மாசுகள் உருவாகும் வகைகள்! (Post No 2685)

plastic rubbish

Written by S NAGARAJAN (for AIR talk)

Date: 1 April 2016

 

Post No. 2685

 

Time uploaded in London :–  5-55 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Plastic-Bottles-Trash-waste-460x250

    சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதன் காரணங்கள் பல!

    தீங்கு பயக்கும் அல்லது நச்சு கலந்த பொருள்கள் காற்றிலோ நதிகள், கடல்களிலோ கலக்கும் போது அவை மாசுபடுகின்றன. விலங்குகள், தாவரங்கள் ஏன் மனிதர்கள் கூட இதற்கு விலக்கு அல்ல. அவர்களிடமிருந்தும் கூட சூழல் மாசுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.

 

   சூழலில் ஏற்பட்டுள்ள மாசினால் இங்கிலாந்தில் பதினோரு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

   சூரிய ஒளியின் ஆற்றலினாலும் காற்றுச் சுழலிகள் மூலமாகவும் மின் சக்தி உருவாவது இன்றைய காலகட்டத்தின் அவசரத் தேவையாகிறது.

 

   நமது வாகனங்களில் நாம் பயன்படுத்தும் டீஸல் மற்றும் பெட்ரோல் சுற்றுப்புறச் சூழலில் மாசை ஏற்படுத்துகிறது. ஆகவே அவற்றின் பயன்பாட்டை முடிந்த அளவு ஒவ்வொருவரும் குறைத்தல் வேண்டும்.  

   ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் நதி, கடலில்     கலந்தால் அவை பல மைல் தூரம் உடனடியாக கொண்டு செல்லப்படுவதால் அபாயம் வெகு விரைவில் எங்கும் பரவும் நிலை ஏற்படுகிறது.    

 

  பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பல்வேறு பொருள்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை உடனடியாக ஒவ்வொருவரும் நிறுத்தி விட்டால் சுற்றுப்புறச் சூழலில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.     பிளாஸ்டிக் பைகள் கடலில் மிதக்கும் போது அவற்றை தனது உணவாக எண்ணி அவற்றை உட்கொள்ளும் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பரிதாபமாக உயிரை இழப்பது பெருமளவில் பெருகி வருகிறது.  

வீட்டில் சுத்தப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் திட மற்றும் திரவ வடிவிலான இரசாயனப் பொருள்களைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே அவற்றைச் சிறிய அளவில் பயன்படுத்ல் வேண்டும். சூழலுக்கு உகந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.  

 

   சுற்றுப்புறச் சூழல் பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் அறிந்து பிறருக்கும் அவற்றைக் கூறுதல் பெரிய சமுதாய சேவை ஆகும்!

–Subham–

 

 

சுற்றுப்புறச் சூழலைக் காக்கச் சில வழிகள்! – 2 (Post No 2682)

bucket

Written by S NAGARAJAN (for AIR talk)
Date: 1 April 2016

 

Post No. 2682

 

Time uploaded in London :–  8-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். இதைக் காக்க எளிய வழிகள் பல உள்ளன. நீரைத் தூய்மையாக வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படும் சில வழிகள் இதோ:

 

நீரை பக்கெட்டுகளில் பிடித்து வைத்துப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவு நீரைச் சேமிக்க முடியும். திறந்து வைத்துள்ள குழாய் நீரைப் பயன்படுத்தும் போது நிறைய நீர் வீணாக ஏதுவாகிறது.   

 

boy_tap

வாஷிங் மெஷின்களைப் பயன்படுத்தும் போது அதன் முழு கொள்ளளவிலான துணிகள் சேர்ந்த பின்னரே பயன்படுத்தல் வேண்டும். ஓரிரு துணிகளை சுத்தம் செய்ய மட்டுமே அவற்றைப் பயன்படுத்தினால் மின்சக்தியும் நீரும் அனாவசியமாகப் பயன்படுத்த நேரிடும்.    

வீட்டு தோட்டத்தில் மிகக் குறைவான உரங்களைத் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்தல் வேண்டும்.    

 

கழிவாக உள்ள எண்ணெயை ஒரு போதும் கழிவு நீருடன் கலக்கக் கூடாது.    டிஷ் வாஷர்களைப் பயன்படுத்துவோர் அதன் முழுப் பயன்பாட்டிற்கான பாத்திரங்கள் சேர்ந்த பின்னரே அதைப் பயன் படுத்தல் வேண்டும். மின் ஆற்றலும் நீரும் இதனால் சரியான பொருத்தமான பயன்பாட்டிற்கு உள்ளாகும்.              பல் துலக்கும் போதோ, குளிக்கும் போதோ குழாயைத் திறந்து விடக் கூடாது. மாறாக தேவைப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்தல் வேண்டும்.                           ஒழுகும் குழாய்களை உடனடியாகச் சரி செய்யல் வேண்டும்.                    சிறு துளி பெரு வெள்ளம் என்பதோடு சீரைத் தேடின் நீரைத் தேடு என்பதை மறக்க வேண்டாம்.

 

 

மேல்நிலைத் தொட்டி மற்றும் கீழ் நிலைத் தொட்டிகளை உரிய முறையில் அவ்வப்பொழுது சுத்தப்படுத்தல் மிகவும் அவசியம். இதனால் நமது ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படும். நீரும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக அமையும்.

 

மழைநீர் சேகரிப்புக்கான அரசு குறிப்பிட்ட ஆலோசனைப் படி மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் அமுல் படுத்தல் இன்றியமையாதது. தொடர்ந்த பயன்பாட்டிற்கான நீர் உறுதி செய்யப்படுவதோடு நிலத்தடி நீர் மட்டமும் இதனால் உயரும்.

தேங்கிய சாக்கடை நீர் கொசுக்களை உற்பத்தியாக்கும். கழிவு நீர் உரிய  முறையில் அகற்றப்படுகிறதா என்பதை அவ்வப்பொழுது கண்காணித்தல் வேண்டும்.

–Subham–

 

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்! (Post No.2679)

china-sequence_1559762b

Written by S NAGARAJAN

Date: 31 March 2016

 

Post No. 2679

 

Time uploaded in London :–  6-09 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 1-4-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்!

 

ச.நாகராஜன்

 

(This article is written for Bhagya Magazineby my brother S NAGARAJAN- londonswaminathan)

 eclipse solar

“கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்காமல் இருப்பது நல்லது”. – ஜெஃப் கோல்ட்ப்ளம்

 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரிய ஒளி மறைக்கப்படுவதை சூரிய கிரகணம் என்கிறோம். 2016ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதை ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிந்தது.

 

 

சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி.

சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் உணவு உண்பதில்லை; பிரார்த்தனைக்கான நேரம் கிரகண காலம் என்பர்.

பொதுவாக சூரிய கிரகண காலத்தில் ஆளும் மன்னருக்கு ஆகாது என்பது உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வரும் நம்பிக்கை.

