செத்தாரைப் போலத்திரி – பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1 (Post No.3516)

 

Amathur Temple, Picture by C.Vedanarayanan

Compiled by London swaminathan

 

Date: 5 January 2017

 

Time uploaded in London:-  12-42

 

Post No.3516

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Golden Sayings of Tamil saint Pattinathar- Part 1

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவில் ஒரு

பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்

அடி சார்ந்து நாம் உய்யவேண்டுமென்றே அறிவாரில்லையே

 

xx

 

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்

தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்

பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்

உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்

x

 

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து

நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன் நான்  இனிச் சென்று

ஆளாவதெப்படியோ திருக் காளத்தி அப்பருக்கே

xx

மந்திக் குருளையொத் தேனில்லை நாயேன் வழக்கறிந்தும்

சிந்திக்குஞ் சிந்தையை யானென் செய்வேன் எனைத் தீதகற்றிப்

புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல்

எந்தைக் குரியவன் காணத்தனே கயிலாயத்தானே

(மற்கட நியாயம், மார்ஜர நியாயம் பாடல்)

xx

வீடு நமக்கு திருவாலங்காடு விமலர் தந்த

ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ

நாடு நமக்குண்டு கேட்டதெல்லாம் தர நன்நெஞ்சமே

ஈடுநமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே

xx

அம்பலத் தரசனை யானந்தக் கூத்தனை

நெருப்பினில் அரக்கென நெக்கு நெக்குருகித்

திருச்சிற்றம்பலத் தொளிரும் சிவனை

நினைமின் மனமே, நினைமின் மனமே

x

ஆசைக் கயிற்றிலாடும் பம்பரம்

ஓயா நோய்க்கிட மோடு மரக்கலம்

மாயா விகாரம் மரணப் பஞ்சரம்

சோற்றுத் துருத்தி கானப் பட்டம்

x

ஆசைக் கயிற்றிலாடும் பம்பரத்தைக்

காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை

மக்கள் வினையின் மயங்கும் திகிரியைக்

கடுவெளியுருட்டிய சகடக் காலை

 

x

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன்வாயில் மட்டே

இனமான சுற்றம் மயானம் மட்டுமே வழிக்கேது துணை

தினையா மன வெள்ளளவாகினும் முன்பு செய்த தவம்

தனை யாளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

(வீடு வரை மனைவி, வீதி வரை உறவு, காடு வரை யாரோ?)

xx

பாவச் சரக்கொடு பவக் கடல் புக்குக்

காமக் காற்றொடுத் தலைப்பக்

கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை

இருவினை விலங்கொடு இயங்கும் புற்கலனை

x

Amirthakateswarar Temple

எண்சாணுடம்பு மிழியும் பெருவழி

மண்பாற் காமம் கழிக்கும் மறைவிடம்

நச்சிக் காமுக நாய்தானென்றும்

இச்சித் திருக்கும் இடைகழி வாயில்

திங்கட் சடையோன் திருவருள் இல்லார்

தங்கித் திரியும் சவலைப் பெருவழி

 

xx

அண்டரண்டமும் அனைத்துள புவனமும்

கண்ட அண்ணலை கச்சியிற் கடவுளை

ஏகநாதனை இணையடி இறைஞ்சுமின்

போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே

xx

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத் தச்சன்

வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்

கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி  அப்பால்

எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே

 

xx

நன்னாரில் பூட்டிய சூத்திரப் பாவைதன் நார்தப்பினால்

தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப் போல்

உன்னாலி யானும் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்

என்னாலிங் காவதுண்டோ இறைவா கச்சி ஏகம்பனே

xx

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியா

திறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் கச்சி ஏகம்பனே

 

xx

கல்லாப் பிழையும்  கருதாப் பிழையும்   கசிந்துருகி

நில்லாப் பிழையும்   நினையாப் பிழையும்   நின் அஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையும்  துதியாப் பிழையும்  தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும்  பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

 

xx

 

ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்

பாவி என்று நாமம் படையாதே — மேவிய சீர்

வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே

செத்தாரைப் போலே திரி

xx

பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள்

துருத்திக்கு அறுசுவை போடுகின்றார் துறந்தோர் தமக்கு

இருத்தி அமுதிட மாட்டார் அவரை இம்மாநிலத்தில்

வருத்திக்கொண்டேன் இருந்தாய் இறைவா கச்சி ஏகம்பனே

xx

ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே

xx

கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம் பின்பு கொன்றுகொன்று

தின்றேன் அதன்றியும் தீங்கு செய்தேன் அது தீர்க என்றே

நின்றேன் நின் சந்நிதிக்கே அதனால் குற்றம் நீ பொறுப்பாய்

என்றே உனை நம்பினேன் இறைவா கச்சி ஏகம்பனே

xx

ஊட்டு விப்பானும் உறங்கு விப்பானும் இங்கொன்றோடொன்றை

மூட்டு விப்பானும் முயங்கு விப்பானும் முயன்றவினை

காட்டு விப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி

ஆட்டு விப்பானும் ஒருவனும் உண்டே தில்லை அம்பலத்தே

xx

பிறவாதிருக்க வரந்தரல் வேண்டும் பிறந்துவிட்டால்

இறவாதிருக்க மருந்துண்டு கானிது எப்படியோ

அறமார் புகழ்த் தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்

மறவாதிரு மனமே அதுகாண் நன் மருந்துனக்கே

–Subham–

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 18 (3509)

Written by S NAGARAJAN

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  5-53 AM

 

 

Post No.3509

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 18

 

ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள் – 3

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

25) சிவாஜி சைநியத்தாரிடம் கூறியது – சி.சுப்பிரமணிய பாரதி (1906)

இந்தப் பாடல் கோத்திர மங்கையர் குலங்கெடுக்கின்றார் என்ற வரியுடன் முடிகிறது.

குறிப்பு என்று குறிப்பிட்டு கீழ்க்கண்ட வரிகள் தரப்படுகின்றன:

குறிப்பு: இச் செய்யுளில் ‘பாரதநாடு பார்க்கெலாந் தெய்வமாம், நீரதன் புதல்வரிந் நினைவகற்றாதிர்!’ என்னும் இரண்டு வரிகள் புதிய பதிப்புகளில் (சக்தி 1957) காணப் பெறவில்லை. ‘நவைப்டு துருக்கர்’ என்பது நகைபுரி பகைவர்’ என மாறி யிருக்கிறது.

 

26) அல்லா! அல்லா! அல்லா!  – இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை – சுதேசமித்திரன் 24-6-20

 

இந்தக் கவிதை பற்றிய குறிப்பு ஒன்றும் இங்கு தரப்படுகிறது.

சுதேசமித்திரன் காரியலத்தார் வெளியிட்ட ‘கதாரத்னாகரம்’ என்னும் தமிழ் மாதப்பத்திரிகை 1920 ஜூலை மாத இதழில் 77ஆம் பக்கத்தில் பாரதியார் பாடிய அல்லா பாட்டு வெளியாகியிருக்கிறது. இதில் காணும் ஸ்வரவரிசையும் , மூன்றாவது பாட்டும் ஏற்கனவே வெளிவந்துள்ள ‘பாரதியார் கவிதை’யில் காணப் பெறவில்லை.

 

குமரி மலரில் இந்தக் குறிப்பு ஒரு புறமிருக்க இப்போதுள்ள பாரதியார் கவிதைகளில் விடுபட்ட மூன்றாம் சரணம் இணைக்கப்பட்டுள்ளது.

 

‘ஏழைகட்கும் செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர் பிதா’ என்று இந்த சரணம் ஆரம்பிக்கிறது.

 

27) A Beautiful Arrangement நேர்த்தியான வியாபாரம் – சி.சுப்பிரமணிய பாரதி (1907)

இந்தியா வாரப் பத்திரிகை 27-4-1907

 

28) Excessive Optimism   அளவு கடந்த நம்பிக்கை சி.சுப்பிரமணிய பாரதி (1906)

இந்தியா வாரப் பத்திரிகை 2-11-1906

 

29) பத்திரிகைத் தமிழ் சி.சுப்பிரமணிய பாரதி (1909)

இந்தியா 24-4-1909

 

30) பாரதி திருநாள்

திரு.வி.க (1929)

நவசக்தி  11-9-1929 தலையங்கக் குறிப்பு (ஆசிரியர் திரு.வி.க)

 

இந்தக் கட்டுரை மூலம் 1929லிருந்தே பாரதியார் தினம் கொண்டாடப்பட ஆரம்பித்திருபப்தை அறிய முடிகிறது.

இதில் திரு.வி.க குறிப்பிடும் வாசகங்கள் உருக்கமானவை.

சில வரிகளைக் கீழே பார்க்கலாம்:

தமிழ் நாட்டுக்குப் புத்துயர் அளித்துத் தமிழ் மொழிக்கு என்றும் மாறாத இளமையைத் தந்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் திருநாள் இன்று உறுகின்றது.

இதைத் தமிழர்கள் ஆங்காங்கு கொண்டாடுவார்கள் என்று நம்புகிறோம்.

வறுமையில் வாடி நின்ற பாரதியார், இணையிலாத் தமிழ்ச் செல்வத்தை நாட்டுக்கு அளித்துச் சென்றார்.

