ஆதிமூலமே என்று அழைத்த
கஜேந்திரன் ஒரு பாண்டிய மன்னனே!
ச.நாகராஜன்
ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைக்க அந்த கஜராஜனை முதலையின் வாயிலிருந்து
பகவான் விஷ்ணு விடுவித்த கதை நாடறிந்த ஒன்று.
ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம் அப்படி அலறிய கஜராஜன் ஒரு பாண்டிய
மன்னனே என்பதைத் தான்.
பாகவதத்தில் வரும் ஒரு சுவையான வரலாறு இது:
இந்திரத்யும்னன் என்பவன் பாண்டிய தேசத்து அரசனாக இருந்து செங்கோலோச்சிக்
கொண்டிருந்தான்.
அவன் சிறந்த விஷ்ணு பக்தன். மிகுந்த புகழ் பெற்றவன்.
பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து வந்த அவன் ஒரு சமயம் மலைய
பர்வதத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். ஆத்ம ஞானியான அவன் யாருடனும் பேசாமல் மௌன
விரதத்தை மேற்கொண்டிருந்து பகவானைத் தியானித்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம் அகஸ்தியர்
தன் சீடர் குழாமோடு அவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
பெரிய முனிவரான அவரை வரவேற்காமல் இந்திரத்யும்னன் தன் தவத்தில்
இருந்தான். அர்க்யபாத்திராதிகளால் அவரை பூஜிக்கவில்லை.
இதனால் கோபம் கொண்டார் அகஸ்தியர்.
“பெரியோர்களை வணங்காத இந்த அரசன் பிராம்மணனை அவமதித்து கஜம்
போல இருந்தமையால் இவன் ஒரு கஜம் ஆகக் கடவது” என்று சபித்து விட்டார்.
அந்த அரசனே மறு ஜென்மத்தில் கஜேந்திரனாய்ப் பிறந்து முதலையால்
பிடிக்கப்பட்டு விஷ்ணு பக்தி மேலிட ஹரியை தோத்திரம் செய்து அவரு அழைத்து, அவரால் காப்பாற்றப்பட்டான்.
விஷ்ணுவின் அருளால் அவன்
மோட்சத்தையும் அடைந்தான்.
ஆக கஜேந்திர மோட்சம் என்று நாம் கேட்டு வரும் கதையில் வரும்
கஜேந்திரன் இந்திரத்யும்னன் என்ற பாண்டிய ராஜனே!
பாண்டிய நாட்டிற்கும்
இந்த வரலாறுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது ஒரு சுவையான செய்தி தானே!
இந்த வரலாறு இன்னும் ஒரு அதிசய செய்தியைக் காலம் காலமாக வழங்கி
வருகிறது.
அது பற்றிய ஒரு சுவையான வரலாறும் உண்டு.
ஒரு அரசன், விஷ்ணு நம்மிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்
என அறிஞர்களைக் கேட்க அவர்கள் சரியான விடை தெரியாமல் விழித்தனர்.
ஒவ்வொருவரும் ஒரு தூரத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுக் கூறினர்.
வானியல் அறிந்தோர் அந்த வானவியல் கணக்கையும் சொல்லிப் பார்த்தனர்.
மன்னன் திருப்தியுறவில்லை.
கடைசியில் பக்திமானான ஒரு சிறுவன் அரசனிடம் வந்தான். தனக்கு
அந்தக் கேள்விக்கு விடை தெரியும் என்றான்.
அரசன் அவனைச் சொல்லச் சொல்லவே அவன் கூறினான்-
“பகவான் இருக்குமிடம் கூப்பிடு தூரமே!”
“ஆதிமூலமே என்று கஜேந்திரன் கூப்பிட்டவுடன் அவன் ஓடி வரவில்லையா?
ஆகவே உள்ளன்புடன் பக்தியுடன் அவனை கூப்பிட்டால் அவன் அதைக் கேட்டு ஓடோடி வருவான். அவன்
இருப்பது கூப்பிடு தூரத்தில் தான்”, என்றான் சிறுவன்.
இந்த பதிலால் மன்னனும் அவையினரும் திருப்தி அடைந்தனர்.
