சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்

prasnam

(பிரஸ்னம், கேரளம்)

Research Article No.1811; Date: 19th April 2015

Written by London swaminathan

Uploaded from London at 6—45 AM

(This is already published in English)

இமயம் முதல் குமரி வரை ஒரே நம்பிக்கைகளை உடையது ஏக பாரதம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகிலேயே பெரிய நாடு பாரதம் என்பதால் பிராந்தியத்துக்கு பிராந்தியம் கொஞ்சம் வேறு பாடு இருந்திருக்கும். தமிழ் மொழியும் அதன் சகோதர மொழிகளும் பேசப்பட்ட தமிழ் நாட்டில் பரத நாட்டியமும், ஆந்திரத்தில் குச்சிப்புடியும், கேரளத்தில் கதகளியும் கர்நாடகத்தில் யக்ஷகானமும் இருந்தன. இதற்காக அவர்களை வேறு வேறு இனம் என்று வேறு படுத்திப் பார்ப்பதில்லை. உலகிலேயே நீண்டகாலம் உட் சண்டை போட்ட இனம் தமிழ் இனம். சேர சோழ் பாண்டியர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டு தமிழ் நாட்டையே பாழாக்கினர்! இதற்காக அவர்களில் ஒருவர் ஆரியர், மற்றொருவர் திராவிடர் என்று சிண்டு முடியவில்லை.

ஆனால் வெளி நாட்டினர் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆரிய-திராவிட விஷ விதைகளை ஊன்றினர். இங்கே காழ்ப்புணர்ச்சி கொண்ட சுயநலமிகள் அதற்கு “ஆமாம்சாமி” போட்டனர். ஆனால் ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர், அரவிந்தர் போன்றோர் அந்த இனவெறிக் கொள்கைக்கு ஆப்பு வைத்தனர். ஹிட்லர் மட்டும் இந்த ஆரிய இன வெறிக் கொள்கையை நம்பி தான் தூய ஆரியன் என்று சொல்லிக்கொண்டு இரண்டு கோடி மக்கள் இறக்கக் கரணமானான் (காண்க: ஹிட்லரின் சுய சரிதை மெய்ன் கெம்ப்).

oxford-water-diviner

தண்ணீர், புதையல் கண்டுபிடித்தல், ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து

சகுனம், ஆரூடம் விஷயங்களில் பாரதம் முழுதும் ஒரே கொள்கைதான். காக்கை முதலிய பறவைகள் இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, நரி முதலிய மிருகங்கள் இப்ப்டிப் போனால் என்ன, தும்மல், பல்லி சொல்லுக்கு என்ன பலன், வானத்தில் தோன்றும் வால் நட்சத்திர முதலியவற்றால் என்ன ஏற்படும்? இப்படி நூற்றுக்கணக்கான விஷயங்கள் சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேலான இடங்களில் வருகின்றன. அதற்கு முன்னரே இது வேத கால இலக்கியங்களில் இருக்கின்றன.

காகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள், வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதைக் குறிப்புகளை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இப்பொழுது வேத கால இலக்கியங்களில் இருப்பதை சுமேரிய மற்றும் இதாலிய எட்ருஸ்கன் நாகரீகங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.

சங்க கால இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை. வேத கால இலக்கியம் 3700 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆகையால் வேத காலத்தை சங்க காலத்துடன் ஒப்பிடுகையில் குறைந்தது 1700 ஆண்டு இடைவெளி இருக்கிறது என்பதை நினைவிற் கொள்ளுதல் சாலப் பொருத்தம்.இந்துக்களின் பல நம்பிக்கைகளை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. பூகம்பம், சுனாமி, கிரகணம், இனி வரப்போகும் பருவக் காற்று, சூறாவளி முதலிய காலங்களில் பிராணிகள் முன்கூட்டியே செயல்படுகின்றன.

கேரளத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் பருவ மழை துவங்கும் முன் ஒரு குறிப்பிட்ட பறவை வரும் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே – என்ற பழமொழி போல இந்தப் பறவை  வரும் முன்னே—தென்மேற்குப் பருவமழை வரும் பின்னே” – என்று புது மொழி சொல்லுவார்கள்.

dowsing rod

காகம் பற்றி கௌசீதகீ பிராமணம்:

ஒரு பெண்ணுக்கு உரிய மாப்பிள்ளை எந்த திசையில் இருந்து வருவான்? எந்த திசையில் பெண் வீட்டார் முதலில் காகங்களைப் பார்க்கின்றனரோ அந்த திசையில் இருந்து ஒருவன் இந்தப் பெண்ணை மணம் புரிய வருவான்  ( KB 34-24). புது மொழி: காகம் வரும் முன்னே, மாப்பிள்ளை வருவார் பின்னே!!

பசுமாடுகள் பற்றி சதபத பிராமணம்

சோமயாகம் செய்கையில் பசுமாட்டின் செயல்பாடு யாகம் செய்பவரின் அதிர்ஷ்டம் எப்படி என்பதைக் காட்டும்  ( SB 4-5-8-11) புது மொழி: பசு மாடு ஆடும் முன்னே; ஐயர் குடுமி ஆடும் பின்னே!!

