முருகனே ஞானசம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை!

murugan, fb

Post No 1937; Date: 17th June 2015

Compiled by S NAGARAJAN

Uploaded from London at 6-14 am

By ச.நாகராஜன்

திருப்புகழின் பலன்

“ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்

வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ

டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்

கூறினார்க் காமேயிக் கூறு”

ஆனைமுகனுக்கு இளையவனின் திருப்புகழைக் கூறினால் ஞானம் பெறலாம், நலம் பெறலாம், வானம் அரசாள் வரம் பெறலாம், மோன வீடு பெறலாம் என்பது பெரியோர் கூற்று.

அரும் திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதரின் அருளுரைகள் அற்புதமானவை. வெவ்வேறு நுணுக்கங்களை விண்டு உரைப்பவை. மரண ப்ரமாதம் நமக்கில்லை என்ற துணிச்சலை பக்தர்களுக்கு அருள்பவை.

முருகனே சம்பந்தர்

அவரது முக்கிய உரைகளில் ஒன்று முருகனின் அவதாரமே ஞானசம்பந்தர் என்பது.

சமணர்களும் பௌத்தர்களும் நாடு கெடும் படி எல்லையற்ற துன்பங்களை சிவ, சக்தி, விநாயக, முருகனை வழிபடுவோருக்கு இழைத்து வந்த கால கட்டத்தில் அவற்றை ஒரு நொடியில் பொடிப் பொடியாக்கிய அவதாரமாக உதித்தவர் திருஞானசம்பந்தர்.

அருணகிரிநாதர், இதை.

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி திருநீறிடவே

புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்

புத்ரனென இசை பகர் நூல் மறை நூல்

கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்

பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே

என்று அழகுறத் தெளிவு படுத்துகிறார். (நெய்த்த கரிகுழலறலோ எனத் தொடங்கும் பாடல்)

பிரமாபுரம் வாழ் ஞானசம்பந்தரின் உருவாய் வந்தவன் முருகனே’ அவனே புத்தர், சமணரை ஓட்டி தெற்கு தேச அரசன் திருநீறிடும்படி அனல் வாதத்தில் ஜெயித்தவன் என்பதை இப்படி அழகுறக் கூறும் போது சின்னஞ் சிறு வயதில் சம்பந்தர் எப்படி எண்ணாயிரம் சமணரை வெல்ல முடிந்தது என்ற ரகசியத்தை அறிய முடிகிறது! முருகன் அல்லவா புத்த சமணரை, வென்றது!

nalavar with siva

சம்பந்தர் எனும் முருகனன்றி வேறு தெய்வம் இல்லை

கந்தர் அந்தாதியில் 29ஆம் பாடலில்

திகழு மலங்கற் கழல்பணிவார் சொற்படி செய்யவோ

திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ

திகழு மலங்கற் பருளுமென்னாவமண் சேனையுபா

திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே

என்று பாடுகிறார்.

திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்தின் 11ஆம் பாட்டும் திருக்கடைக்காப்பு என அழைக்கப்படும். அப்பதிகத்தைப் பாடுவோர்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பது இறுதிப் பாடலில் மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கும்.

“தேவாரத் திருப்பதிகங்களை ஓதி தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், கல்யாண சுபுத்திரனாக தான் நிற்கும் திருத்தணியையும் துதித்து அணியும் திருநீறு மும்மலத்தைப் போக்கும்.

முழுப் பொருள் இதுவே என நம்பும் கற்புடமையையும் தரும் என்று நினைக்காத சமண கூட்டங்களை வருத்தம் தரும் கழுமரத்தில் ஏற்றி கலக்கம் அடைந்து அழியும் படி வாது புரிந்த சம்பந்தப் பெருமான் ஆகிய முருகனன்றி வேறு பிரத்யட்சமான தெய்வங்கள் கிடையாது” என்பதே பாடலின் பொருள்.

முருகனே சம்பந்தர் என்பதைத் தெளிவாக அருணகிரிநாதர் சுட்டிக் காட்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

ஆக தேவார திருப்பதிகங்களை ஓதும் படி அருணகிரிநாதர் அருளுரை பகர்கிறார். திருஞானசம்பந்தரே முருகன் என்பதால் அவரது பதிகங்கள் குமரக் கடவுளின் வாயிலிருந்து உதித்த நேர் சொற்கள் என்பதையும் தெளிவு படுத்துகிறார்.

திருப்புகழை ஊன்றிப் படிப்போர்க்குப் பல ரகசியங்கள் தெரியவரும். முக்கியமான ரகசியங்களுள் ஒன்று முருகனே சம்பந்தராக அவதரித்துப் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதாகும்!

****************

Part 2 -வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!

சாணக்கியன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்– 1935

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்

தேதி:- 16 ஜூன் 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்- காலை 17-06

Part 1 was posted yesterday.

(படங்கள் பேஸ் புக் முதலிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்டன. நன்றி)

ஊர் பேர் தெரியாத கொட்டாம்பட்டி, அரிட்டாபட்டி தமிழ் எழுத்தாளனின் இந்து மத விரோதக் கதைகளை பெரிதுபடுத்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களில் அதைப் படமாக வைத்து அந்த எழுத்தாளனின் வங்கிக் கணக்கில் பல லட்சம் பவுன்கள் அல்லது டாலர்களை “பம்ப்” செய்யும் சர்வதேச வெளியீட்டு நிறுவனங்களின் சதி—– இந்துமதத்தை மட்டும் தாக்கும் வெண்டி டோனெகர் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு பப்ளிசிட்டி, பணக் குவிப்பு– இதுவரை வேதத்தை அலசி ஆராய்ந்த எந்த “அறிஞ”னும் வேறு எந்த மத நூலையும் ஆராயாத மர்மம் —- அவர்களுக்குத் துணைபோகும் தேச விரோத, தர்ம விரோத திராவிட–மார்க்சிஸ்ட் கும்பல்கள், பத்திரிக்கைகளின் சதி — பற்றி முதல் பகுதியில் குறிப்பிட்டேன்.

இந்த இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு “அறிஞரும்” செய்த வேலை குறித்துக் கண்போம்:–

முதலில் மூன்று முக்கியமான விஷயங்களை எல்லா இந்துக்களும் அறிய வேண்டும். இதில் சில அறிஞர்கள் ஏசு சபையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எடுக்கும் சத்தியப் பிரமாணத்தை ஒவ்வொரு இந்துவும் படித்தால் இவர்கள் கொலைபாதகச் செயலுக்கு அஞ்சாதவர்கள் என்பது தெளிவாகும்.

இரண்டாவது இந்த “அறிஞர்களில் பெரும்பாலோர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக போடிலியன் பேராசிரியர் பதவி வகித்தோர் அல்லது அதற்கு ஆசைப்பட்டோர். அதில் சம்ஸ்கிருதம் ஏன் கற்க வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்துமதத்தை எள்ளி நகையாட இந்த பதவியை ஏற்படுத்துவதாக அந்த அறக் கட்டளையை ஏற்படுத்தியவர் எழுதி, பணம் கொடுத்துள்ளார்.. ஆக இந்த அறிஞர் கும்பல் எல்லாம் மோசடி செய்ய வந்த கும்பல்!

மூன்றாவதாக இவர்கள் அவ்வளவு பேரும்—தமிழர்கள் தலை மேல் வைத்து கூத்தாடும் கால்டுவெல் பாதிரியார் உள்பட—மாக்ஸ்முல்லர் உள்பட – எல்லோரும் “இந்தியர்கள் அனைவரும் வந்தேறு குடிகள்” என்று எழுதி வைத்துள்ளனர்.

ஆனால் இதில் ஒரு அதிசயம் நடந்தது. கங்கை நதியில் கலக்கும் சாக்கடை எல்லாம் புனிதம் அடைவது போல, சில அசத்துக்கள், சத்துக்களாகவும் மாறிவிட்டன. அதில் ஒரு அசத்து மாக்ஸ்முல்லர்.

1651ல் ஆப்ரஹாம் ரோஜர் என்ற பாதிரியார் பர்த்ருஹரியின்  சுபாஷித த்ரிசதியை போர்ச்சுகீசிய மொழியில் வெளியிட்டார். பின்னர் அதை டச்சு மொழியிலும் வெளியிட்டார். இந்த 300 நீதிநெறிப்பாடல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தின் பெருமையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தன.

பஞ்சபாத்ரம்

தத்துவ போத சுவாமிகள் செய்த திகிடுதத்தம்

ராபர்ட் டி நொபிலி/ தத்துவ போத சுவாமிகள் (Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda:) இவர் கோவாவில் வந்து இறங்கி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்தார். பின்னர் மலையாளம் தமிழ் வழங்கும் பிரதேசங்களில் பிரசாரம் செய்தார். மதுரையில் தங்கி ஐயர் போல குடுமி, பூணூல் தரித்து மேலை வகுப்பினரை மத மாற்றம் செய்ய முயன்றார். ஆனால் அவரது வேஷம் பலிக்கவில்லை. யஜூர்வேதத்தை கண்டுபிடித்துக் கொண்டுவந்தததாகச் சொல்லி ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அது யஜூர் வேதம் இல்லை. அது அப்பட்டமான மோசடி. இதை வால்டேர், கோல்ப்ரூக் போன்றவர்களும் நம்பி ஏமாந்தனர். வால்டேர் அதைப் படித்துவிட்டு (மொழிபெயர்ப்பு) உண்மையென்று நம்பி, அதை பிரான்ஸ் தேசிய  நூலகத்தில் சேர்த்தார். இவர் மோசடி செய்யவில்லை என்றும் இவரது கும்பலில் இருந்த வேறு சிலர் மோசடி செய்ததாகவும் இப்பொழுது பிரசாரம் கிளம்பி இருக்கிறது.

