சேலைக்கும் மாலைக்கும் எத்தனை பெயர்கள்? (Post No.4066)

Written by London Swaminathan

Date: 9 July 2017

Time uploaded in London- 16-55

Post No. 4066

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நான் பள்ளிக்கூடம் சென்ற நாட்களில் (55 ஆண்டுகளுக்கு முன்னர்) மாலை வேளை இலவச சம்ஸ்கிருத வகுப்புக்குப் படிக்க்ச் சென்றபோது முதல் வகுப்பிலேயே எங்களுக்கு அமரகோஷம் என்னும் நிகண்டை மனப்பாடம் செய்ய வைத்தனர். அதை உலகின் முதல் திஸாரஸ் THESARUS (ஒரு பொருட் குறித்த பல சொற்கள் )என்று சொல்லலாம்.

இது போல சங்கரமடம் போன்றவற்றிலும் எல்லோருக்கும் சொல்லித் தருவர் என்று கேள்வி. உலகில் இப்பேற்பட்ட கல்வி முறை எங்கும் கிடையாது. முதலில் மனப்பாடம் செய்ய வைத்துவிட்டு, வயதானவுடன் தானாகப் புரிந்துகொள்ளச் செய்வர். பெரிய வேதங்களையே இப்படி மனப்பாடம் செய்ய வைக்கும் போது நிகண்டுகள் எம்மாத்திரம்!

“ஸார்! புத்தகம் இருந்தால் இன்னும் எளிதாக இருக்கும் என்று நாங்கள் அங்கலாய்ப்போம்; போதும், போதும்! நான் சொல்லுவதைத் திருப்பிச் சொல், அது போதும்!” என்பார் எங்கள் ஆசிரியர் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் (இது மதுரை மேலச் சித்திரை வீதியில் ஒரு ஆடிட்டர் வீட்டின் வறாண்டாவில் நடந்த சம்ஸ்கிருத வகுப்பு)

தமிழிலும் பல நிகண்டுகள் உள்ளன. ஆனால் இதை மனப்பாடம் செய்ய (வாய்வழியாக by the word of mouth) வழி செய்தனரா என்பது எனக்குத் தெரியாது.

இதோ சேலைக்கும் மாலைக்கும் ஒரு நிகண்டில் எத்தனை பெயர்கள் பாருங்கள்!

மடிதுகில் கோசிகங் காழகஞ் சேலை
புடைவை கலிகந் தானை தூசு – படமாடை
புட்ட மறுவை புனை சாடி யம்பரம்
பட்டுடை கூறை படாம்

மடி, துகில், கோசிகம், காழகம், சேலை, புடைவை, தானை, கலிங்கம், தூசு, படம், ஆடை, பட்டு, புனை, அறுவை, சாடி, அம்பரம், புட்டம், கூறை, படாம், உடை

 

மாலை
தொங்கல் பிணைய றொடைவண்டு சூழணிய
லங்கண்ணி செந்தேன் மலியலங்கல்- பைங்கோதை தேமனொலிய றெறிய லிலம்பகம் பூந்
தாம மொளிர் மாலை தார்

பொருள்:-

தொங்கல், பிணையல், தொடை, அணியல், கண்ணி, அலங்கல், கோதை, ஒலியல், தெரியல், இலம்பகம், தாமம், தார், மாலை.

கண்ணி, கோதை, அலங்கல், தாமம், தார் என்பன அதிகம் புழங்கும் சொற்கள். மதுரையில் பூக்காரிகள் முதற்கொண்டு கண்ணி என்ற சொல்லைப் பயன்படுத்துவர்.

 

எச்சரிக்கை
தமிழ் அகராதி, தமிழ் நிகண்டு என்றெலாம் பெயரிட்ட புத்தகங்களை எடுத்தால் அதில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் இருக்கும். அந்தக் காலத்தில் இந்த இரண்டு மொழிகளையும் இரு கண் போலப் பாவித்ததால் அவர்கள் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்த அஞ்சவில்லை. இன்றும் எந்த இந்தியனும் ஐந்து நிமிடம் கூட சம்ஸ்கிருதக் கலப்பில்லமல் பேச முடியாது. திருகுறளில் சம்ஸ்கிருதச் சொல் இல்லாத அதிகாரம் கிடையாது!

ஒரு மொழியில் கலர்களுக்கு (வர்ணம்) எத்தனை சொற்கள் உண்டு என்பதை வைத்து அந்த மொழியின் வளத்தைக் கணக்கிடும் முறையும் உண்டு.சில மலைஜாதியினர் மொழிகளில் வெள்ளை அல்லது கருப்பு என்ற இரண்டு சொற்களே உண்டு. மற்ற கலர்களை அவர்கள் பழம், பூ இவைகளைச் சொல்லித்தான் குறிப்பிட வேண்டும். பெயிண்ட் கடைக்கு (Paint Shop) போனால் ஒரு புத்தகம் கொடுப்பர். அதில் எத்தனை வகையான வர்ண பெயிண்ட் கிடைக்கும் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். இவ்வளவு பெயர்களில் வர்ணங்கள் இருக்கிறதா என்று வியப்போம். ஆனால் ஆங்கிலம் என்பது கலப்பட மொழி; தூய மொழி அல்ல. எல்லா மொழிகளிலிருந்தும் கூசாமல் கடன் வாங்கி வளர்த்த மொழி.
இதோ வெள்ளைப் பாட்டு
வெள்ளை என்பதற்கு எத்தனை சொற்கள் என்று பாருங்கள்

இவற்றில் ஆடை, உடை, சேலை புடைவை முதலியவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம்.அறுவை, காழகம், கலிங்கம் என்பன பழந்தமிழ் நூல்களில் வருகின்றன. கூறை என்பதை பிராமணர் வீட்டுக் கல்யாணங்களில் இன்றும் பயன்படுத்துகின்றனர். அம்பரம் என்பதை திகம்பரர் (வானமே ஆடை), ஸ்வேதாம்பரர் (வெள்ளை உடையினர்) என்ற சமணப் பிரிவுகளில் காண்கிறோம். ஆக நிகண்டை மனப்பாடம் செய்தால் செய்யுட்கள் எளிதில் புரியும். அம்பரம் திருப்பாவையிலும் வரும்.

 

பாண்டுரங் கௌரஞ் சிதஞ்சுவே தந்தவளம்
பாண்டரம் பால் வாலருச்சனம் – பாண்டு
சுசியவதாதஞ் சுதை சுப்பிரமே
விசதம் விளர்க்கம் வெளுப்பு

பொருள்
பாண்டுரம், கௌரம், சிதம், சுவேதம், தவளம், பாண்டரம், பால், வால், அருச்சசுனம், பாண்டு, சுசி, அவதாதம், சுதை, சுப்பிரம், விசதம், விளர் கம், வெளுப்பு (வெள்ளை)

இவைகளில் பாண்டு (ரோகம்) வால், பால், தவளம், கௌரம் என்பன அதிகம் புழங்கும் சொற்கள்.
ஸ்வேத என்ற சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான ‘ஸ்’வைட் (WHITE) வந்தது!

வளமான தமிழ் மொழியை வளர்க்க நிகண்டுகளைக் காப்போம், படிப்போம்.

தமிழ் வாழ்க! வளர்க!!

–SUBHAM—

 

உ.வே.சா.வுக்கு புரியாத பாண்டவ பாஷை! (Post No.4056)

Written by London Swaminathan
Date: 6 July 2017
Time uploaded in London- 6-10 am
Post No. 4056

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சங்கீத மேதை மஹா வைத்யநாதையர் பற்றி தமிழ் தாத்தா உ.வே.சாமிநதையர் எழுதிய புத்தகத்தில் ஒரு அரிய விஷயத்தைச் சொல்லுகிறார். ஆனால் இது பற்றி அதிகம் பிரஸ்தாபிக்காமல் ஒரே ‘பாரா’வில் விஷயத்தை முடித்துவிட்டு ஓடி விடுகிறார்.

பாண்டவ பாஷை!

 

இப்படி உண்மையிலேயே ஒரு பாஷை இருந்ததா? அல்லது மதுரை வணிகர்கள், அல்லது நாம் சிறு பிள்ளைகளுக்குப் புரியக் கூடாதென்பதற்காக உபயோகப் படுத்தும் ஒரு மொழி (உத்தி) யா என்று விளங்கவில்லை.

முதலில் உ.வே.சா. சொல்லுவதைப் படியுங்கள்:-

 

“சகோதரர்களோடு பேசுங்காலத்தில் ஏதோ ஒரு பாஷையில் அவர் (மகா வைத்யநாதையர்) பேசுவார்; அஃது இன்ன பாஷையென்று யாருக்கும் விளங்காது. ஒரு முறை நான் என்ன பாஷையென்று கேட்டேன்; அவர் இதனைப் பாண்டவ பாஷையென்று சொல்வதுண்டு. விராட நகரத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தமக்குள் வழங்கி வந்ததைப் போன்றதென்று கேள்வி” என்றார்.