ஆந்தைகள் பற்றி ஹிரண்யகேசி க்ருஹ்யசூத்ரம்

ஊரைச் சுற்றி ஆந்தை பறந்து வந்து வருங்காலத்தை உரைக்கட்டும்; இந்தப் பறவை இறைவனின் இருப்பிடம் வரை செல்பவை. ரிக்வேத காலத்திலேயே இந்த நம்பிக்கை இருந்தது (HGS 1-17-1)

ஆந்தைகள் லெட்சுமியின் வாஹனம். மேலை நாடுகளில் பெரும்பாலான பள்ளிக்க்கூடங்கள், பல்கலைக் கழகங்கள் சின்னங்களில் ஆந்தை இருக்கும். அது அறிவின் சின்னம்.அதீனா என்னும் கிரேக்க நாட்டு சரஸ்வதிக்கு இவள் வாஹனம்.(எனது வாஹனங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முழு விவரம் காண்க)

babylonian liver.jpg1900 BCE sippar,iraq

கல்லீரல் ஜோதிடம் (பாபிலோனியா)

பெண்ணும் மண்ணும்: கோபில க்ருஹ்யசூத்ரம்

ஒரு பெண் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். விரும்பிய மண் வகை உருண்டைகளைக் கொண்டு வரவேண்டும். அதை வைத்து அவளை அறிந்து விடலாம் (G G S 2-1-3ff)

ஆங்கிலத்தில் “உன் நண்பர்கள் பெயரைச் சொல்; நீ எப்படிப்பட்டவன் என்று சொல்லி விடுகிறேன்” — என்பார்கள்.

“நீ படிக்கும் புத்தகங்களின் பெயர்களைச் சொல்; நீ யார் என்று சொல்லி விடுகிறேன்” — என்பர். இவை எல்லாம் பழமொழிகள்.

புது மொழி: மண் வாசனை பெண் வாசனையைக் காட்டிவிடும்!!

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா?

ஒரு பிராமணக் குழந்தை தன்னிச்சையாக ஒரு பெண்ணின் எந்த உடல் பகுதியில் கை வைக்கிறதோ, அந்த உடற் பகுதிக்கு, உடல் உறுப்புக்கு என்ன பெயரோ அதை வைத்து ஆணா, பெண்ணா என்று ஆரூடம் சொல்லும் வழக்கம் வேதகாலத்தில் இருந்ததாக வேத இண்டெக்ஸ் எழுதிய கீத் கூறுகிறார் (Keith 390-1)

சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆண், பெண் என்ற ‘பால் பகுப்பு’ உண்டு.

புது மொழி: தொட்டால் தெரியும் ஆணா, பெண்ணா!

மதுரை நகரில் மில்லியன் மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் நடக்கும். அப்பொழுது கள்ளழகர் (பெருமாள்) என்ன ‘கலர்/ வண்ணப் பட்டு’ ஆடை உடுத்தி வைகை ஆற்றி இறங்குகிறார் என்பதை விவசாயிகள் ஆவலுடன் பார்ப்பர்.ஏனெனில் அந்தக் கலரைப் பொறுத்து அந்த வருட மழையும் அறுவடையும் இருக்கும் என்பது மதுரை ஜில்லா நம்பிக்கை.

Piacenza_Bronzeleber.jpgEtruscan

எட்ருஸ்கன் கல்லீரல் வரை படம்

பாபிலோனிய, சுமேரிய நம்பிக்கைகள்

இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் நம்பிக்கை வைத்தனர். தமிழர்கள் புள் (பறவை) என்பர்; அவர்கள் புலோன் என்பர்.

எட்ருஸ்கன், சுமேரியர், பாபிலோனிய முதலியோர் ஆடு, மாடு முதலியவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து அதன் நிலையைக் கண்டு சோதிடம் சொன்னார்கள். 3000 ஆண்டுக்கு முந்தைய ஆடுகளின் கல்லீரல் வரைபடம், களிமண் மாதிரிகள் கிடைத்திருக்கின்றன. இந்துக்கள் வாஸ்து சாஸ்திர கட்டம் போடுவது போல அந்த கல்லீரல் உறுப்பின் மீது இவர்கள் கட்டம் போட்டு ஆரூடம் சொன்னார்கள். நுரையீரல், மற்றும் குடல் சுற்றி இருக்கும் நிலை ஆகியவற்றைக் கொண்டும் சோதிடம் சொன்னார்கள்.

மஹாபாரதத்தில் போர் துவங்கும் முன் வானத்தில் தோன்றிய அறிகுறிகள் பற்றியும், புறநானூற்றில், சேர மன்னன் இறப்பதற்கு முன் தோன்றிய வால் நட்சத்திரம் பற்றியும் சொல்லப் பட்டிருக்கின்றன. இது போலவே மத்திய கிழக்கிலும் (சுமேரிய/பாபிலோனிய) நம்பிக்கைகள் இருந்தன. இந்துக்களைப் போலவே அரசனின் உடல் நலம்/ஆயுள், படை எடுப்பில் வெற்றியா தோல்வியா, கோவில் கட்டுவது எப்போது, அதிர்ஷ்டம் அடிக்குமா? அடிக்காதா? என்பது போன்ற பல விஷயங்களை அவர்கள் சொன்னார்கள்.

துருக்கி நாட்டவர் வயதான பெண்களைக் கொண்டு குறி சொன்னார்கள். இந்த வழக்கம் தமிழர்—கிரேக்கர் இடையே இருப்பதை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.

இந்தியாவில் தென் குமரி முதல் வடவிமயம் வரையுள்ள பிரஸ்னம், கயிறு சோதிடம், நாடி சோதிடம், ஜாதக் கட்டு என்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஜோதிட வகைகளிலும் நாமே ‘கின்னஸ் சாதனைப் புத்தக’த்தில் இடம் பெறுவோம்!!

ashtamangalya+prasnam+at+triprayar

Read also my articles:

Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)

How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)

Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)

Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils

Birds and Gods.

மதுரகவி திருப்புகழ்!

 bommai krishna

Post No.1808; Date: 18th April 2015

Written by S NAGARAJAN

Uploaded from London at 5-42 AM

 

By .நாகராஜன்

 

மதுரகவி ஶ்ரீநிவாச ஐயங்கார்

பிரமிக்க வைக்கும் புதியதொரு சந்த வகையைத் தந்து முருகனின் அருளுக்குப் பாத்திரமாக லட்சோப லட்சம் பக்தர்களை ஈர்த்து திருப்புகழ் பாட வைத்தவர் மகான் அருணகிரிநாதர்.