இது வழக்கமாக திருடர்கள் கையாளும் தந்திரம். பிடிபட்டுவிட்டால் மற்றவன் பெயரில் பழிபோடுவார்கள். பிடிபடாவிட்டால் தான் சாதித்ததாகக் கூறுவர். எப்படியாகிலும் வேதத்தின் பெயரில் கிறிஸ்தவ பாதிரிக் கும்பல் மோசடி செய்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.

இவர் சேர்ந்துள்ள ஜீசைட் கிளப்பின் உறுதி மொழிப் பிரமாணம் பயங்கர வன்முறைப் பிரமாணம். அதாவது கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். ஆகையால் அவர் மோசடி செய்ததில் வியப்பொன்றுமில்லை.

இதே போல திருக்குறள் கிறிஸ்த நூல் என்று மெய்ப்பிப்பதாக ஒரு ஐயர் பல லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கை நாம் எல்லோரும் அறிவோம். இப்பொழுதும் கூட வெப்சைட், பேஸ்புக்கில் ஒரு பெரிய கும்பல் வேதத்தில் ஏசு இருக்கிறார், அல்லா இருக்கிறார் என்று பலரைக் குழப்பி மோசடி செய்துவருகிறது. இந்துக்கள் முதலில் தங்களிடம் உள்ள உண்மைச் செல்வத்தை அறிந்தால் இந்த மோசடிக் கும்பல்கள் தானாக கடை கட்டி விடுவர்.

ராபர்ட் டி நொபிளி செய்த மோசடியால், ஐரோப்பாவில் வேதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் பத்திரிக்கைகள் எழுதத் துவங்கின. அப்பொழுது கர்னல் போலியர் என்பவர் ஜெய்ப்பூரி லிருந்து மிகவும் கஷ்டப்பட்டு நான்கு வேதங்களையும் திரட்டி பிரிட்டிஷ் மியூசியத்தில் சமர்ப்பித்தார். இது நடந்தது 1798ல். பின்னர் சர்ச்சை அடங்கியது.

பிராமணர்

மாக்ஸ் முல்லர் அந்தர் பல்டி

மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900):

ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வசித்தவர்.

வேதத்திற்கு சாயணர் எழுதிய உரையுடன் அதை வெளியிட்டவர் மாக்ஸ்முல்லர். 1856-59- ஜெர்மன் பாஷையில் ரிக் வேதத்தை வெளியிட்டார். நிறைய நூலகள் எழுதியுள்ளார். கீழ்திசை இலக்கியங்கள் என்று எல்லா நூல்களையும் மொழி பெயர்க்கச் செய்து ஐம்பதுக்கும் அதிகமான வால்யூம்களாக வெளியிட்டார். ஆனால் முதலில் உள்நோக்கத்துடன் மொழிபெயர்க்கத் தொடங்கினார். வேதங்களை வேரறுத்து கிறிஸ்தவ மதத்தை நிலை நாட்டுவேன் என்று சூளுரைத்தார். கொக்கரித்தார். இதோ விக்கி பீடியா வாசகம்:

Muller once wrote that;-

The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.[20][21]

As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of, nay, much of the work which is theirs they would probably disclaim. The Christianity of our nineteenth century will hardly be the Christianity of India. But the ancient religion of India is doomed—and if Christianity does not step in, whose fault will it be?

—Max Müller, (1868)[22]

அதி பயங்கர நோக்கத்தோடு மொழிபெயர்ப்பைத் துவங்கிய அவர் அப்படியே மாறிப் போனார் ஜி.யூ. போப் பாதிரியார் போல. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் கி. 1200க்கு முந்தையது என்றார். அது மிகவும் தவறு- இன்னும் மிகப் பழமையானது என்று பல மேலை நாட்டினர் எதிர்த்தவுடன். வேதத்தின் காலத்தை எந்த ஒரு மனிதனாலும் கணிக்க முடியாது. அவ்வளவு பழமையானது என்று பல்டி அடித்தார்.

ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),1826-1906

கிரிப்பித் இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வசித்து தமிழ்நாட்டில் கோத்தகிரியில் இறந்தார். ஒரு பாதிரியாருக்குப் பிறந்தவர். அவருக்கு முன் வெளியான ரிக் வேத மொழி பெயர்ப்புகளை எல்லாம் கலந்து இவர் ஒரு மொழி பெயர்ப்புச் செய்தார். ஆனால் பெரும்பாலும் சாயணர் வாதத்தை ஏற்றார் (இவருடைய ஆங்கில மொழி பெயர்ப்புதான் என் மேஜையில் எப்போதும் இருக்கும்). பக்கத்துக்குப் பக்கம் விளங்க வில்லை, பொருள் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறார் .நான்கு வேதங்களையும் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் வேலைபார்த்த பின்னர் காசியிலும் கல்லூரி முதல்வராக வேலை பார்த்தார். ராமாயணத்தை ஆங்கிலப் பாடலாக மொழி பெயர்த்தார். காளிதாசனின் குமார சம்பவம் உள்பட பல நூல்களை மொழி பெயர்த்து இருக்கிறார்.

ஐயங்கார்

தியோடர் ஔபிரெட் 1822-1907(Theodor Aufrecht) இவர் மாக்ஸ்முல்லர், பென்வே ஆகியோருடன் பயின்றார். எடின்பரோ, பான் பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.மாக்ஸ்முல்லர், ரிக்வேத மொழிபெயர்ப்பை வெளியிட உதவி செய்தார். அவரைப் போலவே இவரும் 40 ஆண்டுக் காலம் வேத மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபாட்டார். அதே நேரத்தில்(1849-75) ரிக் வேதத்தின் மூலத்தையும் வெளியிட்டார். சம்ஸ்கிருத மொழியில் அச்சிட்ட நூல்கள், இன்னும் அச்சேறாத நூல்கள் என்று மூன்று கேடலாக் (நூல் பட்டியல்) வெளியிட்டார் (இதைப் பார்க்கையில் சம்ஸ்கிருத இலக்கியம் எவ்வளவு விரிவானது என்று விளங்கும்.உலகில் சம்ஸ்கிருத நூல்கள் உருவான காலத்தில் கிரேக்க, எபிரேய, தமிழ், லத்தீன் மொழி நூல்கள் பிறக்கவே இல்லை.அதாவது கி.மு1700 முதல் கி.மு.1000 வரை).

ரோஸனின் பணி

1830-ல் பேராசிரியர் ரோஸன் என்பவர் சில ரிக்வேத சூத்திரங்களைப் பிரசுரித்தார். 1838ல் ரிக் வேத முதல் அஷ்டகத்தைப் பிரசுரித்தவுடன் இந்திய தத்துவம் பற்றிய ஆர்வம் பிறந்தது (ரிக் வேதத்தை எட்டு அஷ்டகமாகவோ பத்து மண்டலங்களாகவோ– இரண்டு முறையில் பிரிப்பது வழக்கம்).

மேனாட்டு வேத பண்டிதர்களில் பேராசிரியர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் என்பவருக்கு  பழைய வேத பாஷ்யக்காரர்களான யாஸ்கர், மஹீதரர், சாயணர் முதலியவர்களிடத்து அளவற்ற மதிப்பு உண்டு.பழைய பாஷ்யக்காரர்களில் கருத்து வேறுபாடு இருந்தால் யாஸ்கரையே பின்பற்ற வேண்டும் என்பது இவர் கொள்கை. ராத், இதற்கு நேர் மாறாக அபிப்ராயம் உள்ளவர்.

போட்லிங், ராத், கிராஸ்மேன் ஆகியோர் பாரதீய விற்பன்னர்களை மதிக்கவில்லை. வேத கால அறிஞர்களை விட தங்களுக்கு கூடுதல் அறிவு என்று கருதினர். இது இந்து மத எதிரிக் கும்பல்.

பிஷெல், கெல்ட்னர் ஆகியோர் சாயண பாஷ்யத்தை அடியொற்றிச் சென்றனர்.

பகவத் கீதை மொழி பெயர்ப்பு

வாரன் ஹேஸ்டிங்ஸ் கொடுத்த உற்சாகத்தால் சார்ல்ஸ் வில்கின்ஸ் என்பார் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதிய வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமிக்கும். ஆனால் பகவத் கீதை அழியாது என்று எழுதி இருக்கிறார்.

சர் வில்லியம் ஜோன்ஸ் (1746-94), சம்ஸ்கிருதம்—ஐரோப்பிய மொழிகளை ஆராய்ந்து வியத்தகு ஒற்றுமை இருப்பதை அறிவித்தார். அவர் கல்கத்தாவில்   ஆசிய சங்கத்தை தாபித்து மொழி ஆராய்ச்சிக்கு அடிக்கோல் நாட்டினார். சாகுந்தலம், மனுஸ்மிருதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருதத்தை வானளாவஒப் புகழ்ந்தார். பின்னர் ஒரு குடப் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தார். அதாவது, ஆரியர்கள் எல்லாம் வந்தேறு குடிகள் என்று!

ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்(1765-1837), வில்லியம் ஜோன்சுக்கு உறுதுணையாக நின்றார். நிறைய கட்டுரைகள் எழுதி வேதங்களின் பெருமையைப் பரப்பினார்.

பிரெடெரிக் ஷ்லெகல் (1772-1829) என்பார் 1808ல் On the Language and Wisdom of the Indians என்ற நூல் எழுதினார். அவருடைய சகோதரர் ஏ.டபிள்யூ. வான் ஷ்லெகலும் சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்தார்.

