பிறர் மனதில் உள்ளதை அறிபவன் கடவுள்–வள்ளுவர் வாக்கு (Post No.4319)

Written by London Swaminathan

 

Date: 20 October 2017

 

Time uploaded in London- 11-00 am

 

 

Post No. 4319

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் மொழியில் ‘குறிப்பறிதல்’ Divining or Sensing from Appearances)  என்பது ஒரு சிறப்பு அம்சம். ஏனைய நாடுகளில் இதை ஒரு நல்ல விரும்பத்தக்க குணமாகப் போற்றவில்லை. ‘மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்’ என்பது தமிழில் உள்ளதை அறிவோம். அவர் எப்படி வரும் பொருள் — நிகழப் போவனவற்றை — உரைப்பார்? அவருக்கு பிறர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனால்தானோ என்னவோ வள்ளுவப் பெருமான் ‘குறிப்பறிதல்’ என்று அமைச்சியலில் ஒரு அதிகாரத்தை உருவாக்கி பத்துக் குறள்களில் கருத்து மழை பொழிந்துள்ளார். அது மட்டும் அல்ல; அத்தகைய ஆற்றல் உடையோரை கடவுள் நிலைக்கு உயர்த்திவிட்டார்! நாலடியார் என்னும் நூலிலும் இப்படி ஒரு கருத்து பாடப் படுகிறது.

 

முதலில் திருவள்ளுவர் அளித்த, தமிழ் வேதம் ஆகிய, திருக்குறளில் உள்ள கருத்துகளைக் காண்போம்:–

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

 

பொருள்:–

 

சந்தேகத்திற்கு இடங் கொடுக்காமல், பிறர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர வல்லவனைத் தெய்வத்துக்கு சமமாக வைக்க வேண்டும்.

 

இது கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்ட தாகவே என்று தோன்றும். “வையத்துள் வாழ்வாங்கு  வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” — என்று வள்ளுவன் சொன்னபோது அதை ராமன், கிருஷ்ணன், சம்பந்தர்  ஆகியோரை மனதில் வைத்து நாம் ஏற்றுக் கொண்டோம். ஆனால் அடுத்தவர் எதற்காக வந்திருக்கிறார்? அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிபவரை தெய்வ நிலைக்கு உயர்த்தியது வியப்பைத் தரும்.

 

அத்தோடு நிற்காமல், அத்தகைய ஒருவரை எப்படியாகிலும், எவ்விலை கொடுத்தும் மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்:-

 

குறிப்பிற் குறிப்புணர்  வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல் (703) என்று பகர்வார்.

 

நம்மிடம் ஒருவர் திடீரென்று வந்து நம்மை இந்திரனே சந்திரனே, பாரியே, வா னில் இருந்து பொழியும் மாரியே என்று புகழ்ந்தால் நாம் சிரித்து மகிழ்வோம்; ஆனால் உள் மனது, எதற்காக இந்த ஆள் இப்படி, என்றும் இல்லாத் திருநாளாக இன்று மட்டும் புகழ்கிறான் என்று யோசிப்போம்; சோழியன் குடுமி சும்மா ஆடாது; ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்தோடு போக மாட்டார்; இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று புரிந்து கொள்வோம்.

 

ஆயினும் அவர் எதற்காக இப்படிப் புகழ்ந்தார் என்பதை அவர் வாயில் இருந்து வரும் வரை அறிய முடியாது. ஆனால் பிறர் மனதில் உள்ளதை முகக்குறிப்பின் மூலமும், நடை உடை பாவனை மூலமும் அறிபவர் மனிதரில் அரிதிலும் அரிது; ஆகையால் அத்தகையவர் கிடைத்தால் இரண்டு கைகளாலும் ‘சலாம்’ போட்டு அவரை அமைச்சர் ஆக்கி விடு என்று அரசர்களுக்கு அறிவுரை பகர்கிறார் வள்ளுவர்.

 

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (706) – என்பதும் நமக்குத் தெரியும்.

 

ஒருவர் முகம் ‘கடுகடு, சிடு சிடு’ என்று இருந்தால் அவருக்கு நம் மீது ஏதோ கடுப்பு என்பதும், அன்றலர்ந்த செந்தாமரை போலச் சிரித்தால் மகிழ்ச்சி என்றும் அறிவோம். ஆனால் அப்படி முகக் குறிப்பால் உணர்த்தாவிடினும் அறிபவன் அறிஞன்.

 

‘’கண்களே மனதில் உள்ளதைச் சொல்லிவிடும்’’– என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி உண்டு. சிசரோ என்ற அறிஞர் ‘’ஆத்மாவின் சித்திரமே ஒருவரின் முகம்’’ என்று சொல்லுவார். பரத நாட்டியத்திலும் முக பாவம் மூலம், குறிப்பாக கண் அசைவு மூலம், உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுவதையும் அறிவோம். ஆயினும் இப்படி வெளிப்படையாக இல்லாமல் ஆள் வந்தவுடனே, இவன் எதற்காக வந்திருக்கிறான், என்ன செய்யப் போகிறான், என்ன எதிர் பார்க்கிறான் என்று அறிபவன் சிறப்பிடம் பெருவான்.

 

 

இதை எதிரொலிக்கும் பாடல் நாலடியாரிலும் உள்ளது:–

 

ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி

ஊக்கம் உரையார் உணர்வுடையார் — ஊக்கம்

உறுப்பினால் ஆராயும் ஒண்மையுடையார்

குறிப்பின் கீழ்ப்பட்ட துலகு — நாலடியார்

 

பொருள்:-

தாம் மேற்கொண்ட செயலை, அது முடியும் வரை, மனத்தில் வைத்துக் கொண்டு, வெளிப்படையாக சொல்லாதவன் அறிஞன்; பிறர் முயற்சியினை அவர்தம் அ ங்கங்களின் குறிப்பினால் ஆராய்ந்து அறிவர் அறிஞர்; அத்தகையோரின் கீழ் உலகமே அடங்கிக் கிடக்கும்.

 

–சுபம்–

 

 

தமிழர் கண்ட விஞ்ஞானம்- மரபியல் GENETICS அறிவு (Post No.4315)

Written by London Swaminathan

 

Date:19 October 2017

 

Time uploaded in London- 11-06 am

 

 

Post No. 4315

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ – என்ற பழமொழி பற்றியும் அதற்கிணையான சம்ஸ்கிருத பழமொழியையும் ஏற்கனவே கொடுத்தேன் (அடிக்குறிப்பை காண்க)

 

தமிழர்களுக்கு மரபியல்  (GENETICS ஜெனெடிக்ஸ்) மீது ரொம்ப நம்பிக்கை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நாலடியாரும் பழமொழியும் கூட இதே கருத்தை உறுதி ப்படுத்துகின்றன.

‘மகனறிவு தந்தை அறிவு’ Nature Vs Nurture

ஒருவனுடைய அறிவுக்குக் காரணம் அவனுடைய தாய் தந்தையர் மூலம் வரும் மரபணுவா  (GENE) அல்லது அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையா என்று மேல் நாட்டு அறிவியல் இதழ்களில் (Science Journals) அடிக்கடி கட்டுரைகள் ( Nature Vs Nurture or Heredity or Environment) வரும். இரண்டுக்கும் ஆதரவான, எதிரான வாதங்கள் முன்வைக்கப்படுவதால் முடிவு எதுவும் சொல்ல முடியாது. ஆயினும் தமிழர்களுக்கு மரபணு  GENE) விஷயத்தில்தான் அதிகம் நம்பிக்கை என்று தோன்றுகிறது.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான பழமொழியிலும் நாலடியாரிலும் இக்கருத்து வருவதால் அந்தக் காலத்தில் இப்பழமொழி  மிகப் பிரசித்தம் என்பது புலனாகும்.

 

செந்நெல்லா லாய செழுமு ளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவயலூர!

மகனறிவு தந்தை அறிவு — நாலடியார்

 

பொருள்:-

அதிகமான செந்நெற் பயிர் வயல்கள் உடைய வயலூரா!

 

செந்நெற்களால் உண்டாகிய செழிப்பான முளைகள், பின்னர் அந்த செந்நெற் பயிர்களாகவே வளர்வது போல, ஒரு தந்தையினுடைய அறிவு போலவே மகனுடைதைய அறிவு அமையும்.

 

நெல்லின் முளையினால் அந்த நெல்லே விளைவது போல, தந்தையின் குணமே மைந்தனுக்கும் அமையும் என்பது கருத்து. இதே கருத்தை பழமொழி என்னும் நூலிலும் காண்போம். இது 1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருத்து.

