TAMIL QUIZ- நீங்கள் தமிழ் புத்தகத்தைக் கரைத்துக் குடித்தவரா? (Post No.4762)

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-59 AM

 

Written by London swaminathan

 

Post No. 4762

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

கீழ்கண்ட பாடல் வரிகளை யார் சொன்னது? எங்கே சொன்னார்கள்?

 

 

 

1.நாவினில் வேத முடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள்- தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு  தோளுடையாள்

 

2.காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்

ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே

 

3.நல்லதொரு புதுமைநாட்டில் கண்டேன்; அதனைச் சொல்லவா? சொல்லவா? சொல்லவா?

 

4.ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்

முத்தீப் புரையக் காண் தக இருந்த

கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!

 

 

5.சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய

சக்கரக் கையனே! அச்சோ! அச்சோ!

6.ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ

 

 

7.அறன் எனப்பட்டதே இல்வாழ்கை

 

8.எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்

 

9.கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டென்னை நின்கழற்கன்பனாக்கினாய்

எல்லையில்லை நின்கருணை யெம்பிரான்

 

10.குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

 

 

 

11.தண்டியக்காரரும் சண்டாளர்களும் 
என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட

 

 

 

12.மலையிடைப் பிறவா மணியே என்கோ?

அலையிடைப்பிறவா அமிழ்தே என்கோ?

யாழிடைப் பிறவா இசையே  என்கோ?

 

13.கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே

 

14.தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய்

 

15.கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே

 

 

 

விடைகள் ANSWERS

  1. பாரதி, பாரதியார் பாடல்கள், 2. திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. காளமேகம், தனிப்பாடல்கள், 4. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 5. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 6.கம்பன், கம்ப ராமாயணம், 7. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 8. பாரதிதாசன் பாடல்கள், 9. மாணிக்கவாசகர், திருவாசகம், 10. தற்கால அவ்வையார்,
  2. தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 12. இளங்கோ, சிலப்பதிகாரம், 13. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 14. குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 15. பட்டினத்தார் பாடல், திருவேகம்பமாலை

 

மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

Date: 18 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-43

 

Written by London swaminathan

 

Post No. 4760

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

ஒரு தந்தை தனது மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? எப்போது அவனை நண்பனாக நடத்த வேண்டும் என்று சாணக்கியன் சொல்கிறான்.

 

மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் பேசாத விஷயமே இல்லை. மாபெரும் மகத சாம்ராஜ்யத்தைத் ஸ்தாபித்த, மிகப் பெரிய பொருளாதார நிபுணன் , ராஜ தந்திரி மற்ற விஷயங்கள் பற்றிச் சொல்லுவது அற்புதமானது. அவருக்குப் பின்னர் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவன், திருக்குறளில் செப்பும் கருத்துகள் பல, சாணக்கியனின் கருத்துகளை எதி, ரொலிப்பதாக உள்ளது. இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

 

ஒரு மகனை தந்தையானவர் ஐந்து வயது  வரை கொஞ்சலாம்; பத்து வயது வரை கட்டு திட்டங்களுடன் பராமரிக்கலாம். 16 வயதை அடைந்துவிட்டாலோ மகனை நண்பரைப் போல நடத்த வேண்டும்

லாலயேத் பஞ்ச வர்ஷாணி தச வர்ஷாணி தாடயேத்

ப்ராப்தே து ஷோடசே வர்ஷே புத்ரம் மித்ரவதாசரேத்

சாணக்கிய நீதி 3-18

xxxx

 

வரமேகோ குணீ புத்ரோ நிர்குணைஸ்ச சதைரபி

ஏகஸ்சந்த்ரஸ்தமோ ஹந்தி ந ச தாராகணைரபி

சாணக்கிய நீதி 4-6

குணமற்ற நூறு புதல்வர்களைவிட குணவானாகிய ஒரு பிள்ளை இருப்பது மேல்; இரவு நேரத்தில் ஒரு நிலவு இருளை எல்லாம் போக்கிவிடும்; நிறைய நட்சத்திரங்கள் போக்காது.

 

மூர்க்கஸ்சிராயுர்  ஜாதோபி தஸ்மாத்  ஜாதம்ருதோ வரஹ

ம்ருதஹ ச்ஸ சால்பதுக்காய யாவஜ்ஜீவம் ஜடோ தஹேத்

சாணக்கிய நீதி 4-7

xxx

ஒரு முட்டாள் குழந்தையைப் பெறுவதற்குப் பதிலாகக் குறைப் பிரசவம் ஆனாலும் சரியே. குறைப் பிரசவம் என்பது அந்த நேரத்தில் துக்கத்தைக் கொடுத்துவிட்டு மறைந்து விடும்; முட்டாள் பிள்ளையோ பெற்றோரின் வாழ்நாள் முழுதையும் வீணாக்கி விடும்.

 

 

ஏகோநாபி ஸுபுத்ரேண வித்யாயுக்தேன ஸாதுனா

ஆஹாலாதிதம் குலம் ஸர்வம் யதா சந்த்ரேண சர்வரீ

சாணக்கிய நீதி 3-16

 

ஒரு நல்ல மகன் இருந்தால் அவன் குடும்பம் முழுவதையும் புகழ் அடையச் செய்வான்; ஒரு சந்திரனால் இரவும் முழுதும் ஒளி பெறுவதைப் போல!

xxx

கிம் ஜாதைர்பஹுபிஹி புத்ரைஹி சோக  ஸந்தாபகாரகைஹி

வரமேகஹ குலாலம்பீ யத்ர விஸ்ராம்யதே குலம்

சாணக்கிய நீதி 3-17

 

துக்கத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கும் பல புதல்வர்கள் இருந்து என்ன பயன்? குடும்பம் முழுதும் பயன அடையக்கூடிய ஒரு மகன் போதும்.

xxx

 

இதை மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் வள்ளுவன் எழுதிய பத்து குறட்களுடன் ஒப்பிட்டால் இரு அறிஞர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதைக் காணலாம்; இதோ சில குறட் பாக்கள்:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் 62

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் –70

 

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய் –69

 

தம்மின் தம் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது- 68

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் –67

பொருள் எழுதத் தேவை இல்லாத, எளிமையான,எல்லோருக்கும் தெரிந்த குறள்கள்!

 

இந்து மத புராணங்களில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் புகழ் பெற்ற சிறுவர்கள் உள்ளனர்:

 

 

நட்சத்திர நிலைக்கு உயர்ந்த துருவன்,

ஒரு அணையை கை விரலால் இரவு முழுதும் அடைத்த ஸ்வேதகேது,

யமனையே விரட்டிச் சென்று கேள்வி கேட்ட நஸிகேதஸ்,

புத்திசாலியான என்றும் 16 வயது வாழும் வரம் பெற்ற மார்கண்டேயன்,

இறைவன் பெயரைச் சொல்லி தந்தையின் ஆட்சியையே எதிர்த்த பிரகலாதன்,

16 வயத்துக்குள் பல்லாயிரம் பாடல் பாடிய ஞான சம்பந்தன்,

16 வயதுக்குள் பாவை பாடிய ஆண்டாள்,

இளம் வயதிலேயே நாட்டை வலம் வந்த ஆதிசங்கரர்!