கிரகணம் பற்றிய சில சுவையான அறிவியல், சமூக மற்றும் ஆன்மீகத் தகவல்களைப் பார்ப்போம்:

 

 

1919ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி உலகில் மிக முக்கியமான கிரகணம் ஒன்று ஏற்பட்டது. உலகின் மிக பிரபலமான மேதை ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தத்துவப் படி புவி ஈர்ப்பு விசை ஒளியை வளைக்க வேண்டும். முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் இந்த சூரிய ஒளி பற்றிய ஆய்வுக்கு இரு இடங்களைத் தேர்ந்தெடுத்தது. அங்கு பார்வையாளர்களை அனுப்பியது. சூரியனின் ஒளி தற்காலிகமாகத் தடைப்பட்ட போது வானவியல் விஞ்ஞானியான சர் ஆர்தர் எடிங்டனும் அவரது குழுவினரும் தொலைதூரத்திலுள்ள நட்சத்திரங்களிலிருந்து கிளம்பும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் வளைந்ததைக் கண்டனர், வியந்தனர். இதன் மூலம் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை சரியே என்பது நிரூபிக்கப்பட்டது.

 

 

இந்த கிரகணம் உலகின் மிக பிரம்மாண்டமான அறிவியல் கொள்கையை மெய்ப்பித்தது. ஒரே நாளில் உலகமே ஐன்ஸ்டீனைக் கொண்டாடியது.

 

 

1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று இந்தியாவில் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானவியல் நிபுணர் ஜூல்ஸ் ஜன்ஸென் (Jules Janssen) அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஸ்பெக்ட்ரோகிராப் கருவியைச் சூரியனை நோக்கித் திருப்பிப் பார்த்தார். சூரியனின் க்ரோமோஸ்பியரில் ஒரு அசாதாரண சிறப்பு அலைமாலையைக் (spectral signature) கண்டார். இது கிரகணத்தின் போது மட்டுமே காணப்பட்ட ஒரு நிகழ்வு. இதில் ஒரு புதிய மூலகத்தை அவர் கண்டு  பிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் லேசில் ஏற்கவில்லை. இது மிக மிக இலேசான வாயு. இதன் பெயர் தான் ஹீலியம். கிரேக்க புராணங்களில் வரும் சூரியனுக்கான பெயர் ஹீலியோஸ். அதிலிருந்து இந்தப் பெயர் இந்த வாயுவுக்குச் சூட்டப்பட்டது.

annular-eclipse

 

கிரகணத்தினால் அறிவியலுக்குக் கிடைத்த ஆதாயங்கள் இவை என்றால் பல சரித்திர சம்பவங்கள் கிரகணத்தின் பாதகமான விளைவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன!

 

 

முதலில் மஹாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். பீஷ்ம பர்வத்திலும் உத்யோக பர்வத்திலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் வருகின்றன.

 

 

மஹாபாரத யுத்தம் வருவதைச் சுட்டிக் காட்டும் மோசமான வானியல் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று பதின்மூன்றாம் நாளே அமாவாசை வருவது.

 

 

ஒரு சந்திர கிரகணமும் அதைத் தொடர்ந்து ஒரு சூரிய கிரகணமும் வருவது உலகில் நடைபெறாத ஒரு சம்பவம். அத்தோடு கிரகங்கள் வக்கிர நிலையை அடைகின்றன. இவை அனைத்தும் உலகில் இதுவரை நிகழாத ஒரு மாபெரும் போர் நிகழ இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள்.

இதைத் தொடர்ந்து இன்னும் பல துர் சகுனங்களை மஹாபாரதம் விளக்குகிறது. ஆக, அசாதாரணமான இரு கிரகணங்கள் பெரும் போரை உலகில் விளைவித்ததை மஹாபாரதம் தெளிவாக்குகிறது.

 

 

அடுத்து மிகவும் சிக்கலான ஒரு கிரகணத்தை புனிதர்கள் மார்க், மாத்யூ, ல்யூக் ஆகியோர் பூடகமாக சுட்டிக் காட்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தன்று உலகம் இருளில் மூழ்கியது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது சூரிய கிரகண நிகழ்வா என்ற விவாதம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் புனிதர் ஜான் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. வானியல் வல்லுநர்கள் கி.பி. 29ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மத்திய கிழக்கில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையும் கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்ததையும் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் சிலுவையில் அறையப்படும் தினத்துடன் பொருந்தவில்லையே என்ற விவாதம் தொடர்வதால் சிலுவையில் ஏசு அறையுண்டதற்கும் கிரகணத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.

total-solar-eclipse-2015-svalbard-totality

அடுத்து கொலம்பஸை கிரகணத்துடன் தொடர்பு படுத்தும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. புது நாடு காணப் புறப்பட்ட கொலம்பஸுக்கு வானியல் அறிவு நிறையவே உண்டு. வானில் உள்ள கிரக சஞ்சாரம், நட்சத்திர இயக்கம் ஆகியவற்றை வைத்தே அவர் தன் பயணத்தைத் தைரியமாக மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது கப்பல் 1509 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி  ஜமைக்கா அருகே விபத்திற்குள்ளாக சுமார் எட்டு மாதங்கள் தன் குழுவினருடன் ஒரு தீவில் அவர் தங்க வேண்டி நேர்ந்தது. சாப்பாட்டிற்கு வழி?

 

 

அங்கிருந்த பூர்வகுடிகள் அவரது குழுவினருக்கு உதவ முன் வந்தனர். இதற்குக் காரணம் அவரது வானியல் அறிவு தான். அதன் மூலம் பூர்வ குடிகளின் தலைவனை அவர் மிகவும் கவர்ந்தார். ஆனால் இந்த இலவச சாப்பாடு தொடர்ந்து நடக்கவில்லை. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவர்கள் உணவு கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர். தனது வானியல் அறிவால் கொலம்பஸ் அன்று சந்திர கிரகணம் ஏற்படுவதைக் கணக்கிட்டார்.பூர்வ குடியினரின் தலைவனை அழைத்த கொலம்பஸ் அவர்கள் தனது குழுவினருக்கு உணவு அளிப்பதை நிறுத்தி விட்டதால் கடவுளின் சாபம் அவர்கள் மீது ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அன்று சந்திரன் மறைந்தே போவான் என்றும் கூறினா. சற்று நேரத்தில் சந்திரனை முழுவதுமாகக் காணோம்!

 

 

 

பூர்வ குடிகளின் தலைவன் தன்னை மன்னிக்குமாறு கூறவே அதை கொலம்பஸ் கடவுளிடம் “எடுத்துச் சொல்லி” சந்திரனை சற்று நேரத்தில் மீட்டுக் கொண்டு வரவே தீவே ஒரே உற்சாகமயமாக ஆனது! கொலம்பஸ் குழுவினருக்கு உணவும் பூர்வ குடிகளுக்கு சந்திரனும் கிடைத்தன! இந்த உண்மை நிகழ்ச்சியை பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் கதையில் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க ஒரு பிரபலமான நாவல் மார்க் ட்வெய்ன் எழுதிய ‘எ கனெக்டிகட் யாங்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட் (A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற நாவலாகும்!

 

 

இனி கிரகணத்தால் மன்னர்களுக்கு ஏற்பட்ட அபாயங்களைப் பார்ப்போம்.

 

Basic RGB

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

மைக்கேல் ஷெர்மர் உலகப் பகுத்தறிவுக் கழகத்தின் தலைவர். விஞ்ஞானபூர்வமாக இல்லாத எதையும் நம்பக் கூடாது என்று வலியுறுத்தி வருபவர். இவரது கழகத்தில் சுமார் 55000 உறுப்பினர்கள் உள்ளனர். ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் 2001 ஏப்ரல் மாத இதழிலிருந்து பகுத்தறிவுப் பகுதியை எழுதி வருபவர் இவர்.இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவரது திருமண தினமான 2014 ஜூன் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதை இவரே தனது ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் சுவாரசியமான விஷயம்!