 

இதே போல மகனைப் பார்த்தால், அவர்களுடைய தாய் தந்தையர் எப்பேற்பட்டவர் என்பதும் தெரியும். சில குழந்தைகள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும்  சண்டை போது பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளை நாலு பேர் முன்னால் சொல்லிவிடும்; மற்றவர்கள் இதைக் கண்டும் காணாதது போல முகத்தைத் திருப்பிக் கொள்வர். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இச்சொற்கள் அந்த வீட்டில் நடந்த காரசார வாக்குவாதத்தின் போது உதிர்ந்த முத்துக்கள் என்பது; ஒரு குழந்தை வளரக்கூடிய தெரு, பேட்டை ஆகியனவும் இதன் மூலம் தெரியும்

“மகனுரைக்கும் தந்தை நலத்தை” என்ற தொடராலும்,  “தாயைத் தண்ணீர் தடத்தில் பார்த்தால் பிள்ளையைப் பார்க்க வேண்டியதில்லை” என்ற பழமொழியாலும் இதை அறியலாம். “தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்பது எல்லோரும் அறிந்த பழமொழி.

(பிள்ளை என்பது மகன், மகள் இருவரையும் குறிக்கும் சொல்)

 

நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி

நோக்கி யறிப; அதுவே போல் — நோக்கி

முகமறிவார் முன்ன மறிய வதுவே

மகனறிவு தந்தை யறிவு — பழமொழி

 

பொருள்:-

தன்னுடைய கண்களால் பார்த்து அறிய முடியாத முகத்தை, கண்ணாடியில் பார்த்து அறிவர்; அதுபோல ஒருவர் முகத்தைப் பார்த்தே அவர்கள் கருத்தை அறியலாம். மகனுடைய அறிவு தந்தையின் அறிவைப் போன்றது போல.

 

அதாவது மகனைக் கொண்டு தந்தையின் அறிவையோ, அல்லது தந்தையைக்  மகன்   கொண்டு  மகன்  அறிவையோ அறிந்து விடலாம் என்பது தமிழர் கண்ட உண்மை. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? என்பதும் இதன் அடிப்படையிற் பிறந்ததே.

 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

 

தாயைப் போல | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தாயைப்-போல/

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!! white crow (2). கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!! kannu kannu (2). தாயைப் போல பிள்ளைநூலைப் போல சேலை! poy thay …

 

–சுபம்–

 

 

 

காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் எங்கே? (Post No.4308)

 

 
Written by S.NAGARAJAN

 

 

Date:17 October 2017

 

Time uploaded in London- 7–47 am

 

 

Post No. 4308

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

ஞானபூமி பாரதம்

 

காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் – எங்கே?

 

ச.நாகராஜன்

 

1

நல்ல கவிதை சாகா வரம் பெற்றது.

காலத்தை வென்றது தான் கவிதை.

 

அனவஹித: கிமஷக்தோ

விபுதைரம்யர்தித: கிமதிரஸிக: I

சர்வகஷோபி காலம்

கிரயதி சூக்தானி ந கவீனாம் II

 

வல்லபதேவர் என்ற கவிஞரால் ஆர்யா சந்தத்தில் இயற்றப்பட்ட கவிதை இது.

பெரிய உண்மையைக் கூறும் இந்தக் கவிதையின் பொருள் இது தான்:

 

 

காலம் தன் கவனக்குறைவினால் வலிமை இழந்து விட்டதோ!
அல்லது நேர்த்தியானவற்றைப் மிகவும் போற்றுவதனால், அறிஞர்களால் அதற்கு வேண்டுகோள் விடப்பட்டதா?

அனைத்தையும் அழிப்பது தான் காலம் என்றாலும் கூட, அது கவிஞர்களின் நல்ல கவிதைகளைத் திரை போட்டு மறைப்பதில்லை (ஒளித்து விடுவதில்லை)

 

இதன் ஆங்கில் மொழியாக்கம்:

 

Is Time powerless by oversight? Is it, as a very good appreciator of excellencea, he has been requested by the wise? Time, though a destroyer of every thing, does not screen (conceal) the good sayings of poets.

Translation by A.A.Ramanathan

 

உண்மை தான்; நல்ல கவிதைகளை காலம் திரை போட்டு மறைப்பதில்லை.நல்ல கவிதைகளை காலம் சிரஞ்சீவித்வம் கொண்டதாக ஆக்கி விடுகிறது.

காலமே, உனக்கு நமஸ்காரம்!

 

2

இப்போது ஒரு கேள்வி எழுகிறது.

காலம் அழிக்கவில்லை என்றால் நமது நாட்டில் தோன்றிய கவிதைகள் எங்கே?

முதலில் எவ்வளவு கவிதைகள் தோன்றியிருக்கலாம் என்பதை ஒரு உத்தேச மதிப்பீடு செய்து பார்க்கலாம்.

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முறபட்டது வேதகாலம்.

(ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று இது : ஞான தீபம் மூன்றாம் பாகம்)

 

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதத்தில் மன்னரின் கதைகள் பல உண்டு.

 

ஆக மன்னர் காலம் அப்போதிலிருந்தே தொடங்கி விட்டது.

ஒரு தலைமுறை என்பது சுமாராக முப்பது வருடம் என்று வைத்துக் கொண்டு, ஒரு மன்னரின் அரசாட்சி காலம் உத்தேசமாக முப்பது வருடங்கள் என்று வைத்துக் கொண்டு கணக்கிட்டால் எட்டாயிரம் ஆண்டுகளில் சுமார் 266 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வேண்டும்.

 

பாரதத்தில் 56 தேசங்கள் உண்டு.

 

ஆக 56 தேசங்களில் 56 X 266  = 12896 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வெண்டும்.

 

ஒரு மன்னனின் அரசவையில் முப்பதாண்டு காலத்தில் பத்து கவிஞர்கள் இருந்தனர் என்று வைத்துக் கொண்டால் 1,28,960 கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும்.

 

இவர்கள் ஒவ்வொருவரும் முப்பதாண்டு காலத்தில் வெறும் பத்து கவிதைகளே புனைந்திருந்தனர் என்று வைத்துக் கொண்டால் வரும் எண்ணிக்கை 12, 89,600.

 

பத்து தானா, சே, மோசமான மதிப்பீடு, ஆயிரக்கணக்கில் கவிதைகள் இயற்றியுள்ள புலவர்களை நமக்குத் தெரியாதா என்று கேட்டு இதை நூறு கவிதைகள் என்று வைத்துக் கொண்டால் வருவது 1,28,96,000.

 

பத்தாயிரம் ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி ராமாயணம், ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட் மஹா பாரதம், 18 புராணங்கள், 18 உப புராணங்கள், காளிதாஸன், பவபூதி, தண்டி, ஹர்ஷன் போன்றோர் இயற்றிய காவியங்கள் என்ற நீண்ட பட்டியலை கணக்கில் எடுத்துப் பார்த்தால் சுலபமாக ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி என்ற எண்ணிக்கையை நமது கவிதைகள் தாண்டி விடுகின்றன!

 

நூறு கோடி அற்புதமான கவிதைகள்!

 

ஒரு கவிதையிலேயே உயிரைக் கொடுத்து எழுத்துக்கு அக்ஷர லட்சம் பொன் கொடுத்த நாட்டில் ஒரு பில்லியன் – நூறு கோடிக் கவிதைகள் என்றால், அடடா உள்ளம் பூரிக்கிறது.

 

என்ன ஒரு அறிவு!

என்ன ஒரு அழகு!

என்ன ஒரு சொல்வளம்!

என்ன ஒரு கருத்து வளம்!

என்ன ஒரு கலை வளம்!

 

 

 

3

அந்த நூறு கோடிக் கவிதைகள் எங்கே?

காலம் அவற்றை ஒளிக்காது, மறைக்காது,அழிக்காது என்றால் இன்று அவை எங்கே?

முகமதியரின் முட்டாள்தனமான, கொடூரமான, அழிவுக் கலாசாரத்தினால் பல நூல்கள் அழிந்து பட்டன. ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அந்த நூல்கள் பல நாடுகளுக்கும் பரவி இருந்தன. ஆகவே அவற்றில் அழிந்தது போக பலவும் மீதம் இருக்க வேண்டுமல்லவா?

 

அவை எங்கே?

 

இருக்கின்றன! அவை இருக்கின்றன!

இதில் அந்தக் கால மொழியாகப் பரவி இருந்த சம்ஸ்கிருத நூல்களை மட்டும் பட்டியலிடப் புகுந்து தன் வாழ்நாளிம் பெரும் பகுதியை அர்ப்பணித்த டாக்டர் வி.ராகவன் நூல்களின் பட்டியல் அடங்கிய ஒரு கலைக்களஞ்சிய தொகுதியையே வெளியிட்டுள்ளார்.

 

அவருக்கு நமது உளங்கனிந்த நமஸ்காரம்.

நான்கு லட்சம் சுவடிகள் பிரிக்கப்படாமல் ஆங்காங்கு உள்ளன.

அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக பல ஆயிர்ம் நூல்கள் உள்ளன.

 

சரஸ்வதி மஹால், புனே பண்டார்கர் நிலையம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான நிலையங்கள் பணமின்றித் தவித்து இவற்றை அரும்பாடு பட்டுப் பாதுகாத்து வருகின்றன.

 

நூறு கோடிக் கவிதைகள் என்றால் உலகின் மொத்த அறிவுக் களஞ்சியம் என்று பொருள்.