ஷேஜி (1773-1832) என்பவர், பிரான்ஸ் தேசீய கழகத்தில் முதல் சம்ஸ்கிருத பேராசிரியர் ஆனார்

பிரான்ஸ் பாப் (1791-1867), ஷேஜியிடம் சம்ஸ்கிருதம் கற்று வினைச் சொற்களை ஒப்பிட்டு ஒரு நூலும், சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டார். லாசன் என்பவர், ஷ்லெகலின் சீடர்.வேதங்கள் பற்றிக் கட்டுரை எழுதினார்

நிறைய பனை ஓலைச் சுவடிகளைச் சோதித்து ரிக்வேத முதல் அஷ்டகத்தை வெளியிட்டார்.

தியோடர் பென்வே (1809-1881)சாம வேதத்தையும் சம்ஸ்கிருத-ஆங்கில நிகண்டையும் அச்சிட்டார்.

கேரம் பாய்ஸ்

ஆட்டோ மற்றும் போட்லிங்க் ஆகிய இருவரும் பிருஹத் சம்ஸ்கிருத நிகண்டு உருவாக்கினர்

விட்னி 1905ல் அதர்வ வேத மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

வெபர் 1858ல் பாணீணிய சிட்சை மற்றும் பிங்களனது சந்தஸ் சூத்திரத்தை வெளியிட்டார்.

1877ல் ருடால்ப் மேயர், ரிக் விதானம், பிருஹத் தேவதை ஆகியவற்றை வெளியிட்டார்

1862ல் டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் என்பவர் ரிக் வேதம் மீதான ராவண பாஷ்யத்தை அச்சிட்டார்.

1877லௌப்ரெக்ட் ரிக்வேதம் முழுதையும் அச்சிட்டார்.

1876ல் லுட்விக்கும், 1876ல் கிராஸ்மேன் ஜெர்மானிய பாஷையிலும் வெளியிட்டனர்.

போட்லிங்கும் பேராசிரியர் ராத்தும் அப்போதைய ரஷியத் தலைநகரான செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து சம்ஸ்கிருத- ஜெர்மானிய அகராதியை வெளியிட்டனர்.

186ல் பேராசிரியர் மார்ட்டின் ஹாக், ஐதரேய பிராமணத்தை வெளியிட்டார்.

1864-65ல் பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் ஆஸ்வலாயன க்ருஹ்ய சூத்திரத்தை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார்.

அதே சமயத்தில் ஹெர்மன் ஓல்டன்பர்க், சாங்க்யாயன க்ருஹ்ய சூத்திரத்தை அச்சிட்டார். இது வீபர் வெளியிட்ட பத்திரிகை மூலம் வெளியானது

1857-58 ல், பேராசிரியர் ரேநீர். பிரெஞ்சு மொழியில் ரிக்வேதத்தை வெளியிட்டார்

பேராசிரியர் கீத் (Prof.Arthur  Berriedale  Keith): இவர் மக்டொனலின் சீடர். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தவர். தைத்ரீய சம்ஹிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் .சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, நாடக இலக்கிய வரலாறு கர்ம மீமாம்ஸை முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.

ஏ.ஏ.மக் டொனல் Prof Arthur Anthony MacDonnell (1854-1931): இவர் பென்வேயிடம் பயின்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். Vedic Index of Names and Subjects என்ற புத்தகம் எழுதினார். 1927ஆம் ஆண்டில் India’s Past என்ற நூல் வெளியிட்டார்.. ஆங்கில- சம்ஸ்கிருத அகராதி, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு ஆகிய நூல்களையும் எழுதினார்.

(கீத்தும் மக்டொனலும் தயாரித்த வேதப் பெயர், பொருள் அகராதியும் என் மேஜையில் எப்போதும் இருக்கிறது)

கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner(1853-1929):- இவர் ஒரு ஜெர்மானியர். ராத் என்பவரின் மாணாக்கர். ஜெர்மனியில் பெர்லின், மார்பரி பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தார். ராத் கொடுத்த விளக்கங்களை இவர் ஏற்கவில்லை.சாயண பாஷ்யத்தை ராத் புறக்கணிப்பது தவறு என்றும் சாயண பாஷ்யமே சரி என்றும் எழுதினார். சாயண பாஷ்யம் இன்றி வேதத்தில் ஒரு சொல்லுக்குகூட பொருள் சொல்ல முடியாதென்றும் எழுதினார்.

டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler: இவர் பென்வேயிடம் கற்றவர்.பிராக் பலகலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார். சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலை எழுதினார். பம்பாய், வியன்னா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பணி புரிந்தார். சம்ஸ்கிருத  நூல்கள் பற்றி கலைக் களஞ்சியம் ஒன்றை தயரித்தார்.

சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams: இவர் தற்கால இந்து தேசம் என்ற நூலில் சம்ஸ்கிருதத்தின் சிறப்பை எழுதியுள்ளார். சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பதவிக்கான போட்டியில் மாக்ஸ் முல்லரைத் தோற்கடித்தவர். அந்தப் பதவியே கிறிஸ்தவ மதத்தை நிலநாட்டுவதற்கான பதவியாகும்.

பேராசிரியர் லான்மென் ( Prof. Charles Rockwell Lanman) இவர் விட்னியிடம் பயின்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.இவருக்கு முன் பலர் வேறு மொழிகளில் எழுதிய வேத இலக்கியப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

ஹெர்மன் ஜாகோபியும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் தனித்தனியே நடத்திய ஆரய்ச்சியில் ரிக் வேதத்தின் காலம் கி.மு.4000 என்று கணித்துள்ளனர். இது வான சாத்திர ஆராய்ச்சி என்பதால் தனிக்கட்டுரையாக தருகிறேன்.

வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!

maxmuller

ஆராய்ச்சிக் கட்டுரை எண்– 1933

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்

தேதி:- 15 ஜூன் 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்- காலை 10-30

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்கள், ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்கள் ஆகிய நான்கு இனத்தினர் பல இடங்களைப் பிடித்து ஆண்டனர். அவர்களை இப்பொழுது விரட்டி அடித்து வெற்றிவாகை சூடிவிட்டோம். ஆயினும் அவர்கள் இருந்த காலத்தில் எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்,  எப்படியாவது இந்து மதத்தின் அஸ்திவாரத்தை அசைத்துவிட்டால் பின்னர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பலாம், அதன் மூலம் ஆட்சி நீடிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும் என்று கணக்குப் போட்டார்கள் – அது அது தப்புக் கணக்காகிவிட்டது. இதற்காக இந்து மதத்தின் மூல வேரான வேதங்களைத் தகர்க்க வேண்டும் என்று திட்டமிட்டனர். உடனே இதில் தீவிரமாக இறங்கினர் சுமார் 35 பேர்.

ஆட்சி அஸ்தமனமானபோதும், அவர்கள் அப்போது ஊன்றிய விஷ வித்து மட்டும் செடியாகி மரமாகி பழுத்தும் விட்டது. அதுதான் ஆரிய-திராவிட இனவெறி வாதம். இப்பொழுது அந்த மரம் ஆடத் துவங்கிவிட்டது. விரைவில் அழியும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமிழ்நாட்டில் கிடைக்கும் பழைய கல்வெட்டுகளில் எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாலும் அது வடக்கத்திய பிராமியில் இருப்பதாலும் போலி திராவிடங்களின் வாதங்களும் பிசுபிசுத்துப் போய்விட்டது. பழனியில் கிடைத்த மிகப்பெரிய கல்வெட்டில் வஜ்ரம் என்ற சம்ஸ்கிருதச் சொல் இருந்தவுடன் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயன்றனர். முடியவில்லை. எல்லா பழைய கல்வெட்டுகளிலும் இப்படி சம்ஸ்கிருதச் சொற்கள்!

அட, தமிழின் பழம்பெரும் நூலான தொல்காப்பியத்தை வைத்தாவது பூச்சாண்டி காட்டலாம் என்று எண்ணும் திராவிடங்களின் வாயில் பனம்பாரனாரும் தொல்காப்பியரும் மண்ணைப் போட்டுவிட்டனர். நான்கு வேதங்களையும் படித்த பிராமணன், அதங்கோட்டு ஆச்சார்யார்தான் தொல்காப்பியத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று அரங்கேற்ற ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்து இருக்கிறார். தொல்காப்பியரோ நூலில் பல இடங்களில் வேதங்களையும் வேத வழக்குகளையும், வேத கால தெய்வங்களையும் பாடிப் பரவிப் போற்றியுள்ளார். இது எல்லாம் போலி திராவிடங்களின் வாதங்களைத் தகர்த்துவிட்டது.

இது தவிர வெள்ளைக்காரன் சூழ்ச்சியாலும், காந்தி போன்றவர்களின் பலவீனத்தாலும் இந்தியா இருக்கும் வரை நிரந்தர தொல்லை கொடுப்பதற்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டு குடையுதே குடையுதே என்னும் பழமொழி போல ஆகிவிட்டது. இதற்கு முடிவுகட்டுவது வலுவான இந்திய அரசால்தான் முடியும்.

இன்றும் இந்த வெளிநாட்டுச் சதி நீடிக்கிறது. வெண்டி டோனேகர் போன்ற எழுத்தாளர்களை விட்டு, இந்து மதம் பற்றி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல விஷத்தை ஏற்றுவது — எங்கோ கொட்டாம்பட்டியிலும், ஈரோட்டிலும் எவனாவது ஒரு தமிழ் எழுத்தாளன் இந்து மதத்துக்கு எதிராக கதை எழுதினால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளி நாட்டு பல்கலைக் கழகங்களில் பாடப் புத்தகமாக வைத்து அவன் பாங்குக் கணக்கில் பல லட்சங்களைச் சேர்ப்பது — இதற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட்களை ஏவிவிடுவது — இப்படி எவ்வளவோ சதி நடக்கிறது. எங்களைப் போன்ற 40 ஆண்டு அனுபவ ‘ஜர்னலிஸ்டுகள்’ அந்தச் செய்தியைப் படித்த மாத்திரத்தில் சூட்சுமம் புரிந்துவிடும்.

jones-stamp

நிற்க. வேதங்களை உருக்குலைக்க வெளிநாட்டினர் சதி பற்றிப் பார்ப்போம்.