சொற்சுவையும் பொருள் சுவையும் சந்தமும் லயமும் பின்னிப் பிணைந்து ஒவ்வொரு பாடலிலும் அமுதூறும் தமிழை முருக பக்தியில் குழைத்தவர் அவர்.

அந்த வகையில் அரிய திருப்புகழ் சந்தத்தை இன்னொரு மகாகவியும் பின்பற்றி பல நூறு பாடல்களை இயற்றியுள்ளார்; ஆனால் அவை சற்று பிரபலமாகாமல் இருக்கின்றன; காரணம் நாம் அறிந்த ஒன்று தான்!

வாழ்ந்த காலத்தில் கவிஞர்களைத் தமிழர்கள்  கண்டு கொள்ள மாட்டார்கள்; யாராவது ஒருவர் வந்து – அதுவும் மேலை நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் வந்து –  அந்தக் கவிஞனின் புகழைப் பாராட்டியவுடன் விழித்துக் கொள்வார்கள்!

மதுரைக்கு அருகில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்கள் தமிழ் கவிஞர்கள் வாழும் ஊர்கள். இயல்பாக ஊருக்குப் பல கவிஞர்கள் இந்த தமிழ் மண்ணில் தோன்றி வந்திருக்கின்றனர்.

இந்த கம்பம் பள்ளத்தாக்கிள் உத்தமபாளையத்தை அடுத்து அனுமன் – தன் – பட்டி என்ற அழகிய கிராமம் உள்ளது. ஊரில் அனுமனின் கோவில் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வைணவ மரபில் வந்து உதித்த பெரியார் மதுரகவி ஶ்ரீநிவாச ஐயங்கார்.

krishna flute

404 பாடல்கள் உள்ள திருமாலின் திருப்புகழ்

 

லட்சக்கணக்கான பாடல்களைத் தமிழில் இவர் யாத்துள்ளார். இவர் யாத்துள்ள சுமார் 62 நூல்களின் பட்டியல் நமக்கு இன்று கிடைத்துள்ளன. இந்த நூல்களில் ஒன்று மதுர கவி திருப்புகழ்.

இதில் 404 பாட;ல்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களோடு மங்களாசாசனம் பெறாத திருப்பவள வண்ணம் என்ற இடத்தையும் சேர்த்து 109 திவ்ய தேசங்களை இதில் இவர் பாடியுள்ளார்.

இந்த திருப்புகழில் சோழநாட்டுத் தலங்கள் – 40, பாண்டிய நாடு -18, சேர நாடு – 13, நடு நாடு – 2, தொண்டை நாடு – 23, வடநாடு – 13, புராணத்தலத் திருப்பதிகள் – 21 என திருப்புகழ் துதிகள் ஏழு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.

கரும்பாலையில் வீழ்ந்த பறவை போல தளர்வேனோ

உற்பா தப்பூ சற்பா பத்தால்

உட்டா பத்துக்              குளைவாகி

உற்றா லைபா கிற்சேர் புட்போல்

உற்றே கத்தித்             தளர்வேனோ

இற்பா சந்தா வித்தே நெக்கா

வெய்த்தா பத்திற்           படுவேனோ

எக்கா லப்பா லிற்போய் நற்கா

லிற்றாழ் வுற்றுத்           தணிவேனே

உற்பாத பூசல் உற்று பாபத்தால் உள் தாபத்துக்கு உளைவாகி உற்று ஆலைப்பாகில் சேர் புள் போல் உற்றே கத்தி தளர்வேனோ1

பொருள் : கொடுமைகள் நிறைந்த போரினால் உற்ற தீவினையால் மன வெம்மைக்கு ஆட்பட்டு ஆலைப்பாகில் விழுந்த பறவை போல் கதறித் தளர்வேனோ?

இற்பாசத்தாவித்தே  நெக்கா எய்த்து ஆபத்தில் படுவேனோ!

எக்கால் அப்பாலிற் போய் நற்காலில் தாழ்வுற்று தணிவேனே!

பொருள்: மனை ஆசையில் ஈடுபட்டு நெகிழ்ந்து இளைத்து இடரில் வீழ்வேனோ!எப்போது இந்த பாசமெனும் இடர்களுக்கு அப்பால் வந்து  நல்ல திருவடிகளில் தாழ்ந்து பணிந்து வணங்குவேன்?

சோழநாட்டு திவ்ய தேச திருப்புகழ் இது.

krishna yoga

ஆயர்பாடியில் சஞ்சரித்த கண்ணா!

இன்னொரு பாடல்:-

உதய பானு நேரான திகிரி சாபம் வாளாதி

ஒளிகொள் ஜோதி சூழேம                 முடையோனே

உதய ராக மோடாயர் மருவு பாடி யூடாடி

உரலி னேறி யளைதேடு                   மொருவோனே

சதன சீத மாறாத பதும லோச னாதேவர்

தமது தாபம் வாராது                       தகைவோனே

தரும ராச னீராழி யுலகை யாள  வேமோது

சமர்செய் சூத  னேதேவர்                   பெருமாளே

பொருள்: உதய சூரியனை ஒத்த சக்கரம், வில், கத்தி முதலிய சுடர் விடும் பிரகாசம் சூழ்ந்து சேமம் உடையவனே! பூபாள ராகத்துடன் ஆயர்கள் வாழும் ஆயர்பாடியில் சஞ்சரித்து உரல் மீது ஏறி நின்று வெண்ணெயைத் தேடுவோனே! நீரின் குளுமை மாறாத தாமரைக் கண்ணா! தேவர்கள் துன்பம் வாராமல் தடுப்பவனே! தருமபுத்திரர் நீர் சூழ்ந்த இந்த உலகை ஆள்வதற்காக பாரதப் போரில் பார்த்தனுக்கு தேர் ஓட்டியவனே! வானோர் தலைவனாகிய திருமாலே!