 

வளமார்ந்த ஒரு உலக சமுதாயத்தின் உன்னதமான எண்ணங்களைக் கொண்ட கவிதைத் தொகுப்புகளின்

எண்ணிக்கை என்று பொருள்.

 

எண்ணவும் (TO COUNT) இனிக்கிறது.

எண்ணவும் (TO THINK) இருக்கிறது.

பாரத அறிவுச் செல்வத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு திருக்கூட்டமாக மாறி ஏதேனும் செய்ய வேண்டாமா?

செய்ய வேண்டும்.

 

 

4

ஒரு சில கவிதைகளைப் படித்து மகிழ்ந்து சில கட்டுரைகளைப் படைத்த எனக்கே இப்படி ஒரு ஆதங்கம் என்றால் அறிஞர்களுக்கும் என்னைப் போன்ற இதர ஆர்வலர்களுக்கும் என்ன ஒரு உத்வேகம் எழ வேண்டும்.

இருக்கின்றவற்றைப் பாதுகாப்போம்.

 

இருப்பதைப் பரப்புவோம்.

 

இல்லாததைத் தேடுவோம்.

 

தேடிக் கண்டனவற்றைப் பதிப்பிப்போம்.

 

பதிக்க முன்வருவோருக்கு உதவி செய்வோம்.

 

எந்த மொழியில் இருந்தாலும் நமது கவிஞர்களின் கவிதைகளை – நூற்றொரு கோடியாக இருந்தாலும் அனைத்தையும் -மீட்டெடுப்போம்.

 

 

புவன ச்ரேஷ்டம் பாரதம்; நல்லறிவின் தலைமையகம் பாரதம்.

புனர் நிர்மாணம் செய்து பழைய தலைமையை அனைத்துத் துறைகளிலும் நிலை நாட்டுவோம்!

***

 

போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294)

Written by London Swaminathan

 

Date:12 October 2017

 

Time uploaded in London- 11-26 AM

 

 

Post No. 4294

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Asaram Bapu, accused in several cases

 

அறநெறிச்சாரம் என்பது அருமையான கவிதை நூல்;

226 வெண்பாக்களைக் (வெண்பா= நான்கு அடிகள்) கொண்டது.

இதை இயற்றியவர் முனைப் பாடியார். இது 600, 700 ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமயத்தில் நம்பிக்கை உடையவரால் இயற்றப்பட்டத்து, அருகக் கடவுள் பற்றிய பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

நம் எல்லோருக்கும் எது நல்லது எது கெட்டது என்பது அனுபவ அறிவாலும் அப்பா, அம்மா, ஆசிரியர் சொற்களாலும் தெரியும். இருந்த போதிலும், போலீசும், ராணுவமும், கோர்ட்டுகளும், வக்கீல்களும் எதற்கு? ஏன் என்றால் பெரும்பாலோர் நல்லனவற்றைப் பின்பற்றுவதில்லை. இதனால் சிறைச் சாலைகள் நிரம்பி வழிகின்றன.

 

ஆகையால் நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் நன்மையே; ‘எனைத்தானும் நல்லவை கேட்க’– என்பார் வள்ளுவப் பெருமான்; அடக் கடவுளே! கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்களென்பதே வள்ளுவன் வாக்கு.

 

கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் பற்றி வள்ளுவன் மூன்று அருமையான விஷயங்களைச் சொல்கிறார்:-

 

  1. ஒருவன் பொய் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கையில் அவன் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளுமாம் ( kural 271)

 

  1. ஒரு பசு மாடு புலித்தோலைப் போர்த்திக் கொண்டு மேய்கிறதாம். அதாவது, தவ வலிமை அற்றவன், சந்யாசி வேடம் போற்று நடிக்கிறானாம். (273)

 

3.சந்யாசி போல வேடம் போட்டுவிட்டு, இரவு நேரத்தில் அல்லது ரகசிய இடத்தில் பாவம் செய்பவன், புதர் மறைவில் நின்று பறவைகளைப் பிடிக்கும் வேடனாம் (274).

Premananda arrested

என்ன அற்புதமான உவமைகள்!

இது போல அறநெறிச்சாரம் நூலிலும் மனதில் பதிய வைக்கும் விதத்தில் பாக்கள் அமைந்துள்ளன. இதோ அந்தப் பாடல்கள்:

 

 

பாசண்டி (போலித் துறவி- புறச்சமயி) மூடம்

 

தோல் காவி சீரைத்துணிகீழ் விழவுடுத்தல்

கோல்காக் கரகம் குடை செருப்பு — வேலொடு

 

பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்

நல்லவரால் நாட்டப்படும்

 

முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம்

 

பொருள்:-

தோல் காவி சீரைத் துணிகீழ் விழவுடுத்தல்= மான் தோல், கல்லாடை/காவிஉடை, மரவுரி இவைகளை கீழே புரளுமாறு அணிவதும்

 

கோல்காக் கரகம் குடை செருப்பு – வேலொடு பல்லென்பு தாங்குதல் = தண்டு, காவடி, கமண்டலம், குடை, செருப்பு, வேல், எலும்பு/கபாலம், புலிப் பல் ஆகிய இவற்றை அணிந்து கொள்ளுதலும்

 

பாசண்டி மூடமாய் நல்லவாரால் நாட்டப்படும் – போலி வேடதாரிகள் அல்லது புறச் சமயத்தைச் சார்ந்தோரது அறியாமை என்று பெரியோர்கள் சொல்லுவர்.

Gurmeet Ram Rahim

கழுதை மேல் உட்கார்ந்தவன் தலை மேல் மூட்டை!

 

ஆவரணமின்றி அடுவாளும் ஆனை தேர்

மாவரணமின்றி மலைவானும் — தாவில்

கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப்

பழுதாகும் பாசண்டியார்க்கு

 

ஆவரணமின்றி அடுவாளும்= கேடயம் இல்லாமல் போரில் பகைவரைக் கொல்லும் வாளும்,

 

ஆனை தேர் மாவரணமின்றி மலைவானும் =  யானை, தேர், குதிரை, முதலிய படைகளும், அரணும் இல்லாமல் போர் செய்யும் வீரன் செயலும்

 

தாவில் கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப்= கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டு அவன் தலையில் சுமையைச் சுமப்பவன் செயலும் போல

 

பாசண்டியார்க்கு பழுதாகும் = போலித் துறவிகளுக்கு அவர்கொண்ட வேடமும் பயனற்றதாகும்

 

று

Amrita Chaitanya, accused in several cases

வேறு பொருள்:

கழுதை + இலண்டம் = கழுதை விட்டை

தா இல் கழுதை = கோவேறுக் கழுதை

 

நல்ல உவமை! இப்போதாவது இந்தச் செய்தி நம் மனதில் பதிந்தால் முனைப்பாடியார் சந்தோஷப்படுவார்.

 

–சுபம்–

 

வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)

வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)

 
Written by London Swaminathan

 

Date:10 October 2017

 

Time uploaded in London- 14-56

 

 

Post No. 4288

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1 | Tamil and Vedas

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1

3 Nov 2012 – Science behind Deepavali (swaminathan’s Talk delivered today 03/11/2012) Actual Diwali falls on 13-11-2012 Good Evening,Namsthe …

 

SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/science-behind-diwali-2-175-sweet-ite…

Translate this page

3 Nov 2012 – SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! Picture from Wikipedia : Making Fire Crackers. This is Second Part of my speech: swami.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி பற்றி இரண்டு நீண்ட கட்டுரை எழுதினேன். கட்டுரையில் விவரம் காண்க.

இளஞர்களை வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும் பஸ்ஸுக்கும் தீ வைப்பார்கள். ஏனெனில் நாம் எல்லோரும் பைரோமேனியாக் (PYROMANIAC) என்று விஞ்ஞான சஞ்சிகைகள் விளம்புகின்றன. இது பற்றி எனது கட்டுரையில் விளக்கியுள்ளேன். நாம் ஆதிகாலத்தில் குகைகளில் வசித்தோரின் வழி வந்தவர்கள். உணவு சமைக்கவும் இரவு நேரத்தில் வனவிலங்குகளை விரட்டவும், குளிர் காயவும் தீ மூட்டி பழக்கப்பட்டவர்கள். இது நமது மரபணுக்களில் (GENES) உள்ளதால்தான் நாம் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் சிறு வயதில் வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் நெருப்புப் பெட்டியுடன் விளையாடினோம். வெளியில் சொக்கப்பனை கொளுத்தினோம். ஆகையால் கோர்ட்டுகள் மூலமோ, அரசாங்க போலீஸ் மூலமோ இளைஞர்கள் வெடி வெடிப்பதை  — தீபாவளி பட்டாசு வெடிப்பதைத் — தடுத்தால் பந்த், ரகளை, கலாட்டாக்களின் போது வீட்டுக்குத் தீ வைப்பதும், பஸ், ரயில்களுக்குத் தீ வைப்பதும் அதிகரிக்கும்; குறிப்பாக ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகம்.

 

ஆகையால் தீபவளி வெடி வெடிக்கத் தடை வேண்டாம்.

ஆனால்……………………..

