இந்துக்கள் உலக மஹா புத்தகப் பிரியர்கள்!

IMG_3384

Article No.1987

Compiled by London swaminathan

Date 11th July 2015

Time uploaded in London: 18-33

உலகில் பல அறிஞர்கள் பிராணிகளையும் தாவரங்களையும் வகை வகையாகப் பிரித்தனர். இதிலும் இந்துக்கள்தான் முதலில் நிற்கின் றனர். தொல்காப்பியத்திலும் உயிரினங்களை ஆறு வகை யாகத் தொல்காப்பியர் பிரித்தார். அதற்கு முன் வடமொழி நூல்களில் பல வகையாகப் பிரித்தனர். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட ஆலமரம், அரசமரம், அத்திமரம் ஆகியன ஒரே வரியில் விஷ்ணுவின் பெயர்களாக வரும். இவை மூன்றும் ‘பைகஸ்’ என்னும் ஒரே ‘ஜீனஸ்’ என்று 17ஆம் நூற்றாண்டில்தான் தாவரவியல் அறிஞர்கள் பிரித்தனர். யாகத்துக்கு வேண்டிய சமித்துக் குச்சிகள், நவதான் யங்கள், பத்துவகைப் புற்கள் என்று எங்கு பர்த்தாலும் பிரித்து வைத்திருப்பதை சம்ஸ்கிருத நூல்களில் நாம் சர்வ சாதாரண மாகக் காணலாம்.

கலைக் களஞ்சியங்களில் பார்த்தால் ஐரோப்பியர்கள் பெயர்கள் மட்டுமே இருக்கும். ஐரோப்பியர்களுக்கு 17-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சம்ஸ்கிருதம் தெரியாததால் நம் நூல்களில் இருப்பது தெரியவில்லை. அவர்கள் சொல்லும் அரிஸ்டாடில் போன்றோரும் அவருக்கு  முந்தைய பிதகோரஸ் போன்றோரும் உபநிஷத உண்மைகளை அப்படியே ஒப்புவித்திருப்பதால் அவர்களுக்கு இந்திய புத்தகங்கள் கிடைத்ததும் புலப்படும்.

IMG_3382

மேலும் வேதங்களில் மட்டும் யாரும் கை வைக்கக்கூடாது. அதில் இலக்கணப் பிழை இருந்தாலும் கூட திருத்தக்கூடாது என்ற மரபு இன்றுவரை இந்தியாவில் இருந்து வருகிறது. மற்ற எல்லா நூல்களையும் அவ்வப்போது திருத்தி, புதிய பகுதிகளைச் சேர்த்துப் புதுமைப் படுத்தியதால், வெள்ளைக்காரர்கள் அந்த கடைசியாகச் சேர்த்த பகுதியின் அடிப்படையில் நம் நூல்களுக்குப் புதுத் தேதியை முத்திரை குத்தினர்.

நம்முடைய பங்களிப்பை ஒத்துக் கொள்ளாவிடிலும் உலகில் புத்தக விஷயத்தில் நம்மை மறுதளிக்க எவரும் இல்லை. உலகில் எல்லா வகைப் புத்தகங்களும்—சமயம் முதல், இலக்கணம், அகராதி, இண்டெக்ஸ், நிகண்டு, செக்ஸ், பெண்களுக்கான சிலபஸ் (64 கலைகள்) வரை எல்லாம் சம்ஸ்கிருதத்தில்தான் முதல் முதலில் காணப்படுகின்றன. இது பற்றி முன்னரே எழுதிவிட்டேன். இப்போது புத்தகங்களை வகைப் படுத்திப் பிரித்திருப்பதை மட்டும் காண்போம்.

IMG_2789

வேதங்கள் நான்கு:

திருணதூமாக்கினி இயற்றிய தொல்காப்பியத்துக்கு முன்னுரை (பாயிரம்) எழுதிய பனம்பாரனார் கூட, அதங்கோட்டு ஆச்சார்யார் என்னும் நான் மறை முற்றிய வேதப் பிராமணன் தான் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நிலந்தரு திருவிற் பாண்டியனுக்கு சிபாரிசு செய்தார் என்று சொல்லியி ருக்கிறார். இந்த தொல்காப்பியத்துக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வேத வியாசர் என்பவர்தான் இப்படி வேதங்களை ருக், யஜூர், சாமம், அதர்வணம் என நான் மறையாக வகுத்தவர். ஆக உலகில் முதல் முதலில் புத்தகங்களை வகைப் படுத்தியவர் வியாசரே. அவரே புராணங்களை 18 ஆகவும் பிரித்து வைத்தார்.

தமிழர்களும் அதையே செய்தனர்:

வியாசர் என்னென்ன செய்தாரோ அதைத் தமிழர்கள் அப்படியே செய்தனர்; அவ்வளவு மதிப்பு அவர் மீது! அவர் 4 என்ற நம்பரில் வேதங்களைப் பிரித்ததைப் பார்த்து அவர்களும் 4, 40, 400 என்னும் “லக்கி நம்பரை” எல்லா நூல்களுக்கும் சூட்டினர். அது மட்டுமல்ல. வேத வியாசருக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேதங்கள் தோன்றியதால் அவருக்கே பல புலவர்கள் பெயர் தெரியவில்லை. ஆகவே அந்தப் புலவர் பயன்படுத்திய சொற்றொடரைவைத்து புதுப்பெயர் கொடுத்தார். இதையும் தமிழர்கள் தேய்புரிப்பழங்கயிறு, செம்புலப்பெயல்நீர் என்று புலவர்களின் பெயர்களாகச் சேர்த்தனர். தமிழர்களும் வேதவியாசர் புராணம், வேதம் முதலியவற்றைத் தொகுத்தது போலவே பல நூல்களைத் தொகுத்தனர்.

அதுமட்டுமல்ல புத்தகங்களுக்கு எண்களின் பெயர்களைக் கொடுத்தனர். உலகில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணினி என்னும் புலவர் தனது நூலுக்கு அஷ்டாத்யாயி – (எட்டு அத்தியாயம்) என்று பெயர் உண்டாக்கியது போல தமிழர்களும் எல்லாப் புத்தகங்களின் பெயரிலும் எண்களைச் சேர்த்தனர் (பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு). சம்ஸ்கிருதத்தில் அஷ்டகம் (8), சதகம் (100), சஹஸ்ரநாமம் (1000) முதலியன மிகவும் அதிகம்.

வேத வியாசரைப் பின்பற்றி தமிழர்களும் 18- என்ற எண்ணைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். வியாசர் செய்தது போலவே சங்க இலக்கியத்தை 18 மேல் கணக்கு நூல்கள் என்றும் சங்க இலக்கியத்துக்குப் பிற்காலத்தில் வந்த திருக்குறள் போன்ற 18 நூல்களைக் கீழ்க் கணக்கு நூல்கள் என்றும் பிரித்தனர். அது மட்டுமல்ல சம்ஸ்கிருதத்தில் பஞ்ச மஹா காவியங்களைப் பிரித்தது போல ஐம்பெருங் காப்பியங்களைப் பிரித்து அவைகளுக்கு காப்பியம் என்ற சம்ஸ்கிருதப் பெயரையும் சூட்டினர். சுருங்கச் சொன்னால் அவர்களுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் இரு வேறு மொழிகள் அல்ல. ஒரே உடலின் இரண்டு கண்கள்!

பிரஸ்தானத்ரயம் (3)

இந்து மதத்தின் அஸ்திவாரமாக அமைந்துள்ள மூன்று புத்தகங்கள்:

உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை. இதை பிரஸ்தானத்ரயம் என்பர். அதில் மூன்று என்ற எண் உள்ளது.

தசோப(10)நிஷத்துகள்

150–க்கும் மேலான உபபநிஷதங்கள் இருந்தபோதிலும் பத்து உபநிஷத்துகளே முக்கியமானவை:பிருஹத் ஆரண்யக, ஈச, ஐதரேன கேன, கதோ, சாந்தோக்ய, முண்டக, மாண்டூக்ய, தைத்ரீய என்று பத்து நூல்களை ஒன்றாக வகைப்படுத்தினர். அதை தச (பத்து) உபநிஷத் என்ற எண்ணால் குறிப்பர்.

IMG_3383

18 புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்

 

18 உபபுராணங்கள்

சிறிய, முக்கியமற்ற புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.

பஞ்ச (5) மஹா காவ்யங்கள்

காளிதாசனின் ரகுவம்சம், குமாரசம்பவம், மாகனின் சிசுபாலவாதம், பாரவியின் கிராதர்ஜுனீயம், ஹர்சனின் நைசத சரிதம்

தமிழர்கள் சாதனை

தமிழர்கள் சங்க இலக்கியத்தை 18 மேல் கணக்கு நூல்களாகப் பிரித்தனர்; அவையாவன:–

எட்டுத் தொகை (8)

புறநானூறு(400), அகநானூறு (400), நற்றிணை400, குறுந்தொகை400, ஐங்குறுநூறு (500), பதிற்றுப்பத்து (10×10=100), கலித்தொகை, பரிபாடல்

(தமிழர்களின் 4,40, 400 எண் மோஹம் குறித்து முன்னரே ஒரு கட்டுரை எழுதினேன்)

1995 ஆம் ஆண்டுத் தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் “சங்க இலக்கியத்தில் எண்கள்”, “சங்க இலக்கியத்தில் நிறங்கள்” என்ற இரண்டு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தேன்.

பத்துப்பாட்டு (10)

திருமுருகாற்றுப் படை , பொருநர் ஆற்றுப் படை, பெரும் பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பட்டினப்பாலை, முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம்

தமிழ் புத்தகங்கள்

ஐம்பெருங் காப்பியங்கள்

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

18 கீழ்க் கணக்கு நூல்கள்

திருக்குறள், நாலடியார்400, பழமொழி400, நான் (4) மணிக்கடிகை, திரி(3) கடுகம், ஏலாதி, கார் நாற்பது40, களவழி நாற்பது 40, இன்னா நாற்பது40, இனியவை நாற்பது40, திணைமாலை நூற்றைம்பது 150, ஐந்திணை ஐம்பது 50, ஐந்திணை எழுபது70, திணைமொழி ஐம்பது 50, இன்னிலை, சிறுபஞ்ச (5)மூலம், முதுமொழிக்காஞ்சி,ஆசாரக் கோவை.

இவை எல்லாம் இந்துக்களின் மேதாவித்தனத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. ரிக்வேதத்திலேயே டெசிமல் சிஸ்டத்தை பயன்படுத்தி ஆயிரம், லட்சம் என தசமஸ்தானத்தில் எண்களை அடுக்கி தங்களுக்கு உள்ள எண் அன்பை, நியூமெராலஜி மோஹத்தைக் காட்டிவிட்டனர்.

swami_48@yahoo.com

படங்களுக்கு நன்றி

“பிரிட்டனில் 4500 ஆண்டு பழமையான இந்து கோவில்!”

IMG_1596

ஆராய்ச்சிக் கட்டுரை எண் : 1981

தேதி : ஜூலை 8, ஆண்டு 2015

லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: காலை10-00

1990 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள சவுத் இந்தியன் சொஸைட்டி ஏற்பாடு செய்த கோச் டூரில் போர்ன்மவுத், ப்ளிமவுத் கடற்கரைக்குச் செல்லுகையில் ஸ்டோன்ஹெஞ்ச் சென்றோம். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற திங்கட்கிழமை மீண்டும் சென்றேன். சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை எழுந்தது.முன்னை விடக் கூட்டம் கூடியிருக்கிறது. குறிப்பாக ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர்.

ஸ்டோன்ஹெஞ்ச் என்றால் என்ன?

15 பவுண்ட் நுழைவுக் கட்டணம் செலுத்துவோருக்கு ஒரு துண்டுப் பிரதி கொடுப்பார்கள். அதில் எழுதப்பட்ட விஷயம்:” ஸ்டோன்ஹெஞ்ச் என்பது ஒரு பழங்கால கோவில்; சூரியனுடைய சஞ்சாரத்தின் அடிப்படையில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் நவீன விஷயங்களை அறிந்தோரால் எழுபப்பட்டது”.

இது லண்டனிலிருந்து 100 மைல் தொலைவில் ஏமிஸ்பரியில் இருக்கிறது. (பிரிட்டனில் பல ஊர்களின் பெயர்கள் “பரி” என்று முடியும். இதுசம்ஸ்கிருதச் சொல்= புரி. அதுவே தமிழில் ஊர் ஆனது. மேலும் பல ஊர்கள் “ஹாம்” என்று முடியும். இது கிராமம் எனும் சம்ஸ்கிருதச் சொல்லின் மரூஉ. பர்மிங்ஹாம், ஈஸ்ட் ஹாம், லூயிஸ் ஹாம் என்பர்.)

துண்டுப் பிரதிலுள்ள இரண்டு சொற்களைக் கவனியுங்கள்: கோவில், சூரியனுடைய செலவு/சஞ்சாரம்.

இதனாலும், இந்த இடத்தை “ட்ரூய்ட்ஸ்” என்னும் இனத்தாருடன் தொடர்பு படுத்துவதாலும் இதை இந்துக்களின் சின்னம் என்று நான் எண்ணுகிறேன். முதலில் “ஸ்டோன்ஹெஞ்ச்” பற்றிப் பார்ப்போம். படத்தைப் பாருங்கள். பிரம்மாண்டமான கற்கள் மீது அதே அளவுள்ள கற்களை ஏற்றி வைத்துள்ளனர். இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது சில கற்கள் (பாறைகள்) அங்கு இல்லை.