 

 

ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபை அவர் மணமுடிக்க முடிவு செய்தார். ஜென்னிபருக்கு அவரது தாத்தா என்றால் உயிர். ஆனால் அவரது 16ஆம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார்.  தாத்தா பயன்படுத்திய 1978ஆம் வருட பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார்.

அது இயங்கவில்லை. எவ்வளவோ முயன்ற போதும் கூட அதை ரிப்பேர் செய்ய முடியவில்லை.

 

கல்யாண நாளன்று திடீரென்று அந்த ரேடியோ பாட ஆரம்பித்தது!

பகுத்தறிவுக் கழகத் தலைவர் அசந்து போனார். ஜென்னிபரும் அதே அளவு பகுத்தறிவுவாதி தான்!! அவரும் திகைத்தார். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர்.

 

மணநாளன்று மட்டும் ஒலித்த அந்த ரேடியோ மறு நாளிலிருந்து இயங்கவில்லை.

தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி  விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.

 

“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும். என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை” என்று ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!

அற்புதங்கள் என்றும் நிகழும்!

*********

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்! (Post No.2673)

Apollo_17_Cernan_on_moon

Written by S NAGARAJAN ( for Bhagya Magazine)

Date: 29 March 2016

 

Post No. 2673

 

Time uploaded in London :–  8-05 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 25-3-2016 இதழில் வெளி வந்த கட்டுரை

 

 

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்!

 

ச.நாகராஜன்

apollo 17,schmidt

“சந்திரனில் நின்று முதலில் பூமியைத் திரும்பிப் பார்த்த போது நான் அழுதேன்” – விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட்

 

நீல் ஆர்ம்ஸட் ராங் சந்திரனில் முதன் முதலாகக் கால் பதித்தவுடன் சந்திரப் பயணம் ஆரம்பித்தது. இது சூடு பிடித்து பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் அமெரிக்க விண்வெளி வீரரான செர்னான் சந்திரனில் கால் பதித்து 44 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை யாரும் சந்திர பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

இதுவரை மொத்தம் பன்னிரண்டு பேர் சந்திரனில் இறங்கியுள்ளனர்.

 

 

இவர்களில் யாரும் ஒரு தடவைக்கு மேல் சந்திரனில் இறங்கவில்லை என்பதும் ஒரு சுவாரசியமான செய்தி தான்!

அபல்லோ 11

 

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்ட் ராங் சந்திரனில் இறங்கி பெரும் சாதனையைப் படைத்தார். இவரைத் தொடர்ந்த் பஸ் ஆல்ட் ரின் (Buzz Aldrin)  அங்கு இறங்கினார். அவர்கள் அமெரிக்க கொடியை அங்கு நாட்டினர். பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

அபல்லோ 12

இந்தக் கலத்தில் சென்றவர்கள் பீட் கான்ராட் மற்றும் ஆலன் பீன் (Pete Conrad & Alan Bean) இவர்கள் இருவரும் 1969ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்கள் அங்கு இருந்தனர்.

 

அபல்லோ 13

இதில் சென்றவர் யாரும் சந்திரனில் இறங்கவில்லை. ஆக்ஸிஜன் டேங்க் ஒன்று வெடிக்கவே கலம் பெருத்த அபாயத்திலிருந்து தப்பியது.

 

அபல்லோ 14

இதில் பயணப்பட்ட ஆலன் ஷெப்பர்ட் மற்றும் எட்கர் மிட்செல்  (Alan Shepard & Edgar Mitchell) 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாளன்று சந்திரனில் இறங்கினர். இதில் ஷெப்பர்ட் கோல்ப் பந்துகளை இரு முறை அடித்துப் பார்த்தார்.

 

அபல்லோ 15

இந்தக் கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் (David Scott & James Irwin) ஆகிய இருவரும் 1971 ஜூலை 31ஆம் தேதி சந்திரனில் இறங்கினர். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர்  ஆகஸ்ட் 2ஆம் நாளன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். பதினெட்டரை மணி நேரம் இவர்கள் கலத்தின் வெளியே இருந்து லூனார் ரோவரை இயக்கிப் பார்த்தனர்.  சுமார் 77 கிலோ எடையுள்ள சந்திரக் கற்களையும் இவர்கள் பூமிக்குக் கொண்டு வந்தனர்.

 

அபல்லோ 16

இந்தக் கலத்தில் பயணித்த ஜான் யங் மற்றும் சார்லஸ் ட்யூக் (John Young & Charles Duke) ஆகிய இருவரும் சந்திரனில் வெற்றிகரமாக இறங்கினர். 1972ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் இவர்கள் அங்கு இருந்தனர். சுமார் 71 மணிகள் அங்கிருந்த இவர்கள் மூன்று சந்திர நடைப் பயணத்தை மேற்கொண்டனர். சுமார் 20 மணி 14 நிமிடங்கள் இந்த நடைப் பயணம் நீடித்தது. இவர்கள் லூனார் ரோவரை 26.7 கிலோமீட்டர் இயக்கினர்.

apollo-17

Apollo 17 was the sixth and last Apollo mission in which humans walked on the lunar surface. On Dec. 11, Lunar Module Pilot Harrison H. Schmitt and Commander Eugene A. Cernan, landed on the moon’s Taurus-Littrow region in the Lunar Module, while Command Module Pilot Ron Evans continued in lunar orbit.

அபல்லோ 17

இந்தக் கலத்தில் ப்யணித்த யூஜீன் செர்னான் மற்றும் ஹாரிஸன் ஷ்மிட் (Eugene Cernan & Harrison Schmitt) ஆகிய இருவர் தான் சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர்கள். இவர்களுக்குப் பின்னர் இது வரையிலும் யாருமே சந்திரனுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. அபல்லோ 17 விண்கலம் 1972 டிசம்பர் 11ம் தேதி சந்திரனில் இறங்கியது. இந்த சந்திரப் பயணிகள் டிசம்பர் 19ஆம் தேதியன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். மூன்று நாட்கள் இவர்கள் சந்திரனில் இருந்தனர். கலத்தின் மொத்தப் பயண நாட்கள் 12. சந்திரனை விட்டுக் கிளம்பும் முன்னர் செர்னான் தனது மகள் ட்ரேஸியின் இனிஷியல்களை சந்திரனில் எழுதினார். அங்கு காற்றோ மழையோ பெய்யாது என்பதினால் இன்று வரை அந்தப் பெயரின் முதலெழுத்துகள் அங்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

சுமார் 566 மணிகள் 15 நிமிடங்கள் விண்வெளியில் கழித்திருக்கும் செர்னான் 73 மணிகள் சந்திரனில் இருந்திருக்கிறார் என்பது ஒரு தனிப் பெருமையாகும்.

 

சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர் என்ற பெருமைக்குரிய செர்னான் தனது பயண அனுபவத்தை ‘தி லாஸ்ட் மேன் ஆன் தி மூன் (The Last Man on the Moon) என்ற டாகுமெண்டரி படத்தில் சுவைபடச் சொல்லியுள்ளார். இந்தப் படம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதியன்று அமெரிக்க தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

“சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு பையன் கனவிலும் நினைக்க முடியாத் ஒரு பயணத்தை மேற்கொண்ட கதை இது”” என்கிறார் இந்தப் படம் பற்றி செர்னான்.