 

போன்ற பல இளைஞர்கள் முன் உதாரணமாக விளங்கினர். உலகில் வேறு எந்த சமயத்திலும், கலாசாரத்திலும் இப்படி இல்லை என்பதால் பாரதீய கலாசாரமே பழமையான, முதன்மையான நாகரீகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

–Subaham–

 

ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு (Post No.4754)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-23 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4754

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஸ்ரீ ஜோஸியம் பிப்ரவரி 2018 இதழில்  வெளியாகியுள்ள கட்டுரை

 

 ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு

 

.நாகராஜன்

 

 

ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடம் எவ்வளவு பழமையானது என்பதைச் சுட்டிக் காட்ட வால்மீகி ராமாயணம் ஒரு சரியான சான்று. ஆதி காவியம் என்று அறிஞர்களால் புகழப்படும்  உலகின் முதல் காவியமும் பெரும் காவியமுமான ராமாயணத்தில் வால்மீகி முனிவர் ஜோதிடக் குறிப்புகளைத் தவறாமல் முக்கியமான இடங்களில் சொல்லிக் கொண்டே போகிறார்.

சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

ராமரின் ஜோதிட, ஹோரா அறிவு

முதலில் ராமர் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னர் நல்ல நேரத்தைத் தானே பார்த்துத் தொடங்குபவர் என்பதற்கு அவர் சீதையை நோக்கி இலங்கை செல்லப் புறப்பட நிர்ணயித்த தினமே ஒரு சான்று.

ஹனுமார் இலங்கையை நோக்கிச் செல்ல ராமரே ஒரு நல்ல வேளையைக் குறிப்பிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராமர் கூறுவது:

“இப்போதே நல்ல வேளையாக இருக்கிறது. சூரியன் வானத்தின் நடுவில் வந்து விட்டார். இந்த விஜய முகூர்த்தமே சிலாக்கியமானது. இன்று உத்தர பல்குனி (உத்தரம்) நட்சத்திரம். நாளை ஹஸ்தம். (அது எனது நட்சத்திரமான புனர்வசுவிற்கு ஏழாம் நட்சத்திரமாக ஆவதால் சுபமில்லை. அதாவது ஜன்ம நட்சத்திரத்திற்கு வத தாரை; உத்தர நட்சத்திரம் சாதக தாராபலம்) என்று இவ்வாறு ராமர் சுக்ரீவனிடம் கூறுகிறார்.

பகலில் உள்ள 30 நாழிகைகளில் 20 நாழிகைக்கு மேல் 22 நாழிகை முடிய உள்ள நேரம் விஜய முகூர்த்தம் எனப்படும். வெற்றி பெறுவதற்கான சரியான வேளை அது என்று ராமர் நிர்ணயிக்கிறார்.

 

ஆக இப்படி ஜோதிடத்தின் துணை கொண்டு நல்ல வேளை நிர்ணயித்த ராமர் வெற்றி பெற்றதில் வியப்பேதும் இல்லை.

ராமரின் ஜாதகம்

அடுத்து ராமரின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரை வால்மீகி முனிவர் தரும் ஜோதிடத் தகவல்கள் பிரமிக்க வைப்பவை.

ராமர் சித்திரை மாதம் நவமி திதி, புனர்வசு நட்சத்திரத்தில் அவதரிக்கிறார். சந்திரன், சூரியன்,குரு, சுக்ரன்,செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்க சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் போது கடக லக்னத்தில்  அவர் அவதரிப்பைதை பால காண்டம் சித்தரிக்கிறது.

 

பட்டாபிஷேக நாள்

ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர் சுக்ல ஸப்தமி, புஷ்ய (பூசம்) நட்சத்திரத்தில் வசிஷ்டரால் சீதையுடன் ரத்ன சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ராமர் காட்டிற்கு கிளம்பியது புஷ்ய  நட்சத்திரத்திலேயே. ஆக பதினான்கு வருடங்கள் முடிந்து அவர் மீண்டும் அயோத்திக்கு வருகிறார். அவர் சைத்ர (சித்திரை மாதம்) சுக்ல பக்ஷத்தில் கிளம்பியவர். பால்குன (பங்குனி மாதம்) கிருஷ்ண பட்சம் முடிந்த போதே வருடக் கணக்கில் 14 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.

ஆகவே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றவர் பாரத்வாஜ ரிஷியின் உத்தரவின் பேரில் அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு கழிக்கிறார்.,முன்னதாக ஹனுமாரை அனுப்பித் தான் வரும் செய்தியை பரதனுக்குத் தெரிவிக்க உத்தரவிடுகிறார்.

பிறகென்ன! அயோத்தி மாநகரமே குதூகலத்துடன் தயாராகிறது.

 

சகுன சாஸ்திரம்

இங்கு நாம் பார்த்தவை ஒரு சில குறிப்புகளை மட்டும் தான்!

ராமாயணத்தை முழுவதுமாக ஜோதிட ரீதியில் படிக்க ஆரம்பித்தால் ஜோதிட சாஸ்திரம், சகுன சாஸ்திரம், ஹோரா சாஸ்திரம் ஆகியவை பற்றிய பல முக்கிய குறிப்புகளைப் பெறலாம். (சீதை பெற்ற சுப சகுனங்களை வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் 29ஆம் அத்தியாயம் விவரிக்கிறது.)

வேதாங்கங்களின், ஆறு அங்கங்களில் ஒன்றான ஜோதிடத்தின் பெருமை ஆதி காலத்திலிருந்தே ஹிந்துத்வ வாழ்க்கை முறையில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழலாம்!

***

 

குறிப்பு: வால்மீகி ராமாயணத்தில் வரும் விரிவான ஜோதிடக் குறிப்புகள் பலவற்றை  ஸ்ரீ ஞானானந்த பாரதி ஸ்வாமிகள் எழுதிய 432 பக்கங்கள் உள்ள  ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் என்ற நூலில் காணலாம்.

–Subham–

பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை (Post No.4751)

Date:16 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-21 am

 

Written by London swaminathan

 

Post No. 4751

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆசை பற்றி தமிழில் நிறைய பாடல்களும் பழமொழிகளும் உண்டு; அவை எல்லாம், பேராசைப்பட்டால் வரும் தீமைகளை எடுத்துரைக்கும்.

 

ரிக்வேதம், மனு ஸ்ம்ருதி, திருக்குறள் ஆகிய அனனைத்தும் போதிப்பது இதுவே.

 

நாம் செல்வத்திற்காக நம் ஆசைகளை நிறைவேற்ற பல திட்டங்கள் போட்டு அவைகளை ஆடு மாடுகள் மேய்வது போலப் பின்பற்றுகிறோம் – ரிக் வேதம் 9-19

 

ஆசைகளைப் பூர்த்தி செய்து அனுபவிப்பது என்பது தீயில் நெய் ஊற்றுவதற்கு இணையானது; ஆசைகள் என்றும் அவியாது – மனு 2-94

 

அவா இல்லார்க்கில்லாகும் துன்பம்- குறள் 368

 

தூஉய்மை என்பது அவாவின்மை- குறள் 364

 

ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா – 366

 

அவா= ஆசை

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

குறள் கதை:–

 

தெலுங்கு மொழியில் வழங்கிவரும் ஒரு நாட்டுப்புற கதையைக் காண்போம்:

சித்ராபூர் என்ற கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இருந்தனர்; அவர்கள் வறுமையில் வாடினர்; வழி தெரியாது ஏங்கினர். ஒரு சாமியாரைக் கண்டனர். அவர் ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து காளி தேவியைப் பூஜியுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

 

 

காளி தேவி பிரசன்னமானாள்; அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று வினவினாள்.