இதில் மர்மம் என்ன வென்றால், எங்கிருந்து இந்த பிரம்மாண்டமான பாறைகள் வந்தன? எப்படி அதைக் கொண்டு வந்தனர்? எதற்காக அதை சிரமப்பட்டு ஏற்றி வைத்தனர்? அதை ஏன் வட்ட வடிவில் அமைத்தனர்? யார் இதைச் செய்தனர்? எப்போது இப்படிச் செய்தனர்? அருகில் மலைகளே இல்லையே!

இதே கேள்விகளை நாம் ராஜ ராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் விஷயத்திலும் எழுப்பினோம். விடைகளைக் கண்டோம். அது போல ஸ்டோன்ஹெஞ்ச் விஷயத்திலும் தடைகள் எழுப்பி விடையும் கண்டுவிட்டனர். எனது கட்டுரை ஸ்டோன்ஹெஞ்சின் பெருமையைப் பேச எழுந்த கட்டுரை இல்லை. இந்துக்களுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று ஆராயும் கட்டுரை.நிற்க.

உலகில் இன்றுவரை சூரியனை வழிபடும் இனம் இந்து இனமே. போன ஆண்டு இராக் நாட்டு யஸீதி என்னும் பழங்குடிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதில் அவர்களும் இந்துக்களைப் போலவே மயில், அக்னி, சூரியன் ஆகியவற்றை வழிபடுவதைக் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் குறிப்பிடப் படும் ஐந்துவகை மக்களின் (பஞ்ச ஜனாஹா) ஒரு குழுவான த்ருஹ்யூ குழுவாகும். ரிக் வேதத்தில் வரும் பத்து ராஜா யுத்தத்துக்குப் பின்னர் அவர்கள் எல்லோரும்  — அதாவது தோற்றுப்போன ராஜாக்களின் மக்கள், ஐரோப்பாவில் குடியேறினர். யது (யாதவ) என்னும் குலத்தை சேர்ந்த சிலர் அங்கு சென்று யூதர் ஆயினர். த்ருஹ்யூ குலத்தினர் ட்ரூய்ட்ஸ் ஆயினர்.

IMG_4788 IMG_4792

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்

சூரிய வழிபாடு

உலகில் சூரியனுக்குப் பல இடங்களில் கோவில்கள் உண்டு ஆனால் ஒரிஸ்ஸாவில் கொனாரக், காஷ்மீரில் மார்த்தாண்ட், குஜராத்தில் மதெரா முதலிய 13 சூரியன் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. இவைகளில் பல முஸ்லீம்களின் தாக்குதலால் அழிந்தன; பூஜைகள் நின்றன. ஆயினும் இந்துக்களின் சூரிய வழிபாடு நிற்கவில்லை.

1.பிராமணர்கள் நாள்தோறும் மூன்று முறை வேத மந்திரங்களைச் சொல்லி சூரியனை வழிபடுகின்றனர். அதற்கு த்ரி கால சந்தியா வந்தனம் என்று பெயர்.

2.சூரியனார் கோவில் முதலிய கோவில்களில் இன்றும் வழிபாடு நடக்கிறது. எல்லா தென்னிந்திய கோவில்களிலும் சூரிய, சந்திரர், நவக் கிரஹ சந்நிதிகள் உண்டு.

3.சூரிய சஞ்சாரம்: இது எல்லா ஜாதியினருக்கும் முக்கியமானது. சூரியனின் வடதிசைப் பயணத்தை (உத்தராயண புண்ய காலம்/மகர சங்கராந்தி/ பொங்கல்)  எல்லோரும் கொண்டாடுகிறோம். சூரியனின் தென் திசைப் பயணத்தையும் (தட்சிணாயன புண்ய காலம்) எல்லோரும் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு நேரங்களில் தை, ஆடி அமாவசைகளில் எல்லா ஜாதியினரும் புனித நதி, கடற்கரைகளில் நீத்தாரை நினைந்து நீர்க்கடன் செலுத்துவர். தமிழர்கள் இன்று வரை இதைச் செய்துவருகின்றனர்.

இதே தான் ஸ்டோன்ஹெஞ்ச்சிலும் நடை பெற்றது. பிரிட்டன் என்பது குளிர் நாடாகையால் தட்சிணாயன புண்ய காலத்தை (தென் திசைப் பயணம்) பெரிதாகக் கொண்டாடினர். இப்பொழுதும் மிக நீண்ட பகல் பொழுதுடைய ஜூன் 21–ஆம் தேதி த்ரூய்ட்ஸ் என்ற பெயரில் வெள்ளாடை தரித்த ஒரு குழு விநோதச் சடங்குகளைச் செய்கின்றது.

IMG_4767 IMG_4773

இதுபற்றி கி.மு நாலாம் நூற்றாண்டில் ஒரு குறிப்பும் கிடைத்திருக்கிறது. பிரிட்டனில் ஓரிடத்தில் வட்ட வடிவக் கற்கோயில் இருப்பதாகவும் அது அப்பலோ கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் எழுதியுள்ளனர். அப்பலோ என்பது விஷ்ணுவைக் குறிக்க, கிரேக்கர்கள், வேறு சில இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஸ்டோன்ஹெஞ்ச் போல ஏவ்ஸ்பரியிலும் வட்டவடிவப் பாறைகள் உள.

ஆகவே, சூரியனுடைய போக்கின் அடிப்படையில், சூரியன் கோவில் கட்டப்பட்டிருப்பதாலும், அங்கே சூரிய வழிபாடு நடைபெற்றதாலும் இது இந்துக்களுடன் –- வேத கால த்ருஹ்யூக்களுடன் — தொடர்புடையது என்பது எனது துணிபு.

நாம் எல்லோரும் சூரிய நமஸ்காரம் என்று மந்திரத்துடன் பயிற்சியும் செய்கிறோம். அழிந்து போன இந்தப் பண்பாட்டை, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நன்கு பரப்பியமையால் இப்பொழுது புத்துயிர் பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் படித்து விட்டு லண்டன் வாழ் திருச்சி கல்யாண குருக்கள் தொலைபேசியில் சில விஷயங்களைச் சொன்னார்:

இந்துக் கோவில்கள் பெரும்பாலும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையாஇ நோக்கியே இருக்கும்.

நவக்கிரஹ சந்நிதிகள் வரும் முன்னரே சூரியன், சந்திரன் சந்நிதிகள் நம் கோவில்களில் உள.

மேலும், ஒரு கோவில் தட்சிணாயணத்திலோ, உத்தராயணத்திலோ கட்டப்பட்டால் அதற்குத் தக முகப்பு, சந்நிதிகளை அமைக்கும் வழக்கமும் உண்டு.

யாக சாலை பூஜைகளில் காலையில் துவங்கும் போது சூரிய பூஜை முதலில் செய்ய்ப்படும்.

இவை அனைத்தும் இன்று வரை நாம் செய்யும் சூரியவழிபாட்டுக்கு சான்று பகரும்.

IMG_1542 IMG_1540

நூற்றுக் கணக்கான எடையுடைய கற்கள்; பழங்காலக் குடிசைகளின் மாதிரி.

ட்ரூயிட்ஸ் – இந்து தொடர்பு

சில அறிஞர்கள் ஸ்டோன்ஹெஞ்ச் வட்டக் கற்பாறை அமைப்பையும் ட்ரூயிட்ஸ் இனத்தாரையும் தொடர்பு படுத்துவது கால வழூஉ ஆகும் என்பர். ஏனெனில் ஸ்டோன்ஹெஞ்சின் எல்லா அம்சங்களும் கி.மு. 1200 க்கு முந்தியவை. ட்ரூயிட்ஸ் இனக் குழுவோ கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டு முதலே அறியப்பட மக்கள் என்பது அவர்களுடைய வாதம். ஆனால் இதற்கு மறுப்புச் சொல்ல பல வாதங்கள் உள. மோசஸ் என்பவருக்கு இதுவரை வரலாற்று,  தொல்பொருட் சான்றுகள் உலகில் கிடைக்கவில்லை. ஆயினும் அவரை அஸ்திவாரமாக வைத்து யூத மதம் என்ற மதமே இருக்கிறது!!! ஆகையால் தொல்பொருட் துறைச் சான்றுகள் இல்லை என்ற பெயரில் ட்ரூயிட்ஸ்களை ஓரம் கட்டுவதில் எந்த நியாயமும் இல்லை. நிற்க.

IMG_4772 IMG_4777

ட்ரூயிட்ஸ்கள் யார்?

அயர்லாந்து மற்றும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நிலப்பரப்புகள் ஒரு காலத்தில் கெல்டிக் (செல்டிக் என்றும் சொல்லுவர்) இனத்தின் கீழ் இருந்தது. இதில் பிராமணர்களைப் போல புரோஹிதர்களாக இருந்தவர்களே ட்ரூயிட்ஸ்கள். இவர்களைப் பற்றி ரோமானியர்களும், கிரேக்கர்களும் நிறைய எழுதிவைத்துள்ளனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.முதல் நூற்றாண்டு வரையிருந்த அலெக்ஸாண்டர் பாலிஹிஸ்டர், தியோதரஸ் சிகுலஸ், ஜூலியஸ் சீசர், மூத்த பிளினி ஆகியோர் எழுதிய குறிப்புகளில் இருந்து நாம் அறிவது யாதெனின்:

1.இவர்கள் மறு பிறப்பில் நம்பிக்கை உடையோர்.

2.ஆத்மா நிரந்தரமானது; அழிக்கவொணாதது என்பர்

3.கடவுளருக்கு உயிர்ப் பலி, மனித பலி கொடுப்பர்

4.ஓக் மரங்களையும் மிசல்டோ மூலிகையயும் புனிதமாகக் கருதுவர்.

மேற்கூறிய அனைத்தும் வேதங்களில் உள்ளன. புருஷமேத யக்ஞம் என்னும் நரபலி சிந்து சமவெளி முத்திரையில் இருப்பது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னரே தனிக் கட்டுரை வரைந்துள்ளேன். ஆயினும் நாம் மாயன் நாகரீகம் போலவோ மத்தியக் கிழக்கு போலவோ இதை பெருமளவு நடத்தியமைக்கு ஆதாரம் இல்லை .பஹ்ரைன் முதலிய மத்தியக் கிழக்கு நாடுகளில் பீனீஷியர்கள் முதலியோர் லட்சக்கணக்கில் குழந்தைகளைப் பலிகொடுத்ததையும், பல்லாயிரக் கணக்கில் குழந்தைகள் கல்லறைகள் கண்டு பிடிக்கப்படுவருவது குறித்தும் வேறு ஒரு கட்டுரையில் தந்து விட்டேன்.

ஆக மேற்கூறிய சில அம்சங்களில் ட்ரூயிட்ஸ் இனம் இந்துக்களுடன் தொடர்புடைத்தே.

கடைசியாக ட்ரூயிட்ஸ் என்ற சொல்லின் பொருளும் இதை இந்துக்களுடன் தொடர்பு படுத்துகிறது. சிலர் இந்தச் சொல்லை ரிஷிகள் (மந்த்ர த்ருஷ்டா= ட்ரூயிட்ஸ்) என்பர். இன்னும் சிலர் தருவை (மரத்தை) வழிபட்டவர்கள் (தரு=ட்ரீ=டரு=ட்ரூயிட்ஸ்=மரம்) என்பர். ஆக த்ருஷ்ட (பார்வை), தரு (மரம்) என்பன எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள். இன்னும் சிலர் இது ‘ரென்’ இனப் பறவை, அல்லது மந்திரவாதி என்பர்.

druids_stonehenge

ஆகவே ட்ரூயிட்ஸுக்கும் ஸ்டோன்ஹெஞ்சுக்கும் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துக்களுடன் அவர்களுக்குள்ள தொடர்பு அவர்தம் புனர் ஜன்மம், ஆத்மாவின் அழியாத் தன்மை ஆகிய கொள்கையாலும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஜூலியஸ் சீசர் முதலியோர் இவர்களை ‘பிதகோரியன்’ என்பர். அதாவது கிரேக்க நாட்டு தத்துவவித்தகண் பிதகோரஸின் கொள்கைகலைப் பின்பற்றுபவர்கள் என்பது பொருள். பிதகோரஸ், இந்திய உபநிஷதக் கொள்கைகளைக் கற்று கிரேக்க நாட்டில் பரப்பியதால் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில் , அலெக்ஸாண்டர் ஆகியோர் இந்து மதத்தில் பேரார்வம் செலுத்தியதை முன்னர் வேறொரு கட்டுரையில் கண்டதால் விரிவஞ்சி விடுக்கிறேன்.

படங்கள் திங்கட்கிழமை என்னால் எடுக்கப்பட்டவை; வெள்ளாடைதரித்தோர் படம் என்னுடையதன்று.

மாக்ஸ்முல்லர், கால்டுவெல், ஜி.யு.போப் மீது இலங்கை அறிஞர் கடும் தாக்கு

 718_Max_Mueller

Article No.1975

Date: 5  July 2015

Written by London swaminathan

Uploaded from London at 12-55

இலங்கையிலுள்ள மட்டக்களப்பு, புளியநகர் ச.பூபால பிள்ளையவர்கள் 1920 ஆம் ஆண்டில் எழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலில் காணப்படும் தகவல்:

தமிழ் நலப்பேறு

தமிழிலே பிறந்து தமிழிலே வளர்ந்து தமிழையே பயின்று பாண்டித்தியமடைந்த தமிழர்க்கே தமிழ் நூல்கள் பலவும் இருப்புக் கடலை யொக்குமெனில் பிறசாதியார்க் கவை யென்னொக்குமெனப் பேசவும் வேண்டுமா?

