மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  11-14 am  (British Summer Time)

 

Post No. 5105

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)

 

காரவேலன் என்ற கலிங்க மன்னன் மிகவும் புகழ்பெற்றவன். அவன் கலிங்க நாட்டை ஆண்டவன்; இப்பொழுதும் அவனுடைய ஹத்திகும்பா (யானைக் குகை) கல்வெட்டைக் காணலாம். இது ஒரிஸ்ஸாவில் உதயகிரி- கண்டகிரி மலையில் உளது. புவனேஸ்வரத்துக்கு அருகில் பிராக்ருத மொழியில், பிராஹ்மி லிபியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டு 2200 ஆண்டுப் பழமை உடைத்து. தமிழர்களின் கூட்டணியை உடைத்ததாகவும் பாண்டிய மன்னரிடமிருந்து ரத்தினக் கற்களைக் கப்பமாகப் பெற்றதாகவும் இவன் பெருமை பேசுவதால், தமிழ் வரலாற்றுக்கும் இவன் கல்வெட்டு துணைபோகிறது. இவனிடம் தோற்றுப்போன தமிழ் மன்னர்கள் யார் என்று தெரியவில்லை.இது ஒரு புறம் இருக்க இவனுடைய பெயர் கழுதையா என்ற ஒரு ஆராய்ச்சியும் 1940ஆம் ஆண்டு வூல்நர் நினைவு மலரில் (Woolner Commemoration Volume, year 1940) வந்துள்ளது. அதை ஆராய்ந்து எனது கருத்தையும் முன்வைப்பேன்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜே.பிரஸிலுஸ்கி (J.Prezyluski) எழுதிய  கட்டுரையில் சொல்லும் விஷயம் பின்வருமாறு:

 

கார+ வேல= கருப்பு வேல் என்று இருக்கலாம் (தமிழ்ப் பெயர் என்று கொண்டால்)

காரவேல = கர+வெல்லக= பாகற்காய் (ஸம்ஸ்க்ருத பெயர் என்று கொண்டால்)

 

அக்காலத்தில் முண்டா மொழிகள் அப்பகுதியில் இருந்ததால் அதன் செல்வாக்கும் இருக்கக்கூடும்.

 

இம்மன்னன் பற்றிய தகவல்கள் வேறு எங்கும் இல்லாததால் பெரும் இடர்ப்பாடு நிலவுகிறது. ஆயினும் இவன் சொல்லும் சதகர்ணி, மற்றும் இந்திய-யவன (Indo-Greek)  அரசன் ஆகியோர் உண்மையில் இருந்தவர்கள். ஆகையால் இந்த மன்னன் ஆண்டதில் கேள்விக்கு இடமில்லை. பெயர்தான் பிரச்சனை தருகிறது.

 

‘கர’ என்றால் கழுதை என்ற பொருள் உண்டு (கர்த்தப). ஸம்ஸ்க்ருதத்தில் மிருகங்களின் பெயர்கள் ‘ப’ அல்லது ‘வ’ என்னும் எழுத்தில் முடிவடைவதால் கழுதை (கரவ) என்று கொள்ளலாம்.

 

விஷ்ணு புராணத்தில் ‘கர்த்தபில்லா’ வம்சம் பற்றிய செய்தி உளது. இவர்கள் ஆந்திரர்களை அடுத்து ஆட்சிக்கு வந்ததாக புராணம் விளம்பும்.

 

சமணர்களின் நூலான ‘கால்க கதா’வில் கர்த்தபில்லா பற்றிய கதை வருகிறது அவன் காலகாசார்யா என்னும் சமண முனிவரை அவமானப் படுத்தியதால், அவர் கோபித்துக் கொண்டு போய் சக வம்ச மன்னர்களத் தூண்டிவிட்டு, உஜ்ஜையினி நகர கர்த்தபில்லா ஆட்சியை விழுத்தாட்டியதாக விஷ்ணு புராணம் விளம்பும். இவனுடைய பெயரும் கழுதையின் (கர்த்தப) பெயரே.

 

காரவேலனும் ஒரு சமண மன்னன். கர்த்தபில்லா பெயரின் பொருள்= கழுதைக்குப் பிறந்தவன். அது போல காரவேல என்பதும் கழுதைப் பயல்- கழுதை மகன் என்று இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது ஒரு தெய்வீக கழுதைக்கும் சாதாரண ராஜாவுக்கும் பிறந்தவனாக இருக்கலாம் — என்று சொல்லி பிரெஞ்சு கட்டுரையாளர் கட்டுரையை முடிக்கிறார் (வூல்நர் கம்மமொரேஷன் வால்யூம், 1940)..

 

Hathigumpa Caves

எனது கருத்து:

 

கழுதை போல உதடு இருப்பதால் இப்படிப் பட்ட பெயர் வந்து பின்னர் நிலைத்து இருக்கலாம்; கரோஷ்டி என்ற வடமேற்கு இந்திய லிபிக்கும் ‘கழுதை உதடு’ என்றே பொருள்- அதன் எழுத்துக்கள் அப்படித் தோன்றுவதால் பட்டப்பெயர் நிலைத்துவிட்டது.

 

காரவேலன் பெயரைத் தமிழ் பெயர் என்று கொண்டால் ‘கூர் வேல்’ என்று திருப்பாவையில் வரும் சொல்லையும் பொருத்தலாம். ‘கூர்வேல்  நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்’–

திருப்பாவை 1

 

காரவேலன், தான் வென்ற பகைவர் நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதான் என்று அவனுடைய கல்வெட்டு கூறுகிறது. இதனாலும் ‘கழுதை பூட்டி ஏருழுதவன்’ என்பது காரவேலன் என்று மருவி இருக்கலாம். இது ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுக்கும் பொருந்தும் வியாக்கியானம்!

 

எனது முந்தைய கட்டுரையில் உள்ள பகுதி இதோ:–

 

 

சங்க இலக்கியத்தில் கழுதை

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடிய பாடலில் கழுதையைப் பூட்டி ஏர் உழுதல் பற்றிப் பாடுகிறார். இதையே காரவேலன் ( 193 BC to 170 BC) கல்வெட்டும் கூறுகிறது.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

பாழ் செய்தனை, அவர் நனந்தலை நல் எயில்;

(புறம் பாடல் 15, நெட்டிமையார்)

முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாடுகளை வென்று, தேரோடிய தெருக்கள் வழியாக ஏர்பூட்டிய கழுதைகளை நடத்திச் சென்று உழுதான் என்று புலவர் பாடுகிறார்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியின் புகழ் பாடிய அவ்வையாரும் இதையே கூறுகிறார்:

அணங்குடை மரபின் இருங்களந்தோறும்,

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ!  (புறம் 392, அவ்வையார் )

 

இதன் பொருள்: திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க்களத்திலே கடும் போர் இயற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும் இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே!

இதிலிருந்து ஒரு மன்னனை அவமானப்படுத்த, அவன் ஊரைப் பாழ்படுத்துவதோடு, அங்கே கழுதைகளை அனுப்பி ஏர்பூட்டி உழுதல் வழக்கம் என்றும் அதிலும்  வெள்ளை வரகும், கொள்ளும் பயிரிடுதல் வழக்கம் என்றும் தெரிகிறது. இது நாடு முழுதும் இருந்த பாரதீய பண்பாட்டின் ஒரு அம்சம்.

எல்லோரும் வெறுக்கும் மூதேவியின் வாஹனம் கழுதை

xxx

Hathigumpa Caves

மத்திய இந்தியாவிலும் பீஹாரிலும் ஆட்சி செய்த காளசூரி மன்னர்களும், காஸி நகர் காஹத்தவாலாவும், வங்காளத்தை ஆண்ட பால மன்னர்களும் பண்டல்கண்ட் பகுதியை ஆண்ட சண்டேளா மன்னர்களும் அஸ்வபதி,கஜபதி, நரபதி- என்று பட்டம் வைத்துக் கொண்டனர். குதிரைப் படைத்தலவர், யானைப்படைத் தலைவர், காலட்படைத் தலைவர் என்று பட்டம் வைத்துக்கொண்டனர்.

 

தமிழிலும் கூட கரிகாலன் (கருகிய கால் உடையவன்) போன்ற விநோதமான காரணப் பெயர்கள் உண்டு.