வேதங்களை ஆராயவந்த வெளிநாட்டினரில் மூன்று வகையினர் உண்டு. முதல் வகை சூரியனைக் கண்டு குலைக்கும் நாய் வகை. அதாவது வேதம் முழுவதையும் திட்டித் தீர்ப்பது. சாயணர் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன் எழுதிய உரை முழுவதையும் குதறிக் கிழிப்பது – இந்த வகை

இரண்டாவது வகை: நடுவழி. குற்றமும் சொல்ல வேண்டாம்- புகழவும் வேண்டாம். சாயணர் சொன்னதை ஒட்டியும் வெட்டியும் வாதாடுவது.

மூன்றாவது வகை: சாயணர் சொன்னதை அப்படியே ஏற்பது வேதங்களைக் கொஞ்சம் பாராட்டுவது.

ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரகள், ஜெர்மானியர்கள் ஆகிய மூவரும் இத் “திருப் பணியில்” இறங்கினர். ஜெர்மானியர்கள் இந்தியாவை ஆளவில்லையே. அவர்களுக்கு இதில் என்ன உள் நோக்கம்? என்று நீங்கள் வியக்கலாம். சம்ஸ்கிருதத்துக்கு மிகவும் நெருங்கிய மொழி அது என்பதாலும், இந்திய சம்ஸ்கிருதச் சுவடிகளில் பல ரகசியங்கள் இருந்ததால் அதை எடுத்துச் செல்லும் நோக்கத்தாலும் அவர்களும் களத்தில் இறங்கினர்.

இப்படி இறங்கிய பலரில் ஒருவர்தான் மாக்ஸ் முல்லர். அவர் ஒரு ஜெர்மானியர். அவரை இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனிக் காரர்கள் வேதங்களை மொழிபெயர்க்க கூலி வேலையில் அமர்த்தினர். முதலில் கைக்கூலி வேலை பார்த்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக வேதக்கடலில் மூழ்கிப் போனார். திட்ட முடியவில்லை. கொஞ்சம் பாராட்டியும் கூடப் பேசிவிட்டார்.

vedas

எப்படி தமிழ் கூறு நல்லுலகத்தில் கிறிஸ்தவ மததைப் பரப்ப வந்த ஜி.யூ. போப் என்ற பாதிரியார் திருவாசகம் என்னும் கடலில் மூழ்கி தமிழ் அமுதத்தைப் பருகுவதே தன் பிறவிப்பயன் எடுத்ததன் நோக்கம் என்று கருதினாரோ அது போலவே மாக்ஸ்முல்லர் என்னும் உப்பு பொம்மையும் வேதக் கடலின் ஆழத்தைக் காணப்போய், அதன் ஆழத்தை அறிய முடியாமல் அதில் கலந்து விட்டது. நாற்பது ஆண்டுக்காலம் அவர் வேதக் கடலில் நீச்சல் அடித்ததால் அவரை லண்டனில் சந்தித்த பிறகு சுவாமி விவேகாநந்தர், அவரை சாயணரின் மறு  அவதாரம் என்று புகழ்ந்தார். ஆனால் மக்ஸ்முல்லர் இந்தியா வராமலேயே உயிர்நீத்தார். இதன் மர்மம் இன்று வரை புரியவில்லை! இந்திய வேதங்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மாக்ஸ்முல்லர் இந்தியா வர பயந்தது ஏன்? இன்னொரு நாள் விடை காண்போம்.

இரண்டு கடிகார முள் ஒரே நேரத்தைக் காட்டாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதே போல வேதங்களை “மொழி பெயர்த்த” எல்லோரும் நவக் கிரகங்களாக ஆளுக்கொரு திசையைப் பார்த்தனர். ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் – பெரும் சதிக் கும்பல் என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு—இவர்கள் அனைவரும் “இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்” என்று ஆணித்தரமாக வாதாடினர். மேலும் பைபிள் பிரசாரகர்கள் சொல்லுவது போல உலகம் கி.மு.4004-ல் படைக்கப்பட்டது என்று நம்பினர். மேலும் இவ்வளவு தூரத்துக்கு குடைந்து குடைந்து வேதங்களை அக்கு வேறு ஆணி வேராக அலசியோர் தங்கள் ஆப்ரஹாமிக் (யூதம்,கிறிஸ்தவம், இஸ்லாம்) மதங்களை இப்படி ஆராயவுமில்லை; குறைகூற வுமில்லை.

கீழ்க் கண்ட பட்டியலில் உள்ள எல்லோரும் வேதங்களை ஆராய்ந்து கருத்து தெரிவித்தவர்கள் அல்லது கட்டுரை எழுதியவர்கள், பலர் மொழி பெயர்த்தனர்:–

மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900),

ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),

பேராசிரியர்  ராத் (Prof R Roth)

பிரெடெரிக் லுட்விக், Ludwig Geldner

பேராசிரியர் வீபர் Prof Weber

treecolor

பேராசிரியர் கீத் (Prof.Arthur  Berriedale  Keith).

ஏ.ஏ.மக் டொனல் Prof A A MacDonnell,

வின்டர்நீட்ஸ் Winternitz ,

வில்சன், Prof H H Wilson

கோல்ட்ஸ்டக்கர் Prof Theodore Goldstucker

வில்லியம் ட்வைட் விட்னி William Dwight Whitney (1827-1894),

மோரீஸ் ப்ளூம் பீல்டு Maurice Bloomfield,

பேராசிரியர் ஆர்.பிஷெல் Prof. R Pischel

பேராசிரியர் சார்ல்ஸ் ராக்வெல் லான்மேன் Prof.Charles Rockwell Lanman

ஹெர்மன் ஜாகோபி Herman Jacobi,

ஏ.லாங்ல்வா A Langloi – French Translation

ஆல்ப்ரெட் வீபர் Albrecht Weber – Yajur Veda Vajasaneyi Samhita

ஜே.எக்லிங் J Eggeling

டாஸன் Deussen

கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner

டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler

பாட்லிங் Bohtlingk

பென்பே Theodore Benfey

கிராஸ்மேன் Grossman

ஆட்டோ Otto

whitney

பேராசிரியர் யூஜின் பர்னப்  Prof Eugene Burnouf

கிறிஸ்டியன் லாசன் Christian Lassen

பிரெடெரிக் ரோசன் Friedrich Rosen

ஹெர்மன் ஓல்டன்பர்க் Herman Oldenburg – Sankyana Grhya sutra

சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams

ராபர்ட் டி நொபிலி Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda

லிட்லி Lydley Bibliotheca Indica from 1847

டாக்டர் ரோயர் Dr Roer

டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் 1877 Brhatdevata Dr Fitz Edward Hall

பேராசிரியர் மார்ட்டின் ஹாக் 1863 Prof Martin Haugh

பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் 1864-65 Prof Stenzler

சர் வில்லியம் ஜோன்ஸ்  Sir William Jones

இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் அடுத்த பகுதியில் சுருக்கமாகப் பார்ப்போம்.

கீதை, வேதம் பற்றிய பழமொழிகள்

சாந்தம்

Compiled by London swaminathan

Article No.1927

Date :12th June 2015

Time uploaded in London: 9-25 am

கீதா கங்கோதகம் பீத்வா புனர்ஜன்ம ந வித்யதே

பகவத் கீதையையும், கங்கை நீரையும் அருந்தியவருக்கு மறு பிறப்பு என்பதே இல்லை

கீதா சுகீதா கர்தவ்யா கிமந்யை: சாஸ்த்ர விஸ்தரை:

கீதையை நன்றாகப் படிக்க வேண்டும். மற்ற சாஸ்திரங்களால் என்ன பயன்? – மஹாபாரதம்

ஒப்பிடுக:

பகவத் கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜல லவ கணிகா பீதா

சத்க்ருதபி யேன முராரி சமர்ச்சா

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா – பஜகோவிந்தம்,20

பொருள்:கீதையைக் கொஞ்சமேனும் படித்தவர்களுக்கு, கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பருகியவருக்கு முரஹரியை (கண்ணன்) ஒரு முறையாவது வனங்கியவருக்கு யமனுடன் சண்டை போட வேண்டியது வராது (பீஷ்மர் போல நீங்கள் நினைத்த நேரத்தில் அமைதியாக, ஆனந்தமாக, சுற்றம் புடைசூழ நிற்க, உயிர் துறக்கலாம்)

இதிஹாச புராணாப்யாம் வேதம் சம உப ப்ரும்மயேத் – மஹாபாரதம்

வேத மந்திரங்களை இதிஹாச புராணங்கள் வாயிலாக விளங்கிக் கொள்ள வேண்டும்

ருஷயோ மந்த்ர த்ருஷ்டார:

ரிஷிகள் மந்திரத்தைக் கண்டவர்கள் (இயற்றியவர்கள் அல்ல; ஐன்ஸ்டைன், நியூட்டன் சொன்ன விதிகள் போல அவை முன்னமே உள்ளன; என்றும் இருப்பன)

சின்ன பையன்கள்

வேதோகில தர்மமூலம் (மனு 2-6)

எல்லா  தர்மங்களுக்கும் வேதங்களே வேர் போன்றவை

பாரதே பாது பாரதி

பாரத தேசத்தில் பாரதி (சம்ஸ்கிருதம்) பிரகாசிக்கட்டும் (வாழ்க சம்ஸ்கிருதம் என்று பொருள்)

வேதானாம் சாமவேதோஸ்மி – பகவத் கீதை

வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்

ஸ்ரவணசுகசீமா ஹரிகதா – ப்ரசங்காபரணம்

கேட்பதில் கிடைக்கும் சுகங்களில் உயர்ந்தது ஹரிகதை கேட்கும் சுகமாகும்.