எடுத்த இடமெல்லாம் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களிலிருந்து அற்புதமான நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்படுவதைக் காணலாம்.

perumal chintadripet

நம்மாழ்வார் மீது பக்தி

 

நம்மாழ்வார் மீது பரம பக்தி கொண்டவர் கவிஞர் மதுரகவியார். அவரைப் பலபடியாகப் போற்றுவதையும் அநேகம் பாடல்களில் காண முடியும்!

இசைமேவு சந்தம் இயல்மேவு பந்தம்

இசைவான தொந்தம்                 இனிஓசை

எளிதான இன்ப நலம்நாடும் அன்பர்

இதையாச னங்கள்                   இடையேகி

அசை சீர் பொருந்து  கவியாயி ரங்கள்

அருள் மாறர் நெஞ்சம்                அமர்வாய் நீ

பொருள் :- கீதம் விளங்கும் பொலிவு, இயற்கையான கட்டுப்பாடு, பொருத்தமான தொடர்புடைய இனிய ஒலி, சுலபமான மகிழ்ச்சியில் நலம் நாடுகின்ற பக்தர்களின் இதய ஆசனங்களில் சென்று சீரும் அசையும் பொருந்திய ஆயிரம் பாசுரங்கள் வழங்கும் நம்மாழ்வார் உள்ளத்தில் அமர்வாய் நீ!

ஐம்படைகளோடாழி அழகாக அங்கையவரி மாமாயன்

எங்கள் தனி ஆழ்வார்கள் அன்பனுயர் சீர்பாட அரணாமே (கங்கை தரு என தொடங்கும் பாடல்)  என இப்படி எங்கள் ஆழ்வார்களின் ஒப்பற்ற அன்பனே உன் சீரைப் பாடினால் அதுவே எமக்கு காப்பு ஆகும் என மதுரகவியார் பகர்கிறார்!

கம்பனின் உரையுடன் கூடிய நூல்

மதுரகவியின் வழித்தோன்றல்களான வேதவல்லி- கோவிந்தராஜனின் பெரு முயற்சியால் இந்த நூல் வெளிவந்துள்ளது.

இதற்கு அருமையான உரையை கம்பன் என்ற புனைப் பெயரில் கேரளம் பரப்பனங்காடியைச் சேர்ந்த மு.கோ.ராமன் வழங்கியுள்ளார்.

திருமாலின் திருப்புகழைப் பாடப் பாட மெய் சிலிர்க்கும்; பக்தி பெருகும். தமிழ் அன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் மதுரகவி திருப்புகழ்!

*************

நூல் கிடைக்கும் இடம் : வேதா பப்ளிகேஷன்ஸ், 8, நரசிம்மபுரம், மைலாப்பூர், சென்னை -4

கண்டோம்! கண்டோம்!! கண்டோம்!!! கண்ணுக்கினியன கண்டோம்!! 2 குட்டிக் கதைகள்

parrot_reflection

Compiled by London swaminathan

Post No. 1798: Dated 14th April 2015

Uploaded at London Time 10–28

கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்; தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி, பரந்து திரிகின்றனவே. — நம்மாழ்வார்

சேரவாரும் ஜகத்தீரே!!

கிளிகளுக்கு எப்படி பேசுவதற்குக் கற்றுக் கொடுப்பார்கள் தெரியுமா? அதை ஒரு தனி அறையில் கண்ணாடிக்கு முன் உட்கார வைத்துவிட்டு திரைக்குப் பின்னால் பயிற்சியாளர் நிற்பார். அவர் சின்னச் சொற்களைக் கூறுவார். கண்ணாடிக்கு முன் நிற்கும் கிளி, தனது உருவத்தை அதில் பார்த்துக் கொண்டு இருக்கும். பயிற்சியாளரின் குரலைக் கேட்டவுடன், தனக்கு முன் கண்ணாடியில் உள்ள கிளிதான் பேசுகிறது என்று நினைத்துக்கொண்டு இதுவும் பதிலுக்குக் குரல் கொடுக்கும்.

பயிற்சியாளர் பெரிய பெரிய சொற்களைச் சொல்லச் சொல்ல அதே குரலில் கிளியும் பேசத்துவங்கும். பிறகு இருவர் குரலும் ஒன்றாகவே இருக்கும். குருவும் இப்படித்தான் தனது சீடர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார். மனிதர்தான் கற்பிக்கிறார் என்றாலும் அவர் பின்னால் ஒளிந்திருப்பவர் கடவுள். குருவுக்கு ஞான ஒளி ஊட்டி குருவின் வாய் மூலமாக நமக்குக் கற்பிக்கிறார். குருவிடமிருந்து வரும் கட்டளைகள் அனைத்தும் கடவுளிடமிருந்து வரும் வாக்கியங்கள் என்பதை சீடன் அறியவேண்டும். கடவுளும் குருவும் ஒன்றே.

guru3

இதனால்தான் இந்துக்கள், குருகுலப் பள்ளிகளில் தினமும்

குருர் பிரம்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மஹேஸ்வர:

குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

–என்று சொல்லி வணங்கி விட்டு பாடத்தைத் துவங்குவார்கள். சில இடங்களில் பாடம் முடிந்தவுடனும் சொல்லுவர்.

caged-parrots2

பறவையும் கைதியும்

ஐரோப்பாவில் எவ்வளவோ யுத்தங்கள் நடந்தன. அதில் ஒரு யுத்தத்தில், சிறைப் பிடிக்கப்பட்ட ஒரு வீரனுக்கு 15 ஆண்டு சிறைவாசம் கிடைத்தது. பின்னொரு காலத்தில் இரு நாடுகள் இடையே சமரச–சமாதான உடன்படிக்கை ஏற்படவே அந்தக் கைதி விடுவிக்கப்பட்டான். அவன் வெளியே வரும்போது அவனை வரவேற்க வந்த ஒரு நண்பன் ஐம்பது பவுண்டுகள் (பிரிட்டிஷ் நாணயம்)  உள்ள ஒரு பர்ஸைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

கைதிக்கு ஒரே ஆனந்தம், பேரானந்தம்!