 

இந்தப் படம் தயாரிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் பிடித்தன. இதில்  செர்னான் எப்படி ஒரு விண்வெளி வீரர் கடினமான பயிற்சிகளைப் பெறுகிறார் என்பதை விளக்குகிறார். ஒரு விண்வெளி வீரர் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவே முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யும் அவர், “ஏனெனில் ஒரு விண்வெளி வீரர் வாரத்திற்கு எட்டு நாட்கள் வேலை செய்யவேண்டியிருக்கிறது” என்று நகைச்சுவையுடன் வேலைப்பளு பற்றிக் குறிப்பிடுகிறார்.  இந்தப் படம் விண்வெளி ஆர்வலர்களுக்கு பிடித்த படமாக இருப்பதோடு அடுத்து சந்திரனுக்கு ஒரு மனிதன் பயணப்பட வேண்டும் என்ற ஆசையையும் உருவாக்கியுள்ளது.

 

einstein

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் மகாத்மா காந்திஜியின் தொண்டர்களுள் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடன் கலந்து கொண்ட அவரை காந்திஜி சுதந்திர இயக்கச் செய்திகளை மேலை நாடுகளில் பரப்புமாறு பணித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்ட சுந்தரம் ஏழு மாத காலம் மேலை நாடுகளில் பயணித்தார். அப்போது பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சந்தித்து மஹாத்மாவின் அஹிம்சைப் போராட்டம் பற்றி விளக்கினார். இதனால் பெரிதும் கவரப்பட்ட ஐன்ஸ்டீன் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதி அதை சுந்தரத்திடம் கொடுத்து காந்திஜியிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டினார்.

அதில் காந்திஜியின் அஹிம்சா வழியை பாராட்டியதோடு, “ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க முடியும் என்று  நம்புகிறேன்” என்று ஐன்ஸ்டீன் எழுதியிருந்தார். (I hope that I will be able to meet you face to face some day.)

 

இதைப் பார்த்து மகிழ்ந்த காந்திஜி தனது கொள்கைகளை ஐன்ஸ்டீன் ஏற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து 18-10-1931 தேதியிட்ட கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினார். அதில் ஐன்ஸ்டீன் தெரிவித்திருந்த விருப்பத்தை வரவேற்று, “நானும் உங்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன், அதுவும் இந்தியாவில் என் ஆசிரம்த்தில்” (I do indeed wish that we could meet face to face and that too in India at my Ashram.)  என்று எழுதி அனுப்பினார்.

 

ஆனால் இருவரும் நேரில் சந்திக்க முடியவே இல்லை! மனதால் இணைந்தனர் மஹாத்மாவும் மாபெரும் விஞ்ஞானியும்!

******

சுற்றுப்புறச் சூழலைக் காக்கச் சில வழிகள்! – 1 (Post No 2670)

Digital-thermometer-1140x625

Written by S NAGARAJAN ( for Radio Talk)

Date: 28 March 2016

 

Post No. 2670

 

Time uploaded in London :–  6-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். இதைக் காக்க எளிய வழிகள் பல உள்ளன. காற்றைத் தூய்மையாக வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படும் சில வழிகள் இதோ:

 

உங்கள் வீட்டை பெயிண்ட் அடிக்கிறீர்களாஆயில் பேஸ்ட் பெயிண்ட் (Oil based paint) எனப்படும் எண்ணெய் சார்ந்த வர்ணங்களைப் பயன்படுத்தாமல் லேடக்ஸ் பெயிண்டுகளைப் (latex paint) பயன்படுத்துவதன் மூலம் ஹைட்ரோகார்பன் புகை வெளியாவதைத் தடுக்கலாம். உங்கள் வாகனங்களுக்கு உரிய காலத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் அதிக மைலேஜ் கிடைப்பதோடு நச்சுப் புகை வெளியேற்றத்தையும் பெருமளவு தவிர்க்கலாம். காற்று மாசு படுவதைத் தவிர்க்கலாம்.

 latex paint

கழிவுப் பொருள்களை வீட்டின் முன்போ அல்லது சாலையிலோ போட்டு எரிக்கக் கூடாது. இதன் மூலம் வெளியாகும் புகை சுவாசம் சம்பந்தமான கோளாறுகளையும் பல விதமான அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக் கோளாறுகளையும் அருகில் வாழும் பலருக்கும் ஏற்படுத்தும்.

 

மரம் ஒன்றை நடுவதன் மூலம் சுற்றுப்புறச் சூழலைப் பெரிதும் காத்தவர்கள் ஆவீர்கள். மரம் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி விடும்.

 

கார், ஸ்கூட்டர் ஆகியவற்றை முடிந்த போதெல்லாம் தவிர்த்து நடை பயிலுங்கள். அல்லது பஸ் போன்ற வெகுஜன வாகனங்களில் பயணம் செய்யுங்கள்.

 

இனி நாம் வாழும் நிலப்பகுதியைக் காக்கும் சில எளிய வழிகளைப் பார்ப்போம். வீட்டில் உள்ள குப்பைகளைப் போடும் பக்கெட்டில் ஆபத்தை விளைவிக்கும் பெயிண்டுகள், உர வகைகள், கெமிக்கல்கள், கார் பேட்டரிகள், எண்ணெய்க் கழிவுகள் ஆகியவற்றைப் போடக் கூடாது

 

பாதரஸம் உள்ள மெர்க்குரி தெர்மாமீட்டரைப் பயன்படுத்தாமல் டிஜிடல் தெர்மாமீட்டரைப் பயன்படுத்துவன் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு வரும் பெரும் கேட்டைத் தவிர்க்கலாம். பாதரஸம் கழிவாக அப்புறப்படுத்தப்படும் போது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு பொருளைத் தவிர்த்தவர்கள் ஆவோம். கெமிக்கல்கள், உர வகைகள், பெயிண்டுகள் போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாக வாங்கி வீட்டில் வைக்காமல் உரிய அளவை மட்டுமே வாங்கலாம். பேப்பரா, பிளாஸ்டிக்கா? பிளாஸ்டிக் தேவையில்லை என்று தைரியமாக எப்போதும் முடிவெடுங்கள். பேப்பரின் இரு பக்கங்களையும் எப்போதும் பயன்படுத்துங்கள்.

சுபம்–

மல்யுத்த வீரர் ஒருவரின் புதிய யுத்தம் (Post No. 2668)

Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.

Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.

Written by S NAGARAJAN
Date: 27 March 2016

 

Post No. 2668

 

Time uploaded in London :–  9-59 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Common Map Turtle.jpg

மெக்ஸிகோவைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் எல் ஹிஜோ டெல் சான்டோ (El Hijo del Santo) புதிய யுத்தம் ஒன்றில் ஈடுபட்டு உலகத்தினரிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

 

இந்த யுத்தம் நீரில் வாழும் ஆமைகளை வேட்டையாடுவோரையும் கடல் வாழ் திமிங்கிலங்களை அழிப்போரையும் எதிர்த்துச் செய்யும் யுத்தம்.