இந்துக்களிடையே சுய கட்டுப்பாடு (SELF CONTROL and SELF RESTRAINT) வேண்டும்; விஞ்ஞான அணுகு முறை (Scientific approach)  வேண்டும். அது என்ன?

அந்தக் காலத்தில் பரந்த நிலப் பரப்பில், சின்ன ஜனத்தொகை.

இப்பொழுதோ அடுக்கு மாடி வீடுகளில் 500 குடும்பங்கள்;

அருகே ஆஸ்பத்திரிகள்; அ லுவலகங்கள்.

வீட்டூக்குள் நோயாளிகள்1 வெடிகளுக்கு அஞ்சும் சிறு குழந்தைகள்!

இவ்வளவு பேரின் நலத்தையும் மனதில் கொண்டு இரவு 11 மணிக்கு மேல், காலை 5 மணிக்கு முன்னர் வெடிகளை வெடிப்பதில்லை என்று உறுதி பூண வேண்டும்.

இது போல கிராமப் பகுதிகளில், காட்டோரப் பகுதிகளில் பறவைகள், விலங்குகள் நலன்களை மனதிற் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் பல கிராமங்களில் பறவைகளின் நலனை மனதில் வைத்து தீபாவளியே கொண்டாடுவதில்லை- அதாவது வெடி வெடிபதில்லை. நல்ல உள்ளங்கள் !!

 

புறச்சூழல் கேடு வருமா?

தீபாவளியின் போது விஷப்புகை வெளியேறுவது உண்மையே; ஆனால் அதை விட கூடுதல் விஷப்புகை ஒவ்வோரு நிமிடமும் உலகெங்கும் புகைக்கப்படும் சிகரெட், பீடி, சுருட்டு மூல ம் வெளியாகிறது. இதனால் புகை பிடிக்காதவர்களுக்கும் புற்று நோய் (PASSIVE SMOKING IS MORE DANGEROUS)  வரும் என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

அமெரிக்காவும் மேலை நாடுகளும் விற்பனை செய்யும் ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் உலகில் எந்த ஒரு நேரத்திலும் 55 நாடுகளின் மோதல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மே ல் நாட்டுப் பத்திரிக்கைகளும் தார்மீக உணர்வு இல்லாத, அற நெறி அறியாத குருடர்களின் கைகளில்தான் இருக்கின்றன. இந்தியாவைப் (INDIAN MASS MEDIA) போலத்தான். பணம் ஒன்றே குறி.

 

உலகில் சண்டை சச்சரவுகள் இருப்பதையே விரும்புகின்றனர்.

லண்டனில் ஆண்டுதோறும் நடக்கும் ஆயுத விற்பனைக் கண்காட்சியில் எந்த பயங்கரவாத இயக்கமும் ஆயுதம் வாங்கலாம். உலகில் 55 நாடுகளில் யுத்தம் நடப்பதை ஊக்குவிப்பது மேலை நாடுகள்!!

அமெரிக்காவில் தினமும் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தும் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் ஆயுத விற்பனையை நிறுத்த முன்வரவில்லை; ஏனெனில் அங்கே மக் டொனால்டு (Mac Donald) உணவகத்திலும் துப்பாக்கி வாங்கலாம்; இவர்கள்தான் உலகில் மிகப்பெரிய புறச்சூழல் கேட்டை விளைவிக்கிறார்கள். ஆயுத விற்பனையை நிறுத்தினால் 55 நாடுகளில் வெடி குண்டுகள் வெடிக்காது. POLLUTION/ புறச் சூழல் கேடு குறையும்.

நாம் பறக்கும் ஜெட் விமானங்கள் கக்கும் புகையும், அவை எழுப்பும் ஒலியும் அதி பயங்கர POLLUTION!

 

உலகில் கடலில் மிதக்கும் கப்பல்கள், குறிப்பாக எண்ணய்க் கப்பல்கள், கடல் முழுவதையும் சாக்கடையாக்கிவிட்டன. மீன்களை சாகடித்து விட்டன அல்லது மீன் சாப்பிடுவோரின் உடல்களை விஷமாக்கிவிட்டன. ஆக இந்த கேடுகளைப் பார்க்கையில் ஒரு நாள் தீபாவளியில் ஒரு கேடும் வாராது. இந்தக் கப்பல்களையும் விமானங்களையும் தயாரிப்போர் மேலை நாடுகள்; அதில் பயணம் செய்வோரோ, மத்தாப்பு வெடிகளுக்கு எதிராகக் கூச்சல் போடும் மேல் நிலை வர்கம்!

 

பட்டாசுத் தொழில் குடிசைத் தொழில்

 

சிவகாசி போன்ற இடங்களில் பட்டாசுத் தொழில் குடிசைத் தொழில்– அவர்கள் வயிற்றில் மண்ணை அடித்து விடாதீர்கள். யாராவது புறச்சுழல் கேடு பற்றிப் பேசினால் அதை பீடி, சிகரெட் குடிப்போரிடம் சொல்லச் சொல்லுங்கள்; புற சூழலையும் கெடுத்து சிகரெட் குடிக்காதவர்களுக்கும் புற்று நோயை (PAASIVE SMOKING IS MORE DANGEROUS THAN ACTIVE SMOKING) உண்டாக்கும் அந்தக் கம்பெனிகளையும் ஆட்களையும் விரட்டி அடியுங்கள். பட்டாசு உண்டாக்கும் புறச்சூழல் கேடு– ஒரு கொசு அளவே!

 

ஒலிக் கேடு (NOISE POLLUTION)

தீபாவளி வெடிகளின் வீரியத்தை, சக்தியை வெளி நாடுகள் தடுத்துவிட்டன. ஆகையால் சட்டப்படி அதிக ஒலி கேட்கும் வெடிகளை வாங்கவும் இயலாது; விற்கவும் முடியாது; இது போன்ற கட்டுப்படுகள் அவசியமே

 

நாமும் வெடி வெடிக்க என்று சில இடங்க ளை ஒதுக்கலாம்.

லண்டனில் 33 கவுன்சில்கள் உள்ளன. பெரும்பாலான கவுன்சில்கள் பொது இடங்களில் பிரம்மாண்டமான வாண வேடிக்கைகளை நடத்துகின்றனர். பல்லாயிரக் கணக்கான பவுன்களுக்கு பட்டாசு வாங்கி வெடிக்கின்றனர். இது தவிர வீடுகளில், தோட்டங்களில் தனி. எல்லா பேட்டைகளிலும் வெடிகள், மத்தாப்புகள் வாங்கலாம். பெரும்பாலானவை வானத்தில் சென்று வெடிக்கும் வெடிகள்.

 

அமெரிக்கர்களுக்கு பெற்றோல் PETROL விற்பவர்கள் எல்லாம் நல்லவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பயங்கர வாதிகள் என்று சொல்லி ஏதாவது ஒரு வகையில் அவர்களை வம்புக்கு இழுத்து அழித்து விடுவர். எ.கா (சதாம் ஹுசைன், கடாபி)

 

 

அரபு நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படவில்லையாம். அவர்கள் சத்தியசந்தர்களாம்; ஏனெனில் பெற்றொல் PETROL கொடுக்கிறார்கள். பிரிட்டனைப் பொறுத்தமட்டில் அவர்களிடம் வணிகம் செய்ய வேண்டும்;

 

ரிக்வேதம் இத்தகையவர்களை தஸ்யூக்கள் என்று திட்டுகிறது. காளிதாசன் , திருடர்களை “தஸ்யூக்கள்: என்று தனது நூலில் திட்டுகிறான். ரிக் வேதம் இவர்களை பாணிக்கள் என்றும் திட்டுகிறது.

பிற்காலத்தில் சங்கத் தமிழ் இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் இவர்களை மிலேச்சர்கள் என்று திட்டுகின்றன. பாரதியாரும் இப்படித் திட்டுகிறார். ஆரியனாக (பண்பாடு உடையவானாக) இரு என்கிறார்.

 

சீனா தனது ஆலைகள் மூலம் வெளியே தள்ளும் புகை, முஸ்லீம்கள் நடத்தும் தோல் தொழிற்சாலை  தள்ளும் கழிவு, ஆகியன மிக மிக மோசம்.

 

அரசியல் கட்சிகள் ஒலிபெருக்கிகளில் அலற வைக்கும் பாடல்கள்  நமது காதுகளைச் செவிடுபட வைக்கும். முஸ்லீம்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் மசூதிகளில் இருந்து அலறும் தொழுகைக் குரல் நம் காதுகளில் அழுகைக் குரலாக ஒலிக்கிறது. காலை ஐந்து மணிக்கு நம் தூக்கத்தைக் கெடுக்கிறது. இவை எல்லாம் என்ன ஒலிக்கேடுகள் (NOISE POLLUTION) இல்லையா?

 

நமது கோர்ட்டுகளை நாம் நம்புவதில் பயன் இல்லை. முஸ்லீம் மசூதிகளின் ஒலி பெருக்கிக்கு எதிராகவோ, சிகரெட், தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராகவோ வழக்குப் போட்டால அடுத்த நிமிடம் அதைத் தள்ளுபடி செய்வார்கள்.