 

மதுரையில் வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பேரம் பேசுகையில், தமக்குள் சில சங்கேத சொற்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ‘இந்த ஆளுக்கு விலையை  இவ்வளவு குறைக்கலாம் அல்லது கூட்டு என்றோ, வந்த வாடிக்கையாளர் ஒரு சாவுக் கிராக்கி; நேரத்தை வீணடிக்காதே; ஆளை புறக்கனி என்றோ சங்கேத மொழியில் பேசிக் கொள்வார்கள்.

 

இதே போல நாம் வீட்டில் சிறு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாதென்பதற்காக “ நான் சாக்லெட்டை அங்கே வைத்திருக்கிறேன்” என்று சொல்லாமல் ‘அசா அல் அலெ அட் அங்கே இருக்கிறது’ என்று சொல்லுவோம். சிலர் ‘அ’ என்பதற்குப் பதிலாக ‘க’  என்பதைப் பயன்படுத்துவர் ‘கசா கக் கலெ கட்’ என்பர். ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி சில உத்திகள் இருக்கும்.

 

இது பற்றி உவே.சா. வேறு எங்கும் சொல்லி இருக்கிறாரா என்று தெரியவில்லை. இப்படி உண்மையிலேயே வேறு ஒரு பாஷையைப் பாண்டவர்கள் விராட தேசத்தில் பேசினார்களா என்றும் தெரியவில்லை.

 

என்னுடைய சம்சயம் (ஐயப்பாடு)!

இப்படி பாண்டவ பாஷை என்று ஒன்று இருந்ததா? அல்லது மஹா வைத்திய நாத அய்யர் கிண்டலாக இப்படிக் பகன்றாரா? என்பதே.

 

வாசகர்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எழுதுங்கள்.

-சுபம்-

 

திருக்குறளில் பசு, ‘கோ மாதா’ (Post No.4054)

Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 17-44
Post No. 4054
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இமயம் முதல் குமரி வரை பண்பாடு ஒன்றே. பசுவுக்கும் பிராமணனுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இலக்கிய வழக்கு. வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் (திருஞான சம்பந்தர் தேவாரம்) என்பர்.  இதையே சம்ஸ்கிருதத்தில் “கோப்ரஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம், லோகாஸ் சமஸ்தோ சுகினோ ப வந்து” என்பர். அதாவது பிராமணன் முதலான எல்லாரும் பசு முதலான எல்லா ஜீவன்களும் சுபமாக இருக்கட்டும் உலகம் முழுதும் சுபமாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்.

 

ஏன் பசுவையும் பிராமணனையும் மட்டும் சொல்ல வேண்டும்? சுயநலம் இல்லாமல் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிப்பதாலும் பாலும் வேதமும் எல்லோருக்கும் பயன்படுவதாலும் அவர்களை முதலில் வைத்து மற்றவர்களையும் வாழ்த்தினர்.

 

ஒரு வட்டத்தில் முதல் புள்ளி முடிவான புள்ளி, துவங்கும் இடம், முடியும் இடம் என்று எதுவும் கிடையாது. ஆனால் நாமாக ஒரு கோடு போட்டு இது துவங்கும் இடம், இது முடியும் இடம் என்போம்; ஓட்டப் பந்தயம் நடக்கும் வட்டமான மைதானங்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அது போலவே சமுதாயத்தில் எல்லோரும் ஒரு உடலின் அங்கம் என்று ரிக்வேதம் (புருஷ சூக்தம்) சொல்கிறது. எல்லோரும் சமம் ஆயினும் ஒரு துவக்கம் இருக்க வேண்டும்.

 

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மலை போற்றும் திருக்குறளில் பசுவையும் பிராமணனையும் வள்ளுவரும் முதலிடத்தில் வைக்கிறார்.

 

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (குறள் 560)

 

ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் நியாயமான ஆட்சி நடத்தாவிடில் ஆறு தொழில்களைக் கொண்ட அந்தணர்கள் வேதங்களை மறந்து விடுவர்; பசுக்களும் பால் தராது. இந்தக் கருத்தும் “பசு-பிராமணன்” என்ற ஜோடியும் இமயம் முதல் குமரி வரை எல்லா மொழி நூல்களிலும்,

குறைந்தது  மூவாயிரம் ஆண்டுகளாக, உள்ளது.

 

புற நானூற்றில் நெட்டிமையார் (புறநானூறு பாடல் 9)

பாடிய பாடலில்— பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டும் பாடலில்—- ஆவும் ஆன் இயற் பர்ப்பன மாக்களும் என்ற வரிகள் வருகிறது.

 

கண்ணகிக் பிராமணர்களையும் பெண்களையும் எரிக்காமல் தீயோரை மட்டும் எரி என்று மதுரையில் அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டது போல பாண்டிய அரசனும் பிராமணர்களும் பசுக்களும் பெண்களும்,நோயாளிகளும் என்று சொல்லிவிட்டுப் போர் தொடுப்பானாம் என்கிறார். அது தர்ம யுத்தம் நடந்த காலம்.

 

இவ்வாறு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பிராம- பசு ஜோடி  வருகி றது

 

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளி வந்தது இல் (குறள் 1066)

 

பசுவைக் காப்பது புனிதமானது. ஆயினும் ஒருவன் பசுவுக்காக தண்ணீர் கொடுங்கள் என்று தர்ம நியாயப்படி தண்ணீர் கேட்டாலும் பிச்சை, பிச்சைதான்; அது போல பிச்சை எடுப்பதைப் போல  நாவுக்கு இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை.

 

பசு மாட்டை ஏன் வள்ளுவர் உதாரணமாக வைத்தார். பசுக்களைப் பூஜித்து காப்பாற்றுவது இந்துக்களின் கடமை. அதற்காக தண்ணீர் வேண்டும் என்று கேட்பது தர்மமே. ஆனாலும் அதை பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டால், அதுவும் ஒருவனுக்கு இழிவான செயலே.

 

 

தமிழ் நாட்டில் கோவில் வாசல்களில் பசுமாடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதன் அருகிலேயே அகத்திக் கீரையை விலைக்கு விற்கும் பெண்களும் நிற்பர். பக்தர்களில் பலர் காசு கொடுத்து அகத்திக் கீரையை வாங்கி பசுமாட்டுக்குப் போடுவர். இது ஒரு பெரிய தருமம்; எளிதில் புண்ணியம் சேர்க்கும் வழி.

 

இதைத் திருமூலரும் செப்புவார்:

 

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே

பொருள்:-

 

எல்லோரும் எளிதில் செய்யக் கூடிய வைகளைத் திருமூலர் சொல்லிக் கொடுக்கிறரர். இதை யாரும் செய்யலாம்; எப்போதும் செய்யலாம்; செலவின்றிச் செய்யலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்வதைப் புறநானூற்றில் புலவர் கபிலர் அப்படியே சொன்னார்; “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” (பச்சிலை, பூ, பழம், தண்ணீர்) ஆகிய எதனாலும் என்னைப் பூஜிக்கலாம். இதைப் புறநானூற்றில் (106) புல், இலை, எருக்கம் ஆயினும் — கடவுள் ஏற்பார் என்று கபிலர் சொன்னார்.

 

திருமூலரும் கடவுளுக்கு ஒரு வில்வ இலையையோ, அருகம் புல்லையோ, துளசி இலையையோ கொடுத்தால் போதும் என்பார். அது போல பசு மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல் அல்லது அகத்திக் கீரை கொடுத்தால் போதும்.  நாம் சாப்பிடும் முன்னால் ஒரு கைப் பிடி அரிசியை ஏழைகளுக்கு, அனாதை ஆச்ரமங்களுக்கு என்று ஒரு பானையில் எடுத்து வைக்க வேண்டும். இதை

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) பிடி அரிசித் திட்டம் என்று துவக்கி வைத்தார். இதை எல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட தன் இன்மொழியால் மற்றவர்களுக்கு நல்லதை உரைத்து அவர்களைக் கடைத்தேற்றும் புண்ணியத்தைச் செய்யலாம்.

ஆக, யார் பசுவைப் பற்றிப் பேச வந்தாலும் அத்தோடு பத்து நல்ல செயல்களும் கூடவே வரும்!

 

–Subahm–

 

 

 

டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகள் (Post No.4052)

Written by S NAGARAJAN

 

Date: 5 July 2017

 

Time uploaded in London:-  4-37 am

 

 

Post No.4052

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தெயவ தேசம்

 

க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

 

ச.நாகராஜன்

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து குடும்பத்தினர் அனைவரும் விமானம், ரெயில், கார் ஆகியவற்றின் மூலம் நீண்ட ஒரு நெடும் பயணம் மேற்கொண்டோம்.