முகமூடியை அணிந்து மல்யுத்த அரங்கத்தில் எதிரியுடன் சண்டை செய்து வழக்கமாக வெற்றியையே பெறும் இந்த வீரர் முகமூடி இல்லாமல் நேருக்கு நேர் கடல் வாழ் உயிரினங்களைக் காக்கச் செய்யும் போர் அனைவருக்கும் முன் உதாரணமாக இலங்குகிறது.

 

டிஜுவானா என்ற நதி வடமேற்கு மெக்ஸிகோவில் ஓடுகின்ற நதி. இந்த நதியில் குப்பைகளும், கழிவு நீரும் சேர்வதைக் கண்டு மனம் பொறாத அவர் இப் பகுதி வாழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதைத் தனது தலையாய பணியாக மேற்கொண்டார். “மல்யுத்தம் செய்வதை விட சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை எதிர்த்துப் போர் புரிவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.இதில் அனைவரும் சேர வாரீர்என்கிறார் அவர்.

கடலில் வாழும் திமிங்கிலங்களும் ஆமைகளும் பெருமளவில் அழிந்துபட்டு வருவதைக் கண்ட அவர் அவற்றிற்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றிருக்கும் அவரது குரலைக் கேட்ட பல்லாயிரக்கணக்கானோர் அவருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

ஆமைகளை உணவாகச் சாப்பிட வேண்டாம் என்ற அவரது வேண்டுகோளை ஏற்று கடல் ஓரமாக ஒதுங்கும் ஆமைகளைப் பிடித்து உணவாக உண்பதை மெக்ஸிகோ மக்கள் தவிர்க்க ஆரம்பித்ததோடு ஆமை முட்டைகளையும் கூட காப்பாற்ற ஆரம்பித்து விட்டனர். மெக்ஸிகோ அரசு இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்ட போதிலும் கூட மல்யுத்த வீரரின் ஈடுபாடு காரணமாக கடந்த 50 ஆண்டு காலமாக வெகு வேகமாக அழிந்து வந்த இந்தக் கடல் வாழ் உயிரினம் இன்று காப்பாற்றப்பட்டுள்ளது.

 

 

மலைக்க வைக்கும் தொகையான் எட்டு லட்சம் டாலர் தொகையுடன் ஆமைகளையும் திமிங்கிலங்களையும் காக்க இறங்கிய அவரது பணி மாபெரும் வெற்றி பெற்று உலகத்தினருக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்து விட்டது. மல்யுத்த வீரரின் புதிய யுத்தத்தில் மக்களும் ஈடுபட்டு வெற்றி பெற்றது ஒரு புதிய சுவையான செய்தி தானே!

 

 

உருகும் பனிப்பாறைகள்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! (Post No.2648)

o-ANTARCTICA-SUMMER-ICE-MELT-facebook

Ice Floes on the Southern Ocean

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 20 March 2016

 

Post No. 2648

 

Time uploaded in London :–  6-29 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 4-3-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

உருகும் பனிப்பாறைகள்; உயரும் உஷ்ணநிலை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

ச.நாகராஜன்

 

arctic

பூமி வெப்பமயமாதல் என்பது ஏதோ ஒரு கணிப்பு அல்ல; அது இப்போது நடக்கின்ற ஒரு உண்மை நிகழ்வு ஜேம்ஸ் ஹான்ஸன்

பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்ஸியஸ் உய்ரந்து விட்டதாக பிரிட்டனின் விஞ்ஞானிகள் கவலையுடன் எச்சரித்துள்ளனர்..பூமியில் நான்கு டிகிரி செல்ஸியஸ் உயர்ந்தால் என்னென்ன நடக்கும் என்ற விஞ்ஞானிகளின் அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து நவம்பர் 2015இல் முடிந்த இவர்களின் ஆய்வு முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது. விளைவுகள் என்ன? பூமியில் உள்ள அனைத்துக் கடல்களும் பொங்கி எழும்!66 கோடி மக்கள் வாழ்கின்ற பரப்பை நீரினுள் மூழ்கடித்து பல கோடி பேரை விழுங்கும்.

 

இரண்டே இரண்டு டிகிரி உஷ்ணநிலை உயர்வு கூட 28 கோடி பேருக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

இது ஒரு புறம் இருக்க, பூமியின் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்தி வருகின்றன. இதனால் நமக்கென்ன என்று சும்மா இருக்க முடியாது.இந்த உயர்வு பூமியின் சுழற்சியைச் சற்று மெதுவாக ஆக்கி இருக்கிறது. பூமி சற்று மெதுவாகச் சுழன்றால் பூமியில் பகல் நேரம் சற்று அதிகமாக ஆகும்.

விஞ்ஞானிகள் கடந்த கால சரித்திரத்தில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் நிலைகளைச் சரியாகக் கணித்துக் கூற முடியும்.பூமியின் உட்பகுதியையும் அவர்கள் கவனித்து வருகின்றனர்.

இயற்பியல் பேராசிரியரான மாத்யூ டம்பெர்ரி (Mathieu Dumberry),” கடந்த நூற்றாண்டில் கடல் மட்ட மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள, பூமியின் உட்பகுதியை நன்கு ஆராய வேண்டியிருக்கிறது.” என்கிறார்.

antarctic_sea_ice-spl

 

பனிப்பாறைகள் உருகுவதால் துருவத்தின் அருகே வசிக்கும் மக்கள் கூட்ட்ம் இடம் பெயர்ந்து பூமத்திய ரேகைப் பகுதியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இது மட்டுமின்றி சந்திரனின் ஆகர்ஷணமும் பூமியின் சுழற்சியில் தாக்கம் ஏற்படுத்தி அதை மெதுவாகச் சுழல வைக்கிறது. இந்தக் காரணங்களினால் பூமியின் பகல் நேரம் சற்று அதிகரித்துள்ளது. எவ்வளவு என்று கேட்டு தெரிந்து கொண்டால் ‘பூ’ இதற்கா இவ்வள்வு ஆர்ப்பாட்டம் என்று சாமானிய மனிதன் விமரிக்கக் கூடும்.

பகல் நேரத்தின் அதிகரிப்பு அடுத்த நூற்றாண்டில் 1.7மில்லி செகண்டாக இருக்கும்.

 

 

இந்த உஷ்ண நிலை உயர்வும் பனிப்பாறை உருகுதலும் ஏன் ஏற்படுகின்றன?

நாம் அன்றாடம் உபயோகிக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் கக்கும் நச்சுப் புகை தான் காரணம். இவை சுற்றுப்புறத்தை மாசு படுத்தி நாம் சுவாசிக்கும் காற்றையும் அசுத்தமாக்குகின்றன. இதனால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள் பல! சுவாசக் கோளாறுகளில் ஆரம்பித்து மாரடைப்பு வரை அனைத்து வியாதிகளையும் இன்றைய மோசமான சுற்றுப்புறச் சூழ்நிலை ஏறபடுத்துகிறது.

நல்ல காற்றை கிராமங்களில் மட்டுமே சிறிது சுவாசிக்க முடிகிறது.

 

vitality 1

பழைய காலங்களில், பாட்டில் வாட்டர், கேன் வாட்டர்’  என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆனால் இன்றோ அவை அன்றாட நடைமுறை ஆகி விட்டது!

அடுத்து வரப்போவது பாட்டில் காற்று அல்லது கேன் காற்று! நல்ல காற்றை நகரங்களில் சுவாசிக்க முடியவில்லை என்பதால் நீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது போல காற்றையும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப் போகிறார்கள்.