 

பட்டாசு வாங்குங்கள்; எங்கள் லண்டனைப் போல கட்டு திட்டங்களுடன் வெடியுங்கள்; நமக்கு நாமே கட்டுப்                    பாடு வைத்துக் கொண்டால் நம்மவர்களிடம் இருந்து எதிர்ப்பு வாராது.

 

பட்டாசு வாழ்க; சிகரெட் பீடி ஒழிக!

 

TAGS:–தீபாவளி பட்டாசு, மத்தாப்பு, புறச்சூழல் கேடு, ஒலி, விஷப்புகை

 

–subham–

 

 

குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போல! (Post No.4285)

Written by London Swaminathan

 

Date:9 October 2017

 

Time uploaded in London- 7-14

 

Post No. 4285

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

எனது தபால் தலை ஆல்பத்தில் பறவைகளுக்கு பூக்களுக்கு, மிருகங்களுக்கு என்று பல தனித்தனி ஆல்பங்கள் வைத்திருக்கிறேன். அதில் குரங்குகள் படங்கள் உள்ள அஞ்சல் தலைகளைப் பார்த்   தவுடன் குரங்குப் பழமொழிகள் ஞாபகம் வந்தது. கூடவே கொஞ்சம் புத்தகத்தையும் பார்த்து எடுத்தேன். பழமொழிகள் பற்றி எனது பிளாக்கில்(BLOGS) 50-க்கும் மேலான கட்டுரைகள் உள. அத்துடன் இதுவும் சேரட்டுமே!

 

 

1.குரங்கானாலும் குலத்திலே கொள்ள வேண்டும்

2.குரங்கின் கை பூ மாலை

3.குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை

4.குரங்கின் கையில் சிக்கிய பாம்பு போல

 

5.குரங்கின் தலையில் கரகம் வைத்து காளி கும்பிட்டது போல

6.குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொடுக்குமா? அடித்து வாங்க வேண்டுமா?

7.குரங்கின் வயிற்றிலே குஞ்சரம் பிறந்த்து போல

8.குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்

9.குரங்கு ஏறாத கொம்பு உண்டா?

 

10.குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்?

 

 

11.குரங்கு கையில் குட்டிக்குக் கள் வார்தாற்போல

12.குரங்கு கையில்பூமாலை அகப்பட்டது போல

13.குரங்குக்குப் புத்தி சொல்லி தூக்கணாங் குருவி கூடு இழந்தது (பஞ்ச தந்திரக் கதை)

 

14.குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு)

 

 

15.குரங்கு தன் குட்டியின் கையைக் கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.

 

16.குரங்குப்பிடி போல பிடிக்க வேண்டும்

17.குரங்குப் பிடியே பிடி

18.குரங்குப் பிணமும் குறவன் சுடுகாடும் கண்டது இல்லை

19.குரங்குப் புண் ஆறாது

20.குரங்குப்புண் பிரம்மாண்டம்

21.குரங்கு முகமெல்லாம் ஒரு முகம்

 

22.மரத்தில் அறைந்த முளையை மர்க்கடம் பிடுங்கினாற்போல

 

23.மந்தி மயிரை மருந்துக்குக் கேட்டால் மரத்துக்கு மரம் தாவும்

 

24.உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு- கம்பன்

25.மூஞ்சியைப் பாரு, முகரையைப் பாரு, குரங்கு மூஞ்சி!

26.குற்றாலத்துக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கு

27.அவன் தம்பி அங்கதன்

 

FROM SANSKRIT :–

28.மற்கட (குரங்கு வழி) நியாயம், மார்ஜர ( பூனை வழி) நியாயம்

குரங்கானது குட்டியைத் தூக்காது; குட்டிதான் பிடித்துக்கொள்ளும்; பூனையின் குட்டியை பூனையே வாயில் தூக்கிச் செல்லும்.

 

–SUBHAM–

 

தமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல் (Post No.4279)

Written by London Swaminathan

 

Date: 7 October 2017

 

Time uploaded in London- 11-50 am

 

Post No. 4279

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தேவாரம் என்பது சிவனின் புகழ்பாடும் கீதங்கள் மட்டும் அடங்கியது அல்ல. தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா/ கலைக் களஞ்சியம். பல அற்புத நிகழ்ச்சிகளும் வரலாற்று விஷயங்களும் அடங்கிய பாடல் தொகுப்பு. சங்க இலக்கியத்தில் பரணர் என்னும் பார்ப்பனப் புலவர் எப்படி எண்பதுக்கும் மேலான வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாடல் தோறும் வைக்கிறாரோ அப்படி அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.

பாட்டன், பூட்டி உறவு முறை பற்றி அப்பர் பாடியதை எழுதினேன். இதன் மூலம் உறவு முறைச் சொற்களை அறிந்தோம். மாணிக்கவாசகர் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்பதை நரி-பரி பாடல் மூலம் அப்பர் நமக்கு அறிவித்தார். தர்மி என்ற பார்ப்பனசொனுக்கு சிவபெருமான் கவிதை எழுதித் தந்த திருவிளையாடலையும் அப்பர் கூறியமையால் அறிந்தோம்.  தமிழ் சங்கம் அவர் காலத்துக்கு முன் இருந்ததை அறிந்தோம். சோழ மன்னர்கள், அவருக்கு முந்தைய நாயன்மார்கள், சமணர்களின் ரஹசியங்கள் முதலியவற்றை நமக்குத் தெரிவிப்பதும் அப்பரே.

 

அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.

பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்

 

 

இன்றைய கட்டுரையில் அவர் சொல்லும் அதிசய சுழி- மணற் சுழி சோதிடம் பற்றிக் காண்போம்.

 

திருப்பழனம் என்னும் ஊரில் சிவனை ஏத்திப் பாடும் ஒரு பாடலில் அவர் புகல்வது யாதோ?

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே யாயிடினும்

பஞ்சிற்கார் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்

அஞ்சிபோய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி

குஞ்சிபூ வாய் நின்ற சேவடியாய் கோடியையே

 

-நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்

பொருள்

ஈசன் என்னைக் கவர்ந்து ஆட்கொண்டு வளை கொண்ட நிலையில் ஏங்கவைத்து வாராமல் இருக்கிறார். ஆயினும் மென் சிறகுகளை உடைய அன்னப்பறவை பறந்தோடும் திருப்பழனத்தில் அவர் இருக்கிறார். அது மட்டுமா? கலியுகத்தின் கொடுமையைக் குறைப்பதற்காக

நாள் தோறும் யாக யக்ஞங்கள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடி மீது வழங்கும் பூப்போல அவரது திருவடிகள் உள்ளன. கோடிழைத்துப் பார்ப்பேன்.

 

இந்தப் பாட்டில் இரண்டு முக்கியச் செய்திகள் உள.

அப்பூதி அடிகள் என்னும் பார்ப்பனர், திருநாவுக்கரசர் மீது பேரன்பு பூண்டவர். நாயன்மார்களில் ஒருவர். அவர் தினமும் ஹோமம் செய்வது எதற்காகத் தெரியுமா? தனக்காக அல்ல. கலியுகத்தினை அடக்கி ஒடுக்கி மெலியச் செய்வதற்காக. அவர் த லை  மீது ஈசன் எப்போதும் ஆசீர்வாதம் செய்து கொண்டே இருக்கிறான். ஆக ஒருவர் யாகம் செய்தால் கலியுகம் மாறும் என்ற செய்தியையும் அப்பூதி அடிகள் போன்றோர் செய்யும் யாகங்கள் சுயநலம் கருதி செய்யப்பட்டது அல்ல என்றும் அப்பர் அடித்துப் பேசுகிறார்.

 

நமக்கு வேண்டியது கோடியையே என்ற கடைசி சொல்லாகும். இது தமிழர்களின் விநோத சோதிடம். “காரியம் கைகூடுமா?” என்பதற்கும் பல பொருள்கள் உண்டு. இது பற்றி தமிழர்களின் கயிறு சோதிடம் என்ற கட்டுரையில் சொன்னேன்.

 

இப்போது கோடிழைத்தல் பற்றிப் பார்ப்போம்.

1.ஒரு பெண் தனது கணவன் அல்லது காதலன் விரைவில் தன்னிடம் வருவானா என்று பார்க்க இரண்டு கோடு இழைப்பாள் கண்ணை மூடிக்கொண்டு. இரண்டும் சேர்ந்தால் காரியம் கை கூடும் ஒரு வேளை இரண்டு கைகளால் கோடு போடுவர் போலும்!

  1. இதற்கு மற்றொரு விளக்கமும் உண்டு. ஒரு வட்டத்தை கண்களை மூடிக்கொண்டு வரைவர். அந்த வட்டம் இணைந்து வட்டமாக இருந்தால் அந்தக் காரியம் அல்லது நினைத்தது நிறைவேறும்; இதைச் சுழி இடுதல் என்றும் உரைப்பர்.