ஸ்ருதிர்விபன்னா ச்ம்ருதயஸ்ச பின்னா: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

வேதங்கள் வேறு; ஸ்மிருதிகள் வேறு (வேதங்கள் சொல்வதை திருத்தவே முடியாது. ஸ்மிருதிகளை பெரியோர்கள் ஒவ்வொரு காலத்திலும் திருத்துவர் அல்லது புதிதாக எழுதுவர்)

ஸம்ஸ்க்ருதி: ஸம்ஸ்க்ருதாஸ்ரிதா

பண்பாடு, சம்ஸ்கிருதத்தை அண்டி வாழ்கிறது.

சர்வஞானமயோ ஹி ச:

வேத இலக்கியமே அனைத்து அறிவும் அடங்கிய களஞ்சியம்.

சர்வம் வேதாத் ப்ரசித்யதி

வேதத்திலிருந்தே எல்லாம் கிடைக்கிறது

சர்வத சம்ஸ்க்ருதீ பூய சுகின: சர்வ சந்து சர்வதச

எல்லாவிதத்திலும் பண்பட்டு எப்போதும் சௌக்கியமாக வாழுங்கள்!

ஸ்துதா மயா வரதா வேத மாதா – அதர்வ வேதம்

வரங்களை அளிக்கும்  வேத மாதா என்னால் தொழப்பட்டாள்.

Pictures are from Face book friends; probably from Art of Living Centre.

–SUBHAM-

தமிழ்க் கவிதை வடிவில் ரிக் வேதம்! ஒரு அரிய நூல்!!

IMG_4092

Compiled by London swaminathan

Article No.1912; Dated 5 June 2015.

Uploaded at London time: காலை 11-26

தமிழில் வேதங்கள் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது மணக்கால் ஆர். ஜம்புநாதன் பெயர்தான். நான்கு வேதங்களை மொழிபெயர்த்த மஹத்தான சாதனை புரிந்தவர். தமிழ்நாட்டின் சாயணர் அவர். தமிழ் கூறு நல்லுலகம் அவருக்கு என்றும் கடமைப் பட்டுள்ளது. ஆனால் மிக வியப்பான விஷயம் அவருக்கு மிகவும் முன்னதாக நீலகிரி குன்னூரில் இருந்து சிவத்தியாநாநந்த மகரிஷி தமிழில் ரிக் வேதத்தை வெளியிட்டிருக்கிறார். அதுவும் மிக, மிக வியப்பான விஷயம் கவிதை வடிவில் அதை வெளிட்டிருக்கிறார்!!

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள அரிய புத்தகங்களைப் புரட்டுகையில் முதல் ஐந்து மண்டலங்கள் கிடைத்தன. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உண்டு. அவை சம்ஸ்கிருதத்தில் கவிதை வடிவில் உள்ளன. இப்பொழுது அனைவரும் ரிக் வேத காலம் கி.மு.1700 என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். 3700 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு நூல் உண்டானதும் அதை வாய்மொழியாகவே ஒரு சொல் மாறாமல் இன்றுவரை ஓதி வருவதும் உலக மஹா அதிசயம்! இதை “அ” என்னும் எழுத்தில் துவக்கி “அ” என்னும் மந்திரத்தில் முடிப்பதும். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று கடைசி மந்திரத்தில் பிரார்த்திப்பதும் இலக்கிய உலகின் முதல் அதிசயம். வேதங்களைத் தொகுத்த வியாசர் அதை கடைசி செய்யுளாக வைத்தது பாரதீய சிந்தனைப் போக்கின் வழியை உணர்த்துவதாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம்

IMG_4127

யார் இந்த சிவத்தியாநாநந்த மகரிஷி?

இவர் 1918 முதல் ரிக் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து பொழிப்புரையாக எழுதி அதே நேரத்தில் கவிதையாகவும் கொடுத்துள்ளார். பிற்காலத்தில் சென்னையில் இதை வால்யூம்களாக வெளியிட்டுள்ளார். அதில் முன்னுரையில் மூன்று பேருக்கு நன்றி கூறுகிறார்.” “தமிழில் இதை என்னை மொழிபெயர்க்கத் தூண்டிய திருக்கோணமலை திருவாளர் கனகசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும், அந்நூல் ரிக் வேதமாக இருக்க என்னைக் கட்டாயப் படுத்திய எனது மனையாள் ஸௌ.ஜானகியம்மா ளுக்கும், ஸாயண பாஷ்யம் வாங்கி உதவிய ஸ்ரீமான்.கிருஷ்ணஸ்வாமி நாயக்கரவர்களுக்கும் இத்தமிழுகம் நன்றிக்கடப்பாடு உடையதென்பதை அறிவித்துக் கொள்ளுகின்றேன்” – என்று எழுதியுள்ளார்.

இவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மூன்றிலும் புலமை உடையவர் என்பது இந்த மொழி பெயர்ப்பிலிருந்து தெரிகிறது. 1918 ல் குன்னூர் ஆநந்தாஸ்ரத்தில் துவங்கிய பணி 1937ல் சென்னையில் நீடித்ததுவரை புத்தகங்கள் மூலம் அறிய முடிகிறது. 1919-20 வாக்கில் அவருடன் ஆர்.ராமசந்திர சாஸ்திரியும் சேர்ந்து கொண்டு கிருஷ்ண யஜூர் வேதத்தை மொழி பெயர்த்து இருக்கிறார். அதுவும் 1919 முதல் வந்திருக்கிறது.

IMG_4129

தமிழ்க் கவிதை வடிவிலான இந்த ரிக் வேத மொழிபெயர்ப்பு தமிழ் நூல் வெளியீட்டில் ஒரு மைல் கல் என்றே சொல்வேன். இது சென்னை கன்னிமரா நூல்நிலயம் போன்ற இடங்களில் கிடைத்தால் மறு பதிப்பு செய்ய வேண்டியது தமிழர்தம் கடமையாகும். அதுவே அவருக்கும் அவரை இப்பணியில் தூண்டியோருக்கும் நாம் செலுத்தும் நன்றியாகும்.

இத்துடன் மொழிபெயர்ப்பு மாதிரிகளையும் இணைத்துள்ளேன். இதைப் படித்து  அனுபவிக்க அக்னிமீளே புரோகிதம் யக்ஞஸ்ய தேவம்ருத்விஜம். ஹோதாரம் ரத்ன தாதமம்—என்று துவங்கும் ரிக்வேததை நாம் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

IMG_4106

துரதிருஷ்ட வசமாக, வேதம் அத்தியயனம் செய்த பிராமணர்களைத்தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. வேதங்களைப் பற்றி வெளிநாட்டு வெள்ளையர்களும், உள்நாட்டுத் திராவிடங்களும், மார்கஸீயவா(ந்)திகளும் சொன்ன எதிர்க்கருத்தை மட்டுமே சுவைத்த தமிழர்களுக்கு இது விளங்கக் கொஞ்ச காலம் பிடிக்கும்.

IMG_4107

வாழ்க சிவத்தியாநாநந்த மஹர்ஷி. வளர்க அவர் புகழ்.

IMG_4108

பகுதி-2 ராம நாம மஹிமை: மேலும் சுவையான கதைகள்

Compiled by London swaminathan

Post no.1888

Date: 25 May 2015; London Time காலை 8-14

 

கதை -3

இறைவனின் நாமம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை விளக்க நேற்று சுவாமி ராமதாஸ், ஸ்ரீசத்ய சாய் பாபா சொன்ன இரண்டு கதைகளைக் கண்டோம். இன்று ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன இரண்டு கதைகளைக் காண்போம்

 

ஒரு மன்னன், ஒரு பிராமணனைக் கொன்றதால் அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி  இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினான். அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை ராம, ராம, ராம என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில்  ரிஷியும் வந்து விட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார்.

அவருக்கு மகன் மீது கடும் கோபம். “அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும் ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய் விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பயாக” என்று சபித்தார். அவர்தான் குஹனாக அடுத்த ஜன்மத்தில் பிறந்தார்.

(ராமனுக்குச் சேவகம் செய்வதில் மனம் மகிழ்ந்து ராமனால் ஒரு தம்பியாக ஏற்றுக் கொள்ளப்பட்டார் குகனென்னும் வேடன். இன்றும் கூட முக்கியமான சடங்குகளின் போது (திதி, தர்ப்பணம்) பிராமணர்கள் பழைய பாவங்களிலிருந்து விடுபட்டுத் தூய்மையடைய ராமனின் பெயரை மூன்று முறை சொல்வர். ஒரு முறையாவது தூய்மையான மனத்துடன் சொல்லட்டுமே என்பதற்காக மூன்று முறை போலும்!)

walking on water

கதை 4

ஒருவன் கடலைக் கடக்க விரும்பினான். அவனிடம் படகும் இல்லை, காசும் இல்லை. உடனே விபீஷணன், “அன்பரே! கவலை வேண்டாம். இதோ இதை வைத்துக் கொண்டு நீங்கள் எவ்வளவு தூரம் வரை வேண்டுமானாலும் கடலில் நடந்தே போகலாம். ஆனால் சந்தேகம் வந்துவிட்டால் கடலில் மூழ்கி விடுவீர்கள். ஆகையால் முழு நம்பிக்கையுடன் நடவுங்கள்” — என்று சொல்லி ஒரு இலையை எடுத்து அதில் ராமனின் பெயரை எழுதி அந்த ஆளின் வேட்டியில் ஒரு ஓரத்தில் முடிந்து விட்டார். அந்த ஆளுக்கு இந்த இலை விவரம் தெரியாது.