 

அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று. அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும் தலையில் வைத்துக்கொள்ளுங்கள். வடக்கு நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொருவர் தாயத்து பூமியில் விழும்போதும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து கிடைப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.

 

 

அவர்களும் அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து வட திசை நோக்கி ஏகினர். சிறிது தொலைவு சென்றவுடன் முதலில் ஒருவன் தாயத்து விழுந்தது. அவன் தோண்டிப் பார்த்தான். அங்கே தாமிர உலோகக் கட்டிகள் நிறைய இருந்தன. முடிந்த மட்டும் மூட்டை கட்டினான். நண்பர்களே! எனக்கு பரம திருப்தி; நான் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று புது வாழ்வு படைப்பேன் என்றான்; நண்பர்களும் ஆமோதித்தனர்.

இன்னும் கொஞ்சம் நடந்தனர் மற்ற மூன்று பேர்.

 

இரண்டாமவன் தலையில் இருந்த தாயத்து விழுந்தது. அவன் நிலத்தைத் தோண்டினான்; வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அவனுக்கு பரம சந்தோஷம்; நபண்பர்களிடம் விடை பெற்று சித்ராபூருக்குத் திரும்பி புது வாழ்வு வாழ்ந்தான்.

 

இதற்குள் மற்ற இருவருக்கும் களைப்பு மேலிட்டது; பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது; இருந்தும் தலையில் தாயத்து இருந்ததால் முன்னேறினர்.

 

 

வெகு தொலைவு சென்றபின்னர் மூன்றாமவன் தாயத்து தரையில் விழுந்தது. அங்கே தோண்டினான். நிறைய தங்கக் கட்டிகள் இருந்தன. அவன் சொன்னான்

இதோ பார்! கொஞ்ச நேரத்தில் இருண்டு விடும்; சூரியன் மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான்; நீ முடிந்த மட்டும் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்; நான் முடிந்தவரை எனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன் என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை அவனுக்குப் பேராசை; இனியும் போனால் ஞ் வைரக் கட்டிகள் கிடைக்கும் என்று எண்ணினான்.

 

மூன்றாவது ஆள் வணக்கம் சொல்லி விடை பெறவே நான்காமவன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகு தொலைவு சென்ற பின் தாயத்தும் தலையில் இருந்து விழுந்தது. ஆசையோடு தோண்டினான்; வெறும் இரும்புக் கட்டிகளே இருந்தன; பொழுதும் சாய்ந்தது. இரும்பைத் தூக்கிக் கொண்டு இனியும் நடக்க முடியாது என்று வெறும் கைகளோடு வழீ தெரியாமல் தட்டுத் தடுமாறி கிராமத்தை நோக்கி நடை போட்டான்.

கிராம மக்களுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கவும் அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே; கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள் என்பதற்காக இக்கதைகயைச் சொல்லுவர்.

 

ஆசை பற்றிய தமிழ்ப் பழமொழிகள் இதோ:

 

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை

 

ஆசை காட்டி மோசம் செய்கிறதா?

ஆசை பெரிதோ, மலை பெரிதோ?

 

ஆசைப்பட்டு மோசம் போகாதே — தமிழ் பழமொழி

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று –தமிழ் பழமொழி

My  Old Article

ஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 …

https://tamilandvedas.com/…/ஆசை-பற்றி-30-பழமொ…

Translate this page

29 Aug 2016 – ஆசை அறுபது நாட்கள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி– தமிழ் பழமொழி. செப்டம்பர் 12 திங்கட்கிழமை. ஆசை அவள் மேலே, ஆதரவு பாய் மேலே –தமிழ் பழமொழி. செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை. ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அமிசை …

 

 

–subam–

 

 

பிராணாயாம ரஹஸியங்களும் அற்புதங்களும் (Post No.4743)

Muslim Yoga in Abu Dhabi

 

Date: 14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-15

 

Written by London swaminathan

 

Post No. 4743

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

Yoga picture from : sheela Govindaraj post

1915 ஆம் ஆண்டில் வெளியான சித்தர் களஞ்சியம் என்ற நூலில் மூச்சுப் பயிற்சி எனப்படும் பிராணாயாமம் பற்றியும் ஆறுவகையான ஷ்ட்கருமப் பயிற்சிகளும் எட்டுவகையான மூச்சடக்கப் பயிற்சிகளும் — அஷ்டவித கும்பகம்– விளக்கப்பட்டுள்ளன. அதை அப்படியே நூலில் இருந்து எடுத்துத் தருகிறேன். இதைச் செய்யாதவர்களும் இப்படியெல்லாம் செய்யும் சித்த புருஷர்கள் இந்த நாட்டில் தெருவுக்குத் தெரு இருந்த காலம் ஒன்று இருந்தது என்பதை அறிதல் நலம்.

 

ஷட் கருமங்கள்

 

 

Picture from Sandhya manoj post

 

 

அஷ்டவிதகும்பகங்கள்

Picture from Ma Nithya’s post

 

 

 

 

 

 

 

Picture from Ma Nithya post

— SUBHAM —

TAGS: பஸ்தி, தௌதி, கபாலபாதி, பிராணாயாமம், அஷ்டகும்பகம், ஷட்கருமம், சித்தர் ரகசியம், சூரியபேதி, உஜ்ஜாயினி.

‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ (Post No.4742)

Date: 14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 14-10

 

Compiled by London swaminathan

 

Post No. 4742

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

அவ்வையாரும் சாணக்கியனும்- பாரதீய சிந்தனை ஒன்றே
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

பெரியோர் சிந்தனை ஒன்றே (Great men think alike)  என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். ஆனால் பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை , காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, 3000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சிந்தனை  இருப்பது உலகம் காணாத புதுமை. ‘தூது’ என்ற தலைப்பில் வள்ளுவன் செப்பியதும், ‘விருந்தோம்பல்’ என்று அவன் உரைத்ததும், காமத்துப் பாலில் அவன் பாடியதும், ‘கொல்லாமை’யை அவன் போற்றியதும் சம்ஸ்க்ருதச் செய்யுட்களில் அப்படியே உள்ளது. கௌடியர் எனப்படும் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரப் பொருளாதாரக் கருத்துக்கள் வள்ளுவனின் பொருட்பாலில் உள. ஒருவரை ஒருவர் ‘காப்பி’ அடித்தாரோ என்று வியக்க வேண்டியதில்லை. பாரத நாட்டின் சிந்தனைப் போக்கு ஒன்றே .உலகத்துக்கெல்லாம் மூலாதாரமான கருத்துகள் அவை.  கொடி ஆனாலும், கடவுளின் வாஹனம் ஆனாலும் புறநானூற்றில் உள்ள விஷயங்கள் சம்ஸ்க்ருத நூல்களிலும் காணக்கிடக்கின்றன.

