பட்டினத்தாரும் பம்பர விளையாட்டும்! (Post No.3563)

Written by London swaminathan

 

Date: 21 January 2017

 

Time uploaded in London:- 9-17 am

 

Post No.3563

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

பெரிய தத்துவங்களை அன்றாடம் காணும் சிறிய பொருட்களைக் கொண்டு விளக்குவதில் சமர்த்தர் பட்டினத்தார். காதற்ற ஊசி, ஒன்பது வாய் தோல் பை, எண் சாண் உடம்பு, ஆற்றில் கரைத்த புளி, ஒருவன் வாழ்நாளில் மூன்று முறை முழங்கும் சங்கு, உளியிட்ட கல் என்று நிறைய அழகான எடுத்துக்காட்டுகளையும் உவமைகளையும் நமக்களிக்கிறார்.

 

அவர் சிறு வயதில் நாம் எல்லோரும் விளையாடிய பம்பரத்தையும் பட்டத்தையும் கூடப் பாடலில் பதித்து, நம் மனதில் அரிய கருத்துகளைப் புதைக்கிறார்.

 

நமது உடல் பற்றி சந்யாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பது அத்தனையையும் சிலவரிகளில் சொல்லும் அழகே தனி அழகு!

 

 

 

பீற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்

அடலைப் பெரிய சுடலைத் திடருள்

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

ஓயா நோய்க்கிடம் ஓடு மரக்கலம்

மாயா விகாரம் மரணப் பஞ்சரம்

சோற்றுத் துருத்தி கானப் பட்டம்

விதி வழித் தருமன் வெட்டும் கட்டை

சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை

ஈமக் கனலில் இடு விருந்து

காமக் கனலில் கருகும் சருகு

 

என்று கோயில் திருப்பதிகத்தில் பாடி நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இப்படிப்பட்ட உஅடலுக்குத் தான் நாம் தினமும் அலங்காரம் செய்டு நேரத்தை வீணாக்குகிறொம். இதைவிட முக்கியமான விஷயங்களைப் புறக்கணிக்கிறோம் என்பது ப்ட்டினத்தாரின் ஆதங்கம்.

 

ஒரு அழகான வாலிபன் அல்லது யுவதியின் 20 வயதுப் படத்தையும் எண்பது வயதுப் படத்தையும் அகுகருகே வைத்துப் பார்த்தால் பட்டினத்தார் சொல்லும் செய்தி நன்கு விளங்கும்.

 

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம், கானப் பட்டம் (காற்றில் சலசலக்கும் பட்டம்) என்பன மிகவும் அருமையான உவமைகள்.

திருவள்ளுவரும் இந்த உடல் போடும் ஆட்ட பாட்டங்களை நமக்கு நினைவு படுத்துகிறார்:-

 

நில்லாதனவற்றை நிலையின என்றுணரும்

புல்லறிவாண்மை கடை (குறள் 331)

 

உலகில் அழியக்கூடிய பொருட்களை நிலையாக இருக்கப்போகிறது என்று எண்ணினால் அந்த சிற்றறிவு ஒருவருக்கு இழிவான நிலை ஆகும்.

 

இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்று அதே அதிகாரத்தில் (நிலையாமை) வேறு ஒரு குறளில் சொல்லிவிட்டார்:-

 

நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப்படும் (335)

 

நாக்கு பேச முடியாமல் இழுத்துக்கொண்டு கடைசி விக்கல் (மரணம்) வருவதற்கு முன்னரே ஒருவன் விரைவாக தரும கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். நல்லறங்களைச் செய்ய வேண்டும்.

 

ஒன்றே செய்க, அதுவும் நன்றே செய்க, அதையும் இன்றே செய்க என்ற ஆன்றோரின் வாக்கை இதை விட தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்?

 

 

இன்னொரு இடத்தில் பம்பரத்தையும் காற்றாடியையும் குறிப்பிடுகிறார் பட்டினத்தார்!

 

கோபத்தீ மூட்டும் கொல்லன் துருத்தியை

ஐம்புலப் பறவை விளைமரப் பொதும்பை

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை

காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை

 

என்று அடுக்கிக் கொண்டே போய்

 

எம்பெருமான் நின் இணையடிக்கபயம்

அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே

 

என்று இறைவனிடம் சரண் அடைந்து விடுகிறார். கோபத்தால் நாம் அனல் பறக்கும் மூச்சு விடுவதை ‘கொல்லன் துருத்தி’ என்றும் காசுக்காக நாம் ஆளாய்ப் பறப்பதை ‘காற்றாடி’ என்றும் சொல்லி கடவுளின் காலில்

விழுகிறார்.

 

அதுவும் கூட வள்ளுவன் சொன்னதே!

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல (குறள் 4)

 

விருப்பு வெறுப்பற்ற கடவுளின் காலில் விழுந்தவருக்கு எந்தக் காலத்திலும் துன்பம் வராது — என்கிறான் வள்ளுவனும்.

 

நாமும் பட்டினத்தார், வள்ளுவன் வாய்ச்சொல் வழி நிற்போம்.

 

–சுபம்–

மஹாலெட்சுமி வசிக்கும் இடங்கள்: புறநானூறு தகவல் (Post No.3560)

Written by London swaminathan

 

Date: 20 January 2017

 

Time uploaded in London:- 10-01 am

 

Post No.3560

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்

கைவிட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடா அள், திருவே;

விடாஅதோர் இவள் விடப்பட்டாரே

–வான்மீகியார், புறம் 358

பொருள்:

கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில் லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.

 

இந்தப் பாட்டில் பல சுவையான செய்திகள் உள்ளன:

 

லெட்சுமி இல்லறத்தாரிடம் இருப்பதைவிட துறவறத்தாரிடமே அதிகம் இருப்பாள்.

 

இரண்டாவது, வால்மீகி, மார்கண்டேயன், கௌதமன், சங்க வருணன், தாமோதரன், கேசவன் போன்ற நிறைய சம்ஸ்கிருதப் பெயர்களை உடைய புலவர்கள் சங்கத் தமிழ் புலவர்களாக இருந்துள்ளனர். ஆரிய- திராவிட வாதம் பேசும் பேதிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

 

மூன்றாவதாக, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நாளில் 7 பேர் அரசாண்ட வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.

 

நாலாவதாக, இதற்கு உரைஎழுதிய அறிஞர்கள் இது ராமாயணக் கதை பற்றியதால் இந்த புலவருக்கும் வால்மீகி என்று பெயர் என்று எழுதியுள்ளனர். அதாவது ராமாயணம் எழுதிய வால்மீகி வேறு; அவரை மிகவும் விரும்புபவர் என்பதால் இவரையும் வால்மீகி என்றழைத்தனர்.

ராமபிரான் எனக்கு ராஜ்யமே (திரு, லெட்சுமி) வேண்டாம் என்று சொல்லி கானகம் ஏகினான். இறுதியில் அவனிடமே ராஜ்ய லெட்சுமி வந்தாள்.