 

 

சிரிப்புக்கான செய்தி அல்ல இது. உண்மையிலேயே நடைமுறைக்கு வந்து விட்ட உண்மை இது.

சீனாவில் சுற்றுப்புறச் சூழல் மிக அதிக அளவில் கெட்டு விட்டது. லட்சக் கணக்கான வாகனங்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் காற்று மாசின் அளவு எல்லை மீறிப் போய்விட்டது.

 

vitality 2

இதைப் பார்த்த கனடாவைச் சேர்ந்த  ஒரு நிறுவனம் ‘சுத்தக் காற்றை’ பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்துள்ளது.மலைக் காற்று அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலின் விலை 28 டாலர்கள் தான் – அதாவது சுமார் 1680 ரூபாய்! கனடிய சுத்தக் காற்று இடங்களான பான்ஃப் மற்றும் லேக் லூஸியிலிருந்து பிடிக்கப்படும் காற்று சீனாவில் இப்போது அமோக விற்பனையைக் கண்டுள்ளது. ‘ப்ரீமியம் ஆக்ஸிஜன்’ – அதாவது முதல் தர ஆக்ஸிஜன் என்ற பெயரில் கிடைக்கப் பெறும் இதை 1680 ரூபாய் கொடுத்து வாங்க சீன மக்கள் தயார். இந்த நிறுவனத்தின் பெயர் வைடாலிடி ஏர் (Vitality Air) இந்த நிறுவனத்தின் சீன பிரதிநிதியான ஹாரிஸன் வேங் என்பவர் இண்டர்நெட்டில் இது விற்பனைக்கு வந்த செய்தி தெரிவிக்கப்பட்ட உடனேயே அனைத்து பாட்டில்களும் விற்று தீர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.

 

 

நமது நாட்டில் தலைநகர் டில்லியின் காற்று நீதிபதிகளையே கவலையுறச் செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூற வைத்திருக்கிறது. அடுத்த கவலைக்குரிய நகரம் சென்னை! இங்கும் பாட்டில் காற்று வர நீண்ட காலம் ஆகாது.

 

 

இதைத் தவிர்க்க வாகனப் பயன்பாட்டை அனைத்து மக்களும் கட்டுப்படுத்த வேண்டும். இது ஒன்றே வழி. நடக்க முடிந்த இடங்களில் நடக்கலாம். ஒவ்வொருவரும் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்வதைத் தவிர்த்து நிறைய பேர் அமரக்கூடிய பஸ்களில் பயணிக்கலாம். நவீன மாசைக் கட்டுப்படுத்தும் எஞ்சின் உள்ள வாகனங்களையே வாங்கலாம். அரசின் வற்புறுத்தலோ அல்லது சட்டமோ இல்லாமல் தாமாகவே வாகனங்களின் புகைக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை அவ்வப்பொழுது மேற்கொள்ளலாம். மரங்களை வளர்ப்பதன் மூலம் உயிர்க்காற்றான ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்க வழி வகுக்கலாம்.

vitality 3

 

மக்கள் மனம் வைத்தால் நம் சந்ததியினருக்கு சுத்தக் காற்றையும் சுத்த நீரையும் நிச்சயமாக வழங்க முடியும்!

விஞ்ஞானிகள் எச்சரித்து விட்டார்கள்; விழிக்க வேண்டியது மக்கள் கடமை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1893ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. கப்பல் ஒன்றில் ஸ்வாமி விவேகானந்தருடன் சக பயணியாக பிரபல தொழிலதிபரான ஜாம்ஷெட்ஜி டாட்டா ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். கப்பலில் பயணித்ததால் பலமுறை ஸ்வாமிஜியுடன் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.இந்தியாவை ஆன்மீக உணர்வினால் தட்டி எழுப்ப விழைந்த வீரத்துறவி விஞ்ஞானத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததை எண்ணி அவர் அதிசயித்தார். ஸ்வாமிஜியின் திட்டங்களை எல்லாம் கேட்ட அவருக்கு பெரும் உத்வேகம் ஏற்பட்டது.இந்தியாவில் முதல் எஃகு உருக்காலையை அவர் ஆரம்பித்தார். ஆரம்பித்தவுடன் ஸ்வாமிஜிக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார் இப்படி: “ ஐந்து வருடங்களுக்கு முன்னர் உங்களுடன் சக பயணியாக நான் பயணித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாம் பேசிக்கொண்டிருந்த படி இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை நான் ஆரம்பித்துள்ளதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.”

 

tata

ஸ்வாமிஜியால் உத்வேகம் ஊட்டப்பட்ட டாட்டா அவர் தன்னை வழி நடத்த வேண்டும் என்று விரும்பினார். அவரை தனது ஆய்வு நிறுவனத்திற்கு முதல் டைரக்டராக ஆக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் இருந்தது.

 

ஆனால் ஸ்வாமிஜி  பல துறையினரையும் தட்டி எழுப்பி ஊக்குவித்து இந்தியாவின் மொத்த எழுச்சியில்  கவனம் செலுத்தியதால் தனிப் பொறுப்புகளை ஏற்கவில்லை.

 

ஒரு சிறிய கப்பல் சந்திப்பு இந்திய ஆலை வரலாற்றிலும் விஞ்ஞான ஆய்வுக் கூட வரலாற்றிலும் ஒரு பெரிய விதையை விதைத்தது அதிசயம் தானே!

**************

 

வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது? (Post No 2641)

 

dieases

பாக்யா 18-3-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?
ச.நாகராஜன்

 

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 18 March 2016

 

Post No. 2641

 

Time uploaded in London :–  5-44 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

gee-naming-diseases-690

“நாம் ஒருவரை ஒருவர் ஏன் நேசிக்கிறோம் என்றால் நமக்கு வரும் வியாதிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.” – ஜோனாதன் ஸ்விப்ட்

 

புதிய புதிய வைரஸ்கள்! புதிய புதிய வியாதிகள்!  ஜிகா வைரஸ் இப்போது பயமுறுத்துகிறது. அது எப்படி ஜிகா வைரஸ் என்று பெயர் வந்தது? உகாண்டாவில் உள்ள ஜிகா காடுகளில் முதன் முதலாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதன் பெயர் ஜிகா வைரஸ்.

பார்கின்ஸன் நோய். அல்ஸைமர் நோய், இப்படி பல வியாதிகளுக்கும் ஏன் அப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது?

 

 

பி.பி.சியின் மருத்துவ எழுத்தாளர் லிஸ்ஸி க்ரவுச் களத்தில் இறங்கினார். அதன் விளைவாக வியாதிகளின் பெயர் சூட்டல் பற்றி ஏராளமான தகவல்கள் வெளி வந்துள்ளன.

 

 

ஒரு புது வியாதி நோயாளிகளைப் பீடிக்கும் போது அதற்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வியாதிகளுக்கு பெயர் சூட்ட பேபிகளுக்குப் பெயர் சூட்டும் புத்தகம் போல எதுவுமே இல்லை! சரி, பின்னர் எப்படி பல விசித்திரப் பெயர்கள் சூட்டப்படுகின்றன?

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் டாக்டர் க்ரஹாம் ஹ்யூஸ் என்பவர் ரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும் ஒரு விதமான  பிசுபிசுப்பான ரத்தத்தை சில நோயாளிகளிடம் கண்டார். அவரது சகாக்கள் அவரை கௌரவிக்கும் விதமாக அந்த நிலைக்கு ஹ்யூஸ் சிண்ட் ரோம் என்று அவரின் பெயரைச் சூட்டினர்.