 

இதை அப்பரே பல பாடல்களில் சொல்கிறார்:—

பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்

கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு

கோடல் பூத்தளலர் கோழம்பத்துள்மகிழ்ந்

தாடுங் கூத்தனுக்கன்பு  பட்டாளன்றே 5-64-4

 

நீடு நெஞ்சுள் நினைந்து கண்ணீர் மல்கும்

ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்

மாட நீள்மரு கற்பெருமான்வரில்

கூடுநீ என்று கூடலிழைக்குமே -5-88-8

 

இரண்டு பாடல்களும் அப்பரின் ஐந்தாம் திருமுறையில் உள்ளவை

 

இரண்டு பாடல்களில் வரும் “கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு”, “கூடு நீ என்று கூடலிழைக்குமே” என்ற வரிகளின் பொருள் என்ன?

 

மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் (பாடல் 186) உளது

 

ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து

ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்து அகன்றார் வருக என்று

ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி நையாமல் ஐய

ஆழி திருத்தித் தாக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே

— திருக்கோவையார் 186

ஆழி= வட்டம், சுழி

 

“கூடல் இழைத்தல் என்பது தலைமகள், இம்மணற்குன்றின் கண் நீத்து அகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தரவல்லையோ எனக் கூடற்றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தா நிற்றல்- திருக்கோவையார் உரை-186

 

கூடல் இழைப்பது எப்படி?

பெரியதொரு வட்டமாகக் கோடு கீறி, அதன் உள்ளே சிறு சுழிகளை அளவிடாது சுழித்து, அவற்றை இரட்டைப்பட எண்ணி, ஒற்றைபடாதுளதோ என்று நோக்கல்; மிஞ்சாதேல் தலைவன் வருவான் என்பது மரபு.

 

அதாவது வட்டம், முழு வட்டமாக இருக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் குறைவட்டம், நிறை வட்டம் ஆகியவற்றை எண்ணி எது அதிகமாக இருக்கிறது என்று காண்டல்.

 

தலைவன் பிரிவாற்றாமையால் வருந்தும் காதலி அல்லது மனைவி இப்படிப் பார்ப்பது தமிழர் வழக்கம். இதை ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளையும் விளக்குவார்:– கூடலாவது வட்டமாகக் கோட்டைக்கீறி அதுக்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து, இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று சங்கேதம்”

 

இவ்வாறன்றிக் கண்ணை மூடிக்கொண்டு கீறிய கோடு, எழுவாய், இறுவாயிரண்டும் கூடியிருப்பின், வந்து கூடுவன், விலகின் வாரான் என்பதுமுண்டு.

பிற்காலத்தில் வந்த ‘கைலை பாதி காளத்திபாதி’, ‘நான்முகன் திருவந்தாதி’, ‘ஐந்திணை ஐம் பது’, சீவக சிந்தாமணி, ‘கலிங்கத்துப் பரணி’ முதலிய நூல்களில் இந்த வழக்கு குறிப்பிடப்படுகிறது.

 

இதுகாறும் படித்தவற்றில் இருந்து நாம் அறிவது யாதெனில், கூடல் இழைத்தல் சிற்சில மாறுபாடுகளுடன் வழங்கப்பட்டது.

 

மிகவும் சுலபமான வழி- கண்ணை மூடிக்கொண்டு பெரிய வட்டம் கீற வேண்டும்; இணைந்தால் காரியம் கைகூடும்

பெரிய வட்டத்துக்குள் பல சுழிகளைப் போடுதல் ; அவைகளில் நிறைவான வட்டங்கள் இரட்டைப் படை எண்ணில் வந்தால் காரியம் வெற்றி; காதலன் வருவான்.

 

மூன்றாவது முறை:- கண்களை மூடிக்கொண்டு இரு கோடுகளை இரண்டு கைகளாலும் வரைதல் அவை சேர்ந்தால், காரியம் நிறைவேறும்.

 

இது தவிர கோவில் முதலியவற்றில் துவஜஸ்தம்பம் அருகில் பெரிய தாமரை மலர் போன்ற வட்டப் பூ வரையப்பட்டிருக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைகளை வைப்பர். இதழ் போன்ற பகுதிகளில் நாம் வைக்கும் கைகள் நம்மை அறியாமலேயே நடுப்பகுதிக்கு, மொட்டு போன்ற பகுதிக்கு வந்து இணைந்தால் காரிய ம் கைகூடும்; இதை எனது நண்பர்கள் மதுரை மீனாட்சி கோவிலில் செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.

 

என் கருத்து:

இரண்டு கோடுகள் போடல், பெரிய வட்டம் ஒன்று மட்டும் வரைதல் ஆகியவற்றில் நம்மை அறியாமலேயே தவறு (மோசடி) செய்யமுடியும்; அதாவது பல முறை இப்படி வரைந்து பழகிவிட்டால் செய்ய முடியும். ஆனால் பெரிய வட்டத்துள் நிறைய சுழிகளைப் போட்டுவிட்டு வட்டத்துக்குள் உள்ள சுழிகளை மட்டும் கணக்கிட்டு, அதில் முழுச் சுழியாக இருப்பவை இரட்டைப் படை எண்ணில் இருந்தால் காதலன் வருவான் அல்லது நினைத்த காரியம் நிறைவேறும் என்பதே பொருத்தம்.

ஆய்வுக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்

1.நாலாம் திருமுறை- தருமபுர ஆதீனம்

2.நாலாம் திருமுறை- வர்த்தமானன் பதிப்பகம்

3.திருக்கோவையார்

 

More ASTROLOGY Articles in my blog

 

  1. ஜோதிடம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிடம்

Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது நூலை … go to tamilandvedas.com OR …

  1. வேதத்தில்ஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/வேதத்தில்…

Posts about வேதத்தில் ஜோதிடம் written by Tamil and Vedas

  1. நாடிஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/நாடி…

Posts about நாடி ஜோதிடம் written by Tamil and Vedas

 

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Swami’s …

swamiindology.blogspot.com/2013/02/tamil-astrology-rope…

Today’s article is about a Rope Trick. It is not a magic like the famous Indian Rope Trick by the magicians. Actually it is a thread trick. What they do is they use …

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Tamil and Vedas

tamilandvedas.com/2013/02/27/tamil-astrology…

Tamil Astrology: Rope Trick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to happen. They watch …

 

நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி | Tamil and Vedas

tamilandvedas.com/2012/12/20/நேபாள…

Tamil and Vedas A blog exploring themes in Tamil and vedic literature. நேபாள ஜோதிடர்–புது பத்ததியை …

 

ஜோதிட மேதைகள் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிட…

Posts about ஜோதிட மேதைகள் written by Tamil and Vedas

 

புத்திசாலி ஜோதிடர் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about புத்திசாலி ஜோதிடர் written by Tamil and Vedas

 

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post …

tamilandvedas.com/2016/08/05…

Written by london swaminathan Date: 5th August 2016 Post No. 3036 Time uploaded in London :– 7-52 AM ( Thanks for the Pictures) DON’T REBLOG IT AT LEAST FOR …

 

 

TAGS: கூடல் இழைத்தல், மணல் ஜோதிடம், தமிழர், அப்பர்

–SUBHAM–

 

குழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை! (Post No.4267)

Written by London Swaminathan

 

Date: 3 October 2017

 

Time uploaded in London-16-07

 

Post No. 4267

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

குழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை! (Post No.4267)

ஆண்டாள் பாடிய திருப்பாவை அதிகமானோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் பாடிய நாச்சியார் திருமொழி , தமிழ் வைஷ்ணவர்களிடம் பிரபலமான அளவுக்கு மற்றவர்களிடம் பிரபலமாகவில்லை. ஒவ்வொரு பாடலிலும் உள்ள பக்திச் சுவை ஒரு புறம் இருக்க, சொல்லழகும் இருக்கிறது. ஓரிரு பாடல்களைக் காண்போம்.

 

திருவரங்கத்து அழகன்மேல் காதல் கொண்ட ஆண்டாள், அவனைப் பலவகையில் வருணிக்கிறாள். குழல் அழகர், வாயழகர், கண்ணழகர், பூவழகர் என்று புகழ்ந்து தள்ளுகிறாள்.

 

எழிலுடைய அம்மனைமீர்!

என்னரங்கத் தின்னமுதர்;

குழல் அழகர் வாயழகர்;

கண்ணழகர்; கொப்பூழில்

எழுகமலப் பூவழகர்;

எம்மானார் என்னுடைய

கழல்வளையைத் தாமும்

கழல்வளையே ஆக்கினரே!

—ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி

 

பொருள்:-

அழகை உடைய அன்னையீர்! எனக்குரிய திருவரங்கத்தே வீற்றிருக்கும் அரங்கநாதர் இனிமை நல்கும் அமுதம் ஒத்த உருவத்தை உடைய அழகர்; அவர் சுருட்டி முடித்த கூந்தலை உடைய அழகர்; புன்சிரிப்பைக் காட்டும் சிவந்த திருவாயை உடைய அழகர். காண்பாரை ஈர்க்கும் கண்ணழகர்; புதிதாக மலர்ந்தெழும் தாமரை மலரின் மென்மையையும்  அழகையும் பெற்ற உந்திச் சுழிகொண்ட திருவயிற்றைப் பெற்ற அழகர்; என்னை ஆட்கொண்ட அழகுருப் பெற்றவராகிய அத் தலைவர் காதல் பித்தேற்றி என்னை மெலிவித்தார். என்னுடைய கழற்றவும் பின் சேர்க்கவும் இயல்புடைய கை வளைகளை கையைவிட்டே கழன்றோடும்படி செய்து விட்டனரே! பார்த்தீர்களா? என்கிறாள்.

இன்னொரு பாசுரத்தில் கொள்ளைக் கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனனை என்று வருணிப்பாள்

 

அதாவது, மென்மையான பெண் உள்ளத்தை அழகால் மயக்கிக் கொள்ளை கொள்ளும் குறும்புச் செயல்புரிபவனும் — என்பதாகும்.

 

இதை திருஞான சம்பந்தரின் தேவாரத்தின் முதல் பாடல் வரிகளுடன் ஒப்பிட்டு மகிழலாம்:

உள்ளம் கவர்கள்வன் என்று உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனான சிவ பெருமானை வருணிக்கிறார்.

 

யஜூர்    வேதத்தில் உள்ள ருத்ரத்திலும் தஸ்கரானாம் பதி= திருடர் தலைவன், அதாவது உள்ளத்தைக் கொள்ளை  கொள்ளும் கள்வர் தலைவனாக சிவனை வருணிக்கிறார்கள் வேத கால ரிஷிகள்.

 

ஆண்டாளையும், சம்பந்தரையும் வேத கால ரிஷிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒரு தனி ஆனந்தம் கிடைக்கும்.

–SUBHAM–

ஹிந்து காந்திஜி! (Post No.4263)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 4-58 am

 

Post No. 4263

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

ஹிந்து காந்திஜி!

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி.

அண்ணல் அவதரித்த திருநாள்.

அவரைக் கொண்டாடும் விதமாக எழுத முற்படும் போது வந்த தலைப்பு தான் ஹிந்து காந்திஜி!

இந்தத் தலைப்பையே செகுலரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள்.

மாறாக கிறிஸ்துவ காந்திஜி என்றோ அல்லது இஸ்லாமிய காந்திஜி என்றோ தலைப்புக் கொடுத்திருந்தால் இமயமலை ரேஞ்சுக்கு என்னைப் பாராட்டுவார்கள்.

காந்திஜியின் வழியில் நடக்க விரும்புவதால் பாராட்டுக்கு பக்குவப்படாமல் உண்மையை எழுதத் துணிவேன்.

அதற்கு உகந்த தலைப்பு இது தான். ஹிந்து காந்திஜி!

 

2

சபர்மதி சிறையில் காந்திஜி இருந்த சமயம்.

ஒரு நாள் தி மான்செஸ்டர் கார்டியன் (The Manchester Guarding)  என்ற பத்திரிகையிலிருந்து அதன் பிரதிநிதி ஒருவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னால் காந்திஜியைப் பேட்டி காண வந்தார்.

அந்தப் பேட்டியை மதராஸிலிருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையான தி ஹிந்து 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டது.

ஒத்துழையாமை இயக்கம் என்பது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரணானது என்று பத்திரிகையாளர் காந்திஜியிடம் கூறினார். அதற்கு காந்திஜி, “ நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; ஆகவே கிறிஸ்தவ கொள்கைகளுக்கு ஏற்றபடி எனது செயல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினார்

3

தன்னை இந்தியாவின் நீண்ட கால நண்பர் என்று கூறிக் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி, “ஹிந்து சமயத்தைப் பற்றி உங்களுடைய விளக்கத்தை நீங்கள் கொடுத்து ஹிந்து சமயத்தையும் ஏசுநாதரின் உப்தேசங்களையும் ஒப்பிட்டுக் கூறுவீர்களா?” என்று வேண்டிக் கொண்டார்.

 

20-̀10-1927 யங் இந்தியா இதழில் அவரது கடிதத்தையும் தன் பதிலையும் காந்திஜி வெளியிட்டார்.

விரிவான அந்த பதில் ஹிந்துவாக தான் இருப்பதற்கான காரணம் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புத பதிலாக அமைந்தது.

 

ஆனால் இன்றைய செகுலரிஸ்டுகள் காந்திஜியைத் தங்களின் கபடப் போர்வைக்குள் சுருட்டப் பார்ப்பதால் அதையெல்லாம் பற்றிப் பேசுவதில்லை;; வெளியிடுவதில்லை.

அவரது பதிலின் ஒரு பகுதி:

 

“பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நான் ஓர் ஹிந்து குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன்.

 

எனக்குத் தெரிந்த எல்லா சமயங்களுக்குள்ளும் ஹிநது சமயம் ஒன்று தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

 

அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அதில் தான் அஹிம்சை நடைமுறையிலும் அனுசரிக்கப்படுகிறது. (ஜைன மதம் அல்லது புத்த மதத்தை ஹிந்து சமயத்திலிருந்து வேறானதாக நான் கருதவில்லை)

 

ஹிந்து சமயம் பசுவை வழிபடுவது, ஜீவ காருண்ய மலர்ச்சிக்கே அடிப்படையாகும். எல்லா உயிர்களும் ஒன்று என்பதையும், எனவே எல்லா உயிர்களும் புனிதமானவை என்பதையும் அது செயலில் காட்டுவதாக இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் நேரடியான பலனே, மறு ஜன்மத்தில் உள்ள மகத்தான நம்பிக்கையாகும்.

 

மேலும் சத்தியத்தை இடைவிடாது தேடியதன் அற்புதமான பலனாகவே, வர்ணாசிரம தருமம் கிடைத்தது.

ஹிந்து சமயத்தில் நான் இருந்து வருவதற்கான காரணமான சிறந்த அம்சங்கள் என்று எனக்குத் தோன்றியதையே இங்கே மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 

4

1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி  போலந்திலிருந்து தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி காந்திஜியை வந்து சந்தித்தார்.

அனைவரும் படிக்க வேண்டிய பேட்டி இது.

முழுவதையும் தர இடம் இல்லை என்பதால் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு காணலாம்:

 

Krzenski : Catholicism is the only true religion

Gandhiji : Do you therefore say that other religions are untrue?

Krzenski : If others are convinced that their religions are true they are saved.

Gandhiji : Therefore you will say that everyone would be saved even through untruth.

Krzenski: But I have studied all religions and have found that mine is the only true religion.

 

Gandhiji : But so have others studied other religions. What about them?

Krzenski : I have examined the arguments in favour of other religions.

Gandhiji : But it is an intellectual examination. You require different scales to weigh spiritual truth…. My submission is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

Professeor switched to a next question.

 

Gandhiji : It is no use trying to fight these forces without giving up the idea of conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth.

 

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம்

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து  செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.

அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

 

5

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.

 

“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.

 

6

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.

 

ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.

 

காந்திஜி அனைவரும் வாழ வேண்டுமென்று விரும்பினார்; அந்த நல்லெண்ண வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

இன்றைய போலி செகுலரிஸ்டுகளும், மதவாதிகளும் அவரை மறக்கடிக்கவே முயல்வர்.

 

அதைத் தோற்கடிக்க ஹிந்து காந்திஜியைப் போற்றுவோம். உண்மையான ஹிந்துவாகவே என்றும் இருப்போம்.

ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவோம்.

***

 

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை! (Post No.4261)

Written by London Swaminathan

 

 

Date: 1 October 2017

 

Time uploaded in London- 1-08 pm

 

Post No. 4261

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்:

 

யம தர்ம ராஜன் பூமிக்கு வந்தார். அழகான ஒரு பிராமணப் பெண்ணைக் கண்டார்; காதல் கொண்டார்; அவள் பெயர் விஜயா.

 

ஓ பேரழகியே, உன் மீது காதல் கொண்டேன்; என்னைத் திருமணம் செய்து கொள்;  யம லோகம் போகலாம். இனிதே வாழலாம் என்றான்– யமதர்ம ராஜன்.

அடச் சீ, தள்ளி நில்; உன் மூஞ்சியும் முகரையும் பார்க்கச் சகிக்கவில்லை; வாஹனமோ உன்னை விடக் கருத்த எருமை- என்றாள் விஜயா.

யமதர்ம ராஜனோ விடவில்லை.

பெண்ணே! என் வீரப் பிரதாபங்களைக் கேள்; யுதிஷ்டிரன் எனப்படும் தர்மனுக்கு அடுத்தபடியாக, சொல்லப்போனால் அதற்கும் முன்னதாகவே , என் ஒருவனுக்குத்தான் தர்மராஜன் என்று பெயர்; அவரவர் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அளிப்பது என் கடமை; ‘ஆளைக் கண்டு ஏமாறாதே ஊது காமாலை’ என்ற பழமொழியை அறியாயோ? பேதையே1 பெண் மானே1 இளங்கிளியே; கருங்குயிலே; என் குணத்தைப் பார் –என்றான் யமன்.