 

–சுபம்–

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

ஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு. 

இந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.

 

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  8-25 am  (British Summer Time)

Post No. 5098

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

 

பிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.

 

கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-

 

‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.

 

 

கம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.

 

மன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்பித்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.

 

பிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.

 

நமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல    மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.

எகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்)துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டுக்யூனிபார்ம் லிபியில் உளது.

மேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.

 

சிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.

 

மன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.

 

தாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.

 

கம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் கொடுத்து, பெண் எடுத்த செய்திகள்  உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.

 

அசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.

 

 

ஐயருக்கும் கோவில்கள்

சில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.

 

எட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.

 

 

ஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.

 

இதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும்  கல்வெட்டுகளும் உள.

 

1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த  தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.

 

கம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குருமார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.

 

சம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய  கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.

 

தாய்லாந்தில்

தர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

 

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.

 

ஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத  இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.

-சுபம்-

அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)

Picture of Mulavarman Inscription in Jakarata Museum

 

Written by London swaminathan

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  18-59  (British Summer Time)

 

Post No. 5096

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)

இந்தோநேஷியா என்பது உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு. அந்த நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ (BORNEO) தீவு உலகில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. அதில் அடர்ந்த மழை வனக்காடுகள் (RAIN FORESTS) உள்ளன. அந்த காட்டுக்குள் இது வரை மனிதர்கள் காலடியே பட்டதில்லை—இது கன்னி கழியாத காடுகள் (VIRGIN FORESTS) என்று உள்ளே நுழைந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சில சம்ஸ்ருதக் கல்வெட்டுகள்!

இதெல்லாம் நடந்து நூறு ஆண்டுகள் ஆயிருக்கும்; ஆயினும் இக் கல்வெட்டுகளின் பெருமையை இப்பொழுதுதான் உலகம் உணரத்  துவங்கியுள்ளது.

 

1950-ஆம் ஆண்டுகளில் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் நடத்திய சொற்பொழிவுகளில் இது பற்றிய அபூர்வ விஷயங்களைத் தொட்டுக் காட்டினார். ஆயினும் முழு விவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் நடத்தியது வரலாற்றுச் சொற்பொழிவு அல்ல. அது சமயச் சொற்பொழிவு.

 

அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது  ஏழு யூப ஸ்தம்பங்களாகும். மன்னர்கள் யாக யக்ஞங்கள் செய்கையில் பிராஹ்மணர்கள் இப்படி யூப ஸ்தம்பங்களை நட்டு அதில் மன்னன் பெருமை, அவர் அளித்த தான தருமங்களைச் சொல்லுவது மரபு.

 

யூப நெடுந்தூண், வேள்வித்தூண் எனபன சங்க இலக்கிய நூல்களிலும் காணப்படுகிறது. முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் அஸ்வமேதம் முதலிய யாகங்களைச் செய்தான்; கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டங்கள் செய்து யாகம் செய்தான். சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜ சூய யாகம் செய்தான். சேர மன்னன் ஒருவன் பார்ப்பனீயப் புலவரின் வேண்டுகோளுக்கிணங்க பத்து வேள்விகள் இயற்றி பத்தாவது முறையில் பார்ப்பனப் புலவரையும் பார்ப்பனியையும் அப்படியே உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பி மாயமாய் மறைய வைத்தான் . இவை எல்லாம் புறநானூற்றிலும் பதிற்றுப் பத்திலும் உள. திருவள்ளுவரும் திருக்குறளில் யாக யக்ஞங்களைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆக தமிழர்கள் மிகப்  பழைய புறநானூற்றுப் பாடலில் யூபம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லைப் பயன்படுத்துவதால் தமிழர்களுக்கு இதெல்லாம் அத்துபடி.

Dasatatha’s Letter to Egyptian King Amenotep (Sramana Deva) in Cuneiform script

அது மட்டுமல்ல காளிதாசனும் பாண்டிய மன்னனை அறிமுகப்படுத்தும் போது அவன் யாகம் செய்து குளித்த ஆடையுடன் எப்போதும் இருப்பவன் என்று பெருமையாகக் கூறுகிறான். அத்தோடு அகஸ்தியர் பெயரையும் சொல்கிறான். ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் செய்த யாகங்கள் உலகப் பிரசித்தம்.

 

இந்தோநேஷியாவின் காட்டுக்குள் கிடைத்த மன்னன் 1700 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தை ஒட்டி- வாழ்ந்தவன். பாண்டவர் போலவே ‘வர்மன்’ பட்டத்தை உடையவன் ஒருவே ளை தமிழனாக இருக்கலாம் என்பதற்காகத்தான் மேற்சொன்ன பீடிகை போட்டேன்.

 

 

மூலவர்மன் கல்வெட்டு அழகான ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அவைதான் இந்தோநேஷியாவில் கிடைத்த பழைய கல்வெட்டுகள். முதல் இரண்டு கல்வெட்டுகளில் மூலவர்மன், அவனது தந்தை அஸ்வவர்மன், அவனது தந்தை குண்டுங்கா (குண துங்கன் என்பது மருவியது போலும்!) ஆகியோர் சிறப்பு பட்டங்களோடு குறிப்பிடப்படுகின்றனர். பின்னர் யாகத்தில் பிராஹ்மணர்களுக்கு அவன் அளித்த தான தருமங்கள் சொல்லப்படுகின்றன; யாகத்தின் போது பிரதான யஜமானன் (யாக புருஷன்) இந்தத் தூணை நிறுவியதாகவும் உள்ளது.

மூன்றாவது கல்வெட்டில் எல்லோரும், மூலவர்மனின்  தான தருமங்களைக் கேளுங்கள்– அவன்  நிலங்கள், பசுமாடுகள், அற்புத மரம் (கற்பக வ்ருக்ஷம் அல்லது சோம லதை) பிராஹ்மணர்களுக்குத் தானம் செய்தான். இவ்வாறு பலவகை அறச் செயல்களைப் புரிந்ததற்காக இந்த யூபத் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன என்று பொறிக்கப்பட்டுள்ளது.

 

அருகிலுள்ள ஜாவா தீவில் இதே போல 1700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு பிராஹ்மணர்களுக்கு 1000 பசுக்கள் தானம் அளித்ததாக எழுதப்பட்டுள்ளது.

 

 

இதை வேறு இரண்டு கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்; கன்யாகுமரியில் உள்ள வீர ராஜேந்திரன் என்ற சோழர் கல்வெட்டு அவனது முன்னோன் ஒருவன் 40,000 பிராஹ்மணர்களை அழைத்து வந்து காவிரிக் கரையில் குடி அமர்த்தினான் என்கிறது. காவிரிக் கரையில் பிராஹ்மணர்கள் இல்லாத குறையைப் போக்க ஆர்யாவர்த்தத்தில் இருந்து 40,000 பிராஹ்மணர்களை அழை த்து வந்தான் என்று கோபிநாத ராவ் புத்தகத்தில் (1926) விளம்புகிறார்.

 

வியட்நாமில் கிடைத்த பழைய கல்வெட்டு ஸ்ரீ மாறன் என்பதாகும். இது 1800 ஆண்டுகளுக்கு முந்தையது. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பற்றி எழுதினேன். திருமாறன் என்ற பாண்டியன் பெயரை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதுகையில் ஸ்ரீமாறன் ஆகும்.

 

 

ஆக வியட்நாம் முதல் இந்தோநேஷியாவரை ஆயிரம் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் உள்ளன. ஒரு வரிக் கல்வெட்டிலிருந்து மிக மிக நீண்ட பாடல்கள் வரையுள்ள கல்வெட்டுகள் இவை.

 

இது தவிர சிலப்பதிகாரத்திலும் நமக்குச் சான்று உளது. எல்லோர் முன்னிலையிலும் இமயம் வென்ற செங்குட்டுவனை மாடல மறையோன் என்ற பிராஹ்மணன் குறை சொல்லுகிறான். “மன்னனே! போதும் போதும் நீ பெற்ற போர் வெற்றிகள்; போகும் வழிக்குப் புண்ணியம் தேடு; யாக யக்ஞங்களைச் செய்” என்கிறான். இப்படிக் கடிந்து கொண்ட பிராஹ்மணனை தண்டிக்காமல் எடைக்கு எடை தங்கம் கொடுத்து உடனே யாக யக்ஞங்கள் செய்ய உத்தவிட்டதாக இளங்கோ இயம்புவார்.