 

31) சக்கரவர்த்தினி சி.சுப்பிரமணிய பாரதி (1906)

   நெ.100, வீரராகவ முதல்தெரு,

   திருவல்லிக்கேணி, சென்னை

   – சக்ரவர்த்தினி’ 1906 பிப்ரவரி

இந்தக் கட்டுரையில் பாரதியார் எழுதும் முதல் வரி சக்கரவர்த்தினியின் ஆரம்பம் பற்றித் தெரிவிக்கிறது.

“நமது பத்திரிகை பிரசுரமாகத் தொடங்கி ஏழு மாதங்கள் ஆய்விட்டன.”

 

32) மாதர் கல்விக் கணக்கு சி.சுப்பிரமணிய பாரதி (1906)

சக்ரவர்த்தினி  1906 பிப்ரவரி

 

33) மகா மகோபாத்தியாய சாமிநாதய்யர் சி.சுப்பிரமணிய பாரதி (1906)

சக்கரவர்த்தினி சென்னை 1906 பிப்ரவரி

 

34) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி

கனம் கே.வி.அரங்கசாமி ஐயங்கார் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதுவதன் சாராம்சம் : –

கவியும் தேசபக்தரும் ஆகிய ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி இள வயதில் இம்மண்ணுலகை நீத்து விண்ணுலக கெய்தியானது தமிழ் நாட்டிற்கே பெருத்ததொரு நஷ்டமாகும்.

   அவர் தன் கவித்திறமையை இந்தியாவின் முன்னேற்றத்திலும், இந்திய  மக்களின் முன்னேற்றத்திலும் உபயோகப்படுத்தி வந்தார்.

அறிவாளிகள் உயிருடன் இருக்கும் போது ஜனங்கள் கௌரவிக்காதது சாதாரணம். அப்படியிருந்தும் ஸ்ரீமான் பாரதியாரின் தேசபக்தியும் இனிமையான கவிகளும் சிலரை அவர் பால் ஈர்த்தன.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் காலஞ்சென்ற ஸ்ரீமான் வி.கிருஷ்ணசாமி ஐயர் ஆவர். அவர் பாரதியாரின் நூல்களை வாங்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் இனாமாக அளித்தார்.

  ஸ்ரீமான் பாரதியார் அஞ்ஞாதவாசத்தில் அதிக கஷ்டப்பட்டார். பாரதியாருக்கு போதிய சௌகரியகளில்லாமையாலும், குடும்பக் கவலைகள்  மேலிட்டமையாலும் அவர் உடல், மனம் இரண்டிலும் நலிவுற்றார்.

அவர் தம் சொந்த நாட்டிற்கு வந்த பின்னரும் கவனிக்கப்படடமையால் இறக்க நேரிட்டது தேசத்திற்காக உழைக்கும் தேசபக்தர்களின் நன்மைகளைக் காங்கிரஸாவது கவனிக்குமா?

   பாரதியாரின் நூல்கள் எஞ்ஞான்றும் நிலைத்திருக்கும். அவர் தம் பந்துக்களில் யாரேனும் அவர் நூல்களைச் சேகரித்து வெளியிடுவாரா?

   தமிழர்களுக்கு ஆத்மா இருக்கும் வரை அவர்கள் சுப்பிரமணிய பாரதியின் அரிய சேவைகளை  மறக்க மாட்டார்கள்.

            -நவசக்தி

              4-11-1921   ஆசிரியர் திரு.வி.க

 

குமரி மலர் பத்திரிகையில் ஏ.கே. செட்டியார் வெளியிட்டு வந்த அரிய பாரதியாரின் கவிதை மற்றும் கட்டுரைகள் அவரின் தமிழ் பற்றையும் பாரதியார் பற்றையும் அறிவிப்பன. அத்துடன் பாரதியார் பற்றிப் பலரும் அந்தக் காலத்தில் பல்வேறு இதழ்களில் எழுதியிருந்த கட்டுரைகளையும் கூட அவர் தொகுத்து தன் குமரி மலரில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இன்னும் பல கட்டுரைகளை அடுத்துக் காண்போம்.

இவை பாரதி இயலில் ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, பாரதியாரைப் பற்றி நன்கு அறிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

                         *****

 

 

மனைவி- குடும்ப விளக்கு, மகன் -குல விளக்கு!! (Post No.3504)

852fe-rameswaram2bvilakku2bpuja

Research Article Written by London swaminathan

 

Date: 1 January 2017

 

Time uploaded in London:-  10-18 am

 

Post No.3504

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பெண்களை குடும்ப விளக்காகப் போற்றுவதை சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் காண்கிறோம். இது உலகில் வேறு எந்தப் பழைய கலாசாரத்திலும் நாகரீகத்திலும் காணக்கிடைக்காத அரிய கொள்கை. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாதான் உலகிலேயே பெரிய நாடு. அந்தக் காலத்திலேயே இமயம் முதல் குமரி வரை இப்படி ஒரு உயரிய சிந்தனையைக் காணுகையில் ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும்.

 

இந்துக்களுக்கு விளக்கு என்பது புனிதச் சின்னம்; மங்களச் சின்னம். பழங்காலத்தில் விளக்கு என்பது இல்லாமல் எவரும் வாழ்ந்திருக்க முடியததுதான் ஆயினும் அவர்கள் எல்லாம் இந்துக்கள் போல விளக்குக்குப் புனிதத்துவததைக் கொடுக்கவில்லை. தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் மகனைக் குல விளக்காகவும் மனைவியைக் குடும்ப விளக்காவும் சித்தரிக்கின்றன.

 

தினமும் மாலையிலும் காலையிலும் கடவுள் படத்துக்கு முன் விளக்கேற்றி வனங்குவர். சிலர் அதற்காகவுள்ள விசேஷ பிரார்த்தனைப் பாடல்களைச் சொல்லுவர். தீட்டுக் காலத்தில் விளக்கைத் தொட மாட்டார்கள். அப்போது மட்டும், வீட்டிலுள்ள சிறுவர்களோ ஆண்களோ அந்த விளக்கேற்றும் பணியைச் செய்வர்.

 

பெரிய ஆலயங்களில் நடைபெறும் விளக்கு பூஜைகளில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். பெரிய நிகழ்ச்சிகளை சுமங்கலிகளைக் கொண்டு விளக்கேற்றித் துவக்கி வைப்பர்.

737cf-palanai2bvilakku2bpuja

விளக்கு பற்றி அவர்களுக்குப் பல்வேறு நம்பிக்கைகள் உண்டு. விளக்கு திடீரென்று அணைந்தாலோ. கீழே விழுந்தாலோ அதை அப சகுனமாகக் கருதுவர். யாரேனும் இறந்தால் அந்த அமங்கலக் காட்சியைக் காட்டாமல் ஒரு விளக்கு அணைந்ததாகத் திரைப்படங்களில் காட்டுவர்.

 

காளிதாசனும், மனுவும், வியாசரும், சங்க இலக்கியப் புலவர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதை ஒப்பிட்டு மகிழ்வோம்:-

 

புறநானூற்றில் (314) புலவர் ஐயூர் முடவனார்,

 

மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்

முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை

 

பொருள்:- இல்லத்தில் ஒளிசெய்யும் விளக்கைப் போல் தன் மாண்பால் விளக்கத்தைச் செய்யும் ஒளியுடைய நெற்றியுடையவளுக்குக் கணவனும்

 

ஐங்குறுநூற்றில் புலவர் பேயனார்

 

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர்போல

மனைக்கு விளக்காயினள் மன்ற கனைப்பெயல்

பூப்பல அணிந்த வைப்பின்

புறவணி நாடன் புதல்வன் தாயே

ஐங்குறுநூறு 405

 

பொருள்: விளக்கு தலைவன் மனைக்கும் அதன் கண் நின்று எரியும் செஞ்சுடர் தலைவிக்கும் உவமை ஆயின.

 

அகநானூற்றில் (184) புலவர் மதுரை மருதன் இளநாகனார்

 

கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய

புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்

நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்

இனிது ஆகின்றால்; சிறக்க நின் ஆயுள்!

 

பொருள்:- தெய்வத்தனமை பொருந்திய கற்புடன் குடிக்கு விளக்கமான மகனைப் பெற்ற புகழ்மிக்க சிறப்பை உடைய தலைவிக்கே அன்றி எனக்கும் இனிமையைத் தருகின்றது.உன் ஆயுள் ஓங்குக (தீர்க்காயுஸ்மான் பவ:).

 

இதே கருத்துகளை சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசனும், மனுவும், மஹாபாரத வியாசனும் செப்புவதைக் காண்போம்:-

 a4b0f-oil-lampsie

மனுதர்ம ஸ்லோகம்

 

வீட்டிலுள்ள அதிர்ஷ்ட தேவதைகளுக்கும், குடும்பத்தின் விளக்குகளாக ஒளிரும் பெண்களுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. அவர்கள் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் புதல்வர்களைப் பெற்றுத் தருவதால் இறையருள் பெற்றவர்களாவர் — மனு 9-26

 

மனுவைப் போல பெண்களைப் போற்றும் நூல் உலகில் வேறு இல்லை! பெண்களை மதிக்காதோர் குடும்பம் வேருடன் சாயும் என்ற மனுதர்ம ஸ்லோகம் குறிப்பிடத்தக்கது.