ஐந்தாவதாக, கிரேக்க மொழியில் ஏராளமான தமிழ் சொற்கள் இருப்பது பற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதினேன். ஐயவி என்ற தமிழ்ச் சொல்லே IOTA ஐயோடா என்ற கிரேக்க, ஆங்கிலச் சொல்லாக மாறியது. ஆங்கிலத்தில் துளிக்கூட இல்லை என்பதை  NOT ONE IOTA என்று விளம்புவர்

இதோ இன்னொரு லெட்சுமி பாடல்:–

 

பதுமம் கொடி நகர் மின் பைந்துளவு வில்வம்

கதிர் விளைவு சங்கு கடறீபம் –வதுவை மனை

நற்பரிபாற் பாண்டமிவை நாண் மலரா ணீங்காது

நிற்பிட நல்லோர் நெஞ்சுமே

 

–உவமான சங்கிரகம், ரத்தினச் சுருக்கம்

 

 

லெட்சுமி வசிக்கும் இடங்கள்:-

பதுமம்= தாமரை

கொடி – த்வஜம்

நகர் = நகரம்

மின் = மின்னல் ஒளி

பைந்துளவு = பச்சைத் துளசி

வில்வம் = வில்வம்

 

கதிர் விளைவு = நெற்கதிர்/ தானியம்

சங்கு = சங்கு (வலம்புரிச் சங்கு)

கடல் = சமுத்திரம்

தீபம் = விளக்கு

வதுவை மனை = கல்யாண வீடு

நற் பரி = நல்ல குதிரை

பால் பாண்டம் = பால் பொங்கும் பானை

இவை = இவை எல்லாம்

நாண்மலராள் = மஹலெட்சுமி

நிற்பிடம் = நிலைத்து நிற்கும் இடங்களாம்

நல்லோர் நெஞ்சுமே = நல்லவர்கள் உள்ளத்திலும் கூட (வசிக்கிறாள்)

 

–Subham–

 

காளிதாசன் காட்டும் அறுவகைப் படை வீரர்கள்! (Post No.3558)

Written by London swaminathan

 

Date: 19 January 2017

 

Time uploaded in London:- 21-11

 

Post No.3558

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய ஏழே நூல்களில் 70,000 விஷயங்களைச் சொல்லுகிறான் என்றால் அது மிகையாகாது. அவன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் நாலாவது சர்கத்தில் ரகுவின் படைகள் புறப்பட்ட போது குதிரைக்கு ஆரத்தி எடுத்தது பற்றிச் சொல்லுகிறான். அவனது ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படை) என்னும் நால்வகைப் படைகளில் ஆறு பிரிவுகள் இருந்தது பற்றி உரைகாரர்கள் பல அதிசய விஷயங்களைச் சொல்லுவர்.

குதிரை ஆரதி: வாஜி நீராஜனம்

 

வாஜி நீராஜனம் என்னும் சடங்கைச் செய்கையில் ஹோமத்தில் நன்கு மகிழ்விக்கப்பட்ட அக்னி வலமாகச் சுழன்றதால் அவனுக்கு (ரகு என்ற மன்னனுக்கு) அக்னி, வெற்றியைக் கொடுத்தான் போலும்” — ரகு வம்சம் 4-25

 

இந்த ஸ்லோகத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன. அக்னி (தீ ஜ்வாலை) வலமாகச் சுழன்றால் சுப சகுனம். இதை பாரதம் முழுவதும் காணலாம். கோவிலை வலமாக வருவோம். பெரியவர்களை வலமாக வருவோம். எல்லாவற்றையும் வலது கைகளால் செய்வோம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் புலியானது, தான் கொல்லும் மிருகங்கள் இடப் பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று பாடல்கள் உள்ளன. இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுப் பழமையான இலக்கியத்தில் உள்ளதாலும் வேறு எங்கும் இவ்வழக்கம் இல்லை என்பதாலும் ஆரிய-திராவிடப் பிரிவினைகள் கட்டுக்கதை என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளக்கும்.

 

இரண்டாவது விஷயம் வாஜி நீராஜனா= குதிரைக்கு ஆரத்தி.

போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் ஒரு நல்ல குதிரையையும் யானையையும் தேர்ந்தெடுத்து அதற்கு புஷ்ப, வஸ்திரம் (ஆடை), ஆபரணம் (அணி) ஆகியவற்றை அணிவித்து ஆரத்தி எடுப்பர்; இதற்கு குதிரை ஆரத்தி என்று பெயர்.

 

அடுத்த ஸ்லோகத்தில் தலை நகரைவிட்டு ரகு புறப்படுவதற்கு முன்னர், என்ன என்ன செய்தான் என்று வருகிறது:

தலைநகரிலும் எல்லைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தினான். பின்பகுதியிலுருந்து தாக்குதல் வராமல் உறுதி செய்தான் தெய்வ பலத் துடன் அறுவகைப் படை வீரர்களுடம் திக்விஜயம் செய்யப் புறப்பட்டான் 4-26

 

(நான்கு திசைகளிலும் சென்று மன்னர்களை வெல்லுவது திக்விஜயம் என்பதாகும்)

 

இந்த ஸ்லோகத்திலும் இரண்டு புதிய விஷயங்களைக் காணுகிறோம். முதலாவது ஒரு மன்னன் நாட்டை விட்டோ, தலைநகரைவிட்டோ போகும்போது, என்ன பாதுகாப்பு செய்ய வேண்டும் என்பதாகும். இரண்டாவது விஷயம் ஆறு வகைப் படைப் பிரிவுகள் என்பதாகும். அது என்ன ஆறுவகைப் படைப் பிரிவு என்று உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர்.

அறுவகைப் படைப் பிரிவு!

 

 

மௌலாஹா

நற்குடியில் பிறந்து பரம்பரையாகவே அரசனுக்கு ஊழியம் செய்வோர்;  இவர்களை லஞ்சம் கொடுத்தோ, பணம் கொடுத்தோ மாற்ற முடியாது. விசுவாசமுடைய, நம்பத் தகுந்த படை வீரர்கள்.

 

ப்ருத்யாஹா

கூலிப்படை; இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் வீரர்கள். பணத்துக்காக வீரம் காட்டுவதால் அதிகம் நம்பிவிடக் கூடாது. இவர்களும் படையில் எப்போதும் இருப்பர்.

 

சுஹ்ருதஹ

நல்ல நண்பர்கள். அரசனது நண்பர்களும், அவர்கள் அனுப்பிய வீரர்களும் இதில் அடக்கம்.  இவர்கள் நண்பனுக்காக உதவி செய்ய வந்தவர்கள்; நம்பத்தக்கவர்கள்.