 

நியூயார்க், நியூஜெர்ஸி, அரிஜோனா, வாஷிங்டன் என்று கலக்கலான ஒரு பயணம்

 

அதில் க்ராண்ட் கான்யானும் ஒன்று. எது எப்படியோ போகட்டும், ஐஸ்வர்யா ராய் க்ராண்ட் கான்யான் பாறையில் ஆடியதை நினைவு கூர்ந்து அந்தப் பாறையைப் பார்த்து ஜென்ம சாபல்யம் பெற்றனர் குடும்பத்தினர்.

 

வியூ பாயிண்ட் என்று ஆங்காங்கே காட்சிகளைப் பார்ப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து போர்டு மாட்டி வைப்பது அமெரிக்காவில் ஒரு நல்ல பழக்கம்.

 

ஒரு வியூ பாயிண்டில் க்ராண்ட் கான்யான் தரிசனத்தை முடித்துக் கொண்டோம். ஏராளமான போட்டோக்கள் எடுக்கப்பட்டன. மகன், மருமகள், மனைவி என்று ஆளுக்கொரு கேமரா. ஒரு மொபைல் போன். அமெரிக்காவில் வாங்கிய விலை மதிப்புள்ள ஒரு அதி நவீன வீடியோ கேமரா.

இவை அனைத்திலும் போட்டோக்கள்- போட்டோக்கள்- போட்டோக்கள்.

 

வியூ பாயிண்டில் ஏராளமான கூட்டம். ஆளாளுக்கு போட்டோ எடுத்துக் கொண்டே இருந்ததால் சமயம் பார்த்துத் தான் போட்டோக்களை எடுக்க முடிந்தது. இங்கும் அங்குமாக ஓடி ஓடி ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது.

 

நேரத்தில் குறியாக இருந்த நான் போதும் போகலாம் என்ற எச்சரிக்கை குரலை Nth  டைமாகக் கொடுத்து அனைவரையும் நகர்த்தி காரில் அமர்த்தினேன்.

 

கார் புறப்பட்டது. ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும். எல்லோருடைய கேமராக்கள்,மொபைல் போன்கள், வீடியோ கேமரா எல்லாம் பத்திரமாக காருக்கு வந்ததா என்று கேட்டேன்.

ஷாக்!

 

வீடியோ கேமராவைத் தவிர அனைத்தும் வந்து இருந்தன.

வீடியோவைக் காணோம். காரை நிறுத்தினோம். சரி பார்த்தோம். ஹூம், வீடியோ கேமராவைக் காணோம்.

 

என் மருமகள் அனைவரது மொபைல் போன்கள், கேமராக்களை வாங்கி டிஜிடல் மயமாக இருந்த போட்டோக்களைப் பார்த்து திடீரென்று கூவினாள்.

 

“இதோ இருக்கிறது. இந்த பெஞ்சின் மீது வைத்து விட்டு வந்து விட்டோம்”

 

கேமரா ‘ஙே’ என்று அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்தது.

இப்போது என்ன செய்வது. இன்னும் அங்கு போக ஒரு அரை மணி நேரம் ஆகும்.

 

ஆக ஒன்றரை மணி நேரத்தில் அதை யார் எடுத்துக் கொண்டு போனார்களோ?

 

சரி, ஒரு முயற்சி தான்!

 

வண்டியைத் திருப்பினோம்.

 

வியூ பாயிண்ட் வந்தது.

 

மனம் பக் பக் என்று இருந்தது.அனைவரும் பெஞ்சை நோக்கி ஓடினோம்.

 

அங்கு அந்த கேமரா அப்படியே இருந்தது. ‘ஙே’ என்று அசையாமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.

முன்பை விட இப்போது இன்னும் அதிகக் கூட்டம்.

எங்கள் காமராவை சரி பார்த்து எடுத்துக் கொண்டோம்.

அனைவரும் சொன்ன வார்த்தை: அமெரிக்கா அமெரிக்கா தான்!

ஆம், யாரும் ஆசைப்பட்டு அதை எடுக்க முயலவில்லை.

அமெரிக்காவில் பெற்ற பல நல்ல அனுபவங்களில் இது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

அவரவர் தம் தம் வேலையைப் பார்ப்பது அமெரிக்கர்களின் பழக்கம்.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது அவர்களின் பரம்பரைக் குணம். வாழ்க அமெரிக்கா; வளர்க அமெரிக்கர்களின் நற்பண்பு.

 

சரி, தெய்வ தேசத்திற்கு வருவோம்.

 

இப்போது எங்கு பார்த்தாலும் சுரண்டல்.லஞ்சம். பேராசை. வேலை பார்க்காமல் அதிக சம்பளம் எதிர்பார்க்கும் குணம்.

போக வேண்டிய பாரதம் இது.

 

வருகின்ற பாரதம் பாரதி பாடியது போல அமைய வேண்டும்.

தெய்வ தேசத்தில் பழைய நாட்களில் இருந்த நற்பண்புகளைக் காணோம்.

அறவே காணோமா?

 

அப்படிச் சொல்ல முடியாது.

 

ஆங்காங்கே அற்புதமான நல்லவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஒரு சம்பவம்.

 

3-7-2014 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியானது இது.

 

59 வயதான காமேஷ்வர் கிரி ஒரு டாக்ஸி டிரைவர். கொல்கொத்தாவில் சுமார் 40 ஆண்டுகளாக டாக்ஸியை ஓட்டி வருபவர்.

 

ஒரு புதன் கிழமை அவரது வண்டியில் ஒரு குடும்பம் ஏறியது. அவர்களை வீட்டில் இறக்கி விட்ட காமேஷவர் கிரி திரும்பினார்.

சற்று நேரம் கழித்து டிக்கியைப் பார்க்கையில் அங்கு ஒரு பெரிய பெட்டி இருநதது.

 

அந்தக் குடும்பத்தினர் அதை மட்டும் விட்டு விட்டனர் – எடுக்க் மறந்து போய்!

 

பெட்டியை அவர் திறந்தார். உள்ளே ஜொலிக்கும் வைர நகைகள்.ஏராளம் இருந்தன. ஒரு கல்யாணத்திற்குத் தேவையான தங்க நகைகள்!

 

இங்கு நிமாய் சந்திர தாஸ்  நியூ அலிபூர் ரோடில் ராஜஸ்தான் பவனில் ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறியவர் தனது மகளின் திருமணத்திற்கு உரிய நகைகளை வாங்கிய சந்தோஷத்துடன் வீட்டில் குடும்பத்தினருடன் இறங்கினார். நடக்கவிருக்கும் விழாவைப் பற்றிய யோசனையில் இருந்தவர் டாக்ஸியை விட்டு அவசரம் அவசரமாக இறங்கி விட்டார்.

 

நகைப் பெட்டியை டிக்கியில் அப்படியே விட்டு விட்டார்.

வீட்டினுள் நுழைந்தவுடன் தான் தெரிந்தது – பெட்டி இல்லை என்பது!

 

உடனடியாக டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி ஓடினார். ராஜஸ்தான் ஸ்வீட் கடையின் அருகில் இருந்த டாக்ஸி டிரைவர்களிடம் தான் வந்த வண்டியைப் பற்றி விசாரித்தார்.

அங்குள்ள டிரைவர்கள் கிரி ஏற்கனவே அவர் வீட்டிற்குத் தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனடியாக அவரை போனில் தொடர்பு கொண்டார். அவர் வீட்டில் வாசலில் தான் நின்று கொண்டிருப்பதாக கிரி கூறினார்.

 

வீட்டிற்குச் சென்ற நிமாய் தனது பெட்டியை கிரியிடம் பெற்றுக் கொண்ட போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது.

கிரிக்கு அவர் பரிசாக அளித்த தொகையை அவர் பெற மறுத்து விட்டார்.

 

ஏன்? அவர் தந்தை சொன்ன சொற்கள் அவர் நினைவுக்கு வந்ததாம்.

 

There is enough to meet a man’s needs, but never his greed.

 

இது தான் அவரது தந்தையின் மந்திர வாசகம்!

 

வற்புறுத்திய பின்னர் அவர் 44 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டார். நகைகளைத் திருப்பிக் கொண்டுவந்ததின் வண்டிச் சத்தம் அது.

 

அனைவரும் அவரைப் பாராட்டி வற்புறுத்திய பின்னர் நூறு ரூபாயை அவர் ஏற்றுக் கொண்டார்.

என் தந்தை கூறிய வாசகத்தை மறவேன்.

 

ஒவ்வொருவருக்கும் தேவையானது போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரது பேராசைக்கு ஈடுகட்ட தான் போதுமான அளவு இல்லை என்பது தந்தையின் வாக்கு!

 

அவருக்கு இரு ஆசைகள்.

இன்னும் ஐந்து வருடம் ஓட்டினால் அவரது டாக்ஸி கடனாக நிலுவையில் இருக்கும் எண்பதினாயிரம் ரூபாயை அடைத்து விடலாம்.

