இருந்தும் இறந்தவர் யார், யார்? -1 (Post No.4741)

Date:14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4741

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ச.நாகராஜன்

 

1

இரண்டு கைகள், கால்கள், முகத்துடன் கூடி உயிருடன் உலவுகின்ற அனைவரும் மனிதர்கள் தானா?

இல்லை என்கின்றனர் மேலோர்.

 

இதற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்களைக் கொண்டு தான் மனிதன் தானா என்று நிச்சயிக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

 

உயிரோடு இருந்தாலும் இறந்தவர்கள் போலத்தான் என்று பல அறிஞர்கள் கூறுகின்ற பட்டியலைப் பார்த்தால் மனிதனாக வாழ்வதற்கான இலக்கணம் நன்கு புரிய வரும்.

சில பெரியோர்கள் இது பற்றிக் கூறியதைப் பார்க்கலாம்.

 

 

2

முத்து மீனாட்சிக் கவிராயர் என்பவர் குமரேச சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலாகும். இவர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு குருபாத தாசன் என்ற பெயரும் உண்டு.

குமரேச சதகத்தில் வரும் அவரது பாடல் ஒன்று இருந்தும் இறந்தோர் யார் என்பதைத் தெளிவுறக் கூறுகிறது.

 

மாறத வறுமையோர் தீராத பிணியாளர்

வருவேட் டகத்திலுண்போர்

மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்

மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்

சுமந்தே பிழைக்கின்றபேர்

தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்

சோர்வுபட லுற்றபெரியோர்

வீ றாக மனையாள் தனக்கஞ்சி வந்திடு

விருந்தினை ஒழித்துவிடுவோர்

வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு

மிக்கசபை ஏறும் அசடர்

மாறாக இவரெலாம் உயிருடன் செத்தசவம்

ஆகியொளி மாய்வர் கண்டாய்

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

மலைமேவு குமரேசனே

(குமரேச சதகம் – பாடல் எண் 32)

 

 

இதன் பொருள்: மயிலில் அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல் வயலில் உயர்ந்த மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் குமரக் கடவுளே!

 

நீங்காத வறுமையில் உழல்வோர்

நோய் தீராத பிணியாளர்

மாமனார் வீட்டில் நீண்ட நாள் தங்கி உணவுண்போர்

மனைவியைத் தீய ஒழுக்கத்தில் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவித்திருப்போர்

தாம் இருக்கும் அரச சபையில் வீணான பழியைக் கூறி அதனால் வாழ்வோர்

 

மனிதன் அமர்ந்திருக்க அந்தப் பல்லக்கைச் சுமந்து வாழ்வோர்

நீங்காத கவலையில் அழுந்தி இருப்போர்

சொன்ன சொல்லிலிருந்து வழுவும் பெரியோர்கள்

மனைவியின் அகம்பாவத்திற்குப் பயந்து வருகின்ற விருந்தினரை விலக்கி விடுவோர்

நடக்காத வழக்கை ஆதரவாகக் கொண்டு பெரிய நியாய ஸ்தலங்களிலே பிடிவாதமாகச் செல்லும் அசடர்கள்

இவர்கள் அனைவரும் உலகியலுக்கு எதிராக உயிரோடிருந்தும் செத்த பிணமாகிப் புகழ் குன்றுவர்!

 

3

திருவள்ளுவர் இருந்தும் இறந்தவர் பற்றி இரு குறள்களில் கூறுகிறார்.

 

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது;

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்   (குறள் 214)

உலக நடையினை அறிந்து வாழ்பவனே உயிரோடு வாழ்பவன் ஆவான். அப்படிச் செய்யாதவன் உயிரோடு இருந்தாலும் கூட செத்தவருள் ஒருவனாக வைக்கப்படும்.

உலக நடை என்பது வேத நடையைப் போல என்கிறார் பரிமேலழகர் தம் உரையில்.

 

நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது:

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃது உண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்       (குறள் 1001)

 

தன் வீடு முழுவதும் நிரம்பி வழியும் அளவு பெரும் பொருளை ஈட்டியும் கருமித்தனத்தால் அதனை அனுபவிக்காது இருக்கும் ஒருவன்  உயிர் வாழ்ந்தாலும் கூடச் செத்தவனே!

 

 

4

ஸ்வாமி விவேகானந்தர் மிக அழகுறக் கூறிய வார்த்தைகள் இவை:

 

THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS

THE REST ARE MORE DEAD THAN ALIVE!

மற்றவருக்குச் சேவை புரிந்து வாழ்பவனே வாழ்பவன்;

மற்றவர்கள் உயிரோடிருந்தாலும் இறந்தவரே!

 

( அடுத்த கட்டுரையுடன் முடியும்)

***

சித்தர்கள் செய்த எட்டு வகை அற்புதங்கள் (Post No.4738)

Date: 13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-43 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4738

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

1915 ஆம் ஆண்டில்    வெளியான சித்தர்   களஞ்சியத்தில் அஷ்ட  மா சித்திகளின் விளக்கம் நன்றாக உள்ளது; அதைக் கீழே காண்க.

 

 

 

 

 

 

–SUBHAM–

சிவாகமங்கள்- என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு?! (Post No.4736)

Date:13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-15 am

 

WRITTEN by S Nagarajan

 

Post No. 4736

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

இணையிலா இந்து மதம்

சிவாகமங்கள் 28; என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு?!

ச.நாகராஜன்

1

சிவாகமங்கள் 28. சிவ வழிபாட்டை நியமத்திற்குத் தகவும், ஆங்காங்குள்ள தொன்மத்திற்குத் தகவும் உரியவர்கள் இதைக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான ஆலயங்களில் நடத்தி வருகிறார்கள்.

விக்கிபீடியா மற்றும் இதர சைவ இணைய தளங்களில் இவற்றைப் பற்றி முழுவதுமாக அறியலாம்.

28 சைவ ஆகமங்களின் பட்டியல் இது:

The Sivabheda Agamas

1) Kamika, 2) Yogaja, 3) Chintya, 4) Karana, 5) Ajita, 6) Dipta, 7) Sukshma, 8) Sahasraka, 9) Amshumat and 10) Suprabheda.

The Rudrabheda Agamas

(1) Vijaya, 2) Nihshvasa, 3) Svayambhuva, 4) Anala, 5) Vira (Bhadra), 6) Raurava, 7) Makuta, 8) Vimala, 9) Chandrajnana (or Chandrahasa), 10) Mukhabimba (or Bimba), 11) Prodgita (or Udgita), 12) Lalita, 13) Siddha, 14) Santana, 15) Sarvokta (Narasimha), 16) Parameshvara, 17) Kirana and 18) Vatula (or Parahita).

 

இதில் பகுத்தறிவுவாதிகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை.

 

2

எல்லா பிராமணர்களும் பூஜையைச் செய்து விட முடியாது.அலங்காரங்களைச் செய்ய முடியாது. தெய்வ உருவங்களைத் தொட்டு விட முடியாது.சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள்,சிவாலயங்களில் உரிய சிவாசாரியார் என்று ஒரு வரைமுறை உண்டு.

அவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

சில ஆலயங்களில் பிராமணர்கள் பூஜை செய்ய முடியாது.

பாரம்பரியத்திற்குத் தக்கபடி யார் பூஜை செய்ய வேண்டுமோ அவர்களே செய்வார்கள்.

ஆக இது தான் உண்மை.

3

இந்தச் சடங்கைச் செய்யக் கூடாது, அந்தச் சடங்கை செய்யக் கூடாது என்று முழங்கும் பகுத்தறிவுவாதிகள் தாங்களே சடங்குகளில் எப்படிக் கட்டுண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்.

இவர்களின் தலைவர் சமாதிக்கு எதற்கு ஊதுபத்தி? செருப்பை ஏன் வெளியில் கழட்டிப் போட வேண்டும்?கொடி எதற்காக?

சீருடை எதற்காக?

பகுத்தறிவுக்கு ஒத்ததா இது?

ஆஸ்பத்திரிகளில் சர்ஜன்கள் ஏன் பச்சை உடை அணிய வேண்டும்?

ஏதோ நினைத்த சட்டையை ஏன் போடக் கூடாது?

வக்கீல்களுக்கு எதற்குக் கறுப்பு கோட்டு.

நீதிபதிகளுக்கு (அயல்நாட்டில்) எதற்கு விக்?

இந்தப் பட்டியல் முடிவற்ற ஒன்று.

 

4

பகுத்தறிவுச் செல்வங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

பள்ளி மாணவன் கூட சற்று யோசித்தால் இவர்களின் கலாட்டா நோக்கத்தைப் புரிந்து கொள்வான்.

திருஞானசம்பந்தரை இழிவு படுத்து. சிறிது நாள் ஆனால் ஆண்டாளை இழிவுபடுத்து.

இதன் மூலம் தாங்கள் பொதுவாழ்க்கையில் பரபரப்பாக இருப்பதை உறுதி செய்வது தான் இவர்களின் நோக்கம்!

ஆமாம், இதே அளவு சடங்குகள், ஏன் இன்னும் அதிகமாகக் கூட சடங்குள் கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும்  உள்ளனவே.

பகுத்தறிகவு மனித குலம் அனைத்திற்கும் பொதுவானது தானா,அல்லது ஹிந்து  மதம், கோவில்களுக்கும் மட்டுமான ஒன்றா?!

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியரிடம் கொஞ்சம் பகுத்தறிவை இவர்கள் சொல்லட்டுமே. இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது இவர்கள் அவர்களைச் சீண்டவில்லையே!

இந்த போலி பகுத்தறிவுவாதிகளை ஒவ்வொருவரும் சமயம் கிடைத்த போதெல்லாம் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

அது ஒன்றே நல்ல வழி!

***

 

பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’ (Post No.4729)

 

Date:11 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-49

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4729

 

PICTURES ARE TAKEN from various sources

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

வெற்றி வேற்கையில் வரும் இந்த வாசகத்தின் பொருள்:

சுழியா= சுழித்துக் கொண்டு

வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்

இழியாது = இறங்காது

ஒழிவது = நீங்க வேண்டும்.

 

 

தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.

ஆசை யாரை விட்டது?

 

ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்—என்றான்.

திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!

 

உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.

 

கரையில் இருந்த ராமப்பன் கத்தினான் – திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை;நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.

 

திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!; இது ஒரு கரடி – என்றான்.

ராமப்பன் கரையில் திருதிருவென  முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர்.

 

ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்;

 

ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்.

 

–சுபம்–

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? பழமொழிக் கதை (Post No.4728)

Date:11 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-42 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4728

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா? பழமொழிக் கதை

 

இது ஒரு உண்மைக் கதை –பர்த்ருஹரி நீதிசதகம் பற்றி 1916ல்  கோபாலாச்சாரியார் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளதைப் புதுக்கி வரைகிறேன்

 

தென்னாட்டில் ஒரு ஊரில் ஒரு பணக்கார பார்ப்பனி வாழ்ந்து வந்தாள்; அவள் கணவன் இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்தாள்; நிறைய செல்வத்துக்கு அதிபதி அந்தப் பிராஹ்மணப் பெண்மணி.

 

அந்தக் காலத்தில் கொள்ளையர்கள் இந்த வீட்டில் இன்ன நாளன்று திருடப் போகிறோம் என்று அறிவித்துவிட்டு வந்து திருடுவார்கள். இதனால் அனாவசிய வன்முறை தவிர்க்கப்படும்; கொள்ளையர்களும் எந்த சேதமும் இன்றி பணம், நகைகள் முதலியவற்றை எடுத்துச்செல்வர்.

 

பணக்கார பார்ப்பனிக்கும் கடிதம் வந்தது; அவளுக்கோ ஆண் துணை கிடையாது. வெறும் வேலையாட்கள் மட்டுமே; அவளுக்கு ஒரு யோஜனை பிறந்தது.கொள்ளையர்கள் கெடு வைத்த நாளன்று அறுசுவை உண்டி சமைத்தாள்; வடை பாயசம், அப்பளம் பொறியல் கூட்டு, லட்டு என கல்யாண சமையல் சாதம்! வாசனை தெரு முழுதும் பரவியது.

 

கொள்ளையர்களும் குறித்த நேரத்தில் தீவட்டி சஹிதம், தாரை தம்பட்டைகளை முழக்கிக் கொண்டு கும்பலாக வந்தனர். எல்லோரும் அவரவர் வீட்டைத் தாழிட்டுக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு ‘கம்’ என்று இருந்தனர். இந்தப் பிராஹ்மணப் பெண்மட்டும் கொள்ளையர்களுக்காக கதவை லேஸாகத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.

 

கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அறு சுவை உணவின் வாசனை மூக்கைத் துளைத்தது. நாக்கில் ஜலம் ஊறியது. இந்த அம்மாளும் வாருங்கள், முதலில் சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்த காரியத்தைச் செய்யுங்கள் என்று தலை வாழை இலை விரித்துப் பரிமாறினாள்.

 

அவர்கள் சாப்பிட்டு எழுவதற்கு முன்னார், ஒரு புடவையை தரையில் விரித்து நகை நட்டுகளைக் கழட்டி வைத்தாள்; வீட்டிலுள்ள விலை உயர்ந்த பட்டுப் புடவை, பட்டு வஸ்திரங்களையும் சமப்பித்தாள். கொள்ளையர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; அட, வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்து விட்டதே என்று கீழ்மட்டக் கொள்ளையர்கள் நினைத்தனர்.

 

தலைவா! உத்தரவிடுங்கள்; கைவரிசையைக் காட்டுகிறோம் என்று அவர்கள் தலைவனை நோக்கினர். அவனோ, ”சீ, சீ, விலகிப் போங்கள். அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாகாது என்பதை அறியீரோ; உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாகாது; உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றெல்லாம் தமிழில்    சொல்வார்களே. அப்படி இருக்க நாம் இந்த அம்மணிக்கு ஒரு தீங்கும் செய்யலாகாது வாருங்கள் என்று அந்த அம்மையாருக்கு வந்தனம் கூறி விடை பெற்றனர்.

 

பின்னர் அவன் தன் கொள்ளைச் சொத்துகளை அந்த அம்மையார் பெயருக்கே  எழுதி வைத்தானாம்.

 

இந்தக் கதையை 1916ல் வெளியிட்ட கோபாலாச்சாரியார்,  இன்றும் அந்தக் குடும்பத்தினர் அந்த சொத்துகளை அனுபவித்து வருகின்றனர் என்று அடிக்குறிப்பு கொடுத்துள்ளார். ஆனால் பெயரோ ஊரோ குறிப்பிடவில்லை.

அன்னதானத்தின் மஹிமை அவ்வளவு பெரியது; திருடர்களையும் மனம் மாற வைத்துவிடும்; அது மட்டுமல்ல; ‘’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’ — என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க, அந்த அம்மையாரின் அன்பான உபசரிப்பும் அவர்களை நெகிழவைத்துவிட்டது எனலாம்!

 

 

கன்னம் இடல்:- வீட்டின் சுவரில்   ஓட்டை போடுதல்;  அதிலும் திருடர்கள் வெவ்வேறு வடிவத்தில் ஓட்டை போட்டு தன் கலைத் திறமையை வெளிப்படுத்துவர். சூத்ரகர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ நாடகத்தில் இதன் விளக்கங்களைக் காணலாம்.

 

இரண்டகம் :— உண்ட வீட்டில் பிளவு ஏறபடுத்தல்; கருத்துப் பிளவு அல்லது வீட்டை உடைக்கும் பிளவு — இரண்டு அகம் = இரண்டு வீடுகள்/ துண்டுகள் ஆக்குதல்

 

–சுபம்–

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 1 (Post No.4723)

DATE – 10 FEBRUARY 2018
Time uploaded in London- 7-37 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4723

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு இதழான ஹெல்த்கேர், பிப்ரவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 1

 

ச.நாகராஜன்

 

Kolkata Street from Deccan Herald

“நடைப் பயிற்சியே நல்ல மருந்து” – ஹிப்போக்ரேடஸ்!

 

 

1

ஓடலாமா?

குதித்துக் குதித்துப் போகலாமா?

தாவித் தாவிப் பார்க்கலாமா?

சைக்கிளை எடுத்து ஓட்டலாமா?

ஸ்கேடிங் செய்யலாமா?

ஆயிரம் யோசனைகள் -ஆரோக்கிய மேம்பாடு அடைய என்ன செய்யலாம் என்று.

இவை அனைத்தையும் விட எளிமையான வழி ஒன்று உண்டு.

அது தான் நடைப் பயிற்சி.

மேலே கூறிய எதுவும் தராத அருமையான பலன்களைத் தருவது

நடைப் பயிற்சியே!

அப்படி நடந்தால் – நடைப் பயிற்சியை மேற்கொண்டால் – நாம் அடையும் நன்மைகள் என்னென்ன?

 

 

2

‘ஜாக்கிங்’ (Jogging) செய்வதன் மூலம் எவ்வளவு கலோரிகளை உடலிலிருந்து செலவழிக்க –  எரிக்க – முடிகிறதோ அவ்வளவு கலோரி எரிப்பை நடைப் பயிற்சியே தருகிறது.

முதுகு வலியைப் போக்குகிறது.

இடையளவைக் குறைக்கிறது. (பார்க்க அழகு தான்!)

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

உடல் வலுவையும், ஆற்றலையும் கூட்டுகிறது.

மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் குறைக்கிறது.

சிந்தனை ஆற்றலைக் கூட்டுகிறது.

தசைகளை மேம்படுத்துகிறது.

மூட்டுகளை வலுவாக்குகிறது.

ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி ஏற்படும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

ஏரோபிக் (Aerobic capacity) திறனை அதிகப்படுத்துகிறது.

சிறிது சிறிதான அளவில், அவ்வப்பொழுது நேரம் கொடுத்து நமது சௌகரியத்திற்கேற்ப செய்ய முடியக்கூடியது.

Osteoporosis bone loss – எலும்பு மெலிதலால் ஏற்படும் எலும்பு அடர்த்திக் குறைவைத் தவிர்க்கிறது.

அவ்வப்பொழுது பயணம் மேற்கொள்வோராலும் கூட, எங்கிருந்தாலும் சிறிது நேரத்தை ஒதுக்கிச் செய்ய முடிவது.

இவ்வளவு நன்மை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இருக்கிறது இன்னும் பல நன்மைகள்.

 

 

3

பாதுகாப்பானது!

நடைப் பயிற்சியைப் போல பாதுகாப்பானது எதுவுமே இல்லை.

இதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.

பயிற்சியாளரின் உதவியும் தேவையில்லை.

இப்படிப்பட்ட உடல் தகுதிகள் தேவை என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை.

உடல் வலி மற்றும் இதர உபாதைகளோ அல்லது பக்க விளைவுகள் எதுவுமோ இல்லை.

எந்த சாதனத்தின் உதவியும் தேவை இல்லை.

செலவே இல்லை.

ஓடுவது, தாண்டுவது, குதிப்பது, புரள்வது போன்ற எந்த வித செய்கையையும் எடுத்துப் பார்த்தால் அதை விட மிக எளிதானது.

அதிர்ச்சி விளைவு எனப்படும் Shock Impact ஐ எடுத்துக் கொண்டு பார்த்தால் அது ஓடுகின்ற போது ஓடுபவரின் எடையை விட 3 அல்லது நான்கு மடங்கு கூட இருக்கிறது.

ஆனால் நடப்பவருக்கோ இந்த அதிர்ச்சி விளைவு ஒன்றரை மடங்கு மட்டுமே இருக்கிறது.

பேஸ்கட் பால் போன்ற இதர விளையாட்டுக்கள் உடல் எடையைப் போல ஏழு மடங்கு அதிகமாக இந்த ஷாக் இம்பேக்டைத் தருகிறது.

 

 

4

நடைப் பயிற்சி உங்கள் உடலுக்கு உகந்தது. எளிமையானது.

ஓடினால் ஏற்படக்கூடிய அதே எடைக் குறைவை இதுவும் நல்குகிறது!

ஒரு மணி நேரத்திற்கு ஐந்து மைல் என்ற வேகத்தில் நீங்கள் ஓடுவதாக வைத்துக் கொண்டால், 30 நிமிடங்களில் நீங்கள் 285 கலோரிகளை எரிக்க முடியும்.

ஒரு மணி நேரத்திற்கு நான்கு மைல் என்ற வேகத்தில் நீங்கள் நடப்பதாக வைத்துக் கொண்டால், அதே 30 நிமிடங்களில் நீங்கள் சமமான தரையில் (தளத்தில்) நடந்தால் 165 கலோரிகளை எரிக்க முடியும். சற்று சாய்வான தளத்தில் – அதாவது 5 % சாய்வில் – 225 கலோரிகளை எரிக்க முடியும்.

பத்து % சாய்வான தளத்தில் 360 கலோரிகளை எரிக்க முடியும்!

 

5

விலை உயர்ந்த வீடியோ சாதனங்களை வாங்க வேண்டாம்.

கம்ப்யூட்டர் புரோகிராம் எதுவும் தேவையில்லை.

தனி இடம் தேவை இல்லை.

ஆப்ஸ் எதுவும் தேவை இல்லை.

வழிகாட்டி – கையேடு – எதுவும் தேவையில்லை.

இயற்கையாக நடக்கலாம்.

சந்தோஷத்துடன் நடக்கலாம்.

உங்கள் விருப்பப்படி நடக்கலாம்.

உங்களுக்கு உகந்த நேரத்தில் நடக்கலாம்.

நடைப் பயிற்சியில் உங்களுக்கு உதவ, நன்மைகளை அதிகம் அடைய சில எளிய – அனுபவக் குறிப்புகள் உள்ளன.

அவை யாவை? இதோ பார்ப்போம்.

 

6

நடைப் பயிற்சியின் முழுப் பலனையும் அடைய Posture எனப்படும் தோற்ற அமைவு மிக முக்கியமானது.

தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.

முதுகெலும்பை நேராக நிமிர்த்தி நடத்தல் வேண்டும்.

கைகளையும், தோளையும் சற்று தளர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நேராகப் பார்வையைச் செலுத்துங்கள்.

அதற்காக எங்காவது குழியில் விழுந்து விடாதீர்கள். நமது சாலைகளைப் பற்றியும் பிளாட்பாரங்களில் ஆங்காங்கே இருக்கும் குழிகளையும் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

பள்ளங்களில் மாட்டிக் கொண்டு மருத்துவ  மனைகளுக்குச் சென்று விடக் கூடாது.

ஆகவே அவ்வப்பொழுது சாலை அல்லது பிளாட்பாரத்தின் கோலத்தை அல்லது அலங்கோலத்தையும் மதிப்பீடு செய்யத் தவறாதீர்கள்.

இது தவிர ஆங்காங்கே இருக்கும் சாலைத் தடைகள் – Road Blocks – பற்றியும் கவனம் கொள்ளுங்கள்.

*

ஆழ்ந்த மூச்சை சீரான இடைவெளியில் விடுங்கள்.

நடவுங்கள், ஓடாதீர்கள். அதாவது சுறுசுறுப்பான காலடிகளை எடுத்து வைக்க வேண்டும், அவ்வளவு தான்! வேகமான அடிகளை அல்ல!!

நீங்கள் தினமும் நடக்க ஆரம்பித்தவுடன் உங்களுக்கே நீங்கள் எப்படி நடக்கலாம் என்பது தெரிய வரும்.

மூச்சு விட சற்று சிரமமாக இருந்தால் மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள்.

 

*

உங்கள் உடல் தரும் செய்தியைக் கேளுங்கள்.

அட, பிரமாதமாக இருக்கிறதே, நடைப் பயிற்சி முடிந்தவுடன் ஒரு புதிய தென்பு, உற்சாகம் வந்து விட்டதே என்று நீங்கள் நினைத்தால் அது தான் நல்ல நடை!

சற்று வலியோ அல்லது அசதியோ அல்லது வசதிக் குறைவோ, உற்சாகமின்மையோ தோன்றினால் உங்கள் நடைப் பயிற்சியைச் சற்று மாற்றி அமையுங்கள்.

நீங்களே உங்களுக்கு நீதிபதி. அவ்வளவு தான்!

*

எப்படிப்பட்ட அடிகளை எடுத்து வைக்க வேண்டும்? சீரான, நீளமான காலடிகளை எடுத்து வையுங்கள். உங்கள் நடை பிரயத்தனமின்றி இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும்.

பகீரதப் பிரயத்னம் என்பது நடைப் பயிற்சியில் இல்லவே இல்லை.

கைகளை ஆட்டினால் அது உங்கள் உடல் பாலன்ஸை அனுசரித்து இருக்க வேண்டும்.

எதையும் வலியச் செய்ய வேண்டாம்.

 

அட, எளிய நடைப் பயிற்சியில் இவ்வளவு இருக்கிறதா, என்று நீங்கள் கேட்டால், இன்னும் நிறைய இருக்கிறது உபயோககரமான குறிப்புகள் என்ற பதில் தான் வரும்.

10000 காலடி நடைப் பயிற்சி என்று ஒன்று உண்டு.

பத்தாயிரம் காலடி நடைப் பயிற்சியா? அது என்ன?

அடுத்த இதழில் பார்க்கலாம்.

அது வரை, நடக்க ஆரம்பியுங்கள், குட் பை!

எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுரையின் ஆரம்ப வரி அற்புதமான ஒருவரின் அனுபவக் கூற்று.

ஆம், – ஹிப்போக்ரேடஸ் கூறியது அது: “நடைப் பயிற்சியே நல்ல மருந்து”

Rama walked for 14 years!

 

-தொடரும்

Address of Healthcare R.C.Raja, Editor  Healthcare, 10 Vaiyapuri nagar, Thirunelveli Town 627006 Yearly subscription Rs 120/

 

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை! (Post No.4719)

DATE – 9 FEBRUARY 2018
Time uploaded in London- 7-49 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4719

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

இது தான் இந்தியா!

 

 

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை!

ச.நாகராஜன்

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

1

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்து பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்பதும் ஓய்வு பெறும் வயதில் ஓய்வு பெற்று இங்கிலாந்திற்குத் திரும்புவதும் வழக்கம்.

 

அந்தக் காலத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது!

சம்பவத்தைப் பார்ப்போம்.

 

2

(பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில்) இந்திய அரசின் உயர் அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

ரைட்டர்ஸ் பில்டிங்(Writers’ Building) சென்று தனது பணி ஒய்வு சம்பந்தமான பேப்பர்களைத் தருவதற்காக சாரட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 

பௌ பஜார் (கல்கத்தாவில் உள்ளது) ஒரே டிராபிக். வண்டி நின்றது.

என்ன செய்வது? காத்திருக்கத் தான் வேண்டும், வண்டியை டிரைவர் நகர்த்தும் வரை.

 

சிகார் ஒன்றைப் பற்ற வைத்தார் அவர்.

 

திடீரென்று கோச்சின் வலது பக்கக் கதவு திறந்தது. ஜடாமுடியுடன் கூடிய ஒருவர் எட்டிப் பார்த்தார்.

சாதாரண ஆளாக இருந்திருந்தால் பயந்து திகைத்துப் போயிருப்பார்.

 

ஆனால் அவரோ போலீஸ் ஆபீஸர் ஆயிற்றே! இதற்கெல்லாம் பயப்படுவாரா என்ன? 25 ஆண்டுகளில் இது போல எத்தனை

பேரைப் பார்த்திருப்பார்!

 

“ஹுசூர், இவ்வளவு காலம் அரிய சேவை செய்த பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது கஷ்டமான விஷயமாகத் தான் இருக்கும்! ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்று தானே! வயது வரம்பும் எல்லோருக்கும் ஒன்று தானே”

சர்வ சகஜமாகப் பேச ஆரம்பித்த அந்த ஜடாமுடி சாது இப்படிக் கூறினார் ஆபீஸரிடம்.

 

அவர் அயர்ந்து போனார்.

 

அந்த சாதுவை நோக்கினார்: “ ஓ, சாது ஜி, நான் ரிடயர் ஆகப் போகிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

அவர் பதில் கூறினார்: “இப்படிப்பட்ட  விஷயங்கள் ஜன சந்தடி உள்ள இந்த இடத்தில் விவரிக்கத் தக்கதல்ல! உங்களை இந்தக் கூட்டத்தில் கண்டுபிடித்து விட்டேன்.அது போதும். சாதுக்களே பெறும் அரிய சித்தியான ஞானத்தின் மூலம் நீங்கள் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் எனக்குத் தெரியும். என்ன பிரமிக்கிறீர்களா? பிரமிக்க வேண்டாம்! நீங்கள் உங்கள் கீழே பணி புரிந்த பலருக்கும் நல்லதைச் செய்திருக்கிறீர்கள். அத்துடன் மட்டுமின்றி கத்தியுடன் கூடிய காளியும் சிவனும் குடி கொண்ட பல தலங்களுக்கு நல்லதைச் செய்துள்ளீர்கள். இந்த ஒரு காரியத்திற்காகவே இந்த ராஜ்யத்தில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். அந்தக் கத்திகள் வெறும் இரும்பு அல்ல; உண்மையான உயர் ரக  எஃகால் செய்யப்பட்டவை. இன்னும் நீங்கள் செய்துள்ள பல காரியங்களும் புண்ய கர்மங்கள்! ஆகவே வெகு விரைவில் நீங்கள் அளப்பரிய செல்வத்தை அடையப் போகிறீர்கள்! அதை புத்திசாலித்தனமாகச் செலவழியுங்கள். இதோ இந்த ருத்ராக்ஷ மாலையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரிகி ராமனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இதோ வண்டிகள் நகர ஆரம்பித்து விட்டன. சாஹப், நான் போகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது சில சமயம் என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள்”

 

சாது போய் விட்டார். வண்டிகள் நகரத் தொடங்கின.

தன் வலது கரத்தில் இருந்த ஏழு முகமுள்ள ருத்ராக்ஷங்கள் கொண்ட மாலையை போலீஸ் அதிகாரி வியப்புடன் பார்த்தார்.அந்த வகை ருத்ராக்ஷம் அடர்ந்த ஹிமாலய  மலையின் உட்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய வகை ருத்ராக்ஷங்கள்!

 

“என்ன ஆச்சரியம்” என்று கூவினார் போலீஸ் அதிகாரி.

விஷயத்தை அத்துடன் அவர் மறந்து விட்டார்.

 

பணி ஓய்வு பெற்ற அவர் இங்கிலாந்தின் தென் பக்கம் உள்ள ஒரு ஊரில் குடியேறி விட்டார்.

 

பிரச்சினை ஏதும் இல்லாத வசதியான வாழ்க்கை.

ஒரு நாள் வீட்டுத் தோட்டத்தில் நிர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். சிகார் பிடிக்கும் வேளையில் அவருக்கு ஒரு தந்தி வந்தது.

கையெழுத்திட்டு அதை வாங்கிய அவர் தந்தியைப் பிரித்தார்.

அவரது ஒரே சகோதரன் இறந்து விட்டார். அவரோ கல்யாணமாகாத பிரம்மச்சாரி.

 

அவரது திரண்ட செல்வம் எல்லாம் சகோதரரான அவருக்கு வந்து சேர்ந்தது.

 

அமைதியாக அவர் உட்கார்ந்து விட்டார்.

அப்போது ஒரே ஒரு க்ஷண நேரத்தில் அவர் முன் ரிக்கி ராமன் தோன்றினார். பின்பு  மறைந்து விட்டார்.

உட்கார்ந்திருந்த அதிகாரி பரபரப்பாக எழுந்து வீட்டினுள் ஓடினார்.

அங்கு ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருந்த ஏழு முக ருத்ராக்ஷ மாலையைப் பார்த்தார்.

 

மிகுந்த சோகம் ததும்பிய குரலில்,” ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகி விட்டதே! சாது ஜீ! அதற்கு இப்படி ஒரு விலையா?” என்று கூவினார்!

 

***

1935ஆம் ஆண்டு வெளியான TRUTH ஆங்கில வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. மீண்டும் 3-11-2000 இதழில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி : ட்ரூத்

ஆங்கிலத்திலிருந்து தமிழ் வடிவம்: ச.நாகராஜன்

 

வள்ளலாரின் தமிழ்! (Post No.4711)

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-51 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4711

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

அருட்பா இரகசியம்

வள்ளலாரின் தமிழ்!

ச.நாகராஜன்

 

 

1

 

சமீப கால சரித்திரம் கண்ட ஒரு மாபெரும் மகான் வடலூர் வள்ளலார்.

தமிழை எனிய இனிய சொற்களால் எளிமைப் படுத்தி பழகும் தமிழில் ஞான தத்துவங்களையும் சாகாக் கலையையும், அனைவரும் உளமுருகத் துதிக்க வைக்கும் தோத்திரப் பாடல்களையும் அளித்து ஆச்சரியப்படுத்திய தமிழ்ச் சித்தர் அவர்!

முருகன் அவரை ஆட்கொண்டதால் அவன் அளித்த தமிழைக் கொண்ட தமிழாகரன் அவர்!

 

(உண்மையில் தமிழாகரன் என்ற பெயரை உடைய ஞானசம்பந்தரைத் தன் ஞான குருவாகக் கொண்டவர் ஆயிற்றே. அதனால் இவரும் தமிழாகரனைக் குருவாகக் கொண்ட தமிழாகரன் ஆகிவிட்டாரோ!)

 

அதாவது தமிழை உடலாகக் கொண்டவர்; உயிராகக் கொண்டவர்.

வள்ளலார்.

 

 

2

வள்ளலாரின் பாடல்களைத் தத்துவத்திற்காகவும், இனிமைக்காகவும், ஓசை நயத்திற்காகவும், வெவ்வெறு அணிகளுக்காகவும், பல உவமைகளுக்காகவும், பல ரகசியார்த்தங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும், வாழ்முறை நெறிகளுக்காகவும், தமிழுக்காகவும் ஏன் சாகாக் கலையை அறியவும் பலமுறை படிக்கலாம்; படிக்க வேண்டும்.

அவரது வார்த்தை விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை.

அதற்காகவும் ஒரு முறை படிக்கலாம்.

உதாரணத்திற்குச் சில பாடல்கள் இங்கே பார்க்கலாம்.

 

வெம்பு முயிருக் கோருறவாய்

வேளை நமனும் வருவானேல்

தம்பி தமையன் துணையாமோ

தனையர் மனைவி வருவாரோ

உம்பர் பரவுந் திருத்தணிகை

உயர்மா மலைமேல் இருப்பவர்க்குத்

தும்பக் குடலை யெடுக்காமல்

துக்க வுடலை எடுத்தேனே!

 

தொல்லைக் குடும்பத் துய்ரதனில்

தொலைத்தே னந்தோ காலமெலாம்

அல்ல லகற்றிப் பெரியோரை

யடுத்து மறியேன் அரும்பாவி

செல்வத் தணிகைத் திருமலை வாழ்

தேவா வுன்றன் சந்நிதிக்கு

வில்வக் குடலை யெடுக்காமல்

வீணுக் குடலை யெடுத்தேனே

 

அவல வயிற்றை வளர்ப்பதற்கே

அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப் படுவ தின்றிசிவ

கனியைச் சேரக் கருதுகிலேன்

திவலை யொழிக்குந் திருத்தணிகைத்

திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை யெடுக்காமல்

கொழுத்த வுடலை யெடுத்தேனே.

 

 

பாடலின் பொருள் நயம், ஓசை நயம், உருக வைக்கும் பக்தி நயம் பற்றி விளக்க உரையே வேண்டாம்,

வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை – வீணுக் குடலை எடுத்தேனே என்பதில் உள்ள நயம் அவர் தம் தமிழைக் காட்டும் இடம். தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே; குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே என்பதில் நாம் காணுவது வள்ளலாரை அல்ல; நம்மை நாமே காணும் இடமாக அமைகிறது.

 

3

இனி அவரது வார்த்தை விளையாட்டுக்கு இரு பாடல்களைப் பார்ப்போம்!

பகுதி தகுதி விகுதியெனும் பாட்டில்

இகலி லிடையே யிரட்டித் – தகவின்

அருச்சித் தான் முன்னா மதுகடையாங் கண்டீர்

திருச்சிற் சபையானைத் தேர்ந்து.

 

பாடலில் என்ன புரிகிறது? – திருச்சிற்சபையான் மட்டும் புரிகிறது.

மற்ற சீர்கள் சொல்லும் சிறப்பான செய்தி என்ன?

உதவிக்கு நாட வேண்டியவர் கிருபானந்தவாரியார் தான்!

அவரது உரை விளக்கம் படித்தால் உளமும் விளக்கம் அடைகிறது.

 

பகுதி, தகுதி, விகுதி

இந்த மூன்று வார்த்தைகளில் இடையெழுத்து – அதாவது நடுவில் வரும் எழுத்து எது? ‘கு’ ஆகும்.

இதை இரட்டியுங்கள் என்கிறார் அருளாளர்.

இரட்டித்தால் – அதாவது இருமுறை எழுதினால் வருவது

குகு, குகு, குகு!

அதாவது ஆறுமுறை ‘கு’ வருகிறது. அதாவது அறுகு (ஆறுமுறை ‘கு’வை அறுகு என்று தானே கூற வேண்டும். அதாவது அறுகம்புல்!)

 

முதலெழுத்துக்களைக் கூட்டினால் வருவது ப, த, வி.

பத முத்தி ஆகும்.

கடை எழுத்துக்களைக் கூட்டினால் தி, தி, தி. அதாவது மூன்று முறை ‘தி’ வருகிறது. முத்தி.

திருச்சிற்சபையானை அறுகம்புல்லால் அர்ச்சித்தால் பத முத்தியும் ஐக்கிய முத்தியும் சித்திக்கும் என்ற அரிய இரகசியத்தை இந்த புதிர்ப் பாடலில் அருளுகிறார் வள்ளலார்.

 

 

4

இன்னொரு பாடல்:

தாதாதா தாதாதா தாக் குறைக்கென் செய்குதும்யாந்

தாதாதா வென்றுலகிற் றானலைந்தோம் – போதாதா

நந்தா மணியே நமச்சிவா யபொருளே

யெந்தா யெனப் புகழவே.

 

என்ன பொருள், புரியவில்லையே!

கிருபானந்தவாரியார் சுவாமிகளை நாடுகிறோம்; பொருள் விளங்குகிறது.

ஏழு முறை தா வருகிறது; எழு முறை தா! அதாவது எழுதா!

எழுதாக் குறைக்கு என் செய்குதும்? தலையில் எழுதாக் குறைக்கு என்ன செய்வது?

 

தாதா – தாதா என்றால் தெரியுமே; ஆம் வள்ளல்!

மூன்று தா வருகிறது இரண்டாம் அடியில்!

தாதா, தா! வள்ளலே தா என்று அலைந்தோம். இப்படி அலைந்தது போதாதா?

இனியேனும் நந்தா மணியே, நமச்சிவாயப் பொருளே எந்தாய் எனப் புகழுங்கள்; வழிபடுங்கள்; வாழ்க்கையைச் சிறக்க அமையுங்கள்!

 

5

நமக்காகக் குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான பாடல்களை அருளியுள்ளார் வள்ளலார் பிரான் – அரிய இரகசியங்களை அடக்கி, இனிய தமிழில்!

 

கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்; அருட்பாவை ஓதுவோம்!.

என்னென்ன பயன்களைப் பெற முடியும் அருட்பாவைப் படித்தால்.

வாரியார் சுவாமிகளின் திருவருட்பா தொகுதி (1) -யைப் படித்தால் முதல் பக்கத்தில் முதல் பாடலிலேயே பதில் வருகிறது!

 

 

பத்தி வரும் பழவினைகள் பற்ந்தோடும்

மூல மலப் பகுதி மாயும்

புத்தி வரும் புலைகொலைகள் புறம்போகும்

ஆனந்தம் பொங்குஞ் சாந்த

முத்தி வரும் அழியாநன் மோக்கமுறு

முதுகடல்சூ ழுலகி லெல்லாச்

சித்தி வரும் இராமலிங்க தேசிகன்றன்

அருட்பாவைச் சிந்திப்போர்க்கே.

 

அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை!

***

 

லண்டன் கண்காட்சியில் அரிய SEX செக்ஸ் புஸ்தகம்! (Post No.4705)

Date: 5 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-14

 

Written by London swaminathan

 

Post No. 4705

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

AYURVEDA EXHIBITION – PART 3

Model of Heart

லண்டன் யூஸ்டன் ஸ்கொயர் (Euston Square) ஸ்டேஷன் அருகில் உள்ள வெல்கம் சென்டரில் (Wellcome Centre) ஏப்ரல் 8-ம் தேதி வரை ஆயுர்வேத கண்காட்சி நடைபெறும். ஹென்றி வெல்கம் என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த மருத்துவ பொக்கிஷங்கள் இங்கே உள்ளன. அரிய சம்ஸ்கிருத நூல்களும், இந்தி யாவிலிருந்து எடுத்து வர முடியாத ஓலைச் சுவடிகளின் மைக்ரோ பில்ம் (Microfilm) முதலியனவும் இங்கு ஆராய்ச்சியாளருக்கு எப்போதுமே கிடைக்கும்.

 

நான் சில ஆண்டுகளுக்கு முன் வரை லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்து வந்தேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் வெல்கம் சென்டரில் உள்ள  ஒரு மருத்துவ மாணவர் யுனானி வைத்யத்தில் ஆராய்ச்சி செய்தார். அவர் என்னிடம் தமிழ் கற்றதோடு யுனானி (Unani) பற்றி 100, 150 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிக்கைகளில் வெளியான விளம்பரங்களை மொழி பெயர்க்கவும் சொன்னார். அது முதற்கொண்டு எனக்கு இந்த வெல்கம் சென்டருடன் தொடர்பு உண்டு.

 

பாம்புக்கடி முதல் செக்ஸ் மருத்துவம் வரை எல்லா இந்திய பொக்கிஷங்களும் இங்கே ஒரே கூரையின் கீழ் அறியலாம். இந்தியாவில் ஒவ்வொரு விஷயத்துக்கும் வேறு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும் வெள்ளைக்காரர் என்றால் வாயைப் பிளந்து கொண்டு எல்லாவற்ரையும் தேடிக் கொடுக்கும் நம்மவர்கள், வேட்டி கட்டிக் கொண்டு போகும் நம்மவரை மதிக்கவும் மாட்டார்கள்; எள்ளி நகையாடவும் செய்வர். அவ்விஷயத்தில் பிரிட்டிஷ் லைப்ரரியும், வெல்கம் லைப்ரரியும் 100 மடங்கு மேல்.

இன்னொரு சிறப்பையும் சொல்லி ஆக வேண்டும். பிரிட்டிஷ் மியூஸியத்தில் மற்றவர்களுக்குக் காட்டாத அரிய பொக்கிஷங்களை அவ்வப்பொழுது ஸ்பெஷல் கண்காட்சி என்று வைத்து 20, 30 பவுன் கட்டணம் வைத்து விடுகிறார்கள் போட்டொ எடுக்கவும் அனுமதி இல்லை. ஆனால் வெல்கம் லைப்ரரி அனைவருக்கும் இலவசமாக தங்கள் பொக்கிஷங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. புகைப்படமும் எடுக்கலாம்.

Sex Book பாலியல்

 

இந்தக் கண்காட்சியில் அனங்கரங்க என்ற சம்ஸ்கிருத செக்ஸ் (sex) பாலியல்   நூல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 500 ஆண்டுகளுக்கு முந்திய நூல். இந்தப் புஸ்தகத்தை 18 ஆவது நூற்றாண்டில் படி எடுத்துள்ளனர். இது உலகின் முதல் செக்ஸ் புஸ்தகமான காமசூத்ரத்துடன் ஒப்பிடப்படுகிறது. காம சூத்ரத்தை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் வாத்ஸ்யாயன மஹரிஷி.

 

உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அரிய பெரிய பொக்கிஷங்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே உண்டு. ஷேக்ஸ்பியர் நாடகங்களை எல்லாம் விழுங்கிச் சாப்பிட்டுவிடும் காளிதாசன், பாஷா, சூத்ரகன் போன்றோரின் நாடகங்கள், ஹமுராபியை விழுங்கிவிடும் உலகின் முதல் சட்ட நூலான மநு ஸ்ம்ருதி, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரம், உலகின் முதல் தெஸரஸான (Thesarus) அமர கோஷ அகராதி, உலகின் முதல் இண்டெக்ஸான (Index) வேத அநுக்ரமணி, உலகின் முதல் தத்துவ நூலான உபநிஷத், உலகின் முதல் இலக்கண நூலனலான அற்புதம் நிறைந்த பாணிணீய வ்யாகரணம், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம், பரத முனியின் பரத நாட்டிய சாஸ்திரம் — இப்படி தத்துவம், தர்கம், காம சாஸ்திரம், கணிதம், விமானவியல் என்று ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சீனம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் தமிழ் ஆகிய அவ்வளவு பழைய மொழிகளின் நூல்களை ஒரு தட்டில் வைத்து ஸம்ஸ்க்ருத நூல்களை மற்றொரு தட்டில் வைத்தால் ஸம்ஸ்க்ருதம் மிக மிக கனமானது என்பது விளங்கும்

 

அவ்வகையில் அநங்க சாஸ்திரம் 10 பக்கங்களில் செக்ஸ் படங்களைக் கொண்டுள்ள ஒரு நூலாகும். ஒவ்வொரு பக்கத்திலும் 37 படங்கள் உண்டு. 17ஆவது நூற்றாண்டு முதல் நேபாள மன்னர்கள் செக்ஸ் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நூல் உருவானது. இதனால் இதில் ஸம்ஸ்க்ருத மற்றும் நேவாரி மொழிகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

காஷ்மீரில் வாங்கிய பொருள்கள் பட்டியல்

 

டாக்டர் பைரா மால் (Dr Paira Mall) என்பவர் இந்தியாவில் டாக்டர் படிப்பு படித்தவர். ஐரோப்பாவில் பயிற்சி பெற்றவர். ஆகையால் இவர் 1911ல் காஷ்மீருக்குச் சென்று லண்டன் வெல்கம் சென்டர் மியூசியத்துக்காகப் பொருள்களையும் புஸ்தகங்களையும் வாங்கினார். இந்தப் பட்டியலைப் பார்த்தால் ஹென்றி வெல்கமுக்கு எதில் எதில் ஆர்வம் இருந்தது என்பது புலப்படும், டாக்டர் பைரால் 11 ஆண்டுகளுக்கு இந்த வெல்கம் சென்டருக்காக இந்தியாவில் பணிபுரிந்தார். பாம்புக்கடி மருந்து முதல் முஸ்லீம் தாயத்து வரை பல பொருள்களை காஷ்மீரில் 229 ரூபாய்க்கு வாங்கி லண்டனுக்கு அனுப்பினார். இந்தப் பட்டியலை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதிலுள்ள சில சுவையான விஷயங்கள்:–

 

காசுகள், தாயத்துகள்

காஷ்மீர் தொப்பி

ஸர்ப்ப வழிபாட்டு படங்கள்

இந்து தெய்வங்களின் படங்கள்

பச்சைக் கல் மீது நோயைப் போக்க எழுதப்பட்ட தாயத்துகள்

அராபிய, பாரஸீக, ஸம்ஸ்க்ருத,

திபெத்திய, சாரதா மொழி பிரதிகள், ஓலை ச்சுவடிகள்

நாவிதர் கத்திகள்

குரான் வரிகள் பொறிக்கப்பட்ட நெற்றிச் சுட்டிகள்

வெள்ளி யந்திரம்

சிவப்பு லிங்கம்

 

முதலியவற்றை வாங்கி லண்டனுக்கு அனுப்பினார்.

ஹென்றி வெல்கமின்  சேகரிப்புகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.

டாக்டர் பைரா மால், இந்தியாவில் தங்கிய 11 ஆண்டுகளும் லண்டனில் இருந்த வெல்கம் சென்டர் அதிகாரி தாம்ஸனுடன் தொடர்புகொண்டு அவ்வப்பொழுது கடிதம் எழுதி வந்தார்.

–சுபம்–

 

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? (Post No.4699)

Picture of S Nagarajan in Halabedu, Karnataka, August 2017.

 

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-02 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4699

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நாட்டு நடப்பும் சொந்த அனுபவமும்!

 

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? எனது சில அனுபவங்கள்!

 

ச.நாகராஜன்

 

 

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் இருப்பவை எனது சொந்தக் கருத்துக்கள்; சொந்த அனுபவங்கள். இது எவரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கவோ எழுதப்படவில்லை. நல்ல நோக்கத்துடன் எழுதப்படும் இது எவர் மனதையும் நோக வைத்தால் இப்போதே சொல்கிறேன் – Sorry!)

1

பாராட்டிற்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? நமது தமிழ்நாட்டு ஊடகங்கள் போல் அல்லாமல், அரசியல் கட்சிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டினால் பலன் உண்டு.

தீமையையும் கூட, ஒரு பொதுவான நன்மைக்காகக் கண்டித்தால் பலனுண்டு.

தற்பெருமைக்காக அல்ல; ஒரு இன்ஸ்பிரேஷனுக்காகத் தான் இந்த எனது சொந்த அனுபவங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

2

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.

சாவியும் மணியனும் ஆனந்தவிகடனிலிருந்து விலகி விட்ட காலம் அது.

சாவி தினமணிகதிர் ஆசிரியப் பொறுப்பை வகித்தார். ஆனால் தினமணி கதிர் வெளியீடு பற்றி வரும் பத்தியில் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் என்றே பதிப்பிக்கப்பட்டிருக்கும்.

ஒரு நாள் தினமணி கதிரைப் பிரித்துப் பார்த்த எனக்கு பகீர் என்றிருந்தது.

ஹலோ ராமச்சந்திரா என்ற தலைப்பில் சாவி ஒரு நகைச்சுவைத் தொடரை ஆரம்பித்திருந்தார்.

அதில் ஒரு படம்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி டெலிபோன் ரிசீவரைக் கையில் பிடித்திருக்கும் காட்சி.

அன்றாடம் ராமரை வழிபடும் பக்தர்களுக்கு எப்படி இருக்கும்?

மனம் நொந்தேன். அன்றே பல நண்பர்களும் இது பற்றிப் பேசினர். விளைவு, அன்று மாலையே பல பேர் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் தினமணி கதிருக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த வாரம் தினமணி கதிர் வந்தது.

என்ன ஆச்சரியம். பல பக்தர்களின்  மனம் நொந்திருப்பதாகக் கடிதம் வந்ததால் இந்தத் தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது -சாவி என்று அறிவிப்பு வந்தது.

ராம பக்தி ஜெயித்தது!

 

S Nagarajan and S Swaminathan with Great Scholar Dr R Nagaswamy in Chennai, 2017.

 

3

ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகையாகவே தினமணி கதிரை சாவி நடத்திக் கொண்டிருந்தார்.

மிக அருமையான எழுத்தாளரான, மிகவும் (அப்போது) இளைஞரான ஸ்ரீ வேணுகோபாலனை புஷ்பா தங்கதுரையாக மாற்றி ரெட் லைட் ஏரியாவுக்கு அனுப்பி கமலாவின் கதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்.

வேணுகோபாலன் மிக அருமையான எழுத்தாளர் என்றும் அவரை இப்படிக் கெடுக்கக் கூடாது என்றும் பிரபல மணிக்கொடி எழுத்தாளரும் எனது தந்தையாரின் நண்பருமான கி.ரா. அடிக்கடி என்னிடம் சொல்லி வேதனைப்படுவார். கி.ரா. சிறிது காலம் மதுரையில் எங்கள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவர் உலக இலக்கியம் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசுவார். அதில் வேணுகோபாலனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

இந்த ரீதியில் நடந்த கதிரில் ஒரு நாள் ஜெயகாந்தன் கதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. (பெயர் நினைவில்லை- ‘சக்கரம்’ என்ற தலைப்பாக இருக்கலாம்!)

அதைப் பார்த்த எல்லோரும் திடுக்கிட்டனர். இப்படி ஒரு ஆபாசமான கதை தினமணி கதிரில் வரலாமா?

பலரும் வெகுண்டனர். நானும், எனது நண்பர்களும் ஆளுக்கொரு போஸ்ட்கார்டில் கண்டனத்தைத் தெரிவித்து ஏ.என்.சிவராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதினோம்.

இப்போது லண்டனில் வசிக்கும் டாக்டர் நாகசுப்பிரமணியன், அவரது சகோதரர் திரு கிரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

பங்களூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் கண்டனக் கடிதங்களை அனுப்பினர்.

அடுத்த வாரம் ஆச்சரியம்!

தினமணி கதிரில் கடைசிப் பக்கத்திற்கு முன் பக்கம் ஒரு அறிவிப்பு வந்தது. என் நினைவிலிருக்கும் வார்த்தைகளை வைத்துப் பொருள் கெடாமல் அதைக் கீழே தருகிறேன்,.

“இப்படி ஒரு கதை வெளியானதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி இப்படிப்பட்ட கதைகள் என் பெயரை ஆசிரியராகப் போட்ட பத்திரிகையில் இடம் பெறாது.” ஏ.என். சிவராமன்.

அன்பர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

அடுத்த வாரம் கதிர் வந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் இதுவரை ஆசிரியர் : ஏ.என்.சிவராமன் என்று இருந்ததற்குப் பதிலாக ஆசிரியர்: சாவி என்று போடப்பட்டிருந்தது.

பின்னர் சில காலம் கழித்து, சாவியும் கதிரிலிருந்து வெளியேறி விட்டார்.

 

 

4

கண்டனத்திற்குப் பலன் உண்டு என்பது எனது அனுபவம். ‘ஜெனியுன்’ – Genuine- என்று சொல்கிறோமே அது முக்கியம்! இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.

இனி பாராட்டிற்குப் பலன் உண்டா, உண்டு.

இர்விங் வாலஸ் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். த்ரீ சைரன், வோர்ட், ஆர் டாகுமெண்ட், பீஜன் ப்ராஜெக்ட், செவந்த் சீக்ரட் – எந்த நாவல் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், என்னிடம் இருக்கும். கதையும் கிட்டத்தட்ட ஃபிங்கர் டிப்ஸில் இருக்கும்.

எமர்ஜென்ஸி காலம். இந்திராவின் தாங்கவொண்ணா அடக்கு முறை.

மதுரை கொதித்தெழுந்தது. அதில் ஏராளமான அனுபவங்கள். அதைச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல; இடமும் இல்லை.

அப்போது ஆர் டாகுமெண்டில் இர்விங் வாலஸ் சித்தரித்திருந்த சூழ்நிலை இந்தியாவில்.

உடனடியாக ஒரு தற்காலிக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. மூன்லைட் அசோஷியேஷன் – எம்.எல்.ஏ. (Moon Light Association MLA)

ஆங்காங்கு நண்பர்களின் வீடுகளில் பத்துப் பேர் சேர்ந்தால் போதும். ஒரு கூட்டம் நடைபெறும். அதில் நான் ஆர் டாகுமெண்ட் கதையைச் சொல்வேன். சரியாக ஒரு மணி நேரம்.

மூன் லைட் என்று சங்கப் பெயர் இருந்தாலும் திருப்பரங்குன்ற மலையின் பின்பக்கம் இருட்டிலும் இரவில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுண்டு. அதில் உருவங்கள் தெரியாது; ஆனால் என் குரல் ஒலிக்கும்.

கூட்டம் கலையும் போது எமர்ஜென்ஸியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு நல்ல உத்வேகம் எழும்.

இப்படிப்பட்ட நாவலை எழுதிய இர்விங் வாலஸைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது.

பாராட்டுவது என்றால் (தர்மத்தை உடனே செய்ய வேண்டும் என்பது போல) உடனடியாகப் பாராட்டி விடுவது என் வழக்கம் -இடம், பொருள், காலம் எதையும் பாராமல்!

 

நண்பர் ஒருவர் – இர்விங் வாலஸ் பைத்தியம்! அவரும் கூடச் சேர்ந்தார்.

வாலஸுக்குக் கடிதம் பறந்தது.

என்ன ஆச்சரியம், ஒரு நாள் நண்பர் ஓடி வந்தார்.

இர்விங் வாலஸ் பதில் எழுதி இருந்தார் – ஒரு போட்டோவும் இணைக்கப்பட்டிருந்தது. அவரும் அவர் மனைவியும் இருந்த போட்டோவில் அவரது கையெழுத்து வேறு.

எங்கள் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த உலகின் மாபெரும் எழுத்தாளர் எங்களைப் பாராட்டி இருந்தது தான் ஆச்சரியம்.

“உங்கள் எழுத்திலிருந்து நீங்களே நல்ல கருத்துக்களை எழுதும் வல்லமை படைத்தவர்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது.

ஆகவே நீங்கள் தெரிவித்திருக்கும் பொருள் பற்றி நீங்களே எழுத முடியும். ஏற்கனவே பலவற்றில் ஈடுபட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் எனக்குப் போதிய நேரம் இப்போது இல்லை”

அவரது இந்தக் கடிதத்தை நாங்கள் காட்டாத ஆளே இல்லை. (ஆர் டாகுமெண்ட் போன்ற நாவல்களை அவர் எழுத வேண்டுகோள் விடுத்திருந்தோம் எங்கள் கடிதத்தில்)

ஒரே பெருமிதம்.

பாராட்டுக்கு ஒரு பாராட்டு! அது தான் இர்விங்வாலஸ்!

 

இன்னொரு சொந்த அனுபவம்.

எனது தொழிற்சாலையில் நான் ஒரு பொறுப்பு வாய்ந்த மேலாளர்.

காம்பொணண்ட் ஸ்டோர்ஸில் ஒரு இன் சார்ஜ். ஆள் எப்போதும் கடுகடு என்று இருப்பார் என்று எல்லோரும் சொல்வார்கள். எதற்கு இப்படி ஒரு கடுமை, சிடுசிடுப்பு என்று எனக்கும் புரியவில்லை.

ஒரு நாள் ஸ்டோர்ஸுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. சென்றேன். அகஸ்மாத்தாக கராத்தே பற்றிய பேச்சு அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

அங்கிருந்த பணியாளர், அவரைச் சுட்டிக் காட்டி ‘சார், இவர் கராத்தே மாஸ்டர் சார்’ என்றார்.

உடனடியாக அவரைப் பார்த்து, “உண்மையா இது” என்றேன்.

சற்று நெளிந்த அவர் தான் அடைந்திருக்கும் மிகப் பெரிய உயரிய நிலையை – பெல்ட் பெற்றதைக்-  காண்பித்தார்.

“இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பாடு நேரம் வந்து விடும். அப்போது என் மேஜைக்கு வாருங்கள்” என்று சொல்லி விட்டு    (ஒரு மாதிரியான உத்தரவு தான்!) கிளம்பினேன்.

சாப்பாடு நேரத்தில் அவர் சற்று பயந்தவாறு வந்தார்.

(வேலை நேரத்தில் கராத்தே பற்றி பேசியதற்கு கண்டனமோ!?)

“வாருங்கள்” என்று அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரது அனுபவங்களைத் தெரிந்து கொண்டேன்.

பிறகு அவர் கிளம்பும் போது உங்களது போட்டோ ஒன்று நாளை காலை எட்டு மணிக்கு என் மேஜையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவரை அனுப்பினேன்.

அடுத்த மாதம் எங்கள் தொழிலகத்தின் பிரபல இதழில் அவர் பற்றிய பேட்டிக் கட்டுரை ஒன்று அவரது  போட்டோவுடன் வந்திருந்தது.

தொழிற்சாலையில் ஒரு பரபரப்பு. அவரை அனைவரும் நேரில் சென்று பாராட்டினர்.

அவர் சிடுசிடுப்பு அன்றிலிருந்து போயே போயிற்று. பெரும் புகழைத் தாங்க முடியாத அவர் எளிமையான மனிதராக ஆகி விட்டார்.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை.

எனது ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டர் ( அவரைப் பார்ப்பதே சிம்ம சொப்பனம்; என்ன ஒரு கம்பீரம்; ரோட்டரி தலைவருக்கே உள்ள ஒரு கம்பீரம் அது!) தனது அறைக்குள் நுழைந்தவர், பர்ஸனல் மேனேஜருக்குப் போன் செய்து, “ யாரப்பா அது,கராத்தே மாஸ்டர், அவரை என் ரூமுக்கு அனுப்பு” என்று கூற அலுவலகமும் தொழிற்சாலையும் பரபரப்புக்குள்ளாகியது.

பயந்து நடுநடுங்கியவாறே உள்ளே சென்ற சிடுசிடுப்பு நண்பர் மிகவும் பாராட்டப்பட்டு நிஜ கராத்தே வீரராக வெளியில் வந்தார்.

எனக்கு அவர் கூறிய நன்றி வார்த்தைகள் ஒரு புறம் இருக்கட்டும்! அவர் வேலையே பறி போனது.

ஆம், ஜே.எம்.டி, ஸ்டோர்ஸ் இன் சார்ஜ் வேலையிலிருந்து அவரை நீக்கி விட்டார்.

அவருக்கு இன்னும் அதிகப் பொறுப்புடன் கூடிய உயர் பதவியான செக்யூரிடி பிரிவில் வேலை தரப்பட்டது.

எனக்கும் மகிழ்ச்சி; பாராட்டி எழுதிய எழுத்துக்கும் ஒரு மஹிமை இருப்பதைப் புரிந்து கொண்டேன். (பின்னொரு காலத்தில் அவர் துபாயில் இருப்பதாகக் கேட்டு மகிழ்ந்தேன்)

பாராட்டுகளுக்கு மிகப் பிரமாதமான பலன் உண்டு.

ஆயிரமாயிரம் பேர் மனதில் புகழ்ந்தாலும் வெளிப்படையாகச் சொல்பவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்!

அதற்கு ஒரு தனிப் பெருமை உண்டு!

(இந்த சமயத்தில் திரு நஞ்சப்பா அவர்களை நினைக்கிறேன். உடனடியாக பாராட்டி கமெண்ட்ஸ் காலத்தில் தன் கருத்தைப் பதிவிடும் இவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்! இவர் எந்த ஊரோ! என்ன பொறுப்பில் இருக்கிறாரோ – எனக்குத் தெரியாது. இந்த விநாடி வரை!)

இன்னும் பல சுவையான அனுபவங்கள் உண்டு என்றாலும் கூட கட்டுரை நீண்டு விட்டதால் நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது!

சாரம் இது தான்!

மக்களுக்குத் தீங்கு பயக்கும் விஷயங்களைக் கண்டியுங்கள். லெட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கடிதம் போடுங்கள். பாராட்ட வேண்டியவர்களை – உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சமூக சேவை, எழுத்து உள்ளிட்ட பணியில் ஈடுபட்டவராக இருந்தாலும் சரி, பாராட்டுங்கள்.

பயன் உண்டு சார், பயன் உண்டு!

என் அனுபவம் பேசுகிறது!

***