 

ச்ரேணயஹ

சண்டைக்காக அவ்வப்போது திரட்டப்படும் வீரர்கள்; சம்பளத்துக்காக வேலை செய்துவிட்டு போர் முடிந்தவுடன் வீட்டுக்குப் போய் வேறு வேலைகளைச் செய்வர்; ஒரு ரிசர்வ் படை போன்றது இவர்கள் தற்காலிகப் படை என்பதால் முழுக்க நம்ப முடியாது.

 

த்விஷதஹ

எதிரிப் படைகளிலிருந்து தாமாக ஓடி வந்தவர்களும், சிறைப் பிடிக்கப்பட்ட வீரர்களும் இந்தப் பிரிவில் இருப்பர். சில நேரங்களில் நிறைய பணம் கொடுத்து எதிரிப் படை வீரர்களைத் தம் பக்கம் இழுப்பதும் உண்டு. எதிரிக்கு எதிரி யாரோ அந்தப் படைகளில் இருந்தும் இப்படிச் சேர்க்கப்படுவர்.

 

ஆடவிகம்

காட்டுப் படை. காடுகளில் வாழும் வேடர்கள், பழங்குடி மக்களைக் கொண்டது இப்பிரிவு. காடுகளைக் கடந்து செல்லுகையில் அவர்களுடைய அறிவும் அனுபவமும் பயன்படும். மலைகளிலும், காடுகளிலும் சண்டை நடக்கையில் இவர்கள் மிகவும் உதவுவர். மேலும் மரங்களை வெட்டி சாலை அமைத்தல் முதலிய பணிகளுக்கு இவர்களின் உதவி தேவை ஆனால் முழுவதும் நம்பிவிட முடியாது.

இது போல தமிழ் இலக்கியத்திலும் பலவகைப் படைப் பிரிவுகள் பற்றிச் சுவையான செய்திகள் உண்டு. அவைகளைத் தனியாகக் காண்போம்.

 

–subham–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 28 (Post No. 3554)

Written by S NAGARAJAN

 

Date: 18 January 2017

 

Time uploaded in London:-  6-34 am

 

 

Post No.3554

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 28

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 95. வசந்த காலம் வந்தது. வின்ய பள்ளியை மேம்படுத்துவதற்காக தர்மா மாஸ்டர் சி ஷோவை தலைமை ஆசிரியராக இருக்குமாறு ஸு யுன் கேட்டுக் கொண்டார்.

இரண்டாம் மாதத்தில் ஒரு நாள்  மாலை ஸு யுன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது ஆறாம் குலபதி அவர் முன் தோன்றினார். அது நிச்சயமாக கனவு இல்லை. “நீ போகும் காலம் வந்து விட்டது” என்று அவர் தெளிவாகக் கூறினார். ஆறாம் குலபதி என்பவர் ஹூய் நெங் என்ற பெயரைக் கோண்டவர். (அவர் வாழ்ந்த காலம் கி.பி.638-713) அவரால் தான் மனம் பற்றிய புதிய மார்க்கம் சீனாவில் பரவியது.

அடுத்த நாள் ஸு யுன் இதை தன் சிஷ்யரான குவன் பென்னிடம் குறிப்பிட்டு, “ஒரு வேளை நான் பூமியிலிருந்து போக வேண்டிய காலம் வந்து விட்டதோ என்னவோ?” என்றார்.

 

குவான் பென் தன் மாஸ்டரான் ஸு யுன்னுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.

நான்காம் மாதத்தில் திரும்பவும் அதே தோற்றம்! ஆறாம் குல்பதி மூன்று முறை ஸு யுன்னை திரும்பிப் போகும்படி வற்புறுத்தினார்.

மறுநாள் குவாங்டாங் மடாலயத்திலிருந்து தந்தி ஒன்று வந்தது அங்குள்ள ஆறாம் குலபதியின் ம்டாலயப் பொறுப்பை ஏற்க முன் வருமாறு ஸு யுன்னுக்கு அழைப்பு அந்த் தந்தியின் மூலம் வந்திருந்தது.

அந்த ம்டாலயம் மிகவும் சிதிலமடைந்திருதது. ஸு யுன் அங்கு கிளம்ப முடிவு செய்து புறப்பட்டார்.

 

1933 நவம்பர் முதல் ஆரம்பித்த புனருத்தாரண பணி 1934 அக்டோபரில் முடிந்தது. அங்கு தர்ம சூத்ரங்களை ஸு யுன் விளக்க ஆரம்பித்தார்.

காண்டன் மற்றும் ஷோவாகுவான் நகரத்தைச் சேர்ந்த பெரும் அதிகாரிகளும் அவர்கள் குடும்பத்தினரும் திரள் திரளாக வந்தனர். அவர்கள் அனைவரும் ஸு யுன்னின் சிஷ்யர்களாக ஆயினர்.

பதினொன்றாம் மாதம் 17ஆம் நாள் மாலை விளக்கவுரை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு புலி அங்கு வந்தது. அனைவரும் பயந்து நடுநடுங்கினர். ஆனால் ஸு யுன்னோ தொடர்ந்து விளக்கவுரையை புலிக்கும் கூறலானார்.அகதி சூத்ரத்தைக் கேட்ட புலி சாதுவாக திரும்பிச் சென்றது.

 

 

1934ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் நாள் திரளான் அதிகாரிகள், சிஷ்யர்களுடன்  ஸு யுன்  காவோஸி என்ற இடம் நோக்கிச் சென்றார். அங்கு குலபதியின் பிறந்த தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஸு யுன் தர்ம சூத்ரங்களைச் சுருக்கமாகப் பாடினார்.

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 96. வ்சந்த காலத்தின் போது அதுவரை நல்ல ஆதரவு நல்கி வந்த ஜெனரல் லி ஹான் – யுன் கிழக்கு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

 

ஹாங்காங்கில் உள்ள டோங்குஹா மருத்துவமனைக் குழுமம் ஸு யுன்னை உடனே வருமாறு அழைப்பு விடுத்தது. நீரிலும் நிலத்திலும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய சடங்குக்ளைச் செய்ய வேண்டும் என்பது அங்குள்ளோரின் விருப்பம்.

இதற்கென அங்குள்ள டாங் லியான் மற்றும் ஜூ யுவான் ஆலயங்களில் ஒரு விசேஷ பீடம் நிறுவப்பட்டது.  இந்த சடங்குகள்  முடிந்த பின்னர் நேராக  கு ஷான் மடாலயம் திரும்பிய ஸு யுன் அங்கு தனது ராஜிநாமாவைச் ச்மர்ப்பித்தார்.

பிறகு நான் ஹுவா மடாலயம் திரும்பிய ஸு யுன் ஆறாம் குலபதியின் பிரதான் ஹாலைப் புதுப்பித்தார். அவலோகிதேஸ்வரருக்கு அங்கு ஒரு சந்ந்தியைப் பிரதிஷ்டை செய்தார்.

