பத்திரிகையில் புல்லுருவிகள் (Post No.2595)

weeds

Written by S Nagarajan

 

Date: 4 March 2016

 

Post No. 2595

 

Time uploaded in London :–  8-55 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நாட்டு நடப்பு

 

பத்திரிகையில் புல்லுருவிகள்

 

ச.நாகராஜன்

Weed-spiky

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை. இதன் சுதந்திரத்தைக் காக்க அஞ்சாமல் பல கஷ்டங்களை மேற்கொண்டவ்ர்கள் பலர்.

 

எடுத்துக்காட்டாக ராம்நாத் கோயங்காவைச் சொல்லலாம்.

 

இந்தியாவில் அநியாயமாக எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. ஏராளமான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் உண்மை நிலை எதையும் வெளியிட முடியாத் நிலை உருவாயிற்று. தணிக்கை முறை அமுலுக்கு வந்தது.

 

ஆனால் அஞ்சா நெஞ்சர் கோயங்கா கடுமையாக அவசர நிலையை எதிர்த்தார். இந்தியந் எக்ஸ்பிரஸ்,தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் தலையங்கம் தீட்டினால் அது தடை செய்யப்பட்டது. அந்த இடம் முழுவதும் கறுப்பால் நிரப்பப்பட்டது -எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம்.

 

கோயங்காவிற்கு நெருங்கியவர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் அவரிடம் ஆலோசனை கூறினர்.

“எதற்காக இந்த எதிர்ப்பு? அந்த அம்மையாரின் ஆட்கள் உங்களிந் வேட்டியை உருவி விட்டு விடுவார்கள்” என்றனர்.

 

சிரித்தார் கோயங்கா. மற்றவர்கள் திகைத்தனர்.

 

“நான் எப்படி உருவானவன் தெரியுமா? உடுக்க ஒன்றுமில்லாமல் தெருவில் அலைந்து திரிந்து கிடைத்ததைச் சாப்பிட்டவன். இதெல்லாம் என் கடிந உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வேட்டியை உருவி விட்டால் பழைய நிலை வந்தது என்று சந்தோஷப்படுவேன்” என்றார்.

 

அனைவரும் அவரது தீரமான வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்தனர்.

 

அவசரநிலை காலத்தில் ஒவ்வொரு செய்தியையும் அவரே பார்த்துப் பார்த்து வெளியிட்டார். அஞ்சவில்லை.

இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களாளும், தேச பக்தர்களாலும், தேசீயத் தலைவர்களாலும் அவசர நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

தேசம் பிழைத்தது.

goenka

தேர்தல் வந்தது. இந்திரா காந்தி அவமானகரமாகத் தோற்றார். தன் தவறை உணர்ந்ததாக அவர் கூறினார்.

அதற்குக் காரணங்களுள் ஒன்று: இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ப்த்திரிகைகள் என்பதை வரலாறு இன்று வரை கூறுகிறது. நாளையும் கூறும்.

 

ஆனால் இன்றைய நிலை?

 

இந்தியாவிற்கு எதிராக நினைத்ததை எழுதும் சூழ்நிலை. தேசத் துரோகிகளுக்குத் துணை போவது, தேசத்தின் ந்லனுக்கு உகந்தவற்றைத் தெரிவிக்காமல் மறைப்பது, முஸ்லீம்களைத் திருப்திப் படுத்த செய்திகளை மிகைப்படுத்தல், ஹிந்துக்களை கேவலப்படுத்த காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் அவர்களின் பாதிப்புகளை  வெளியிடாமல் இருத்தல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய நிலைக்கு எதிராக பகிரங்கமாக ஆதரவு அளித்தல், இத்யாதி இத்யாதி!

 

இவற்றையெல்லாம் பணத்திற்காகவும் அல்லது ஒரு விஸ்கி பாட்டிலுக்காகவும் செய்வது அழகா? இந்தப் புல்லுருவிகளை மக்கள் இனம் காண்பது ஒரு புறம் இருக்கட்டும்; அரசும் உச்ச நீதி மன்றமும் ஏதாவது செய்ய வேண்டாமா?

 

கருத்துச் சுதந்திரம் என்பது பேணி வள்ர்க்கும் தேச சுதந்திரத்தை பலி கொடுக்க பயன்படுத்தக் கூடாது.

இப்படிச் செய்பவர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தாமாகவே முன் வந்து வழக்கைப் பதிவு செய்து உரிய தண்டனைய அவர்கள் குற்றம் நிரூபிக்கும் பட்சத்தில் விதிக்கலாமே!

 

நாங்கள் தான் பத்திரிகை மற்றும் டிவி சானல்கள் பற்றி குறைகள் இருந்தால் அதைத் தெரிவிக்க வடிகால் அமைத்திருக்கிறோமே என்பது போதாது.

