதிபதியாகவும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்

ஓர் ஆனந்தம் அவனுக்கு  இருப்பதாகக் கூறலாம். ஆனால் அவன் தேவலோக ஸுகங்களில், காமனை உள்ளவானாயிருந்தால் அவ்வித காமனையில்லாத சுரோத்திரனுடைய ஆனந்தத்தில் நூற்றில் ஒரு பங்காகத்தான்  அந்த சக்ரவர்த்தியின் ஆனந்தம் இருக்கக்கூடும்.

 

இப்படியே ஹிரண்யகர்பானந்த்தம் வரையில் ஒவ்வொரு படியிலும் நூறு மடங்கு ஆனந்தம் விருத்தியாகிக் கொண்டே போனா லும் அந்த ஹிரண்ய கர்ப்ப ஆனந்தம்  வரையிலுள்ள எல்லா ஆனந்தங்களும்  நிஷ்காமனான பிரஹ்மம்மவித்தின்  ஆனந் தத்தில் ஒரு பாகமேயாம். ஆகவே காமனையில்லாத ப்ரஹ்மவித்தின்  ஆனந்தம்தான் எல்லாவற்றையும் விட மேன்மையானது. அதைத்தான் பிரஹ்மானந்தம் என்று சாஸ்திரங்களில் பாஷ்யகாராதிகள் வர்ணிக்கிறார்கள்.

அதைத்தான் முன்கூறிய ப்ரஹ்லாத போஷகத்வம் என்ற சுலோகத்திலுள்ள ப்ரஹ்லாத பதத்தால் நம் குருநாதர் குறிப்பிடுகிறார்.

ஹ்லாதம் என்றால் ஆனந்தம் ப்ரஹ்லாதம் என்றால் உத்க்ருஷ்டமான ஆனந்தம். உத்க்ருஷ்டம் என்றால் எதைவிட உத்க்ருஷ்டம் என்ற கேள்வி வருகிறது.

 

மானுஷானந்தத்தை விட மனுஷ்ய கந்தர்வ ஆனந்தம் நூறு மடங்கு உயர்ந்தது.

அதைவிட தேவ கந்தர்வானந்தம் நூறு மடங்கு சிறந்தது.

இப்படியே பித்ருக்கள், ஆஜான தேவர்கள், கர்ம தேவர்கள், தேவர்கள், இந்திரன், பிருஹஸ்பதி, ப்ரஜாபதி என்ற முறையில் ஒன்றைவிட ஒன்று 100 மடங்கு உயர்ந்தது என்று சொல்லிக் கடைசியாக ஹிரண்ய கர்ப்பானந்தம்  எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ஆனால் பிரஹ்மவித்தானவன் ஆனந்தமோ எல்லை இல்லாதது.  நிரதிசயமானது என்று தைத்ரீய உபநிஷத்திலும் பிருஹதாரண்யகம்  முதலியவற்றிலும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

 

அப்பேற்பட்ட நிரதிசய ஆனந்தத்தைதான் ப்ரஹ்லாத பதத்தால் குருநாதர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது எல்லை இல்லாத ஆனந்தமாகிய  பிரஹ்மானனதந்தத்ததையே  தம் பக்தர்களுக்கு அளிக்க வல்லமையுள்ளவர் குருநாதர்.”

xxxx

இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அடங்கிய இப்புத்தகம் இல்லம்தோறும் இரு க்க வேண்டும். வாங்கிப் பயன் பெறுக.

ஆதாரம்: ஸ்ரீ குருகிருபா விலாஸம்

ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் திவ்ய மஹிமைகளை எடுத்துக் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு, எழுதியவர்– ஸ்ரீ பாஷ்ய ஸ்வாமிகள், முதல் பாகம், 2011

 

–SUBHAM–

இந்துக்களின் மூன்று உலக மஹா கண்டுபிடிப்புகள்!!! (Post No.4200)

Written by London Swaminathan

 

Date: 10 September 2017

 

Time uploaded in London- 17-10

 

Post No. 4200

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதத்தில் இந்துக்கள் கேட்பது என்ன?

 

ரிக் வேதத்தில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உண்டு. சில துதிகளைப் படித்தால் அவர்கள் (ரிஷிகள்) என்ன வேண்டினார்கள் என்பது தெரியும்:

 

ஒவ்வொரு துதியும் இறைவனின் மகத்தான சக்தியைப் போற்றும் . இறைவனின் சாதனைகளைப் பட்டியலிடும். பின்னர் செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள், நல்ல பிள்ளைகளை வேண்டும். சில நேரங்களில் பாவ மன்னிப்பு, நோயிலிருந்து விடுதலை ஆகியனவும் இடம்பெறும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:–

இந்திரனுக்கு (கடவுளுக்கு) துதி:

ஓ இந்திர த்யௌஸ் அசுரன் உனக்கு அடி பணிந்தான்; நீண்ட நிலப்பரப்புடைய பிரம்மாண்டமான பூமி உன் வசமாயின.

 

எல்லா கடவுளரும் இந்திரனை முன்னிலையில் வைத்தனர்-1-131-1

 

உனக்கு இரண்டாவது (ஈடு, இணை) என்பதே இல்லை 1-32-12

 

முப்பது சால்களில் இந்திரன் சோமபானம் குடித்தான்.7-66-4

பின்னர் இந்திரன் சொல்கிறான்:

நான் ஆகாயத்தையே தூக்கினேன்; மஹா பலசாலிகளில் மிகப்பெரியவன்; நான் சோம பானத்தைப் பருகவில்லையா?

 

சோமபானத்துக்கு அவ்வளவு சக்தி! (சுரா பானம் என்பது மதுபானம்; அதை வேதம் நிந்திக்கிறது)

 

அக்னிக்கு ஒரு துதி:

 

அக்னியே! நீ ஒரு தூதன்; நன்மை செய்பவன்; கருணையின் வடிவம்;  பலத்தின் மகன்; உனக்கு உயிர்வாழும் அனைத்தையும் தெரியும்.

அக்னிக்கு, நான் ஒரு புதிய சக்திவாய்ந்த துதிப் பாடல் பாடுவேன்; என்னுடைய சொற்களையும் பாடலையும் கொண்டுவருகிறேன்.

விலை மதிப்புடைய பொருட்களை உடைய தண்ணீரின் மகனே!