 

துருக்கி நாடு முதல் இந்தோநேஷியாவரை இப்படி ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் இருப்பதும் கோவலன் ஒரு பார்ப்பனப் பெண்ணின் ஸம்ஸ்க்ருத ஓலையைப் படித்ததாக சிலப்பதிகாரம் செப்புவதும் ஸம்ஸ்க்ருதத்தின் உலக வீச்சைக் காட்டுகிறது. அலெக்ஸாண்டர் போல மக்களைக் கொன்று குவித்து கிரேக்க மொழிக் கல்வெட்டுகளை நிறுவ வைத்ததைவிட அமைதியான கலாச்சார, வணிக வீச்சின் மூலம் உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைப் பரவச் செய்தது மற்றொரு உலக அதிசயம் ஆகும். அது மட்டுமல்லாமல் கிரேக்க  மொழியில் ஹோமர்,  முதல் கிரேக்க நூலை எழுதுவதற்கு முன்னரே — அதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே– துருக்கியில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களும் குதிரை நூலும் இருப்பது உலக மஹா அதிசயம் ஆகும்.

 

–சுபம்–

 

வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக் கல்யாணம் கட்டலாம்?- மநு (Post No.5085)

Written by london swaminathan

 

Date: 7 JUNE 2018

 

Time uploaded in London –  22-14  (British Summer Time)

 

Post No. 5085

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு சொல்லும் விநோதச் செய்திகள்

மநு நீதி நூல்- Part 18

Third Chapter begins

வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக்  கல்யாணம் கட்டலாம்?- மநு (Post No.5085)

 

3-1.மூன்று வேதங்களையும் படிப்போர் 36 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகள் அல்லது 9 ஆண்டுகள் அல்லது வேதத்தின் ஒரு கிளையை (ஷாகா) முடிக்கும் வரை பயிலலாம்.

3-2.மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வேதத்தைப் பயின்ற பின்னர் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்கவும்

3-3.வேதம் பயின்று முடித்தவனை சந்தனம், மலர் மாலை, மதுபர்க்கம் (பால்+தேன்), பசு தானம் கொடுத்து மரியாதை செய்க

3-4.இந்த பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் அழகான பெண்ணை மணக்கலாம்.

3-5. மதச் சடங்குகளைச் செய்யவும் பிரஜா உற்பத்திக்காகவும் தன் கோத்ரத்தில் சேராத தாயின் ஏழு தலைமுறைகளில் தொடர்பில்லாத ஒரு பெண்ணை கல்யாணம் கட்டு.  இது   மூன்று வருணத்தாருக்கும் பொருந்தும்.

 

 

3-6. ஆடு மாடு, தன, தான்யம் மிகுந்த குடும்பத்தில் பெண் எடு; ஆயினும் பின்வரும் பத்து குலத்தைத் தவிர்.

 

3-7.ஆண் குழந்தைகளே பெறாத குடும்பம், சடங்குகளைப் பின்பற்றாதோர், வேதம் ஓதாதோர், உடல் முழுதும் முடியுடையோர், க்ஷயரோகம், வயிற்று வலி, மூல வியாதி உடையோர், பெரு வியாதி, வெண் குஷ்டம் உடையோர், யானைக் காலர், குடும்பத்தில் பெண் எடுக்காதே.

3-8.செம்பட்டை முடி, சிவப்புக் கண்கள், உடல் முடியுடையோள், நோயாளி, கடும் சொல் உடைய பெண்கள் வேண்டாம்

3-9. நட்சத்திரம், நதி, மலை, மரம், அடிமைப் பெண்கள் , ஈன ஜாதி, பறவை, பாம்பு ஆகிய பெயர்களை உடைய பெண்கள் வேண்டாம்.

யார், யாரை மணக்கலாம்?

3-10. அழகான, நற் பெயர் உடைய, மென் குரல், மென் முடி, வெண் பற்கள், இன் சொல்லினள், அன்ன நடை உடைய பெண்கள் நல்லது

 

3-11.சஹோதரன் இல்லாதவள், தகப்பன் பெயர் தெரியாதவள் வேண்டாம். அவர்களுக்குப் பிறப்போர் புத்ரிகா, புத்ரன் ஆவர். பின்னொரு அத்யாயத்தில் விளக்கம் உளது.

3-12.தனது வருணப் பெண்ணை மணப்பது சிறப்பு; ஆயினும் இரண்டாம் கல்யாணம் செய்வதாயின் பின்வரும் கட்டளைகளை மனதிற் கொள்க

3-13. நாலாம் வருணத்தவன் (சூத்திரன்) தனது வருணத்திலும் வைஸ்யன் தனது இனம்+ நாலாம் வருணத்திலும், க்ஷத்ரியன் மற்ற இரு வருணத்திலும் பிராஹ்மணன் நால் வருணத்திலும் மணக்கலாம்.

3-14 . அந்தணனுக்கும் அரசனுக்கும் சொந்த இனத்தில் பெண் கிடைக்காவிடில் முதல் மணமே நாலாம் வருண பெண்ணைக் கூட மணக்கலாம்.

3-15. தாழ்ந்த ஜாதியில் மணப்பவர்கள், பிறக்கும் குழந்தைகளையும் நாலாம் வருணத்துக்கு இழுத்துவிடுவர்.

3-16. நாலாம் வருணத்தவனை மணப்பவன் பதிதன் என்று அத்ரி, சௌனகர், கௌதமன் பிருகு முதலியோர் கூறுவர்.

 

3-17.  தாழ்ந்தகுலப் பெண்ணுடன் படுக்கும் அந்தணன், நரகத்தை அடைவான். பிறக்கும் பிள்ளையும் பிராஹ்மணன் இல்லை.

3-18. அப்படிப் பிறக்கும் பிள்ளை கொடுக்கும் பிண்டத்தை பித்ருக்கள், தேவர்கள் ஏற்க மாட்டார்கள்.

3-19. தாழ் குலப் பெண்ணின் அதர பானமும் மூச்சுக் காற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாவத்தை உண்டாக்கும்.

3-20. அடுத்த ஸ்லோகத்தில் இம்மை மறுமைப் பயன்களை நல்கும் எட்டுவகைத் திருமணங்கள் பற்றி இயம்புவேன்

 

எனது கருத்துகள்

  1. தமிழ் இலக்கியத்தில் நக்கீரர் 48 ஆண்டுகள் வேதம் பயின்றதாக உரைகாரர் உரைப்பர். ஒரு முனிவர் வேதம் எல்லாம் படிக்க 300 ஆண்டுகள் போதவில்லை என்றும் நாலாவது ஜன்மத்தில் பயின்றாலும் ‘கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு’ என்று இந்திரன் சொன்னதாகவும் முன் ஒரு கட்டுரையில் கண்டோம். இப்போதுள்ள வேதங்களையே எவரும் முழுக்க கற்க இயலாது; அழிந்து போன வேதங்களைக் கணக்கிற் கொண்டால் பல ஜன்மங்களும் போதாது.

 

2.இந்த 36 ஆண்டு, 48 ஆண்டு மனப்பாடப் படிப்பு இந்தியாவின் தனிச் சிறப்பாகும் இத்தகைய விஷயங்கள் வேறு பண்பாட்டில் இல்லாததால், ஆரிய-திராவிட வாதம் கட்டுக்கதை என்பது வெள்ளி டை மலை என விளங்கும். வெளிநாட்டில் இருந்து இந்துக்கள் வரவில்லை. இந்த நாட்டில் தோன்றிய பண்பாடே காரணம்.

 

  1. பிராஹ்மணர்கள் நால் வ மணக்கலாம் என்பதே புரட்சிகரமான கருத்து. மற்ற வர்ந்த்தாரும் ஏனையோரை மணக்கலாம் என்பது தற்காலத்துக் கருத்.து

4.மநு, மற்ற ஸ்ம்ருதிகாரர்களின்  கருத்துகளையும் மொழிகிறார். அகவே அக்காலத்திலேயே பல ஸ்ம்ருதிகள் இருந்ததை அறிகிறோம் அக்காலத்தில் கலப்பு மணம் இருந்ததை மநுவும் கோடிட்டுக் காட்டுகிறார். மக்களுக்குப் பல ஸ்ம்ருதிகளைப் பின்பற்றும் உரிமை இருக்கையில் மநு ஸ்ம்ருதியை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகூறுவதில் என்ன பொருள் உளது?