நம்பிக்கையுடன் கடல் தண்ணீர் மீது காலை வைத்தார். விறு விறு என்று நடந்து சென்றார். அவருக்கே நம்ப முடியவில்லை. ஆச்சர்யம் தாங்கவில்லை. ஆர்வம் கொப்புளிக்கவே இடுப்பில் என்ன மந்திரக் குளிகையை விபீஷணன் முடிந்து விட்டிருக்கிறார் என்று பார்ப்போமே என்று வேட்டியின் முடிச்சை அவிழ்த்தார்.

வேட்டியின் முடிச்சில் இருந்த இலையை எடுத்தார். அதில் ராம என்ற பெயரைக் கண்டார். பூ! இவ்வளவு தானா? வெறும் ராமனின் பெயர்தானா! என்றார். அவ்வளவுதான் கடலில் மூழ்கி விட்டார்!

(நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு– என்கிறார் பாரதி. அந்த நம்பிக்கை போய் சந்தேகம் உள்ளே நுழைந்தாலோ இறைவன் நம்மிடமிருந்து ஓடிப் போய் விடுவான். சம்சயாத்மா விநஸ்யதி = சந்தேகப் பேர்வழிக்கு அழிவு நிச்சயம் – என்கிறான் கண்ணன் பகவத் கீதையில்!)

அடைப்புக் குறிக்குள் இருப்பது என் கருத்து; ஏனையவை ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் மொழிகள்.

காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-2

akrura vision

படம்: தண்ணீருக்கடியி்ல், அக்ரூரர், கண்ட  காட்சி

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1877

தேதி-20 May 2015  நேரம்- 8-30 am

காலம் என்பது சுழன்று கொண்டே இருக்கும்- என்னும் கருத்தை வலியுறுத்தும் மூன்று கதைகளை நேற்று கண்டோம். இன்று மேலும் இரண்டு சுவையான கதைகளைக் காண்போம்.

கதை-4

பாகவத புராணத்தில் உள்ள ஒரு கதை: நாரதர் ஒரு முறை கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக துவாரகைக்குச் சென்றார். கிருஷ்ணருக்குப் பல மனைவியர்கள் உண்டு. முதலில் மூத்த மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று வணக்கம் சொல்லுவோம் என்று உள்ளே நுழைந்தார். அவள் அன்பாக கணவனுக்கு விசிறி வீசிக் கொண்டிருந்தாள். என்ன நாரதரே! சௌக்கியமா? நலம்தானா? என்று இருவரும் அன்பாக குசலம் விசாரித்தனர். இவரும் உரிய மரியாதை வசனங்களைப் பரிமாறி விட்டு அடுத்த மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று உள்ளே நுழைந்தார். அங்கே இரண்டாவது மனைவியுடன் கிருஷ்ணர், தாயக் கட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். நாரதரைக் கண்டவுடன், அப்போதுதான் முதல் தடவை பார்ப்பது போல குசலம் விசாரித்தார். நாரதருக்கு வியப்பாக இருந்தது. மூன்றாவது மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார். அங்கே அவள், கிருஷ்ணரின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள் (முன் காலத்தில் இப்படியெல்லாம், கணவன்மார்களுக்கு மனைவிமார்கள் சேவகம் செய்வதுண்டு!!!!)

இப்படியாக நாரதர் பல மாளிகைகளுக்குள் கிருஷ்ணன் பல இடங்களில் இருப்பதையும் ஒவ்வொருமுறையும் அவர், அப்போதுதான் நாரதரை முதல் முறையாகக் காண்பது போல நடந்துகொள்வதையும் கண்டு வியந்தார். கடவுளை எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன், எதையும் செய்ய வல்லவன் (Omniscient, Omnipresent, Omnipotent) என்பர். ஒரே காலத்தில் அவரை எங்கும் காண முடியும்.

வெள்ளைக் காரனுக்கு இந்தக் கருத்து எல்லாம் புரியாது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானப் புனைக் கதைகளில் (Science fiction stories) இதை எல்லாம் கதை போல எழுதத் துவங்கியுள்ளனர்.!

IMG_3526

படம்: நாரதர்

கதை-5

பாகவத புராணத்தில் உள்ள மேலும் ஒரு கதை: கிருஷ்ணனும் அவனது அண்ணன் பலராமனும் கட்டிளம் காளைகள். இருவரும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் இருந்து குஜராத் மநிலத்தில் உள்ள துவாரகைக்குச் செல்ல திட்டமிட்டனர். அந்தக் காலத்தில் இந்துக்களில் பெரிய எஞ்சினீயர்கள் இருந்ததால் சாலைப் போக்குவரத்து செம்மையாக நடந்தது.– (இது போலவே ஈரான்- ஆப்கனிஸ்தான் எல்லையில் உள்ள கேகய நாட்டில் இருந்து பரதன் வந்த பாதையையும் வால்மீகி ராமாயணத்தில் காணலாம்) — உடனே அக்ரூரர் என்ற குடும்ப நண்பர் – கிருஷ்ண பக்தர் — அவர்களை ரதத்தில் அழைத்துச் சென்றார். ரதத்தை ஓட்டி வந்த டிரைவர் அக்ரூரருக்கு களைப்பு. உடனே இரண்டு சகோதரர்களையும் ரதத்திலேயே உட்காரவைத்துவிட்டு அவர்கள் அனுமதியுடன் குளிக்கச் சென்றார். யமுனை ஆற்றுத் தண்ணீரில் தலையை முக்குகிறார். நீருக்கு அடியில் ரதத்தில் கண்ணனும் பலராமனும் இருக்கக் கண்டார். வியப்புடன் நீருக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். கிருஷ்ணனும் பலராமனும் சிரித்து மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

மீண்டும் தலையை நீருக்குள் முக்கினார். அப்பொழுது கிருஷ்ணன், விஷ்ணுவாக ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்திருப்பதைக் கண்டார். மீண்டும் வியப்பு. தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தால் இரண்டு சகோதரர்களும் அதே இடத்தில் ரதத்தில் இருந்தனர். இப்போது அக்ரூரருக்கு கண்ணன்- பலராமன் அவதார புருஷர்கள் என்பது விளங்கிற்று.

கடவுள் என்பவன் காலத்தைக் கடந்தவன் என்பது தெளிவாயிற்று. விஷ்ணுவின் மறு அவதாரம் கிருஷ்ணன் என்றும் ஆதிசேஷனின் மறு அவதாரம் பலராமன் என்றும் இந்துக்கள் நம்புகின்றனர்.

–சுபம்–

காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-1

க்ரிஷ்ன ஈட்டி

Written by London swaminathan

Research Article No.1875; Dated 19 May 2015.

Uploaded in London at காலை 8-45

Already posted in English

காலம் என்பதை இந்துக்கள் தெரிந்துகொண்ட அளவுக்கு, புரிந்துகொண்ட அளவுக்கு,வேறு எந்த கலாசாரமும், நாகரீகமும் அறியவில்லை. இந்துக்களுக்கு ‘காலச்சக்கரம்’ என்ற சொல் நன்கு தெரிந்த சொல். அதாவது காலம் என்பது சுழன்றுகொண்டே இருக்கும்—காலம் என்பது வட்டப் பாதையில் செல்லும் என்பது அவர்கள் கணிப்பு. நான்கு யுகங்கள் முடிந்தவுடன் மீண்டும் கிருத யுகம் துவங்கி நான்கு யுகங்கள் வரும்—இவ்வாறு பல கோடி ஆண்டுகள் ஆனபின்னர் ஒரு பிரம்மாவின் ஆயுள் முடியும் என்பதெல்லாம் இந்துக்களுக்கு அத்துபடியான விஷயம். இந்த மாதிரி பெரிய எண்கள், சுழற்சி முதலியவை வேறு எங்கும் காணப்படா.

மேற்கத்தியர் கணக்குப்படி காலம் என்பது சக்கரம் போல சுழலாது—அது நீண்ட ஆறு ஓடுவது போல ஒரே திசையில் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் என்பர். அவர்கள் இப்பொழுது கருந்துளைகள் (Black holes) என்னும் விண்வெளி அதிசயம் பற்றி ஆராய, ஆராய புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் முடிவில் இந்துக்கள் சொன்னதே சரி என்று உணர்வர்.

இந்துக்களின் கடவுளுக்குக் கூட காலத்தின் பெயர்கள் இடப்பட்டன. சிவனை ‘மஹா கால’ (Maha Kala) என்றும், ‘காலாக்னீ ருத்ராய’ (Kalagni Rudraya) என்றும் மந்திரங்கள் சொல்லுகின்றன. அதாவது மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவன், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும்—விபூதி ஆகி விடும் என்பதை இந்துக்கள் உணர்வர். அதே போல விஷ்ணுவையும் ‘பூத, பவ்ய, பவத் பிரபு’ (விஷ்ணு சஹஸ்ரநாமம்) என்று அழைப்பர். அதாவது அவனே “கடந்த, வரும், நிகழ் காலம்”. எல்லா கடவுளரையும் “குணத்ரயாதீத, காலத்ரயாதீத” என்றும் இந்துக்கள் போற்றுவர். அதாவது இறைவன் என்பவன் குணத்தையும் காலத்தையும் கடந்தவன். அவனை நமது காலம் கட்டுப்படுத்தாது. இதெல்லாம் மேல்நாட்டினருக்குப் புரியாத விஷயம்!