தமிழ் உழைப்பிலே தன் வாழ்நாளைச் செலவிட்டு முப்பகுதியாய் இயற்றமிழிலக்கண மியற்றியும் பல தமிழ் நூலKஅலி அங்கிளத்தில் மொழிபெயர்த்தும் புகழ் நிறுவிய “போப்” ஐயர் தமது திருவாசக மொழிபெயர்ப்பில் “இருகை யானையை யொத்திருந்தென்னுள்ளக் கருவையான் கண்டிலேன் – என்பதனை “Like elephant two handed I saw not my mind’s germ” என்று மொழிபெயர்த்து, இரண்டு கரங்களையுடைய யானையே இரு கை யானை எனப்பட்டதாகத் தாங்கொண்ட விபரீத கருத்தை விளக்கிவிட்டனர். இவர் மயக்கத்தை எடுத்துக்காட்டி விளக்கப்புகுந்த மற்றோர் இந்திய தமிழ் பண்டிதர் யானையினது துதிக்கை கரம் போலப் பரிசித்தலும், நாசிபோல முகத்தலுமாகிய இரு தொழிற்குரிய ஒரு கருவியாகலின் “இருகை யானை” எனப்பட்டதென்றனர். இவ்விருவரோ சிறந்த மகா பண்டிதராயிருந்தும் ஒரு அற்ப சொல் விளக்கத்தில் தன் வலி தானறியா யானைபோல் மயக்கமுற் றிருநிலத் தியானை கண்ட குருடரை யொத்தனர். “தென்மொழி” நாளடைவிற் கறைப்பட்டுத் “தமிழ்” என வந்ததாகச் சாதிப்பவருள் இப் “போப்” ஐயரும் ஒருவரே. திருவாசக மொழிபெயர்ப்பில் விபரீதார்த்தங்கள் இன்னும் பல காணலாம்.

G__U__Pope_Tamil_Poet

வீரமாமுனிவர் (ரெவரெண்ட் பெஸ்கி) எனப்பெயர் கொண்ட மற்றொருவர் தொன்னூல் விளக்கம், தேம்பாவணி முதலிய நூல்களியற்றிய பெருந்திறர் கவிஞரென்றாலும் அவரிடமும் தமிழ்நலம் வாய்க்கவில்லை யென்பதற்குச் சான்று தேம்பாவணியிற் செறிந்துள்ள வழூவுக்களேயாம்.

இயல்பிலே சிறந்த நாடகமயிலினாட்டத்துக்கும் கற்று நடிக்கும் வான்கோழியினாட்டத்துக்குமுள்ள தாரதம்மியம்  எத்தூரமோ அத்தூரமே நாநலம் வாய்ந்த செந்தமிழ்ப் புலவர் கவிக்கும் அஃதமையாக் கற்றுச் சொல்லியோர்க் கவிக்குமிடையிலு மென்றுணர்க. இயல்பில் ஐரோப்பியரின் தேச நிலையும் மனக் கிளர்ச்சியும் பழக்கவழக்கங்களும் கீழ்திசையினர்க்கு முற்றாய் மாறுபடலின் இரு கவிதைகளுமொக்கு மாறில்லை.

வடமொழிக் கடலி னெடுநாட் டிளைத்துப் பல நூல்களை அங்கிளத்தில் மொழிபெயர்த்தருளிய “மாக்ஸ்முல்லர்” ஏமாந்த விதத்துக்கோருதாரணம் வேண்டின் மெய்மையாகியாகிய இருக்குவேத சுத்தப் பிரதியொன்றையும் அவர் செய்த ருக்வேத மொழிபெயர்ப்பையும்  பொருந்த ஒட்டிப்பார்த்துத் தெளிக. தமிழ் ஆராய்விற் புக்க மற்றும் ஐரோப்பிய பண்டிதர்களான “கால்டுவெல்”, “உவில்சன் ஆசிரியர்” அதியோர்தாமும் என் கண்டனர்? என் உணர்ந்தனர்? தமிழ் நூல்களை உண்மை தெளிய உணர்ந்தாராயின் தமிழர்க்குரிய சமய உண்மையையுஞ் சிறிதாயினும் கண்டுணர்ந்திருப்பர். அங்ஙன முணர்ந்தஞான்றே தங்கள் மதாசாரங்களை யெல்லாம் கைவிட்டிருப்பரன்றோ?

தமிழ் ஞான குரவர்கள் எவ்வாற்றானும் பக்குவமுள்ள சீடர்க்கேயன்றி மற்றெவர்க்கும் வேத மெய்ப்பொருள்களையும் ஞானோபதேசங்களையும் எளிதில்  வெளிவிடார்.

பிராஞ்சி தேசத்தவரும் தமிழிலே மிக்க பண்டிதரெனக் கவனிக்கபடுபவருமான யூலியன் வின்சன் என்பவர் தமிழிலே ஆதி நூல்களாயுள்ளன கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவைகளன்றி முன்னெழுதப்பட்டவைகள் இல்லை என்றும் தென் இந்தியாவில் தமிழ் எழுத்துக்கள் வழக்கத்தில் வந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் மத்தியென்றும் ஆறாம் நூற்றாண்டுக்கு முன் எழுதியதான கல்வெட்டு முதலிய குறிப்புகள் யாதும் காணப்பட்டதாகத் தாமறியவில்லை யென்றும் சென்னையிற் பிரசுரமாகுஞ் சித்தாந்த தீபிகையில் 1901 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 31ந் திகதி எழுதிவிட்டனர். அம்மம்ம! இவர் எழுத்து யாருக்குத்தான் நகையை விளைவிக்காது?

இன்னோரன்ன பண்டிதர் பலரும் தாந்தாஞ் சென்ற துறைதொறும் அனுமான அளவையால் கண்டுபெற்ற யொன்றை மாத்திரமே நிசமெனக் கொண்டு பிற அளவைகலால் சாதித்துப் பெறக்கூடியவற்றைப் பேணாதகன்றனர்”.

மேற்கண்டது ச.பூபால பிள்ளியவர்கள் எழுதியது.

YANAI ASI

எனது கருத்து

இரு கை யானை என்றால் என்ன?

திருவாசகத்துக்கு விளக்கவுரை எழுதிய சுவாமி சித்பவானந்தர் போன்றோரும் இரு கை யானைக்கு இரண்டு கைகளையுடைய யானை என்றே எழுதியுள்ளனர். அதாவது ஜி.யு.போப் போலவே எழுதியுள்ளனர். திருவவடுதுறை ஆதீன வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் எழுதிய உரையில் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.

இரு கை யானை = இரண்டு கைகளையுடைய யானை போல; அதாவது ஒரு கையால் உண்டால் போதாது என்று இரண்டு கைகள் இருந்தால் எப்படி உண்ணுமோ அப்படி இரண்டு கைகளால் உண்பது போல நான் இருக்கிறேன்

இரு கை யானை = யானை ஒரே துதிக் கையால் சுவாசிக்கிறது. அதே கையால் உணவையும் உண்ணுகிறது. அதாவது மூக்கும், கையும்.

இரு கை யானை= யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும். அதே போல உன்னுடைய அருளைப் பெற்றும் பரகதி என்பதை மறந்தேன். நீ வா என்று அழைத்தும் யானை நன்றி மறப்பது போல உன்னை மறந்தேன்.

இரு கை யானை = இது இரண்டு கைகளையுடைய ஆசானைக் குறிக்கும். யானை தன்னுடலை அறியாதது போல என்னுள்ளக் கருவை நான் அறியேன்.

இன்னும் சிலர் யானையை பிரணவத்துடன் ஒப்பிடுவர்.

இராமாயணத்தில் கம்பனும் “இருகையின் கரிநிகர் எண்ணிறந்தவர்” என்று ஒரு பாடலிலும், “இருகை வேழத்திராகவன்” என்று இன்னொரு பாடலிலும் சொல்லுவார். இரு கை ராகவன் என்பது இராமனையும் மந்திரிமார்களையும் குறிப்பிடும் என்பர்.

சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இரு என்பது இருங்கடல், இருங்கண், இருங்கதிர்கள், இருங்கதுப்பு, இருங்கரை, இருங்கயம் என்று பல இடங்களில் வரும். அங்கு எல்லாம் ‘இரு’ என்பது ‘பெரிய’, ‘நீண்ட’, ‘கரிய’ என்ற பொருளிலேயே வருகிறது. இதை அப்படியே யானைக்கும் ஒப்பிட்டால் மிகவும் சரியாக இருக்கும்:

இருங்கை யானை = பெரிய யானை, கரிய யானை, நீண்ட கையுடைய யானை. ஆகவே இரண்டு (2) என்று எண்ணுப் பொருள் கொடுப்பது தவறே. பூபாலபிள்ளையவர்கள் கூறுவது சரியே என்பது என் கருத்து.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்! இரண்டு பையன்கள் கதை!

bharat mata viveka

Article No.1969

Date: 3 July 2015

Written by London swaminathan

Uploaded from London at 8-01 காலை

ஒரு பிராமணனுக்கு இரண்டு மகன்கள். தகுந்த வயது வந்தவுடன் இருவருக்கும் பூணுல் போட்டு, வேத அத்தியயனம் செய்ய குருவிடம் அனுப்பினான்.  நெடுநாள் கழித்து இருவரும் வேதக் கல்வியை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினர். தந்தை, அவ்விருவரையும் நோக்கி வேதாந்தம் கற்றிருக்கிறீர்களா? என்று கேட்டார்.

(வேத+ அந்தம்= வேதத்தின் இறுதிப் பகுதி =உபநிஷத்து = பிரம்மத்தை அறிதல்; பிரம்மம்=கடவுள்)

இருவரும் படித்திருக்கிறோம் என்றார்கள். அப்படியானால் பிரம்மம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லுங்கள் என்றார் தந்தை.

மூத்த மகன், தான் படித்த வேதங்கள், உபநிஷத்துக்கள் எல்லாவற்றிலிருந்தும் ஏராளமான மேற்கோள்களைக் காட்டி தனது மேதாவிலாசத்தை வெளிப்படுத்தினான். அப்பா! இது மனதுக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டது. அதெல்லாம் எனக்குத் தெரியும் என்று சொல்லி முடித்தான். மகனே! நீ பிரம்மத்தை நன்றாகத் தெரிந்து கொண்டவன் போலத்தான் இருக்கிறாய். நீ போய் உன் காரியங்களைக் கவனி என்றார்.

இரண்டாவது மகனை நோக்கி அதே கேள்வியைக் கேட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை. பதில் சொல்ல முயற்சிக்கவுமில்லை.உடனே அவன் தந்தை, “மகனே! நீதான் உண்மையில் அறிந்தவன். கடவுளின் பெருமை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அப்படி யாராவது வருணிக்க முயன்றால் சம்பந்தா சம்ப்ந்தமில்லாத விஷயங்களை உவமை காட்டி முடிச்சுப் போட வேண்டியிருக்கும். அளவற்ற ஒன்றை, நித்யமான ஒன்றை – அளவுடைய பொருள்களுடனும், அநித்தியமான பொருள்களுடனும்   ஒப்பிட வேண்டி வரும். உனது மௌனம் அநேக ஆயிரம் ஆதாரங்களை காட்டிவிட்டது என்றார்.

ஆதாரம்: ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மொழிகள்.

IMG_3259

தமிழர்கள் இதை ஒரே வரியில் சொல்லிவிட்டார்கள்: கண்டவர் விண்டிலை; விண்டவர் கண்டிலை.

யார் ஒருவன் கடவுளைக் கண்டுவிட்டதாகச் சொல்கிறானோ அவன் இன்னும் முழு சொரூபத்தைக் காணவில்லை. கண்டுவிட்டால் பேசா அனுபூதி பிறந்து விடும். பின்னர் அருணகிரிநாதர் போல “சும்மா இரு! சொல் அற!” — என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.

இப்படித் திடீரென்று பிரம்ம ஞானம் தோன்றியவுடன் ஆதி சங்கரர், விவேகாநந்தர், பாரதியார் போல 40 வயதுக்குள் உடலைத் துறந்துவிடுவர்.

“உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்” – எனும் யஜுர் வேத ருத்ர மந்திரமும் இதையே செப்பும். வெள்ளரிப் பழத்தின் காம்பு, அது பழுத்தவுடன், எப்படித் தானாக விலகிவிடுகிறதோ, அப்படி எனக்கும் மரணத்திலிருந்து விடுதலை தருவாயாக – என்பதே இதன் பொருள்.

முழு மந்திரம்: “ஓம் த்ரயம்பகம் யஜாமஹே, சுகந்திம் புஷ்டிவர்தனம். உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்”—அனைவரும் அனுதினமும் சொல்லலாம்.அநாயாச மரணம் கிட்டும். அதாவது நாமும் கஷ்டப்படாமல், மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாமல் இறைவனடி எய்துவோம்.