 

காளிதாசன் புகழுரை

 

ரகுவம்ச ப்ரதீபேன தேனாப்ரதிமதேஜஸா

ரக்ஷாக்ருஹகதாதீப: ப்ரத்யாதிஷ்டா இவாபவன் ( ரகு.10-68)

 

ரகுவின் வம்சத்தை விளக்குகின்ற நிகரற்ற ஒளியுடைய  அந்த ராமனால்  பிரஸவ அறியில் இருந்த விளக்குகள் மங்கியது போல இருந்தன.

ரகுவம்ஸ ப்ரதீபேன என்று ராமன் போற்றப்படுகிறார்.

 

ரகுவம்ச காவியம் 6-45ல் சுசேனன் என்ற சூரசேன மன்னன் தாய், தந்தையரின் வம்சங்களுக்கு விளக்காகத் திகழ்ந்ததால் வம்ச தீபம் என்று போற்றப்படுகிறான்.

 

ரகுவம்சத்தில் 8-38 பாடலில்  இந்தக் காலத் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியை  நினைவூட்டுகிறான் காளிதாசன்:

 

அஜன் என்ற மன்னனின் மனைவி இந்துமதி திடீரென்று மயங்கி விழுந்தாள். அவரது அருகில் இருந்த அஜனையும் அவள் விழ்த்தினாள். இந்துமதி உடனே இறந்தாள். இதை வருணிக்கும் காளிதாசன், இந்துமதி விளக்கின் சுடருக்கும், அத்துடன் சொட்டிய எண்ணைத் துளி அஜனுக்கும் உவமிக்கப்பட்டன.

 

பிள்ளைகளை ஒளிக்கும் விளக்கிற்கும் ஒப்பிடுவது பாரதம் முழுதும் இருந்தமைக்கு ஒரு சான்று:

தசரதனுக்கு துயரம் என்னும் இருட்டைப் போக்கும் ஒளி (ஜோதி) என்ற புதல்வன் இல்லை (ரகு 10-2)

 

ஹிமவானுக்கு பார்வதி குழந்தையாகப் பிறந்தாள்.ஒரு விளக்கு தூண்டப்பட்டு மேலும் ஒளி பெறுவது போலவும், இருண்ட வானத்தில் ஆகாய கங்கை (MILKY WAY ) எனப்படும் நட்சத்திர மண்டலம் ஒளி வீசுவது போலவும் ஹிமவானுக்கு சிறப்பும் புனிதமும் கூடின. (குமார 1-28)

 

ஒரு யோகியின் மன நிலையை வருணிக்கும்போது சலனமற்ற நீர் போலவும், காற்றில்லாத இடத்திலுள்ள தீபம் போலவும் விளங்கியது என்றும் காளிதாசன் வருணிப்பான் (குமார 3-48)

6e628-kuthu2bvilakku

 

ஒரு புயல்காற்றில் விளக்கு சுவாலை எப்படி தாக்குப்பிடித்து நிற்காதோ அப்படி சுதர்சனனும் நோயின் வேகத்துக்கும் மருத்துவர்களின் மருந்துக்கும் கட்டுப்படாமல் இறந்தான் (ரகு.19-53)

 

ஒரு விளக்கிலிருந்து ஏற்றப்பட்ட மற்றொரு விளக்கு எப்படி ஒளியில் வித்தியாசப்படாதோ அப்படி அஜனும் அவன் தந்தையின் குணத்திலும் வீரத்திலும் சிறிதும் மாறுபடவில்லை (ரகு.5-37)

 

இவ்வாறு ஏராளமான விளக்கு உவமைகள் பிற்கால இலக்கியங்களிலும் கிடைக்கின்றன. பாரதம் முழுவதும்  விளக்கு முதல் யானை வரை ஒரே விதமான உவமைகள், கற்பனைகள் இருப்பது இது ஒரே பண்பாடு, இந்த மண்ணில் உருவான பண்பாடு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை அன்று என்று காட்டுகின்றன.

 

மற்றவகை விளக்குகள்

 

ஒளிவிடும் தாவரங்கள் பற்றியும் நாகரத்னம் பற்றியும் குறிப்பிட்டு அவை விளக்குகளாகத் திகழ்ந்தன என்பான் காளிதாசன். நாகரத்னம் பற்றித் தமிழ் இலக்கியத்தில் நிறைய பாடல்கள் உண்டு. ஆயினும் ரகு வம்சத்திலும் (4-75) குமார சம்பவத்திலும் (1-10) உள்ள ஒளிவிடும் தாவரங்கள் பற்றிக் கிடையாது. ஒருவேளை மரங்களில் அடர்த்தியாகத் தங்கும் மின்மினிப் பூச்சிகள இப்படி ஒளிவிடும் தாவரங்களாகத் தோன்றியிருக்கலாம். இதே போல ஞான தீபம் பற்றி பகவத் கீதையிலும் ஆழ்வார், நாயன்மார் பாடல்களிலும் காணலாம்.

 

-சுபம்–

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3 (Post No. 3497)

Written by S NAGARAJAN

 

Date: 30  December 2016

 

Time uploaded in London:-  10-25 AM

 

Post No.3497

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 17

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் மூன்றாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்.

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3

 

                      ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

 

பரிபாடலின் மூன்றாம் பாடல் 94 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார். பரிபாடலில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. இரண்டு பாடல்கள் திருமாலை வாழ்த்துவதாகவும் ஒரு பாடல் செவ்வேளை வாழ்த்துவதாகவும் அமைந்துள்ளன. மூன்றாம் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்டன் நாகனார். அழகுற அமைந்துள்ள இந்தப் பாடலில் பல பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. அத்துடன் திருமாலின் பெருமையையும் அறியலாம்.

 

 

இந்தப் பாடல் திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள், முனிவரும் தேவரும், பாடும் வகை, வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும், வனப்பும் வலியும், சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள், நூல் வகை, யுக்ங்களிலும் ஆராயப்படும் சிறப்பு, நால் வகை வியூகம், பல திறப் பெயரியல்புகள் ஆகிய தலைப்புகளில் பிரிக்கப்பட்டு பொருளுரை வழங்கப்படுகிறது.

மா அயோயே! மா அயோயே!

மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மா அயோயே!

தீ வளி, விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்

திதியைன் சிறாரும் விதியின் மக்களும்

மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்

தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,

மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்   10

மாயா வாய்மொழி உரைதர வலத்து

‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும்,

நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை

;ஏஎர்,வ்யங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை,

பயந்தோள் இடுக்கண்  களைந்த புள்ளின்

நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்

சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்

கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை        20

தீ செங் கனலியும் கூற்றமும், ஞமனும்,

மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூவும்

ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு

கேழலாய் மருப்பின் உழுதோய்; எனவும்,

‘மா விசும்பு ஒழுகு புனல் வறள, அன்னச்

சேவலாய் சிறகாப் புலர்த்தியோய்’ எனவும்

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து

நூல் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்

பாடும் வகையே எம் பாடல்தாம் அப்

பாடுவார் பாடும் வகை                   30

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்

எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின், கை;

நகை அச்சாக நல் அமிர்து கலந்த

நடுவுநிலை திறம்பிய் நயம் இல்  ஒரு கை

இரு கை மாஅல்!

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!

ஐங் கைம்  மைந்த! அறு கை நெடு வேள்!

எழு கையாள! எண் கை ஏந்தல்!

ஒன்பதிற்றுத் தடக் கை  மன் பேராள!

பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!   40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!

பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!

நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!

அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்

இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!

நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணாதியோ,

முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,

வலியினும், மனத்தினும், உணர்வினும் எல்லாம்

வனப்பு வரம்பு அறியா மரபினோயே!                50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,

பிறை வளர், நிறை மதி உண்டி,

அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ:

திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து அகன்று ஓடி,

நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்

ந்ன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;

அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்

வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?”

ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட

சேவல் ஊர்தியும். ‘செங் கண்  மாஅல்!             60

ஓ! ‘எனக் கிளக்கும் கால முதல்வனை;

ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம்

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;            70

முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

பறவாப் பூவைப் பூவினோயெ!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமு

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை           80

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!

பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!

இட வல! குட வல்! கோவல! காவல!

காணா மரப! நீயா நினைவ!

மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!

தொல் இயல் புலவ! நல் யாழிப் பாண!

மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!

பொலம் புரி ஆடை! வலம்புரி வண்னை!

பருதி வலவ! பொரு திறல் மல்ல!

திருவின் கணவ! பெரு விறல் மள்ள!                 90

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து

நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனொரு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே!

 

 

 

அருமையான இந்தப் பாடலின் சிறப்பைச் சொல்லி மாளாது. படிக்கப் படிக்கத் தமிழ் இன்பம்; சொல்லச் சொல்ல சொல் இன்பம். நினைக்க நினைக்க பொருள் இன்பம் ஊறும்.

அமுதூறும் சொற்களில் மனம் ஆழ்ந்து பதிய பல முறை படித்த பின்னரே மனம் இதன் சிறப்பை உணரும். அப்படி ஒரு அழகிய பாடல்.

 

 

இதில் ஹிந்து மத தத்துவங்கள் ஏராளம் சொல்லப் படுகின்றன.

அதை ஆய்வது தனிப் பெரும் கட்டுரையாக அமையும்

நம் ஆய்வுக்கான பொருளான அந்தணரும் வேதமும் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்தப் பாடலில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அந்தணரும் வேதமும் பல்வேறு விதங்களில் புகழப்படுவதைப் பார்க்க முடியும்.