 

5.யாரை மணந்து கொள்ளலாம் என்பதில் கோத்ர முறை வருகிறது; ஒரே கோத்ரத்தில் பிறந்தவரை மணக்கக் கூடாது, நெருங்கிய உறவினரை மணக்கக் கூடாது  என்பதெல்லாம் இன்றைய விஞ்ஞான உலத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

 

  1. நட்சத்திரங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்களை பெண்களுக்குச் சூட்டக் கூட்டாது என்பது விநோதமான கருத்து . இன்றும் நட்சத்திரப் பெயர்களான ரேவதி, அஸ்வினீ, பரணி, கிருத்திகா, ஆருத்ரா, கங்கா, நர்மதா காவேரி, ஸரஸ்வதீ என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெரும்பாலோர் பெயர்களில் காணலாம். இந்துக்கள் எல்லா இயற்கைப் பொருட்களுக்கும் பெண்களின் பெயர்களையே சூட்டுவர். இதிலிருந்து மநு மிகப் பழங்காலத்தவர் என்பது தெளிவாகிறது

 

 

7.இத்தகைய பெயர் சூட்டும் முறையும் ஏனைய பண்பாட்டில் இல்லாததால் இந்துகள் அனைவரும் இங்கு தோன்றி ஒரே கலாசாரத்தை உருவாக்கினர் என்பது பொருத்தமாகும்.

8.வியாதிகள் பற்றி மநு எச்சரிப்பது ஆரோக்கிய வாழ்வை விரும்புவோரின் பட்டியலில் மநுவும் ஒருவர் என்பது புலனாகிறது.

 

9.மூன்று வேதங்களைப் பயின்றோர் த்ரிவேதி;

நான்கு வேதங்களைப் பயின்றோர் சதுர்வேதி;

இரண்டு வேதங்களைப் பயின்றோர்  த்விவேதி என அறியப்பட்டனர். ஒரு வேதத்தைப் பயின்றோர் கூட அரிதாகி வரும் நாளில் பெயரளவுக்கே த்ரிவேதி,சத்ர்வேதி முதலிய பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அத்தகையோர் ஒருகாலத்தில் இருந்தனர்.

  1. பெண்களின் வருணனையில் அன்ன நடை யானை நடை முதலியன சங்கத் தமி ழ் இலக்கியத்தில் இருக்கிறது ஆக இமயம் முதல் குமரி வரை சிந்தனை ஒன்றே. அதுமட்டுமல்ல இக்கருத்துகள் வேறு கலாசாரத்தில் இல்லாததால் பாரத கலாசாரம் இங்கே தோன்றி இங்கே வளர்ந்தது என்பதையும் அறிக.

தொடரும்……………

 

தமிழர் தெய்வம் மணிமேகலையும் மணிபத்ராவும் (Post No.5079)

மணிபத்ரா

 

Written by London Swaminathan 

 

 

Date: 5 JUNE 2018

 

 

Time uploaded in London – 19-31

 

Post No. 5079

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

தமிழர்களின் ஐம்பெரும் காப்பியங்களில் தனித்து நிற்பது ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிலப்பதிகாரம் ஆகும்; அதன் தொடர்கதை மணிமேகலை என்னும் காப்பியத்தில் உள்ளதால் அவைகளை இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர் தமிழர்.

யார் இந்த மணிமேகலை?

மாதவியின் மகளுக்கு மணிமேகலை என்று பெயர்; மாதவி , மணிமேகலை என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். மணிமேகலை என்பது கடல் வணிகரின் பாதுகாப்புத் தெய்வம் ஆகும். இந்த தெய்வம் தென் இந்திய வணிகர்களின் பெண் தெய்வம். வடக்கிலுள்ள வணிகர்கள் மணிபத்ரா என்ற யக்ஷனை இது போலப் பயணிகளின் தெய்வமாகக் கருதினர். 2300 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாதகக் கதைகளில் மணிபத்ரா, மணிமேகலை போன்ற தெய்வங்களின் கதைகள் வருகின்றன. புத்த மதத்தினர் ராமாயண, மஹாபாரத, பஞ்ச தந்திர, ஹிதோபதேச மற்றும் நாட்டுப்புற கதைகளை எல்லாம் புத்தர் பெயரில் ஏற்றி பௌத்த ஜாதகக் கதைகள் என்று பாலி மொழியில் எழுதி வைத்தனர். இதுவும் நன் மையில் முடிந்தது. ஸமுத்ர வாணிஜ (வணிகர்) கதை, மஹா ஜனக கதை முதலியன மூலம்  அக்கால கடல் வணிகத்தை நாம் அறிய முடிகிறது.

 

மஹா ஜனக ஜாதகத்தில் ஒரு உரையாடல் வருகிறது:–

 

மஹா ஜனகன் என்பவன் சென்ற கப்பல்  உடைந்து போய் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மூச்சு இளைக்க நீந்திக் கொண்டிருந்தான்.

அப்பொழுது மணிமேகாலா தேவி அவனைப் பார்த்தாள்; இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்:—

 

மணிமேகலை:-

யாரையா நீ? இந்தப் பரந்த பெருங்கடலில் பயனின்றி கைகளை அடித்துகொண்டு தப்பிக்கலாம் என்ற நப்பாசையுடன் போகிறாயே நீ யார்? யாரை நம்பி இப்படி உயிர் பிழைக்கலாமென்ற நம்பிக்கையுடன் போகிறாய்?

 

மஹா ஜனகன்:

ஓ, தேவதையே! எவன் ஒருவன் ஆனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்வது அல்லவோ கடமை; எனக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரை தென் படவில்லை என்பது உண்மைதான்; ஆயினும் கரையை அடைய என் பயணத்தைத் தொடர்வேன்.

மணிமேகலை:-

கடலில் உன் தைரியத்தைக் காட்டுவதில் பயன் ஒன்றும் இல்லை, அன்பனே! கரையை அடைவதற்கு முன்பே நீ அழியப் போகிறாயே!

மஹா ஜனகன்:

 

ஓ கடவுளே! நீ இப்படிச் சொல்லலாமா? நான் அழிந்தாலும் கூட எனக்கு ஏற்படக்கூடிய அவப் பெயரை நான் தவிர்க்கலாமே. என்னைப் போல முயற்சி செய்பவன், பின்னர் வருத்தப்படுவதற்கு எதுவும் இராது.

 

மணிமேகலை:-

வெற்றி பெறாத முயற்சியில் என்ன பலன்? அதுவும் வெற்றி என்பது கண்ணுக்கு எட்டிய தொலைவில் காணவில்லையே! மரணம் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்ன பயன்?

மஹா ஜனகன்:

பார்! என் தோழர்கள் அனைவரும் மூழ்கி இறந்து விட்டனர்; ஆயினும் நான் மட்டும் நீந்துகிறேன் பார்; என் உடலில் சக்தி உள்ள வரை நான் நீந்துவேன். நான் கடலைக் கடக்க முயற்சி செய்வேன்.”

மணிமேகலையின் கோவில் காவேரி முகத்வாரத்தில் இருந்தது. குமரி முதல் கடாரம் வரை அவள் வணங்கப்பட்டாள்.

இந்த உரையாடலானது, அந்தக் கால மாலுமிகளின் நம்பிக்கையையும், விடா முயற்சியையும், நற் பெயர் எடுக்க வேண்டும் என்ற பேரவாவையும் காட்டுகிறது

 

வடக்கில் மணிபத்ரா என்ற யக்ஷ்னை இதே போல வணிகர்கள் வழிபடுவர். மதுரா முதலிய இடங்களில் அவாது சிலைகளும் கோவில்களும் இருந்தன. இப்பொழுது மிகப்பெரிய மணிபத்ரா சிலை மதுரா ஜில்லாவில் (உ.பி) இருக்கிறது. குவாலியர் பகுதியில் ஒரு காலத்தில் பெரிய அளவில் மணிபத்ரா வழிபாடு நடந்து வந்தது.

ஸமுத்ர வணிக ஜாதகத்தில் உள்ள ஒரு கதையும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் பயணம் என்பது எவ்வளவு சர்வ சாதாரணமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.