காலத்தின் தன்மையை விளக்க ஐந்து அருமையான கதைகள் உள. அவற்றை இரண்டு பகுதிகளில் தருவேன்.முதல் பகுதியில் மூன்று கதைகளைக் காண்போம்.

1.விஷ்ணு புராணக் கதை

விஷ்ணுவும் நாரதரும் ஒரு காட்டின் வழியே பயணம் செய்து கொண்டிருந்தனர். விஷ்ணுவுக்குத் திடீரென தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு கிராமம் தெரிந்தது. அங்கே சென்று கொஞ்சம் தண்ணீர் வாங்கி வருமாறு நாரதரிடம் விஷ்ணு கேட்டுக் கொண்டார். உடனே நாரதர் அந்த கிராமத்துக்குச் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். அழகிய பெண் கதவைத் திறந்தாள். கண்டதும் காதல் மலர்ந்தது. அது கல்யாணத்தில் போய் முடிந்தது. நாரதர் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

ஒரு நாள் பெரிய வெள்ளம் வந்தது. அந்த கிராமமே வெளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நாரதர் குடும்பமும் வெள்ளத்தில் சென்றது. நாரதர் செய்த புண்ணியம் அவர் காட்டில் போய் ஒதுங்கினார். எந்த இடத்தில் விஷ்ணுவிடம் விடை பெற்றாரோ அதே இடத்தில் கரை ஒதுங்கினார். விஷ்ணு, “என்ன நாரதரே! தண்ணீர் கிடைத்ததா?” என்று கேட்டார். நாரதருக்கு ஒரே வியப்பு. இது என்ன, நான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்று வயசும் ஆகிவிட்டதே, இவர் ஏதோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தண்ணீர் கொண்டுவரச் சொன்னது போலப் பேசுகிறாரே என்று எண்ணி விஷ்ணுவிடமே போய் விளக்கம் கேட்டார். அப்போது விஷ்ணு சொன்னார், நாரதரே உமது பூவுலக நேரம் வேறு, எமது தேவலோக நேரம் வேறு என்று.

இது போன்ற கதைகள் இந்து மதத்தில் ஏராளம் உண்டு. அர்ஜுனனை மாதலி என்பவன் இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்று ஐந்து ஆண்டு விருந்தினராக வைத்திருந்த போது நடந்தவையும், ரேவதி நட்சத்திரக் கதையும் இது போன்றவையே. சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இந்த அளவுக்கு வேறு கலாசாரங்களில் கதைகளும் இல்லை. கதைகள் இருந்தாலும் அதை விளக்க எந்த கொள்கைகளும் இல்லை.

அவர்களுக்கு சிறிய எண்கள் மட்டுமே தெரிந்திருந்தன. இதே காலத்தில் வேத மந்திரங்களோ பிரம்மாண்டமான எண்களைப் பயன்படுத்தின.

IMG_3526

கதை 2: இன்னும் ஒரு கதையைக் காண்போம்

லீலாசுகரின் “பால கோபால ஸ்துதி”யில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. கிருஷ்ணன் குழந்தையாக இருந்தகாலையில், யசோதா அவனைத் தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்கச் செய்கிறாள். அப்பொழுது தாலாட்டுப் பாட்டில் ராமாயணக் கதையைப் பாட்டாகப் பாடிக் கொண்டிருந்தார். மாரீசன், மாய மான் வேடத்தில் வந்து, அதை ராமன் துரத்திச் செல்லும் கட்டத்தை யசோதா பாடிக் கொண்டிருந்தாள். திடீரெனக் குழந்தைக்கு –அதாவது குழந்தைக் கிருஷ்ணனுக்கு — தூக்கிவாரிப் போட்டது. லட்சுமணா! என் வில் எங்கே? என்று கிருஷ்ணன் (குழந்தை) உரத்தகுரலில் கத்தினான். அதாவது பூர்வ ஜன்ம நினைப்பு வந்தது. இதில் அவர் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்தது தெரிகிறது.

கதை 3: இந்திரனும் எறும்பு வரிசையும்

பிரம்ம வைவர்த்த புராணத்தில் இந்திரனின் மமதை, அஹங்காரம் அடக்கப்பட்ட ஒரு கதை வருகிறது. இந்திரன் கம்பீரமாக அவனது சபையில் அமர்ந்திருந்த போது,  திடீரென எறும்புகள் ஒரு நீண்ட வரிசையில் சபைக்குள் நுழைந்தன. எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். ஒருவர் மட்டும் குபீரெனச் சிரித்துவிட்டார். “ஐயா, இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” என்று இந்திரன் கேட்டார். “இந்த ஒவ்வொரு எறும்பும் முந்தைய ஜன்மத்தில் ஒரு இந்திரனாக இருந்தது” என்று அவர் பதில் சொன்னார். இதில் காலச் சுழற்சி என்னும் கருத்து இருக்கிறது.

ants

மேலும் இரண்டு சுவையான கதைகளை நாளை காண்போம்

உலகின் மிகப் பழைய நகரம் – காசி/வாரணாசி!

26abc-festival-at-varanasi

Written by London swaminathan

Research Article No.1866; Dated 15 May 2015.

Uploaded in London at 10-21

உலகின் மிகப் பழைய நகரம் எது?

காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும். இதுவரை கிடைத்த தொல் பொருட் துறை கி.மு.900 வரையே இந்த நகரின் பழமையைக் காட்டும். ஆனால் கங்கைச் சமவெளியில் கி.மு 1200 வரை பழமையான பானை ஓடுகள் கிடைத்துள்ளன. சிலர் இதை 1400 வரை கொண்டு செல்வர். ஆயினும் இலக்கியச் சான்றுகள் இதுதான் உலகின் மிகப் பழைய நகரம் என்று காட்டும்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கேதார்நாத் கோவில் சேதமானதையும், நேபாள பூகம்பத்தில் முக்திநாத் கோவில் சேதமானதையும் கண்டோம். தனுஷ்கோடி கோவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் போகவே, எங்கு கரை இருக்கிறதோ அதை தனுஷ்கோடி என்று சொல்லுகிறோம். இந்தியாவின் பருவக்காற்றும், வெய்யிலும் மாறி மாறி அடிப்பதால் கட்டிடச் சின்னங்கள் அழிந்துவிட்டன. முஸ்லீம்படை எடுப்பாளர்கள் அவர்களால் முடிந்த மட்டும் அழித்துவிட்டுச் சென்றனர். இதற்குப் பின் எஞ்சியுள்ள சின்னங்களையே நாம் இன்று காண்கிறோம்.

1).இந்துக்கள் நம்பிக்கை

மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது.

கலியுகத்தை நம்பாதவர்கள் கூட மஹாபாரத யுத்தம் கி.மு.1500 வாக்கில் நடந்திருக்கும் என்று ஒப்புக் கொள்வர். கல்ஹணரோ மாபாரத காலத்தை கி.மு.2500 வாக்கில் வைக்கிறார். எப்படியாகிலும் காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.

bcc3e-varanasi-ganga-ghat2

2).பௌத்தர்களும் சமணர்களும் கூறுவது என்ன?

பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர். நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீஹாரில் உள்ள புத்த கயாவில் ஞானோதயம் அடைந்த புத்தர், ஏன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிக்கு வந்து முதல் சொற்பொழிவை நடத்தினார்? அவர் உபதேசம் செய்த சாரநாத், காசியின் புறநகர்ப் பகுதியாகும். ஏன் என்றால் காசிதான் நாட்டின் புனித, பழைய தலம்.

அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!

3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது. சோழர் வாழ்ந்த இடம் சோழநாடு. தமிழர் இருப்பிடம் தமிழ்நாடு; ஆங்கிலோ-சாக்ஸன் இனம் இருந்த இடம் ஆங்கிலாந்து (இங்கிலாந்து). இந்த காசி இனத்தாலேயே காசி என்றழைக்கப்பட்டது.

வருண, அஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.

4.பாபிலோனியாவில் காசி இன மக்கள்

4காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில்,   ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழையையே பேசினர். இவ்வளவையும் ஒப்புக் கொள்ளும் வெள்ளைக்காரகள் இன்றுவரை அவர்களுடைய “ஆரிஜின்” (மூலம்) தெரியவில்லை என்று புத்தகம் எழுதி மழுப்பி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கங்கைச் சமவெளியில் இருந்து வெற்றி விஜயம் மேற்கொண்ட இந்துக்களாவர்.

சௌராஷ்டிரர் என்பவர் (ஜொராஸ்தர்) ஈரான் வரை சென்று வேதத்துக்கு ஏட்டிக்குப் பூட்டியாக ஒரு மதம் தாபித்தார்.அவர் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிர பிரதேசத்தில் இருந்து சென்றவர். அதை ஈரானியர்கள் “ஜொராஸ்தர்” என்று எழுதிவிட்டனர். இதை காஞ்சிப் பெரியவர் (1894-1994) தனது உபந்யாசங்களில் கூறியுள்ளார். அதே குஜராத்தில் உள்ள கிருஷ்ணரின் துவாரகை கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டதும், கிருஷ்ணர் மறைந்த பின்னர் அது கடலில் மூழ்கியதை  பாகவத புராணம் உறுதி செய்வதும் கலியுகத்தையும் மஹாபாரத காலத்தையும் உண்மையாக்குகின்றன.