அவையாவன:

 

1)‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும் (வரிகள் 12,13)

இங்கு வாய் மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது

 

2) நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை (வரி 14)

இந்த வரியில் அந்தணரும் அவர் ஓதும் அரு மறையும் குறிப்பிடப்படுகிறது.

 

3) பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! (வரி 42)

இந்த வரியில் வேதம் முதுமொழி என்று குறிப்பிடப்படுகிறது. திருமால் முதுமொழி முதல்வன் என விளிக்கப்படுகிறான்.

 

4 & 5) முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், (வரிகள் 47,48) இங்கு முதுமொழி என்றும் கேள்வி என்றும் வேதம் கூறப்படுகிறது.

 

6) ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம் (வரி 62)

இங்கு ஏஎ என்று சாம வேதத்தின் இசை இனிமை கூறப்படுகிறது.

 

7) வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ; (வரி 66)

இங்கு வேதம் குறிப்பிடப்பட்டு வேதத்து மறை நீ என திருமால் போற்றப்படுகிறார்.

 

8) வாய்மொழி மகனொரு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே! (வரிகள் 93,94)

இங்கு வாய்மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது.

ஆக இப்படி எட்டு இடங்களில் அந்தணரும், வேதமும் குறிப்பிடப்ப்டுவதைக் காண்பதோடு மட்டுமின்றி ஹிந்து தத்துவங்கள் பல அழகுற அடுக்கப்படுவதையும் காண்கிறோம்.

 

 

இந்த ஒரு பாடல் மட்டுமே விரித்து உரைக்கப்பட்டால் சங்க காலத்தில் வேரூன்றி இருந்த ஹிந்து மதத்தின் ஆணி வேர் கொள்கைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை அறியலாம்.

 

 

அத்தோடு இந்தத் தொன்ம நம்பிக்கைகள் பாரத நாடு முழுவதற்கும் பொதுவான ஒன்றாக இருந்ததும் தெரிய வருகிறது

 

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;            70

முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

 

 

என்று இந்த வரிகளில் சாம வேதத்தின் திரண்ட பொருள் கூறப்படுவதை வியப்புடன் பார்க்க முடிகிறது

இதைப் பாடிய புலவர் இளவெயினனார் அந்தணராக இருந்தால் சாம வேதத்தில் விற்பன்னராக அவர் இருந்ததோடு, அதை முறைப்படியும் இசைப்படியும் ஓதிய உத்தமர் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

 

அவர் அந்தணர் இல்லை என்றால் அந்தணர் இல்லாத ஒருவரும் கூட வேதத்தின் உட்பொருளை அறிய முடியும், அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்பதை பாடலிலிருந்து அறியலாம்.

 

 

சங்க காலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லை என்பது தெளிவாகிறது.

 

ஒன்று பட்ட ஒரு ஹிந்து சமுதாயத்தையே சங்க இலக்கியத்தில் நாம் காண முடிகிறது.

 

 

**********

திரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி? (Post No. 3480)

73ed7-shri

Research Article Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  6-01 AM

 

Post No.3480

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திரு என்ற சொல்லுக்கு செல்வம், அதிர்ஷ்டம், வளமை, லெட்சுமி, ஒளி— என்று பல பொருள் உண்டு. தற்காலத்தில் பெயருக்கு முன்பாகவும் கோவில், புனித நூல்கள், ஊர்கள், நாடுகளுக்கு முன்பாகவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம்.

9cf2c-shri-ganesh

மொழி இயல் ரீதியில் பார்த்தால் இது ‘ஸ்ரீ’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து (S=T) வந்தது தெரியும். அது மட்டுமல்ல; இதுவே ஆங்கிலத்தில் ஸர் SIR என்னும் பட்டத்தையும் ஸார் Sir (ஐயா) என்ற சொல்லையும் கொடுத்தது என்பதும் புலப்படும். திரு என்ற சொல்லுக்கு என்ன பொருள் உண்டோ, என்ன என்ன உபயோகம் உண்டோ அது அததனையும் சம்ஸ்கிருதத்திலும் ஸ்ரீ — என்ற சொல்லுக்கும் உண்டு. 3000 ஆண்டுகளுக்கு முன் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்து இரண்டு பெரிய மொழிகளாக உருவாயின. பிரித்தாளும் சூழ்ச்சியுடைய வெளி நாட்டார் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கி புதுக் கதைகளை எட்டுக்கட்டிவிட்டனர். உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்கிருத மூலத்துடன் எளிதில் தொடர்பு படுத்தலாம். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.

 

ஆங்கில நாட்டில் ஒரு காலத்தில் வீரதீரச் செயல்கள் செய்தோருக்கு ‘ஸர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து சான்றுகள் உள. ஆனால் பிற்காலத்தில் சிறப்பான செய்கைகள் சாதனைகள் புரிந்தோர் அனைவருக்கும் இப்பட்டம் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலுருந்து வெளியேறி பின்னர் காமன்வெல்த்COMMON WEALTH என்னும் அமைப்பிலுள்ள நாட்டு சாதனையாளருக்கும் இப்பட்டம் வழங்கப்படுகிறது.

 

‘ஸ்ரீ’ என்ற சொல்லின் இடமாறு தோற்றப் (Sri = Sir) பிழைதான் ஸர். நாம் எப்படி மதுரை என்பதை மருதை, குதிரை என்பதை குருதை, வாயில் என்பதை இல்வாய் என்றெல்லாம் மாற்றிச் சொல்ல்கிறோமோ அது போலத்தான் ச்ரீ என்பது ஸர் ஆகியது. இந்தியில் கூட தர்ம என்ற சொல்லை தரம் என்பர்.

 

இதற்கு இன்னொரு முறையிலும் விளக்கம் உண்டு. திரு என்பதே ஸர்(ரு) ஆனது என்று. ‘ச’ அல்லது ‘ஸ்’ என்பத ‘த’ அல்லது ‘த்’ ஆக மாறும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வி’த்’தை என்பதை வி’ச்’சை என்பர். த்யூதம் என்ற சொல் தமிழில் சூது எனப்படுகிறது. ஆங்கிலத்தில் எடுகேடியான் EDUCATION என்று எழுதி அதை எடுகேஷன் என்று உச்சரிப்பர். இவ்வாறு நூற்றுக்கணக்கான சொற்கள் டியான் TION என்று எழுதபட்டாலும் ஷன் SION என்றே உச்சரிக்கப்படும் அங்கும் டி என்பது ஷ ஆக மாறியதைக் காணலாம்.

 

ஆங்கிலத்தில் ஸர் SIR  பட்டம் சாதனை புரிந்தோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நமது நாட்டிலும் திரு, ஸ்ரீ என்பன எல்லாம் புனித அல்லது சாதனையாளருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்போழுது சர்வ சாதாரணமாக திருவாளர், திருமதி என்று எல்லோர் பெயர்க்கு முன்னாலும் போடத் துவங்கி விட்டோம். ஸர் என்பதும் ஒருவரை மரியாதையாக ஸார் (ஐயா Sir) என்று கூப்பிடுவதும் தொடர்புடைய சொற்களே. எப்படி நாம் திரு என்பதை மலிவான சரக்காக்கி எல்லோருக்கும் பயன் படுத்துகிறோமோ அப்படி அவர்களும் ஸார் என்பதை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

74595-sri

அது சரி, உங்கள் இஷடப்படி இப்படி வியாக்கியானம் செய்கிறீர்களே. ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்ட் (ETYMOLOGICAL) அகராதி போன்ற நூல்கள் இந்த சொல்லின் பிறப்பு (etymology) பற்றி என்ன கூறுகிறது? என மொழியியல் அறிஞர் வினவலாம். அவர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். இது லத்தீன் மொழியில் அல்லது பழைய பிரெஞ்சு மொழியில் (Latin or Old French) இருந்து வந்திருக்கலாம் என்று ஆயிரம் ஆண்டுக் கதையை மட்டுமே சொல்லுவர். அதற்கு முன் லத்தீனும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளும் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுவர்.  கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே! என்போர் கதையாக சம்ஸ்கிருதம் என்பதை நேராக ஒப்புக்கொள்ளாமல் அதற்கும் ஒரு மூல மொழி இருந்ததாகவும் அதிலிருந்து பிரிந்ததாக்கும் என்றும் தட்டி மழுப்புவர்!

 

மேலும் அவர்கள் கூறும் பழைய சொற்கள் இன்றும் உலகில் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் இது செரி SERE என்பதிலிருந்து ஸர் SIR ஆகி இருக்கலாம் என்பர். இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்ரீ என்பதை செரி SERE என்றுதான் எழுதுகின்றனர். இன்னும் சிலர் செயுர், சிர், சிரி என்பனவற்றிலிருந்து மருவியிருக்கலாம் என்பர். அதையும் இலங்கையில் காணலாம அவர்கள் ஸ்ரீ மாவோ என்பதை சிறீ (siri) மாவோ என்பர். சிறீலங்கா (SRI LANKA) என்றே எழுதுவர். ஸ்ரீ லங்கா என்றால் ஒளிமிகு இலங்கை என்று பொருள்.

 

இந்தியாவில் ஸர் (SIR) பட்டம் பெற்றோர்:

ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திர போஸ், சி.பி.ராமஸ்வாமி அய்யர், அண்மையில் சசின் டெண்டூல்கர் மற்றும் பலர்.