நீ பூமியின் மீது உரிய பருவத் தி ல் அமர்ந்து இருக்கிறாய். 1-143-1

 

மருத் (காற்று) தேவனுக்கு ஒரு துதி:

மின்னலைச் சுமக்கும் தேர்களில் விரைந்து வருவாயாக; குதிரைகளில் ஈட்டிகளை ஏந்தி, இனிய பாடல் பாடிக்கொண்டு வருக  1-88-1

 

கடவுளின் அழகையும் ரிஷிகள் போற்றினர்:

இந்திரனின் ஒரு அடைமொழி சுசிப்ரா= அழகான கன்னம்/ மூக்    குடையோன்

 

அக்னியின் ஒரு அடைமொழி= அழகிய தோற்றம் உடையோன்

சீனிவாலி என்னும் தேவி மீதான துதி:

அழகிய விரல்கள், அழகிய கைகள், பல மகன்களை ஈன்றெடுத்த தாயே! அகலமான கூந்தல் உடையோய்! ஆண்களின் ராணியே! அந்த சீனீவாலிக்கு புனித அன்பளிப்புகளைத் தருவோம் 2-32-7

 

செல்வம் வேண்டும்1

எல்லோரும் விரும்புவது செல்வமே.

இதோ சில துதிப்பாடல்கள்

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொணர்க; அதையே விரும்பி நிற்கிறோம் 8-45

 

இந்திரனுக்கு ஒரு துதி:

ஓ, சோமபானப் பிரியனே! உங்கள் உண்மையுள்ள, ஆனால் ஒன்ர்ருக்கும் உதவாதவர்கள் நாங்கள்

ஆயிரக்கணக்கில் அழகான குதிரைகளை அளிப்பாயாக! ஓ செல்வச் சீமானே!

பலத்தின் தேவதையே! உனது தாடைகள் வலுவானவை; சக்திவாய்ந்தவன் நீ.

ஆயிரக்கணக்கான அழகான குதிரைகளையும் பசுமாடுகளையும் அருள்வாயாக 1-29

மேலும் ஒரு துதி

ஓ!இந்து, சோமா! எல்லா பக்கங்களிலும் செல்வத்தைக் குவிப்பாயாக

ஆயிரக்கணக்கான மடங்கு பொக்கிஷங்களை அள்ளித் தருக–9-40

அளவற்ற தனத்தை அருள்க; ஓ இந்து செல்வத்தைத் தா.

தங்கத்தையும் குதிரைகளையும் பசுக்களையும் தா 9-41-4

 

ஓ மருத்துக்களே! செல்வத்தை அருள்க; நிலயான, குன்றாத செல்வத்தை அருள்க

நூறு ஆயிரம் படங்கு, இன்னும் எப்போதும் பெருகட்டும் 1-64-15

 

 

ஓ அக்னி எங்கள் பிரபுக்களுக்கு அதிகம் செல்வத்தைக் கொடு 8-1-24

அற்புத இந்திரனே! அற்புதமான செல்வத்தை எங்களுக்குக் கொண்டு வா 7-20-7

 

நிலத்தை உழுவதற்கு முன் சொல்லும் மந்திரம்:

சுபமான உழுகலனே( சீதாவே), அருகில் வருக; உன்னை மதிக்கிறேன்; உன்னை வணங்குகிறேன்

 

நீ எங்களை ஆசீர்வதி; எங்களுக்கு வளத்தைக் கொடு; அளவற்ற உணவுதானியங்களை அள்ளிக் கொடு 7-57-6

வருணனுக்கு ஒரு துதி:

பாவத்திலிருந்து எங்களை விடுவி

அரசனே! எனக்கு என்றும் திடமான செல்வம் குறையவே கூடாது 2-2-8

 

வேதங்களில் உள்ள துதிகள் இந்துக்களின் மகத்தான மூன்று கண்டுபிடிப்புகளைக் காட்டும்!

மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட அரிய பெரிய கண்டு பிடிப்புகள் அவை!

வேதத்தின் எல்லா துதிகளிலும் இவை இழையோடி நிற்கும்!

 

மனித இனத்தையே மாற்றிய மூன்று இந்துக்களின் கண்டு பிடிப்புகள்

1.பசு மாடு

காட்டில் எவ்வளவோ மிருகங்கள் பால் கொடுத்தும் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரே மிருகம் பசு என்பதைக் கண்டுபிடித்து அதற்கு வேத காலத்திலேயே கோ மாதா, காம தேனு என்று பெயரிட்டு மனித குலத்துக்கு அளித்தான்

உலகில் எகிப்திய, பாபிலோனிய, மாயன் நூல்களில் எங்குமே இப்படி ஒன்றைக் காண இலயவில்லை.

2.குதிரை

காட்டில் வேகமாகச் செல்லும் சிறுத்தை முதலியன இருந்தும் சாக பட்சிணியான குதிரையே மனிதனுக்குப் பயன் படும் என்று அதை வசமாக்கி தேரில் பூட்டி உலகிற்கு அளித்தவன் இந்து!

வேதத்தில் துதிக் குத் துதி பசுவும் குதிரையும் பாய்ந்தோடும்!

உலகில் எந்த நாட்டு பழைய நூல்களில்ம் இத் தகைய போற்றுதலைக் காண இயலவில்லை.

 

3.டெசிமல் சிஸ்டம்! தசாம்ச முறை

 

மனித குல அறிவியல் முன்னேற்றத்துக்கு, ராக்கெட்டுகள் பறந்ததற்கு, கம்ப்யூட்டார்கள் செயல்பாட்டூகு எல்லாம் அடித்தளமிட்டது தசாம்ச முறை! இந்துக்கள் உலக மஹா மேதாவிகள்! அதி சூர கணிதப் புலிகள்! வேதத்தில் துதிக்குத் துதி 100, 1000, 10000, 1000000, கோடி என்று அடுத்தடுத்து வரும்.

உலகம் காணாத விந்தை இது. நாம் இல்லாவிடில் உலகம் விஞ்ஞானத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேறியிராது.

 

இன்றுவரை உலகில் பசும்பாலோ, பால் பொருட்களோ இல்லாவிடில் மனித இனம் மறு நிமிடமே நோயில் வாடி அழியும்.

 

இந்துக்கள் வாழ்க! வேதங்கள் வெல்க!!