 

இன்னொன்று, இப்போது பி.காம் படிக்கும் தன் பையன் ஒரு சார்டர்ட் அக்கவுண்ட் ஆக விரும்புகிறான். அவன் அப்படி ஆகி விட வேண்டும்!

 

அவரை அனைவரும் வாழ்த்தினர். ஒரு நல்லவரின் ஆசைகள் நிறைவேறட்டும்.

தெய்வ தேசத்தின் பிரதிநிதி காமேஷ்வர் கிரி.

 

 

மாத்ருவத் பரதாரேஷு பரத்ரவ்யேஷு லோஷ்டத்ரவத்!

பர தாரம் – பர திரவியம் – அடுத்தவர் தாரம், அடுத்தவர் செல்வம் மீது கண் கூட வைக்காதே என்பது தெயவ தேச அறநூல்களின் அறிவுரை.

 

இதன்படி ஒரு காலத்தில் அனைவரும் பாரதத்தில் வாழ்ந்தனர்.

இன்று புரையோடிப் போன வாழ்க்கை முறையில் லஞ்ச லாவண்யத்தைத் தான் காண முடிகிறது.

 

ஆனால் சிலரேனும் தர்ம காவலர்களாக இருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.

 

காமேஷவர் கிரி போன்றவர்களின் எண்ணிக்கை பெருகும் போது நமது தேசம் மீண்டும் தெய்வ தேசப் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கும்!

***

மொட்டைச் சுவர், கட்டைச் சுவர், தட்டைச் சுவர், குட்டைச் சுவர் – (Post No.4051)

Written by London Swaminathan
Date: 4 July 2017
Time uploaded in London- 21-41
Post No. 4051

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹா வைத்யநாதய்யர் வாழ்க்கைச் சரிதத்தில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்.

 

“ஒரு வருஷம் ஐப்பசி மாதத்தில் வழக்கம் போல துலா ஸ்நானத்திற்காக சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் இருந்து மாயூரம் சென்று கட்டளை மடத்தில் இருந்து வந்தார். மஹா வைத்ய நாதய்யர் மற்றும் பல வித்துவான்கள் வந்திருந்தனர்.

 

மாயூரத்தில் அக்காலத்தில் கோயிற் பாடகரான ஒரு முதிய அந்தணர் இருந்தார். அவர் யாருடன் பேசினாலும் “அபயாம்பிகா கடாட்சம் உங்களுக்குக் உண்டாகட்டும்” என்பார். இதனால் அவர் பெயரே அபயாம்பிகா கடாக்ஷம் என்றாகிவிட்டது (அபயாம்பிகை என்பது மாயூரம் அம்மனின் பெயர்)

அவர் அடிக்கடி மடத்துக்கு வந்து போவார். சுப்பிரமணிய தேசிகர், அவருக்கு வருஷத்துக்கு முக்கால் பணம் சன்மானம் கொடுப்பார். அப்படி செய்யும்போதெல்லாம் மஹா வைத்திய நாதய்யருக்கு மட்டும் பத்து இருபது என்று சன்மானம் கொடுக்கிறீர்களே. நான் மட்டும் தாழ்ந்தவனா? அந்தப் பையன் வரும்போது அவனை என்னுடன் பாடச் சொன்னால் என் யோக்யதை உங்களுக்குத் தெரியவரும்” என்று சொல்வார். சுப்பிரமணிய தேசிகரும் நகைத்துக் கொண்டே அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அனுப்புவார்.

 

மாயூரத்தில் எல்லோரும் கூடியிருந்த சமயத்தில் அபயாம்பிகா கடக்ஷமும் வந்து சேர்ந்தார். வழக்கம்போல ஸன்மானம் பெற்றுக்கொண்டர்.; பிறகு மஹா வைத்யநாதய்யருடன் சேர்ந்து பாடச் செய்தால் தம்முடைய மதிப்பு விளங்கும் என்றார். அங்கு அய்யர் இருந்தது அவருக்குத் தெரியாது. சுப்பிரமணிய தேசிகரும் புன்சிரிப்போடு இவர்களே மஹா வைத்யநதையர் அவர்கள் என்றார்.

 

அந்தப் பிராமணர் உடனே திடுக்கிட்டு எழுந்து போய்விடுவார்  என்று

நாங்கள் யாவரும் எண்ணினோம். ஆனால் அவரோ எழுந்து போகாமல், சிறிதும் அஞ்சாமல் “அப்படியா? நல்ல வேளை! இப்பொழுது அகப்பட்டுக் கொண்டாயா? பாடு பார்க்கலாம் என்றார். நானும் பாடுகிறேன். நான் பாடிக்காட்டும்படி பாடுவாயா என்று கேட்டுவிட்டு,

“மொட்டைச் சுவர், கட்டைச் சுவர்,  தட்டைச் சுவர், குட்டைச் சுவர்”  என்று தாம் வாய்க்கு வந்தவற்றைப் பல்லவியாக எடுத்துப் பாட ஆரம்பித்தார்

 

மஹா வைத்யநாதையர் சிரித்தார். உடனே அந்த முதியவர் என்ன சிரிக்கிறாய்? சிரித்துவிட்டால் ஏமாந்து போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? பாடு பார்க்கலாம். பேசாமல் ரூபாயை வாங்கி முடித்துக்கொண்டு போக மாத்திரம் தெரியுமா? நான் இல்லாத காலத்தில் வந்து பண்டார சந்நிதியை ஏமாற்றிப் பணம் வாங்குகிறாயா? எங்கே, இதைப் பல்லவியாக வைத்துப் பாடு பார்க்கலாம் என்றார். இவ்வாறு உத்ஸாகத்தோடு சொல்லிவிட்டு எல்லோர் முகத்தையும் பார்த்தார். உடன் இருந்த யாவரும் சிரித்தனர்.

உடனே அங்கிருந்த தியாகராஜ சாஸ்திரிகள், அந்தப் பிராமணரைப் பார்த்து ” ஓய், இங்கே வாரும். ஏன் அவரிடம் சென்று குழறுகிறீர்?  நீர் இங்கே வந்து பாடும்; நான் பாடிக் காட்டுகிறேன் என்று சொன்னார். அந்த முதியவரும் அப்படியே வந்து அசராமல் பாடினார். தியாகராஜ சாஸ்திரிகளும், அவர் பாடிய படியெல்லாம் பாடிக்காட்டினார். அவர் அபஸ்வரமாகப் பாடும்போதெல்லாம் சாஸ்திரிகளும் அபஸ்வரமாகப் பாடினார். இந்த விநோத நிகழ்ச்சியால் சபையில் இருந்த அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். ஒன்றும் தெரியாத ஸாதுவாகிய அபயாம்பிகா கடாக்ஷம், தமது  பாடல் இங்கே எடுபடாது என்று எண்ணி பேசாமல் எழுந்து போய்விட்டார்.

 

–சுபம்—

 

மஹா வைத்திய நாத அய்யரின் தமிழ் அறிவு (Post No.4048)

Written by London Swaminathan
Date: 3 July 2017
Time uploaded in London-22-42
Post No. 4048

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹாவைத்திய நாத அய்யர் பெரிய சங்கீத மேதை. அவருடைய சங்கீத அறிவுக்கு யாரும் ‘சர்ட்டிபிகேட்’ கொடுக்க வேண்டாம். ஆனால் அவருடைய தமிழ் அறிவு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களாலும் பாராட்டப்பட்டத்தை உ.வே சாமிநாத அய்யர் எழுதும்போது அவருக்கு இரட்டைப் பட்டம் கிடைத்தது போலாகும்.

 

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கையில் திருக்குற்றாலப் புராணத்தின் அச்சுப் பிரதி ஒன்று கிடைத்தவுடன் ஒவ்வொரு பாடலாகப் படித்து பொருள் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது மஹா வைத்யநாத அய்யரும் இருந்தார். அவரும் தமக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டு வந்தார். அதில் சண்டிகேசுவர வணக்கம் பற்றிய பாடல் வந்தது

 

தான் பிறந்த தந்தையையும் இனிப்பிறக்கும் நிந்தையையும் தடிந்து சேயென்

றான்பிறங்கு மழவிடைமே லொருவரழைத்திடவிருவர் அயிர்ப்பவேகிக்

கான்பொலிதா ரரிபிரமா தியர்க்குமெய்தா விருக்கையெய்திக்கடவுட்சேடம்

வான்புலவர் பெறாப்பேறு பெற்றவனை நற்றவனை வழுத்தல் செய்வாம்

 

என்னும் செய்யுளில் “சேயென்று ஒருவர் அழைத்திட இருவர் அயிர்ப்பவேகி” என்ற பகுதியில் இருவர் என்பது யார்? என்று விளங்கவில்லை; உடனிருந்தவர்களும் யோசித்தார்கள்; சிலர் பிரம்மா-விஷ்ணு என்றனர். ஆனால் அது பொருத்தமாக இல்லை. அப்பொழுது மஹா   வைத்யநாதய்யர், விநாயகர், சுப்பிரமணியர் என்று பொருள் சொல்லலாமோ என்றா ர் அது அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தவுடன் பிள்ளையவர்களும் அதை ஆமோதித்தார்.