இதோ அந்தக் கதை:

ஒரு நகரத்தில் தச்சர்கள் அனைவரும் சேர்ந்து மரச்சாமான்கள் செய்து விற்பதற்காக கடன் வாங்கினர். ஆனால் அவர்கள் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேறவில்லை; கடன் கொடுத்தவர்களோ நச்சரிக்கத் துவங்கினர். தச்சர்கள் அனைவரும் ஒரு திட்டம் போட்டனர்; நாம் எல்லோரும் ஒரு கப்பல் செய்வோம்; திரை கடல் ஓடித் திரவியம் கொணர்வோம் என்றனர். அந்த திட்டப்படியே ஒரு நாள் கப்பலில் புறப்பட்டனர். அவர்களுடைய அதிர்ஷ்டம் காற்றும் கடலும் அவர்களுக்கு உறுதுணையாக நின்றன.  ஒரு அழகான தீவுக்குச் சென்றனர். தென்னை மரங்களும் பழ மரங்களும் காய்த்துத் தொங்கின. அங்கு இவர்களுக்கு முன்னமே வேறு ஒருவன் உடைந்த கப்பலில் இருந்து அங்கு நீந்தி வந்து வசித்தான்; இவர்களைப் பார்த்தவுடன்

“ஆஹா, என்ன  ஆனந்தம்

உழைக்காமலேயே வாழும் இடம் இதுதான்.

நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் இங்கு  வர வேண்டாம். எனது தாய்நாட்டைவிட இதுதான் இன்பம் தருகிறது”.

இந்தப் பாடல் கிரேக்க புலவன் ஹோமர் எழுதிய ஆடிஸி காவியத்தில் வரும் மாயா லோக மனிதர்கள் போல இருக்கிறது. அவர்கள் தேன் குடித்து உயிர் வாழ்ந்தனர்;  ஆடிஸியஸை அழைத்த போது அந்த சோம்பேறித் தனமான சுக போகம் வேண் டாம் என்றும் வீர தீரச் செயல் செய்யவே விருப்பம் என்றும் பதில் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான்.  அதை நினைவு படுத்துகிறது இந்த ஜாதக் கதை.

 

ஆகவே பழங்கால வணிகரின் வாழ்க்கையை அறிய இந்த ஜாதக் கதைகளும் ஏனைய நூல்களும் உதவுகின்றன; கடற்பயணம் என்பதும் கனவுலகம் போன்ற வெளிநாடுகளும் எல்லோரும் அறிந்த விஷய மாக இருந்தது.

-சுபம்–

கிரேக்க நாட்டில் தீக்குளித்த தமிழ் சந்யாஸி (Post No.5073)

Image of Augustus, Roman Emperor

 

Written by London Swaminathan 

 

 

Date: 3 JUNE 2018

 

 

Time uploaded in London – 20-59

 

Post No. 5073

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ரோமானிய மன்னன் அகஸ்டஸ் (கி.மு/கி.பி. முதல் நூற்றாண்டு)  ரோமானிய சாம்ராஜ்யத்தை ஆண்டபோது ‘பாண்டியோன்’ என்னும் மன்னன் அங்கே ஒரு தூதனை அனுப்பினான். அவனுடன் ஒரு சந்யாஸி சென்றார். அவருடைய பெயர்  ஜார்மனோசேகஸ் என்று கிரேக்க எழுத்தாளர்கள் எழுதி வைத்துள்ளனர். இவர்கள் சந்திப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு.19 வாக்கில் நடந்தது. இதற்குப் பின்னர் அந்த சந்யாஸி கிரேக்க நாட்டின் தலநகரான ஏதென்ஸ் மாநகரில் எல்லோர் முன்னிலையிலும் பஹிரங்கமாக தீக்குளித்தார். இதைக் கண்டு ஏதென்ஸ் மாநகரமே அதிசயித்து நின்றது. ஊரெங்கும் அதே பேச்சு.

 

இப்படி தமிழ்நாட்டு பாண்டிய மன்னனின் தூதனுடன் சென்றவர் பெயர் ஜார்மனோசேகஸ் என்பதை சிரமனாச்சார்யா என்று மாற்றி இவர் புத்தமதத்தினராக இருக்கக்கூடும் என்று  ராலின்ஸன், கென்னடி போன்றோர் பிதற்றி வைத்தனர். இதைச் சற்று ஆராய்வோம்.

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னனின் தூதருடன் வடநாட்டு சந்யாஸி போக வாய்ப்புகள் மிகவும் குறைவு. காரணங்கள் என்ன?

  1. நமக்குத் தெரிந்தவரை புத்த மத, சமண மத சந்யாஸிகள் எவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இல்லை. ஏனெனில் இது இந்துக்களின் வழக்கம்.

 

2.கபிலர் என்ற பிராஹ்மணப் புலவன்தான் தமிழ் இலக்கியத்தில் அதிகமான பாடல்களை யாத்தவர். அவர் பாரி மன்னனின் இரு புதல்விகளையும் கல்யாணம் கட்டிக் கொடுத்த பின்னர் திருக்கோவிலூரில் தீக்குளித்தார். இன்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கே சென்று கபிலர் பாறையில் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

 

இந்து சாமியார்கள், சாது  சந்யாஸிகள் வாழ்க்கையின் குறிக்கோள் முடிந்தவுடன் இப்படித் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வது ராமாயண, மஹாபாரத கால வழக்கம்.

 

  1. ராமனைச் சந்தித்த சபரி என்ற வேடுவக் கிழவி உன்னை சந்தித்ததால் வாழ்க்கையின் பயனை எய்திவிட்டேன் என்று சொல்லி தீக்குளித்து மோட்சம் எய்தினாள்

 

4.சரபங்கர் என்ற முனிவரும் வேதவதியும் இவ்வாறு தீப்புகுந்ததை ராமாயணத்தில் காண்கிறோம்.

5.இதே போல ஆதிசங்கரர் ஆர்வத்தோடு வாதாட வந்த குமாரில பட்டர், எரியும் உமிக்கு நடுவில் தன் உடலை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கருகி இறந்த சம்பவத்தையும் நாம் அறிவோம். “நீங்கள் நான் உயிர்த் தியாகம் செய்யும் தருணத்தில் வந்து விட்டீர்கள் ஆயினும் என் சிஷ்யரிடம் வாதாடுங்கள்” என்று சொல்லி சங்கரரை அனுப்பி வைத்தார்.  அத்தகைய சாது சந்யாஸிகளுக்கு உடல் என்பது அழுக்கான ஆடை போல. அதைத் தூக்கி எறிவதில் எந்தக் கஷ்டமும் இல்லை.

 

6.வெளி நாடுகளுக்குச் சென்று கலாசாரத்தைப் பரப்பியது இந்துக்கள் என்பதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் 1500 ஆண்டுகளுக்கு நிலவிய இந்துக் கலாசாரம் காட்டுகிறது; அதை நிறுவியவர்கள் கௌன்டின்யன், அகஸ்தியர் என்ற இரண்டு பிராஹ்மணர்கள் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் காட்டி நிற்கின்றன. ஆக பாண்டிய மன்னருடன் சென்றவர் இந்து சாமியாரே என்பதற்கு அதுவும் அத்தாட்சி.

 

7.ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தோபர் கொலம்பஸ் போன்ற மாலுமிகள் கொள்ளைக்காரர்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவக் கொலைகாரர்களும் கூட; சென்ற நாடுகளில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அங்குள்ள தங்கம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். இவர்கள் அங்கு செல்லும் முன் ஒரு இந்து சாது அங்கே சென்று அவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பித்தார்.  1200 ஆண்டுகளுக்கு முன்னர் பகிரங்கமாகத் தீக்குளித்தார். அப்படி உயிர்த் தியாகம் செய்யும் முன்பு ‘’நான் திரும்பி வருவேன்’’ என்று அறிவித்தார்.  இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அங்கே சென்ற கிறிஸ்தவர்களைப் பார்த்து அவர்கள்தான் ஆரூடம் சொன்ன இந்து சந்யாஸி என்று கருதி காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கிறிஸ்தவக் கொலைகாரர்களோ அவர்களைக் கொன்று அங்குள்ள நூலகங்களை எரித்து, தங்கத்தை எல்லாம் ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். எஞ்சிய சில தஸ்தாவேஜுகளில் இருந்து நமக்கு இந்தத்  தகவலகள் கிடைத்தன.