குளிர் காலத்தில் அங்கு பட்டுப்போயிருந்த மூன்று செடார் மரங்கள் திடீரென்று துளிர் விட்டு மீண்டும் தழைக்க ஆரம்பித்தன.

நெடுங்காலமாக வாடி இருந்த அவை இப்படி மலர்ச்சியுற்றதைத் தொடர்ந்து அங்கிருந்த அவைத் தலைவர் மாஸ்டர் குவான் பென் இந்த நிகழ்ச்சியை ஒரு பாடலாகப் பாடினார். அந்தக் கவிதையை உபாசகர் ஜென் ஸூ லூ ஒரு கல்வெட்டில் பொறித்து அங்கு நிறுவினார்.

ஸு யுன்னுக்கு இப்போது வயது 97. நான் ஹுவா மடாலய கட்டிடம் வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்ட பின்னர் படிப்படியாக முழுமை பெற்றது.

 

குடியரசுத் தலைவர் லின் ஷென், காபினட் மந்திரியான சூ ஷெங்,  ஜெனரல் சியாங் கே ஷேக் ஆகியோர் ஸு யுன்னைப் பார்க்க வருகை புரிந்தனர். லின்னும் சூ ஷெங்கும் பெரிய அளவில் நிதி உதவி அளித்தனர். சியாங் கே ஷேக்கோ காவோக்ஸி நீரோடையை தடம் மாற்றுவதற்காக தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய ஊதியத்தைத் தர முன் வந்தார்.

பழைய காலத்தில் காவோக்ஸ் நீரோடை ம்டாலயத்திலிருந்து சுமார் 1400 அடி தள்ளிப் பாய்ந்து கொண்டிருந்தது. அங்கு ஏராளமான புதர்களும் பாறைகளும் வரவே அது பாதை மாறி மடாலயம் நோக்கிப் பாய ஆரம்பித்தது. பழைய தடத்திற்கு அதை  மாற்ற 3000 தொழிலாளிகள் தேவையாக இருந்தது.

அந்தப் பணி தொடங்க இருந்த நாள் நெருங்கியது.

 

ஏழாம் மாதம் இருபதாம் நாளன்று மாலை திடீரென இடி ஒலி கேட்டது, அப்போது ஆரம்பிதத் இடியோசை இரவு முழுவதும் தொடர்ந்தது. தொடர்ந்து காவோக்ஸி நதியில் பெருவெள்ளம் பொங்கியது. ஆனால் என்ன ஆச்சரியம், அந்த வெள்ளப் பெருக்கு காவோக்ஸியின் பழைய தடத்தைப் புதுப்பித்து அதன் வழியாகவே நீர்ப் பெருக்கு செல்ல ஆரம்பித்தது. எந்த ஒரு மாபெரும் பணி தொடங்க இருந்ததோ அது சில மணி நேரங்களுக்குள் தானாகவே முடிந்து விட்டது!

இந்த அதிசயத்துடன் வருடம் முடிவுக்கு வந்தது.

தொடரும்

*********

 

இலக்கியத்தில் மங்களம்! சுப மங்களம்!! (Post No.3543)

Written by London swaminathan

 

Date: 14 January 2017

 

Time uploaded in London:- 11-59 am

 

Post No.3543

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

01ad5-25e025ae259525e025ae25b325e025ae25bf252c2b25e025ae25a425e025ae25bf25e025ae25b025e025af258125e025ae25b525e025ae25a425e025ae25bf25e025ae25b025e025af2588

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக – என்று வாழ்த்துவது மரபு. இது வேத காலத்தில் துவங்கிய வாழ்த்து. எல்லா சம்ஸ்கிருத நாடகங்களையும் மங்கள வாழ்த்துடன் நிறைவு செய்வார்கள்.  நாட்டிற்கும், நாட்டை ஆளும் மன்னனுக்கும் மங்களம் (பரத வாக்யம்) சொல்லியே முடிப்பர். எல்லா துதிப் பாடல்களையும், தோத்திரங்களையும், இதைப் படித்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பலச்ருதி சொல்லியே முடிப்பர். சங்கீதக் கச்சேரிகள் அனைத்தும் “பவமான சுதுடு பட்டுடு” என்ற தியாகராஜ கீர்த்தனையின் மங்களப் பாடலுடன் முடியும்.

 

 

எல்லோரும் பஜனைகளிலும், பூஜைகளிலும் சொல்லும் சில வாழ்த்துப் பாடல்களைப் படித்து, இந்த நன்னாளில், “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” (எல்லோரும் வாழ்க! இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம்.

 

 

சைவ சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்” (அந்தணர் முதலான எல்லாஜாதியினரும், பசு முதலான எல்லாப் பிராணிகளும் வாழ்க) என்ற தேவாரப் பாடலுடன் முடியும்

 

பிராமணர்கள் வேத மந்திரங்கள் மூலம் தன, தான்ய, புத்ர பௌத்ர சம்பத்துகள் உண்டாகட்டும் என்று வேத மந்திரம் முழங்கும் போது “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று மற்றொரு கோஷ்டியினர் சொல்லி வாழ்த்துவர்.

 

உலகில் இப்படி பிராணிகள் முதல் மன்னன் வரை வாழ்த்து சொல்லும் வழக்கத்தை பாரத நாட்டைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. மற்ற நாடுகளில் மன்னனுக்கோ மஹாராணிக்கோ மட்டும் வாழ்த்துச் சொல்லி முடிப்பர்.

xxx

 

பஜனைகளில் பாடப்படும் மங்களம்:-

 

சங்கராய  சங்கராய  சங்கராய     மங்களம்

சங்கரி  மனோஹராய  சாஸ்வதாய   மங்களம்

குருவராய       மங்களம் தத்தோத்ராய   மங்களம்

கஜானனாய     மங்களம் ஷடானனாய   மங்களம்

ரகுவராய         மங்களம் வேணு  க்ருஷ்ண   மங்களம்

சீதாராம    மங்களம்  ராதா க்ருஷ்ண  மங்களம்

xxx

 

 

சைவ நிகழ்ச்சிகளையும் பூஜைகளையும் நிறைவு செய்யும்போது பாடும் பாடல்

 

 

வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

—சம்பந்தர் தேவாரம்

 

வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

–கந்த புராணம்

xxxx

 

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே /

சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய மங்களம் //

 

வேதவேதாந்த வேத்யாய மேகஸ்யாமலமூர்த்தயே /

பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம் //

 

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே: /

பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் //

 

—-ராமாயண பாராயண மங்கள் ஸ்லோகம்

 

xxxx

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ரஹ்லாத நாரதாதி பதலு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

 

—-தியாகராஜ கீர்த்தனை

xxxx

 

 

 

காலே வர்ஷது பர்ஜன்ய:, ப்ருத்வீ சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மணா சந்து நிர்பயா:

அபுத்ரா; புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண;

அதநா; சதநா; சந்து ஜீவந்து சரதாம் சதம்!