NUMBERS IN SANSKRIT

एकं सत् विप्रा बहुधा वदन्ति

एकम् = 1

दशकम् = 10

शतम् = 100

सहस्रम् = 1000

दशसहस्रम् = 10000

लक्षम् = 100000

दशलक्षम् = 10^6

कोटि = 10^7

अयुतम् = 10^9

1010 से अधिक परिमाण

नियुतम् = 10^11

कंकरणम् = 10^13

विवर्णम् = 10^15

परार्धः = 10^17

निवाहः = 10^19

उत्संगः = 10^21

बहुलम् = 10^23

नागबलः = 10^25

तितिलम्बम् = 10^27

व्यवस्थान – प्रज्ञापतिः = 10^29

हेतुहीलम् = 10^31

कराहुः = 10^33

हेतविन्द्रीयम् = 10^35

सम्पत-लम्भः= 10^37

गणनागतिः= 10^39

निर्वाद्यम्= 10^41

मुद्राबलम्= 10^43

सर्वबलम्= 10^45

विषमग्नागतिः= 10^47

सर्वाग्नः= 10^49

1050 से अधिक परिमाण

विभूतांगम्= 10^51

तल्लाक्षणम्= 10^53

ஏகம் = 1

த³ஸ²கம் = 10

ஸ²தம் = 100

ஸஹஸ்ரம் = 1000

த³ஸ²ஸஹஸ்ரம் = 10000

லக்ஷம் = 100000

த³ஸ²லக்ஷம் = 106

கோடி = 107

அயுதம் = 109

1010 ஸே அதி⁴க பரிமாண

நியுதம் = 1011

கங்கரணம் = 1013

விவர்ணம் = 1015

பரார்த⁴​: = 1017

நிவாஹ​: = 1019

உத்ஸங்க³​: = 1021

ப³ஹுலம் = 1023

நாக³ப³ல​: = 1025

திதிலம்ப³ம் = 1027

வ்யவஸ்தா²ன – ப்ரஜ்ஞாபதி​: = 1029

ஹேதுஹீலம் = 1031

கராஹு​: = 1033

ஹேதவிந்த்³ரீயம் = 1035

ஸம்பத-லம்ப⁴​:= 1037

க³ணனாக³தி​:= 1039

நிர்வாத்³யம்= 1041

முத்³ராப³லம்= 1043

ஸர்வப³லம்= 1045

விஷமக்³னாக³தி​:= 1047

ஸர்வாக்³ன​:= 1049

1050 ஸே அதி⁴க பரிமாண

விபூ⁴தாங்க³ம்= 1051

தல்லாக்ஷணம்= 1053

-Mahabharat according to Kurukkal

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

ekam1

dasam 10

satam 100

sahasram 1000

ayutham10,000

laksham 100000

parapurvayutham10,00,000

koti 10000000

arpudham 100000000

padmakam 1000000000

karvam 10000000000

nikarvam 100000000000

bruntham 1000000000000

mahasarojam 10000000000000

sangam 100 00 00 00 00 00 000

avaramahasanagam

samudram 1 00 00 00 00 00 00 00 00

madhyam

parartham

samnjak imam sankhyaam vidhu: Pandithaa;

–SUBHAM—

சிவபெருமானின் விநோத அஸ்திரம்! எரி, அரி, கால்!! (Post No.4197)

Written by London Swaminathan

 

Date: 9 September 2017

 

Time uploaded in London- 16-10

 

Post No. 4197

 

Pictures are taken from various sources; thanks.

 

தேவாரத்தில் சம்பந்தப் பெருமான்) அற்புதமாகப் பாடி வைத்திருக்கிறார். திரிபுரங்களை எரிக்க சிவபெருமான் பயன்படுத்திய அற்புத அஸ்திரம் “எரி, அரி, கால்!” அதாவது அக்னி, திருமால், வாயுதேவன்.

வேதம் போற்றும் மூன்று தேவர்கள் இந்த மூவர். இவர்களை ஒரு சேர விடுத்தாராம். முதலில் பாடலையும் கருத்தையும் காண்போம். பிறகு விஞ்ஞானச் செய்திகளை ஆராய்வோம்:

 

கல் ஆல் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்

எல்லாம் ஒரு தேராய் அயன் மறைபூட்டி நின் று உய்ப்ப

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்

வில்லால் எயில் எய்தான் இடம் வீழிம் மிழலையே

 

பொருள்

கல்லால மரத்தின் கீழிருந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உறைத்த பெருமானே! எங்களைக் காப்பாற்றுக என்று தேவர்கள் எல்லாம் வணங்கி வேண்டி நிற்க,

ஒளி திகழும் சூரிய சந்திரரர்கள் தேர்ச் சக்கரங்களாகவும்,

பிரமன் சாரதியாகவும்,

வேதங்கள் குதிரைகளாகவும் திகழ

காற்றுப் போன்று வேகமாகச் செல்லும்

எரிக்கும் நெருப்பைக் கொண்டு,

திருமாலாகிய அம்பினால்,

மேருமலையயை வில்லாகவும்,

வாசுகி எண்ணும் பாம்பை நாணாகவும்,

கொண்டு அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தான்.

அவனுடைய இடமாவது திருவீழிமிழலை

எல்=ஒளி, கோல்=அம்பு, எரி=அக்னி, அரி=திருமால், காற்று=வாயு

 

திருநெடுங்களப் பாடலில் சம்பந்தர் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:

கூறு கொண்டாய் மூன்றுமொன்றாக்

கூட்டியோர் வெங்கணையால்

மாறுகொண்டோர் புரமெரித்த

மன்னவனே……………………

 

பொருள்

உமா தேவியை ஒருபாகத்தில் கூறாகக் கொண்டாய்;  நெருப்பு, காற்று, திருமால் ஆகிய மூன்றும் இணைத்து ஓர் அம்பு ஆக்கி அதனைச் செலுத்தி முப்புரங்களைக் கொண்டாய்.

 

ஆக அசுர சக்திகளை அழிக்க திருமாலின் உதவி தேவை

 

வேதத்தில் அங்கொன்று இங்கொன்றுமாக எடுத்து அனர்த்தம் சொல்லும் வெள்ளைகா ர ர்கள் இது போன்ற அதிசய விஷயங்களை விட்டு விடுவார்கள். ஆகாயத்தில் தொங்கிய (FLOATING METAL FORTS)  கோட்டைகள் என்ன? வெளி உலகவாசிகளின் (ALIEN ATTACK) தாக்குதலா?  தேவர்களுக்கு அந்தக் கோட்டையில் இருந்துகொண்டு அவர்கள் தொல் லை தர, சக்திவாய்ந்த தேவர்கள் அஞ்சியது ஏன்?

 

ஸ்டார்வார்ஸ் ஏவுகணைத் (STARWARS PROJECT- MISSILE PREVENTION) தடுப்பு திட்டத்தை விட, பெரிய திட்டத்தில் முச்சக்திகளை இணைத்து சிவபெருமான் மூன்று கோட்டைகளை எரித்தது எப்படி?

இதுபோன்ற பல கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தோன்றுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேதத்தில் உள்ள வாசகம் திரிபுராந்தகன். அக்காலத்தில் கற்பனைக் கதை எழுதக் கூட இந்த விஷயங்கள் அவர்களுக்குப் புரிபட்டிராது. எதிர்கால  அறிவியல் விளக்கம்தான் இத்தகைய புதிர்களை விடுவிக்கும்!