இதே பிளாக்கில் லண்டன்  சுவாமிநாதன் எழுதிய கீழ்கண்ட  திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படியுங்கள்:–

சலாம் முருகாசலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!! —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்—  வெளியிட்ட தேதி  ஜனவரி 17, 2013

டாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட     தேதி ஜனவரி 15, 2013

தனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி  ஜனவரி 22, 2013

நரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013

தமிழில் திட்டத் தெரியுமாவசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013

அன்னிய மத மன்னர்களுக்கும் அருளிய மகான்கள்!

tansen

தான்ஸேன்   தபால்தலை

Written  by S NAGARAJAN

Article No. 1963

Dated 30 ஜூன் 2015.

Uploaded at London time : 7-47 am

By ச.நாகராஜன்

மகமதிய படையெடுப்பு

வில் டியூரண்ட் என்ற பிரபல அறிஞர் மனித குலத்தின் சரித்திரத்தை எழுதும் போது மனித குல சரித்திரத்திலேயே இந்தியாவின் மீதான முகமதியர்களின் படையெடுப்பு தான் மகா மோசமானது என வர்ணிக்கிறார். அழிந்த ஆலயங்கள் ஆயிரக் கணக்கில்; வதை பட்ட ஹிந்துக்களோ பல்லாயிரக் கணக்கில்!

என்றாலும் கூட இந்த தேசத்தையும் அதன் பண்பையும் அழிந்து விடாமல் காக்க இந்த மோசமான கால கட்டங்களிலும் மகான்கள் தோன்றி ஒரு பெரும் அரணாக விளங்கி ஹிந்து மதத்தைக் காத்து வந்துள்ளனர். சமர்த்த ராமதாஸர் – சிவாஜி, வித்யாரண்யர் – ஹரிஹர புக்கர் போன்ற ஏராளமான உதாரணங்கள் இந்த சரித்திரத்தில் உள்ளன. இந்த சரித்திரத்தின் தொடர் வரிசையில் அக்பரின் வாழ்விலும் ஔரங்கசீப் வாழ்விலும் ஏற்பட்ட இரு சம்பவங்கள் பிரமிப்பை ஊட்டுபவை.

அக்பரும் தான்ஸேனும்

அக்பர் காலத்தில் பிரசித்தி பெற்ற பாடகராக விளங்கிய தான்ஸேன் ஒப்புவமை இல்லாத உயர்ந்த இசை விற்பன்னராகத் திகழ்ந்தார். தனது அரசவையில் இப்படிப்பட்ட பெரும் பாடகர் இருப்பது குறித்து அக்பருக்கு சொல்லவொண்ணாப் பெருமை.ஒரு சமயம் தான்ஸேன் பாடக் கேட்ட அக்பர் அப்படியே உருகி விட்டார். கண்கள் ஆறாய்ப் பொழிய பாட்டு முடிந்த பின்னரும் நெடு நேரம் அப்படியே உருகிப் போய் அமர்ந்திருந்தார். அவையினரும் அப்படியே மெய்மறந்து இருந்தனர். நேரம் சென்றது. மெதுவாகத் தன் இயல்பு நிலைக்குத் திரும்பிய அக்பர் தான்ஸேனை தழுவிப் புகழ்ந்து, “எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு மனிதனால் இப்படிப்பட்ட தேவ கானத்தைத் தர முடியும்? இது எப்படி உங்களுக்கு வந்தது. காரணத்தைக் கட்டாயம் கூற வேண்டும்!” என்றார்.

தான்ஸேன், “இசை நுணுக்கங்களையும் நுண்ணிய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளும் என்னிடம் சிறிதளவே இருக்கின்றன! இதையே இப்படிப் புகழ்கிறீர்களே! இதற்கெல்லாம் காரணமான என் குரு நாதரின் இசையைக் கேட்டால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ! என் சிறிதளவு திறமைக்கு என் குருநாதர் போட்ட பிச்சையே காரணம்!” என்று அடக்கத்துடன் கூறினார்.

அக்பர் எல்லையற்ற ஆர்வத்துடன், “உடனே உங்கள் குருநாதரை அரசவைக்கு அழைத்து வாருங்கள். அவரை நன்கு கௌரவிக்க வேண்டும்” என்றார்.

தான்ஸேனோ, “அரசே! என் குருநாதர் வனத்தில் குடில் ஒன்றைக் கட்டிக் கொண்டு இறைவன் புகழ் பாடி வாழ்ந்து வருபவர். அவர் பொன்னுக்கும் புகழுக்கும் ஆசைப் படுபவர் இல்லை” என்று பணிவுடன் கூறினார்.

அக்பருக்கு ஒரே ஆச்சரியம். பேரரசனான தன்னைப் பார்க்கக் கூட விரும்பாத ஒரு ‘மனிதர்’ இருக்க முடியுமா என்ன?! அவர் யோசித்தார். தான்ஸேனை நோக்கி, “சரி, அவர் இங்கு வராவிட்டால் என்ன? நான் அவர் இருக்குமிடம் வருகிறேன். அவருக்கே தெரியாமல் செல்வோம். குடிலின் அருகில் என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.

ஆரவாரமின்றி அக்பரின் சிறு படை குடிலை நோக்கிச் சென்றது. ஒரு பல்லக்கில் பொன் நாணயங்களும் பவளம், முத்து, வைரம் முதலிய நவமணிகள் தட்டு தட்டாக எடுத்துச் செல்லப்பட்டன. குடிலுக்கு அருகில் யாரையும் வரவிடாது தான்ஸேனும் அக்பரும் மட்டும் சென்றனர்.

ஆஹா, அற்புதமான கான மழை பொழிந்து கொண்டிருந்தது. அக்பர் பிரமித்து சிலை போல நின்றார். தான்ஸேனை விட பல மடங்கு உணர்ச்சி பாவங்களை எழுப்பிய அந்த இசையில் அவர் முற்றிலுமாகக் கரைந்து போனார்.

வீசி எறியப்பட்ட நவமணிகள்

நீண்ட இசை நின்றது. அக்பர் சுய உணர்வுக்குத் திரும்பினார். ஏவலாள்களை அழைத்து அனைத்துத் தட்டுக்களையும் கொண்டு வரச் சொன்னார். வைரங்களையும், முத்துக்களையும், பவழம், கோமேதகம், பொன் நாணயங்கள் அனைத்தையும் இரு கரங்களாலும் வாரி வாரி எடுத்து குடிலின் முன் புறம் வீசலானார்.

தான்ஸேன் திகைத்து நின்றார். என்ன இது? அக்பரை நோக்கி, “அரசே! என்ன, இப்படிச் செய்கிறீர்கள்?” என்றார்.

“தான்ஸேன்! இந்த நவ மணிகளையும் பொற்காசுகளையும் கொடுத்து இவரைக் கௌரவிக்க நான் இங்கே வந்தது உண்மை தான்! ஆனால் இறைவனைப் பாடி இவர் உதிர்த்த ஸ்வர வரிசைகளுக்கு முன்னர் என் மணிகள் எம்மாத்திரம்! இறைவனைப் பற்றிய இசை மணிகள் அல்லவோ மணிகள்!” அது தான் ஒன்றுக்கும் உதவாத இவற்றை அவர் குடில் முன்னேயே வீசி எறிந்து விட்டேன். வாருங்கள், உள்ளே சென்று அவரை வணங்கி வருவோம்!” என்றார் அக்பர்.

எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தான்ஸேன் அக்பரை தன் குருநாதரான ஹரிதாஸ் ஸ்வாமியிடம் அழைத்துச் சென்றார். ஹரிதாஸர் அக்பரை ஆசீர்வதித்து இறைவன் ஒருவனே என்பதையும் அவனைப் பல வழிகளிலும் அடையலாம் என்பதையும் உணர்த்தினார்.

பல மதங்களையும் ஒன்று இணைத்து தீன் இலாஹி காண அக்பரை உத்வேகமூட்டிய சம்பவங்களுள் இது முக்கியமான ஒன்று!

kumaraguruparar-1

ஔரங்கசீப்பும் குமரகுருபரரும்

அக்பரின் கால கட்டத்திற்குப் பின்னர் டில்லி பாதுஷாவாக அரசாண்ட ஔரங்கசீப்பைக் காண அருளாளரான குமர குருபரர் விரும்பினார். (சிலர் காசியை ஆண்ட பாதுஷாவையே குமரகுருபரர் கண்டதாகக் கூறுவதும் உண்டு) காசியில் ஓரிடத்தைக் கேட்டு அங்கு ஒரு மடம் அமைக்க வேண்டும் என்பது அவரது உன்னத நோக்கம். சைவம் பரப்பும் ஒரு மடத்தைக் காசியில் அதுவும் ஔரங்கசீப்பின் அனுமதி பெற்று அமைக்க முடியுமா! யாருக்கும் நம்பிக்கை இல்லை.

அரசனைப் பேட்டி காண அரசவைக்கு வந்த குமரகுருபரர் திடீரென அரசன் பேசும்  அவனது மொழியிலேயே பேசலானார்.

முதல் நாள் சரஸ்வதியை துதி செய்து சகலகலாவல்லி மாலையை அவர் இயற்றி  அநுக்ரஹம் பெற்று அரசனுடன் பேச அவன் அறிந்ததற்கும் மேலாக அந்த மொழியில் புலமை பெற்றிருந்தார். பாதுஷா திடுக்கிட்டார். குமரகுருபரருக்கு ஆசனம் கொடுக்காமல் அவரை எதிரிலே நிறுத்தி, “என்ன விஷயம்!” என்று கேட்டார்.

சிங்கமே சரியாசனம்

தனக்கு ஆசனம் தரப்படாததை எண்ணிய குமரகுருபரர், ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் முதுகின் மீது அமர்ந்தார். அரசவையில் உள்ளோர் பயந்தனர்; திடுக்கிட்டனர்; பிரமித்தனர். பாதுஷா கேள்விகளைக் கேட்க குமரகுருபரர் பதில் சொல்ல, அனைவருக்கும் அவரது மெய்ஞானத்தைப் பற்றிய மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது. மறுத்துக் கூற முடியாத இறை மொழிகள்!

அரசனிடம் மகமதிய குருமார்கள் சென்று, “இவரது தெய்வம் உண்மை என்றால் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் ஏந்தி பதில் தரச் சொல்லுங்கள்” என்றனர்.

குமரகுருபரர் புன்சிரிப்போடு அந்த சவாலை ஏற்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைக் கையில் ஏந்தி இன்னும் ஆணித்தரமாக உவமைகளுடன் தன் பதில்களைக் கூறினார். அடுத்து என்ன செய்வது?! தன் பதில்களைக் கூறிய குமரகுருபரர், பாதுஷாவை நோக்கி, “மன்னா! நான் இதைப் பிடித்தவாறே என் தெய்வத்தின் துணையோடு பதில்களைக் கூறி விட்டேன். இப்போது இவர்கள் முறை!” என்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கும் அவரின் கேள்விகளுக்கும் பயந்த அவர்கள் அனைவரும் வெளியே ஓடினர்.. பாதுஷா அவரை வணங்கித் தன் கடைசி சோதனையைச் செய்தான். அனைவரும் சமம் எனில் தன்னுடன் விருந்துண்ண முடியுமா என்பதே அவன் கேள்வி. ஒரு செவ்வலரி மலரைத் தட்டில் வைத்து அதை மூடி மன்னனிடம் குருபரர் அளித்தார். அதில் என்ன இருக்கிறது என்று பாதுஷா கேட்க பன்றியின் மாமிசம் என்று அவர் பதிலளித்தார். பாதுஷா வெறுப்புடன் விழித்துப் பார்க்க, “அனைத்துமே சமம் என்று பாருங்கள்” என்று கூறிய குமரகுருபரர் விருந்தில் வைக்கப்பட்ட புலால் வகை உணவுகளை சைவ உணவுகளாக மாற்றி அனைவரையும் திகைக்க வைத்தார்.

 

ஶ்ரீ காசி மடம் உருவானது

எல்லையற்ற விளையாட்டின் முடிவில் அவரின் மெய்யான நிலைகயைக் கண்ட பாதுஷா, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும், கூறுங்கள்” என்று பணிவுடன் வினவினான்.

“மடம் ஒன்றைக் காசியில் துவங்க நமக்கு உத்தேசம். அதற்கு இடத்தையும் இதர வசதிகளையும் செய்ய வேண்டும்” என்று அருளினார் குமரகுருபரர்.

ஶ்ரீ காசி மடம் உருவானது; பாதுகாப்புடன் அது அன்னியர் காலத்தில் நடந்ததோடு சைவ சமயத்தைப் பரப்ப ஆரம்பித்தது.

இன்றும் காசியில் அற்புதமாக நடந்து வரும் ஶ்ரீ காசி மடம் உருவான வரலாறு இது தான்!

மிக பிரம்மாண்டமான ஆலமரமான ஹிந்து மதத்தின் விழுதுகள் போல அவ்வப்பொழுது தோன்றிய மகான்கள் ஏராளம்; அவர்கள் அருளிய விளையாடல்களும் ஏராளம்.

சகலகலாவல்லி மாலை உள்ளிட்ட அருள் நூல்களைப் படித்து ஹிந்து மதத்தின் எல்லையற்ற பெருமையை உணர்வோம்; அதை ஏற்றம் பெறச் செய்து ஏற்றமுறுவோம்!
நன்றி ஞான ஆலயம்

(This article was written by my brother S Nagarajan for Jnana alayam magazine:London swaminathan.)