(பொருள்: காலத்தில் உரிய மழை பொழியட்டும் நெல் வளம் சிறக்கட்டும், நாடு மகிழ்ச்சியால் செழிக்கட்டும், பிராமணர்கள் ( ஒழுக்கமுடைய அறிஞர்கள் ) பயமின்றி வாழட்டும், பிள்ளைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் உடையோர் பேரன் பேத்திகளை ஈன்றெடுத்து மகிழட்டும்,வறியோர்கள் செல்வச் செழிப்படையட்டும். நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்)

 

 

 

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாயேந மார்கேண மஹீம் மஹீசா: |
கோ ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ||

 

இந்துக்கள் பூஜைகள், யாக யக்ஞங்களை முடிக்கும்போது உலகம் முழுதும் வாழப் பிரார்த்தனை செய்வர். இப்படி எல்லா மக்க,,,,,,,,,,,,ம் வாழ்க, எல்லாப் பிராணிகளும் வாழ்க என்பதை, இந்து மதத்தில் மட்டுமே காண இயலும்.

 

 

 

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் என்ற ஸ்லோகத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே ஞான சம்பந்தர் கீழ்க்கண்டவாறு அழகாக மொழிபெயர்த்துள்ளாற்

 

 

வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் 
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக 
ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே 
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

சம்பந்தர் தேவாரம்

xxx

 

மல்குக வேத வேள்வி, வழங்குக சுரந்து வானம்,

பல்குக வளங்கள் எங்கும், பரவுக வரங்கள் இன்பம்

நல்குக உயிர்கட்கெல்லாம், நான் மறைச் சைவம் ஓங்கி,

புல்குக உலகம் எல்லாம், புரவலன் செங்கோல் வாழ்க!

பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்

xxx

 

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்

ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட

மன்று உளார் அடியார் அவர் வான்புகழ்

நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

பெரியபுராணம், சேக்கிழார்

 

 

சுப மங்களம்! நித்ய ஜய மங்களம்

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5 (Post No.3539)

img_4214

Written by S NAGARAJAN

 

Date: 13 January 2017

 

Time uploaded in London:-  5-12 am

 

 

Post No.3539

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 19

 

இந்தக் கட்டுரையில் பரிபாடலில் வரும் 9,13,15,18 ஆம்  பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5

 

                       by ச.நாகராஜன்

 

 

பரிபாடலில் ஒன்பதாம் பாடல்

 

பரிபாடலின் ஒன்பதாம் பாடல் 85 அடிகளைக் கொண்டுள்ளது. குன்றம்பூதனார் என்ற புலவர் பாடிய இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதனார் இசை அமைத்துள்ளார். குன்றம்பூதனார் முருகனைப் பற்றி இரு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டும் சுவை பயப்பவை. வள்ளிக்கும் தேவசேனைக்கும் நடந்த மோதலை சுவைபட இவர் விவரிக்கும் பாங்கு ப்டித்தால்  இன்பத்தைத் தரும்.

 

 

நான்மறை விரித்துநல் இசை விளக்கும்                            

வாய்மொழிப் புலவீர் கேண்மின் (வரிகள் 12,13)

 

 

என்ற வரிகளில் நான்மறையை ஓதி அதை விளக்கும் நாவன்மை படைத்த புலவர்க்ளே, கேளுங்கள் என்று புலவர் அழைத்து காமத்தின் காதல் காமம் சிறந்தது என்றும் அதிலும் சிறந்தது காதலர் இருவரும் மனமொத்து விரும்பும் புணர்ச்சி என்றும் விளக்குகிறார். பிறகு முருகன், வள்ளி, தேவசேனை கதை விளக்கப்படுகிறது.

 

 

பரிபாடலில் பதிமூன்றாம் பாடல்

 

பரிபாடலின் பதிமூன்றாம் பாடல் 64 அடிகளைக் கொண்டுள்ளது. நல்லெழுதியார் என்ற புலவர் இந்தப் பாடலை இயற்றியுள்ளார். இதற்கு இசை அமைத்தவர் யர்ர் என்று தெரியவில்லை.

 

திருமாலைப் பலவாறாகப் புகழும் அருமையான பாடல் இது.

 

 

படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்

கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை

ஏவல் இன் முது மொழி கூறும்   (வரி 40)

சேவல் ஓங்கு உய்ர் கொடிச் செல்வ நல் புகழவை                              கார் ம்லர்ப் பூவை கடலை இருளமணி

அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை

வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல்                   அவை நான்கு உறழும் அருள் செறல் வயின் மொழி (வரி 45)

 

 

என்ற வரிகளில் முதுமொழி என்றும் வாய்மொழி என்றும் வேதம் கூறப்படுகிறது.

 

மேற்கூறிய வரிகளில் பாம்புக்குப் பகைவனான விரிந்த சிறகுகளைக் கொண்ட கருடனைக் கொடியெனக் கொண்ட (படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட) கடவுள் (கோடாச் செல்வனை) ஏவல் இன்றி தானாகவே முதுமொழியான வேதத்தை ஓதும் (ஏவல் இன் முதுமொழி கூறும்) ஓங்கு உயர் கொடியான கருடக் கொடியினை உடைய கடவுள் (சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ) என்ற பொருளை பெறலாம்

 

 

பின்னர் திருமாலை வர்ணிக்கும் வரிகளில் வலம்புரி வாய்மொழி என மறுபடியும் முதுமொழி என வேதம் கூறப்படுகிறது. அடுத்து (56ஆம் வரியில்) ‘வேள்வி என்ற வார்த்தையால் மறுபடியும் சடங்குகள் குறிப்பிடப்படுகிறது.

 

 

பரிபாடலில் பதினைந்தாம் பாடல்

 

பரிபாடலின் பதினைந்தாம் பாடல் 66 அடிகளைக் கொண்டுள்ளது இளம் பெரு வழுதியார் இயற்றிய இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். அழகர்கோவில் என்று இன்று அழைக்கப்படும் மாலிருஞ்சோலை குன்றம் பற்றிப் பாடல் புகழ்கிறது. திருமாலின் பெருமையை ஓங்கி உயர்த்திச் சொல்கிறது.

 

.நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி                          இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை இருங்குன்றத்து அடி உறை இயைக என                                பெரும் பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே (வரிகள் 63 முதல் 66)

 

என்று பாடல் இப்படி முடியும் போது.சிறப்பான பலன்களைத் தரும் சீரான அழகிய வேதம் என்ற பொருளில் (நலம் பூரீஇ அம் சீர் நாம வாய் மொழி) என வேதம் புகழப்படுகிறது திருமாலையும் பலதேவனையும் தொழுது பாடல் முடிகிறது.