“விடுதலை,விடுதலை விடுதலை!!! ((பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!!! பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை!!! (பாரதியார்))”

என்று பாடிக் கொண்டே தெருவில் கூத்தாடிக் கொண்டு வந்தான். வழியில் பறவைகள், செல்லப் பிராணிகளை விற்கும் ஒரு கடையைப் பார்த்தான். கூண்டுக்குள் நிறைய கிளிகள் கீச்சு, கீச்சு என்று கத்திக் கொண்டிருந்தன. கடைக்குள் சென்று எல்லாப் பறவைகளுக்கும் என்ன விலை என்று கேட்டான். கடைக்காரன், 49 பவுண்டுகள் 99 காசுகள் என்று சொன்னான். உடனே கையில் உள்ள எல்லா பணத்தையும் கொடுத்து விட்டு பறவைகளுடன் வெளியே வந்தான். கூண்டின் கதவைத் திறந்து விட்டு, ஒவ்வொரு பறவையாக வெளியே வரும்போது பேரானந்தம் அடைந்து கைகொட்டி ஆரவாரம் செய்தான். எல்லாப் பறவைகளும் விடுதலயானவுடன் தெருவில் ஆனந்தக் கூத்தாடினான்.

chaitanya 3

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த கடைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம். “அன்பரே, கையில் உள்ள பணம் எல்லாவற்றையும் கொடுத்து விலைக்கு வாங்கிய எல்லாப் பறவைகளையும் விடுதலை செய்து இப்படி ஆனந்த நடனம் ஆடுகிறீர்களே, நீங்கள் யார், என்ன செய்தி?” என்று கேட்டான்.

“நண்பரே, நான் ஒரு போர்க்கைதி; 15 ஆண்டு சிறையில் கிடந்துவிட்டு இன்று தான் விடுதலை ஆனேன். இந்த பரந்த வானம், புதிய காற்று, பரிபூரண சுதந்திரத்தின் அருமை பெருமை எனக்குத்தான் தெரியும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூண்டில் அடைபட்ட இப் பறவைகளுக்கும் விடுதலை தர விரும்பினேன்” — என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.

நம்முடைய குரு மார்களும் இப்படித்தான். பரமானந்தம். சச்சிதானந்தம், பிரம்மானந்தம் என்றெலாம் வருணிக்கப்படும் இறைவனின் பேரருளைக் கண்ட பின்னர், மற்றவர்களுக்கும் விடுதலை (வீடு பேறு= மோக்ஷம்) கிடைப்பதற்காக நம்மையும் ‘அறியாமை’ என்னும் சிறையில் இருந்து விடுவிக்க ஓடோடி வருகின்றனர்.

சைவ, வைஷ்ணவப் பெரியார்களான நால்வர், பன்னிரு ஆழ்வார்கள், சித்தர்கள் பாடல்களைப் பயில்வோருக்கு இது தெள்ளிதின் விளங்கும்.

“கண்டோம், கண்டோம், கண்டோம்!!!

கண்ணுக்கினியன கண்டோம், தொண்டீர் எல்லோரும் வாரீர்” — என்கிறார் ஒரு ஆழ்வார். “சேரவாரும் ஜகத்தீரே!” –என்று அறைகூவல் விடுக்கிறார்.

இன்னொருவரோ “அடடா! கடை விரித்தோம், கொள்வாரிலையே” – என்று வருந்துகிறார். “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; எண்ணில் நல்கதிக்கு யாதும் ஓர் குறைவிலை” — என்று உறுதி தருகிறார் சம்பந்தர்.

1caitanya-dancing

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், இதை இன்னும் அழகாக விளக்குகிறார். சில ஞானிகள் பேரானந்தக் கடலைப் பார்த்தவுடன் ஆர்வம் தாங்க மாட்டாமல், அதில் உடனே விழுந்து நீச்சல் அடிக்கின்றனர். உப்பு பொம்மை கடல் ஆழத்தைக் காணப்போவது போல போய் அவர்கள் ஆனந்தக் கடலில் கரைந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அடடா! இப்பேற்பட்ட பேரானந்தக் கடலை அறியாமல் சிற்றின்பக் கடலில் மூழ்கித் தவிக்கும் மக்கள் இனத்தை மீட்போம் என்று நினைத்து, மிகவும் கஷ்டப்பட்டு, தங்கள் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு, திரும்பி வந்து,  மக்களிடம் கதறுகின்றனர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது அவர்தம் கொள்கை.

chaitanya 2

சைதன்ய மஹாப்ரபு எல்லோரையும் பேரானந்தத்தில் மூழ்கடிக்கும் காட்சி.

சுபம்.

தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்?