ஜூலை 2015 ஞான ஆலயம் இதழில் வெளியான கட்டுரை

உயிர், மெய் எழுத்துக்களைக் கண்டுபிடித்தவன் தமிழனா?

tamil-barakhari

Research paper No 1959

Written by London swaminathan

Date: 28 June 2015

Uploaded in London at காலை 9-48

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 (12×18=216), ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 என்று நாம் படித்திருக்கிறோம். இதை நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடம் கற்பிக்கும் போது சொல்வேன்; உடனே எல்லா மாணவர்களும் ஆ! என்று ஒரு வியப்புக் குரல் கொடுப்பார்கள். கவலைப் படாதீர்கள்! முப்பது (12+18) எழுத்துக்களைப் படித்துவிட்டு சில குறியீடுகளையும் (diacritical marks டயக்கிரிட்டிகல் மார்க்ஸ்) அதற்குப் பின்னுள்ள சப்தங்களையும் புரிந்து கொண்டால் போதும்! ——- என்றவுடன் நிம்மதிப் பெருமூச்சுவிடுவர்.

அதற்குப் பின்னால் எழுத்து அமைப்பு விஷயத்தில், தமிழர்களின் அறிவியல் பூர்வ அணுகு முறையை விளக்கும்போது, உயிர் என்பது நம்முடைய மூச்சுக் காற்று, மெய் என்பது நமது உடல், இரண்டும் சேரும்போது வருவது உயிருள்ள மனிதன் என்பது போல இந்த உயிர் மெய் எழுத்துக்கள் என்று அதன் தத்துவப் பின்னணிகளை விளக்குவேன். பிற்காலத்தில் இது சைவ சித்தாந்த விளக்கத்திலும் இடம் பெற்றது. பல புத்தகங்களில் இது தமிழனின் அரிய கண்டுபிடிப்பு என்று எழுதி இருப்பார்கள். அது உண்மை அல்ல. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேத கால இலக்கியத்தில் இது இருக்கிறது. அப்படியானால் தமிழன் அதைக் “காப்பி” (copy) அடித்தானா? அதுவும் இல்லை!

தமிழ் மொழியையும் சம்ஸ்கிருத மொழியையும் படைத்தவன் சிவ பெருமான். தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் பொறுப்பை வடக்கிலிருந்து வந்த அகத்தியன் செய்து கொடுத்தான். இதை நான் சொன்னால் ஒதுக்கிவிடுவீர்கள். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும், நமது காலத்தில் வாழ்ந்த உலக மகா கவிஞன் சுப்பிரமணிய பாரதியும் சொல்லியிருக்கிறான் (ஆதிசிவன் பெற்றுவிட்டான்……..) இரண்டு பாடல்களையும் முன்னொரு கட்டுரையில் தந்துவிட்டேன்.

தமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை சிவபெருமான் அனுப்பியதில் இரண்டு உண்மைகள் புலப்படும்:

1.அகத்தியர் வருவதற்கு முன்னரே தென்னாட்டில் தமிழ் என்று ஒரு மொழி இருந்தது. அது வட நாட்டிலோ, சிந்து சமவெளியிலோ வழங்கப்படவில்லை. தென்னாட்டில் மட்டுமே இருந்தது. இதைத் தொல்காப்பியரும், பனம்பாரனாரும் கூட சொல்கிறார்கள்.

2.இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்ததால்தான், இரண்டு மக்களும் ஒரே இனம் என்பதால்தான், அகத்தியர் அந்தப் பணியை ஏற்றார்; திறம்பட செய்தும் முடித்தார்.

இதுவரை முந்தைய கட்டுரைகளில் நான் சொன்ன கருத்துக்கள்:

1.இந்திய மொழிகளை திராவிட (Dravidian) மொழிகள் என்றும் இந்திய-ஐரோப்பிய (Indo-Eoropean)  மொழிக் குடும்பம் என்றும் பிரித்தது தவறு (சான்று: பரஞ்சோதி முனிவர், பாரதியார், தமிழ்-சம்ஸ்கிருத மொழிகளின் அமைப்பு).

2.இந்திய வரலாற்றையோ, பண்பாட்டையோ பற்றி எழுதுபவனுக்கு தமிழ், சம்ஸ்கிருத இலக்கிய, இலக்கண அறிவு இல்லாவிடில் கால்டுவெல் (Bishop Caldwell) போல அரை வேக்காட்டுக் கொள்கைகளை மொழிவர் (நல்ல வேளையாக, கால்டுவெல் கூறிய கொள்கைகளை எல்லா தமிழறிஞர்களும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். தமிழன் துருக்கி (Mediterranean) பகுதியிலிருந்து வந்தவன், அவன் மொழிக்கும், சிதிய (Scthyan) மொழிக் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு என்றெல்லாம் அவர் உளறி வைத்தார். பகுத்தறிவுத் திராவிடங்கள் கூட அதை ஏற்கவில்லை).

  1. உலகில் சம்ஸ்கிருதத்துக்கு மிக நெருங்கிய மொழி தமிழ், தமிழுக்கு மிக நெருங்கிய மொழி சம்ஸ்கிருதம்; ஏனெனில் இரண்டு மொழிகளின் அகர வரிசை (Alphabetical order) , வேற்றுமை (Case suffixes) உருபுகள், சந்தி ( joining Rules) இலக்கணம் முதலியவற்றை வேறு எங்கும் காணமுடியாது. அப்படிக் கண்டால், அந்த மொழிகள் இவைகளிலிருந்த வந்த மொழிகளே!

4.தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் ஒரே கொள்கைகளை, வாழ்க்கை மூல்யங்களைப் (Values in life) பாராட்டுவதோடு (எ.கா.அறம், பொருள் இன்பம், இம்மை/மறுமை, வாய்மை), சில சொற்களை ஆதிகாலம் முதல் பகிர்ந்து (எ.கா. இருதயம், மனம், காமம்) கொள்கின்றனர். ஒரே மண்ணில், ஒரே சிந்தனையுடைய வர்கள் என்பதால்தான் இது சாத்தியமாயிற்று. இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறைய உதாரணங்களைக் கொடுத்துவிட்டதால் மீண்டும் சொல்ல விரும்பவில்லை.

5.கடைசியாக மற்றொரு விஷயத்தையும் சொன்னேன்: ஆரியர்களும்- திராவிடர்களும் சந்திதபோது ஒலி மாற்றங்கள் (Sound changes) ஏற்பட்டதென்ற அரை வேக்காட்டு வாதங்களுக்கு பொருளே இல்லை. ஏனெனில் இவை தமிழ் மொழிக்குள்ளேயே எழுத்துக்கள் புணரும்போது (internal canges) இப்படி மாற்றம் அடைவதை இலக்கணப் புத்தகங்கள் காட்டுகின்றன; அதுமட்டுமல்ல, உலகில் பல இடங்களில் இப்படி மாற்றங்கள் நடந்து இருக்கின்றன (Odysseus= Ulysses; Ramadan= Ramalan= Ramzan ) என்பதையும் காட்டி, உலகிலுள்ள எல்லா பெரிய, முக்கிய மொழிகளும் தமிழ்-சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் இருந்தே வந்தன என்றும் சொன்னேன். இதனால்தான் தொல்காப்பியத்துக்கு நான்கு வேதங்களையும் கரைத்துக்குடித்த/ கரை கண்ட அதங்கோட்டு பிராமணன் “சர்ட்டிபிகேட்” கொடுத்தார் என்று பனம்பாரனார் எழுதிவைத்தார்.

sanskrit_alphabet_small_poster

தமிழன் காப்பி அடிக்கவில்லை

ஆகையால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பல ஒற்றுமைகளைக் காணும்போது யார் யாரிடருந்து “காப்பி” அடித்தனர் என்று கணக்குப்போடாமல், அவை எல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிறந்த சகோதரர்களின் ஒருமித்த சிந்தனைக்குச் சான்று பகரும் அற்புதக் குறிப்புகள் எனக் கொண்டால் ஐயங்கள் எழா!

தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தை, தொல் பொருட் துறை, வரலாற்று, மொழியியல் அடிப்படையில் கி.மு முதல் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின் என்பர் அறிஞர் பெருமக்கள். இதே போல எகிப்திலுள்ள அமர்ணா லெட்டர்ஸ்/ கடிதங்கள் (Amarna Letters in Egypt), துருக்கிநாட்டு பொகஸ்கோய் (Bogazkoy) கல்வெட்டு, சிரியா நாட்டில் கிக்குலி (Kikkuli’s Horse Manual) எழுதிய குதிரை சாஸ்திரம், துருக்கி-சிரியாவை ஆண்ட தசரதன் – பிரதர்தனன்(Tusserata, paratartana) ஆகிய தொல்பொருட் துறைச் சான்றுகளால் சம்ஸ்கிருத மொழியை கி.மு.1400 க்கு முன் என்று வைப்பர். இவை அசைக்க முடியாத தொல்பொருட் துறைச் சான்றுகள் (archaeological evidence) என்பதால் யாரும் மறுப்பதில்லை!

சுருக்கமாகச் சொன்னால் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடைவெளி குறைந்தது 1400 ஆண்டுகள். ஆகையால் இரண்டு மொழிகளும் கிளைவிட்டுப் பிரிந்து இரண்டு ஆல மரங்களாக வளர்ந்ததில் – இரண்டு வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்ததில்— வியப்பொன்றுமில்லை.

உயிரெழுத்தும், மெய்யெழுத்தும்

வேதத்தில் பாடல்கள் உள்ள பகுதியை சம்ஹிதை என்பர்; அதைத் தொடர்ந்து வந்தது- பிராமணங்கள்; அதற்குப் பின் எழுந்தது ஆரண்யகங்கள்; கடைசியாக வந்தது உபநிஷத்துக்கள்.

தைத்ரீய ஆரண்யகம் என்ன சொல்கிறது என்று காண்போம் (2-3-4-1; 3-2-5-2):

உயிரெழுத்து என்பது நாள்; மெய் எழுத்து என்பது இரவு;

உயிரெழுத்து என்பது உள்ளுணர்வு; மெய் எழுத்து என்பது உடல்;

உயிரெழுத்து என்பது ஆகாசம்; மெய் எழுத்து என்பது பூமி.

உயிரெழுத்து என்பது எலும்பு மஜ்ஜை; மெய் எழுத்து என்பது எலும்பு.

என்று இரண்டுக்கும் உள்ள உறவை அழகாகப் பாடுகின்றனர். இதைத் தமிழர்கள், அகத்திய மகரிஷி தலைமையில் மேலும் அழகுபடுத்தி உயிர், மெய்/உடல், உயிர்மெய் என்று எழுதினர்.

letter

சம்ஸ்கிருதத்தில் சிறப்பான ஊஸ்ம (Sibilants) சப்தங்கள் உண்டு. அவை ச, ஸ, ஷ என்பன.

இவைகளையும் தைத்ரீய ஆரண்யக மந்திரம் சேர்த்துக் கொண்டு, அவைகளை உயிர் மூச்சு, காற்று மண்டலம் என்றெல்லாம் வருணிக்கும். ஆகவே இந்தக் கொள்கையின், “மூலம்” வேத இலக்கியங்களில் இருந்து வந்தது.

சாந்தோக்ய உபநிஷதத்தில் (2-22-5) உயிர் எழுத்தை இந்திரன் என்றும் ச,ஸ,ஷ எழுத்துக்களை பிரஜாபதி என்றும், மெய் எழுத்துக்களை யமன் என்றும் வருணிக்கும். இதன் பின்னுள்ள தத்துவ விளக்கங்களுக்குப் போகாமல் மேம்போக்காகப் பார்த்தாலும் மொழியியலை ஏன் இவ்வளவு பயன்படுத்தினார்கள் என்று வியப்போம். இன்னொரு இடத்தில் மூவகை எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லி இலக்கண பாடம் நடத்தும்!!

இதில் மிக வியப்பான விஷயம்: சமய விஷயங்களில் கூட இலக்கணத்தையும், மொழியியலையும் புகுத்தியதாகும். உலகில் மிக முன்னேறிய நாகரீகம் வேத கால நாகரீகம். இதனால்தான் இலக்கண, இலக்கிய உவமைகளை மத விஷயத்தில் புகுத்தியுள்ளனர். மோஸஸ் என்பவர் பத்து கட்டளைகளைப் (Ten Commandments) பெறுவதற்கும் முன்னரே, கிரேக்க மஹா கவி ஹோமர் இலியட், ஆடிஸி (Homer’s Iliad and Odyssey)  ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதும் முன்னரே வேத கால இந்துக்கள் மொழியியல் (Linguistics) பற்றிப் பேசத்துவங்கிவிட்டனர் — உவமைகளாகப் பயன்படுத்தினர் — என்றால் அவர்களுடைய பேரறிவு எத்தகையது என்பதை நீங்களே எடைபோடலாம்.

வேத காலத்துக்கு நீண்ட நெடுங்காலத்துக்குப் பின் வந்த, உலகமே வியந்து போற்றும், மஹா கவி காளிதாசன் தனது ரகு வம்ச மஹா காவியத்தின் முதல் பாடலிலேயே பயன்படுத்தும் உவமை, இந்திய மக்களின் எழுத்தறிவினை உலகிற்கே பறை சாற்றும்:

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் பிரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதிபரமேஸ்வரௌ

பொருள்: சொல்லும் பொருளும் சேர்திருப்பவர் போல உலகத்திற்குத் தாய் தந்தையாக விளங்கும் பார்வதியையும் பரமேஸ்வரனையும் சொல், பொருள் இவைகளை அறியும் பொருட்டு வணங்குகிறேன்

இந்தியர்களின் மொழி அறிவு கண்டு – பாணினியின் இலக்கண நூல் கண்டு — உலகமே வியப்பது இதனால்தான்!!