காலம் காலமாக ஒரு பெரிய உண்மையைச் சொல்லும் புண்ய கதை கஜேந்திர
மோக்ஷம் ஆகும்!
2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …
2.சிறு
நீரகக் கல் நோயைத் தீர்க்கும் பிரம்ம தீர்த்தம்
3.தேவார
வைப்புத் தலம்
4.வெட்டுப்பட்ட
சிவலிங்கம்
5.ராஜ
ராஜ சோழனால் கட்டப்பட்ட கோவில்
6.நிறைய
கல்வெட்டுகள்
7.வயல்
நடுவில், தொலை தூரத்தில் கோவிலமைந்த அதிசயம்
8.நாங்கள்
சென்ற தேதி – 25-3-2019
9.எங்கே
உள்ளது?
இந்த
சிவன் கோவில் திருச்சி மாவட்ட லால்குடி வட்டத்தில் இருக்கிறது. நாங்கள்
திருச்சியிலிருந்து காரில் சென்றோம். பாடலூரிலிருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவு.
சிவனின்
பெயர்- சுத்த ரத்தினேஸ்வரர்
இறைவியின்
பெயர்- அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம்
– பிரம்ம தீர்த்தம்
10. கோவில்
பிரகார மேல் சுவற்றில் நவக் கிரகங்கள், 27 நட்சத்திரங்கள்.
11. கோவிலில் ஒட்டியுள்ள விளம்பரப் பலகையில் கோவிலின் சிறப்புகள் வரையப்பட்டுள்ளன. (இணைப்பில் விவரம் காண்க)
லண்டனுக்கு அருகில் வசிக்கும்
திரு.காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை
ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை
அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார்.
இதோ நீண்ட கட்டுரை:
தாஜ் மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது
தாஜ்
மஹால் பற்றிப்பல கதைகள் உண்டு.ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு
வாக்கியத்தைக் காணலாம்- ‘இதைக் கட்டுவதில் 22 ஆண்டுகளுக்கு 20,000 பேர் ஈடுபட்டனர்’. இது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஒரு
சின்னக் கேள்வி. யாரிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது?
பிரான்ஸ்
நாட்டைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஜே பி டவர்னியர் எழுதிய இந்தியப்பயணம் என்ற நூலில் இருந்துதான் இந்த
எண்ணிக்கை வந்தது. அவர் சிவாஜியின் காலத்தில் இந்தியாவுக்குஆறு முறை—1638 முதல் 1668 வரை — துணிகர பயணங்களை மேற்கொண்டார்..
டாவர்னியர் சொல்கிறார்- “இந்தக் கட்டிடப்பணியின் துவக்கத்தையும் நிறைவையும்
நான் கண்டேன். இதில் 22 ஆண்டுகளுக்கு
20000 ஊழியர்கள் இடைவிடாது
பணியாற்றினர்” என்று.
டவர்னியரின்
புஸ்தகம் முதலில் பிரெஞ்சு மொழியில் 1675ல் வெளியானது.அந்தக் காலத்தில் ஒரு தனி மனிதன் இவ்வளவு நீண்ட பயணம்
செய்வது ஒரு துணிகரச் செயலாகக் கருதப்பட்டது. பயணத்தில் பல கஷ்டங்களைச் சந்திக்க
வேண்டியிருக்கும்;
பலமொழி, கலாசாரம் உடைய ஆட்களுடன் பழக வேண்டியிருக்கும்; அவர்களுடைய நடை உடை பாவனைகளுக்கு ஏற்ப
மாறவேண்டியிருக்கும்; பின்னர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்; இதுவே நம்பமுடியாத சாதனை. அத்தோடு
டவர்னியரோ வைரம் முதலான ரத்தினக் கல்
வியாபாரம் செய்பவர்.ஒரு முறை அல்ல;இரு முறை அல்ல; டவர்னியர் இப்படி ஆறு முறை பயணம்
செய்தார். ஆகையால் அக்காலத்தில் அவருடைய புஸ்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1677 முதல் 1811க்குள் அவருடைய புத்தகம்
ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது .ஒன்பது ஆங்கிலப் பதிப்புகள்
வெளியாகின.அதே காலத்தில் 22 பிரெஞ்சு
மொழிப் பதிப்புகள் வெளியாகின.