 

–subham–

கம்பன் பாட்டில் கீதை வரிகள் (Post No.4190)

Written by London Swaminathan

 

Date: 7 September 2017

 

Time uploaded in London- 12-50

 

Post No. 4190

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்

தர்மசம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே

–பகவத்கீதை 4-8

 

பொருள்

 

நல்லோரைக் காத்தற்கும், துஷ்டர்களை அழித்தற்கும், தருமத்தை நிலைநாட்டுதற்கும் யுகம் தோறும் வந்துதிப்பேன்

 

 

இதே பொருள் தொனிக்கும் கம்பன் பாடல் இதோ!

அறம்தலைநிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்தநீதித்

திறம்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்

இறந்து உகநூறித்தக்கோர் இடர்துடைத்து ஏகைஇண்டுப்

பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

–பிணிவீட்டுப் படலம், சுந்தர காண்டம்

 

பொருள்

 

தன்னுடைய பொன்னடிகளைப் போற்றுபவரின் பிறப்பை அறுக்கும் அந்தப் பரம்பொருள் (ராமன்),

அறம் தலை நிமிர்ந்துவளரச்செய்து,

வேதங்கள் உலக உயிர்களிடத்தில் கருணைகொண்டு சொல்லிய

நீதியின் வழிகளை உலகத்தால் அறிந்து மேற்கொண்டு ஒழுகும்படி அவர்களை நன்வழியில் செலுத்தி,

கொடியவர்கள் இறக்கும்படி அழித்து,

நல்லவர்களின் துன்பங்களைப் போக்கி

அதன்பின்பு

தனக்குரிய இடத்துக்கே செல்லுமாறு

இப்பொது இங்கே அவதாரம் செய்துள்ளான்

–இவை எல்லாம் அனுமான் கூறியது

 

கீதைக்கும் கம்பனுக்கும் உள்ள தொடர்பைக் காட்ட பெரிய நிபுணர் குழு தேவை இல்லை. இரண்டையும் படித்தவர்க்கு உடனே புரிபடும்

செய்தி:

நல்லோரைக் காக்க

தீயோரை அழிக்க

அறத்தை நிலைநாட்ட ராமன் அவதாரம்

அனுமான் அறிவிப்பு

 

–subham–

350 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தையானந்தர்! (Post No.4181)

Written by S.NAGARAJAN

 

Date: 3 September 2017

 

Time uploaded in London- 7-17 am

 

Post No. 4181

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Pictures are representational only; no relationship to the article.

 

 

சென்னையிலிருந்து வெளி வரும் சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

விஜயதசமியன்று தனது நான்காவது சமாதி நிலையை எய்தியவர். சுமார் 350 ஆண்டுகள் வாழ்ந்தவர். தனது முந்தைய சமாதிகளைத் தனதே என்று கூறி அருளியவர். ஸ்ரீகுழந்தையானந்தரின் வியக்கத்தகும் சரித்திரம் இதோ!

 

350 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தையானந்தர்!

 

                      ச.நாகராஜன்     

 

குழந்தையானந்தரின் அவதார தோற்றம்

மீனாட்சியின் அருள் விளையாடல்கள் அன்றும் நிகழ்ந்தன, இன்றும் நிகழ்கின்றன, என்றும் நிகழும்.

அவற்றை உணர்ந்து அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கும் பக்தர்கள் அம்பிகையின் செல்லக் குழந்தைகளே!

ஸ்ரீ குழந்தையானந்தர் என்ற பெயரில்  மதுரையில் உலாவி வந்து ஏராளமானோருக்கு அருள் பாலித்த பெரும் மகானின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர்  குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.

 

ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.

“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.

நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை.  கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.

அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று  மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.

ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.

ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு  பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான். எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று உறுதி படக் கூறினாள்.

 

சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.

இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்

இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.

அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை விடு என்று உத்தரவு பிறந்தது.

அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.

அங்கு குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்ம்னை நோக்கித் தவழ்ந்து சென்றது.

பிரிய மனமின்றி ராமனை கோவிலில் விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.

இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.

அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.

ஏழு வய்தான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அருள் ஆணை பிறந்தது.

கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.

முதல் சமாதி

குருநாதரிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராமனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள்  என்ற பெயர் ஏற்பட்டது. இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராள்மானோர் தரிசித்து அருள் பெற்றனர்.

த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.

இரண்டாவது சமாதி

பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார். அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்ட்ம் நீங்கிற்று. ப்ல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.

ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே. ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.

ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.

மூன்றாவது சமாதி    

நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.

பின்னர் தென்காசியில்  மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.

நான்காவது சமாதி

மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார். அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.

சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூவாண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது. அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது. இதனால் குழந்தையானந்தர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்

பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின்  அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.

இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் நான்காவது சமாதியை அடைந்தார்.

1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். ம்காலிங்க்ம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.

சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர். ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.

அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?

அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.

 

மதுரையில் அரசரடி அதிஷ்டானம்

ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார். சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம். அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.

இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.

அவர் சமாதியின் உள்ளே இருக்கிறார, அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!

முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்

ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.

 

தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன்  முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.

குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.

பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின் விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.

ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது மதுரை அரசரடி அதிஷ்டானத்தில் அவரை வணங்கி அருள் பெறலாம்!

                                                           ******

(இந்தக் கட்டுரை எங்கள் குடும்ப நண்பரும் பிரபல பத்திரிகையாளருமான திரு கே.எஸ்.வி. ரமணி அவர்களால் ஆராய்ந்து எழுதி ஜூன் 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள் திவ்ய சரிதம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது – கட்டுரையாளர்)

பெங்களூர் சீனிவாசன் உலகப் புகழ் பெற்றது எப்படி? (Post No.4180)

Written by London Swaminathan

 

Date: 2 September 2017

 

Time uploaded in London- 16-30

 

Post No. 4180

 

 

பெங்களூரில் 1917ஆம் ஆண்டில் நவம்பர் 13 தீபாவளித் திருநாள். ராமா சாஸ்திரி, வெங்கலெட்சுமி அம்மாளுக்கு தவப் புதல்வராக அவதரித்தார் ஸ்ரீனிவாசன்.  சிறு வயதில் நல்ல துணிசல் மிக்கவர். ஒரு அமாவாசை தினத்து மாலை வேளையில், இருள் சூழச் சூழ ஒரே பரபரப்பு.  இருள் சூழ்ந்த குளத்துக்கு பக்கத்தில் நின்ற சிறுவர்கள் குளத்தில் வசிக்கும் பேய்கள் பற்றி கிசுகி சுக்கத் துவங்கினர். பேய்கள் வாழும் குளத்துக்கு யார் தனியாகச் சென்று திரும்பி வர முடியும் என்று சவால் விட்ட வண்ணம் இருந்தனர். திடீரென ஒரு சிறுவன் விறு விறு என்று குளத்துக்கு நடந்தான்.கை, கால் கழுவி வந்தான். எல்லோரிடமும் காட்டினான். பேய்களும் இல்லை; அதைக் கண்டு பயப்படுபவனும் இல்லை என்ற செய்தி எல்லோருக்கும் கிடைத்தது. அவன் தான் ஸ்ரீனிவாசன்