ஐந்து மக்கள் – பஞ்ச ஜனாஹா யார்? ரிக் வேதத்தில் மர்மம் நீடிக்கிறது

number-5

Research paper No 1957

Written by London swaminathan

Date: 27 June 2015

Uploaded in London at 14-24

ரிக் வேதம் உலகின் மிகப் பழைய நூல்; இப்போது அமெரிக்கவிலுள்ள இந்து மத எதிரிகளும் இதன் நான்கு மண்டலங்களுக்கு கி.மு 1700 என்று தேதி குறித்துள்ளனர். ரிக் வேதத்தில் மொத்தம் பத்து மண்டலங்கள். இன்னும் சிறிது காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சொன்னது போல ரிக்வேதம் 6000 ஆண்டுப் பழமையானது (கி.மு4000) என்று உலகம் ஒப்புக்கொள்ளும். அதாவது சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் முந்தையது! ஏனெனில் இதுவரை யாரும் மறுக்கவொணாத வானியல் குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளன. நிற்க.

ரிக்வேதத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளன. எட்டாவது மண்டலம் முழுதும் ஈரான் நாட்டு (பாரசீகம்) அரசர் பற்றிய அதிசயக் குறிப்புகள், ஒட்டகங்களைப் பரிசு கொடுத்தது முதலிய விஷயங்கள் இருக்கின்றன. இதே போல ரிக் வேதத்திலும் பிற்கால வேத இலக்கியங்களான பிராமணங்கள், உபநிஷத்துக்களிலும் அடிக்கடி வரும் பஞ்ச ஜனாஹா — “ஐந்து மக்கள் குழு” யார் என்று இன்னும் முடிவகத் தெரியவில்லை.

ரிக்வேதத்துக்குக் குறைந்தது 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சங்க தமிழ் இலக்கியத்துக்கே நச்சினார்க்கினியர் போன்ற உரையில்லாவிடில் பொருள் புரியாது. அதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த திருக்குறளுக்கும் பரிமேலழகர் உரையின்றி பொருள் புரிவதில்லை.

இதே போல வடக்கில் வியாசர் என்ற ஒரு மகரிஷி நமக்கு வேதங்களைத் தொகுத்து, நான்காக வகுத்து, நான்கு சீடர்களை அழைத்து, பெரிய “அட்மினிஸ்ட்ரேட்டர்” போல செயல்பட்டிராவிடில் நமக்கு வேதங்கள் கிடைத்திரா!

வெளிநாட்டு அறிஞர்களுக்கு வேதங்கள் பற்றிப் புரிவதில்லை. ஏனெனில் அவர்கள் இந்த கலாசாரத்தில் ஊன்றியவர்களும் இல்லை. இதைப் போற்றும் நோக்கத்தோடு அதைப் படிக்கவுமில்லை தனி நபர் ஒழுக்கமும் அவர்களிட மில்லை. சுருக்கமாகச் சொன்னால்,இப்போது தமிழ்நாட்டில் ஒழுக்கங்கெட்ட பகுத்தறிவுத் திராவிடங்களும், ஜாதிக் கட்சித் தலைவர்களும் திருவள்ளுவர் குரல்(குறள்)வளையை தினமும் நெரித்து அவரை சித்திரவதை செய்வதைப் போன்றதுதான் இது.

LET-5R

பஞ்ச ஜனா: யார்?

யாஸ்கர் என்பவர் கி.மு 850-ல், அதாவது கிரேக்கர்கள் எழுதத் துவங்கியதற்கு முன், வாழ்ந்தவர். உலகில் முதல் சொல் ஆராய்ச்சி செய்து “லிங்குஸ்டிக்ஸ்” – என்னும் மொழியியல் ஆராய்ச்சியைத் துவக்கிவைத்தவர். அவர் சொல்கிறார்:– தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள் (உயிர்நீத்தார்), அசுரர்கள், ராக்ஷசர்கள் என்று.

நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயணர் என்பவர், துணிச்சலாக வேதத்துக்குப் பொருள் எழுதினார். ஆனால் இதற்குள் வேதம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்துமத தலைவர்களே சாயணரின் உரையை அவ்வளவு பாராட்டுவதில்லை. மேலும் உலகில் முதல் முதல் மொழியியல் புத்தகத்தை எழுதிய யாஸ்கரே தனக்கு 600 சொற்களுக்கு பொருள் விளங்கவில்லை என்று 2850 ஆண்டுகளுக்கு முன்னரே திணறியிருக்கிறார் (காண்க அரவிந்தரின் வேதச் சொல்லடைவு).

அந்த சாயணர் சொல்கிறார்:

இது, நால் வருணத்தினரையும் புறம்பாக இருந்த நிஷாதர்களையும் குறிக்கும் என்று.

வேதத்தின் துதிப்பாடல்களைத் தொடர்ந்து எழுந்தது பிராமணங்கள் என்னும் நூல். அதற்குப் பின்னர் ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் வந்தன. ஐதரேய பிராமணம் என்னும் நூல், பஞ்ச ஜனா: என்பது தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள்/அப்சரஸ்கள், நாகர்கள், பித்ருக்கள் (நீத்தார்) என்று மொழிகிறது. ( விசர்கம் : வந்தால் அதற்கு முன்னுள்ள ஒலியை நீட்டிச் சொல்ல வேண்டும்; ஜனா: = ஜனாஹா)

(கந்தர்வர்களை சிந்து சம்வெளி மக்களுடன் தொடர்புபடுத்தி இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன்)

வழக்கம்போல, வெள்ளைக்காரர்கள் நவக்கிரகங்கள் போல, பல திசைகளைப் பார்த்து நின்றுகொண்டு, பல்வேறு கருத்துக்களைப் பகர்வர். எங்கெங்கெல் லாம் முடியுமோ அங்கெங்கெல்லாம் ஆரிய-திராவிட இனவெறி விஷ விதைகளை ஊன்றுவர். இந்த தொனியில், கெல்ட்னர், ராத் ஆகிய இருவரும் சொல்வது யாதெனின் “இது உலகின் நான்கு மூலையில் வசிக்கும் மக்களையும், அதற்கு நடு நாயகமாக விளங்கும் ஆரியரையும் குறிப்பதாகும்.”

இதற்கு மறுப்பு விடுக்கும் ஸிம்மர் என்பார், ஆரியர்கள்- தாசர்கள் என்று பிரித்துப் பேசும் மக்கள்; அவர்கள் இப்படி உலகையே வளைத்துச் சொல்லியிருக்க முடியாது. இது அனு, புரு, த்ருஹ்யு, துர்வாசு, யது என்ற ஐந்து குலங்களையே குறிக்கும் என்பார். இதற்கு ஆதரவாக ரிக்வேதத்தில் இந்த ஐந்து இன மக்களையும் சேர்த்துக் குறிப்பிடும் இரண்டு துதிப்பாடல்களை எடுத்துக் காட்டுவார்.

அவருக்கு மறுப்பு விடுக்கும் ஹாப்கின்ஸ் என்பார், துர்வாசு என்று ஒரு இனமே இல்லையே! அது யது குல அரசனின் பெயரன்றோ! என்று வியப்பார்.

எனது கருத்து: காலத்தினால் முந்திய யாஸ்கரின் கருத்தை அடியொற்றிச் செல்லுவதே சரி. பிற்காலத்திலும் இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் — பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல், தேவ யக்ஞம்/தெய்வங்க ளுக்குப் பூஜை செய்தல், மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல், பூத யஞம்/பிராணிக ளுக்கு உணவு படைத்தல், பித்ரு யக்ஞம்/நீத்தாரு க்கு நீர்க்கடன் செலுத்தல் என்று பிரித்துள்ளது இதற்கு நெருக்கமாக வருகிறது.

five

இதே போல, தமிழிலும் நான்கு பழைய ஜாதிகளைப் பற்றி மாங்குடிக் கிழார் பாடியுள்ளார் (புறம் 335). இவர்களை யார் என்று இனம் காணமுடியவில்லை.

“துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை”

தற்கால ஆராய்ச்சிகள்

பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய “தமிழ் வரலாற்றில்”, பஞ்ச ஜனா: என்பது ஆரியர் வருகைக்கு முந்திய பூர்வகுடிகளைக் குறிக்கும் என்பார்.

ஸ்ரீகாந்த் தலகரி எழுதிய “ரிக் வேதம் – ஒரு வரலாற்று ஆய்வு” என்ற ஆங்கில நூலில் பஞ்ச ஜனா: பற்றிக் குறிப்பிடாமல், சந்திர வம்சத்தில் யது, புரு, துர்வாசு, அனு, த்ருஹ்யூ என ஐந்து பிரிவுகள் இருப்பதைக் காட்டுவார்.

“ஆரிய தரங்கிணி” எழுதிய ஏ. கல்யாணராமன், பரத வம்சத்தோடு, புரு, த்ருஹ்யூ, அனு, யது/துர்வாசு என்பன ஐந்து மக்கள் என்பார்.

கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணியில் (3-353) ஒரு செய்யுளுக்குப் பொருள் எழுதிய விமர்சகர், “இது மிகவும் சிக்கலான பொருளுடைத்து; நாம் இப்போது சொல்லும் பஞ்சாயத்து என்னும் பொருள் இருக்கலாம்; அல்லது நால் வருணத்தினரும் அதில் சேராத நாகரீகமற்ற கும்பலும் என்று பொருள் இருக்கலாம்; அல்லது தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், பித்ருக்கள் (உயிர் நீத்த முன்னோர்கள்) என்று இருக்கலாம் என்பார்.

எனது கருத்து:

இது யாராக இருந்தாலும் ஐந்து குழுக்களை ஒன்று சேர்த்து ஒரு மரபுச் சொல்லை உண்டாக்க வேண்டுமானால் அந்த ஐந்து இனமும் அங்கு நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது இப்படி ஒரு சொற்றொடர் வர இயலாது. ஆகப் பாரதக் குடி—“பதியெழு அறியாப் பழங்குடி” என்பது தெளிவு.

5 hands

ஆங்கில கலெக்டருக்கும் முஸ்லீம் அரசருக்கும் ஸ்ரீ ராமர் தரிசனம்!

rama young

கட்டுரை எண்:-    1951

Written by London swaminathan

Date: 24 June 2015

Uploaded in London at 9-32 காலை

(தமிழ் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! நல்ல விஷயங்களைச் “ஷேர்” செய்யுங்கள். யார் எழுதினாரோ, யார் படம் எடுத்தாரோ அவரவர் பெயருடன் வெளியிடுங்கள். நிறைய பேர், எனது ஆயிரத்து எண்ணூறு கட்டுரைகளை எனது பெயரை நீக்கிவிட்டு, தங்கள் பெயரில் வெளியிடுவதை எனது நண்பர்களும், உறவினர்களும் எனக்குச் சுட்டிக் காட்டி வருகின்றனர். எல்லோருக்கும் நல்ல புத்தி வரவேண்டும் என்று பிரார்த்தித்து எழுதும் கட்டுரைகளையும் கூடத் திருடுபவர்கள், கொஞ்சமும் மாற மாட்டார்களோ!!! ஆனால் இப்படி ஒரு கலாசாரத்தைப் பரப்பினால், அவர்களது முதலாளிகளும் பிள்ளைகளும் கணவன்மார்களும் மனைவியருமே அவர்களை இப்படி ஏமாற்றி விடுவார்கள் என்பதை மறக்கவேண்டாம்.)

தென் இந்தியாவில் இரண்டு அதிசய சம்பவங்கள் நடந்தன. இரண்டுக்கும் நல்ல ஆதாரங்களும் உள்ளன. செங்கல் பட்டுக்கு அருகிலுள்ள மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவிலின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இதே போல 12 ஆண்டு சிறையில் இருந்த பத்ராசலம் இராமதாசர் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முஸ்லீம் மன்னரிடம் இராம லெட்சுமணர் வந்து செலுத்திய கதையும் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலிருந்து பக்தர்களுக்குக் கிடைக்கும் செய்தி என்ன என்பதையும் இது போன்ற வேறு இரண்டு சமபவங்களையும் சேர்த்து நான்கு கதைகளைச் சுருக்கமாகக் காண்போம்:

கதை 1

செங்கல் பட்டுக்கு அருகில் மதுராந்தகத்தில் கடல் போலப் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி உளது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை வந்துவிட்டால் இந்த ஏரி நிரம்பும். எந்த நேரத்திலும் கரையை உடைத்து ஊருக்குள் பாயும் அபாயம் ஏற்படும். 1795 முதல் 1799 வரை அந்தப் பகுதியில் கர்னல் லியோனல் பிளேஸ் என்பவர் கலெக்டராக இருந்தார். இப்படி ஏரி நிரம்பி உடையும் தருவாயில் கரையைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடு பட்டார். ஊரிலுள்ள ராமர் கோவிலில் மண்டபம் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கற்களைக் கண்டவுடன் அதையும் ஏரிக் கரையைப் பலப்படுத்த பயன்படுத்த எண்ணினார். கோவில் பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் கற்களின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அப்போது ராமனே ஏரியைக் காப்பார் என்றும் அர்ச்சகர்கள் கூறிவிட்டனர்.