Written by London swaminathan

Research Article No. 1796; 13th  April 2015

Uploaded from London at   9-12

(இந்தக் கட்டுரையை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன்)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பார்ப்பனன், சிவ பெருமானுடன் சண்டை போட்டார்: ஏய், சிவா உனக்கு குலம் கோத்திரம் ஏதாவது உண்டா? பிச்சை எடுப்பது தானே உன் தொழில்? என்று ஏசினார்:

சங்கு அறுப்பது எங்கள் குலம்

சங்கரர்க்கு ஏது குலம்

— என்று சொல்லி எள்ளி நகை ஆடினார். சிவ பெருமானுக்கு மஹா கோபம்; நெற்றிக் கண்ணைத் திறந்தார். அப்போதும் அந்த மதுரை ஆசாமி (நக்கீரர்) விடுவதாக இல்லை:–

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே

–என்று கொக்கரித்தார். உடல் எல்லாம் பற்றி எரிந்தது இவ்வாறு சண்டை போட்ட சங்கப் புலவன் நக்கீரனுக்கு! இதற்குப் பின்னர் அவர் சிவனுடைய தாள் பணிந்து போற்றிப் புகழ் பாடியதை திருவிளையாடல் புராணம் திரைப் படத்தில் கண்டு களித்திருப்பீர்கள்.

(சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோமினி  — நக்கீரர்;ஆதாரம்—தனிப்பாற்றிரட்டு, ஆண்டு 1897)

நக்கீரன் எனும் பார்ப்பனர் ஒரு பெரும்புலவர். கபிலர் பரணர் என்ற வேறு இரண்டு புகழ்பெற்ற பார்ப்பனர்களுக்குச் சமமாக வைத்து எண்ணப்பட்டவர். அவர் செய்த தொழில் சங்கு அறுத்து வளையல்களை விற்பது ஆகும். புலமை வேறு; தொழில் வேறு.

அது எப்படி பார்ப்பனர்கள் இப்படி வளையல் தொழிலில் இறங்கினர்? குஜராத்தில் ஜேஷ்டிப் பிராமணர்கள் என்பவர்கள் புகழ் பெற்ற மல்யுத்த வீரர்கள். கேரளத்தில் நாடகம் நடிக்கும் (சாக்கைக்கூத்து) பிராமண ஜாதி உண்டு. அவர்களால்தான் புகழ்பெற்ற சம்ஸ்கிருத நாடகங்கள் உலகிற்குக் கிடைத்தன.

இப்படி தனது குலத்தொழிலை செய்யாமல் வேறு தொழில்களைச் செய்யும் மூன்று வருணத்தாரை விராத்யர்கள் என்று மனு சொல்கிறார். பிராமணர்களுக்குக் குலத்தொழில் என்ன என்பதை வள்ளுவரும், சங்கப் புலவர்களும் தெள்ளிதின் புகன்றனர்: “அறுதொழிலோர்” என்று குறளும் சங்க இலக்கியமும் பல இடங்களில் பகரும்:

வேட்டல், வேட்பித்தல் (யாகம்)

கற்றல், கற்பித்தல் ( வேத அத்யயனம்)

கொடுத்தல், வாங்குதல் (தானம்)

இந்த அறுதொழில் போலவே க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் ஆகியோருக்கும் மனு ஸ்மிருதி என்ன என்ன தொழில்கள் என்று சொல்லும். இந்த மூன்று வருணத்தாரும் குறிப்பிட்ட வயதுக்குள் பூணூல் அணிந்து காயத்ரி மந்திரம்( Rig Veda 3-62-10).  சொல்ல வேண்டும். அப்படி பூணூல் அணிந்து காயத்ரி சொல்லாதவர்கள் எல்லாம் தள்ளிப்போனவர்கள் – தள்ளி வைக்கப்பட்டவர்கள் அவர்கள் எல்லோரும் விராத்தியர்கள் (Manu 10-20) என்று மனு நீதி நூல் புகலும்.

வேத காலத்தில் இந்து மத விதிகளைப் பின்பற்றாதவர்களை இப்படி விராத்தியர்கள் என்றனர். இன்று அனுதினமும் முறைப்படி மூன்று முறை காயத்ரி ஜபம் செய்பவர்கள்தான் பிராமணர்கள் என்றால், விரல் விட்டு எண்ணக் கூடிய பிராமணர்களே இருப்பார்கள். பிராமணர்களே இப்படி என்றால், மற்றவர்களைக் கேட்பானேன்!!

தமிழ் நாட்டிலும் சித்தர்கள் என்போர் மஹா மேதாவிகள், தத்துவ வித்தகர்கள்; இந்துமதத்தின் காவலர்கள். ஆயினும் இவர்கள் ஆகம விதிகளைப் பின்பற்றி சடங்குகளைச் செய்யாததால், சைவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தள்ளியே வைத்தனர். இது போலத்தான் விராத்தியர்களும்.

ஆயினும் விராத்தியர்கள், மனம் திருந்தி மீண்டும் சடங்குகளைச் செய்ய முன்வந்த போது, அவர்களைத் தூய்மையாக்க சுத்திகரிப்பு சடங்கு ஒன்றையும் வேத நூல்கள் இயம்புகின்றன. அதன் பெயர் விராத்யஸ்டோம.

மூன்று வருணத்தாரும் எவ்வளவு காலத்துக்கு பூணூல் போடுவதை ஒத்திப் போடலாம் என்றும் மனு சொல்கிறார்:

பிராமணர் (புரோகிதர்கள்) -16 வயது

க்ஷத்ரியர் (ஆட்சியாளர்கள்)- 22 வயது

வைஸ்யர் (வணிகப் பெருங்குடி) -24 வயது

இது உச்சபட்ச வயது. மூவருணத்தாரும் 7, 9, 11 வயதிலேயே

பூணுல் போட்டுக் கொண்டனர்.

விராத்தியர் பற்றிய குறிப்புகள் வரும் நூல்கள்:

வேதம்  Atharva Veda (15-1-1); VS 30-8, TB; 3-4-5-1

மனு ஸ்ம்ருதி :Manu 2—38 and 39

பிராமணங்கள் Panchavimsa Brahmana (17-1-4)

.