 

அவ்வைப் பாட்டியை அறியாத தமிழன் இல்லை. ஆனால் இறைவனை நாடி அறம் பாடிய  முதுமைப் பெண்கள்       எல்லோரையும் அவ்வையார் என்று அழைத்ததால் தமிழில் ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் புத்தகம் எழுதியுள்ளார். ஆனால் எனது மொழியியல் ஆராய்ச்சியின் படி குறைந்தது மூன்று ஔவையார் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் பாடல்கள் இடைக் கால அவ்வையாரின் பாடல்கள்தான்; சங்க கால அவ்வையார் அல்ல.

 

சாணக்கியன் பகர்வான்

காகம் கருடன் ஆகுமா?

 

குணருத்தமதாம் யாதி நோச்சைராஸன ஸம்ஸ்திதஹ

ப்ராஸாத ஸிசிகரஸ்தோபி காகஹ கிம் கருடாயதே

அத்யாயம் 16, ஸ்லோகம் 6

 

ஒருவன் குணத்தினால் உயர்கிறானே தவிர பதவியாலோ அந்தஸ்தினாலோ அல்ல;

அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?

 

அவ்வையார் மொழிவார்

 

கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?

 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி 

மூதுரைப் பாடல்/வாக்குண்டாம்

 

(மூதுரை என்பதும் வாக்குண்டாம் என்பதும் ஒரே நூல்தான்)

 

முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது, காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.

கல்லாதவன்= வான் கோழி

கற்றவன்= கான மயில்

 

தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு

இலக்கணக் கவிதைகள்=  மயில்தோகை

 

xxx

சாணக்கியன் புகல்வான்

த்யஜ துர்ஜன ஸம்ஸர்கம் பஜ சாது ஸமாகமம்

குரு புண்ய மஹோராத்ரம் ஸ்மர நித்யம் அநித்யதாம்

சாணக்கிய நீதி,அத்யாயம்14 ஸ்லோகம் 20

 

தீயவரைத் தீண்டாதே

நல்லவரை நாடித் தேடி ஓடு

நன்றே செய்க, இன்றே செய்க

நிலையாமையை எப்போதும் தப்பாமல் நினை.

 

துராசாரீ ச துர்த்ருஷ்ட்டி த்ராவாஸீ ச துர்ஜனஹ

யன் மைத்ரீ  க்ரியதே பும்பிர்நரஹ சீக்ரம் விநஸ்யதி

 

சாணக்கிய நீதி,  அத்யாயம் 2      ஸ்லோகம் 19

 

தீயவர்களுடன் சேர்ந்தாலோ

தீயதைக் கண்டாலோ

தீயோர் இடைடயே வசித்தாலும்

தீயவன் தீமையே அடைவான்; அழிவான்

 

அவ்வைப் பாட்டி சொல்லுவார்

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–

 

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதே – வாக்குண்டாம், அவ்வையார்.

 

கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே.

xxxx

சாணக்கியன் புகல்வான்

 

 

சகடம் பஞ்ச ஹஸ்தேன தச  ஹஸ்தேன வாஜினம்

ஹஸ்தினம் சத ஹஸ்தேன தேசத்யாகேன துர்ஜனம்

7-8

 

மாட்டுவண்டி வந்தால் ஐந்து முழம் தள்ளிப்போ

குதிரை வந்தால் 10 முழம் தள்ளிப்போ

 

யானை வந்தால் 100 முழம் தள்ளிப்போ

 

துஷ்டனைக் கண்டால் தூரப் போய்விடு (கண்காணாத வரை)

 

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன. விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

 

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

 

 

xxxxx

சாணக்கியன் நுவல்வான்

சின்னோபி சந்தனதருர்ன ஜஹாதி கந்தம்

வ்ருத்தோபி வாரணபதிர்ன ஜஹாதி லீலாம்

யந்த்ரார்பிதோஒ மதுரதாம் ந  ஜஹாதி சேக்ஷுஹு

க்ஷீர்ணோபி ந த்யஜதி சீலகுணான் குலீனஹ

சாணக்கிய நீதி,அத்யாயம்15 ஸ்லோகம் 18

 

அரைக்கும் சந்தனம் தன் மணம் குன்றா

யானை வயதானாலும் விளையாடுவதை விடுவதுண்டோ

யந்திரத்தில் நசுக்கினும் கரும்பு இனிக்குமன்றோ

வறுமையில் வீழ்ந்தாலும் உயர் குணதோன் தன் நற்குணங்களில் இருந்து நழுவுவதில்லை; வழுவுதல் இல்லை.

 

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

 

அதிவீர ராம பாண்டியனுக்கு (வெற்றி வேற்கை)

 

முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:

 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

 

 

சான்றாண்மை என்னும் அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் முத்து முத்தாகக் கருத்துகளைத் தொகுத்து அளிக்கிறார்:

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படுவார் – குறள் 989

 

உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல் கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.

 

சாணக்கியன் நுவல்வான்

 

யுகாந்தே சலதே மேருஹு கல்பாந்தே சப்த ஸாகராஹா

சாதவஹ ப்ரதிபன்னார்த்தான் ந சலந்தி கதாசன

சாணக்கிய நீதி,அத்யாயம்13 ஸ்லோகம் 19

யுக உடிவில் மேரு பர்வதமும் நிலை குலையுன்

கல்ப முடிவிலேழு கடல்களும் சுனாமியால் பொங்கி எழும்

நல்லோரோ தன் பாதையில் இருந்து எப்போதும் தப்பார்

 

xxx  Subham xxxxx

 

 

 

 

இருந்தும் இறந்தவர் யார், யார்? -1 (Post No.4741)

Date:14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4741

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ச.நாகராஜன்

 

1

இரண்டு கைகள், கால்கள், முகத்துடன் கூடி உயிருடன் உலவுகின்ற அனைவரும் மனிதர்கள் தானா?

இல்லை என்கின்றனர் மேலோர்.

 

இதற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்களைக் கொண்டு தான் மனிதன் தானா என்று நிச்சயிக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

 

உயிரோடு இருந்தாலும் இறந்தவர்கள் போலத்தான் என்று பல அறிஞர்கள் கூறுகின்ற பட்டியலைப் பார்த்தால் மனிதனாக வாழ்வதற்கான இலக்கணம் நன்கு புரிய வரும்.

சில பெரியோர்கள் இது பற்றிக் கூறியதைப் பார்க்கலாம்.

 

 

2

முத்து மீனாட்சிக் கவிராயர் என்பவர் குமரேச சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலாகும். இவர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு குருபாத தாசன் என்ற பெயரும் உண்டு.

குமரேச சதகத்தில் வரும் அவரது பாடல் ஒன்று இருந்தும் இறந்தோர் யார் என்பதைத் தெளிவுறக் கூறுகிறது.

 

மாறத வறுமையோர் தீராத பிணியாளர்

வருவேட் டகத்திலுண்போர்

மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்

மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்

சுமந்தே பிழைக்கின்றபேர்

தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்

சோர்வுபட லுற்றபெரியோர்

வீ றாக மனையாள் தனக்கஞ்சி வந்திடு

விருந்தினை ஒழித்துவிடுவோர்

வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு

மிக்கசபை ஏறும் அசடர்

மாறாக இவரெலாம் உயிருடன் செத்தசவம்

ஆகியொளி மாய்வர் கண்டாய்

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

மலைமேவு குமரேசனே

(குமரேச சதகம் – பாடல் எண் 32)

 

 

இதன் பொருள்: மயிலில் அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல் வயலில் உயர்ந்த மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் குமரக் கடவுளே!