 

குண்டு என்ற மாணவன் மகா சுட்டி. விஷமத் தனத்தின் உருவகம். விளையாடும் சிறுவர்களுக்கு இடையே சண்டைமூட்டி வேடிக்கை பார்ப்பவன். யாரும் அவனை அடக்கத் துணிவில்லை. ஒரு நாள் அவனைவிட ஒல்லியான ஒரு சிறுவன் குண்டுவுடன் மோதினான். குண்டுக்குத் திகைப்பு. எவ்வளவோ சமாளிக்க முயன்றும் முடியவில்லை. குண்டு மல்லாந்து விழவே அவன் மீது நின்றுகொண்டு ஒரு வெள்ளைத் தாளைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அதில் இனி எந்தச் சிறுவர்க்கும் தொல்லை கொடுப்பதில்லை என்று எழுதி வாங்கினான். குண்டுவை வீழ்த்திய அவந்தான் ஸ்ரீனிவாசன்.

ராமா சாஸ்திரிகள் பெங்களூரில் ஒரு ஆரம்ப்பபள்ளி ஆசிரியர். சீனிவாசன் எட்டாம் வகுப்பு மாணவன். தனது மகன் சரியாகப் படிப்பதில்லை என்று எண்ணிய ராமா சாஸ்திரி பையனின் கையில் பிரம்பால் அடிக்கத் தொடங்கினார். அவன் ஒரு கையில் நிறைய அடி வாங்கி விட்டதால் அடுத்த கையை நீட்டினான். அதிலும் அடிக்கத் தொடங்கினார். அந்த வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்த வெங்கட்ரா மய்யர் என்னும் ஜோதிடர் ஓடி வந்து தடுத்து நிறுத்தி, கையைத் தடவிக் கொடுத்தார். வியப்பும் திகைப்பும் மேலிட்டது ஜோதிடருக்கு.

 

ராமா சாஸ்திரியிடம் சொன்னார்: நீங்கள் பெரும் பாக்கியசாலி. தலை சிறந்த யோகி இங் கே பிறந்துள்ளார். அடுத்த சங்கராச்சாரியாராக இவர் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்போது நீங்களே உங்கள் மகன் காலில் விழ நேரிடும்.

வெங்கட்ரா மய்யர் சொன்னது உண்மயாயிற்று. சிருங்கேரி மடத்தின் 35ஆவது சங்கராச் சாசார்யாராக — அபிநவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகள் — என்ற பெயரில் பட்டம் ஏற்று 1989 வரை கொடி கட்டிப் பறந்தார்.

இது போன்ற பல நல்ல செய்திகளும் அவருடைய முக்கிய உபதேசங்களும் ஒரு சிறிய புத்தகத்தில் கிடைக்கிறது. சிருங்கேரி மடத்துக்குச் சென்றாலோ நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கலாம்.

 

எங்கள் பாக்கியம்

சிருங்கேரி மஹாசந்நிதானம் ஒரு முறை மதுரைக்கு வந்தபோது, எங்கள் வீட்டிற்கு அழைத்து,  நாங்கள் பாத பூஜை செய்தோம். முடிவில் சஹோதர, சஹோதரியை தனித் தனியே அழைத்து பழம் கொடுத்து ஆசீர்வதித்தார

These pictures are the Rare Photographic Exhibition held at Madurai Setupati High School in August 2017.

—subham–

‘நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம்’ (Post No.4108)

Written by London Swaminathan


Date: 23 July 2017


Time uploaded in London- 19-58


Post No. 4108


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம்  செல்வம் செயற்கு (குறள் 375)

பொருள்

செல்வத்தை ஈட்டும் பணியில் (பிஸினஸில்) , கெட்ட காலம் இருந்தால் நல்லன எல்லாம் தீயதாகவே முடியும். நல்ல காலம் இருந்தாலோ கெட்டதும் கூட நல்ல பலன்களைத் தரும்.

திருவள்ளுவரின் திருக்குறளில் ஊழ் என்னும் அதிகாரத்தில் பத்து பாடல்களில் தீவினையின் சக்தியை விதந்து ஓதுகிறார். மேலும் சில குறள்களிலும் நல்வினை தீவினை பற்றிச் செப்புகிறார்.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகாதம (குறள் 376)

 

இறைவனுடைய அருள் இல்லாவிடில் கோடிகோடியாய்ப் பொருள் வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாது. எவ்வளவுதான் காப்பாற்ற முயன்றாலும் தனக்கு வினைப்படி உரியன அல்லாதவை நிற்காது. உரிய பொருளை வேண்டாமென்று தூக்கி எறிந்தாலும், அதே வினைப்படி, அது அவரிடமே திரும்பி வந்துவிடும்.

 

திருவள்ளுவரின் நெருங்கிய நண்பரான ஏலேல சிங்கன், திருவள்ளுவர் சொற்படி தான, தருமம் செய்துவிட்டு மிச்சத்தைத் தங்கக் கட்டிகளாக மாற்றி கடலில் எறிந்தபோதும், சுறாமீன் வயிற்றில் ஏலேல சிங்கன் முத்திரைகளுடன் அதைப் பார்த்த மீனவர்கள் அவரிடமே திருப்பிக் கொடுத்தனர்.

 

வித்யாரண்யர் தங்கம் வேண்டி தவம் செய்த போது லெட்சுமி அவர் முன்னால் தோன்றி இந்த ஜன்மத்தில் உனக்குச் செல்வம் வரும் நல்வினை இல்லை என்றவுடன் அவர் சந்யாசம் வாங்கினார். சந்யாசம் வாங்கினால் அது அடுத்த ஜன்மம் எடுத்ததாகிவிடும். அப் போதுதான் அவருக்குத் தெரிந்தது — உண்மையான சந்யாசி தங்கத்தைத் தொட முடியாது என்று. உடனே அதை ஆடு மேய்க்கும் இடையர்களிடம் கொடுத்து மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தாபித்து முஸ்லீம்களை தென்னாட்டை விட்டு விரட்டினார்.

 

ஆகவே ஒருவரின் வினைப்படிதான் செல்வம் ‘’வரும்- போகும்’’ என்பது துணிபு. ஆனால் இந்த ஜன்ம நல்வினையால் மேலும் செல்வம் பெறலாம். அதிக தவம் செய்து வினையையும் வெல்லலாம்.