 

ஐயா, நீங்கள் சொன்னதுதான் நன்றாக இருக்கிறது. உங்களுடைய ஈஸ்வர பக்தியே இவ்வாறு தோன்றச் செய்தது என்றார். அவருடைய தமிழறிவை மஹாவித்துவானே கொண்டாடிவிட்டார்கள் என்றால் வேறு புதிதாக என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறார் உ.வே.சா.

 

மஹா வைத்தியநாதரும் அவருடைய தமையனாரும் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர்கள்

மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் தென்னாட்டு யாத்திரை சென்றபோது இருவரும் உடன் சென்றனர். கம்பனேரி புதுக்குடி என்ற இடத்தில்  அவர்கள் இருவர் மற்றும் உ.வே.சா. ஆகிய மூவரும் அணிந்திருந்த ஏறுமுக ருத்திராட்சக் கண்டியில் இருந்த தங்க முலாம் கொடுத்த வெள்ளி வில்லைகளை அகற்றிவிட்டு தங்க வில்லைகளைப் போடும்படி தேசிகர்  செய்வித்தனர்.  அப்பொழுது இராமஸ்வாமி அய்யர், “வெள்ளிவில்லை தங்க வில்லை” என்று சிலேடை மொழியில் பேசி அனைவரையும் மகிழ்வித்தார்.

 

இதே போல குற்றாலம் சென்றபோது அவருடைய தமையனார் ” எவ்வளவு கல் (மைல்) தாண்டி இருப்போம்? என்றார். மஹா வைத்திய நாதய்யர் “எல்லாங் கல்லுத்தானே” என்றனர்.

 

 

மஹா வைத்திய நாதய்யர் கூறும் சொல் விளக்கங்கள் மிக நன்றாக இருக்கும். தமிழ் மற்றும் சம்ஸ்கிருத நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்குவார். அப்பொழுது அவரது ஆராய்ச்சியின் ஆழம் புலப்படும். தேவர-உபநிஷத் கருத்துகளை ஒப்பிட்டுப் பேசுவார்.மங்களம் பாடுகையில் சஹானா ராகத்திலுள்ள நந்திகேசாய மங்களம் என்பதைப் பாடி நிறைவு செய்வார்.

அப்பூதி நாயனார் சரித்திரப் பிரசங்கம் செய்தபோது பெரியபுராணக் கீர்த்தனையில்  திங்களூர் மாடத்திங்களூர் என்ற வரிக்குப் பொருள் சொல்கையில் ‘சந்திரன், மேல் மாடத்தில் ஊர்ந்து செல்லும் ஊர்’ என்று பொருள் சொன்னார். சந்திரன், குருத் துரோகம் செய்த பாவத்தில் சிக்கியதால் அப்பூதி அடிகள் வாழும் ஊரின் மாடத்தில் ஊர்ந்தாதாலாவது பாவம் போகும் என்று “நிலவு சென்ற ஊர்” என்று விளக்கம் தந்தார்.

 

சோமாசிமாறநாயனார் சரித்திரம் சொல்கையில் எப்படியாவது, சுந்தரமூர்த்தி நாயனாரின் உதவிபெற்று  தியாகேசப் பெருமானைத் தன் யாகத்துக்கு வரவழைக்க திட்டமிட்டார். இதற்காக சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிடித்த தூதுவளைக் கீரையை நாள்தோறும் அவர் அனுப்பிவந்தாராம். அதைக்கூறும் கீர்த்தனம் “தூதுவளைக் கீரையைக் காதலாய்க் கொடுத்துவந்தார்” என்று தொடங்குவது. இதைப்  பாடிப் பிரசங்கம் செய்கையில் வைத்திய நாதய்யர், அந்தக் கீரையின் பெயர் ‘தூதுவளை’. உங்களுக்குத் தூதாகச் சென்ற  சிவபெருமானை இணங்கச் செய்யவேண்டும் என்பதால்தான் தூதுவளைக் கீரையை தினமும் சப்ளை செய்தார் போலும் என்றார் வைத்திநாதய்யர்.

 

–சுபம்–

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்! (Post No.4047)

Written by S NAGARAJAN

 

Date: 3 July 2017

 

Time uploaded in London:-  6-40 am

 

 

Post No.4047

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!

 

ச.நாகராஜன்

இப்போது உலகெங்கும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன, திகைக்க வைக்கின்றன!

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்லாம் மதத்தைக் கண்டு பயப்பட்டு தங்கள் மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற முனைப்போடு ஈடுபட உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கும் காட்சியைக் காண்கிறோம்.

 

 

ஆஸ்திரேலியாவிலோ, எங்கள் தேசத்தின் அரசியல் சாஸனம் மற்றும் பண்பாட்டுக்குத் தக வாழ முடியுமானால் இங்கு வாழுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் முஸ்லீம்களை நோக்கி எச்சரிக்கை கலந்த அறிவுரையை சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதையும் காண்கிறோம்.

 

 

மியான்மரிலோ 969 இயக்கம் முஸ்லீம்களை ஒதுக்கி வைத்து புத்த மதத்தினரின் கடைகளிலேயே அனைத்தையும் வாங்குங்கள் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

 

 

அமெரிக்காவிலோ முன்னர் ரஷியாவை எதிரியாகச் சித்தரித்து வரும் நாவல்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை அறவே காணோம். அதற்குப் பதிலாக இஸ்லாமிய தீவிரவாதிகளை பயங்கரமாகச் சித்தரித்து அமெரிக்காவைக் காப்பாற்ற விழைவதற்கான அறைகூவல் கொண்ட நாவல்களும் சீரியல்களும் ஏராளமாக வருவதைக் காண்கிறோம்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

 

;பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமியரும் ஹிந்துக்களும் ஹிந்து நாட்டில் இணைந்து வாழ்வதை இப்போதைய உலக நோக்கில் கண்டு பிரமிக்க வேண்டியிருக்கிறது.

 

பாபரிலிருந்து ஆரம்பித்து ஔரங்கசீப் வரை பற்பல ஆண்டுகள் முஸ்லீம்களே ஹிந்து நாடான பாரதத்தை ஆண்டனர். ஆனாலும், தீவிரமான மதமாற்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்ட போதிலும், ஹிந்துக்களைப் பெருவாரியாக மாற்ற முடியவில்லை.

 

 

அதே சமயம் அவர்களை அப்படியே ஜீரணித்ததோடு தங்களின் அற்புதமான கலாசாரத்தை அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதையும் ஹிந்து மதம் சுட்டிக் காட்டி மதமாற்றம் தேவையில்லை என்ற நோக்கையும் எடுத்து வைத்து வந்திருக்கிறது.

 

வரலாற்று ரீதியாக் ஒரு சில உண்மைகளை இங்கு காண்போம்.

அக்பர் முதன் முதலாக ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து அன்யோன்யமாக வாழ வேண்டும் என்று முயற்சித்தார்.தீன் இலாஹி உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டார்.

 

 

அடுத்து ஜிஹாங்கீர் இந்த முய்றசியை மேற்கொண்டு வளர்த்தார்.

அக்பரின் பேரனான தாரா ஷிகு இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொண்டார்.

ராமாயணம், உபநிடதங்கள், கீதை ஆகிய அரிய இதிஹாஸ வேத நூல்கள் பெர்சிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

இந்திய சிந்தனை பெர்சியாவில் ஊடுருவியது.

அடுத்து முகம்மது கஜினியில் சமகாலத்தவரான,

அல்பெரூனி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பொது அற்புதமான் இந்த தேசத்தைக் கண்டு வியந்தார், பிரமித்தார்.

ஹிந்து மற்றும் புத்த மத நூல்கள் பலவற்றை ஆராய்ந்தார், மொழி பெயர்த்தார். புராணங்களின் மீது அவர் பெருமதிப்பைக் கொண்டிருந்தார்.

 

 

இருபத்தி இரண்டு சம்ஸ்கிருத ஆதார நூல்களை ஆராய்ந்து தனது வானவியல், ஜோதிடம், பூகோள நூலை உருவாக்கினார்.

இதை விட ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை இன்னும் ஒரு படி மேலே சென்றது.

 

குரு- சிஷ்ய பரம்பரை ஒன்று உருவானது

முஸ்லீம் மகான்கள் அல்லது குருமார்கள் ஹிந்து சீடர்களைப் பெற்றனர். ஹிந்து யோகிகள், ம்கான்கள் முஸ்லீம் சீடர்களைப் பெற்றனர்.

 

எங்கும் கலகமோ சச்சரவோ கருத்து வேறுபாடோ ஏற்படவில்லை.