1889ம் ஆண்டு டாக்டர் பால் என்பவர்
பிரெஞ்சு புத்தகத்தை மொழி பெயர்த்து முந்திய தகவல்களைத் திருத்தினார். அவர் நிறைய
அடிக்குறிப்புகளையும் சேர்த்து கூடுதல் தகவல் சேர்த்தார். டவர்னியரின் பயணத்தை
நன்கு ஆராய்ந்து அவரது ஆறு பயணங்களின் விவரங்களையும் சேர்த்தார்.
அதிலிருந்து டவர்னியர் இரண்டு முறை மட்டுமே ஆக்ராவுக்கு வந்ததது தெரிகிறது 1640-41 குளிர் காலத்திலும் 1665ம் ஆண்டிலும். இது இன்னொரு சுவையான
வினாவை எழுப்பும்.
ஷாஜஹானின்
மனைவி 1631ம் ஆண்டில் இறந்ததாகவும் உடனே ஷாஜஹான்
தாஜ் மஹல் கட்டிட வேலையைத் துவங்கியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அது
சரியென்றால் டவர்னியர் தாஜ்மஹால் கட்டத் துவங்கியதைப் பார்த்திருக்க முடியாது.
ஏனெனில் அவர் அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே ஆக்ராவுக்கு வந்தார்.
அவுரங்க
சீப், அவருடைய தந்தையான ஷாஜஹானை ஆக்ராவிலுள்ள செங்கோட்டையில் 1658 முதல் சிறை வைத்து ஆட்சியைக்
கைப்பற்றினார்.அவுரங்கசீப் தாஜ்மஹாலை கட்டி முடித்தார் என்று எந்த வரலாற்று
அறிஞரும் எழுதவில்லை. அது சரியென்றால், டவர்னியர் தாஜ்மஹால் கட்டிடம் நிறைவு அடைந்ததையும் பார்த்திருக்க
முடியாது.
அப்படியானால்
20,000 தொழிலாளர்கள் இடைவிடாது பணியாற்றினர்
என்று டவர்னியர் சொல்லுவது அர்த்தமற்றது.ஏன் இந்த வரலாற்று உண்மையை 117 ஆண்டுகளாக வரலாற்று அறிஞர்கள்மறைத்து வைத்தனர் ? காரணம் மிகவும் தெளிவானதே.இந்த உண்மை, கதையின் அஸ்திவாரத்தையே ஆட்டுகிறது.
பாதுஷாநாமா
– இதுஎன்ன சொல்கிறது?
இந்துக்களுக்கு
வரலாற்று உணர்வே இல்லை என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவர். முஸ்லீம்
ஆட்சியாளர்கள் மட்டுமே வரலாற்று தகவல்களைப் பதிவு செய்ததாக விளம்புவர்.போகட்டும். நாம் ஷாஜஹான் காலத்தில் எழுதப்பட்ட
பாதுஷா நாமா பக்கம் நம் பார்வையைச் செலுத்துவோம். வங்காளத்தில் இருந்த ஆசியக்
கழகம் 1867, 1868 ஆண்டுகளில் பாதுஷா நாமாவின் பாரஸீகப்
பதிப்பை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது.ஆங்கிலமேஜர் ஒருவரின் மேற்பார்வையில் இரண்டு
மௌல்விகள் இதைச் செய்தனர். மிகவும் விந்தையான விஷயம் என்னவென்றால் தாஜ் மஹால் எப்படிக்
கட்டப்பட்டது என்று பாதுஷா நாமா சொல்லுவதை
எந்த வரலாற்று ஆசிரியனும் வெளியிடுவதில்லை. ஏன்?
எட்டாவது
நூற்றாண்டில் முகமது பின் காசிம் சிந்து நதி தீரத்தில் நடத்திய தாக்குதலிலிருந்து 19-ஆவது நூற்றாண்டில் மராட்டியர் ஆட்சி
வீழ்ச்சி அடையும் வரையான இந்தியவரலாற்றை எழுதும் மஹத்தான பணியை எலியட் மற்றும் டவ்சன் என்ற இரு ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதாவது1200 ஆண்டு வரலாறு. ஆனால் முஸ்லீம்கள்
எழுதிய வரலாற்றை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்கள் எழுதினர். 1867 முதல் 1877 வரை பத்து தொகுதிகளாக அவை வெளியாயின.