 

இதே கருத்தை விளக்கும் வேறு சில பாடல்களைக் காண்போம்

 

நீதிவெண்பாவில் ஒரு பாடல் உள்ளது:

தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்

தானே யனுபவித்தல் தப்பாது – தானூறு

கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை

நாடிநிற்கு மென்றார் நயந்து

பொருள்:

பெண்ணே! அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர்.  ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது

 

கற்பம்= பிரம்மாவின் ஆயுட்காலம், ஒரு ஊழி

‘நல்வழி’யும் இதையே சொல்லும்:

 

தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்

பூந்தாமரையோன் பொறிவழியே – வேந்தே

ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய்

வெறுத்தாலும் போமோ விதி

நல்வழி 60

 

நாலடியார் செய்யுளும் இதை உறுதி செய்யும்:

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த

கிழவனை நாடிக்கொளற்கு

 

ஒரே கருத்தைப் பல புலவர்கள் சொல்லுவது படித்து ரசிக்கத்தக்கது.

TAGS: நல்வினை, தீவினை, குறள், நல்வழி, நீதிவெண்பா

—சுபம்—

 

சந்தோஷம் அடைய உதவும் நான்கு விஷயங்கள்! (Post No.4106)

Written by S NAGARAJAN

 

Date: 23 July 2017

 

Time uploaded in London:- 5-31 am

 

 

Post No.4106

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

புத்த போதனை

 

சந்தோஷம் அடைய உதவும் நான்கு விஷயங்கள்!

ச.நாகராஜன்

 

புத்த மதத்தின் கொள்கைகளை உள்ளது உள்ளபடியும் புத்தரின் போதனைகளை விளக்கமாகவும் சொல்ல மலேசியாவில் 1964இல் புத்த தர்ம பிரசாரகர் ஸ்ரீ கே. ஸ்ரீ தம்மானந்தா அருமையான சொற்பொழிவுகளை ஆற்றினார். ஏராளமானோர் அவற்றில் பங்கு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கமும் பெற்றனர்.

சந்தோஷம அடைய உதவும் வழிகளைப் பற்றி புத்த பகவான் கூறியதைப் பற்றி அவர் ஒரு உபந்யாசத்தில் கூறியதன் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம்.

 

 

    ஒரு சமயம் திக்ஹஜானு என்ற ஒருவன் புத்தரைத் தரிசித்தான். “ஐயனே!நாங்கள் எல்லாம் சாமானியர்கள். குடும்பம், மனைவி, மக்கள் என்று வாழ்ந்து வருபவர்கள். எங்களைப் போன்றோருக்கு இந்த உலகத்திலும் அதற்குப் பின்னரும் சந்தோஷத்தைத் தரும் விஷயங்கள் என்னென்ன என்பதைச் சொல்லி அருள வேண்டுகிறேன் என்று இறைஞ்சினான்.

 

 

புத்தர் கருணை கூர்ந்து அவனை நோக்கி இப்படி அருளினார்:

இந்த உலகத்தில் சந்தோஷத்தை அடைவதற்கு நான்கு விஷயங்கள் உள்ளன.

 

 

முதலாவது உத்தான சம்பதம்.

 

ஒரு மனிதனானவன் திறமை வாய்ந்தவனாகவும், தொழில் நேர்த்தி கொண்டவனாகவும் ஆர்வம் உடையவனாகவும், மிகுந்த சக்தி வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். இது தான் உத்தான சம்பதம்.

 

இரண்டாவது அர்த்த சம்பதம்.

தர்மமான வழியில் தான் சம்பாதித்த பணத்தை அவன் நன்கு நெற்றியில் வியர்வை சிந்த அதைப் பாதுகாக்க வேண்டும். இது தான் அர்த்த சம்பதம்.

 

மூன்றாவ்து கல்யாண மித்தம்.

அவன் நல்ல நண்பர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். நல்ல விசுவாசமான, சம்பாதிக்கின்ற, நல்ல காரியங்களைச் செய்யும், தாராள மனதைக் கொண்டிருக்கும் புத்தி கூர்மை மிக்க நண்பர்களை அவன் கொண்டிருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட நண்பர்கள் தீமையான வழியில் அவனைச் செல்ல விடாமல் நல்ல வழியில் நடத்திச் செல்பவர்களாக இருத்தல் வேண்டும்.

 

 

நான்காவது சம ஜீவிகதம்.

அவன் தனது வருவாய்க்குத் தக்க விதத்தில் நியாயமான வழியில் செலவழிக்க வேண்டும்.அதிகமாகவும் செலவழிக்கக் கூடாது; குறைவாகவும் செலவழிக்கக் கூடாது. பேராசையுடன் செல்வத்தைச் சேமித்து வைக்கக் கூடாது; ஊதாரியாக இஷ்டப்படி செலவழிக்கவும் கூடாது. அதாவது தன் வருவாய்க்குத் தக்க விதத்தில் வாழ வேண்டும். இதுவே சம ஜீவிகதம்.

 

 

இந்த நான்குமே சந்தோஷத்தை அடைவதறகான விஷயங்கள்.

இதன் படி நடந்தால் சந்தோஷமே நீடித்து நிலைக்கும்.

புத்தரின் அருளுரை திக்ஹஜானுக்கு மட்டும் கூறப்படவில்லை. மனித குலத்தில் சந்தோஷம் அடைய விரும்பும் அனைவருக்காகவுமே உபதேசிக்கப்பட்டது.

அத்துடன் இந்த உலகத்திற்குப் பின்னாலும் சந்தோஷமாக இருக்க நான்கு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புத்த பிரான் அருளினார்.

 

முதலாவது சிரத்தை.

 

ஒழுக்கம், ஆன்மீகம் மற்றும் அறிவு ஆகியவற்றில் அவன் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும். இதுவே சிரத்தை.

 

 

அடுத்தது சீலம்.

 

வாழ்க்கையைக் கெடுக்கும் பேரபாயங்களான திருடுதல், ஏமாற்றுதல்,அடுத்தவன் மனைவி மீது ஆசை வைப்பது, தவறான வழிகளில் இறங்குவது, மதியைக் கெடுக்கும் குடி போதையில் இறங்குவது ஆகியவற்றிலிருந்து அவன் விலகி இருக்க வேண்டும். இதுவே சீலம் எனும் நல்லொழுக்கம்.

 

 

அடுத்து மூன்றாவது ககா.

 

அவன் தர்ம சிந்தையுடன் இருத்தல் வேண்டும். பணத்தின் மீது பற்று வைக்காமல் தயாள மனதுடன் நடந்து கொள்ள வேண்டும். இதுவே ககா.

 

அடுத்து நான்காவது பன்னா.