 

நீங்காத வறுமையில் உழல்வோர்

நோய் தீராத பிணியாளர்

மாமனார் வீட்டில் நீண்ட நாள் தங்கி உணவுண்போர்

மனைவியைத் தீய ஒழுக்கத்தில் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவித்திருப்போர்

தாம் இருக்கும் அரச சபையில் வீணான பழியைக் கூறி அதனால் வாழ்வோர்

 

மனிதன் அமர்ந்திருக்க அந்தப் பல்லக்கைச் சுமந்து வாழ்வோர்

நீங்காத கவலையில் அழுந்தி இருப்போர்

சொன்ன சொல்லிலிருந்து வழுவும் பெரியோர்கள்

மனைவியின் அகம்பாவத்திற்குப் பயந்து வருகின்ற விருந்தினரை விலக்கி விடுவோர்

நடக்காத வழக்கை ஆதரவாகக் கொண்டு பெரிய நியாய ஸ்தலங்களிலே பிடிவாதமாகச் செல்லும் அசடர்கள்

இவர்கள் அனைவரும் உலகியலுக்கு எதிராக உயிரோடிருந்தும் செத்த பிணமாகிப் புகழ் குன்றுவர்!

 

3

திருவள்ளுவர் இருந்தும் இறந்தவர் பற்றி இரு குறள்களில் கூறுகிறார்.

 

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது;

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்   (குறள் 214)

உலக நடையினை அறிந்து வாழ்பவனே உயிரோடு வாழ்பவன் ஆவான். அப்படிச் செய்யாதவன் உயிரோடு இருந்தாலும் கூட செத்தவருள் ஒருவனாக வைக்கப்படும்.

உலக நடை என்பது வேத நடையைப் போல என்கிறார் பரிமேலழகர் தம் உரையில்.

 

நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது:

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃது உண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்       (குறள் 1001)

 

தன் வீடு முழுவதும் நிரம்பி வழியும் அளவு பெரும் பொருளை ஈட்டியும் கருமித்தனத்தால் அதனை அனுபவிக்காது இருக்கும் ஒருவன்  உயிர் வாழ்ந்தாலும் கூடச் செத்தவனே!

 

 

4

ஸ்வாமி விவேகானந்தர் மிக அழகுறக் கூறிய வார்த்தைகள் இவை:

 

THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS

THE REST ARE MORE DEAD THAN ALIVE!

மற்றவருக்குச் சேவை புரிந்து வாழ்பவனே வாழ்பவன்;

மற்றவர்கள் உயிரோடிருந்தாலும் இறந்தவரே!

 

( அடுத்த கட்டுரையுடன் முடியும்)

***

சித்தர்கள் செய்த எட்டு வகை அற்புதங்கள் (Post No.4738)

Date: 13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-43 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4738

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

1915 ஆம் ஆண்டில்    வெளியான சித்தர்   களஞ்சியத்தில் அஷ்ட  மா சித்திகளின் விளக்கம் நன்றாக உள்ளது; அதைக் கீழே காண்க.

 

 

 

 

 

 

–SUBHAM–

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? (Post No.4699)

Picture of S Nagarajan in Halabedu, Karnataka, August 2017.

 

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-02 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4699

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நாட்டு நடப்பும் சொந்த அனுபவமும்!

 

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? எனது சில அனுபவங்கள்!

 

ச.நாகராஜன்

 

 

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் இருப்பவை எனது சொந்தக் கருத்துக்கள்; சொந்த அனுபவங்கள். இது எவரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கவோ எழுதப்படவில்லை. நல்ல நோக்கத்துடன் எழுதப்படும் இது எவர் மனதையும் நோக வைத்தால் இப்போதே சொல்கிறேன் – Sorry!)

1

பாராட்டிற்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? நமது தமிழ்நாட்டு ஊடகங்கள் போல் அல்லாமல், அரசியல் கட்சிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டினால் பலன் உண்டு.

தீமையையும் கூட, ஒரு பொதுவான நன்மைக்காகக் கண்டித்தால் பலனுண்டு.

தற்பெருமைக்காக அல்ல; ஒரு இன்ஸ்பிரேஷனுக்காகத் தான் இந்த எனது சொந்த அனுபவங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

2

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.

சாவியும் மணியனும் ஆனந்தவிகடனிலிருந்து விலகி விட்ட காலம் அது.

சாவி தினமணிகதிர் ஆசிரியப் பொறுப்பை வகித்தார். ஆனால் தினமணி கதிர் வெளியீடு பற்றி வரும் பத்தியில் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் என்றே பதிப்பிக்கப்பட்டிருக்கும்.

ஒரு நாள் தினமணி கதிரைப் பிரித்துப் பார்த்த எனக்கு பகீர் என்றிருந்தது.

ஹலோ ராமச்சந்திரா என்ற தலைப்பில் சாவி ஒரு நகைச்சுவைத் தொடரை ஆரம்பித்திருந்தார்.

அதில் ஒரு படம்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி டெலிபோன் ரிசீவரைக் கையில் பிடித்திருக்கும் காட்சி.

அன்றாடம் ராமரை வழிபடும் பக்தர்களுக்கு எப்படி இருக்கும்?

மனம் நொந்தேன். அன்றே பல நண்பர்களும் இது பற்றிப் பேசினர். விளைவு, அன்று மாலையே பல பேர் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் தினமணி கதிருக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த வாரம் தினமணி கதிர் வந்தது.

என்ன ஆச்சரியம். பல பக்தர்களின்  மனம் நொந்திருப்பதாகக் கடிதம் வந்ததால் இந்தத் தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது -சாவி என்று அறிவிப்பு வந்தது.

ராம பக்தி ஜெயித்தது!

 

S Nagarajan and S Swaminathan with Great Scholar Dr R Nagaswamy in Chennai, 2017.

 

3

ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகையாகவே தினமணி கதிரை சாவி நடத்திக் கொண்டிருந்தார்.

மிக அருமையான எழுத்தாளரான, மிகவும் (அப்போது) இளைஞரான ஸ்ரீ வேணுகோபாலனை புஷ்பா தங்கதுரையாக மாற்றி ரெட் லைட் ஏரியாவுக்கு அனுப்பி கமலாவின் கதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்.

வேணுகோபாலன் மிக அருமையான எழுத்தாளர் என்றும் அவரை இப்படிக் கெடுக்கக் கூடாது என்றும் பிரபல மணிக்கொடி எழுத்தாளரும் எனது தந்தையாரின் நண்பருமான கி.ரா. அடிக்கடி என்னிடம் சொல்லி வேதனைப்படுவார். கி.ரா. சிறிது காலம் மதுரையில் எங்கள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவர் உலக இலக்கியம் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசுவார். அதில் வேணுகோபாலனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

இந்த ரீதியில் நடந்த கதிரில் ஒரு நாள் ஜெயகாந்தன் கதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. (பெயர் நினைவில்லை- ‘சக்கரம்’ என்ற தலைப்பாக இருக்கலாம்!)