 

பரிபாடலில் பதினெட்டாம் பாடல்

 

பரிபாடலின் பதினெட்டாம் பாடல் 56 அடிகளைக் கொண்டுள்ளது குன்றம்பூதனார் இயற்றிய இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். இப்பாடலில், இமயம் நிகர் குன்றமான (நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து) திருப்பரங்குன்றத்தையும் அதில் உறையும் முருகனையும் வாயார மனதாரப் புகழ்ந்து போற்றித் துதிக்கிறார் புலவர்.

இதில்

“சுருதியும் பூவும் சுடரும் கூடி”  (வரி 52)

என்று பாடி, வேதம், மலர்கள், சுடர் ஆகியவையுடன் கூடிய முருகனை சுற்றமொடு பிரியாது திருப்பரங்குன்றத்தில் இருந்துவரும் வரத்தை வேண்டி பாடலை முடிக்கிறார் மாபெரும் முருக பக்தரான குன்றம்பூதனார்.

 

இப்படி தொட்ட இடம் தோறும் பக்தி மணம் கமழும் பரிபாடல் தமிழுக்குச் சூட்டப்பட்ட மணியாரம். சங்க காலத்தில் அந்தணரும் வேதமும்  உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்ததற்கு பரிபாடலின் பாடல்கள்  ஒரு சிறந்த சான்று என்பதில் ஐயமில்லை!

அடுத்து ‘பரிபாடல் திரட்டு’ நூலுக்குள் நுழைவோமா?

-தொடரும்.

 

 

திருவாதிரைக் களியின் கதை! (Post No.3534)

Written by London swaminathan

 

Date: 11 January 2017

 

Time uploaded in London:- 6-46 am

 

Post No.3534

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

தேவாரத்தில் ஆதிரை விழா

திருவாதிரை விழா சிவபெருமானின் திருவிழாவாக சங்க காலம் முதலே கொண்டாடப்படுவது பரிபாடல் என்னும் நூல் மூலம் தெரிகிறது. சம்பந்தர், அப்பர் ஆகிய இருவர் காலத்தில் இது மிகச் சிறப்பாக நடந்ததால் அப்பரும் சம்பந்தரும் தேவாரத்தில் இவ்விழாவைக் குறிப்பிடுகின்றனர். அப்பர் பாடிய திருவாதிரைப் பதிகம் பற்றி எஸ். நாகராஜன் எழுதிய கட்டுரை இதே பிளாக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இன்று திருவாதிரைக் களியின் சிறப்பைக் காண்போம்.

 

காவிரிப் பூம்பட்டினத்தில் பட்டினத்தடிகளின் மாளிகையில் அவருக்கு கணக்குப் பிள்ளையாக — பொக்கிஷ அதிகாரியாக — வேலை பார்த்தவர் சேந்தனார் என்பவராவார். பட்டினத்தடிகளுக்கு ஒரு பெட்டியில் காதற்ற ஊசி வந்தவுடன், அவர் வாழ்க்கையின் நிலையாமையை எண்ணி பொருள் அனைத்தையும் சூறைவிடச் சொன்னபோது அத் திருப்பணியைச் செய்தவர் சேந்தனார்தான்.

 

இதைக் கேள்விப்பட்ட சோழ நாட்டரசன், அப்பொருள் அனைத்தையும் சேந்தனார், அரசாங்க கஜானாவில் சேர்ப்பிக்காதது தவறு என்று சொல்லி அவருக்குத் தொல்லை கொடுக்கத்  துவங்கினான். இதன் காரணமாக சேந்தனார்,  மனைவி மக்களுடன் சிதம்பரத்துக்குச் சென்றார். அங்கே விறகு விற்கும் தொழிலைச் செய்துகொண்டே சிவபக்தியில் மூழ்கினார்.

 

விறகு விற்ற பணத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அமுது படைத்தார்.

 

ஒரு நாள் சிவபெருமானே, வேறு வேடம் தரித்து சேந்தனார் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றார். நள்ளிரவில் சென்றதால் சேந்தனார் வெறும் கூழைக் கிண்டி அதைப் பரிமாறினார். சிவனும் அதை விரும்பிச் சாப்பிட்டுவிட்டு மீதி இருந்ததையும் ஒரு கந்தைத் துணியில் கட்டி எடுத்துச் சென்றார். மறுநாள் சிவனுடைய சந்நிதியில்  அந்தக் கூழ் சிதறி இருந்ததைக் கண்டு திகைத்த அர்ச்சகர்களுக்கு சேந்தனாரின் வீட்டில் முதல் நாளிரவு நடந்த நிகழ்ச்சி தெரிய வந்தது. அன்றுமுதல் கூழ் போலக் களியைக் கிண்டி எல்லா சிவனடியார்களுக்கும் கொடுக்கும் வழக்கம் துவங்கியது.

 

திருவாதிரைக் களியும் அதற்கான விசேஷ கூட்டும் தனிச் சிறப்பு வாய்ந்தது. கேரளத்தில் ஆதிரையை, பெண்கள் புத்தாடை அணிந்து கும்மியடித்து சிறப்பாக் கொண்டாடுவர்.

 

நட்சத்திரங்களில் இரண்டுக்கு மட்டுமே திரு என்ற அடைமொழி உண்டு ஒன்று திரு ஆதிரை மற்றொன்று திரு ஓணம். இரண்டும சிவபெருமானுடனும் விஷ்ணுவுடனும் தொடர்புடையவை. அது மட்டுமல்ல. இரண்டு விழாக்களுக்கும் இடையே சரியாக ஆறு மாத இடைவெளி இருக்கிறது.

2015 ஜனவரியில் ஆதிரை நாளன்று வெளியான எஸ். நாகராஜன் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி மட்டும்:–

 

ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போது இயலும் முடி மேல் புனலோடு அரவும் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

 

என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.

 

திருவாதிரைப் பதிகம்

 

இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார், பார்ப்போமா:-

பாடல் எண் : 1
முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

ரமண மஹரிஷி ஆருத்ரா தரிசன நாளன்று பிறந்தவர் என்பதால் இந்த திருவாதிரைப் பதிகத்தைக் கேட்டு ஆனந்தித்து உத்வேகம் பற்ற ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ரமணரின் மீது பக்திப் பாடல்களை இயற்றினார்.

–subham–

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No.3531)

Written by London swaminathan

 

Date: 10 January 2017

 

Time uploaded in London:-6-24 am

 

Post No.3531

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பட்டினத்தார் பாடல் எளிமையான வரிகளில் பெரிய கருத்துக்களைப் போதிக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச் செய்தியைப் பரப்பவும், உணர்த்தவும் பயன்படுத்துகிறார்.

 

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே. — பட்டினத்தார் பாடல்

 

 

அது என்ன குரங்கு கதை?