ஏழாவது தொகுதி ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகியோரின் ஆட்சி பற்றியது. அதில் தாஜ்மஹால்
என்றசொல்லே இல்லை.
அவர்கள்
என்னசொல்லியிருக்க வேண்டும்? நாங்கள் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் அவரால் அதிகாரபூர்வமாக எழுதிவைக்கப்பட்ட
பாதுஷாநாமாவை ஆதாரமாகக் கொண்டு இந்த வரலாற்றை எழுதியுள்ளோம். அதில் தாஜ் மஹால்
பற்றி எதுவும் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் அப்படி எதுவும்
செப்பவில்லை. வரலாற்று அறினஞர்கள் இதையும் கடந்த 130 ஆண்டுகளாகச் நம்மிடம் சொல்லவில்லை.
1896ம் ஆண்டு ஆக்ராவின் விரிவான வரலாறு என்ற நூலை கான் பகாதூர் சையது முகமது லதீப் எழுதினார்.அவர் பாதுஷாநாமாவை பல முறை மேற்கோள் காட்டினார். ஆனால் பக்கங்களின் எண்களைக் குறிப்பிடவில்லை. பக்கம் 105-ல் அவர் சொல்கிறார்,………………………..
மேஜர் மஹம்மத் அக்பர்
கான் 1939இல் பிரான்ஸில் பிரிட்டிஷ் எக்ஸ்பிடிஷனரி ஃபோர்ஸில் பணியாற்றியவர். அவர் அலகாபாத்தில்
1942இல் ஜனவரி 11ஆம் தேதி நிகழ்த்திய உரை ஒன்றில் இப்படிக் கூறினார்:
“பிரான்ஸ் தேசத்து மக்கள்
இன்னும் இந்திய துருப்புகள் பிரான்ஸ் தேசத்தில்
வீரத்துடன் போரிட்டதை நினைவு கொண்டிருக்கிறார்கள். சென்ற பெரும் மஹா யுத்தத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் இந்திய ராணுவ வீரர்களுக்கு
விக்டோரியா கிராஸ் அளிக்க முடிவு செய்தார்.
வரலாறு இந்தியர்கள் தங்கள் ரத்தத்தைப் பெருமிதத்துடன் தங்களை அணுகியோருக்கும்
தங்களிடம் அன்பு பாராட்டியவர்களுக்காகவும் அளித்தவர்கள்.
வீரம் செறிந்த இந்திய
ராணுவ வீரர்கள் மிகவும் மோசமான நிலையில் சண்டை புரிந்தவர்கள். இருந்த போதிலும் எப்போதும்
அவர்கள் மலர்ச்சியுடன் இருந்தனர். அவர்களின் மன தைரியம் எப்போதுமே உச்சத்தில் இருந்தது.
**
லெப்டினண்ட் ஜெனரல் சர்
லூயிஸ் ஹீத் இந்திய ராணுவ வீரர்களைப் பாராட்டி இப்படிக் கூறினார்:
இந்திய ராணுவ வீரர்கள்
எதிரியைக் காண நேரிட்ட போதிலெல்லாம் அபார தைரியத்துடன் அவர்களுடன் சண்டையிட்டனர்.
நன்றி : ஆங்கில வார இதழ் ட்ரூத், தொகுதி 9 இதழ் 39 – 30-1-1942
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:
Major
Md. Akbar Khan who was in the British Expiditionary force in France in 1939 in
a lecture delivered in Allahabad on 11 January (1942) said:
“The French people still remember the valour
of the Indian troops because it was in France during the last Great War that
His Majesty the King decided to give Victoria Cross to Indian soldiers….
History
was full of examples of Indians who proudly shed their blood for those who had
been kind to them and who sought protection in their midst…
The
brace Indian soldiers have fought under the worst conditions, yet they were
always cheerful. Their morale was always high.”
2)
Lieutenant General Sir Luis Heath commending the Indian troops said:
“
The Indians were fighting superbly whenever they got the chance to see and came
to grips with the enemy.”