 

பஞ்சாபில் இரு கல்லறைகள் உள்ளன. ஒன்று,  முஸ்லீமான ஜ்மாலி சுல்தானுடையது. இன்னொன்று ஹிந்து மகானான தியால் பவானி அவர்களுடையது. இருவரும் மிக நெருங்கிப் பழகிய நண்பர்கள். அந்த நட்புக்கு அடையாளமாக் இருவரின் கல்லறைகளும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ளன. இருவரின் சீடர்களும் மிகவும் ஒற்றுமையாக இருவரையும் போற்றி வழிபடுகின்றனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் முஸ்லீம் மகானான பாவா ஃபல்டு. அவர் எதிர்காலத்தை அப்படியே கூற வல்லவர்.

 

இந்த அபூர்வமான சக்தி அவருக்கு ஒரு ஹிந்து யோகியிடமிருந்தே கிடைத்தது.

பாபல் ஸஹானா என்பவர் ஹிந்து மஹான். அவர் ஒரு  முஸ்லீம் பகீருடைய சீடர். அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர்.

 

 

இது ஒரு புற்மிருக்க எட்டாம் நூற்றாண்டில் அராபியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பார்ஸீக்கள் குஜராத்தில அடைக்கலம் புகுந்தது தனி வரலாறு. அவர்களையும் ஹிந்து மதம் அரவணைத்து ஏற்று அவர்களின் தனித்தன்மையையும் வழிபாட்டையும் மதித்து அவர்களை அவர்கள் வாழ்க்கை முறைப்படி வாழ வழிவகை செய்து உதவியது.

ச்மீப காலத்திய சரித்திரத்தை எடுத்துப் பார்த்தோமானால் கபீர் ஒரு பெரிய யோகியாகத் திகழ்ந்தார். அவருக்கு ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சீடர்களாக இருந்தனர்.

 

 

அடுத்து மிக சமீப காலத்தில் ஷீர்டி சாயிபாபா முஸ்லீம் மகானாக இருந்தாலும் கூட ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஏராளமான அளவில் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.

. இன்றும் கூட ஆயிரக்கணக்கில் ஷீர்டியில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று வழிபடுகின்றனர்.

 

 

கடைசி கடைசியாக மஹாத்மா காந்தி ஹிந்துக்களையும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க அரும்பாடு பட்டார்.

 

ரகுபதி ராகவ ராஜாராம் பதிதபாவன சீதாராம்

ஈஸ்வர் அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்

என்று ‘’அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்று; அனைவருக்கும் நல்ல புத்திமதியைத் தா’’ என்று மனமுருக வேண்டினார்.

அதையே நவீன பிரார்த்தனை மந்திரமாக ஆக்கி தன் மாலை நேர வழிபாட்டில் அனைவரையும் பாட வைத்தார்.

இப்படி ஒரு பிரம்மாண்டமான மத நல்லிணக்கத் தொடர் முயற்சியை இதர நாடுகளில் வேறு ஒரு நாட்டிலும் காண முடியாது.

 

விரலை மடக்கினால் ஒரே ஒரு தேசம் மட்டுமே நமக்குத் தெரிகிறது.

 

அது தெயவ தேசம். பாரதம் தான். பாரதம் மட்டுமே தான்.

ஹிந்துக்களுக்கு அனைத்து மதங்களும் சம்மதமே!

அதே மனப்பான்மை மற்ற மதத்தினருக்கும் வரும் போது நமது பூமி தெய்வ பூமியாக மாறும்!

 

அதற்கும் ஹிந்து மதம் ஒரு மந்திரத்தைத் தந்திருக்கிறது.

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து!

 

***

 

 

தந்தையே மகனின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்! (Post No.4038)

Written by S NAGARAJAN

 

Date: 30 June 2017

 

Time uploaded in London:-  6-10 am

 

 

Post No.4038

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தர்ம உறவு

தந்தையே மகனின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்!

 

ச.நாகராஜன்

 

ஒரு மகன் பெரும் புகழ் பெற்று ஒழுக்க சீல்னாக வாழ்கிறான் என்றால் அதற்கான முழுப் பெருமையும் தந்தையையே சாரும்.

அதே போல ஒரு மகன் இழிவு தரும் காரியங்களில் இறங்கி மிகவும் குணக்கேடனாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் தந்தையையே தான் சாரும்.

 

ஈன்றெடுத்த தாய் எப்போது உவப்பாள்? தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டவுடன்!! அப்போது மிகவும் கஷ்டப்பட்டு கருவில்  சுமந்து தாங்க முடியாத வலியையும் தாங்கி மகனைப் பிரவிசத்தற்கு மேலாக – சான்றோன் என்று சபையினர் கூறும் போது – அவள் மிக அதிக மகிழ்ச்சி அடைவாள்.

 

மகன் அவையிலே முந்தி இருந்து போற்ற்ப்பட்டு சாதனை செய்தான் என்றால்.”இவன் தந்தை என் நோற்றான் கொல்?”

இவனது தந்தை என்ன தவம் செய்தானோ – என்று அனைவரும் கேட்டு வியப்பர்.

 

இது வள்ளுவன் வாக்கு.

 

ஸ்வாமி விவேகானந்தர் (நரேந்திரனாக இருந்த இளம் வயதில்) ஒரு நாள் தன் தந்தை விஸ்வநாத் தத்தரிடம், “அப்பா!எனக்கு என்ன தான் நீ தந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

உடனே அவர் தந்தை அவரை அழைத்துச் சென்று ஒரு கண்ணாடியின் முன் நிறுத்தினார்: “இதோ இங்கே பார்! பார்த்து நீயே தெரிந்து கொள்! நான் உனக்கு என்ன ஒரு விலைமதிப்பற்ற பரிசை உனக்குக் கொடுத்திருக்கிறேன் என்று” என்று பதில் கூறினார்.

 

ஆம், ஒரு தந்தை மகனை முழுதுமாக உருவாக்குகிறார். தேகம், மனம், ஆன்மா அனைத்திற்குமான வளர்ச்சியை ஒரு தந்தையே தருகிறார்.

 

நமது அறநூல்கள் மிகத் தெளிவாக கூறுகின்றன இப்படி:

பிதா ஸ்வர்க: பிதா தர்ம: பிதா ஹி பரமம் தப: I

பிதரி பிரதிமாபன்னே ப்ரீயந்தே சர்வ தேவதா: II

தந்தையே ஸ்வர்க்கம்.

தந்தையே தர்மம்

தந்தையே பரம தவம்

தந்தையை மதி; சகல தேவர்களும் ப்ரீதி அடைவர்.

 

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது நமக்குத் தரப்பட்ட அறவுரை.

 

ரோல் மாடலாக தந்தையையே ஒரு நல்ல மகன் சுட்டிக் காட்டுவான்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் தந்தையர் தினத்தன்று  தனக்குத் தெரிந்த வரையில் தன் தந்தையே உலகில் ஒரு அருமையான மனிதர் என்று கூறினார். தனக்கு எல்லையற்ற அன்பை வாரி வழங்கியவர் தன் தந்தையே என்று அவர் கூறி மகிழ்ந்தார்.

 

மேலை நாடுகளில் தந்தையர் தினம் அன்னையர் தினம் காதலர் தினம் என்று வகை வகையாக தினங்கள் உண்டு.

அந்த ஒரு நாளில் மட்டும் தந்தையருக்கு மரியாதை; அன்னையருக்கு மரியாதை! காதலுக்கு மரியாதை!

ஆனால் ஹிந்து தர்மத்திலோ ஒவ்வொரு கணமும் மரியாதை!

சங்க இலக்கியத்தில் வரும் ஒரு பாடல் மிகச் சரியாக தந்தை தாய் உறவைச் சித்தரிக்கிறது.

 

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே!

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

புறநானூறு 312ஆம் பாடல்

 

 

பொன் முடியார் என்ற பெண் புலவர் பாடிய பாடல் இது.

வள்ளுவரைப் போலவே இவரும் ஈன்று பெறுதலைத் தாயின் கடனாகவும் சான்றோன் ஆக்குதலைத் தந்தையின் கடனாகவும் குறிப்பிடுவது பொருள் பொதிந்த ஒன்றாகும்.

 

பௌதிக ரீதியிலான தாம்பத்ய உறவைத் தாண்டி அமானுஷ்யமான கர்ம பலன் (புண்ய பாவப் பரிசு) தத்துவத்தை வள்ளுவரும் பொன்முடியாரும் சித்தரிக்கின்றனரோ?!

ஹிந்து மத அறநூல்கள் விவரிக்கும் ரகசியம் இதில் அடங்கி இருக்கிறதல்லவா?

 

எல்லா மதங்களும் தந்தை – தாய் – மகன் உறவைப் புனித உறவாகச் சித்தரிக்கின்றன என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.

ஆனால் அதையும் தாண்டி –  அதாவது பௌதிகரீதியிலான உறவையும் தாண்டி தந்தை – மகன், தாய் – மகன் உறவை ஹிந்து மதம் தர்ம உறவாகச் சித்த்ரிக்கிறது.