அதைப் பார்த்த எல்லோரும் திடுக்கிட்டனர். இப்படி ஒரு ஆபாசமான கதை தினமணி கதிரில் வரலாமா?

பலரும் வெகுண்டனர். நானும், எனது நண்பர்களும் ஆளுக்கொரு போஸ்ட்கார்டில் கண்டனத்தைத் தெரிவித்து ஏ.என்.சிவராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதினோம்.

இப்போது லண்டனில் வசிக்கும் டாக்டர் நாகசுப்பிரமணியன், அவரது சகோதரர் திரு கிரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

பங்களூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் கண்டனக் கடிதங்களை அனுப்பினர்.

அடுத்த வாரம் ஆச்சரியம்!

தினமணி கதிரில் கடைசிப் பக்கத்திற்கு முன் பக்கம் ஒரு அறிவிப்பு வந்தது. என் நினைவிலிருக்கும் வார்த்தைகளை வைத்துப் பொருள் கெடாமல் அதைக் கீழே தருகிறேன்,.

“இப்படி ஒரு கதை வெளியானதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி இப்படிப்பட்ட கதைகள் என் பெயரை ஆசிரியராகப் போட்ட பத்திரிகையில் இடம் பெறாது.” ஏ.என். சிவராமன்.

அன்பர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

அடுத்த வாரம் கதிர் வந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் இதுவரை ஆசிரியர் : ஏ.என்.சிவராமன் என்று இருந்ததற்குப் பதிலாக ஆசிரியர்: சாவி என்று போடப்பட்டிருந்தது.

பின்னர் சில காலம் கழித்து, சாவியும் கதிரிலிருந்து வெளியேறி விட்டார்.

 

 

4

கண்டனத்திற்குப் பலன் உண்டு என்பது எனது அனுபவம். ‘ஜெனியுன்’ – Genuine- என்று சொல்கிறோமே அது முக்கியம்! இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.

இனி பாராட்டிற்குப் பலன் உண்டா, உண்டு.

இர்விங் வாலஸ் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். த்ரீ சைரன், வோர்ட், ஆர் டாகுமெண்ட், பீஜன் ப்ராஜெக்ட், செவந்த் சீக்ரட் – எந்த நாவல் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், என்னிடம் இருக்கும். கதையும் கிட்டத்தட்ட ஃபிங்கர் டிப்ஸில் இருக்கும்.

எமர்ஜென்ஸி காலம். இந்திராவின் தாங்கவொண்ணா அடக்கு முறை.

மதுரை கொதித்தெழுந்தது. அதில் ஏராளமான அனுபவங்கள். அதைச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல; இடமும் இல்லை.

அப்போது ஆர் டாகுமெண்டில் இர்விங் வாலஸ் சித்தரித்திருந்த சூழ்நிலை இந்தியாவில்.

உடனடியாக ஒரு தற்காலிக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. மூன்லைட் அசோஷியேஷன் – எம்.எல்.ஏ. (Moon Light Association MLA)

ஆங்காங்கு நண்பர்களின் வீடுகளில் பத்துப் பேர் சேர்ந்தால் போதும். ஒரு கூட்டம் நடைபெறும். அதில் நான் ஆர் டாகுமெண்ட் கதையைச் சொல்வேன். சரியாக ஒரு மணி நேரம்.

மூன் லைட் என்று சங்கப் பெயர் இருந்தாலும் திருப்பரங்குன்ற மலையின் பின்பக்கம் இருட்டிலும் இரவில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுண்டு. அதில் உருவங்கள் தெரியாது; ஆனால் என் குரல் ஒலிக்கும்.

கூட்டம் கலையும் போது எமர்ஜென்ஸியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு நல்ல உத்வேகம் எழும்.

இப்படிப்பட்ட நாவலை எழுதிய இர்விங் வாலஸைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது.

பாராட்டுவது என்றால் (தர்மத்தை உடனே செய்ய வேண்டும் என்பது போல) உடனடியாகப் பாராட்டி விடுவது என் வழக்கம் -இடம், பொருள், காலம் எதையும் பாராமல்!

 

நண்பர் ஒருவர் – இர்விங் வாலஸ் பைத்தியம்! அவரும் கூடச் சேர்ந்தார்.

வாலஸுக்குக் கடிதம் பறந்தது.

என்ன ஆச்சரியம், ஒரு நாள் நண்பர் ஓடி வந்தார்.

இர்விங் வாலஸ் பதில் எழுதி இருந்தார் – ஒரு போட்டோவும் இணைக்கப்பட்டிருந்தது. அவரும் அவர் மனைவியும் இருந்த போட்டோவில் அவரது கையெழுத்து வேறு.

எங்கள் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த உலகின் மாபெரும் எழுத்தாளர் எங்களைப் பாராட்டி இருந்தது தான் ஆச்சரியம்.

“உங்கள் எழுத்திலிருந்து நீங்களே நல்ல கருத்துக்களை எழுதும் வல்லமை படைத்தவர்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது.

ஆகவே நீங்கள் தெரிவித்திருக்கும் பொருள் பற்றி நீங்களே எழுத முடியும். ஏற்கனவே பலவற்றில் ஈடுபட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் எனக்குப் போதிய நேரம் இப்போது இல்லை”

அவரது இந்தக் கடிதத்தை நாங்கள் காட்டாத ஆளே இல்லை. (ஆர் டாகுமெண்ட் போன்ற நாவல்களை அவர் எழுத வேண்டுகோள் விடுத்திருந்தோம் எங்கள் கடிதத்தில்)

ஒரே பெருமிதம்.

பாராட்டுக்கு ஒரு பாராட்டு! அது தான் இர்விங்வாலஸ்!

 

இன்னொரு சொந்த அனுபவம்.

எனது தொழிற்சாலையில் நான் ஒரு பொறுப்பு வாய்ந்த மேலாளர்.

காம்பொணண்ட் ஸ்டோர்ஸில் ஒரு இன் சார்ஜ். ஆள் எப்போதும் கடுகடு என்று இருப்பார் என்று எல்லோரும் சொல்வார்கள். எதற்கு இப்படி ஒரு கடுமை, சிடுசிடுப்பு என்று எனக்கும் புரியவில்லை.

ஒரு நாள் ஸ்டோர்ஸுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. சென்றேன். அகஸ்மாத்தாக கராத்தே பற்றிய பேச்சு அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

அங்கிருந்த பணியாளர், அவரைச் சுட்டிக் காட்டி ‘சார், இவர் கராத்தே மாஸ்டர் சார்’ என்றார்.

உடனடியாக அவரைப் பார்த்து, “உண்மையா இது” என்றேன்.

சற்று நெளிந்த அவர் தான் அடைந்திருக்கும் மிகப் பெரிய உயரிய நிலையை – பெல்ட் பெற்றதைக்-  காண்பித்தார்.

“இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பாடு நேரம் வந்து விடும். அப்போது என் மேஜைக்கு வாருங்கள்” என்று சொல்லி விட்டு    (ஒரு மாதிரியான உத்தரவு தான்!) கிளம்பினேன்.

சாப்பாடு நேரத்தில் அவர் சற்று பயந்தவாறு வந்தார்.