உடனடி நடவடிக்கையை அரசும் போலீசாரும், நீதி மன்றமும் உடனே எடுக்க வேண்டும்.

 

இதுவே உண்மையான ஜனநாயகவாதியாகவும் தேச சுதந்திரத்தில் அக்கறையுமுள்ள் ஒவ்வொரு இந்தியனின் எண்ணமாக இருக்கிறது.

 

நண்பர்கள் அனைவரும் ஃபேஸ் புக் உள்ளிட்ட பதிவுகளில் வெகு ஜன எழுச்சியாக இந்த பத்திரிகைகள், டி வி சானல்கள் பற்றி நிறைய உண்மையான செய்திகளைப் பரப்பி விட்டால் இவர்களின் முகத்திரை கிழியும்.

 

ஆனால் இவர்களைப் பற்றிய உண்மையான செய்திகளை ஆதாரங்களுடன் தருதல் மிக முக்கியமானது. செய்வோம்; சுதந்திரம் காப்போம்! தேச துரோகிகளுக்கு இங்கு இடமில்லை என்பதைத் தெளிவு படுத்துவோம்.

 

அடுத்த கட்டுரையில் மகாத்மா காந்திஜி பத்திரிகையாளர்களை கலவரங்கள் நடந்த சமயத்தில் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்போம்.

மாமனிதர் கோயங்காவின் நினைவுக்கு அஞ்சலியோடு இந்தக் கட்டுரையை முடிப்போம்

******

 

தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை (Post No. 2592)

IMG_9769 (2)

Written by S Nagarajan

 

Date: 3 March 2016

 

Post No. 2592

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

amma

நையாண்டி மடல் எண் 3

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம்: எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அம்மா! ஆங்கிலத்தில் பிடித்த ஒரே வார்த்தை CUTTING!!

.நாகராஜன்

 

 

என் இனிய முட்டாள்களே!

ஒரு அவசர விஷயமாக இந்த மடலை எழுத வேண்டியுள்ளது. அது அவசியமும் கூட என்பதை இந்த மடலைப் படித்து முடிக்கும் முன்னர் அறிந்து கொள்வீர்கள்!

 

நிதி! கழகத்திற்கு நிதி! எனக்கல்ல; நமக்கல்ல! கழகத்திற்கு!

 

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு என்றான் ஐயன்! அதற்கு என்ன பொருள்? காசு வேண்டும் இங்கே பிழைப்பதற்கு என்று பொருள். அதற்கு முன்னர் ஐயன் கூறியது அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை!

 

இதற்கான உரையைக் குல்லுக பட்டர்களும் கோமாளி ஆசாரியர்களும் கொக்கரிக்கும் சாணக்கியர்களும் தவறாகச் சொல்லி இருப்பதை இங்கு நான் கண்டிக்கிறேன். இவ்வுலகம் தவிர இன்னும் ஒரு மறு உலகம் எப்படி இருக்க முடியும்? ஆக பொருள் பற்றிக் கூறும் ஐயன் கூற வந்தது தான் உண்மையில் என்ன? மாற்றிப் படியுங்கள்! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அவ்வுலகம் அருள் இல்லார்க்கு இல்லை! பொருள் இல்லை என்றால் இவ்வுலகில் பிழைப்பு ஓடாது. அந்த உலகில் பொருள் இல்லாவிடில் பொருளின் அருளும் இல்லாமல் போய் விடும். அதாவது உங்களுக்கு அதன் விளைவாகக் கிடைக்க வேண்டிய ‘சம்திங்’ கிடைக்காது! (இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஐயனுக்கு அரிய உரை ஒன்றை எழுதியுள்ளேன். விலை இருநூறு ரூபாய் மட்டுமே! கழக அலுவலகத்தில் பணமாகக் கொடுத்து நிறைய பிரதிகள் வாங்குங்கள்! நீங்கள் படித்தீர்களா என்று நான் கேட்கவே மாட்டேன்,  பணம் கொடுத்தீர்களா என்று மட்டுமே கேட்பேன், அது உங்களுக்கே தெரியும்!)

Word Cutting On Button With Hand Pushing

Word Cutting On Button With Hand Pushing

ஆக கழகத்திற்கு அந்தப் பொருள் – நிதி வேண்டும்! ஆரம்ப காலத்திலிருந்தே நான் செல்வத்தின் மீது கொண்டிருக்கும் பற்று உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும்!

 

என்னிடம் நிதி தாருங்கள்! ஆனால் கணக்கு மட்டும் கேட்காதீர்கள். மு.மு,க ஆரம்பிக்கும் முன்னர் பழைய நாட்களில் என்னிடம் கணக்குக் கேட்டவர் என்னைப் படுத்திய பாடும் நான் அவரைப் படுத்திய பாடும் நாடறியும்; ஏடறியும்; நல்லோர் அறிவர்.