அவளும் குணத்தில் மயங்கினாள்; கல்யாணத்துக்கு இணங்கினாள்.

 

இருவரும் யமலோகத்துக்கு ‘ஹனிமூன்’ போனார்கள்; இல்லற வாழ்வு இனிதே விளங்கியது.

 

பெண்ணே; ஒரே ஒரு கண்டிஷன்/ நிபந்தனை; இந்த ராஜ்யத்தில் தெற்கு திசைப் பக்கம் போய்விடாதே; எல்லாம் உன் நன்மைக்குதான் சொல்லி வைத்தேன்– என்றான் யமதர்மன்.

 

சந்தேகப் பேர்வழிகள்!

பெண்புத்தி வேறு வகையில் செல்லும்; ஆண்கள் ஒரு கணக்குப் போட்டால் அவர்கள் வேறு ஒரு கணக்குப் போடுவர்; சந்தேகப் பேர்வழிகள்; வீட்டிற்குத் தாமதமாக வந்தால் வேறு ஒரு பெண் பின்னனியில் இருக்கிறாளோ? என்பர். தும்மல் போட்டால் இப்போது உம்மை யார் நினைத்தாள்? யார் அந்தப் பழைய காதலி? (காண்க திருக்குறள்) என்பர். உன்னை நான் இப்போது மறப்பேனா? என்று அவன் சொன்னால் ஏன் ‘எப்போதும்’ என்று சொல்லவில்லை என்று ஊடல் கொள்ளுவர் (காண்க காமத்துப்பால்-திருக்குறள்)

 

 

சம்சயாத்மா விநஸ்யதி= சந்தேகப் பேர்வழி அழிவான்– என்று கண்ணபிரான் பகவத் கீதையில் சொன்னதையும் உதறிவிட்டு தென் திசைக்குப் பயணமானாள் இளஞ் சிட்டு விஜயா- யமனின் புது மனைவி!

 

கோரமான காட்சி; ஐயோ அம்மா

என்று சத்தம்; அடி உதை, எத்து, குத்து, வெட்டு, தட்டு என்று யமகிங்கரர் முழக்கம். பாபாத்மாக்கள் தண்ணீர் தண்ணீர் என்று கதறல்; ஏண்டா வந்தோம் என்று ஆகிவிட்டது விஜயாவுக்கு; சரி திரும்பிப் போகலாம் என்று நினைத்த போது “மகளே! பார்த்த ஞாபகம் இல்லையா? நாந்தான் ம(க்)களைப் பெற்ற மகராசி!” என்று கூச்சல் போட்டாள் விஜயாவின் அம்மா!.

 

அன்றிரவு விஜயாவின் கதவைத் தட்டினான்; எமன்; ஒரு ‘பிராமிஸ்’ (Promise)  கொடுத்தால்தான் இன்றிரவு உமக்கு அனுமதி என்றாள் விஜயா.

அன்பே, ஆருயிரே! உனக்கு இல்லை என்று சொல்வேனா? என்றான் யமன். கதவும் திறந்தது.

 

மெதுவாக அவிழ்த்துவிட்டாள்! அம்மாவின் கதையை!

என் அம்மாவை சித்திரவதை நடை பெறும் தென் திசையிலிருந்து விடுவித்தால் என்னைத் தொடலாம்; படலாம் என்றாள்.

 

அடக் கடவுளே; தென் திசை செல்லக்கூடாது என்று சொன்னேனே! இந்து மதத்தில் ஒரு விதி உள்ளது அதுதான் வேதத்தில் முதல் மந்திரம்; சத்யம் வத= உண்மையே பேசு; உபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது சத்யமேவ ஜயதே நான்ருதம்= ‘’வாய்மையே வெல்லும் – பொய் அல்ல’’ என்று.– அதுதானே இந்திய அரசின் , நீ வாழ்ந்த தமிழ்நாட்டின் அரசியல் சின்னம்; நானே கூட உண்மையை மீற முடியாது; உன் அம்மா செய்த பாவங்களுக்கு அவள் நரகத்தில் அனுபவிக்கிறாள். அதற்கு நான் என்ன செய்வேன்? கடவுளேகூட சாபமோ, வரமோ கொடுத்துவிட்டால் அதை அனுச ரித்தே ஆக வேண்டும்– நான் ‘தீர்க சுமங்கலி பவ:’ என்று சொல்லி சாவித்ரியிடம் சிக்கிய கதைதான் உலகப் பிரசித்தமே என்றான் யமன்

அவளோ கெஞ்சினாள்; மன்றாடினாள்; சரி இந்து மதத்தில் எல்லாப் பாவங்களுக்கும் விமோசனம் உண்டு; எல்லா சாபங்களுக்கும் ஒரு குறுக்கு வழியும் உண்டு. அதன்படி கொஞ்சம் தப்பிக்கலாம். உங்கள் அம்மாவின் பாவம் போவதற்குச் சமமான புண்ணிய கருமங்களை – யாக யக்ஞங்களை பூலோகத்தில் ஒருவர் செய்து கணக்குக் காட்ட வேண்டும்– எனது அக்கவுண்டண்டு (Accountant) சித்திர குப்தன் லாப-நஷ்டக் கணக்கில் மன்னன். அவன் ஓகே சொன்னால் உன் அம்மா    பிழைப்பாள் என்றான் யமன்

 

அவளும் பூலோகத்தில் உள்ள எல்லாப் பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்தாள்; மாற்று “கிட்னி” (Kidney) கேட்டு அல்ல; புண்ய கருமங்களைச் செய்ய ஒரு பெண் தேவை என்று. மிகவும் சிரமப்பட்டு ஒரு பெண் கிடைத்தாள்

யாக  யஞங்களை முறையே செய்து, சித்திரகுப்தன் கணக்குகளைச் சரி பார்த்து யம தர்மனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுக்கவே விஜயாவின் அம்மா விடுதலை ஆனாள்

விஜயாவுக்கும் சந்தோஷம்; இல்லறம் இனிதே நடந்தது!

 

கதையில் சுவை கூட்ட கொஞ்சம் சொற்களை மட்டும் கூட்டினேன்; ஆனால் கருத்துப் பிழை எதுவுமிலை.

 

இந்தக் கதை நமக்கு தெரிவிப்பது என்ன?

1.தென் திசை பற்றி  திருக்குறளும் சங்கத் தமிழ் (புறநானூறு) பாடல்களும் சொன்னது வேதத்தில் உள்ள இந்து மதக் கருத்தே; ஆகையால் தமிழ் பண்பாடு, வடக்கத்திய பண்பாடு என்று எதுவுமிலை.

 

2.ஆரியர்கள், ஐரோப்பாவில் இருந்து வந்தனர்- மத்திய ஆசியாவில் இருந்து,  ஸ்டெப்பி புல் வெளியிலிருந்து வந்தனர் என்று உளறிக்கொட்டி கிளறி மூடும் மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தக் கதை. ஏனெனில் தென் திசை யமன் திசை என்பது இந்து மதக் கருத்து- தமிழர் கருத்து- திருவள்ளுவர் கருத்து– இது உலகில் வேறு எங்கும் இல்லை. ஆக இந்துக்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று.

 

3.இன்னும் ஒரு கருத்து; கடவுளே ஆனாலும் உண்மை என்னும் விதி முறையை- நியாயம், நீதி, நேர்மை என்ற விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும் சொந்தக்காரர்கள், வேண்டியவர்களுக்குச் சலுகை இல்லை; ஆனால் பாப விமோசனம் பெற வழிகள் உண்டு.

 

 

4.வில்லியம் ஜோன்ஸும் மாக்ஸ்முல்லரும் கால்டுவெல்லூம் காட்டிய ஓரிரு ஒற்றுமைகளைவிட நமக்கும் ஐரோப்பியர்களுக்கும் வேற்றுமைகளே அதிகம். நம்முடைய கலாசாரத்தில் கொஞ்சம் மிச்சம் மீதி அவர்களுக்கு நினைவிருக்கிறது ஏனெனில் உலகம் முழுதும் இந்து மத சம்பிரதாயங்கள் இருந்ததன் மிச்சம் சொச்சம்தான் இவை என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) உரைகளில் மொழிந்துள்ளார்.

எகிப்து முதலிய கலாசாரங்களில் மேற்கு திசைதான் மரணதேவன் திசை!

 

5.யமனும் கூட நல்லவன்; நீதி நெறிப்படி– சட்டப் புத்தகப் படி- தண்டிப்பவனே. ஆனால் நசிகேதன், மார்கண்டேயன், சாவித்திரி போன்றவர்களிடம் ‘ஜகா’ வாங்கினார். காரணம்? ஒரு சொல் சொல்லிவிட்டால் அதை மாற்ற முடியாது; இறை அருள் இருந்தால்

பாரதி போல  “காலா என் காலருகே வாடா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்/ என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” எனலாம்.

 

வாழ்க புராணக் கதைகள்! வளர்க

அவை உணர்த்தும் நீதி நெறிகள்!!

 

–SUBHAM—

 

TAGS:

யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம்