‘சூரியனும் ஒரு நட்சத்திரம்’ என்பது வேதகால முனிவர்களுக்கு தெரியும்! (Post No.7529)

RESEA

RCH ARTICLE WRITTEN BY London Swaminathan               

Post No.7529

Date uploaded in London – – 3 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Sun Chariot in Denmark

வானவியலைப் படித்தால் வியந்து கொண்டே இருப்பீர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

TAGS –  நட்சத்திரங்கள் , சூரியன், ரிக் வேதம்,

SUBHAM

கடவுள் இருக்காண்டா குமாரு! (Post No.7528)

WRITTEN BY London Swaminathan               

Post No.7528

Date uploaded in London – – 3 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Written by London swaminathan

நான் பேஸ் புக் (FACEBOOK)  ரசிகன்; ஆனால் வாட்ஸ் அப்- (Whats up) பின் எதிரி. இருந்தபோதிலும் இவ்விரு ‘வீண் அரட்டை அரங்கங்களிலும்’ (Anti Social Media?!) பயன்படுத்தும் ‘கடவுள் இருக்காண்டா குமாரு’ என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடித்த கவர்ச்சிகரமான வாக்கியம் ஆகும்.

இந்தச் சொல்லாக்கத்தை யார் உருவாக்கினாரோ, அவர் வாழ்க!

தினமும் பத்திரிக்கையைத்  திறந்தால் கலிபோர்னியாவில் காட்டுத் தீ (Wild Fire)  ; மக்கள் ஓட்டம்; பலர் சாவு ; கருகிய  காட்டு மிருகங்களின் சடலங்களில் இருந்து நாற்றம்.

இன்னொரு பக்கத்தைத் திருப்பிப் பார்த்தால் ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத புஷ் பயர்  (Bush Fire) – புதர்களில் காட்டுத் தீ – அரிய கங்காரு, கோவாலா கரடிகள் சாவு- லட்சக் கணக்கில் அழிந்தன. ஹெலிகாப்டரில் இருந்து அணைக்க முயன்ற தீயணைக்கும் படையினர் பரிதாப சாவு.

மனிதனுக்கே தண்ணீர் இல்லாததால் 10,000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை!

xxx

இன்னொரு நாள் பத்திரிக்கையைத் திறந்தால் கோர்னோ வைரஸ் (Corona virus) – சீன நகங்களில் இருந்து மக்கள் ஓட்டம் – எங்கும் மரண ஓலம்- உலகை மரண பயம் கௌவிக் கொண்டது. உலக சுகாதார ஸ்தாபனம் எமர்ஜென்சி அறிவிப்பு.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி (Tsunami)  பேரலைகள் எழும்பி ஒரே இரவில் பல லட்சம் உயிர்களைக் காவு கொண்டது .

இது தவிர ஆண்டு தோறும் படிக்கும் வெள்ளம், வறட்சி, பஞ்சம் பட்டினி, போக்குவரத்து விபத்துகள், பூகம்பம், எரிமலை சீற்றம் , இடி மின்னல் தாக்குதல், பாம்புக்கடி சாவுகள்!!!

இவை யாரையும் துயரத்துக்கு ஆளாக்குவதில்லை. ஏனெனில் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டே இருக்கும். நம்முடைய உணர்வுகள் மரத்துப் போய்விட்டன

புதியது என்ன?

முன்னர் போரில் (War) செத்தார்கள். இப்போது பயங்கரவாதிகளின் (Terrorists’ Bomb attacks) குண்டு வெடிப்பில் சாகிறார்கள். அதாவது மனிதன் இன்னும் மிருக மாகிவிட்டான் .

எவ்வளவு விஞ்ஞான முன்னேற்றம் இருந்தும் ஒரு எய்ட்ஸ் (AIDS) நோய்  வந்து பயமுறுத்துகிறது; ஒரு கோர்னோ வைரஸ் வந்து பயமுறுத்துகிறது. இவை அனைத்து ம் பொருளாதார தாக்கங்களையும் (Economic Impact) உண்டுபண்ணுகின்றன.

மேல் உலகத்தில் இருந்து கடவுள் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறாரோ??

கடவுள் இருக்காண்டா குமாரு.

நம்புங்கடா ! கடவுள் இருக்காண்டா குமாரு!

xxx

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து

எல்லோரும் இன்புற்றிருப்பது அன்றி யாம் ஒன்றும் அறியோம் பராபரமே !

tags – கடவுள், இருக்காண்டா,

–சுபம்–

ஏழு வகை பிராக்ருதத்தில் உள்ள அற்புத நூல்கள் (Post No.7525)

ஏழு வகை பிராக்ருதத்தில் உள்ள அற்புத நூல்கள் (Post No.7525)

WRITTEN BY London Swaminathan               

Post No.7525

Date uploaded in London – – 2 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிராகிருதம் வந்ததா  அல்லது பிராக்ருதத்தில் இருந்து சம்ஸ்க்ருதம் வந்ததா என்று வாத ப் பிரதிவாதங்கள் வருவதுண்டு. அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் இருந்தனவா என்று கேட் போரும் உளர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கவிஞர்கள், சம்ஸ்க்ருதம் மூல மொழி என்று கவி பாடிவிட்டுச் சென்றனர் (மேல் விவரம் வேண்டுவோர் விக்கிபீடியாவில் உள்ள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவும்)

ப்ரக்ருதி என்பது இயற்கையில் உளது . அதிலிருந்த வந்தது பிராகிருதம் என்பர் சிலர். இல்லை, இல்லை புரா + க்ருதம் =முன்னரே இருந்தது ப்ராக்ருதம் . பின்னர்  செம்மை செய்யப்பட்டது  சம்ஸ்க்ருதம் என்பர் வேறு சிலர். பழைய கவிஞர்கள் சம்ஸ்க்ருதம்தான் முதலில் இருந்தது என்று சொல்லிவிட்டனர்.

இன்னும் சில அரை வேக்காடுகள் சம்ஸ்க்ருதம் என்ற பெயரையே பழைய இலக்கண வித்தகர்கள் செப்பவில்லையே என்று அங்கலாய்ப்பர். அத்தகைய அறிவிலிகளிடம் கேளுங்கள் செந்தமிழ் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உள்ளதா? என்று.

இன்னும் சிலர் கேட்பர். அது சரி. பிராகிருதம் என்று சொல்கிறீர்களே. எந்தப் பிராக்ருதத்தை ? என்று கேட்பர் . இன்று அதை ஆராய்வோம்.

எது ஒரிஜினல் பிராகிருதம்? எது உண்மையில் பிராகிருதம் அல்லது அபப்ராம்ஹஸம் என்பதிலும் பிராகிருத அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கிறது. சுருக்கமாய் சொல்கிறேன்.

முக்கிய ப்ராக்ருதங்கள் ஆறு. அவை திரிந்தால் வருவது அபப்பிராம்சம்; ஆக மொத்தம் ஏழு.

தமிழர்கள் சொல்வார்கள் நாநிலம் ; அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று. ஐயா! பின்னர் பாலை  நிலம் பற்றியும் பாடிவிட்டு 4 என்று சொல்கிறீர்களே என்றால், நாலு நிலமும் இயல்பு கெட்டுத் திரிந்து போனால் கிடைப்பது– மிஞ்சுவது — பாலை என்று பகர்வர். அதுபோலத்தான் அபப்ராஹ்ம்ஸம் .

முக்கிய ஆறு பிரிவுகளைக் காண்போம்—

மஹாராஷ்ட்ரி, சௌரசேனி , அர்த்தமாகதி , மாகதி , பாலி,

பைசாசி .

மஹாராஷ்ட்ரி வகை பிராக்ருதத்தில் தோன்றிய மொழி – மராட்டி.

அர்த்த மாகதியில் இருந்து பிறந்தவை – குஜராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, மேற்குப் பகுதியில் பேசும் ஹிந்தி.

பைசாசி வகை பிராக்ருதத்தில் இருந்து பிறந்த மொழிகள் – வங்காளி , ஒரியா , பிஹாரி, அஸ்ஸாமிய மொழிகள். இதிலிருந்தே நேபாளி மற்றும் இமயமலை மொழிகள் பிறந்திருக்கலாம் என்றும் சிலர் உரைப்பர் .

பாலி

த்ரி பிடகம் (மூன்று பெட்டிகள் ) என்ற புத்த மத புனித நூல்களும் ஜாதகக் கதைகளும் இலங்கை வரலாறு விளம்பும் மஹாவம்சம், தீப வம்சம் முதலியனவும்  பாலி வகை பிராக்ருதத்தில் உள்ளன.

2300 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது; 14ம் நூற்றா ண்டுவரை இலக்கியம் படைத்த  மொழி இது.

அர்த்தமாகதி

ஸ்வேதாம்பர பிரிவு ,  அதாவது வெள்ளாடை உடுத்தும் — சமணர் பிரிவின் ஆகமங்கள் , அர்த்தமாகதி ப்ராக்ருதத்துள் உள . இரண்டாம் நூற்றாண்டு முதல் இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றது. நீதிகளை போதிக்கும் 115 நூல்கள் இருக்கின்றன .

சௌரசேனி

கிருஷ்ண பரமாத்மா உலவிய மதுராபுரியைத் தலை நகராகக் கொண்ட தேசம் சூரசேனம் . அங்கே பிறந்தது இது. சம்ஸ்க்ருத நாடகங்களில் விதூஷகர்களும் பெண்களும் இதில் கதைப்பர் . விதூஷகர் என்னும் நகைச் சுவை நடிகராக பிராமணர் வேடம் போடுவோர் நடிப்பர் .

இங்கே இரண்டு கருத்துக்களைச்  சொல்கிறேன். திரைப்படங்களில் என் பிரமணர்களைக் கிண்டல் செய்யும் பாத்திரங்களில் போட்டுவிக்கிறார்கள் என்று சிறு வயதில் நான்  வியந்ததுண்டு . இது 2300 ஆண்டுகளாக நாடகத்தில் பின்பற்றப்படும் உத்தி என்பது சம்ஸ்கிருதம் கற்ற பின்னரே என் புத்திக்கு எட்டியது .

இரண்டாவது கருத்து இந்துக்களின் அபார அறிவு பற்றியது. ஒரு கேளிக்கை என்றால் – திரைப்படம் , நாடகம் என்றால் — அதில் காமெடியும் இருக்க வேண்டும் என்பதை சம்ஸ்கிருத நாடகம் உலகிற்கு கற்பித்தது. தமிழில் – பழந் தமிழில்– எழுதப்பட்ட நாடகம் எதுவும் நமக்கு கிடைத்தில.

கேரளத்தில் கோட்டயம் தம்புரான் எழுதிய கதகளி நாடக வசனத்தில் சௌரசேனி பிராக்ருதத்தில் ஊர்வசியின் அழகை வருணித்துள்ளார் என்று எல்.சுதர்மணி எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

நாடகத்தின் பெயர்- நிவாட கவச காலகேய வைபவ. இந்தப்  பிரிவில் சத்தகம் என்று அழைக்கப்படும் இலக்கியம் வரும். முக்கிய படைப்புகள் – ராஜசேகர எழுதிய கற்பூர மஞ்சரி, கேரள கவிஞர் ஸ்ரீகண்ட கவி எழுதிய சந்திரலேகா, கண ஷியாம எழுதிய ஆனந்த சுந்தரி, விஸ்வேஸ்வர எழுதிய சிருங்கார மஞ்சரி , நய சந்திர எழுதிய ரம்பா மஞ்சரி .

மஹாராஷ்ட்ரி

இந்த வகை பிராகிருதம் கொஞ்சம் கடினமானது மகாராஷ்ட்ர மாநிலப் பகுதியில் பேசப்பட்டது. இலக்கண கர்த்தாக்கள் பிராகிருதம் என்று சொல்லும்போது அது மஹாராஷ்ட்ரியை மட்டுமே குறித்தது.மிகவும் இனிமையான மொழி என்பதால் சம்ஸ்கிருத நாடகங்களில் பெண்கள் பாடுவது மஹாராஷ்ட்ரி வகை பிராக்ருதத்தில்தான் .

மிகவும் புகழ்பெற்ற ஹாலன் என்ற மன்னன் தொகுத்த காதா சப்த சதி , சமய சுந்தராகினி எழுதிய  காதா சஹஸ்ரி, பிரவரசேனா எழுதிய  சேது பந்தன என்பன இதிலுள்ள முக்கிய படைப்புகள். வரருசி படைத்த பிராகிருத பிரகாச, வாக்பதிராஜனின் கௌடவாஹோ  முதலியனவும் புகழ்பெற்ற நூல்கள் .

பைசாசி

இலக்கண வித்தகர் அனைவரும் குறிப்பிடும் இம்மொழியில் உள்ள படைப்புகள் எதுவும் கிடைத்தில. குணாட்யர் என்பவர் எழுதிய பிருஹத் கதா — பெருங்கதை – இதில் இருந்ததாகவும்  சொல்லுவர். போஜன் என்பவர் சிருங்கார ப்ரகாசாவில் கொடுத்த மேற்கோள்கள் மூலம் சில பகுதிகள் கிடைத்தன.

அபப்ராஹ்ம்ச

இலக்கிய நடையில் இல்லாமல் கொச்சை மொழியில் இருந்த எல்லா வகை பிராகிருத எழுத்துக்களும் இதில் அடங்கும். தண்டி என்ற புலவர் மொழிகளை பற்றிப் பேசுகையில் மொழிகளை நான்கு வகையாகப் பிரிப்பார் — சம்ஸ்க்ருதம், பிராகிருதம், அப பிராஹ்ம்சம் , மிஸ்ரம் என்று . இதை தற்கால வடஇந்திய மொழிகளின் ‘மூலம்’ எனலாம். இதிலும் கூட பின்னர் சில படைப்புகள் தோன்றின.

மஹாகவி ஸ்வயம்பூதேவ் , தேவசேன, புஷ்ப தந்த , ஹேமசந்திர, அப்துர் ரஹ்மான் முதலியோர் 17-ம் நூற்றாண்டு வரை இதில் எழுதினர் . இலக்கண வரம் பற்ற மொழி என்பதே இதன் பொருள். காட்டுவாசி ஒருவன் சொல்லும் பதில் விக்ரம ஊர்வசீயம் என்ற காளிதாசன் நாடகத்தில் வருகிறது. அந்தக் கொச்சை மொழி இவ்வகைத்தே. அப்துர் ரஹ்மான் என்பவர் மூல்டான் நகரைச் சேர்ந்தவர். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று தெரிகிறது.

மாகதி

மகத தேசத்தில்  பேசப்பட்ட பிராகிருதம். இப்போதும் பிஹாரில் ஏழு மாவட்டங்களில் மகதி பேசப்படுகிறது . ஜார்கண்ட் மாநிலத்தின் சோடா நாகபுரி பகுதியில் பழங்குடி மக்கள் கலப்பட மாகதி பேசுகின்றனர். எல்லாம் இந்தி போலவே இருக்கும். அத்துடன் ஒரு இயா , வா, ஈய என்பன சேரும். அசோகரின் கல்வெட்டுகள் உள்ள மொழி. மௌர்யர்களின் ராஜாங்க மொழி. புத்தர் பேசிய மொழி என்றும் மொழிவார்கள்.

xxx

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத முனி சம்ஸ்க்ருதம், பிராக்ருதம் ஆகிய இரண்டையும் ‘ஆர்ய பாஷை’ என்பார் . ஆர்ய என்பது மாக்ஸ்முல்லர் வகையறா பயன்படுத்திய இனவெறிச் சொல் அல்ல. சங்கத் தமிழ் இலக்கியத்தில் வரும் கற்றோர், பண்புடையோர் மொழி என்பதாகும். பரத முனி இவ்விரு மொழிகளை அரசர் மொழி என்று சொல்லிவிட்டு, விபாஷா என்ற பட்டியலில் திராவிட, ஆந்திர, சண்டாள , சகர , சைபர், ஆபிர மொழிகளைச் சேர்க்கிறார். அபிநவ குப்தா என்பவர் இவைகளை ‘சிதைந்து போன பிராக்ருதங்கள்’  என்று சொல்லிவிட்டு , ‘காட்டுவாசிகளின் மொழி’ என்றும் செப்புவார்.

தொல்காப்பியர் கூட செந்தமிழ் பேசக்கூடிய சிறு பகுதியை வரையறை செய்துவிட்டு ஏனைய பகுதிகளைக் கொடுந்தமிழ் பகுதிகள் என்பார் . பரத முனி , அபிநவ குப்தர் ஆகியோர் கருத்துக்களையும் அப்படியே நோக்க வேண்டும்.

–subham–

பிராக்ருத மொழி அதிசயங்கள் -2000 கல்வெட்டுகள் (Post No.7522)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7522

Date uploaded in London – 1 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

1.இந்தி, மராட்டி, குஜராத்தி, வங்காளி முதலிய வட இந்திய மொழிகள் பிராகிருத வடிவத்திருந்து பிறந்தன; இம்மொழி பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம்.

2.பிராகிருதம் பற்றிய வியப்பான விஷயம் அதில் முதலில் கிடைப்பது உரை நடை (Prose) ஆகும். உலக மொழிகள் அனைத்திலும் முதலில் கிடைப்பது (Poetry) கவிதைகள். ஆனால் பிராக்ருதத்திலோ அசோகனின் கல்வெட்டு வாசகங்கள். அது கவிதை நடை இல்லை.

3.சமண மதம்

சமண தீர்த்தங்கரர்களின் போதனைகள் ப்ராக்ருதத்தில் உள்ளன. அவர்களுடைய முக்கிய மந்திரங்களும் இதே மொழியில் உள்ளன.

4.வாக்பதிராஜ என்ற புகழ்பெற்ற கவிஞர் கூறுகிறார் ,

“கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறி மழையாகப் பொழி  ந்து ஆறாக ஓடி கடலையே அடைவது போல எல்லா மொழிகளும் பிராக்ருதத்திலிருந்து தோன்றி  பிராக்ருதத்திலேயே சங்கமம் ஆகின்றன”.

சயலாவோ இமாம் வாயா விசந்தி எத்தோ யா னேந்தி வாயாவோ

ஏந்தி சமுத்தம் ச்சிய னேந்தி சாயராவோ ச்சிய ஜலாயிம்

—-கௌடவாஹோ

5.மஹாவீரர் , மாமன்னன் அசோகன், காரவேலன் ஆகியோர் செய்திப் பரிமாற்றத்துக்கு பிராகிருத மொழியையே பயன்படுத்தினர்.

6.சமண ஆகமங்களும் அசோகர், காரவேலன் கல்வெட்டுகளும் இம்மொழியில் இருக்கின்றன. 2000 கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் உள்ளன. தமிழ் நாட்டின் பல பழைய பிராமி லிபி கல்வெட்டுகளும் இதில் அடக்கம்.

7.வியப்பான ஒரு விஷயம் பிராகிருத மொழி இலக்கணத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதினர்

8.பிராக்ருதத்தில் பல வகைகள் உண்டு- மஹாராஷ்ட்ரீ , சூரசேனி ,மாகதி , பைசாசி , ஆபப்ராஹ்மச

பிராகிருத பல்கலைக்கழகம்

9.கர்நாடகத்திலுள்ள சிரவண பெலகோளாவில் மிகப்பெரிய பிராகிருத நூலகம் உள்ளது. அங்குதான் மௌர்ய சந்திரகுப்தர் தவம் செய்து உயிர்விட்டார். அவருடைய குருவின் பெயர் ஸ்ருதகேவலன்  பத்ரபாஹு . ஆகவே இந்த இடம் 2500 ஆண்டு வரலாறு உடையது . அங்குள்ள கோமடேஸ்வரரின் பிரம்மாண்டமான ஒற்றைக் கல் சிலை , சமண மத நம்பிகை இல்லாதோரையும் ஈர்த்திழுக்கும். .அங்குள்ள மடத்தின் தலைவர் ஸ்வஸ்தி ஸ்ரீ சாரு கீர்த்தி பட்டாராக பட்டாச்சார்ய சுவாமிகள் பெரிய அறிஞர் ; பல் மொழி வித்தகர். அவர் போன்களையோ மொபைல் போன்களையோ பயன்படுத்தாத அதிசயப்பிறவி. பெரிய சொற்பொழிவாளர் ; நூலாசிரியர்  அவருடைய முயற்சியின் பேரில் அங்கு பிராகிருத பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுள்ளது.

10.தர்ம அறிவுரை

அசோகரின் கிர்னார் கல்வெட்டு எண் மூன்றில் காணப்படும் வாசகம்

‘பிராணானாம் சாது அனாரம்போ , அபவ்யயதா ஆபத்பாந்ததா சாது’

அஹிம்சை என்பது எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும்.குறைவாக செலவு செய்வதும், குறைவாக சேர்த்துவைப்பதும் ன்மை பயக்கும்.

கிர்னார் மலையின் 12ஆவது கல்வெட்டில் அசோகன் சொல்கிறார்,

‘ஸவபாசந்தா பஹூசுதா வ அ சு , கலா னாகமா வ அசு’

எல்லா சமய பிரிவினரும் மற்றவர் சொல்வதையும் கேட்டு, பொது நல சேவை செய்ய வேண்டும் .

இவ்வாறு உயரிய கருத்துக்களை இம்மொழி பரப்பியதோடு வரலாற்றை அறியவும் உதவுகிறது.

11.பிராகிருத மொழி வளர்ச்சி

ஏழு வகை பிராக்ருதத்திலும் நிறைய நூல்கள் தோன்றின. இரண்டாம் நூற்றாண்டு இந்திய வரைபடத்தில் மொழிகளைக் குறித்து, இலக்கியப் படைப்புகளை எழுதினால், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் நூல்கள் அல்லது கல்வெட்டுகள் அல்லது ஓலைச்  சுவடிகள் இருப்பதைக் காணலாம். அத்தனை பேரும் தர்ம, அர்த்த, காம , மோக்ஷத்தைப் போற்றி எழுதினர். ஒரே பண்பாடு, ஒரே நம்பிக்கைகள்!

xxx

பத்தாம் நூற்றாண்டு முதல் ஸுரசேனி வகையே கவிதையிலும் நாடகத்திலும் பயன்பட்டது. 18ம் நூற்றாண்டு வரை ‘சத்தக’ (SATTAKA) இலக்கியத்திலும் இதைக் காணலாம் . இதன் பிறப்பிடம் மத்திய இந்தியா என்றும் மற்ற கிளை மொழிகள் இதிலிருந்து உதித்ததாகவும் அறிஞர்கள் செப்புவர். இது திகம்பர பிரிவினரின் முக்கிய மொழியாகத்  திகழ்ந்தது.

நாடகங்களில் பயன்பட்டது – ஸுரசேனி . காளிதாசர் முதலியோர் எழுதிய சம்ஸ்க்ருத நாடகங்களிலும் பிராகிருத வசனம் உண்டு. முக்கிய சில கதாபாத்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும், ஏனையோர் பிராக்ருதத்திலும் பேசுவதைக் காணலாம். சூத்ரகர் எழுதிய ம்ருச்சகடிக நாடகத்தில் இதைத் தெளிவாகக் காணலாம்

சம்ஸ்கிருத நாடகங்களில் பெண்கள், வேலைக்காரர்கள் இப்படி கொச்சை மொழியில் பேசுவர்.

18ம் நூற்றாண்டு வரை சம்ஸ்க்ருத நாடகங்களில் இந்தப் போக்கைப் பார்க்கிறோம்

சமணர்களின் புனித நூல்கள் பயன்படுத்துவது அர்த்தமாகதி ; பௌத்தர்கள் பயன்படுத்துவது மாகதி ; இலக்கண கர்த்தாக்கள் பின்பற்றுவது ஆர்ச ; ஒவ்வொருவரும் தங்கள் மொழியே மூல மொழி என்பர்.

xxxx

சம்ஸ்கிருதம் என்பது செம்மை செய்யப்பட மொழி. பேச்சு வழக்கில் இருந்த கொச்சை மொழிக்கு பிராகிருதம் என்று பெயர். ஆனால் காலப்போக்கில் அதற்கு என்று தனி இலக்கணம் வகுத்தனர். அதில் கவிதை நூல்கள், அறிவியல் நூல்கள் தோன்றின. அதுவே பெரிய இலக்கியமாக உருவெடுத்தது. மூல சம்ஸ்கிருத மொழி தெரியாதவர்களுக்கு அது புது மொழியாகத் தோன்றும் . வட இந்தியா முழுதும் பரவியதால் காலப்போக்கில் அவைகளே தனி மொழியாக வளர்ந்தன . 2000 ஆண்டுகளுக்கு மேல் இப்படி வளர்ந்து வந்திருக்கிறது இன்றும் கூட சம்ஸ்கிருதம் அறிந்தோர் வட இந்திய மொழிகள் எதுவானாலும் அதைப் புரிந்துகொள்ள முடியும். தர்ம என்பதை பாலி மொழியில் ‘தம்ம’ என்பர். இந்திக்காரர்கள் ‘தரம்’ என்பர்.தமிழர்கள் ‘அறம்’ என்பர். சம்ஸ்கிருத வேதத்திலுள்ள ‘தர்ம’ தெரிந்தவர்களுக்கு மற்ற மூன்று சொற்களையும் புரிந்து கொள்வது எளிது.

இதற்கு இணையாக எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால் தமிழில் இப்போது வரும் கதைப் புத்தக நடையை பிராக்ருதத் தமிழ் என்றும், நாட்டுப்புறப் பாடல்களை பிராக்ருதத் தமிழ் கவிதைகள் என்றும் சொல்லலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பேச்சு மொழி பிராகிருதம்; இலக்கண /இலக்கிய மொழி சம்ஸ்கிருதம்.

இதை புரிந்து கொள்ள தமிழ்த் திரைப்பட மொழி உதவும். அரசர் வேடத்தில் வருவோர் பேசுவது இலக்கிய மொழி; ஆண்டி வேடத்தில் வருவோர் பேசுவது கொச்சை மொழி.

பாலி என்னும் பிராகிருத மொழியை பௌத்தர்கள் அதிகம் பயன்படுத்தினர். பிராக்ருதத்தை சமணர்கள் அதிகம் பயன்படுத்தினர். சம்ஸ்க்ருதம் இதற்கெல்லாம் மூல மொழி. அதை இந்துக்கள் பயன்படுத்தினர். சம்ஸ்க்ருதம் அறிந்தோர் இவ்விரு மொழிகளையும் புரிந்துகொள்ள முடியும்.

–subham—

மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்! (Post No.7521)

ரிஷிகள் சரித்திரம்

மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்! (Post No.7521)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7521

Date uploaded in London – – 1 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

பகவத்கீதையில் அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிக் கூறும் ஸ்லோகம் (பத்தாம அத்தியாயத்தில் 13ஆம் ஸ்லோகம்)  இது:

ஆஹூஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர் நாரதஸ்ததா |

அஸிதோ தேவலோ வ்யாஸ ஸ்வயம் சைவ ப்ரவீஷிமே ||

12, 13 ஆம் ஸ்லோகங்களின் பொருள் இது:-

“நீயே பரம்பொருள்; நியே பரஞ்ஜோதி; நீயே தூயவன்; நீயே உயர்ந்தவன்: நீயே புருஷன்; நீயே நிலையானவன்; நீயே தேவலோகத்தவனான ஆதி தேவன்; நீயே பிறப்பற்றவன்; நீயே எங்கும் பரவியுள்ளவன்” என்று எல்லா ரிஷிகளும், தேவ ரிஷியான நாரதரும், அஸிதரும், தேவலரும், வியாஸரும் சொல்கிறார்கள். நீயும் கூட அவ்விதமே எனக்குச் சொல்கிறாய்”.

இதில் வரும் மஹரிஷி அஸிதரின் புதல்வர் தேவலர் பெரும் ரிஷி.

தேவலர் என்ற பெயரில் மூன்று ரிஷிகள் உள்ளனர். அஸிதரின் புதல்வரான தேவலரைப் பற்றி இங்கு காண்போம்.

அஸிதருக்கு அஷ்டாவக்ரர் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஏனெனில் இவரது உடல் எட்டுக் கோணல்களைக் கொண்டது.

அஷ்டம் என்றால் எட்டு. வக்ரம் என்றால் கோணல். ஆக அஷ்டாவக்ரர் என்றால் உடலில் எட்டுக் கொணல்களைக் கொண்டவர் என்று பொருள் ஆகும்.

அஷ்டாவக்ரர் என்ற பெயரில் பிரஸித்தமான ரிஷி ஜனகரைக் காத்திருந்து சந்தித்த சரிதம் அனைவரும் அறிந்ததே. இவர் ககோதரர் என்னும் ரிஷியின் புதல்வர்.

அவரை முதலாம் அஷ்டாவக்ரர் என்றும் அஸிதரின் புதல்வரை இரண்டாம் அஷ்டாவக்ரர் என்றும் கொள்ளலாம்.

ஜனகரின் அவைக்குச் சென்ற அஷ்டாவக்ரரின் உடல் கோணல்கள் அவரது 12ஆம் வயதிலேயே நீங்கி விட்டன.

ஆனால் அஸிதரின் புதல்வருக்கோ நீண்ட நாள் அந்த எட்டுக் கோணல்கள் இருந்தன.

இவரது சரிதம் இது:

அஸிதர் நெடுங்காலம் சிவனை நோக்கித் தவமிருந்து அவரது அருளால் ஒரு புதல்வரைப் பெற்றார். அவரது பெயர் தேவலர்.

ஒரு முறை தேவலோக ராணியான ரம்பை தேவலர் மீது மையலுற்றாள். ஆனால் தேவலரோ அவளது ஆசைக்கு இணங்கவில்லை. இதனால் கோபமுற்ற ரம்பை அவர் அஷ்டகோணல் கொண்ட உடலை அடையக்கடவது எனச் சாபமிட்டாள்.

தேவலரின் உடல் எட்டுக் கொணல்களைக் கொண்டதாக ஆனது.

அவரை அனைவரும அஷ்டாவக்ரர் என்ற பெயரால் அழைக்கத் தொடங்கினர்.

ஒரு சமயம் கிருஷ்ண பகவான் மலையபர்வதத்திற்குச் சமீபத்தில் உள்ள அழகிய தடாகத்தில் ராதையுடன் ஆனந்தமாய் ஜலக்ரீடை செய்து விட்டு அந்தத் தடாகத்திற்குச் சமீபத்தில் இருந்த ஒரு ஆலமரத்தை அடைந்தார்.

அப்போது பகவானையே சதா சர்வகாலமும் தியானித்துக் கொண்டிருந்த தேவலர் அவரிடம் வந்து சேர்ந்தார்.

அவரது சரீரத்தில் உள்ள எட்டுக் கொணல்களையும் நீண்ட நகங்கள் கொண்ட அவரது குள்ளமான உருவத்தையும் கண்ட ராதை  பரிகாசமாக நகைத்துச் சிரித்தாள். இதைக் கண்ட கிருஷ்ணர், “அவர் மிக்க பிரபாவமுள்ளவர். இப்படி பரிகாசமாக நீ நகைக்கக் கூடாது” என்று ராதையைக் கண்டித்தார்.

தேவலர் கிருஷ்ணரை நமஸ்கரித்து ஈஸ்வரனால் தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களினால் ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தார். அவ்வாறு துதித்து பகவானிடத்து தனது மனம் ஒன்றி அவர் பாதங்களில் நமஸ்காரம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே தமது யோக பலத்தால் பிராணனை விட்டார்.

அவரது சரீரத்திலிருந்து கொழுந்து விட்டெரியும் அக்னி போல் எல்லா திக்குகளையும் பிரகாசமடையச் செய்து ஒரு ஜோதி ஏழு பனைமரங்களின் உயரத்துடன் ஆகாயத்தில் கிளம்பி நான்கு பக்கங்களிலும் சுற்றிக் கொண்டு பகவானுடைய பாதங்களில் வந்து  லயமாயிற்று.

பிறகு கிருஷ்ண பகவான் முனிவர் இறந்ததைக் கண்டு அவருக்கு ஸம்ஸ்காரம் செய்யக் கருதியவராய் தமது இரு கைகளாலும் அம்முனிவருடைய சரீரத்தை எடுத்து மார்புடன் தழுவிக் கொண்டு சாமான்ய மனிதன் போல உரக்க அலறினார்.

தேவலர் அறுபதினாயிரம் வருஷங்களாக அன்ன ஆகாரமின்றி தவம் செய்ததால்  அவர் தேகத்திலுள்ள ரத்தம், மாமிசம், எலும்புகள் யாவும் அவருடைய ஜாடராக்னியினால் கொளுத்தப்பட்டு சாம்பலாகி இருந்த்ன. ஆதலால், பகவன் தமது மார்பில் அவரைத் தழுவும் போது அந்தத் தேகத்திலிருந்து பஸ்மம் வெளியேறியது.

பிறகு கிருஷ்ணர் சந்தனக்கட்டைகளால் சிதை அடுக்கி அதில் அவருடைய சரீரத்தை வைத்து அக்னி மூட்டினார். அப்போது தனது பக்தனின் பிரிவையாற்றாமல் ஒரு க்ஷண நேரம் மூர்ச்சையடைந்தார்.

அச்சமயம் ஆகாயத்தில் துந்துபி முழங்கிற்று. தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்.

ஆச்சரியம்! ஆச்சரியம்!! ஆச்சரியம்!!!

அங்கு உயர்ந்த ரத்தினங்களால் செய்யப்பட்டதும் விசித்திரமான ஆடைகளைத் தரித்துக் கொண்டும் கிருஷ்ணனுக்கு ஒப்பான ரூபமுள்ள அநேக விஷ்ணு தூதர்களால் சூழப்பட்டதுமான ஒரு திவ்ய விமானம் கோலோகத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்பாக வந்து நின்றது.

உடனே விஷ்ணுதூதர்கள் அனைவரும் கீழே இறங்கினர்.

ராதாசமேதரான கிருஷ்ணரையும் சூக்ஷ்ம சரீரத்துடன் இருந்த தேவலர் என்னும் அஷ்டாவக்ரரையும் நமஸ்கரித்து அம்முனிவரை அவர்கள் கோலோகம் கொண்டு சென்றனர்.

இதைப் பார்த்த ராதை ஆச்சரியமுற்று, “ஹே! நாதா!! இம்முனி சிரேஷ்டர் யார்? எல்லா அங்கங்களும் கோணலாகவும், மிகவும் குள்ளமாகவும், மஹா தேஜஸ் உள்ளவராகவும் பார்ப்பவர் மனதிற்கு அருவருப்பு உண்டாக்குபவராகவும் உள்ளவராய் அல்லவா இவர் இருக்கிறார்! இவரது சரீரத்திலிருந்து சாம்பல் வெளியேறியது ஏன்? உமது பாதாரவிந்தத்தில் அக்னி போன்ற தேஜஸானது லயத்தை அடைந்ததின் காரணம் என்ன? இப்பெரும் பாக்கியவான் உடனே கோலோகத்திற்கும் சென்று விட்டார். அவர் இவ்வளவு வைபவம் உள்ளவராய் இருக்கும்போது நீங்கள் ஏன் இவ்விதம் துக்கம் அடைந்து அரற்றுகிறீர்? கண்ணீரும் கம்பலையுமாக நீங்கள் ஏன் அவ்ருக்கு உத்தரகிரியைகளைச் செய்தீர்? இதன் காரணத்தை எனக்குச் சொல்லி அருள்வீராக!” என்றாள்.’

உடனே கிருஷ்ணர் அஸிதர் மற்றும் தேவலரின் ஆச்சரியமான சரிதத்தை விரிவாக ராதைக்குக் கூறினார்.

இந்தச் சரிதம் பிரம்மவைவர்த்த புராணத்தில் உள்ளது.

*

மேலே கண்ட சரிதத்தின் இறுதிப் பகுதி சற்று மாற்றியபடி வேட்டம் மணி அவர்கள் எழுதிய புராணிக் என்சைக்ளோபீடியாவில் (65ஆம் பக்கம் – Puranic Encyclopedia) காணப்படுகிறது.

அஷ்டாவக்ரரின் உடல் கோணல்களைக் கண்டு பரிகசித்த ராதையைக் கண்டித்த கிருஷ்ணர் அவரை ஆரத் தழுவினார். உடனே அவரது உடல் கோணல்கள் நீங்கி அழகிய உடல் கொண்டவராக அவர் மாறினார். அச்சமயம் ஆகாயத்திலிருந்து ஒரு திவ்ய ரதம் வந்து இறங்க அதில் மூவரும் ஏறிச் சென்றனர்.

***

கிருஷ்ண பக்தரான தேவலர் கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி வருவதை அர்ஜுனன் வாயிலாக நாம் கீதையில் அறியும் போது அவரது சரிதம் எவ்வளவு பெருமை மிக்கது என்பதை நன்கு அறிய முடிகிறது!

****

70 போப்பாண்டவர் படுகொலை (Post No.7518)

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7518

Date uploaded in London – 31 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.


கிறிஸ்தவர்களைப் பிரித்து பிராடஸ்டண்ட் (Protestant) பிரிவை 

உருவாக்கினார் போப்பாண்டவர் ‘பாவ மன்னிப்புச்  சீட்டு’ 

விற்றதே tamilandvedas.com, swamiindology.blogspot.com  இதற்கு காரணம்.

இனி கொலையுண்ட போப்புகளின் பட்டியலைப் பாருங்கள் :–

List of popes who died violently

From Wikipedia, the free encyclopedia

A collection of popes who have had violent deaths through the centuries. The circumstances have ranged from martyrdom (Pope Stephen I)[1] to war (Lucius II),[2] to a beating by a jealous husband (Pope John XII). A number of other popes have died under circumstances that some believe to be murder, but for which definitive evidence has not been found.

Martyr popes[edit]

This list is incomplete; you can help by expanding it.

In tradition, the first pope, Saint Peter, was crucified upside-down.

Murdered popes[edit]

Dubious[edit]

tags -போப்பாண்டவர், படுகொலை

—–subham—

யோக வாசிஷ்டத்தில் 55 கதைகள்! (Post No7509)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7509

Date uploaded in London – 29 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

யோகவாசிஷ்டம் பற்றிய முந்தைய கட்டுரைகளைப் படித்தவர்களுக்கு இன்னும் ஒரு கட்டுரை

யோக வாசிஷ்டம் – 6 பிரகரணங்களும் 55 கதைகளும்!

ச.நாகராஜன்

உலகின் மிக அற்புதமான நூலான யோக வாசிஷ்டத்தைப் படிக்கக் கொடுத்து வைத்தவர்கள் நல்வினைப் பயனை அதிகம் கொண்டவர்கள் என்று துணிந்து கூறலாம்.

யோக வாசிஷ்டம் வசிஷ்டர் ராமருக்கு உபதேசித்தது. அதி ரகசியங்களைத் தெள்ளத் தெளிவாகப் பிட்டுப் பிட்டு வைக்கும் நூல் இது.

இதில் ஆறு பிரகரணங்கள் உள்ளன.

  1. வைராக்ய பிரகரணம்.

ஒரு மனிதன் தன்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் இறுதி உண்மையையும் பற்றிப் பகுத்துப் பார்ப்பது வைராக்ய ப்ரகரணம்.

  • முமூக்ஷு வ்யவஹாரப் பிரகரணம்

உண்மையை அறியத் துடிக்கும் ஒருவன் பேரறிவையும் ஞானத்தையும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது முமூக்ஷு வ்யவஹாரப் பிரகரணம்

  • உத்பத்தி பிரகரணம்

சிருஷ்டி, உலகம் படைக்கப்பட்டது போன்றவற்றைச் சொல்வது உத்பத்தி பிரகரணம்

  • ஸ்திதி பிரகரணம்

உலகம் நிலைபெற்று நடப்பதை விவரிப்பது ஸ்திதி பிரகரணம்

  • உபாசன பிரகரணம்

மனதைச் சாந்தப்படுத்துவதை விளக்குவது உபாசன பிரகரணம்

  • நிர்வாண பிரகரணம்

நீண்ட இந்த பிரகரணம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது – பூர்வார்த்தம் – முதல் பகுதி, அடுத்தது உத்தரார்த்தம் – இறுதிப் பகுதி.

முக்தி பற்றி விளக்கும் இந்த பிரகரணத்தில் ஏராளமான கதைகள் இடம் பெறுகின்றன.

உலகின் ஆகப் பெரும் மகான்களும், ஞானிகளும், நவீன உலகப் பேரறிஞர்களும், விஞ்ஞானிகளும் வியக்கும் இந்த நூலில் 55 கதைகள் உள்ளன.

அவை அனைத்தும் சுவையானவை; சிந்தனையைத் தூண்டுபவை; பெரும் உண்மைகளை உரைப்பவை; பல ரகசியங்களைத் தெரிவித்து, மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பவை. மனதில் தோன்றும் சிக்கலான கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தருபவை.

55 கதைகளின் தலைப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

வைராக்ய பிரகரணத்தில் இடம் பெறுவது :

  1. யோக வாசிஷ்டம் சொல்லப்பட்ட விதம்

முமூக்ஷு வ்யவஹாரப் பிரகரணத்தில் இடம் பெறுபவை :

  • சுகர், வியாஸர் பற்றிய கதை
  •  வசிஷ்டருக்கு பிரம்மா கற்பித்தது பற்றிய கதை

உத்பத்தி பிரகரணத்தில் இடம் பெறுபவை :

  • ஆகாசஜனின் கதை
  • லீலாவின் கதை
  • கர்கடியின் கதை
  • இந்துவின் புதல்வர்களின் கதை
  • இந்திரன், அகல்யையின் கதை
  • மனதின் கதை
  • பிறக்காத மூன்று குழந்தைகளின் கதை
  • மந்திரவாதியின் கதை

    ஸ்திதி பிரகரணத்தில் இடம் பெறுபவை :

  1.  சுக்ராசார்யரின் கதை
  2. தாமா, வியாலா, கதாவின் கதை
  3.  பீமா, பாசா, த்ருதா ஆகியோரின் கதை
  4.  தாசுராவின் கதை
  5.  கசனின் கதை

  உபாசன பிரகரணத்தில் இடம் பெறுபவை

  1. ஜனகரின் கதை
  2.  புண்யம், பாவனாவின் கதை
  3. பலியின் கதை
  4. ப்ரஹ்லாதனின் கதை
  5. காதியின் கதை
  6. உத்தாலகரின் கதை
  7. சுரகுவின் கதை
  8. பாஸா, விலாசாவின் கதை
  9. விதஹ்வ்யாவின் கதை

நிர்வாண பிரகரணத்தின் முதல் பகுதில் இடம் பெறுபவை :

  • காக, புசுண்டரின் கதை
  • தேவ பூஜையின் கதை
  • வில்வ பழத்தின் கதை
  • சின்னக் கல்லின் கதை
  • அர்ஜுனனின் கதை
  •  சத ருத்ரனின் கதை
  •  வேதாளத்தின் கதை
  •  பகீரதனின் கதை
  • சூடாலையின் கதை
  • கிராதனின் கதை
  • சிந்தாமணியின் கதை
  •  ஒரு யானையின் கதை
  •  கசனின் கதை
  • மித்ய புருஷனின் கதை
  • ப்ருங்கீசனின் கதை
  •  இக்ஷ்வாகுவின் கதை
  • ஒரு வேடன், ஒரு மகானின் கதை

நிர்வாண பிரகரணத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெறுபவை :

  • வித்யாதாராவின் கதை
  • இந்திரனின் கதை
  • மங்கியின் கதை
  • மனத்தை மானுக்கு  ஒப்பிடும் கதை
  • ஒரு கல்லின் கதை
  • விபச்சித்தின் கதை
  • வததானா அரசகுமாரர்களின் கதை
  • ஒரு சவத்தின் கதை
  • ஒரு துண்டுக் கல்லின் கதை
  • ப்ரம்மாண்டத்தின் கதை
  • இந்துவின் புதல்வர்கள் பற்றிய கதை
  • தாபஸாவின் கதை
  • மரம்வெட்டியின் கதை

யோக வாசிஷ்டத்தின் ஆறு பிரகரணங்களையும் அதில் உள்ள மிகச் சுவையான 55 கதைகளையும் படிப்பவர்களுக்குப் பிரபஞ்ச மர்மம் புரியும். மனித மர்மமும் புரியும்.

படிப்பவர்கள் பாக்கியவான்களே; இதில் சந்தேகமில்லை!

***

அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால்?! (Post No7504)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7504

Date uploaded in London – 28 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால்?!

ச.நாகராஜன்

செகுலர் தேசத்தில் – அதாவது இந்தியா என்னும் பாரதத்தில் அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால் என்ன ஆகும்?

ஹிந்துக்களை கயவர்கள் போலவும் அழுக்கு ஆசாமிகள் போலவும் சித்தரித்து கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் பரம யோக்கியர் போலவும் எல்லா நல்ல பழக்கங்களையும் உடையவர்கள் போலவும் சித்தரிக்கப்படும்.

சமீபத்தில்  இந்த சதித்திட்டம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சென்ட்ரல் போர்ட் ஆஃப் செகண்டரி எஜுகேஷன் (CBSE – Central Board of Secondary Education) தயாரித்து வழங்கும் கேஜி பாடபுத்தகத்தில் (KG Textbook) ஹிந்து தர்மத்தையும் ஹிந்துக்களையும்  மறைமுகமாக இழிவுபடுத்தும் பகுதிகள் உள்ளன.

எடுத்துக்காட்டுகள் :

ஒரு பிராமணர் அவமதிக்கப்படும் விதத்தில் ஒரு படம் இருக்கிறது. அதில் குழந்தைகள் பெயிண்ட் அடிக்க வேண்டும். இந்த பிராமணர் ஒரு வாழைப்பழத் தோலில் கால் வைத்து வழுக்கி விழும் சித்திரத்தில் குழந்தைகள் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

கவனிக்கவும். ஒரு கிறிஸ்தவ பாதிரியோ அல்லது மௌல்வியோ வழுக்கி விழவில்லை. ஒரு பிராமணர் வழுக்கி விழுகிறார்!!

 அடுத்து புதிர் பகுதி:

அதில் குழந்தைகளுக்கு தரப்படும் உதாரணங்கள் இவை:

ராஜா தினமும் குளிப்பதில்லை.

கரண் தினந்தோறும் பல் துலக்குவதில்லை.

கீதா அழுக்கான ஆடைகளை அணிகிறாள்.

ஹனிப் திறந்தவெளியில் விளையாடுகிறான்.

பால் வகுப்பறையில் நேராக உட்கார்கிறான்.

இப்படி ஏராளமான உதாரணங்கள்.

கீதா அழுக்கான உடை – ஆனால் ஹனிப் விளையாடுவதோ திறந்தவெளி!

ராஜா தினமும் குளிப்பதில்லை – ஆனால் பால் வகுப்பில் நேராக உட்கார்கிறான்.

இதை மிக்க இளம் வயதில் படிக்கும் குழந்தைகள் மனதில் ஹிந்துக்கள் அழுக்கானவர்கள், அவர்கள் எந்த நல்ல பழக்கத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள் என்ற விஷ விதை விதைக்கப்படுகிறது. கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு இப்படி ஒரு விஷ வித்து!

அதே சமயம்  கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எல்லா விதத்திலும் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பவர்கள்!

பிராமணன் வாழைப்பழத் தோல் தடுக்கி விழும் முட்டாள்; ஆனால் மௌல்வியும் பாதிரியும் பரம விழிப்புணர்ச்சி உள்ளவர்கள்.

என்னடா செக்குலரிஸம் இது.

ஹிந்து ராஷ்டிரம் வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என இப்போது புரியும்!

இப்படி பகிரங்கமாக ஹிந்துக்களை மட்டும் இழிவு படுத்தும் ஒரு பாட புத்தகத்தைத் தயாரித்தது யார்? ஏன்?

நமது அரசியல்சட்டம் 28,29, 30இன் படி மைனாரிடிகளுக்கு அவர்களது வேத புத்தகத்தைச் சொல்லித் தர அனுமதிக்கிறது.

ஆனால் அதே சட்டம் இந்துக்கள் அதிகமாக உள்ள இந்த தேசத்தில் பகவத்கீதை உள்ளிட்ட ஹிந்து தர்ம புத்தகங்களைக் கற்பிக்க அனுமதிக்கவில்லை.

ஏன் இப்படி? செக்குலரிஸம் – இது தான் பதில்!

என்னடா இது செக்குலரிஸம்?!

ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

விவேகானந்தர் சொன்னது போல விழிமின் எழுமின் என்பது தான் இன்றைய கோஷமாக ஆக வேண்டும்.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது யாருக்கும் வெறுப்பு இல்லை – ஆனால் அதே சமயம் ஹிந்துக்களை மட்டும் இழிவு படுத்தி தங்கள் தீய நோக்கங்களை அடைய முயற்சிக்கும் தீய சக்திகளை அனுமதிக்கவும் ஹிந்துக்கள் தயாரில்லை!

இதற்குத் தீர்வாக பாரதத்தை தர்ம ராஷ்டிரம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோருவதில் என்ன தவறு?!

புரிந்து கொள்ள வேண்டும் – அனைவரும்!

****

tags – செக்குலரிஸம், பாட புத்தகம், விஷம்,அயோக்கியர்

மேலே உள்ள செய்திக்கு ஆதாரமான கட்டுரை Truth 25-10-2019 Volume 87 No 26 – இதழில் வெளியாகியுள்ளது.

நன்றி : Truth

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

Cultural Denigration

It is reported from New Delhi under the caption, “Conspiracy to show Hindus as inferior and glorify minorities in CBSE’s textbook” as follows :

A lesson on degrading Hindus as inferior and  glorifying Muslims and Christians is included in the KG textbook of CBSE (Central Board of Secondary Education). A conspiracy of brainwashing Hindu children has been hatched, thus, creating misunderstanding in them about Hindu Dharma and Hindus. 

In this textbook, a denigrating image of Hindu Brahman has been printed, and the children have been asked to paint it. This Hindu Brahman is shown falling on the ground after slipping on a banana peel. This textbook

not contain any objectionable image of Christian clergy or Muslim moulvi. 

The textbook contains quizzes on a subject such as identifying good and bad habits. It includes examples such as ‘Raja does not bathe every day’. ‘Karan does not brush his teeth every day’, ‘Gita dresses in unhygienic clothes’, ‘Hanif plays in open-air’, ‘Paul sits straight in the classroom’, etc. In these examples, attempts have been made to convince children that Hindu boys and girls have bad habits; whereas, Muslims or Christians have good habits. 

Some devout Hindus said that such a book is creating hatred in the mind of Hindu culture, sanskars and traditions from childhood in a 

systematic manner. (Sanatan Prabhat 1-15 July 2019) 

  1. Such knave tactics to display Hindus in culturally poor show was pursued by the British before independence. Unfortunately the same trend to denigrate Hindus continues to be followed by the secular anti-Hindu institutions and bodies. Non Hindus must be pampered and Hindus humiliated and insulted. This is the so-called secular spirit, a Hindu is supposed to appreciate and inculcate amongst children. The Articles 28,29 and 30 of our constitution also permit teaching of scripture of minority segment in India in educational institutions, but prohibit study of Bhagavad Gita and other books on Hindu Dharma. Unless Bharat is established as a Dharma Rashtra such nefarious tactics to denigrate Hindu culture will continue to prevail.

Thanks : Truth

***********

துயிலையிலே, பயிலையிலே, அயிலையிலே யார் துணை? (Post No. .7473)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7473

Date uploaded in London – 20 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

சொக்கநாதப் புலவர் பெரும் தமிழ்ப் புலவர். அவருக்கு ஒரு சிந்தனை! பல்வேறு நேரங்களிலும் துணையாகத் தமக்கு இருப்பது யார் என்று. யோசித்தார். விடையைக் கண்டு கொண்டார். புலவர் என்பதால் ஒரு பாடலிலே அதைச் சொல்லி விட்டார்.

அவருக்கு உற்ற துணையாக இருப்பவரே அனைவருக்கும் உற்ற துணையாக எப்போதும் இருப்பார்.

யார் அவர்? பாடலைப் பார்ப்போமா?

துயிலையி லேடர் துன்னையி லேதெவ்வர் குழையிலே

பயிலையி லேயிருட் பாதியி லேபசும் பாலனத்தை

அயிலையி லேவய தாகையி லேநமக் கார்துணைதான்

மயிலையி லேவளர் சிங்கார வேலா மயிலையிலே

பொருள் :

மயில் அயில் வளர் சிங்காரவேலர் மயிலையிலே – மயிலையும் கூர்மை வளர்கின்ற அழகிய வேலையும் கொண்டவரது திருமயிலையிலே

துயிலையிலே – தூங்கும் பொழுது

இடர் துன்னையிலே – துன்பம் மிகும் போது

தெவ்வர் குழையிலே – பகைவரை எதிர்கொள்ளும் போது

பயிலையிலே – சஞ்சரிக்கும் போது

இருள் பாதியிலே – பாதி இரவிலே

பசும் பால் அன்னத்தை அயிலையிலே – பசும்பாற் சோற்றை உண்ணும் போது

வயது ஆகையிலே – ஆயுள் முடியும் போது

நமக்கு ஆர் துணை – நமக்கு யார் துணை ஆவார்?

மயிலைச் சிங்காரவேலரே தான் துணை என்பதை சொக்கநாதப் புலவர் உணர்ந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

நமக்கும் வேல் முருகன் தானே துணை!

அடுத்து அவரது இன்னொரு பாடல்:

போதா சிவகுரு நாதா கலவை புழுகொடுசவ்

வாதாந்த கொங்கைக் குறமாது வள்ளிக்கு வாய்த்திடுமின்

பாதா ருகற்செற்ற வேல்வித் தாலென் பகையையறுக்

காதா மனமிரங் காதா சிவகிரிக் காங்கேயனே

பொருள் :

போதா – ஞானத்தை உடையவனே

சிவகுருநாதா – சிவனுக்கு தேசிகோத்தமனே

கலவை புழுகொடு சவ்வாது ஆர்ந்த – கலவைச் சந்தனமும் புனுகு சவ்வாது பூசப்பட்ட

கொங்கை – மார்பகங்களை உடைய

குறமாது வள்ளிக்கு – குறப்பெண்ணாகிய வள்ளிக்கு

வாய்த்திடும் இன்பா – கிடைத்த சுகானுபவத்திற்குரியவனே

தாருகன் செற்ற வேல் விடுத்தால் – தாருகனைக் கொன்ற வேலாயுதத்தைப் பிரயோகித்தால்

என் பகையை அறுக்காதா – என் பிறவிக்கேதுவாகிய ஐம்புலப் பகையை அறுக்காதா

மனம் இரங்காதா – உனக்கு (என் மேல்) மனம் இரங்காதா

சிவகிரி காங்கேயனே – சிவகிரியில் எழுந்தருளியுள்ள காங்கேயனே!

சொக்கநாதர் காட்டிய வழியில் முருகனைத் துதிப்போம்; ஐம்புலப் பகையை அறுப்போம்!

tags – சொக்கநாதப் புலவர், சிவகிரி, துயிலையிலே

****

கிரேக்கர்கள் இந்துக்களே! நப்பின்னை கதை!!(Post No.7468)

IMAGES OF PENELOPE

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7468

Date uploaded in London – 18 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

வலிமைமிக்க கம்பணன், கிராடர்களின் அரசன் சுமனஸ் , சாணுரன் , யவனர்கள் அதிபதி , தேவவிரதன், போஜன், tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்த ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வான் பூட்டினன் , யவனர்களை கிரேக்கர் (Greeks) என்றே மொழிபெயர்த்துள்ளார் .

இதையெல்லாம் விட பெரிய சான்றுகள் தமிழ் இலக்கிய, மற்றும் வேத கால கதைகளாகும் . சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதம் , ரிக் வேதத்தில் வரும் சரமா நாய்க் கதை ஆகியன கிரேக்க புராணக் கதைகளில் இருப்பதை முன்னரே எழுதிவிட்டேன்.

நப்பின்னை கதை

இப்போது நப்பின்னை கதையை விரிவாகக் காண்போம். 2012-ல் நான் எழுதிய கட்டுரையில் நப்பின்னை என்ற சொல் 

பெனாலப்பி (Penolope) என்ற கிரேக்கப் பெண்ணின்

amilandvedas.com › 2012/04/08 › கிரேக்க…

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு | Tamil …

1.      

8 Apr 2012 – தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி. … அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க …

tamilandvedas.com › tag › தமிழில்-இரு…

தமிழில் இருந்து ஆங்கிலம் | Tamil and …

1.      

27 Feb 2018 – Posts about தமிழில் இருந்து ஆங்கிலம் written by Tamil and Vedas. … தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா? … கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER … ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கில ச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை …

tamilandvedas.com › tag › ரிக்வேதம்

ரிக்வேதம் | Tamil and Vedas

1.      

2.      

இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. … (பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ) … இவர் பெயரே புதிரானது– நீண்ட இருள்; உலகப் புகழ் பெற்ற கிரேக்க …

tamilandvedas.com › tag › யவனர்கள்-யா…

யவனர்கள் யார் | Tamil and Vedas

1.      

1 Aug 2014 – யவனர் என்ற ஸம்ஸ்கிருதச் சொல் ‘ஐயோனியன்’ என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. தமிழில் ய, ச என்ற எழுத்துகளோடு எந்த …

You’ve visited this page 2 times. Last visit: 28/12/17

tamilandvedas.com › 2013/08/12 › தமிழில்…

தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!! | Tamil …

1.      

2.      

12 Aug 2013 – சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூதம், பேய், பிசாசுகள் பற்றி … கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூட, மரண தண்டணை நிறை … Tamil and Vedas … Ghost , Ghoul என்ற ஆங்கிலச் சொற்கள் தமிழ் சொற்களுக்கு மிகவும் நெருங்கியவை. கூளி= …

tamilandvedas.com › 2012/05/07 › கிரேக்க…

கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள் …

1.      

2.      

7 May 2012 – மேலும் சில தமிழ்கிரேக்க சொற்கள் ஒற்றுமை … நாகர் இனத்தவருக்கு தமிழில் ஓவியர், அருவாளர், நாகர் என்று பல பெயர்கள் உள்ளன.

tamilandvedas.com › tag › சம்ஸ்கிருத-…

சம்ஸ்கிருத அதிசயங்கள் | Tamil and Vedas

1.      

19 Dec 2014 – தமிழில் பல எழுத்துக்களுக்கு தேவையே இல்லை என்பதை வேறு … கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய … “சம்ஸ்கிருதத்தில் 800 வேர்ச் சொற்கள் இருக்கின்றன.

tamilandvedas.com › 2014/06/04 › சங்கத்-த…

ரிக் வேத நாய் | Tamil and Vedas

1.      

25 Jun 2015 – Research paper No 1953. Written by London swaminathan. Date: 25 June 2015. Uploaded in London at காலை 9-50. ரிக்வேதத்தில் (10-108) சரமா என்ற நாயின் கதை பத்தாவது …

tamilandvedas.com › tag › நாய்-கல்லறை

நாய் கல்லறை | Tamil and Vedas

1.      

17 Feb 2017 – உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் சரமா என்ற நாயின் கதை உள்ளது. அதை கிரேக்கர்கள் ‘திருடி’ ஹெர்மிஸ் HERMES என்று …

சங்கத் தமிழில் ராமன், பலராமன் …

1.      

Translate this page

4 Jun 2014 – பலராமர், கிருஷ்ணர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. Written by London Swaminathan Post No. 1083 ; Dated …

tamilandvedas.com › tag

ஔ | Tamil and Vedas

1.      

2.      

Translate this page

23 Dec 2014 – தமிழில் கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது … ய, ர, ல ஆகிய எழுத்துக்களும் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாது என்பது விதி. … கிரேக்க மொழியானாலும் அராபிய மொழியானாலும் நம்மைத் தான் பின்பற்றுகின்றனர். வேத …

tamilandvedas.com › category › page

Tamil Literature | Tamil and Vedas | Page 60

1.      

8 Apr 2012 – தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி. … அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க …

–SUBHAM–