(வேலை நேரத்தில் கராத்தே பற்றி பேசியதற்கு கண்டனமோ!?)

“வாருங்கள்” என்று அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரது அனுபவங்களைத் தெரிந்து கொண்டேன்.

பிறகு அவர் கிளம்பும் போது உங்களது போட்டோ ஒன்று நாளை காலை எட்டு மணிக்கு என் மேஜையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவரை அனுப்பினேன்.

அடுத்த மாதம் எங்கள் தொழிலகத்தின் பிரபல இதழில் அவர் பற்றிய பேட்டிக் கட்டுரை ஒன்று அவரது  போட்டோவுடன் வந்திருந்தது.

தொழிற்சாலையில் ஒரு பரபரப்பு. அவரை அனைவரும் நேரில் சென்று பாராட்டினர்.

அவர் சிடுசிடுப்பு அன்றிலிருந்து போயே போயிற்று. பெரும் புகழைத் தாங்க முடியாத அவர் எளிமையான மனிதராக ஆகி விட்டார்.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை.

எனது ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டர் ( அவரைப் பார்ப்பதே சிம்ம சொப்பனம்; என்ன ஒரு கம்பீரம்; ரோட்டரி தலைவருக்கே உள்ள ஒரு கம்பீரம் அது!) தனது அறைக்குள் நுழைந்தவர், பர்ஸனல் மேனேஜருக்குப் போன் செய்து, “ யாரப்பா அது,கராத்தே மாஸ்டர், அவரை என் ரூமுக்கு அனுப்பு” என்று கூற அலுவலகமும் தொழிற்சாலையும் பரபரப்புக்குள்ளாகியது.

பயந்து நடுநடுங்கியவாறே உள்ளே சென்ற சிடுசிடுப்பு நண்பர் மிகவும் பாராட்டப்பட்டு நிஜ கராத்தே வீரராக வெளியில் வந்தார்.

எனக்கு அவர் கூறிய நன்றி வார்த்தைகள் ஒரு புறம் இருக்கட்டும்! அவர் வேலையே பறி போனது.

ஆம், ஜே.எம்.டி, ஸ்டோர்ஸ் இன் சார்ஜ் வேலையிலிருந்து அவரை நீக்கி விட்டார்.

அவருக்கு இன்னும் அதிகப் பொறுப்புடன் கூடிய உயர் பதவியான செக்யூரிடி பிரிவில் வேலை தரப்பட்டது.

எனக்கும் மகிழ்ச்சி; பாராட்டி எழுதிய எழுத்துக்கும் ஒரு மஹிமை இருப்பதைப் புரிந்து கொண்டேன். (பின்னொரு காலத்தில் அவர் துபாயில் இருப்பதாகக் கேட்டு மகிழ்ந்தேன்)

பாராட்டுகளுக்கு மிகப் பிரமாதமான பலன் உண்டு.

ஆயிரமாயிரம் பேர் மனதில் புகழ்ந்தாலும் வெளிப்படையாகச் சொல்பவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்!

அதற்கு ஒரு தனிப் பெருமை உண்டு!

(இந்த சமயத்தில் திரு நஞ்சப்பா அவர்களை நினைக்கிறேன். உடனடியாக பாராட்டி கமெண்ட்ஸ் காலத்தில் தன் கருத்தைப் பதிவிடும் இவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்! இவர் எந்த ஊரோ! என்ன பொறுப்பில் இருக்கிறாரோ – எனக்குத் தெரியாது. இந்த விநாடி வரை!)

இன்னும் பல சுவையான அனுபவங்கள் உண்டு என்றாலும் கூட கட்டுரை நீண்டு விட்டதால் நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது!

சாரம் இது தான்!

மக்களுக்குத் தீங்கு பயக்கும் விஷயங்களைக் கண்டியுங்கள். லெட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கடிதம் போடுங்கள். பாராட்ட வேண்டியவர்களை – உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சமூக சேவை, எழுத்து உள்ளிட்ட பணியில் ஈடுபட்டவராக இருந்தாலும் சரி, பாராட்டுங்கள்.

பயன் உண்டு சார், பயன் உண்டு!

என் அனுபவம் பேசுகிறது!

***

 

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்! (Post No.4679)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-45 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4679

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

இலக்கியத் திருட்டு

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்!

 

ச.நாகராஜன்

 

1

கவிஞர் கண்ணதாசன் எழுதியதைத் தன் பெயரில் போடத் துடித்த கலைஞர்கள் காலத்திலிருந்து இன்று வரை காப்பி அடிக்கும் கலைவாணர்கள் பெருகியே வந்திருக்கிறார்கள்.

இதை ஒரு குற்றமாக அவர்கள் நினைப்பது இல்லை என்பது தான் மெய்; வருத்தப்பட வைக்கும் விஷயமும் இது தான்!

இதில் ஒரு அற்ப ஆசை; தானும் ஒரு படைப்பாளி தான் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடி மனத்து ஆசை.

புரிகிறது; ஆனால் இது பெரும் தவறல்லாவா! ஒரிஜினல் படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமல்லவா?!

 

 

படித்ததில் பிடித்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம்; தளங்களில் வெளியிடலாம்- உரியவரின் அனுமதி பெற்று; அது இந்தக் கால கட்டத்தில் மிகவும் கஷ்டம் என்றால், படித்த நல்ல விஷயத்தைப் பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி இருந்தால், அதை எழுதியவர் யார், அதை வெளியிட்ட பத்திரிகை அல்லது இணையதளம் எது, அதை விரும்பக் காரணம் என்ன என்பதையும் சேர்த்து வெளியிட வேண்டும். உள்ளதை உள்ளபடி வெளியிட்டால் போதும்; என் அபிப்ராயம் எல்லாம் எதற்கு என்றால், அதுவும் சரிதான், படைப்பை அப்படியே அதை எழுதியவர், வெளியிட்ட தளம், பத்திரிகை எது என்பதுடன் வெளியிட வேண்டும்.

இது குறைந்த  பட்ச கர்டஸி.(Courtesy)

 

2

நாளுக்கு நாள் எனது படைப்புகளை உடனுக்குடன் “திருடி” என் பெயரை ‘கட்’ செய்து விட்டு, தங்கள் பெயரில் வெளியிடும் சாமர்த்தியசாலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

இப்படி அவர்கள் பெயரில் வெளியாகியுள்ள திருட்டுக் கட்டுரை எனது உடனடி கவனத்திற்கு சில மணி நேரங்களுக்குள்ளாகவே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

 

 

சுமார் எட்டாயிரம் பேர்கள் தினசரி எனது கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும், இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் நல்லவர்கள், வல்லவர்கள், அதி புத்திசாலிகள், ஸ்மார் பீபிள் என்பதும் ஒரு காரணம் – இது உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு

 

3

எனது எழுத்துக்களை திருடிய சில “திருடர்கள்”, திருடிகள் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இத்தனை நாள் இருந்தேன். ஆனால் சமீபத்திய “காதல் எத்தனை வகை” என்ற எனது கட்டுரை திருடப்பட்டு வெளியிடப்பட்ட விதம் தான் என்னை வருத்தமுறச் செய்தது, கோபமுறச் செய்தது.

 

 

அதில் என் பெயரை வெளியிடவில்லை; பரவாயில்லை!