அர்ச்சகர்களின் வாதம் ஆங்கிலேய கலெக்டர் பிளேசுக்கு திருப்தி தரவில்லை. உங்கள் இராம பிரான் ஏரியைக் காக்க முடியுமானால் ஏன் இப்படி அடைக்கடி ஏரிக்கரை உடைகிறது? என்று எள்ளி நகையாடியவாறு சென்றுவிட்டார். அன்று இரவு ஏரி முழுதும் நிரம்பி வழிந்தோடும் அல்லது கரை உடையும் அபாயம் இருந்ததால் கலெக்டர் விழித்திருந்து கரைகளைப் பாதுகாக்கும் பணியில் எல்லோரையும் ஈடுபடுத்தி இருந்தார். அப்பொழுது கலெக்டர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.

ஏரிக் கரையின் மீது, கையில் வில்லும் அம்புமாக இரண்டு உருவங்கள் நடந்து சென்று கொண்டிருந்தன. பளிச்சிடும் ஒளியுடன் அவர்கள் நடந்து சென்றனர். அதற்குப் பின்னர் மழையும் நின்றவுடன் கலெக்டர் பெருமூச்சுவிட்டார். மறுநாள் இந்த அதிசயத்தை அவரே சொல்லி, வந்தவர்கள் இராம லெட்சுமணரே என்றும் உணர்ந்தார். வெள்ளைக்காரர்கள் எங்கு போனாலும் முதலில் ஊர்க் கதைகளை அறிந்து அதை டயரி அல்லது கடிதம் அல்லது புத்தகமாக எழுதிப்போட்டு விடுவர். ஆகையால் அவருக்கு இராம லெட்சுமணர் கதை, தோற்றம் எல்லாம் அத்துபடி.

இதுபோல பல அதிசய சம்பவங்கள் செங்கல்பட்டு காஞ்சீபுரம் பகுதியில் நடந்ததால் கர்னல் பிளேஸ், ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் அங்குள்ள கோவில்களுக்கு நகைகளை அளித்து அவை இன்றுவரை அவர்கள் பெயரிலேயே உள்ளன. கர்னல் பிளேஸின் பெயர் மதுராந்தகம் கோவிலிலும் உளது. சாதாரண ராமர் – ஏரி காத்த ராமர் ஆகி இன்றும் நமக்கு அருள் பாலிக்கிறார்.

rama,hampi_2445924g

கர்நாடகத்தில்  ஹம்பியி், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  ராமர் (இந்து நாளேடு)

கதை 2

தவறு செய்தவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இது இந்து மத விதி. மக்கள் வரிப்பணத்தை எடுத்து இறைவனுக்கே கோவில் கட்டினாலும் தவறுதான். இப்படித் தமிழ் நாட்டில் தவறு செய்து, அடி உதை பட்டவர், கல்லினையும் உருக்கும் அமுதத் தேன் போன்ற திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் ஆவார். குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் கோவில் கட்டியமைக்காக, அவரைப் பாண்டிய மன்னர் தண்டித்தார். பின்னர் இருவரும் சிவனைக் காணும் பேறு பெற்றனர்.

இறைவனின் அருள் கிடைப்பதற்கான விதிகளை யாரும் அறியார். அதனால்தான் இவைகளையெல்லாம் அவனது திருவிளையாடல்—லீலா விபூதீ- என்று முத்திரை குத்தி, தலைப்பிட்டு விடுகிறோம். பிரபஞ்சத்தையே கட்டி ஆளும் இறைவனின் விதிகளை ஐன்ஸ்டைன், ஐசக் நியூட்டன் போன்றோரின் விதிகள் போல 1, 2, 3 என்று எழுதிக் காட்ட வொணாது.

இதே போல ஆந்திரப் பிரதேசத்தில் பத்ராசலத்தில் இராமதாசர் என்பவர் இராம பக்தனாக இருந்தார். தனிர் ஷா என்னும் மன்னன், அவரை வரி வசூல் அதிகாரியாக நியமித்தார். அவர் இராமன் மீதுள்ள பேரன்பின் காரணமாக வரிப் பணத்தில் ஸ்ரீ இராமனுக்குக் கோவில் எழுப்பினார். அவர் மீது சட்டம் பாய்ந்தது. 12 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. ராமன் பெயரைச் சொல்லிக் கதறினாலும் பலன் இல்லை. தற்கொலை செய்துகொள்ள திட்டம் போட்டார். ஆனால் மறு நாளைக்கு சிறைக் கதவுகளைக் காவலாளிகள் திறந்து விட்டு நீங்கள் முழு வரிப் பணத்தையும் செலுத்தியதால் அரசன், உம்மை விடுவித்தான் என்றனர். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனெனில் அவர் வரிப் பணத்தைத் திருப்பித் தரவுமில்லை. அவ்வளவு பணம் அவரிடம் இல்லவும் இல்லை.

சிறையிலிருந்து வெளியேறி மன்னனின் அரண்மனைக்குச் சென்ற போதுதான் முதல் நாளிரவு இரண்டு பேர் இராம லெட்சுமண உடை அணிந்து வந்து, முழு வரிப்பணத்தையும் இராமதாசர் அனுப்பியதாகச் சொல்லி ஒப்படைத்து விட்டுச் சென்றனர் என்பதை அறிந்தார். ஏற்கனவே இராமர் மீது பல கீர்த்தனைகளை இயற்றிய அவர், தனிர் ஷா பெயருடன் இன்னும் ஒரு கீர்த்தனையும் பாடினார். எனக்குக் காட்சி கொடுக்காமல் தனி ஷாவுக்குக் காட்சி கொடுத்தனையே! இராமா இது என்ன நியாயம்? என்று. இறுதியில் அவரும் இராமரின் தரிசனம் பெற்று வாழ்க்கையின் லட்சியத்தை ஈடேற்றினார்.

நம்பினார் கைவிடப் படார்.

“நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு” – என்று யுகப் புரட்சி செய்த பாரதி போன்ற கவிஞர்கள் பாடியது இதனாலன்றோ!

sivaji

கதை-3

ஆனந்தாஸ்ரம சுவாமி ராம்தாஸ் சொன்ன கதை:

ஒரு சிப்பாய் (வீரன்) இருந்தான். அவனுக்கு ஓரிடத்தில் காவல் காக்கும் பொறுப்பு தரப்பட்டது. ஒரு நாள், அவனுக்கு இரவுக்காவல் “ஷிப்ட்” வந்தது. அப்போது ஒரு பஜனை கோஷ்டி இனிய சங்கீதத்தை இசைத்து இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் சென்றது.

காவல் பொறுப்பை மறந்துவிட்டு அவனும் அந்த கோஷ்டியில் சேர்ந்தான். நேரம் போனதே தெரியவில்லை. பொழுது விடிந்தது. எல்லோரும் வீட்டுக்குச் சென்றார்கள். இவன் மட்டும் காவல் காக்கும் இடத்துக்கு வந்தான். படைத் தளபதி பிடித்துக் கொண்டார். அவன் நடந்ததை உள்ளது உள்ளபடி சொன்னவுடன் கடும் எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டான்.

மறுநாள் இரவும் பஜனை கோஷ்டி அவ்வழியாக சென்றது. ஒரு அழகிய பெண் மீது காதல் கொண்டவன் கதிதான் இறைவன் மீது ஆராக் காதல் கொண்டவனின் நிலையும். அன்றும் பஜனை கோஷ்டியுடன் சென்றுவிட்டு காவல் பணிக்குத் திரும்பினான். காலையில் படை அதிகாரி வந்ததும் அவனே ஓடிச் சென்று கடமை தவறியதை ஒப்புக் கொண்டான்.

அதிரிகாரியோ, “என்ன உளறுகிறாய்? நான் தான் இரவு உன்னைச் சோதிக்க வந்தேனே! எங்கேயாவது நீ மறுநாளும் இப்படிப் போய்விடுவாயோ என்று எண்ணி வந்தேன். நீ நன்றாகக் காவல் காத்தாய். இப்போது நீ போகலாம்” – என்று சொன்னார்.

பக்தனுக்கு உண்மை விளங்கியது. இறைவனே தனக்காக இப்படிக் காவல் காக்கவந்தான் என்பதை அறிந்து வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர பக்தன் ஆகிவிட்டான். மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த சிவ பெருமான், வந்தி என்னும் கிழவிக்காக அடி வாங்க வில்லையா? அது போன்ற கதைதான் இதுவும்!

sivaji2   indian-stamp

கதை 4

இரண்டாம் கதையில் பத்ராசல ராமதாசைக் கண்டோம். மூன்றாம் கதையில் ஆனந்தாஸ்ரம சுவாமி ராமதாசைக் கண்டோம். இதோ இந்த நான்காம் கதையில் வேறு ஒரு ராமதாஸை – சமர்த்த ராமதாசரைக் காண்போம்:–

மொகலாய சாம்ராஜ்யத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி, முஸ்லீம் மன்னர்களை நடுநடுங்கச் செய்தவன் மாவீரன் சிவாஜி. பவானி தேவியின் அருள் பெற்று இந்து சாம்ராஜ்யத்தை அவன் ஸ்தாபித்தவுடன், இந்தியாவில் 700 ஆண்டு முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டதை நாம் நன்கு அறிவோம்.

மாவீரன் சிவாஜி இரண்டு சந்யாசிகள் மீது பக்தி பூண்டவன். சமர்த்த ராமதாசரையும் துகாராம் சுவாமிகளையும் இரு கண்களெனப் போற்றியவன் அவன். ஆகையால் இரவு நேரத்தில் குதிரையில் ஏறி, துகாராம் கதை சொல்லும் – உபந்யாசம் செய்யும் – இடத்துக்குப் போவது அவன் வழக்கம். இதை நன்கு அறிந்த முஸ்லீம் படைகள், ஒரு நாளிரவில் அவன் போய் கதை கேட்டுக் கொண்டிருந்த மண்டபத்தைச் சூழ்ந்து கொண்டனர். பக்தி வெள்ளத்தில் மூழ்கிய சிவாஜிக்கோ ஒன்றும் தெரியவில்லை. துகாராம் சுவாமிகளோ முக்காலமும் உணர்ந்த முனிவன். உடனே சிவாஜியைக் காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்ட ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

இறைவனே சிவாஜி போல வேடம் அணிந்து பஜனை மடத்தின் வெளியே ஒரு குதிரையில் தாவி ஏறி ‘சிட்டாக’ப் பறந்தார். உடனே முஸ்லீம் படை வீரர்கள் சிவாஜியைத் தீர்த்துக் கட்டும் ஆவேசத்தோடு அந்தக் குதிரையைப் பின்  தொடர்ந்தனர். அதுவோ அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. படைவீரர்கள் வழிதெரியாமல் திகைத்து நின்றனர்.

பஜனை முடிந்தவுடன், ‘அசல்’ சிவாஜி ஒரு சிரமுமின்றி அரண்மனை சேர்ந்தார். ஒற்றர்கள் மூலம் நடந்த எல்லாவற்றையும் பின்னர்தான் அறிந்தார். இறைவனுக்கும் குருவுக்கும்  மேலும் ஒரு முறை நன்றி செலுத்தினார்.

—சுபம்—-

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு

earth

Research paper No 1949

Written by London swaminathan

Date: 22 June 2015

Uploaded in London at 9-45

அண்டம்= பிரபஞ்சம்

பிண்டம் = நமது உடல்

அண்டம், பிண்டம் என்பதெல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இவை வேத காலம் முதல் வழங்கி வரும் சொற்கள். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றால் என்ன பொருள்? நாம் பிரபஞ்சத்தில் காணும் எல்லாவற்றின் சிறு வடிவமே நமது உடல். இது இந்து மதத்தில் உள்ளது வெளிநாட்டினருக்குத் தெரியாது. அவர்கள் இதை கிரேக்க மொழியில் இதைப் பார்த்தவுடன் இது கிரேக்கர்களின் கண்டுபிடிப்பு என்று ‘என்சைக்ளோ பீடியா’ (கலைக் களஞ்சியம்) எல்லாம் எழுதி வைத்து விட்டனர். அவர்கள் இதை மைக்ரோகாஸ்ம், மேக்ரோ காஸ்ம் என்று அழைப்பர்.

இது எப்படி கிரேக்க மொழிக்கும் போனது? இந்துக்கள் வேத காலத்துக்குப் பின்னால் ஐரோப்பா முழுதும் குட்யேறி வேத நாகரீகத்தைப் பரப்பினர். விஞ்ஞான ரீதியில் அமைந்த சம்ஸ்கிருத மொழியைப் பரப்பினர். இதனால் கிரேக்கம், லத்தீன் மொழிகள் எல்லாம் பிறந்தன. இதற்குப் பின் ஐரோப்பிய மொழிகள் தோன்றின. மொழிகளில் இப்படி அபூர்வ ஒற்றுமை கண்டவுடன், வெள்ளைக்காரகள், அங்கிருந்து நாம் இங்கு வந்ததாகக் கதை கட்டிவிட்டனர். ஏனெனில் இது இந்தியாவை அவர்கள்  ஆளவும் மதத்தைப் பரப்பவும் வசதியாக இருந்தது. ஆக அந்தக் காலத்திலேயே இந்தக் கொள்கை அங்கு போனதற்கு எடுத்துக் காட்டாக வேதத்தில் உள்ள சரமா நாய்க் கதை கிரேக்க இதிஹாசத்தில் ஹெர்மஸ் என்ற பெயரில் உள்ளது. பஞ்ச பூதம், சப்த ஸ்வரம், பூமி என்பவள் தாய் — முதலிய கொள்கைகளை அவர்கள் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டனர். அதில் ஒன்றுதான் இந்த அண்டம்—பிண்டம் பற்றிய கொள்கை.