 

 

பழைய காலத்தில் நோயையோ அல்லது அதற்கு காரணமான வைரஸையோ முதலில் கண்டுபிடித்தவரின் பெயரை அந்த நோய்க்குச் சூட்டுவது வழக்கம். இப்போது அப்படியில்லை. காலம் மாறி விட்டது!

 

disease-names

டாக்டர் அலாய்ஸ் அல்ஸைமர் கண்டுபிடித்த நோய்க்கு பாராலிஸிஸ் அஜிடன்ஸ் என்று  பெயர் வைக்கலாம் என்று அவர் சொன்னார். ஆனால் அனைவருமே அவர் சுட்டிக் காட்டிய வியாதிக்கு அல்ஸைமர் நோய் எனப் அவரின் பெயரையே இட்டனர். வயது மூப்பின் காரணமாக வரும் மறதி நோய் இன்று அல்ஸைமர் என்று அவரை கௌரவித்து அழைக்கப்படுகிறது.

டாக்டர் ஜேம்ஸ் பார்கின்ஸன் முதுமை காரணமாக வரும் நடுக்குவாத நோயைக் கண்டுபிடித்தார். அந்த நோய்க்கு அவர் பெயரைச் சூட்டினர். இன்று பார்கின்ஸன் நோய் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.

 

 

சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் லின்ஃபா வேங் தனது குழுவினருடன் இணைந்து ஒரு புதிய வைரஸைக் கண்டு பிடித்தனர். ஆஸ்திரேலியாவில் ஹெண்ட் ரா என்ற இடத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு ஹெண்ட் ரா வைரஸ் என்ற பெயரைத் தந்தனர்.

 

 

வந்தது கோபம் ஹெண்ட் ரா நகர மக்களுக்கு! விஞ்ஞானிகள் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டாலும் அந்த நகரத்து மக்கள் தங்களை அந்தப் பெயர் அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு தொலைபேசி அழைப்புகளால் வேங்கை வறுத்து எடுத்து விட்டனர். பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூடத் தொலைபேசி அழைப்பு வந்த போதெல்லாம் அவர் நடுநடுங்கினார்!

 

 

அமெரிக்காவில் கனெக்டிகட் அருகில் உள்ள ஓல்ட் லைம் என்ற இடத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் குழந்தைகளுக்கு உண்ணியினால் வரும் நோய் ஒன்றைக் கண்டு பிடித்து  அதறகு லைம் நோய் என்று பெயரிட்டனர்.

 

 

அந்த நகர  மக்களுக்குக் கோபம் வந்ததா? இல்லை. அதை அவர்கள் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்! அதை வணிகத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அந்த உண்ணியை டி-ஷர்ட்டுகளில் போட்டு அமோக விற்பனையக் கண்டனர்.!

 

 

உலக சுகாதார நிறுவனமான WHO  பொதுவான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. புதிதாகக் கிளம்பும் வைரஸுக்கோ அல்லது நோய்க்கோ இடத்தின் பெயரைச் சூட்டாதீர்கள் என்ற அதன் அறிவுரை வம்பை விலைக்கு வாங்காதீர்கள் என்பதற்கான நாகரீகமான அன்புரை!

 

nov08-GB Churchill stamp unissued

ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும் ஒரு வகை வீக்கத்திற்கு  (Granulomatasois) வெஜினர் (Frederich Wegener ) என்ற விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அவரது கடந்த காலத்தை ஆராய்ந்த போது அவர் நாஜிக் கட்சியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சித்திரவதை முகாம்களில் இருந்த போது அங்குள்ளவர்களை அவர் சோதனைக்குத் தவறாகப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால் அந்த வியாதிக்கு அவர் பெயரைக் கூற தடை விதித்து விட்டனர்.

 

 

இதற்கிடையில் மே 2015இல் உலக சுகாதார நிறுவனம் அனைவரும் ஒப்புக் கொள்ளும் பெயரையே வியாதிகளுக்குச் சூட்ட வேண்டும் என்று வழிகாட்டுதலைத் தந்துள்ளது.

 

 

டாக்டர் ஹ்யூஸ், “ ஒரு வியாதிக்குப் பெயரிடுவது அவ்வளவு சுலபமில்லை. சில வியாதிகளை விவரிக்கவே பத்து சொற்கள் தேவையாக உள்ளன” என்கிறார். இந்த பத்து சொற்களும் மருத்துவ நிலையை விளக்கும் சொற்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம், அந்த வியாதியின் பெயரைச் சொன்னாலே வியாதியினால் வரும் சங்கடமே தேவலை என்று ஆகி விடும்!

 

ஆகவே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும், யாரையும் புண்படுத்தாத ஒரு பெயரைத் தேட வேண்டிய அவசியம் புதிய வியாதிக்குப் பெயர் சூட்டுவதில் வருகிறது.

 

சரி, டெங்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? யாருக்குமே இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊகமாக ஒரு ஆய்வு செய்து சொல்ல முடியும். ஆப்பிரிக்காவில் வழங்கி வரும் ஸ்வாஹிலி மொழியில் “கா டிங்கா பெப்போ” என்ற வார்த்தைக்கும் கெட்ட ஆவியினால் ஏற்பட்ட நடுக்கத்துடன் கூடிய வலிப்பு என்று அர்த்தம். இதைச் சுருக்கமாக டிங்கா என்பார்கள். இந்த டிங்கா ஸ்பானிய மொழியில் டெங்கு என்று சொல்லப்பட்டு உலகின் எல்லா இடங்களுக்கும் பரவி விட்டது!

 

 

நல்ல வேளையாக ஜிகா காடுகளை வைத்து சூட்டப்பட்டுள்ள ஜிகா வைரஸுக்கு இதுவரை எந்த கண்டனமும் வரவில்லை; ஆர்ப்பாட்டக் கூட்டங்களும் இல்லை! உகாண்டா காடு தானே என்று விட்டு விட்டார்களோ!

 

british-winston-churchill-postage-stamp-7530095

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரிட்டனின் போர்க்கால பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அணு ஆயுதம் என்றால் அடங்காத ஆசை. எப்படியாவது அணு ஆயுதத் தயாரிப்பில் பிரிட்டன் தலை தூக்கி நிற்க வேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் அணு ஆயுதம் அபாயம் விளைவிக்கும் ஒன்று என்பது பிரபல விஞ்ஞானி நீல்ஸ் போரின் எண்ணம்.

 

 

இதன் அபாயத்தை நேரில் சென்று சர்ச்சிலிடம் விளக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவரை 1944ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று சந்தித்தார். சர்ச்சிலின் மிக நெருங்கிய ஆலோசகரான லார்ட் செர்வெல்லும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் நீல்ஸ் போரின் அபாய அறிவிப்பை சர்ச்சில் ஏற்கவில்லை.