 

துன்பத்தை ஒரேயடியாக ஒழிக்கும் ஞானத்தை அவன் விருத்தி செய்து கொள்ள வேண்டும். அதுவே நிர்வாணத்திற்கு வழி வகுக்கும்.

 

இதுவே பன்னா.

 

ஆக சிரத்தா, சீலம், ககா, பன்னா ஆகிய நான்கையும் கடைப்பிடித்தால் இந்த வாழ்விற்குப் பின்னாலும் சந்தோஷம் கிடைக்கும் என்று புத்தர் அருளினார்.

 

 

வருவாயை எந்த விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கமான விவரங்களைக் கூட அவர் விளக்கினார்.

சிகலா என்ற பெயருடைய வணிகன் புத்தரிடம் இது பற்றிக் கேட்க புத்த பகவான், வருவாயில் நான்கில் ஒரு பங்கை அன்றாட வாழ்விற்கும், நான்கில் இரண்டு பங்கை அவன் வணிக முதலீட்டிற்காகவும், நான்கில் ஒரு பங்கை ஆபத்துக் காலத் தேவைக்கான சேமிப்பிற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று அருளினார்.

 

 

அனதபிண்டிகா என்ற ஒரு சீடர் புத்தரின் மீது பக்தி கொண்ட அணுக்க பக்தர். அவர் தான் சவத்தி என்ற இடத்தில் ஜேதவான மடாலயம் என்ற மடாலயத்தை அமைத்தவர். பெரும் வணிகரான அவரிடம் ஒரு சமயம் புத்த பிரான் கூறினார்: “சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒரு சாமானியனுக்கு இந்த உலகத்தில் நான்கு விதமான சுகங்கள் உள்ளன.

 

 

முதலாவது ஆர்த்தி சுகம்.

நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பொருளாதார ரீதியில் கஷ்டமில்லாமல் பணம் இருக்கும் பாதுகாப்பினால் வரும் சுகம்.

 

 

இரண்டாவது போக சுகம்

தான் சம்பாதித்த பணத்தை தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் அத்துடன் பல நல்ல காரியங்களுக்காகவும் செலவழிப்பதனல் வரும் சுகம் போக சுகம் ஆகும்.

 

அடுத்து மூன்றாவது அனான சுகம்.

எந்த வித கடனும் இல்லாமல் கடன் தொல்லையின்றி இருப்பது அனான சுகம்.

 

நான்காவது அனாவஜ்ஜ சுகம்.

ஒரு வித தப்பும் இல்லாத, எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தீமையைக் கொண்டிராத, தூய்மையான வாழ்க்கையை வாழ்வதினால் வரும் சுகம் அனாவஜ்ஜ சுகம்.

 

 

புத்தரின் அருளுரையில் அவர் கூறிய முதல் மூன்று சுகங்கள் பொருளாதார மற்றும் உலோகாயத ரீதியிலான சுகங்கள்.

நான்காவது சுகமோ தூய்மையான வாழ்வினால் கிடைக்கும் ஆன்மீக சுகம் ஆகும்.

 

 

புத்தரின் போதனைகள் இப்படித் தெளிவாயும் சுருக்கமாயும், அமைந்திருந்தன. அவரை அண்டியோர் புத்த வ்ட்டத்திற்குள் இழுக்கப்பட்டு நல் வாழ்வை மேற்கொண்டு சுகத்தையும் சந்தோஷத்தையும் அடைந்தனர்.

 

காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட இந்த போதனைகள் இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும்!

***

 

சிவபெருமானுக்கு நக்கீரர் சவால் (Post No.4081)

Written by London Swaminathan
Date: 14 July 2017
Time uploaded in London-21-27
Post No. 4081
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

திருவள்ளுவர் சரித்திரத்தின் (Year 1931) இறுதியில் நக்கீரருக்கும் சிவ பிரானுக்கும் இடையே நடந்த சண்டை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ள்து.

 

சண்டை எப்படி துவங்கியது?

மதுரையை ஆண்ட செண்பக பாண்டியனுக்கு ஒரு சந்தேகம்; பெண்களின் கூந்தலில் இயற்கையாக மணம் உண்டா?

 

அமைச்சரவையில் யாருக்கும் பதில் தெரியாததால், நாடு முழுதும் தண்டோராப் போட்டு யார் ஒருவர் சரியான விடை தருகின்றனரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று அறிவித்தான்.

இதைக் கேட்ட ஒரு ஏழைப் பிராமணன் மதுரை மீனாட்சி கோவிலில் நின்றுகொண்டு அடக்கடவுளே! எனக்கு மட்டும் விடை தெரிந்தால் என் வறுமை எல்லாம் நீங்குமே! என்று அங்கலாய்த்தான். அந்த ஏழைப் பார்ப்பனனின் குரலைச் செவிமடுத்த சிவபிரான் மனமிறங்கி ஒரு திருவிளையாடல் செய்வோமே என்று அந்த அந்தணனிடம் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் பின்வருமாறு:-

 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயிலியற்

செறியெயிற் றருவை கூந்தலின்

நறியவுமுளவோ நீயறியும் பூவே

குறுந்தொகை பாடல் 2

பொருள்:-

 

பூந்தாதுக்களை ஆராய்ந்து தேன் உண்ணும் வண்டே! என்னிடத்துள்ள அன்பின் காரணமாகச் சொல்லாமல், உன் கண்ணால் கண்டபடி சொல்வாயாக. நீ அருந்திய மலரில், இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல நல்ல மணமுடைய மலர்களும் உளவோ? சொல்வாயாக.

 

 

இதைக் கொண்டு பாண்டிய ராஜன் சபையில் வாசித்த தருமி என்ற பிராமணனை நக்கீரன் என்ற பார்ப்பனப் புலவர் சகட்டுமேனிக்குக் கேள்விகள் கேட்டார். பாடலில் சொற் குற்றமும் பொருட் குற்றமும் இருப்பதாகப் பழி சுமத்தினார்.

 

தருமி மீண்டும் கோவிலுக்குச் சென்று புலம்பவே மறுநாள், சிவபெருமானே நேரில் வந்து நக்கீரருடன் மோதினார். அப்போது சிவன் சொன்னதாவது:

 

அங்கங் குலைய அரிவாளி நெய் பூசிப்

பங்கம் படவிரண்டு கால்பரப்பிச் சங்கதனை

கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை

ஆராயும் உள்ளத்தவன்

 

பொருள்:

எண்ணையைப் பூசிக்கொண்டு அங்கமே ஆடும்படி உடலை எல்லாம் குலுக்கி, கால்களைப் பரப்பி வைத்துக்கொண்டு சங்குகளை அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா என் பாட்டைக் குறை சொன்னான்?

 

இதைக் கேட்டவுடன் புலவர் நக்கீரனுக்குக் கோபம் வந்தது.