ஆகவே மாயன், கிரேக்க எழுத்தாளர்கள் மூலம் நாம் அறிவது இந்து சந்யாஸிகள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வர் என்பதாகும்.

 

ராமாயண, மஹாபாரத்திலிருந்தும் தமிழ் இலக்கியத்திலிருந்தும் நாம் அறிவது வாழ்க்கையின் குறிக்கோள் முடிந்த இந்துக்கள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வர் என்பதாகும். குமாரிலபட்டர் போன்றோரும் இவ்வாறு உயிர் துறப்பது அல்லது வடக்கிருந்து உயிர் துறப்பதை நாம் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் இருந்தும் அறிகிறோம். பாண்டிய மன்னனே தூதனை அனுப்பியது இந்த இந்து சந்யாஸியை அறிமுகப்படுத்தத்தானோ!!!

-சுபம்–

அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும் (Post 5061)

Written by London Swaminathan 

 

Date: 30 May 2018

 

Time uploaded in London – 22-18

 

Post No. 5061

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கடந்த சில கட்டுரைகளில் ரிக் வேத, பாகவத, புத்தமத, சமண மத நூல்களில் உள்ள ‘தண்ணீர் மேல் நடக்கும்’ அதிசயங்களைப் பார்த்தோம். இதே போல பார்ஸி மதத்திலும் ஒரு கதை உண்டு. அதைவிட அதிசயம் என்ன வென்றால் மாமன்னன் அலெக்ஸாண்டரையும் அதிசய புருஷர் ஆக்கிவிட்டனர் கிரேக்க எழுத்தாளர்கள். அலெக்ஸாண்டரும் இப்படிச் சில அதிசயங்கள் செய்ததாக கதை எழுதி (கட்டி) விட்டனர்.

முதலில் பாரஸீக நாட்டில் தோன்றிய பார்ஸி மதத் தலைவர் ஜொராஸ்டர் (ஜராதுஷ்ட்ரா) பற்றிக் காண்போம்.

ஜொராஸ்டர், தனது குடும்பத்துடன் அராக்ஸஸ் நதிக்கரைக்கு வந்தார். வெள்ளத்தில் இறங்கி துணிமணிகள் நனைந்து போனால் எல்லோரும் பார்த்து சிரிப்பாளர்களே என்று தயங்கினார். பின்னர் நீர் மீது நடந்து சென்று அக்கரைக்குப் போய்விட்டார். ஆனால் இக்கதை பன்னிரெண்டாம்  நூற்றாண்டில்தான எழுதப்பட்டது.

 

இதற்கு முன்னுள்ள கீழே குறிப்பிடப்படும் எல்லா கிரேக்க எழுத்தாளர்களும் முதல் இரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தவர்களே.

அர்ரியன் என்பவர் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தில் வாடைக் காற்று வீசும்போது மட்டுமே நீர்வழியைக் கடக்க இயலும் ஆனால் அலெக்ஸாண்டருக்காக திடீரென தென்றல் காற்று  வீசி வழிவிட்டது. இதற்கு தெய்வத் தலையீடே காரணம் என்பார்.

 

ப்ளூடார்ச் என்பாரும் இந்த  வரலாற்றை மீனேந்த்திரன் (மெனாண்டர்) சொல்வதாக எழுதியுள்ளார்

 

சீஸரின் யவனக் கடல் சாகசத்தை விளக்கும்போது அப்பியன் என்ற எழுத்தாளரும் இதைக் குறிப்பிடுவார்.

 

அலெக்ஸாண்டரின் படைகள் நாள் முழுதும் நதிகளைக் கடந்த போதிலும் தண்ணீர் இடுப்பளவே இருந்ததாக ஸ்ட்றாபோ கூறுகிறார்.

 

காலிஸ்தெனிஸ் என்பவர் இவர்கள் எல்லோருக்கும் ஒரு அடி மேல் சென்றுவிட்டார். அலெக்ஸாண்டருக்காக் கடல் திறந்து வழி ஏற்பட்டதாவும், அத்தோடு நில்லாமல் கடல் அலைகள் மேலும் கீழும் எழுந்து அலெக்ஸாண்டருக்கு வணக்கம் செலுத்தியதாகவும்  கூறுகிறார். இது தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போலத் தற்குறிப்பு ஏற்ற அணியாகும்; இயற்கையில் நாள்தோறும்  நடக்கும் நிகச்சிகளை புலவர்கள் இப்படிப் பயன்படுத்துவர். நாம் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்ள  வேண்டும்.

ரோமானிய வரலாற்று எழுத்தாளர் ஜோஸபஸ்,  அலெக்ஸாண்டரின் அற்புதத்தை விவரித்து விட்டு அது மோஸஸ் தெய்வீக சக்தியால் செங்கடலைக் கடந்தது போல என்று எழுதியுள்ளார்

 

இறுதியாக அலெக்ஸாண்டர் பற்றி இன்னும் ஒரு சுவையான செய்தியும் உண்டு.

அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னர் , மாறு வேஷத்தில் பாபிலோனில், டேரியஸ் நடத்திய ராஜ விருந்துக்குச் சென்றாராம். அங்கிருந்த ஒரு படைத் தளபதி அவரை அடையாளம் கண்டு மன்னர் டேரியஸிடம் சொன்னவுடன் அலெக்ஸாண்டர்  தப்பித்தோம் பிழைத்தோம்  என்று சிட்டாகப் பறந்து வெளியேறினார். அவரது அதிர்ஷ்டம், அப்போது வாசலில் ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் ஒருவருடைய தீவட்டியைப் பிடுங்கிக் கொண்டு வெளிச்சம் போட்டுக்கொண்டே சென்றாராம்.

அலெக்ஸாண்டரின் குதிரை ஒரு ஆற்றைக் கடந்து சென்று எதிர்க் கரையில் முன்காலை வைக்கவும், நதி உருகத் துவங்கியதாகவும் இதனால் குதிரையின் பின்கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும் அலெக்ஸாண்டர் ஒரே தாவாகத் தாவி தரையில் குதித்துத் தப்பிவிட்டதாகவும் கதைகள் சொல்லும்.

 

-சுபம்–

 

 

யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்! (Post No.5056)

Written by S NAGARAJAN

 

Date: 29 MAY 2018

 

Time uploaded in London –  8-06 am  (British Summer Time)

 

Post No. 5056

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கொங்கு மண்டல சதகம்

யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!

 

ச.நாகராஜன்

 

உலக வரலாறு கண்ட சிறந்த மன்னர்களுள் சோழ மன்னன் கரிகால் சோழனும் ஒருவன். சிறந்த வீரன். நீதிமான். பல சிறந்த வியத்தகு சம்பவங்களைத் தன் வாழ்க்கையில் கொண்டவன்!

 

அவன் புகழை கொங்கு மண்டல சதகம் பாடல் 33 எடுத்துரைக்கிறது.

பாடல் வருமாறு:-

நீர்மை காவிரி நாட்டினை யாண்ட நிருபரினற்

பேருறு வான்கரி காலன் கரந்து பிழைத்ததன்றி

ஏருறு சிங்கா தனமேறக் கையாலெடுத்துமத

வாரணங் கண்டு கொடுபோன துங்கொங்கு மண்டலமே

கொங்கு மண்டல சதகம் – பாடல் 33

பாடலின் பொருள் : சோழ மண்டலத்தை ஆண்ட மன்னர்களுள் திறமை வாய்ந்த மன்னனான கரிகால் சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக மாறு வேடமாக இருந்து பிழைத்ததும், இவனைச் சிங்கதானம் ஏற்ற யானை எடுத்துப் போனதும் கொங்கு மண்டலம் என்பதாகும்.

பாடல் குறிக்கும் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கு ஆதாரமாக இந்தப் பாடல் விளங்குவதால் இது தனியிடத்தைப் பெறுகிறது.

 

இது குறிக்கும் வரலாறு இது தான்:

உறையூரில் அரசு புரிந்து வந்த உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் சோழ மன்னன் அழுந்தூர் வேள்மகளை மணந்தான். கருப்பமுற்று அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் ஒரு முகூர்த்த காலத்தில் பிள்ளை பிறப்பானாயின் அவன் சக்கரவர்த்தி ஆவான் என்பதைச் சொல்லக் கேட்ட அரசி, தன்னைத் தலைகீழாகக் கட்டும் படி கூறி நல்ல ஹோரை வந்தவுடன் இறங்கி ஆண்மகனைப் பிரசவித்தாள்.