 

ஏற்கனவே பஞ்ச தந்திரக் கதைகள் படிக்காதவர்களுக்கும், படித்து மறந்தவர்களுக்கும் சுருக்கமாகத் தருகிறேன்:-

 

 

ஒரு ஊரில் பணக்கார வணிகன் ஒருவன் கோவில் கட்டுவதற்கு ஆசைப்பட்டான். ஊருக்கு வெளியேயுள்ள தோப்பில் நிலம் ஒதுக்கினான். நிறைய கட்டிடக் கலைஞர்கள் வேலைகளைத் துவக்கினர். சிலர் கல் தச்சர்கள் ; மற்றும் பலர் மரத் தச்சர்கள். மத்தியானம் உணவு நேரம் வந்துவிட்டால் ஊருக்குள் போய்ச் சாப்பிட்டுவிட்டு தோப்புக்குத் திரும்பி விடுவர். ஒரு நாள் ஒரு பெரிய கருங்காலி மரத்தைப் பாதி அறுத்த தச்சன் அதன் பிளவில் ஒரு மரத்தால் ஆகிய ஆப்பு ஒன்றைச் சொருகி வைத்துவிட்டுச் சாப்பிடச் சென்றான்.

 

அந்தத் தோப்பில் நிறைய குரங்குகள் இருந்தன. ஒரு குரங்குக்கு “விநாச காலே விபரீத புத்தி” என்ற பழமொழிக்கு இணங்க கோணல் புத்தி வந்தது. மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அந்தக் கருங்காலி மரத்தின் பிளவுக்குள் காலை வைத்துக் கொண்டு பலம்கொண்ட மட்டும் அந்த ஆப் பை இழுத்தது. ஆப்பு வெளியேவந்த அதே நேரத்தில் மரத்தின் பிளவு மூடுபட்டு குரங்கின் காலைக் கவ்விப்  பிடித்தது. குரங்கு தப்பிக்க முடியாமல் கீச்சு கீச்சு என்று கத்தியது. இதுதான் “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிய”தற்குச் சமம்.

இப்படி குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால் சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு சிக்கிக் கொள்கிறோம். குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம் வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார் மிக அழகாகப் பாடுகிறார்:-

 

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள், நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/ நாக்கு கிழிய)

 

விலைமாதுடன் பட்டினத்தார் மோதல்

செல்வச் செழிப்பில் மிதந்த பட்டினத்தார், ஒருமுறை  விலை மகளிர் வீட்டுக்கு இன்பம் துய்க்கப் போனார். அந்த இருமனப் பெண்டிரோ இந்த ஆள் நல்ல காம வேட்கையுடன் வந்துள்ளான். ஆளை கொஞ்சம் காக்கப்போட்டு நன்றாகப் பணம் கறக்கலாம் என்று திட்டமிட்டாள். இவர் வாசல் திண்ணையில் நெடுநேரம் காத்திருந்தபின் அந்தப் பெண் மினுக்கி குலுக்கி நடந்து வந்தாள். பட்டினத்தாருக்கு கொஞ்சம் ஞானம் பிறந்தது.

ஒரு பட்டுப் பாடினார்:-

சீ போ, கழுதை! உன்னுடன் இன்பம் துய்க்க /அனுபவிக்க வந்த ஆள் போய்விட்டான். இனி நான் உன்னைத் தொட்டால் என்னைக் காலால் எட்டி உதை. நீ என்னைத் தொட்டாலோ நான் உன்னை எட்டி மிதிப்பேன்.

 

தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது

தேடினவர் போய்விட்டார் தேறியிரு — நாடி நீ

என்னை நினைந்தால் இடுப்பில் உதைப்பேன், நான்

உன்னை நினைத்தால் உதை.

–பட்டினத்தார் பாடல்

 

–Subham–

‘தாதி மனம் நீர்க்குடத்தே தான்’: பட்டினத்தாரும் பரமஹம்சரும்! (Post No.3528)

Written  by London swaminathan

 

Date: 9 January 2017

 

Time uploaded in London:- 9-35 am

 

Post No.3528

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ராம கிருஷ்ண பரமஹம்சரும் பட்டினத்தாரும் ஒரு அருமையான விஷயத்தை நமக்கு எளிய, கண்கண்ட காட்சி மூலம் விளக்குகிறார்கள்.

 

தண்ணீர் குடத்தை தலையில் சுமந்து வரும் பெண்ணோ காய்கறிக்கூடை அல்லது மீன் கூடைகளை தலையில் சுமந்து வரும் பெண்களோ வழியில் யாரைக் கண்டாலும் நின்று கொண்டு அரட்டை அடிப்பார்கள். போகும், வரும் வழியில் இருக்கும் விஷயங்களை வேடிக்கையும் பார்ப்பார்கள். ஆயினும் அவர்கள் தலையில் உள்ள நீர்க்குடமோ, கூடையோ கீழே விழாது. இதைக் கரக ஆட்டத்திலும் கழைக்கூத்தாடி ஆட்டத்திலும் கூட பார்க்கிறோம். ஆனால் கரக ஆட்டக்காரிகளும்  கழைக்கூத்தாடிகளும் அதற்காகவே சிறு வயது முதல் விசேஷப் பயிற்சி பெற்றவர்கள். குடும்பப் பெண்களும் கூட தலையிலுள்ள பாரம் கீழே விழாமல் பாதுகாப்பது ஒரு அதிசயமே. இது சந்யாசியின் மனத்தைப் போன்றது ஒரு யோகியின் மனத்தைப் போன்றது.

 

 

உலகிலுள்ள சாதாரண மனிதன் செய்யும் எல்லாத் தொழில்களையும் அவர்களும் செய்வார்கள். ஆனால் சந்யாசியின்  சித்தம் மட்டும் , காம்பஸிலுள்ள முள் எப்போதும் வடக்கு திசையையே காட்டி நிற்பது போல இறைவனையே நோக்கி இருக்கும். இதை பகவத் கீதையிலும் எவ்வளவோ இடங்களில் கண்ணபிரான் வலியுறுத்துகிறான். நாம் சந்யாசியின் உண்மை இயல்பை அறியாமல் அவர்களையும் நம்மைப்போல ஒருவர் என்று நினைத்து விடக்கூடாது.

இப்போது பட்டினததார் பாடலைப் படியுங்கள்; நன்கு விளங்கும்:-

எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தைப் பட்டாலும்

முத்தர் மனம் இருக்கு மோனத்தே — வித்தகமாய்க்

காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும்

தாதி மன நீர்க்குடத்தே தான்

–பட்டினத்தார் பாடல்

பொருள்:-

என்ன காரியம் செய்தாலும் என்ன நிலைமைக்கு உள்ளானாலும் முக்தி அடைந்த மஹான்கள் எப்போதும் மவுன நிலையில் இருப்பர் (மனத்துக்குள்); ஒரு பெண் அழகாக நடை நடந்து, இரு கைககளையும் ஒய்யாரமாக வீசி நடந்து வந்தாலும் அந்தப் பெண்ணுக்கு மனது முழுதும் தலையிலுள்ள நீர்க்குடத்தின் மேல்தான் என்பதை அறிவாயாக!