 

சந்திப்பு முடிந்தவுடன் வருத்தத்துட நீல்ஸ் போர் கூறினார்: “எங்கள் இருவரையும் இரண்டு பள்ளிச் சிறுவர்களைத் திட்டுவது போல அவர் திட்டினார்”

 

பின்னர் அமெரிக்கா சென்ற போரை ஜனாதிபதி ரூஸ்வெல்ட் சந்திக்க விரும்பினார். 1946, ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர் ரூஸ்வெல்ட்டைச் சந்தித்தார். ஆனால் சர்ச்சிலைப் போல ரூஸ்வெல்ட் திட்டவில்லை. அவரை ஆதரித்து நான் சர்ச்சிலிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொன்னார்.ஆனால் வரலாறு வேறு விதமாக ஆனது!

 

 

அணுகுண்டு தயாரிக்கப்பட்டு ஹிரோஷிமா நாகசாகி மீது போடப்பட்ட போது தான் அது எவ்வளவு அபாயகரமான ஆயுதம் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

 

இருந்தாலும் சர்ச்சிலின் அணு ஆயுத ஆர்வம் அவரை விடவே இல்லை. வயது முதிர்ந்த நிலையில் கூட பிரிட்டனின் அணு ஆயுத ஆய்வகம் ஒன்றிற்குச் சென்ற அவர் அங்கு நியூட் ரான்கள் சிதற அடிக்கப்படும் சோதனையைக் கண்டு மகிழ்ந்தார்.

விஞ்ஞானிக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாடு நமக்குப் புரிந்த ஒன்று தான்!

*******

 

 

 

 

மின்சார சாதனங்களின் கழிவு பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்குவோம் (Post No 2638)

electronics

WRITTEN BY S NAGARAJAN (for AIR Talk)

 

Date: 17 March 2016

 

Post No. 2638

 

Time uploaded in London :–  5-59 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 e-waste

எலக்ட்ரானிக் வேஸ்ட் எனப்படும் மின்சார சாதனங்களின் அபரிமிதமான கழிவு உலகின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்று ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும்.

 

ஐரோப்பாவில் மட்டும் 50 மில்லியன் டன் என்ற பெரும் அளவில் மின் சாதனக் கழிவு ஏற்படுகிறது என்றால் உலகெங்கும் எவ்வளவு கழிவு ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கும்.

 

கணினிகள், அலைபேசிகள், அலுவலக மின்சார சாதனங்கள், பொழுது போக்கு மின்னணுச் சாதனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் என்ற இவை அனைத்திலும் ஏற்படும் கழிவுகள் மலைக்க வைக்கும் ஒன்று.

 

இவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல், வாங்குவோர், கழிவு எனத் தூக்கி எறிந்து விடுகின்றனர். சி ஆர் டி எனப்படும் காதோட் ரே டியூப் (Cathode ray tubes) மறுசுழற்சிக்கு உட்படாத ஒன்று. இதில் உள்ள ஈயம், பாஸ்பார்ஸ் (phosporsபாஸ்பரஸ் அல்ல) அபாயம் விளைவிக்கும் வீட்டு சாதனக் கழிவு என அறிவியல் வல்லுநர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்சாதனக் கழிவுகளால் ஏற்படும் திரவ மற்றும் வாயுக் கழிவுகள் மிகப் பெரும் அபாயத்தைச் சுற்றுப் புறச் சூழலில் ஏற்படுத்துகின்றன. இவை நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண், காற்று ஆகியவற்றுடன் கலப்பதால் மனிதர்களுக்கு பல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும் ஜந்துக்களும் கூட இவற்றால் பாதிக்கப்படுகின்றன. பாதரஸம், ஈயம், காட்மியம், பெரில்லியம், க்ரோமியம் மற்றும் இதர இரசாயன நச்சுப் பொருட்கள் இவற்றில் இருப்பதால் இவற்றை உரிய முறையில் அகற்ற இதற்காக பிரத்யேகமாக உள்ள அரசு அல்லது தனிப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

 

மின்னணு சாதனங்களில் அலுமினியம், தாமிரம், தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக், இரும்பு போன்ற அரிய உலோக வகைகள் இருப்பதால் இவற்றைக் கழிவாகத் தூக்கி எறிவது அரிய தாது வளத்தைத் தூக்கி எறிவதாகும். இவற்றை உரிய முறையில் பிரித்தெடுத்து மறு சுழற்சிக்கு உட்படுத்தினால் அரிய செல்வத்தைக் காத்தவர்கள் ஆவோம்.

 

மின் சாதனக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதன் மூலம் ஆற்றலை சேமிக்கலாம்; சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதைத்யுடுக்கலாம்; பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்; ஆதார வளங்களைக் காக்கலாம்; அரிய உலோகங்களைச் சேமிக்கலாம். சிந்திப்போம்; செயல்படுவோம்.

 

recycle_electronics

-subham-

பூமியைக் காப்போம்! (POST No 2635)

EARTH

WRITTEN BY S NAGARAJAN (for AIR Talk)

 

Date: 16 March 2016

 

Post No. 2635

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 பூமி 300 கோடி டன் ஐஸை வருடந்தோறும் இழக்கிறது!

      விண்ணில் உலவும் ஒரு சாடலைட் பூமி வருடந்தோறும் 300 கோடி டன் ஐஸை அதாவது பனிக்கட்டிகளை அண்டார்க்டிக் மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் இழக்கிறது என்பதை அறிவித்துள்ளது. இந்த சாடலைட்டின் பெயர் க்ராவிடி ரிகவரி அண்ட் க்ளைமேட் எக்ஸ்பெரிமெண்ட் (Gravity Recovery
And Climate Experiment – GRACE)
என்பதாகும். சுருக்கமாக இதை க்ரேஸ் என்று குறிப்பிடுகின்றனர்.

      பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இந்த சாடலைட்டை 2002ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வருகின்றனர். புவி ஈர்ப்பு விசை மண்டலத்தை ஆராயும் இந்த விண்கலம் அந்த வேறுபாடுகளால் பூமி எவ்வளவு பனிக்கட்டிகளை இழக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும்.

    இப்படிப் பெருமளவில் ஐஸ் இழப்பானது கடல் நீர் மட்டத்தை உயரவைக்கும். கடல் வாழ் உயிரினங்களைத் திகைக்க வைத்து அவற்றின் அழிவிற்கு வழி கோலும்.

      பூமியில் உள்ள மொத்த பனிக்கட்டிகளில் 99.5 சதவிகிதம் அண்டார்க்டிக் மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் உள்ளது.இந்தப் பனிக்கட்டிகளை பூமி முற்றிலுமாக இழந்து விடுவதாக வைத்துக் கொண்டால் கடலின் நீர் மட்டம் சுமார் 63 மீட்டர் அளவு உயர்ந்து விடும்.அதாவது சுமார் 206 அடி கடல் நீர் மட்டம் உயர்ந்து விடும். அப்போது ஏற்படும் உலக நாடுகளின் அழிவை எண்ணிப் பார்த்தால் அனைவரின் மனமும் திடுக்கிடும், இல்லையா! ஆகவே தான் மக்களும் மிருகங்களும் இதர கடல் வாழ் உயிரினங்களும் உயிர் வாழ அண்டார்க்டிக் பகுதி ஐஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவியல் சுட்டிக் காட்டுகிறது.

       இந்த ஆய்வின் முடிவுகள் பனிக்கட்டிகளை இழப்பதன் மூலம் பூமியின் வெப்பம் எப்படி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது என்ற அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதால் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்ச்சியை உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவது இன்றைய தலையாய கடமையாக அமைகிறது. விழிப்புணர்ச்சி பெறுவோம்;பூமியைக் காப்போம்!

*********