இளம் பருவத்திலேயே குழந்தையின் தந்தை இறந்தான். உள்நாட்டுக் குழப்பமும், வெளிநாட்டிலிருந்து வந்த சண்டையும் அவனை அரியணை ஏறச் செய்யவில்லை. பிழைப்பதே அரிதாக இருந்தது. மாறுவேடம் பூண்ட இளவரசன் கொங்கு நாட்டில் புகுந்து ஊர் ஊராய்த் திரிந்து வாழ்ந்தான்.

இதற்கிடையில் உறையூரில் சிங்காதனம் ஏறத் தக்க ஒருவனைத் தேடவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது. அக்கால வழக்கப்படி பட்டத்து யானையை விடுவதென்று தீர்மானித்து அதன்படியே யானையை கழுமலத்திலிருந்து கட்டவிழ்த்து அனுப்பி அதன் பின்னால் அனைவரும் சென்றனர்.

 

யானை கருவூர் சென்றது.அங்கிருந்த கரிகாலனைத் தன் பிடரி மீது தூக்கி வைத்துக் கொண்டு திரும்பியது.

கரிகாலன் அரசனாக்கப்பட்டான். ஆனால் இது பொறாத தாயத்தார் (உறவினர்) அவனைச் சிறைப்படுத்தினர். அது மட்டுமின்றி சிறைக்குத் தீயும் வைத்தனர். அந்த நெருப்பையும் மீறி அவன் சிறையிலிருந்து தப்பி வந்தான். தனது மாமன் இரும்பிடர்த்தலையாரின் துணையைப் பெற்று பகைவர்களை வென்று அரியணை ஏறினான்.

சிறையில் தீ எரிந்த போது அந்த நெருப்பால் கருகிய காலைப் பெற்றதால் கரிகாலன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.

கரிகாலனின் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 100 என்று நிச்சயிக்கின்றனர். அதாவது  2118 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகச் செங்கோலோச்சியவன் கரிகாலன்!

 

இவனைப் பற்றி பழமொழி கூறுகையில்.

“கழுமலத்தில் யாத்த களிறுங் கருவூர்

விழுமியோன் மேற்சென் றதனால்” – பழமொழி

என்று கூறுகிறது.

பழமொழியின் இன்னொரு பாடல் இது:-

 

“சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்று – கடைக்கால்

செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை

உயிருடையா ரெய்தா வினை”  (பழமொழி)

 

பொருனராற்றுப்படையில் வரும் குறிப்பு இது:-

 

“மூச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்

இச்சகக் கரமே அளந்ததால் – செச்செய்

அரிகான் மேற்றேன் றொடுக்கு மாய்புன னீர்நாடன்

கரிகாலன் கானெருப் புற்று   – (பொருனராற்றுப்படை)

 

திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் திருக்கச்சியேகம்பம் பதிகத்தில் வரும் ஒரு பாடலையும் கீழே பார்ப்போம்:

“விண்ணுளார் மறைகள் வேதம் விரித் தோதுவார்

கண்ணுளார் சழலின் வெல்வார் கரிகாலனை

நண்ணுவார் எழில்கொள் கச்சிநக ரேகம்பத்

தண்ணலா ராடுகின்ற வலங்காரமே”

 

எத்தனை அற்புதமான மன்னன் கரிகாலன்; அவனை ஆதரித்தது கொங்கு மண்டலமே என்கிறது கொங்கு மண்டல சதகம்.

தமிழருக்குப் புகழ் சேர்த்த மன்னன் கரிகாலனைக் கொண்டாடுவோமாக!

***

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 11-14 am (British Summer Time)

 

Post No. 5010

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலு ளெல்லாம்  தலை (குறள் 891)

பொருள்

தாம் எடுத்த காரியத்தை எண்ணியவாறே முடிக்க வல்லாரை இகழாமல் இருப்பது, தம்மைக் காத்துக் கொள்ளும் செயல்களில் மிகவும் முக்கியமானதாகும்.

 

 

விக்ரமாதித்தன் தொடர்பாக சமண மத நூல்களில் ஒரு கதை உண்டு. அவனைப் பற்றிய பல கதைகளில் ஒன்று இது. ஆனால் எல்லாக் கதைகளும் காலப்போக்கில் ஒரே விக்ரமாதித்தன்  தலையில் கட்டிவிடப்பட்டது. விக்ரமாதித்தின் என்றால் ‘வீரத்தில் சூரியன்’ என்று பொருள். வீரத்தில் சூரியனைப் போல ஒளி உள்ளவன், தஹிப்பவன், புகழ் பெற்றவன் என்று பல பொருள் உள்ளதால் ஆதித்தன் (சூரியன்) என்ற பெயர் பல மன்னர்களின் பெயரில்  — சோழ மன்னர்கள் – உள்பட சேர்க்கப்படும்.

 

வேதாளமும் விக்ரமாத்தித்தனும் என்ற கதையில் வரும் மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். அவனைப் பற்றிய ஒரு சுவையான கதை இதோ:

 

உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு கர்த்தபில்லா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது உஜ்ஜையினி நகரில் இருந்த மடத்தில் காலகாசார்யா என்ற சமண மதத் துறவி தலைவராக இருந்தார். அவருக்கு ஸரஸ்வதி என்ற பெயருள்ள அழகான ஸஹோதரி இருந்தாள். அவளை மடத்திலிருந்து மன்னன் கர்த்தபில்லா கடத்திச்  சென்றான். உடனே காலகாசார்யாவுக்கு கோபம் வந்தது.

 

பொதுவாக சமணர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆகவே அவர் முறையாக மன்னனைச் சந்தித்து சகோதரியை விட்டுவிடும் படி இறைஞ்சினார். ஆனால் மன்னனோ, ராவணன், சீதையை விடுதலை செய்வதற்கு மறுத்தது போலவே ஸரஸ்வதியை விடுதலை செய்யவும் மறுத்தான். அத்தோடு காலகாசார்யாவை இகழ்ந்தான். அவமானப்படுத்தினான்.

 

 

காலகாசார்யா, அருகிலுள்ள சக மன்னன் ஒருவனை அணுகி உதவி கேட்டார். அவனிடமோ குறைவான படைகளே இருந்தன. காலகாசார்யா சொன்னார்: நானே பயிற்சி கொடுத்து, நானே தளபதி பதவி ஏற்று படை நடத்துவேன் என்று. அவ்வாறே செய்தார். கர்த்தபில்லாவை வென்று ஸஹோதரியை மீட்டார். அந்த மன்னனையும் மன்னித்தார். மன்னன் காட்டில் சென்று வசித்தான்.  அவனை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனது மகனே விக்ரமாதித்யன். அவன் பெரியவன் ஆனவுடன், பக்கத்து தேசத்தில் படை திரட்டி உஜ்ஜைனி மீது படை எடுத்தான். அவன் வெற்றி பெற்ற வருடத்தில் இருந்து விக்ரம சகாப்தம் என்ற புது ஆண்டுத் தொடக்கம் ஏற்பட்டது.

 

இந்தக் கதைகள் எல்லாம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப் பட்டன. இது தொடர்பான குட்டி ஓவியங்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வரையப்பட்டன. ஆக, எது உண்மை, எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

 

பெரியாரைப் பகைத்தால் ஆட்சிகள் முறியும் என்பது கர்த்தபில்லாவின் கதையில் தெரிகிறது.

காலகாசார்யா கதையைக் கூறும் ஓவியங்கள் பல மியூசியங்களில் உள்ளன. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மியூசியத்திலும் பல குட்டி ஓவியங்கள் இருக்கின்றன.

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

 

உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், பெரிய வேந்தர்களும் ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.

 

–சுபம்–

 

இந்தியாவில் உலகின் உயரமான சிலை! (Post No.5005)

Written by S NAGARAJAN

 

Date: 13 MAY 2018

 

Time uploaded in London –  9-15 AM   (British Summer Time)

 

Post No. 5005

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 11-5-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு பத்தாம் கட்டுரை

இந்தியாவில் அமைக்கப்படும் உலகின் உயரமான சிலை!