 

திரு அல்லது ஸ்ரீ அடை மொழி உடைய நூல்கள், ஊர்கள் (சில எடுத்துக்காட்டுகள் மட்டும்):-

 

ஸ்ரீ சைலம், ஸ்ரீ நகர், ஸ்ரீ பெரும்புதூர்

d6814-shri-symbol-svg

திருவாரூர், திருவையாறு முதலிய 400 பாடல் பெற்ற சிவ, விஷ்ணு தலங்கள்.

 

திருவாசகம், திருக்கோவையார் முதலிய நூல்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்

 

–Subham–

 

ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸ் (Post No. 3465)

Written by S NAGARAJAN

 

Date: 20 December 2016

 

Time uploaded in London:- 5-48 am

 

Post No.3465

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

நல்ல புத்தகம்

ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்

(Brindavan Express – A train of thought)

ச.நாகராஜன்

 

 

நல்ல எழுத்தாளர் தேசிகன்

 

நண்பர் வி.தேசிகனின் ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸ் ஒரு அழகிய பயணத்திற்கு அடி கோலுகிறது.

 

தேசிகன் ஒரு சிறந்த விஞ்ஞானி. மதுரையில் செந்தமிழ் மணம் கமழ வளர்ந்தவர். பாரம்பரிய மிக்க குடும்பத்தில் அற நெறியை வழுவாது காக்கும் குல மரபைப் பின்புலமாக கொண்டு வளர்ந்தவர்.

 

எலக்ட்ரானிக்ஸ் மாஸ்டர் டிகிரியை மதராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பெற்று விட்டு டிஃபென்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷனில் பணியாற்றச் சேர்ந்தார்.

நீண்ட நெடும் பணிக் காலத்தில் அவர் அடைந்த அனுபவங்கள் பல.

 

 

1983ஆம் ஆண்டு பாரத பிரதம்ர் இந்திராகாந்தி அவர்களிடமிருந்து “ஸ்யிண்டிஸ்ட் ஆஃப் தி இயர்” (Scientist of the Year) என்று சிறந்த விஞ்ஞானிக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் விருதைப் பெற்ற பெருமைக்குரியவர்.

ஏராளமான தொழில்நுட்ப ஆய்வுப் பேப்பர்களை சரளமாக் எழுதும் ஆற்றல் பெற்ற அவர், தனது எழுத்துத் திறமையால் அன்றாடம் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் வாழ்வினில் ஏற்படுத்தும் தாக்கங்களை இந்த நூலில் அழகுற விளக்குகிறார்.

 

 

சம்பவக் கோவைகள்

 

அவரது மேல் அதிகாரியுடனான சந்திப்பு. அவர் வாழ்நாள் சாதனையாக அவர் உருவாக்கிய 40 அடி நீளமுள்ள சங்கம் என்று பெயரிடப்பட்ட அற்புதமான ஆய்வு வாகனம், அதை அப்துல்கலாம் உள்ளிட்டவர்கள் கண்டு பாராட்டிய பாங்கு, மரீனா பீச்சில் சுண்டல் விற்கும் அழகு, மதுரைவீரன் படத்தைப் பார்க்க அந்தக் கால வழக்கப்படி க்யூவில் நண்பர்களுடன் நின்ற நினைவு,விம்பிள்டனில் உள்ள ஆல் இங்க்லேண்ட் களப்பிற்குச் சென்றது என ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் நகைச்சுவை மிளிர அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

 

சிந்தனைச் சிதறல்களாக அரும் பெரும் கருத்துக்கள் பளிச் பளிச்சென ஆங்காங்கு கட்டுரையில் மின்னும் போது அதில் மனம் ஆழ்ந்து லயித்து விடுகிறது.

 

சிந்தனைக்கும் விருந்து

 

சிறந்த நாவல்கள், சிறந்த  முடிவுகள் (Great Novels, Great endings) என்ற கட்டுரையில் சார்லஸ் டிக்கன்ஸின் நாவலான எ டேல் ஆஃப் டூ சிடீஸில் ( A Tale of Two Cities) வரும் சிறந்த கதாபாத்திரம் சிட்னி கார்டனை நினைவு  கூர்ந்து நாவலின் கடைசி வரியைச் சுட்டிக் காட்டுகிறார் அவர்.

 

இன்னும் பல அழகிய நாவல்களின் முடிவுகளை அவர் சுட்டிக் காட்டும் பாணியே தனி!

 

தன் உள்ளத்தில் ஊறி இருக்கும் பிரபல கவிஞர்கள் மற்றும் மேதைகளின் சிறந்த வரிகளை ஆங்காங்கே பொருத்தமான் இடத்தில் கட்டுரைகளில் மேற்கோளாகப் பயன்படுத்தியிருப்பதைப் படிக்கும் போது கட்டுரையின் விஷயம் கனமாக ஆகிறது. இப்படி ரவீந்திரநாத் தாகூர், ஹாரி எமர்ஸன் ஃபாஸ்டிக், வில்லியம் ஹாஸ்லிட் உள்ளிட்ட ஏராளமானோரின் பொன் மொழிகளைப் படிக்கும் போது உள்ளம் உவகையுறுகிறது..

 

நேனோ டெக்னாலஜியைப் (Nano technology)  பற்றிய பல செய்திகளை நம் முன் வைத்து எதிர்கால தொழில்நுட்பத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறார்.

 

பேத்தி தாரா அவருக்கு ஸ்காட்லாந்தில் பிறந்த தின வாழ்த்தைச் சொல்லிய பாங்கைப் படித்து நாம் நெகிழும் போதே அவரது மனைவிக்கு அடுப்பங்கரையில் உதவி செய்யப் போய் அல்லாடியதையும் சேர்த்து ரஸிக்கிறோம்.

 

 

வாழ்க்கை!

பன்முக உணர்வுகளைத் தூண்டும் வாழ்க்கை!

உறவுகள், அதில் ஊறும் சிலிர்ப்புகள்! நண்பர்கள், அவர்களுடனான சந்திப்புகள், இழப்புகள், அதனால் மனதில் ஏற்படும் ஆறாத வ்டுக்கள் – இப்படி எல்லாவற்றையும் படிக்கும் போது எடுத்த புத்தகத்தை (239 பக்கங்கள்)  முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது.

 

அழகிய சரளமான ஜிலு ஜிலுவென்ற ஆங்கில நடையில் தேசிகன் எழுதிய கட்டுரைகள் பிரபல ஆங்கில நாளிதழான டெக்கான் ஹெரால்டில் நடுப்பக்கத்தில் வந்து விடும்.

 

அவற்றின் தொகுப்பும், பல்வேறு வலைத்தளக் கட்டுரைகளும் சேர்ந்த ஒரு கலவையாக மின்னுகிறது இந்த நூல்

இந்த நூலை வெளியிட்டே ஆக வேண்டும் என்று ஆக்கமும் ஊக்கமும் தந்த நண்பரான ஆர்வி ராஜனே அதை அழகுற அச்சிட்டும் தந்துள்ளார் நல்ல நண்பர். அழகிய தாளில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வெளியீடு.

 

புத்தகம் எழிலுற உயர்ந்த தரத்துடன் அச்சிடப்பட்டிருக்கிறது.

விலை ரூ 350. கிடைக்குமிடம் Bookventure, 38, Thanikachalam Road, T.Nagar, Madras, 600 017, India.

 

புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்:

 

About his Boss:

 

My boss Burman, a confirmed bachelor was in charge of system integration. He was a chain smoker. If he liked someone, he would call him an ‘idiot’ or ‘a fool’ –  I was one of his favorite idiots!

 

On seeing his dream vehicle,  the 40 feet long SANGAM:

 

I went towards my favorite SANGAM  and stood there for a long time. I looked at her and gently whispered (what Brutus told Cassius):

‘Forever and forever farewell, my dear

If we do meet again, why, we shall smile.

If not, why then this parting was well made.’

 

About ஸSundal :

 

If there be Chat Centres, fast food outlets all over our cities, why can’t someone open a ‘Sundal Center’?

 

About KDK (Kumbakonam Degree (Coffee) Kaapi :

 

Thank you KDK

You bring me joy in the morning

You bring me joy in the morning;

 

About the requirement of a positive newspaper :

 

I have a real problem on hand. All my life I have enjoyed sipping my morning coffee, reading the morning newspaper. I have recently discontinued my habit as it is no more a pleasant experience. Now I need a ‘Positive Newspaper’ badly.

 

I have a dream:

 

My idea of Next-gen city is that it should be

Totally green and with Zero pollution

With efficient and complete public transportation

With minimum private vehicles

Total Connectivity – Airports, roads, sea (where applicable)

Full Safety

 

ஒரு பானைச் சோறுக்கு ஒரு  சோறு பதம்! ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸ் ஒரு சுவையான விருந்து!

 

வாழ்த்துக்கள் தேசிகன், வாழ்த்துக்கள்!!

******

 

 

ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு! (Post No3451)

Research Article written by London swaminathan

 

Date: 15 December 2016

 

Time uploaded in London:- 10-25 am

 

Post No.3451

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் பாடிய தவளைப் பாட்டு மிகவும் பிரபலமானது. இதை கிரேக்க நாட்டின் கவிஞன் அரிஸ்டோபனிஸின் தவளைப் பாட்டுடன ஒப்பிடுவர் இருமொழி வித்தகர்.

தமிழில் கம்பன் சொன்ன தவளைப் பாட்டுடன் இதை ஒப்பிட்டு ஆராய்வோம்.