மனு ஸ்மிருதி, ரிக் வேதம், பிராமணங்கள், பல வகை கிருஹ்ய சூத்திரங்களில் இருந்து வேத காலம் பற்றி பல அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன:

1.வேத காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்கியது. மக்களில் பலர் குலத்தொழிலை விட்டு விலகிச் சென்ர போதும் அவர்களை, ஒரேயடியாக விலக்கிவிடாமல் கர் வாபஸி (தாய் வீட்டுக்குத் திரும்பி வரும்) சடங்கு வைத்து அவர்கலை ஏற்றுக் கொண்டனர்.

2.பிராமணர், க்ஷத்ரியர், வைஸ்யர் எல்லோரும் பூணுல் போட்டுக் கொண்டு சந்தியா வந்தனம் செய்து, காயத்ரீ ஜபித்தனர். (ராமாயணத்தில் கூட ராமன் செய்த சடங்குகள் உள்ளன).

3.விராத்தியர்கள் என்போர் தாங்களாகவே ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு பல இடங்களில் குடியேறினர். அவர்கள் கருப்பு உடை , தலைப் பாகை அணிந்து மாட்டு வண்டிகளில் பாணர், கூத்தர் போல இசைக் கருவிகளுடன் உல்லாசப் பயணம் செய்தனர் – நாடோடி வாழ்க்கை நடத்தினர்.

4.மொத்தம் நாலு வையான விராத்தியர்கள் இருந்ததாக பஞ்சவிம்ச பிராமணம் சொல்லுகிறது

5.அதர்வவேதம் விராத்தியர்கள் பற்றி புதிய சித்திரம் தருகிறது.

பழங்காலத்தில் விராத்தியர்கள் பற்றி எழுதியவர்கள்,  இதிலும் ஆரிய திராவிட இனவெறி வாதத்தைப் புகுத்திப் பார்த்தனர். ஆனால் அவர்கள் வாதம் பலிக்கவில்லை. மனு திட்டவட்டமாகப் பேசியிருப்பதும், விராத்யஸ்டோம என்னும் “கர் வாபஸி” (தாய் மதம் திரும்பும் சடங்கு) இருப்பதும் அவர்கள வாதங்களைத் தூள் தூளாக்கிவிட்டது. அவர்களுக்குச் சார்பாக ஆதாரமே இல்லாமல் கட்டுரை எழுதிய இந்துக்களும் இருந்த இடம் தெரியாமல் போனார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் விராத்தியர்களும், நம் நாட்டு இந்துக்களே. இப்பொழுதும் கூட இந்து என்ற பெயருடைய கோடிக்கணக்கான பேர் பல சடங்குகளே தெரியாமல் வாழ்கின்றனர். மோரீஸ், பிஜி தீவுகள், கயானா, தென் ஆப்பிரிக்காவில் வாழும் இளம் தலைமுறையினர் ஓரளவே மதம் பற்றி அறிந்துள்ளனர். நாளும் தூரமும் அதிகரிக்க, அதிகரிக்க, மதமும் சடங்குகளும் தளர்துகொண்டே வரும். இந்தத் தாக்கத்தை எல்லா மதங்களிலும் காண முடிகிறது. இப்படி இருப்பவர்களை விராத்தியர் என்று வேதகாலத்தில் அழைத்தனர்.

–சுபம்–

மொழி அழகு: ருதம், ம்ருதம், அம்ருதம், ப்ரம்ருதம், சத்யாந்ருதம்

shankara begging

பவதி பிக்ஷாம் தேஹி = தாயே பிச்சை போடுங்கள்

எழுதியவர்-லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண்:1795; தேதி 12 ஏப்ரல்

இலண்டனில் பதிவு ஏற்றிய நேரம் –6-22 காலை

(இந்தக் கட்டுரையை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன்)

ருதாம்ருதாப்யாம்  ஜீவேத்து ம்ருதேன ப்ரம்ருதேன வா சத்யாந்ருதாப்யாமபி வா ந ஸ்வவ்ருத்யா கதாசன  – மனு 4-4

பிராமணர்கள் எப்படிச் சம்பாதிக்கலாம் என்று கூறும் மனு ச்லோகத்தை எல்லோரும் படிக்க வேண்டும். ஏனென்றால் இது பல விஷயங்களை நமக்குச் சொல்லித் தருகிறது

முதலாவதாக நாம் எல்லோரும் இன்று சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் “நாய்ப் பிழைப்பு” என்பதை மனு பயன்படுத்துகிறார். பிராமணர்கள் நாய்ப்பிழைப்பு செய்யக் கூடாது ( ந ஸ்வ வ்ருத்யா கதாசன) — என்கிறார்.

இரண்டாவது சம்ஸ்கிருத மொழையின் அழகை ரசிக்க இது உதவும். ருதம் – ம்ருதம் – அம்ருதம் – ப்ரம்ருதம் – சத்யாந்ருதம் – என்று பல சொற்கள், இசை பாடுவது போல இருக்கும்.

தமிழிலும் இது போல உண்டு:

வாய்மை = சொற்களால் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது;

உண்மை = சிந்தனையால்/உள்ளத்தால் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது;

மெய்மை = உடலால் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது

இதை சம்ஸ்க்ருதத்தில் த்ரிகரண சுத்தி (மனம்,மொழி,மெய்) என்பர்.

begging1

மூன்றாவதாக மனுவின் ஸ்லோகம், பிராமணர்கள் என்றுமே பிறரைச் சார்ந்துதான் வாழவேண்டும்  —  ஆனால் வேத விதிப்படி வாழ வேண்டும் – என்று காட்டுகிறது. அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் உணவைச் சேமித்து வைக்கக்கூடாது – பிறரிடம் புரோகிதம் செய்து வாழ வேண்டும் என்று காட்டுகிறது. இதனால்தான் சங்க காலம் முதல் 2000 ஆண்டுகளுக்குத் தமிழ் மன்னர்கள், பிராமனர்களுக்கு அள்ளிக் கொடுத்தனர். 80,000 க்கும் மேலான தமிழ்க் கல்வெட்டுகளில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கும் (பிரம்மதேயம்), கோவில்களுக்கும் (தேவதானம்) தானம் கொடுத்த செய்திதான் இருக்கிறது.