.நாகராஜன்

 

 

இந்தியாவின் முதல் துணை பிரதம மந்திரியாக இருந்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு (தோற்றம் 31-10-1875 மறைவு 15-12-1950) குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

 

597 அடி உயரமுள்ள இந்தச் சிலை தான் உலகின் உயரமான சிலை. இந்தச் சிலையை அமைப்பதன் மூலம் இந்தியாவின் கௌரவம் உலக அரங்கில் உயர்கிறது.

 

 

சிலையின் அஸ்திவாரத்தையும் சேர்த்தால் மொத்த உயரம் 790 அடி ஆகும்!

இந்தச் சிலைக்கு ஏகதா சிலை அல்லது யூனிடி சிலை (Unity Statue) என்று பெயர்.

 

இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சிறந்த நிர்வாகியான சர்தார் வல்லபபாய் படேல் இந்தியாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஓரிழையில் பிணைத்து பலமான இந்தியா உருவாகக் காரணமாக இருந்தார்.

 

அவரது எளிய இனிய பேச்சுத் திறன் ஒரு புறமும், தேவைப்பட்டால் ராணுவத்தை இறக்கி ஏக இந்தியாவை உருவாக்குவேன் என்ற அவரது திட மனதும் அவரைச் சாதனையாளராக்கி நமது இந்திய சரித்திரத்தில் அழியா இடம் பெறச் செய்து விட்டது.

இந்தச் சிலையை அமைக்கப் பெரிதும் காரணமாக இருப்பவர் நமது பிரதமர் நரேந்திர மோடி.

 

31-10-2013இல் அவர் குஜராத் முதல் மந்திரியாக் இருந்தபோது இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

 

சர்தார் படேலின் 143வது  பிறந்த தினமான 31-12-2018 அன்று இதைத் திறக்க வேண்டும் என்ற முனைப்புடன் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மைக்கேல் க்ரேவ்ஸ் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன் என்ற நிறுவனம் இதன் வடிவமைப்பு மற்றும் நிர்மாணிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது.

ராம் வி.சுதார் என்பவர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்.

வரலாறு காணும் மிகப் பெரிய கலைப் பொக்கிஷம் என இது இப்பொழுதே புகழப்படுகிறது.

 

குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தீல் சர்தார் சரோவர் அணை அருகே சாது பெட் என்ற பெரிய தீவில் இது அமைக்கப்பட்டு வருகிறது. இதை அமைக்கும் நிபுணர்களில் ஒருவரான ஜேம்ஸ் விஸ்னியூஸ்கி (James Wisneewski)  ‘இந்தச் சிலை முடிந்த பின்னர் இதைப் பார்க்கும அனைவரும் பிரமித்துப் போவர். இந்தச் சிலை தண்ணீரில் நடப்பது போல இருக்கும்’ என்று கூறுகிறார். இந்தத் தீவில் ஒரு மியூஸியம். ஒரு தோட்டம், ஒரு ஹோட்டல், வருவோரை வரவேற்க ஒரு வரவேற்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இடம் பெறும்.

 

சிலை அமைக்கப்படும் இடத்தின் பரப்பளவு சுமார் 20000 சதுர மீட்டர்.

இதைச் சுற்றி 12 கிலோமீட்டருக்கு ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்படும்.

இந்த அற்புதமான சிலையை அமைக்க ஆகும் உத்தேச செலவு ஆரம்பத்தில் 2083 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த பட்ச தொகையாக 2989 கோடி ரூபாயில் இதைக் கட்ட லார்ஸன் அண்ட் ட்யூப்ரோ அமைப்பு ஒத்துக் கொண்டு டெண்டரைப் பெற்றது.

 

இந்தப் பணத்தில் பெரும் பங்கை குஜராத் அரசே ஏற்கிறது.

சிலைக்குத் தேவையான ரெய்ன்ஃபோர்ஸ்ட் சிமெண்ட் மட்டும் 75000 கியூபிக் மீட்டர் ஆகும்.

5700 மெட்ரிக் டன் ஸ்டீல், 185000 டன் ஸ்டீல் கம்பிகள், 22500 டன் வெங்கலத் தகடுகள் சிலை அமைக்கத் தேவைப்படுகிறது.

ஸ்டீலினாலும் ரெய்ன்ஃபோர்ஸ்ட் கான்கிரீட்டினாலும் அமைக்கப்படும் சிலையின் மீது வெண்கலப் பூச்சு இருக்கும்.

 

அறிவியல் வியக்கும் ஒரு சிலையாக அமையும் இந்தச் சிலை இருக்கும் இடத்திற்கும் பிரதான நகர் பகுதிக்கும் இடையே ஒரு பாலமும் அமைக்கப்படும். சிலையை அடைய 5 கிலோ மீட்டர் படகு சவாரி செய்ய வேண்டும்.

 

சிலையில் 500 அடி உயரத்தில் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஒரு மையம் இருக்கும். அங்கு ஒரே சமயத்தில் 200 பேர் இருந்து அழகிய காட்சிகளைக் கண்குளிரக் காணலாம்.

 

இங்கிருந்து சாத்புரா, விந்த்யாசல மலைத் தொடரைப் பார்த்து மகிழலாம்.

உலகின் உயரமான சிலை அமைக்கப்படுவதைப் பார்த்து வியக்கும் வெளிநாட்டின் பிரபல பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இது பற்றிய செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

 

ராஷ்ட்ரீய ஏகதா திவஸ் – தேசிய ஒருமைப்பாடு தினம் – என்று படேலின் பிறந்த தினத்தை இந்திய அரசு 2014ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறது. வருகின்ற 2018, அக்டோபர் 31ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தினமாக அமையப் போகிறது!

 

கடுமையான சோதனைகளை எதிர்த்து இந்தியாவை ஓரிழையில் இணைத்துச் சாதனை புரிந்த சாதனை மனிதருக்குச் சரியான நினைவுச் சின்னமாக அமையும் இது உலகின் அதி உன்னதமான உயரமான சிலை என்ற பெருமையைப் பெறுவது சரிதானே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஃப்ராங்க் நெல்ஸன் கோல் (Frank Nelson Cole 1861-1921) அமெரிக்க கணித சங்கத்தில் நெடுங்காலம் செயலாளராக இருந்தவர். பெரிய கணித மேதை. சங்கத்தின் பத்திரிகையையும் அவரே நிர்வகித்து வந்தார். தீர்க்கவே முடியாத கணித சிக்கல்களை அவர் தீர்த்ததால் அவருக்கு கணித வரலாற்றில் தனிப் பெயர் உண்டு.

1903ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் அமெரிக்க கணித கழகத்தில் ஒரு ஆய்வுப் பேப்பரை கோல் சமர்ப்பிக்க இருந்தார். சிக்கலான பேப்பர் அது. தலைவர் கோலை தனது பேப்பரை சமர்ப்பிக்க வருமாறு அழைத்தார். கோல் அதிகம் பேசாத மனிதர். சில வார்த்தைகளே எப்போதும் பேசுவார். தனது ஆய்வுப் பேப்பரைப் படிப்பதற்கு பதிலாக நேராக போர்டுக்குச் சென்று எழுதலானார். 2 என்ற எண்ணை அதன் 67வது மடங்கிற்குக் கொண்டு சென்று அதை எழுதிய கோல் அதிலிருந்து கவனமாக ஒன்றைக் கழித்தார். பார்ப்பவர்கள் ஆர்வத்துடன் என்னதான் அவர் செய்கிறார் என்று பார்த்த வண்ணம் இருந்தனர்.

பின்னர் கோல் மீக நீண்ட எண்கள் இரண்டை எழுதி அதைப் பெருக்கலானார். எண்கள் இது தான்:  193,707,721 X 761,838,257,287

இதன் விடையும் 2இன் 67வது மடங்கில் வரும் எண்ணில் ஒன்றைக் கழித்தால் வரும் விடையும் ஒன்றாக இருந்தது.

இதைப் பார்த்த கணித அறிஞர்கள் கரகோஷம் செய்து கோலைப் பாராட்டினர். ஆய்வுப் பேப்பரைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.

இதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்ட போது மூன்று வருடங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையாக உழைத்தேன் என்று அவர் பதில் கூறினார்.

அவரது மேதா விலாசம் வெளிப்பட்ட தருணங்களில் இது மகத்தான தருணம்!

***