 

ரிக் வேத தவளைப் பாட்டு

ரிக்வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் வசிஷ்டரும் அவரது சந்ததியினரும் பாடிய துதிப்பாடல்கள் உள்ளன. இது வேதத்தின் மிகப்பழைய பகுதிகளில் ஒன்று. ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் வசிட்டனுக்கு குறைந்தது 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரேக்க நாட்டின்  நகைச்சுவை எழுத்தாளன் அரிஸ்டோபனீஸ் இதே தவளை உவமையைப் பயன்படுத்தி அரசியல் கிண்டல் செய்துள்ளான். இது கி.மு 405-ல் நடந்தது. அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் கம்பன் இதைப் பயன்படுத்தியுள்ளான. பாரதி பாடல்களிலும் இந்தப் பாடலின் தாக்கம் தெரிகிறது.

இதோ வசிட்ட மகரிஷியின் தவளைப் பாட்டின் சுருக்கம்:

1.ஓராண்டுக்கால மவுன விரதம் அனுஷ்டித்த பிராமணர்கள் எழுந்துவிட்டனர். தவளைகளை மழைக்கடவுள் (பர்ஜன்யன்) எழுப்பிவிட்டான்.

2.குளத்தின் தரையில், உலர்ந்த தோலுடன் கிடந்த தவளைகளின் மீது எப்போது வானத்திலிருந்து வெள்ளம் இறங்கிவந்ததோ! தவளைகள் இசைக்கும் ஒட்டுமொத்த இசை தாய்ப் பசுவும் கன்றுகளும் சேர்ந்து குரல் கொடுப்பது போல இருக்கிறது.

3.தாகத்தில் தண்ணீருக்காக தவித்த காலத்தில் அவற்றின் மீது மழை பொழிந்து தள்ளிவிட்டது. ஒரு தந்தை மகனுடன் கொஞ்சிக் குலவுவது போல, ஒவ்வொரு தவளையும் மற்றொன்றை வாழ்த்தியும் பேசியும் மகிழ்கின்றன.

 

4.தண்ணீர் ஓ ட் டத்தில் நீந்தி, விளையாடுகையில், ஒன்றை மற்றது அன்புடன் வரவேற்கிறது. தண்ணீரில் நனைந்த தவளை தாவிக்குதிக்கையில், பச்சைத் தவளையும் புள்ளித் தோல் தவளையும் ஒருங்கே பாடுகின்றன. .

5.ஒரு தவளை மற்றொரு தவளையின் மொழியை திருப்பிச் சொல்லுவது, ஆசிரியர் சொல்லித் தரும் பாடத்தை பையன் திருப்பிச் சொல்லுவது போல இருக்கிறது.

நீரில்  இப்படி வாய்ச்சாலத்துடன் பேசுகையில் உன்னுடைய ஒவ்வொரு உறுப்பும்  பெருக்கிறது.

  1. ஒரு தவளை மாடு போல “அ ம்மா” என்கிறது மற்றது ஆடு போல “மே மே” என்கிறது. ஒரு தவளை பச்சை நிறம்; இன்னொன்று புள்ளியுடன் காணப்படும்.

அவை எல்லாவற்றுக்கும் பெயரோ ஒன்றேதான்; ஆயினும் அவற்றின் குரலோ வெவ்வேறு குரலை ஏற்றி இறக்கிப் பேசுகின்றன.

7.இது அதிராத்ர யாகத்தில் சோம யாகத்தில் நிரைந்த குடங்களைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசும் பிராம ணர்களைப் போல இருக்கிறது.

ஆகையால், எல்லா தவளைகளும் இந்த நாளைக் கொண்டாட குளத்தைச் சுற்றி நிற்கின்றன- முதல் நாள் மழை இது.

 

8.ஓராண்டுக் காலம் முழுதும் சோமரசத்துடன் பிராமணர்கள் செய்யும் யக்ஞம்,—-இதோ உயர்ந்த குரலில் இசைக்கின்றனர்.

இந்த அத்வர்யுக்கள், கொதிக்கும் கெட்டில் போல வியர்த்துக் கொட்டுகின்றனர். எல்லோரும் ஒளியாமல் வந்து நிற்கின்றனர்.

 

9.கடவுள் நிர்ணயித்த 12 மாத ஒழுங்கு நியதியை கடை பிடிகின்றார்கள். மனிதர்கள் எப்போதும் பருவ காலத்தைப் புறக்கணிப்பதில்லை.

மழைக்காலம் வந்துவிட்டால் கொதிக்கும் கெட்டில்களுக்கு விடுதலை கிடைக்கும்.

10.பசுக்குரல், ஆட்டுக்குரல் ஆகியன பணத்தை வாரி வழங்குகின்றன. பச்சைத் தவளையும் புள்ளித் தவளையும் நமக்கு பொக்கிஷத்தை உறுதி செய்யும்..

தவளைகள் நமக்கு நூற்றுக் கணக்கான பசுக்களைத் தருகின்றன.. நம்முடைய வாழ் நாளை ஆயிரம் சோமரசம் பிழியும் வரை அதிகரிக்கின்றன.

 

பாடல் முழுதும் பிராமணர்களும் தவளையும் ஒப்பிடப்படுகின்றனர்.

 

கம்ப ராமாயணத்தில்

தவளைப் பாட்டில் வரும் (ஆசிரியர்- மாணவர்) உவமையைக் கம்பனும் பயன்படுத்துவதை கீழே காணலாம்:–

கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்

பல்விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி,

செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா

நல் அறிவாளரின், அவிந்த, நா எலாம்

–கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

பள்ளி ஆசிரியரிடம் கல்வி கற்கும் சிறுவர்கள் ஆரவாரத்துடன் சப்தமிட்டுக்கொண்டே கல்வி கற்பார்கள். இதுபோல மழைக் காலத்தில் தவளைகள் எல்லாம் சப்தம் போட்டன. ஆனால் சரத்காலம் வந்தவுடன் அவை எல்லாம் மிகுதியாகக் கத்தாமல் அடங்கிப் போயின. இது எப்படி இருந்தது என்றால் அறிஞர்கள் எங்கு சொல் எடுபடுமோ அந்த இடத்தில் மட்டுமே பேசுவர்.

 

 

ரிக் வேதப் பாடலில் வேறு பல விஷயங்களும் நமக்குத் தெரிகின்றன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்று நாம் உலகிற்குக் கற்பித்தோம்; 100, 1000 ஆகிய டெஸிமல் (தசம) ஸ்தானத்தை நாம் உலகிற்குக் கற்பித்தோம். மழையையும் இயற்கையயும் ரசித்துப் பாடுவதை உலகிற்குக் கற்பித்தோம். தவளை உவமையைக் கற்பித்தோம். ஓராண்டுக் காலத்துக்கு பிராமணர்கள் நீண்ட யாகம் செய்ததை அறிகிறோம். அவ்வளவு காலத்துக்கு அவர்கள் மவுன விரதம் கடைப்பிடித்ததை அறிகிறோம்.

 

பாரதி பாடுகிறான்:

 

பாரதி பாடலில் முப்பது கோடி முகமுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்ற வரிகளையும் பல நிர்றப் பூனைகள் பற்றிய பாடலையும் இந்த ரிக் வேத தவலைப் பாட்டு நினைவுபடுத்தும்:-

 

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்.
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி.
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

 

 

–suBham–

 

 

மஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்! (Post No.3437)

Written S NAGARAJAN

 

Date: 11 December 2016

 

Time uploaded in London: 5-35 am

 

Post No.3437

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

டிசம்பர் 11. மஹாகவி பாரதியாரின் பிறந்த தினம். அவர் கண்ட அற்புதமான அகண்ட பாரதத்தை அமைக்க உறுதி பூணுவோம்!

 

மஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்!

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனை

மஹாகவி பாரதியாரின் சிந்தனைகள் தெளிவானவை. சமச்சீர் தன்மை உடையவை. காலத்தால் முற்பட்டுத் தரப்பட்டவை. காலத்தை விஞ்சி நிற்கும் அறப்பண்புகளின் அடிப்படையிலானவை. ஆகவே தான் அந்த மஹாகவியை உலக மஹாகவியாக உலகம் போற்றுகிறது.

இந்தியா பற்றிய தெளிவான சிந்தனையை அவர்  தான் நடத்திய ;இந்தியா’ பத்திரிகை வாயிலாக 27-4-1907 இதழில் தெரிவிக்கிறார்.

அதை அப்படியே பார்ப்போம்:

கட்டுரையின் தலைப்பு :

“ஸ்வராஜம்” என்பதில் “ஸ்வ” என்பது யார்?

கட்டுரை :-

ஸ்வராஜ்யம் வேண்டுமென்று நாம் ஏன் கேட்கிறோம்? இங்கே “ஸ்வ” என்பது யாரைக் குறிப்பிடுகிறது? ஸ்வராஜ்யம் வரும்போது அது மகமதிய ராஜ்யமாக இருக்குமா? அல்லது ஹிந்து ராஜ்யமா? எது?

“ஸ்வ” என்றால் “தனது” என்று அர்த்தமாகிறது. யாருடையது? இந்தக் கேள்விக்கு நாம் மறுமொழி சொல்வதென்னவென்றால், பாரத தேவியுடையது.