 

ஆகவே இனி இன்னொருவர் இந்தத் தவறைச் செய்யாதீர்கள்; தறி கெட்டுப் போகாதீர்கள் என்று உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

 

கழகக் கூட்டங்களில் மாலை போடும் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது நான் தான்! ஆனால் இன்று என்ன  நிலை! அந்தக் காலத்தில் ஐம்பது காசுகளுக்கு மாலைகள் கிடைக்கும்; இன்றோ அதன் விலை ஐநூறு ரூபாய்! அடேயப்பா. ஆகவே வேண்டாம் இந்த மாலைகள். காசுகளாகவே கொடுத்து விடுங்கள். யாரிடம் கொடுப்பது என்று மயங்காதீர்கள். மலைக்காதீர்கள். மேடையிலே என் கண் முன்னே இருக்கும் நிதிச் செல்வனிடம் மட்டுமே கொடுத்து விடுங்கள். கொடுத்த விவரத்தை ஒரு கார்டிலும் எழுதிப் போட்டு விடுங்கள். மொத்தக் கணக்கை நானே சரி பார்த்துக் கொள்வேன்.

 

துண்டுகள், பட்டுச் சால்வைகளா! பரவாயில்லை. அதை மறு சுழற்சி செய்யத் தனி பிரிவு ஒன்று அமைத்துள்ளேன். ஆகவே துண்டுகள் விற்கும் நமது பிரிவிலே மட்டுமே வாங்குங்கள்! விலையை மற்ற கடைகளோடு ஒப்பிடாதீர்கள்! என் செயல்களை மற்றவரோடு ஒப்பிடுவது என்றுமே எனக்குப் பிடிக்காது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 

செல்வத்தில் சிக்கல் ஏறப்டக்கூடாது, நிதியில் நெருக்கடி ஏற்படக் கூடாது என்று என் அருகில் இருக்கும் பெயர்களில் எல்லாம் செல்வத்தைச் சேர்த்திருக்கிறேன். கலைச் செல்வம், கவிதைச் செல்வி என்றும் பல நிதிகளைப் பெயர்களிலும் நான் சேர்த்து வைத்திருப்பதை வீடறியும்; நாடறியும்; நீங்களும் அறிவீர்கள். நிதி நெருக்கடி வராத ஒரு அபார வழியை நான் இப்படிக் கண்டுபிடித்திருக்கும் அரிய செயலை, புதிய முறையைக் கண்டு அமெரிக்க நிதி ஆய்வாளர்களே வியக்கின்றனர்; வீறு கொண்டு இது போலச் செயலாற்ற விழைகின்றனர்.

amma2

இனி என் கதவைத் தட்டுங்கள்  நிதியைக் கொட்டுங்கள்.

ஒன்றே ஒன்றைக் கூறி இந்த மடலை முடிக்கிறேன்.

 

தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அம்மா! அட, அப்புறம் பெற்றவளை எப்படி அழைப்பது என மருகாதீர்; மயங்காதீர். தாய் என்று அழையுங்கள். தங்கம் நிகர் அன்னை என்று ஆர்ப்பரியுங்கள்!!

 

அம்மா உணவு போட்டாள்; அம்மா சைக்கிளில் ஏறச் சொன்னாள்; அம்மா லேப் டாப்பில் படிக்கச் சொன்னாள். அம்மா மருந்தை வாங்கச் சொன்னாள்; அம்மா பேனை போடச் சொன்னாள் என்று சொன்னால் என் ப்ளட் பிரஷர் எகிறுகிறது. ஆகவே தாய் என்று சொல்லி, தலைவன் இவனைக் காத்திடுங்கள்.

 

ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை கட்டிங்! இது இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா! இதை எப்படி நான் முறைப் படுத்தி, வகைப் படுத்தி உங்களையும் என்னையும் வாழ வைத்துள்ளேன் என்பதற்கு தனி ஒரு மடல் தேவை. அது வரை பொறுத்திருங்கள்!

 

மறந்து விடாதீர்கள்; நிதி அளிக்க; சாதியினால் இதைக் கேட்கவைல்லை; நீதியினால் கேட்கிறேன் என்பது உங்களுக்கே நன்கு தெரியும்.

 

என் இனிய முட்டாள்களே! தம்பிக் கரும்புகளே! இனிப்பான நிதியை இன்றே வழங்குங்கள் என்ற  சுயநலமற்ற சின்ன ஆசையைச் சொல்லி நீங்கள் வேண்டி விரும்பி எழுதப் பணித்த இந்த மடலை முடிக்கிறேன்.

நீதி நிலைக்கட்டும்; நிரம்ப்பட்டும் எ கஜானா!

 

அன்பு

மு.க. த.

முட்டாள்கள் கழகத் தலைவர்