 

ஜென்ம பந்தம் என்று இதைத் தான் நாம் சொல்கிறோம்.

இந்த தர்ம உறவைப் போற்றுவது ஹிந்து மதத்தில் தோன்றிய ஒவ்வொருவரின் கடமையாக ஆகிறது.

 

பிறந்ததிலிருந்து கொள்ளி போடுவது வ்ரை ஒரு தொடர் தர்ம உறவு தந்தை – மகன் உறவாக ஆகிறது.

 

என்ன வியக்கத்தக்க – ரகசியம் அடங்கிய – ஒரு கொள்கை இது!

போர்ச்சுகல்லில் யோகா பரவுகிறது! (Post No.4027)

Written by London Swaminathan
Date: 26 June 2017
Time uploaded in London- 21-16
Post No. 4027

 
Pictures shown here are taken  by me in Lisbon, Portugal on 25th June 2017; They are taught Yoga by a genuine swamiji Sri Amrta Suryananda Maharaja.

 

ஐரோப்பாவில் பல நாடுகளில் யோகசனப் பள்ளிகள் இருந்தாலும் போர்ச்சுகல் நாட்டில் சீராக , முறையாக யோகாசனம் பரவுவதை நேரில் கண்டேன். நாங்கள் ஆறு பேர் லண்டனிலிருந்து புறப்பட்டு போர்ச்சுகல் நாட்டின் தலை நகரானன லிஸ்பனில் நடந்த ஐரோப்பிய ஹிந்து ஃபோரம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றோம் (Hindu Forum of Europe AGM in Lisbon) . எல்லாம் அவரவர் செலவு. சொந்தப் பணத்தைப் போட்டுச் சென்றோம். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு நாள் போர்ச்சுகீஸிய யோகா பெடெரேஷனின் கூட்டம், யோகா பயிற்சி, இந்தியப் பிரதமரின்  போர்ச்சுகீசிய விஜயம் ஆகியன இருந்ததால் கூடவே தங்க ஏற்பாடுகள் செய்தோம். அந்த இரண்டு நாட்களுக்கான சாப்பாடு, தங்குமிடம் எல்லாவற்றையும் அந்த யோகா அமைப்பே எங்களுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தது.

 

அட, நம்மிடம் ஏதோ எதையோ எதிர்பார்த்துதானே எல்லோரும் ‘இலவசங்களை’ அள்ளி வீசுகிறார்கள்; இதுவும் அப்படித்தான் என்று மனதில் எங்கோ ஒரு மூலையில் கொஞ்சம் சம்சயம் (Doubt) இருந்தது. ஆனால் இந்த ஐயப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறியும்படி, எங்கள் ஒவ்வொருவரையும் யோகா பெடெரேஷன் தொண்டர்களே வரவேற்றனர். நாங்கள் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு விமானத்தில் தரை இறங்கிய போதிலும் ஒவ்வொருவரையும் தனித்தனி தொண்டர் வரவேற்றார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஒருவர்  வந்தார்.    அவர் ஸ்ப்ரெட் ஷீட்ட் (Spread sheet) வைத்துக்கொண்டு சரி பார்த்தார். இதை எல்லாம் பார்த்தவுடன் இந்த பெடெரேஷன் நல்ல திட்டமிட்டு இயங்கும் (organised group) ஒரு குழு என்று தெரிய வந்தது. எல்லோரும் தங்களை சுவாமிஜி அனுப்பியதாக சொல்லிக் கொண்டனர். யார் அந்த சுவாமிஜி என்று கேட்டவுடன், போர்ச்சுகீசிய ஆக்ஸெண்டில் accent சூர்யா நண்டா மஹா ராஜா என்றனர்.

ஹிந்து போரம்  (Hindu Forum) கூட்டம் முடிந்த மறு நாளன்றுதான் அந்த சூர்யாநந்தா மஹாராஜாவைப் பார்த்தோம். எளிய தோற்றம்; எல்லோருடனும் அவரே வந்து பழகினார். எங்களை வரவேற்றவர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் ஆனால் பெயர்கள் எல்லாம் இந்துப் பெயர்கள்!

 

ஹிந்து போரம் முடிந்த மறுநாளன்று யோகா பெடெரேஷனின் முதல் நாள் கூட்டம்  பலகலைக் கழக மண்டபத்தில் நடந்தது அப்பொழுதுதான் நாங்கள் எல்லோரும் சுவாமிஜிக்கு வணக்கம் சொன்னோம். ஆனால் பிரதர் நரேந்திர மோடி, லிஸ்பன் நகரிலுள்ள புகழ்மிகு ராதாகிருஷ்ணா கோவிலுக்கு வரவிருந்ததால் மஹாநாட்டைத் துவக்கி வைத்துவிட்டு சுவாமிஜி  சென்றுவிட்டார். பின்னர்தான் தெரிந்தது; இதற்காகவே அவர் சீடர்களை, இரண்டு அணிகளாகப் பிரித்து மோடி வரவேற்புக்கு ஒருகுழுவை அனுப்பி இருந்தார் என்பது. எல்லா இடங்களிலும் சத் சங்கம், நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுடன் துவங்கியது.

 

சுவாமி அம்ருத சூர்யாநந்த மஹராஜாவும் அவரது சீடர்களும் சொன்ன விஷயங்களைச் சுருக்கமாகத் தருகிறேன்; அடுத்த கட்டுரையில் கூட்டத்தில் பேசியோர் தந்த சுவையான விஷயங்களைத் தருகிறேன்

 

2011 ஆம் ஆண்டில் ஒரு யோகா மஹாநாட்டுக்காக இவர் பெங்களூரிலுள்ள பண்டிட் ரவி சங்கரின் ஆர்ட் ஆப் லிவிங் Art of Living அமைப்பின் உதவியைக் கேட்டவுடனேயே அவர் தயக்கமினிறி இடம் கொடுத்தார். அங்கே பாபா ராம்தேவ் மற்றும் புகழ்பெற்ற யோகா குருக்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். அம்ருத சூர்யாநந்தா முன்வைத்த சர்வதேச யோகா தினத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதை ஐ.நா. சபை ஏற்காவிட்டாலும் அதைக் கொண்டாடுவோம் என்று தீர்மானித்தனர். பின்னர் நல்ல வேளையாக நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி ஏற்பட்டதால் அது உலகம் முழுதும் பரவியது. இன்று உலகின் முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது

 

போர்ச்சுகல்லில் பள்ளிக்கூடங்களிலும் யோகா சொல்லித் தரப்படுகிறது. மறு நாள் யோகா காட்சி அணிவகுப்புக்கு வந்த அனைத்து அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும், சர்வ மதத் தலைவர்களும் யோகா பயிற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் சுவாமிஜி மீது வைத்திருக்கும் மதிப்பும் நல்லுறவும் அவர்களுடைய பேச்சிலிருந்தே தெரிந்தது.

 

ஆயிரம் பேர் யோகாசன அணிவகுப்பு, பயிற்சி செய்து காட்டினர். 40 பேர் ஹார்மோனியம் வாசித்தனர். அதற்குப் பின்னர் நூறு பேர் பல்வேறு வாத்தியங்களில் விருந்து அளித்தனர்.சிறுவர்கள், மேடையில் ஏறி யோகா பயிற்சி செய்தனர்.

 

கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் பெண்மணி நந்தினி சிக்லா போர்ச்சுகல்லில் இந்திய தூதராக உள்ளர் அவர் யோகாசனம்  செய்வதற்காகவே அதற்குரிய உடையில் வந்தார். மேடை ஏறி முழங்கிய போதும் இன்று நான் தூதராகஇன்றி யோகாசனம் செய்யும் சீடனாக வந்தேன் என்று சொல்லி யோகாசனத்திலும் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.

 

யோகா ஆபத்து!

முதல் நாள் நாங்கள் நடத்திய ஹிந்து போரம் கூட்டத்தில் நெதர்லாந்து பிரதி நிதி ராட்ஜ் பாண்டோ யோகாசனத்தையும் இந்து மதத்தையும் பிரிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கினார். இது பற்றி தான்நடத்திய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட் டார். எல்லோரும் யோகாசனம் என்ற பெயரைச் சொல்லி யோகா பியர் Yoga Beer, யோகா குஸ்தி சண்டை Yoga Wrestling , யோகா பாடி பில்டிங் Yoga Body Building என்பன வெல்லாம் நடத்துகின்றனர். இது பல கோடி டாலர் குவிக்கும் தொழில் என்பதால் எல்லோரும் இதில் இறங்கிவிட்டனர். யோகத்துக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பு இல்லை; இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று பிதற்றத் துவங்கி விட்டனர். இந்து மதத்தில் பதஞ்சலி அவர்களோவெனில்  எட்டு வித கட்டுப்பாடுகள் உடையவர்கள்தான் இதைச் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட மனக் கட்டுப்பாடோ, ஐம்புலக் கட்டுப்பாடோ இல்லாமல் யோகா  என்று யாராவது கற்றுக் கொடுத்தால் அது சர்கஸ் வித்தை அல்லது ஜிம்னாஸ்டிக்ஸ் Gymnastics தான் என்றார். ஆகவே யோகம் இந்து மதத்தினுடையது; அதில் கட்டுப்பாடுகள் உண்டு; அப்படித் தர்மத்தின் பிண்ணனி இல்லாமல் யோகா சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றார்.