பாரத தேவி தன்னைத் தானே பரிபாலனம் செய்து கொள்வது ஸ்வராஜ்யம் ஆகும். “ஸ்வ” என்பது பாரத தேவியைக் குறிப்புடுகிறது.

பாரத தேவி என்றால் கிறிஸ்தவர் மட்டுமன்று, மகமதியர் மட்டுமன்று, எல்லா ஜனங்களும்;; அகண்ட பாரதம், பிரிவு செய்யப்படாத பாரதம்.

 

 

பிரிவு செய்யப்படாத அகண்ட பாரதம் தன்னைத் தானே ஆள்வதென்றால் என்ன அர்த்தம்? ஒரு தனி ராஜா ஆள்வதென்று அர்த்தமில்லை. ஒரு சந்ததியார் ஆள்வதென்று அர்த்தமில்லை. பிரஜா பரிபாலனம் அல்லது ஸர்வ ஜன ராஜ்யம் என்று அர்த்தம்.

ஸர்வ ஜன ராஜரீகம் என்றால் அது அராஜரீகமாய் விட மாட்டாது. இப்பொழுது இங்கிலாந்திலே கூட. பெயர் மட்டிலே ஒரு ராஜவமிசத்தார் இருக்கிறார்களேயல்லாமல் வாஸ்தவத்திலே, பிரஜைகள் தான் ஆட்சி புரிகிறார்கள்.

 

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலே பெயர் மாத்திரத்திற்குக் கூட ராஜா இல்லாமல் பிரஜா ராஜ்யம், அதாவது குடியரசு நடந்து வருகிறது.

 

இந்தியாவிலேயும் ஜனராஜ்யம் ஏற்பட் வேண்டுமென்பதே நாட்டவர்களின் அபீஷ்டம். இது இங்கிலாந்திலிருப்பது போல ஒரு ராஜா வைத்துக் கொண்டு நடத்தப்படுமா, அல்லது அமெரிக்காவைப் போல் குடியரசாக நடக்குமா என்பது இப்போது ஊஹித்துக் கூற முடியாது. அது அந்தச் சமயத்திலுள்ளதால் தேச வர்த்தமானங்களைப் பொறுத்த விஷயமாகும்.

 

***

 

   சேதமில்லாத ஹிந்துஸ்தானம்

 

ஆக பாரதியார் கனவு கண்டது அகண்ட பார்தம்; குடியரசு. மக்களின் ஆட்சி. இதில் முதலாவதைத் தவிர மற்ற இரண்டும் நனவாகி விட்டதென்றே கூறலாம்.

பாப்பா பாட்டில் கூட பாரதி சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையே தெய்வமென்று கும்பிட பாப்பாவிற்கு அன்புரை வழங்குகிறான்.

 

 வேதம் உடையதிந்த நாடு – நல்ல

                வீரர் பிறந்ததிந்த நாடு

            சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்

                 தெய்வமென்று கும்பிடடி பாப்பா

 

எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்

 

மஹாகவி கனவு கண்ட பாரத ஸமுதாயம் பற்றி அவரே மிகத் தெளிவாக தனது பாடலில் கூறி இருக்கிறார்:

 

பாரத ஸமுதாயம் வாழ்கவே – வாழ்க, வாழ்க,

பாரத ஸமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய ஜய ஜய ஜய

பாரத ஸமுதாயம் வாழ்கவே

என்று ஆரம்பிக்கும் மஹாகவி,

 

 

,முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத ஸமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை – வாழ்க!

என்று  கூறி,  அங்கு,

 

எல்லோரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் –வாழ்க

பாரத ஸமுதாயம் வாழ்கவே!

என்று முடிக்கிறார்

 

இப்படி மிகத் தெளிவாக பாரத நாட்டின் குடியாட்சி பற்றியும் அகண்ட பாரதம் பற்றியும் பாரத ஜன ஸமுதாயம் பற்றியும் தான் கண்டிருக்கும் காட்சியை ம்ஹாகவி நம் முன் வைத்துள்ளார்.

இந்த அகண்ட பாரதக் காட்சியை ஒவ்வொரு இந்தியனும் தன் உளத்துள்ளே கண்டு அதை அமைக்கப் பாடுபட வேண்டும்.

அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்!

 

****

 

மாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது! (Post No 3433)

Written by London swaminathan

 

Date: 9 December 2016

 

Time uploaded in London: 10-45 am

 

Post No.3433

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

(Posted in English as well)

நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா பலகலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்ன வேதபாரதி என்ர பெயரில் சாமியார் ஆனார்.

 

மாமன்னன் அசோகன் அவன் தலைநகரான பாடலிபுத்ரம் (பாட்னா) அருகில் கங்கை நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அமைச்சர்கள், பரிவாரம் புடைசூழ நின்றிருந்தான் அசோகன். திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். யாராவது இந்த கங்கை நதியைப் பின்னோக்கி ஓடச் செய்ய முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் திகைத்து நின்றனர்.

 

மாமன்னன் ஆயிற்றே! ஆகவே ஒரு மந்திரி பயந்துகொண்டே சொன்னார்:

“மன்னர் மன்னவா! உலகில் எவ்வளவோ காரியங்களை நடத்த முடியாது என்று நினைப்பர்; ஆனால் உங்களைப் போன்ற மாவீரர்கள் நடத்திக் காட்டிவிடுவீர்கள்; ஆயினும் ஒரு நதி பின்னோக்கிச் சென்றதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. என் பதிலில் குறையிருந்தால் மன்னிக்கவும்” – என்று சொல்லி முடித்தார்.

 

அந்தப் பக்கமாக நடந்து சென்ற ஒரு விலை மாது இதைக் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு அருகில் வந்தாள். “நான் செய்வது இழி தொழில் ஆகையால் இங்கு பேசலாமா என்று தெரியாது. மன்னர் அனுமதித்தால் நான் பேசுகிறேன்”.

 

மாமன்னன் அசோகன் “அதற்கென்ன? பெண்ணே, பேசு” என்றான்.

அந்தப் பெண் சொன்னாள். “இதோ பாருங்கள். இப்பொழுது நதியைப் பின்னோக்கி ஓடச் செய்கிறேன். அது தோன்றிய மலையை நோக்கி ஓட வைக்கிறேன்” என்றாள்.

 

எல்லா அமைச்சர்களும் வியப்புடன், “செய்து காட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவள் சொன்னவுடன் நதி மேல் நோக்கி மலையை நோக்கி ஓடத்துவங்கியது. இதனால் வரக்கூடிய இயற்கை விபத்துகளை உணர்ந்த அசோகன் “போதும் போதும் நிறுத்திவிடு; முன்னோக்கியே ஓடச் செய்துவிடு” – என்றான் அவளும் அப்படியே செய்தாள்.

 

மன்னன் கேட்பதற்கு முன்னால் அனைத்து அமைச்சர்களும், “அம்மணி! எப்படி இந்த அதிசயத்தைச் செய்தீர்கள்? என்று வினவினர்.

அவள் சொன்னாள்,

 

“வாழ்நாள் முழுதும் ஒருவர் ஏதேனும் ஒரு உறுதிமொழி அல்லது விரதத்தைக் கடைப் பிடித்து அதை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்தால் மகத்தான சக்தி வரும். அந்த சக்தியை ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செலவிடலாம்

“நான் சொல்லுவது உண்மையானால்”, “நான் செய்தது உண்மையானால்” என்று சொல்லிவிட்டு இப்படிக் கட்டளையிடால அது நிறைவேறும் என்றாள்.

 

அம்மணி நீங்கள் என்ன உண்மையை , உறுதி மொழியை ரகசியமாகக் கடைப்பிடித்தீர்கள்? என்று கேட்டார்கள்.

நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த விலை மாதர் தொழிலில் இறங்கினேன். அப்பொழுது இந்தத் தொழிலிலும் ஏதேனும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா என்று வியந்தேன். அன்று என் மனதில் தோன்றியது. “மாமன்னன் வந்தாலும் சரி குஷ்ட ரோகி வந்தாலும் சரி; அவர்களுக்கு மனத்தளவிலும் உடல் அளவிலும் சமமான இன்பம் கொடுப்பேன்” என்ற திட விரதம் பூண்டேன். அந்த விரதத்தை இன்றுதான் முதல் தடவையாக உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு விரதத்தை ஏற்று அதை வாழ்நாள் முழுதும் கடைப் பிடித்தால் அப்பொழுது மகத்தான சக்தி சேரும். அதை ஒரே ஒரு முறை பயன்படுத்தலாம்! என்று சொல்லிவிட்டு அவள் வந்த வழியே திரும்பிச் சென்றாள்.

 

என் கருத்துகள்:-

 

இதுபோல மனத்தின் மகத்தான சக்தியைக் காட்டும் சில கதைகள் நினைவுக்கு வருகின்றன. இவைகளை முன்னரே எழுதிவிட்டதால் தலைப்பை மட்டும் தருகிறேன்:-

1.நோயுற்ற ஹுமாயுனைக் காப்பாற்ற, அவனது தந்தை (Babar) மூன்றுமுறை வலம் வந்து “அல்லாவே! என் உயிரை எடுத்துக் கொண்டு என் மகனைக் காப்பாற்று” என்ற சம்பவம்

2.துரியோதணனைக் காப்பாற்ற “நிர்வாணமாக நில்; என் பார்வை படுமிடம் எல்லாம் பலம் பெறுவாய்; உன்னை யாரும் கொல்லமுடியாது” என்று சொல்லியும் அவன் தனது மர்ம ஸ்தானங்களை மறைத்த சம்பவம்

 

3.திரிசங்கு மன்னனை விஸ்வாமித்திரன் சொர்க்கத்துக்கு அனுப்பிய சம்பவம் — இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

 

–Subham–

 

 

 

‘பாரதியும் திலகரும்’ (Post No.3428)

Written by S NAGARAJAN

 

Date: 8 December 2016

 

Time uploaded in London: 4-36 AM

 

Post No.3428

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 13

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி

‘பாரதியும் திலகரும்

 

ச.நாகராஜன்

 

 

இதுவரை வந்த கட்டுரைகள் பற்றி

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இது வரை 12 நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் ஆகியவை பற்றிய சுருக்கமான விவரங்களை இந்தத் தொடரில் பார்த்தோம்.