வெளியிட்ட www.tamilandvedas.com தளத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, பரவாயில்லை.

ஆனால் போஜ மஹாராஜன் எழுதிய சிருங்காரபிரகாஸம் என்ற அரிய நூலை 1908 பக்கங்களையும் கைப்பிரதியாக எழுதி அதை ஆராய்ந்து உலகிற்கு வெளியிட்டாரே பேரறிஞர் டாக்டர் வி.ராகவன், அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.

 

 

அந்தப் பகுதியை கட் செய்து விட்டார் “உத்தம வில்லன்”!

ஏன் அப்படிச் செய்தார் என்பது தான் தெரியவில்லை!

தன் பெயரில் வெளியிட்ட இந்தக் கட்டுரையை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஹெல்த்கேர் இதழ் ஆசிரியரும் என் நண்பருமான ஆர்.சி. ராஜா,” நன்றி கூட இல்லையே” என்று வருத்தப்பட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் – இதை எடுத்துப் போட்டவரின் தளத்தின் லிங்கை அனுப்பி!

என்ன சொல்லித் திட்டுவது? படிப்பவர்கள் தாம் தீர்மானித்துத் திட்ட வேண்டும்.

 

சிலர் தனக்கு வந்த மெயிலிலிருந்து அப்படியே அனுப்பி விடுகிறார்கள் – அவர்களுக்கு ‘லிஃப்ட்” ஆனது தெரியாது!

ஆகவே உடனடியாக யாரையும் திட்ட முடியாது!

 

4

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தை சென்னையில் இருந்தால் காலையில் கேட்பது வழக்கம். காரணம், சுமார் இருநூறுக்கும் (இன்னும் அதிகமாகவே) மேற்பட்ட  அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை நான் அளித்திருப்பதாலும் இன்னும் அளித்து வருவதாலும், அந்தச் சிந்தனைகள் ஒலிபரப்பப்படுவதை  கேட்பேன்.

ஒரு நாள். ஒரு ஒலிபரப்பு என்னை திடுக்கிட வைத்தது.

ஒரு டாக்டர். ஜானகி என்று பெயர். எனது நூறு அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்து ‘வியப்பூட்டும் விஞ்ஞானப் புதுமைகள் நூறு” (நவம்பர் 2005 வெளியீடு) என்று ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன்.

 

 

அதில் பத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து  மாற்றாமல் அம்மையார் அனுப்ப, அதை நமது வானொலி நிலையமும் ஏற்றுக் கொண்டிருந்தது.

உடனடியாக புரோகிராம் எக்ஸிகியூடிவிடம் (திரு செல்வகுமார் அருமையான நண்பர்; சிறந்த நிர்வாகி; நல்லனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்) விஷயத்தைச் சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘என்ன செய்வது? எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே! இப்படி ஒரு டாக்டர் செய்யலாமா’, என்று வருந்தினார்.

பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன்.

 

5

பாக்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சுமார் 19 வருடங்களாக வாரம் தோறும் எழுதி வருகிறேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தினத்தந்தியில் அப்படியே எனது அறிவியல் கட்டுரை காப்பியாக ஒரு  முறை வந்ததை தற்செயலாகப் பார்த்துத் திடுக்கிட்டேன். என்ன செய்வது?

 

 

6

இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை தினக்குரல். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் குழுமத்திலிருந்து வெளியாகும் சினேகிதி பத்திரிகையில் மாதம் ஒரு கட்டுரை எழுதுவது எனது வழக்கம். அதில் வெளியான 64 கலைகள் பற்றிய எனது கட்டுரை அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையில் எனது பெயரும், கட்டுரை எடிட் செய்யப்படாமலும் வந்திருந்தது. இதை எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

திருட்டு உலகிலும் ஒரு நல்ல குரல்!

 

 

எனது சம்பந்தி சந்தேகாஸ்பதமாக இருக்கும் கட்டுரைகள் என்னுடையது தானா என்று சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி வைத்திருக்கிறார்.

 

 

இதை அவர் சொன்ன போது சிரித்து மகிழ்ந்தேன்.

காப்பி அடிக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய சொற்றொடர்களை அப்படியே கூகுளில் போடுவாராம். எனது ஒரிஜினல் கட்டுரை வெளியான தளம்/ அல்லது பத்திரிகை, வெளியான தேதி உள்ளிட்டவை வந்து விடுமாம். உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவார்.

இது போல எனது நண்பர்கள் பலரும் உடனடியாக போனில் கூப்பிட்டுச் சொல்லி விடுகிறார்கள்!

 

7

ரவி என்று ஒரு ஆசாமி. அப்படியே அப்பட்டமான காப்பியாளர். எனது கட்டுரையைத் தன் போட்டோவுடன் போட்டுக் கொண்டார். இதைச் சுட்டிக் காட்டிய போது, “இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவருக்கு காப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும்? இதற்கு தண்டனை உண்டு என்றவுடன் ஆசாமி வழிந்தார்; வழிக்கு வந்தார்.

 

 

8

ஒரு நல்ல ஆன்மீக மாதப் பத்திரிகை. ‘அமிர்தமாக வர்ஷிக்கும்’ நல்ல கருத்துக்களைக் கொண்டது. இதில் ஒரு கட்டுரை வந்தது. இதைச் சுட்டிக் காட்டியவுடன் ஆசிரியர் வருத்தப்பட்டார். ஏனெனில் இப்படி ஒரு காப்பி கட்டுரையைத் தான் வெளியிட்டு விட்டோமே என்று!

 

 

சென்ற வாரம் எனது சம்பந்தி அனுப்பிய கட்டுரை ஒன்று வந்தது. மஞ்சுளா ரமேஷ் ஞான ஆலயம் குழுமம் நடத்தும் ஜோஸிய இதழான ஸ்ரீ ஜோஸியத்தில் நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை ஒன்றை அப்படியே ஒரு பெண்மணி தன் பெயரில் இணைய தளத்தில் வெளியிட, அது “உலா” வந்தது! ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம்?) வெட்டி விட்டார்.

 

9

கட்டுரை நீண்டு விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

அனுமதியுடன் பிரசுரியுங்கள், உரிய கட்டுரையாளரின் பெயரைப் போடுங்கள், அது வெளியான பத்திரிகை அல்லது தளத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுங்கள் என்று தான் சொல்லலாம்; இதற்கு அதிகமாக என்னத்தைச் சொல்ல, காப்பி அடிக்கும் கலை(ஞ)-வாணர்-களுக்கு?!

1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது :

‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க  முடியாது!’

 

10

ஒழிக்க முடியாவிட்டாலும் கூட கண்டிக்கலாம் இல்லையா?

இப்படி இலக்கியத் திருடு செய்யும் குருடர்களை ஒரு வார்த்தை கண்டித்து எழுதிப் போடுங்கள்.

வெட்கமடைபவர்கள், அப்புறம் அதில் ஈடுபடமாட்டார்கள், உரியவரின் பெயரை வெளியிடுவார்கள்!

அத்துடன் எனது நலம் விரும்பிகள் செய்வது போல ஒரிஜினல் படைப்பாளருக்கு இப்படிச் செய்பவர் யார் என்பதைத் தெரிவிக்கலாம்!

***