34dfa-pilgrimage-map

6.பௌத்ததில் காசி

புத்த மதத்தினர் ஜாதகக் கதைகள் என்ற பெயரில் பாலி மொழியில் நிறைய பழைய கதைகளைத் தொகுத்து வைத்துள்ளனர். இது எழுதப்பட்டது 2300 ஆண்டுகளுக்கு முன். அதில் புத்தரின் பூர்வ ஜன்ம அவதாரங்களைப் பற்றிப் பேசுகையில் “முன்னொரு காலத்தில் காசியில் பிரம்மதத்தன் அரசாளுகையில், போதிசத்துவர் …………….” என்று எழுதுகின்னர். 2300 ஆண்டுகளுக்கு முன் கதை எழுதியவர்கள் “முன் ஒரு காலத்தில் “என்று சொன்னால் அதற்கும் முன்னர் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது ஆகியிருத்தல் வேண்டும்.

7.சமணத்தில் காசி

சமணமதத்தைச் சேர்ந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரரான மாஹாவீரர், புத்தருக்கும் சிறிது முந்தையவர். அவர்களில் ஏழாவது தீர்த்தங்கரர் பிறந்தது காசியில்! 23ஆவது தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதர், கிருஷ்ணர் காலத்தில் வசித்தவர். இதையெல்லாம் கணக்கில் சேர்த்தால் ஏழாவது தீர்த்தங்கரர் மஹாவீரருக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வசித்திருக்க வேண்டும்!! காசியின் கதையும் அவருடன் பின்னால் போகும்!

8.வேதத்தில் காசி

பௌத்த, சமண மத இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தையது வேத கால இலக்கியம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அதர்வண வேதத்தில் (5-22-14) காசி மக்கள் இடம் பெறுகின்றனர். வருணாவதி என்னும் ஆறும் (4-7-1) இடம்பெறுகிறது. இதுவே பின்ன வருண+ அஸ்ஸி= வாரணாசி ஆயிற்று. சதபத பிராமணத்திலும் உபநிஷதங்களிலும் காசியை ஆண்ட தார்தராஷ்ட்ர, அஜாத சத்ரு போன்ற பழங்கால மன்னர்கள் பெயர் இடம் பெறுகின்றன.

9.காசி-கௌசல்ய, காசி- விதேக முதலிய சொற்றொடர்கள் பிராமணங்களில் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் சாம் ராஜ்யங்களுக்கு இடையில் நிலவிய நட்புறவுக்கு இவை சான்று தரும். கௌசல்ய என்பது கோசல நாட்டின் அடியாகப் பிறந்த உரிச்சொல். கோசலத்தின் தலைநகரான அயோத்தியில், முதல் சமண மத தீர்த்தங்கரர் பிறந்ததும், ராமனுக்கு எல்லாம் மூத்த இக்ஷ்வாகு வம்சத்தினர் ஆண்டதும் அயோத்தியின் பழமையையும் பறை சாற்றும்

10.கபல என்னும் பானை ஓடுகள் பற்றி ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்திரம் ( 4-3-5) முதலிய வேத கால இலக்கியங்களில் வருகின்றன. இதை இறந்தோர் சடங்குகளில் பயன்படுத்துவர். மஸ்கி என்னும் கங்கைச் சமவெளி ஊரில் ஒரு குழந்தையின் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்துக்கள் குழந்தைகள் இறந்தால் எரிக்க மாட்டார்கள். அந்தக் குழந்தையின் சடலத்தின் மீது ஒரு கபல பானை ஓடு இருந்தது. இது அந்தக் குழந்தையின் விளையாட்டுச் சாமான் என்று ஆங்கிலம் படித்த “அறிஞர்கள்” எழுதினர். பின்னர் வேதம் படித்த அறிஞர் இது விளையாட்டுச் சொப்பு அல்ல, கபல என்னும் ஈம ஓடு என்று எடுத்துக் காட்டினர். நமது கலாசாரமே தெரியாமல் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவோர் என்ன என்ன கேடுகளை விளைவிக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு!!

காசி வாழ்க! வாரணாசியின் புகழ் வளர்க!

கருணைக்கு அருணகிரி!

Written by London swaminathan

Date: 21 April 2015; Post No: 1817

Uploaded in London at 17-47

உரையாசிரியர்களில் வல்லவரான நச்சினார்க்கினியரை “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்றும் தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியனை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” என்றும் சங்கத் தமிழில் மிக அதிகப் பாடல்களை இயற்றிய பிராமணப் புலவன் கபிலனை “புலன் அழுக்கற்ற (ஜிதேந்திரியன்) அந்தணாளன்”, “வாய்மொழிக் (சத்தியவான்) கபிலன்” என்றும் பாராட்டுவர். நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்றும் அடை மொழி கொடுத்து பாராட்டிப் போற்றுவர். இதில் ஒவ்வொன்றிற்கும் ஒர் காரணம் உண்டு. இதே போல திருப்புகழ் பாடி சந்தக் கவிகளால் பெயர் பெற்ற அருணகிரிநாதருக்கு ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. “கருணைக்கு அருணகிரி” என்று அவரை பக்தர் உலகமும் தமிழ் உலகமும் போற்றும்.

“கருணைக்கு அருணகிரி” என்று அவரைப் போற்ற பல காரணங்கள் உண்டு. கந்தனின் கருணையால் அவருக்கு மறு ஜன்மம் கிடைத்தது. கந்தனின் கருணை மழையில் நாம் எல்லோரும் நனைய நமக்கு 1300-க்கும் மேலான திருப்புகழ்களைக் கொடுத்தார். இதையெல்லாம் விட தமிழ்ப் புலவர்களை எல்லாம் தமது அகந்தையால் படாதபாடு படுத்திய வில்லிப்புத்தூராரைத் தண்டிக்க வாய்ப்புக் கிடைத்தும் அவர் மீது கருணை காட்டினார்.

அது என்ன கதை?

வில்லிபுத்தூரார் தன்னை மிஞ்சிய தமிழ் அறிவு யாருக்கும் இல்லை என்றார். அப்படி யாராவது தனக்கும் மிஞ்சிய அறிவு படைத்ததாகச் சொன்னால் கவிதைப் போட்டிக்கு வரவேண்டும் என்றும் சவால் விட்டார். அந்தப் போட்டியில் தோற்போரின் காதைக் துறட்டு வைத்து அறுத்தும் விடுவார். பல போலி புலவர்களை நடுநடுங்க வைத்தார். ஒவ்வொரு ஊராகச் சென்று புலவர் என்று பெயர் சொல்லிய எல்லோரையும் வாதுக்கு அழைத்தார்; வம்புக்கும் இழுத்தார்.

அருணகிரி புகழ் அறிந்து அவர் வாழ்ந்த திருவண்ணாமலைக்கும் வந்தார். திருப்புகழையும் குறை சொன்னார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டி, அந்தப் பகுதி மன்னன் பிரபுடதேவன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தான். அருணகிரியும், வில்லிப் புத்தூராரும் அதற்கு இசைவு தெரிவித்தனர். எப்போதும் நிபந்தனை போடும் வில்லிக்கு வில்லனாக வந்த அருணகிரியும் ஒரு நிபந்தனை விதித்தார். தன் கையிலும் ஒரு துறட்டியைக் கொடுக்க வேண்டும் என்றும் வில்லி தோற்றால் அவர் காது அறுபடும் என்றும் எச்சரித்தார்.

அருணகிரி பாடும் ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்ல வில்லி ஒப்புக் கொண்டார். முருகன் அருள் பெற்ற அருணகிரி, கந்தர் அந்தாதி என்னும் அற்புதப் பாட்டை எட்டுக்கட்டி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லச் சொல்ல போட்டி நீண்டு கொண்டே போனது. ஐம்பத்து நான்கு பாடல்கள் வரை பாடி முடித்த அருணகிரி, ஒரே எழுத்துக்களான கவிதையை எடுத்து வீசினார். இது பொருளற்ற பிதற்றல் என்றும் அப்படிப் பொருள் இருந்தால் அதற்கு அருணகிரியே பொருள் சொல்லட்டும் என்றும் வில்லிப்புத்தூரார் கூறினார்.

அபோது அருணகிரி, ‘குமரா’ என்று பெயர் சொல்லி அழைக்க ஒரு பாலகன் அவர் முன்னே வந்தான். அதாவது முருகனே பையன் போல வந்தான். அவனே அக்கவிதைக்கும் பொருள் சொல்லவே வில்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆயினும் அவரது காதை அறுக்காமல் விட்டு விட்டு அவரிடம் இருந்த துறட்டியையும் வாங்கிக் கொண்டு நீங்களும் நல்ல கவி இயற்றிப் புகழ் பெறலாமே என்று அறிவுரையும் ஆசியும் வழங்கினார்.

இதற்குப் பின்னரே வில்லிப்புத்தூரார் மஹாபாரதத்தை தமிழ் வடிவில் தந்து பெயர் பெற்றார். இன்று வரை வில்லி பாரதம் அவர்தம் புகழைப் பரப்புகிறது. அகந்தை அழிந்து அறிவுக் கண் திறக்க உதவிய அருணகிரியை உலகம், “கருணைக்கு அருணகிரி” என்று வாழ்த்தியது.

அவர் பாடிய, வில்லியைத் திணறடித்த, பாடல்:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதன் பொருள்:

திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய (தாதை) பரமசிவனும், மறை கிழவோனாகிய (தாத) பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய (தத்தி) ஆதிசேசனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய (அத்தி) திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசத் தலமாகக் கொண்டு), ஆயர்பாடியில் (ததி) தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே (தித்தித்ததே) என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்), போற்றித் (துதித்து) வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே (ஆதி), தந்தங்களை (தத்தத்து) உடைய, யானையாகிய ஐராவதத்தால் (அத்தி) வளர்க்கப்பட்ட, கிளி (தத்தை) போன்ற தேவயானையின்,தாசனே, பல தீமைகள் (திதே துதை) நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு), அக்னியினால் (தீ), தகிக்கப்படும், அந்த (திதி) அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து (துதி தீ) வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட (தொத்ததே) வேண்டும்.