இப்பொழுது ஸ்லோகத்தின் செய்தியைக் காண்போம்:

பிராமணர்கள் கீழ்கண்ட வழிகளில் சம்பாதிக்கலாம்.

சிந்திய கதிர் நெல்லைப் பொறுக்குதல் சிலம் எனப்படும்.

சிந்திய தனி நெல்லைப் பொறுக்குதல் உஞ்சம் எனப்படும்.

இவ்விரண்டும் ருதம்;

யாசிக்காமல் (பிச்சை எடுக்காமல்/தானம் வாங்காமல்) உணவு பெறுவது அமிர்தம்

யாசித்து வரும் உணவு ம்ருதம்;

பயிரிட்டு வரும் உணவுப்பொருட்கள் ப்ரம்ருதம்;

வியாபாரம் செய்வது ஸத்யான்ருதம். இதுகூட சரியே.

ஆனால் மற்றவர்களிடம் சேவகம் செய்து பிழைப்பது நாயின் பிழைப்புக்கு சமம் என்பதால் அதை விட்டு விட வேண்டும் (மனு 4—4 முதல் 6 வரை).

ஆனால் இது எல்லாம் இப்போது பொருளற்றதாகிவிட்டது. எல்லா ஜாதியினரும் எல்லாத் தொழிகளையும் செய்கின்றனர். பழைய கால வரலாற்றை ஆராயும் போது இவைகளைப் பின்னனியாகக் கொண்டு பார்க்கவேண்டும்.

shankara

ஒரு ஏழை வீட்டில், ஏழ்மையைப் போக்க  ஆதி சங்கரர் வேண்டியவுடன்

தங்க மழை பெய்தது; படத்தில் கனக தாரையைக் காணலாம்.

பவதி பிக்ஷாம் தேஹி

மனு பிச்சை எடுப்பதற்கான சங்கேதக் குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

பிராமண பிரம்மச்சாரிகள் படிக்கும் காலத்தில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும். இதைக் குருவுக்கும் தருவார்கள்.

ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டு பிராமணப் பையன் “பவதி பிக்ஷாம் தேஹி” = தாயே! பிச்சை போடுங்கள் தாயே என்பான்.

உடனே வீட்டிலுள்ள வயதான பெண்மணி வந்து சுத்தமான அன்னத்தைப் பிச்சைப் (பிக்ஷை என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் = பிச்சை) பாத்திரத்தில் இடுவாள்.

(மதுரையில் நான் இருந்த கலத்தில் பக்கத்து வேத பாடசாலைப் பையன்கள் இப்படி எங்கள் வீட்டு வாசலிலும் குரல் கொடுத்ததுண்டு. உடனே எனது தாயார், பிச்சை (பிக்ஷை) போடுவாள்.

க்ஷத்ரியர்கள், பிச்சை எடுக்கையில் இந்த கோஷத்தைச் சிறிது மாற்றுகிறார் மனு. அவர்கள்

“பிக்ஷாம் பவதி தேஹி” என்று குரல் கொடுக்கவேண்டும்.

வைஸ்யர்கள் (வணிகர்கள்)

“தேஹி பிக்ஷாம் பவதி” என்று குரல் கொடுக்கவேண்டும்.

இதில் பவதி என்ற சொல் மூன்று வர்ணத்தாருக்கும் முதல், இரண்டாவது, கடைசி சொல்லாக வருவது ஏண் என்று தெரியவில்லை. ஆனால் அனதக் காலத்தில் பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய சமூகத்தினர் மூவரும் குருகுல வாசம் செய்ததும், அவர்களும் மாணவப் பருவத்தில் பிச்சை எடுத்து உண்டதும் இதிலிருந்து தெரிகிறது.

யாரிடம் முதல் பிச்சை கேட்க வேண்டும் என்றும் மனு சொல்லுகிறார். மனு, மிகப்பெரிய மன இயல் நிபுணர்.

அவர் சொல்கிறார், ஒரு பையன், முதல் பிச்சையை தனது தாயாரிடமோ, சின்னம்மாவிடமோ (சித்தி), தன்னுடைய சகோதரியிடமோ, யார் மாட்டேன் என்று சொல்லமாட்டாரோ அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் சொல்லுகிறார் (2-49).

Buddhist-Priest-

இதைப் படிக்கவே மிக உருக்கமாக இருக்கிறது. ஏழு வயது பாலகன், ஒரு வீட்டில் முதல் நாள் பிச்சை கேட்கப்போன போது, சீ, போ! என்று சொன்னால் அந்தப் பையனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். இதற்காக உளமார, நெஞ்சார வாழ்த்தும் தாய், சின்னம்மா, சகோதரி ஆகியோரிடம் முதல் பிச்சை கேட்கச் சொல்கிறார்.

உலகில் ஹமுராபி போன்றோர் எழுதிய சட்டப் புத்தகத்தில் இவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. இதனால்தான்  தமிழ் மன்னர்களும் கம்பன் போன்ற கவிஞர்களும் மனுவை இந்திரனே சந்திரனே என்று புகழ்கின்றனர். கம்பன் ஏராளமான இடங்களில் மனு நீதியைப் புகழ்கிறான். இது பற்றிய குறிப்புகளைத் தனிக் கட்டுரையாகத் தருவேன்.