 

நக்கீரர் சொன்னார்

சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்

பங்கமறச் சொன்னாற் பழுதாமோ – சங்கை

அரிந்துண்டு வாழ்வோம் அரனே நின்போல

இரந்துண்டு வாழ்வதில்லை

 

பொருள்:

ஏய்! சிவா! நாங்களாவது சங்குகளை அறுத்து வளையல் மோதிரம் செய்யும் வேளாப் பார்ப்பான் என்ற அந்தண ஜாதியைச் சேர்ந்தவர்கள்; உனக்கோ குலம் கோத்திரம் ஏதுமில்லை

நாங்களாவது சங்குகளை அறுத்து அதை விற்று வாழ்க்கை நடத்துகிறோம்; உன்னைப் போல பிச்சை எடுத்து வாழவில்லையே.

 

இதற்குப் பின்னர் வாக்கு வாதம் முற்றவே சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறக்கவே நக்கீரன் அடி பணிந்தார் என்பது திரு விளையாடல் புராணக் கதை.

 

–subham–

பசு மாட்டுக்கு பள பள தோல் வந்தது எப்படி? (Post No.4069)

Translated by London Swaminathan
Date: 10 July 2017
Time uploaded in London- 14-46
Post No. 4069

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பசு மாட்டுக்கு கொம்பும் குளம்பும் வந்தது எப்படி என்பதை போன வாரம் சொன்னேன். இன்று அதற்கு பளபளப்பான தோல் எப்படி வந்தது என்று பார்ப்போம். இது சதபத பிராமண (3-1-2-16) த்தில் உள்ள கதை.

 

“பசு மாட்டின் மீதுள்ள அதே தோல்தான் முன்னர் மனிதன் மீது இருந்தது. தேவர்கள் சொன்னார்கள்: ‘இந்த பூமியில் உள்ள எல்லோருக்கும் உணவு மற்றும்  வேறு பொருள்களை தருவது பசுதான்; ஆகையால் நாம் இப்போது மனிதன் மீதுள்ள தோலை எடுத்து பசுமாட்டுக்குப் போர்த்துவோம். அப்படிச் செய்தால் அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கும்’

 

இதன் பிரகாரம் மனிதனின் தோலை உரித்து பசு மாட்டின் மீது போர்த்தினார்கள்; அதற்குப் பின்னர்,  அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கியது

 

மனிதன் தோல் உரிக்கப்பட்டதால், அவனை ஒரு புல்லோ, முள்ளோ அல்லது வேறு ஏதாவதோ  அறுத்தால் அவன் மீது ரத்தம் வருகிறது. பின்னர் தேவர்கள் அவனுக்கு தோல் என்னும் ( தோலுக்குப் பதிலாக) உடையை அணிவித்தார்கள். இதனால்தான் மனிதன் மட்டும் உடை அணிகிறான். ஆகையால் ஒருவன் சரியாக ஆடை அணிய வேண்டும். அப்போதுதான் அவன் முழுமை அடைகிறான். இதனால்தான் அவலட்சணமான மனிதனாக இருந்தாலும் எல்லோரும் உடை அணிவதை  எதிர் பார்க்கிறார்கள்; அதுதான் அவனுடைய தோல்.

 

ஒரு பசு மாட்டிற்கு முன்னால் கூட அவன் நிர்வாணமாக நிற்கக்கூடாது ஏனெனில் பசுமாடு பயந்து ஓடிவிடும்; மனிதன் தன் மீதுள்ள ‘அவனுடைய தோலை’ எடுத்துக் கொண்டு விடுவானோ என்று அதற்கு அச்சம்.

 

 

ஆகையால்தான் நல்ல உடை அணிந்தவன் மீது பசுக்கள் அன்புடன் இருக்கின்றன.

 

இந்தக் கதையில் பல நீதிகள் உள்ளன. மேம்போக்காகப் பார்த்தால் “குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம், பட்டனம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்” என்ற சின்னக் குழந்தை கதை போல இருக்கும். ஆனால் அஸ்வமேதம், ராஜசூயம் வாஜபேயம் போன்ற மாபெரும் யக்ஞங்களை விவாதிக்கும் – விவரிக்கும் — சதபத பிராமண நூலில் இது இருப்பதால் இது ரகசிய மொழியில் – மறை மொழியில் சொல்லப்பட்ட கதை என்பது விளங்கும்

 

யாராவது நிர்வாணமாக நின்றால் பசுக்கள் பயப்படுமாம். இந்த ஆள் உடை இல்லாமல் வ ந்தி      ருக்கிறான்; நம்முடைய உடைகளை (தோல்) எடுத்துக்கொள்வான் என்று நினைத்து ஓடிவிடுமாம்.

 

நல்ல உடை அணிந்தவர்கள் இடம் பசுக்கள் அன்பு பாராட்டுவது இதனால்தான்.

 

இந்தக் கதையிலிருந்து பெறப்படும் நீதிகள் என்ன?

  1. மனிதன் தோலைப் போர்த்துமளவுக்கு பசு உயர்ந்த பிராணி; அது மனிதனுக்கு நிகரானது. இதை ருசுபிக்கும் வகையில் நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடல் (எண்.9) முதல் சிலப்பதிகாரம், தேவாரம் வரை பசுவையும் பார்ப்பனனையும் இணைத்துப் பேசியே புகழ்கின்றன.

 

2.இரண்டாவதாக பசுவுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்; ஒர் பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையைத் தர வேண்டும்; யாரும் நிர்வாணமாக நிற்கக் கூடாது அதற்காகத்தான் தேவர்கள் உடைகள் கொடுத்து இருக்கிறார்கள்.

 

(மனு ஸ்ம்ருதியும் பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்; பெண்களை அழ வைக்கும் எந்தக் குடும்பமும் வேருடன் அழியும் என்று எச்சரிக்கிறார்.)

 

பசு ஒரு புனிதமான பிராணி மட்டும் அல்ல; மிகவும் உபயோகப்படும் மிருகம். அதன் பால், வெண்ணெய், மூத்திரம், சாணி, தயிர் ஆகிய எல்லா வற்றையும் இந்துக்கள் அன்றாடம் பயன்படுத்துவர்.

 

எல்லாப் பிராணிகளுக்கும் இந்துக்கள் மதிப்பும் மரியாதையும் கொடுத்தாலும் பசுவுக்கு தனி இடம்; எறும்பு முதல் யானை வரை – என்ற மரபு வாக்கியம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளது. இத்தனைக்கும் உதவ இந்துக்கள் தினமும் ஐவேள்வி (பஞ்ச மஹா யக்ஞம்) செய்கிறார்கள். பசுவுக்கும் யானைக்கும் மட்டும் பூஜையும் செய்வார்கள்.

-சுபம்–