புதிதாக இந்தக் கட்டுரையைப் படிப்போருக்கும் இதைத் தொடர்ந்து படிப்போருக்கும் முந்தைய கட்டுரைகளில் சொல்லப்பட்ட நூல்/கட்டுரை/வானொலி உரை தலைப்பை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

 

 

  • என் தந்தை – பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதியுள்ள நூல்
  • பாரதி நினைவுகள் – திருமதி யதுகிரி அம்மாள் அவ்ர்களின் புதுவை வாச நினைவுக் கோவை
  • என் கணவர் – மஹாகவி பாரதியாரின் மனைவியார் செல்லமா பாரதி அவர்கள் 1951இல் திருச்சி வானொலியில் ஆற்றிய உரை
  • நான் கண்ட நால்வர் – வெ.சாமிநாத சர்மா அவர்களின் நூல்
  • பாரதி புதையல் மூன்றாம் தொகுதி – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
  • பாரதியார் பிறந்த நாள் – அரவிந்த ஆஸ்ரமவாசியான அமுதன் புதுவை வானொலியில் ஆற்றிய உரை
  • மஹாகவி பாரதியார் – வ.ரா. எழுதிய நூல்
  • Subrahmaniya Bharati – Partiot and Poet – Prof P.Mahadevan
  • பாரதியார் கவி நயம் – 31 அறிஞர்கள் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
  • கண்ணன் என் கவி – கு.ப.ரா. சிட்டி ஆகியோர் எழுதிய நூல்
  • பாரதி நான் கண்டதும், கேட்டதும் – பி.ஸ்ரீ எழுதிய நூல்
  • பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்

 

இது தவிர ‘மஹாகவி பாரதியாருக்குச் செய்யும் மஹத்தான துரோகம்’ என்ற எனது கட்டுரையில் பாரதியின் கட்டுரைகள், கவிதைகளை  மனம் போல மாற்றி வெளியிடும் போக்கு பற்றி எழுதப்பட்டிருந்தது.

 

 

அடுத்து ‘பாரதியார் கவசம் அணியுங்கள்’ என்ற கட்டுரையில்  இன்றைய ஊழல் நிறைந்த வாழ்க்கை முறையில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் பாரதியாரின் பாடல்களைக் குறிப்பிட்டு இந்த பாரதி கவசத்தை அணியலாம் என்ற ஆலோசனை தரப்பட்டிருந்தது.

 

இவற்றைப் படித்தால் மஹாகவி பாரதியார் என்ற பிரம்மாண்டமான கடல் எவ்வளவு பெரியது என்ற உணமை தெரியும்.

 

 

இப்போது மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் தொடரில் மேலும் சில நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

 

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி – பாரதியும் திலகரும்

தினமணி சுடரில் 1980,1981,1982 ஆம் ஆண்டுகளில் பாரதியை ஒட்டிய நினைவுகள் என்ற தொடரில் பல்வேறு தலைப்புகளில் பாரதியைப் பற்றி பிரபல எழுத்தாளர் பெ.நா.அப்புஸ்வாமி எழுதி வந்தார்.

 

 

இந்தத் தொடரில் 22-6-1982, 29-6-1982, 4-7-1982 ஆகிய தேதியிட்ட இதழ்களில் ‘பாரதியும் திலகரும்’ என்று பெ.நா.அப்புஸ்வாமி எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

 

பச்சையப்பன் கல்லூரிக்கு விடுமுறை விட்ட ஆங்கிலேயர்

இதில் சென்னையில் நட்ந்த ஒரு சம்பவத்தை பெ.நா.அப்புஸ்வாமி நினைவு கூர்கிறார்.

 

அவரது சொற்களில் அப்போதிருந்த நாட்டு நிலைமை இது தான்:

 

“பாரதியின் மனம் பொதுவாக வன்மை முறைகளை ஆதரிக்காத மனமாக இருந்த போதிலும், ஓரளவு திலகருடைய வன்மைமுறைச் சார்பான கட்சியை ஆதரித்தது என்றே கருத வேண்டும். பாரதி கோகலேயையும் (கோகலே சாமியார்  பாடல்), திலகரையும் (வாழ்க திலகர் நாமம்) பற்றிப் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட பின்னணி நாட்டில் நிலவிய பொழுது திலகர் காலமானார். அப்பொழுது, பாரதி அரங்கசாமி ஐயங்காரின் பாராட்டைப் பெற்று, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில், செய்தித் துறை முதலியவற்றைக் கவனித்து வரும் குழுவில் ஒருவராக இருந்து வந்தார்.”

பெ.நா.அப்புஸ்வாமி, திலகர் இறந்த நாளில் நடந்த சம்பவம் ஒன்றை அவரது நண்பர் எஸ்.ஆர்.வெங்கடராமன் சுட்டிக் காட்ட, அதை விளக்குகிறார்.

 

பால கங்காதர திலகர் இந்திய நாட்டின் மாபெரும் தலைவர். 1958ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 23ஆம் தேதி பிறந்த திலகர் 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று காலமானார்.

எஸ் ஆர்.  வெங்கடராமன் பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக இருந்தார். அந்தக் காலத்தில் பச்சையப்பன் கல்லூரி சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்தது.

அந்தக் கல்லூரிக்கு ரென் என்னும் ஆங்கிலேயர் தலைமை ஆசிரியராக இருந்தார்.இளைய வயதின்ரான அவர் பெரும்பானிமையான ஆங்கில மக்களைப் போன்று இந்திய சுதந்திரத்தில் விருப்பம் உடையவராக இருந்தார்.

 

திலகர் காலமான செய்தியைக் கேட்ட பின்னர் அவர் தம்முடைய கல்லூரி மாணவர்களை கல்லூரியின் உட்புறத்தில் உள்ள திற்ந்த கூடத்தில் கூடச் செய்தார். திலகருடைய நற்பண்புகளைப்ப் பற்றி ஐந்து நிமிஷம்  போல் பாராட்டிப் பேசினார். பேசிய பின், “இது உங்களுக்கு ஒரு துக்ககரமான நாள். ஆதலால் இன்று நம்முடைய கல்லூரிக்கு விடுமுறை நாளாக் அதை மதிப்பது நமது கடமை” என்று சொல்லி கல்லூரியை மூடி விட்டார்.

அந்தச் செய்தியைப் பத்திரிகைக்கு அறிவிக்கும் செய்தி எஸ்.ஆர்.வெங்கடராமனிடம் ஒப்புவிக்கப்பட்டது.

 

 

பாரதியாரின் கூற்று

 

அவர் சுதேசமித்திரன் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அரங்கஸ்வாமி ஐயங்காரைக் கண்டார்.

 

‘செய்திப் பொறுப்பு பாரதியைச் சேர்ந்தது, அவரிடம் போ’ என்று அவர் சொல்ல வெங்கடராமன் பாரதியிடம் சென்றார்.

வெங்கடராமன் தெரிவித்த செய்தியை நம்ப முடியாமல் “யார்? ஒரு வெள்ளைக்காரனா திலகரைப் புகழ்ந்து பேசினான்? அவனா உங்களுக்கு விடுமுறை விட்டான்? என்றெல்லாம் கேட்டு விட்டு பாரதியார், ‘இந்த நாட்டில் அவன் அந்தப் பத்வியில் அதிக நாள் இருக்க மாட்டான்’ என்றார்.

 

 

விடுமுறை அளிக்கப்பட்ட செய்தி சுதேசமித்திரனில் வந்தது.

நிர்வாகத்திற்கு ரென்னுக்கும் இதனால் பிரச்சினை ஏற்பட,

ரென் கல்லூரியை விட்டு விலக நேர்ந்தது.

புலமை மிக்க அவர் இலக்கண நூல்கள், கட்டுரை எழுதுவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுத ஆரம்பித்தார்.

 

இப்படி ஒரு அரிய செய்தியை பெ.நா.அப்புஸ்வாமி பாரதியும் திலகரும்’ கட்டுரையில் (மூன்று பகுதிகள்) தெரிவிக்கிறார்.

 

பாரதியின் கணிப்பு சரியாகப் போனது. ஒரு ஆங்கிலேயர் இந்திய சுதந்திரத்தில் அக்கறை கொண்டு தேசீய்த் தலைவர் மறைந்ததற்கு இரங்கல் தெரிவித்து கல்லூரிக்கு விடுமுறை விட்டது போன்றவற்றை சுவாரசிய்மாக விளக்கியுள்ளார் பெ.நா.அப்புஸ்வாமி.

 

பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய ஒரு கட்டுரைத் தொடர் இது.

****