 

எனது பேச்சு

நானும் அவரை ஆதரித்துப் பேசினேன். தர்மம் அல்லது உற்கட்டுப்பாடு- மனக் கட்டுப்பாடு இல்லாமல் யோகப் பயிற்சி செய்தால், அல்லது கற்றுக் கொடுத்தால் விரைவில் செய்திப் பத்திரிக்கைகளில் யோகா கொலை, யோகா கற்பழிப்பு, யோகா தற்கொலை, யோகா வழிப்பறி என்றெல்லாம் செய்திகள் வரத் துவங்கி விடும். யோகம் என்பது இந்துக்களுடையதே என்று காட்ட வேதங்களிலும் சிந்து சமவெளி முத்திரைகளிலும் சான்றுகள் உள்ளன என்றேன்

 

இன்று லண்டனில் ஆண்டுதோரும் பிரம்மாண்டமான யோகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அங்கே வெள்ளைக்காரர்கள் ஏராளமான ஸ்டால்கள் Stalls வைக்கின்றனர், வெள்ளைக்காரர்கள் ஏராளமான யோகா பத்திரிக்கைகள் நடத்துகின்றனர். அசைவ உணவு சாப்பிடுவோர், குடிகாரர்கள் கூட அதைச் செய்துகொண்டே யோகாசனம் செய்கின்றனர். இதையெல்லாம் நீக்கி யம , நியமம் என்னும் கட்டுப்பாடுகளுடன் செய்வதே ‘யோகம்’ ‘ஆசனம்’ என்பதை இந்துக்கள் உலகிற்கு பறை அறிவிக்க வேண்டும் என்றேன்.

 

–சுபம்—

 

 

 

இந்தியாவில் மட்டுமே இப்படி! (Post No.4023)

Written by S NAGARAJAN

 

Date: 22 June 2017

 

Time uploaded in London:-  20-18 (on 21st June 2017)

 

 

Post No.4020

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தெய்வ தேசம்

இப்படியும் இருக்கிறார்கள்! இந்தியாவில் மட்டுமே இப்படி!! – 1

 

ச.நாகராஜன்

 

பாழ்பட்டு நிற்கும் கலியுகத்தில் தர்ம தேவதை ஒற்றைக் காலில் நிற்கிறாளாம்.

ஆனால் அந்த ஒற்றைக் காலில் நிற்பதற்கும் தர்மத்தை ஆதரிக்கும் தெய்வ தேசமான பாரதம் தான் காரணமாகும்.

இன்றைக்கும் என்றைக்கும் இது உண்மை!

 

 

ஒரு சம்பவத்தை – நிஜமாக நடந்ததைப் – பார்ப்போம்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஈ தேஷ் என்ற பத்திரிகை  முந்தைய வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தை வெளியிட்டது.

சம்பவம் இது தான்.

 

 

மும்பையில் அவசரம் அவசரமாக மாலையில் அலுவலகத்திலிருந்து தொழுகைக்குச் செல்லக் கிளம்பினார் ரமீஸ்.

பொதுவாக அவர் தொழுகையை ஒரு நாளும் தவற விட்டதே இல்லை.

அன்று அவசரத்தில் தனது பர்ஸை ஆபீஸ் டிராயரிலேயே விட்டு விட்டு வெளியே வந்து விட்டார்.

 

 

ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் உட்கார்ந்த அவர் பையில் கையை விட்ட போது பகீர் என்றது. பர்ஸைக் காணோம். அலுவலகத்திலேயே அதை விட்டு விட்டோம் என்பது அப்போது தான் அவருக்குப் புரிந்தது.

இப்போது ஆட்டோகாரருக்குக் கொடுக்கக் கூட ஒரு பைசா இல்லை.

 

திரும்பி அலுவலகம் சென்று பர்ஸை எடுக்கலாம் என்றால் தொழுகை முடிந்து விடும். நேரமே இல்லை. ‘போதாத நேரம் அவருக்கு.

 

என்ன செய்வது?

ஒரு கணம் ஆட்டோ டிரைவரைப் பார்த்தார்.

நெற்றியில் நீள்மான குங்கும திலகக் கீற்று. கையில் கண்பதி உற்சவத்திற்கான பச்சையை வேறு இரு கரங்களிலும் அவர் குத்தி இருந்தார். நல்ல கணபதி பக்தர் போலும்!

ரமீஸின் பதட்டத்தைக் கவனித்த டிரைவஎ, “என்ன, ஏதாவது தகராறா, சாஹப் என்று கேட்டார்.

 

ரமீஸ் தன் நிலைமையைச் சொன்னார்.

“என்னை மசூதியில் இறக்கி விட்டு இருபது நிமிடம் காத்திருங்கள். தொழுகையை முடித்து கொண்ட உடனேயே என் வீட்டிற்குப் போய் அங்கு உங்களுக்கான ஆட்டோ சார்ஜையும் கூடவே காத்திருந்ததற்கான வெய்டிங் சார்ஜையும் தந்து விடுகிறேன். தொழுகையை மட்டும் தவற விட்டு விடக் கூடாது. எனக்கு இதைச் செய்ய முடியுமா? என்று அவர் டிரைவரைக் கேட்டார்.

 

 

பிஸியான் மாலை நேரம். மும்பையில் ஆட்டோ சவாரீயில் ஏதோ சிறிது ச்ம்பாதிக்க உகந்த நேரம்.

டிரைவர் தனது வேண்டுகோளை ஏற்பாரா?

“கவலைப்படாதீர்கள். உங்களை மசூதியில் டிராப் செய்து விடுகிறேன். ஆனால் காத்திருக்க ம்ட்டும் என்னால் முடியாது.தொழுகையை நல்லபடியாக முடித்து வீடு திரும்புங்கள்

 

டிரைவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார் ரமீஸ்.

மசூதி வந்தது. அங்கு ஆட்டோ டிரைவர் செய்ததைப் பார்த்து ஆடிப் போனார் ரமீஸ்.

 

தன் சட்டைப் பையில் கையை விட்டு சில நோட்டுகளை எடுத்த டிரைவர், ரமீஸிடம் கொடுத்து, “இதை வைத்துக் கொள்ளுங்கள். வீடு போய்ச் சேருங்கள் என்றார்.

ரமீஸ் இறங்கியவுடன் ஒரு வார்த்தையும் மேற்கொண்டு பேசாமல் ஆட்டோ சர்ரென்று கிளம்பியது.

 

 

பிஸியான் நேரத்தில் பிழைப்புக்கான அடுத்த சவாரியை நோக்கி அது கிளம்பியது!

தொழுகையை முடித்த ரமீஸ் பிரமிப்பிலிருந்து விடுபடவே இல்லை.

மாலையில் நடந்த சம்பவம் அவர் மனதை விட்டு அகலவே இல்லை.

 

 

மறு நாள் அந்த ஆட்டோ டிரைவரைத் தேட ஆரம்பித்தார். நெடு நேரம் பல தெருக்களில் தேடிய பின்னர் அவரைக் கண்டு பிடித்தார்.

 

அவரைப் பார்த்த ஆட்டோ டிரைவர், கூப்பிய க்ரங்களுடன், “அட வந்து விட்டீர்களா? என்று வரவேற்றார்.

‘வந்து தானே ஆக வேண்டும். நீங்கள் செய்த உதவியை என் வாழ்நாளில் என்றுமே நான் மறக்க மாட்டேன் என்று உணர்ச்சி பொங்க்ச் சொன்னார் ரமீஸ்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆட்டோவுக்கான கட்டணத்தை நன்றியுடன் சேர்த்துக் கொடுத்தார் ரமீஸ்.

அவர் திரும்பும் போது அவர் கையில் ஆட்டோ டிரைவர் கொடுத்த கண்பதி உற்சவத்திற்கான அழைப்பிதழ் இருந்தது.

ரமீஸின் உள்ளமோ ஒளி மயத்தால் விகசித்தது.

இப்படியும் ம்னிதர்கள் இருக்கிறார்கள்!

 

 

இந்தியாவில் மட்டுமே அல்லவா இப்படி நடக்க முடியும்.

தெய்வ தேசத்தில் ஏகம் சத்; விப்ரா: பஹுதா வதந்தி.

உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகச் சொல்கிறார்கள்.

 

***

நன்றி: கொல்கொத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – 16-9-2016