 

ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்

இதையே ராம கிருஷ்ண பரமஹம்சரும் எளிய மொழியில் செப்புவார்:-

காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் ஈஸ்வரனை நாடி இருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் (சம்சார சாகரம்) திசை தப்பி போக மாட்டான்.

— ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்

 

நமது கிராமத்துப் பெண்மணிகள், ஒன்றன் மீதொன்றாக நாலைந்து தண்ணீர்ப் பானைகளைத் தலையின் மீது வைத்துக்கொண்டு நடந்து செல்லும்போது ஒருவரோடொருவர் தங்களுடைய சுகதுக்கங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போகின்றனர். ஆயினும் ஒரு சொட்டுத் தன்ணீரைக்கூட சிந்த விடுவதில்லை. அது போலவே தர்ம மார்கத்தில் நடக்கும் மனிதனும் நடக்க வேண்டும். எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தாலும் , அவனுடைய மனம் உண்மை நெறியை விட்டுக் கொஞ்சமேனும் விலகாமல், அவன் சதா ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

— ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்

 

பட்டினத்தார் பாடலையும் பரமஹம்சரின் பொன்மொழிகளையும் ஒப்பிடும்போது அது நம் மனத்தில் பசும ரத்தாணி போல பதியும்!

 

–subaham–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 26 (Post No.3521)

Written by S NAGARAJAN

 

Date: 7 January 2017

 

Time uploaded in London:-  5-14 AM

 

 

Post No.3521

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 26

 

by ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 87. இந்த வருடம் யூனான் மாகாணத்தில் ஏராளமான பிரச்சினைகள் வெடித்தன. இராணுவ வீரர்கள் நினைத்த வீடுகளுக்குளெல்லாம் நுழைந்து அட்டகாசம் செய்தனர். மக்கள் அறுவடை செய்ய வயல்வெளிகளுக்குச் செல்லவே பயந்தனர்.

 

 

ஸு யுன் நேராக ராணுவ கமாண்டரின் அலுவலகத்திற்குச் சென்றார். மக்களின் துன்பங்களை எடுத்துச் சொன்னார். உடனே பிட்சுக்களுடன் தங்கள் வயல்வெளிகளுக்குச் செல்லும் எந்த விவசாயிகளையும்  ராணுவ வீரர்கள் அநாவசியமாக தொந்தரவு செய்யக் கூடாது என்று கமாண்டர் உத்தரவைப் பிறப்பித்தார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆலயத்திற்கு வந்து விட்டனர். அங்கு அரிசி, க்ஞ்சி ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

 

 

கையிருப்பு தீர்ந்தவுடன் வெறும் தண்ணீரிலேயே வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிட்சுக்களுக்கும் நீரே ஆகாரம்.. தங்களால் பிட்சுக்களும் வெறும் தண்ணீரை மட்டும் ஏற்பதைப் பார்த்து விவசாயிகள் அழுதனர்.

 

நிலைமை சீரானவுடன் தான் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினர். இந்த அனுபவத்தால் பல விவசாயிகள் மடாலயத்தை எப்படியேனும் பாதுகாப்பது என்ற உறுதியுடன் தன்னார்வத் தொண்டர்களாக மாறினர்.

 

மடாலயத்தின் தலைமைப் பொறுப்பில் ஸு யுன் இருந்ததால் சூத்ரங்களை அவர் ஓதி வந்ததோடு, சான் தியானத்தையும் பல வாரங்கள் சொல்லித் தந்தார்.

 

இந்த கால  கட்டத்தில் பட்டுப் போன் பல மரங்கள் தீடீரென்று தழைத்து பசுமையாயின! அவற்றில் தாமரை போன்ற மலர்கள் அரும்பின. ஆலயத் தோட்டத்திலோ அனைத்துக் கறிகாய்களும் அபரிமிதமாக விளைந்தன. அங்கு  மல்ர்கள் பச்சைத் தாம்ரை வண்ணத்தில் தோன்றின. நிற்கும் நிலையில் உள்ள புத்தரைப் போல அந்த ம்லர்கள் விகசித்ததால் அது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

 

 

இந்த அபூர்வமான நிகழ்வை உபாசகர் ஜாங் ஜூ ஜியான் ஒரு கதையாக வர்ணித்து கல்வெட்டில் பொறித்தார். அது மடாலயத்தில் வைக்கப்பட்டது.

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 88. இந்த வருடம் சூத்ரங்களின் விளக்கம் ஸு யுன்னால் வழக்கம் போல விவரிக்கப்பட்டன. அத்துடன் சான் தியானமும் நடத்தப்பட்டது. பல்வேறு கூடுதல் ஹால்களும் கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டன. மணி வைக்கப்பட்டிருந்த கோபுரமும் புதுப்பிக்கப்பட்டது.

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 89. இந்த வருடம் புத்தரின் சிலைகளைப் புதிதாகச் செய்வதற்காக உபாசகர் வாங் ஜியூ லிங்குடன் ஸு யுன் ஹாங்காங்கிற்குப் பயணமானார். குவாங் டாங் மாகாண கவர்னரான ஜெனரல் சென் ஜென் ரு ஹாங்காங்கிற்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி ஸு யுன்னை காண்டன் நகருக்கு விஜயம் புரியுமாறு அழைப்பு விடுத்தார். அங்கு யி யாங் யுவான் சானிடோரியத்தில் ஸு யுன் தங்கலானார். அங்கு கவர்னருடன் நெங் ரெப் மடாலயத்திற்கு ஸு யுன் சென்றார். காவோ சி என்ற இடத்தில் இருந்த  மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ஸு யுன்னை கவர்னர் வேண்டினார். ஆனால் ஸு யுன் அந்த அழைப்பை மறுத்தார்.பல இடங்களுக்கும் சென்ற ஸு யுன் அசோகர் ஆலயத்திற்கும் சென்றார். பின் அங்கிருந்து மாஸ்டர் வென் ஷியுடன் ஷாங்காய் நகர் சென்றார். புது வருடமும் வந்தது.

 

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 90 வருடத்தின் முதல் மாதத்தில் ஷாங்காயிலிருந்து ஸு யுன் மவுண்ட் கு-வுக்குத் திரும்பினார். கப்பற் படை மந்திரியான யாங் ஷு ஜுவாங் ஸு யுன்னைச் சந்தித்து  கு ஷான்  மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டினார். சங்கத்தில் சேரும் போது முதன் முதலில் அங்கு தான் ஸு யுன் தன் தலையை மழித்துக் கொண்டார். அந்த நினைவு அவருக்கு வந்தது. அந்த நீங்காத நினைவுகளுடன் தனது குருவின் அபாரமான குணங்கள் அவர் மனதில் நிழலாடின. அந்த அழைப்பை எப்படி மறுக்க முடியும்?

ஸு யுன் தனது பொறுப்பை உதறி விடத் தயாரில்லை. உடனே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

-தொடரும்

**********