பிதகோரஸ் முதலிய கிரேக்க அறிஞர்கள் இந்தியாவை நன்கு அறிவர். அவருக்குப் பின் வந்த சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ, அவரது சீடர் அரிஸ்டாடில், அவரது சீடர் அலெக்ஸாண்டர். இதனால் அலெக்சாண்டருக்கு இந்தியா மீதும் சாது சந்யாசிகள் மீதும் அபார பற்று.

kircher_079-694x1024

“யத் அண்டே தத் பிரஹ்மாண்டே”

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பதை வடமொழியில் யத் அண்டே த பிரம்மாண்டே – என்பர். இதை கிரேக்கர்கள் மைக்ரோ காஸ்ம் (உடல்), மேக்ரோகாஸ்ம் (பூமி அல்லது பிரபஞ்சம்) என்றனர். உபநிஷதங்களும், “ஒன்றே எல்லாவற்றிலும் உள்ளது, எல்லாம்  ஒன்றில் உள்ளது” — என்று கூறின. எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. அவைகளைத் தனியாகப் பிரிக்கமுடியாது என்றனர். விஞ்ஞானிகள் அணு மற்றும் அணுசக்தி பற்றிக் கொண்ட கருத்துகள் இதே போல இருக்கும். உபநிஷதங்கள் பிரம்மத்தையும் ஆத்மாவையும் வருணிப்பது விஞ்ஞான- பௌதீக கருத்துக்களை ஒத்திருக்கும்:

“இது பெரியதுக்குள் பெரியது, சிறியதெல்லாவற்றையும் விடச் சிறியது. பருப்பொருளும் அல்ல; நுணுக்கமானதும் அல்ல. தீயும் அல்ல, தண்ணீரும் அல்ல. நிழலும் அல்ல, இருட்டுமல்ல; ஆகாசமுமல்ல, வாயுவுமல்ல; எதிலும் ஒட்டாதது, சுவை இல்லாதது, வாசனை இல்லாதது, கண், காது, மூக்கு, வாய் இல்லாதது.உள்ளுக்குள் இல்லை, வெளியே இல்லை. எடுத்தாலும் குறையாது. அதிலிருந்து அதை எடுத்தால் அது குறையாது, அதுவே மிஞ்சி நிற்கும் (பூர்ணமதப் பூர்ணமிதம் ……………….. பூர்ணம் ஏவா உதிச்யதே)- பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள இவை எல்லாம் இயற்பியலில் “குவாண்டம் தியரி” போல இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுவர்.

இந்துக்கள் எல்லாவற்றையும் விட வேகமானது மனம் என்பர். ஒளியானது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பயணம் செய்து ஓராண்டில் கடக்கும் தொலைவை ஒளி ஆண்டு என்பர். இந்த வேகத்தை எதுவும் எட்ட முடியாது. இதற்கு அருகில் கூட வரமுடியாது என்கிறது விஞ்ஞானம். ஆயினும் மனோவேகம் என்பது 500 ஆண்டு ஒளி ஆண்டுக்கு அப்பால் உள்ளதையும் விட ஒரு நொடியில் நினைக்கும் சக்தியாகும். ஆனால் அவ்வேகத்தில் போக முடியுமா? நினைப்பது வேறு, போவது வேறு அல்லவா? ஆயினும் இந்து சாது சந்யாசிகள் அந்த வேகத்தில் செல்ல முடியும் என்கின்றனர். நாரதர் முதலிய த்ரிலோக சஞ்சாரிகள் நினைத்த மாத்திரத்தில் இவ்வாறு பயணம் செய்தனர்.

சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது:

இருதயத்தில் ஒரு சிறு ஆகாசம் உள்ளது. இது விரிவடையும் அளவுக்கு வெளியே ஆகாசம் உள்ளது. அதை எல்லோரும் அறிய வேண்டும். வெளியே சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் உள்ளடக்கிய பேராகாசம் இருதயத்தில் உள்ள ஆகாசத்துக்குள் இருக்கிறது.

சுவாமி விவேகாநந்தரும் இதை தனது சொற்பொழிவுகளில் தந்துள்ளார். நம்முடைய மனது போலவே பிரபஞ்ச மனது ஒன்று உள்ளது. எல்லாம் ஒன்றினுள் ஒன்று அடக்கம் என்பார்.

திருமூலர்

தமிழில் உடல் என்பது பிண்டம் என்றும், பிரபஞ்சம் என்பது பிரம்மாண்டம் என்றும் பல பாடல்களில் வருகிறது. ஆயினும் திருமூலர்தான் இக்கருத்தை அதிகமான பாடல்களில் சொல்கிறார். இதோ ஒரு பாடல்:

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

garudapurana

கருட புராணம்

சாதாரண மனிதனுக்குப் புரியவைக்க உடலில் உள்ள ரத்த நாளங்களை ஆறுகளுக்கும், மேடு பள்ளங்களை- மலைகள் பள்ளத் தாக்குகள் ஆகியவற்றுக்கும், முடி முதலியவற்றை தாவரங்களுக்கும் ஒப்பிடுவர்.

கருட புராணத்தில் ஒரு நீண்ட வருணனை உள்ளது:

உள்ளங்கால்=அதலம்

கணைக்கால்=விதலம்

முழந்தாள்=சுதலம்

அதற்குமேல்=நிதலம்

தொடை=தராதலம்

ஆசனவாய்ப் பகுதி=ரசாதலம்

இடை=பாதாளம்

நாபி=பூலோகம்

வயிறு=புவர் லோகம்

இருதயம்=சுவர்கம்

தோள்=மஹாலோகம்

முகம்=ஜனலோகம்

நெற்றி=தபோலோகம்

தலை=சத்தியலோகம்

திரிகோணம்=மேரு

கீழ்க்கோணம்=மந்தரம்

வலப்பக்கம்= கயிலை

இடப்பக்கம்= இமயம்

மேற்பக்கம்=நிஷதம்

தென்பக்கம்=கந்தமாதனம்

இவ்வாறு ஈரேழு 14 புவனங்களையும் மனித உடலுக்குள் அடக்கிய பின்னர் இடக்கை ரேகைகளை வருண பர்வதத்துகும்,எலும்பை நாவலந்தீவுக்கும், மேதசை சாகத் தீவுக்கும், தசயை குசத் தீவுக்கும்,நரம்பை கிரவுஞ்ச தீவுக்கும் ஒப்பிட்டுவிட்டு ஏழு கடல்களை உடலில் ஓடும் திரவங்கள் ஆகியவற்றுக்கு ஒப்பிடுகிறது.

பின்னர் நவக் கிரஹங்களை கீழ்கண்டவாறு ஒப்பிடும்:

சூரியன்= நாத சக்ரம்

சந்திரன்=பிந்து சக்ரம்

அங்காரகன்=நேத்திரம்

புதன்=இருதயம்

குரு= வாக்கில்

வெள்ளி/சுக்ரன்

சனி=நாபி

ராஹு=முகம்

கால்=கேது

இவை எல்லாம் இந்துக்களின் சிந்தனை சென்ற வழித் தடத்தை காட்டும். அறிவியல் பூர்வமாகச் சிந்தித்ததோடு பிரபஞ்சத்தையே தன்னில்  – ஒரு மனிதனிடத்தில் – அடக்கிவிட்டனர்.

Global human chain

அஹம் பிரம்மாஸ்மி

நானே பிரம்மம் என்பது வேத வாக்கு. நான் என்பதை சம்ஸ்கிருதத்தில் ‘அஹம்’ என்பர். சம்ஸ்கிருத அரிச் சுவடியில் அ- என்பது முதல் எழுத்து, ஹ—என்பது கடைசி எழுத்து. உலகிலுள்ள எந்தப் பொருளையும் இந்த எழுத்துக்களால் சொல்லிவிடலாம். ஆக அஹம் – நான் – என்பது உலகம் முழுவதையும் உள்ளடக்கியது. அஹம் என்றால் உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் நாம் குறிக்கிறோம்:-

அஹம்= பிண்டம்

அ – – ஹ = பிரம்மாண்டம்

அஹத்தில் (நான்/என்னில்,பிண்டத்தில், எனது உடலில்) அடங்கிவிட்டது பிரம்மாண்டம்!!!

—சுபம்—-

சகல கலா வல்லவன் யார்? – பார்வதியின் தீர்ப்பு!

muruga beautiful most

Post No 1941;

Date: 19  June 2015

Written  by ச.நாகராஜன்

Uploaded from London at காலை 8-41

 

இதே பிளாக்—கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய கீழ்கண்ட திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படியுங்கள்:–

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டிவெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்— வெளியிட்ட தேதி ஜனவரி 17, 2013

டாக்டர் முருகனும்பேஷண்ட்அருணகிரிநாதரும் வெளியிட்ட தேதி ஜனவரி 15, 2013

தனிமையில் இனிமைஅருணகிரிநாதர்வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் வெளியிட்ட தேதி ஜனவரி 22, 2013

நரகத்துக்குப் போவோர் பட்டியல் வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013

தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதி ஜனவரி 21, 2013

சலாம் முருகா! சலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!!வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014

Xxx xxx

 

சகல கலா வல்லவன் யார்? – பார்வதியின் தீர்ப்பு!

By ச.நாகராஜன்

சகல கலை முழுதும் வல்ல பெருமாள்

சகல கலைகளிலும் வல்லவர் யார்?

முருகனே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் அருணகிரிநாதர்.

அளகநிரை குலையவிழி என்று தொடங்கும் பாடலில்,

தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ                             

சகலகலை முழுதும் வல பெருமாளே

என்று கூறுகிறார்.

 

 

பார்வதியின் தீர்ப்பு

அல்லசலடைந்த என்று தொடங்கும் பாடலில்,

கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த                                        

கல்விகரை கண்ட                                  புலவோனே                  

கள்ளொழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று                                     

கல்லலற வொன்றை                                யருள்வோனே

என்ற அற்புதமான சொற்களால் ஒரு ரகசிய வரலாற்றை அவர் விவரிக்கிறார்.

கல்அசலம் என்றால் இமயமலை என்று பொருள். கல்லசல மங்கை இமயமலை மங்கையான பார்வதியைக் குறிக்கும்.

பார்வதி தேவியின் எல்லை மட்டும் எட்டின கல்வி விஷயம் பற்றிய சுவையான வரலாறு உண்டு.

murugan near B angauru

ஒரு முறை சகல கலைகளிலும் வல்லவர் யார் என்ற கேள்வி எழுந்தது. முதலில் அனைவரும் ஔவை பிராட்டியே அனைத்தும் அறிந்தவர் என்று தீர்மானித்து அவரை அணுகி வித்யா தாம்பூலத்தை அளித்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார்.

 

ஐந்திர வியாகரணம் இயற்றிய இந்திரனைப் போய்ப் பாருங்கள். அவனிடம் இதை அளியுங்கள் என்றார் அவர்.

 

இந்திரனோ அகத்தியரே இதை வாங்குவதற்குத் தகுதியானவர் என்றான்.

 

அகத்தியரோ சகலகலைகளிலும் வல்ல சரஸ்வதி தேவி அல்லவா இதைப் பெறுவதற்குத் தகுதி உள்ளவள். அங்கு செல்லுங்கள் என்றார்.

சரஸ்வதி தேவியோ, அன்னை பார்வதி தேவி இருக்க இதை நான் வாங்குவது முறையல்ல. நான் கற்றது கைம்மண் அளவே என்றாள்.

அனைவரும் அன்னை பார்வதியை அணுகி விஷயத்தைக் கூறினர்.

 

அன்னையோ புன்முறுவல் பூத்து இதை வாங்கும் தகுதி படைத்தவன் என் செல்வன் குமரனே என்று அருளினார். பார்வதியின் இந்தத் தீர்ப்பால் அனைவரும் மகிழ்ந்தனர்.

அனைவரும் முருகப் பெருமானிடம் சென்று தாம்பூலத்தை அளிக்க அவன் புன்சிரிப்புடன், “இந்த வரிசையை யாம் ஏற்றுக் கொள்கிறோம்என்று அருளினார்.

 

சகலகலா வல்லவன் யார் என்பது இப்போது நன்கு நிரூபணமானது.

கல்லசல மங்கைஇமவான் மகளான பார்வதி

எல்லையில்வரைக்கும்

விரிந்தமேலே சென்ற பெரும் விவாதத்தில்

கல்வி கரை கண்ட புலவோன்அனைத்துக் கலைகளிலும் வல்ல புலவோன் என்ற தகுதி பெற்ற ஒரே ஒருவன் முருகனே என்பது உலகினரால் அறியப்பட்டது!

இந்த அற்புதமான சுவையான சரிதத்தையே அருணகிரிநாதர் அழகுற திருப்புகழ் பாடலில் சுருக்கமாகத் தந்து விட்டார்.

 

வள்ளிபடர்கின்ற வள்ளிமலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே என்று முடியும் இந்தத் திருப்புகழை அருணகிரிநாதர் வள்ளிமலை சென்ற போது அருளியிருக்கிறார்.

சகலகலா வல்லவனான குமரனைக் கும்பிடுவோம். அனைத்திலும் வல்லவனாகி ஆனந்த வாழ்க்கை பெறுவோம்!

படங்கள்:— முக நூல் நண்பர்களனுப்பிய படங்கள்; நன்றி

**************